69. ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)
மக்கீ, வசனங்கள்: 52

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
69:1
69:1 اَلْحَـآقَّةُ ۙ‏
اَلْحَـآقَّةُ ۙ‏ உண்மையான நிகழ்வு!
69:1. அல் ஹாக்கஹ்
69:1. நிச்சயமானது.
69:2
69:2 مَا الْحَـآقَّةُ‌ ۚ‏
مَا الْحَـآقَّةُ‌ ۚ‏ உண்மையான நிகழ்வு என்றால் என்ன?
69:2. மல் ஹாக்கஹ்
69:2. நிச்சயமானது எது?
69:3
69:3 وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْحَــآقَّةُ ؕ‏
وَمَاۤ اَدْرٰٮكَ உமக்கு எது அறிவித்தது!? مَا الْحَــآقَّةُ ؕ‏ உண்மையான நிகழ்வு என்றால் என்ன?
69:3. வ மா அத்ராக மல் ஹாக்கஹ்
69:3. அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
69:4
69:4 كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌۢ بِالْقَارِعَةِ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் ثَمُوْدُ ஸமூது மக்களும் وَعَادٌۢ ஆது மக்களும் بِالْقَارِعَةِ‏ தட்டக்கூடிய மறுமை நாளை
69:4. கத்தBபத் தமூது வ 'ஆதும் Bபில் காரி'அஹ்
69:4. ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
69:5
69:5 فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِيَةِ‏
فَاَمَّا ثَمُوْدُ ஆக, ஸமூது மக்கள் فَاُهْلِكُوْا அழிக்கப்பட்டனர் بِالطَّاغِيَةِ‏ எல்லை மீறிய சப்தத்தைக் கொண்டு
69:5. Fப-அம்மா தமூது Fப உஹ்லிகூ Bபித்தாகியஹ்
69:5. எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
69:6
69:6 وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِيْحٍ صَرْصَرٍ عَاتِيَةٍۙ‏
وَاَمَّا ஆக, عَادٌ ஆது மக்கள் فَاُهْلِكُوْا அழிக்கப்பட்டார்கள் بِرِيْحٍ ஒரு காற்றைக் கொண்டு صَرْصَرٍ கடுமையான குளிருடன் வீசக்கூடிய عَاتِيَةٍۙ‏ அதி வேகமான
69:6. வ அம்மா 'ஆதுன் Fப உஹ்லிகூ Bபி ரீஹின் ஸர்ஸரின் 'ஆதியஹ்
69:6. இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
69:7
69:7 سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوْمًا ۙ فَتَرَى الْقَوْمَ فِيْهَا صَرْعٰىۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ‌ ۚ‏
سَخَّرَهَا அவன் அதை கட்டுப்படுத்தி வைத்திருந்தான் عَلَيْهِمْ அவர்கள் மீது سَبْعَ لَيَالٍ ஏழு இரவுகளும் وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ எட்டு பகல்களும் حُسُوْمًا ۙ தொடர்ச்சியாக فَتَرَى பார்ப்பீர் الْقَوْمَ மக்களை فِيْهَا அதில் صَرْعٰىۙ செத்து மடிந்தவர்களாக كَاَنَّهُمْ போல்/அவர்களோ اَعْجَازُ அடிப்பகுதிகளை نَخْلٍ பேரீட்ச மரத்தின் خَاوِيَةٍ‌ ۚ‏ அழிந்துபோன
69:7. ஸக்கர ஹா 'அலய்ஹிம் ஸBப்'அ ல யாலி(ன்)வ் வ தமானியத அய்யாமின் ஹுஸூமன் Fபதரல் கவ்ம Fபீஹா ஸர்'ஆ க அன்னஹும் அஃஜாZஜு னக்லின் காவியஹ்
69:7. அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
69:8
69:8 فَهَلْ تَرٰى لَهُمْ مِّنْۢ بَاقِيَةٍ‏
فَهَلْ تَرٰى நீர் பார்க்கிறீரா? لَهُمْ அவர்களில் مِّنْۢ بَاقِيَةٍ‏ உயிரோடு மீதம் இருப்பவர் யாரையும்
69:8. Fபஹல் தரா லஹும் மின் Bபாகியஹ்
69:8. ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
