10. ஸூரத்து யூனுஸ் (நபி)
மக்கீ, வசனங்கள்: 109

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
10:1
10:1 الٓر‌ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْحَكِيْمِ‏
الٓر‌ அலிஃப்; லாம்; றா تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் الْكِتٰبِ வேதத்தின் الْحَكِيْمِ‏ ஞானமிகுந்த(து)
10:1. அலிஃப், லாம், றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
10:1. அலிஃப் லாம் றா. இவை ஞானம் நிறைந்த இந்த வேதத்தின் வசனங்களாகும்.
10:1. அலிஃப், லாம், றா இவை, ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.
10:1. அலிஃப் லாம் றா. இவை தீர்க்கமான அறிவு நிறைந்த இவ்வேதத்தின் வசனங்களாகும்.
10:2
10:2 اَكَانَ لِلنَّاسِ عَجَبًا اَنْ اَوْحَيْنَاۤ اِلٰى رَجُلٍ مِّنْهُمْ اَنْ اَنْذِرِ النَّاسَ وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ عِنْدَ رَبِّهِمْؔ‌ؕ قَالَ الْكٰفِرُوْنَ اِنَّ هٰذَا لَسٰحِرٌ مُّبِيْنٌ‏
اَكَانَ இருக்கிறதா? لِلنَّاسِ மனிதர்களுக்கு عَجَبًا ஆச்சரியமாக اَنْ اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தது اِلٰى رَجُلٍ ஒரு மனிதருக்கு مِّنْهُمْ அவர்களில் اَنْ என்று اَنْذِرِ எச்சரிப்பீராக النَّاسَ மனிதர்களை وَبَشِّرِ இன்னும் நற்செய்தி கூறுவீராக الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கை கொண்டவர்களுக்கு اَنَّ நிச்சயமாக لَهُمْ அவர்களுக்கு قَدَمَ صِدْقٍ நற்கூலி عِنْدَ இடத்தில் رَبِّهِمْؔ‌ؕ தங்கள் இறைவன் قَالَ கூறினார்(கள்) الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் اِنَّ நிச்சயமாக هٰذَا இவர் لَسٰحِرٌ சூனியக்காரர்தான் مُّبِيْنٌ‏ தெளிவான
10:2. மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, “நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே” என்று கூறுகின்றனர்.
10:2. (நபியே!) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் ஒருவருக்கு வஹ்யி மூலம் நாம் கட்டளையிடுவது இம்மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? (நபியே!) நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தங்கள் இறைவனிடத்தில் பெரும் பதவி உண்டென்று நற்செய்தி கூறுங்கள். எனினும், (இவ்வாறு நீர் கூறுவதைப் பற்றி) இந்நிராகரிப்பவர்கள் உங்களை சந்தேகமற்ற ஒரு சூனியக்காரர்தான் என்று கூறுகின்றனர்.
10:2. (அலட்சியத்தில் மூழ்கியிருக்கும்) மக்களை எச்சரிப்பீராக என்றும், ஈமான் நம்பிக்கை கொள்வோர்க்கு அவர்களின் இறைவனிடம் உண்மையான மதிப்பும் கண்ணியமும் உண்டு என்று நற்செய்தி அறிவிப்பீராக என்றும் அவர்களிலிருந்தே ஒரு மனிதருக்கு நாம் வஹி அனுப்பியது அவர்களுக்கு வியப்பாய் இருக்கிறதா? இதனைக் கண்டு இறைநிராகரிப்பாளர்கள் “இவர் ஒரு வெளிப்படையான சூனியக்காரர்” என்று கூறினார்கள்.
10:2. (நபியே!) மனிதர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! (என்றும்) விசுவாசங்கொண்டார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக அவர்களுக்குத் தங்கள் இரட்சகனிடத்தில் பெரும் பதவியுண்டென்று நீர் நன்மாராயமும் கூறுவீராக! என்று அவர்களில் ஒரு மனிதருக்கு நாம் வஹீ அறிவித்தது மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதா? “நிச்சயமாக இவர் தெளிவான ஒரு சூனியக்காரர்” என்று நிராகரிப்போர் கூறினர்.
10:3
10:3 اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ‌ يُدَبِّرُ الْاَمْرَ‌ؕ مَا مِنْ شَفِيْعٍ اِلَّا مِنْۢ بَعْدِ اِذْنِهٖ‌ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ فَاعْبُدُوْهُ‌ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ‏
اِنَّ رَبَّكُمُ நிச்சயமாகஉங்கள் இறைவன் اللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எத்தகையவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ இன்னும் பூமியையும் فِىْ இல் سِتَّةِ ஆறு اَيَّامٍ நாள்கள் ثُمَّ பிறகு اسْتَوٰى உயர்ந்து விட்டான் عَلَى மீது الْعَرْشِ‌ அர்ஷ் يُدَبِّرُ நிர்வகிக்கிறான் الْاَمْرَ‌ؕ காரியத்தை مَا مِنْ அறவே இல்லை شَفِيْعٍ பரிந்துரைப்பவர் اِلَّا தவிர مِنْۢ بَعْدِ பின்னரே اِذْنِهٖ‌ ؕ அவனுடைய அனுமதிக்கு ذٰ لِكُمُ அந்த اللّٰهُ அல்லாஹ்தான் رَبُّكُمْ உங்கள் இறைவன் فَاعْبُدُوْ ஆகவே வணங்குங்கள் هُ‌ ؕ அவனை اَفَلَا تَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
10:3. நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
10:3. (மனிதர்களே!) உங்கள் இறைவனாகிய அந்த அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்து ‘அர்ஷின்' மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (இவை சம்பந்தப்பட்ட) எல்லா காரியங்களையும் அவனே திட்டமிட்டு (நிர்வகித்து)ம் வருகிறான். அவனுடைய அனுமதியின்றி (உங்களுக்காக அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து காக்கும் இறைவன். ஆகவே, அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவற்றை) நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
10:3. உண்மை யாதெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உங்கள் அதிபதி; அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் ஆட்சி பீடத்தில் அமர்ந்து (பேரண்டத்தின்) அனைத்துச் செயல்பாடுகளையும் நிர்வகித்து வருகின்றான். எந்தப் பரிந்துரையாளரும் அவனது அனுமதி பெறாமல் பரிந்துரைக்க முடியாது! இத்தகைய அல்லாஹ்தான் உங்கள் அதிபதி ஆவான். எனவே, அவனையே வணங்குங்கள்! நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
10:3. நிச்சயமாக உங்களுடைய இரட்சகன் அல்லாஹ்தான், அவன் எத்தகையவனென்றால் வானங்களை மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின்மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான், (இவைகள் பற்றிய சகல காரியங்களையும் அவனே (திட்டமிட்டு) நிர்வகிக்கின்றான், அவனுடைய அனுமதிக்குப் பின்னரே தவிர (அவனிடம்) பரிந்துரைப்போர் எவருமில்லை, அவன்தான் உங்கள் ரட்சகனாகிய அல்லாஹ்! ஆகவே, அவனையே நீங்கள் வணங்குங்கள், நீங்கள் நினைவு கூறமாட்டீர்களா?
10:4
10:4 اِلَيْهِ مَرْجِعُكُمْ جَمِيْعًا ‌ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا‌ ؕ اِنَّهٗ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ بِالْقِسْطِ‌ؕ وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيْمٍ وَّعَذَابٌ اَلِيْمٌۢ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ‏
اِلَيْهِ அவனிடமே مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் جَمِيْعًا ؕ அனைவரின் وَعْدَ வாக்குறுதி اللّٰهِ அல்லாஹ்வுடைய حَقًّا‌ ؕ உண்மையே اِنَّهٗ நிச்சயமாக அவன் يَـبْدَؤُا ஆரம்பிக்கிறான் الْخَـلْقَ படைப்பை ثُمَّ பிறகு يُعِيْدُهٗ மீட்கிறான்/அதை لِيَجْزِىَ கூலி கொடுப்பதற்காக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ நற்செயல்களை بِالْقِسْطِ‌ؕ நீதமாக وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لَهُمْ அவர்களுக்கு شَرَابٌ குடிபானம் مِّنْ حَمِيْمٍ முற்றிலும் கொதித்தவற்றிலிருந்து وَّعَذَابٌ இன்னும் வேதனையும் اَلِيْمٌۢ துன்புறுத்தும் بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَكْفُرُوْنَ‏ நிராகரிக்கின்றனர்
10:4. நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.
10:4. இறந்த பின்னர் நீங்கள் அனைவரும் அவனிடமே செல்ல வேண்டியதிருக்கிறது. அல்லாஹ்வுடைய இவ்வாக்குறுதி உண்மையானதே! நிச்சயமாக அவன்தான் படைப்புகளை முதல் தடவையும் உற்பத்தி செய்கிறான். (இறந்த பின் மறுமுறையும்) அவர்களை உயிர்ப்பித்து, அவர்களில் நம்பிக்கைகொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக (நற்)கூலி கொடுக்கிறான். (இதை) எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையாக கொதித்த நீர்தான் (மறுமையில்) குடிக்கக் கிடைக்கும். (இதை) நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
10:4. நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. இது அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதியாகும். நிச்சயமாக படைப்புகளை முதன் முறையாக அவனே படைக்கின்றான். பின்னர், மறுமுறையும் அவனே அவற்றைப் படைப்பான்; ஏனெனில், இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோருக்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக! மேலும், எவர்கள் இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டார்களோ அவர்கள் (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கொதிக்கும் நீரைக் குடிப்பார்கள்; துன்புறுத்தும் தண்டனையை அனுபவிப்பார்கள்.
10:4. அவன் பக்கமே அனைவரின் திரும்பிச் செல்லுதல் இருக்கிறது, அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானது, நிச்சயமாக – அவன்(தான்) படைப்பினங்களை முதல் தடவை (படைக்க) ஆரம்பிக்கிறான், பின்னர், விசுவாசித்து- நற்கருமங்களையும் செய்தோருக்கு நீதமாக (நற்) கூலி கொடுப்பதற்காக (இறந்தபின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி) அவற்றை மீட்டுவான், இன்னும் நிராகரிக்கின்றார்களே அத்தகையோர் அவர்களுக்கு அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக முடிவுறக் காய்ந்த (கொதிநீரின்) பானமும் – மிகத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
10:5
10:5 هُوَ الَّذِىْ جَعَلَ الشَّمْسَ ضِيَآءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَهٗ مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَ‌ؕ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَـقِّ‌ۚ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
هُوَ அவனே الَّذِىْ எத்தகையவன் جَعَلَ ஆக்கினான் الشَّمْسَ சூரியனை ضِيَآءً ஒளியாக(வும்) وَّالْقَمَرَ இன்னும் சந்திரனை نُوْرًا வெளிச்சமாக(வும்) وَّقَدَّرَ இன்னும் நிர்ணயித்தான் هٗ அதை مَنَازِلَ தங்குமிடங்களில் لِتَعْلَمُوْا நீங்கள் அறிவதற்காக عَدَدَ எண்ணிக்கையையும் السِّنِيْنَ ஆண்டுகளின் وَالْحِسَابَ‌ؕ இன்னும் கணக்கையும் مَا خَلَقَ படைக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் ذٰلِكَ இவற்றை اِلَّا தவிர بِالْحَـقِّ‌ۚ உண்மையானதற்கே يُفَصِّلُ விவரிக்கின்றான் الْاٰيٰتِ அத்தாட்சிகளை لِقَوْمٍ சமுதாயத்திற்கு يَّعْلَمُوْنَ‏ அறிகிறார்கள்
10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
10:5. அவனே சூரியனை ஒளியாகவும் (பிரகாசமாகவும்), சந்திரனை (அழகிய) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவற்றுக்கு (மாறிமாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக்கூடிய மக்களுக்காக(த் தன் ஆற்றலுக்குரிய) சான்றுகளை இவ்வாறு விவரிக்கிறான்.
10:5. அவனே, சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான்; சந்திரனுக்கு ஒளியைக் கொடுத்தான். மேலும், வளர்ந்து தேயும் நிலைகளைச் சந்திரனுக்கு நிர்ணயம் செய்தான்; இவற்றின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக! இவற்றையெல்லாம் அல்லாஹ் சத்தியத்துடனேயே படைத்துள்ளான். அறிவுடைய மக்களுக்கு அவன் தன் சான்றுகளைத் தெளிவாக விளக்குகின்றான்.
10:5. அவன் எத்தகையவனென்றால், சூரியனை மின்னும் ஒளி மிகுந்ததாகவும், சந்திரனை (வெளிச்சந்தரக்கூடிய) பிரகாசமாகவும் ஆக்கினான், இன்னும் வருடங்களின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக (சந்திரனாகிய) அதற்கு தங்குமிடங்களையும், அவன் ஏற்படுத்தினான், உண்மையைக் கொண்டே தவிர இவைகளை அல்லாஹ் படைக்கவில்லை, அறியக்கூடிய சமூகத்தார்க்கு சான்றுகளை (இவ்வாறு) அவன் விவரிக்கின்றான்.
10:6
10:6 اِنَّ فِى اخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّتَّقُوْنَ‏
اِنَّ நிச்சயமாக فِى اخْتِلَافِ மாறுவதில் الَّيْلِ இரவு وَالنَّهَارِ இன்னும் பகல் وَمَا இன்னும் எது خَلَقَ படைத்தான் اللّٰهُ அல்லாஹ் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ இன்னும் பூமி لَاٰيٰتٍ (உ) அத்தாட்சிகள் لِّـقَوْمٍ மக்களுக்கு يَّتَّقُوْنَ‏ அல்லாஹ்வை அஞ்சுகின்றனர்
10:6. நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
10:6. இரவு பகல் மாறிமாறி வருவதிலும், வானங்கள் இன்னும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் இறையச்சமுடைய மக்களுக்கு (நல்லுணர்வூட்டும்) பல சான்றுகள் நிச்சயமாக இருக்கின்றன.
10:6. திண்ணமாக, இரவு பகல் மாறி மாறி வருவதிலும்; வானங்கள் மற்றும் பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் (தவறான நோக்கிலிருந்தும் நடத்தையிலிருந்தும்) தவிர்ந்து கொள்ள நாடும் மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.
10:6. நிச்சயமாக இரவு மற்றும் பகல் (ஒன்றன்பின் ஒன்றாக) மாறி மாறி வருவதிலும், வானங்களில், மற்றும், பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் பயபக்தியுடைய சமூகத்தார்க்குப் பல சான்றுகள் திட்டமாக இருக்கின்றன.
10:7
10:7 اِنَّ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَآءَنَا وَرَضُوْا بِالْحَيٰوةِ الدُّنْيَا وَاطْمَاَنُّوْا بِهَا وَالَّذِيْنَ هُمْ عَنْ اٰيٰتِنَا غٰفِلُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் لَا يَرْجُوْنَ ஆதரவு வைக்க மாட்டார்கள் لِقَآءَنَا நம் சந்திப்பை وَرَضُوْا இன்னும் விரும்பினர் بِالْحَيٰوةِ வாழ்க்கையை الدُّنْيَا இவ்வுலகம் وَاطْمَاَنُّوْا இன்னும் நிம்மதியடைந்தனர் بِهَا அதைக் கொண்டு وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் عَنْ விட்டு اٰيٰتِنَا நம் வசனங்கள் غٰفِلُوْنَۙ‏ அலட்சியமானவர் களாக
10:7. நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ -
10:7. நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை (ஒரு சிறிதும்) நம்பாது இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதைக் கொண்டு திருப்தியடைந்து (அதிலேயே மூழ்கி) விட்டார்களோ அவர்களும், இன்னும் எவர்கள் நம் வசனங்களை (புறக்கணித்து) விட்டுப் பராமுகமாக இருக்கின்றனரோ அவர்களும்,
10:7. உண்மை யாதெனில், எவர்கள் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பவில்லையோ, மேலும், உலக வாழ்க்கையில் மனநிறைவு கொண்டு அதிலே முழு நிம்மதியும் அடைந்தார்களோ, மற்றும் எவர்கள் நம்முடைய சான்றுகளைக் குறித்து அலட்சியமாக இருக்கின்றார்களோ
10:7. நிச்சயமாக நம்முடைய சந்திப்பில் ஆர்வம் கொள்ளாது, இவ்வுலக வாழ்க்கையை பொருந்திக்கொண்டு, இன்னும் அதனைக் கொண்டு திருப்தியடைந்து (அதிலேயே மூழ்கியும்) விட்டார்களே அவர்களும், இன்னும் நம் வசனங்களைப்(புறக்கணித்து) விட்டு மறந்தவர்களாக இருக்கின்றனரே அவர்களும் - (ஆகிய)
10:8
10:8 اُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمُ النَّارُ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் مَاْوٰٮهُمُ அவர்களுடைய தங்குமிடம் النَّارُ நரகம்தான் بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَكْسِبُوْنَ‏ செய்கிறார்கள்
10:8. அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.
10:8. (ஆகிய) இவர்கள், இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்.
10:8. அவர்களின் புகலிடம் (தங்களின் தவறான கொள்கைகள் மற்றும் நடைமுறையினால்) அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளின் காரணமாக நரகமாகும்.
10:8. அத்தகையோர், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகந்தான்.
10:9
10:9 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ يَهْدِيْهِمْ رَبُّهُمْ بِاِيْمَانِهِمْ‌ۚ تَجْرِىْ مِنْ تَحْتِهِمُ الْاَنْهٰرُ فِىْ جَنّٰتِ النَّعِيْمِ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَ عَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ நற்செயல்களை يَهْدِيْهِمْ நேர்வழி செலுத்துவான்/அவர்களை رَبُّهُمْ இறைவன்/அவர்களுடைய بِاِيْمَانِهِمْ‌ۚ அவர்களின் நம்பிக்கையின் காரணமாக تَجْرِىْ ஓடுகின்ற مِنْ تَحْتِهِمُ அவர்களுக்குக் கீழ் الْاَنْهٰرُ நதிகள் فِىْ جَنّٰتِ சொர்க்கங்களில் النَّعِيْمِ‏ இன்பமிகு
10:9. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
10:9. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை அவர்களுடைய இறைவன் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மிக்க இன்பம் தரும் சொர்க்கங்களுக்குரிய வழியில் செலுத்துகிறான்.
10:9. ஆனால், உண்மையில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு (அதாவது, இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்ட சத்தியங்களை ஏற்றுக்கொண்டு) நற்செயல்கள் புரிந்து கொண்டிருந்தார்களோ அவர்களை, அவர்களின் ஈமான் நம்பிக்கையின் காரணத்தால் அவர்களுடைய இறைவன் நேர்வழியில் செலுத்துவான். அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில், அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;
10:9. நிச்சயமாக விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்கிறார்களே அத்தகையோர் அவர்களுடைய இரட்சகன் அவர்களின், விசுவாசத்தின் காரணமாக அவர்களுக்கு நேர்வழி காட்டுவான், இன்பந்தரும் சுவனங்களில் (வசிக்கும்) அவர்களுக்குக்கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.
10:10
10:10 دَعْوٰٮهُمْ فِيْهَا سُبْحٰنَكَ اللّٰهُمَّ وَ تَحِيَّـتُهُمْ فِيْهَا سَلٰمٌ‌ۚ وَاٰخِرُ دَعْوٰٮهُمْ اَنِ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
دَعْوٰٮهُمْ அவர்களின் பிரார்த்தனை فِيْهَا அதில் سُبْحٰنَكَ நீ மிகப் பரிசுத்தமானவன் اللّٰهُمَّ அல்லாஹ்வே وَ تَحِيَّـتُهُ இன்னும் அவர்களின் முகமன் فِيْهَا அதில் سَلٰمٌ‌ۚ ஸலாம் وَاٰخِرُ இறுதி دَعْوٰٮهُمْ பிரார்த்தனையின்/அவர்களுடைய اَنِ الْحَمْدُ நிச்சயமாக புகழ் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
10:10. அதில் அவர்கள்: “(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். “எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.
10:10. அதில் அவர்கள் (நுழைந்ததும்) ‘‘எங்கள் இறைவனே! நீ மிகப் பரிசுத்தமானவன்; (நீ மிகப் பரிசுத்தமானவன்)'' என்று கூறுவார்கள். அதில் (தங்கள் தோழர்களைச் சந்திக்கும்போதெல்லாம்) ‘‘ஸலாமுன் (அலைக்கும்)'' என்று முகமன் கூறுவார்கள். முடிவில் ‘‘புகழனைத்தும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து வளர்த்து பரிபாலிக்கின்றவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமானது'' என்று புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள்.
10:10. “இறைவா! நீயே தூய்மையானவன்” என்பதே அங்கு அவர்களின் துதியாக இருக்கும். மேலும், “சாந்தி நிலவட்டும்!” என்பதே அவர்களின் வாழ்த்தாக இருக்கும். மேலும், “அகிலத்தார்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!” என்பதே அவர்களுடைய அனைத்து விஷயங்களின் முடிவுரையாக இருக்கும்.
10:10. அவற்றில் அவர்களின் பிரார்த்தனையாகிறது “எங்கள் அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன் என்பதாகும், அதில் (ஒருவர் மற்றவருக்கு கூறும்) அவர்களுடைய காணிக்ககையாவது “ஸலாமுன் (சாந்தி உண்டாவதாக)” என்பதாகும், இன்னும் புகழனைத்தும், அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது” என்பது அவர்களுடைய பிரார்த்தனையின் முடிவாக இருக்கும்.
10:11
10:11 وَلَوْ يُعَجِّلُ اللّٰهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالْخَيْرِ لَـقُضِىَ اِلَيْهِمْ اَجَلُهُمْ‌ؕ فَنَذَرُ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَآءَنَا فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ‏
وَلَوْ يُعَجِّلُ அவசரப்படுத்தினால் اللّٰهُ அல்லாஹ்(வும்) لِلنَّاسِ மனிதர்களுக்கு الشَّرَّ தீங்கை اسْتِعْجَالَهُمْ அவர்கள் அவசரப்படுவதுபோல் بِالْخَيْرِ நன்மையை لَـقُضِىَ முடிக்கப்பட்டிருக்கும் اِلَيْهِمْ அவர்களுக்கு اَجَلُهُمْ‌ؕ தவணைக் காலம்/ அவர்களுடைய فَنَذَرُ ஆகவே விட்டுவிடுகிறோம் الَّذِيْنَ எவர்கள் لَا يَرْجُوْنَ ஆதரவு வைக்க மாட்டார்கள் لِقَآءَنَا நம் சந்திப்பை فِىْ இல் طُغْيَانِهِمْ அவர்களுடைய வழிகேடு يَعْمَهُوْنَ‏ கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
10:11. நன்மையை அடைய மக்கள் அவசரப்படுவது போன்று அல்லாஹ்வும் (குற்றம் புரிந்த) மக்களுக்கு தீங்கிழைக்க அவசரப்பட்டால், இதற்குள் நிச்சயமாக அவர்களுடைய காலம், அவர்களுக்கு முடிவு பெற்றேயிருக்கும்; எனினும் நம் சந்திப்பை(ச் சிறிதும்) நம்பாதவர்களை, அவர்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து அலையுமாறு (சிறிது காலம் இம்மையில்) நாம் விட்டு வைக்கிறோம்.
10:11. நன்மையை அடைய (மனிதர்கள்) அவசரப்படுவதைப் போல் அல்லாஹ்வும் (குற்றம் செய்த) மனிதர்களுக்குத் தீங்கிழைக்க அவசரப்பட்டால் (இதுவரை) நிச்சயமாக அவர்களுடைய காலம் முடிவு பெற்றேயிருக்கும். ஆகவே, (மறுமையில்) நம்மைச் சந்திக்க வேண்டியதிருக்கிறது என்பதை (ஒரு சிறிதும்) நம்பாதவர்களை அவர்களுடைய வழிகேட்டிலேயே தட்டழிந்து கெட்டலையும்படி (இம்மையில் சிறிது காலம்) நாம் விட்டு வைக்கிறோம்.
10:11. மனிதர்கள் (உலகின்) நன்மைகளைக் கோருவதில் எந்த அளவு அவசரப்படுகின்றார்களோ அந்த அளவு மனிதர்களுக்குத் தீங்கிழைப்பதில் அல்லாஹ்வும் அவசரங் காட்டினால், அவர்களின் செயல்பாட்டிற்கான அவகாசம் என்றைக்கோ முடிக்கப்பட்டு விட்டிருக்கும். (ஆனால் இது நமது நியதி அல்ல.) எனவே, எவர்கள் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பவில்லையோ அவர்களை அவர்களின் வரம்பு மீறிய செயல்களிலேயே உழன்று கொண்டிருக்கும்படி நாம் விட்டுவிடுகின்றோம்.
10:11. மனிதர்களுக்கு நன்மையை அடைய அவர்கள் அவசரப்படுவதைப்போல், (கோபத்தில் மனிதர்கள், தங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதகமாக பிரார்த்தித்துக் கேட்ட) தீமையை (அவர்களுக்கு) அல்லாஹ்வும் அவசரப்பட்டிருந்தால் (இது வரையில்) நிச்சயமாக அவர்களுடைய காலம் அவர்களுக்கு முடிக்கப் பெற்றே இருக்கும; ஆகவே, நம்முடைய சந்திப்பை (அதன் மூலம் ஏற்படும் தண்டனையை) பயப்படாதவர்களை, அவர்களுடைய வழிகேட்டிலேயே தட்டழிந்து கெட்டலையும்படி (இம்மையில்) நாம், விட்டுவிடுகிறோம்.
10:12
10:12 وَاِذَا مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖۤ اَوْ قَاعِدًا اَوْ قَآٮِٕمًا ۚ فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ يَدْعُنَاۤ اِلٰى ضُرٍّ مَّسَّهٗ‌ؕ كَذٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِيْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
وَاِذَا مَسَّ தீண்டினால் الْاِنْسَانَ மனிதனை الضُّرُّ துன்பம் دَعَا பிரார்த்திக்கிறான் نَا நம்மிடம் لِجَنْۢبِهٖۤ அவன் தன் விலாவின் மீது اَوْ அல்லது قَاعِدًا உட்கார்ந்தவனாக اَوْ அல்லது قَآٮِٕمًا ۚ நின்றவனாக فَلَمَّا كَشَفْنَا நாம் நீக்கிவிட்டபோது عَنْهُ அவனை விட்டு ضُرَّهٗ அவனுடைய துன்பத்தை مَرَّ செல்கின்றான் كَاَنْ لَّمْ يَدْعُنَاۤ அவன் நம்மை அழைக்காதது போன்று اِلٰى ضُرٍّ துன்பத்திற்கு مَّسَّهٗ‌ؕ தீண்டியது/அவனை كَذٰلِكَ இவ்வாறு زُيِّنَ அலங்கரிக்கப்பட்டன لِلْمُسْرِفِيْنَ வரம்பு மீறிகளுக்கு مَا எவை كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்கின்றனர்
10:12. மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.
10:12. மனிதனுக்கு ஒரு தீங்கேற்பட்டால் (அதை நீக்கும்படி) அவன் தன் (படுத்த) படுக்கையிலும், (உட்கார்ந்த) இருப்பிலும், (நின்ற) நிலையிலும் நம்மிடமே பிரார்த்திக்கிறான். ஆனால், அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கிவிட்டாலோ அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்த்தனையே செய்யாதவனைப் போல் (புறக்கணித்துச்) சென்று விடுகிறான்.வரம்பு மீறுகின்ற (இவர்களுக்கு) இவர்கள் செய்யும் காரியங்கள் இவ்வாறு அழகாக்கப்பட்டு விட்டன.
10:12. மனிதனின் நிலை எவ்வாறு உள்ளதெனில், அவனுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், நின்றும், உட்கார்ந்தும், படுத்தும் நம்மிடம் பிரார்த்திக்கின்றான். ஆனால், நாம் அவனுடைய துன்பத்தை அவனை விட்டு நீக்கிவிடும் போது, அவன் தனக்கு ஏற்பட்டிருந்த துன்பத்திற்காக எப்போதுமே நம்மிடம் பிரார்த்திக்காதவன் போல் சென்று விடுகின்றான்! வரம்பு மீறி நடப்பவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் இவ்வாறே அழகாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
10:12. மனிதனை துன்பம் தீண்டுமானால் (அதனை நீக்குமாறு) அவன் (சாய்ந்து) படுத்தவனாக, அல்லது உட்கார்ந்தவனாக, அல்லது நின்றவனாக நம்மை அவன் (பிரார்த்தித்து) அழைக்கிறான், பின்னர், அவனுடைய துன்பத்தை அவனைவிட்டு நாம் நீக்கிவிட்டோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்த்தனையே செய்யாதது போல் (புறக்கணித்துச்) சென்று விடுகிறான், வரம்பு மீறுவோருக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)து இவ்வாறு அலங்காரமாக ஆக்கப்பட்டுவிட்டது.
10:13
10:13 وَلَقَدْ اَهْلَـكْنَا الْـقُرُوْنَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوْا ‌ ۙ وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ وَمَا كَانُوْا لِيُـؤْمِنُوْا ‌ ؕ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ‏
وَلَقَدْ اَهْلَـكْنَا திட்டமாக அழித்துவிட்டோம் الْـقُرُوْنَ தலைமுறைகளை مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னிருந்த لَمَّا ظَلَمُوْا ۙ அவர்கள் அநியாயம் செய்தபோது وَجَآءَتْهُمْ இன்னும் வந்தனர்/அவர்களிடம் رُسُلُهُمْ தூதர்கள்/ அவர்களுடைய بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளை கொண்டு وَمَا كَانُوْا لِيُـؤْمِنُوْا ؕ அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை كَذٰلِكَ இவ்வாறே نَجْزِى நாம் கூலி கொடுப்போம் الْقَوْمَ மக்களுக்கு الْمُجْرِمِيْنَ‏ குற்றம்புரிகின்றவர்கள்
10:13. (மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம்; அவர்களிடம் அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம்.
10:13. (மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பினரை அவர்கள் செய்து கொண்டிருந்த அநியாயத்தின் காரணமாக நிச்சயமாக நாம் அழித்துவிட்டோம். அவர்களிடம் அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்தனர். எனினும் (அவற்றை) அவர்கள் நம்பவேயில்லை. குற்றம் செய்யும் மற்ற மக்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடு(த்துத் தண்டி)ப்போம்.
