1462. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"أَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ اِمْرَأً مُسْلِماً، اِسْتَنْقَذ َاللهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1462. ``ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை விடுதலை செய்தால், விடுதலை செய்யப்பட்டவனின் உறுப்புக்குப் பகரமாக அவனுடைய (விடுதலை செய்தவனின்) ஒவ்வோர் உறுப்பையும் நரக நெருப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1463. وَلِلتِّرْمِذِيِّ وَصَحَّحَهُ؛ عَنْ أَبِي أُمَامَةَ: {"وَأَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ اِمْرَأَتَيْنِ مُسْلِمَتَيْنِ، كَانَتَا فِكَاكَهُ مِنَ النَّارِ"}.
1463. ``(அடிமைகளான) இரண்டு முஸ்லிம் பெண்களை விடுதலை செய்த ஒரு முஸ்லிம் நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு, அவ்விரு முஸ்லிம் பெண்களே காரணமாவர்'' என அபூ உமாமா(ரலி) வாயிலாக திர்மிதீயில் `ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
1464. وَلِأَبِي دَاوُدَ: مِنْ حَدِيثِ كَعْبِ بْنِ مُرَّةَ: {"وَأَيُّمَا اِمْرَأَةٍ أَعْتَقَتْ اِمْرَأَةً مُسْلِمَةً، كَانَتْ فِكَاكَهَا مِنَ النَّارِ}.
1464. ``ஒரு முஸ்லிம் பெண்ணை விடுதலை செய்த ஒரு முஸ்லிம் பெண், தான் நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு (விடுவிக்கப்பட்ட) அப்பெண்ணே காரணமாகிறாள்'' என கஅப் இப்னு முர்ரா(ரலி) வாயிலாக அபூ தாவூதில் உள்ளது.
1465. وَعَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللهُ عَنْهُ {قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: "إِيمَانٌ بِاللَّهِ، وَجِهَادٌ فِي سَبِيلِهِ". قُلْتُ: فَأَيُّ الرِّقَابِ أَفْضَلُ؟ قَالَ: "أَعْلَاهَ اثَمَنًا، وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا"} مُتَّفَقٌ عَلَيْهِ".
1465. ``எந்தச் செயல் சிறந்தது'' என நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டேன்.
``அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதும், அவனுடைய வழியில் போராடுவதும்'' என இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
``எப்படிப்பட்டோரை விடுதலை செய்வது சிறந்தது?'' என நான் கேட்டேன்.
``எஜமானனிடம் இருக்கக் கூடிய அடிமைகளிலேயே அவர்களுக்கு மிகவும் விருப்பமான விலை உயர்ந்த அடிமையை விடுதலை செய்வது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1466. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {"مَنْ أَعْتَقَ شِرْكًا لَهُ فِي عَبْدٍ، فَكَانَ لَهُ مَالٌ يَبْلُغُ ثَمَنَ الْعَبْدِ، قُوِّمَ قِيمَةَ عَدْلٍ، فَأَعْطَى شُرَكَاءَهُ حِصَصَهُمْ، وَعَتَقَ عَلَيْهِ الْعَبْدُ، وَإِلَّا فَقَدْ عَتَقَ مِنْهُ مَا عَتَقَ"} مُتَّفَقٌ عَلَيْهِ.
1466. ``ஓர் அடிமையில் தனக்குரிய பங்கை விடுதலை செய்பவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால், (அந்த அடிமையின்) நியாயமான விலையை மதிப்பிட்டு, தன் பங்குதாரர்களுக்கு அவர்களின் பங்குக்கான விலையை கொடுத்து, அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்யவேண்டும். இல்லையெனில், தான் விடுதலை செய்த அளவுக்கே அந்த அடிமை விடுதலை பெறுவார் (இதில் அந்த அடிமைக்கு எப்பயனும் இல்லை)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
1467. وَلَهُمَا: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ {"وَإِلَّا قُوِّمَ عَلَيْهِ، وَاسْتُسْعِيَ غَيْرَ مَشْقُوقٍ عَلَيْهِ"}. وَقِيلَ: إِنَّ السِّعَايَةَ مُدْرَجَةٌ فِي الْخَبَر ِ.
