557. عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ: الْمَوْتِ} رَوَاهُ التِّرْمِذِيُّ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
557. ``விருப்பங்களை (எல்லாம்) அகற்றக் கூடிய மரணத்தை அதிகம் நினைவு கூருங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: திர்மிதீ, நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
558. وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ لِضُرٍّ يَنْزِلُ بِهِ، فَإِنْ كَانَ لَا بُدَّ مُتَمَنِّيًا فَلْيَقُلْ: اَللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي} مُتَّفَقٌ عَلَيْهِ.
558. ``தனக்கேற்படும் தீங்கின் காரணமாக உங்களில் யாரும் மரணத்தை விரும்ப வேண்டாம். அப்படியே ஒருவர் நிர்பந்தத்திற்கு உள்ளானால் ``இறைவா! நான் உயிர் வாழ்வது எதுவiரை எனக்கு நல்லதாய் இருக்குமோ அதுவரை எனக்கு வாழ்க்கையை அளிப்பாயாக! மேலும், எப்போது மரணமே எனக்கு நல்லதாய் இருக்குமோ அப்போது என்னை உலகிலிருந்து எடுத்துக் கொள்வாயாக! எனக் கூறட்டும் (பிரார்த்திக்கட்டும்)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
559. وَعَنْ بُرَيْدَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اَلْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ} رَوَاهُ الثَّلَاثَةُ وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
559. ``இறைநம்பிக்கையாளன் நெற்றி வேர்வையுடன் இறக்கிறான்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என புரைதா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
560. وَعَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَا: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {لَقِّنُوا مَوْتَاكُمْلَا إِلَهَ إِلَّا اللهُ} رَوَاهُ مُسْلِمٌ، وَالْأَرْبَعَةُ.
560. ``இறக்கும் தருவாயில் இருப்பவனுக்கு `லா இலாஹ இல்லல்லாஹ்' அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை'' என்ற உறுதியை ஊட்டுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஸயீத் மற்றும் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: முஸ்லிம், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
561. وَعَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {اقْرَؤُوا عَلَى مَوْتَاكُمْ يس} رَوَاهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
561. ``உங்களில் இறந்தோருக்கு யாஸீன் (சூரா) ஓதுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என மஃகில் இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அபூ தாவூத், நஸயீ
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு: இது பலவீனமான ஹதீஸ் ஆகும்.
562. وَعَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {دَخَلَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَبِي سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَقَدْ شُقَّ بَصَرُهُفَأَغْمَضَهُ، ثُمَّ قَالَ: "إِنَّ الرُّوحَ إِذَا قُبِضَ، اتَّبَعَهُ الْبَصَرُ" فَضَجَّ نَاسٌ مِنْ أَهْلِهِ، فَقَالَ: "لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ إِلَّا بِخَيْرٍ. فَإِنَّ الْمَلَائِكَةَ تُؤَمِّنُ عَلَى مَا تَقُولُونَ". ثُمَّ قَالَ: "اَللَّهُمَّ اغْفِرْ لِأَبِي سَلَمَةَ، وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّينَ، وَافْسِحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيهِ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ} رَوَاهُ مُسْلِمٌ.
562. அபூ ஸலமா(ரலி) அவர்களின் மரண தருவாயில் இறைத்தூதர்(ஸல்) அங்கு வந்தார்கள். அவரின் கண் திறந்தவாறு இருந்தன. அவரின் கண்ணை இறைத்தூதர்(ஸல்) மூடிவிட்டார்கள். பின்னர், ``உயிர் கைப்பற்றப்பட்டால் பார்வை அதைப் பின்தொடர்கிறது'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
அப்போது அவரின் குடும்பத்தாரில் சிலர் அழத்தொடங்கினர். அதற்கு, ``உங்கள் உயிர்களுக்கு நல்லதைத் தவிர வேறு எதையும் கேட்காதீர்கள். ஏனெனில், (இப்போது) மலக்குகள் நீங்கள் சொல்வதற்கெல்லாம் ஆமீன் கூறுகிறார்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.
பின்னர், ``யா அல்லாஹ்! அபூ ஸல்மாவை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களில் அவரின் நிலையை உயர்த்தி அருள்வாயாக! அவரின் கப்ரை (மண்ணறையை) அவருக்கு விசாலமாக்கி அருள்வாயாக! மேலும், அதில் வெளிச்சத்தை உண்டாக்கி அருள்வாயாக! அவரின் அடிச்சுவட்டில் (அவரைப் பின்பற்றிப்) பணியாற்றுபவரை நியமிப்பாயாக'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
563. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا: {أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَ سُجِّيَ بِبُرْدٍ حِبَرَةٍ} مُتَّفَقٌ عَلَيْهِ.