10:13. (மக்களே) உங்களுக்கு முன்னர் வாழ்ந்த பல சமுதாயத்தார்களை அவர்கள் கொடுமைகள் புரிந்தபோது நாம் அழித்துவிட்டோம். அவர்களிடமோ அவர்களின் தூதர்கள் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தனர்; ஆயினும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவே இல்லை. இவ்வாறே குற்றம் புரியும் கூட்டத்தாருக்கு அவர்களின் குற்றத்திற்கான கூலியை நாம் அளிக்கின்றோம்.
10:13. மேலும், (மனிதர்களே!) உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினரை, அவர்கள் அநியாயம் செய்துவிட்டபோது திட்டமாக நாம் அழித்துவிட்டோம், அவர்களிடம் (நம்மால்) அனுப்பப்பட்ட அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளையே கொண்டுவந்தனர். (அவற்றை) அவர்கள் நம்புபவர்களாகவும் இல்லை, குற்றவாளிகளான சமூகத்தினருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுத்துத் தண்டி)க்கின்றோம்.
10:14
10:14 ثُمَّ جَعَلْنٰكُمْ خَلٰٓٮِٕفَ فِى الْاَرْضِ مِنْۢ بَعْدِهِمْ لِنَـنْظُرَ كَيْفَ تَعْمَلُوْنَ‏
ثُمَّ பிறகு جَعَلْنٰكُمْ ஆக்கினோம்/ உங்களை خَلٰٓٮِٕفَ பிரதிநிதிகளாக فِى الْاَرْضِ பூமியில் مِنْۢ بَعْدِهِمْ அவர்களுக்குப் பின்னர் لِنَـنْظُرَ நாம் கவனிப்பதற்காக كَيْفَ எப்படி تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்கிறீர்கள்
10:14. நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னால் பூமியிலே உங்களை நாம் பின்தோன்றல்களாக ஆக்கினோம்.
10:14. அவர்களுக்குப் பின்னர் நாம் உங்களை (அவர்களுடைய) பூமிக்கு அதிபதிகளாக்கி, நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கவனித்து வருகிறோம்.
10:14. பின்னர், அவர்களுக்குப் பிறகு பூமியில் அவர்களுடைய இடத்தில் இப்பொழுது உங்களை அமர்த்தினோம்; நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக!
10:14. பின்னர், நீங்கள் எவ்வாறு செய்கின்றீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக பூமியில் அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுக்கு) பின் தோன்றல்களாக நாம் ஆக்கினோம்.
10:15
10:15 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيَاتُنَا بَيِّنٰتٍ‌ ۙ قَالَ الَّذِيْنَ لَا يَرْجُوْنَ لِقَآءَنَا ائْتِ بِقُرْاٰنٍ غَيْرِ هٰذَاۤ اَوْ بَدِّلْهُ‌ ؕ قُلْ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اُبَدِّلَهٗ مِنْ تِلْقَآئِ نَـفْسِىْ ۚ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰۤى اِلَىَّ‌ ۚ اِنِّىْۤ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّىْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
وَاِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ இவர்கள் மீது اٰيَاتُنَا வசனங்கள்/நம் بَيِّنٰتٍ‌ ۙ தெளிவான(வை) قَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ لَا يَرْجُوْنَ எவர்கள்/ஆதரவு வைக்கமாட்டார்கள் لِقَآءَنَا நம் சந்திப்பை ائْتِ வாரீர் بِقُرْاٰنٍ ஒரு குர்ஆனைக் கொண்டு غَيْرِ அல்லாத هٰذَاۤ இது اَوْ அல்லது بَدِّلْهُ‌ ؕ மாற்றுவீராக/அதை قُلْ கூறுவீராக مَا يَكُوْنُ لِىْۤ முடியாது/என்னால் اَنْ நான்மாற்றுவது اُبَدِّلَهٗ அதை مِنْ تِلْقَآئِ புறத்திலிருந்து نَـفْسِىْ ۚ என் اِنْ اَتَّبِعُ பின்பற்ற மாட்டேன் اِلَّا தவிர مَا எது يُوْحٰۤى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَىَّ‌ ۚ எனக்கு اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اِنْ عَصَيْتُ நான் மாறுசெய்தால் رَبِّىْ என் இறைவனுக்கு عَذَابَ வேதனையை يَوْمٍ நாளின் عَظِيْمٍ‏ மகத்தான
10:15. அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், “இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்” என்று கூறுகிறார்கள். அதற்கு “என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:15. (முன்னர் அழிந்து விட்டவர்களின் இடத்தில் அமர்த்தப்பட்ட) இவர்களுக்கு நம் தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (மறுமையில்) நம்மைச் சந்திப்பதை நம்பாத இவர்கள் (உம்மை நோக்கி) ‘‘இது அல்லாத வேறொரு குர்ஆனை நீர் கொண்டு வருவீராக; அல்லது எங்கள் இஷ்டப்படி இதை மாற்றிவிடுவீராக'' என்று கூறுகின்றனர். (அதற்கு அவர்களை நோக்கி ‘‘உங்கள் விருப்பத்திற்காக) நானே (என் இஷ்டப்படி) இதை மாற்றிவிட எனக்கு எவ்வித சக்தியுமில்லை. வஹ்யி மூலம் எனக்கு அறிவிக்கப்படுபவற்றைத் தவிர, (வேறொன்றையும்) நான் பின்பற்றுவதற்கில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளுடைய வேதனைக்கு (ஆளாக வேண்டியதேற்படும் என்று) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்'' என்று (நபியே!) கூறுவீராக.
10:15. மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் நம்மைச் சந்திக்க இருப்பதை நம்பாதவர்கள், “இதைத் தவிர வேறொரு குர்ஆனைக் கொண்டு வாரும்; அல்லது இதில் கொஞ்சம் மாற்றம் செய்யும்!” என்று கூறுகிறார்கள். (நபியே!) நீர் கூறும்: “என் விருப்பப்படி அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்வது என் பணியல்ல. எனக்கு அறிவிக்கப்படுகின்ற இறைச்செய்தியைத்தான் நான் பின்பற்றுகின்றேன். நான் என் இறைவனுக்கு மாறு செய்தால் ஒரு மாபெரும் பயங்கர நாளின் வேதனைக்கு அஞ்சுகின்றேன்.”
10:15. மேலும், அவர்கள் மீது நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், (மறுமையில்) நம்முடைய சந்திப்பை (அதன்மூலம் ஏற்படும் தண்டனையை) பயப்படாத (இ)வர்கள் “இதல்லாத (வேறொரு) குர் ஆனை நீர் கொண்டுவாரும் அல்லது (நாங்கள் விரும்புகிறவாறு) இதனை மாற்றிவிடும்” என்று கூறுகின்றனர், (அதற்கு “நீங்கள் விரும்புகின்றவாறு) நான் என் புறத்திலிருந்து இதனை மாற்றிவிட எனக்கு எவ்வித உரிமையுமில்லை, எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை, என்னுடைய இரட்சகனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளுடைய வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
10:16
10:16 قُلْ لَّوْ شَآءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَيْكُمْ وَلَاۤ اَدْرٰٮكُمْ بِهٖ ‌ۖ  فَقَدْ لَبِثْتُ فِيْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
قُلْ கூறுவீராக لَّوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் مَا நான் ஓதியிருக்கவும் மாட்டேன் تَلَوْتُهٗ இதை عَلَيْكُمْ உங்கள் மீது وَلَاۤ இன்னும் அவன் அறிவித்திருக்கவும் மாட்டான் اَدْرٰٮكُمْ உங்களுக்கு بِهٖ ۖ  இதை فَقَدْ لَبِثْتُ திட்டமாக வசித்துள்ளேன் فِيْكُمْ உங்களுடன் عُمُرًا ஒரு (நீண்ட) காலம் مِّنْ قَبْلِهٖ ؕ இதற்கு முன்னர் اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
10:16. “(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:16. (மேலும்,) கூறுவீராக: ‘‘(உங்களுக்கு நான் இதை ஓதிக் காண்பிக்கக் கூடாதென்று) அல்லாஹ் எண்ணியிருந்தால், நான் இதை உங்களுக்கு ஓதிக் காண்பித்திருக்கவும் மாட்டேன். அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். நிச்சயமாக நான் இதற்கு முன்னரும் நீண்ட காலம் உங்களுடன் வசித்துள்ளேன் (அல்லவா? நான் பொய் சொல்பவன் அல்ல என்பதை நீங்கள் நன்கறிந்திருக்கிறீர்கள். இவ்வளவுகூட), நீங்கள் அறிந்துகொள்ள முடியாதா?
10:16. மேலும், நீர் கூறும்: “(நான் ஓதிக் காண்பிக்கக் கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், நான் உங்களுக்கு இந்தக் குர்ஆனை ஒருபோதும் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும், அல்லாஹ்வும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். இதற்கு முன்னர் நீண்ட காலம் நான் உங்களுக்கு மத்தியில் வாழ்ந்திருக்கின்றேன். நீங்கள் சிந்தித்துணர வேண்டாமா?
10:16. அல்லாஹ் நாடியிருநதால், நான் இதனை உங்களுக்கு ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன், இதனை உங்களுக்கு அவன் அறிவித்திருக்கவுமாட்டான், ஆகவே, நிச்சயமாக நான் இதற்கு முன்னரும் நீண்ட காலம் உங்களுடன் திட்டமாக தங்கியிருக்கிறேன், ஆகவே, (இதை) நீங்கள் விளங்கிக்கொள்ளக்கூடாதா? என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:17
10:17 فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖ ؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الْمُجْرِمُوْنَ‏
فَمَنْ யார்? اَظْلَمُ பெரும் அநியாயக்காரன் مِمَّنِ எவனைவிட افْتَـرٰى இட்டுக்கட்டினான் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் كَذِبًا பொய்யை اَوْ அல்லது كَذَّبَ பொய்ப்பித்தான் بِاٰيٰتِهٖ ؕ அவனுடைய வசனங்களை اِنَّهٗ நிச்சயமாக لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்(கள்) الْمُجْرِمُوْنَ‏ குற்றவாளிகள்
10:17. அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.
10:17. அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குபவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக (இந்த) குற்றவாளிகள் வெற்றி அடையவே மாட்டார்கள்.
10:17. அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவனைவிட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யென்று கூறுபவனைவிட பெரிய அக்கிரமக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் ஒருபோதும் வெற்றியடையமாட்டார்கள்!”
10:17. ஆகவே, அல்லாஹ்வின்மீது பொய்யைக் கற்பனைச் செய்பவனைவிட அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குபவனைவிட மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் வெற்றியடையமாட்டார்கள்.
10:18
10:18 وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَاۤءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ‌ؕ قُلْ اَتُـنَـبِّــــٴُـوْنَ اللّٰهَ بِمَا لَا يَعْلَمُ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ‌ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏
وَيَعْبُدُوْنَ இன்னும் அவர்கள் வணங்குகிறார்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مَا لَا يَضُرُّ எதை/தீங்கிழைக்காது هُمْ தங்களுக்கு يَنْفَعُهُمْ தங்களுக்கு وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் هٰٓؤُلَاۤءِ இவை شُفَعَآؤُ சிபாரிசாளர்கள் نَا எங்கள் عِنْدَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்விடம் قُلْ கூறுவீராக اَتُـنَـبِّــــٴُـوْنَ அறிவிக்கிறீர்களா? اللّٰهَ அல்லாஹ்வுக்கு بِمَا எதை لَا يَعْلَمُ அறிய மாட்டான் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَلَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியில் سُبْحٰنَهٗ அவன் மிகப் பரிசுத்தமானவன் وَتَعٰلٰى இன்னும் உயர்ந்து விட்டான் عَمَّا எவற்றைவிட்டு يُشْرِكُوْنَ‏ இணைவைக்கிறார்கள்
10:18. தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும்.
10:18. (இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை விட்டுவிட்டு அவர்களுக்கு நன்மையும் தீமையும் செய்ய முடியாதவற்றை வணங்குவதுடன் ‘‘இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை'' என்றும் கூறுகின்றனர். (ஆகவே, நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாத(வை உள்ளனவா? அ)வற்றை (இவை மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அவனோ அனைத்தையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணை வைப்பவற்றை விட மிக உயர்ந்தவன்'' என்று கூறுவீராக.
10:18. இவர்கள், அல்லாஹ்வை விட்டுவிட்டு யாதொரு நஷ்டத்தையும், இலாபத்தையும் தங்களுக்கு அளித்திட இயலாதவற்றை வணங்குகின்றார்கள். மேலும், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் என்றும் கூறுகின்றார்கள். (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவித்துக் கொடுக்கின்றீர்களா?” இவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் தூய்மையானவனும் உயர்ந்தவனுமாவான்.
10:18. மேலும், அல்லாஹ்வையன்றி, தங்களுக்கு இடர் அளிக்காதவற்றை இன்னும், தங்களுக்குப் பலன் அளிக்காதவற்றை அவர்கள் வணங்குகிறார்கள், “இவர்கள் அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு பரிந்துரையாளர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர், (ஆகவே, நபியே! நீர் அவர்களிடம்) “வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவைகளை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? (அவனோ யாவையும் நன்கறிந்தவன்) அவன் மிகப் பரிசுத்தமானவன், அவர்கள் இணைவைப்பவைகளை விட்டும் உயர்வடைந்துவிட்டான்” என்று கூறுவீராக!
10:19
10:19 وَمَا كَانَ النَّاسُ اِلَّاۤ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْا‌ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَـقُضِىَ بَيْنَهُمْ فِيْمَا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
وَمَا كَانَ இருக்கவில்லை النَّاسُ மனிதர்கள் اِلَّاۤ தவிர اُمَّةً ஒரு சமுதாயமாக وَّاحِدَةً ஒரே فَاخْتَلَفُوْا‌ ؕ பிறகு மாறுபட்டனர் وَلَوْلَا இருக்கவில்லையெனில் كَلِمَةٌ சொல் سَبَقَتْ முந்தியது مِنْ رَّبِّكَ உம் இறைவனின் لَـقُضِىَ தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் بَيْنَهُ அவர்களுக்கிடையில் فِيْمَا எவற்றில் فِيْهِ அவற்றில் يَخْتَلِفُوْنَ‏ மாறுபடுகின்றனர்
10:19. மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறில்லை; பின்னர் அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும்.
10:19. மனிதர்கள் அனைவரும் (ஆரம்பத்தில் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே ஒரு வகுப்பினராகவே இருந்தனர். பின்னரே (தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக பல வகுப்பினராகப்) பிரிந்து விட்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில் தான் முழுமையாகக் கொடுக்கப்படும் என்று நபியே!) உமது இறைவனின் வாக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்காவிடில், அவர்கள் மாறுபாடு செய்து கொண்டிருந்த விஷயத்தில் அவர்களுடைய காரியம் (இதுவரை) முடிவு பெற்றே இருக்கும்!
10:19. மேலும், (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயமாகவே இருந்தனர்; பின்னர் பல்வேறு கொள்கைகளையும், வழிமுறைகளையும் தோற்றுவித்தனர். உம் இறைவனிடம் முன்னரே ஒரு விஷயம் முடிவு செய்யப்பட்டிராவிட்டால், அவர்கள் கருத்து முரண்பாடு கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டிருக்கும்.
10:19. மேலும், மனிதர்கள் (தொடக்கத்தில்) ஒரே சமுதாயத்தினராகவே தவிர இருக்கவில்லை, பின்னரே அவர்கள் (பிரிந்து) மாறுபட்டுவிட்டனர். மேலும் (ஒவ்வொரு காரியத்திற்கும் தவணை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்ற) உமது இரட்சகனின் வாக்கு முந்தியிருக்காவிடில், அவர்கள் எதில் மாறுபட்டிருக்கின்றனரோ அதைப்பற்றி அவர்களிடையே முடிவு செய்யப்பட்டேயிருக்கும்.
10:20
10:20 ‌وَيَقُوْلُوْنَ لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖ‌ ۚ فَقُلْ اِنَّمَا الْغَيْبُ لِلّٰهِ فَانْتَظِرُوْا‌ ۚ اِنِّىْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏
وَيَقُوْلُوْنَ இன்னும் அவர்கள் கூறுகின்றனர் لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட்டிருக்க வேண்டாமா? عَلَيْهِ அவர் மீது اٰيَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّهٖ‌ ۚ அவருடைய இறைவன் فَقُلْ ஆகவே, கூறுவீராக اِنَّمَا எல்லாம் الْغَيْبُ மறைவானவை لِلّٰهِ அல்லாஹ்வுக்குரியன فَانْتَظِرُوْا‌ ۚ ஆகவே எதிர் பார்த்திருங்கள் اِنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْ உங்களுடன் مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏ எதிர்பார்ப்பவர்களில்
10:20. “மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். அதற்கு “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:20. (தவிர ‘‘நாம் விரும்புகிறவாறு) ஏதாவது ஓர் அத்தாட்சி (இறைவனின் நபியாகிய) அவர் மீது அவருடைய இறைவனால் இறக்கப்பட வேண்டாமா?'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் விரும்புகிறவாறு அத்தாட்சியை இறக்கி வைக்காத காரணம் உங்களுக்கு மறைவானது.) மறைவான விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (ஆகவே, அதை நீங்கள் அறிய விரும்பினால்) நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நானும் (உங்கள் விஷமக் கூற்றினால் உங்களுக்கு என்ன கேடு வருகிறதென்பதை) உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றன்.''
10:20. மேலும், “இந்த நபியின் மீது அவருடைய இறைவனிடமிருந்து ஏதேனும் ஒரு சான்று இறக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?” என்று அவர்கள் கேட்கின்றார்கள். நபியே! நீர் கூறும்: “மறைவானவற்றுக்கு உரியவன் அல்லாஹ்வே ஆவான். நீங்கள் எதிர்பாருங்கள்; நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.”
10:20. மேலும், “(முன்பிருந்த நபிமார்களுக்கு கொடுக்கப்பட்டவாறு) ஏதோர் அத்தாட்சி (அல்லாஹ்வின் தூதராகிய) அவர்மீது அவருடைய இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்றும் அவர்கள் கூறுகின்றனர், அதற்கு மறைவானவைகள் அல்லாஹ்விற்கே உரியன, ஆகவே, நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போரில் இருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
10:21
10:21 وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِىْۤ اٰيَاتِنَا‌ ؕ قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًا‌ ؕ اِنَّ رُسُلَنَا يَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ‏
وَاِذَاۤ اَذَقْنَا நாம் சுவைக்க வைத்தால் النَّاسَ மனிதர்களுக்கு رَحْمَةً ஒரு கருணையை مِّنْۢ بَعْدِ பின்னர் ضَرَّآءَ ஒரு துன்பம் مَسَّتْهُمْ தீண்டியது/தங்களை اِذَا அப்போது لَهُمْ அவர்களுக்கு مَّكْرٌ ஒரு சூழ்ச்சி فِىْۤ اٰيَاتِنَا‌ ؕ வசனங்களில்/நம் قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ் اَسْرَعُ மிகத் தீவிரமானவன் مَكْرًا‌ ؕ சூழ்ச்சி செய்வதில் اِنَّ நிச்சயமாக رُسُلَنَا நம் தூதர்கள் يَكْتُبُوْنَ பதிவு செய்கிறார்கள் مَا எதை تَمْكُرُوْنَ‏ நீங்கள் சூழ்ச்சி செய்கிறீர்கள்
10:21. மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது; “திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
10:21. (இம்)மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்கி (பின்னர் நம்) அருளைக் கொண்டு அவர்கள் இன்பமடையும்படி நாம் செய்தால் (அதற்கு அவர்கள் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) உடனே அவர்கள் நம் வசனங்களில் (தவறான அர்த்தம் கற்பிக்க) சூழ்ச்சி செய்கின்றனர். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் மிக தீவிரமானவன். (எனவே அவனது சூழ்ச்சி உங்கள் சூழ்ச்சியைவிட முந்திவிடும்)'' என்று கூறுவீராக. நிச்சயமாக நம் தூதர்(களாகிய வானவர்)கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
10:21. மனிதர்(களின் நிலை எவ்வாறு உள்ளதெனில் அவர்)களுக்குத் துன்பம் ஏற்பட்ட பின் நாம் அவர்களுக்கு அருட் கொடை(யின் சுவை)யை சுவைக்கச் செய்தால், உடனே அவர்கள் நம் சான்றுகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்யத் தொடங்கி விடுகின்றார்கள். நீர் கூறுவீராக: “அல்லாஹ் சூழ்ச்சிகளை (முறியடிக்கச்) செய்வதில் மிக விரைவானவன். அவனுடைய வானவர்கள் நீங்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.”
10:21. மேலும், மனிதர்களை-அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின் ஒரு அருளைக்கொண்டு இன்பமடையும்படி நாம் செய்தால், அச்சமயம் அவர்கள் நம் வசனங்களில் (தவறான பொருள் கற்பிக்கச்) சூழ்ச்சி செய்வது அவர்களுக்கு (வழக்கமாக) உண்டு, (அதற்கு நபியே! உங்கள் சூழ்ச்சியை முறியடிக்க அல்லாஹ்வின் சூழ்ச்சி முந்திக் கொள்ளும், அவன்) சூழ்ச்சியால் மிகத்தீவிரமானவன் என்று கூறுவீராக! நிச்சயமாக நம்முடைய தூதர்(களாகிய மலக்கு)கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
10:22
10:22 هُوَ الَّذِىْ يُسَيِّرُكُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ؕ حَتّٰۤى اِذَا كُنْتُمْ فِى الْفُلْكِ ۚ وَ جَرَيْنَ بِهِمْ بِرِيْحٍ طَيِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَآءَتْهَا رِيْحٌ عَاصِفٌ وَّجَآءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْۤا اَنَّهُمْ اُحِيْطَ بِهِمْ‌ ۙ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَۙ  لَٮِٕنْ اَنْجَيْتَـنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ‏
هُوَ அவன் الَّذِىْ எத்தகையவன் يُسَيِّرُ பயணிக்கவைக்கிறான் كُمْ உங்களை فِى الْبَرِّ நிலத்திலும் وَالْبَحْرِ‌ؕ இன்னும் நீரிலும் حَتّٰۤى இறுதியாக اِذَا போது كُنْتُمْ இருக்கின்றீர்கள் فِى الْفُلْكِ ۚ கப்பல்களில் وَ جَرَيْنَ இன்னும் பயணித்தன بِهِمْ அவர்களை சுமந்து بِرِيْحٍ ஒரு காற்றால் طَيِّبَةٍ நல்ல وَّفَرِحُوْا இன்னும் அவர்கள் மகிழ்ந்தனர் بِهَا அதன்மூலம் جَآءَتْهَا வந்தது/அவற்றுக்கு رِيْحٌ காற்று عَاصِفٌ புயல் وَّجَآءَ இன்னும் வந்தன هُمُ அவர்களுக்கு الْمَوْجُ அலைகள் مِنْ இருந்து كُلِّ எல்லா مَكَانٍ இடம் وَّظَنُّوْۤا இன்னும் அவர்கள் எண்ணினர் اَنَّهُمْ நிச்சயமாக தாம் اُحِيْطَ அழிக்கப்பட்டோம் بِهِمْ‌ ۙ தாம் دَعَوُا அவர்கள் அழைக்கின்றனர் اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِصِيْنَ தூய்மைப்படுத்தியவர்களாக لَـهُ அவனுக்கு الدِّيْنَۙ  வழிபாட்டை اَنْجَيْتَـنَا எங்களை مِنْ هٰذِهٖ இதிலிருந்து لَنَكُوْنَنَّ நிச்சயமாக இருப்போம் مِنَ الشّٰكِرِيْنَ‏ நன்றி செலுத்துபவர்களில்
10:22. அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.
10:22. நீரிலும் நிலத்திலும் அவனே உங்களை அழைத்துச் செல்கிறான். நீங்கள் கப்பலில் ஏறிய பின்னர் கப்பலில் உள்ளவர்களை நல்ல காற்று நடத்திச் செல்வதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயத்தில், புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும் அவர்களை அலைகள் வந்து மோதி ‘‘நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு ஒரு வழியுமில்லை)'' என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி ‘‘எங்கள் இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்'' என்று கலப்பற்ற மனதினராக அல்லாஹ்வை வழிபட்டு (மிக்கத் தாழ்மையுடன் அழுது கூக்குரலிட்டுப்) பிரார்த்திக்கிறார்கள்.
10:22. தரையிலும், கடலிலும் உங்களை இயங்கச் செய்பவன் அவனே! பிறகு, நீங்கள் கப்பல்களில் ஏறி, சாதகமாக வீசும் காற்றோடு மகிழ்ச்சிபூர்வமாக பயணம் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று கடுமையான எதிர்க்காற்று வீசுகிறது. மேலும், எல்லாப் பக்கங்களிலிருந்தும் அலைகள் தாக்குகின்றன. அப்பொழுது தாம் கடும் பிரளயத்தால் சூழப்பட்டுள்ளதாகப் பயணிகள் எண்ணுகிறார்கள். அந்நேரத்தில் அவர்கள் கீழ்ப்படிதலை (தீனை) அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கி, “(இறைவா!) இத்துன்பத்திலிருந்து நீ எங்களைக் காப்பாற்றினால் திண்ணமாக நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்” என்று அவனிடம் இறைஞ்சுகின்றார்கள்.
10:22. கரையில் மற்றும் கடலில் அவனே உங்களை பயணம் செய்ய வைக்கின்றான், முடிவாக, நீங்கள் கப்பல்களில் இருக்கும்போது நல்ல காற்றுடன் அவர்களை அவைகள் கொண்டு செல்கின்றன, (அவ்வாறு நன்கு அவை செல்லும்) அதனைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியும் அடைந்திருந்த சமயத்தில் புயல்காற்று அதனிடம் வந்துவிட்டது, எல்லா இடங்களிலிருந்து அவர்களிடம் அலைகளும் வந்து விட்டன, நிச்சயமாக அவர்கள் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டார்கள், (அதிலிருந்து கரைசேர முடியாது” என்றும் அவர்கள் எண்ணிவிட்டனர், (அப்பொழுது) அல்லாஹ்வை–அவனுக்கே மார்க்கத்தை (வணக்கத்தை) கலப்பற்றதாக்கியவர்களாக (தூய உள்ளத்துடன், “எங்கள் இரட்சகனே!) இதிலிருந்து நீ எங்களை காப்பாற்றி விட்டால் நிச்சயமாக நாங்கள் (உனக்கு) நன்றி செலுத்துபவர்களில் உள்ளவர்களாக நாங்கள் இருப்போம்” என்று பிரார்த்திக்கின்றனர்.
10:23
10:23 فَلَمَّاۤ اَنْجٰٮهُمْ اِذَا هُمْ يَبْغُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ‌ ؕ يٰۤـاَ يُّهَا النَّاسُ اِنَّمَا بَغْيُكُمْ عَلٰٓى اَنْفُسِكُمْ‌ۙ مَّتَاعَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ثُمَّ اِلَـيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
فَلَمَّاۤ போது اَنْجٰٮهُمْ அவன் பாதுகாத்தான்/அவர்களை اِذَا அப்போதே هُمْ அவர்கள் يَبْغُوْنَ வரம்பு மீறுகின்றனர் فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَـقِّ‌ ؕ நியாயமின்றி يٰۤـاَ يُّهَا النَّاسُ மனிதர்களே اِنَّمَا எல்லாம் بَغْيُكُمْ வரம்புமீறுதல்/உங்கள் عَلٰٓى اَنْفُسِكُمْ‌ۙ உங்களுக்கே கேடானது مَّتَاعَ சொற்ப இன்பமாகும் الْحَيٰوةِ வாழ்க்கை الدُّنْيَا‌ இவ்வுலக ثُمَّ பிறகு اِلَـيْنَا நம் பக்கமே مَرْجِعُكُمْ உங்கள் மீளுமிடம் فَنُنَبِّئُكُمْ அறிவிப்போம்/உங்களுக்கு بِمَا எவற்றை كُنْتُمْ இருந்தீர்கள் تَعْمَلُوْنَ‏ செய்கிறீர்கள்
10:23. அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டதும் அவர்கள் பூமியின் மேல் நியாயமில்லாது அழிச்சாட்டியம் செய்கிறார்கள்; மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்களெல்லாம் உங்களுக்கே கேடாகமுடியும்; உலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; இதன் பின்னர் நம்மிடமே நீங்கள் திரும்ப வர வேண்டியதிருக்கிறது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம்.
10:23. அவன் அவர்களை பாதுகாத்துக் கொண்டாலோ அவர்கள் (கரை சேர்ந்த) அச்சமயமே நியாயமின்றி பூமியில் அநியாயம் செய்யத் தலைப்படுகின்றனர். மனிதர்களே! உங்கள் அடாத செயல்கள் உங்களுக்கே கேடாக முடியும். (அதனால்) இவ்வுலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவிக்கலாம். பின்னரோ நம்மிடம்தான் நீங்கள் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை எவை என்பதை அச்சமயம் நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.
10:23. ஆயினும் அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றிவிட்டாலோ, உடனே அவர்கள் சத்தியத்திற்கு எதிராக பூமியில் வரம்பு மீறி நடக்கத் தலைப்பட்டு விடுகின்றார்கள். மக்களே! உங்களுடைய இந்த வரம்பு மீறுதல் உங்களுக்குத்தான் கேடு விளைவிக்கும். உலக வாழ்வின் அற்ப இன்பங்களை அனுபவித்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்ப வரவேண்டியுள்ளது. அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.
10:23. ஆகவே, அவன் அவர்களைக் காப்பாற்றியபொழுது, அவர்கள் (கரை சேர்க்கப்பட்ட) அந்நேரமே, நியாயமின்றி பூமியில் அழிச்சாட்டியம் செய்கின்றனர், மனிதர்களே! உங்களுடைய அழிச்சாட்டியமெல்லாம் உங்களுக்கே கேடாக முடியும், (அதனால்) இவ்வுலக வாழ்க்கையில் சிறிது சுகமனுபவிக்கலாம், பின்னர், நம்மிடமே உங்கள் திரும்புதல் இருக்கிறது, (அப்போது) நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம்.