1467. புகாரீ, முஸ்லிம் அறிவித்துள்ள (மற்றொரு) ஹதீஸில் ``இல்லையெனில் அந்த அடிமையின் (நியாயமான) விலையை மதிப்பிட்டு (மீதி பங்குகளின் விலையை தருவதற்காக) உழைத்து சம்பாதித்துக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அதிக சிரமத்தை தரக் கூடாது'' என அபூ ஹுரைரா(ரலி) வாயிலாக உள்ளது.
1468. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {" لَا يَجْزِي وَلَدٌ وَالِدَهُ، إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيُعْتِقَهُ"} رَوَاهُ مُسْلِمٌ.
1468. ``தன் தந்தையை அடிமையாகக் காண்பவர், அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்வதைத் தவிர வேறு எதுவும் தன் தந்தைக்குப் கைம்மாறு செய்ததாய் ஆகாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
1469. وَعَنْ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"مَنْ مَلَكَ ذَا رَحِمٍ مَحْرَمٍ، فَهُوَ حُرٌّ"} رَوَاهُ أَحْمَدُ، وَالْأَرْبَعَة ُ. وَرَجَّحَ جَمْعٌ مِنَ الْحُفَّاظِ أَنَّهُ مَوْقُوفٌ.
1469. ``(தான் மணப்பதற்கு) விலக்கப்பட்ட நெருங்கிய உறவினருக்கு ஒருவர் எஜமானனாகிவிட்டால் அந்த உறவினர் (தானாகவே) சுதந்திரம் பெற்றுவிடுகிறார்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
1470. وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُمَا؛ {أَنَّ رَجُلاً أَعْتَقَ سِتَّةً مَمْلُوكِينَ لَهُ، عِنْدَ مَوْتِهِ، لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرَهُمْ، فَدَعَا بِهِمْ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَزَّأَهُمْ أَثْلَاثًا، ثُمَّ أَقْرَعَ بَيْنَهُمْ، فَأَعْتَقَ اِثْنَيْنِ، وَأَرَقَّ أَرْبَعَةً، وَقَالَ لَهُ قَوْلاً شَدِيدًا} رَوَاهُ مُسْلِمٌ.
1470. ஒருவர் தன் மரணத் தருவாயில் தன்னிடமிருந்த ஆறு அடிமைகளை விடுதலை செய்தார். அவர்களை தவிர அவரிடம் வேறு சொத்து எதுவுமில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அழைத்து மூன்று பிரிவாகப் பிரித்தார்கள்; அவர்களுக்கு மத்தியில் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். பின்னர், (அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட) இருவரை விடுதலை செய்தார்கள். மற்ற நான்கு பேரையும் அடிமைகளாகவே இருக்கச் செய்தார்கள். மேலும், (மரணத் தருவாயில் இருந்த) அவரைக் கடுமையாகக் கண்டித்தார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
குறிப்பு: மூன்றில் ஒரு பங்கு சொத்தை மட்டுமே தர்மமாகத் தரவேண்டும்; வஸிய்யத்திலும் இவ்வாறுதான். இதுவே நபி(ஸல்) அவர்களின் கட்டளை. எனவேதான், அவர் தம் ஆறு அடிமைகளையும் விடுதலை செய்ததை அவர்கள் கண்டித்து, மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் இரண்டு அடிமைகளை மட்டும் விடுதலை செய்யச் சொன்னார்கள் என்பதை அறிக!
1471. وَعَنْ سَفِينَةَ رَضِيَ اللهُ عَنْهُ {قَالَ: كُنْتُ مَمْلُوكًا لِأُمِّ سَلَمَةَ فَقَالَتْ: أُعْتِقُكَ، وَأَشْتَرِطُ عَلَيْكَ أَنْ تَخْدِمَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا عِشْتَ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَالْحَاكِمُ.
