48. ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி)
மதனீ, வசனங்கள்: 29

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
48:1
48:1 اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا ۙ‏
اِنَّا நிச்சயமாக நாம் فَتَحْنَا வெற்றி வழங்கினோம் لَكَ உமக்கு فَتْحًا مُّبِيْنًا ۙ‏ தெளிவானவெற்றியாக
48:1. இன்னா Fபதஹ்னா லக Fபத்ஹம் முBபீனா
48:1. (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்
48:2
48:2 لِّيَـغْفِرَ لَكَ اللّٰهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْۢبِكَ وَ مَا تَاَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيْمًا ۙ‏
لِّيَـغْفِرَ மன்னிப்பதற்காக(வும்) لَكَ உமக்கு اللّٰهُ அல்லாஹ் مَا تَقَدَّمَ முந்தியதையும் مِنْ ذَنْۢبِكَ உமது பாவத்தில் وَ مَا تَاَخَّرَ பிந்தியதையும் وَيُتِمَّ முழுமைப்படுத்துவதற்காகவும் نِعْمَتَهٗ அவனது அருளை عَلَيْكَ உம்மீது وَيَهْدِيَكَ உமக்கு வழி காண்பிப்பதற்காகவும் صِرَاطًا مُّسْتَقِيْمًا ۙ‏ நேரான பாதையை
48:2. லியக்Fபிர லகல் லாஹு மா தகத்தம மின் தன்Bபிக வமா த அக்கர வ யுதிம்ம னிஃமதஹூ 'அலய்க வ யஹ்தியக ஸிராதன் முஸ்தகீமா
48:2. உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.
48:3
48:3 وَّ يَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِيْزًا‏
وَّ يَنْصُرَكَ உமக்கு உதவி செய்வதற்காகவும் اللّٰهُ அல்லாஹ் نَصْرًا உதவி عَزِيْزًا‏ மிக கம்பீரமான
48:3. வ யன்ஸுரகல் லாஹு னஸ்ரன் 'அZஜீZஜா
48:3. மேலும், அல்லாஹ் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான்).
48:4
48:4 هُوَ الَّذِىْۤ اَنْزَلَ السَّكِيْنَةَ فِىْ قُلُوْبِ الْمُؤْمِنِيْنَ لِيَزْدَادُوْۤا اِيْمَانًا مَّعَ اِيْمَانِهِمْ‌ ؕ وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا ۙ‏
هُوَ அவன்தான் الَّذِىْۤ எப்படிப்பட்டவன் اَنْزَلَ இறக்கினான் السَّكِيْنَةَ அமைதியை فِىْ قُلُوْبِ உள்ளங்களில் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களின் لِيَزْدَادُوْۤا அவர்கள் அதிகரிப்பதற்காக اِيْمَانًا நம்பிக்கையால் مَّعَ اِيْمَانِهِمْ‌ ؕ அவர்கள் தங்கள் நம்பிக்கையுடன் وَلِلّٰهِ அல்லாஹ்விற்கு உரியனவே جُنُوْدُ இராணுவங்கள் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியின் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا ۙ‏ மகா ஞானவானாக
48:4. ஹுவல் லதீ அன்Zஜலஸ் ஸகீனத Fபீ குலூBபில் மு'மினீன லியZஜ்தாதூ ஈமானம்ம'அ ஈமானிஹிம்; வ லில்லாஹி ஜுனூதுஸ் ஸமவாதி வல் அர்ள்; வ கானல் லாஹு 'அலீமன் ஹகீமா
48:4. அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின் இதயங்களில், அவன் தாம் அமைதியும் (ஆறுதலும்) அளித்தான்; அன்றியும் வானங்களிலும் பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கோன்.
48:5
48:5 لِّيُدْخِلَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَيُكَفِّرَ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ‌ؕ وَكَانَ ذٰ لِكَ عِنْدَ اللّٰهِ فَوْزًا عَظِيْمًا ۙ‏
لِّيُدْخِلَ அவன் நுழைப்பதற்காக(வும்) الْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்ட ஆண்களையும் وَالْمُؤْمِنٰتِ நம்பிக்கை கொண்ட பெண்களையும் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள் فِيْهَا அதில் وَيُكَفِّرَ அகற்றுவதற்காகவும் عَنْهُمْ அவர்களை விட்டும் سَيِّاٰتِهِمْ‌ؕ அவர்களின் பாவங்களை وَكَانَ இருக்கின்றது ذٰ لِكَ இதுதான் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் فَوْزًا வெற்றியாக عَظِيْمًا ۙ‏ மகத்தான
48:5. லியுத்கிலல் மு'மினீன வல்மு'மினாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா வ யுகFப்Fபிர 'அன்ஹும் ஸய்யி ஆதிஹிம்; வ கான தாலிக 'இன்தல் லாஹி Fபவ்Zஜன் 'அளீமா
48:5. முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வதற்காக (இவ்வாறு அருளினான்); அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்கள் அவற்றில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அவர்களின் பாவங்களையும் அவர்களை விட்டு நீக்கி விடுவான் - இதுவே அல்லாஹ்விடத்தில் மகத்தான வெற்றியாகும்.
48:6
48:6 وَّيُعَذِّبَ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِيْنَ وَ الْمُشْرِكٰتِ الظَّآنِّيْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِ‌ؕ عَلَيْهِمْ دَآٮِٕرَةُ السَّوْءِ‌ ۚ وَ غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَاَعَدَّ لَهُمْ جَهَنَّمَؕ وَسَآءَتْ مَصِيْرًا‏
وَّيُعَذِّبَ வேதனை செய்வதற்காகவும் الْمُنٰفِقِيْنَ நயவஞ்சக ஆண்களை(யும்) وَالْمُنٰفِقٰتِ நயவஞ்சக பெண்களையும் وَالْمُشْرِكِيْنَ இணைவைக்கின்ற ஆண்களையும் وَ الْمُشْرِكٰتِ இணைவைக்கின்ற பெண்களையும் الظَّآنِّيْنَ எண்ணுகின்றனர் بِاللّٰهِ அல்லாஹ்வின் விஷயத்தில் ظَنَّ السَّوْءِ‌ؕ கெட்ட எண்ணம் عَلَيْهِمْ அவர்கள் மீதுதான் دَآٮِٕرَةُ சுழற்சி இருக்கிறது السَّوْءِ‌ ۚ கெட்ட وَ غَضِبَ கோபப்படுகின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَعَنَهُمْ இன்னும் அவர்களை சபிக்கின்றான் وَاَعَدَّ இன்னும் தயார் செய்துள்ளான் لَهُمْ அவர்களுக்கு جَهَنَّمَؕ நரகத்தை وَسَآءَتْ مَصِيْرًا‏ அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்
48:6. வ யு'அத்திBபல் முனாFபிகீன வல்முனாFபிகாதி வல் முஷ்ரிகீன வல்முஷ்ரிகாதிள் ளான்னீன Bபில்லாஹி ளன்னஸ் ஸவ்'; 'அலய்ஹிம் தா'இரதுஸ் ஸவ்'இ வ களிBபல் லாஹு 'அலய்ஹிம் வ ல'அனஹும் வ அ'அத்த லஹும் ஜஹன்னம வ ஸா' அத் மஸீரா
48:6. அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதணையின்) கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது; இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான் - (அதுதான்) செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது.
