1298. عَنْ أَبِي هُرَيْرَةَ رَ ضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {" مَنْ مَاتَ وَلَمْ يَغْزُ، وَلَمْ يُحَدِّثْ نَفْسَهُ بِهِ، مَاتَ عَلَى شُعْبَةٍ مِنْ نِفَاقٍ"} رَوَاهُ مُسْلِمٌ.
1298. ``(சத்தியத்தை மேலோங்கச் செய்வதற்காகப்) போரிடாமலும், அது குறித்த எண்ணங்கூட இல்லாமலும் இறப்பவன் நயவஞ்சகத்தின் ஓர் அம்சத்துடனேயே இறக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1299. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَمْوَالِكُمْ، وَأَنْفُسِكُمْ، وَأَلْسِنَتِكُمْ"} رَوَاهُ أَحْمَدُ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1299. ``நீங்கள் உங்கள் பொருட்கள், உங்கள் உயிர்கள் மற்றும் உங்கள் நாவுகள் மூலம் இணைவைப்பாளர்களுடன் அறப்போரிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், நஸயீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1300. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {قُلْتُ: يَا رَسُولَ اللهِ ! عَلَى النِّسَاءِ جِهَادٌ؟ قَالَ: "نَعَمْ. جِهَادٌ لَا قِتَالَ فِيهِ، اَلْحَجُّ وَالْعُمْرَةُ"}. رَوَاهُ اِبْنُ مَاجَه. وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ.
1300. ``இறைத்தூதர் அவர்களே! பெண்களுக்கு ஜிஹாத் கடமையா?'' என நான் கேட்டேன்.
``ஆமாம் அவர்களுக்கு போரில்லாத ஜிஹாத் உண்டு. அது ஹஜ் மற்றும் உம்ராவாகும்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: இப்னு மாஜா
இதன் மூலம் புகாரீயில் உள்ளது.
1301. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِوٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَأْذِنُهُ فِي الْجِهَادِ. فَقَالَ: " أَ حَيٌّ وَالِدَاكَ؟"، قَالَ: نَعَمْ: قَالَ: " فَفِيهِمَا فَجَاهِدْ"}. مُتَّفَقٌ عَلَيْهِ.
1301. ஒருவர் இறைத்தூதர் அவர்களிடம் வந்து ஜிஹாதில் (கலந்து கொள்ள) அனுமதி கோரினார்.
``உன் பெற்றோர் உயிருடன் உள்ளனரா?'' என இறைத்தூதர்(ஸல்) வினவினார்கள்.
``ஆமாம்'' என அவர் கூறினார்.
``நீ அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து நீர் ஜிஹாத் செய்வீராக!'' என்று இறைத்தூதர்(ஸல்) அவரிடம் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து, அவர்களை முதிய வயதில் நல்ல விதமாகப் பராமரித்து, பணிவிடை செய்து அவர்களின் நலனுக்காக உழைப்பதும் ஜிஹாத் எனும் அறப்போரின் ஓர் அம்சமாகும்.
1302. وَلِأَحْمَدَ، وَأَبِي دَاوُدَ: مِنْ حَدِيثِ أَبِي سَعِيدٍ نَحْوُهُ، وَزَادَ: {"اِرْجِعْ فَاسْتَأْذِنْهُمَا، فَإِنْ أَذِنَا لَكَ؛ وَإِلَّا فَبِرَّهُمَا"}.
1302. அபூ ஸயீத்(ரலி) வாயிலாக அஹ்மத் மற்றும் அபூ தாவூதில், ``திரும்பச் செல்! அவர்கள் இருவரிடமும் அனுமதி கேள்!'' அவர்கள் உனக்கு அனுமதி அளித்தால் (வா!) இல்லையெனில், அவர்கள் இருவருக்கும் நன்மை செய்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உள்ளது.
1303. وَعَنْ جَرِيرٍ الْبَجَلِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"أَنَا بَرِئٌ مِنْ كُلِّ مُسْلِمٍ يُقِيمُ بَيْنَ الْمُشْرِكِينَ"} رَوَاهُ الثَّلَاثَةُ وَإِسْنَادُهُ صَحِيحٌ ، وَرَجَّحَ الْبُخَارِيُّ إِرْسَالَهُ.
