47. ஸூரத்து முஹம்மது(ஸல்)
மதனீ, வசனங்கள்: 38

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
47:1
47:1 اَلَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ اَضَلَّ اَعْمَالَهُمْ‏
اَلَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்து(விட்டனர்) وَصَدُّوْا இன்னும் தடுத்தார்களோ عَنْ سَبِيْلِ பாதையிலிருந்து اللّٰهِ அல்லாஹ்வின் اَضَلَّ வழிகெடுத்து விட்டான் اَعْمَالَهُمْ‏ அவர்களின் செயல்களை
47:1. அல்லதீன கFபரூ வ ஸத்தூ'அன் ஸBபீலில் லாஹி அளல்ல அஃமாலஹும்
47:1. எவர்கள் (சன்மார்க்கத்தை) நிராகரித்தும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மனிதர்களைத்) தடுத்தும் கொண்டிருந்தார்களோ, அவர்களுடைய செயல்களை (அல்லாஹ்) பயனில்லாமல் ஆக்கிவிட்டான்.
47:2
47:2 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاٰمَنُوْا بِمَا نُزِّلَ عَلٰى مُحَمَّدٍ وَّهُوَ الْحَقُّ مِنْ رَّبِّهِمْ‌ۙ كَفَّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَاَصْلَحَ بَالَهُمْ‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا الصّٰلِحٰتِ இன்னும் நன்மைகளை செய்தனர் وَاٰمَنُوْا இன்னும் நம்பிக்கை கொண்டார்கள் بِمَا نُزِّلَ இறக்கப்பட்டதை(யும்) عَلٰى مُحَمَّدٍ முஹம்மது நபியின் மீது وَّهُوَ அதுதான் الْحَقُّ உண்மையாகும் مِنْ رَّبِّهِمْ‌ۙ அவர்களின் இறைவனிடம் இருந்து வந்த كَفَّرَ போக்கிவிடுவான் عَنْهُمْ அவர்களை விட்டு سَيِّاٰتِهِمْ அவர்களின் பாவங்களை وَاَصْلَحَ இன்னும் சீர் செய்துவிடுவான் بَالَهُمْ‏ அவர்களின் காரியத்தை
47:2. வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ ஆமனூ Bபிமா னுZஜ்Zஜில 'அலா முஹம்மதி(ன்)வ்-வ ஹுவல் ஹக்கு மிர் ரBப்Bபிஹிம் கFப்Fபர 'அன்ஹும் ஸய்யிஆதிஹிம் வ அஸ்லஹ Bபாலஹும்
47:2. ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.
47:3
47:3 ذٰ لِكَ بِاَنَّ الَّذِيْنَ كَفَرُوْا اتَّبَعُوا الْبَاطِلَ وَاَنَّ الَّذِيْنَ اٰمَنُوا اتَّبَعُوا الْحَقَّ مِنْ رَّبِّهِمْ‌ؕ كَذٰلِكَ يَضْرِبُ اللّٰهُ لِلنَّاسِ اَمْثَالَهُمْ‏
ذٰ لِكَ இது بِاَنَّ ஏனெனில் நிச்சயமாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் اتَّبَعُوا பின்பற்றினர் الْبَاطِلَ பொய்யை وَاَنَّ நிச்சயமாக الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கை கொண்டவர்கள் اتَّبَعُوا பின்பற்றினார்கள் الْحَقَّ உண்மையை مِنْ رَّبِّهِمْ‌ؕ தங்கள் இறைவனிடமிருந்து كَذٰلِكَ இவ்வாறுதான் يَضْرِبُ விவரிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் لِلنَّاسِ மக்களுக்கு اَمْثَالَهُمْ‏ அவர்களுக்குரிய தன்மைகளை
47:3. தாலிக Bபி அன்னல் லதீன கFபருத் தBப'உல் Bபாதில வ அன்னல் லதீன ஆமனுத் தBப'உல் ஹக்க மிர் ரBப்Bபிஹிம்; கதாலிக யள்ரிBபுல் லாஹு லின்னாஸி அம்தாலஹும்
47:3. இது ஏனெனில்: நிராகரிப்போர் அசத்தியத்தையே நிச்சயமாகப் பின்பற்றுகிறார்கள்; நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ளதையே பின்பற்றுகிறார்கள் - இவ்வாறே மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்கள் நிலைமையை உவமானங்களா(கக் கூறி விள)க்குகிறான்.
47:4
47:4 فَاِذَا لَقِيْتُمُ الَّذِيْنَ كَفَرُوْا فَضَرْبَ الرِّقَابِ ؕ حَتّٰٓى اِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْ فَشُدُّوْا الْوَثَاقَ ۙ فَاِمَّا مَنًّۢا بَعْدُ وَاِمَّا فِدَآءً حَتّٰى تَضَعَ الْحَـرْبُ اَوْزَارَهَا ۛۚ  ذٰ لِكَ ‌ۛؕ وَلَوْ يَشَآءُ اللّٰهُ لَانْـتَصَرَ مِنْهُمْ  وَلٰـكِنْ لِّيَبْلُوَا۟ بَعْضَكُمْ بِبَعْضٍ‌ؕ وَالَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ فَلَنْ يُّضِلَّ اَعْمَالَهُمْ‏
فَاِذَا لَقِيْتُمُ நீங்கள் சந்தித்தால் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களை فَضَرْبَ வெட்டுங்கள்! الرِّقَابِ ؕ பிடரிகளை حَتّٰٓى இறுதியாக اِذَاۤ اَثْخَنْتُمُوْهُمْ அவர்களை நீங்கள் மிகைத்துவிட்டால் فَشُدُّوْا உறுதியாகக் கட்டுங்கள்! الْوَثَاقَ ۙ கயிறுகளில் فَاِمَّا ஒன்று مَنًّۢا உபகாரம் புரியுங்கள்! بَعْدُ அதற்குப் பின்னர் وَاِمَّا அல்லது فِدَآءً பிணைத்தொகை கொடுக்கட்டும்! حَتّٰى இறுதியாக تَضَعَ முடிக்கின்ற (வரை) الْحَـرْبُ போர் اَوْزَارَهَا ۛۚ அதன் சுமைகளை  ذٰ لِكَ ۛؕ இதுதான் وَلَوْ يَشَآءُ اللّٰهُ அல்லாஹ் நாடினால் لَانْـتَصَرَ பழிதீர்த்திருப்பான் مِنْهُمْ  அவர்களிடம் وَلٰـكِنْ என்றாலும் لِّيَبْلُوَا۟ அவன்சோதிப்பதற்காக بَعْضَكُمْ உங்களில் சிலரை بِبَعْضٍ‌ؕ சிலர் மூலமாக وَالَّذِيْنَ எவர்கள் قُتِلُوْا கொல்லப்பட்டார்களோ فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் فَلَنْ يُّضِلَّ வீணாக்கிவிட மாட்டான் اَعْمَالَهُمْ‏ அவர்களின் அமல்களை
47:4. Fப-இதா லகீதுமுல் லதீன கFபரூ Fபளர்Bபர் ரிகாBபி, ஹத்தா இதா அத்கன் துமூஹும் Fபஷுத்துல் வதாக, Fப இம்மா மன்ன்னம் Bபஃது வ இம்மா Fபிதா'அன் ஹத்தா தள'அல் ஹர்Bபு அவ்Zஜாரஹா; தாலிக வ லவ் யஷா'உல் லாஹு லன்தஸர மின்ஹும் வ லாகின் லி யBப்லுவ Bபஃளகும் Bபி Bபஃள்; வல்லதீன குதிலூ Fபீ ஸBபீலில் லாஹி Fபல(ன்)ய் யுளில்ல அஃமாலஹும்
47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.