48:7
48:7 وَلِلّٰهِ جُنُوْدُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே جُنُوْدُ இராணுவங்கள் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியின் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَزِيْزًا மிகைத்தவனாக حَكِيْمًا‏ மகா ஞானவானாக
48:7. வ லில்லாஹி ஜுனூதுஸ் ஸமாவாதி வல் அர்ள்; வ கானல் லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
48:7. அன்றியும் வானங்களிலும், பூமியிலுமுள்ள படைகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கு சொந்தம்; மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.
48:8
48:8 اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنٰكَ உம்மை அனுப்பினோம் شَاهِدًا சாட்சியாளராக(வும்) وَّمُبَشِّرًا நற்செய்தி கூறுபவராகவும் وَّنَذِيْرًا ۙ‏ எச்சரிப்பவராகவும்
48:8. இன்னா அர்ஸல்னாக ஷாஹி த(ன்)வ் வ முBபஷ்ஷிர(ன்)வ் வ னதீரா
48:8. நிச்சயமாக நாம் உம்மை சாட்சி சொல்பவராகவும், நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அனுப்பியிருக்கிறோம்.
48:9
48:9 لِّـتُؤْمِنُوْا بِاللّٰهِ وَ رَسُوْلِهٖ وَتُعَزِّرُوْهُ وَتُوَقِّرُوْهُ ؕ وَتُسَبِّحُوْهُ بُكْرَةً وَّاَصِيْلًا‏
لِّـتُؤْمِنُوْا நீங்கள் நம்பிக்கை கொள்வதற்காக(வும்) بِاللّٰهِ அல்லாஹ்வை وَ رَسُوْلِهٖ அவனது தூதரையும் وَتُعَزِّرُوْهُ அவரை கண்ணியப்படுத்துவதற்காகவும் وَتُوَقِّرُوْهُ ؕ அவரை மதிப்பதற்காகவும் وَتُسَبِّحُوْهُ அவனைப் புகழ்ந்து துதிப்பதற்காகவும் بُكْرَةً காலை(யிலும்) وَّاَصِيْلًا‏ மாலையிலும்
48:9. லிது மினூ Bபில்லாஹி வ ரஸூலிஹீ வ து'அZஜ்Zஜிரூஹு வதுவக்கிரூஹு வதுஸBப்Bபி ஹூஹு Bபுக்ரத(ன்)வ் வ அஸீலா
48:9. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, (தூதராகிய) அவருக்கு (சன்மார்க்கத்தில்) உதவிபுரிந்தும், அவரை கண்ணியபடுத்தியும், காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வாகிய) அவனை துதி செய்து வருவதற்காக(வே தூதரை அனுப்பினோம்!.
48:10
48:10 اِنَّ الَّذِيْنَ يُبَايِعُوْنَكَ اِنَّمَا يُبَايِعُوْنَ اللّٰهَ ؕ يَدُ اللّٰهِ فَوْقَ اَيْدِيْهِمْ‌ ۚ فَمَنْ نَّكَثَ فَاِنَّمَا يَنْكُثُ عَلٰى نَفْسِهٖ‌ۚ وَمَنْ اَوْفٰى بِمَا عٰهَدَ عَلَيْهُ اللّٰهَ فَسَيُؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يُبَايِعُوْنَكَ உம்மிடம் விசுவாச உறுதிமொழி செய்கின்றார்கள் اِنَّمَا يُبَايِعُوْنَ அவர்கள் விசுவாச உறுதி மொழி செய்வதெல்லாம் اللّٰهَ ؕ அல்லாஹ்விடம்தான் يَدُ கை اللّٰهِ அல்லாஹ்வின் فَوْقَ மேல் இருக்கிறது اَيْدِيْهِمْ‌ ۚ அவர்களின் கைகளுக்கு فَمَنْ نَّكَثَ ஆகவேயார் முறிப்பாரோ فَاِنَّمَا يَنْكُثُ அவர்முறிப்பதெல்லாம் عَلٰى نَفْسِهٖ‌ۚ தனக்கு எதிராகத்தான் وَمَنْ اَوْفٰى யார் நிறைவேற்றுவாரோ بِمَا எதை عٰهَدَ ஒப்பந்தம் செய்தாரோ عَلَيْهُ அதன் மீது اللّٰهَ அல்லாஹ்விடம் فَسَيُؤْتِيْهِ அவருக்குக் اَجْرًا கூலியை عَظِيْمًا‏ மகத்தான(து)
48:10. இன்னல் லதீன யுBபாயி'ஊனக இன்னமா யுBபாயி'ஊனல் லாஹ யதுல் லாஹி Fபவ்க அய்தீஹிம்; Fபமன் னகத Fப-இன்னமா யன்குது 'அலா னFப்ஸிஹீ வ மன் அவ்Fபா Bபிமா 'ஆஹத 'அலய்ஹுல்லாஹ Fபஸ யு'தீஹி அஜ்ரன் 'அளீமா
48:10. நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத்து(வாக்குறுதி) செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத்(வாக்குறுதி) செய்கின்றனர் - அல்லாஹ்வின் கை அவர்களுடைய கைகளின் மேல் இருக்கிறது; ஆகவே, எவன் (அவ்வாக்குறுதியை) முறித்து விடுகிறானோ, நிச்சயமாக அவன் தனக்குக் கேடாகவே (அதை) முறிக்கிறான். எவர் அல்லாஹ்விடம் செய்த அவ்வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியை விரைவில் வழங்குவான்.