69:9
69:9 وَجَآءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَـاطِئَةِ‌ۚ‏
وَجَآءَ செய்தனர் فِرْعَوْنُ ஃபிர்அவ்னும் وَمَنْ قَبْلَهٗ அவனுக்கு முன்னுள்ளவர்களும் وَالْمُؤْتَفِكٰتُ தலைக்கீழாக புரட்டப்பட்ட ஊரார்களும் بِالْخَـاطِئَةِ‌ۚ‏ தீய செயல்களை
69:9. வ ஜா'அ Fபிரவ்னு வ மன் கBப்லஹூ வல் மு'தFபிகாது Bபில் காதி'அஹ்
69:9. அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
69:10
69:10 فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِيَةً‏
فَعَصَوْا அவர்கள் மாறுசெய்தனர் رَسُوْلَ தூதருக்கு رَبِّهِمْ தங்கள் இறைவனின் فَاَخَذَهُمْ ஆகவே, அவன் அவர்களைப் பிடித்தான் اَخْذَةً பிடியால் رَّابِيَةً‏ கடுமையான
69:10. Fப 'அஸவ் ரஸூல ரBப்Bபிஹிம் Fப அகதஹும் அக்ததர் ராBபியஹ்
69:10. அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர்; ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
69:11
69:11 اِنَّا لَمَّا طَغَا الْمَآءُ حَمَلْنٰكُمْ فِى الْجَارِيَةِ ۙ‏
اِنَّا நிச்சயமாக நாம் لَمَّا மிக அதிகமாகிய போது طَغَا الْمَآءُ தண்ணீர் حَمَلْنٰكُمْ உங்களை ஏற்றினோம் فِى الْجَارِيَةِ ۙ‏ கப்பலில்
69:11. இன்னா லம்மா தகல் மா'உ ஹமல்னாகும் Fபில் ஜாரியஹ்
69:11. தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
69:12
69:12 لِنَجْعَلَهَا لَـكُمْ تَذْكِرَةً وَّتَعِيَهَاۤ اُذُنٌ وَّاعِيَةٌ‏
لِنَجْعَلَهَا அதை ஆக்குவதற்காகவும் لَـكُمْ உங்களுக்கு تَذْكِرَةً ஓர் உபதேசமாக وَّتَعِيَهَاۤ அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும் اُذُنٌ செவிகள் وَّاعِيَةٌ‏ கவனித்து செவியுறுகின்ற
69:12. லி னஜ்'அலஹா லகும் தத்கி ரத(ன்)வ்-வ த'இயஹா உதுனு(ன்)வ் வா'இயஹ்
69:12. அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
69:13
69:13 فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۙ‏
فَاِذَا نُفِخَ ஊதப்பட்டால் فِى الصُّوْرِ சூரில் نَفْخَةٌ ஊதுதல் وَّاحِدَةٌ ۙ‏ ஒரு முறை
69:13. Fப இதா னுFபிக Fபிஸ் ஸூரி னFப்கது(ன்)வ் வாஹிதஹ்
69:13. எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
69:14
69:14 وَحُمِلَتِ الْاَرْضُ وَ الْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۙ‏
وَحُمِلَتِ சுமக்கப்பட்டு الْاَرْضُ பூமி(யும்) وَ الْجِبَالُ மலைகளும் فَدُكَّتَا இரண்டும் அடித்து நொறுக்கப்பட்டால் دَكَّةً அடியாக وَّاحِدَةً ۙ‏ ஒரே
69:14. வ ஹுமிலதில் அர்ளு வல் ஜிBபாலு Fபதுக்கதா தக்கத(ன்)வ் வாஹிதஹ்
69:14. இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
69:15
69:15 فَيَوْمَٮِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُ ۙ‏
فَيَوْمَٮِٕذٍ அந்நாளில்தான் وَّقَعَتِ நிகழும் الْوَاقِعَةُ ۙ‏ நிகழக்கூடிய நாள்
69:15. Fப யவ்ம'இதி(ன்)வ் வக'அதில் வாகி'அஹ்
69:15. அந்த நாளில் தான் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
69:16
69:16 وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِىَ يَوْمَٮِٕذٍ وَّاهِيَةٌ ۙ‏
