பக்கம் - 2 -


பெயர்: ஸஃபியுர்ரஹ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது அக்பர்.

உத்தர பிரதேச மாநிலம் ஆஜம் கட் மாவட்டத்திலுள்ள ‘முபாரக்பூர் எனும் நகரத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள ‘ஹுஸைனாபாத்’ எனும் கிராமத்தில் 1942 ஆம் ஆண்டு ஆசிரியர் பிறந்தார்.

1948ஆம் ஆண்டு ‘தாருத்தஃலீம்’ (முபாரக்பூர்) என்ற இஸ்லாமிய மத்ரஸாவில் அடிப்படை மற்றும் தொடக்கக் கல்வி கற்க சேர்ந்தார்.

1954ஆம் ஆண்டு ‘இஹ்யாவுல் உலூம்’ (முபாரக்பூர்) என்ற இஸ்லாமிய மத்ரஸாவில் நடுநிலைக் கல்வி பயில சேர்ந்தார்.

1956ஆம் ஆண்டு ‘ஃபைஜ் ஆம்’ (மவ்வு, உ.பி.) என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்து 1961ஆம் ஆண்டு ஆலிம் மற்றும் முஃப்தி பட்டம் பெற்றார்.

மேலும் இந்திய அரசாங்கத்தின் கல்வித் துறையால் அங்கீகக்கப்பட்ட பல இஸ்லாமிய பட்டங்களையும் ஆசிரியர் பெற்றுள்ளார். அவை:

1959ஆம் ஆண்டு “மவ்லவி”.

1960ஆம் ஆண்டு “ஆலிம்”.

1972ஆம் ஆண்டு “ஃபாஜில் அதப்”.

1978ஆம் ஆண்டு “ஃபாஜில் தீனியாத்” ஆகிய பட்டங்களாகும்.

அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமிய கல்விக்கூடங்களில் நடந்த தேர்வுகள், அரசாங்கத் தேர்வுகள் அனைத்திலும் ஆசிரியர் முதல் இடத்திலேயே வெற்றி பெற்றார்.

பணியாற்றிய பொறுப்புகளும் இடங்களும்

1961 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பின் இலாஹாபாத் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் கல்விப் பணியாற்றினார்.

1963லிருந்து 1965 வரை ‘ஃபைஜ் ஆம் மத்ரஸாவில்’ ஆசிரியராக பணியாற்றினார்.

1966லிருந்து 1968 வரை ‘தாருல் ஹதீஸ்’ (மவ்வு, உ.பி.) மத்ரஸாவில் மூன்றாண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்.

1969 லிருந்து 1971 வரை மத்திய பிரதேசத்தில் உள்ள ‘ஃபைஜுல் உலூம்’ என்ற இஸ்லாமியக் கல்லூரியின் தலைவராக பணியாற்றி கல்லூரியை நிர்வகித்தல், பாடம் நடத்துதல் ஆகிய பணிகளுடன் சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

1972லிருந்து 1973 வரை முபாரக்பூல் உள்ள ‘தாருத்தஃலீம்’ என்ற மத்ரஸாவில் ஆசிரியராக பணியாற்றினார்.

1974ல் வாரனாஸி நகரத்திலுள்ள ‘ஜாமிஆ ஸலஃபிய்யா’ என்ற இஸ்லாமியக் கல்லூயில் ஆசிரியராக சேர்ந்தார். இந்நூல் எழுதிய பிறகு மதீனாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகம் அவரை அங்கு அழைத்துக் கொண்டது.

ஆசிரியர் அவர்கள் உருது மற்றும் அரபி மொழியில் மேலும் பல நூல்கள் எழுதியுள்ளார்.

மேலும் பனாரஸிலிருந்து வெளிவரும் ‘முஹத்திஸ்’ என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

அல்லாஹ் அவர்களுக்கு முழுமையான உடல் சுகத்தையும், மேன்மேலும் தங்களின் கல்வியால் சமுதாய மக்களுக்கு பயனளிக்கவும் நல்வாய்ப்பு அருள்வானாக! இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு ஈடேற்றத்தையும் உயர் பதவிகளையும் வழங்குவானாக! ஆமீன்!!




அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நேர்வழி மற்றும் சத்திய மார்க்கத்தை வழங்கி, உலகிலுள்ள அனைத்து மார்க்கங்களையும் வெற்றி கொள்ளும்படி செய்தான். மேலும், சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அல்லாஹ்வின் பக்கம் அவனது கட்டளையைக் கொண்டு அழைக்கும் அழைப்பாளராகவும், பிரகாசிக்கும் கலங்கரை விளக்காகவும் அவரை ஆக்கினான். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அஞ்சி அவனை அதிகமதிகம் நினைவு கூர்பவர்களுக்கு அத்தூதரிடம் அழகிய முன்மாதிரியை அமைத்தான்.