10:24
10:24 اِنَّمَا مَثَلُ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا يَاْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُؕ حَتّٰۤى اِذَاۤ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ اَهْلُهَاۤ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَيْهَاۤ ۙ اَتٰٮهَاۤ اَمْرُنَا لَيْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِيْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِ‌ ؕ كَذٰلِكَ نُـفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏
اِنَّمَا எல்லாம் مَثَلُ உதாரணம் الْحَيٰوةِ வாழ்க்கையின் الدُّنْيَا உலகம் كَمَآءٍ நீரைப் போன்று اَنْزَلْنٰهُ நாம் இறக்கிய مِنَ இருந்து السَّمَآءِ மேகம் فَاخْتَلَطَ கலந்து விட்டது بِهٖ அதன் மூலம் نَبَاتُ தாவரம் الْاَرْضِ பூமியின் مِمَّا எதிலிருந்து يَاْكُلُ புசிப்பார்(கள்) النَّاسُ மனிதர்கள் وَالْاَنْعَامُؕ இன்னும் கால்நடைகளும் حَتّٰۤى இறுதியாக اِذَاۤ போது اَخَذَتِ எடுத்தது الْاَرْضُ பூமி زُخْرُفَهَا தன் அலங்காரத்தை وَازَّيَّنَتْ இன்னும் அலங்காரமானது وَظَنَّ இன்னும் எண்ணினார்(கள்) اَهْلُهَاۤ அதன் உரிமையாளர்கள் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் قٰدِرُوْنَ ஆற்றல் பெற்றவர்கள் عَلَيْهَاۤ ۙ அவற்றின் மேல் اَتٰٮهَاۤ வந்தது அவற்றுக்கு اَمْرُنَا நம் கட்டளை لَيْلًا இரவில் اَوْ அல்லது نَهَارًا பகலில் فَجَعَلْنٰهَا ஆக்கினோம்/அவற்றை حَصِيْدًا வேரறுக்கப்பட்டதாக كَاَنْ போன்று لَّمْ تَغْنَ அவைஇருக்கவில்லை بِالْاَمْسِ‌ ؕ நேற்று كَذٰلِكَ இவ்வாறு نُـفَصِّلُ விவரிக்கிறோம் الْاٰيٰتِ வசனங்களை لِقَوْمٍ மக்களுக்கு يَّتَفَكَّرُوْنَ‏ சிந்திக்கின்றார்கள்
10:24. இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்
10:24. இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்: மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் நீரை ஒத்திருக்கிறது. அது கால்நடைகளும் மனிதர்களும் புசிக்கக்கூடிய புற்பூண்டு ஆகியவற்றுடன் கலந்து (அடர்ந்த பயிராக வளர்ந்து, பூத்துக் காய்த்து) பூமியை அலங்காரப்படுத்திக் கொண்டிருக்கும் தறுவாயில், அதன் சொந்தக்காரர்கள் (நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்து விட்டது; நாளைக்கு) அதை நிச்சயமாக நாம் அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம், இரவிலோ பகலிலோ நம் கட்டளை(யினால் ஓர் ஆபத்து) வந்து அதனால் அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இருக்கவேயில்லையென்று எண்ணக்கூடியவாறு அவற்றை நாம் அழித்து விட்டோம். (இந்த உதாரணத்தைச்) சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு நாம் (நம்) வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம்.
10:24. (எந்த உலக வாழ்க்கையின் போதையில் மயங்கி நம் சான்றுகள் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கின்றீர்களோ அந்த) உலக வாழ்க்கையின் உதாரணம் இதைப் போன்றதாகும்: நாம் வானத்திலிருந்து மழையை இறக்கினோம்; பின்னர் அதன் மூலம் மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடிய பூமியின் விளைபொருள்கள் நன்கு அடர்த்தியாக வளர்ந்தன; பூமி அழகாகவும், செழுமையாகவும் காட்சியளிக்க, அதன் பலனை அடைந்திட தாங்கள் ஆற்றல் பெற்றுள்ளோம் என அதன் உரிமையாளர்கள் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென இரவிலோ, பகலிலோ நம்முடைய கட்டளை வந்துவிட்டது! மேலும், நேற்று வரை எதுவும் அங்கு விளைந்திருக்காதது போல அதனை முற்றாக நாம் அழித்து விட்டோம்; சிந்தித்துணரும் மக்களுக்கு இவ்வாறு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்குகின்றோம்.
10:24. இவ்வுலக வாழ்க்கையின் உதாரணமெல்லாம் நீரைப் போன்றதாகும், அதை வானத்திலிருந்து நாம் இறக்கி வைத்தோம், அது மனிதர்களும், கால்நடைகளும் புசிக்கக் கூடிய புற்பூண்டு முதலியவைகளுடன் கலந்து (அவை பூத்துக் காய்த்து கதிர்வாங்கி) முடிவாக பூமி தனது செழிப்பை பிடித்து அலங்காரமும் அடைந்தபோது அதன் சொந்தக்காரர்கள், (நாளை) அதன்மீது நிச்சயமாக தாங்கள் அறுவடையை செய்ய) சக்தியுடையவர்கள் என்றும் தங்களை எண்ணிக் கொண்டிருந்தனர், (அச்சமயம்,) இரவிலோ அல்லது பகலிலோ நம்முடைய கட்டளை வந்து (அதை நாம் அழித்துவிட்டோம்.) அதனால், அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இல்லாததைப் போன்று அறுவடை செய்யப்பட்டதாக அதை நாம் ஆக்கிவிட்டோம், சிந்தித்துணரக்கூடிய சமூகத்தார்க்கு நாம் (நம்முடைய) வசனங்களை இவ்வாறே (தெளிவாக) விவரிக்கிறோம்.
10:25
10:25 وَاللّٰهُ يَدْعُوْۤا اِلٰى دَارِ السَّلٰمِؕ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
وَاللّٰهُ அல்லாஹ் يَدْعُوْۤا அழைக்கிறான் اِلٰى دَارِ இல்லத்திற்கு السَّلٰمِؕ ஈடேற்றத்தின் وَيَهْدِىْ இன்னும் வழிகாட்டுகிறான் مَنْ எவரை يَّشَآءُ நாடுகிறான் اِلٰى பக்கம் صِرَاطٍ பாதை مُّسْتَقِيْمٍ‏ நேரானது
10:25. மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.
10:25. (மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய (சொர்க்க) வீட்டிற்கே அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
10:25. (இந்த நிலையற்ற வாழ்வின் மோகத்தில் நீங்கள் மயங்கிக் கிடக்கின்றீர்கள்). அல்லாஹ் உங்களை அமைதி இல்லத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கின்றான். (நேர்வழி காட்டும் ஆற்றல் அவனிடமே உள்ளது.) தான் நாடுவோர்க்கு அவன் நேர்வழி அளிக்கின்றான்.
10:25. (மனிதர்களே!) அல்லாஹ்வோ சாந்தி அளிக்கக்கூடிய (சுவன) வீட்டின்பால் (உங்களை) அழைக்கின்றான், மேலும், அவன் நாடியவர்களை (அதற்குரிய) நேரான வழியின்பால் செலுத்துகிறான்.
10:26
10:26 لِلَّذِيْنَ اَحْسَنُوا الْحُسْنٰى وَزِيَادَةٌ ؕ وَلَا يَرْهَقُ وُجُوْهَهُمْ قَتَرٌ وَّلَا ذِلَّـةٌ ‌ ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ‌ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
لِلَّذِيْنَ எவர்களுக்கு اَحْسَنُوا நல்லறம் புரிந்தனர் الْحُسْنٰى மிக அழகிய கூலி وَزِيَادَةٌ ؕ இன்னும் அதிகம் وَلَا يَرْهَقُ இன்னும் சூழாது وُجُوْهَهُمْ அவர்களுடைய முகங்கள் قَتَرٌ கவலை وَّلَا ذِلَّـةٌ ؕ அவர்கள் இழிவு اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ الْجَـنَّةِ‌ ۚ சொர்க்கவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
10:26. நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சுவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
10:26. நன்மை செய்தவர்களுக்கு(க் கூலி) நன்மைதான். (அவர்கள் செய்ததை விட) அதிகமாகவும் கிடைக்கும். (அதனால் அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள்.) அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்து கொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சொர்க்கவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
10:26. எவர்கள் நன்மை புரிந்தார்களோ அவர்களுக்கு (கூலி) நன்மையே! இன்னும் அதிகப்படியான அருளும் கிடைக்கும். அவர்களின் முகங்களில் பாவப் புழுதியும் இழிவும் படியமாட்டா! அவர்கள் சுவனத்திற்குரியவர்களாவர். அதில் அவர்கள் நிலையாக வாழ்வார்கள்.
10:26. நன்மை செய்தவர்களுக்கு(க்கூலி) நன்மையும், (அவர்கள் செய்ததைவிட) இன்னும் அதிகமும் (-அல்லாஹ்வின் கண்ணியமான முகத்தைக் காணும் பாக்கியமும்) உண்டு, அவர்கள் முகங்களை (துக்கத்தின் காரணமாக தூசிபடிந்தது போன்று) இருளோ அல்லது இழிவோ சூழந்து கொள்ளாது, நிச்சயமாக அவர்கள் சுவனவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்.
10:27
10:27 وَالَّذِيْنَ كَسَبُوا السَّيِّاٰتِ جَزَآءُ سَيِّئَةٍ ۢ بِمِثْلِهَا ۙ وَتَرْهَقُهُمْ ذِلَّـةٌ  ؕ مَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ‌‌ ۚ كَاَنَّمَاۤ اُغْشِيَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّيْلِ مُظْلِمًا ‌ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
وَالَّذِيْنَ எவர்கள் كَسَبُوا செய்தனர் السَّيِّاٰتِ தீமைகளை جَزَآءُ سَيِّئَةٍ ۢ கூலி/தீமையின் بِمِثْلِهَا ۙ அது போன்றதைக் கொண்டு وَتَرْهَقُهُمْ இன்னும் சூழும்/அவர்களை ذِلَّـةٌ  ؕ இழிவு مَا இல்லை لَهُمْ அவர்களுக்கு مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مِنْ عَاصِمٍ‌ ۚ பாதுகாப்பவர் ஒருவரும் كَاَنَّمَاۤ போன்று اُغْشِيَتْ சூழப்பட்டன وُجُوْهُهُمْ அவர்களுடைய முகங்கள் قِطَعًا ஒரு பாகத்தால் مِّنَ الَّيْلِ இரவின் مُظْلِمًا ؕ இருண்டது اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ ؕ நரகவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
10:27. ஆனால் தீமையைச் சம்பாதிப்பவர்களுக்கு, (அவர்கள் செய்த) தீமைக்குக் கூலியாக அதுபோன்ற தீமையாகும்! அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும்; அவர்களை அல்லாஹ்வின் (தண்டனையை) விட்டுக் காப்பாற்றுபவர் எவருமிலர்; இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சுற்றிக் கொள்ளப்பட்டது போல் (அவர்களின்) முகங்கள் காணப்படும். அவர்கள் நரக நெருப்புக்கு உரியவர்கள். அவர்கள் அங்கேயே என்றென்றும் இருப்பார்கள்.
10:27. தீமைகளை எவர்கள் செய்தபோதிலும் தீமைக்குரிய கூலி அதைப் போன்ற தீமையே! அவர்களை இழிவு வந்தடையும். அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவருமில்லை. இருண்ட இரவின் ஒரு பாகம் வந்து சூழ்ந்து கொண்டதைப்போல் அவர்களுடைய முகங்கள் (கருப்பாகக்) காணப்படும். அவர்கள் நரகவாசிகள்தான். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.
10:27. மேலும், தீமைகளைச் சம்பாதித்தவர்கள், அத் தீமைக்கேற்பக் கூலி பெறுவார்கள். மேலும், அவர்களை இழிவு சூழ்ந்திருக்கும்; அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்றுபவர் யாரும் இருக்க மாட்டார்கள். இரவின் இருட்திரைகளால் மூடப் பட்டிருப்பது போன்று அவர்களின் முகங்களில் இருள் படிந்திருக்கும். அவர்கள் நரகத்திற்குரியவர்களாவர். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.
10:27. மேலும், தீமைகளைச் சம்பாதித்தார்களே அத்தகையோர் அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும், அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவர்களுக்கு, பாதுகாப்பவர் (எவரும்) இல்லை, இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகத்தால் அவர்களுடைய முகங்கள் மூடப்பட்டது போன்று (காணப்படும்.) அவர்கள் நரகவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்.
10:28
10:28 وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَآؤُكُمْ‌ۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ‌ وَقَالَ شُرَكَآؤُهُمْ مَّا كُنْتُمْ اِيَّانَا تَعْبُدُوْنَ‏
وَيَوْمَ நாளில் نَحْشُرُ ஒன்று சேர்ப்போம் هُمْ அவர்கள் جَمِيْعًا அனைவரையும் ثُمَّ பிறகு نَقُوْلُ கூறுவோம் لِلَّذِيْنَ எவர்களுக்கு اَشْرَكُوْا இணைவைத்தனர் مَكَانَكُمْ உங்கள் இடத்தில் اَنْتُمْ நீங்களும் وَشُرَكَآؤُ இன்னும் இணைகள் كُمْ‌ۚ உங்கள் فَزَيَّلْنَا நீக்கி விடுவோம் بَيْنَهُمْ‌ அவர்களுக்கிடையில் وَقَالَ இன்னும் கூறுவார் شُرَكَآؤُ இணை(தெய்வங்)கள் هُمْ அவர்களுடைய مَّا كُنْتُمْ நீங்கள் இருக்கவில்லை اِيَّانَا எங்களை تَعْبُدُوْنَ‏ வணங்குகிறீர்கள்
10:28. (இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி: “நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்” நீங்கள் எங்களை வணங்கவேயில்லை” என்று கூறிவிடும்.
10:28. (விசாரணைக்காக) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களில் இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி ‘‘நீங்களும் நீங்கள் இணைவைத்து வணங்கிய தெய்வங்களும் சிறிது இங்கு தாமதியுங்கள்'' என்று கூறி அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பை நீக்கி விடுவோம். அச்சமயம் அவர்களுடைய தெய்வங்கள் (என்று கற்பனையாக அவர்கள் வணங்கி வந்தவை) அவர்களை நோக்கி ‘‘நீங்கள் எங்களை வணங்கவே இல்லை'' என்றும்,
10:28. மேலும், ஒரு நாளில் அவர்கள் அனைவரையும் (நம்முடைய நீதிமன்றத்தில்) நாம் ஒன்று திரட்டுவோம். பின்னர் இறைவனுக்கு இணைவைத்தவர்களிடம், “நீங்களும், நீங்கள் ஏற்படுத்திய கடவுளர்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். பின்னர் அவர்களுக்கிடையிலிருந்த அறிமுகமற்ற நிலையை அகற்றிவிடுவோம். அப்போது அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்கள், “நீங்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை என்று கூறுவார்கள்;
10:28. மேலும், அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளை (நபியே! அவர்களுக்கு நினைவு கூர்வீராக!) பின்னர், இணைவைத்துக் கொண்டிருந்தார்களே அவர்களுக்கு “நீங்களும் (அல்லாஹ்வின் வணக்கத்தில் கூட்டாக்கிய) உங்கள் இணையாளர்களும் உங்கள் இடத்திலேயே (அதை விட்டு நகராது) நில்லுங்கள்” என்று கூறுவோம், (பின்னர்) “எங்களை நீங்கள் வணங்கக் கூடியவர்களாக இருக்கவே இல்லை என்று அவர்களின் இணையாளர்கள் கூறியவர்களாக இருக்க அவர்களுக்கு மத்தியில் (இருந்த தொடர்பை நீக்கி) நாம் பிரித்து விடுவோம்.
10:29
10:29 فَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًۢا بَيْنَـنَا وَبَيْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِيْنَ‏
فَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே شَهِيْدًۢا சாட்சியால் بَيْنَـنَا எங்களுக்கிடையில் وَبَيْنَكُمْ இன்னும் உங்களுக்கிடையில் اِنْ كُنَّا நிச்சயம் நாங்கள் عَنْ عِبَادَتِكُمْ விட்டு/வழிபாடு/உங்கள் لَغٰفِلِيْنَ‏ கவனமற்றவர்களாகவே
10:29. “நமக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக அல்லாஹ் போதுமானவன்; நீங்கள் எங்களை வணங்கியதைப் பற்றி நாங்கள் எதுவும் அறியோம்” (என்றும் அவை கூறும்).
10:29. (இதற்கு) ‘‘நமக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான்; நீங்கள் (எங்களை) வணங்கியதை அறவே நாங்கள் அறியவும் மாட்டோம்'' என்றும் கூறும்.
10:29. எங்களுக்கும் உங்களுக்குமிடையே அல்லாஹ்வின் சாட்சி போதுமானது. (நீங்கள் எங்களை வணங்கியிருந்தாலும்) உங்கள் வணக்கத்தை நாங்கள் அறவே அறியாதிருந்தோம்’ என்றும் கூறுவார்கள்.
10:29. “ஆகவே, எங்களுக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வே சாட்சியாக இருக்கப்போதுமானவன், உங்கள் வணக்கத்தைப்பற்றி நிச்சயமாக, நாங்கள் அறியாதவர்களாக இருந்தோம்” (என்றும் கூறுவர்).
10:30
10:30 هُنَالِكَ تَبْلُوْا كُلُّ نَفْسٍ مَّاۤ اَسْلَفَتْ‌ وَرُدُّوْۤا اِلَى اللّٰهِ مَوْلٰٮهُمُ الْحَـقِّ‌ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
هُنَالِكَ அங்கு تَبْلُوْا சோதிக்கும் كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆத்மா مَّاۤ எவற்றை اَسْلَفَتْ‌ அது முன்செய்தது وَرُدُّوْۤا இன்னும் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் مَوْلٰٮهُمُ தங்கள் எஜமானன் الْحَـقِّ‌ உண்மையானவன் وَضَلَّ இன்னும் மறைந்துவிடும் عَنْهُمْ அவர்களை விட்டு مَّا எது كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுகின்றனர்
10:30. அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
10:30. அங்கு ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும்.
10:30. அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தான் செய்த வினைக(ளுக்குரிய கூலிக)ளை அனுபவிப்பான். மேலும், தம்முடைய உண்மையான எஜமானனாகிய அல்லாஹ்விடம் அவர்கள் அனைவரும் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் கற்பனை செய்து வந்த பொய்(த் தெய்வங்)கள் அனைத்தும் அவர்களை விட்டுக் காணாமல் போய்விடும்!
10:30. அவ்விடத்தில் ஒவ்வோர் ஆத்மாவும் தான் முற்படுத்தியதைச் சோதித்து(க்கண் கூடாகப்பார்த்து)க் கொள்ளும், மேலும், அவர்கள் தங்களுடைய உண்மையான அதிபதியாகிய அல்லாஹ்வின் பக்கமே திருப்பப்படுவார்கள், அவர்கள் (பொய்யாகக்)கற்பனை செய்து கொண்டிருந்தார்களே அவை அவர்களை விட்டு மறைந்தும் விடும்.
10:31
10:31 قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ يَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ مَنْ يُّخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَمَنْ يُّدَبِّرُ الْاَمْرَ‌ؕ فَسَيَـقُوْلُوْنَ اللّٰهُ‌ۚ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ‏
قُلْ கூறுவீராக مَنْ யார் يَّرْزُقُكُمْ உணவளிக்கிறார்/உங்களுக்கு مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து وَالْاَرْضِ இன்னும் பூமி اَمَّنْ அல்லது யார் يَّمْلِكُ உரிமை கொள்வார் السَّمْعَ செவி وَالْاَبْصَارَ இன்னும் பார்வைகள் وَ مَنْ இன்னும் யார்? يُّخْرِجُ வெளிப்படுத்துவார் الْحَـىَّ உயிருள்ளதை مِنَ الْمَيِّتِ இறந்ததிலிருந்து وَيُخْرِجُ இன்னும் வெளிப்படுத்துவார் الْمَيِّتَ இறந்ததை مِنَ الْحَـىِّ உயிருள்ளதிலிருந்து وَمَنْ இன்னும் யார்? يُّدَبِّرُ நிர்வகிக்கிறான் الْاَمْرَ‌ؕ காரியத்தை فَسَيَـقُوْلُوْنَ கூறுவார்கள் اللّٰهُ‌ۚ அல்லாஹ் فَقُلْ கூறுவீராக اَفَلَا تَتَّقُوْنَ‏ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
10:31. “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
10:31. (நபியே!) நீர் (அவர்களை நோக்கி) ‘‘வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ள வற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (உலகின்) எல்லாக் காரியங்களையும் திட்டமிட்டு நிர்வகித்து நிகழ்த்துபவன் யார்?'' என்று கேட்பீராக! அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கேட்பீராக.
10:31. (நபியே! இவர்களிடம்) கேளும்: “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? மேலும், உங்களிடமுள்ள கேட்கும் மற்றும் பார்க்கும் ஆற்றல்கள் யாருடைய அதிகாரத்தில் உள்ளன? மேலும், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் தோற்றுவிப்பவன் யார்? மேலும், அகிலத்தின் ஒழுங்கமைப்பை நிர்வகிப்பவன் யார்?” அதற்கவர்கள் “அல்லாஹ்தான்” என்று பதில் கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்கள் (உண்மைக்கு மாறாக நடப்பதை) தவிர்த்துக் கொள்ளக் கூடாதா?” என்று கேளும்.
10:31. “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? அல்லது செவிப்புலனையும், பார்வைகளையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பவன் யார்?” இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துபவனும் உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளிப்படுத்துபவனும் யார்? (அகிலத்தாரின் சகல காரியங்களைத் திட்டமிட்டு நிகழ்த்துபவனும் யார்?” என நபியே! நீர் (அவர்களைக்) கேட்பீராக!! அ(தற்க)வர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள், அவ்வாறாயின், “(அவனுக்கு) நீங்கள் பயப்படமாட்டீர்களா?” என்று நீர் கூறுவீராக!
10:32
10:32 فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَـقُّ ‌ ۚ فَمَاذَا بَعْدَ الْحَـقِّ اِلَّا الضَّلٰلُ‌‌ ۚ فَاَنّٰى تُصْرَفُوْنَ‏
فَذٰلِكُمُ அந்த اللّٰهُ அல்லாஹ்தான் رَبُّكُمُ உங்கள் இறைவன் الْحَـقُّ ۚ உண்மையானவன் فَمَاذَا (வேறு) என்ன? بَعْدَ பின்னர் الْحَـقِّ உண்மைக்கு اِلَّا தவிர الضَّلٰلُ‌ ۚ வழிகேடு فَاَنّٰى எவ்வாறு تُصْرَفُوْنَ‏ நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
10:32. உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
10:32. ‘‘அத்தகைய தன்மையுள்ள அல்லாஹ்தான் உங்கள் உண்மையான இறைவன். (இந்த) அளவு உண்மை விவரிக்கப்பட்ட பின்னர் (நீங்கள் அவனுக்கு அடிபணியாது இருப்பது) வழிகேட்டைத் தவிர வேறில்லை. (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?'' (என்றும் நபியே! கேட்பீராக).
10:32. ஆகவே இந்த அல்லாஹ்தான் உங்களின் உண்மையான இறைவன்! இந்த உண்மையைக் கைவிட்ட பிறகு வழிகேட்டைத் தவிர வேறு என்ன எஞ்சியிருக்கும்? நீங்கள் எங்கு திருப்பப்படுகின்றீர்கள்?
10:32. (இத்தகைய தகுதிகளுக்குறிய) அவன்தான் உங்களுடைய உண்மையான இரட்சகனாகிய அல்லாஹ், இந்த உண்மைக்குப் பின்னர், வழிகேட்டைத் தவிர வேறு (எஞ்சியிருப்பது) யாது? (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்” என்று (நபியே!) நீர் கேட்பீராக!
10:33
10:33 كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِيْنَ فَسَقُوْۤا اَنَّهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
كَذٰلِكَ அவ்வாறே حَقَّتْ உண்மையாகி விட்டது كَلِمَتُ சொல் رَبِّكَ உம் இறைவனின் عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் فَسَقُوْۤا மீறினார்கள் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
10:33. பாவம் செய்பவர்கள் மீது உமது இறைவனின் வாக்கு இவ்வாறே உறுதியாகி விட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
10:33. (அவர்கள் நம்பிக்கை கொள்ளாத) அவ்வாறே பாவத்தில் ஆழ்ந்து கிடக்கும் மற்றவர்களும், நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்ற உமது இறைவனின் வாக்கு உண்மையாகி விட்டது.
10:33. (நபியே! பாரும்:) இவ்வாறு இறைக்கட்டளைக்கு மாறு செய்யும் போக்கினை மேற்கொள்வோர் குறித்து “திண்ணமாக அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்ற உம் இறைவனின் வாக்கு உண்மையாகிவிட்டது.
10:33. “(இவர்கள் நிராகரித்த) இவ்வாறே பாவம் செய்பவர்கள் மீது நிச்சயமாக அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்” என்ற உமதிரட்சகனின் வாக்கு உண்மையாகிவிட்டது.
10:34
10:34 قُلْ هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ مَّنْ يَّبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ‌ ؕ قُلِ اللّٰهُ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ‌ؕ فَاَنّٰى تُؤْفَكُوْنَ‏
قُلْ கூறுவீராக هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ ?/ இருந்து/இணைதெய்வங்கள்/உங்கள் مَّنْ எவன் يَّبْدَؤُا ஆரம்பிக்கிறான் الْخَـلْقَ படைப்புகளை ثُمَّ பிறகு يُعِيْدُهٗ‌ மீட்கிறான் قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ்தான் يَـبْدَؤُا ஆரம்பிக்கிறான் الْخَـلْقَ படைப்புகளை ثُمَّ பிறகு يُعِيْدُهٗ‌ؕ மீட்கிறான்/அவற்றை فَاَنّٰى எவ்வாறு? تُؤْفَكُوْنَ‏ நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
10:34. உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.
10:34. (அவர்களை நோக்கி) ‘‘புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரணித்த பின்) அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியவனும் அல்லாஹ்தான்'' (என்று கூறி ‘‘இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கிறீர்கள்?'' என்றும் கேட்பீராக.
10:34. “நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களுள் படைப்புகளை முதன்முறையில் படைத்து பின்னர் மறு முறையும் அவற்றைப் படைக்கக்கூடியவர் எவரும் உள்ளனரா?” என்று (நபியே!) நீர் கேளும் நீர் கூறும்: “அல்லாஹ்தான் படைப்புகளை முதன் முறையும் படைக்கின்றான்; பின்னர் அவற்றை மறுமுறையும் படைக்கின்றான். இதன் பிறகும் நீங்கள் எவ்வாறு வழி மாற்றப்படுகின்றீர்கள்?”
10:34. “உங்களுடைய இணையாளர்களில் தொடக்கமாகப் படைப்பைத் தொடங்கி (அது அழிந்த) பின்னர் அதனை மீட்டுபவர் (யாரேனும்) உண்டா? என்று நபியே!) நீர் கேட்பீராக! (நீரே அவர்களிடம்) அல்லாஹ்தான் சிருஷ்டிகளை முதலாவதாக உற்பத்தி செய்து (அவை மரித்த) பின்னர், அவற்றை அவன் மீளவைப்பான்” (என்று கூறி, “இந்த உண்மையை விட்டு) நீங்கள் எப்படித்தான் திருப்பப்படுகின்றீர்கள்?”, என்று நீர் கேட்பீராக!
10:35
10:35 قُلْ هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ مَّنْ يَّهْدِىْۤ اِلَى الْحَـقِّ‌ؕ قُلِ اللّٰهُ يَهْدِىْ لِلْحَقِّ‌ؕ اَفَمَنْ يَّهْدِىْۤ اِلَى الْحَقِّ اَحَقُّ اَنْ يُّتَّبَعَ اَمَّنْ لَّا يَهِدِّىْۤ اِلَّاۤ اَنْ يُّهْدٰى‌ۚ فَمَا لَكُمْ كَيْفَ تَحْكُمُوْنَ‏
قُلْ கூறுவீராக هَلْ ? مِنْ இருந்து شُرَكَآٮِٕكُمْ இணை(தெய்வங்)கள்/உங்கள் مَّنْ எவர் يَّهْدِىْۤ நேர்வழி காட்டுவார் اِلَى பக்கம் الْحَـقِّ‌ؕ சத்தியம் قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ் يَهْدِىْ நேர்வழி காட்டுகிறான் لِلْحَقِّ‌ؕ சத்தியத்திற்கு اَفَمَنْ ஆகவே எவர்? يَّهْدِىْۤ நேர்வழி காட்டுவான் اِلَى பக்கம் الْحَقِّ சத்தியத்தின் اَحَقُّ மிகத் தகுதியானவனா اَنْ يُّتَّبَعَ பின்பற்றப்படுவதற்கு اَمَّنْ அல்லது/எவர் لَّا يَهِدِّىْۤ நேர்வழி அடைய மாட்டான் اِلَّاۤ தவிர اَنْ يُّهْدٰى‌ۚ அவர் நேர்வழி காட்டப்படுவார் فَمَا என்ன? لَكُمْ உங்களுக்கு كَيْفَ எவ்வாறு? تَحْكُمُوْنَ‏ நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்
10:35. உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் சத்தியத்தின் பால் வழிகாட்டுபவன் உண்டா? என்று கேட்பீராக; அல்லாஹ்தான் சத்தியத்திற்கு வழிகாட்டுகிறான் என்று கூறுவீராக. சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்படதக்கவனா? வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர்வழியடைய மாட்டானே அவன் பின்பற்றத் தக்கவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்.
