1199. عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَحِلُّ دَمُ اِمْرِئٍ مُسْلِمٍ؛ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنِّي رَسُوْلُ اللهِ، إِلَّا بِإِحْدَى ثَلَاثٍ: الثَّيِّبُ الزَّانِي، وَالنَّفْسُ بِالنَّفْسِ، وَالتَّارِكُ لِدِينِهِ؛ اَلْمُفَارِقُ لِلْجَمَاعَةِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1199. ``அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், என்னை இறைத்தூதர் என்றும் சாட்சியளிக்கும் மனிதரை, அவர் திருமணத்திற்குப் பின்பு விபச்சாரம் புரிந்தவராய் இருந்தாலோ, (நியாயமின்றி) யாரையேனும் அவர் கொலை செய்திருந்தால் அதற்குப் பழிவாங்கும் விதத்திலோ, தன் மார்க்கத்தை விட்டு, ஜமாஅத்தை விட்டுப் பிரிந்து சென்றவராக இருந்தாலோ ஆக, இந்த மூன்றில் ஏதாவது ஒரு காரணத்திற்காகவே தவிர கொல்வது (மரணதண்டனை விதிப்பது) அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1200. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا يَحِلُّ قَتْلُ مُسْلِمٍ إِلَّا فِي إِحْدَى ثَلَاثِ خِصَالٍ: زَانٍ مُحْصَنٌ فَيُرْجَمُ، وَرَجُلٌ يَقْتُلُ مُسْلِمًا مُتَعَمِّدًا فَيُقْتَلُ، وَرَجُلٌ يَخْرُجُ مِنَ الْإِسْلَامِ فَيُحَارِبُ اللهُ وَرَسُولَهُ، فَيُقْتَلُ، أَوْ يُصْلَبُ، أَوْ يُنْفَى مِنَ الْأَرْضِ.} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1200. ``திருமணத்திற்குப் பின்பு விபச்சாரம் செய்பவன் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும். ஒரு முஸ்லிமை வேண்டும் என்றே கொல்பவன், (பதிலுக்குக்) கொல்லப்பட வேண்டும். மேலும், இஸ்லாமை விட்டு வெளியேறி அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போரிடுபவன் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கிலிடப்படவேண்டும்; அல்லது நாடு கடத்தப்பட வேண்டும். இந்த மூன்று குற்றங்களில், ஏதேனும் ஒன்றைச் செய்த முஸ்லிமைத் தவிர மற்ற முஸ்லிமைக் கொல்வது (மரண தண்டனை விதிப்பது) அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1201. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فِي الدِّمَاءِ.} مُتَّفَقٌ عَلَيْهِ.
1201. ``மறுமை நாளில் மக்கள் மத்தியில் (மனித) உயிர்க்கொலை பற்றிய தீர்ப்பே முதலில் வழங்கப்படும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1202. وَعَنْ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ قَتَلَ عَبْدَهُ قَتَلْنَاهُ، وَمَنْ جَدَعَ عَبْدَهُ جَدَعْنَاهُ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ، وَهُوَ مِنْ رِوَايَةِ الْحَسَنِ الْبَصْرِيِّ عَنْ سَمُرَةَ، وَقَدْ اُخْتُلِفَ فِي سَمَاعِهِ مِنْهُ. وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ، وَالنَّسَائِيِّ: {وَمَنْ خَصَى عَبْدُهُ خَصَيْنَاهُ}. وَصَحَّحَ الْحَاكِمُ هَذِهِ الزِّيَادَةَ.
1202. ``தன் அடிமையைக் கொல்பவனை நாம் கொல்வோம். தன் அடிமையின் காது, மூக்கை அறுப்பவனின் காது, மூக்கை நாம் அறுப்போம்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸமுரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஸமுராவின் வாயிலாக ஹஸன் பஸரீ அறிவிப்பதாகும். அவரிடமிருந்து கேட்டதில் கருத்து வேறுபாடு உள்ளது. அபூ தாவூத் மற்றும் நஸயீயின் மற்றோர் அறிவிப்பில், தன் அடிமையைக் காயடிப்பவனை நாம் காயடிப்போம் என்பது அதிகப்படியாக உள்ளது. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1203. وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: {لَا يُقَادُ الْوَالِدُ بِالْوَلَدِ} رَوَاهُ أَحْمَدُ، وَالتِّرْمِذِيُّ، وَابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ اِبْنُ الْجَارُودِ وَالْبَيْهَقِيُّ، وَقَالَ التِّرْمِذِيُّ: إِنَّهُ مُضْطَرِبٌ.
1203. ``மகனைக் கொன்தற்காகத் தந்தையிடம் பழிவாங்கக் கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூற நான் செவியுற்றுள்ளேன் என உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ இப்னு மாஜா
இமாம் இப்னுல் ஜாரூத் மற்றும் பைஹகீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை முழ்தரிப் (பலவீனமானது) எனக் குறிப்பிட்டுள்ளார்.
1204. وَعَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ: {قُلْتُ لَعَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُمَا: هَلْ عِنْدَكُمْ شَيْءٌ مِنَ الْوَحْيِ غَيْرَ الْقُرْآنِ؟ قَالَ: لَا وَالَّذِيْ فَلَقَ الْحَبَّةَ وَبَرَأَ النِّسْمَةَ، إِلَّا فَهْمٌ يُعْطِيهِ اللهُ رَجُلًا فِي الْقُرْآنِ، وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ. قُلْتُ: وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ؟ قَالَ: "الْعَقْلُ، وَفِكَاكُ الْأَسِيرِ، وَلَا يُقْتَلُ مُسْـلِمٌ بِكَافِرٍ}. رَوَاهُ الْبُخَارِيُّ.
1204. ``இறைச் செய்தியில் குர்ஆனைத் தவிர வேறு எதுவும் தங்களிடம் உள்ளதா?'' என நான் அலீ(ரலி) அவர்களிடம் கேட்டேன்.
``இல்லை; தானியத்தைப் பிளந்து உயிரைப் படைத்தவன் மீது ஆணையாக! அல்லாஹ் குர்ஆனில் ஒரு மனிதனுக்கு அளித்திருக்கும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் (எழுதி வைக்கப்பட்டு) இருப்பவற்றையும் தவிர, ``என அவர் பதிலளித்தார்.
``இந்த ஏட்டில் என்ன (எழுதி வைக்கப்பட்டு) உள்ளது?'' என நான் கேட்டேன்.
``உயிரீட்டுத் தொகை பற்றிய விளக்கம், எதிரி நாட்டவரிடம் சிறைப்பட்டுள்ள போர்க் கைதியை விடுவித்தல் தொடர்பான சட்டம். மேலும், இறைமறுப்பாளன் ஒருவனைக் கொன்றதற்காக, ஒரு முஸ்லிம் கொல்லப்படமாட்டான் என்ற சட்டம் ஆகியவை உள்ளன'' என்று கூறினார்கள் என அபூ ஜுஹைஃபா அறிவித்தார்.
நூல்: புகாரீ
1205. وَأَخْرَجَهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ: مِنْ وَجْهٍ آخَرَ عَنْ عَلِيٍّ وَقَالَ فِيهِ: {اَلْمُؤْمِنُونَ تَتَكَافَأُ دِمَاؤُهُمْ، وَيَسْعَى بِذِمَّتِهِمْ أَدْنَاهُمْ، وَهُمْ يَدٌ عَلَى مَنْ سِوَاهُمْ، وَلَا يُقْتَلُ مُؤْمِنٌ بِكَافِرٍ، وَلَا ذُو عَهْدٍ فِي عَهْدِهِ}. وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1205. அலீ(ரலி) வாயிலாக அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீயில் மற்றோர் அறிவிப்பின் படி ``இறை நம்பிக்கையாளர்களின் உயிர்கள் ஒன்றுக் கொன்று சமமானவை. அவர்களில் கடைநிலையில் உள்ளவர் கொடுக்கும் அபயத்தைக்கூட அவர்கள் அனைவரும் பாதுகாத்து நிறைவேற்ற முயலவேண்டும். பிறருக்கு எதிராக அவர்கள் அனைவரும் ஒரே கையாக (ஒன்றுபட்டு) நிற்பார்கள். ஓர் இறைமறுப்பாளனைக் கொன்றதற்கு தண்டனையாக ஓர் இறைநம்பிக்கையாளன் கொல்லப்படக் கூடாது. ஒப்பந்தம் கொடுத்தவன் ஒப்பந்தக் காலத்தில் கொல்லப்படக் கூடாது'' என உள்ளது.