அல்லாஹ்வே! அத்தூதர் மற்றும் அவர்களது உறவினர்கள், தோழர்கள் ஆகியோரை மறுமை நாள் வரை மனத்தூய்மையுடன் பின்பற்றுவோருக்கு உனது அருளையும் ஈடேற்றத்தையும், நலம் பொருந்திய வளங்களையும், அன்பையும், பொருத்தத்தையும் என்றென்றும் வழங்குவாயாக!

மிக மகிழ்ச்சிக்குரிய செய்தி யாதெனில்: ஹிஜ்ரி 1396, ரபிஉல் அவ்வல் மாதம் பாகிஸ்தானில் “ஸீரத்துன் நபி” (நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு) குறித்து ஒரு மாநாடு நடைபெற்றது. எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக, அவர்களது ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ‘ராபிததுல் ஆலமில் இஸ்லாமி’ என்ற அமைப்பு அம்மாநாட்டில் ஒரு அகில உலக போட்டியை அறிவித்தது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக அழகிய ஓர் ஆய்வு கட்டுரையாக எழுதி அந்த அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்பதுதான் அந்த அறிவிப்பு. வாக்கியங்களால் வர்ணிக்க முடியாத அளவுக்கு சிறப்புமிக்கதாக இந்த அறிவிப்பை நான் கருதுகிறேன். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஓர் ஆழமான ஊற்றாகும். இதிலேதான் இஸ்லாமிய உலகின் உயிரோட்டமும், முழு மனித சமுதாயத்தின் ஈடேற்றமும் இருக்கின்றன என்பதை ஆழமாக ஆராயும்போது தெரிந்து கொள்ளலாம்.

அந்த சிறப்புமிக்க போட்டியில் கலந்து, கட்டுரையை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிட்டியதை நான் எனக்குக் கிடைத்த நற்பேறாகக் கருதுகிறேன். எனினும், முன்னோர் பின்னோன் தலைவரான நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையை பற்றி முழுமையாக என்னால் கூறி முடிக்க இயலாது. நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்ந்து ஈடேற்றம் பெற விழையும் சாதாரண அடியான் நான். நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் ஒருவனாக வாழ்ந்து, அவர்களின் சமுதாயத்தில் ஒருவனாக மரணித்து அவர்களது பரிந்துரையால் அல்லாஹ் என் பாவங்களை மன்னிக்க வேண்டும் என்பதே அடியேனின் லட்சியம்.

அடுத்து, கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என பல நிபந்தனைகளை ராபிதா அறிவித்திருந்தது. அது தவிர நானும் இந்த ஆய்வுக்காக எனக்கென பல நிபந்தனைகளை ஏற்படுத்திக் கொண்டேன்.

அதாவது, சோர்வு ஏற்படுத்துமளவுக்கு நீளமாக இல்லாமலும், புரியமுடியாத வகையில் சுருக்கமாக இல்லாமலும் நடுநிலையாக இருக்க வேண்டும். நிகழ்வுகள் குறித்து பல மாறுபட்ட செய்திகள் இருந்து அவற்றிடையே ஒற்றுமை ஏற்படுத்த முடியவில்லையெனில், ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் எனது பார்வையில் மிக ஏற்றமானதாக நான் கருதுவதை மட்டும் இக்கட்டுரையில் குறிப்பிடுவேன். நான் தெரிவு செய்ததற்கான காரணங்களை பக்கங்கள் அதிகமாகிவிடும் என்பதற்காக எழுதவில்லை.

மூத்த அறிஞர்கள் அறிவிப்புகளை ஏற்றுக்கொண்டாலும் அல்லது மறுத்தாலும், அவர்களின் முடிவை அப்படியே நான் ஒப்புக் கொள்கிறேன். அவர்கள் சரியானது அழகானது பலவீனமானது என எப்படி முடிவு செய்தாலும் அதையே நானும் ஏற்றுக் கொள்கிறேன். காரணம், இதுகுறித்து மேலாய்வு செய்வதற்கு போதுமான நேரம் என்னிடம் இல்லை.

நான் கூறும் கருத்துகள் படிப்பவர்களுக்கு புதுமையாக இருக்கலாம் என நான் அஞ்சும் இடங்களில் அல்லது பெரும்பாலோன் கருத்து நான் கூறும் உண்மையான கருத்துக்கு மாற்றமாக இருக்குமிடங்களில் மட்டும் நான் தெரிவு செய்த கருத்துக்குரிய ஆதாரங்களை சுட்டிக் காட்டியுள்ளேன். அல்லாஹ்தான் நல்வாய்ப்பு வழங்க போதுமானவன்.

அல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் எனக்கு நலவை முடிவு செய்! நீதான் மன்னிப்பாளன், அன்பு செலுத்துபவன், அர்ஷின் அதிபதி, கண்ணியத்திற்குரியவன்!!

ஸஃபிய்யுர் ரஹ்மான்,
முபாரக்பூர், இந்தியா.