وَانْشَقَّتِ இன்னும் பிளந்து விடும் السَّمَآءُ வானம் فَهِىَ அது يَوْمَٮِٕذٍ அந்நாளில் وَّاهِيَةٌ ۙ‏ பலவீனப்பட்டு விடும்
69:16. வன்ஷக்கதிஸ் ஸமா'உ Fபஹிய யவ்ம 'இதி(ன்)வ்-வாஹியஹ்
69:16. வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
69:17
69:17 وَّالْمَلَكُ عَلٰٓى اَرْجَآٮِٕهَا ‌ؕ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَٮِٕذٍ ثَمٰنِيَةٌ ؕ‏
وَّالْمَلَكُ عَلٰٓى اَرْجَآٮِٕهَا ؕ வானவர்கள்/அதன் ஓரங்களில் இருப்பார்கள் وَيَحْمِلُ சுமப்பார்(கள்) عَرْشَ அர்ஷை رَبِّكَ உமது இறைவனின் فَوْقَهُمْ தங்களுக்கு மேல் يَوْمَٮِٕذٍ அந்நாளில் ثَمٰنِيَةٌ ؕ‏ எட்டு வானவர்கள்
69:17. வல் மலகு 'அலா அர்ஜா'இஹா; வ யஹ்மிலு 'அர்ஷ ரBப்Bபிக Fபவ்கஹும் யவ்ம'இதின் தமானியஹ்
69:17. இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
69:18
69:18 يَوْمَٮِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰى مِنْكُمْ خَافِيَةٌ‏
يَوْمَٮِٕذٍ அந்நாளில் تُعْرَضُوْنَ நீங்கள் சமர்ப்பிக்கப்படுவீர்கள் لَا تَخْفٰى மறைந்துவிடாது مِنْكُمْ உங்களிடமிருந்து خَافِيَةٌ‏ மறையக்கூடியது எதுவும்
69:18. யவ்ம'இதின் துஃரளூன லா தக்Fபா மின் கும் காFபியஹ்
69:18. (மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
69:19
69:19 فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ فَيَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِيَهْ‌ۚ‏
فَاَمَّا مَنْ ஆகவே, யார் اُوْتِىَ கொடுக்கப்பட்டாரோ كِتٰبَهٗ தனது செயலேடு بِيَمِيْنِهٖۙ தனது வலது கரத்தில் فَيَقُوْلُ அவர் கூறுவார் هَآؤُمُ வாருங்கள்! اقْرَءُوْا படியுங்கள்! كِتٰبِيَهْ‌ۚ‏ எனது செயலேட்டை
69:19. Fப அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபியமீனிஹீ Fப யகூலு ஹா'உமுக் ர'ஊ கிதாBபியஹ்
69:19. ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), “இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்” எனக் கூறுவார்.
69:20
69:20 اِنِّىْ ظَنَنْتُ اَنِّىْ مُلٰقٍ حِسَابِيَهْ‌ۚ‏
اِنِّىْ நிச்சயமாக நான் ظَنَنْتُ நம்பினேன் اَنِّىْ நிச்சயமாக நான் مُلٰقٍ சந்திப்பேன் حِسَابِيَهْ‌ۚ‏ எனது விசாரணையை
69:20. இன்னீ ளன்னன்து அன்னீ முலாகின் ஹிஸாBபியஹ்
69:20. “நிச்சயமாக, நான் என்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”
69:21
69:21 فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍۙ‏
فَهُوَ ஆகவே, அவர் فِىْ عِيْشَةٍ வாழ்க்கையில் رَّاضِيَةٍۙ‏ மகிழ்ச்சியான
69:21. Fபஹுவ Fபீ 'ஈஷதிர் ராளியஹ்
69:21. ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
69:22
69:22 فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ‏
فِىْ جَنَّةٍ சொர்க்கத்தில் عَالِيَةٍۙ‏ உயர்ந்த
69:22. Fபீ ஜன்ன்னதின் 'ஆலியஹ்
69:22. உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
69:23
69:23 قُطُوْفُهَا دَانِيَةٌ‏
قُطُوْفُهَا அதன் கனிகள் دَانِيَةٌ‏ மிக சமீபமாக
69:23. குதூFபுஹா தானியஹ்
69:23. அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும்.
