103. ஸூரத்துல் அஸ்ரி (காலம்)
மக்கீ, வசனங்கள்: 3

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
103:1
103:1 وَالْعَصْرِۙ‏
وَالْعَصْرِۙ‏ காலத்தின் மீது சத்தியமாக
103:1. காலத்தின் மீது சத்தியமாக.
103:1. காலத்தின் மீது சத்தியமாக!
103:1. காலத்தின் மீது சத்தியமாக!
103:1. காலத்தின் மீது சத்தியமாக!
103:2
103:2 اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ‏
اِنَّ الْاِنْسَانَ நிச்சயமாக மனிதன் لَفِىْ خُسْرٍۙ‏ நஷ்டத்தில்தான்
103:2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.
103:2. (தன் ஆயுளை வீணில் செலவு செய்து) நிச்சயமாக மனிதன் நஷ்டமடைந்து விட்டான்.
103:2. மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான்.
103:2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
103:3
103:3 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ   ۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ‏
اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَ عَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்களை وَتَوَاصَوْا இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள் بِالْحَقِّ   ۙ உண்மையை وَتَوَاصَوْا இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள் بِالصَّبْرِ‏ பொறுமையை
103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
103:3. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து (பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் சிரமங்களைச்) சகித்துக் கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).
103:3. ஆனால், எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும் மேலும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர!
103:3. விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்து, சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், (பாவங்களை விடுவதிலும், நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத் தவிர,