1359. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {" كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ، فَأَكَلَهُ حَرَامٌ"} رَوَاهُ مُسْلِمٌ.
1359. ``விலங்குகளில் (கோரைப் பல்லுடைய) கீறிக் கிழிக்கும் ஒவ்வொன்றையும் உண்பது விலக்கப்பட்டதாகும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1360. وَأَخْرَجَهُ: مِنْ حَدِيثِ اِبْنِ عَبَّاسٍ بِلَفْظٍ: نَهَى. وَزَادَ: {"وَكُلُّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ"}.
1360. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் ஓர் அறிவிப்பில், (தடை செய்தார்கள்) என உள்ளது. ``பறவைகளில் கால் நகங்களால் பிடித்துத் தூக்கி உண்பவை'' என்பதும் உள்ளது.
1361. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ عَنْ لُحُومِ الْحُمُرِ الْأَهْلِيَّةِ، وَأْذَنْ فِي لُحُومِ الْخَيْلِ} مُتَّفَقٌ عَلَيْهِ.. وَفِي لَفْظِ الْبُخَارِيِّ: {وَرَخَّصَ}.
1361. கைபரில் நாட்டுக் கழுதையின் கறியை உண்ணக் கூடாது என இறைத்தூதர்(ஸல்) தடைசெய்தார்கள். மேலும், குதிரைக் கறியை (உண்ண) அனுமதி அளித்தார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
புகாரீயில், ``குதிரைகளுக்கு அனுமதி அளித்தார்கள்'' என உள்ளது.
1362. وَعَنِ ابْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {غَزَوْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعَ غَزَوَاتٍ، نَأْكُلُ الْجَرَادَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1362. இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஏழு போர்களில் நாங்கள் பங்கெடுத்துள்ளோம். (அப்போது) நாங்கள் வெட்டுக்கிளியை உண்போம் என இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1363. وَعَنْ أَنَسٍ - فِي قِصَّةِ الْأَرْنَبِ - {قَالَ: فَذَبَحَهَا، فَبَعَثَ بِوَرِكِهَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَبِلَهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1363. முயல் சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், ``அவர் (அபூ தல்ஹா) அதனை அறுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அதன் பிட்டத்தைக் கொடுத்தார். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள்'' என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1364. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ أَرْبَعِ مِنَ الدَّوَابِّ: النَّمْلَةُ، وَالنَّحْلَةُ، وَالْهُدْهُدُ، وَالصُّرَدُ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ.
1364. எறும்பு, தேனீ, ஹுத்ஹுத் மற்றும் சிட்டுக்குருவி ஆகிய நான்கு உயிரினங்களைக் கொல்வதை இறைத்தூதர்(ஸல்) தடைசெய்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1365. وَعَنِ ابْنِ أَبِي عَمَّارٍ قَالَ: {قُلْتُ لِجَابِرٍ: اَلضَّبُعُ صَيْدُ هِيَ؟ قَالَ: نِعْمَ. قُلْتُ: قَالَهُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: نِعْمَ} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَةَوَصَحَّحَهُ الْبُخَارِيُّ، وَابْنُ حِبَّانَ.
1365. நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், ``கழுதைப்புலி வேட்டைப் பிராணியா? (ஹலாலா?)'' எனக் கேட்டேன்.
`ஆம்' என அவர் கூறினார்.
``இறைத்தூதர்(ஸல்) இதனைக் கூறியுள்ளார்களா?'' என நான் கேட்டேன்.
``ஆம்'' என்று அவர் பதிலுரைத்தார் என இப்னு அபீ அம்மார்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் புகாரீ மற்றும் இப்னு ஹிப்பா(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
1366. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ؛ أَنَّهُ سُئِلَ عَنِ الْقُنْفُذِ، فَقَالَ: قُلْ لَا أَجدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ فَقَالَ شَيْخٌ عِنْدَهُ: سَمِعْتَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: {ذَكَرَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: خِبْثَةَ مِنَ الخَبَائِثِ"} أَخْرَجَهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَإِسْنَادُهُ ضَعِيفٌ.
1366. ``முள்ளம் பன்றியைப் பற்றி (அதைச் சாப்பிடலாமா என) இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ``(நபியே!) கூறும். எனக்கு அறிவிக்கப்பட்ட வஹீயில் உண்பவர்களுக்கு எந்த உணவும் தடை செய்யப்பட்டதாக நான் காணவில்லை; ஆனால், செத்த பிராணியையும் ஓடும் இரத்தத்தையும், பன்றி இறைச்சியையும் தவிர, நிச்சயமாக இவை அசுத்தமானவை. மேலும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பாவமானவற்றைத் தவிர'' என்னும் (6:145) இறை வசனத்தை அவர் ஓதினார்
அப்போது, அவருடன் இருந்த முதியவர் ஒருவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முள்ளம் பன்றி பற்றிய பேச்சு வந்தது. அதற்கு, ``அது அருவருப்பானவற்றில் ஒன்று'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்'' என்று அபூ ஹுரைரா(ரலி) சொல்ல நான் செவியற்றுள்ளேன் எனக் கூறினார்.