69:24
69:24 كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓـــٴًــا ۢ بِمَاۤ اَسْلَفْتُمْ فِى الْاَيَّامِ الْخَـالِيَةِ‏
كُلُوْا உண்ணுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் هَنِيْٓـــٴًــا ۢ இன்பமாக بِمَاۤ اَسْلَفْتُمْ நீங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக فِى الْاَيَّامِ الْخَـالِيَةِ‏ கடந்த காலங்களில்
69:24. குலூ வஷ்ரBபூ ஹனீ'அம் Bபிமா அஸ்லFப்தும் Fபில் அய்யாமில் காலியஹ்
69:24. “சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்).
69:25
69:25 وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ  ۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِىْ لَمْ اُوْتَ كِتٰبِيَهْ‌ۚ‏
وَاَمَّا مَنْ ஆக, யார் اُوْتِىَ கொடுக்கப்பட்டாரோ كِتٰبَهٗ தனது செயலேடு بِشِمَالِهٖ  ۙ தனது இடது கையில் فَيَقُوْلُ கூறுவார் يٰلَيْتَنِىْ لَمْ اُوْتَ எனக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதே! كِتٰبِيَهْ‌ۚ‏ எனது செயலேடு
69:25. வ அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபிஷிமாலிஹீ Fப யகூலு யாலய்தனீ லம் ஊத கிதாBபியஹ்
69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
69:26
69:26 وَلَمْ اَدْرِ مَا حِسَابِيَهْ‌ۚ‏
وَلَمْ اَدْرِ நான் அறியமாட்டேன் مَا حِسَابِيَهْ‌ۚ‏ எனது விசாரணை என்னவாகும்
69:26. வ லம் அத்ரி மா ஹிஸாBபியஹ்
69:26. “அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
69:27
69:27 يٰلَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ‌ ۚ‏
يٰلَيْتَهَا كَانَتِ அதுவே, இருந்திருக்க வேண்டுமே! الْقَاضِيَةَ‌ ۚ‏ முடிக்கக்கூடியதாக
69:27. யா லய்தஹா கானதில் காளியஹ்
69:27. “(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
69:28
69:28 مَاۤ اَغْنٰى عَنِّىْ مَالِيَهْۚ‏
مَاۤ اَغْنٰى பலனளிக்கவில்லை عَنِّىْ எனக்கு مَالِيَهْۚ‏ எனது செல்வம்
69:28. மா அக்னா 'அன்னீ மாலியஹ்
69:28. “என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
69:29
69:29 هَلَكَ عَنِّىْ سُلْطٰنِيَهْ‌ۚ‏
هَلَكَ அழித்துவிட்டது عَنِّىْ என்னை விட்டு سُلْطٰنِيَهْ‌ۚ‏ எனது ஆட்சி அதிகாரம்
69:29. ஹலக 'அன்னீ ஸுல்தானியஹ்
69:29. “என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).
69:30
69:30 خُذُوْهُ فَغُلُّوْهُ ۙ‏
خُذُوْهُ அவனைப் பிடியுங்கள்! فَغُلُّوْهُ ۙ‏ அவனை விலங்கிடுங்கள்!
69:30. குதூஹு Fபகுல்லூஹ்
69:30. “(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”
69:31
69:31 ثُمَّ الْجَحِيْمَ صَلُّوْهُ ۙ‏
ثُمَّ பிறகு الْجَحِيْمَ நரகத்தில் صَلُّوْهُ ۙ‏ அவனை எரித்து பொசுக்குங்கள்!
69:31. தும்மல் ஜஹீம ஸல்லூஹ்
69:31. “பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
69:32
69:32 ثُمَّ فِىْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ؕ‏
ثُمَّ பிறகு فِىْ سِلْسِلَةٍ ஒரு சங்கிலியில் ذَرْعُهَا அதன் முழம் سَبْعُوْنَ ذِرَاعًا எழுபது முழம் فَاسْلُكُوْهُ ؕ‏ அவனைபுகுத்துங்கள்!