48:11
48:11 سَيَـقُوْلُ لَكَ الْمُخَلَّفُوْنَ مِنَ الْاَعْرَابِ شَغَلَـتْنَاۤ اَمْوَالُـنَا وَاَهْلُوْنَا فَاسْتَغْفِرْ لَـنَا‌ ۚ يَقُوْلُوْنَ بِاَلْسِنَتِهِمْ مَّا لَـيْسَ فِىْ قُلُوْبِهِمْ‌ؕ قُلْ فَمَنْ يَّمْلِكُ لَـكُمْ مِّنَ اللّٰهِ شَيْـٴًــــا اِنْ اَرَادَ بِكُمْ ضَرًّا اَوْ اَرَادَ بِكُمْ نَفْعًا ‌ؕ بَلْ كَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏
سَيَـقُوْلُ கூறுவார்(கள்) لَكَ உமக்கு الْمُخَلَّفُوْنَ பின்தங்கியவர்கள் مِنَ الْاَعْرَابِ கிராம அரபிகளில் شَغَلَـتْنَاۤ எங்களைஈடுபடுத்தின اَمْوَالُـنَا எங்கள்செல்வங்களும் وَاَهْلُوْنَا எங்கள் குடும்பங்களும் فَاسْتَغْفِرْ ஆகவே, நீர் பாவமன்னிப்புக் கோருவீராக! لَـنَا‌ ۚ எங்களுக்காக يَقُوْلُوْنَ அவர்கள் கூறுகின்றனர் بِاَلْسِنَتِهِمْ தங்கள் நாவுகளினால் مَّا لَـيْسَ இல்லாதவற்றை فِىْ قُلُوْبِهِمْ‌ؕ தங்கள் உள்ளங்களில் قُلْ கூறுவீராக! فَمَنْ யார்? يَّمْلِكُ உரிமை பெறுவார் لَـكُمْ உங்களுக்காக مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடம் شَيْـٴًــــا எதற்கும் اِنْ اَرَادَ நாடினால் بِكُمْ உங்களுக்கு ضَرًّا தீங்கை اَوْ அல்லது اَرَادَ நாடினால் بِكُمْ உங்களுக்கு نَفْعًا ؕ நன்மையை بَلْ மாறாக كَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை خَبِيْرًا‏ ஆழ்ந்தறிபவனாக
48:11. ஸ யகூலு லகல் முகல் லFபூன மினல்-அஃராBபி ஷய்கலத்னா அம்வாலுனா வ அஹ்லூனா Fபஸ்தக்Fபிர் லனா; யகூலூன Bபி அல்ஸினதிஹிம் மா லய்ஸ Fபீ குலூBபிஹிம்; குல் Fபம(ன்)ய் யம்லிகு லகும் மினல் லாஹி ஷய்'அன் இன் அராத Bபிகும் ளர்ரன் அவ் அராத Bபிகும் னFப்'ஆ; Bபல் கானல் லாஹு Bபிமா தஃமலூன கBபீரா
48:11. (நபியே!) போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின்தங்கி விட்ட நாட்டுப் புறத்து அரபிகள்: “எங்களுடைய சொத்துகளும், எங்கள் குடும்பங்களும் (உங்களுடன் வராது) எங்களை அலுவல்கள் உள்ளவர்களாக்கி விட்டன; எனவே, நீங்கள் எங்களுக்காக மன்னிப்புக் கோருவீர்களாக!” எனக் கூறுவர். அவர்கள் தங்கள் இதயங்களில் இல்லாததைத் தம் நாவுகளினால் கூறுகிறார்கள்; “அல்லாஹ் உங்களுக்கு ஒரு கெடுதியை நாடினாலும் அல்லது அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினாலும், அதில் எதையும் அவனுக்கெதிராக உங்களுக்கு(த் தடுக்கக் கூடிய) அதிகாரம் பெற்றவர் யார்! அப்படியல்ல! அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்குணர்ந்தவனாக இருக்கிறான்” எனக் கூறும்.
48:12
48:12 بَلْ ظَنَـنْـتُمْ اَنْ لَّنْ يَّـنْقَلِبَ الرَّسُوْلُ وَالْمُؤْمِنُوْنَ اِلٰٓى اَهْلِيْهِمْ اَبَدًا وَّزُيِّنَ ذٰ لِكَ فِىْ قُلُوْبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ ۖۚ وَكُنْـتُمْ قَوْمًا ۢ بُوْرًا‏
بَلْ மாறாக ظَنَـنْـتُمْ நீங்கள் எண்ணினீர்கள் اَنْ لَّنْ يَّـنْقَلِبَ அறவே திரும்ப மாட்டார்(கள்) என்று الرَّسُوْلُ தூதரும் وَالْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்களும் اِلٰٓى اَهْلِيْهِمْ தங்கள் குடும்பங்களுக்கு اَبَدًا ஒருபோதும் وَّزُيِّنَ இன்னும் அலங்கரிக்கப்பட்டு விட்டது ذٰ لِكَ இது فِىْ قُلُوْبِكُمْ உங்கள் உள்ளங்களில் وَظَنَنْتُمْ (இன்னும் நீ) எண்ணினீர்கள் ظَنَّ எண்ணம் السَّوْءِ ۖۚ கெட்ட وَكُنْـتُمْ நீங்கள் இருக்கின்றீர்கள் قَوْمًا ۢ மக்களாக بُوْرًا‏ அழிந்து போகின்ற
48:12. Bபல் ளனன்தும் அல் ல(ன்)ய் யன்கலிBபர் ரஸூலு வல்மு'மினூன இலா அஹ்லீஹிம் அBபத(ன்)வ் வ Zஜுய்யின தாலிக Fபீ குலூBபிகும் வ ளனன்தும் ளன்ன்னஸ் ஸவ்'இ வ குன்தும் கவ்மம் Bபூரா
48:12. “(நீங்கள் கூறுவது போல்) அல்ல; (அல்லாஹ்வின்) தூதரும், முஃமின்களும், தங்கள் குடும்பத்தாரிடம் ஒரு போதும் திரும்ப மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது; ஆதலால் நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; அதனால் நீங்கள் நாசமடையும் சமூகத்தினர்களாகி விட்டீர்கள்.”
48:13
48:13 وَمَنْ لَّمْ يُؤْمِنْۢ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ فَاِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَعِيْرًا‏
وَمَنْ எவர்(கள்) لَّمْ يُؤْمِنْۢ நம்பிக்கை கொள்ளவில்லையோ بِاللّٰهِ அல்லாஹ்வை(யும்) وَرَسُوْلِهٖ அவனது தூதரையும் فَاِنَّاۤ நிச்சயமாக நாம் اَعْتَدْنَا தயார் செய்துள்ளோம் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு سَعِيْرًا‏ கொழுந்து விட்டெரியும் நரகத்தை
48:13. வ மல் லம் யு'மிம் Bபில்லாஹி வ ரஸூலிஹீ Fப-இன்னா அஃதத்னா லில்காFபிரீன ஸ'ஈரா
48:13. அன்றியும் எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் ஈமான் கொள்ளவில்லையோ - நிச்சயமாக அக்காஃபிர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.