1471. ``இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு நீ வாழ்நாள் முழுவதும் ஊழியராய் இருக்க வேண்டும்'' என்ற நிபந்தனையின் பேரில் உம்மு ஸலமா(ரலி) என்னை அடிமைத் தனத்திலிருந்து விடுதலை செய்தார் என ஸஃபீனா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் ஹாகிம்
1472. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {"إِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ"} مُتَّفَقٌ عَلَيْهِ فِي حَدِيثٍ طَوِيْلٍ.
1472. ``அடிமையை விடுதலை செய்தவருக்கே `வலா' உரியதாகும்'' என்ற இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நீண்ட ஹதீஸ் சுருக்கம்)
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
குறிப்பு: விடுதலை செய்யப்பட்ட ஓர் அடிமை, தான் சுதந்திரம் பெற்ற பின்பு உறவினர் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு - வாரிசுகள் யாரும் இல்லாத நிலையில், அவன் இறந்துவிட்டால், விடுதலையானப் பின்பு அவன் சேர்த்து வைத்துள்ள சொத்துக்கு, அவனை விடுதலை செய்த எஜமானன்தான் வாரிசாவார். இவ்வாறு வாரிசாகும் உரிமைக்கு 'வலா' என்று சொல்லப்படும். விரிவாக அறிய புகாரீ ஹதீஸ் எண் 2156 பார்க்க
1473. وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {" اَلْوَلَاءُ لُحْمَةٌ كَلُحْمَةِ النَّسَبِ، لَا يُبَاعُ وَلَا يُوهَبُ"} رَوَاهُ الشَّافِعِيُّ، وَصَحَّحَهُ اِبْنُ حِبَّانَ، وَالْحَاكِم ُوَأَصْلُهُ فِي "الصَّحِيحَيْنِ" بِغَيْرِ هَذَا اللَّفْظ ِ. بَابُ الْمُدَبَّرِ وَالْمُكَاتَبِ وَأُمِّ الْوَلَدِ
1473. ``வலா எனும் உறவு இரத்த உறவைப் போன்றதாகும். அதனை விற்கவோ அன்பளிப்புச் செய்யவோ கூடாது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: அஷ்ஷாஃபியீ
இமாம் இப்னு ஹிப்பான் மற்றும் இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் மூலம், புகாரீ மற்றும் முஸ்லிமில் வேறு வார்த்தைகளில் உள்ளது.
குறிப்பு: முதப்பர்: ஒருவர் தமக்குச் சொந்தமான அடிமையை தம் மரணத்திற்குப் பின் விடுதலையாகிவிடுவார் எனக் கூறுவது.
முகாதப்: விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமை, குறிப்பிட்ட தொகையோ அல்லது குறிப்பிட்ட வேலையையோ நீ செய்து முடித்துவிட்டால் என்ற நிபந்தனையுடன் எஜமானனிடம் சுதந்திரப் பத்திரம் எழுதிக் கொண்ட அடிமைக்கு முகாதப் என்று கூறுவர்.
உம்முல் வலத்: ஓர் அடிமைப் பெண்ணுடன் எஜமானன் உடலுறவு கொண்டு, அவள் அவனுக்குக் குழந்தை பெற்றால், அவள் உம்முல் வலத் (குழந்தையின் தாய்) எனப்படுகிறாள். இத்தகைய அடிமைப் பெண்ணை விற்பனை செய்வது கூடாது. மேலும் இவள் தன் எஜமானனின் மரணத்திற்குப் பின் விடுதலைப் பெற்றுவிடுவாள்.
1474. عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ {أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ أَعْتَقَ غُلَامًا لَهُ عَنْ دُبُرٍ، لَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ، فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: "مَنْ يَشْتَرِيهِ مِنِّي؟" فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللهِ بِثَمَانِمَائَةِ دِرْهَمٍ} مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي لَفْظٍ لِلْبُخَارِيِّ: فَاحْتَاج َوَفِي رِوَايَةٍ لِلنَّسَائِيِّ: {وَكَانَ عَلَيْهِ دَيْنٌ، فَبَاعَهُ بِثَمَانِمَائَةِ دِرْهَمٍ، فَأَعْطَاهُ وَقَالَ: "اِقْضِ دَيْنَكَ"}.