47:5
47:5 سَيَهْدِيْهِمْ وَيُصْلِحُ بَالَهُمْۚ‏
سَيَهْدِيْهِمْ அவர்களுக்கு அவன் நேர்வழி காட்டுவான் وَيُصْلِحُ இன்னும் சீர் செய்வான் بَالَهُمْۚ‏ அவர்களின் காரியத்தை
47:5. ஸ-யஹ்தீஹிம் வ யுஸ்லிஹு Bபாலஹும்
47:5. அவன் அவர்களை நேர்வழியில் செலுத்துவான்; இன்னும், அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்தி விடுவான்.
47:6
47:6 وَيُدْخِلُهُمُ الْجَـنَّةَ عَرَّفَهَا لَهُمْ‏
وَيُدْخِلُهُمُ இன்னும் அவர்களை நுழைப்பான் الْجَـنَّةَ சொர்க்கத்தில் عَرَّفَهَا அதை காண்பித்துக் கொடுப்பான் لَهُمْ‏ அவர்களுக்கு
47:6. வ யுத்கிலுஹுமுல் ஜன்னத 'அர்ரFபஹா லஹும்
47:6. மேலும், அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவர்க்கத்தில் அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்.
47:7
47:7 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تَـنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِنْ تَـنْصُرُوا நீங்கள் உதவினால் اللّٰهَ அல்லாஹ்விற்கு يَنْصُرْ அவன் உதவுவான் كُمْ உங்களுக்கு وَيُثَبِّتْ இன்னும் உறுதிப்படுத்துவான் اَقْدَامَكُمْ‏ உங்கள் பாதங்களை
47:7. யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் தன்ஸுருல் லாஹ யன்ஸுர்கும் வ யுதBப்Bபித் அக்தாமகும்
47:7. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.
47:8
47:8 وَالَّذِيْنَ كَفَرُوْا فَتَعْسًا لَّهُمْ وَاَضَلَّ اَعْمَالَهُمْ‏
وَالَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்களோ فَتَعْسًا لَّهُمْ அவர்களுக்கு கேடு உண்டாகட்டும் وَاَضَلَّ இன்னும் அவன் வழிகேட்டில் விட்டு விடுவான் اَعْمَالَهُمْ‏ அவர்களின் செயல்களை
47:8. வல்லதீன கFபரூ Fபதஃ ஸல் லஹும் வ அளல்ல அஃமாலஹும்
47:8. அன்றியும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாகவும் ஆக்கிவிடுவான்.
47:9
47:9 ذٰلِكَ بِاَنَّهُمْ كَرِهُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ‏
ذٰلِكَ அது بِاَنَّهُمْ ஏனெனில், நிச்சயமாக كَرِهُوْا வெறுத்தார்கள் مَاۤ اَنْزَلَ இறக்கியதை اللّٰهُ அல்லாஹ் فَاَحْبَطَ ஆகவே, அவன் வீணாக்கிவிட்டான் اَعْمَالَهُمْ‏ அவர்களின் அமல்களை
47:9. தாலிக Bபி அன்னஹும் கரிஹூ மா அன்Zஜல் அல்லாஹு Fப அஹ்Bபத அஃமாலஹும்
47:9. ஏனெனில்: அல்லாஹ் இறக்கிய (வேதத்)தை, திட்டமாகவே அவர்கள் வெறுத்தார்கள்; ஆகவே, அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாக ஆக்கி விட்டான்.
47:10
47:10 اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ دَمَّرَ اللّٰهُ عَلَيْهِمْ وَلِلْكٰفِرِيْنَ اَمْثَالُهَا‏
اَفَلَمْ يَسِيْرُوْا அவர்கள் பயணித்து فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرُوْا பார்க்க வேண்டாமா? كَيْفَ எவ்வாறு كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் دَمَّرَ அழித்துவிட்டான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ அவர்களை وَلِلْكٰفِرِيْنَ இந்நிராகரிப்பாளர்களுக்கும் நிகழும் اَمْثَالُهَا‏ அதைப் போன்ற முடிவுகளே
47:10. அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fபயன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம்; தம்மரல் லாஹு 'அலய்ஹிம் வ லில்காFபிரீன அம்தாலுஹா
47:10. அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன்பு இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அல்லாஹ் அவர்களை அடியோடு அழித்து விட்டான், காஃபிர்களுக்கும் இவை போன்றவைதாம் (முடிவுகள்) உண்டு.
47:11
47:11 ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ مَوْلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَاَنَّ الْكٰفِرِيْنَ لَا مَوْلٰى لَهُمْ
ذٰ لِكَ بِاَنَّ ஏனெனில், நிச்சயமாக அது اللّٰهَ அல்லாஹ்தான் مَوْلَى எஜமானன் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களின் وَاَنَّ இன்னும் நிச்சயமாக الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்கள் لَا مَوْلٰى எஜமானன் இல்லை لَهُمْ‏ அவர்களுக்கு
47:11. தாலிக Bபி அன்னல் லாஹ மவ்லல் லதீன ஆமனூ வ அன்னல் காFபிரீன லா மவ்லா லஹும்
47:11. இது ஏனெனில்: அல்லாஹ் ஈமான் கொண்டவர்களுக்கு பாது காவலனாக இருக்கிறான்; அன்றியும் காஃபிர்களுக்குப் பாதுகாவலர் எவரும் இல்லை என்பதனால்தான்.