48:14
48:14 وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ يَغْفِرُ لِمَنْ يَّشَآءُ وَيُعَذِّبُ مَنْ يَّشَآءُ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ பூமியின் يَغْفِرُ மன்னிக்கின்றான் لِمَنْ يَّشَآءُ தான் நாடுகின்றவர்களை وَيُعَذِّبُ இன்னும் வேதனை செய்கின்றான் مَنْ يَّشَآءُ‌ ؕ தான் நாடுகின்றவர்களை وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ மகாகருணையாளனாக
48:14. வ லில்லாஹிஇ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ள்; யக்Fபிரு லிம(ன்)ய் யஷா'உ வ யு'அத்திBபு ம(ன்)ய் யஷா'; வ கானல் லாஹு கFபூரர் ரஹீமா
48:14. மேலும் வானங்களிடையவும், பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே! தான் விரும்பியவர்களை அவன் மன்னிக்கிறான்; தான் விரும்பியவர்களை அவன் வேதனை செய்கிறான் - அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
48:15
48:15 سَيَـقُوْلُ الْمُخَلَّفُوْنَ اِذَا انْطَلَقْتُمْ اِلٰى مَغَانِمَ لِتَاْخُذُوْهَا ذَرُوْنَا نَـتَّبِعْكُمْ‌ ۚ يُرِيْدُوْنَ اَنْ يُّبَدِّلُوْا كَلٰمَ اللّٰهِ‌ ؕ قُلْ لَّنْ تَتَّبِعُوْنَا كَذٰلِكُمْ قَالَ اللّٰهُ مِنْ قَبْلُ‌ ۚ فَسَيَقُوْلُوْنَ بَلْ تَحْسُدُوْنَـنَا‌ ؕ بَلْ كَانُوْا لَا يَفْقَهُوْنَ اِلَّا قَلِيْلًا‏
سَيَـقُوْلُ கூறுவார்(கள்) الْمُخَلَّفُوْنَ பின்தங்கியவர்கள் اِذَا انْطَلَقْتُمْ நீங்கள் சென்றால் اِلٰى مَغَانِمَ கனீமத்துகளை நோக்கி لِتَاْخُذُوْهَا அவற்றை நீங்கள் எடுப்பதற்காக ذَرُوْنَا எங்களை விடுங்கள் نَـتَّبِعْكُمْ‌ ۚ நாங்களும் உங்களைப் பின்பற்றி வருகிறோம் يُرِيْدُوْنَ அவர்கள் நாடுகின்றனர் اَنْ يُّبَدِّلُوْا அவர்கள் மாற்றிவிட كَلٰمَ பேச்சை اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் قُلْ நீர் கூறுவீராக! لَّنْ تَتَّبِعُوْنَا அறவே நீங்கள் எங்களை பின்பற்ற மாட்டீர்கள் كَذٰلِكُمْ இப்படித்தான் قَالَ கூறி இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் مِنْ قَبْلُ‌ ۚ இதற்கு முன்னரே فَسَيَقُوْلُوْنَ அவர்கள் கூறுவார்கள் بَلْ இல்லை تَحْسُدُوْنَـنَا‌ ؕ நீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகின்றீர்கள் بَلْ மாறாக كَانُوْا இருக்கின்றனர் لَا يَفْقَهُوْنَ விளங்காதவர்களாக اِلَّا தவிர قَلِيْلًا‏ குறைந்த விஷயங்களை
48:15. ஸ யகூலுல் முகல்ல Fபூன இதன் தலக்தும் இலா மகானிம லிதா'குதூஹா தரூனா னத்தBபிஃகும் யுரீதூன அ(ன்)ய் யுBபத்திலூ கலாமல்லாஹ்; குல் லன் தத்தBபி'ஊனா கதாலிகும் காலல் லாஹு மின் கBப்லு Fபஸ யகூலூன Bபல் தஹ்ஸுதூனன; Bபல் கானூ லா யFப்கஹூன இல்லா கலீலா
48:15. போர்க்களப் பொருட்களை எடுத்துக் கொள்வதற்காக நீங்கள் சென்றீர்களாயின், (போருக்கு உம்முடன் சேர்ந்து வராமல்) பின் தங்கி விட்டவர்கள், “நாங்களும் உங்களைப் பின்பற்றி வர அனுமதி கொடுங்கள்” என்று கூறுவார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மாற்றிவிட நாடுகிறார்கள்; “நீங்கள் எங்களைப் பின்பற்றி வரவே வேண்டாம்; இவ்வாறே அல்லாஹ் முன்னர் கூறியிருக்கின்றான்” என்று (நபியே! அவர்களிடம்) நீர் சொல்லி விடுவீராக; ஆனால், அவர்கள்: “அல்ல! நீங்கள் எங்கள் மீது பொறாமை கொண்டுள்ளீர்கள்” எனக் கூறுவார்கள்; அப்படியல்ல! அவர்கள் மிக சொற்பமாகவே அன்றி (பெரும்பாலானதை) அறிந்துணராமலே இருக்கிறார்கள்.
48:16
48:16 قُلْ لِّلْمُخَلَّفِيْنَ مِنَ الْاَعْرَابِ سَتُدْعَوْنَ اِلٰى قَوْمٍ اُولِىْ بَاْسٍ شَدِيْدٍ تُقَاتِلُوْنَهُمْ اَوْ يُسْلِمُوْنَ‌ ۚ فَاِنْ تُطِيْـعُوْا يُـؤْتِكُمُ اللّٰهُ اَجْرًا حَسَنًا‌ ۚ وَاِنْ تَتَـوَلَّوْا كَمَا تَوَلَّيْـتُمْ مِّنْ قَبْلُ يُعَذِّبْكُمْ عَذَابًا اَ لِيْمًا‏
قُلْ கூறுவீராக! لِّلْمُخَلَّفِيْنَ பின்தங்கியவர்களை நோக்கி مِنَ الْاَعْرَابِ கிராமவாசிகளில் سَتُدْعَوْنَ அழைக்கப்படுவீர்கள் اِلٰى قَوْمٍ கூட்டத்தின் பக்கம் اُولِىْ بَاْسٍ பலமுடைய(வர்கள்) شَدِيْدٍ கடுமையான(து) تُقَاتِلُوْنَهُمْ அவர்களிடம் நீங்கள் சண்டை செய்வதற்காக اَوْ يُسْلِمُوْنَ‌ ۚ அல்லது/அவர்கள் பணிந்து விடுவதற்காக فَاِنْ تُطِيْـعُوْا நீங்கள் கீழ்ப்படிந்தால் يُـؤْتِكُمُ உங்களுக்கு கொடுப்பான் اللّٰهُ அல்லாஹ் اَجْرًا கூலியை حَسَنًا‌ ۚ அழகிய(து) وَاِنْ تَتَـوَلَّوْا நீங்கள் விலகினால் كَمَا تَوَلَّيْـتُمْ நீங்கள் விலகியதை போன்று مِّنْ قَبْلُ இதற்கு முன்பு يُعَذِّبْكُمْ உங்களை தண்டிப்பான் عَذَابًا தண்டனையால் اَ لِيْمًا‏ வலி தரக்கூடிய(து)
48:16. குல் லில்முகல்லFபீன மினல் அஃராBபி ஸதுத்'அவ்ன இலா கவ்மின் உலீ Bபாஸின் ஷதீதின் துகாதி லூனஹும் அவ் யுஸ்லிமூன Fப இன் துதீ'ஊ யு'திகுமுல் லாஹு அஜ்ரன் ஹஸன(ன்)வ் வ இன் ததவல்லவ் கமா தவல்லய்தும் மின் கBப்லு யு'அத்திBப்கும் 'அதாBபன் அலீமா
48:16. பின் தங்கிவிட்ட நாட்டுப்புறத்து அரபிகளிடம்: “நீங்கள் சீக்கிரத்தில் மிக்க பலசாலிகளான ஒரு சமூகத்தாரிடம் (அவர்களை எதிர்த்துப் போரிட) அழைக்கப்படுவீர்கள், அவர்களுடன் நீங்கள் போரிட வேண்டும்; அல்லது அவர்கள் முற்றிலும் பணிய வேண்டும், அப்போது நீங்கள் வழிப்பட்டு நடப்பீர்களானால், அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான்; ஆனால் இதற்கு முன் நீங்கள் (போரிடாமல்) பின்னடைந்தது போல் (இப்பொழுதும்) நீங்கள் பின்வாங்குவீர்களாயின், அவன் உங்களை நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்” என்று (நபியே!) நீர் கூறும்.
