34. ஸூரத்துஸ் ஸபா
மக்கீ, வசனங்கள்: 54

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
34:1
34:1 اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَلَـهُ الْحَمْدُ فِى الْاٰخِرَةِ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ‏
اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே! الَّذِىْ எப்படிப்பட்டவன் لَهٗ அவனுக்கே உரியன مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை(யும்) وَمَا فِى الْاَرْضِ பூமியில் உள்ளவையும் وَلَـهُ அவனுக்கே الْحَمْدُ எல்லாப் புகழும் فِى الْاٰخِرَةِ ؕ மறுமையிலும் وَهُوَ அவன்தான் الْحَكِيْمُ மகாஞானமுடையவன் الْخَبِيْرُ‏ ஆழ்ந்தறிபவன்
34:1. அல்ஹம்து லில்லாஹில் லதீ லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி வ லஹுல் ஹம்து Fபில் ஆகிரஹ்; வ ஹுவல் ஹகீமுல் கBபீர்
34:1. அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
34:2
34:2 يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيْهَا ؕ وَهُوَ الرَّحِيْمُ الْغَفُوْرُ‏
يَعْلَمُ அவன் நன்கறிவான் مَا يَلِجُ நுழைவதை(யும்) فِى الْاَرْضِ பூமியில் وَمَا يَخْرُجُ வெளியேறுவதையும் مِنْهَا அதிலிருந்து وَمَا يَنْزِلُ இறங்குவதையும் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து وَمَا يَعْرُجُ ஏறுவதையும் فِيْهَا ؕ அதில் وَهُوَ அவன்தான் الرَّحِيْمُ மகா கருணையாளன் الْغَفُوْرُ‏ மகா மன்னிப்பாளன்
34:2. யஃலமு மா யலிஜு Fபில் அர்ளி வமா யக்ருஜு மின்ஹா வமா யன்Zஜிலு மினஸ் ஸமா'இ வமா யஃருஜு Fபீஹா; வ ஹுவர் ரஹீமுல் கFபூர்
34:2. பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன் பால் உயருவதையும் (ஆகிய அனைத்தையும்) அவன் அறிகிறான். அவன் மிக்க அன்புடையவன், மிகவும் மன்னிப்பவன்.
34:3
34:3 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَاْتِيْنَا السَّاعَةُ ؕ قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتَاْتِيَنَّكُمْۙ عٰلِمِ الْغَيْبِ ۚ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍۙ‏
وَقَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் لَا تَاْتِيْنَا எங்களிடம் வராது السَّاعَةُ ؕ மறுமை قُلْ கூறுவீராக! بَلٰى ஏன் (வராது) وَرَبِّىْ என் இறைவன் மீது சத்தியமாக لَـتَاْتِيَنَّكُمْۙ நிச்சயமாக அது உங்களிடம் வரும் عٰلِمِ நன்கறிந்தவனாகிய الْغَيْبِ ۚ மறைவானவற்றை لَا يَعْزُبُ எதுவும் மறைந்துவிடாது عَنْهُ அவனை விட்டும் مِثْقَالُ அளவும் ذَرَّةٍ அணு فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَلَا فِى الْاَرْضِ பூமியிலும் وَلَاۤ اَصْغَرُ சிறியது இல்லை مِنْ ذٰ لِكَ அதை விட وَلَاۤ اَكْبَرُ பெரியது இல்லை اِلَّا தவிர فِىْ كِتٰبٍ பதிவேட்டில் இருந்தே مُّبِيْنٍۙ‏ தெளிவான
34:3. வ காலல் லதீன கFபரூ லா தாதீனஸ் ஸா'அஹ்; குல் Bபலா வ ரBப்Bபீ லதாதியன்னகும் 'ஆலிமுல் கய்Bப்; லா யஃZஜுBபு 'அன்ஹு மித்காலு தர்ரதின் Fபிஸ் ஸமாவாதி வலா Fபில் அர்ளி வ லா அஸ்கரு மின் தாலிக வ லா அக்Bபரு இல்லா Fபீ கிதாBபிம் முBபீன்
34:3. எனினும் நிராகரிப்பவர்கள்: “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
34:4
34:4 لِّيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوا وَعَمِلُوْا الصّٰلِحٰتِؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏
لِّيَجْزِىَ அவன் கூலிகொடுப்பதற்காக الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கை கொண்டவர்களுக்கு وَعَمِلُوْا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِؕ நன்மைகளை اُولٰٓٮِٕكَ لَهُمْ அவர்களுக்கு مَّغْفِرَةٌ மன்னிப்பு(ம்) وَّرِزْقٌ வாழ்க்கையும் كَرِيْمٌ‏ கண்ணியமான
34:4. லியஜ்Zஜியல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாத்; உலா'இக லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
34:4. ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது); அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.
34:5
34:5 وَالَّذِيْنَ سَعَوْ فِىْۤ اٰيٰتِنَا مُعٰجِزِيْنَ اُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِيْمٌ‏
وَالَّذِيْنَ سَعَوْ முயற்சிப்பவர்கள் فِىْۤ اٰيٰتِنَا நமது வசனங்களில் مُعٰجِزِيْنَ அவர்கள் முறியடிப்பதற்காக اُولٰٓٮِٕكَ لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை உண்டு مِّنْ رِّجْزٍ கெட்ட தண்டனையின் اَلِيْمٌ‏ மிகவும் வலிமிக்க
34:5. வல்லதீன ஸ'அவ் Fபீ ஆயாதினா மு'ஆஜிZஜீன உலா 'இக லஹும் 'அதாBபும் மிர் ரிஜ்Zஜின் அலீம்
34:5. மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு.
34:6
34:6 وَيَرَى الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ الَّذِىْۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ هُوَ الْحَـقَّ ۙ وَيَهْدِىْۤ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِ‏
وَيَرَى அறிவார்கள் الَّذِيْنَ اُوْتُوا கொடுக்கப்பட்டவர்கள் الْعِلْمَ கல்வி الَّذِىْۤ اُنْزِلَ இறக்கப்பட்டதை اِلَيْكَ உமக்கு مِنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து هُوَ அதுதான் الْحَـقَّ ۙ சத்தியம் وَيَهْدِىْۤ இன்னும் நேர்வழி காட்டுகிறது اِلٰى صِرَاطِ பாதைக்கு الْعَزِيْزِ الْحَمِيْدِ‏ மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின்
34:6. வ யரல் லதீன ஊதுல் 'இல்மல் லதீ உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக ஹுவல் ஹக்க வ யஹ்தீ இலா ஸிராதில் 'அZஜீZஜில் ஹமீத்
34:6. எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்.
34:7
34:7 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا هَلْ نَدُلُّكُمْ عَلٰى رَجُلٍ يُّنَبِّئُكُمْ اِذَا مُزِّقْتُمْ كُلَّ مُمَزَّقٍۙ اِنَّكُمْ لَفِىْ خَلْقٍ جَدِيْدٍۚ‏
وَقَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் هَلْ نَدُلُّكُمْ நாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா? عَلٰى رَجُلٍ ஓர் ஆடவரை يُّنَبِّئُكُمْ அவர் உங்களுக்கு அறிவிக்கின்றார் اِذَا مُزِّقْتُمْ நீங்கள் கிழிக்கப்பட்ட பின்னர் كُلَّ مُمَزَّقٍۙ சுக்கு நூறாக اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَفِىْ خَلْقٍ படைப்பாக (உருவாக்கப்படுவீர்கள்) جَدِيْدٍۚ‏ புதிய
34:7. வ காலல் லதீன கFபரூ ஹல் னதுல்லுகும் 'அலா ரஜுலி(ன்)ய் யுனBப்Bபி 'உகும் இதா முZஜ்Zஜிக்தும் குல்ல முமZஜ்Zஜகின் இன்னகும் லFபீ கல்கின் ஜதீத்
34:7. ஆனால், நிராகரிக்கிறார்களே அவர்கள்: “நீங்கள் (இறந்து, மக்கித் தூளாகச்) சிதறடிக்கப்பட்ட பின், நீங்கள் ஒரு புதிய படைப்பாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கும் மனிதரை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவா?” என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
34:8
34:8 اَ فْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَمْ بِهٖ جِنَّةٌ  ؕ بَلِ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ فِى الْعَذَابِ وَالضَّلٰلِ الْبَعِيْدِ‏
اَ فْتَـرٰى அவர் இட்டுக்கட்டுகிறாரா عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை اَمْ அல்லது بِهٖ அவருக்கு جِنَّةٌ  ؕ பைத்தியம் (பிடித்திருக்கிறதா?) بَلِ மாறாக الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ளாதவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை فِى الْعَذَابِ வேதனையிலும் وَالضَّلٰلِ வழிகேட்டிலும் الْبَعِيْدِ‏ தூரமான
34:8. அFப்தரா 'அலல் லாஹி கதிBபன் அம் Bபிஹீ ஜின்னஹ்; Bபலில் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி Fபில்'அதாBபி வள் ளலாலில் Bப'ஈத்
34:8. அன்றியும், இ(வ்வாறு கூறுகின்ற)வர் அல்லாஹ்வின் மீது “பொய்யை இட்டுக் கட்டுகிறாரா; அல்லது இவருக்கு பைத்தியமா?” (என்றும் கேட்கிறார்கள்.) அவ்வாறல்ல! மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் வேதனையிலும் வெகு தூரமான வழி கேட்டிலுமே இருக்கிறார்கள்.