47:12
47:12 اِنَّ اللّٰهَ يُدْخِلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ ؕ وَالَّذِيْنَ كَفَرُوْا يَتَمَتَّعُوْنَ وَيَاْكُلُوْنَ كَمَا تَاْكُلُ الْاَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَّهُمْ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُدْخِلُ நுழைப்பான் الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ‌ ؕ ஆறுகள் وَالَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் يَتَمَتَّعُوْنَ இன்புறுகிறார்கள் وَيَاْكُلُوْنَ இன்னும் சாப்பிடுகிறார்கள் كَمَا போல் تَاْكُلُ சாப்பிடுவது الْاَنْعَامُ கால்நடைகள் وَالنَّارُ நரகம்தான் مَثْوًى தங்குமிடமாகும் لَّهُمْ‏ அவர்களுக்கு
47:12. இன்னல்-லாஹ யுத்கிலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வல்லதீன கFபரூ யதமத்த'ஊன வ ய'குலூன கமா த'குலுல் அன்'ஆமு வன் னாரு மத்வன் லஹும்
47:12. நிச்சயமாக அல்லாஹ்: எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைச் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்கிறான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; ஆனால் நிராகரிப்பவர்களோ (இவ்வுலக சுகங்களை) அனுபவித்துக் கொண்டும், மிருகங்கள் தீனி தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள். (நரக) நெருப்பே இவர்கள் தங்குமிடமாக இருக்கும்.
47:13
47:13 وَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ هِىَ اَشَدُّ قُوَّةً مِّنْ قَرْيَتِكَ الَّتِىْۤ اَخْرَجَتْكَ‌ۚ اَهْلَكْنٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ‏
وَكَاَيِّنْ எத்தனையோ مِّنْ قَرْيَةٍ ஊர் (மக்)கள் هِىَ அவை اَشَدُّ மிக உறுதியான(து) قُوَّةً பலத்தால் مِّنْ قَرْيَتِكَ உமது ஊரைவிட الَّتِىْۤ எது اَخْرَجَتْكَ‌ۚ உம்மை வெளியேற்றிய(து) اَهْلَكْنٰهُمْ நாம் அவர்களை அழித்தோம் فَلَا அறவே இல்லை نَاصِرَ உதவியாளர் لَهُمْ‏ அவர்களுக்கு
47:13. வ க அய்யிம் மின் கர்யதின் ஹிய அஷத்து குவ்வதம் மின் கர்யதிகல் லதீ அக்ரஜத்க அஹ்லக்னாஹும் Fபலா னாஸிர லஹும்
47:13. மேலும், (நபியே!) உம்முடைய ஊரை விட்டு உம்மை வெளியேற்றியவர்களை விட, எத்தனையோ ஊ(ரா)ர்கள் மிக்க பல முடையவர்களாக இருந்தார்கள். (அவர்கள் பாவத்தின் காரணமாக) அவர்களை நாம் அழித்து விட்டோம் - ஆகவே அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்கவில்லை.
47:14
47:14 اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُيِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ‏
اَفَمَنْ ஆவார்களா? كَانَ இருப்பவர்கள் عَلٰى بَيِّنَةٍ தெளிவான அத்தாட்சியில் مِّنْ رَّبِّهٖ தமது இறைவனின் كَمَنْ போன்று/எவர்களுக்கு زُيِّنَ அலங்கரிக்கப்பட்டது لَهٗ தமக்கு سُوْٓءُ கெட்ட عَمَلِهٖ தங்களது செயல்கள் وَاتَّبَعُوْۤا இன்னும் பின்பற்றுகின்றார்கள் اَهْوَآءَهُمْ‏ தங்கள் மன இச்சைகளை
47:14. அFபமன் கான 'அலா Bபய்யினதிம் மிர் ரBப்Bபிஹீ கமன் Zஜுய்யின லஹூ ஸூ'உ 'அமலிஹீ வத்தBப'ஊ அஹ்வா'அஹும்
47:14. எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஒப்பாவாரா?
47:15
47:15 مَثَلُ الْجَـنَّةِ الَّتِىْ وُعِدَ الْمُتَّقُوْنَ‌ؕ فِيْهَاۤ اَنْهٰرٌ مِّنْ مَّآءٍ غَيْرِ اٰسِنٍ‌ ۚ وَاَنْهٰرٌ مِّنْ لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهٗ ‌ۚ وَاَنْهٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِيْنَ ۚ وَاَنْهٰرٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّى‌ ؕ وَلَهُمْ فِيْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ وَمَغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ‌ؕ كَمَنْ هُوَ خَالِدٌ فِى النَّارِ وَسُقُوْا مَآءً حَمِيْمًا فَقَطَّعَ اَمْعَآءَهُمْ‏
مَثَلُ தன்மையாவது الْجَـنَّةِ சொர்க்கத்தின் الَّتِىْ எது وُعِدَ வாக்களிக்கப்பட்டது الْمُتَّقُوْنَ‌ؕ இறையச்ச முள்ளவர்களுக்கு فِيْهَاۤ அதில் اَنْهٰرٌ ஆறுகளும் مِّنْ مَّآءٍ தண்ணீரின் غَيْرِ اٰسِنٍ‌ ۚ துர் வாடை வீசாத وَاَنْهٰرٌ ஆறுகளும் مِّنْ لَّبَنٍ பாலின் لَّمْ يَتَغَيَّرْ மாறவில்லை طَعْمُهٗ ۚ அதன் ருசி وَاَنْهٰرٌ ஆறுகளும் مِّنْ خَمْرٍ மதுவின் لَّذَّةٍ ருசியான لِّلشّٰرِبِيْنَ ۚ அருந்துபவர்களுக்கு وَاَنْهٰرٌ ஆறுகளும் مِّنْ عَسَلٍ தேனின் مُّصَفًّى‌ ؕ தூய்மையான(து) وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு فِيْهَا அதில் مِنْ كُلِّ எல்லாவற்றிலிருந்து(ம்) الثَّمَرٰتِ கனிகள் وَمَغْفِرَةٌ மன்னிப்பும் مِّنْ رَّبِّهِمْ‌ؕ அவர்களின் இறைவனிடமிருந்து كَمَنْ هُوَ போன்று/எவர்(கள்)/ அவர்(கள்) خَالِدٌ நிரந்தரமானவர்(கள்) فِى النَّارِ நரகத்தில் وَسُقُوْا இன்னும் புகட்டப்படுவார்கள் مَآءً நீரை حَمِيْمًا கொதிக்கின்றது فَقَطَّعَ அது துண்டு துண்டாக ஆக்கிவிடும் اَمْعَآءَ குடல்களை هُمْ‏ அவர்களின்