1303. ``இணைவைப்பாளர்களுக்கு மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் விலகிக் கொள்கிறேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள என ஜரீர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இது `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இது `முர்ஸல்' என்பதே சரி என இமாம் புகாரீ(ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.
1304. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {" لَا هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ، وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1304. ``மக்கா வெற்றிக்குப் பின்பு ஹிஜ்ரத் இல்லை! மாறாக, ஜிஹாத் மற்றும் (அதற்கான) எண்ணம் (கொள்ளுதல்) தான் உள்ளது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1305. وَعَنْ أَبِي مُوسَى اَلْأَشْعَرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللهُ هِيَ الْعُلْيَا، فَهُوَ فِي سَبِيلِ اللهِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1305. ``அல்லாஹ்வின் வாக்கை உயர்த்துவதற்காகப் போரிடுபவர், இறைவழியில் உள்ளவராவார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1306. وَعَنْ عَبْدِ اللهِ بْنِ السَّعْدِيِّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {" لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ مَا قُوتِلَ الْعَدُوُّ"} رَوَاهُ النَّسَائِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1306. ``பகைவர்களுடன் போர் தொடரும் வரை ஹிஜ்ரத் முடிவதில்லை'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நூல்: நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1307. وَعَنْ نَافِعٍ قَالَ:{أَغَارُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَنِيَّ الْمُصْطَلِقِ، وَهُمْ غَارُّونَ، فَقَتَلَ مُقَاتِلَتَهُمْ، وَسَبَى ذَرَارِيَّهُمْ. حَدَّثَنِي بِذَلِكَ عَبْدُ اللهُ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
1307. இறைத்தூதர்(ஸல்) பனூ முஸ்தலிக் கூட்டத்தார் மீது (தீடீரெனப்) படை எடுத்தார்கள். அப்போது, அவர்கள் அசட்டையாய் இருந்தார்கள். அவர்களில் போரிடக் கூடியவர்களைக் கொன்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் பிடித்துக் கொள்ளப்பட்டார்கள். இதனை எனக்கு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார் என நாஃபிவு அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பில், பனூ முஸ் தலிக் போரின்போதுதான் கைதியாக ஜுவைரியா(ரலி) கிடைத்தார் என உள்ளது.
1308. وَعَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ قَالَ: {كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمَّرَ أَمِيرًا عَلَى جَيْشٍ أَوْصَاهُ بِتَقْوَى اللهِ، وَبِمَنْ مَعَهُ مِنَ الْمُسْلِمِينَ خَيْراً، ثُمَّ قَالَ: "اُغْزُوا بِسْمِ اللهِ، فِي سَبِيلِ اللهِ، قَاتِلُوا مِنْ كَفَرَ بِاللَّهِ، اُغْزُوا، وَلَا تَغُلُّوا، وَلَا تَغْدُرُوا، وَلَا تُمَثِّلُوا، وَلَا تَقْتُلُوا وَلِيداً، وَإِذَا لَقِيتَ عَدُوَّكَ مِنَ الْمُشْرِكِينَ فَادْعُهُمْ إِلَى ثَلَاثِ خِصَالٍ، فَأَيَّتُهُنَّ أَجَابُوكَ إِلَيْهَا، فَاقْبَلْ مِنْهُمْ، وَكُفَّ عَنْهُمْ: اُدْعُهُمْ إِلَى الْإِسْلَامِ فَإِنْ أَجَابُوكَ فَاقْبَلْ مِنْهُمْ. ثُمَّ اُدْعُهُمْ إِلَى التَّحَوُّلِ مِنْ دَارِهِمْ إِلَى دَارِ الْمُهَاجِرِينَ، فَإِنْ أَبَوْا فَأَخْبَرْهُمْ أَنَّهُمْ يَكُونُونَ كَأَعْرَابِ الْمُسْلِمِينَ، وَلَا يَكُونُ لَهُمْ. فِي الْغَنِيمَةِ وَالْفَيْءِ شَيْءٌ إِلَّا أَنْ يُجَاهِدُوا مَعَ الْمُسْلِمِينَ. فَإِنْ هُمْ أَبَوْا فَاسْأَلْهُمُ الْجِزْيَةَ، فَإِنْ هُمْ أَجَابُوكَ فَاقْبَلْ مِنْهُمْ، فَإِنْ أَبَوْا فَاسْتَعِنْ بِاللهُ وَقَاتِلْهُمْ. وَإِذَا حَاصَرْتَ أَهْلَ حِصْنٍ فَأَرَادُوكَ أَنْ تَجْعَلَ لَهُمْ ذِمَّةَ اللهُ وَذِمَّةَ نَبِيِّهِ، فَلَا تَفْعَلْ، وَلَكِنْ اِجْعَلْ لَهُمْ ذِمَّتَكَ؛ فَإِنَّكُمْ إِنْ تُخْفِرُوا ذِمَمَكُمْ. أَهْوَنُ مِنْ أَنَّ تُخْفِرُوا ذِمَّةَ اللهِ، وَإِذَا أَرَادُوكَ أَنْ تُنْزِلَهُمْ عَلَى حُكْمِ اللهِ، فَلَا تَفْعَلْ، بَلْ عَلَى حُكْمِكَ؛ فَإِنَّكَ لَا تَدْرِي أَتُصِيبُ فِيهِمْ حُكْمَ اللهُ أَمْ لَا"} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1308. படைத் தளபதியாகவோ அல்லது சிறு படைக்குழுவின் தலைவராகவோ ஒருவரை இறைத்தூதர்(ஸல்) நியமித்தால், அவருக்கு அவரின் அகவாழ்விலும் இறையச்சத்தைக் கைக்கொள்ளும் படியும் முஸ்லிம்களுடன் நன்றாக நடந்து கொள்ளும் படியும் அறிவுரை கூறுவார்கள். பின்னர், ``அல்லாஹ்வை நிராகரிப்பவர்களுடன் அல்லாஹ்வின் பெயரால் போரிடுங்கள். அல்லாஹ்வை நிராகரிப்பவர்களை வெட்டுங்கள்; போரிடுங்கள். போர்ச் செல்வங்களை மோசடியாய் எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏமாற்றாதீர்கள். அங்கங்களைச் சிதைக்காதீர்கள். மேலும், குழந்தைகளைக் கொல்லாதீர்கள். மேலும் இணைவைப்பாளர்களில் உங்கள் எதிரியை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் மூன்று நிபந்தனைகளின் பக்கம் அவர்களை அழையுங்கள்! அவர்கள் அவற்றில் ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொண்டால் நீங்கள் (அவர்களைத் தாக்காமல்) விட்டு விடுங்கள்.
a. அவர்களை இஸ்லாமின்பால் அழையுங்கள் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டால் நீங்கள் அவர்களை (முஸ்லிம்கள் என) ஒப்புக் கொள்ளுங்கள். b. பின்னர், அவர்களை நீங்கள் முஹாஜிர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து வசிக்கும் படி அழைப்புவிடுங்கள்! அவர்கள் அதனை ஏற்க மறுத்தால் கிராமப் புறத்து முஸ்லிம்களின் நிலை போன்றதுதான் அவர்களின் நிலையும். அதாவது எதுவரை அவர்கள் முஸ்லிம்களுடன் இணைந்து போருக்குச் செல்லவில்லையோ, அதுவரை அவர்களுக்கு கனீமத் மற்றும் ஃபய்வு பொருட்களில் எந்தப் பங்கும் கொடுக்கப்படாது என்று அவர்களுக்குத் தெரிவித்து விடுங்கள். அவர்கள் இதனையும் ஏற்கவில்லை என்றால், c. அவர்களிடமிருந்து ஜிஸ்யா வரியைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் இதனை ஏற்க மறுத்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவியைக் கோரியவர்களாக நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள். கோட்டைவாசிகளை நீங்கள் சூழ்ந்து முற்றுகையிட்டு, அவர்கள் தங்களை அல்லாஹ்வின் பொறுப்பிலும் நபியின் பெறுப்பிலும் விட்டுவிடாமல் உங்களின் பொறுப்பில் எடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், அவர்கள் உங்களிடம் உடன்படிக்கையை முறிப்பது, அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் செய்த உடன்படிக்கையை முறிப்பதைவிட எளிதானதாகும்.