34:9
34:9 اَفَلَمْ يَرَوْا اِلٰى مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ اِنْ نَّشَاْ نَخْسِفْ بِهِمُ الْاَرْضَ اَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِّنَ السَّمَآءِ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّكُلِّ عَبْدٍ مُّنِيْبٍ
اَفَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اِلٰى مَا بَيْنَ اَيْدِيْهِمْ தங்களுக்கு முன்னுள்ள وَمَا خَلْفَهُمْ இன்னும் தங்களுக்கு பின்னுள்ள مِّنَ السَّمَآءِ வானத்தையும் وَالْاَرْضِ ؕ பூமியையும் اِنْ نَّشَاْ நாம் நாடினால் نَخْسِفْ சொருகிவிடுவோம் بِهِمُ அவர்களை الْاَرْضَ பூமியில் اَوْ அல்லது نُسْقِطْ விழவைப்போம் عَلَيْهِمْ அவர்கள் மீது كِسَفًا துண்டுகளை مِّنَ السَّمَآءِ ؕ வானத்தின் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கின்றது لَاٰيَةً ஒர் அத்தாட்சி لِّكُلِّ عَبْدٍ எல்லா அடியார்களுக்கும் مُّنِيْبٍ‏ திரும்பக்கூடிய
34:9. அFபலம் யரவ் இலா மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் மினஸ் ஸமா'இ வல் அர்ள்; இன் னஷத் னக்ஸிFப் Bபிஹிமுல் அர்ள அவ் னுஸ்கித் 'அலய்ஹிம் கிஸFபம் மினஸ் ஸமா'; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகுல்லி 'அBப்திம் முனீBப்
34:9. வானத்திலும், பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும் அவர்களுக்குப் பின்னாலுள்ளதையும் அவர்கள் பார்க்க வில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.  
34:10
34:10 وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا ؕ يٰجِبَالُ اَوِّبِىْ مَعَهٗ وَالطَّيْرَ ۚ وَاَلَــنَّا لَـهُ الْحَدِيْدَ ۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا வழங்கினோம் دَاوٗدَ தாவூதுக்கு مِنَّا நம் புறத்தில் இருந்து فَضْلًا ؕ மேன்மையை يٰجِبَالُ மலைகளே! اَوِّبِىْ நீங்கள் துதியுங்கள் مَعَهٗ அவருடன் وَالطَّيْرَ ۚ பறவைகளே! وَاَلَــنَّا இன்னும் மென்மையாக்கினோம் لَـهُ அவருக்கு الْحَدِيْدَ ۙ‏ இரும்பை
34:10. வலகத் ஆதய்னா தாவூத மின்னா Fபள்ல(ன்)ய் யா ஜிBபாலு அவ்விBபீ ம'அஹூ வத்தய்ர வ அலன்னா லஹுல் ஹதீத்
34:10. இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
34:11
34:11 اَنِ اعْمَلْ سٰبِغٰتٍ وَّقَدِّرْ فِى السَّرْدِ وَاعْمَلُوْا صَالِحًـا ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
اَنِ اعْمَلْ செய்வீராக! سٰبِغٰتٍ உருக்குச் சட்டைகள் وَّقَدِّرْ இன்னும் அளவாக செய்வீராக! فِى السَّرْدِ ஆணிகளை وَاعْمَلُوْا இன்னும் செய்யுங்கள் صَالِحًـا ؕ நன்மையை اِنِّىْ நிச்சயமாக நான் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை بَصِيْرٌ‏ உற்று நோக்குகின்றேன்
34:11. அனிஃமல் ஸாBபிகாதி(ன்)வ் வ கத்திர் Fபிஸ் ஸர்தி வஃமலூ ஸாலிஹன் இன்னீ Bபிமா தஃமலூன Bபஸீர்
34:11. “வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றேன்” (என்றும் சொன்னோம்.)
34:12
34:12 وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ غُدُوُّهَا شَهْرٌ وَّرَوَاحُهَا شَهْرٌۚ وَ اَسَلْنَا لَهٗ عَيْنَ الْقِطْرِؕ وَمِنَ الْجِنِّ مَنْ يَّعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِاِذْنِ رَبِّهِؕ وَمَنْ يَّزِغْ مِنْهُمْ عَنْ اَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيْرِ‏
وَلِسُلَيْمٰنَ இன்னும் சுலைமானுக்கு الرِّيْحَ காற்றை(யும்) غُدُوُّهَا அதன் காலைப்பொழுது(ம்) شَهْرٌ ஒரு மாதமாகும் وَّرَوَاحُهَا இன்னும் அதன் மாலைப்பொழுதும் شَهْرٌۚ ஒரு மாதமாகும் وَ اَسَلْنَا இன்னும் ஓட வைத்தோம் لَهٗ அவருக்கு عَيْنَ சுரங்கத்தை الْقِطْرِؕ செம்பினுடைய وَمِنَ الْجِنِّ இன்னும் ஜின்களிலிருந்து مَنْ يَّعْمَلُ வேலை செய்கின்றவர்களை بَيْنَ يَدَيْهِ அவருக்கு முன்னால் بِاِذْنِ உத்தரவின் படி رَبِّهِؕ அவரது இறைவனின் وَمَنْ யார் يَّزِغْ விலகுவாரோ مِنْهُمْ அவர்களில் عَنْ اَمْرِنَا நமது கட்டளையை விட்டு نُذِقْهُ அவருக்கு நாம் சுவைக்க வைப்போம் مِنْ عَذَابِ தண்டனையை السَّعِيْرِ‏ கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்
34:12. வ லி-ஸுலய்மானர் ரீஹ குதுவ்வுஹா ஷஹ்ரு(ன்)வ் வ ர-வாஹுஹா ஷஹ்ரு(ன்)வ் வ அஸல்னா லஹூ 'அய்னல் கித்ர்; வ மினல் ஜின்னி மய் யஃமலு Bபய்ன யதய்ஹி Bபி இத்னி ரBப்Bபிஹ்; வ மய் யZஜிக் மின்ஹும் 'அன் அம்ரினா னுதிக்ஹு மின் 'அதாBபிஸ் ஸ'ஈர்
34:12. (அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
34:13
34:13 يَعْمَلُوْنَ لَهٗ مَا يَشَآءُ مِنْ مَّحَارِيْبَ وَتَمَاثِيْلَ وَجِفَانٍ كَالْجَـوَابِ وَقُدُوْرٍ رّٰسِيٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِيْلٌ مِّنْ عِبَادِىَ الشَّكُوْرُ‏
يَعْمَلُوْنَ அவை செய்கின்றன لَهٗ அவருக்கு مَا يَشَآءُ அவர் நாடுகின்ற(தை) مِنْ مَّحَارِيْبَ தொழுமிடங்களை(யும்) وَتَمَاثِيْلَ சிலைகளையும் وَجِفَانٍ பாத்திரங்களையும் كَالْجَـوَابِ நீர் தொட்டிகளைப் போன்ற وَقُدُوْرٍ சட்டிகளையும் رّٰسِيٰتٍ ؕ உறுதியான اِعْمَلُوْۤا செய்யுங்கள் اٰلَ குடும்பத்தார்களே! دَاوٗدَ தாவூதின் شُكْرًا ؕ நன்றி செலுத்துவதற்காக وَقَلِيْلٌ குறைவானவர்களே مِّنْ عِبَادِىَ என் அடியார்களில் الشَّكُوْرُ‏ நன்றி செலுத்துபவர்கள்
34:13. யஃமலூன லஹூ ம யஷா'உ மிம் மஹாரீBப வ தமாதீல வ ஜிFபானின் கல்ஜவாBபி வ குதூரிர் ராஸியாத்; இஃமலூ ஆல தாவூத ஷுக்ரா; வ கலீலும் மின் 'இBபாதியஷ் ஷகூர்
34:13. அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).