இதனை இமாம் ஹாகிம் ஆதாரப்பூர்வமான தரத்தில் பதிவிட்டுள்ளார்.
1206. وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ جَارِيَةً وُجَدَ رَأْسُهَا قَدْ رُضَّ بَيْنَ حَجَرَيْنِ، فَسَأَلُوهَا: مَنْ صَنَعَ بِكِ هَذَا؟ فُلَانٌ. فُلَانٌ. حَتَّى ذَكَرُوا يَهُودِيًّا. فَأَوْمَأَتْ بِرَأْسِهَا، فَأُخِذَ الْيَهُودِيُّ، فَأَقَرَّ، فَأَمَرَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُرَضَّ رَأْسُهُ بَيْنَ حَجَرَيْنِ.} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
1206. இரண்டு கற்களுக்கு இடையில் தலையை வைத்து நசுக்கப்பட்டவளாக ஓர் அடிமைப் பெண்ணை கண்டனர். ``யார் உன்னை இவ்வாறு செய்தது? இன்னரா? இன்னாரா?'' என மக்கள் வினவிக் கொண்டிருந்தார்கள். அப்போது, ஒரு யூதனின் பெயர் வந்ததும், அவள் தன் தலையை அசைத்து ``ஆமாம்'' என்றாள். அந்த யூதன் பிடித்து வரப்பட்டான். அவன் குற்றத்தையும் ஒப்புக் கொண்டான். இரண்டு கற்களுக்கு இடையில் அவனுடைய தலையை வைத்து நசுக்குமாறு இறைத்தூதர்(ஸல்) கட்டளையிட்டார்கள்'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1207. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ غُلَامًا لِأُنَاسٍ فُقَرَاءَ قَطَعَ أُذُنَ غُلَامٍ لِأُنَاسٍ أَغْنِيَاءَ، فَأَتَوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَجْعَلْ لَهُمْ شَيْئًا.} رَوَاهُ أَحْمَدُ، وَالثَّلَاثَةُ، بِإِسْنَادٍ صَحِيحٍ.
1207. ஏழை மக்களைச் சேர்ந்த ஒரு சிறுவன் பணக்காரக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் காதை அறுத்துவிட்டான். அவர்கள் (இச்செய்தியுடன்) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். (ஆனால்) அவர்களுக்காக இழப்பீட்டுத் தொகை எதையும் இறைத்தூதர்(ஸல்) நிர்ணயிக்கவில்லை என இம்ரான் இப்னு ஹீஸைன்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இது `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
குறிப்பு: ஏழை மக்களைச் சேர்ந்த சிறுவனாக இருந்ததால் அல்லது சிறுவன் என்பதால் யதார்த்தமாக நிகழ்ந்திருக்கலாம் என்பதால் அவனைக் கண்டித்து தண்டிக்காமலும் இழப்பீட்டுத் தொகை பெறாமலும் விட்டிருக்கலாம் என்பதை அறிக!