48:17
48:17 لَيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ‌ ؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌‌ۚوَمَنْ يَّتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا اَلِيْمًا
لَيْسَ இல்லை عَلَى الْاَعْمٰى குருடர் மீது حَرَجٌ சிரமம் وَّلَا இன்னும் இல்லை عَلَى الْاَعْرَجِ ஊனமானவர் மீது حَرَجٌ சிரமம் وَّلَا இல்லை عَلَى الْمَرِيْضِ நோயாளி மீது حَرَجٌ‌ ؕ சிரமம் وَمَنْ எவர் يُّطِعِ கீழ்ப்படிவாரோ اللّٰهَ அல்லாஹ்விற்கு(ம்) وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் يُدْخِلْهُ அவரை நுழைப்பான் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ‌ۚ நதிகள் وَمَنْ எவர் يَّتَوَلَّ விலகுவாரோ يُعَذِّبْهُ அவரை தண்டிப்பான் عَذَابًا தண்டனையால் اَلِيْمًا‏ வலி தரக்கூடிய
48:17. லய்ஸ 'அலல் அஃமா ஹரஜு(ன்)வ் வலா 'அலல் அஃரஜி ஹரஜு(ன்)வ் வலா 'அலல் மரீளி ஹரஜ்' வ ம(ன்)ய் யுதில்'இல் லாஹ வ ரஸூலஹூ யுத்கில்ஹு ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு வ ம(ன்)ய் யதவல்ல யு'அத்திBப்ஹு 'அதாBபன் அலீமா
48:17. (ஆயினும் போருக்குச் செல்லாதது பற்றி) குருடர் மீதும் குற்றம் இல்லை; முடவர் மீதும் குற்றம் இல்லை; நோயாளி மீதும் குற்றம் இல்லை; அன்றியும், எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுகிறாரோ, அவரை (அல்லாஹ்) சுவர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; ஆனால் எவன் பின் வாங்குகிறானோ, அவனை (அல்லாஹ்) நோவினை தரும் வேதனையாக வேதனை செய்வான்.  
48:18
48:18 لَـقَدْ رَضِىَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِيْنَ اِذْ يُبَايِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِىْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِيْنَةَ عَلَيْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِيْبًا ۙ‏
لَـقَدْ திட்டவட்டமாக رَضِىَ திருப்தி அடைந்தான் اللّٰهُ அல்லாஹ் عَنِ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களை اِذْ يُبَايِعُوْنَكَ உம்மிடம் அவர்கள் விசுவாச வாக்குறுதி செய்தபோது تَحْتَ الشَّجَرَةِ மரத்தின் கீழ் فَعَلِمَ அவன் அறிந்தான் مَا فِىْ قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்களில் உள்ளதை فَاَنْزَلَ ஆகவே, இறக்கினான் السَّكِيْنَةَ அமைதியை عَلَيْهِمْ அவர்கள் மீது وَاَثَابَهُمْ இன்னும் வெகுமதியாக கொடுத்தான் فَتْحًا ஒரு வெற்றியை(யும்) قَرِيْبًا ۙ‏ சமீபமான(து)
48:18. லகத் ரளியல் லாஹு 'அனில் மு'மினீன இத் யுBபாயி 'ஊனக தஹ்தஷ் ஷஜரதி Fப'அலிம மா Fபீ குலூBபிஹிம் Fப அன்Zஜலஸ் ஸகீனத 'அலய்ஹிம் வ அதா Bபஹும் Fபத் ஹன் கரீBபா
48:18. முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.
48:19
48:19 وَّمَغَانِمَ كَثِيْرَةً يَّاْخُذُوْنَهَا ‌ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏
وَّمَغَانِمَ இன்னும் கனீமத்துகளை كَثِيْرَةً அதிகமான يَّاْخُذُوْنَهَا ؕ அவர்கள் அவற்றை பெறுவார்கள் وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَزِيْزًا மிகைத்தவனாக حَكِيْمًا‏ மகா ஞானவானாக
48:19. வ மகானிம கதீர த(ன்)ய் யாகுதூனஹா; வ கானல் லாஹு 'அZஜீZஜன் ஹகீமா
48:19. இன்னும் ஏராளமான போர்ப்பொருள்களையும் அவர்கள் கைப்பற்றும்படிச் செய்தான்; அல்லாஹ் யாவரையும் மிகைப்பனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
48:20
48:20 وَعَدَكُمُ اللّٰهُ مَغَانِمَ كَثِيْرَةً تَاْخُذُوْنَهَا فَعَجَّلَ لَكُمْ هٰذِهٖ وَكَفَّ اَيْدِىَ النَّاسِ عَنْكُمْ‌ۚ وَلِتَكُوْنَ اٰيَةً لِّلْمُؤْمِنِيْنَ وَيَهْدِيَكُمْ صِرَاطًا مُّسْتَقِيْمًاۙ‏
وَعَدَ வாக்களித்தான் كُمُ உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் مَغَانِمَ கனீமத்துகளை كَثِيْرَةً அதிகமான تَاْخُذُوْنَهَا அவற்றை நீங்கள் பெறுவீர்கள் فَعَجَّلَ விரைவாக கொடுத்தான் لَكُمْ உங்களுக்கு هٰذِهٖ இதை وَكَفَّ இன்னும் அவன் தடுத்தான் اَيْدِىَ கரங்களை النَّاسِ மக்களின் عَنْكُمْ‌ۚ உங்களை விட்டும் وَلِتَكُوْنَ இருப்பதற்காகவும் اٰيَةً இறை அத்தாட்சியாக لِّلْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு وَيَهْدِيَكُمْ உங்களை வழி நடத்துவதற்காகவும் صِرَاطًا பாதையில் مُّسْتَقِيْمًاۙ‏ நேரான
48:20. வ'அதகுமுல் லாஹு ம கானிம கதீரதன் தா'குதூ னஹா Fப'அஜ்ஜல லகும் ஹாதிஹீ வ கFப்Fப அய்தியன் னாஸி 'அன்கும் வ லிதகூன ஆயதல் லில்மு'மினீன வ யஹ்தியகும் ஸிராதம் முஸ்தகீமா
48:20. ஏராளமான போர்ப் பொருள்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களிக்கிறான்; அவற்றை நீங்கள் கைப்பற்றுவீர்கள்; இதை உங்களுக்கு, துரிதமாக அளித்து, கொடுத்து மனிதர்களின் கைகளையும் உங்களை விட்டும் தடுத்துக் கொண்டான். (இதை) முஃமின்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும், உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காகவும் (இவ்வாறு அருள் புரிந்தான்).
