1. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْبَحْرِ: {هُوَ الطُّهُورُ مَاؤُهُ، اَلْحِلُّ مَيْتَتُهُ} أَخْرَجَهُ الْأَرْبَعَةُ، وَابْنُ أَبِي شَيْبَةَ وَاللَّفْظُ لَهُ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ وَالتِّرْمِذِيُّ.
1. கடல் குறித்து இறைத்தூதர்(ஸல்) கூறியபோது, ``அதன் தண்ணீர் சுத்தமானது அதில் (வசிப்பவை) இறந்தவை(யாக இருப்பினும்) அனுமதிக்கப்பட்டது'' என்றார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னு மாஜா மற்றும் இப்னு அபீ ஷைபா, இப்னு குஸைமா, மாலிக் ஷாஃபியீ மற்றும் அஹ்மத்
இங்கு இப்னு அபீ ஷைபாவின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இமாம் இப்னு குஸைமா மற்றும் இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
2. وَعَنْ أَبِي سَعِيدٍ اَلْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ الْمَاءَ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ} أَخْرَجَهُ الثَّلَاثَةُ وَصَحَّحَهُ أَحْمَدُ.
2. ``தண்ணீர் சுத்தம் செய்யக் கூடியதே! அதனை எதுவும் அசுத்தமாக்காது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் அஹமத்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
3. وَعَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ، إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ، وَلَوْنِهِ} أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ. وَضَعَّفَهُ أَبُو حَاتِمٍ.
3. தண்ணீரை அதன் வாடை, சுவை, நிறம் ஆகியவை மிகைப்பதைத் தவிர வேறு எதுவும் நிச்சயமாக அசுத்தமாகக்காது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ உமாமா அல் பாஹிலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இமாம் அபூ ஹாதிம்(ரஹ்) இதனை பலவீனமான ஹதீஸ் எனக் குறிப்பிட்டுள்ளார்.
4. وَلِلْبَيْهَقِيِّ: {اَلْمَاءُ طَاهِرٌ إِلَّا إِنْ تَغَيَّرَ رِيحُهُ، أَوْ طَعْمُهُ، أَوْ لَوْنُهُ؛ بِنَجَاسَةٍ تَحْدُثُ فِيهِ}.
4. தண்ணீரில் அசுத்தம் கலந்து, அதன் வாடை, சுவை, நிறம் மாறாவிட்டால் அது சுத்தமானது'' என பைஹகீயில் பதிவிடப்பட்டுள்ளது.
5. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {إِذَا كَانَ الْمَاءَ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ} وَفِي لَفْظٍ: {لَمْ يَنْجُسْ} أَخْرَجَهُ الْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ اِبْنُ خُزَيْمَةَ. وَابْنُ حِبَّانَ وَالْحَاكِمُ.
5. தண்ணீர் `குல்லத்தைன்' அளவு இருந்தால் அது அசுத்தமாகாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, இப்னு மாஜா, திர்மிதீ.
இப்னு குஸைமா, ஹாகிம் மற்றும் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
6. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَغْتَسِلُ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ وَهُوَ جُنُبٌ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
6. உங்களில் குளிப்புக் கடமையான ஒருவர் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
7. وَلِلْبُخَارِيِّ: {لَا يَبُوْلَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ الَّذِي لَا يَجْرِي، ثُمَّ يَغْتَسِلُ فِيهِ}.
7. உங்களில் ஒருவர் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்துவிட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என புகாரீயில் உள்ளது.
8. وَلِمُسْلِمٍ: "مِنْهُ". وَلِأَبِي دَاوُدَ: {وَلَا يَغْتَسِلُ فِيهِ مِنَ الْجَنَابَةِ}.
8. உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க வேண்டாம் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத்
9. وَعَنْ رَجُلٍ صَحِبَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "أَنْ تَغْتَسِلَ الْمَرْأَةُ بِفَضْلِ الرَّجُلِ، أَوِ الرَّجُلُ بِفَضْلِ الْمَرْأَةِ، وَلْيَغْتَرِفَا جَمِيعًا} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ. وَالنَّسَائِيُّ، وَإِسْنَادُهُ صَحِيحٌ.
