67. ஸூரத்துல் முல்க் (ஆட்சி)
மக்கீ, வசனங்கள்: 30

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
67:1
67:1 تَبٰرَكَ الَّذِىْ بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرُۙ‏
تَبٰرَكَ அருள் வளமிக்கவன் الَّذِىْ எவன் بِيَدِهِ அவனுடைய கரத்தில் الْمُلْكُ ஆட்சி وَهُوَ அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்கள் மீதும் قَدِيْرُۙ‏ பேராற்றலுடையவன்
67:1. தBபாரகல் லதீ Bபியதிஹில் முல்கு வ ஹுவ 'அலா குல்லி ஷய்-இன் கதீர்
67:1. எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
67:2
67:2 اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏
اۨلَّذِىْ எவன் خَلَقَ படைத்தான் الْمَوْتَ மரணத்தை(யும்) وَالْحَيٰوةَ வாழ்க்கையையும் لِيَبْلُوَكُمْ அவன் உங்களை சோதிப்பதற்காக اَيُّكُمْ உங்களில் யார் اَحْسَنُ மிக அழகானவர் عَمَلًا ؕ செயலால் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْغَفُوْرُۙ‏ மகா மன்னிப்பாளன்
67:2. அல்லதீ கலகல் மவ்த வல்ஹயாத லியBப்லுவகும் அய்யுகும் அஹ்ஸனு 'அமலா; வ ஹுவல் 'அZஜீZஜுல் கFபூர்
67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
67:3
67:3 الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا‌ ؕ مَا تَرٰى فِىْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ‌ ؕ فَارْجِعِ الْبَصَرَۙ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ‏
الَّذِىْ எவன் خَلَقَ படைத்தான் سَبْعَ سَمٰوٰتٍ ஏழு வானங்களை طِبَاقًا‌ ؕ அடுக்கடுக்காக مَا تَرٰى நீர் பார்ப்பதில்லை فِىْ خَلْقِ படைப்பில் الرَّحْمٰنِ பேரருளாளனின் مِنْ تَفٰوُتٍ‌ ؕ எவ்வித ஏற்றத் தாழ்வையும் فَارْجِعِ நீர் மீண்டும் திருப்புவீராக! الْبَصَرَۙ பார்வையை هَلْ تَرٰى நீர் பார்க்கிறீரா? مِنْ فُطُوْرٍ‏ ஏதாவது பிளவுகளை
67:3. அல்லதீ கலக ஸBப்'அ ஸமாவாதின் திBபாகம் மா தரா Fபீ கல்கிர் ரஹ்மானி மின் தFபாவுத் Fபர்ஜி'இல் Bபஸர ஹல் தரா மின் Fபுதூர்
67:3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?
67:4
67:4 ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ اِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِيْرٌ‏
ثُمَّ பிறகு ارْجِعِ மீண்டும் திருப்புவீராக! الْبَصَرَ பார்வையை كَرَّتَيْنِ இரு முறை يَنْقَلِبْ திரும்பிவிடும் اِلَيْكَ உம் பக்கம் الْبَصَرُ அந்தப் பார்வை خَاسِئًا இழிவடைந்ததாக وَّهُوَ இன்னும் அது حَسِيْرٌ‏ கலைத்துவிடும்
67:4. தும்மர் ஜி'இல் Bபஸர கர்ரதய்னி யன்கலிBப் இலய்கல் Bபஸரு காஸி'அ(ன்)வ் வ ஹுவ ஹஸீர்
67:4. பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.
67:5
67:5 وَلَـقَدْ زَيَّـنَّا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّيٰطِيْنِ‌ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيْرِ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக زَيَّـنَّا அலங்கரித்தோம் السَّمَآءَ வானத்தை الدُّنْيَا கீழ் بِمَصَابِيْحَ விளக்குகளால் وَجَعَلْنٰهَا இன்னும் அவற்றை ஏற்படுத்தினோம் رُجُوْمًا எறிவதற்காக لِّلشَّيٰطِيْنِ‌ ஷைத்தான்களை وَاَعْتَدْنَا இன்னும் தயார் செய்துள்ளோம் لَهُمْ அவர்களுக்கு عَذَابَ السَّعِيْرِ‏ கொழுந்து விட்டெரியும் நரகநெருப்பின் வேதனையை
67:5. வ லகத் Zஜய்யன்னஸ் ஸமா'அத் துன்யா Bபிமஸா Bபீஹ வ ஜ'அல்னாஹா ருஜூமல் லிஷ் ஷயாதீனி வ அஃதத்னா லஹும் 'அதாBபஸ் ஸ'ஈர்
67:5. அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.