34:14
34:14 فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلٰى مَوْتِهٖۤ اِلَّا دَآ بَّةُ الْاَرْضِ تَاْ كُلُ مِنْسَاَتَهُ ۚ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ اَنْ لَّوْ كَانُوْا يَعْلَمُوْنَ الْغَيْبَ مَا لَبِثُوْا فِى الْعَذَابِ الْمُهِيْنِ ؕ‏
فَلَمَّا قَضَيْنَا நாம் முடிவு செய்தபோது عَلَيْهِ அவருக்கு الْمَوْتَ மரணத்தை مَا دَلَّهُمْ அவர்களுக்கு அறிவிக்கவில்லை عَلٰى مَوْتِهٖۤ அவர் மரணித்து விட்டதை اِلَّا தவிர دَآ بَّةُ الْاَرْضِ கரையானை تَاْ كُلُ தின்ற(து) مِنْسَاَتَهُ ۚ அவருடைய தடியை فَلَمَّا خَرَّ அவர் கீழே விழுந்தபோது تَبَيَّنَتِ தெளிவாக தெரிய வந்தது الْجِنُّ ஜின்களுக்கு اَنْ لَّوْ كَانُوْا يَعْلَمُوْنَ தாங்கள் அறிந்துகொண்டிருந்தால் الْغَيْبَ மறைவானவற்றை مَا لَبِثُوْا தங்கி இருந்திருக்க மாட்டார்கள் فِى الْعَذَابِ வேதனையில் الْمُهِيْنِ ؕ‏ இழிவான
34:14. Fபலம்மா களய்னா 'அலய்ஹில் மவ்த ம தல்லஹும் 'அலா மவ்திஹீ இல்லா தாBப்Bபதுல் அர்ளி தாகுலு மின்ஸ அதஹூ Fபலம்மா கர்ர தBபய்யனதில் ஜின்னு அல் லவ் கானூ யஃலமூனல் கய்Bப மா லBபிதூ Fபில் 'அதாBபில் முஹீன்
34:14. அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.
34:15
34:15 لَقَدْ كَانَ لِسَبَاٍ فِىْ مَسْكَنِهِمْ اٰيَةٌ  ۚ جَنَّتٰنِ عَنْ يَّمِيْنٍ وَّشِمَالٍ ؕ  کُلُوْا مِنْ رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوْا لَهٗ ؕ بَلْدَةٌ طَيِّبَةٌ وَّرَبٌّ غَفُوْرٌ‏‏
لَقَدْ திட்டவட்டமாக كَانَ இருக்கின்றது لِسَبَاٍ சபா நகர மக்களுக்கு فِىْ مَسْكَنِهِمْ அவர்களின் தங்குமிடத்தில் اٰيَةٌ  ۚ ஓர் அத்தாட்சி جَنَّتٰنِ இரண்டு தோட்டங்கள் عَنْ يَّمِيْنٍ வலது பக்கத்திலும் وَّشِمَالٍ ؕ இடது பக்கத்திலும் کُلُوْا உண்ணுங்கள்! مِنْ رِّزْقِ உணவை رَبِّكُمْ உங்கள் இறைவனின் وَاشْكُرُوْا இன்னும் நன்றி செலுத்துங்கள் لَهٗ ؕ அவனுக்கு بَلْدَةٌ طَيِّبَةٌ நல்ல ஊர் وَّرَبٌّ இன்னும் இறைவன் غَفُوْرٌ‏‏ மகா மன்னிப்பாளன்
34:15. லகத் கான லி ஸBப-இன் Fபீ மஸ்கனிஹிம் ஆயதுன் ஜன்னதானி 'அ(ன்)ய் யமீனி(ன்)வ் வ ஷிமாலின் குலூ மிர் ரிZஜ்கி ரBப்Bபிகும் வஷ்குரூலஹ்; Bபல்ததுன் தய்யிBபது(ன்)வ் வ ரBப்Bபுன் கFபூர்
34:15. நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).
34:16
34:16 فَاَعْرَضُوْا فَاَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنٰهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَىْ اُكُلٍ خَمْطٍ وَّاَثْلٍ وَّشَىْءٍ مِّنْ سِدْرٍ قَلِيْلٍ‏
فَاَعْرَضُوْا ஆனால் புறக்கணித்தனர் فَاَرْسَلْنَا ஆகவே அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது سَيْلَ பெரும் வெள்ளத்தை الْعَرِمِ அடியோடு அரித்து செல்கின்ற وَبَدَّلْنٰهُمْ இன்னும் மாற்றிவிட்டோம் அவர்களுக்கு بِجَنَّتَيْهِمْ அவர்களின் இரண்டு தோட்டங்களுக்குப் பதிலாக جَنَّتَيْنِ இரண்டு தோட்டங்களை ذَوَاتَىْ உடைய اُكُلٍ பழங்கள் خَمْطٍ துர்நாற்றமுள்ள وَّاَثْلٍ இன்னும் காய்க்காத மரங்கள் وَّشَىْءٍ مِّنْ سِدْرٍ قَلِيْلٍ‏ இன்னும் மிகக் குறைவான சில இலந்தை மரங்களை
34:16. Fப அஃரளூ Fப-அர்ஸல்னா 'அலய்ஹிம் ஸய்லல் 'அரிமி வ Bபத்தல்னாஹும் Bபிஜன்னதய்ஹிம் ஜன்னதய்னி தவாதய் உகுலின் கம்தி(ன்)வ் வ அத்லி(ன்)வ் வ ஷய்'இம் மின் ஸித்ரின் கலீல்
34:16. ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.
34:17
34:17 ذٰ لِكَ جَزَيْنٰهُمْ بِمَا كَفَرُوْا ؕ وَهَلْ نُـجٰزِىْۤ اِلَّا الْـكَفُوْرَ‏
ذٰ لِكَ இது جَزَيْنٰهُمْ அவர்களுக்கு நாம் கூலி கொடுத்தோம் بِمَا كَفَرُوْا ؕ அவர்கள் நிராகரித்ததற்காக وَهَلْ نُـجٰزِىْۤ மற்றவர்களையா நாம் தண்டிப்போம் اِلَّا தவிர الْـكَفُوْرَ‏ நிராகரிப்பாளர்களை
34:17. தாலிக ஜZஜய்னாஹும் Bபிமா கFபரூ வ ஹல் னுஜாZஜீ இல்லல் கFபூர்
34:17. அவர்கள் நிராகரித்ததின் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா?
34:18
34:18 وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا قُرًى ظَاهِرَةً وَّقَدَّرْنَا فِيْهَا السَّيْرَ ؕ سِيْرُوْا فِيْهَا لَيَالِىَ وَاَيَّامًا اٰمِنِيْنَ‏
وَجَعَلْنَا நாம் ஏற்படுத்தினோம் بَيْنَهُمْ அவர்களுக்கு இடையிலும் وَبَيْنَ இடையிலும் الْقُرَى ஊர்களுக்கு الَّتِىْ بٰرَكْنَا நாம் அருள்வளம் புரிந்த فِيْهَا அவற்றில் قُرًى பல ஊர்களை ظَاهِرَةً தெளிவாகத் தெரியும்படியான وَّقَدَّرْنَا நிர்ணயித்தோம் فِيْهَا அவற்றில் السَّيْرَ ؕ பயணத்தை سِيْرُوْا பயணியுங்கள் فِيْهَا அவற்றில் لَيَالِىَ பல இரவுகளும் وَاَيَّامًا பல பகல்களும் اٰمِنِيْنَ‏ பாதுகாப்பு பெற்றவர்களாக
34:18. வ ஜ'அல்னா Bபய்னஹும் வ Bபய்னல் குரல் லதீ Bபாரக்னா Fபீஹா குரன் ளாஹிரத(ன்)வ் வ கத்தர்னா Fபீஹஸ் ஸய்ர்; ஸீரூ Fபீஹா ல யாலிய வ அய்யாமன் ஆமினீன்
34:18. இன்னும், அவர்களுக்கிடையிலும், நாம் பரக்கத்து (அவற்றில்) செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் (வழியில்) தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் (போக்குவரத்து(ப் பாதைகளையு)ம் அமைத்தோம்; “அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்” (என்று கூறினோம்).
34:19
34:19 فَقَالُوْا رَبَّنَا بٰعِدْ بَيْنَ اَسْفَارِنَا وَظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَجَعَلْنٰهُمْ اَحَادِيْثَ وَمَزَّقْنٰهُمْ كُلَّ مُمَزَّقٍ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لّـِكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ‏
فَقَالُوْا ஆனால் அவர்கள் கூறினர் رَبَّنَا எங்கள் இறைவா! بٰعِدْ தூரத்தை ஏற்படுத்து! بَيْنَ மத்தியில் اَسْفَارِنَا எங்கள் பயணங்களுக்கு وَظَلَمُوْۤا இன்னும் அநீதி இழைத்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்குத் தாமே فَجَعَلْنٰهُمْ ஆகவே, அவர்களை ஆக்கிவிட்டோம் اَحَادِيْثَ பேசப்படக்கூடிய கதைகளாக وَمَزَّقْنٰهُمْ அவர்களை கிழித்துவிட்டோம் كُلَّ مُمَزَّقٍ ؕ சுக்கு நூறாக اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கின்றன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لّـِكُلِّ எல்லோருக்கும் صَبَّارٍ பெரும் பொறுமையாளர்(கள்) شَكُوْرٍ‏ அதிகம் நன்றி செலுத்துகின்றவர்(கள்)
34:19. Fபகாலூ ரBப்Bபனா Bபா'இத் Bபய்ன அஸ்Fபாரினா வ ளலமூ அன்Fபுஸஹும் Fபஜ'அல்னாஹும் அஹாதீத வ மZஜ்Zஜக் னாஹும் குல்ல முமZஜ்Zஜக்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகுல்லி ஸBப்Bபாரின் ஷகூர்
34:19. ஆனால், அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!” என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்; ஆகவே அவர்களை (பழங்) கதைகளாக ஆக்கி விட்டோம் இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப்போகும் படியாய் சிதற வைத்தோம்; நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
34:20
34:20 وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ اِبْلِيْسُ ظَنَّهٗ فَاتَّبَعُوْهُ اِلَّا فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக صَدَّقَ உண்மையாக்கினான் عَلَيْهِمْ அவர்கள் மீது اِبْلِيْسُ இப்லீஸ் ظَنَّهٗ தன் எண்ணத்தை فَاتَّبَعُوْهُ ஆகவே, அவர்கள் அவனை பின்பற்றினர் اِلَّا தவிர فَرِيْقًا பிரிவினரை مِّنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கைகொண்டவர்கள்
34:20. வ லகத் ஸத்தக் 'அலய்ஹிம் இBப்லீஸு ளன்னBப்ஹூ Fபத்தBப'ஊஹு இல்லா Fபரீகம் மினல் மு'மினீன்
34:20. அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர, (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள்.