48:21
48:21 وَّاُخْرٰى لَمْ تَقْدِرُوْا عَلَيْهَا قَدْ اَحَاطَ اللّٰهُ بِهَا‌ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرًا‏
وَّاُخْرٰى இன்னும் வேறு பல لَمْ تَقْدِرُوْا நீங்கள் ஆற்றல் பெறவில்லை عَلَيْهَا அவற்றின் மீது قَدْ திட்டமாக اَحَاطَ சூழ்ந்திருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் بِهَا‌ؕ அவற்றை وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرًا‏ பேராற்றலுடையவனாக
48:21. வ உக்ரா லம் தக்திரூ 'அலய்ஹா கத் அஹாதல் லாஹு Bபிஹா; வ கானல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீரா
48:21. மற்றொரு - (வெற்றியும்) இருக்கிறது; அவற்றுக்கு நீங்கள் (இன்னும்) சக்தி பெறவில்லை; ஆயினும் அல்லாஹ் அவற்றை திட்டமாக சூழ்ந்தறிந்திருக்கின்றான். அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கிறான்.
48:22
48:22 وَلَوْ قَاتَلَـكُمُ الَّذِيْنَ كَفَرُوْا لَوَلَّوُا الْاَدْبَارَ ثُمَّ لَا يَجِدُوْنَ وَلِيًّا وَّلَا نَصِيْرًا‏
وَلَوْ قَاتَلَـكُمُ உங்களிடம் போருக்கு வந்தால் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் لَوَلَّوُا الْاَدْبَارَ புறமுதுகு காட்டியிருப்பார்கள் ثُمَّ பிறகு لَا يَجِدُوْنَ காணமாட்டார்கள் وَلِيًّا பாதுகாவலரையும் وَّلَا نَصِيْرًا‏ உதவியாளரையும்
48:22. வ லவ் காதலகுமுல் லதீன கFபரூ ல வல்லவுல் அத்Bபார தும்ம லா யஜிதூன வலிய(ன்)வ்-வ லா னஸீரா
48:22. நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின்வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்.
48:23
48:23 سُنَّةَ اللّٰهِ الَّتِىْ قَدْ خَلَتْ مِنْ قَبْلُ ۖۚ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِيْلًا‏
سُنَّةَ நடைமுறைப்படிதான் اللّٰهِ அல்லாஹ்வின் الَّتِىْ قَدْ خَلَتْ எது/சென்றுவிட்டது مِنْ قَبْلُ ۖۚ இதற்கு முன்னர் وَلَنْ تَجِدَ நீர் காணமாட்டீர் لِسُنَّةِ நடைமுறைக்கு اللّٰهِ அல்லாஹ்வின் تَبْدِيْلًا‏ மாற்றத்தை(யும்)
48:23. ஸுன்னதல் லாஹில் லதீ கத் கலத் மின் கBப்லு வ லன் தஜித லிஸுன்னதில் லாஹி தBப்தீலா
48:23. இவ்வாறு செய்வதே அல்லாஹ்வுடைய ஸுன்னத்து (நடைமுறை) ஆகும், இதற்கு முன்பும் (இவ்வாறு) நடந்திருக்கிறது - ஆகவே அல்லாஹ்வுடைய ஸுன்னத்தில் - (நடைமுறையில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்.
48:24
48:24 وَهُوَ الَّذِىْ كَفَّ اَيْدِيَهُمْ عَنْكُمْ وَاَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ مَكَّةَ مِنْۢ بَعْدِ اَنْ اَظْفَرَكُمْ عَلَيْهِمْ‌ؕ وَكَانَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرًا‏
وَهُوَ الَّذِىْ அவன்தான் كَفَّ தடுத்தான் اَيْدِيَهُمْ அவர்களின்கரங்களை عَنْكُمْ உங்களை விட்டும் وَاَيْدِيَكُمْ இன்னும் உங்கள் கரங்களை عَنْهُمْ அவர்களை விட்டும் بِبَطْنِ நடுப்பகுதியில் مَكَّةَ மக்காவின் مِنْۢ بَعْدِ اَنْ اَظْفَرَ அவன் வெற்றி கொடுத்த பின்னர் كُمْ உங்களுக்கு عَلَيْهِمْ‌ؕ அவர்கள் மீது وَكَانَ இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை بَصِيْرًا‏ உற்று நோக்கியவனாக
48:24. வ ஹுவல் லதீ கFப்Fப அய்தியஹும் 'அன்கும் வ அய்தியகும் 'அன்ஹும் BபிBபத்னி மக்கத மிம் Bபஃதி அன் அள்Fபரகும் 'அலய்ஹிம்; வ கானல் லாஹு Bபிமா தஃமலூன Bபஸீரா
48:24. இன்னும், அவன்தான் உங்களுக்கு அவர்கள் மீது வெற்றி அளித்த பிறகு, மக்காவினுள் அவர்களுடைய கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்துக் கொண்டான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.
