100. ஸூரத்துல் ஆதியாத்தி(வேகமாகச் செல்லுபவை)
மக்கீ, வசனங்கள்: 11

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
100:1
100:1 وَالْعٰدِيٰتِ ضَبْحًا ۙ‏
وَالْعٰدِيٰتِ அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக ضَبْحًا ۙ‏ மூச்சிரைக்க
100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
100:1. மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக!
100:1. மூச்சிறைக்கப் பாய்ந்து ஓடுகின்றவை (குதிரைகள்) மீது சத்தியமாக!
100:1. மூச்சிரைக்கும் சப்தத்தோடு (போர்க்களத்தில் எதிரிகளைத்தாக்க) அதிவேகமாக ஓடுகின்றவற்றின் (குதிரைகளின்) மீது சத்தியமாக!
100:2
100:2 فَالْمُوْرِيٰتِ قَدْحًا ۙ‏
فَالْمُوْرِيٰتِ இன்னும் (தீ) மூட்டுகின்ற குதிரைகள் قَدْحًا ۙ‏ தீப்பொறிகளை
100:2. பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
100:2. (அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும்.
100:2. பின்னர், குளம்புகளிலிருந்து தீப்பொறியை எழுப்புகின்ற
100:2. பின்னர், (செல்லும் வேகத்தில் அவற்றின் குளம்புகள் கற்களில் மோத) தீப்பொறியை பறக்கச் செய்பவற்றின் மீதும் சத்தியமாக!
100:3
100:3 فَالْمُغِيْرٰتِ صُبْحًا ۙ‏
فَالْمُغِيْرٰتِ இன்னும் பாய்கின்ற குதிரைகள் صُبْحًا ۙ‏ அதிகாலையில்
100:3. பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
100:3. இன்னும் அவை அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும்.
100:3. மேலும், அதிகாலையில் பாய்ந்து தாக்குதல் நடத்தி,
100:3. பிறகு, அதிகாலையில் வேகமாக (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக!
100:4
100:4 فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۙ‏
فَاَثَرْنَ இன்னும் கிளப்பின بِهٖ அதில் نَقْعًا ۙ‏ புழுதியை
100:4. மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
100:4. (அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப்போல்) புழுதியைக் கிளப்பும்.
100:4. அதனால் புழுதியினைக் கிளப்பி
100:4. (அதிகாலையில் அவ்வாறு அதி வேகமாகச் செல்லும்போது) அதனால் புழுதியை கிளப்புகின்றவற்றின் மீதும் சத்தியமாக!
100:5
100:5 فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۙ‏
فَوَسَطْنَ இன்னும் நடுவில் நுழைந்தன بِهٖ அதில் جَمْعًا ۙ‏ கூட்டத்திற்கு
100:5. அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
100:5. பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும்.
100:5. மேலும், ஏதேனும் கூட்டத்தின் நடுவில் நுழைந்துவிடுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக!
100:5. பின்னர் (எதிரிகளின்) படைகளுக்கு மத்தியில் செல்கின்றவற்றின் மீதும் சத்தியமாக!
100:6
100:6 اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَـكَنُوْدٌ ۚ‏
اِنَّ நிச்சயமாக الْاِنْسَانَ மனிதன் لِرَبِّهٖ தன் இறைவனுக்கு لَـكَنُوْدٌ ۚ‏ நன்றி கெட்டவன்
100:6. நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
100:6. (இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவன் ஆவான்.
100:6. உண்மையில் மனிதன் தன் இறைவனுக்கு மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
100:6. நிச்சயமாக மனிதன் தன் இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.
100:7
100:7 وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيْدٌ ۚ‏
وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன் عَلٰى ذٰلِكَ அதற்கு لَشَهِيْدٌ ۚ‏ சாட்சி
100:7. அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
100:7. நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாவான்.
100:7. அவனே அதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்
100:7. மேலும், நிச்சயமாக அவனே இதற்கு சாட்சியாகவும் இருக்கின்றான்.
100:8
100:8 وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ‏
وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக அவன் لِحُبِّ நேசிப்பதில் الْخَيْرِ செல்வத்தை لَشَدِيْدٌ ؕ‏ உறுதியாக கடினமானவன்
100:8. இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
100:8. நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான்.
100:8. மேலும், அவன் செல்வத்தின் மீது அளவு கடந்து மோகம் கொண்டிருக்கின்றான்.
100:8. இன்னும், நிச்சயமாக (மனிதனாகிய) அவன், செல்வத்தை விரும்புவதில் மிகக் கடுமையானவனாக இருக்கின்றான்.
100:9
100:9 اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ‏
اَفَلَا يَعْلَمُ அவன் அறியவேண்டாமா? اِذَا بُعْثِرَ எழுப்பப்படும்போது مَا فِى الْقُبُوْرِۙ‏ புதை குழிகளில் உள்ளவர்கள்
100:9. அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
100:9,10,9. அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
100:9. மண்ணறைகளில் (அடக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிக்கொணரப்படும் நேரத்தையும்;
100:9. அவன் அறிந்துகொள்ள வேண்டாமா? மண்ணறைகளிலுள்ளவை (எழுப்பப்பட்டு) வெளியேற்றப்பட்டுவிடும்போது-
100:10
100:10 وَحُصِّلَ مَا فِى الصُّدُوْرِۙ‏
وَحُصِّلَ இன்னும் பிரித்தறியப்படும் مَا فِى الصُّدُوْرِۙ‏ நெஞ்சங்களில் உள்ளவை
100:10. மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
100:9,10,10. அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவையெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?
100:10. மேலும், நெஞ்சங்களில் (மறைக்கப்பட்டு) உள்ளவை அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படும் நேரத்தையும் அவன் அறியமாட்டானா?
100:10. இதயங்களிலுள்ளவையும் வெளியாக்கப்பட்டுவிடும்போது,
100:11
100:11 اِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَٮِٕذٍ لَّخَبِيْرٌ‏
اِنَّ நிச்சயமாக رَبَّهُمْ அவர்களுடைய இறைவன் بِهِمْ அவர்களை يَوْمَٮِٕذٍ அந்நாளில் لَّخَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
100:11. நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.
100:11. நிச்சயமாக மனிதர்களுடைய இறைவன் (தீயவன் யார்? நல்லவன் யார்? என்று) அவர்களை அந்நாளில் நன்கு அறிந்து கொள்வான்.
100:11. திண்ணமாக, அந்நாளில் அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி நன்கறிந்தவனாக இருப்பான்.
100:11. நிச்சயமாக அவர்களின் இரட்சகன், அவர்களைப்பற்றி அந்நாளில் நன்கு உணர்பவன் (ஆகவே, நன்மைக்கு நற்கூலியும், தீமைக்கு தண்டனையும் வழங்குவான்).