47:15. மதலுல் ஜன்னதில் லதீ வு'இதல் முத்தகூன Fபீஹா அன்ஹாரும் மின் மா'இன் கய்ரி ஆஸினி(ன்)வ் வ அன்ஹாரும் மில் லBபனில் லம் யதகய்யர் தஃமுஹூ வ அன்ஹாரும் மின் கம்ரில் லத்ததின் லி ஷாரிBபீன வ அன்ஹாரும் மின் 'அஸலிம் முஸFப்Fப(ன்)வ் வ லஹும் Fபீஹா மின் குல்லித் தமராதி வ மக்Fபிரதும் மிர் ரBப்Bபிஹிம் கமன் ஹுவ காலிதுன் Fபின் னாரி வ ஸுகூ மா'அன் ஹமீமன் Fபகத்த'அ அம்'ஆ'அஹும்
47:15. பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
47:16
47:16 وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُ اِلَيْكَ‌ۚ حَتّٰٓى اِذَا خَرَجُوْا مِنْ عِنْدِكَ قَالُوْا لِلَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ مَاذَا قَالَ اٰنِفًا‌‌ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ طَبَعَ اللّٰهُ عَلٰى قُلُوْبِهِمْ وَ اتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ‏
وَمِنْهُمْ அவர்களில் உள்ளனர் مَّنْ يَّسْتَمِعُ செவி சாய்க்கின்றவர்களும் اِلَيْكَ‌ۚ உம் பக்கம் حَتّٰٓى இறுதியில் اِذَا خَرَجُوْا அவர்கள் வெளியே புறப்பட்டால் مِنْ عِنْدِكَ உம்மிடமிருந்து قَالُوْا கூறுகின்றனர் لِلَّذِيْنَ اُوْتُوا கொடுக்கப்பட்டவர்களிடம் الْعِلْمَ கல்வி مَاذَا என்ன قَالَ இவர் கூறினார் اٰنِفًا‌ சற்று நேரத்திற்கு முன்பு اُولٰٓٮِٕكَ இவர்கள்தான் الَّذِيْنَ எவர்கள் طَبَعَ முத்திரையிட்டு விட்டான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى قُلُوْبِهِمْ இவர்களின் உள்ளங்களில் وَ اتَّبَعُوْۤا இன்னும் இவர்கள் பின்பற்றினார்கள் اَهْوَآءَهُمْ‏ தங்கள் மன இச்சைகளை
47:16. வ மின்ஹும் மய் யஸ்தமி'உ இலய்க ஹத்தா இதா கரஜூ மின் 'இன்திக காலூ லில் லதீன ஊதுல் 'இல்ம மாதா கால ஆனிFபா; உலா'இகல் லதீன தBப'அல் லாஹு 'அலா குலூBபிஹிம் வத்தBப'ஊ அஹ்வா'அஹும்
47:16. இன்னும், அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும், எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து: “அவர் சற்று முன் என்ன கூறினார்?” என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்; இத்தகையோரின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள், தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.
47:17
47:17 وَالَّذِيْنَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَّاٰتٰٮهُمْ تَقْوٰٮهُمْ‏
وَالَّذِيْنَ எவர்கள் اهْتَدَوْا நேர்வழி பெற்றார்களோ زَادَهُمْ அவர்களுக்கு அதிகப்படுத்துவான் هُدًى நேர்வழியை وَّاٰتٰٮهُمْ இன்னும் , அவர்களுக்கு வழங்குவான் تَقْوٰٮهُمْ‏ அவர்களின் தக்வாவை
47:17. வல்லதீனஹ் ததவ் Zஜாதஹும் ஹுத(ன்)வ் வ ஆதாஹும் தக்வாஹும்
47:17. மேலும், எவர்கள் நேர்வழியில் செல்கிறார்களோ, அவர்களுடை நேர்வழியை (இன்னும்) அதிகப்படுத்தி, அவர்களுக்கு தக்வாவை - பயபக்தியை (இறைவன்) அளிக்கின்றான்.
47:18
47:18 فَهَلْ يَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِيَهُمْ بَغْتَةً ‌ ۚ فَقَدْ جَآءَ اَشْرَاطُهَا‌‌ ۚ فَاَنّٰى لَهُمْ اِذَا جَآءَتْهُمْ ذِكْرٰٮهُمْ‏
فَهَلْ يَنْظُرُوْنَ அவர்கள் எதிர்பார்க்கின்றார்களா? اِلَّا தவிர السَّاعَةَ மறுமை اَنْ تَاْتِيَهُمْ அவர்களிடம் வருவதை بَغْتَةً ۚ திடீரென فَقَدْ திட்டமாக جَآءَ வந்துவிட்டன اَشْرَاطُهَا‌ ۚ அதன் அடையாளங்கள் فَاَنّٰى எப்படி பலனளிக்கும்! لَهُمْ அவர்களுக்கு اِذَا جَآءَتْهُمْ அவர்களிடம் வரும் போது ذِكْرٰٮهُمْ‏ அவர்கள் நல்லறிவு பெறுவது
47:18. Fபஹல் யன்ளுரூன இல்லஸ் ஸா'அத அன் த'தியஹும் Bபக்ததன் Fபகத் ஜா'அ அஷ்ராதுஹா; Fப அன்னா லஹும் இதா ஜா'அத் ஹும் திக்ராஹும்
47:18. எனவே இவர்கள் தங்கள்பால் திடுகூறாக (தீர்ப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன; ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்.
47:19
47:19 فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ‌ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوٰٮكُمْ
فَاعْلَمْ நன்கறிந்து கொள்வீராக! اَنَّهٗ நிச்சயமாக لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا اللّٰهُ அல்லாஹ்வைத் தவிர وَاسْتَغْفِرْ இன்னும் பாவமன்னிப்பு கோருவீராக! لِذَنْۢبِكَ உமது தவறுகளுக்காக وَلِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும் وَ الْمُؤْمِنٰتِ‌ ؕ நம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும் وَاللّٰهُ يَعْلَمُ அல்லாஹ் நன்கறிவான் مُتَقَلَّبَكُمْ நீங்கள் சுற்றித்திரியும் இடங்களை(யும்) وَمَثْوٰٮكُمْ‏ நீங்கள் தங்குமிடங்களையும்
47:19. Fபஃலம் அன்னஹூ லா இலாஹ இல்லல் லாஹு வஸ்தக்Fபிர் லிதம்Bபிக வ லில்மு'மினீன வல்மு'மினாத்; வல்லாஹு யஃலமு முதகல்லBபகும் வ மத்வாகும்
47:19. ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.