67:6
67:6 وَلِلَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏
وَلِلَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்களுக்கு بِرَبِّهِمْ தங்கள் இறைவனை عَذَابُ தண்டனை جَهَنَّمَ‌ؕ நரகத்தின் وَبِئْسَ இன்னும் மிகக் கெட்டது الْمَصِيْرُ‏ மீளுமிடங்களில்
67:6. வ லில்லதீன கFபரூ Bபி ரBப்Bபிஹிம் 'அதாBபு ஜஹன்னம வ Bபி'ஸல் மஸீர்
67:6. இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.
67:7
67:7 اِذَاۤ اُلْقُوْا فِيْهَا سَمِعُوْا لَهَا شَهِيْقًا وَّهِىَ تَفُوْرُۙ‏
اِذَاۤ اُلْقُوْا அவர்கள் எறியப்பட்டால் فِيْهَا அதில் سَمِعُوْا செவியுறுவார்கள் لَهَا அதில் شَهِيْقًا கடுமையான சப்தத்தை وَّهِىَ இன்னும் அது تَفُوْرُۙ‏ கொதிக்கும்
67:7. இதா உல்கூ Fபீஹா ஸமி'ஊ லஹா ஷஹீக(ன்)வ் வ ஹிய தFபூர்
67:7. அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.
67:8
67:8 تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ‌ؕ كُلَّمَاۤ اُلْقِىَ فِيْهَا فَوْجٌ سَاَلَهُمْ خَزَنَـتُهَاۤ اَلَمْ يَاْتِكُمْ نَذِيْرٌ‏
تَكَادُ அது நெருங்கிவிடும் تَمَيَّزُ தெரித்துவிட مِنَ الْغَيْظِ‌ؕ கோபத்தால் كُلَّمَاۤ اُلْقِىَ எறியப்படும் போதெல்லாம் فِيْهَا அதில் فَوْجٌ ஒரு கூட்டம் سَاَلَهُمْ அவர்களிடம் கேட்பார்(கள்) خَزَنَـتُهَاۤ அதன் காவலாளிகள் اَلَمْ يَاْتِكُمْ உங்களிடம் வரவில்லையா? نَذِيْرٌ‏ ஓர் எச்சரிப்பாளர்
67:8. தகாது தமய்யZஜு மினல் கய்ளி குல்லமா உல்கிய Fபீஹா Fபவ்ஜுன் ஸ அலஹும் கZஜனதுஹா அலம் ய'திகும் னதீர்
67:8. அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது; அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், “அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.
67:9
67:9 قَالُوْا بَلٰى قَدْ جَآءَنَا نَذِيْرٌ  ۙ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَىْءٍ ۖۚ اِنْ اَنْتُمْ اِلَّا فِىْ ضَلٰلٍ كَبِيْرٍ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் بَلٰى ஏன் வரவில்லை قَدْ திட்டமாக جَآءَنَا எங்களிடம் வந்தார் نَذِيْرٌ  ۙ எச்சரிப்பாளர் فَكَذَّبْنَا ஆனால் பொய்ப்பித்தோம் وَقُلْنَا இன்னும் கூறினோம் مَا نَزَّلَ இறக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் مِنْ شَىْءٍ ۖۚ எதையும் اِنْ اَنْتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர فِىْ ضَلٰلٍ வழிகேட்டிலேயே كَبِيْرٍ‏ பெரிய
67:9. காலூ Bபலா கத் ஜா'அனா னதீருன் Fபகத்தBப்னா வ குல்னா மா னZஜ்Zஜலல் லாஹு மின் ஷய் இன் இன் அன்தும் இல்லா Fபீ ளலாலின் கBபீர்
67:9. அதற்கவர்கள் கூறுவார்கள்: “ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, “அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.”
67:10
67:10 وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِىْۤ اَصْحٰبِ السَّعِيْرِ‏
وَقَالُوْا இன்னும் கூறுவார்கள் لَوْ كُنَّا நாங்கள் இருந்தால் نَسْمَعُ செவி ஏற்பவர்களாக اَوْ அல்லது نَعْقِلُ சிந்தித்து புரிபவர்களாக مَا كُنَّا ஆகி இருக்க மாட்டோம் فِىْۤ اَصْحٰبِ السَّعِيْرِ‏ நரகவாசிகளில்
67:10. வ காலூ லவ் குன்னா னஸ்ம'உ அவ்னஃகிலு மா குன்னா Fபீ அஸ் ஹாBபிஸ் ஸ'ஈர்
67:10. இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.”