10:35. (‘‘சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியது நீங்கள் வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்றும் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியவன்'' (என்று கூறி) ‘‘நேரான வழியில் செலுத்தக்கூடியவனைப் பின்பற்றுவது தகுமா? அல்லது பிறர் அதற்கு வழி காண்பிக்காமல் தானாகவே வழி செல்ல முடியாததைப் பின்பற்றுவது தகுமா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு மாறாக) நீங்கள் எவ்வாறு முடிவு செய்யலாம்'' என்றும் கேட்பீராக.
10:35. (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “உங்களால் உருவாக்கப்பட்ட கடவுளர்களில் சத்தியத்தின் பக்கம் வழி காட்டக்கூடியவர் எவரேனும் உண்டா?” நீர் கூறும்: “அல்லாஹ்தான் சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுகின்றான். ஆகவே, சத்தியத்தின் பக்கம் வழிகாட்டுபவன் பின்பற்றத் தகுந்தவனா? அல்லது பிறர் வழிகாட்டுதலின்றி தானாக நேர்வழியைப் பெறமுடியாதவன் பின்பற்றத் தகுந்தவனா? உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நீங்கள் எப்படியெல்லாம் (தவறான) முடிவுகளை எடுக்கின்றீர்கள்!”
10:35. “உங்களுடைய இணையாளர்களில் சத்தியத்தின்பால் வழிகாட்டுபவர் உண்டா?” என்று நீர் கேட்பீராக! (நீரே அவர்களிடம்) “அல்லாஹ்தான் சத்திய (மார்க்க)த்திற்கு வழி காட்டுகிறான்”, எனக் கூறுவீராக! சத்தியத்திற்கு வழிகாட்டுபவன் பின்பற்றப்பட மிக உரியவனா? அல்லது வழிகாட்டப்பட்டாலேயன்றி நேர் வழியை அடைய மாட்டானே அ(வன் பின்பற்றத்தக்க)வனா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு) மாறாக நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?
10:36
10:36 وَمَا يَتَّبِعُ اَكْثَرُهُمْ اِلَّا ظَنًّا ؕاِنَّ الظَّنَّ لَا يُغْنِىْ مِنَ الْحَـقِّ شَيْــٴًــا‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ‏
وَمَا يَتَّبِعُ பின்பற்றவில்லை اَكْثَرُ பெரும்பாலானவர்கள் هُمْ அவர்களில் اِلَّا தவிர ظَنًّا சந்தேகத்தை ؕاِنَّ நிச்சயமாக الظَّنَّ சந்தேகம் لَا يُغْنِىْ பலன் தராது مِنَ விட்டு الْحَـقِّ உண்மையை شَيْــٴًــا‌ ؕ ஒரு சிறிது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِمَا எதை يَفْعَلُوْنَ‏ அவர்கள் செய்கிறார்கள்
10:36. ஆனால், அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
10:36. அவர்களில் பெரும்பாலானவர்கள் வீண் சந்தேகத்தையே தவிர வேறொன்றையும் பின்பற்றுவது இல்லை. நிச்சயமாக வீண் சந்தேகம் உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் பயன்படாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்.
10:36. உண்மையில், அவர்களில் பெரும்பாலோர் ஊகத்தைத்தான் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால், ஊகமோ சத்தியத்தின் தேவையை சற்றும் நிறைவேற்றாது. இவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாய் இருக்கின்றான்.
10:36. மேலும், அவர்களில் பெரும்பாலோர் (அவசியமில்லாத) எண்ணத்தையேயன்றி (வேறெதையும்) பின்பற்றுவதில்லை, நிச்சயமாக (அவசியமில்லாத) எண்ணம் உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் பயன்படாது, நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவன்.
10:37
10:37 وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ يُّفْتَـرٰى مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰـكِنْ تَصْدِيْقَ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ الْكِتٰبِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏
وَمَا كَانَ இல்லை هٰذَا الْقُرْاٰنُ இந்த குர்ஆன் اَنْ يُّفْتَـرٰى இட்டுக்கட்டப்பட்டதாக مِنْ இருந்து دُوْنِ அல்லாதவர் اللّٰهِ அல்லாஹ் وَلٰـكِنْ எனினும் تَصْدِيْقَ உண்மைப்படுத்துதல் الَّذِىْ எவற்றை بَيْنَ يَدَيْهِ தனக்கு முன்னால் وَتَفْصِيْلَ இன்னும் விவரித்துக் கூறுதல் الْكِتٰبِ சட்டங்களை لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِ இதில் مِنْ இருந்து رَّبِّ இறைவன் الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
10:37. இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை.
10:37. இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) தவிர (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதல்ல. மேலும், இதற்கு முன்னுள்ள வேதங்களை இது உண்மையாக்கி வைத்து அவற்றில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. ஆகவே, (இது) உலகத்தாரின் இறைவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை.
10:37. இந்தக் குர்ஆன் அல்லாஹ்(வின் வஹியே தவிர அவன்) அல்லாதவர்களால் புனைந்துரைக்கப்பட்டதன்று; உண்மையில் இது தனக்கு முன்னால் வந்துள்ள வேதங்களை மெய்ப்படுத்தக் கூடியதாகவும், ‘அல் கிதாபின்’ விளக்கமாகவும் திகழ்கின்றது. இது அகிலங்களின் அதிபதியிடமிருந்து வந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
10:37. இன்னும், இந்தக் குர் ஆன் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதே தவிர (மற்றெவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதன்று, எனினும், (இது) இதற்கு முன்னுள்ள (வேதங்களான)தை உண்மையாக்கி வைத்தது, வேதத்தை (அதிலுள்ளவற்றை) விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது, அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்துள்ள இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
10:38
10:38 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ‌ ؕ قُلْ فَاْتُوْا بِسُوْرَةٍ مِّثْلِهٖ وَادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
اَمْ அல்லது يَقُوْلُوْنَ அவர்கள் கூறுகின்றனர் افْتَـرٰٮهُ‌ ؕ இதை இட்டுக்கட்டினார் قُلْ கூறுவீராக فَاْتُوْا வாருங்கள் بِسُوْرَةٍ ஒர் அத்தியாயத்தைக் கொண்டு مِّثْلِهٖ அது போன்ற وَادْعُوْا இன்னும் அழையுங்கள் مَنِ எவர் اسْتَطَعْتُمْ சாத்தியமானீர்கள் مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மை சொல்பவர்களாக
10:38. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று.
10:38. இதை (நம் தூதராகிய) ‘‘அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்'' என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின் நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமானவர்கள் அனைவரையும் (உங்களுக்குத் துணையாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்.''
10:38. என்ன, இவர்கள் இறைத்தூதர் இதனைச் சுயமாக இயற்றியுள்ளார் என்று கூறுகின்றார்களா? நீர் கூறும்: “(இக் குற்றச்சாட்டில்) நீங்கள் உண்மையானவர்களாயின், இதுபோன்ற ஓர் அத்தியாயத்தை இயற்றிக்கொண்டு வாருங்கள். மேலும், அல்லாஹ்வை விடுத்து (உதவிக்காக) யார் யாரை உங்களால் அழைக்க முடியுமோ அவர்களையெல்லாம் அழைத்துக் கொள்ளுங்கள்!”
10:38. அல்லது (குர் ஆனாகிய) இதனை (நம்முடைய தூதராகிய) “அவர் (பொய்யாகக்)கற்பனை செய்து கொண்டார்” என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறெனின் நபியே! அவர்களிடம் “உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதனைப் போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள், அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமானவர்களையும் (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று நீர் கூறுவீராக!
10:39
10:39 بَلْ كَذَّبُوْا بِمَا لَمْ يُحِيْطُوْا بِعِلْمِهٖ وَلَمَّا يَاْتِهِمْ تَاْوِيْلُهٗ ‌ؕ كَذٰلِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ‏
بَلْ மாறாக كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِمَا لَمْ يُحِيْطُوْا எதை/அவர்கள் சூழ்ந்தறியவில்லை بِعِلْمِهٖ அதன் அறிவு وَلَمَّا இன்னும் வரவில்லை يَاْتِهِمْ இவர்களுக்கு تَاْوِيْلُهٗ ؕ அதன் விளக்கம் كَذٰلِكَ இவ்வாறே كَذَّبَ பொய்ப்பித்தனர் الَّذِيْنَ எவர்கள் مِنْ முன்னர் قَبْلِهِمْ‌ இவர்களுக்கு فَانْظُرْ ஆகவே கவனிப்பீராக كَيْفَ كَانَ எவ்வாறு இருந்தது عَاقِبَةُ முடிவு الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களின்
10:39. அப்படியல்ல; அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.
10:39. எனினும், அவர்கள் தங்கள் அறிவால் தெரிந்து கொள்ள முடியாததையும், (நிகழுமென) அதில் கூறப்பட்டவை நிகழாதிருக்கையில் அவற்றையும் (அதில் கூறப்பட்ட மற்றவற்றையும்) பொய்யென அவர்கள் கூறுகின்றனர்.இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தங்கள் அறிவுக்கு எட்டாததையும், தாங்கள் காணாததையும்) பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தனர். ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவு எப்படி முடிந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக.
10:39. உண்மையில் எந்த வேதத்தை இவர்கள், தம் அறிவால் புரிந்து கொள்ளவில்லையோ அந்த வேதத்தையும், அது விடுக்கும் எச்சரிக்கையின் இறுதி விளைவு அவர்களிடம் வராத நிலையில் அதையும் (வெறும் கற்பனையின் அடிப்படையில்) பொய் என்று கூறுகின்றார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன் சென்றுபோன மக்களும் பொய்யென்று கூறி வந்தனர். எனவே, அந்த அக்கிரமக்காரர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பாரும்!
10:39. மாறாக (குர் ஆனாகிய) அதன் அறிவை(ப் பற்றி) அவர்கள் தெரிந்து கொள்ள முடியாததையும், அதன் விளக்கம் பற்றி அவர்களுக்கு வராதவற்றையும் அவர்கள் பொய்யாக்குகின்றனர், அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அவற்றைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர், ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை (நபியே) நீர் பார்ப்பீராக.
10:40
10:40 وَ مِنْهُمْ مَّنْ يُّؤْمِنُ بِهٖ وَمِنْهُمْ مَّنْ لَّا يُؤْمِنُ بِهٖ‌ؕ وَرَبُّكَ اَعْلَمُ بِالْمُفْسِدِيْنَ‏
وَ مِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் يُّؤْمِنُ நம்பிக்கைகொண்டார் بِهٖ அதை وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் لَّا يُؤْمِنُ நம்பிக்கை கொள்ளமாட்டார் بِهٖ‌ؕ அதை وَرَبُّكَ உம் இறைவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِالْمُفْسِدِيْنَ‏ விஷமிகளை
10:40. அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர்; இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும், உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான்.
10:40. (திரு குர்ஆனில் கூறப்பட்டவை நிகழுமென) அதை நம்பக்கூடியவரும் அவர்களில் உள்ளனர்; (நிகழ்ந்த பின்னரும்) அதை நம்பாதவரும் அவர்களில் உள்ளனர். (அதை நம்பாத) இந்த விஷமிகளை உமது இறைவன் நன்கறிவான்.
10:40. அவர்களில் சிலர் இதன் மீது நம்பிக்கை கொள்வார்கள். வேறு சிலர் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். இத்தகைய குழப்பவாதிகளை உம்முடைய இறைவன் நன்கறிபவனாக இருக்கின்றான்.
10:40. மேலும், அவர்களில் (குர் ஆனாகிய) இதனை விசுவாசிப்பவரும் உள்ளனர், அவர்களில் இதனை விசுவாசங் கொள்ளாதோரும் உள்ளனர், இன்னும், உம்முடைய இரட்சகன் குழப்பக்காரர்களை மிக அறிந்தவன்.
10:41
10:41 وَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ لِّىْ عَمَلِىْ وَلَـكُمْ عَمَلُكُمْ‌ۚ اَنْـتُمْ بَرِيْٓـــٴُـوْنَ مِمَّاۤ اَعْمَلُ وَاَنَا بَرِىْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ‏
وَاِنْ كَذَّبُوْكَ அவர்கள் உம்மை பொய்ப்பித்தால் فَقُلْ கூறுவீராக لِّىْ எனக்கு عَمَلِىْ என் செயல் وَلَـكُمْ இன்னும் உங்களுக்கு عَمَلُكُمْ‌ۚ உங்கள் செயல் اَنْـتُمْ நீங்கள் بَرِيْٓـــٴُـوْنَ நீங்கியவர்கள் مِمَّاۤ எதிலிருந்து اَعْمَلُ செய்கிறேன் وَاَنَا இன்னும் நான் بَرِىْٓءٌ நீங்கியவன் مِّمَّا எதிலிருந்து تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்கிறீர்கள்
10:41. உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக.
10:41. (நபியே!) உம்மை பொய்யரென அவர்கள் கூறினால் (அவர்களை நோக்கி ‘‘நன்மையோ தீமையோ) என் செயல்(களின் பலன்) எனக்குரியது; (அவ்வாறே) உங்கள் செயல்(களின் பலன்) உங்களுக்குரியது. என் செயலில் இருந்து நீங்கள் விடுபட்டவர்கள்; உங்கள் செயலில் இருந்து நான் விடுபட்டவன்'' என்று கூறுவீராக.
10:41. மேலும், இவர்கள் உம்மைப் பொய்யர் என்று சொன்னால் நீர் கூறும்: “என்னுடைய செயல் எனக்குரியது; உங்களுடைய செயல் உங்களுக்குரியது. நான் செய்கின்ற செயல்களுக்கு நீங்கள் பொறுப்பாளர்களல்லர். நீங்கள் செய்கின்ற செயல்களுக்கு நானும் பொறுப்பாளன் அல்லன்!”
10:41. இன்னும், (நபியே) உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால், (நீர் அவர்களிடம்), “என் செயல் (அதன் பலன்) எனக்குரியது, (அவ்வாறே) உங்கள் செயல் (அதன் பலன்) உங்களுக்குரியது, நான் செய்வதிலிருந்து நீங்கள் நீங்கியவர்கள்; நீங்கள் செய்வதிலிருந்து நானும் நீங்கியவன்” என்று கூறுவீராக!
10:42
10:42 وَمِنْهُمْ مَّنْ يَّسْتَمِعُوْنَ اِلَيْكَ‌ؕ اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوْا لَا يَعْقِلُوْنَ‏
وَمِنْهُمْ அவர்களில் مَّنْ எவர் يَّسْتَمِعُوْنَ செவிமடுக்கிறார்கள் اِلَيْكَ‌ؕ உம் பக்கம் اَفَاَنْتَ تُسْمِعُ நீர் கேட்கவைப்பீரா? الصُّمَّ செவிடர்களை وَلَوْ كَانُوْا அவர்கள்இருந்தாலும் لَا يَعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிய மாட்டார்கள்
10:42. இன்னும் உம் வார்த்தைகளைக் கேட்பவர்கள் (போல் பாவனை) செய்பவர்களும் அவர்களில் இருக்கின்றனர் - எதுவுமே விளங்கிக் கொள்ள இயலாச் செவிடர்களை நீர் கேட்கும்படிச் செய்ய முடியுமா?
10:42. அவர்களில், உங்கள் வார்த்தையைக் கேட்போ(ரைப் போல் பாவனை செய்வோ)ரும் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டார்கள் என்று நீர் எண்ணி விட்டீரா?) ஒன்றையுமே (செவியுற்று) அறிந்து கொள்ள முடியாத முழுச் செவிடர்களை செவி கேட்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா?
10:42. மேலும், நீர் கூறுவதைக் கேட்பவர் (கள் போல பாவனை செய்பவர்)கள் அவர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எதையும் விளங்காமல் இருந்தாலும் அச்செவிடர்களைக் கேட்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா?
10:42. மேலும், உமக்கு செவியேற்போரும் அவர்களில் இருக்கின்றனர், செவிடர்களை-அவர்கள் (எதனையும்) விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்தாலும் நீர் செவியேற்கச் செய்வீரா?
10:43
10:43 وَمِنْهُمْ مَّنْ يَّنْظُرُ اِلَيْكَ‌ ؕ اَفَاَنْتَ تَهْدِى الْعُمْىَ وَ لَوْ كَانُوْا لَا يُبْصِرُوْنَ‏
وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் يَّنْظُرُ பார்க்கிறார் اِلَيْكَ‌ ؕ உம் பக்கம் اَفَاَنْتَ நீர் تَهْدِى நேர்வழிசெலுத்துவீரா? الْعُمْىَ குருடர்களை وَ لَوْ كَانُوْا لَا يُبْصِرُوْنَ‏ அவர்கள் இருந்தாலும்/பார்க்க மாட்டார்கள்
10:43. உம்மைப் பார்ப்போரும் அவர்களில் இருக்கிறார்கள் - (எதுவும்) பார்க்க இயலாத குருடர்களை நீர் நேர்வழியில் செலுத்த முடியுமா?
10:43. உம்மைப் பார்ப்பவர்களும் அவர்களில் பலர் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உம்மை அறிந்து கொண்டார்கள் என எண்ணி விட்டீர்களா?) எதையும் பார்க்க முடியாத பிறவிக் குருடர்களைப் பார்க்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா?
10:43. மேலும், உம்மைப் பார்ப்பவர்(போல பாவனை செய்பவர்)கள் அவர்களில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் புலப்படாவிட்டாலும் அக்குருடர்களுக்கு உம்மால் வழிகாட்ட முடியுமா?
10:43. இன்னும், உம்மைப் பார்ப்போரும் அவர்களில் (சிலர்) இருக்கின்றனர், குருடர்களுக்கு அவர்கள் பார்க்காதவர்களாக இருப்பினும் நீர் வழிகாட்டுவீரா?
10:44
10:44 اِنَّ اللّٰهَ لَا يَظْلِمُ النَّاسَ شَيْــٴًــا وَّلٰـكِنَّ النَّاسَ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَظْلِمُ அநீதியிழைக்க மாட்டான் النَّاسَ மனிதர்களுக்கு شَيْــٴًــا ஒரு சிறிதும் وَّلٰـكِنَّ எனினும் النَّاسَ மனிதர்கள் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ‏ அநீதியிழைக்கின்றனர்
10:44. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.
10:44. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு அறவே தீங்கிழைப்பது இல்லை. எனினும், மனிதர்கள் (தீய செயல்களைச் செய்து) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.
10:44. உண்மையில் அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும் மனிதர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றார்கள்.
10:44. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு கொஞ்சமும் அநீதமிழைக்கமாட்டான், எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கின்றனர்.
10:45
10:45 وَيَوْمَ يَحْشُرُهُمْ كَاَنْ لَّمْ يَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنَ النَّهَارِ يَتَعَارَفُوْنَ بَيْنَهُمْ‌ؕ قَدْ خَسِرَ الَّذِيْنَ كَذَّبُوْا بِلِقَآءِ اللّٰهِ وَمَا كَانُوْا مُهْتَدِيْنَ‏
وَيَوْمَ நாளில் يَحْشُرُ ஒன்று சேர்ப்பான் هُمْ அவர்களை كَاَنْ போன்று لَّمْ يَلْبَثُوْۤا அவர்கள் தங்கவில்லை اِلَّا தவிர سَاعَةً ஒரு நேரம் مِّنَ النَّهَارِ பகலில் يَتَعَارَفُوْنَ அறிந்துகொள்வார்கள் بَيْنَهُمْ‌ؕ தங்களுக்குள் قَدْ خَسِرَ திட்டமாக நஷ்டமடைந்தார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தார்கள் بِلِقَآءِ சந்திப்பை اللّٰهِ அல்லாஹ்வின் وَمَا كَانُوْا அவர்கள் இருக்கவில்லை مُهْتَدِيْنَ‏ நேர்வழி பெற்றவர்களாக
10:45. அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்: அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.
10:45. (விசாரணைக்காக) அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில் பகலில் ஒரு சொற்ப நேரத்தைத் தவிர (இவ்வுலகில்) தாங்கள் தங்கவில்லை என்று அவர்கள் எண்ணுவதுடன், தங்களுக்குள் ஒருவரையொருவர் அறிந்தும் கொள்வார்கள். (ஆனால், ஒருவருக்கொருவர் உதவி செய்ய முன்வர மாட்டார்.) அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யாக்கியவர்கள் நிச்சயமாக (அந்த நாளில்) நஷ்டமடைந்தே இருப்பார்கள். (அந்நஷ்டத்திலிருந்து மீள) வழி காணாதவர்களாகவும் இருப்பார்கள்.
10:45. (இன்று இவர்கள் உலக வாழ்க்கையில் மதிமயங்கிக் கிடக்கின்றார்கள்.) ஆனால் அல்லாஹ் அவர்களை ஒன்று திரட்டும் நாளில், (இவ்வுலக வாழ்க்கை அவர்களுக்கு எவ்வாறு தோன்றுமெனில்) தமக்கிடையே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதற்காக பகலின் சொற்ப நேரமே தவிர (உலகில்) தாங்கள் தங்கியிருக்கவில்லை என்பது போல் தோன்றும்! அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யென்று கூறியவர்களும், ஒருபோதும் நேர் வழியின்படி வாழாதவர்களும் நிச்சயமாக பேரிழப்பிற்கு ஆளாகி விட்டார்கள் (என்பதும் அன்று உறுதியாகிவிடும்).
10:45. மேலும், அவர்களை அவன் ஒன்று திரட்டும் நாளில் (ஒரு) பகலில் சொற்ப நேரத்தைத் தவிர (இவ்வுலகில்) தாங்கள் தங்கவில்லை என்பதைப் போன்று (அவர்கள் எண்ணுவதுடன்) தங்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வார்கள்; அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யாக்கியோர் திட்டமாக (அந்நாளில்) நஷ்டமடைந்தே விட்டார்கள்; அவர்கள் நேர்வழி பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
10:46
10:46 وَاِمَّا نُرِيَـنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَـتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِيْدٌ عَلٰى مَا يَفْعَلُوْنَ‏
نُرِيَـنَّكَ உமக்கு بَعْضَ சிலவற்றை الَّذِىْ எதை نَعِدُ வாக்களிக்கிறோம் هُمْ அவர்களுக்கு اَوْ அல்லது نَـتَوَفَّيَنَّكَ கைப்பற்றிக் கொள்வோம்/உம்மை فَاِلَيْنَا நம் பக்கமே مَرْجِعُهُمْ மீளுமிடம்/அவர்களுடைய ثُمَّ பிறகு اللّٰهُ அல்லாஹ் شَهِيْدٌ சாட்சியாக இருப்பான் عَلٰى مَا يَفْعَلُوْنَ‏ அவர்கள் செய்தவற்றிற்கு
10:46. (உம் வாழ்நாளிலேயே) நாம் அவர்களுக்கு வாக்களித்த (வேதனைகளில்) ஒரு பகுதி (சம்பவிப்பதை) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு முன்னமேயே) நாம் உம் ஆத்மாவை கைப்பற்றிக் கொண்டாலும் - (எப்படியிருப்பினும்) அவர்கள் நம்மிடமே திரும்பி வர வேண்டியுள்ளது; இறுதியில், அவர்கள் செய்வதற்கெல்லாம் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.
10:46. (நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உமது வாழ்க்கை காலத்திலேயே) நீர் பார்க்கும்படிச் செய்வோம்; அல்லது (அவை வருவதற்கு முன்னர்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொள்வோம். எவ்வாறாயினும் அவர்கள் நம்மிடம்தான் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்(த்துக் கொண்டே இரு)க்கிறான்.
10:46. அவர்களுக்கு நாம் எச்சரிக்கை செய்துகொண்டிருக்கின்ற தீய விளைவின் ஒரு பகுதியை (நீர் உயிர் வாழும் போதே) காண்பித்து விட்டாலும் அல்லது (அதற்கு முன்னரே) நாம் உம்மை எடுத்துக் கொண்டாலும் எவ்வாறாயினும் நம்மிடமே அவர்கள் திரும்பி வர வேண்டியுள்ளது. மேலும், அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அவற்றுக்கு அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.
10:46. மேலும் (நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் (தண்டனைகளில்) சிலவற்றை (உம்முடைய வாழ்நாளிலேயே) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (நீர் பார்ப்பதற்கு முன்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொண்டாலும் (எவ்வாறாயினும்,) அவர்களுடைய திரும்புதல் நம் பாலேயாகும், பின்னர் அவர்கள் செய்பவற்றிற்கு அல்லாஹ் சாட்சியாளனாவான்.
10:47
10:47 وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ‌ ۚ فَاِذَا جَآءَ رَسُوْلُهُمْ قُضِىَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَلِكُلِّ ஒவ்வொருவருக்கும் اُمَّةٍ ஒரு சமுதாயம் رَّسُوْلٌ‌ ۚ ஒரு தூதர் فَاِذَا போது جَآءَ வரும் رَسُوْلُهُمْ தூதர்/அவர்களுடைய قُضِىَ தீர்ப்பளிக்கப்படும் بَيْنَهُمْ அவர்களுக்கிடையில் بِالْقِسْطِ நீதமாக وَهُمْ இன்னும் அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
10:47. ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை.
10:47. ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர் இறைத்தூதர் இருக்கிறார். பிறகு (ஏதேனும் உம்மத்தாரிடம்) அவர்களின் தூதர் வந்துவிட்டால், அவர்களுடைய கதி நீதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. மேலும், அவர்கள் மீது (இம்மியளவும்) அநீதி இழைக்கப்படுவதில்லை.
10:47. ஓவ்வொரு சமூகத்தினருக்கும் (நம்மால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் உண்டு, எனவே, அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்துவிடும்பொழுது அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும், மேலும், அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
10:48
10:48 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ அவர்கள் கேட்கின்றனர் مَتٰى எப்போது هٰذَا இந்த الْوَعْدُ வாக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
10:48. “நீங்கள் உண்மையாளராக இருந்தால் (அச்ச மூட்டப்படும் வேதனை பற்றிய) இந்த வாக்குறுதி எப்போது (அமலுக்கு வரும்)” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
10:48. ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (நீங்கள் பயமுறுத்தும்) வேதனை எப்பொழுது (வரும்)?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.
10:48. மேலும், “உங்களுடைய இந்த எச்சரிக்கை உண்மையாக இருந்தால் அது எப்போது நிறைவேறும்?” என்று அவர்கள் வினவுகின்றார்கள்.
10:48. “நீங்கள் (மறுமை நாள் பற்றிக் கூறுவதில்) உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்குறுதி எப்பொழுது (நடந்தேறும்?” என்று நிராகரிப்போராகிய) அவர்கள் கேட்கின்றனர்.
10:49
10:49 قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ ضَرًّا وَّلَا نَفْعًا اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ لِكُلِّ اُمَّةٍ اَجَلٌ‌ؕ اِذَا جَآءَ اَجَلُهُمْ فَلَا يَسْتَـاخِرُوْنَ سَاعَةً‌ وَّلَا يَسْتَقْدِمُوْنَ‏
قُلْ கூறுவீராக لَّاۤ اَمْلِكُ உரிமை பெறமாட்டேன் لِنَفْسِىْ எனக்கு ضَرًّا தீமைக்கோ وَّلَا نَفْعًا இன்னும் நன்மைக்கோ اِلَّا தவிர مَا எதை شَآءَ நாடினான் اللّٰهُؕ அல்லாஹ் لِكُلِّ ஒவ்வொரு اُمَّةٍ வகுப்பார் اَجَلٌ‌ؕ தவணை اِذَا جَآءَ வந்தால் اَجَلُهُمْ தவணை/அவர்களுடைய فَلَا يَسْتَـاخِرُوْنَ பிந்தமாட்டார்கள் سَاعَةً‌ ஒரு சிறிது நேரம் وَّلَا يَسْتَقْدِمُوْنَ‏ இன்னும் முந்த மாட்டார்கள்
10:49. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”
10:49. (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் நாடியதைத் தவிர ஒரு நன்மையோ தீமையோ நான் எனக்கே தேடிக்கொள்ள சக்தியற்றவன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு நாழிகை கூட பிந்த மாட்டார்கள்; முந்தக்கூட மாட்டார்கள்.'' (அத்தவணையில் அவர்கள் காரியம் முடிவு பெற்றுவிடும்).
10:49. (நபியே!) நீர் கூறும்: “எனக்கு நானே பலனளித்துக் கொள்ளவும், நஷ்டம் விளைவித்துக் கொள்ளவும்கூட எனக்கு அதிகாரமில்லை. ஆனால், அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தே இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு தவணை உண்டு. அவர்களுடைய இத்தவணை நிறைவடைந்து விட்டால் அவர்கள் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.”
10:49. (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக! “ அல்லாஹ் நாடியதையன்றி எனக்கு யாதொரு இடரை நீக்கிக் கொள்வதையும், யாதொரு பலனை (காத்துக் கொள்வதையும் நான் சக்தி பெறமாட்டேன், ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணையுண்டு, அவர்களுடைய தவணை வந்துவிட்டால் ஒருநாழிகை பிந்தவுமாட்டார்கள், முந்தவுமாட்டார்கள்.
10:50
10:50 قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَتٰٮكُمْ عَذَابُهٗ بَيَاتًا اَوْ نَهَارًا مَّاذَا يَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُوْنَ‏
قُلْ கூறுவீராக اَرَءَيْتُمْ அறிவிப்பீர்களாக اَتٰٮكُمْ உங்களுக்கு عَذَابُهٗ வேதனை/ அவனுடைய بَيَاتًا இரவில் اَوْ அல்லது نَهَارًا பகலில் مَّاذَا எதை يَسْتَعْجِلُ அவசரமாக தேடுகின்றனர் مِنْهُ அதிலிருந்து الْمُجْرِمُوْنَ‏ குற்றவாளிகள்
10:50. (நபியே!) நீர் கூறுவீராக: “அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால் - (அதைத் தடுத்துவிட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?
10:50. (நபியே) கூறுவீராக: ‘‘அவனுடைய வேதனை இரவிலோ பகலிலோ (எந்நேரத்திலாயினும்) உங்களிடம் வந்தால் (அதை நீங்கள் தடுத்துவிட முடியுமா என்பதைக்) கவனித்தீர்களா? (நபியே!) எதற்காக இக்குற்றவாளிகள் (வேதனை எப்பொழுது வரும்... எப்பொழுது வரும்... என்று கேட்டு) அவசரப்படுகின்றனர்?''
