14. ஸூரத்து இப்ராஹீம்
மக்கீ, வசனங்கள்: 52

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
14:1
14:1 الۤرٰ‌ كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ لِـتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ  ۙ بِاِذْنِ رَبِّهِمْ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ‏
الۤرٰ‌ அலிஃப்; லாம்; றா. كِتٰبٌ ஒரு வேதம் اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் اِلَيْكَ உம்மீது لِـتُخْرِجَ நீர் வெளியேற்றுவதற்காக النَّاسَ மக்களை مِنَ الظُّلُمٰتِ இருள்களிலிருந்து اِلَى النُّوْرِ  ۙ பக்கம்/ஒளியின் بِاِذْنِ அனுமதி கொண்டு رَبِّهِمْ அவர்களுடைய இறைவனின் اِلٰى பக்கம் صِرَاطِ பாதையின் الْعَزِيْزِ மிகைத்தவன் الْحَمِيْدِۙ‏ மகா புகழாளன்
14:1. அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).
14:1. அலிஃப் லாம் றா. (நபியே! இது) வேத நூல். இதை நாமே உம்மீது இறக்கியிருக்கிறோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்கள் இறைவனின் கட்டளைப்படி இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வருவீராக! (அந்த ஒளியோ) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய) அனைவரையும் மிகைத்தவனின் நேரான வழியாகும்.
14:1. அலிஃப், லாம், றா. (முஹம்மதே!) இது ஒரு வேதமாகும். இதனை உம்மீது நாம் இறக்கியுள்ளோம்; மக்களை, அவர்களுடைய இறைவனின் உதவி கொண்டு இருளிலிருந்து வெளியேற்றி, ஒளியின் பக்கம் நீர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக! (அதாவது) யாவற்றையும் மிகைத்தோனும் தனக்குத்தானே புகழுக்குரியோனுமாகிய அல்லாஹ்வின் பாதையின்பால் (கொண்டுவர வேண்டும் என்பதற்காக).
14:1. அலிஃப் லாம் றா (நபியே! இது) வேதமாகும், (இதன் மூலம்) மனிதர்களை அவர்களுடைய இரட்சகனின் அனுமதி கொண்டு இருள்களிலிருந்து பிரகாசத்தின்பால்-(சகலரையும்) மிகைத்தோன், புகழுக்குரியோன் ஆகியவனின் பாதையின்பால்-நீர் வெளியேற்றுவதற்காக இ(வ்வேதத்)தை நாமே உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம்.
14:2
14:2 اللّٰهِ الَّذِىْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَوَيْلٌ لِّـلْكٰفِرِيْنَ مِنْ عَذَابٍ شَدِيْدِ ۙ‏
اللّٰهِ அல்லாஹ் الَّذِىْ எத்தகையவன் لَهٗ அவனுக்கே مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ‌ؕ பூமியில் உள்ளவை وَوَيْلٌ கேடு உண்டாகுக! لِّـلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு مِنْ عَذَابٍ வேதனையின் شَدِيْدِ ۙ‏ கடினமானது
14:2. அல்லாஹ் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.
14:2. அந்த அல்லாஹ் (எத்தகையவனென்றால்) வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவையே! ஆகவே, (இதை) நிராகரிப்பவர்களுக்கு வந்தடையும் கடினமான வேதனையின் காரணமாக (அவர்களுக்குப்) பெரும்கேடுதான்.
14:2. மேலும், வானங்கள் பூமியிலுள்ள அனைத்துக்கும் உரியவனுமாகிய அல்லாஹ்வின் பாதையின்பால் (கொண்டுவர வேண்டும் என்பதற்காக). சத்தியத்தை ஏற்க மறுப்பவர்களுக்கு அழிவைத் தரும் கடும் தண்டனை இருக்கிறது;
14:2. (அவனே) அல்லாஹ், (அவன்) எத்தகையவனென்றால் வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன, மேலும், (இதனை) நிராகரிப்போருக்கு கடினமான வேதனையின் காரணமாக பெருங்கேடுதான்.