1474. அன்ஸார்களில் ஒருவர் தன்னிடமிருந்த ஒர் அடிமையை, ``நீ என் மரணத்திற்குப் பிறகு விடுதலையாவாய்'' என அறிவித்தார். ஆனால், அவரிடம் அதைத் தவிர வேறு சொத்து எதுவுமில்லை. இச்செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது,
``அவரை (அந்த அடிமையை) என்னிடமிருந்து யார் விலைக்கு வாங்குவார்'' எனக் கேட்டார்கள்.
உடனே நுஅய்ம் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவரை எண்ணூறு திர்ஹம்கள் கொடுத்து விலைக்கு வாங்கினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
நஸயீயின் மற்றோர் அறிவிப்பில் அவருக்குக் கடனிருந்தது. எனவே, அந்த அடிமையை இறைத்தூதர்(ஸல்) எண்ணூறு திர்ஹம்களுக்கு விற்று அவரிடம் கொடுத்து, ``உன் கடனை அடைத்துவிடு'' என்று கூறினார்கள் என உள்ளது.
1475. وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {قَالَ: " اَلْمُكَاتَبُ عَبْدٌ مَا بَقِيَ عَلَيْهِ مِنْ مُكَاتَبَتِهِ دِرْهَمٌ"} أَخْرَجَهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَن ٍوَأَصْلُهُ عِنْدَ أَحْمَدَ، وَالثَّلَاثَةِ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.
1475. ``விடுதலைப் பத்திரம் (சுதந்திரம் அடைவதற்கு) எழுதிக் கொடுத்த அடிமை, ஒரு திர்ஹம் மீதம் வைத்திருக்கும் வரையிலும் அடிமையாகவே இருப்பான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவித்தார்.
இது அபூ தாவூதில் `ஹஸன்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் நஸயீயில் உள்ளது.
இமாம் ஹாகி(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1476. وَعَنْ أَمِّ سَلَمَةَ -رَضِيَ اللهُ عَنْهَا- قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا كَانَ لِإِحْدَاكُنَّ مُكَاتَبٌ، وَكَانَ عِنْدَهُ مَا يُؤَدِّي، فَلْتَحْتَجِبْ مِنْهُ} رَوَاهُ الْخَمْسَة ُوَصَحَّحَهُ التِّرْمِذِيُّ.
1476. ``(பெண்களே!) நீங்கள் உங்கள் அடிமைக்கு குறிப்பிட்ட தொகை செலுத்தினால், விடுதலை செய்துவிடுவதாக வாக்களித்திருந்து சுதந்திரப்பத்திரம் எழுதப்பட்டு அவனிடம் அதைச் செலுத்துவதற்கான பணமும் இருக்குமாயின் (பெண் - எஜமானி) அவனிடமிருந்து தன்னை மறைத்து (பர்தா போட்டு)க் கொள்ள வேண்டும் என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
1477. وَعَنِ ابْنِ عَبَّاسٍ -رَضِيَ اللهُ عَنْهُمَا- أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {يُودَى الْمُكَاتَبُ بِقَدْرِ مَا عَتَقَ مِنْهُ دِيَةَ الْحُرِّ، وَبِقَدْرِ مَا رَقَّ مِنْهُ دِيَةَ الْعَبْدِ} رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ.
1477. ``விடுதலைப்பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமை கொல்லப்பட்டுவிட்டால், அவன் எந்த அளவிற்கு (ஒப்பந்தப் பணத்தைச்ச செலுத்தி) சுதந்திரமானவனாகி உள்ளானோ அந்த அளவிற்கு சுதந்திரமானவனுக்குரிய இரத்த ஈட்டுத் தொகை (அவனுடைய வாரிசுகளுக்கு வழங்கப்பட வேண்டும். எந்த அளவிற்கு தொகை செலுத்தப்படாமல் இன்னும், (விடுவிக்கப்படாமல்) அடிமையாய் இருக்கிறானோ, அந்த அளவிற்கு அடிமைக்குரிய இரத்த ஈட்டுத் தொகை (அவனுடைய வாரிசுகளுக்கு) வழங்கப்பட வேண்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
1478. وَعَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ- أَخِي جُوَيْرِيَةَ أُمِّ الْمُؤْمِنِينَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {مَا تَرَكَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ مَوْتِهِ دِرْهَمًا، وَلَا دِينَارًا، وَلَا عَبْدًا، وَلَا أَمَةً، وَلَا شَيْئًا، إِلَّا بَغْلَتَهُ الْبَيْضَاءَ، وَسِلَاحَهُ، وَأَرْضًا جَعَلَهَا صَدَقَةً} رَوَاهُ الْبُخَارِيُّ.
