75. ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)
மக்கீ, வசனங்கள்: 40

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
75:1
75:1 لَاۤ اُقْسِمُ بِيَوْمِ الْقِيٰمَةِۙ‏
لَاۤ اُقْسِمُ சத்தியம் செய்கிறேன்! بِيَوْمِ நாளின் மீது الْقِيٰمَةِۙ‏ மறுமை
75:1. லா உக்ஸிமு Bபி யவ்மில் கியாமஹ்
75:1. கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
75:2
75:2 وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِؕ‏
وَلَاۤ اُقْسِمُ இன்னும் சத்தியம் செய்கிறேன் ! بِالنَّفْسِ ஆன்மாவின் மீது اللَّوَّامَةِؕ‏ பழிக்கின்ற
75:2. வ லா உக்ஸிமு Bபின் னFப்ஸில் லவ்வாமஹ்
75:2. நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
75:3
75:3 اَيَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗؕ‏
اَيَحْسَبُ எண்ணுகின்றானா الْاِنْسَانُ மனிதன் اَلَّنْ نَّجْمَعَ அறவே ஒன்று சேர்க்க மாட்டோம் என்று عِظَامَهٗؕ‏ அவனுடைய எலும்புகளை
75:3. அயஹ்ஸBபுல் இன்ஸானு அல் லன் னஜ்ம்'அ 'இளாமஹ்
75:3. (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
75:4
75:4 بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ‏
بَلٰى ஏன் முடியாது! قٰدِرِيْنَ ஆற்றலுடையவர்கள் عَلٰٓى اَنْ نُّسَوِّىَ நாம் சரியாக அமைப்பதற்கு بَنَانَهٗ‏ அவனுடைய விரல் நுனிகளை
75:4. Bபலா காதிரீன 'அலா அன் னுஸவ்விய Bபனானஹ்
75:4. அன்று; அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
75:5
75:5 بَلْ يُرِيْدُ الْاِنْسَانُ لِيَفْجُرَ اَمَامَهٗ‌ۚ‏
بَلْ மாறாக يُرِيْدُ நாடுகின்றான் الْاِنْسَانُ மனிதன் لِيَفْجُرَ பாவம் செய்வதற்கே اَمَامَهٗ‌ۚ‏ தனது வருங்காலத்திலும்
75:5. Bபல் யுரீதுல் இன்ஸானு லியFப்ஜுர அமாமஹ்
75:5. எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
75:6
75:6 يَسْأَلُ اَيَّانَ يَوْمُ الْقِيٰمَةِؕ‏
يَسْأَلُ கேட்கிறான் اَيَّانَ எப்போது வரும் يَوْمُ الْقِيٰمَةِؕ‏ மறுமை நாள்
75:6. யஸ்'அலு அய்ய்யான யவ்முல் கியாமஹ்
75:6. “கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
75:7
75:7 فَاِذَا بَرِقَ الْبَصَرُۙ‏
فَاِذَا بَرِقَ திகைத்துவிட்டால் الْبَصَرُۙ‏ பார்வை
75:7. Fப இதா Bபரிகல் Bபஸர்
75:7. ஆகவே, பார்வையும் மழுங்கி-
75:8
75:8 وَخَسَفَ الْقَمَرُۙ‏
وَخَسَفَ இன்னும் ஒளி இழந்து விட்டால் الْقَمَرُۙ‏ சந்திரன்
75:8. வ கஸFபல் கமர்
75:8. சந்திரனும் ஒளியும் மங்கி-
75:9
75:9 وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُۙ‏
وَجُمِعَ இன்னும் ஒன்று சேர்க்கப்பட்டால் الشَّمْسُ சூரியனும் وَالْقَمَرُۙ‏ சந்திரனும்
75:9. வ ஜுமி'அஷ் ஷம்ஸு வல் கமர்
75:9. சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
75:10
75:10 يَقُوْلُ الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍ اَيْنَ الْمَفَرُّ‌ ۚ‏
يَقُوْلُ கூறுவான் الْاِنْسَانُ மனிதன் يَوْمَٮِٕذٍ அந்நாளில் اَيْنَ எங்கே? الْمَفَرُّ‌ ۚ‏ தப்பிக்குமிடம்
75:10. யகூலுல் இன்ஸானு யவ் ம 'இதின் அய்னல் மFபர்ர்
75:10. அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
75:11
75:11 كَلَّا لَا وَزَرَؕ‏
كَلَّا அவ்வாறல்ல لَا وَزَرَؕ‏ தப்பித்து ஓட அறவே முடியாது
75:11. கல்லா லா வZஜர்
75:11. “இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று கூறப்படும்).
