1. அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)
மக்கீ, வசனங்கள்: 7

1:1
1:1 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
بِسْمِ பெயரால் اللهِ அல்லாஹ்வின் الرَّحْمٰنِ பேரருளாளன் الرَّحِيْمِ பேரன்பாளன்
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஓதுகிறேன்)
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:1. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).
1:2
1:2 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தார்களின்
1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:2. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! (அவன்தான்) அகிலத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து தகுந்த முறையில் பக்குவப்படுத்துபவன்.
1:2. எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
1:2. அனைத்து புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது.
1:3
1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏
الرَّحْمٰنِ பேரருளாளன் الرَّحِيْمِۙ‏ பேரன்பாளன்
1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
1:3. (அவன்தான்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்,
1:3. அவன் மாபெருங் கருணையாளனாகவும், தனிப்பெருங்கிருபையாளனாகவும், இருக்கின்றான்.
1:3. (அவன்) அளவற்ற அருளாளன்; மிகக் கிருபையுடையவன்.
1:4
1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏
مٰلِكِ அதிபதி يَوْمِ நாளின் الدِّيْنِؕ‏ கூலி
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:4. தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே).
1:4. இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கின்றான்.
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி.
1:5
1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏
اِيَّاكَ உன்னையே نَعْبُدُ வணங்குவோம் وَاِيَّاكَ இன்னும் உன்னிடமே نَسْتَعِيْنُؕ‏ உதவி தேடுவோம்
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:5. (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
1:5. உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.
1:5. (எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6
1:6 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏
اِهْدِنَا எங்களை நேர்வழி நடத்து الصِّرَاطَ பாதையில் الْمُسْتَقِيْمَۙ‏ நேரான
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:6. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!
1:6. எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக!
1:6. நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!
1:7
1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏
صِرَاطَ பாதையில் الَّذِيْنَ எவர்கள் اَنْعَمْتَ அருள் புரிந்தாய் عَلَيْهِمْۙ‏ அவர்கள் மீது غَیْرِ அல்லாதவர்கள் الْمَغْضُوْبِ கோபிக்கப்பட்டவர்கள் عَلَیْهِمْ அவர்கள் மீது وَلَا இன்னும் இல்லை الضَّآلِّيْنَ‏ வழிகெட்டவர்கள்
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
1:7. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.
1:7. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி.
1:7. எவர்களின் மீது நீ அருள் புரிந்தாயோ அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக). (அவ்வழி உன்) கோபத்திற்கு உள்ளானவர்களுடையதும் அல்ல; வழி தவறியவர்களுடையதும் அல்ல.