67:11
67:11 فَاعْتَرَفُوْا بِذَنْۢبِهِمْ‌ۚ فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِيْرِ‏
فَاعْتَرَفُوْا ஒப்புக் கொள்வார்கள் بِذَنْۢبِهِمْ‌ۚ தங்கள் குற்றத்தை فَسُحْقًا ஆகவே கேடுதான் لِّاَصْحٰبِ السَّعِيْرِ‏ நரகவாசிகளுக்கு
67:11. FபஃதரFபூ Bபிதம்Bபிஹிம் Fபஸுஹ்கல் லி அஸ் ஹாBபிஸ் ஸ'ஈர்
67:11. (இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
67:12
67:12 اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَخْشَوْنَ பயப்படுகின்றார்கள் رَبَّهُمْ தங்கள் இறைவனை بِالْغَيْبِ மறைவில் لَهُمْ அவர்களுக்கு உண்டு مَّغْفِرَةٌ மன்னிப்பு(ம்) وَّاَجْرٌ كَبِيْرٌ‏ பெரிய கூலியும்
67:12. இன்னல் லதீன யக்-ஷவ்ன ரBப்Bபஹும் Bபில்கய்Bபி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் கBபீர்
67:12. நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.
67:13
67:13 وَاَسِرُّوْا قَوْلَـكُمْ اَوِ اجْهَرُوْا بِهٖؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
وَاَسِرُّوْا இரகசியமாகப் பேசுங்கள் قَوْلَـكُمْ உங்கள் பேச்சை اَوِ اجْهَرُوْا அல்லது உரக்கப் பேசுங்கள் بِهٖؕ அதை اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளதை
67:13. வ அஸிர்ரூ கவ்லகும் அவிஜ்ஹரூ Bபிஹ்; இன்னஹூ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
67:13. மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள்; அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்.
67:14
67:14 اَلَا يَعْلَمُ مَنْ خَلَقَؕ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ
اَلَا يَعْلَمُ அவன் அறிய மாட்டானா? مَنْ எவன் خَلَقَؕ படைத்தான் وَهُوَ அவன்தான் اللَّطِيْفُ நுட்பமானவன் الْخَبِيْرُ‏ ஆழ்ந்தறிபவன்
67:14. அலா யஃலமு மன் கலக வ ஹுவல் லதீFபுல் கBபீர்
67:14. (அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்றையும் நன்கு தெரிந்தவன்.  
67:15
67:15 هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِىْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ‌ؕ وَاِلَيْهِ النُّشُوْرُ‏
هُوَ الَّذِىْ அவன்தான் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்கு الْاَرْضَ பூமியை ذَلُوْلًا இலகுவாக فَامْشُوْا ஆகவே செல்லுங்கள் فِىْ مَنَاكِبِهَا அதன் பல பகுதிகளில் وَكُلُوْا இன்னும் உண்ணுங்கள் مِنْ رِّزْقِهٖ‌ؕ அவனுடைய உணவில் இருந்து وَاِلَيْهِ அவன் பக்கம்தான் النُّشُوْرُ‏ எழுப்பப்படுதல்
67:15. ஹுவல் லதீ ஜ'அல லகுமுல் அர்ள தலூலன் Fபம்ஷூ Fபீ மனாகிBபிஹா வ குலூ மிர் ரிZஜ்கிஹ்; வ இலய்ஹின் னுஷூர்
67:15. அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.
67:16
67:16 ءَاَمِنْتُمْ مَّنْ فِىْ السَّمَآءِ اَنْ يَّخْسِفَ بِكُمُ الْاَرْضَ فَاِذَا هِىَ تَمُوْرُۙ‏
ءَاَمِنْتُمْ பயமற்று இருக்கின்றீர்களா? مَّنْ فِىْ السَّمَآءِ வானத்தின் மேல் உள்ளவன் اَنْ يَّخْسِفَ சொருகிவிடுவதை بِكُمُ உங்களை الْاَرْضَ பூமியில் فَاِذَا هِىَ அப்போது அது تَمُوْرُۙ‏ குலுங்கும்
67:16. அ-அமின்தும் மன் Fபிஸ்ஸமா'இ அய்யக்ஸிFப Bபி குமுல் அர்ள Fப இதா ஹிய தமூர்
67:16. வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.