48:25
48:25 هُمُ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَـرَامِ وَالْهَدْىَ مَعْكُوْفًا اَنْ يَّبْلُغَ مَحِلَّهٗ‌ ؕ وَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُوْنَ وَنِسَآءٌ مُّؤْمِنٰتٌ لَّمْ تَعْلَمُوْهُمْ اَنْ تَطَئُوْ هُمْ فَتُصِيْبَكُمْ مِّنْهُمْ مَّعَرَّةٌ ۢ بِغَيْرِ عِلْمٍ ۚ ‌لِيُدْخِلَ اللّٰهُ فِىْ رَحْمَتِهٖ مَنْ يَّشَآءُ‌ ۚ لَوْ تَزَيَّلُوْا لَعَذَّبْنَا الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابًا اَ لِيْمًا‏
هُمُ அவர்கள்தான் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் وَصَدُّوْكُمْ இன்னும் உங்களைத் தடுத்தார்கள் عَنِ الْمَسْجِدِ மஸ்ஜிதை விட்டு الْحَـرَامِ புனித(மானது) وَالْهَدْىَ பலிப் பிராணியையும் مَعْكُوْفًا வழிபாட்டுக்காக கொண்டு வரப்பட்ட اَنْ يَّبْلُغَ அது சேருவதை விட்டு مَحِلَّهٗ‌ ؕ அதனுடைய இடத்திற்கு وَلَوْلَا இல்லாமல் இருந்தால் رِجَالٌ ஆண்களும் مُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொண்ட(வர்கள்) وَنِسَآءٌ பெண்களும் مُّؤْمِنٰتٌ நம்பிக்கை கொண்ட(வர்கள்) لَّمْ تَعْلَمُوْ நீங்கள் அறியாமல் هُمْ அவர்களை اَنْ تَطَئُوْ நீங்கள் தாக்கிவிட هُمْ அவர்களை فَتُصِيْبَكُمْ உங்களுக்கு ஏற்பட்டு விடும் مِّنْهُمْ مَّعَرَّةٌ ۢ அவர்களினால்/பழிப்பு بِغَيْرِ عِلْمٍ ۚ அறியாமல் لِيُدْخِلَ நுழைப்பதற்காக اللّٰهُ அல்லாஹ் فِىْ رَحْمَتِهٖ தனது அருளில் مَنْ يَّشَآءُ‌ ۚ நாடுகின்றவர்களை لَوْ تَزَيَّلُوْا அவர்கள் நீங்கியிருந்தால் لَعَذَّبْنَا தண்டித்திருப்போம் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களை مِنْهُمْ அவர்களில் عَذَابًا தண்டனையால் اَ لِيْمًا‏ வலி தரக்கூடிய(து)
48:25. ஹுமுல் லதீன கFபரூ வ ஸத்தூகும் 'அனில்-மஸ்ஜிதில்-ஹராமி வல்ஹத்ய மஃகூFபன் அ(ன்)ய் யBப்லுக மஹில்லஹ்; வ லவ் லா ரிஜாலும் மு'மினூன வ னிஸா'உம் மு'மினாதுல் லம் தஃலமூஹும் அன் தத'ஊஹும் FபதுஸீBபகும் மின்ஹும் ம'அர்ரதும் Bபிகய்ரி 'இல்மின் லியுத் கிலல் லாஹு Fபீ ரஹ்மதிஹீ ம(ன்)ய் யஷா'; லவ் தZஜய்யலூ ல'அத்தBப்னல் லதீன கFபரூ மின்ஹும் 'அதாBபன் அலீமா
48:25. “மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களையும் (தடுத்து,) குர்பானி பிராணியை அதற்குரிய இடத்திற்கு செல்லமுடியாத படியும் தடுத்த காஃபிர்கள் அவர்கள்தான். (மக்காவில் ஈமானை மறைத்துக் கொண்ட) முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் இல்லாதிருந்தால் அவர்களை நீங்கள் அறிந்து கொள்ளாமலேயே (உங்கள் கால்களால்) அவர்களை மிதித்திருப்பீர்கள்; (அவ்வாறே) அவர்கள் அறியாத நிலையில் அவர்கள் மூலம் உங்களுக்கு தீங்கு ஏற்பட்டிருக்கும். தான் நாடியவர்களை தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வதற்காகவே (அவன் மக்காவில் பிரவேசிக்க உங்களை அனுமதிக்கவில்லை; அங்கு இருக்கும்) முஃமின்கள் (காஃபிர்களை விட்டும்) விலகியிருந்தால் அவர்களில் காஃபிர்களை (மட்டும்) கடும் வேதனையாக வேதனை செய்திருப்போம்.
48:26
48:26 اِذْ جَعَلَ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ قُلُوْبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَـاهِلِيَّةِ فَاَنْزَلَ اللّٰهُ سَكِيْنَـتَهٗ عَلٰى رَسُوْلِهٖ وَعَلَى الْمُؤْمِنِيْنَ وَاَلْزَمَهُمْ كَلِمَةَ التَّقْوٰى وَ كَانُوْۤا اَحَقَّ بِهَا وَاَهْلَهَا‌ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا
اِذْ جَعَلَ ஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்! الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் فِىْ قُلُوْبِهِمُ தங்கள் உள்ளங்களில் الْحَمِيَّةَ திமிரை حَمِيَّةَ திமிரை الْجَـاهِلِيَّةِ அறியாமைக்கால فَاَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் سَكِيْنَـتَهٗ தன் அமைதியை عَلٰى رَسُوْلِهٖ தனது தூதர் மீதும் وَعَلَى மீதும் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்கள் وَاَلْزَمَهُمْ இன்னும் அவர்களுக்கு அவசியமாக்கினான் كَلِمَةَ வார்த்தையை التَّقْوٰى இறையச்சத்தின் وَ كَانُوْۤا இன்னும் இருந்தார்கள் اَحَقَّ மிகத் தகுதியுடைவர்களாக بِهَا அதற்கு وَاَهْلَهَا‌ؕ இன்னும் அதற்கு சொந்தக்காரர்களாக وَكَانَ اللّٰهُ அல்லாஹ் இருக்கின்றான் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمًا‏ நன்கறிந்தவனாக
48:26. இத் ஜ'அலல் லதீன கFபரூ Fபீ குலூBபிஹிமுல் ஹமிய்யத ஹமிய்யதல் ஜாஹிலிய்யதி Fப அன்Zஜலல் லாஹு ஸகீனதஹூ 'அலா ரஸூலிஹீ வ 'அலல் மூமினீன வ அல்Zஜமஹும் கலிமதத் தக்வா வ கானூ அஹக்க Bபிஹா வ அஹ்லஹா; வ கானல் லாஹு Bபிகுல்லி ஷய்'இன் அலீம
48:26. (காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை - முட்டாள்தனமான வைராக்கியத்தை - தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து, அவர்களுக்கு (பயபக்தியூட்டும்) தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்; அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள் - அல்லாஹ் சகல பொருள்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
48:27
48:27 لَـقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْيَا بِالْحَـقِّ‌ ۚ لَـتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَـرَامَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِيْنَۙ مُحَلِّقِيْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِيْنَۙ لَا تَخَافُوْنَ‌ؕ فَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِيْبًا‏