75:12
75:12 اِلٰى رَبِّكَ يَوْمَٮِٕذِ اۨلْمُسْتَقَرُّ ؕ‏
اِلٰى رَبِّكَ உமது இறைவன் பக்கம்தான் يَوْمَٮِٕذِ அந்நாளில் اۨلْمُسْتَقَرُّ ؕ‏ இறுதியாக நிலையான தங்குமிடம்
75:12. இலா ரBப்Bபிக யவ்ம 'இதினில் முஸ்தகர்ர்
75:12. அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
75:13
75:13 يُنَبَّؤُا الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍۢ بِمَا قَدَّمَ وَاَخَّرَؕ‏
يُنَبَّؤُا அறிவிக்கப்படுவான் الْاِنْسَانُ மனிதன் يَوْمَٮِٕذٍۢ அந்நாளில் بِمَا قَدَّمَ தான் முந்தி செய்ததையும் وَاَخَّرَؕ‏ பிந்தி செய்ததையும்
75:13. யுனBப்Bப 'உல் இன்ஸானு யவ்ம 'இதிம் Bபிமா கத்தம வ அக்கர்
75:13. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
75:14
75:14 بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِيْرَةٌ ۙ‏
بَلِ மாறாக الْاِنْسَانُ மனிதன் عَلٰى نَفْسِهٖ அவனுக்கே بَصِيْرَةٌ ۙ‏ சாட்சியாக இருப்பான்
75:14. Bபலில் இன்ஸானு 'அலா னFப்ஸிஹீ Bபஸீரஹ்
75:14. எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.
75:15
75:15 وَّلَوْ اَلْقٰى مَعَاذِيْرَهٗؕ‏
وَّلَوْ اَلْقٰى அவன் கூறினாலும் مَعَاذِيْرَهٗؕ‏ தனது காரணங்களை
75:15. வ லவ் அல்கா ம'ஆதீரஹ்
75:15. அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
75:16
75:16 لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖؕ‏
لَا تُحَرِّكْ بِهٖ அசைக்காதீர்/இதற்கு لِسَانَكَ உமது நாவை لِتَعْجَلَ நீர் அவசரமாக செய்வதற்காக بِهٖؕ‏ இதை
75:16. லா துஹர்ரிக் Bபிஹீ லிஸா னக லிதஃஜல Bபிஹ்
75:16. (நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.