47:20
47:20 وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْا لَوْلَا نُزِّلَتْ سُوْرَةٌ ‌ۚ فَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ مُّحْكَمَةٌ وَّذُكِرَ فِيْهَا الْقِتَالُ‌ۙ رَاَيْتَ الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ يَّنْظُرُوْنَ اِلَيْكَ نَظَرَ الْمَغْشِىِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِ‌ؕ فَاَوْلٰى لَهُمْ‌ۚ‏
وَيَقُوْلُ கூறுகின்றார்(கள்) الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்கள் لَوْلَا نُزِّلَتْ இறக்கப்பட வேண்டாமா سُوْرَةٌ ۚ ஓர் அத்தியாயம் فَاِذَاۤ اُنْزِلَتْ இறக்கப்பட்டால் سُوْرَةٌ ஓர் அத்தியாயம் مُّحْكَمَةٌ உறுதி செய்யப்பட்டது وَّذُكِرَ இன்னும் கூறப்பட்டது فِيْهَا அதில் الْقِتَالُ‌ۙ போர் رَاَيْتَ பார்ப்பீர் الَّذِيْنَ எவர்கள் فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் مَّرَضٌ நோய் يَّنْظُرُوْنَ பார்ப்பார்கள் اِلَيْكَ உம் பக்கம் نَظَرَ பார்ப்பது போல் الْمَغْشِىِّ عَلَيْهِ மயக்கமுற்றவர்கள் مِنَ الْمَوْتِ‌ؕ மரண பயத்தால் فَاَوْلٰى ஆகவே لَهُمْ‌ۚ‏ அவர்களுக்கு
47:20. வ யகூலுல் லதீன ஆமனூ லவ் லா னுZஜ்Zஜிலத் ஸூரதுன் Fப இதா உன்Zஜிலத் ஸூரதும் முஹ்கமது(ன்)வ் வ துகிர Fபீஹல் கிதாலு ர அய்தல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளு(ன்)ய் யன்ளுரூன இலய்க னளரல் மக்ஷிய்யி 'அலய்ஹி மினல் மவ்தி Fப'அவ்லா லஹும்
47:20. இன்னும், ஈமான் கொண்டவர்கள் கூறுகிறார்கள்: “(புனிதப் போர் பற்றி) ஓர் அத்தியாயம் இறக்கி வைப்படவேண்டாமா?” என்று. ஆனால் உறுதிவாய்ந்த ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு அதில் போர் புரியுமாறு பிரஸ்தாபிக்கப் பட்டால், எவர்களுடைய இருதயங்களில் (நயவஞ்சக) நோய் இருக்கிறதோ அவர்கள் மரண (பய)த்தினால் தனக்கு மயக்கம் ஏற்பட்டவன் நோக்குவது போல் உம்மை நோக்குவதை நீர் காண்பீர்! ஆகவே, இத்தகையவர்களுக்குக் கேடு தான்.
47:21
47:21 طَاعَةٌ وَّقَوْلٌ مَّعْرُوْفٌ‌ فَاِذَا عَزَمَ الْاَمْرُ فَلَوْ صَدَقُوا اللّٰهَ لَـكَانَ خَيْرًا لَّهُمْ‌ۚ‏
طَاعَةٌ கீழ்ப்படிவது(ம்) وَّقَوْلٌ பேசுவதும்(தான்) مَّعْرُوْفٌ‌ நேர்மையாக فَاِذَا عَزَمَ உறுதியாகிவிட்டால் الْاَمْرُ கட்டளை فَلَوْ صَدَقُوا அவர்கள் உண்மையாக நடந்திருந்தால் اللّٰهَ அல்லாஹ்வுடன் لَـكَانَ இருக்கும் خَيْرًا சிறந்ததாக لَّهُمْ‌ۚ‏ அவர்களுக்கு
47:21. தா'அது(ன்)வ் வ கவ்லும் மஃரூFப்; Fப இதா 'அZஜமல் அம்ரு Fபலவ் ஸதகுல் லாஹ லகான கய்ரல் லஹும்
47:21. (ஆகவே, இறைதூதருக்கு) வழிபட்டு நடப்பதும், நன்மையான சொல்லுமே (மேலானதாகும்) எனவே, ஒரு காரியம் உறுதியாகி விட்டால், அல்லாஹ்வுக்கு அவர்கள் உண்மையாக நடந்து கொண்டால் அதுவே அவர்களுக்கு நன்மையாக இருக்கும்.
47:22
47:22 فَهَلْ عَسَيْتُمْ اِنْ تَوَلَّيْتُمْ اَنْ تُفْسِدُوْا فِى الْاَرْضِ وَتُقَطِّعُوْۤا اَرْحَامَكُمْ‏
فَهَلْ عَسَيْتُمْ நீங்கள் குழப்பம் செய்வீர்கள்தானே! اِنْ تَوَلَّيْتُمْ நீங்கள்விலகிவிட்டால் اَنْ تُفْسِدُوْا குழப்பம் செய்வீர்கள் فِى الْاَرْضِ பூமியில் وَتُقَطِّعُوْۤا இன்னும் துண்டித்து விடுவீர்கள் اَرْحَامَكُمْ‏ உங்கள் இரத்த உறவுகளை
47:22. Fபஹல் 'அஸய்தும் இன் தவல்லய்தும் அன் துFப்ஸிதூ Fபில் அர்ளி வ துகத்தி'ஊ அர்ஹாமகும்
47:22. (போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ?
47:23
47:23 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللّٰهُ فَاَصَمَّهُمْ وَاَعْمٰٓى اَبْصَارَهُمْ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் لَعَنَهُمُ அவர்களை சபித்தான் اللّٰهُ அல்லாஹ் فَاَصَمَّهُمْ செவிடாக்கி விட்டான் وَاَعْمٰٓى இன்னும் குருடாக்கி விட்டான் اَبْصَارَهُمْ‏ அவர்களின் பார்வைகளை
47:23. உலா'இகல் லதீன ல'அனஹுமுல் லாஹு Fப அஸம்மஹும் வ அஃமா அBப்ஸாரஹும்
47:23. இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்.
47:24
47:24 اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏
اَفَلَا يَتَدَبَّرُوْنَ அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? الْقُرْاٰنَ குர்ஆனை اَمْ ? عَلٰى قُلُوْبٍ உள்ளங்கள் மீது اَ قْفَالُهَا‏ அவற்றின் பூட்டுகளா போடப்பட்டுள்ளன?
47:24. அFபலா யததBப்Bபரூனல் குர்ஆன அம் 'அலா குலூBபின் அக்Fபாலுஹா
47:24. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
47:25
47:25 اِنَّ الَّذِيْنَ ارْتَدُّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى‌ۙ الشَّيْطٰنُ سَوَّلَ لَهُمْ ؕ وَاَمْلٰى لَهُمْ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ ارْتَدُّوْا திரும்பிச் عَلٰٓى اَدْبَارِهِمْ தங்களது பின் புறங்களின் மீதே مِّنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ தெளிவானதற்குப் பின்னர் لَهُمُ சென்றவர்கள் தங்களுக்கு الْهُدَى‌ۙ நேர்வழி الشَّيْطٰنُ ஷைத்தான் سَوَّلَ அலங்கரித்துவிட்டான் لَهُمْ ؕ அவர்களுக்கு وَاَمْلٰى விட்டு வைத்துள்ளான் لَهُمْ‏ அவர்களை
47:25. இன்னல் லதீனர் தத்தூ 'அலா அத்Bபாரிஹிம் மின் Bபஃதி மா தBபய்யன லஹுமுல் ஹுதஷ் ஷய்தானு ஸவ்வல லஹும் வ அம்லா லஹும்
47:25. நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.