لَـقَدْ திட்டவட்டமாக صَدَقَ உண்மையாக நிகழ்த்தினான் اللّٰهُ அல்லாஹ் رَسُوْلَهُ தனது தூதருக்கு الرُّءْيَا கனவை بِالْحَـقِّ‌ ۚ யதார்த்தத்தில் لَـتَدْخُلُنَّ நிச்சயமாக நீங்கள் நுழைவீர்கள் الْمَسْجِدَ மஸ்ஜிதில் الْحَـرَامَ புனிதமான(து) اِنْ شَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் اٰمِنِيْنَۙ பாதுகாப்பு பெற்றவர்களாக مُحَلِّقِيْنَ சிரைத்தவர்களாக رُءُوْسَكُمْ உங்கள் தலை(முடி)களை وَمُقَصِّرِيْنَۙ இன்னும் குறைத்தவர்களாக لَا تَخَافُوْنَ‌ؕ பயப்பட மாட்டீர்கள் فَعَلِمَ அவன் அறிவான் مَا لَمْ تَعْلَمُوْا நீங்கள் அறியாதவற்றை فَجَعَلَ ஏற்படுத்தினான் مِنْ دُوْنِ ذٰلِكَ அதற்கு முன்பாக فَتْحًا ஒரு வெற்றியை قَرِيْبًا‏ சமீபமான
48:27. லகத் ஸதகல் லாஹு ரஸூலஹுர் ரு'யா Bபில்ஹக்க், லதத்குலுன்னல் மஸ்ஜிதல்-ஹராம இன் ஷா'அல் லாஹு ஆமினீன முஹல்லிகீன ரு'ஊஸகும் வ முகஸ்ஸிரீன லா தகாFபூன Fப'அலிம மா லம் தஃலமூ Fபஜ'அல மின் தூனி தாலிக Fபத்ஹன் கரீBபா
48:27. நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும்;, (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்,
48:28
48:28 هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ‌ؕ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا ؕ‏
هُوَ الَّذِىْۤ அவன்தான் اَرْسَلَ அனுப்பினான் رَسُوْلَهٗ தனது தூதரை بِالْهُدٰى நேர்வழியைக் கொண்டு وَدِيْنِ இன்னும் மார்க்கத்தை الْحَـقِّ உண்மையான لِيُظْهِرَهٗ அதை மேலோங்க வைப்பதற்காக عَلَى الدِّيْنِ மார்க்கங்களை விட كُلِّهٖ‌ؕ எல்லா وَكَفٰى போதுமான(வன்) بِاللّٰهِ அல்லாஹ்வே شَهِيْدًا ؕ‏ சாட்சியாவான்
48:28. ஹுவல் லதீ அர்ஸல ரஸூலஹூ Bபில்ஹுதா வ தீனில் ஹக்கி லியுள்ஹிரஹூ 'அலத் தீனி குல்லிஹ்; வ கFபா Bபில்லாஹி ஷஹீதா
48:28. அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும், அனுப்பியருளினான்; சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது.
48:29
48:29 مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ وَالَّذِيْنَ مَعَهٗۤ اَشِدَّآءُ عَلَى الْكُفَّارِ رُحَمَآءُ بَيْنَهُمْ ‌ تَرٰٮهُمْ رُكَّعًا سُجَّدًا يَّبْتَغُوْنَ فَضْلًا مِّنَ اللّٰهِ وَرِضْوَانًا‌سِيْمَاهُمْ فِىْ وُجُوْهِهِمْ مِّنْ اَثَرِ السُّجُوْدِ‌ ؕ ذٰ لِكَ مَثَلُهُمْ فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ وَمَثَلُهُمْ فِى الْاِنْجِيْلِ ۛۚ كَزَرْعٍ اَخْرَجَ شَطْئَـهٗ فَاٰزَرَهٗ فَاسْتَغْلَظَ فَاسْتَوٰى عَلٰى سُوْقِهٖ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَـغِيْظَ بِهِمُ الْكُفَّارَ‌ ؕ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنْهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا
مُحَمَّدٌ முஹம்மது رَّسُوْلُ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் தூதர் وَالَّذِيْنَ مَعَهٗۤ அவருடன் இருக்கின்றவர்கள் اَشِدَّآءُ கடினமானவர்கள் عَلَى الْكُفَّارِ நிராகரிப்பாளர்கள்மீது رُحَمَآءُ கருணையாளர்கள் بَيْنَهُمْ தங்களுக்கு மத்தியில் تَرٰٮهُمْ நீர் அவர்களைக்காண்பீர் رُكَّعًا ருகூஃசெய்தவர்களாக سُجَّدًا சுஜூது செய்தவர்களாக يَّبْتَغُوْنَ அவர்கள் விரும்புகிறார்கள் فَضْلًا அருளை(யும்) مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَرِضْوَانًا‌ பொருத்தத்தையும் سِيْمَاهُمْ அவர்களின் தோற்றம் فِىْ وُجُوْهِهِمْ அவர்களின் முகங்களில் مِّنْ اَثَرِ அடையாளமாக السُّجُوْدِ‌ ؕ சுஜூதின் ذٰ لِكَ இது مَثَلُهُمْ அவர்களின் தன்மையாகும் فِى التَّوْرٰٮةِ ۛ ۖۚ தவ்றாத்தில் கூறப்பட்ட وَمَثَلُهُمْ இன்னும் அவர்களின் தன்மையாவது فِى الْاِنْجِيْلِ ۛۚ இன்ஜீலில் கூறப்பட்ட كَزَرْعٍ ஒரு விளைச்சலைப் போலாகும் اَخْرَجَ வெளியாக்கியது شَطْئَـهٗ தனது காம்பை فَاٰزَرَهٗ இன்னும் அதை பலப்படுத்தியது فَاسْتَغْلَظَ பிறகு அது தடிப்பமாக ஆனது فَاسْتَوٰى அது உயர்ந்து நின்று عَلٰى سُوْقِهٖ தனது தண்டின் மீது يُعْجِبُ கவர்கிறது الزُّرَّاعَ விவசாயிகளை لِيَـغِيْظَ அவன் ரோஷமூட்டுவதற்காக بِهِمُ அவர்கள் மூலமாக الْكُفَّارَ‌ ؕ நிராகரிப்பாளர்களை وَعَدَ வாக்களித்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களுக்கு وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை مِنْهُمْ அவர்களில் مَّغْفِرَةً மன்னிப்பை(யும்) وَّاَجْرًا عَظِيْمًا‏ மகத்தானகூலியையும்
48:29. முஹம்மதுர் ரஸூலுல் லாஹ்; வல்லதீன ம'அஹூ அஷித்தா'உ 'அலல் குFப்Fபாரி ருஹமா'உ Bபய்னஹும் தராஹும் ருக்க'அன் ஸுஜ்ஜத(ன்)ய் யBப்தகூன Fபள்லம் மினல் லாஹி வ ரிள்வான ஸீமாஹும் Fபீ வுஜூஹிஹிம் மின் அதரிஸ் ஸுஜூத்; தாலிக மதலுஹும் Fபித் தவ்ராஹ்; வ மதலுஹும் Fபில் இன்ஜீலி கZஜர்'இன் அக்ரஜ ஷத் 'அஹூ Fப 'ஆZஜரஹூ Fபஸ்தக்லள Fபஸ்தவா 'அலா ஸூகிஹீ யுஃஜிBபுத் Zஜுர்ரா'அ லியகீள Bபிஹிமுல் குFப்Fபார்; வ'அதல் லாஹுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மின்ஹும் மக்Fபிரத(ன்)வ் வ அஜ்ரன் 'அளீமா
48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலிலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.