67:17
67:17 اَمْ اَمِنْتُمْ مَّنْ فِى السَّمَآءِ اَنْ يُّرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا‌ ؕ فَسَتَعْلَمُوْنَ كَيْفَ نَذِيْرِ‏
اَمْ اَمِنْتُمْ அல்லது பயமற்று இருக்கின்றீர்களா? مَّنْ فِى السَّمَآءِ வானத்தின் மேல் உள்ளவன் اَنْ يُّرْسِلَ அனுப்புவதை عَلَيْكُمْ உங்கள் மீது حَاصِبًا‌ ؕ கல் மழையை فَسَتَعْلَمُوْنَ விரைவில் அறிவீர்கள் كَيْفَ எப்படி (இருந்தது) نَذِيْرِ‏ என் எச்சரிக்கை
67:17. அம் அமின்தும் மன் Fபிஸ்ஸமா'இ அய் யுர்ஸில 'அலய்கும் ஹாஸிBபன் Fபஸதஃலமூன கய்Fப னதீர்
67:17. அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
67:18
67:18 وَلَـقَدْ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيْرِ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக كَذَّبَ பொய்ப்பித்தார்(கள்) الَّذِيْنَ எவர்கள் مِن قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தது نَكِيْرِ‏ எனது மறுப்பு
67:18. வ லகத் கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் Fபகய்Fப கான னகீர்
67:18. அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர்; என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது?
67:19
67:19 اَوَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّيَقْبِضْنَؕؔ ۘ مَا يُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُ‌ؕ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍۢ بَصِيْرٌ‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اِلَى الطَّيْرِ பறவைகளை فَوْقَهُمْ தங்களுக்கு மேல் صٰٓفّٰتٍ விரித்தவைகளாகவும் وَّيَقْبِضْنَؕؔ ۘ மடக்கியவைகளாகவும் مَا يُمْسِكُهُنَّ அவற்றை தடுக்க முடியாது اِلَّا الرَّحْمٰنُ‌ؕ ரஹ்மானைத் தவிர اِنَّهٗ நிச்சயமாக அவன் بِكُلِّ شَىْءٍۢ எல்லாப் பொருளையும் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
67:19. அவலம் யரவ் இலத் தய்ரி Fபவ்கஹும் ஸாFப்Fபாதி(ன்)வ் வ யக்Bபிள்ன்; மா யும்ஸிகுஹுன்ன இல்'லர் ரஹ்மான்; இன்னஹூ Bபிகுல்லி ஷய் இன் Bபஸீர்
67:19. இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
67:20
67:20 اَمَّنْ هٰذَا الَّذِىْ هُوَ جُنْدٌ لَّكُمْ يَنْصُرُكُمْ مِّنْ دُوْنِ الرَّحْمٰنِ‌ؕ اِنِ الْكٰفِرُوْنَ اِلَّا فِىْ غُرُوْرٍ‌ۚ‏
اَمَّنْ மாறாக, யார்? هٰذَا இவர்(கள்) الَّذِىْ எவர்(கள்) هُوَ அவர்(கள்) جُنْدٌ لَّكُمْ உங்கள் ராணுவமாக يَنْصُرُكُمْ உங்களுக்கு உதவுகின்றார்(கள்) مِّنْ دُوْنِ அன்றி الرَّحْمٰنِ‌ؕ பேரருளாளனை اِنِ الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் இல்லை اِلَّا தவிர فِىْ غُرُوْرٍ‌ۚ‏ ஏமாற்றத்தில்
67:20. அம்மன் ஹாதல் லதீ ஹுவ ஜுன்துல் லகும் யன்ஸுருகும் மின் தூனிர் ரஹ்மான்; இனில்காFபிரூன இல்லா Fபீ குரூர்
67:20. அன்றியும், அர்ரஹ்மானை தவிர வேறு எவர் உங்களுக்குப் பட்டாளமாக இருந்து கொண்டு உதவி செய்வார்? காஃபிர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை.