563. ``இறைத்தூதர்(ஸல்) இறந்தவுடன் அவர்கள் மீது `ஹிப்ரா' எனும் (யமன் நாட்டின் ஒரு வகை) சால்வை போட்டு மூடப்பட்டது'' என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
564. وَعَنْهَا {أَنَّ أَبَا بَكْرٍ اَلصِّدِّيقَ رَضِيَ اللهُ عَنْهُ قَبَّلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ مَوْتِهِ} رَوَاهُ الْبُخَارِيُّ.
564. இறைத்தூதர்(ஸல்) இறந்தப் பின்னர் அவர்களை அபூ பக்ர்(ரலி) முத்தமிட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
565. وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ، حَتَّى يُقْضَى عَنْهُ} رَوَاهُ أَحْمَدُ، وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ.
565. ``இறைநம்பிக்கையாளனின் உயிர் (அவன் கடன்பட்டவனாய் இருப்பின்) அவனுடைய கடன் அடைக்கப்படும் வரை அதனுடன் தொங்கிக் கொண்டிருக்கும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், திர்மிதீ
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை `ஹஸன்' தரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
566. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الَّذِيْ سَقَطَ عَنْ رَاحِلَتِهِ فَمَاتَ: {اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ} مُتَّفَقٌ عَلَيْهِ.
566. ``அவரை இலந்தை இலை கலந்த தண்ணீரால் குளிப்பாட்டுங்கள். மேலும், அவரின் (இஹ்ராமின்) இரண்டு துணிகளினால் அவருக்குக் கஃபனிடுங்கள்'' என்று (ஹஜ்ஜின்போது) ஒட்டகத்திலிருந்து விழுந்து இறந்தவர் தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
567. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {لَمَّا أَرَادُوا غَسْلَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: وَاللهِ مَا نَدْرِي، نُجَرِّدُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا نُجَرِّدُ مَوْتَانَا، أَمْ لَا؟} اَلْحَدِيثَ، رَوَاهُ أَحْمَدُ، وَأَبُو دَاوُدَ.
567. இறைத்தூதர்(ஸல்) மரணமடைந்த பின்னர்) நபித்தோழர்கள் அவர்களைக் குளிப்பாட்ட நாடியபோது, ``நாங்கள் மற்ற மனிதர்களின் ஆடைகளைப் போன்று அவிழ்ப்பதா, அல்லது அப்படியே விட்டுவிடுவதா என்பதை அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாங்கள் அறிய மாட்டோம்'' என்று கூறினர் என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஹதீஸ் சுருக்கம்)
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத்
குறிப்பு: இந்த ஹதீஸின் பிற்பகுதி முழுவதுமாய் இங்கு கீழே தரப்படுகிறது.
...அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, அல்லாஹ் அவர்களுக்கு சிறு உறக்கத்தை ஏற்படுத்தினான். அப்போது யாரென்றே தெரியாத ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை அவர்களின் ஆடைகளுடனேயே குளிப்பாட்டுங்கள் எனக் கூற, இறைத்தூதர்(ஸல்) ஆடைகளுடனேயே குளிப்பாட்டப்பட்டார்கள்.
568. وَعَنْ أُمِّ عَطِيَّةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نُغَسِّلُ ابْنَتَهُ، فَقَالَ: "اغْسِلْنَهَا ثَلَاثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الْآخِرَةِ كَافُورًا، أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ"، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ.فَقَالَ: "أَشْعِرْنَهَا إِيَّاهُ"} مُتَّفَقٌ عَلَيْهِ. وَفِي رِوَايَةٍ: {ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا}. وَفِي لَفْظٍ ِللْبُخَارِيِّ: {فَضَفَّرْنَا شَعْرَهَا ثَلَاثَةَ قُرُونٍ، فَأَلْقَيْنَاهُ خَلْفَهَا}.
568. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (இறந்த) மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இறைத்தூதர்(ஸல்) வந்தார்கள். இன்னும், ``நீங்கள் அவரை மூன்று அல்லது ஐந்து முறை அல்லது உங்களுக்குச் சரியாகப்படும் வரை அதற்கும் அதிகமான முறை (ஒற்றைப்படை எண்ணிக்கையில்) குளிப்பாட்டுங்கள். இன்னும் இலந்தை இலை கலந்த தண்ணீரால் குளிப்பாட்டுங்கள். இறுதியில் கற்பூரத்தைப் பயன்படுத்துங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் (அவரைக் குளிப்பாட்டி) முடித்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தகவல் கொடுத்தோம். அவர்கள் தம்முடைய கீழங்கியைக் கொடுத்து ``அதை உள்ளாடையாக ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பின்படி அவரின் (குளிப்பாட்டுதலை) வலப்புறம் மற்றும் `உளூ'ச் செய்யக் கூடிய பகுதிகளைக் கொண்டு தொடங்குங்கள் எனக் கூறியதாக உள்ளது.