69:32. தும்ம Fபீ ஸில்ஸிலதின் தர்'உஹா ஸBப்'ஊன திரா'அன் Fபஸ்லுகூஹ்
69:32. “பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்று உத்தரவிடப்படும்).
69:33
69:33 اِنَّهٗ كَانَ لَا يُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِيْمِۙ‏
اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருந்தான் لَا يُؤْمِنُ நம்பிக்கை கொள்ளாதவனாக بِاللّٰهِ அல்லாஹ்வை الْعَظِيْمِۙ‏ மகத்தான
69:33. இன்னஹூ கான லா யு'மினு Bபில்லாஹில் 'அளீம்
69:33. “நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.”
69:34
69:34 وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ‏
وَلَا يَحُضُّ இன்னும் தூண்டாத வனாக இருந்தான் عَلٰى طَعَامِ உணவிற்கு الْمِسْكِيْنِؕ‏ ஏழைகளின்
69:34. வ லா யஹுள்ளு 'அலா த'ஆமில் மிஸ்கீன்
69:34. “அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.”
69:35
69:35 فَلَيْسَ لَـهُ الْيَوْمَ هٰهُنَا حَمِيْمٌۙ‏
فَلَيْسَ ஆகவே இருக்க மாட்டார் لَـهُ அவனுக்கு الْيَوْمَ இன்று هٰهُنَا இங்கு حَمِيْمٌۙ‏ நெருக்கமான நண்பர்
69:35. Fபலய்ஸ லஹுல் யவ்ம ஹாஹுனா ஹமீம்
69:35. “எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.”
69:36
69:36 وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِيْنٍۙ‏
وَّلَا طَعَامٌ இன்னும் உணவும் இருக்காது اِلَّا தவிர مِنْ غِسْلِيْنٍۙ‏ சீழ் சலங்களைத்
69:36. வ லா த'ஆமுன் இல்லா மின் கிஸ்லீன்
69:36. “சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.”
69:37
69:37 لَّا يَاْكُلُهٗۤ اِلَّا الْخٰطِئُوْنَ
لَّا يَاْكُلُهٗۤ அதை சாப்பிட மாட்டார்(கள்) اِلَّا الْخٰطِئُوْنَ‏ பாவிகளை தவிர
69:37. லா ய'குலுஹூ இல்லல் காதி'ஊன்
69:37. “குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.”  
69:38
69:38 فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَۙ‏
فَلَاۤ اُقْسِمُ சத்தியம் செய்கிறேன்! بِمَا تُبْصِرُوْنَۙ‏ நீங்கள் பார்க்கின்றவற்றின் மீதும்
69:38. Fபலா உக்ஸிமு Bபிமா துBப்ஸிரூன்
69:38. ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
69:39
69:39 وَمَا لَا تُبْصِرُوْنَۙ‏
وَمَا لَا تُبْصِرُوْنَۙ‏ நீங்கள் பார்க்காதவற்றின் மீதும்
69:39. வமா லா துBப்ஸிரூன்
69:39. நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
69:40
69:40 اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۚ ۙ‏
اِنَّهٗ நிச்சயமாக இது لَقَوْلُ வேத வாக்காகும் رَسُوْلٍ தூதருடைய كَرِيْمٍۚ ۙ‏ கண்ணியமான
69:40. இன்னஹூ லகவ்லு ரஸூலின் கரீம்
69:40. நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
69:41
69:41 وَّمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ‌ؕ قَلِيْلًا مَّا تُؤْمِنُوْنَۙ‏
وَّمَا هُوَ بِقَوْلِ இது வாக்கல்ல شَاعِرٍ‌ؕ கவிஞரின் قَلِيْلًا மிகக் குறைவாகவே مَّا تُؤْمِنُوْنَۙ‏ நம்பிக்கை கொள்கிறீர்கள்
69:41. வமா ஹுவ Bபிகவ்லி ஷா'இர்; கலீலன் மா து'மினூன்
69:41. இது ஒரு கவிஞனின் சொல்லன்று; (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
69:42
69:42 وَلَا بِقَوْلِ كَاهِنٍ‌ؕ قَلِيْلًا مَّا تَذَكَّرُوْنَؕ‏
وَلَا بِقَوْلِ இன்னும் இது வாக்குமல்ல كَاهِنٍ‌ؕ ஜோசியக்காரனின் قَلِيْلًا மிகக் குறைவாகவே مَّا تَذَكَّرُوْنَؕ‏ நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்
69:42. வ லா Bபிகவ்லி காஹின்; கலீலன் மா ததக்கரூன்