1208. وَعَنْ عَمْرِوِ بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ؛ {أَنَّ رَجُلًا طَعَنَ رَجُلًا بِقَرْنٍ فِي رُكْبَتِهِ، فَجَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَقِدْنِي. فَقَالَ: "حَتَّى تَبْرَأَ". ثُمَّ جَاءَ إِلَيْهِ. فَقَالَ: أَقِدْنِي، فَأَقَادَهُ، ثُمَّ جَاءَ إِلَيْهِ. فَقَالَ: يَا رَسُولَ اللهِ! عَرِجْتُ، فَقَالَ: "قَدْ نَهَيْتُكَ فَعَصَيْتَنِي، فَأَبْعَدَكَ اللهُ، وَبَطَلَ عَرَجُكَ". ثُمَّ نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "أَنْ يُقْتَصَّ مِنْ جُرْحٍ حَتَّى يَبْرَأَ صَاحِبُهُ"} رَوَاهُ أَحْمَدُ، وَالدَّارَقُطْنِيُّ، وَأُعِلَّ بِالْإِرْسَالِ.
1208. ஒருவர் ஒருவரின் முழங்காலில் கொம்பால் குத்திவிட்டார். அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ``எனக்காகப் பழி வாங்குங்கள்'' எனக் கேட்டுக் கொண்டார்.
``காயம் நன்றாக ஆறிய பின்னர் வா!'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அவர் மறுபடியும் வந்து பழி வாங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களும் பழி வாங்கினார்கள். அதற்குப் பின்பு அவர் வந்து, ``இறைத்தூதர் அவர்களே! நான் நொண்டியாகிவிட்டேன்'' எனக் கூறினார்.
``நான் உன்னைத் தடுத்தும் நீ கேட்கவில்லை; மாறு செய்தாய். அதனால் தன் கருனையிலிருந்து அல்லாஹ் உன்னை தூரமாக்கிவிட்டான். உம்முடைய ஊனம் வீணாகிவிட்டது'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அதற்கு பின்பு, காயங்கள் குணமாகாதவரை பழிதீர்ப்பதை இறைத்தூதர்(ஸல்) தடை செய்தார்கள்.
நூல்கள்: அஹ்மத், தாரகுத்னீ
இது முர்ஸல் எனும் தரத்தில் அமைந்துள்ளதாகக் குறைகூறப்பட்டுள்ளது.
1209. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {اِقْتَتَلَتِ اِمْرَأَتَانِ مِنْ هُذَيْلٍ، فَرَمَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى بِحَجَرٍ، فَقَتَلَتْهَا وَمَا فِي بَطْنِهَا، فَاخْتَصَمُوا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَضَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ دِيَةَ جَنِينِهَا: غُرَّةٌ؛ عَبْدٌ أَوْ وَلِيدَةٌ، وَقَضَى بِدِيَةِ الْمَرْأَةِ عَلَى عَاقِلَتِهَا. وَوَرَّثَهَا وَلَدَهَا وَمَنْ مَعَهُمْ. فَقَالَ حَمَلُ بْنُ اَلنَّابِغَةِ اَلْهُذَلِيُّ: يَا رَسُولَ اللهِ! كَيْفَ يَغْرَمُ مَنْ لَا شَرِبَ، وَلَا أَكَلَ، وَلَا نَطَقَ، وَلَا اِسْتَهَلَّ، فَمِثْلُ ذَلِكَ يُطَلُّ، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "إِنَّمَا هَذَا مِنْ إِخْوَانِ الْكُهَّانِ"؛ مِنْ أَجْلِ سَجْعِهِ الَّذِيْ سَجَعَ.} مُتَّفَقٌ عَلَيْهِ.
1209. ஹுதைல் கோத்திரத்தைச் சேர்நத் இரணடு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒருத்தி மற்றொருத்தி மீது கல் எறிந்து அவளையும் வயிற்றிலிருந்து சிசுவையும் கொன்றுவிட்டாள். இது தொடர்பான வழக்கை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். அடிபட்டவருக்கு அடித்தவர் ஓர் அடிமையையோ ஓர் அடிமைப் பெண்ணையோ ஈடாகக் கொடுக்க வேண்டும் என்றும், (கொல்லப்பட்ட) அந்தப் பெண்ணிற்கான இழப்பீட்டுத் தொகை, கொலை செய்த பெண்ணின் தந்தை வழி உறவினர்கள் மீது கடமை என்றும் இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தார்கள்.
கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஆண் மக்களையும் (கணவர் போன்ற) அவர்களோடு உள்ளவர்களையும் வாரிசாக்கினார்கள்.
அப்போது, ஹமல் இப்னு நாபிகா அல் ஹுதலீ என்பவர், இறைத்தூதர் அவர்களே! சாப்பிடாத, குடிக்காத, பேசாத, அழுகைச் சப்தம் எழுப்பாத (வயிற்றிலிருந்து) பிறக்காத ஒரு சிசுவிற்காக நான் எவ்வாறு இழப்பீட்டுத் தொகை கொடுப்பது. எனவே, இது போன்றது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?'' எனக் கேட்டார்.
அப்போது அவர் பேசிய அடுக்கு மொழி நடையின் காரணத்தால், ``இவர் குறிகாரர்களின் சகோதரர் போலும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறனார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1210. وَأَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ: مِنْ حَدِيثِ اِبْنِ عَبَّاسٍ؛ أَنَّ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ سَأَلَ مَنْ شَهِدَ قَضَاءَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجَنِينِ؟ قَالَ: فَقَامَ حَمَلُ بْنُ اَلنَّابِغَةِ، فَقَالَ: كُنْتُ بَيْنَ اِمْرَأَتَيْنِ، فَضَرَبَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى... فَذَكَرَهُ مُخْتَصَرًا. وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
1210. இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக அபூ தாவூத் மற்றும் நஸயீயில் வயிற்றில் இருந்து பிறக்காத சிசு சம்பந்தமாக இறைத்தூதர்(ஸல்) தீர்ப்பளித்தபோது, அங்கிருந்த ஒருவரிடம் (அந்நிகழ்வு பற்றி) உமர்(ரலி) கேட்டதற்கு, ``ஹமல் இப்னு நாபிகா என்பவர் எழுந்து, ஒருவர் மற்றவர் மீது கல் எறிந்தபோது நான் அந்த இரண்டு பெண்களுக்கும் நடுவில் இருந்தேன்'' என்று (சாட்சி) கூறினார் என அவர் தெரிவித்தார். (இப்னு அப்பாஸ்(ரலி) பின்னர் இந்த ஹதீஸை சுருக்கமாகக் கூறினார்.
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1211. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ الرُّبَيِّعَ بِنْتَ النَّضْرِ -عَمَّتَهُ- كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَطَلَبُوا إِلَيْهَا الْعَفْوَ، فَأَبَوْا، فَعَرَضُوا الْأَرْشَ، فَأَبَوْا، فَأَتَوْا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَوْا إِلَّا الْقِصَاصَ، فَأَمَرَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْقِصَاصِ، فَقَالَ أَنَسُ بْنُ اَلنَّضْرِ: يَا رَسُولَ اللهِ! أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ؟ لَا، وَالَّذِيْ بَعَثَكَ بِالْحَقِّ، لَا تُكْسَرُ ثَنِيَّتُهَا، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "يَا أَنَسُ! كِتَابُ اللهِ: اَلْقِصَاصُ". فَرَضِيَ الْقَوْمُ، فَعَفَوْا، فَقَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "إِنَّ مِنْ عِبَادِ اللهُ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللهُ لَأَبَرَّهُ".} مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ.
1211. என் அத்தை ரூபய்யிவு பின்த் நள்ர் என்னும் அன்ஸாரிப் பெண், ஒருவரின் பல்லை உடைத்துவிட்டார். இதற்காக ருபய்யிவுவின் குலத்தார். (அதாவது எங்கள் குலத்தார்) அவரிடம் மன்னிப்புக் கோரினர். அவர் அதனை ஏற்றுக் கொள்ளாததால் இழப்பீட்டுத் தொகையைச் சமர்ப்பித்தனர். ஆனால், அவர் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து பழிவாங்கும்படி கோரினர். இறைத்தூதர்(ஸல்) பழிவாங்கும்படி கட்டளையிட்டார்கள்.