10:50. (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “நீங்கள் என்றாவது சிந்தித்திருக்கின்றீர்களா? அல்லாஹ்வின் வேதனை இரவிலோ பகலிலோ (திடீரென்று) உங்களிடம் வந்துவிட்டால் (அப்போது உங்களால் என்ன செய்ய இயலும்?) இக்குற்றவாளிகள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
10:50. நீர் கூறுவீராக! “அவனுடைய வேதனை இரவிலோ அல்லது பகலிலோ உங்களிடம் வந்தடைந்து விடுமானால் (நீங்கள் அதனை தடுத்துவிட முடியுமா? என்பதை) எனக்குக் கூறுங்கள்” (நபியே!) இக் குற்றவாளிகள் (எப்பொழுது வரும் என்று கேட்டு) அவனிடமிருந்து எதை அவசரப்படுகின்றனர்?”
10:51
10:51 اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنْتُمْ بِهٖؕ اٰۤلْــٴٰـنَ وَقَدْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ‏
اَثُمَّ அங்கே ? اِذَا مَا وَقَعَ நிகழ்ந்தால் اٰمَنْتُمْ நம்பிக்கை கொள்வீர்கள் بِهٖؕ அதைக் கொண்டு اٰۤلْــٴٰـنَ இப்போதுதானா? وَقَدْ كُنْتُمْ திட்டமாக நீங்கள் இருந்தீர்கள் بِهٖ அதை تَسْتَعْجِلُوْنَ‏ அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்!
10:51. “அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அவ்வேதனை வந்ததும்) இதோ! நீங்கள் எது (வர வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அது வந்து விட்டது” (என்று தான் கூறப்படும்).
10:51. ‘‘(இப்பொழுது நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கும்) அது வந்ததன் பின்னரா அதை நீங்கள் நம்புவீர்கள்? (அச்சமயம் நீங்கள் அதை நம்புவதில் பயன் ஒன்றும் இல்லை.) நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தது இதோ வந்துவிட்டது!'' (என்றுதான் அந்நேரத்தில் கூறப்படும்.)
10:51. அது உங்களை வந்து தாக்கும்போதுதான் அதனை நம்புவீர்களா? இப்போது தப்பிக்கப் பார்க்கின்றீர்களா? அது வரவேண்டுமென்று நீங்கள்தானே அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்.
10:51. “(அவசரப்பட்டுக் கொண்டிருக்கும்) அது நிகழ்ந்து விட்டதன் பின்னரா அதனை நீங்கள் நம்புவீர்கள்” நீங்கள் அவசரப்பட்டு கொண்டிருந்த நிலையில் (நிகழ்ந்துவிட்ட அதனை) இப்போது தானா நம்பிக்கை கொள்கிறீர்கள்?” என்று அப்போது கூறப்படும்.
10:52
10:52 ثُمَّ قِيْلَ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ الْخُـلْدِ‌ۚ هَلْ تُجْزَوْنَ اِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ‏
ثُمَّ பிறகு قِيْلَ கூறப்பட்டது لِلَّذِيْنَ ظَلَمُوْا அநியாயம் செய்தவர்களை நோக்கி ذُوْقُوْا சுவையுங்கள் عَذَابَ الْخُـلْدِ‌ۚ நிலையான வேதனை هَلْ تُجْزَوْنَ நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா? اِلَّا தவிர بِمَا எதற்கு كُنْتُمْ நீங்கள் இருந்தீர்கள் تَكْسِبُوْنَ‏ செய்கிறீர்கள்
10:52. அன்றியும், அந்த அநியாயக்காரர்களை நோக்கி; “என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய இவ்வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள் - நீங்கள் சம்பாதித்ததைத் தவிர (வேறு) கூலி கொடுக்கப்படுவீர்களா?” என்று கூறப்படும்.
10:52. பிறகு, இந்த அநியாயக்காரர்களை நோக்கி ‘‘நிலையான இந்த வேதனையை சுவைத்துக் கொண்டிருங்கள். நீங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலுக்குத் தகுதியான கூலியே உங்களுக்குக் கொடுக்கப்பட்டது'' என்றும் கூறப்படும்.
10:52. பிறகு அந்த அக்கிரமக்காரர்களிடம் கூறப்படும்: “இதோ! நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்! எதனை நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தீர்களோ அதற்குரிய தண்டனையைத் தவிர வேறு என்ன கூலிதான் உங்களுக்கு அளிக்கப்படும்?”
10:52. பிறகு அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களிடம் “நிலையான (இவ்)வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள், நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததைத் தவிர (வேறு எதற்கும்) நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா? “ என்றும் கேட்கப்படும்.
10:53
10:53 وَيَسْتَنْۢبِــٴُـوْنَكَ اَحَقٌّ هُوَ‌ ؕؔ قُلْ اِىْ وَرَبِّىْۤ اِنَّهٗ لَحَقٌّ ؔ‌ؕ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ‏
وَيَسْتَنْۢبِــٴُـوْنَكَ அவர்கள் செய்தி கேட்கின்றனர்/உம்மிடம் اَحَقٌّ உண்மைதானா? هُوَ‌ ؕؔ அது قُلْ கூறுவீராக اِىْ ஆம் وَرَبِّىْۤ என் இறைவன் மீது சத்தியமாக اِنَّهٗ நிச்சயமாக அது لَحَقٌّ ؔ‌ؕ உண்மைதான் وَمَاۤ اَنْتُمْ நீங்கள் அல்லர் بِمُعْجِزِيْنَ‏ பலவீனப்படுத்துபவர்கள்
10:53. மேலும் “அது உண்மை தானா?” என்று (நபியே! அவர்கள்) உம்மிடம் வினவுகிறார்கள்; “ஆம்! என் இறைவன் மீது சத்தியமாய் நிச்சயமாக அது உண்மையே. (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது” என்று கூறுவீராக.
10:53. (நபியே!) ‘‘அது உண்மைதானா?'' என்று அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அதற்கு நீர் கூறுவீராக: ‘‘மெய்தான்! என் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அது உண்மைதான். (அதை) நீங்கள் தடுத்துவிட முடியாது.''
10:53. மேலும், “நீர் கூறுவது உண்மைதானா?” என்று உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: “என் இறைவன் மீது ஆணையாக! அது முற்றிலும் உண்மையானதே! மேலும், அதனைத் தடுத்து நிறுத்தும் வலிமையை நீங்கள் பெற்றிருக்கவில்லை.”
10:53. (நபியே!) அது உண்மைதானா? என்று தெரிவிக்குமாறு அவர்கள் உம்மிடம் செய்தி கேட்கின்றனர், (அதற்கு) நீர் கூறுவீராக “ஆம்! என் இரட்சகன் மீது சத்தியமாக நிச்சயமாக அது உண்மைதான், (மண்ணோடு மண்ணாக ஆகிய பின் மீண்டும் உங்களைத் திருப்பிக் கொண்டு வருவதிலிருந்து அல்லாஹ்வை) நீங்கள் இயலாதவனாக ஆக்கிவிடக் கூடியவர்களுமல்ல.
10:54
10:54 وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِى الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖ‌ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ‌ۚ وَقُضِىَ بَيْنَهُمْ بِالْقِسْطِ‌ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَلَوْ اَنَّ இருந்தால் لِكُلِّ نَفْسٍ ஒவ்வோர் ஆன்மாவிற்கும் ظَلَمَتْ அநியாயம் செய்தது مَا فِى الْاَرْضِ எவை/பூமியில் لَافْتَدَتْ பரிகாரமாகக் கொடுத்துவிடும் بِهٖ‌ؕ அவற்றை وَاَسَرُّوا இன்னும் மறைத்துக் கொள்வார்கள் النَّدَامَةَ துக்கத்தை لَمَّا போது رَاَوُا அவர்கள் கண்டனர் الْعَذَابَ‌ۚ வேதனையை وَقُضِىَ இன்னும் தீர்ப்பளிக்கப்பட்டது بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் بِالْقِسْطِ‌ நீதமாக وَهُمْ அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
10:54. (அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.
10:54. அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்கள்) அனைத்தும் இருந்தபோதிலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிடக் கருதும்! மேலும், வேதனையைக் கண்ணால் காணும் அந்நேரத்தில் (மக்கள்) துக்கத்தை மறைத்துக் கொள்(ள கருது)வார்கள் (அந்நாளில்) அவர்களுக்கு நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; (அணுவளவும்) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
10:54. அக்கிரமம் செய்த ஒவ்வொருவனும் தன்னிடம் இந்த பூமியில் உள்ள செல்வம் அனைத்தும் இருந்தாலும், அந்த வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள அதனை (முழுவதும்) ஈடாக அளிப்பதற்குத் தயாராகி விடுவான். மேலும், இவர்கள் அவ்வேதனையைக் காணும்போது, உள்ளூரப் பெரிதும் வருந்துவார்கள். ஆயினும், அவர்களிடையே முற்றிலும் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கப்படும்; அவர்கள் (எவ்வகையிலும்) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
10:54. மேலும், அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்) யாவும் இருந்த போதிலும் அவை யாவையுமே (அல்லாஹ்வின்) தண்டனையிலிருந்து தன்னை நீக்கிக் கொள்ள) ஈடாகக் கொடுத்துவிடும், மேலும், அவர்கள் தண்டனையைக் கண்கூடாகப் பார்க்கின்றபொழுது கைசேதத்தை (உள்ளூர) அவர்கள் மறைத்துக்கொள்வர், (அந்நாளில்) அவர்களிடையே நீதியாகவே தீர்ப்பளிக்கப்படும், அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.
10:55
10:55 اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ اَلَاۤ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக لِلّٰهِ அல்லாஹ்விற்கு مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَالْاَرْضِؕ இன்னும் பூமியில் اَلَاۤ அறிந்து கொள்ளுங்கள் اِنَّ நிச்சயமாக وَعْدَ வாக்குறுதி اللّٰهِ அல்லாஹ்வுடைய حَقٌّ உண்மையானது وَّلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) هُمْ அவர்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
10:55. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை என்பதைத் திடமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் வாக்குறுதியும் நிச்சயமாகவே உண்மையானது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள் - எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிந்து கொள்வதில்லை.
10:55. (மனிதர்களே!) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். எனினும் (மனிதர்களில்) பலர் இதை நம்புவதில்லை.
10:55. தெரிந்து கொள்ளுங்கள்! வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்துப் பொருள்களும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது! ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியாமலிருக்கின்றனர்.
10:55. (மனிதர்களே) வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள், எனினும் அவர்களில் அதிகமானோர் (இதனை) அறியமாட்டார்கள்.
10:56
10:56 هُوَ يُحْىٖ وَيُمِيْتُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ‏
هُوَ அவன்தான் يُحْىٖ உயிர்ப்பிக்கிறான் وَيُمِيْتُ இன்னும் மரணிக்கச் செய்கிறான் وَاِلَيْهِ இன்னும் அவனிடமே تُرْجَعُوْنَ‏ நீங்கள் திருப்பப்படுவீர்கள்
10:56. அவனே உயிர் கொடுக்கின்றான்; இன்னும், (அவனே) மரணிக்கச் செய்கின்றான் - பின்னர் அவனிடமே (மறுமையில்) திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
10:56. அவனே (உங்களை) உயிர்ப்பித்தான்; அவனே (உங்களை) மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனிடமே (மறுமையில்) நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
10:56. அவனே வாழ்வை அளிக்கின்றான். மேலும், மரணம் அளிப்பவனும் அவனே! மேலும் நீங்கள் அனைவரும் அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!
10:56. அவனே (உங்களுக்கு) உயிர் கொடுக்கிறான், அவனே (உங்களை) மரணிக்கச் செய்கிறான், (பின்னர், அவனிடமே (மறுமையில்) நீங்கள் திருப்பப்படுவீர்கள்.
10:57
10:57 يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ  وَهُدًى وَّرَحْمَةٌ لِّـلْمُؤْمِنِيْنَ‏
يٰۤاَيُّهَا النَّاسُ மனிதர்களே قَدْ திட்டமாக جَآءَتْكُمْ வந்தது/உங்களுக்கு مَّوْعِظَةٌ நல்லுபதேசம் مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் وَشِفَآءٌ இன்னும் மருந்து لِّمَا உள்ளவற்றிற்கு فِى الصُّدُوْرِۙ  நெஞ்சங்களில் وَهُدًى இன்னும் நேர்வழி وَّرَحْمَةٌ இன்னும் அருள் لِّـلْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
10:57. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது; ) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
10:57. மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து நல்லுபதேசமும் உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதும், (அது) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு நேர்வழி காட்டியும், இறை அருளும் வந்துள்ளன.
10:57. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழி காட்டக்கூடிய தாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது.
10:57. மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து திட்டமாக ஒரு நல்லுபதேசமும் (உங்கள்) இதயங்களிலுள்ளவற்றைக் குணப்படுத்துவதும்) உங்களுக்கு வந்துவிட்டது, மேலும், (அது) விசுவாசங் கொண்டவர்களுக்கு வழிகாட்டியாகவும், அருளாகவும் இருக்கிறது.
10:58
10:58 قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَـفْرَحُوْا ؕ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ‏
قُلْ கூறுவீராக بِفَضْلِ அருளைக் கொண்டு اللّٰهِ அல்லாஹ்வின் وَبِرَحْمَتِهٖ இன்னும் அவனது கருணையைக் கொண்டு فَبِذٰلِكَ இதைக் கொண்டே فَلْيَـفْرَحُوْا ؕ அவர்கள் மகிழ்ச்சியடையட்டும் هُوَ இது خَيْرٌ மிக மேலானது مِّمَّا எவை/விட يَجْمَعُوْنَ‏ சேகரிக்கிறார்கள்
10:58. “அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.
10:58. ‘‘(இதை) அல்லாஹ்வின் அருளாகவும் அன்பாகவும் (பாவித்து) இதற்காக அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (மற்ற பொருள்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது'' என்றும் (நபியே!) கூறுவீராக.
10:58. (நபியே) நீர் கூறும்: “அல்லாஹ் தன்னுடைய கருணையைக் கொண்டும் அருளைக் கொண்டும் இதனை இறக்கியுள்ளான். இதனைக் குறித்து மக்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும்விட இது சிறந்ததாகும்.”
10:58. (அது) அல்லாஹ்வின் பேரருளைக் கொண்டும், அவனுடைய அருளைக் கொண்டுமுள்ளதாகும், ஆகவே, அதைக்கொண்டு அவர்கள் சந்தோஷமடையட்டும், இது அவர்கள் சேகரித்து வைத்திருப்பவற்றைவிட மிகச் சிறந்தது” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
10:59
10:59 قُلْ اَرَءَيْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَـكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ؕ قُلْ آٰللّٰهُ اَذِنَ لَـكُمْ‌ اَمْ عَلَى اللّٰهِ تَفْتَرُوْنَ‏
قُلْ கூறுவீராக اَرَءَيْتُمْ அறிவிப்பீர்களாக مَّاۤ எதை اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்காக مِّنْ رِّزْقٍ உணவில் فَجَعَلْتُمْ நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களா مِّنْهُ அதில் حَرَامًا ஆகாதவை وَّحَلٰلًا ؕ இன்னும் ஆகுமானவை قُلْ கூறுவீராக آٰللّٰهُ அல்லாஹ் اَذِنَ அனுமதியளித்தான் لَـكُمْ‌ உங்களுக்கு اَمْ அல்லது عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் تَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுகிறீர்கள்
10:59. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”
10:59. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவுகள் - அவற்றில் சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் (உங்கள் விருப்பப்படி) நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களே அதைப்பற்றி கூறுங்கள்!'' (‘‘இப்படி உங்கள் விருப்பப்படி செய்ய) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறானா? அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக(ப் பொய்) கூறுகிறீர்களா?'' என்று (அவர்களைக்) கேட்பீராக!
10:59. (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கின்றீர்களா? அல்லாஹ் உங்களுக்கு இறக்கியருளிய ரிஜ்கில் (அருட்பேற்றில்) சிலவற்றைத் தடுக்கப்பட்டவை என்றும், வேறு சிலவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்படுத்திக் கொண்டீர்களே!” (நபியே! இவர்களிடம்) கேளுங்கள்: “இதற்கு அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்திருந்தானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது புனைந்துரைக்கின்றீர்களா?”
10:59. (நபியே!) நீர் கூறுவீராக! “உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவு வகைகளை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஆகாதவையென்றும் சிலவற்றை ஆகுமானவையென்றும் நீங்கள் ஆக்கிக் கொண்டீர்கள்” (இவ்வாறு செய்ய) “அல்லாஹ்தான் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றானா, அல்லது அல்லாஹ்வின்மீது (பொய்யைக்) கற்பனை செய்கிறீர்களா?” என்று நீர் கேட்பீராக!
10:60
10:60 وَمَا ظَنُّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَشْكُرُوْنَ‏
وَمَا ظَنُّ எண்ணம் என்ன? الَّذِيْنَ எவர்கள் يَفْتَرُوْنَ இட்டுக்கட்டுகிறார்கள் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் الْكَذِبَ பொய்யை يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ மறுமை நாள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَذُوْ فَضْلٍ அருளுடையவன் عَلَى மீது النَّاسِ மனிதர்கள் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) هُمْ அவர்களில் لَا يَشْكُرُوْنَ‏ நன்றி செலுத்தமாட்டார்கள்
10:60. அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
10:60. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன எண்ணுகின்றனர்? (அது பொய்யென எண்ணிக் கொண்டனரா?) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கிருபையுடையவன். (அவ்வாறு இல்லையெனில் அவர்களை உடனுக்குடன் தண்டித்திருப்பான்.) இவ்வாறிருந்தும் அவர்களில் பலர் அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.
10:60. அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றவர்கள் மறுமை நாளில் தங்களுக்கு ஏற்படும் நிலையைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்? திண்ணமாக, அல்லாஹ் மக்கள் மீது கருணையுடையவனாக இருக்கின்றான். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
10:60. “அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கின்றார்களே அவர்களின் எண்ணம் மறுமை நாளைப்பற்றி என்ன? (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்களென எண்ணிக் கொண்டனரா?) நிச்சயமாக அல்லாஹ், மனிதர்கள் மீது பேரருளுடையோனாக இருக்கிறான், எனினும், அவர்களில் அதிகமானோர் நன்றி செலுத்துவதில்லை.
10:61
10:61 وَمَا تَكُوْنُ فِىْ شَاْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُوْدًا اِذْ تُفِيْضُوْنَ فِيْهِ‌ؕ وَمَا يَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ وَلَاۤ اَصْغَرَ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرَ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏
وَمَا تَكُوْنُ இருக்கமாட்டீர் فِىْ شَاْنٍ எந்த செயலிலும் وَّمَا تَتْلُوْا இன்னும் நீர் ஓத மாட்டீர் مِنْهُ அதிலிருந்து مِنْ قُرْاٰنٍ குர்ஆனிலிருந்து وَّلَا تَعْمَلُوْنَ இன்னும் செய்யமாட்டீர்கள் مِنْ عَمَلٍ எந்த செயலையும் اِلَّا தவிர كُنَّا நாம் இருந்தோம் عَلَيْكُمْ உங்கள் மீது شُهُوْدًا சாட்சிகளாக اِذْ போது تُفِيْضُوْنَ ஈடுபடுகிறீர்கள் فِيْهِ‌ؕ அவற்றில் وَمَا يَعْزُبُ இன்னும் மறையாது عَنْ رَّبِّكَ உம் இறைவனை விட்டு مِنْ مِّثْقَالِ அளவு ذَرَّةٍ ஓர் அணு فِى الْاَرْضِ பூமியில் وَلَا فِى السَّمَآءِ இன்னும் வானத்தில் وَلَاۤ اَصْغَرَ சிறிதும் இல்லை مِنْ ذٰ لِكَ இதை விட وَلَاۤ اَكْبَرَ இன்னும் பெரிதும் இல்லை اِلَّا தவிர فِىْ كِتٰبٍ பதிவேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
10:61. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், “குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைந்து விடுவதில்லை. இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.
10:61. நீங்கள் என்ன நிலைமையில் இருந்தபோதிலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எ(ந்த வசனத்)தை ஓதிய போதிலும், (உங்கள் காரியங்களில்) நீங்கள் எதைச் செய்த போதிலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போதே உங்களை நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உமது இறைவனுக்குத் தெரியாமல் தவறிவிடுவதில்லை. இவற்றைவிட சிறிதோ அல்லது பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமலில்லை.
10:61. (நபியே!) நீர் எந்த நிலைமையிலிருந்தாலும், குர்ஆனிலிருந்து எதை நீர் ஓதிக் காண்பித்தாலும், (மக்களே) நீங்களும் எந்தச் செயலைச் செய்து கொண்டிருந்தாலும், அதை நீங்கள் செய்து கொண்டிருக்கும் போதே நாம் உங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆக, வானம் மற்றும் பூமியில் உள்ள பொருள்களில் அணுவளவும் உம் இறைவனின் பார்வையை விட்டு மறைவானதல்ல! அதைவிடச் சிறியதோ, பெரியதோ அனைத்தும் ஒரு தெளிவான பதிவேட்டில் எழுதப்படாமல் இல்லை.
10:61. எக்காரியத்திலும் நீர் இருப்பதில்லை, இந்தக் குர் ஆனிலிருந்து நீங்கள் ஓதுவதுமில்லை, செயல் எதையும் நீங்கள் செய்வதுமில்லை, நீங்கள் அதில் ஈடுபட்டிருக்கும்பொழுது உங்கள் மீது நாம் பிரசன்னமானவர்களாக இருந்தே தவிர இன்னும், பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே) உமதிரட்சகனுக்குத் தெரியாமல் மறைந்து விடுவதில்லை, இன்னும், இவற்றைவிடச் சிறிதோ, பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய தெளிவான (லவ்ஹுல் மஹ்பூல் எனும்) பதிவுப் புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருந்தேயல்லாமல் இல்லை.
10:62
10:62 اَلَاۤ اِنَّ اَوْلِيَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ‏
اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக اَوْلِيَآءَ நண்பர்கள் اللّٰهِ அல்லாஹ்வின் لَا خَوْفٌ ஒரு பயமுமில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ ۖ ۚ‏ இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
10:62. (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
10:62. (நம்பிக்கையாளர்களே!) ‘‘அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் நேசர்க(ளான நல்லடியார்)களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள்''.
10:62. தெரிந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அல்லாஹ்வின் நேசர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
10:62. (விசுவாசிகளே!) அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்கள்- அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்.
10:63
10:63 الَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَؕ‏
الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَكَانُوْا இருந்தார்கள் يَتَّقُوْنَؕ‏ அவர்கள் அஞ்சுபவர்களாக
10:63. அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
10:63. அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து நடக்கின்றனர்.
10:63. அவர்களோ நம்பிக்கை கொண்டு இறையச்சமுள்ள போக்கினை மேற் கொண்டிருந்தார்கள்.
10:63. அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்வை உண்மையாகவே விசுவாசித்து (அவனைப்) பயந்தவர்களாகவும் இருப்பார்கள்.
10:64
10:64 لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ؕ لَا تَبْدِيْلَ لِـكَلِمٰتِ اللّٰهِ‌ؕ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُؕ‏
لَهُمُ அவர்களுக்கே الْبُشْرٰى நற்செய்தி فِى الْحَيٰوةِ வாழ்வில் الدُّنْيَا உலகம் وَفِى الْاٰخِرَةِ‌ؕ மறுமையில் لَا அறவே இல்லை تَبْدِيْلَ மாற்றம் لِـكَلِمٰتِ வாக்குகளில் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய ذٰلِكَ هُوَ இதுதான் الْفَوْزُ வெற்றி الْعَظِيْمُؕ‏ மகத்தானது
10:64. அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
10:64. இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும்.
10:64. இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்திகள் இருக்கின்றன. அல்லாஹ்வின் வாக்குகள் மாறக்கூடியவையல்ல! இதுதான் மாபெரும் வெற்றியாகும்.
10:64. அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் நன்மாராயமுண்டு, (உயர், பதவிகளை அவர்களுக்கு வழங்குவதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாற்றமுமில்லை, இதுவே மகத்தான வெற்றியாகும்.
10:65
10:65 وَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ‌ۘ اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِيْعًا‌ ؕ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
وَلَا கவலைக்குள்ளாக்க வேண்டாம் يَحْزُنْكَ உம்மை قَوْلُهُمْ‌ۘ சொல்/அவர்களுடைய اِنَّ நிச்சயமாக الْعِزَّةَ கண்ணியம் لِلّٰهِ அல்லாஹ்வுக்கு جَمِيْعًا‌ ؕ அனைத்து هُوَ அவன் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
10:65. (நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
10:65. (நபியே! உம்மை அவமதித்துக் கூறுகின்ற) அவர்களுடைய வார்த்தைகள் உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம். நிச்சயமாக கண்ணியம், (மரியாதை) அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (அவன் விரும்பியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்.) அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான்.
10:65. (நபியே!) அவர்களுடைய (அவதூறான) பேச்சுகள் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம்! கண்ணியம் முழுவதும் திண்ணமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் இருக்கிறது. அவன் அனைத்தையும் கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
10:65. இன்னும் (நபியே! உம்மை இழிவாகக் கூறும்) அவர்களுடைய கூற்று(கள்) உம்மைக் கவலைப்படுத்த வேண்டாம், நிச்சயமாக கண்ணியம் (அது) அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது அவனே செவியேற்கிறவன், (யாவையும்) நன்கறிகிறவன்.
10:66
10:66 اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِ‌ؕ وَمَا يَتَّبِعُ الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ شُرَكَآءَ‌ ؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ‏
اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக لِلّٰهِ அல்லாஹ்வுக்கு مَنْ எவர்கள் فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَنْ இன்னும் எவர்கள் فِى الْاَرْضِ‌ؕ பூமியில் وَمَا இன்னும் எதை? يَتَّبِعُ பின்பற்றுகின்றனர் الَّذِيْنَ எவர்கள் يَدْعُوْنَ அழைக்கிறார்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி شُرَكَآءَ‌ ؕ இணை(தெய்வங்)களை اِنْ يَّتَّبِعُوْنَ அவர்கள் பின்பற்றுவதில்லை اِلَّا தவிர الظَّنَّ சந்தேகத்தை وَاِنْ இல்லை هُمْ அவர்கள் اِلَّا தவிர يَخْرُصُوْنَ‏ கற்பனை செய்பவர்களாக
10:66. அறிந்து கொள்ளுங்கள் வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே.
10:66. வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே என்பதை அறிந்து கொள்ளுங்கள். (இவ்வாறிருக்க,) அல்லாஹ்வையன்றி மற்றவற்றையும் தெய்வங்கள் என அழைப்பவர்கள் எதைத்தான் பின்பற்றுகின்றனர்? வீண் சந்தேகத்தைதவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை; அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே!
10:66. அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்கள், பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அல்லாஹ்விற்குரியவர்களாவர். எவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு (தாம் உருவாக்கிக் கொண்ட) தெய்வங்களை அழைக்கின்றார்களோ அவர்கள் வெறும் யூகங்களைத்தான் பின்பற்றுகின்றார்கள். மேலும், வெறும் கற்பனைகளில்தான் மூழ்கியிருக்கின்றார்கள்.
10:66. வானங்களில் இருப்பவை மற்றும் பூமியில் இருப்பவை நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன! என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், (இவ்வாறிருக்க) அல்லாஹ்வையன்றி இணையாளர்களை (தெய்வங்கள் என அழைப்போர் எதைப் பின்பற்றுகின்றனர்? (வீண்) யூகத்தையன்றி வேறெதையும் அவர்கள் பின்பற்றுவதில்லை, அன்றியும் அவர்கள் வெறும் அனுமானங்கள் செய்பவர்களே அன்றி இல்லை.
10:67
10:67 هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّسْمَعُوْنَ‏
هُوَ அவன் الَّذِىْ எத்தகையவன் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்காக الَّيْلَ இரவை لِتَسْكُنُوْا நீங்கள் சுகம்பெறுவதற்காக فِيْهِ அதில் وَالنَّهَارَ இன்னும் பகலை مُبْصِرًا‌ ؕ பார்க்கக் கூடியதாக اِنَّ فِىْ ذٰ لِكَ நிச்சயமாக/இதில் لَاٰيٰتٍ அத்தாட்சிகள் لِّـقَوْمٍ மக்களுக்கு يَّسْمَعُوْنَ‏ செவிசாய்க்கின்றார்கள்
10:67. நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காக இரவையும், (பொருட்களைப்) பார்ப்பதற்கு ஏற்றவாறு பகலையும் உங்களுக்காக அவனே உண்டாக்கினான்; நிச்சயமாக இதில் (அவன் வசனங்களைச்) செவிசாய்த்துக் (கவனமாகக்) கேட்கும் மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
10:67. நீங்கள் சுகம் பெறுவதற்காக இரவையும், நீங்கள் (அனைத்தையும் தெளிவாகப்) பார்ப்பதற்காகப் பகலையும் உங்களுக்கு அவனே உருவாக்கினான். (அவனுடைய வசனங்களுக்குச்) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
10:67. அல்லாஹ்தான் உங்களுக்காக இரவை அமைத்தான்; அதில் நீங்கள் நிம்மதி பெறவேண்டும் என்பதற்காக! மேலும், பகலை ஒளிமிக்கதாக அமைத்தான்! திண்ணமாக (திறந்த மனத்துடன் இறைத்தூதரின் அழைப்பைச்) செவிமடுக்கும் மக்களுக்கு இதில் பல சான்றுகள் இருக்கின்றன.