அவர்கள், அல்லாஹ்வின் சட்டப்படி தங்களை விடுவிக்கும்படி உங்களிடம் வேண்டினால், அவர்களை அல்லாஹ்வின் சட்டப்படி விடுவிக்காமல் உங்களின் பொறுப்பில் விடுவியுங்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் சட்டத்தை அவர்களிடம் சரியாகச் செயல்படுத்தினீர்களா இல்லையா என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என புரைதா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1309. وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ غَزْوَةً وَرَّى بِغَيْرِهَا} مُتَّفَقٌ عَلَيْهِ.
1309. இறைத்தூதர்(ஸல்) போருக்கான எண்ணங் கொண்டால், வேறு எதனையோ நாடியிருப்பதாகக் காட்டிக் கொண்டு அதனை இரகசியமாக வைப்பார்கள் என கஅப் இப்னு மஸாக்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1310. وَعَنْ مَعْقِلٍ؛ أَنَّ النُّعْمَانَ بْنَ مُقَرِّنٍ قَالَ: {شَهِدْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَمْ يُقَاتِلْ أَوَّلَ النَّهَارِ أَخَّرَ الْقِتَالِ حَتَّى تَزُولَ الشَّمْسُ، وَتَهُبَّ الرِّيَاحُ، وَيَنْزِلَ النَّصْرُ} رَوَاهُ أَحْمَدُ وَالثَّلَاثَةُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ. وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ.
1310. நபி(ஸல்) அவர்களுடன் பல போர்களில் நான் கலந்து கொண்டேன். அவர்கள் முற்பகல் நேரத்தில் போர்புரியவில்லை என்றால், சூரியன் உச்சிசாய்ந்து காற்றுவீசி இறைவனின் உதவி இறங்கும் வரை காத்திருப்பார்கள் என நுஃமான் இப்னு முகர்ரின்(ரலி) கூறினார் என மஅகில் அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் புகாரீயில் உள்ளது.
1311. وَعَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {سُئِلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدَّارِ مِنَ الْمُشْرِكِينَ.. يُبَيِّتُونَ، فَيُصِيبُونَ مِنْ نِسَائِهِمْ وَذَرَارِيهِمْ، فَقَالَ: "هُمْ مِنْهُمْ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1311. இணைவைப்போர் மீது இரவு நேரங்களில் தாக்குதல் நடத்தும்போது அவர்களின் பெண்களும் குழந்தைகளும் கூட (சில நேரங்களில்) பாதிக்கப்படுவது குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது.
``அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களே'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸஅப் இப்னு ஜஸ்ஸாமா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல நபி(ஸல்) அனுமதித்துள்ளார்கள் என இதற்குப் பொருள் அல்ல. ஏனெனில், நபி(ஸல்) இதனைத் தடை செய்துள்ளதாக பல ஹதீஸ் கள் உள்ளன. பார்க்க இந்நூலின் ஹதீஸ் எண் 1299.
போருக்கு நடுவில் பெண்களும் குழந்தைகளும் தாமாக வந்து குறுக்கிட்டால், அதனால் அவர்களுக்கும் உயிர் இழப்பு ஏற்படுவது யதார்த்தமாகும். இன்னும் சில நேரங்களில் குழந்தைகளையும் பெண்களையும் ஏதிரில் போரில் ஈடுபடுத்திவிட்டால், அதனால் இந்த இழப்பு தவிர்க்கமுடியாததாய் ஆகிறது. இதைத்தான் ``அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களே'' என நபி(ஸல்) குறிப்பிட்டார்கள் என்பதை அறிக!
