114. ஸூரத்துந் நாஸ்(மனிதர்கள்)
மக்கீ, வசனங்கள்: 6

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
114:1
114:1 قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ‏
قُلْ கூறுவீராக اَعُوْذُ பாதுகாப்புத் தேடுகிறேன் بِرَبِّ இறைவனிடம் النَّاسِۙ‏ மக்களின்
114:1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:1. (நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
114:1. கூறுவீராக! மக்களின் அதிபதியிடம் நான் பாதுகாப்பு தேடுகின்றேன்;
114:1. (நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
114:2
114:2 مَلِكِ النَّاسِۙ‏
مَلِكِ அரசன் النَّاسِۙ‏ மக்களின்
114:2. (அவனே) மனிதர்களின் அரசன்;
114:2. (அவன்தான்) மனிதர்களின் (உண்மையான) அரசன்.
114:2. மக்களின் மன்னனிடம்
114:2. (அவன்தான்) மனிதர்களின் அரசன்.
114:3
114:3 اِلٰهِ النَّاسِۙ‏
اِلٰهِ வணக்கத்திற்குரியவன் النَّاسِۙ‏ மக்களின்
114:3. (அவனே) மனிதர்களின் நாயன்.
114:3. (அவனே) மனிதர்களின் வணக்கத்திற்குரிய உண்மையான இறைவன்.
114:3. மக்களின் உண்மையான இறைவனிடம் (நான் பாதுகாப்பு தேடுகின்றேன்;)
114:3. (அவனே) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) நாயன்.
114:4
114:4 مِنْ شَرِّ الْوَسْوَاسِ  ۙ الْخَـنَّاسِ ۙ‏
مِنْ شَرِّ தீங்கைவிட்டும் الْوَسْوَاسِ  ۙ வீண் எண்ணங்களை ஏற்படுத்துபவன் الْخَـنَّاسِ ۙ‏ மறைந்து கொள்பவன்
114:4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
114:4,5,4. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
114:4. திரும்பத் திரும்ப வந்து ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின் தீங்கிலிருந்து.
114:4. பின்னால் பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களைக் கிளப்பக் கூடியவ(னான ஷைத்தா)னின் தீங்கைவிட்டும் (நான் பாதுகாவல் தேடுகிறேன்)
114:5
114:5 الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏
الَّذِىْ يُوَسْوِسُ வீண் எண்ணங்களை ஏற்படுத்துகின்றான் فِىْ صُدُوْرِ உள்ளங்களில் النَّاسِۙ‏ மக்களுடைய
114:5. அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
114:4,5,5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
114:5. அவன் எத்தகையவன் எனில், மனிதர்களின் உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்துகின்றான்.
114:5. அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களைக் கிளப்பிவிடுகிறான்.
114:6
114:6 مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ‏
مِنَ الْجِنَّةِ ஜின்களிலிருந்தும் وَالنَّاسِ‏ இன்னும் மனிதர்கள்
114:6. (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
114:6. (அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.
114:6. அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயினும் மனித இனத்தைச் சேர்ந்தவனாயினும் சரியே.
114:6. (இத்தகையோர்) ஜின்களில் மற்றும் மனிதர்களில் இருக்கின்றனர்.