10:67. அவன் எத்தகையோனென்றால் இரவை உங்களுக்காக-அதில் நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை பார்வைக்குரிய (பிரகாசமான)தாகவும் ஆக்கினான், (அவனுடைய வசனங்களுக்குச்) செவிசாய்க்கும் சமுதாயத்தவர்க்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
10:68
10:68 قَالُوْا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا‌ سُبْحٰنَهٗ‌ ؕ هُوَ الْـغَنِىُّ‌ ؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ‌ؕ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍۢ بِهٰذَا ؕ اَتَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
قَالُوْا கூறுகின்றனர் اتَّخَذَ ஆக்கிக் கொண்டான் اللّٰهُ அல்லாஹ் وَلَدًا‌ ஒரு சந்ததியை سُبْحٰنَهٗ‌ ؕ அவன் மிகப் பரிசுத்தமானவன் هُوَ அவன் الْـغَنِىُّ‌ ؕ தேவையற்றவன் لَهٗ அவனுக்கே مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ ؕ இன்னும் பூமியிலுள்ளவை اِنْ இல்லை عِنْدَكُمْ உங்களிடம் مِّنْ سُلْطٰنٍۢ எந்த ஓர் ஆதாரம் بِهٰذَا ؕ இதற்கு اَتَقُوْلُوْنَ கூறுகிறீர்களா? عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது مَا لَا تَعْلَمُوْنَ‏ எதை/ அறியமாட்டீர்கள்
10:68. அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன; (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?
10:68. அல்லாஹ்வுக்குச் சந்ததி உண்டென்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியின்) தேவையற்றவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை. (அவனுக்குச் சந்ததி உண்டென்று கூறுகின்ற) உங்களிடத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளாமலேயே அல்லாஹ்வின் மீது (இப்படி பொய்) கூறுகிறீர்களா?
10:68. ‘அல்லாஹ் தனக்கு ஒரு மகனை ஏற்படுத்திக் கொண்டான்’ என மக்கள் கூறிவிட்டார்கள். (ஸுப்ஹானல்லாஹ்) அல்லாஹ் புனிதமானவன்! அவன் தேவைகள் இல்லாதவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். இந்நிலையில் இக்கூற்றுக்கு உங்களிடம் என்னதான் ஆதாரம் இருக்கிறது? நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது ஏற்றிச் சொல்கின்றீர்களா?
10:68. அல்லாஹ் குமாரனை எடுத்துக் கொண்டான் என அவர்கள் கூறுகின்றனர், அவனோ (இக் கூற்றிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன், அவன் தேவையற்றவன், வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, (அவனுக்கு மக்கள் உண்டென்று கூறும்) இதற்கு உங்களிடத்தில் எத்தகைய சான்றும் இல்லை, நீங்கள் அறிந்துகொள்ளாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?
10:69
10:69 قُلْ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ لَا يُفْلِحُوْنَؕ‏
قُلْ கூறுவீராக اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَفْتَرُوْنَ இட்டுக்கட்டுகிறார்கள் عَلَى اللّٰهِ அல்லாஹ் மீது الْـكَذِبَ பொய்யை لَا يُفْلِحُوْنَؕ‏ வெற்றி பெறமாட்டார்கள்
10:69. “அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று (நபியே!) கூறிவிடும்.
10:69. ‘‘எவர்கள் அல்லாஹ்வின் மீது (இப்படி) கற்பனையாகப் பொய் கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையமாட்டார்கள்'' என்று (நபியே!) கூறிவிடுவீராக.
10:69. (நபியே!) நீர் கூறும்: “எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் வெற்றியடைவதில்லை.”
10:69. “நிச்சயமாக அல்லாஹ்வின்மீது (இவ்வாறு)பொய்யைக் கற்பனை செய்கின்றனரே, அத்தகையோர்-அவர்கள் வெற்றியடையமாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:70
10:70 مَتَاعٌ فِى الدُّنْيَا ثُمَّ اِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيْقُهُمُ الْعَذَابَ الشَّدِيْدَ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ‏
مَتَاعٌ ஒரு சுகம் فِى الدُّنْيَا உலகில் ثُمَّ பிறகு اِلَيْنَا நம்மிடமே مَرْجِعُهُمْ ثُمَّ மீளுமிடம்/அவர்களுடைய/பிறகு نُذِيْقُهُمُ சுவைக்க வைப்போம் அவர்களுக்கு الْعَذَابَ வேதனை الشَّدِيْدَ கடினமான بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَكْفُرُوْنَ‏ அவர்கள் நிராகரிக்கிறார்கள்
10:70. உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சுகமே யாகும்; பின்னர் அவர்கள் நம்மிடமே மீண்டும் வர வேண்டியிருக்கிறது; அப்பொழுது, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக, நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
10:70. (இவர்கள்) இவ்வுலகில் சிறிது சுகமனுபவிக்கலாம். பின்னர் (மறுமையிலோ) நம்மிடம்தான் அவர்கள் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. பின்னர், (உண்மையை) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை கடினமான வேதனையை சுவைக்க வைப்போம்.
10:70. உலகில் (அவர்கள் அனுபவிப்பது) கொஞ்ச நாள் வாழ்க்கைதான்! பிறகு நம்மிடமே அவர்கள் திரும்ப வரவேண்டியுள்ளது. பின்னர் அவர்கள் மேற்கொண்டிருந்த நிராகரிப்புப் போக்கிற்குப் பகரமாக கடுமையான வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்.
10:70. (இத்தகையோருக்கு) இவ்வுலகில் (சிறிது) சுகமனுபவித்தல் உண்டு, பின்னர் (மறுமையில்) நம்மிடமே அவர்களின் திரும்புதல் இருக்கிறது, பின்னர் (உண்மையை) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்களுக்கு நாம் கடினமான வேதனையை சுவைக்கச் செய்வோம்.
10:71
10:71 وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ نُوْحٍ‌ۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَّقَامِىْ وَتَذْكِيْرِىْ بِاٰيٰتِ اللّٰهِ فَعَلَى اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا يَكُنْ اَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَىَّ وَ لَا تُنْظِرُوْنِ‏
وَاتْلُ ஓதுவீராக عَلَيْهِمْ அவர்களுக்கு نَبَاَ சரித்திரத்தை نُوْحٍ‌ۘ நூஹூடைய اِذْ சமயத்தை قَالَ அவர்கள் கூறினார் لِقَوْمِهٖ தன் சமுதாயத்தை நோக்கி يٰقَوْمِ என் சமுதாயமே اِنْ كَانَ இருந்தால் كَبُرَ பாரமாக عَلَيْكُمْ உங்கள் மீது مَّقَامِىْ நான் தங்குவது وَتَذْكِيْرِىْ இன்னும் நான்உபதேசிப்பது بِاٰيٰتِ வசனங்களைக் கொண்டு اللّٰهِ அல்லாஹ்வின் فَعَلَى மீது اللّٰهِ அல்லாஹ் تَوَكَّلْتُ நான் நம்பிக்கை வைத்தேன் فَاَجْمِعُوْۤا ஆகவேமுடிவுசெய்யுங்கள் اَمْرَ காரியத்தை كُمْ உங்கள் وَشُرَكَآءَ இன்னும் இணை தெய்வங்களை كُمْ உங்கள் ثُمَّ பிறகு لَا يَكُنْ ஆகிவிடவேண்டாம் اَمْرُ காரியம் كُمْ உங்கள் عَلَيْكُمْ உங்கள் மீது غُمَّةً குழப்பமானதாக ثُمَّ பிறகு اقْضُوْۤا நிறைவேற்றுங்கள் اِلَىَّ என் பக்கம் وَ لَا تُنْظِرُوْنِ‏ நீங்கள் அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு
10:71. மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.
10:71. (நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக. அவர் தன் மக்களை நோக்கி, ‘‘என் மக்களே! நான் (உங்களிடத்தில்) இருப்பதும், நான் (உங்களுக்கு) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (அதற்காக நீங்கள் எனக்கு ஏதும் தீங்கு செய்யக் கருதி)னால், நான் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறேன். நீங்கள் குறைவு செய்துவிட்டதாக பின்னர் உங்களுக்குக் கவலை ஏற்படாதவாறு நீங்கள் உங்கள் சகாக்களையும் சேர்த்துக் கொண்டு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (எனக்குத் தீங்கிழைக்க) ஒரு காரியத்தை முடிவு செய்துகொண்டு (அம்முடிவின் படி) எனக்குச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் எனக்கு அவகாசமளிக்க வேண்டாம்'' என்று கூறினார்.
10:71. மேலும், (நபியே!) இவர்களுக்கு நூஹுடைய செய்தியை எடுத்துரைப்பீராக! அவர் தன்னுடைய சமுதாயத்தினரை நோக்கி கூறினார்: “என் சமுதாயத்தினரே! நான் உங்களிடையே வாழ்வதையும் அல்லாஹ்வின் வசனங்களை (அவ்வப்போது) நான் எடுத்துரைத்து நினைவூட்டிக் கொண்டிருப்பதையும் உங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லையென்றால் (அறிந்து கொள்ளுங்கள்:) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கின்றேன். நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட கடவுளர்களின் உதவியைப் பெற்று உங்களுக்கிடையே ஒருமித்த தீர்மானத்திற்கு வாருங்கள்! பிறகு அந்தத் தீர்மானத்தின் எந்த அம்சமும் உங்கள் பார்வையிலிருந்து மறைந்துவிடாவண்ணம் அதனைப் பற்றி நன்கு சிந்தித்துக் கொள்ளுங்கள்; பிறகு (அதனை) எனக்கெதிராகச் செயல்படுத்துங்கள்; மேலும், எனக்குச் சற்றும் அவகாசம் அளிக்காதீர்கள்!
10:71. மேலும், (நபியே!) நூஹ்வுடைய சம்பவத்தை நீர் அவர்களுக்கு ஒதிக் காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரிடம், “என்னுடைய சமூகத்தினரே! நான் (உங்களுக்கு மத்தியில்) இருப்பதும், நான் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து (உபதேசித்து) நினைவு படுத்துவதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (எனக்கு தீங்கு செய்யவேண்டுமா)னால், நான் அல்லாஹ்வின் மீதே (என் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைத்துள்ளேன், (நீங்கள் முடிவெடுத்த) உங்களுடைய காரியத்தையும், உங்களுடைய இணையாளர்களையும் ஒன்றுகூட்டி முடிவு செய்யுங்கள், பின்னர் உங்களுடைய அக்காரியம் உங்களிடம் மறைமுகமாகவும் இருக்க வேண்டாம், பின்னர் (அம்முடிவை) என்னில் நிறைவேற்றி விடுங்கள், (இதில்) எனக்கு நீங்கள் காலதாமதம் கொடுக்க வேண்டாம்” என்று கூறியதை நினைவு கூர்வீராக!
10:72
10:72 فَاِنْ تَوَلَّـيْتُمْ فَمَا سَاَلْـتُكُمْ مِّنْ اَجْرٍ‌ؕاِنْ اَجْرِىَ اِلَّا عَلَى اللّٰهِ‌ۙ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِيْنَ‏
فَاِنْ تَوَلَّـيْتُمْ நீங்கள் திரும்பினால் فَمَا நான் கேட்கவில்லை سَاَلْـتُكُمْ உங்களிடம் مِّنْ اَجْرٍ எந்த கூலியையும் ‌ؕاِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلَى மீதே اللّٰهِ‌ۙ அல்லாஹ்வின் وَاُمِرْتُ இன்னும் கட்டளையிடப் பட்டேன் اَنْ اَكُوْنَ நான் ஆகவேண்டுமென مِنَ الْمُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களில்
10:72. “ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று கூறினார்).
10:72. பின்னும் நீங்கள் (என்னைப்) புறக்கணித்(து நிராகரித்)தால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடத்தில் ஒரு கூலியும் எதிர்பார்க்கவில்லை; என் கூலி அல்லாஹ்விடமே தவிர (மற்றெவரிடமும்) இல்லை. நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டு நடக்கும்படியாகவே கட்டளையிடப் பட்டுள்ளேன்'' (என்று கூறினார்.)
10:72. நீங்கள் (என் நல்லுரையைப்) புறக்கணித்தால் எனக்கு ஒன்றும் இழப்பு ஏற்பட்டு விடாது. நான் உங்களிடம் கூலி எதனையும் கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே உள்ளது. (எவர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்காவிட்டாலும்) நான் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்பவனாக (முஸ்லிமாக) விளங்க வேண்டும் என்றே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.”
10:72. “ஆகவே, நீங்கள் (என்னுடைய தூதைப்) புறக்கணித்தால், நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை, என்னுடைய கூலியெல்லாம் அல்லாஹ்வின் மீதே தவிர (மற்றெவரிடமும்) இல்லை, நான் (அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்கும்) முஸ்லிம்களில் (உள்ளவனாக) இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன்” (என்று கூறினார்).
10:73
10:73 فَكَذَّبُوْهُ فَنَجَّيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْـفُلْكِ وَجَعَلْنٰهُمْ خَلٰٓٮِٕفَ وَاَغْرَقْنَا الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا‌ ۚ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَ‏
فَكَذَّبُوْهُ அவர்கள் பொய்ப்பித்தனர் فَنَجَّيْنٰهُ அவரை وَمَنْ ஆகவே, பாதுகாத்தோம்/அவரை مَّعَهٗ இன்னும் அவருடன் இருந்தவர்களை فِى الْـفُلْكِ கப்பலில் وَجَعَلْنٰهُمْ இன்னும் அவர்களை ஆக்கினோம் خَلٰٓٮِٕفَ பிரதிநிதிகளாக وَاَغْرَقْنَا இன்னும் மூழ்கடித்தோம் الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَا‌ ۚ நம் வசனங்களை فَانْظُرْ ஆகவே கவனிப்பீராக كَيْفَ எவ்வாறு كَانَ ஆகிவிட்டது عَاقِبَةُ முடிவு الْمُنْذَرِيْنَ‏ எச்சரிக்கப்பட்டவர்களின்
10:73. அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் - மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம் - நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.
10:73. (எனினும்,) அவர்களோ அவரைப் பொய்யரென்றே கூறினார்கள். ஆகவே, அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் கப்பலில் (ஏற்றி) பாதுகாத்துக் கொண்டு நம் வசனங்களைப் பொய்யாக்கியவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். அவர்களுக்குப் பதிலாக (அவர்களுடைய பூமியில் நாம் பாதுகாத்துக் கொண்ட) இவர்களை அதிபதிகளாக ஆக்கினோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்ட அவர்களுடைய முடிவு எப்படி ஆயிற்று என்பதை (நபியே!) கவனிப்பீராக.
10:73. அவர்கள் அவரைப் ‘பொய்யர்’ என்று கூறினார்கள். இதன் விளைவாக நாம் அவரையும் அவருடன் கப்பலிலிருந்த மக்களையும் காப்பாற்றினோம்; மேலும் அவர்களை (இப்பூமியில்) பிரதிநிதிகளாக்கினோம். மேலும், நம் வசனங்களைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த அனைவரையும் மூழ்கடித்தோம். பாருங்கள்! எச்சரிக்கப்பட்டிருந்(தும் ஏற்றுக் கொள்ளா)தவர்களின் கதி என்னவாயிற்று?
10:73. பின்னர் அவர்கள், அவரைப் பொய்யாக்கிவிட்டனர், ஆகவே, நாம் அவரையும், அவரைச் சார்ந்தோரையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம், மேலும், அவர்களை (முன்னவர்களுக்குப்) பின் தோன்றல்களாகவும் நாம் ஆக்கினோம், (இன்னும் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியோரை(ப் பெருவெள்ளத்தில்) மூழ்கடித்தோம், பின்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டவர்களுடைய முடிவு எப்படி இருந்தது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக!
10:74
10:74 ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهٖ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَيِّنٰتِ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ‌ ؕ كَذٰلِكَ نَطْبَعُ عَلٰى قُلُوْبِ الْمُعْتَدِيْنَ‏
ثُمَّ பிறகு بَعَثْنَا அனுப்பினோம் مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் رُسُلًا தூதர்களை قَوْمِهِمْ அவர்களுடைய فَجَآءُوْ அவர்கள் வந்தார்கள் هُمْ அவர்களிடம் بِالْبَيِّنٰتِ அத்தாட்சிகளைக் கொண்டு فَمَا كَانُوْا அவர்கள் இருக்கவில்லை لِيُؤْمِنُوْا அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக بِمَا كَذَّبُوْا அவர்கள் பொய்ப்பித்தவற்றை بِهٖ அதை مِنْ قَبْلُ‌ ؕ முன்னர் كَذٰلِكَ இவ்வாறே نَطْبَعُ முத்திரையிடுகிறோம் عَلٰى மீது قُلُوْبِ உள்ளங்கள் الْمُعْتَدِيْنَ‏ வரம்புமீறிகளின்
10:74. அவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.
10:74. அவருக்குப் பின்னர் தோன்றிய மக்களுக்கும், (நாம்) தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். அத்தூதர்களும் தெளிவான பல அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். ஆயினும், இவர்களுக்கு முன்னர் (இவர்களுடைய மூதாதைகள்) பொய்யாக்கிக் கொண்டிருந்த உண்மைகளை இவர்களும் நம்பிக்கைக் கொள்பவர்களாக இல்லை. வரம்பு மீறுபவர்களுடைய உள்ளங்கள் மீது (அவர்களின் பாவத்தின் காரணமாக) இவ்வாறே நாம் முத்திரையிட்டு விடுகிறோம்.
10:74. பின்னர், நாம் நூஹுக்குப் பிறகு தூதர்கள் பலரை அவரவர்களுடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். மேலும், அத்தூதர்கள் அவர்களிடம் மிகத் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆயினும், எவற்றை முன்னர் பொய்யெனக் கூறிவந்தார்களோ அவற்றை அவர்கள் இப்போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறே வரம்பு மீறிச் செல்வோரின் உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம்.
10:74. பிறகு அவருக்கு (நூஹுக்கு)ப் பின்னர், தூதர்களை அவர்களின் சமூகத்தவர்பால் நாம் அனுப்பி வைத்தோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளையே அவர்களிடம் கொண்டு வந்தார்கள், .அப்பொழுது இவர்களுக்கு முன்னர் பொய்யாக்கிக் கொண்டிருந்தவைகளை, இவர்களும் விசுவாசிப்பவர்களாக இருக்கவில்லை, வரம்பு மீறியவர்களின் இதயங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிட்டு விடுவோம்.
10:75
10:75 ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهِمْ مُّوْسٰى وَهٰرُوْنَ اِلٰى فِرْعَوْنَ وَ مَلَا۟ىِٕهٖ بِاٰيٰتِنَا فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ‏
ثُمَّ பிறகு بَعَثْنَا அனுப்பினோம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ இவர்களுக்கு مُّوْسٰ மூஸாவை وَهٰرُوْنَ இன்னும் ஹாரூனை اِلٰ பக்கம் فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் وَ مَلَا۟ىِٕهٖ இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள் بِاٰيٰتِنَا நம் அத்தாட்சிகளுடன் فَاسْتَكْبَرُوْا அவர்கள் கர்வம் கொண்டனர் وَكَانُوْا இன்னும் இருந்தனர் قَوْمًا சமுதாயமாக مُّجْرِمِيْنَ‏ குற்றம் புரிகின்றவர்கள்
10:75. இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.
10:75. இவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் நம் அத்தாட்சிகளுடன் (நம் தூதர்களாக) ஃபிர்அவ்னிடமும், அவனுடைய தலைவர்களிடமும் அனுப்பி வைத்தோம். எனினும், அவர்கள் கர்வம் கொண்டு (சத்தியத்தை நிராகரித்து) குற்றம் செய்யும் மக்களாகவே ஆனார்கள்.
10:75. பின்னர், அவர்களுக்குப் பிறகு மூஸா மற்றும் ஹாரூனை, ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமூகப் பிரமுகர்களிடமும் நம்முடைய சான்றுகளுடன் அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்கள் தற்பெருமை கொண்டதோடு குற்றம் புரியும் கூட்டத்தினராய் இருந்தனர்.
10:75. பின்னர், அவர்களுக்குப் பிறகு மூஸாவையும், ஹாரூனையும் நம்முடைய அத்தாட்சிகளுடன் (நம்முடைய தூதர்களாக) ஃபிர்அவ்னிடமும், அவனுடைய பிரதானிகளிடமும் அனுப்பி வைத்தோம், அப்பொழுது அவர்கள் கர்வங்கொண்டனர், (உண்மையை நிராகரித்த) குற்றவாளிகளான சமூகத்தாராகவும் அவர்கள் இருந்தனர்.
10:76
10:76 فَلَمَّا جَآءَهُمُ الْحَـقُّ مِنْ عِنْدِنَا قَالُوْۤا اِنَّ هٰذَا لَسِحْرٌ مُّبِيْنٌ‏
فَلَمَّا போது جَآءَ வந்தது هُمُ அவர்களுக்கு الْحَـقُّ உண்மை مِنْ இருந்து عِنْدِنَا நம்மிடம் قَالُوْۤا கூறினார்கள் اِنَّ நிச்சயமாக هٰذَا இது لَسِحْرٌ சூனியம்தான் مُّبِيْنٌ‏ தெளிவானது
10:76. நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்த போது, “நிச்சயமாக இது தெளிவான சூனியமே யாகும்” என்று கூறினார்கள்.
10:76. அவர்களிடம் நம் உண்மை(யான அத்தாட்சி) வந்தபொழுது ‘‘நிச்சயமாக இது தெளிவான சூனியம்தான்'' என்று கூறினார்கள்.
10:76. எனவே, நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்தபோது, “திண்ணமாக இது வெளிப்படையான சூனியம்” என்று கூறினார்கள்.
10:76. எனவே, நம்மிடமிருந்து அவர்களுக்கு சத்தியம் வந்தபொழுது “நிச்சயமாக இது தெளிவான சூனியமாகும்” என்று அவர்கள் கூறினார்கள்.
10:77
10:77 قَالَ مُوْسٰٓى اَتَقُوْلُوْنَ لِلْحَقِّ لَمَّا جَآءَكُمْ‌ ؕ اَسِحْرٌ هٰذَا ؕ وَلَا يُفْلِحُ السَّاحِرُوْنَ‏
قَالَ கூறினார் مُوْسٰٓى மூஸா اَتَقُوْلُوْنَ கூறுகிறீர்களா? لِلْحَقِّ உண்மையை لَمَّا போது جَآءَ வந்த كُمْ உங்களிடம் اَسِحْرٌ சூனியமா? هٰذَا ؕ இது وَلَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்கள் السَّاحِرُوْنَ‏ சூனியக்காரர்கள்
10:77. அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்.
10:77. அதற்கு மூஸா (அவர்களை நோக்கி) ‘‘உங்களிடம் வந்த உண்மையை பார்த்தா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? சூனியமா இது? (அறவே இது சூனியம் இல்லை) சூனியக்காரர்கள் வெற்றி பெறமாட்டார்கள்'' என்று கூறினார்.
10:77. அதற்கு மூஸா கூறினார்: “சத்தியம் உங்களிடம் வந்த பிறகு அதைப் பற்றியா இவ்வாறு கூறுகின்றீர்கள்? இது என்ன சூனியமா? உண்மையில் சூனியக்காரர்கள் வெற்றி பெறுவதில்லை.”
10:77. (அதற்கு) மூஸா, (அவர்களிடம்) “உண்மையைப்பற்றி, அது உங்களிடம் வந்தபொழுது இது சூனியமா? என்று நீங்கள் கூறுகிறீர்களா? சூனியக்காரர்களோ வெற்றி பெறமாட்டார்கள்” என்று கூறினார்.
10:78
10:78 قَالُـوْۤا اَجِئْتَـنَا لِتَلْفِتَـنَا عَمَّا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا وَتَكُوْنَ لَكُمَا الْكِبْرِيَآءُ فِى الْاَرْضِؕ وَمَا نَحْنُ لَـكُمَا بِمُؤْمِنِيْنَ‏
قَالُـوْۤا கூறினார்கள் اَجِئْتَـنَا நீர் எங்களிடம் வந்தீரா? لِتَلْفِتَـنَا நீர் திருப்புவதற்கு / எங்களை عَمَّا விட்டு/எதை وَجَدْنَا நாங்கள் கண்டோம் عَلَيْهِ அதில் اٰبَآءَنَا எங்கள் மூதாதைகளை وَتَكُوْنَ இன்னும் ஆகிவிடுவதற்கு لَكُمَا உங்கள் இருவருக்கும் الْكِبْرِيَآءُ மகத்துவம் فِى الْاَرْضِؕ பூமியில் وَمَا نَحْنُ நாங்கள் இல்லை لَـكُمَا உங்கள் இருவரையும் بِمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொள்பவர்களாக
10:78. (அதற்கு) அவர்கள்: எங்கள் மூதாதையர்களை எதன் மீது நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? ஆனால் நாங்கள் உங்களிருவர் மீதும் நம்பிக்கை கொள்பவர்களல்லர்” என்று கூறினார்கள்.
10:78. அதற்கவர்கள் ‘‘எங்கள் மூதாதையர்கள் எதில் இருக்க நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இப்புவியில் நீங்கள் இருவரும் பெரியவர்களாகி விடவுமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? உங்கள் இருவரையும் (இறைவனின் தூதர்கள் என்று) நாங்கள் நம்பவே மாட்டோம்'' என்று கூறினார்கள்.
10:78. அதற்கு அவர்கள் பதில் கூறினார்கள்: “எங்கள் முன்னோர்கள் எந்த வழியில் வாழ்ந்திடக் கண்டோமோ அந்த வழியிலிருந்து எங்களைத் திருப்பிவிட வேண்டும்; மேலும், இப்புவியில் உங்களுடைய மேலாதிக்கம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? ஆகவே உங்களிருவரையும் நாங்கள் நம்பவே மாட்டோம்!”
10:78. அ(தற்க)வர்கள், “எங்கள் மூதாதையர்களை எதில் இருக்க நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இப்பூமியில் உங்களிருவருக்கும் பெருமை (தலைமைத்தனம்) ஆகிவிடவேண்டுமென்பதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? இன்னும், உங்களிருவரையும் (அல்லாஹ்வின் தூதர்களென்று) நாங்கள் விசுவாசங் கொள்ளக்கூடியவர்கள் அல்லர்” என்று கூறினர்.
10:79
10:79 وَقَالَ فِرْعَوْنُ ائْتُوْنِىْ بِكُلِّ سٰحِرٍ عَلِيْمٍ‏
وَقَالَ இன்னும் கூறினான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் ائْتُوْنِىْ வாருங்கள்/என்னிடம் بِكُلِّ எல்லோரையும் கொண்டு سٰحِرٍ சூனியக்காரர் عَلِيْمٍ‏ நன்கறிந்த
10:79. ஃபிர்அவ்ன் (தன் கூட்டத்தாரிடம்) “தேர்ச்சி பெற்ற சூனியக்காரர் ஒவ்வொரு வரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக் கூறினான்.
10:79. பின்னர், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி) ‘‘சூனியத்தில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்'' என்று கட்டளையிட்டான்.
10:79. மேலும், ஃபிர்அவ்ன், “கைதேர்ந்த சூனியக்காரர்கள் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று தன்னைச் சேர்ந்தவர்களிடம் கூறினான்.
10:79. ஃபிர்அவ்ன், (தன் கூட்டத்தாரிடம்) “கற்றறிந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் என்னிடம் அழைத்துக்) கொண்டு வாருங்கள்” என்றும் கூறினான்.
10:80
10:80 فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُّوْسٰۤى اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ‏
فَلَمَّا جَآءَ வந்த போது السَّحَرَةُ சூனியக்காரர்கள் قَالَ கூறினார் لَهُمْ அவர்களுக்கு مُّوْسٰۤى மூஸா اَلْقُوْا எறியுங்கள் مَاۤ எதை اَنْتُمْ நீங்கள் مُّلْقُوْنَ‏ எறியக்கூடியவர்கள்
10:80. அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.
10:80. (பல இடங்களிலுமுள்ள) சூனியக்காரர்கள் (குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திற்கு) வந்து சேரவே, மூஸா அவர்களை நோக்கி ‘‘நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறி(ந்து உங்கள் சூனியத்தைச் செய்)யுங்கள்'' என்று கூறினார்.
10:80. சூனியக்காரர்கள் வந்தபோது மூஸா, அவர்களை நோக்கி, “நீங்கள் எறிய இருப்பவற்றை எறியுங்கள்!” என்றார்.
10:80. (பல பகுதிகளிலும் இருந்த சூனியக்காரர்கள் (குறிப்பிட்ட நேரத்திற்கு) வந்தபோது, மூஸா (அவர்களிடம்) நீங்கள் (சூனியம் செய்ய) போடக் கூடியதைப் போடுங்கள்” என்று கூறினார்.
10:81
10:81 فَلَمَّاۤ اَلْقَوْا قَالَ مُوْسٰى مَا جِئْتُمْ بِهِۙ السِّحْرُ‌ؕ اِنَّ اللّٰهَ سَيُبْطِلُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِيْنَ‏
فَلَمَّاۤ اَلْقَوْا ஆகவே அவர்கள் எறிந்தபோது قَالَ கூறினார் مُوْسٰى மூஸா مَا جِئْتُمْ بِهِۙ நீங்கள் செய்தவை السِّحْرُ‌ؕ சூனியம் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் سَيُبْطِلُهٗ அழிப்பான் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يُصْلِحُ சீர்படுத்த மாட்டான் عَمَلَ செயலை الْمُفْسِدِيْنَ‏ விஷமிகளின்
10:81. அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா: “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்.
10:81. (அவ்வாறு) அவர்கள் எறி(ந்து சூனியம் செய்)யவே, மூஸா (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் செய்தவை அனைத்தும் (வெறும்) சூனியம்தான். அதிசீக்கிரத்தில் நிச்சயமாக அல்லாஹ் இவற்றை அழித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (சூனியம் செய்து) விஷமம் செய்பவர்களின் செயலை சீர்படச் செய்வதில்லை.
10:81. அவர்கள் எறிந்தபோது, மூஸா கூறினார்: “நீங்கள் நிகழ்த்திக்காட்டியது சூனியமேயாகும். திண்ணமாக, அல்லாஹ் அதனை இப்பொழுதே தகர்த்து விடுவான். ஏனெனில், அல்லாஹ் குழப்பம் புரிவோரின் செயலைச் சீர்படுத்துவதில்லை.