47:26
47:26 ذٰلِكَ بِاَنَّهُمْ قَالُوْا لِلَّذِيْنَ كَرِهُوْا مَا نَزَّلَ اللّٰهُ سَنُطِيْعُكُمْ فِىْ بَعْضِ الْاَمْرِ ۖۚ وَاللّٰهُ يَعْلَمُ اِسْرَارَهُمْ‏
ذٰلِكَ இது بِاَنَّهُمْ ஏனெனில், நிச்சயமாக قَالُوْا கூறினார்கள் لِلَّذِيْنَ كَرِهُوْا வெறுத்தவர்களிடம் مَا எதை نَزَّلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் سَنُطِيْعُكُمْ உங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிவோம் فِىْ بَعْضِ الْاَمْرِ ۖۚ சில விஷங்களில் وَاللّٰهُ يَعْلَمُ அல்லாஹ் நன்கறிவான் اِسْرَارَهُمْ‏ இவர்கள் தங்களுக்குள் பேசுவதை
47:26. தாலிக Bபி அன்னஹும் காலூ லில்லதீன கரிஹூ மா னZஜ்Zஜலல் லாஹு ஸனுதீ'உகும் Fபீ Bபஃளில் அம்ரி வல்லாஹு யஃலமு இஸ்ராரஹும்
47:26. இது ஏனெனில் அவர்கள் எதை அல்லாஹ் இறக்கிவைக்கிறானோ, அதை வெறுப்பவர்களிடம், “நாங்கள் சில காரியங்களில் உங்களையே பின்பற்றி நடப்போம்” என்று கூறியதனாலேயாம். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய இரகசியங்களை அறிகிறான்.
47:27
47:27 فَكَيْفَ اِذَا تَوَفَّتْهُمُ الْمَلٰٓٮِٕكَةُ يَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ‏
فَكَيْفَ எப்படி اِذَا تَوَفَّتْهُمُ அவர்களை உயிர் வாங்கும்போது الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يَضْرِبُوْنَ அடிப்பார்கள் وُجُوْهَهُمْ அவர்களின் முகங்களை(யும்) وَاَدْبَارَهُمْ‏ அவர்களின் பின் புறங்களையும்
47:27. Fபகய்Fப இதா தவFப்Fபத் ஹுமுல் மலா'இகது யள்ரிBபூன வுஜூஹஹும் வ அத்Bபா ரஹும்
47:27. ஆகவே, அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் அடித்து (உயிர்களைக் கைப்பற்றும்) மலக்குகள் அவர்களை மரணமடையச் செய்யும் போது (அவர்கள் நிலைமை) எப்படியிருக்கும்,
47:28
47:28 ذٰلِكَ بِاَنَّهُمُ اتَّبَعُوْا مَاۤ اَسْخَطَ اللّٰهَ وَكَرِهُوْا رِضْوَانَهٗ فَاَحْبَطَ اَعْمَالَهُمْ
ذٰلِكَ இது بِاَنَّهُمُ ஏனெனில், நிச்சயமாக அவர்கள் اتَّبَعُوْا பின்பற்றினார்கள் مَاۤ اَسْخَطَ கோபமூட்டியதை اللّٰهَ அல்லாஹ்விற்கு وَكَرِهُوْا இன்னும் வெறுத்தார்கள் رِضْوَانَهٗ அவனது பொருத்தத்தை فَاَحْبَطَ ஆகவே, வீணாக்கி விட்டான் اَعْمَالَهُمْ‏ அவர்களின் செயல்களை
47:28. தாலிக Bபி அன்னஹுமுத் தBப'ஊ மா அஸ்கதல் லாஹ வ கரிஹூ ரிள்வானஹூ Fப அஹ்Bபத அஃமாலஹும்
47:28. இது ஏனெனில்: நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டுவதையே பின்பற்றி, அவனுடைய திருப்தியை வெறுத்தமைதான்; ஆகவே அவர்களுடைய செய்கைகளை அவன் பயனில்லாதவையாக ஆக்கி விட்டான்.
47:29
47:29 اَمْ حَسِبَ الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَنْ لَّنْ يُّخْرِجَ اللّٰهُ اَضْغَانَهُمْ‏
اَمْ حَسِبَ எண்ணிக் கொண்டார்களா الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ தங்களதுஉள்ளங்களில் مَّرَضٌ நோய் اَنْ لَّنْ يُّخْرِجَ வெளிப்படுத்தி காண்பிக்க மாட்டான் என்று اللّٰهُ அல்லாஹ் اَضْغَانَهُمْ‏ அவர்களின் குரோதங்களை
47:29. அம் ஹஸிBபல் லதீன Fபீ குலூBபிஹிம் மரளுன் அல் ல(ன்)ய் யுக்ரிஜல் லாஹு அள்கானஹும்
47:29. அல்லது: எவர்களுடைய இருதயங்களில் (வஞ்சக) நோயிருக்கிறதோ, அவர்கள், தங்களுடைய கபடங்களை அல்லாஹ் வெளியாக்க மாட்டான் என்று எண்ணுகிறார்களா?
47:30
47:30 وَلَوْ نَشَآءُ لَاَرَيْنٰكَهُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِيْمٰهُمْ‌ؕ وَلَتَعْرِفَنَّهُمْ فِىْ لَحْنِ الْقَوْلِ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ اَعْمَالَكُمْ‏
وَلَوْ نَشَآءُ நாம் நாடினால் لَاَرَيْنٰكَهُمْ அவர்களை உமக்கு காண்பித்து விடுவோம் فَلَعَرَفْتَهُمْ அவர்களை நீர் அறிந்து கொள்வீர் بِسِيْمٰهُمْ‌ؕ அவர்களின் வெளிப்படையான அடையாளங்களினால் وَلَتَعْرِفَنَّهُمْ இன்னும் அவர்களை நிச்சயமாக நீர் அறிவீர் فِىْ لَحْنِ الْقَوْلِ‌ؕ அவர்களின் பேச்சின் தொனியிலும் وَاللّٰهُ يَعْلَمُ அல்லாஹ் நன்கறிவான் اَعْمَالَكُمْ‏ உங்கள் செயல்களை
47:30. வ லவ் னஷா'உ ல-அரய்னாகஹும் Fபல 'அரFப்தஹும் Bபி ஸீமாஹும்; வ லதஃரிFபன் னஹும் Fபீ லஹ்னில் கவ்ல்; வல்லாஹு யஃலமு அஃமாலகும்
47:30. அன்றியும், நாம் நாடினால், திடமாக நாம் அவர்களை உமக்குக் காண்பித்திருப்போம்; அவர்களுடைய முகக்குறிகளைக் கொண்டு நீர் அவர்களை நன்கு அறிந்து கொள்வீர்; நிச்சயமாக அவர்களுடைய சூழ்ச்சியான பேச்சைக் கொண்டும் அவர்களை நீர் அறிந்து கொள்வீர்; மேலும் அல்லாஹ் உங்கள் செய்கைகளை நன்கறிகிறான்.