34:21
34:21 وَمَا كَانَ لَهٗ عَلَيْهِمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّا لِنَعْلَمَ مَنْ يُّـؤْمِنُ بِالْاٰخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِىْ شَكٍّ ؕ وَ رَبُّكَ عَلٰى كُلِّ شَىْءٍ حَفِيْظٌ
وَمَا كَانَ இருக்கவில்லை لَهٗ அவனுக்கு عَلَيْهِمْ அவர்கள் மீது مِّنْ سُلْطٰنٍ அறவே அதிகாரம் اِلَّا இருந்தாலும் لِنَعْلَمَ நாம் அறிவதற்காக مَنْ எவர் يُّـؤْمِنُ நம்புகின்றார் بِالْاٰخِرَةِ மறுமையை مِمَّنْ இருந்து/எவர்கள் هُوَ அவர்(கள்) مِنْهَا அதில் فِىْ شَكٍّ ؕ சந்தேகத்தில் وَ رَبُّكَ உமது இறைவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் حَفِيْظٌ‏ கண்காணிக்கின்றவன்
34:21. வமா கான லஹூ 'அலய்ஹிம் மின் ஸுல்தானின் இல்லா லினஃலம மய் யு மினு Bபில் ஆகிரதி மிம்மன் ஹுவ மின்ஹா Fபீ ஷக்க்; வ ரBப்Bபுக 'அலா குல்லி ஷய்'இன் ஹFபீள்
34:21. எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான்.  
34:22
34:22 قُلِ ادْعُوا الَّذِيْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِۚ لَا يَمْلِكُوْنَ مِثْقَالَ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَمَا لَهُمْ فِيْهِمَا مِنْ شِرْكٍ وَّمَا لَهٗ مِنْهُمْ مِّنْ ظَهِيْرٍ‏
قُلِ கூறுவீராக! ادْعُوا அழையுங்கள்! الَّذِيْنَ زَعَمْتُمْ நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்தவர்களை مِّنْ دُوْنِ اللّٰهِۚ அல்லாஹ்வையன்றி لَا يَمْلِكُوْنَ அவர்கள் உரிமை பெறமாட்டார்கள் مِثْقَالَ ذَرَّةٍ அணு அளவுக்கு(ம்) فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَلَا فِى الْاَرْضِ பூமியிலும் وَمَا لَهُمْ அவர்களுக்கு இல்லை فِيْهِمَا அவ்விரண்டிலும் مِنْ شِرْكٍ எவ்வித பங்கும் وَّمَا لَهٗ அவனுக்கு இல்லை مِنْهُمْ அவர்களில் مِّنْ ظَهِيْرٍ‏ உதவியாளர் எவரும்
34:22. குலித் 'உல் லதீன Zஜ'அம்தும் மின் தூனில் லாஹி லா யம்லிகூன மித்கால தர்ரதின் Fபிஸ்ஸமாவாதி வலா Fபில் அர்ளி வமா லஹும் Fபீஹிமா மின் ஷிர்கி(ன்)வ் வமா லஹூ மின்ஹும் மின் ளஹீர்
34:22. “அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை - அவற்றில் இவர்களுக்கு எத்தகைய பங்கும் இல்லை - இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை.
34:23
34:23 وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهٗۤ اِلَّا لِمَنْ اَذِنَ لَهٗ ؕ حَتّٰٓى اِذَا فُزِّعَ عَنْ قُلُوْبِهِمْ قَالُوْا مَاذَا ۙ قَالَ رَبُّكُمْ ؕ قَالُوا الْحَـقَّ ۚ وَهُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ‏
وَلَا تَنْفَعُ பலன்தராது الشَّفَاعَةُ சிபாரிசு عِنْدَهٗۤ அவனிடம் اِلَّا தவிர لِمَنْ எவருக்கு اَذِنَ அவன் அனுமதி அளித்தானோ لَهٗ ؕ அவருக்கே حَتّٰٓى இறுதியாக اِذَا فُزِّعَ திடுக்கம் சென்றுவிட்டால் عَنْ قُلُوْبِهِمْ அவர்களது உள்ளங்களை விட்டு قَالُوْا கேட்பார்கள் مَاذَا ۙ என்ன? قَالَ கூறினான் رَبُّكُمْ ؕ உங்கள் இறைவன் قَالُوا கூறுவார்கள் الْحَـقَّ ۚ உண்மையைத்தான் وَهُوَ அவன்தான் الْعَلِىُّ மிக உயர்ந்தவன் الْكَبِيْرُ‏ மகா பெரியவன்
34:23. வ லா தன்Fப'உஷ் ஷFபா'அது 'இன்தஹூ இல்லா லிமன் அதின லஹ்; ஹத்தா இதா FபுZஜ்Zஜி'அ 'அன் குலூBபிஹிம் காலூ மாதா கால ரBப்Bபுகும்; காலுல் ஹக்க், வ ஹுவல் 'அலியுல் கBபீர்
34:23. அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது; எனவே (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இருதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப்படுமானால் “உங்கள் இறைவன் என்ன கூறினான்” என்று கேட்பார்கள். “உண்மையானதையே! மேலும், அவனே மிக்க உயர்ந்தவன் மகாப்பெரியவன்” என்று கூறுவார்கள்.
34:24
34:24 قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ قُلِ اللّٰهُ ۙ وَ اِنَّاۤ اَوْ اِيَّاكُمْ لَعَلٰى هُدًى اَوْ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
قُلْ கூறுவீராக! مَنْ யார்? يَّرْزُقُكُمْ உங்களுக்கு உணவளிப்பான் مِّنَ இருந்து السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِؕ இன்னும் பூமி قُلِ நீர் கூறுவீராக! اللّٰهُ ۙ அல்லாஹ்தான் وَ اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اَوْ அல்லது اِيَّاكُمْ நீங்களா? لَعَلٰى هُدًى நேர்வழியில் اَوْ அல்லது فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
34:24. குல் மய் யர்Zஜுகுகும் மினஸ் ஸமாவாதி வல் அர்ளி குலில் லாஹு வ இன்னா அவ் இய்யாகும் ல'அலா ஹுதன் அவ் Fபீ ளலாலிம் முBபீன்
34:24. “வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு (வசதிகளை) அளிப்பவன் யார்?” என்று (நபியே!) நீர் கேளும்; “அல்லாஹ்தான்! இன்னும் நிச்சயமாக, நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள்” என்றும் கூறும்.
34:25
34:25 قُلْ لَّا تُسْــٴَــلُوْنَ عَمَّاۤ اَجْرَمْنَا وَلَا نُسْــٴَــلُ عَمَّا تَعْمَلُوْنَ‏
قُلْ கூறுவீராக! لَّا تُسْــٴَــلُوْنَ நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள் عَمَّاۤ اَجْرَمْنَا நாங்கள் செய்த குற்றத்தைப் பற்றி وَلَا نُسْــٴَــلُ நாங்கள் விசாரிக்கப்படமாட்டோம் عَمَّا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்கின்ற அமல்களைப் பற்றி
34:25. குல் லா துஸ்'அலூன 'அம்மா அஜ்ரம்னா வலா னுஸ்'அலு 'அம்மா தஃமலூன்
34:25. “நாங்கள் செய்த குற்றம் குறித்து நீங்கள் வினவப்படமாட்டீர்கள்; நீங்கள் செய்தவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம்” என்றும் கூறுவீராக.
34:26
34:26 قُلْ يَجْمَعُ بَيْنَـنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَـنَا بِالْحَـقِّ ؕ وَهُوَ الْـفَتَّاحُ الْعَلِيْمُ‏
قُلْ கூறுவீராக! يَجْمَعُ ஒன்று சேர்ப்பான் بَيْنَـنَا நமக்கு மத்தியில் رَبُّنَا நமது இறைவன் ثُمَّ பிறகு يَفْتَحُ அவன் தீர்ப்பளிப்பான் بَيْنَـنَا நமக்கு மத்தியில் بِالْحَـقِّ ؕ உண்மையைக் கொண்டு وَهُوَ அவன்தான் الْـفَتَّاحُ உண்மையான தீர்ப்பளிப்பவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
34:26. குல் யஜ்ம'உ Bபய்னனா ரBப்Bபுனா தும்ம யFப்தஹு Bபய்னனா Bபில்ஹக்க்; வ ஹுவல் Fபத்தாஹுல் 'அலீம்
34:26. “நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன்” என்றும் கூறுவீராக.