75:17
75:17 اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗۚ  ۖ‏
اِنَّ நிச்சயமாக عَلَيْنَا நம்மீது கடமையாகும் جَمْعَهٗ அதை ஒன்று சேர்ப்பதும் وَقُرْاٰنَهٗۚ ۖ‏ அதை ஓதவைப்பதும்
75:17. இன்ன 'அலய்னா ஜம்'அஹூ வ குர் ஆனஹ்
75:17. நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
75:18
75:18 فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ‌ۚ‏
فَاِذَا قَرَاْنٰهُ இதை நாம் ஓதினால் فَاتَّبِعْ நீர் பின்தொடர்வீராக! قُرْاٰنَهٗ‌ۚ‏ அது ஓதப்படுவதை
75:18. Fப இதா கரானாஹு Fபத்தBபிஃ குர் ஆனஹ்
75:18. எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
75:19
75:19 ثُمَّ اِنَّ عَلَيْنَا بَيَانَهٗؕ‏
ثُمَّ பிறகு اِنَّ நிச்சயமாக عَلَيْنَا நம்மீது கடமையாகும் بَيَانَهٗؕ‏ அதை விவரிப்பது
75:19. தும்ம இன்ன 'அலய்னா Bபயானஹ்
75:19. பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
75:20
75:20 كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۙ‏
كَلَّا அவ்வாறல்ல بَلْ மாறாக تُحِبُّوْنَ நீங்கள் நேசிக்கிறீர்கள் الْعَاجِلَةَ ۙ‏ உலக வாழ்க்கையை
75:20. கல்லா Bபல் துஹிBப்Bபூனல் 'ஆஜிலஹ்
75:20. எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
75:21
75:21 وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ؕ‏
وَتَذَرُوْنَ விட்டு விடுகிறீர்கள் الْاٰخِرَةَ ؕ‏ மறுமையை
75:21. வ ததரூனல் ஆகிரஹ்
75:21. ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
75:22
75:22 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاضِرَةٌ ۙ‏
وُجُوْهٌ சில முகங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் نَّاضِرَةٌ ۙ‏ செழிப்பாக இருக்கும்
75:22. வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதின் னாளிரஹ்
75:22. அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
75:23
75:23 اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ‌ ۚ‏
اِلٰى رَبِّهَا தமது இறைவனை نَاظِرَةٌ‌ ۚ‏ பார்த்துக் கொண்டிருக்கும்
75:23. இலா ரBப்Bபிஹா னாளிரஹ்
75:23. தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
75:24
75:24 وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍۢ بَاسِرَةٌ ۙ‏
وَوُجُوْهٌ இன்னும் சில முகங்கள் يَّوْمَٮِٕذٍۢ அந்நாளில் بَاسِرَةٌ ۙ‏ கருத்து காய்ந்துபோய் இருக்கும்
75:24. வ வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதிம் Bபாஸிரஹ்
75:24. ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
75:25
75:25 تَظُنُّ اَنْ يُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ؕ‏
تَظُنُّ அறிந்துகொள்ளும் اَنْ يُّفْعَلَ நிகழப்போகிறதுஎன்று بِهَا அதற்கு فَاقِرَةٌ ؕ‏ கடுமையான ஒரு பிரச்சனை
75:25. தளுன்னு அ(ன்)ய் யுFப்'அல Bபிஹா Fபாகிரஹ்
75:25. இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
75:26
75:26 كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِىَۙ‏
كَلَّاۤ அவ்வாறல்ல! اِذَا بَلَغَتِ உயிர் அடைந்தால் التَّرَاقِىَۙ‏ தொண்டைக் குழியை
75:26. கல்லா இதா Bபலகதித் தராகீ
75:26. அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-
75:27
75:27 وَقِيْلَ مَنْ ٚ رَاقٍۙ‏
وَقِيْلَ கேட்கப்பட்டால் مَنْ ٚ رَاقٍۙ‏ யாரும்/ஒதிப்பார்ப்பவர்
75:27. வ கீல மன் ராக்
75:27. “மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.
75:28
75:28 وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُۙ‏
وَّظَنَّ இன்னும் அறிந்து கொண்டால் اَنَّهُ நிச்சயமாக இது الْفِرَاقُۙ‏ பிரிவுதான்
75:28. வ ளன்ன அன்னஹுல் Fபிராக்
75:28. ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
75:29
75:29 وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ‏
وَالْتَفَّتِ பின்னிக்கொண்டால் السَّاقُ கெண்டைக் கால் بِالسَّاقِۙ‏ கெண்டைக் காலுடன்
75:29. வல்தFப்Fபதிஸ் ஸாகு Bபிஸ்ஸாக்
75:29. இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
75:30
75:30 اِلٰى رَبِّكَ يَوْمَٮِٕذِ اۨلْمَسَاقُؕ
اِلٰى رَبِّكَ உமது இறைவனிடமே يَوْمَٮِٕذِ அந்நாளில் اۨلْمَسَاقُؕ‏ ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம்
75:30. இலா ரBப்Bபிக யவ்ம'இதினில் மஸாக்
75:30. உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.  