அதைச் செவியுற்ற இப்னு உமர்(ரலி), ``இறைத்தூதர்(ஸல்) அப்படிக் கூறியிருந்தால், அவர்கள் கூறியவாயே அது ஆகும்'' எனக் கூறினார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
இதன் அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது.
1367. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجَلَّالَةِ وَأَلْبَانِهَا} أَخْرَجَهُ الْأَرْبَعَةِ إِلَّا النَّسَائِيُّ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ.
1367. ``அசுத்தங்களை உண்ணும் கால்நடைகளையும் அவற்றின் பாலையும் உண்ணக் கூடாது என்று இறைத்தூதர்(ஸல்) தடைசெய்தார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
1368. وَعَنْ أَبِي قَتَادَةٌ رَضِيَ اللهُ عَنْهُ {-فِي قِصَّةِ الْحِمَارِ الْوَحْشِيِّ- فَأَكَلَ مِنْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1368. காட்டுக் கழுதை குறித்த சம்பவத்தைக் கூறியபோது, இறைத்தூதர்(ஸல்) அதிலிருந்து உண்டார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1369. وَعَنْ أَسْمَاءِ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {نَحَرْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَساً، فَأَكَلْنَاهُ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1369. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் ஒரு குதிரையை அறுத்து அதனை (சமைத்து) உண்டோம் என அஸ்மா பின்த் அபீ பக்கர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1370. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: {أَكُلَّ الضَّبِّ عَلَى مَائِدَةِ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ} مُتَّفَقٌ عَلَيْهِ.
1370. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் உணவு விரிப்பில், உடும்பு (கறி) உண்ணப்பட்டது என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1371. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ الْقُرَشِيُّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ طَبِيباً سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الضِّفْدَعِ يَجْعَلُهَا فِي دَوَاءٍ، فَنَهَى عَنْ قَتْلِهَا} أَخْرَجَهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.بَاب الصَّيْدِ وَالذَّبَائِحِ
1371. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ஒரு மருத்துவர் தவளை குறித்து, ``அதை மருந்துக்காக உபயோகிக்கலாமா?'' எனக் கேட்டார்.
உடனே, அதைக் கொல்ல வேண்டாம் என இறைத்தூதர்(ஸல்) தடைசெய்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு உஸ்மான் அல் குரஷிய்யா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இமாம் ஹாகி(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1372. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"مَنِ اتَّخَذَ كَلْباً، إِلَّا كَلْبَ مَاشِيَةٍ، أَوْ صَيْدٍ، أَوْ زَرْعٍ، اِنْتَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1372. ``கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக அல்லது வேட்டைக்காக அல்லது விவசாய நிலத்தைப் பாதுகாப்பதற்காக தவிர, நாய் வளர்ப்பவரின் நற்செயல்களுக்கான கூலியிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவு குறைந்து கொண்டே இருக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1373. وَعَنْ عَدِيِّ بنِ حَاتِمٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ لِي رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"إِذَا أَرْسَلَتَ كَلْبَكَ فَاذْكُرِ اسْمَ اللهِ، فَإِنْ أَمْسَكَ عَلَيْكَ فَأَدْرَكْتَهُ حَيًّا فَاذْبَحْهُ، وَإِنْ أَدْرَكْتَهُ قَدْ قُتِلَ وَلَمْ يُؤْكَلْ مِنْهُ فَكُلْهُ، وَإِنْ وَجَدْتَ مَعَ كَلْبِكَ كَلْبًا غَيْرَهُ وَقَدْ قُتِلَ فَلَا تَأْكُلْ: فَإِنَّكَ لَا تَدْرِي أَيَّهُمَا قَتَلَهُ، وَإِنْ رَمَيْتَ سَهْمَكَ فَاذْكُرِ اسْمَ اللهِ، فَإِنْ غَابَ عَنْكَ يَوْماً، فَلَمْ تَجِدْ فِيهِ إِلَّا أَثَرَ سَهْمِكَ، فَكُلْ إِنْ شِئْتَ، وَإِنْ وَجَدْتَهُ غَرِيقاً فِي الْمَاءِ، فَلَا تَأْكُلْ"} مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا لَفْظُ مُسْلِمٍ.