அப்போது, ``இறைத்தூதர் அவர்களே! தாங்கள் ருபய்யிவுவின் பல்லை உடைக்கப் போகிறீர்களா? இல்லை. தங்களை சத்தியத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவளின் பல் உடைக்கப்படாது!'' என (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ர் கூறினார்.
``அனஸே! அல்லாஹ்வின் கட்டளை பழிவாங்குதல்தான்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அப்போது, அந்த மக்கள் சமாதானமாகி மன்னித்துவிட்டார்கள். அதன் பின்னர், ``அல்லாஹ்வின் நல்லடியார்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அல்லாஹ் அதனை உண்மையாக்கி விடுகிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ, முஸ்லிம்
இங்கு புகாரீயின் வாசகம் இடம்பெற்றுள்ளது.
1212. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {مَنْ قُتِلَ فِي عِمِّيَّا أَوْ رِمِّيَّا بِحَجَرٍ، أَوْ سَوْطٍ، أَوْ عَصًا، فَعَلَيْهِ عَقْلُ الْخَطَإِ، وَمِنْ قُتِلَ عَمْدًا فَهُوَ قَوَدٌ، وَمَنْ حَالَ دُونَهُ فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَابْنُ مَاجَهْ، بِإِسْنَادٍ قَوِيٍّ.
1212. ``கொன்றவர் யார் என அறிய முடியாத வகையில் ஒரு கலவரத்திலோ கல்லெறிக்கு ஆளாகியோ, தடியடிபட்டோ ஒருவர் கொல்லப்பட்டால் அவருக்கு (அவரின் வாரிசுகளுக்கு) தவறுதலாகச் செய்யும் கொலைக்கான உயிரீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். திட்டமிட்டே கொல்லப்பட்டவருக்காக (அவரைக் கொன்றவர்) பழிவாங்கப்பட வேண்டும். இந்நிலையில், அதனை (தீர்ப்பை) தடுப்பவர் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா
இதன் அறிவிப்பாளர் வரிசைத் தொடர் பலமானது.
1213. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {إِذَا أَمْسَكَ الرَّجُلُ الرَّجُلَ، وَقَتَلَهُ الْآخَرُ، يُقْتَلُ الَّذِيْ قَتَلَ، وَيُحْبَسُ الَّذِيْ أَمْسَكَ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ مَوْصُولًا وَمُرْسَلًا، وَصَحَّحَهُ اِبْنُ الْقَطَّانِ، وَرِجَالُهُ ثِقَاتٌ، إِلَّا أَنَّ الْبَيْهَقِيَّ رَجَّحَ الْمُرْسَلَ.
1213. ஒருவன் மற்றவனைப் பிடித்துக் கொள்ள இன்னொருவன் அந்த மற்றவனைக் கொன்று விட்டால், கொன்றவனைக் கொன்றுவிடவேண்டும். பிடித்துக் கொண்டிருந்தவனைச் சிறையில் அடைக்க வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இதனை இமாம் தாரகுத்னீ(ரஹ்) `மவ்ஸூல்' எனுத் தரத்தில் பதிவிட்டுள்ளார். இமாம் இப்னு கத்தான்(ரஹ்) ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார். இன்னும் இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள். இன்னும் இது பைஹகீயில் `முர்ஸல்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1214. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْبَيْلَمَانِيِّ؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَتَلَ مُسْلِمًا بِمَعَاهِدٍ. وَقَالَ: "أَنَا أَوْلَى مَنْ وَفَى بِذِمَّتِهِ}. أَخْرَجَهُ عَبْدُ الرَّزَّاقِ هَكَذَا مُرْسَلًا. وَوَصَلَهُ الدَّارَقُطْنِيُّ، بِذِكْرِ اِبْنِ عُمَرَ فِيهِ، وَإِسْنَادُ الْمَوْصُولِ وَاهٍ.وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {قُتِلَ غُلَامٌ غِيلَةً، فَقَالَ عُمَرُ: لَوْ اِشْتَرَكَ فِيهِ أَهْلُ صَنْعَاءَ لَقَتَلْتُهُمْ بِهِ}. أَخْرَجَهُ الْبُخَارِيُّ.