34:27
34:27 قُلْ اَرُوْنِىَ الَّذِيْنَ اَ لْحَـقْتُمْ بِهٖ شُرَكَآءَ كَلَّا ؕ بَلْ هُوَ اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
قُلْ கூறுவீராக! اَرُوْنِىَ எனக்கு அறிவியுங்கள் الَّذِيْنَ எவர்கள் اَ لْحَـقْتُمْ நீங்கள் சேர்ப்பித்தீர்கள் بِهٖ அவனுடன் شُرَكَآءَ இணைகளாக كَلَّا ؕ ஒருக்காலும் முடியாது بَلْ மாறாக هُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
34:27. குல் அரூனியல் லதீன அல்ஹக்தும் Bபிஹீ ஷுரகா'அ கல்லா; Bபல் ஹுவல் லாஹுல் 'அZஜீZஜுல் ஹகீம்
34:27. “அவனுக்கு இணையானவர்களென நீங்கள் சேர்த்தீர்களே அவர்களை எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! (அவனுக்கு எவருமே இணையில்லை.) அவனோ அல்லாஹ்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்” என்றும் சொல்லும்.
34:28
34:28 وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِيْرًا وَّنَذِيْرًا وَّلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
وَمَاۤ اَرْسَلْنٰكَ உம்மை நாம் அனுப்பவில்லை اِلَّا தவிர كَآفَّةً அனைவருக்கும் لِّلنَّاسِ மக்கள் بَشِيْرًا நற்செய்தி சொல்பவராக(வும்) وَّنَذِيْرًا எச்சரிப்பவராகவும் وَّلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
34:28. வ மா அர்ஸல்னாக இல்லா காFப்Fபதல் லின்னாஸி Bபஷீர(ன்)வ் வ னதீர(ன்)வ் வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
34:28. இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
34:29
34:29 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ கூறுகின்றார்கள் مَتٰى எப்போது هٰذَا இந்த الْوَعْدُ வாக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
34:29. வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
34:29. இன்னும, அவர்கள் கூறுகிறார்கள்: “உண்மையாளராக நீங்கள் இருப்பின் (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்)?” என்று.
34:30
34:30 قُلْ لَّـكُمْ مِّيْعَادُ يَوْمٍ لَّا تَسْتَاْخِرُوْنَ عَنْهُ سَاعَةً وَّلَا تَسْتَقْدِمُوْنَ
قُلْ கூறுவீராக! لَّـكُمْ உங்களுக்கு مِّيْعَادُ வாக்களிக்கப்பட்ட يَوْمٍ ஒரு நாள் لَّا تَسْتَاْخِرُوْنَ நீங்கள் பிந்த(வும்) மாட்டீர்கள் عَنْهُ அதை விட்டும் سَاعَةً சிறிது நேரம் وَّلَا تَسْتَقْدِمُوْنَ‏ முந்தவும் மாட்டீர்கள்
34:30. குல் லகும் மீ'ஆது யவ்மில் லா தஸ்த'கிரூன 'அன்ஹு ஸா'அத(ன்)வ் வலா தஸ்தக்திமூன்
34:30. “(அந்த வாக்கு நிறைவேறுவதற்கு) உங்களுக்கு ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டீர்கள், முந்தவும் மாட்டீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  
34:31
34:31 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ نُّؤْمِنَ بِهٰذَا الْقُرْاٰنِ وَلَا بِالَّذِىْ بَيْنَ يَدَيْهِؕ وَلَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ مَوْقُوْفُوْنَ عِنْدَ رَبِّهِمْ ۖۚ يَرْجِعُ بَعْضُهُمْ اِلٰى بَعْضِ اۨلْقَوْلَ‌ۚ يَقُوْلُ الَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا لَوْلَاۤ اَنْـتُمْ لَـكُـنَّا مُؤْمِنِيْنَ‏
وَقَالَ கூறினார்கள் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்கள் لَنْ نُّؤْمِنَ நாங்கள் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம் بِهٰذَا الْقُرْاٰنِ இந்த குர்ஆனை(யும்) وَلَا بِالَّذِىْ بَيْنَ يَدَيْهِؕ இதற்கு முன்னுள்ளதையும் وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذِ சமயத்தை الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் مَوْقُوْفُوْنَ நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் عِنْدَ رَبِّهِمْ ۖۚ தங்கள் இறைவன் முன்னால் يَرْجِعُ எதிர்த்துப் பேசுவார்(கள்) بَعْضُهُمْ அவர்களில் சிலர் اِلٰى بَعْضِ சிலரிடம் اۨلْقَوْلَ‌ۚ பேசுவது يَقُوْلُ கூறுவார்கள் الَّذِيْنَ اسْتُضْعِفُوْا பலவீனர்கள் لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا பெருமை அடித்தவர்களுக்கு لَوْلَاۤ اَنْـتُمْ நீங்கள் இல்லை என்றால் لَـكُـنَّا நாங்கள் ஆகியிருப்போம் مُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
34:31. வ காலல் லதீன கFபரூ லன் னு'மின Bபிஹாதல் குர்'ஆனி வலா Bபில்லதீ Bபய்ன யதய்ஹ்; வ லவ் தரா இதிள் ளாலிமூன மவ்கூFபூன 'இன்த ரBப்Bபிஹிம் யர்ஜி'உ Bபஃளுஹும் இலா Bபஃளினில் கவ்ல யகூலுல் லதீனஸ் துள்'இFபூ லில்லதீனஸ் தக்Bபரூ லவ் லா அன்தும் லகுன்னா மு'மினீன்
34:31. “இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்” என்று காஃபிரானவர்கள் கூறுகிறார்கள்; இந்த அநியாயக் காரார்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது பேச்சைத் திருப்பி பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, “நீங்கள் இல்லாதிருந்திருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்” என்று கூறுவார்கள்.
34:32
34:32 قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْۤا اَنَحْنُ صَدَدْنٰكُمْ عَنِ الْهُدٰى بَعْدَ اِذْ جَآءَكُمْ بَلْ كُنْتُمْ مُّجْرِمِيْنَ‏
قَالَ கூறுவார்கள் الَّذِيْنَ اسْتَكْبَرُوْا பெருமை அடித்தவர்கள் لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْۤا பலவீனர்களுக்கு اَنَحْنُ நாங்களா? صَدَدْنٰكُمْ உங்களை தடுத்தோம் عَنِ الْهُدٰى நேர்வழியை விட்டும் بَعْدَ اِذْ جَآءَ வந்த பின்னர் كُمْ உங்களிடம் بَلْ மாறாக كُنْتُمْ நீங்கள்தான் இருந்தீர்கள் مُّجْرِمِيْنَ‏ குற்றவாளிகளாக
34:32. காலல் லதீனஸ் தக்Bபரூ லில்லதீனஸ் துள்'இFபூ அனஹ்னு ஸதத்னாகும் 'அனில் ஹுதா Bபஃத இத் ஜா'அகும் Bபல் குன்தும் முஜ்ரிமீன்
34:32. பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்களிடம், “உங்களிடம் நேர்வழி வந்தபின், அதை விட்டும் உங்களை நாங்களா தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் (நேர்வழி ஏற்காத) குற்றாவளிகளாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
34:33
34:33 وَقَالَ الَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا بَلْ مَكْرُ الَّيْلِ وَ النَّهَارِ اِذْ تَاْمُرُوْنَـنَاۤ اَنْ نَّـكْفُرَ بِاللّٰهِ وَنَجْعَلَ لَهٗۤ اَنْدَادًا ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ؕ وَجَعَلْنَا الْاَغْلٰلَ فِىْۤ اَعْنَاقِ الَّذِيْنَ كَفَرُوْا ؕ هَلْ يُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
وَقَالَ கூறுவார்கள் الَّذِيْنَ اسْتُضْعِفُوْا பலவீனர்கள் لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا பெருமை அடித்தவர்களுக்கு بَلْ மாறாக مَكْرُ சூழ்ச்சியாகும் الَّيْلِ இரவிலும் وَ النَّهَارِ பகலிலும் اِذْ تَاْمُرُوْنَـنَاۤ நீங்கள் எங்களை ஏவிய சமயத்தை நினைவு கூருங்கள் اَنْ نَّـكْفُرَ நாங்கள் நிராகரிப்பதற்கு(ம்) بِاللّٰهِ அல்லாஹ்வை وَنَجْعَلَ நாங்கள்ஏற்படுத்துவதற்கும் لَهٗۤ அவனுக்கு اَنْدَادًا ؕ இணைகளை وَاَسَرُّوا இன்னும் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் النَّدَامَةَ துக்கத்தை لَمَّا رَاَوُا அவர்கள் கண்ணால் காணும்போது الْعَذَابَ ؕ வேதனையை وَجَعَلْنَا நாம் ஆக்குவோம் الْاَغْلٰلَ (சங்கிலி)விலங்குகளை فِىْۤ اَعْنَاقِ கழுத்துகளில் الَّذِيْنَ كَفَرُوْا ؕ நிராகரித்தவர்களின் هَلْ يُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவார்களா? اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ தவிர/அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கே
34:33. வ காலல் லதீனஸ்துள்'இFபூ லில்லதீனஸ் தக்Bபரூ Bபல் மக்ருல் லய்லி வன்னஹாரி இத் த'முரூனனா அன் னக்Fபுர Bபில்லாஹி வ னஜ்'அல லஹூ அன்தாதா; வ அஸர்ருன் னதாமத லம்மா ர அவுல் 'அதாBப்; வ ஜ'அல்னல் அக்லால Fபீ அஃனாகில் லதீன கFபரூ; ஹல் யுஜ்Zஜவ்ன இல்லா மா கானூ யஃமலூன்
34:33. அதற்கு பலஹீனர்களாகக் கருதப் பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், “அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்” என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டுவிடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா?