9. கணவனால் மீதம் வைக்கப்பட்ட தண்ணீரில் மனைவியும், மனைவியால் மீதம் வைக்கப்பட்ட தண்ணீரில் கணவனும் குளிப்பதை இறைத்தூதர்(ஸல்) தடுத்துள்ளார்கள். ``தேவை ஏற்பட்டால் இருவரும் சேர்ந்து குளிக்கலாம்'' என நபித் தோழர்களில் ஒருவர் அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ.
இது `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
10. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَغْتَسِلُ بِفَضْلِ مَيْمُونَةَ رَضِيَ اللهُ عَنْهَا} أَخْرَجَهُ مُسْلِمٌ.
10. ``உம்முல் முஃமினீன் மைமூனா(ரலி) குளித்து மீதம் வைத்த தண்ணீரில் இறைத்தூதர்(ஸல்) குளித்தார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
11. وَلِأَصْحَابِ "السُّنَنِ": {اِغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَفْنَةٍ، فَجَاءَ لِيَغْتَسِلَ مِنْهَا، فَقَالَتْ لَهُ: إِنِّي كُنْتُ جُنُبًا، فَقَالَ: "إِنَّ الْمَاءَ لَا يُجْنِبُ"} وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ خُزَيْمَةَ.
11. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர், பெரும் பாத்திரம் ஒன்றிலிருந்து குளித்தார், அப்போது, அங்கு வந்த இறைத்தூதர்(ஸல்) அதில் குளிக்க விரும்பினார்கள்.
``நிச்சயமாக நான் குளிப்பு கடமையானவளாய் இருந்தேன்'' என (அவர்களின் மனைவி) கூறினார்.
``தண்ணீர் ஒருபோதும் (இதன் காரணமாக) அசுத்தமாகாது'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
நூல்கள்: திர்மிதீ, இப்னு குஸைமா
இது `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
12. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ، أُولَاهُنَّ بِالتُّرَابِ} أَخْرَجَهُ مُسْلِمٌ. وَفِي لَفْظٍ لَهُ: {فَلْيُرِقْهُ}.وَلِلتِّرْمِذِيِّ: {أُخْرَاهُنَّ، أَوْ أُولَاهُنَّ بِالتُّرَابِ}.
12. ``உங்களின் பாத்திரத்தில் நாய் வாய் வைத்தால், அதனை சுத்தப்படுத்துவதற்காக ஏழுமுறை கழுவுங்கள். அதில் முதல்முறை மண்ணால் சுத்தம் செய்யுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ``அதில் உள்ளதை கொட்டிவிடுங்கள்'' என உள்ளது. திர்மிதீயின் மற்றோர் அறிவிப்பில் ``முதல் முறை அல்லது கடைசி முறை மண்ணால கழுவுங்கள்'' என உள்ளது.
13. وَعَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ -فِي الْهِرَّةِ-: {إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ} أَخْرَجَهُ الْأَرْبَعَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ. وَابْنُ خُزَيْمَةَ.
13. பூனை குறித்து இறைத்தூதர்(ஸல்) கூறியபோது, ``அது அசுத்தமானதல்ல; அது உங்களிடையே சுற்றிவரக் கூடியதே'' என்று கூறினார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா.
திர்மிதீ மற்றும் இப்னு குஸைமாவில் இது `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
14. وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {جَاءَ أَعْرَابِيٌّ فَبَالَ فِي طَائِفَةِ الْمَسْجِدِ، فَزَجَرَهُ النَّاسُ، فَنَهَاهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا قَضَى بَوْلَهُ أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَنُوبٍ مِنْ مَاءٍ؛ فَأُهْرِيقَ عَلَيْهِ.} مُتَّفَقٌ عَلَيْهِ.