10:81. (அவ்வாறு) அவர்கள் போட்டபொழுது, மூஸா (அவர்களிடம்) “நீங்கள் எதைக் கொண்டு வந்தீர்களோ அது (வெறும்) சூனியமே, நிச்சயமாக அல்லாஹ், இவைகளை அழித்துவிடுவான், நிச்சயமாக அல்லாஹ், குழப்பம் செய்வோரின் செயலைச் சீர்படுத்தமாட்டான்”என்று கூறினார்.
10:82
10:82 وَيُحِقُّ اللّٰهُ الْحَـقَّ بِكَلِمٰتِهٖ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ‏
وَيُحِقُّ இன்னும் நிரூபிப்பான் اللّٰهُ அல்லாஹ் الْحَـقَّ உண்மையை بِكَلِمٰتِهٖ தன் கட்டளைகளைக் கொண்டு وَلَوْ كَرِهَ வெறுத்தாலும் சரியே الْمُجْرِمُوْنَ‏ குற்றவாளிகள்
10:82. இன்னும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான் (என்றும் கூறினார்).
10:82. ‘‘நிச்சயமாக, அல்லாஹ் தன் அத்தாட்சிகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நாட்டியே தீருவான். (அதைக்) குற்றவாளிகள் வெறுத்தபோதிலும் சரியே'' என்று கூறினார். (அவர் கூறியவாறே அவர்கள் செய்த சூனியங்கள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விட்டான்.)
10:82. அல்லாஹ் தன் கட்டளைகளைக் கொண்டு சத்தியத்தை சத்தியம்தான் என்று நிரூபித்து விடுகின்றான். குற்றவாளிகளுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே!”
10:82. மேலும், “நிச்சயமாக அல்லாஹ், தன் வாக்குகளைக் கொண்டு சத்தியத்தை- (அதனைக்) குற்றவாளிகள் வெறுத்த போதிலும் சரியே உண்மையாக்கியும் வைக்கிறான்” என்றும் கூறினார்.
10:83
10:83 فَمَاۤ اٰمَنَ لِمُوْسٰٓى اِلَّا ذُرِّيَّةٌ مِّنْ قَوْمِهٖ عَلٰى خَوْفٍ مِّنْ فِرْعَوْنَ وَمَلَا۟ ٮِٕهِمْ اَنْ يَّفْتِنَهُمْ‌ ؕ وَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِى الْاَرْضِ‌ ۚ وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِيْنَ‏
فَمَاۤ اٰمَنَ நம்பிக்கை கொள்ளவில்லை لِمُوْسٰٓى மூஸாவை اِلَّا தவிர ذُرِّيَّةٌ ஒரு சந்ததியினர் مِّنْ قَوْمِهٖ அவரின்சமுதாயத்தில் عَلٰى خَوْفٍ பயந்து مِّنْ فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் وَمَلَا۟ ٮِٕهِمْ இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள் اَنْ يَّفْتِنَهُمْ‌ ؕ அவன் துன்புறுத்துவதை/தங்களை وَاِنَّ நிச்சயமாக فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் لَعَالٍ சர்வாதிகாரி فِى الْاَرْضِ‌ ۚ பூமியில் وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன் لَمِنَ الْمُسْرِفِيْنَ‏ வரம்பு மீறக்கூடியவர்களில்
10:83. ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.
10:83. (இதைக் கண்ணுற்ற பின்னரும்) மூஸாவை அவர் இனத்தவரில் சிலர்தான் நம்பிக்கை கொண்டனர். அவர்களும் தங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய இனத்தவர்களும் துன்புறுத்துவார்களோ என்று பயந்து கொண்டே இருந்தனர். ஏனென்றால், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் மிகச் சக்தி வாய்ந்தவனாக இருந்தான். நிச்சயமாக அவன் வரம்பு மீறி(க் கொடுமை செய்பவர்)களில் இருந்தான்.
10:83. (பாருங்கள்!) ஃபிர்அவ்னுக்கு அஞ்சியும், அவன் வேதனையில் ஆழ்த்திவிடுவானோ என்று பயந்த சமூகப் பிரமுகர்களுக்கு அஞ்சியும் மூஸாவை அவருடைய சமூகத்தாரில் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை சில இளைஞர்களைத் தவிர! உண்மை யாதெனில், ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெரும் வல்லமை கொண்டவனாக இருந்தான். திண்ணமாக, அவன் எந்த எல்லையை மீறுவதற்கும் தயங்காதவர்களில் ஒருவனாக இருந்தான்.
10:83. (இதன் பின்னர்,) ஃபிர் அவ்னும், அவர்களின் பிரதானிகளும் தங்களைத் துன்புறுத்துவார்கள் என்ற பயத்தின் மீது அவருடைய சமூகத்தாரிலிருந்து ஒரு கிளையினரைத் தவிர (வேறு எவரும்) மூஸாவை ஈமான் கொள்ளவில்லை, மேலும், நிச்சயமாக ஃபிர் அவ்ன், (அப்)பூமியில் மிக்க சக்திவாய்ந்தவன், (கொடுமை செய்வதில்) நிச்சயமாக அவன் வரம்பு மீறியவர்களிலும் உள்ளவனாவான்.
10:84
10:84 وَقَالَ مُوْسٰى يٰقَوْمِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ فَعَلَيْهِ تَوَكَّلُوْاۤ اِنْ كُنْتُمْ مُّسْلِمِيْنَ‏
وَقَالَ கூறினார் مُوْسٰى மூஸா يٰقَوْمِ என் சமுதாயமே اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டீர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை فَعَلَيْهِ அவன் மீதே تَوَكَّلُوْاۤ நம்பிக்கை வையுங்கள் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّسْلِمِيْنَ‏ முஸ்லிம்களாக
10:84. மூஸா (தம் சமூகத்தவரிடம்): “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்பவர்களாக இருந்து, நீங்கள் மெய்யாகவே அவனை முற்றிலும் வழிபடுபவர்களாகவே (முஸ்லிம்களாக) இருந்தால் அவனையே பூரணமாக நம்பி (உங்கள் காரியங்களை ஒப்படைத்து) விடுங்கள்” என்று கூறினார்.
10:84. மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘என் மக்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டு, உண்மையாகவே நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்படுகிறவர்களாகவும் இருந்தால், முற்றிலும் அவனையே நம்பி (அவனிடமே உங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து) விடுங்கள்'' என்று கூறினார்.
10:84. மூஸா (தன் சமூகத்தாரை நோக்கிக்) கூறினார்: “என் சமூகத்தவரே! நீங்கள் உண்மையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அவனையே முற்றிலும் சார்ந்து வாழுங்கள் நீங்கள் முஸ்லிம்களாக இருந்தால்!”
10:84. மூஸா (தன் சமூகத்தாரிடம்) “என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை விசுவாசித்து, நீங்கள் அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிகிறவர்களாகவும் இருந்தால், (அவனிடமே உங்கள் காரியங்கள் யாவையும் ஒப்படைத்து முழுமையாக) அவனின் மீதே நம்பிக்கை வையுங்கள்”, என்று கூறினார்.
10:85
10:85 فَقَالُوْا عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ ۚ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏
فَقَالُوْا கூறினார்கள் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீதே تَوَكَّلْنَا‌ ۚ நம்பிக்கைவைத்தோம் رَبَّنَا எங்கள் இறைவா لَا تَجْعَلْنَا எங்களை ஆக்கிவிடாதே فِتْنَةً சோதனையாக لِّـلْقَوْمِ சமுதாயத்திற்கு الظّٰلِمِيْنَۙ‏ அநியாயம் புரிகின்றனர்
10:85. (அதற்கு) அவர்கள்: “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம் (என்று கூறி) எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!” என்று பிரார்த்தித்தார்கள்.
10:85. அதற்கவர்கள், ‘‘(அவ்வாறே) அல்லாஹ்விடம் எங்கள் காரியங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டோம். எங்கள் இறைவனே! நீ எங்களை அநியாயம் செய்யும் மக்களின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவிடாதே!'' என்று பிரார்த்தித்தார்கள்.
10:85. அதற்கு அவர்கள் பதில் அளித்தார்கள். “நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறோம். எங்கள் இறைவனே! அக்கிரமம் புரியும் கூட்டத்தாருக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே!
10:85. அ(தற்கவர்கள், “(அவ்வாறே) அல்லாஹ்வின் மீதே (எங்கள் காரியங்கள் யாவையும் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைத்துவிட்டோம், எங்கள் இரட்சகனே! அநியாயக்காரர்களான சமூகத்தாரின் சோதனைக்கு நீ எங்களை ஆக்கிவிடாதே! என்று பிரார்த்தித்துக் கூறினார்கள்.
10:86
10:86 وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏
وَنَجِّنَا பாதுகாத்துக் கொள்/எங்களை بِرَحْمَتِكَ உன் அருளால் مِنَ இருந்து الْقَوْمِ சமுதாயம் الْكٰفِرِيْنَ‏ நிராகரிக்கின்றவர்கள்
10:86. “(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
10:86. (எங்கள் இறைவனே!) ‘‘நிராகரிக்கும் மக்களிடமிருந்து உன் அருளைக் கொண்டு நீ எங்களை பாதுகாத்துக் கொள்வாயாக!'' (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
10:86. மேலும், நிராகரிக்கும் கூட்டத்தாரிடமிருந்து உனது கருணையினால் எங்களைக் காப்பாற்றுவாயாக!”
10:86. மேலும், “(எங்கள் இரட்சகனே!) நிராகரிக்கும் சமூகத்தாரிடமிருந்து உன் அருளைக் கொண்டு எங்களை நீ காப்பாற்றுவாயாக” (என்றும் பிரார்த்தித்தார்கள்.)
10:87
10:87 وَاَوْحَيْنَاۤ اِلَىٰ مُوْسٰى وَاَخِيْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوْتًا وَّاجْعَلُوْا بُيُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِيْمُوا الصَّلٰوةَ‌ ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏
وَاَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَىٰ مُوْسٰى மூஸாவுக்கு وَاَخِيْهِ இன்னும் அவரது சகோதரரை اَنْ تَبَوَّاٰ நீங்கள் இருவரும் அமையுங்கள் لِقَوْمِكُمَا உங்கள் சமுதாயத்திற்காக بِمِصْرَ மிஸ்ரில் بُيُوْتًا வீடுகளை وَّاجْعَلُوْا இன்னும் ஆக்குங்கள் بُيُوْتَكُمْ உங்கள் வீடுகளை قِبْلَةً தொழுமிடங்களாக وَّاَقِيْمُوا இன்னும் நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَ‌ ؕ தொழுகையை وَبَشِّرِ நற்செய்தி கூறுவீராக الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
10:87. ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்: “நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (கிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!” என்று வஹீ அறிவித்தோம்.
10:87. (ஆகவே,) மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம்: ‘‘நீங்கள் இருவரும் உங்கள் மக்களுக்காக ‘மிஸ்ரில்' பல வீடுகளை அமைத்துக் கொண்டு, உங்கள் அவ்வீடுகளையே மஸ்ஜிதுகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள்.'' (‘‘மேலும், நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள்'' என்று) நம்பிக்கை கொண்டவர்களுக்கு (மூஸாவே) நற்செய்தி கூறுவீராக.
10:87. மேலும், நாம் மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும் வஹி அறிவித்தோம்: “உங்களுடைய சமுதாயத்தாருக்காக எகிப்தில் சில இல்லங்களை அமைத்துக் கொள்ளுங்கள்! மேலும், உங்களுடைய அந்த இல்லங்களை கிப்லா ஆக்கிக் கொண்டு தொழுகையை நிலைநாட்டுங்கள்! மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி அறிவியுங்கள்!”
10:87. மேலும், மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும் “நீங்கள் இருவரும் உங்களுடைய சமூகத்தாருக்காக “மிஸ்ரில்” பல வீடுகளை அமைத்துக் கொடுங்கள், உங்களுடைய (அவ்) வீடுகளை கிப்லாவாக (-பள்ளிகளாக)வும் ஆக்குங்கள், (அவற்றில் தவறாது) தொழுகையையும், நிறைவேற்றுங்கள், (அப்போது நீங்கள் வெற்றியடைந்து விடுவீர்கள், என்று) விசுவாசங் கொண்டோர்க்கு நீர் நன்மாராயமும் கூறுவீராக” என்று நாம் வஹீ அறிவித்தோம்.
10:88
10:88 ‌وَقَالَ مُوْسٰى رَبَّنَاۤ اِنَّكَ اٰتَيْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِيْنَةً وَّاَمْوَالًا فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙ رَبَّنَا لِيُضِلُّوْا عَنْ سَبِيْلِكَ‌ۚ رَبَّنَا اطْمِسْ عَلٰٓى اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰى قُلُوْبِهِمْ فَلَا يُؤْمِنُوْا حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَ لِيْمَ‏
وَقَالَ مُوْسٰى மூஸா கூறினார் رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّكَ நிச்சயமாக நீ اٰتَيْتَ கொடுத்தாய் فِرْعَوْنَ ஃபிர்அவ்னுக்கு وَمَلَاَهٗ இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களுக்கு زِيْنَةً அலங்காரத்தை وَّاَمْوَالًا இன்னும் செல்வங்கள் فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْيَا ۙ இவ்வுலகம் رَبَّنَا எங்கள் இறைவா لِيُضِلُّوْا அவர்கள் வழிகெடுப்பதற்கு عَنْ سَبِيْلِكَ‌ۚ உன் பாதையிலிருந்து رَبَّنَا எங்கள் இறைவா اطْمِسْ நாசமாக்கு عَلٰٓى اَمْوَالِهِمْ அவர்களின் பொருள்களை وَاشْدُدْ இன்னும் இறுக்கிவிடு قُلُوْبِهِمْ அவர்களுடைய فَلَا يُؤْمِنُوْا நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் حَتّٰى வரை يَرَوُا அவர்கள் காண்பர் الْعَذَابَ வேதனையை الْاَ لِيْمَ‏ துன்புறுத்தக்கூடியது
10:88. இன்னும்: “எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கையின் செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய்; எங்கள் இறைவனே! (அவற்றைக் கொண்டு) அவர்கள் உன் பாதையை விட்டு வழி கெடுக்கிறார்கள்; எங்கள் இறைவனே! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்களுடைய நெஞ்சங்களையும் கடினமாக்கி விடுவாயாக! நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காதவரையில், அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள்” என்று மூஸா கூறினார்.
10:88. மூஸா (தன் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) அலங்காரங்களையும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களையும் அளித்திருக்கிறாய். ஆகவே, எங்கள் இறைவனே! அவர்கள் (அவற்றைக் கொண்டு மற்ற மனிதர்களை) உன் வழியிலிருந்து திருப்பி விடுகின்றனர். எங்கள் இறைவனே! அவர்களின் பொருள்களை நாசமாக்கி, அவர்களுடைய உள்ளங்களையும் கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று பிரார்த்தித்தார்.
10:88. மூஸா இவ்வாறு இறைஞ்சினார்: “எங்கள் இறைவனே! நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய பிரமுகர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும் செல்வங்களையும் வழங்கியுள்ளாய்; எங்கள் இறைவனே! உன் வழியில் செல்லவிடாமல் (மக்களை) அவர்கள் திசை திருப்புவதற்காகவா (அவற்றை நீ அளித்திருக்கின்றாய்)? எங்கள் இறைவனே! அவர்களின் செல்வங்களை அழித்து விடுவாயாக! மேலும், துன்புறுத்தும் வேதனையைக் கண்ணால் காணும்வரை அவர்கள் நம்பிக்கை கொள்ளாதவாறு அவர்களுடைய இதயங்களை இறுகச்செய்வாயாக!”
10:88. இன்னும், எங்கள் இரட்சகனே” நிச்சயமாக நீ ஃபிர் அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் அலங்காரத்தையும், இவ்வுலக வாழ்க்கைக்குரிய செல்வங்களையும் கொடுத்திருக்கிறாய், ஆகவே, எங்கள் இரட்சகனே! அவர்கள் உன்னுடைய பாதையிலிருந்து மற்றவர்களை வழி கெடுத்து விடுவதற்காக (சோதனையாக நீ கொடுத்திருக்கிறாய்!) எங்கள் இரட்சகனே! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களுடைய இதயங்களையும் கடினமாக்கி விடுவாயாக! ஆகவே, துன்புறுத்தும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்கள் விசுவாசங் கொள்ள மாட்டார்கள்” என்று மூஸா பிரார்த்தித்துக் கூறினார்.
10:89
10:89 قَالَ قَدْ اُجِيْبَتْ دَّعْوَتُكُمَا فَاسْتَقِيْمَا وَلَا تَتَّبِعٰٓنِّ سَبِيْلَ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏
قَالَ கூறினான் قَدْ اُجِيْبَتْ ஏற்கப்பட்டு விட்டது دَّعْوَتُكُمَا பிரார்த்தனை / உங்கள் இருவரின் فَاسْتَقِيْمَا நீங்கள் இருவரும் உறுதியாக இருங்கள் وَلَا تَتَّبِعٰٓنِّ இன்னும் நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள் سَبِيْلَ பாதையை الَّذِيْنَ எவர்கள் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
10:89. இறைவன் கூறினான்: “உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது; எனவே நீங்கள் உறுதியாக இருங்கள். அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நீங்கள் இருவரும் (ஒருபோதும்) பின் பற்றாதீர்கள்” என்று.
10:89. அதற்கு (இறைவன், ‘‘மூஸாவே ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது. ஆகவே, நீங்கள் (மார்க்கத்தில்) உறுதியாக இருங்கள்; அறிவில்லாத மக்களின் வழியை நீங்கள் பின்பற்றி விடாதீர்கள்'' என்று கூறினான்.
10:89. அதற்கு அல்லாஹ் பதில் கூறினான்: “உங்கள் இருவருடைய இறைஞ்சுதலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே நீங்கள் நிலைகுலையாமல் இருங்கள்! அறியாதவர்களின் வழிமுறையை ஒருபோதும் நீங்கள் பின்பற்றாதீர்கள்!”
10:89. “(மூஸா, ஹாரூனே!) உங்களிருவரின் பிரார்த்தனை திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது, ஆகவே, நீங்களிருவரும் உறுதியாக இருங்கள், அறியாதவர்களாக இருக்கிறார்களே அவர்களின் வழியை நிச்சயமாக நீங்களிருவரும் பின்பற்றிவிடாதீர்கள்” என்று அவன் (அல்லாஹ்), கூறினான்.
10:90
10:90 وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَ فَاَتْبـَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُوْدُهٗ بَغْيًا وَّعَدْوًا‌ ؕ حَتّٰۤى اِذَاۤ اَدْرَكَهُ الْغَرَقُ قَالَ اٰمَنْتُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا الَّذِىْۤ اٰمَنَتْ بِهٖ بَنُوْۤا اِسْرَآءِيْلَ وَ اَنَا مِنَ الْمُسْلِمِيْنَ‏
وَجَاوَزْنَا இன்னும் கடக்க வைத்தோம் بِبَنِىْۤ اِسْرَآءِيْلَ الْبَحْرَ இஸ்ராயீலின் சந்ததிகளை/கடலை فَاَتْبـَعَهُمْ பின் தொடர்ந்தனர்/ அவர்களை فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் وَجُنُوْدُهٗ இன்னும் அவனுடைய ராணுவங்கள் بَغْيًا அழிச்சாட்டியம் وَّعَدْوًا‌ ؕ இன்னும் வரம்பு மீறி حَتّٰۤى இறுதியாக اِذَاۤ போது اَدْرَكَهُ பிடித்தது/அவனை الْغَرَقُ மூழ்குதல் قَالَ கூறினான் اٰمَنْتُ நம்பிக்கை கொண்டேன் اَنَّهٗ நிச்சயமாக செய்தி لَاۤ அறவே இல்லை اِلٰهَ இறைவன் اِلَّا தவிர الَّذِىْۤ எத்தகையவன் اٰمَنَتْ நம்பிக்கை கொண்டா(ர்க)ள் بِهٖ بَنُوْۤا اِسْرَآءِيْلَ அவனை / இஸ்ராயீலின் சந்ததிகள் وَ اَنَا இன்னும் நான் مِنَ الْمُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களில்
10:90. மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
10:90. இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி நாம் செய்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய ராணுவங்களும் அளவு கடந்த கொடுமை செய்ய(க் கருதி) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். (ஆகவே, அவர்களை நாம் கடலில் மூழ்கடித்து விட்டோம்.) ஃபிர்அவ்ன் மூழ்க ஆரம்பிக்கவே, ‘‘இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்டிருக்கும் இறைவனை நானும் நம்பிக்கை கொள்கிறேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; நான் அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபடுகிறேன்'' என்று (அபயமிட்டு) அலறினான்.
10:90. மேலும், நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும் அநீதியும், அக்கிரமமும் இழைப்பதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். இறுதியில், ஃபிர்அவ்ன் நீரில் மூழ்கத் தொடங்கியபோது அலறினான்: “இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த இறைவன் மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்று நானும் நம்பிக்கை கொண்டேன். மேலும் (அந்த இறைவனுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும் ஒருவனாவேன்!”
10:90. இஸ்ராயீலின் மக்களை கடலைக் கடக்குமாறு நாம் செய்தோம், அப்போது ஃபிர்அவ்னும், அவனுடைய படையினரும் (அளவு கடந்த) அநியாயமும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள்; முடிவாக (ஃபிர் அவ்னாகிய) அவனை மூழ்குதல் வந்தடைந்தபோது. “இஸ்ராயீலின் மக்கள் யாரை விசுவாசங்கொண்டுள்ளார்களோ, அத்தகையவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயனில்லை என நான் விசுவாசம் கொண்டு விட்டேன்; இன்னும், நான் அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தோரில் (முஸ்லிம்களில் ஒருவனாக) இருக்கிறேன்” என்றும் கூறினான்.
10:91
10:91 آٰلْــٰٔنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِيْنَ‏
آٰلْــٰٔنَ இப்போதுதானா? وَقَدْ عَصَيْتَ மாறு செய்துவிட்டாய் قَبْلُ முன்னரோ وَكُنْتَ நீ இருந்தாய் مِنَ الْمُفْسِدِيْنَ‏ விஷமிகளில்
10:91. “இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.
10:91. (அதற்கும் நாம் அவனை நோக்கி,) ‘‘இச்சமயம்தான் (நீ நம்பிக்கை கொள்கிறாய்!) சற்று முன் வரை நீ மாறு செய்துகொண்டு, விஷமிகளில் ஒருவனாகவே இருந்தாய்.
10:91. (பதில் கூறப்பட்டது:) “இப்போதா நம்பிக்கை கொள்கிறாய்? இதற்குச் சற்று முன்வரை நீ மாறுசெய்து கொண்டிருந்தாய். குழப்பம் விளைவிப்பவர்களில் ஒருவனாயும் இருந்தாய்.
10:91. (அதற்கு நாம் அவனிடம்) “இப்பொழுதா? (நீ விசுவாசங்கொள்கிறாய்? சற்று) முன்னர் நீ திட்டமாக மாறு செய்து கொண்டிருந்தாய், குழப்பவாதிகளில் ஒருவனாகவும் இருந்தாய்”
10:92
10:92 فَالْيَوْمَ نُـنَجِّيْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰيَةً  ؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰيٰتِنَا لَغٰفِلُوْنَ‏
فَالْيَوْمَ نُـنَجِّيْكَ இன்று/ நாம் உயரத்தில் வைப்போம் / உன்னை بِبَدَنِكَ உன் உடலை لِتَكُوْنَ நீ ஆகுவதற்காக لِمَنْ எவருக்கு خَلْفَكَ பின்னால்/உனக்கு اٰيَةً  ؕ ஓர் அத்தாட்சியாக وَاِنَّ நிச்சயமாக كَثِيْرًا அதிகமானவர் مِّنَ النَّاسِ عَنْ மக்களில்/விட்டு اٰيٰتِنَا நம் அத்தாட்சிகளை لَغٰفِلُوْنَ‏ அலட்சியம் செய்பவர்கள்தான்
10:92. எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).
10:92. எனினும், உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாவதற்காக உன் உடலை (அது அழியாமல்) நாம் இன்றைய தினம் பாதுகாத்துக் கொள்வோம்'' (என்று கூறினோம்.) எனினும், நிச்சயமாக மனிதர்களில் பலர் நம் அத்தாட்சிகளைப் பற்றி பராமுகமாயிருக்கின்றனர்.
10:92. இன்று உன் உடலை மட்டும் நாம் காப்பாற்றுவோம்; உனக்குப் பின்னால் வரக்கூடிய மக்களுக்குப் படிப்பினை தரும் சான்றாக விளங்கும் பொருட்டு! ஆயினும், மக்களில் பெரும்பாலோர் நம் சான்றுகளை அலட்சியப்படுத்துபவர்களாய் இருக்கின்றனர்.”
10:92. எனவே, “உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு, நீ ஓர் அத்தாட்சியாக ஆவதற்காக இன்றையத்தினம் உன்னை (உயிரற்ற) உன்னுடைய தேகத்தோடு நாம் காப்பாற்றுவோம்” (என்று கூறினோம்.) “இன்னும், நிச்சயமாக மனிதர்களில் அநேகர் நம்முடைய சான்றுகளை விட்டும் பாராமுகமானவர்கள்” (என்றும் அவனுக்குக் கூறப்பட்டது.)
10:93
10:93 وَلَقَدْ بَوَّاْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ مُبَوَّاَ صِدْقٍ وَّرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ‌ۚ فَمَا اخْتَلَفُوْا حَتّٰى جَآءَهُمُ الْعِلْمُ‌ؕ اِنَّ رَبَّكَ يَقْضِىْ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக بَوَّاْنَا அமைத்தோம் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு مُبَوَّاَ இடத்தை صِدْقٍ மிக நல்ல وَّرَزَقْنٰهُمْ இன்னும் வழங்கினோம்/அவர்களுக்கு مِّنَ الطَّيِّبٰتِ‌ۚ நல்லவற்றிலிருந்து فَمَا اخْتَلَفُوْا அவர்கள் மாறுபடவில்லை حَتّٰى வரை جَآءَ வந்தது هُمُ அவர்களிடம் الْعِلْمُ‌ؕ ஞானம் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் يَقْضِىْ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் فِيْمَا எதில் كَانُوْا இருந்தனர் فِيْهِ அதில் يَخْتَلِفُوْنَ‏ மாறுபடுகின்றனர்
10:93. நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் சந்ததியினரை, தகுந்த இருப்பிடத்தில் இருத்தி, நல்ல உணவுகளையும் கொடுத்து வந்தோம்; எனினும் உண்மையான ஞானம் அவர்களிடம் வரும் வரையில் அவர்கள் மாறுபாடு செய்யவில்லை; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எது பற்றி மாறுபாடு செய்து கொண்டிருந்தார்களோ அ(து விஷயத்)தில் இறுதி நாளில் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.
10:93. நிச்சயமாக, நாம் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வாக்களித்த) மிக வசதியான இடத்தைத் தந்து, நல்ல உணவுகளையும் அவர்களுக்கு அளித்து வந்தோம். ஆகவே, உண்மையான ஞானம் (என்னும் இவ்வேதம்) அவர்களிடம் வரும் வரை இதற்கவர்கள் மாறுபடவில்லை; (வந்ததன் பின்னரே இதை நிராகரித்து மாறு செய்கின்றனர்.) எதில் அவர்கள் மாறு செய்கின்றனரோ அதைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் நிச்சயமாக (அதுதான் உண்மை என்று) உமது இறைவன் தீர்ப்பளிப்பான்.
10:93. நாம் இஸ்ராயீயிலின் வழித்தோன்றல்களை மிகச் சிறந்த இடத்தில் வசிக்கச் செய்தோம். மேலும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கை வசதிகளையும் வழங்கினோம். உண்மையான அறிவு அவர்களிடம் வந்த பின்னரேயன்றி, அவர்கள் பிளவுபடவில்லை. அவர்கள் எதில் பிளவுபட்டிருந்தார்களோ அதைக் குறித்து மறுமைநாளில் அவர்களுக்கு இடையே திண்ணமாக உம்முடைய இறைவன் தீர்ப்பு வழங்குவான்.
10:93. நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு மிக்க விருப்பமான இடத்தில் குடியேறச் செய்து நல்லவற்றிலிருந்து அவர்களுக்கு உணவளித்தும் வந்தோம், எனவே, (வேதமாகிய உண்மையான) அறிவு அவர்களிடம் வரும் வரையில், அவர்கள் மாறுபடவில்லை, எது விஷயத்தில் அவர்கள் மாறுபட்டிருந்தார்களோ, அதில் அவர்களுக்கிடையே நிச்சயமாக உமதிரட்சகன் மறுமைநாளில் தீர்ப்பு வழங்குவான்.
10:94
10:94 فَاِنْ كُنْتَ فِىْ شَكٍّ مِّمَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ فَسْــٴَــلِ الَّذِيْنَ يَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ‌ۚ لَقَدْ جَآءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَۙ‏
فَاِنْ كُنْتَ நீர் இருந்தால் فِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّمَّاۤ اَنْزَلْنَاۤ நாம் இறக்கியதில் اِلَيْكَ உமக்கு فَسْــٴَــلِ கேட்பீராக الَّذِيْنَ எவர்கள் يَقْرَءُوْنَ படிக்கின்றார்கள் الْكِتٰبَ வேதத்தை مِنْ قَبْلِكَ‌ۚ உமக்கு முன்னர் لَقَدْ جَآءَ வந்துவிட்டது كَ உமக்கு الْحَقُّ உண்மை مِنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து فَلَا تَكُوْنَنَّ ஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர் مِنَ الْمُمْتَرِيْنَۙ‏ சந்தேகப்படுபவர்களில்
10:94. (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.
10:94. (நபியே!) நாம் உமக்கு இறக்கியிருக்கும் இதில் (சிறிதும் சந்தேகம் கொள்ளாதீர்.) நீர் சந்தேகித்தால் உமக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களை ஓதுபவர்களிடம் நீர் கேட்டுப் பார்ப்பீராக. நிச்சயமாக உமது இறைவனிடமிருந்தே உண்மை(யான இவ்வேதம்) உம்மிடம் வந்தது. ஆதலால், சந்தேகப்படுபவர்களில் நீரும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்.