34:34
34:34 وَمَاۤ اَرْسَلْنَا فِىْ قَرْيَةٍ مِّنْ نَّذِيْرٍ اِلَّا قَالَ مُتْـرَفُوْهَاۤ ۙاِنَّا بِمَاۤ اُرْسِلْـتُمْ بِهٖ كٰفِرُوْنَ‏
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை فِىْ قَرْيَةٍ ஓர் ஊரில் مِّنْ نَّذِيْرٍ எச்சரிப்பாளரை اِلَّا தவிர قَالَ கூறியே مُتْـرَفُوْهَاۤ அதன் சுகவாசிகள் ۙاِنَّا நிச்சயமாக நாங்கள் بِمَاۤ எதைக்கொண்டு اُرْسِلْـتُمْ நீங்கள் அனுப்பப்பட்டீர்கள் بِهٖ அதை كٰفِرُوْنَ‏ நிராகரிக்கின்றோம்
34:34. வ மா அர்ஸல்னா' Fபீ கர்யதின் மின் னதீரின் இல்லா கால முத்ரFபூஹா இன்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ காFபிரூன்
34:34. அன்றியும் அச்சமூட்டி எச்சரிப்போரை நாம் (எந்த) ஓர் ஊருக்கு அனுப்பிய போதும், அங்கிருந்த செல்வந்தர்கள்; “நிச்சயமாக நாங்கள் நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிராகரிக்கின்றோம்” என்று கூறாமல் இருக்கவில்லை.
34:35
34:35 وَ قَالُوْا نَحْنُ اَكْثَرُ اَمْوَالًا وَّاَوْلَادًا ۙ وَّمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ‏
وَ قَالُوْا அவர்கள் கூறினர் نَحْنُ நாங்கள் اَكْثَرُ அதிகமானவர்கள் اَمْوَالًا செல்வங்களாலும் وَّاَوْلَادًا ۙ பிள்ளைகளாலும் وَّمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ‏ ஆகவே, நாங்கள் மறுமையிலும் அறவே தண்டிக்கப்பட மாட்டோம்.
34:35. வ காலூ னஹ்னு அக்தரு அம்வால(ன்)வ் வ அவ்லாத(ன்)வ் வமா னஹ்னு Bபிமு 'அத்தBபீன்
34:35. இன்னும்: “நாங்கள் செல்வங்களாலும் மக்களாலும் மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்” என்றும் கூறுகிறார்கள்.
34:36
34:36 قُلْ اِنَّ رَبِّىْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
قُلْ கூறுவீராக! اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் يَبْسُطُ விசாலமாக தருகின்றான் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِمَنْ يَّشَآءُ அவன் நாடுகின்றவர்களுக்கு وَيَقْدِرُ இன்னும் சுருக்கி கொடுக்கின்றான் وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
34:36. குல் இன்ன ரBப்Bபீ யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திரு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
34:36. “நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  
34:37
34:37 وَمَاۤ اَمْوَالُـكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ بِالَّتِىْ تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفٰٓى اِلَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَاُولٰٓٮِٕكَ لَهُمْ جَزَآءُ الضِّعْفِ بِمَا عَمِلُوْا وَهُمْ فِى الْغُرُفٰتِ اٰمِنُوْنَ‏
وَمَاۤ اَمْوَالُـكُمْ உங்கள் செல்வங்கள் இல்லை وَلَاۤ اَوْلَادُكُمْ இன்னும் உங்கள் பிள்ளைகள் بِالَّتِىْ تُقَرِّبُكُمْ உங்களை நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாக عِنْدَنَا எங்களிடம் زُلْفٰٓى நெருக்கமாக اِلَّا எனினும் مَنْ எவர்கள் اٰمَنَ நம்பிக்கை கொண்டு وَعَمِلَ செய்வார்களோ صَالِحًـا நன்மையை فَاُولٰٓٮِٕكَ لَهُمْ அவர்களுக்கு உண்டு جَزَآءُ கூலி الضِّعْفِ இரு மடங்கு بِمَا عَمِلُوْا அவர்கள் செய்ததற்கு பகரமாக وَهُمْ அவர்கள் فِى الْغُرُفٰتِ அறைகளில் اٰمِنُوْنَ‏ நிம்மதியாக
34:37. வ மா அம்வாலுகும் வ லா அவ்லாதுகும் Bபில்லதீ துகர்ரிBபுகும் 'இன்தனா Zஜுல்Fபா இல்லா மன் ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப உலா'இக லஹும் ஜZஜா'உள் ளிஃFபி Bபிமா 'அமிலூ வ ஹும் Fபில் குருFபாதி ஆமினூன்
34:37. இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்.
34:38
34:38 وَ الَّذِيْنَ يَسْعَوْنَ فِىْۤ اٰيٰتِنَا مُعٰجِزِيْنَ اُولٰٓٮِٕكَ فِى الْعَذَابِ مُحْضَرُوْنَ‏
وَ الَّذِيْنَ எவர்கள் يَسْعَوْنَ முயல்வார்களோ فِىْۤ اٰيٰتِنَا நமது வசனங்களில் مُعٰجِزِيْنَ பலவீனப்படுத்த اُولٰٓٮِٕكَ அவர்கள் فِى الْعَذَابِ வேதனைக்கு مُحْضَرُوْنَ‏ கொண்டு வரப்படுவார்கள்
34:38. வல்லதீன யஸ்'அவ்ன Fபீ ஆயாதினா மு'ஆஜிZஜீன உலா'இக Fபில்'அதாBபி முஹ்ளரூன்
34:38. அன்றியும், எவர்கள் நம்முடைய வசனங்களிலே தோல்வியை உண்டாக்க முயல்கிறார்களோ, அவர்கள் வேதனையில் கொண்டு வரப்படுவார்கள்.
34:39
34:39 قُلْ اِنَّ رَبِّىْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ ؕ وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ شَىْءٍ فَهُوَ يُخْلِفُهٗ ۚ وَهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏
قُلْ கூறுவீராக! اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் يَبْسُطُ விசாலமாக்குகின்றான் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு مِنْ عِبَادِهٖ தனது அடியார்களில் وَيَقْدِرُ இன்னும் சுருக்கி விடுகின்றான் لَهٗ ؕ அவனுக்கு وَمَاۤ اَنْفَقْتُمْ நீங்கள் தர்மம் செய்தாலும் مِّنْ شَىْءٍ எதை فَهُوَ அவன் يُخْلِفُهٗ ۚ அதற்கு பகரத்தை ஏற்படுத்துவான் وَهُوَ அவன் خَيْرُ மிகச் சிறந்தவன் الرّٰزِقِيْنَ‏ உணவளிப்பவர்களில்
34:39. குல் இன்ன ரBப்Bபீ யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ மின் 'இBபாதிஹீ வ யக்திரு லஹ்; வ மா அன்Fபக்தும் மின் ஷய்'இன் Fபஹுவ யுக்லிFபுஹூ வ ஹுவ கய்ருர் ராZஜிகீன்
34:39. “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறும்.
34:40
34:40 وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ يَقُوْلُ لِلْمَلٰٓٮِٕكَةِ اَهٰٓؤُلَاۤءِ اِيَّاكُمْ كَانُوْا يَعْبُدُوْنَ‏
وَيَوْمَ يَحْشُرُ அவன் ஒன்று திரட்டும் நாளில் هُمْ அவர்கள் جَمِيْعًا அனைவரையும் ثُمَّ பிறகு يَقُوْلُ அவன் கூறுவான் لِلْمَلٰٓٮِٕكَةِ வானவர்களுக்கு اَهٰٓؤُلَاۤءِ ?/இவர்கள் اِيَّاكُمْ உங்களை كَانُوْا يَعْبُدُوْنَ‏ வணங்கிக் கொண்டிருந்தார்கள்
34:40. வ யவ்ம யஹ்ஷுருஹும் ஜமீ'அன் தும்ம யகூலு லில்மலா'இகதி அ-ஹா'உலா'இ இய்யாகும் கானூ யஃBபுதூன்
34:40. (மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்” என்று (அல்லாஹ்) கேட்பான்.
