107. ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)
மக்கீ, வசனங்கள்: 7

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
107:1
107:1 اَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ‏
اَرَءَيْتَ பார்த்தீரா? الَّذِىْ يُكَذِّبُ பொய்ப்பிப்பவனை بِالدِّيْنِؕ‏ கூலி கொடுக்கப்படுவதை
107:1. (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
107:1. (நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
107:1. மறுமையில் நற்கூலி, தண்டனை கொடுக்கப்படுவதைப் பொய்யென்று கூறுபவனை நீர் பார்த்திருக்கிறீரா?
107:1. (நபியே! மறுமையில் நல்லவற்றுக்கு நற்கூலியும், தீயவைக்கு தண்டனையும் வழங்கப்படும்) நியாயத்தீர்ப்பை பொய்யாக்குவோனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
107:2
107:2 فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ‏
فَذٰلِكَ ஆகவே அவன் الَّذِىْ எவன் يَدُعُّ விரட்டுகிறான் الْيَتِيْمَۙ‏ அநாதையை
107:2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
107:2. (ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.
107:2. அவன்தான் அநாதையை மிரட்டி விரட்டுகின்றான்.
107:2. ஆகவே அத்தகையோனே அநாதைகளை (ஈவிரக்கமின்றி) விரட்டுகிறான்.
107:3
107:3 وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ‏
وَ لَا يَحُضُّ இன்னும் தூண்ட மாட்டான் عَلٰى طَعَامِ உணவிற்கு الْمِسْكِيْنِؕ‏ ஏழையின்
107:3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
107:3. அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.
107:3. மேலும், வறியவரின் உணவை அளிக்கும்படித் தூண்டுவதில்லை.
107:3. அவன் ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதுமில்லை.
107:4
107:4 فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏
فَوَيْلٌ ஆக, கேடுதான் لِّلْمُصَلِّيْنَۙ‏ தொழுகையாளிகளுக்கு
107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
107:4. (கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.
107:4. மேலும் கேடுதான், தொழுகையாளிகளுக்கு!
107:4. எனவே, தொழுகையாளிகளுக்கு கேடுதான்.
107:5
107:5 الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏
الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் عَنْ صَلَاتِهِمْ தங்கள் தொழுகையை விட்டு سَاهُوْنَۙ‏ மறந்தவர்கள்
107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
107:5. அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
107:5. அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள்
107:5. அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையை (நிறைவேற்றுவதை)விட்டும் பராமுகமாக இருப்போர்.
107:6
107:6 الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ‏
الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் يُرَآءُوْنَۙ‏ பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்
107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
107:6. (மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.
107:6. அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள்.
107:6. அத்தகையோர்தான் (மற்றவர்களுக்குக்) காண்பிக்(கவே தொழு)கிறார்கள்.
107:7
107:7 وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ‏
وَيَمْنَعُوْنَ இன்னும் தடுக்கிறார்கள் الْمَاعُوْنَ‏ சிறிய பொருளை
107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.
107:7. (மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.
107:7. மேலும், சாதாரணத் தேவைகளுக்கான பொருள்களைக் கூட (மக்களுக்குக்) கொடுத்துதவுவதைத் தடுக்கின்றார்கள்.
107:7. மேலும், (அன்றாடம் உபயோகமாகும்) அற்பமான பொருட்களை (மற்றவர்களுக்குக் கொடுப்பதைவிட்டும்) தடுக்கிறார்கள்.