47:31
47:31 وَلَـنَبْلُوَنَّكُمْ حَتّٰى نَعْلَمَ الْمُجٰهِدِيْنَ مِنْكُمْ وَالصّٰبِرِيْنَ ۙ وَنَبْلُوَا۟ اَخْبَارَكُمْ‏
وَلَـنَبْلُوَنَّكُمْ நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம் حَتّٰى نَعْلَمَ நாம் அறிகின்றவரை الْمُجٰهِدِيْنَ ஜிஹாது செய்பவர்களை مِنْكُمْ உங்களில் وَالصّٰبِرِيْنَ ۙ பொறுமையாளர்களையும் وَنَبْلُوَا۟ இன்னும் நாம் சோதிப்போம் اَخْبَارَكُمْ‏ உங்கள் செய்திகளை
47:31. வ லனBப்லுவன்னகும் ஹத்தா னஃலமல் முஜாஹிதீன மின்கும் வஸ்ஸாBபிரீன வ னBப்லுவ அக்Bபாரகும்
47:31. அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக).
47:32
47:32 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ وَشَآقُّوا الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدٰىۙ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْئًا ؕ وَسَيُحْبِطُ اَعْمَالَهُمْ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَصَدُّوْا இன்னும் தடுத்தார்கள் عَنْ سَبِيْلِ பாதையில் இருந்து اللّٰهِ அல்லாஹ்வின் وَشَآقُّوا இன்னும் மாறுசெய்தார்கள் الرَّسُوْلَ தூதருக்கு مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ தெளிவானதற்குப் பின்னர் لَهُمُ தங்களுக்கு الْهُدٰىۙ நேர்வழி لَنْ يَّضُرُّوا அறவே அவர்கள் தீங்கு செய்ய முடியாது اللّٰهَ அல்லாஹ்விற்கு شَيْئًا ؕ எதையும் وَسَيُحْبِطُ இன்னும் வீணாக்கி விடுவான் اَعْمَالَهُمْ‏ அவர்களின் செயல்களை
47:32. இன்னல் லதீன கFபரூ வ ஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி வ ஷாக்குர் ரஸூல மின் Bபஃதி மா தBபய்யன லஹுமுல் ஹுதா ல(ன்)ய் யளுர்ருல் லாஹ ஷய்'அ(ன்)வ் வ ஸ யுஹ்Bபிது அஃமாலஹும்
47:32. நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் (பிறரை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுத்தும், நேர்வழி தங்களுக்குத் தெளிவான பிறகு (நம்) தூதரை எதிர்த்து முரண்பட்டுக் கொண்டும் இருக்கின்றனரோ - அவர்கள் அல்லாஹ்வுக்கு எவ்வித இடர்பாடும் செய்துவிட முடியாது; அன்றியும் அவர்களுடைய செய்கைகளை அவன் பயனற்றவையாக ஆக்கியும் விடுவான்.
47:33
47:33 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَـكُمْ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اَطِيْعُوا கீழ்ப்படியுங்கள்! اللّٰهَ அல்லாஹ்விற்கு وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள்! الرَّسُوْلَ தூதருக்கு وَلَا تُبْطِلُوْۤا வீணாக்காதீர்கள்! اَعْمَالَـكُمْ‏ உங்கள் அமல்களை
47:33. யா அய்யுஹல் லதீன ஆமனூ அதீ'உல் லாஹ வ அதீ'உர் ரஸூல வலா துBப்திலூ அஃமாலகும்
47:33. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்.
47:34
47:34 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ ثُمَّ مَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَصَدُّوْا இன்னும் தடுத்தார்கள் عَنْ سَبِيْلِ பாதையில் இருந்து اللّٰهِ அல்லாஹ்வின் ثُمَّ مَاتُوْا பிறகு மரணித்தார்கள் وَهُمْ தாங்கள் இருக்கின்ற நிலையில் كُفَّارٌ நிராகரிப்பாளர்களாக فَلَنْ يَّغْفِرَ மன்னிக்கவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ‏ அவர்களை
47:34. இன்னல் லதீன கFபரூ வ ஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி தும்ம மாதூ வ ஹும் குFப்Fபாருன் Fபல(ன்)ய் யக்Fபிரல்லாஹு லஹும்
47:34. நிச்சயமாக, எவர்கள் நிராகரித்துக் கொண்டும், (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்துக் கொண்டும், பின்னர் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ - இ(த்தகைய)வர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.
47:35
47:35 فَلَا تَهِنُوْا وَتَدْعُوْۤا اِلَى السَّلْمِ‌ۖ وَاَنْـتُمُ الْاَعْلَوْنَ‌ۖ وَاللّٰهُ مَعَكُمْ وَلَنْ يَّتِـرَكُمْ اَعْمَالَـكُمْ‏
فَلَا تَهِنُوْا பலவீனப்படாதீர்கள் وَتَدْعُوْۤا அழைத்து விடாதீர்கள்! اِلَى السَّلْمِ‌ۖ சமாதானத்திற்கு وَاَنْـتُمُ நீங்கள்தான் الْاَعْلَوْنَ‌ۖ மிக உயர்வானவர்கள் وَاللّٰهُ அல்லாஹ் مَعَكُمْ உங்களுடன் இருக்கின்றான் وَلَنْ يَّتِـرَكُمْ உங்களுக்கு குறைக்கவேமாட்டான் اَعْمَالَـكُمْ‏ உங்கள் அமல்களை
47:35. Fபலா தஹினூ வ தத்'ஊ இலஸ் ஸல்மி வ அன்துமுல் அஃலவ்ன வல்லாஹு ம'அகும் வ ல(ன்)ய் யதிரகும் அஃமாலகும்
47:35. (முஃமின்களே! போரில்) நீங்கள் தளர்ச்சியடைந்து, தைரியமிழந்து சமாதானத்தைக் கோராதீர்கள்; (ஏனென்றால்) நீங்கள் தாம் மேலோங்குபவர்கள்; அல்லாஹ் உங்களுடனேயே இருக்கின்றான் - மேலும், அவன் உங்கள் (நற்) செய்கைகளை உங்களுக்கு (ஒரு போதும்) குறைத்து விடமாட்டான்.