67:21
67:21 اَمَّنْ هٰذَا الَّذِىْ يَرْزُقُكُمْ اِنْ اَمْسَكَ رِزْقَهٗ‌ ۚ بَلْ لَّجُّوْا فِىْ عُتُوٍّ وَّنُفُوْرٍ‏
اَمَّنْ மாறாக, யார்? هٰذَا இவர்(கள்) الَّذِىْ எவர்(கள்) يَرْزُقُكُمْ உங்களுக்கு உணவளிக்கின்றார்(கள்) اِنْ اَمْسَكَ அவன் தடுத்துவிட்டால் رِزْقَهٗ‌ ۚ தனது உணவை بَلْ மாறாக, لَّجُّوْا பிடிவாதம் பிடித்தனர் فِىْ عُتُوٍّ வரம்பு மீறுவதிலும் وَّنُفُوْرٍ‏ விலகிச் செல்வதிலும்தான்
67:21. அம்மன் ஹாதல் லதீ யர்Zஜுகுகும் இன் அம்ஸக ரிZஜ்கஹ்; Bபல் லஜ்ஜூ Fபீ 'உதுவ்வி(ன்)வ் வ னுFபூர்
67:21. அல்லது, தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.
67:22
67:22 اَفَمَنْ يَّمْشِىْ مُكِبًّا عَلٰى وَجْهِهٖۤ اَهْدٰٓى اَمَّنْ يَّمْشِىْ سَوِيًّا عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
اَفَمَنْ யார்? يَّمْشِىْ நடக்கின்றான் مُكِبًّا கவிழ்ந்தவனாக عَلٰى وَجْهِهٖۤ தனது முகத்தின் மீது اَهْدٰٓى நேர்வழி பெற்றவனா اَمَّنْ அல்லது யார்? يَّمْشِىْ நடக்கின்றான் سَوِيًّا சரியாக عَلٰى صِرَاطٍ பாதையில் مُّسْتَقِيْمٍ‏ நேரான
67:22. அFபமய் யம்ஷீ முகிBப்Bபன் 'அலா வஜ்ஹிஹீ அஹ்தா அம்ம(ன்)ய் யம்ஷீ ஸவிய்யன் 'அலா ஸிரதிம் முஸ்தகீம்
67:22. முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா.
67:23
67:23 قُلْ هُوَ الَّذِىْۤ اَنْشَاَكُمْ وَجَعَلَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ الْاَفْـــِٕدَةَ ‌ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏
قُلْ கூறுவீராக! هُوَ الَّذِىْۤ அவன்தான் اَنْشَاَكُمْ உங்களை உருவாக்கினான் وَجَعَلَ இன்னும் ஏற்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு السَّمْعَ செவியை(யும்) وَالْاَبْصَارَ பார்வைகளையும் وَ الْاَفْـــِٕدَةَ ؕ உள்ளங்களையும் قَلِيْلًا மிகக் குறைவாகவே مَّا تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள்
67:23. குல் ஹுவல் லதீ அன்ஷ அகும் வ ஜ'அல லகுமுஸ் ஸம்'அ வல் அBப்ஸார வல் அFப்'இதத கலீலம் மா தஷ்குரூன்
67:23. (நபியே!) நீர் கூறுவீராக: “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.”
67:24
67:24 قُلْ هُوَ الَّذِىْ ذَرَاَكُمْ فِى الْاَرْضِ وَاِلَيْهِ تُحْشَرُوْنَ‏
قُلْ கூறுவீராக! هُوَ الَّذِىْ அவன்தான் ذَرَاَكُمْ உங்களை பரத்தினான் فِى الْاَرْضِ பூமியில் وَاِلَيْهِ அவன் பக்கமே تُحْشَرُوْنَ‏ ஒன்று திரட்டப்படுவீர்கள்
67:24. குல் ஹுவல் லதீ தர அகும் Fபில் அர்ளி வ இலய்ஹி துஹ்ஷரூன்
67:24. “அவனே உங்களைப் பூமியின் (பல பாகங்களிலும்) பரவச் செய்தான்; அன்றியும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்” என்று கூறுவீராக.
67:25
67:25 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ அவர்கள் கூறுகின்றனர் مَتٰى எப்போது நிகழும் هٰذَا இந்த الْوَعْدُ வாக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
67:25. வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
67:25. ஆயினும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து எப்பொழுது (வரும்)?” என்று (காஃபிர்கள்) கேட்கிறார்கள்.
67:26
67:26 قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ وَاِنَّمَاۤ اَنَا نَذِيْرٌ مُّبِيْنٌ‏
قُلْ கூறுவீராக! اِنَّمَا الْعِلْمُ அறிவெல்லாம் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம்தான் وَاِنَّمَاۤ اَنَا நான் எல்லாம் نَذِيْرٌ எச்சரிப்பாளர்தான் مُّبِيْنٌ‏ தெளிவான
67:26. குல் இன்னமல் 'இல்மு 'இன்தல்லாஹி வ இன்னமா அன னதீரும் முBபீன்
67:26. “இதைப் பற்றிய ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே தான் இருக்கிறது; தவிர, நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறும்.