75:31
75:31 فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ‏
فَلَا صَدَّقَ உண்மைப்படுத்தவில்லை وَلَا صَلّٰىۙ‏ தொழவும் இல்லை
75:31. Fபலா ஸத்தக வலா ஸல்லா
75:31. ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.
75:32
75:32 وَلٰڪِنْ كَذَّبَ وَتَوَلّٰىۙ‏
وَلٰڪِنْ எனினும் كَذَّبَ பொய்ப்பித்தான் وَتَوَلّٰىۙ‏ இன்னும் விலகிச் சென்றான்
75:32. வ லாகின் கத்தBப வ தவல்லா
75:32. ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
75:33
75:33 ثُمَّ ذَهَبَ اِلٰٓى اَهْلِهٖ يَتَمَطّٰىؕ‏
ثُمَّ பிறகு ذَهَبَ சென்றான் اِلٰٓى اَهْلِهٖ தனது குடும்பத்தாரிடம் يَتَمَطّٰىؕ‏ கர்வம் கொண்டவனாக
75:33. தும்ம தஹBப இலா அஹ்லிஹீ யதமத்தா
75:33. பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
75:34
75:34 اَوْلٰى لَكَ فَاَوْلٰىۙ‏
اَوْلٰى கேடுதான் لَكَ உனக்கு فَاَوْلٰىۙ‏ இன்னும் கேடுதான்
75:34. அவ்லா லக Fப அவ்லா
75:34. கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
75:35
75:35 ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰىؕ‏
ثُمَّ பிறகு(ம்) اَوْلٰى கேடுதான் لَكَ உனக்கு فَاَوْلٰىؕ‏ இன்னும் கேடுதான்
75:35. தும்ம அவ்லா லக Fப அவ்லா
75:35. பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
75:36
75:36 اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًىؕ‏
اَيَحْسَبُ எண்ணுகின்றானா الْاِنْسَانُ மனிதன் اَنْ يُّتْرَكَ விட்டு விடப்படுவான் என்று سُدًىؕ‏ சும்மா
75:36. அயஹ்ஸBபுல் இன்ஸானு அய் யுத்ரக ஸுதா
75:36. வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
75:37
75:37 اَلَمْ يَكُ نُطْفَةً مِّنْ مَّنِىٍّ يُّمْنٰىۙ‏
اَلَمْ يَكُ அவன் இருக்கவில்லையா? نُطْفَةً ஒரு துளி விந்தாக مِّنْ مَّنِىٍّ இந்திரியத்தின் يُّمْنٰىۙ‏ இந்திரியம் செலுத்தப்படுகின்றது
75:37. அலம் யகு னுத்Fபதம் மிம் மனிய்யி(ன்)ய் யும்னா
75:37. (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
75:38
75:38 ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰىۙ‏
ثُمَّ பிறகு كَانَ இருந்தான் عَلَقَةً கருவாக فَخَلَقَ ஆக, அவன் படைத்தான் فَسَوّٰىۙ‏ இன்னும் செம்மையாக ஆக்கினான்
75:38. தும்ம கான 'அலகதன் Fபகலக Fபஸவ்வா
75:38. பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
75:39
75:39 فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىؕ‏
فَجَعَلَ இன்னும் ஆக்கினான் مِنْهُ அதிலிருந்து الزَّوْجَيْنِ ஜோடிகளை الذَّكَرَ ஆண் وَالْاُنْثٰىؕ‏ இன்னும் பெண்
75:39. Fபஜ'அல மின்ஹுZஜ் Zஜவ்ஜய்னித் தகர வல் உன்தா
75:39. பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
75:40
75:40 اَلَيْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يُّحْـىَِۧ الْمَوْتٰى
اَلَيْسَ இல்லையா? ذٰلِكَ இவன் بِقٰدِرٍ ஆற்றல் உள்ளவனாக عَلٰٓى اَنْ يُّحْـىَِۧ உயிர்ப்பிப்பதற்கு الْمَوْتٰى இறந்தவர்களை
75:40. அலய்ஸ தாலிக Bபிகாதிரின் 'அலா அ(ன்)ய் யுஹ்யியல் மவ்தா
75:40. (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?