14. இறைஇல்லத்திற்கு வந்த ஒரு நாட்டுப் புறத்தார் அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழித்தபோது, அவரை மக்கள் அதட்டினார்கள். அவர்களை நபி(ஸல்), தடுத்தார்கள். அவர் சிறுநீர் கழித்து முடித்தப் பின்னர் ஒரு வாளி தண்ணீர் கொண்டு வருமாறு கட்டளையிட்டார்கள். பின்னர் அது (தண்ணீர்) அதன் மீது ஊற்றப்பட்டது என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
15. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أُحِلَّتْ لَنَا مَيْتَتَانِ وَدَمَانِ، فَأَمَّا الْمَيْتَتَانِ: فَالْجَرَادُ وَالْحُوتُ، وَأَمَّا الدَّمَانُ: فَالطِّحَالُ وَالْكَبِدُ} أَخْرَجَهُ أَحْمَدُ، وَابْنُ مَاجَهْ، وَفِيهِ ضَعْفٌ.
15. ``செத்தவை இரண்டும், இரத்தம் இரண்டும் (ஹலால்) நமக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் செத்தவை வெட்டுக்கிளி மற்றும் மீன் ஆகும். அந்த இரத்தம், ஈரல் மற்றும் கல்லீரல் ஆகும்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா
இது `ளயீஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
16. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا وَقَعَ الذُّبَابُ فِي شَرَابِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ، ثُمَّ لِيَنْزِعْهُ، فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً، وَفِي الْآخَرِ شِفَاءً} أَخْرَجَهُ الْبُخَارِيُّ. وَأَبُو دَاوُدَ، وَزَادَ: {وَإِنَّهُ يَتَّقِي بِجَنَاحِهِ الَّذِي فِيهِ الدَّاءُ}.
16. ``உங்களின் குடிபானத்தில் ஈ விழுந்தால், அதனை உள்ளே மூழ்கடித்துப் பின்னர் வெளியில் எடுத்துவிடவும். ஏனெனில், அதன் ஓர் இறக்கையில் நோயும் மற்றோர் இறக்கையில் நிவாரணமும் உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, அபூ தாவூத்.
``நிச்சயமாக இது நோய் இருக்கும் தன் இறக்கையின் மூலம் தன்னைப் பாதுகாக்கிறது'' என்றும் அபூ தாவூதில் இடம் பெற்றுள்ளது.
17. وَعَنْ أَبِي وَاقِدٍ اَللَّيْثِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَا قُطِعَ مِنَ الْبَهِيمَةِ -وَهِيَ حَيَّةٌ- فَهُوَ مَيِّتٌ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ، وَاللَّفْظُ لَهُ.بَابُ الْآنِيَةِ
17. ``உயிருள்ள கால் நடைகளில் (அதன் உறுப்புகள்) வெட்டப்பட்டால், அதுவும் செத்ததே (பிணத்திற்குச் சமம்)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ வாஹித் அல்லைஸி(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: திர்மிதீ, அபூ தாவூத்
இது திர்மிதீயில் `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இங்கு திர்மிதீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
18. عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا تَشْرَبُوا فِي آنِيَةِ الذَّهَبِ والْفِضَّةِ، وَلَا تَأْكُلُوا فِي صِحَافِهَا، فَإِنَّهَا لَهُمْ فِي الدُّنْيَا، وَلَكُمْ فِي الْآخِرَةِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
18. ``தங்கப் பாத்திரங்களிலும் வெள்ளிப் பாத்திரங்களிலும் பருகாதீர்கள்! இன்னும் அந்தப் பாத்திரங்களில் சாப்பிடாதீர்கள்! ஏனெனில், அவை உலகில் அவர்களுக்கு (இறை மறுப்பாளர்களுக்கு) உரியதாகும்; மறுமையில் உங்களுக்கு உரியதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
19. وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {الَّذِي يَشْرَبُ فِي إِنَاءِ الْفِضَّةِ إِنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّمَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
19. ``வெள்ளிப் பாத்திரங்களில் பருகுபவரின் வயிற்றில் நரக நெருப்பு குமுறிக் கொண்டிருக்கிறது' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்'' என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
20. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهُرَ} أَخْرَجَهُ مُسْلِمٌ.
20. ``பச்சைத் தோலைப் பதனிட்டால் அது தூய்மையாகிவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்