10:94. நாம் உம்மீது இறக்கியருளியவற்றில் உமக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உமக்கு முன்பிருந்தே வேதத்தைப் படித்துக் கொண்டிருப்பவர்களிடம் நீர் கேளும். உண்மையில் உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்தியமே வந்துள்ளது. எனவே, சந்தேகம் கொள்வோருள் நீரும் ஒருவராகிவிடவேண்டாம்.
10:94. (நபியே!) நாம் உமக்கு இறக்கிவைத்துள்ளதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் வேதத்தை ஓதுவோரிடம் நீர் கேட்(டுப் பார்ப்)பீராக! நிச்சயமாக உமதிரட்சகனிடமிருந்தே (இவ்வேதமாகிய) உண்மை உம்மிடம் வந்துவிட்டது, ஆதலால், சந்தேகிக்கிறவர்களில் (உள்ளவராக) திண்ணமாக நீர் ஆகிவிட வேண்டாம்.
10:95
10:95 وَلَا تَكُوْنَنَّ مِنَ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ فَتَكُوْنَ مِنَ الْخٰسِرِيْنَ‏
وَلَا تَكُوْنَنَّ அறவே நீர் ஆகிவிடாதீர் مِنَ இருந்து الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் فَتَكُوْنَ ஆகிவிடுவீர் مِنَ الْخٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளில்
10:95. அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர்.
10:95. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்களுடன் நீர் சேர்ந்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நஷ்டமடைந்தவர்களில் நீரும் ஒருவராகி விடுவீர்.
10:95. மேலும், எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யென்று கூறினார்களோ அவர்களுள் ஒருவராகவும் நீர் ஆகிவிடவேண்டாம். அவ்வாறாயின் இழப்புக்கு ஆளானோரில் நீரும் ஒருவராகிவிடுவீர்!
10:95. அன்றியும், அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கியோர்களில் (உள்ளவராக) நீர் நிச்சயமாக ஆகிவிட வேண்டாம், அவ்வாறாயின் நஷ்டமடைந்தோரில் நீர் ஆகிவிடுவீர்.
10:96
10:96 اِنَّ الَّذِيْنَ حَقَّتْ عَلَيْهِمْ كَلِمَتُ رَبِّكَ لَا يُؤْمِنُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் حَقَّتْ உறுதியாகி விட்டது عَلَيْهِمْ அவர்கள் மீது كَلِمَتُ வாக்கு رَبِّكَ உம் இறைவனின் لَا يُؤْمِنُوْنَۙ‏ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
10:96. நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகள் என்று) உம் இறைவனுடைய வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் ஈமான் கொள்ளவே மாட்டார்கள்.
10:96. நிச்சயமாக எவர்கள் மீது (பாவிகளென) உமது இறைவனுடைய தீர்ப்பு ஏற்பட்டு விட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
10:96. உண்மை யாதெனில், எவர்கள் மீது உம்முடைய இறைவனின் வாக்கு மெய்யாகிவிட்டதோ, அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
10:96. நிச்சயமாக எவர்களின் மீது உமதிரட்சகனுடைய வாக்கு நிரூபணமாகி (உரித்தாகி) விட்டதோ அத்தகையவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
10:97
10:97 وَلَوْ جَآءَتْهُمْ كُلُّ اٰيَةٍ حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَ لِيْمَ‏
وَلَوْ வந்தால் جَآءَتْهُمْ அவர்களிடம் كُلُّ எல்லாம் اٰيَةٍ அத்தாட்சி حَتّٰى வரை يَرَوُا காண்பார்கள் الْعَذَابَ வேதனை الْاَ لِيْمَ‏ துன்புறுத்தக்கூடியது
10:97. நோவினை தரும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அவர்களிடம் எல்லா அத்தாட்சிகளும் வந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.).
10:97. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரை, அத்தாட்சிகள் அனைத்தும் அவர்களிடம் வந்தாலும், (அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.)
10:97. எத்தனை சான்றுகள் அவர்களிடம் வந்தாலும் சரியே! அவர்கள் துன்புறுத்தும் வேதனையைக் கண்டால் அன்றி; (அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்).
10:97. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் காணும் வரையில் அனைத்து அத்தாட்சிகள் அவர்களுக்கு வந்தாலும் (அவர்கள் விசுவாசங்கொள்ளவே மாட்டார்கள்.)
10:98
10:98 فَلَوْلَا كَانَتْ قَرْيَةٌ اٰمَنَتْ فَنَفَعَهَاۤ اِيْمَانُهَاۤ اِلَّا قَوْمَ يُوْنُسَ ۚؕ لَمَّاۤ اٰمَنُوْا كَشَفْنَا عَنْهُمْ عَذَابَ الْخِزْىِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَمَتَّعْنٰهُمْ اِلٰى حِيْنٍ‏
فَلَوْلَا كَانَتْ இருக்கக்கூடாதா! قَرْيَةٌ ஓர் ஊர் اٰمَنَتْ நம்பிக்கைகொண்டது فَنَفَعَهَاۤ பலனளித்தது/ தங்களுக்கு اِيْمَانُهَاۤ தங்கள் நம்பிக்கை اِلَّا எனினும் قَوْمَ சமுதாயம் يُوْنُسَ ۚؕ யூனுஸ் لَمَّاۤ போது اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் كَشَفْنَا நீக்கினோம் عَنْهُمْ அவர்களை விட்டு عَذَابَ வேதனையை الْخِزْىِ இழிவு فِى الْحَيٰوةِ வாழ்வில் الدُّنْيَا உலகம் وَمَتَّعْنٰهُمْ இன்னும் சுகமளித்தோம்/அவர்களுக்கு اِلٰى வரை حِيْنٍ‏ ஒரு காலம்
10:98. எனவே, (வேதனை வரும்போது) ஓர் ஊர் (மக்கள்) நம்பிக்கைக் கொண்டு, அதனுடைய நம்பிக்கை அதற்குப் பயனளித்ததாக இருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த ஊரும் இருக்கவில்லை!) யூனுஸின் சமுதாயத்தாரைத் தவிர; அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களைவிட்டும் நாம் அகற்றினோம்; சிறிதுகாலம் சுகம் அனுபவிக்க செய்தோம்.
10:98. தங்கள் நம்பிக்கை பலனளிக்கக்கூடிய விதத்தில் (வேதனை வருவதற்கு முன்னர் வேதனையின் அறிகுறியைக் கண்டதும், நம்பிக்கை கொண்டு வேதனையில் இருந்து தப்பித்துக் கொண்ட) ‘யூனுஸ்' உடைய மக்களைப் போல மற்றோர் ஊரார் இருந்திருக்க வேண்டாமா? அவர்கள் (வேதனையின் அறிகுறியைக் கண்டதும் வேதனை வருவதற்கு முன்னதாகவே) நம்பிக்கை கொண்டதனால், இம்மையில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டு நாம் நீக்கிவிட்டோம். மேலும், சிறிது காலம் சுகம் அனுபவிக்க அவர்களை நாம் விட்டு வைத்தோம்.
10:98. (இறைத்தண்டனையைக் கண்டபோது) நம்பிக்கை கொண்ட எந்த ஊர் மக்களுக்காவது அவர்களுடைய நம்பிக்கை பயன் அளித்திருப்பதாக எந்த ஓர் எடுத்துக்காட்டாவது இருக்கிறதா யூனுஸுடைய சமுதாயத்தைத் தவிர? (அத்தகைய எடுத்துக்காட்டு எதுவும் இல்லை) அந்தச் சமுதாயத்தினர் நம்பிக்கை கொண்டபோது உலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை நாம் அவர்களை விட்டு அகற்றி விட்டோம். மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கவும் செய்தோம்.
10:98. எனவே, (நாம் அழித்து விட்ட எத்தனையோ ஊர்களில் நம் வேதனை வரும் முன்) ஓர் ஊர் (மக்கள்) விசுவாசங் கொண்டு பின்னர், அதன் விசுவாசம் அதற்கு பயனளித்திருக்கக் கூடாதா? (அவ்வாறு எந்த ஊரும் இருக்கவில்லை.) யூனுஸின் சமூகத்தாரைத்தவிர (அவர்கள் அல்லாஹ்வின் தண்டனை வரும்முன் விசுவாசங்கொண்டு- அதன் விசுவாசம் பயனளித்த ஊரைச் சார்ந்தவர்களாவா்) அவர்கள் விசுவாசங்கொண்டபோது இவ்வுலக வாழ்வில் இழிவுபடுத்தும் வேதனையை அவர்களை விட்டும் நாம் அகற்றிவிட்டோம், சிறிது காலம்வரை அவர்களை சுகமனுபவிக்குமாறும் செய்தோம்.
10:99
10:99 وَلَوْ شَآءَ رَبُّكَ لَاٰمَنَ مَنْ فِى الْاَرْضِ كُلُّهُمْ جَمِيْعًا‌ ؕ اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰى يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‏
وَلَوْ شَآءَ நாடினால் رَبُّكَ உம் இறைவன் لَاٰمَنَ நம்பிக்கை கொண்டிருப்பார்(கள்) مَنْ فِى الْاَرْضِ பூமியிலுள்ளவர்கள் كُلُّهُمْ அவர்கள் எல்லோரும் جَمِيْعًا‌ ؕ அனைவரும் اَفَاَنْتَ நீர்? تُكْرِهُ நிர்ப்பந்திப்பீர் النَّاسَ மக்களை حَتّٰى يَكُوْنُوْا அவர்கள் ஆகிவிடுவதற்கு مُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
10:99. மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
10:99. (நபியே!) உமது இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாக ஆகிவிடுவார்கள். ஆகவே, மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று அவர்களை நீர் நிர்ப்பந்திக்க முடியுமா?
10:99. (உலகிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டு கீழ்ப்படிந்தவர்களாகவே இருக்க வேண்டும் என்பது) உம் இறைவனின் நாட்டமாக இருந்தால், இப்பூமியிலுள்ள அனைவருமே இறைநம்பிக்கை கொண்டிருப்பார்கள். அப்படியிருக்க, மக்கள் நம்பிக்கையாளர்களாகி விடவேண்டுமென்று நீர் அவர்களை கட்டாயப்படுத்துவீரா?
10:99. மேலும், உமதிரட்சகன் நாடியிருந்தால், பூமியிலுள்ள அனைவருமே முற்றிலும் விசுவாசித்திருப்பார்கள், எனவே மனிதர்களை-அவர்கள் (அனைவருமே) விசுவாசிகளாகி விட வேண்டுமென்று நீர் நிர்ப்பந்திக்கிறீரா?
10:100
10:100 وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تُؤْمِنَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ‏
وَمَا كَانَ சாத்தியமாகாது لِنَفْسٍ ஓர் ஆத்மாவிற்கு اَنْ تُؤْمِنَ அது நம்பிக்கை கொள்வது اِلَّا தவிர بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَيَجْعَلُ இன்னும் ஆக்குகிறான் الرِّجْسَ தண்டனையை عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் لَا يَعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிய மாட்டார்கள்
10:100. எந்த ஓர் ஆத்மாவும், அல்லாஹ்வின் கட்டளையின்றி ஈமான் கொள்ள முடியாது - மேலும் (இதனை) விளங்காதவர்கள் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.
10:100. எந்த ஆத்மாவும் அல்லாஹ்வின் நாட்டம் இன்றி நம்பிக்கைகொள்ள முடியாது. ஆனால், அறிவில்லாதவர்(களாகிய விஷமி)கள் மீதே (அவர்களின் விஷமத்தின் காரணமாகப்) பாவத்தின் தண்டனையை அவன்ஆக்கி விடுகிறான்.
10:100. எந்த மனிதனும் அல்லாஹ்வின் நாட்டமின்றி நம்பிக்கை கொள்ள முடியாது. மேலும், எவர்கள் சிந்தித்துணரவில்லையோ அவர்கள்மீது அவன் மாசுபடியச் செய்கின்றான். (இதுவே அவனது நியதியாகும்.)
10:100. மேலும், எந்த ஆத்மாவிற்கும், அல்லாஹ்வின் அனுமதியன்றி அது விசுவாசங்கொள்வதற்கில்லை, மேலும், (இதை) விளங்கிக் கொள்ளாதவர்களின் மீது தண்டனையை அவன் ஆக்குகிறான்.
10:101
10:101 قُلِ انْظُرُوْا مَاذَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ وَمَا تُغْنِى الْاٰيٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ‏
قُلِ கூறுவீராக انْظُرُوْا கவனியுங்கள் مَاذَا எதை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَالْاَرْضِ ؕ இன்னும் பூமியில் وَمَا تُغْنِى பலனளிக்கமாட்டார்கள் الْاٰيٰتُ வசனங்கள் وَالنُّذُرُ இன்னும் எச்சரிப்பவர்கள் عَنْ قَوْمٍ சமுதாயத்திற்கு لَّا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
10:101. “வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றைக் கவனித்துப் பாருங்கள்” என்று (நபியே!) அவர்களிடம் கூறுவீராக; எனினும் ஈமான் கொள்ளாத மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளும், எச்சரிக்கைகளும் பலனளிக்க மாட்டா.
10:101. (நபியே! அவர்களை நோக்கி) ‘‘வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை (சிறிது) கவனித்துப் பாருங்கள்'' எனக் கூறுவீராக. எனினும், நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம் வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் ஒரு பயனுமளிக்காது.
10:101. (நபியே! இவர்களிடம்) நீர் கூறும்: “வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றைக் கூர்ந்து நோக்குங்கள்.” நம்பிக்கை கொள்ள விரும்பாத கூட்டத்தாருக்கு, சான்றுகளும் எச்சரிக்கைகளும் என்ன பலனை அளித்துவிடப் போகின்றன?
10:101. (நபியே!) அவர்களிடம்,) “வானங்களிலும் பூமியிலும் என்ன இருக்கின்றன என்பதை கவனித்துப் பாருங்கள்” எனக் கூறுவீராக! எனினும், விசுவாசங்கொள்ளாதவர்களான சமூகத்தார்க்கு (நம்முடைய) அத்தாட்சிகளும் எச்சரிக்கைகளும் யாதொரு பயனுமளிக்கமாட்டா.
10:102
10:102 فَهَلْ يَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَيَّامِ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِهِمْ‌ؕ قُلْ فَانْتَظِرُوْۤا اِنِّىْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏
فَهَلْ ஆகவே يَنْتَظِرُوْنَ எதிர் பார்க்கின்றனர் اِلَّا தவிர مِثْلَ போன்றதை اَيَّامِ நாள்கள் الَّذِيْنَ எவர்கள் خَلَوْا சென்றார்கள் مِنْ قَبْلِهِمْ‌ؕ தங்களுக்கு முன் قُلْ கூறுவீராக فَانْتَظِرُوْۤا நீங்கள் எதிர் பாருங்கள் اِنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْ உங்களுடன் مِّنَ الْمُنْتَظِرِيْنَ‏ எதிர்பார்ப்பவர்களில்
10:102. தங்களுக்குமுன் சென்று விட்டார்களே அவர்களுக்கு ஏற்பட்ட நாள்களைப் போன்றதையேயன்றி, அவர்கள் (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? (அப்படியானால் அந்த கஷ்டகாலத்தை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள் - நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:102. (நபியே!) அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் போன்றதேயன்றி (வேறு எதையும்) எதிர்பார்க்கின்றனரா? (எனவே, அவர்களை நோக்கி ‘‘அத்தகைய கஷ்டகாலம்தான் உங்களுக்கும் வர இருக்கிறது.) ஆகவே, (அதை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் (அது உங்களுக்கு வருவதை) உங்களுடன் எதிர்பார்க்கிறேன்'' என்று கூறுவீராக.
10:102. தமக்கு முன்னால் சென்று போன மக்கள் அனுபவித்ததைப் போன்ற வேதனை நிறைந்த நாட்களைத் தவிர வேறு எதனை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்? எனவே, இவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! நானும் உங்களோடு எதிர்பார்ப்பவனாய் இருக்கின்றேன்.”
10:102. (நபியே!) அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட நாட்களைப் போன்றதேயன்றி (வேறெதனையும்) எதிர்பார்க்கின்றனரா? ஆகவே (அந்நாட்களை நீங்களும்) எதிர்பார்த்திருங்கள், நிச்சயமாக (அந்நாட்கள் உங்களுக்கு வருவதை) உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களில் நானும் இருக்கிறேன்” என்று கூறுவீராக!
10:103
10:103 ثُمَّ نُنَجِّىْ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا‌ كَذٰلِكَ‌ۚ حَقًّا عَلَيْنَا نُـنْجِ الْمُؤْمِنِيْنَ‏
ثُمَّ பிறகு نُنَجِّىْ பாதுகாப்போம் رُسُلَنَا தூதர்களை/நம் وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا‌ நம்பிக்கை கொண்டார்கள் كَذٰلِكَ‌ۚ இவ்வாறே حَقًّا கடமையாக عَلَيْنَا நம்மீது கடமையாக உள்ளது نُـنْجِ நாம் பாதுகாப்பது الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொண்டவர்களை
10:103. (அவ்வாறு வேதனை வருங்காலத்தில்) நம் தூதர்களையும், ஈமான் கொண்டவர்களையும் நாம் இவ்வாறே காப்பாற்றுவோம் - (ஏனெனில்) ஈமான் கொண்டவர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்.
10:103. (அவ்வாறு வேதனை வரும் காலத்தில்) நம் தூதர்களை பாதுகாத்துக் கொள்வோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வோம். (ஏனென்றால்,) நம்பிக்கை கொண்டவர்களை பாதுகாத்துக் கொள்வது நம்மீது கடமையாகவே இருக்கிறது.
10:103. பிறகு (இவ்வாறான சந்தர்ப்பம் வரும்போது) நாம் நம் தூதர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றிவிடுகின்றோம். இதுவே நம்முடைய வழிமுறையாகும். நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவது நம் மீது கடமையாகும்.
10:103. பின்னர், (அவ்வாறு தண்டனை வந்தால்) நம்முடைய தூதர்களையும் அவ்வாறே விசுவாசங்கொண்டவர்களையும் நாம் காப்பாற்றுவோம், விசுவாசங்கொண்டவர்களை நாம் காப்பாற்றுவது நம்மீது (கடமையாகவே) இருக்கிறது.
10:104
10:104 قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِىْ شَكٍّ مِّنْ دِيْنِىْ فَلَاۤ اَعْبُدُ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰـكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِىْ يَتَوَفّٰٮكُمْ‌ ۖۚ‌ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَۙ‏
قُلْ கூறுவீராக يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் فِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّنْ دِيْنِىْ என் மார்க்கத்தில் فَلَاۤ اَعْبُدُ நான் வணங்கமாட்டேன் الَّذِيْنَ எவர்களை تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குகிறீர்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَلٰـكِنْ எனினும் اَعْبُدُ வணங்குவேன் اللّٰهَ அல்லாஹ்வைத்தான் الَّذِىْ எத்தகையவன் يَتَوَفّٰٮكُمْ‌ உயிர் கைப்பற்றுகிறான் وَاُمِرْتُ இன்னும் கட்டளையிடப் பட்டேன் اَنْ اَكُوْنَ நான் ஆகவேண்டுமென்று مِنَ الْمُؤْمِنِيْنَۙ‏ நம்பிக்கையாளர்களில்
10:104. “மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன்; ஆனால் உங்களை மரணிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், நான் முஃமின்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
10:104. (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டபோதிலும், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்குபவற்றை நான் எக்காலத்திலும் வணங்கப்போவதில்லை. எனினும், உங்கள் அனைவருடைய உயிரையும் கைப்பற்றும் (சக்தி பெற்ற) அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே கட்டளையிடப்பட்டுள்ளேன்.
10:104. (நபியே!) நீர் கூறிவிடுவீராக: “மனிதர்களே, நீங்கள் (இப்பொழுதும்கூட) என்னுடைய தீனை (நெறியை)ப் பற்றி ஏதேனும் சந்தேகம் கொண்டிருந்தால் (தெரிந்து கொள்ளுங்கள்!) அல்லாஹ்வைத் தவிர நீங்கள் யாருக்கெல்லாம் அடிபணிகின்றீர்களோ அவர்களுக்கு நான் அடிபணிவதில்லை. மாறாக, எந்த இறைவனின் பிடியில் உங்கள் மரணம் இருக்கிறதோ அந்த இறைவனுக்கு மட்டும் நான் அடிபணிகின்றேன். மேலும், நான் நம்பிக்கை கொண்டவர்களில் ஒருவனாக இருக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளேன்.
10:104. (நபியே! அவர்களிடம்,) “மனிதர்களே! நீங்கள் என்னுடைய மார்க்கத்தில் சந்தேகத்திலிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன், எனினும், உங்க(ளுடைய உயிர்க)ளைக் கைப்பற்றுபவனான அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், மேலும், விசுவாசிகளில் (உள்ளவனாக) இருக்க வேண்டுமென்றே நான் கட்டளையிடப் பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
10:105
10:105 وَاَنْ اَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًا‌ ۚ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ‏
وَاَنْ اَقِمْ இன்னும் நிலைநிறுத்துவீராக وَجْهَكَ உம் முகத்தை لِلدِّيْنِ மார்க்கத்தின் மீது حَنِيْفًا‌ ۚ உறுதியானவராக وَلَا تَكُوْنَنَّ நிச்சயம் ஆகிவிடாதீர் مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
10:105. நேர்மையான மார்க்கத்தின்பாலே உம் முகத்தை நிலைபெறச் செய்ய வேண்டும்; முஷ்ரிக்குகளில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
10:105. (நபியே!) உறுதியுடையவராக நேரான மார்க்கத்தின் பக்கமே உமது முகத்தை தொடர்ந்து திருப்பி வைப்பீராக! இணைவைத்து வணங்குபவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்.
10:105. மேலும், ‘ஒருமனப்பட்டு இந்த தீனில் (நெறியில்) உம்மை முற்றிலும் நிலைப்படுத்திக் கொள்வீராக! மேலும், எந்நிலையிலும் இணை வைப்பவர்களில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம்’ என்றும் நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன்.”
10:105. (நபியே!) மேலும் (அசத்தியமான எல்லா மதங்களை விட்டும் நீங்கி) நேரான மார்க்கத்தின்பால் சார்ந்தவராக உம்முடைய முகத்தை நிலைபெறச் செய்வீராக! இணைவைக்கக் கூடியவர்களில் (உள்ளவராக) நிச்சயமாக நீரும் ஆகிவிட வேண்டாம்.
10:106
10:106 وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَ لَا يَضُرُّكَ‌ۚ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ‏
وَلَا تَدْعُ அழைக்காதீர் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مَا எவை يَنْفَعُكَ உமக்கு وَ لَا يَضُرُّكَ‌ۚ இன்னும் தீங்களிக்காது/ உமக்கு فَاِنْ فَعَلْتَ நீ செய்தால் فَاِنَّكَ நிச்சயமாக நீர் اِذًا அப்போது مِّنَ الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களில்
10:106. உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம்; (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர்.
10:106. ஆகவே, உமக்கு ஒரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அநியாயக்காரர்களில் நீரும் ஒருவராகி விடுவீர்.
10:106. மேலும், அல்லாஹ்வை விட்டுவிட்டு உமக்குப் பலனளிக்கவும் கேடு விளைவிக்கவும் இயலாதவற்றிடம் நீர் பிரார்த்திக்காதீர். அவ்வாறு செய்வீராயின் அப்போது நீர் திண்ணமாக அக்கிரமம் செய்பவர்களுள் ஒருவராகி விடுவீர்.
10:106. இன்னும், அல்லாஹ்வைத் தவிர உமக்கு பயனளிக்காதவற்றை மற்றும் உமக்கு இடர் செய்யாதவற்றை நீர் அழைக்க வேண்டாம், அவ்வாறு செய்வீராயின், நிச்சயமாக அச்சமயமே அநியாயக்காரர்களில் (உள்ளவராக ) நீர் ஆகிவிடுவீர்.
10:107
10:107 وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ‌ۚ وَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ‌ ؕ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏
يَّمْسَسْكَ உமக்கு اللّٰهُ அல்லாஹ் بِضُرٍّ ஒரு தீங்கைக் கொண்டு فَلَا அறவே இல்லை كَاشِفَ நீக்குபவர் لَهٗۤ அதை اِلَّا هُوَ ۚ தவிர/அவன் يُّرِدْكَ உமக்கு بِخَيْرٍ ஒரு நன்மையை فَلَا அறவே இல்லை رَآدَّ தடுப்பவர் لِفَضْلِهٖ‌ ؕ அவனுடையஅருளை يُصِيْبُ بِهٖ அதை அடையச் செய்கிறான் مَنْ எவர் يَّشَآءُ நாடுகின்றான் مِنْ عِبَادِهٖ‌ ؕ தன் அடியார்களில் وَهُوَ அவன்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
10:107. அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான்.
10:107. அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு ஒரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடைசெய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவான்.
10:107. மேலும், ஏதேனும் துன்பத்தை அல்லாஹ் உமக்குக் கொடுத்தால், அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. மேலும், உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க அவன் நாடினால் அவனுடைய அருளைத் தடுப்பவரும் யாரும் இல்லை. தன்னுடைய அடிமைகளில், தான் நாடுபவருக்குத் தன் அருளை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான்.
10:107. அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குகிறவன் அவனைத் தவிர (வேறு) எவரும் இல்லை, மேலும், அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை, தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ளுமாறு செய்கின்றான், அவனோ மிக்க மன்னிப்போன், மிகக் கிருபையுடையோன்.
10:108
10:108 قُلْ يٰۤاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ‌ۚ فَمَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِىْ لِنَفْسِهٖ‌ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا‌ۚ وَمَاۤ اَنَا عَلَيْكُمْ بِوَكِيْلٍؕ‏
قُلْ கூறுவீராக يٰۤاَيُّهَا النَّاسُ மக்களே قَدْ جَآءَ வந்து விட்டது كُمُ உங்களுக்கு الْحَـقُّ உண்மை مِنْ இருந்து رَّبِّكُمْ‌ۚ உங்கள் இறைவன் فَمَنِ எவர் اهْتَدٰى நேர்வழி சென்றார் فَاِنَّمَا يَهْتَدِىْ அவர் நேர்வழி செல்வதெல்லாம் لِنَفْسِهٖ‌ۚ தன் நன்மைக்காகவே وَمَنْ இன்னும் எவர் ضَلَّ வழிகெட்டார் فَاِنَّمَا يَضِلُّ அவர் வழிகெடுவதெல்லாம் عَلَيْهَا‌ۚ தனக்குக்கேடாகத்தான் وَمَاۤ இல்லை اَنَا நான் عَلَيْكُمْ உங்கள் மீது بِوَكِيْلٍؕ‏ பொறுப்பாளனாக
10:108. (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர் தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்.”
10:108. (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதைப் பின்பற்றாது) வழிதவறி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். மேலும், நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்க அதிகாரம் பெற்றவன் இல்லை.
10:108. (நபியே!) நீர் கூறுவீராக: “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்தியம் வந்துவிட்டது. ஆகவே, யாரேனும் நேரிய வழியை மேற்கொண்டால் அவருடைய நேர்வழி அவருக்கே நன்மை பயக்கும். யாரேனும் வழிகெட்டுப்போனால் அவனுடைய வழிகேடு அவனுக்கே தீங்கினை அளிக்கும்! மேலும், உங்களின் எந்த விஷயத்திற்கும் நான் பொறுப்பாளன் அல்லன்.”
10:108. நபியே! நீர் கூறுவீராக! “மனிதர்களே! நிச்சயமாக உங்களுடைய இரட்சகனிடமிருந்து இந்தச் சத்திய (வேதம்) உங்களிடம் வந்திருக்கிறது, ஆகவே, எவர் நேர் வழியில் செல்கின்றாரோ, அவர் (அந்)நேர் வழியில் செல்வதெல்லாம் தன(து நன்மை)க்காகவேதான், மேலும், எவர் வழிதவறுகின்றாரோ, அவர் வழி தவறுவதெல்லாம் அவருக்கே (கேடாகத்)தான், அன்றியும், (நீங்கள் விசுவாசிகளாக ஆவதற்கு) உங்களுக்கு நான் பொறுப்புடையவனல்லன்.”
10:109
10:109 وَاتَّبِعْ مَا يُوْحٰۤى اِلَيْكَ وَاصْبِرْ حَتّٰى يَحْكُمَ اللّٰهُ‌‌ ۖۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ‏
وَاتَّبِعْ பின்பற்றுவீராக مَا எது يُوْحٰۤى வஹீ அறிவிக்கப்படுகிறது اِلَيْكَ உமக்கு وَاصْبِرْ இன்னும் பொறுப்பீராக حَتّٰى வரை يَحْكُمَ தீர்ப்பளிப்பான் اللّٰهُ‌ ۖۚ அல்லாஹ் وَهُوَ அவன் خَيْرُ மிக மேலானவன் الْحٰكِمِيْنَ‏ தீர்ப்பளிப்பவர்களில்
10:109. (நபியே!) உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே பின்பற்றி நடந்து கொள்வீராக; அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் பொறுமையாகவும், உறுதியாகவும் இருப்பீராக! அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்.
10:109. (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றையே நீர் பின்பற்றி வருவீராக. அல்லாஹ் தீர்ப்பளிக்கின்ற வரை (எதிரிகளால் ஏற்படும் கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக்கொண்டிருப்பீராக. தீர்ப்பளிப்பவர்களில் அவன்தான் மிக்க மேலானவன்.
10:109. (நபியே!) வஹியின் வாயிலாக உமக்கு அனுப்பப்படுகின்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடப்பீராக! அல்லாஹ் தீர்ப்பு வழங்கும்வரை பொறுமையுடன் இருப்பீராக! மேலும், தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவனாவான்.
10:109. (நபியே!) உமக்கு (வஹீ மூலம்) அறிவிக்கப்படுகின்றவற்றையே நீர் பின்பற்றுவீராக! மேலும், அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரையில் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் சிறந்தவன்.