1214. ``ஒப்பந்தம் செய்து கொண்டு வாழும் ஒர் இறைமறுப்பாளருக்காக ஒரு முஸ்லிமை இறைத்தூதர்(ஸல்) கொன்றார்கள் (மரண தண்டனை விதித்தார்கள்). பின்னர், ``பாதுகாப்புப் பொறுப்பை நிறைவேற்றியவர்களில் நானே மேலானவன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார் என அப்துர் ரஹ்மான் இப்னு பைலமானீ(ரலி) அறிவித்தார்.
இமாம் அப்துர் ரஸ்ஸாக்(ரஹ்) இதனை `முர்ஸல்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளார்.
உமர்(ரலி) வாயிலாக தாரகுத்னீயில் ``மவ்ஸூல்'' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு பலவீனமாக உள்ளது.
1216. وَعَنْ أَبِي شُرَيْحٍ اَلْخُزَاعِيِّ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {فَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ بَعْدَ مَقَالَتِي هَذِهِ، فَأَهْلُهُ بَيْنَ خِيَرَتَيْنِ: إِمَّا أَنْ يَأْخُذُوا الْعَقْلِ. أَوْ يَقْتُلُوا} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ.
1216. ``என்னுடைய இந்த உரைக்குப் பின்பு ஒருவர் மற்றவரைக் கொன்றால், இறந்தவரின் குடும்பத்தார் இரண்டு விஷயங்களில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம், விரும்பினால் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது கொலையாளியைப் பழிக்கும் பழியாக (நீதிமன்றம் மற்றும் அரசின் மூலம்) கொன்றுவிடலாம்'' என்று இறைத்தூதர்(ஸல்) ஓர் உரையில் கூறினார்கள் என அபூ ஷுரைஹ் அல் குஸாயீ(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
1217. وَأَصْلُهُ فِي "الصَّحِيحَيْنِ" مِنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ بِمَعْنَاهُ.بَابُ الدِّيَاتِ
1217. இதே பொருளில் அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக புகாரீ, முஸ்லிமில் இதன் மூலம் உள்ளது.
1218. عَنْ أَبِي بَكْرٍ بْنِ مُحَمَّدٍ بْنِ عَمْرِوِ بْنِ حَزْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَى أَهْلِ الْيَمَنِ... فَذَكَرَ الْحَدِيثَ، وَفِيهِ: {أَنَّ مَنْ اِعْتَبَطَ مُؤْمِنًا قَتْلاً عَنْ بَيِّنَةٍ، فَإِنَّهُ قَوَدٌ، إِلَّا أَنْ يَرْضَى أَوْلِيَاءُ الْمَقْتُولِ، وَإِنَّ فِي النَّفْسِ الدِّيَةَ مِائَةً مِنَ الْإِبِلِ، وَفِي الْأَنْفِ إِذَا أُوعِبَ جَدْعُهُ الدِّيَةُ، وَفِي اللِّسَانِ الدِّيَةُ، وَفِي الشَّفَتَيْنِ الدِّيَةُ، وَفِي الذِّكْرِ الدِّيَةُ، وَفِي الْبَيْضَتَيْنِ الدِّيَةُ، وَفِي الصُّلْبِ الدِّيَةُ، وَفِي الْعَيْنَيْنِ الدِّيَةُ، وَفِي