34:41
34:41 قَالُوْا سُبْحٰنَكَ اَنْتَ وَلِيُّنَا مِنْ دُوْنِهِمْۚ بَلْ كَانُوْا يَعْبُدُوْنَ الْجِنَّ ۚ اَكْثَرُهُمْ بِهِمْ مُّؤْمِنُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் سُبْحٰنَكَ நீ மகா தூயவன் اَنْتَ நீதான் وَلِيُّنَا எங்கள் பாதுகாவலன் مِنْ دُوْنِهِمْۚ அவர்கள் இன்றி بَلْ كَانُوْا يَعْبُدُوْنَ மாறாக/வணங்கிக் கொண்டிருந்தனர் الْجِنَّ ۚ ஜின்களை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் بِهِمْ அவர்களைத்தான் مُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொண்டவர்கள்
34:41. காலூ ஸுBப்ஹானக அன்த வலிய்யுனா மின் தூனிஹிம் Bபல் கானூ யஃBபுதூனல் ஜின்ன அக்தருஹும் Bபிஹிம் மு'மினூன்
34:41. (இதற்கு மலக்குகள்:) “நீ மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர்(ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்” என்று கூறுவார்கள்.
34:42
34:42 فَالْيَوْمَ لَا يَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ نَّفْعًا وَّلَا ضَرًّا ؕ وَنَـقُوْلُ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّتِىْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏
فَالْيَوْمَ இன்றைய தினம் لَا يَمْلِكُ உரிமை பெறமாட்டார் بَعْضُكُمْ உங்களில் சிலர் لِبَعْضٍ சிலருக்கு نَّفْعًا நன்மைசெய்வதற்கோ وَّلَا ضَرًّا ؕ தீமை செய்வதற்கோ وَنَـقُوْلُ நாம் கூறுவோம் لِلَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்களுக்கு ذُوْقُوْا நீங்கள் சுவையுங்கள் عَذَابَ النَّارِ நரக வேதனையை الَّتِىْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏ நீங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்த
34:42. Fபல் யவ்ம லா யம்லிகு Bபஃளுகும் லிBபஃளின் னFப்'அ(ன்)வ் வலா ளர்ரா; வ னகூலு லில் லதீன ளலமூ தூகூ 'அதாBபன் னாரில் லதீ குன்தும் Bபிஹா துகத்திBபூன்
34:42. “இன்றைய தினம், உங்களில் சிலர் (உங்களில் மற்றும்) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்யச் சக்தியற்றவர்களாவீர்; நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அந்(நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள் என்றும் அநியாயம் செய்தார்களே அவர்களிடம்” நாம் கூறுவோம்.
34:43
34:43 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا رَجُلٌ يُّرِيْدُ اَنْ يَّصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ اٰبَآؤُكُمْ‌ ۚ وَقَالُوْا مَا هٰذَاۤ اِلَّاۤ اِفْكٌ مُّفْتَـرً ىؕ وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏
وَاِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் முன் اٰيٰتُنَا நமது வசனங்கள் بَيِّنٰتٍ தெளிவான قَالُوْا அவர்கள் கூறினர் مَا هٰذَاۤ இவர் இல்லை اِلَّا தவிர رَجُلٌ ஓர் ஆடவரே يُّرِيْدُ நாடுகின்றனர் اَنْ يَّصُدَّكُمْ இவர் உங்களைத் தடுக்க عَمَّا كَانَ يَعْبُدُ வணங்கிக்கொண்டிருந்தவற்றை விட்டும் اٰبَآؤُ மூதாதைகள் كُمْ‌ ۚ உங்கள் وَقَالُوْا இன்னும் அவர்கள்கூறினர் مَا هٰذَاۤ இது இல்லை اِلَّاۤ தவிர اِفْكٌ பொய் مُّفْتَـرً ىؕ இட்டுக்கட்டப்பட்ட وَقَالَ இன்னும் கூறினர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلْحَقِّ சத்தியம் لَمَّا جَآءَ வந்த போது هُمْ ۙ தங்களிடம் اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا தவிர سِحْرٌ சூனியமே مُّبِيْنٌ‏ தெளிவான
34:43. வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலூ மா ஹாதா இல்லா ரஜுலு(ன்)ய் யுரீது அய்-யஸுத்தகும் 'அம்மா கான யஃBபுது ஆBபா'உகும் வ காலூ மா ஹாதா இல்லா இFப்கும் முFப்தரா; வ காலல் லதீன கFபரூ லில்ஹக்கி லம்மா ஜா'அஹும் இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
34:43. நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை; உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் “இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்: திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, “இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
34:44
34:44 وَمَاۤ اٰتَيْنٰهُمْ مِّنْ كُتُبٍ يَّدْرُسُوْنَهَا وَمَاۤ اَرْسَلْنَاۤ اِلَيْهِمْ قَبْلَكَ مِنْ نَّذِيْرٍؕ‏
وَمَاۤ اٰتَيْنٰهُمْ அவர்களுக்கு நாம் கொடுத்ததில்லை مِّنْ كُتُبٍ வேதங்களை يَّدْرُسُوْنَهَا அவர்கள் அவற்றை படிக்கின்றனர் وَمَاۤ اَرْسَلْنَاۤ நாம் அனுப்பியதில்லை اِلَيْهِمْ அவர்களிடம் قَبْلَكَ உமக்கு முன்னர் مِنْ نَّذِيْرٍؕ‏ எச்சரிப்பவர் எவரையும்
34:44. வ மா ஆதய்னாஹும் மின் குதுBபி(ன்)ய் யத்ருஸூனஹா வ மா அர்ஸல்னா இலய்ஹிம் கBப்லக மின் னதீர்
34:44. எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.
34:45
34:45 وَكَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۙ وَمَا بَلَـغُوْا مِعْشَارَ مَاۤ اٰتَيْنٰهُمْ فَكَذَّبُوْا رُسُلِىْ فَكَيْفَ كَانَ نَكِيْرِ
وَكَذَّبَ பொய்ப்பித்தனர் الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۙ இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் وَمَا بَلَـغُوْا அடையவில்லை مِعْشَارَ مَاۤ اٰتَيْنٰهُمْ அவர்களுக்கு நாம் கொடுத்ததில் பத்தில் ஒன்றை(க்கூட) فَكَذَّبُوْا (இருந்தும்) அவர்கள் பொய்ப்பித்தனர் رُسُلِىْ எனது தூதர்களை فَكَيْفَ எப்படி كَانَ இருந்தது نَكِيْرِ‏ எனது மாற்றம்
34:45. வ கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் வமா Bபலகூ மிஃஷார மா ஆதய்னாஹும் Fபகத்தBபூ ருஸுலீ; Fபகய்Fப கான னகீர்
34:45. மேலும் இவர்களுக்கு முன்னிருந்த (ஏனைய சமூகத்த)வர்களும் (இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை; ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூறட்டும்)
34:46
34:46 قُلْ اِنَّمَاۤ اَعِظُكُمْ بِوَاحِدَةٍ ۚ اَنْ تَقُوْمُوْا لِلّٰهِ مَثْنٰى وَفُرَادٰى ثُمَّ تَتَفَكَّرُوْا مَا بِصَاحِبِكُمْ مِّنْ جِنَّةٍ ؕ اِنْ هُوَ اِلَّا نَذِيْرٌ لَّـكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيْدٍ‏
قُلْ கூறுவீராக! اِنَّمَاۤ اَعِظُكُمْ நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் بِوَاحِدَةٍ ۚ ஒன்றே ஒன்றைத்தான் اَنْ تَقُوْمُوْا நீங்கள் நில்லுங்கள் لِلّٰهِ அல்லாஹ்விற்காக مَثْنٰى இருவர் இருவராக وَفُرَادٰى இன்னும் ஒருவர் ஒருவராக ثُمَّ பிறகு تَتَفَكَّرُوْا சிந்தியுங்கள் مَا بِصَاحِبِكُمْ உங்கள் இந்த தோழருக்கு அறவே இல்லை مِّنْ جِنَّةٍ ؕ பைத்தியம் اِنْ هُوَ அவர் இல்லை اِلَّا தவிர نَذِيْرٌ எச்சரிப்பவரே لَّـكُمْ உங்களுக்கு بَيْنَ يَدَىْ முன்னர் عَذَابٍ வேதனைக்கு شَدِيْدٍ‏ கடுமையான(து)
34:46. குல் இன்னமா அ'இளுகும் Bபிவாஹிததின் அன் தகூமூ லில்லாஹி மத்னா வ Fபுராதா தும்ம ததFபக்கரூ; மா BபிஸாஹிBபிகும் மின் ஜின்னஹ்; இன் ஹுவ இல்லா னதீருல் லகும் Bபய்ன யதய் 'அதாBபின் ஷதீத்
34:46. “நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் நண்பருக்கு பைத்தியம் எதுவுமில்லை; உங்களுக்குக் கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல் அவர் வேறில்லை.”