புகாரீயின் மற்றோர் அறிவிப்பின்படி நாங்கள் அவரின் தலைமுடியை மூன்று சடைகளாகப் பிண்ணி அவருக்கு பின்னால் முதுகுப் பகுதியில் போட்டோம் என உள்ளது.
569. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: {كُفِّنَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَلَاثَةِ أَثْوَابٍ بِيضٍ سَحُولِيَّةٍ مِنْ كُرْسُفٍ، لَيْسَ فِيهَا قَمِيصٌ وَلَا عِمَامَةٌ.} مُتَّفَقٌ عَلَيْهِ.
569. பருத்தியால் ஆன வெள்ளைத் துணியால் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு கஃபனிடப்பட்டது அதில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
570. وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللهُ عَنْهُمَا- قَالَ: {لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللهُ بْنِ أُبَيٍّ جَاءٍ اِبْنُهُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ: أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، فَأَعْطَاه ُ إِيَّاهُ } مُتَّفَقٌ عَلَيْهِ.
570. (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்ததும் அவனுடைய மகன் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ``தாங்கள் தங்களின் ஆடையைக் கொடுங்கள். நான் அதில் அவருக்குக் கஃபனிட்டுக் கொள்கிறேன்'' எனக் கேட்டார். இறைத்தூதர்(ஸல்) கொடுத்தார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: புகாரீ, முஸ்லிம்
571. وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {الْبَسُوا مِنْ ثِيَابِكُمُ الْبَيَاضَ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ} رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ، وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ.
571. ``நீங்கள் வெள்ளை ஆடை அணியுங்கள். ஏனெனில், அதுவே உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். உங்களின் மய்யித்துகளுக்கும் (இறந்ததோருக்கும்) வெள்ளை ஆடையில் கஃபனிடுங்கள்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இமாம் திர்மிதீ(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
572. وَعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِذَا كَفَّنَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُحْسِنْ كَفَنَهُ} رَوَاهُ مُسْلِمٌ.
572. ``உங்களில் ஒருவர் தன் (முஃமினான) சகோதரனுக்குக் கஃபனிட்டால், அதனை நல்ல முறையில் செய்யட்டும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: முஸ்லிம்
573. وَعَنْهُ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْمَعُ بَيْنَ الرَّجُلَيْنِ مِنْ قَتْلَى أُحَدٍ فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ يَقُولُ: "أَيُّهُمْ أَكْثَرُ أَخْذًا لِلْقُرْآنِ؟"، فَيُقَدِّمُهُ فِي اللَّحْدِ، وَلَمْ يُغَسَّلُوا، وَلَمْ يُصَلِّ عَلَيْهِمْ} رَوَاهُ الْبُخَارِيُّ.
573. உஹதுப் போரில் ஷஹீதான இரண்டு ஆண் மய்யித்துக்களை ஒரே கஃபனில் `இறைத்தூதர்(ஸல்) இணைத்தார்கள். ``இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?'' என்று கேட்டு அவரை குழிக்குள் முதலாவதாக வைத்தார்கள். இந்த ஷஹீத்களில் யாரும் குளிப்பாட்டப்படவில்லை. தொழுகையும் நடத்தப்படவில்லை என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரீ
574. وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: {سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: "لَا تُغَالُوا فِي الْكَفَنِ، فَإِنَّهُ يُسْلُبُ سَرِيعًا"} رَوَاهُ أَبُو دَاوُدَ.
574. ``கஃபன் துணிகளில் அதிக விலை போடாதீர்கள். ஏனெனில், அது அதிவிரைவில் (மண்ணில் மக்கி) அழிக்கப்படும்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என அலீ(ரலி) அறிவித்தார்.
நூல்: அபூ தாவூத்
575. وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا؛ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا: {لَوْ مُتِّ قَبْلِي فَغَسَّلْتُكِ} اَلْحَدِيثَ. رَوَاهُ أَحْمَدُ، وَابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ.
575. ``நீ எனக்கு முன்னால் இறந்துவிட்டால் நான் உன்னைக் குளிப்பாட்டுவேன்'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்கள்: அஹ்மத், இப்னு மாஜா
இமாம் இப்னு ஹிப்பான்(ரஹ்) இதனை ஆதாரப்பூர்வமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
576. وَعَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ رَضِيَ اللهُ عَنْهَا: {أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا اَلسَّلَامُ أَوْصَتْ أَنْ يُغَسِّلَهَا عَلِيٌّ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ} رَوَاهُ الدَّارَقُطْنِيُّ.
576. என்னை அலீ(ரலி) குளிப்பாட்ட வேண்டும் என ஃபாத்திமா(ரலி) வஸிய்யத் (மரண சாசனம்) செய்தார் என அஸ்மா பின்த் உமைஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: தாரகுத்னீ