الرِّجْلِ الْوَاحِدَةِ نِصْفُ الدِّيَةِ، وَفِي الْمَأْمُومَةِ ثُلُثُ الدِّيَةِ، وَفِي الْجَائِفَةِ ثُلُثُ الدِّيَةِ، وَفِي الْمُنَقِّلَةِ خَمْسَ عَشْرَةَ مِنَ الْإِبِلِ، وَفِي كُلِّ إِصْبَعٍ مِنْ أَصَابِعِ الْيَدِ وَالرِّجْلِ عَشْرٌ مِنَ الْإِبِلِ، وَفِي السِّنِّ خَمْسٌ مِنَ الْإِبِلِ وَفِي المُوضِحَةِ خَمْسٌ مِنَ الْإِبِلِ، وَإِنَّ الرَّجُلَ يُقْتَلُ بِالْمَرْأَةِ، وَعَلَى أَهْلِ الذَّهَبِ الْفُ دِينَارٍ} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ فِي "الْمَرَاسِيلِ" وَالنَّسَائِيُّ، وَابْنُ خُزَيْمَةَ، وَابْنُ الْجَارُودِ، وَابْنُ حِبَّانَ، وَأَحْمَدُ، وَاخْتَلَفُوا فِي صِحَّتِهِ.
1218. இறைத்தூதர்(ஸல்) யமன்வாசிகளுக்கு (ஒரு கடிதம்) எழுதினார்கள். (அறிவிப்பாளர் ஹதீஸ் முழுவதையும் அறிவித்தார்) அதில், யாரேனும் குற்றமற்ற இறைநம்பிக்கையாளர் ஒருவரைக் கொலைசெய்து, அதற்கு ஆதாரமும் இருந்தால் அதற்காகப் பழிவாங்குவது கடமையாகும். கொலை செய்யப்பட்டவனின் பொறுப்பாளர்கள் (உயிரீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு) மன்னிக்க ஒப்புக் கொண்டாலே தவிர. உயிருக்கான நஷ்ட ஈடு 100 ஒட்டகங்களாகும். மேலும், மூக்கை அடியோடு அறுத்துவிட்டால் முழு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இரண்டு கண்கள், நாக்கு, உதடுகளுக்கு பதிலாக முழு நஷ்ட ஈடு தரப்பட வேண்டும். ஆண் குறிக்காவும் நஷ்ட ஈடு உண்டு; இரு விதர்களுக்காகவும் நஷ்ட ஈடு தரப்படவேண்டும். முதுகுத் தண்டு தாக்கப்பட்டாலும் நஷ்ட ஈடு தரப்படவேண்டும். ஒரு கால் வெட்டப்பட்டால் அரைப்பங்கு நஷ்ட ஈடாகும். மூளை மற்றும் வயிற்றுக் காயங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நஷ்ட ஈடாகும். முதுகெலும்பைக் காயப்படுத்தியதற்கு நஷ்ட ஈடு பதினைந்து ஒட்டகங்களாகும். கை, கால்களின் ஒவ்வொரு விரலுக்கும் நஷ்ட பத்து ஒட்டகங்களாகும். ஒரு பல்லுக்குரிய நஷ்ட ஈடு ஐந்து ஒட்டகங்களாகும். எலும்பு தெரியும் அளவிற்குள்ள காயங்களுக்கு ஐந்து ஒட்டகங்கள் நஷ்ட ஈடாகும். பெண்ணுக்குப் பதிலாக ஆணை கொலை செய்பவர்களுக்குரிய நஷ்ட ஈடு அவரிடம் தங்கம் இருந்தால் ஆயிரம் தீனார்கள் ஆகும் என்று எழுதப்பட்டிருந்தது என அபூ பக்கர் இப்னு முஹம்மத் இப்னு அம்ர் இப்னி ஹஜம் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
நூல்கள்: நஸயீ, இப்னு குஸைமா, இப்னு ஸ்ஜாரூத், இப்னு ஹிப்பான் மற்றும் அஹ்மத்
இது `ஸஹீஹ்' என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.