47:36
47:36 اِنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ‌ ؕ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا يُؤْتِكُمْ اُجُوْرَكُمْ وَلَا يَسْـٴَـــلْكُمْ اَمْوَالَكُمْ‏
اِنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا உலக வாழ்க்கை எல்லாம் لَعِبٌ விளையாட்டு(ம்) وَّلَهْوٌ‌ ؕ வேடிக்கையும்தான் وَاِنْ تُؤْمِنُوْا நீங்கள் நம்பிக்கை கொண்டால் وَتَتَّقُوْا இன்னும் நீங்கள் அஞ்சி நடந்தால் يُؤْتِكُمْ அவன் உங்களுக்கு கொடுப்பான் اُجُوْرَكُمْ உங்கள் கூலிகளை وَلَا يَسْـٴَـــلْكُمْ அவன் உங்களிடம் கேட்கமாட்டான் اَمْوَالَكُمْ‏ உங்கள்செல்வங்களை
47:36. இன்னமல் ஹயாதுத் துன்யா ல'இBபு(ன்)வ் வ லஹ்வ்; வ இன் து'மினூ வ தத்தகூ யு'திகும் உஜூரகும் வலா யஸ்'அல்கும் அம்வாலகும்
47:36. திடமாக இவ்வுலக வாழ்க்கை வீண்விளையாட்டாகவும் வேடிக்கையாகவுமிருக்கிறது; ஆனால், நீங்கள் ஈமான் கொண்டு பயபக்தியுடையவர்களாயிருந்தால், அவன் உங்களுடைய கூலிகளை உங்களுக்கு அளிப்பான். அன்றியும் உங்களிடம் உங்களுடைய பொருள்களை அவன் கேட்கவில்லை.
47:37
47:37 اِنْ يَّسْــٴَـــلْكُمُوْهَا فَيُحْفِكُمْ تَبْخَلُوْا وَيُخْرِجْ اَضْغَانَكُمْ
اِنْ يَّسْــٴَـــلْكُمُوْهَا அவன் அவற்றை உங்களிடம் கேட்டால் فَيُحْفِكُمْ இன்னும் அவன் உங்களை வலியுறுத்தினால் تَبْخَلُوْا நீங்கள் கருமித்தனம் செய்வீர்கள் وَيُخْرِجْ இன்னும் வெளிப்படுத்தி காண்பித்து விடுவான் اَضْغَانَكُمْ உங்கள் குரோதங்களை
47:37. இ(ன்)ய் யஸ்'அல்குமூஹா Fப யுஹ்Fபிகும் தBப்கலூ வ யுக்ரிஜ் அள்கானகும்
47:37. அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு வற்புறுத்தினாலும், நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள். (பேராசை போன்ற) உங்கள் உள்ளக்கிடக்கைகளையும் அவன் வெளிப்படுத்தி விடுவான்.
47:38
47:38 هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَاۤءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ ‌ۚ فَمِنْكُمْ مَّنْ يَّبْخَلُ ‌ ۚ وَمَنْ يَّبْخَلْ فَاِنَّمَا يَبْخَلُ عَنْ نَّـفْسِهٖ‌ ؕ وَاللّٰهُ الْغَنِىُّ وَاَنْـتُمُ الْفُقَرَآءُ ‌ۚ وَاِنْ تَتَوَلَّوْا يَسْتَـبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ۙ ثُمَّ لَا يَكُوْنُوْۤا اَمْثَالَـكُم
هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَاۤءِ நீங்கள்தான் تُدْعَوْنَ அழைக்கப்படுகிறீர்கள் لِتُنْفِقُوْا நீங்கள் தர்மம் செய்வதற்கு فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ ۚ அல்லாஹ்வின் فَمِنْكُمْ உங்களில் இருக்கின்றார் مَّنْ يَّبْخَلُ ۚ கருமித்தனம் செய்பவரும் وَمَنْ يَّبْخَلْ எவர் கருமித்தனம் செய்வாரோ فَاِنَّمَا يَبْخَلُ அவர் கருமித்தனம் செய்வதெல்லாம் عَنْ نَّـفْسِهٖ‌ ؕ அவருடைய ஆன்மாவின் கருமித்தனத்தினால்தான் وَاللّٰهُ அல்லாஹ்தான் الْغَنِىُّ முற்றிலும் நிறைவானவன் وَاَنْـتُمُ நீங்கள்தான் الْفُقَرَآءُ ۚ தேவையுள்ளவர்கள் وَاِنْ تَتَوَلَّوْا நீங்கள் விலகிச்சென்றால் يَسْتَـبْدِلْ அவன் மாற்றுவான் قَوْمًا ஒரு சமுதாயத்தை غَيْرَكُمْ ۙ நீங்கள் அல்லாத ثُمَّ பிறகு لَا يَكُوْنُوْۤا அவர்கள் இருக்க மாட்டார்கள் اَمْثَالَـكُم‏ உங்களைப் போன்று
47:38. ஹா அன்தும் ஹா'உலா'இ துத்'அவ்ன லிதுன்Fபிகூ Fபீ ஸBபீலில்லாஹி Fபமின்கும் ம(ன்)ய் யBப்கலு வ ம(ன்)ய் யBப்கல் Fப இன்னமா யBப்கலு 'அன் னFப்ஸிஹ்; வல்லாஹு கனிய்யு வ அன்துமுல் Fபுகரா'; வ இன் ததவல்லவ் யஸ்தBப்தில் கவ்மன் கய்ரகும் தும்ம லா யகூனூ அம்தாலகும்
47:38. அறிந்துகொள்க! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு அழைக்கப்படும் கூட்டத்தினர் நீங்கள், ஆனால் உங்களில் கஞ்சத்தனம் உடையோரும் இருக்கிறார்கள்; ஆனால் எவன் கஞ்சத்தனம் செய்கிறானோ, அவன் தன் ஆத்மாவுக்கே கஞ்சத்தனம் செய்கிறான் - அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன் - நீங்கள் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள். எனவே (சத்தியத்தை) நீங்கள் புறக்கணிப்பீர்களாயின், உங்களல்லாத (வேறு ஒரு) சமூகத்தாரை அவன் பதிலாகக் கொண்டு வருவான் பின்னர், உங்களைப் போன்று அவர்கள் இருக்கமாட்டார்கள்.