1373. ``நீ உன்னுடைய நாயை (வேட்டைக்காக) அனுப்பினால் (அதை அனுப்பும் போது), `பிஸ்மில்லாஹ்' கூறி அனுப்பு! அது உன்னிடம் (எதையேனும் வேட்டையாடிக்) கொண்டுவந்து அதனை நீ உயிருடன் கண்டால் அதனை (உண்பதற்கு முன்பு) அறுத்துக் கொள்! அப்பிராணியை அது கொன்றிருந்து, அதிலிருந்து அது (நாய்) எதையும் உண்ணாதிருந்தால் அதைச் சாப்பிட்டுக் கொள்! உன்னுடைய நாயுடன் வேறு நாயைக் கண்டு அது (வேட்டைப் பிராணி) கொல்லப்பட்டிருந்தால், அதனை உண்ணாதே! ஏனெனில், அந்த இரண்டில் எது அதைக் கொன்றது என்பது உனக்குத் தெரியாது. இன்னும், நீ உன்னுடைய அம்மை எய்யும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறிக் கொள். (நீ வேட்டையாடிய அப்பிராணி) உன்னைவிட்டு ஒடி உன்னுடைய அம்பின் காயத்தைத் தவிர வேறு காயம் ஏதும் இல்லாமல் அதனை நீ (மறுநாள்) கண்டால் நீ விரும்பினால், அதனைச் சாப்பிட்டுக் கொள்! அது தண்ணீரில் மூழ்கி இருக்க நீ கண்டால் அதனை நீ உண்ணாதே!'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசனம் இடம் பெற்றுள்ளது.
1374. وَعَنْ عَدِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَيْدِ الْمِعْرَاضِفَقَالَ: "إِذَا أَصَبْتَ بِحَدِّهِ فَكُلْ، وَإِذَا أَصَبْتَ بِعَرْضِهِ، فَقُتِلَ، فَإِنَّهُ وَقِيذٌ، فَلَا تَأْكُلْ"} رَوَاهُ الْبُخَارِيُّ.
1374. மிஃராள் (இறகு இல்லாத அம்பு) எனும் ஆயுதத்(தால் வேட்டையாடுவ)தைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன்.
``அதன் கூர்மையான பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தால் அதைச் சாப்பிட்டுக் கொள்! அதன் அகலப் பகுதியால் காயம் ஏற்பட்டிருந்தால் அதனை சாப்பிடாதே! ஏனெனில், அது அடித்துக் கொல்லப்பட்டதாகும்'' என்று கூறினார்கள் என அதீ(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1375. وَعَنْ أَبِي ثَعْلَبَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {" إِذَا رَمَيْتَ بِسَهْمِكَ، فَغَابَ عَنْكَ، فَأَدْرَكْتَهُ فَكُلْهُ، مَا لَمْ يُنْتِنْ"} أَخْرَجَهُ مُسْلِمٌ.
1375. ``நீ அம்பை எய்து, உன்னால் வேட்டையாடப்பட்ட பிராணி, உன்னை விட்டு மறைந்து பின்னர், அதனை (சில நாள்களில்) நீ கண்டால் அது துர்வாடை வீசவில்லை எனில் சாப்பிட்டுக் கொள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸஅலபா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1376. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ {أَنَّ قَوْمًا قَالُوا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ قَوْماً يَأْتُونَنَا بِاللَّحْمِ، لَا نَدْرِي أَذُكِرَ اِسْمُ اللهُ عَلَيْهِ أَمْ لَا؟ فَقَالَ: " سَمُّوا اللهُ عَلَيْهِ أَنْتُمْ، وَكُلُوهُ"} رَوَاهُ الْبُخَارِيُّ.
1376. ``எங்களிடம் சிலர் கறியைக் கொடுத்து அனுப்புகிறார்கள். அவர்கள், அதன் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது'' என ஒரு கூட்டத்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறினர். (சட்டம் கேட்டனர்).
``நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி உண்ணுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1377. وَعَنْ عَبْدِ اللهِ بنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْخَذْفِ، وَقَالَ: "إِنَّهَا لَا تَصِيدُ صَيْدًا، وَلَا تَنْكَأُ عَدُوًّا، وَلَكِنَّهَا تَكْسِرُ السِّنَّ، وَتَفْقَأُ الْعَيْنَ"} مُتَّفَقٌ عَلَيْهِ. وَاللَّفْظُ لِمُسْلِمٍ.
1377. (கூர்மையற்ற கல் போன்றவற்றை) எறிந்து வேட்டையாடுவதை இறைத்தூதர்(ஸல்) தடுத்தார்கள். இன்னும் ``அது எப்பிராணியையும் வேட்டையாடவும் செய்யாது; எதிரிக்குத் தண்டனையையும் கொடுக்காது. ஆனால், அது பல்லை உடைக்கும்; கண்ணைத் தோண்டி எடுத்துவிடும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1378. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"لَا تَتَّخِذُوا شَيْئاً فِيهِ الرُّوحُ غَرَضًا"} رَوَاهُ مُسْلِمٌ.
1378. ``உயிருள்ள எவற்றையும், (வேட்டையாடப் பழகுவதற்காகக்) குறி வைக்காதீர்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்