1312. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ {أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ تَبِعَهُ يَوْمَ بَدْرٍ: " اِرْجِعْ. فَلَنْ أَسْتَعِينَ بِمُشْرِكٍ"} رَوَاهُ مُسْلِمٌ.
1312. பத்ருப் போரின்போது தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஒருவரிடம்,
``நீ திரும்பிச் சென்றுவிடு! இணைவைப்பாளனிடம் நான் ஒருபோதும் உதவி பெறமாட்டேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1313. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى اِمْرَأَةً مَقْتُولَةً فِي بَعْضِ مَغَازِيهِ، فَأَنْكَرَ قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1313. ஒரு போரில் பெண் ஒருத்தி கொல்லப்பட்டுக் கிடந்ததைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்வதைத் தடைசெய்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1314. وَعَنْ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {" اُقْتُلُوا شُيُوخَ الْمُشْرِكِينَ، وَاسْتَبْقُوا شَرْخَهُمْ"} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ.
1314. ``இணைவைப்பாளர்களில் (போரிடும் வலிமை கொண்ட) பெரியவர்களைக் கொன்றுவிடுங்கள்; சிறுவர்களை விட்டுவிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸமுரா(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்
1315. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّهُمْ تَبَارَزُوا يَوْمَ بَدْرٍ} رَوَاهُ الْبُخَارِيُّ. وَأَخْرَجَهُ أَبُو دَاوُدَ مُطَوَّلاً.
1315. பத்ருப் போரின்போது நாங்கள் எதிரியை நேருக்கு நேர் சந்தித்து போரிடச் சென்றோம் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
இது அபூ தாவூதில் நீண்ட ஹதீஸாக உள்ளது.
1316. وَعَنْ أَبِي أَيُّوبَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: إِنَّمَا أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ فِينَا مَعْشَرَ الْأَنْصَارِ، يَعْنِي: وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ قَالَهُ رَدًّا عَلَى مَنْ أَنْكَرَ عَلَى مَنْ حَمَلَ عَلَى صَفِ الرُّومِ حَتَّى دَخَلَ فِيهِمْ. رَوَاهُ الثَّلَاثَةُ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ، وَابْنُ حِبَّانَ، وَالْحَاكِمُ.
1316. ``(கான்ஸ்டான்டி நோபிளில் நடந்த) ஒரு போரின்போது ரோமப் படைக்குள் புகுந்து அவர்களின் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டு, (``உங்கள் கைகளை அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள்'' என்னும் இறைவசனத்தை ஆதாரமாகக் காட்டி, `இவர் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறாரே' என்று கண்டனம் தெரிவித்தவர்களுக்கு மறுப்புக் கூறும் விதத்தில், ``அன்ஸாரிகளே! இந்த வசனம் நம் விஷயத்தில்தான் இறக்கப்பட்டுள்ளது. (நீங்கள் நினைப்பது போல் இறைவழியில் உயிரை அர்ப்பணித்துப் போராடுவதைக் கண்டிப்பதற்காக அல்ல)'' என அபூ அய்யூப் அல் அன்ஸாரி(ரலி) கூறினார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் திர்மிதீ, இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
குறிப்பு: சத்திய மார்க்கம் மேலோங்கி, அதற்கு உதவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது, நாம் நம்முடைய சொத்துகளை முறையாகப் பராமரித்து நிர்வகித்து வந்திருந்தால் அவற்றை இழந்திருக்க மாட்டோம். ஆர்வ மிகுதியால் அறப்போர்களில் ஈடுபட்டு அவற்றை இழந்துவிட்டோம் என அன்ஸாரிகளான நாம் பேசிக் கொண்டதைக் கண்டித்தே இறைவன் இவ்வசனத்தை அருளினான் என அபூ அய்யூப்(ரலி) கூறினார்கள் என மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
1317. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {حَرَقَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَخْلَ بَنِي النَّضِيرِ، وَقَطَعَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1317. பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களை இறைத்தூதர்(ஸல்) எரித்து, துண்டுதுண்டாக வெட்டினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்