67:27
67:27 فَلَمَّا رَاَوْهُ زُلْفَةً سِيْٓئَتْ وُجُوْهُ الَّذِيْنَ كَفَرُوْا وَقِيْلَ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَدَّعُوْنَ‏
فَلَمَّا رَاَوْهُ அவர்கள் அதை பார்க்கின்றபோது زُلْفَةً மிக நெருக்கமாக سِيْٓئَتْ கெட்டுவிடும் وُجُوْهُ முகங்கள் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களின் وَقِيْلَ இன்னும் கூறப்படும் هٰذَا இதுதான் الَّذِىْ எதை كُنْتُمْ நீங்கள் இருந்தீர்களோ بِهٖ அதை تَدَّعُوْنَ‏ தேடுபவர்களாக
67:27. Fபலம்மா ர-அவ்ஹு Zஜுல்Fபதன் ஸீ'அத் வுஜூஹுல் லதீன கFபரூ வ கீல ஹாதல் லதீ குன்தும் Bபிஹீ தத்த'ஊன்
67:27. எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும்; இன்னும், “நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்” என்று அவர்களுக்குக் கூறப்படும்.
67:28
67:28 قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَهْلَـكَنِىَ اللّٰهُ وَمَنْ مَّعِىَ اَوْ رَحِمَنَا ۙ فَمَنْ يُّجِيْرُ الْكٰفِرِيْنَ مِنْ عَذَابٍ اَلِيْمٍ‏
قُلْ கூறுவிராக اَرَءَيْتُمْ அறிவியுங்கள் اِنْ اَهْلَـكَنِىَ என்னை(யும்) அழித்துவிட்டால் اللّٰهُ அல்லாஹ் وَمَنْ مَّعِىَ என்னுடன் இருப்பவர்களையும் اَوْ அல்லது رَحِمَنَا ۙ எங்கள் மீது கருணை புரிந்தால் فَمَنْ யார்? يُّجِيْرُ காப்பாற்றுவார் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களை مِنْ عَذَابٍ தண்டனையிலிருந்து اَلِيْمٍ‏ வலி தரக்கூடிய(து)
67:28. குல் அர'அய்தும் இன் அஹ்லக னியல் லாஹு வ மம் ம'இய அவ் ரஹிமனா Fபமய்-யுஜீருல் காFபிரீன மின் 'அதாBபின் அலீம்
67:28. கூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?
67:29
67:29 قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَيْهِ تَوَكَّلْنَا‌ۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
قُلْ கூறுவீராக! هُوَ அவன்தான் الرَّحْمٰنُ பேரருளாளன் اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் بِهٖ அவனை وَعَلَيْهِ இன்னும் அவன் மீதே تَوَكَّلْنَا‌ۚ நாங்கள் நம்பிக்கை வைத்தோம் فَسَتَعْلَمُوْنَ விரைவில் அறிவீர்கள் مَنْ هُوَ فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் உள்ளவர்களை مُّبِيْنٍ‏ தெளிவான
67:29. குல் ஹுவர் ரஹ்மானு ஆமன்னா Bபிஹீ வ 'அலய்ஹி தவக்கல்னா Fபஸதஃலமூன மன் ஹுவ Fபீ ளலாலிம் முBபீன்
67:29. (நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான்; அவன் மீதே நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!”
67:30
67:30 قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّاْتِيْكُمْ بِمَآءٍ مَّعِيْنٍ
قُلْ கூறுவீராக اَرَءَيْتُمْ அறிவியுங்கள் اِنْ اَصْبَحَ சென்று விட்டால் مَآؤُكُمْ உங்கள் தண்ணீர் غَوْرًا ஆழத்தில் فَمَنْ யார் يَّاْتِيْكُمْ بِمَآءٍ உங்களுக்கு தண்ணீரைக் கொண்டு வருவார் مَّعِيْنٍ‏ மதுரமான
67:30. குல் அர'அய்தும் இன் அஸ்Bபஹ மா'உகும் கவ்ரன் Fபமய் ய'தீகும் Bபிமா'இம் ம'ஈன்
67:30. (நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).