69:42. (இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று; (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
69:43
69:43 تَنْزِيْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏
تَنْزِيْلٌ இறக்கப்பட்ட வேதம் مِّنْ رَّبِّ இறைவனிடமிருந்து الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
69:43. தன்Zஜீலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
69:43. அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
69:44
69:44 وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْاَقَاوِيْلِۙ‏
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا அவர் இட்டுக்கட்டி பேசினால்/நம்மீது بَعْضَ الْاَقَاوِيْلِۙ‏ சில பேச்சுகளை
69:44. வ லவ் தகவ்வல 'அலய்னா Bபஃளல் அகாவீல்
69:44. அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
69:45
69:45 لَاَخَذْنَا مِنْهُ بِالْيَمِيْنِۙ‏
لَاَخَذْنَا நாம் பிடித்திருப்போம் مِنْهُ அவரை بِالْيَمِيْنِۙ‏ பலமாக
69:45. ல-அகத்னா மின்ஹு Bபில்யமீன்
69:45. அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
69:46
69:46 ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِيْنَ  ۖ‏
ثُمَّ பிறகு لَقَطَعْنَا நாம் வெட்டி இருப்போம் مِنْهُ அவரின் الْوَتِيْنَ  ۖ‏ நாடி நரம்பை
69:46. தும்ம லகதஃனா மின்ஹுல் வதீன்
69:46. பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
69:47
69:47 فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حَاجِزِيْنَ‏
فَمَا இல்லை مِنْكُمْ உங்களில் இருந்து مِّنْ اَحَدٍ எவரும் عَنْهُ அவரை விட்டும் حَاجِزِيْنَ‏ தடுப்பவர்கள்
69:47. Fபமா மின்கும் மின் அஹதின்'அன்ஹு ஹாஜிZஜீன்
69:47. அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
69:48
69:48 وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِيْنَ‏
وَاِنَّهٗ நிச்சயமாக இது لَتَذْكِرَةٌ ஓர் அறிவுரையாகும் لِّلْمُتَّقِيْنَ‏ இறையச்சமுள்ளவர்களுக்கு
69:48. வ இன்னஹூ லதத்கிரதுல் லில்முத்தகீன்
69:48. ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
69:49
69:49 وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِيْنَ‏
وَاِنَّا நிச்சயமாக நாம் لَنَعْلَمُ நாம் நன்கறிவோம் اَنَّ நிச்சயமாக مِنْكُمْ உங்களில் مُّكَذِّبِيْنَ‏ பொய்ப்பிப்பவர்கள்
69:49. வ இன்ன லனஃலமு அன்ன மின்கும் முகத்திBபீன்
69:49. ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
69:50
69:50 وَاِنَّهٗ لَحَسْرَةٌ عَلَى الْكٰفِرِيْنَ‏
وَاِنَّهٗ நிச்சயமாக இது لَحَسْرَةٌ துக்கமானதுதான் عَلَى الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களுக்கு
69:50. வ இன்னஹு லஹஸ்ரதுன் 'அலல் காFபிரீன்
69:50. அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
69:51
69:51  وَاِنَّهٗ لَحَقُّ الْيَقِيْنِ‏
وَاِنَّهٗ நிச்சயமாக இது لَحَقُّ உண்மையாகும் الْيَقِيْنِ‏ மிக உறுதியான
69:51. வ இன்னஹூ லஹக்குல் யகீன்
69:51. மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
69:52
69:52 فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيْمِ
فَسَبِّحْ ஆகவே, துதிப்பீராக! بِاسْمِ பெயரை رَبِّكَ உமது இறைவனின் الْعَظِيْمِ‏ மகத்தான
69:52. Fபஸ்ஸBப்Bபிஹ் Bபிஸ்மி ரBப்Bபிகல் 'அளீம்
69:52. ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.