34:47
34:47 قُلْ مَا سَاَ لْـتُكُمْ مِّنْ اَجْرٍ فَهُوَ لَـكُمْ ؕ اِنْ اَجْرِىَ اِلَّا عَلَى اللّٰهِ ۚ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏
قُلْ கூறுவீராக! مَا سَاَ لْـتُكُمْ எதை நான் உங்களிடம் கேட்டேனோ مِّنْ اَجْرٍ கூலியாக فَهُوَ لَـكُمْ ؕ அது உங்களுக்கே اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلَى மீதே اللّٰهِ ۚ அல்லாஹ்வின் وَهُوَ அவன்தான் عَلٰى كُلِّ شَىْءٍ அனைத்தின் மீதும் شَهِيْدٌ‏ சாட்சியாளன்
34:47. குல் மா ஸ-அல்துகும் மின் அஜ்ரின் Fபஹுவ லகும் இன் அஜ்ரிய இல்லா 'அலல் லாஹி வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீத்
34:47. கூறுவீராக: “நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை; அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை -அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.“
34:48
34:48 قُلْ اِنَّ رَبِّىْ يَقْذِفُ بِالْحَـقِّ‌ۚ عَلَّامُ الْغُيُوْبِ‏
قُلْ கூறுவீராக! اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் يَقْذِفُ செய்தியை இறக்குகின்றான் بِالْحَـقِّ‌ۚ உண்மையான عَلَّامُ மிக அறிந்தவன் الْغُيُوْبِ‏ மறைவான விஷயங்கள் அனைத்தையும்
34:48. குல் இன்ன ரBப்Bபீ யக்திFபு Bபில்ஹக்க் 'அல்லாமுல் குயூBப்
34:48. கூறுவீராக: “என்னுடைய இறைவன் நிச்சயமாக(ப் பொய்மையை அழித்து) சத்தியத்தை மேலேற்றுகிறான்; மறைவானவற்றையெல்லாம் அவன் நன்கறிந்தவன்.”
34:49
34:49 قُلْ جَآءَ الْحَـقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيْدُ‏
قُلْ கூறுவீராக! جَآءَ வந்துவிட்டது الْحَـقُّ உண்மை وَمَا يُبْدِئُ புதிதாக படைக்க(வும்) மாட்டான் الْبَاطِلُ பொய்யன் وَمَا يُعِيْدُ‏ மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டான்
34:49. குல் ஜா'அல் ஹக்கு வமா யுBப்தி'உல் Bபாதிலு வமா யு'ஈத்
34:49. கூறுவீராக; “சத்தியம் வந்து விட்டது - அன்றியும் பொய் எதையும் புதிதாகச் செய்வதுமில்லை; இனிச்செய்யப் போவதுமில்லை.”
34:50
34:50 قُلْ اِنْ ضَلَلْتُ فَاِنَّمَاۤ اَضِلُّ عَلٰى نَـفْسِىْ ۚ وَاِنِ اهْتَدَيْتُ فَبِمَا يُوْحِىْۤ اِلَىَّ رَبِّىْ ؕ اِنَّهٗ سَمِيْعٌ قَرِيْبٌ‏
قُلْ கூறுவீராக! اِنْ ضَلَلْتُ நான் வழிகெட்டால் فَاِنَّمَاۤ اَضِلُّ நான் வழிகெடுவதெல்லாம் عَلٰى نَـفْسِىْ ۚ எனக்குத்தான் தீங்காக அமையும் وَاِنِ اهْتَدَيْتُ நான் நேர்வழி பெற்றால் فَبِمَا يُوْحِىْۤ வஹீ அறிவிக்கின்ற காரணத்தால் ஆகும் اِلَىَّ எனக்கு رَبِّىْ ؕ என் இறைவன் اِنَّهٗ நிச்சயமாக அவன் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் قَرِيْبٌ‏ மிக சமீபமானவன்
34:50. குல் இன் ளலல்து Fப-இன்னமா அளில்லு 'அலா னFப்ஸீ வ இனிஹ்-ததய்து FபBபிமா யூஹீ இலய்ய ரBப்Bபீ; இன்னஹூ ஸமீ'உன் கரீBப்
34:50. கூறுவீராக: “நான் வழிகெடுவேனாயின்; வழிகேடு எனக்கே நஷ்டமாகும்; நான் நேர்வழியில் செல்வேனாயின் (அது) என்னுடைய இறைவன் எனக்கு “வஹீ” மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும்; நிச்சயமாக அவன் (மிகச்) செவியேற்பவன். (மிக) நெருங்கியிருப்பவன்.”
34:51
34:51 وَلَوْ تَرٰٓى اِذْ فَزِعُوْا فَلَا فَوْتَ وَاُخِذُوْا مِنْ مَّكَانٍ قَرِيْبٍۙ‏
وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذْ فَزِعُوْا அவர்கள் திடுக்கிடும்போது فَلَا فَوْتَ தப்பிக்கவே முடியாது وَاُخِذُوْا அவர்கள் பிடிக்கப்படுவார்கள் مِنْ مَّكَانٍ இடத்திலிருந்து قَرِيْبٍۙ‏ வெகு சமீபமான
34:51. வ லவ் தரா இத் FபZஜி'ஊ Fபலா Fபவ்த வ உகிதூ மின் மகானின் கரீBப்
34:51. இன்னும் (காஃபிர்கள் மறுமையில்) பயத்தால் நடுங்குவதை நீர் காண்பீராயின்: அவர்களுக்குத் தப்பியோட வழியுமிராது; இன்னும் சமீபமான இடத்திலிருந்தே அவர்கள் பிடிபடுவார்கள்.
34:52
34:52 وَّقَالُـوْۤا اٰمَنَّا بِهٖ‌ ۚ وَاَنّٰى لَهُمُ التَّنَاوُشُ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍ ۖۚ‏
وَّقَالُـوْۤا அவர்கள் கூறுவார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِهٖ‌ ۚ அவனை وَاَنّٰى எங்கே لَهُمُ அவர்களுக்கு சாத்தியமாகும் التَّنَاوُشُ அடைவது مِنْ مَّكَانٍۢ இடத்திலிருந்து بَعِيْدٍ ۖۚ‏ தூரமான
34:52. வ காலூ ஆமன்னா Bபிஹீ வ அன்னா லஹுமுத் தனாவுஷு மின் மகானின் Bப'ஈத்
34:52. மேலும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (இப்போது சத்தியத்தின் மீது) ஈமான் கொள்கிறோம்” என்று; ஆனால் (அமல் செய்யவேண்டிய இடத்தை விட்டும்) வெகு தூரத்திலிருந்து கொண்டு அவர்கள் எவ்வாறு (ஈமானை எளிதில்) அடைய முடியும்?
34:53
34:53 وَّقَدْ كَفَرُوْا بِهٖ مِنْ قَبْلُۚ وَيَقْذِفُوْنَ بِالْغَيْبِ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍ‌‏
وَّقَدْ திட்டமாக كَفَرُوْا மறுத்து விட்டனர் بِهٖ இதை مِنْ قَبْلُۚ முன்னர் وَيَقْذِفُوْنَ அவர்கள் அதிகம் பேசுகின்றனர் بِالْغَيْبِ கற்பனையாக مِنْ مَّكَانٍۢ இடத்திலிருந்து بَعِيْدٍ‌‏ வெகு தூரமான
34:53. வ கத் கFபரூ Bபிஹீ மின் கBப்லு வ யக்திFபூன Bபில்கய்Bபி மின் மகானின் Bப'ஈத்
34:53. ஆனால், இதற்கு முன்னர் அவர்கள் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டும், மறைவாய் உள்ளவைப்பற்றி வெகு தூரத்திலிருந்தவாறு (வெற்று யூகங்களை) எறிந்து கொண்டுமிருந்தார்கள்.
34:54
34:54 وَحِيْلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُوْنَ كَمَا فُعِلَ بِاَشْيَاعِهِمْ مِّنْ قَبْلُؕ اِنَّهُمْ كَانُوْا فِىْ شَكٍّ مُّرِيْبٍ
وَحِيْلَ தடுக்கப்பட்டுவிடும் بَيْنَهُمْ அவர்களுக்கு இடையிலும் وَبَيْنَ இடையிலும் مَا يَشْتَهُوْنَ அவர்கள் விரும்புவதற்கு كَمَا போன்று فُعِلَ செய்யப்பட்டதை بِاَشْيَاعِهِمْ அவர்கள் கூட்டங்களுக்கு مِّنْ قَبْلُؕ இதற்கு முன்னர் اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் كَانُوْا இருந்தனர் فِىْ شَكٍّ சந்தேகத்தில்தான் مُّرِيْبٍ‏ பெரிய
34:54. வ ஹீல Bபய்னஹும் வ Bபய்ன மா யஷ்தஹூன கமா Fபு'இல Bபி-அஷ்யா'இஹிம் மின் கBப்ல்; இன்னஹும் கானூ Fபீ ஷக்கின் முரீBப்
34:54. மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்.