1478. இறைத்தூதர்(ஸல்) மரணம் எய்தியபோது தம்முடைய வெள்ளை நிறம் கோவேறுக் கழுதை, ஆயுதம் மற்றும் அவர்கள் தர்மம் செய்த நிலம் இவற்றைத் தவிர திர்ஹம், தீனார், அடிமைப் பெண், அடிமை இது போன்ற எதையுமே விட்டுச் செல்லவில்லை என உம்முல் மூஃமினீன் (இறைநம்பிக்கையாளர்களின் தாய்) ஜுவைரியாவின் சகோதரர் அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
1479. وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَيُّمَا أَمَةٍ وَلَدَتْ مِنْ سَيِّدِهَا، فَهِيَ حُرَّةٌ بَعْدَ مَوْتِهِ} أَخْرَجَهُ اِبْنُ مَاجَهْ، وَالْحَاكِمُ بِإِسْنَادٍ ضَعِيفٍ.وَرَجَّحَ جَمَاعَةٌ وَقْفَهُ عَلَى عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ.
1479. ``தன் எஜமானனுக்குக் குழந்தை பெறுகிற அடிமைப் பெண், அவனுடைய மரணத்திற்குப் பின் சுதந்திரம் பெற்றவளாவாள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இது இப்னு மாஜா மற்றும் ஹாகிமில் `ளயீஃப்' எனும் தரத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஒரு சாரார் இதனை உமர்(ரலி) அவர்களின் மீது `மவ்கூஃப்' செய்துள்ளனர்.
1480. وَعَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {مَنْ أَعَانَ مُجَاهِدًا فِي سَبِيلِ اللهِ، أَوْ غَارِمًا فِي عُسْرَتِهِ، أَوْ مُكَاتَبًا فِي رَقَبَتِهِ، أَظَلَّهُ اللهُ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ} رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ.كِتَابُ الْجَامِعِبَابُ الْأَدَبِ
1480. ``அல்லாஹ்வின் பாதையில் போராடுபவனுக்கு யார் உதவுகிறாரோ அல்லது கடன்பட்டிருப்பவரின் கஷ்ட நிலையை நீக்குகிறாரோ அல்லது சுதந்திரப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்ட அடிமையை விடுதலை செய்கிறாரோ அவருக்கு நிழலே இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ் தன் நிழலை அளிக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஸஹ்ல் ஹுனைஃபி(ரலி) அறிவித்தார்.
நூல்: அஹ்மத்
இமாம் ஹாகிம்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

1481. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ سِتٌّ: إِذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ، وَإِذَا دَعَاكَ فَأَجِبْهُ، وَإِذَا اِسْتَنْصَحَكَ فَانْصَحْهُ، وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللهُ فَسَمِّتْهُوَإِذَا مَرِضَ فَعُدْهُ، وَإِذَا مَاتَ فَاتْبَعْهُ} رَوَاهُ مُسْلِمٌ.
1481. ``ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. 1. நீ அவனைச் சந்திக்கும்போது ஸலாம் கூறுவது. 2. அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது) 3. அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது 4. அவன் தும்மி ``அல்ஹம்து லில்லாஹ்'' எனக் கூறினால், அதற்கு, (யர்ஹமுக்கல்லாஹ் என) பதிலளிப்பது. 5 அவன் நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது. 6. அவன் மரணித்தால் அவனைப் பின்தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்