14:3
14:3 اۨلَّذِيْنَ يَسْتَحِبُّوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا عَلَى الْاٰخِرَةِ وَيَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَبْغُوْنَهَا عِوَجًا‌ ؕ اُولٰۤٮِٕكَ فِىْ ضَلٰلٍۢ بَعِيْدٍ‏
اۨلَّذِيْنَ எவர்கள் يَسْتَحِبُّوْنَ விரும்புவார்கள் الْحَيٰوةَ வாழ்வை الدُّنْيَا உலகம் عَلَى الْاٰخِرَةِ மறுமையை விட وَيَصُدُّوْنَ இன்னும் தடுப்பார்கள் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ அல்லாஹ்வின் وَيَبْغُوْنَهَا இன்னும் தேடுகின்றனர்/அதில் عِوَجًا‌ ؕ اُولٰۤٮِٕكَ கோணலை/இவர்கள் فِىْ ضَلٰلٍۢ வழிகேட்டில் بَعِيْدٍ‏ தூரமானது
14:3. இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே (அதிகமாக) நேசிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் வழியை விட்டும் (மற்றவர்களையும்) தடுக்கின்றார்கள்; அது கோணலாக (இருக்க வேண்டுமென) விரும்புகிறார்கள் - இவர்கள் மிகவும் தூரமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.
14:3. இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே விரும்புகின்றனர். அல்லாஹ்வுடைய வழியில் (அவர்கள் செல்லாததுடன், மற்றவர்களையும் அதில் செல்லாது) தடுத்துக்கொண்டு அதில் கோணலையும் உண்டுபண்ணுகின்றனர். இவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
14:3. அவர்கள் எத்தகையவர்களெனில் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கைக்கு முன்னுரிமை வழங்குகிறார்கள்; மேலும், அல்லாஹ்வின் வழியிலிருந்து மக்களைத் தடுக்கிறார்கள். அவ்வழி (தங்கள் விருப்பப்படி) கோணலாகிவிட வேண்டும் என்று நாடுகிறார்கள். இத்தகையவர்கள் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டிருக்கிறார்கள்.
14:3. (நிராகரிப்போராகிய) அவர்கள் எத்தகையோரென்றால் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே விரும்புகின்றனர், அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் (மற்றவர்களை) தடுக்கின்றனர், (அப்பாதை மிகச் சரியானதாயிருக்க) அதை கோணலுடையதாகவும் தேடுகின்றனர், அவர்கள் வெகுதூரமான வழிகேட்டிலிருக்கின்றனர்.
14:4
14:4 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ‌ؕ فَيُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை مِنْ رَّسُوْلٍ எந்த ஒரு தூதரை اِلَّا தவிர بِلِسَانِ மொழியைக் கொண்டே قَوْمِهٖ அவருடைய மக்களின் لِيُبَيِّنَ அவர் தெளிவுபடுத்துவதற்காக لَهُمْ‌ؕ அவர்களுக்கு فَيُضِلُّ ஆகவேவழிகெடுக்கிறான் اللّٰهُ அல்லாஹ் مَنْ எவரை يَّشَآءُ நாடுவான் وَيَهْدِىْ இன்னும் நேர்வழி செலுத்துகிறான் مَنْ يَّشَآءُ‌ ؕ எவரை/நாடுவான் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
14:4. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
14:4. (நபியே!) ஒவ்வொரு தூதரும் தன் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அந்தந்த மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம். (அந்தத் தூதர்கள் எவ்வளவு முயற்சித்த போதிலும் அவர்கள் செய்யும் நன்மை தீமைக்குத் தக்கவாறு) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டுவிடுகிறான். (நற்செயல்கள் செய்யும்) அவன் விரும்புகிறவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். அவன் அனைத்தையும் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.
14:4. தூதர்கள் அனைவரையும், அவரவரின் சமுதாய மொழியிலேயே தூதுச் செய்தி அறிவிப்பவர்களாய் நாம் அனுப்பி வைத்தோம் (செய்தியை) அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாக அவர் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக! பின்னர் அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிபிறழச் செய்கின்றான்; நாடுகின்றவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான்.
14:4. மேலும், (நபியே! ஒவ்வொரு சமூகத்தார்க்கும்) அவர்களுக்கு (நம் தூதுத்துவத்தை) அவர் விளக்கிக் கூறுவதற்காக, எந்த ஒரு தூதரையும் அவ(ரவ)ருடைய சமூகத்தாரின் மொழியைக் கொண்டேயல்லாது நாம் அனுப்பவில்லை, (ஆகவே) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டு விடுகிறான், மேலும், அவன் நாடியவர்களை நேர் வழியில் செலுத்துகிறான், அவனே (யாவற்றையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
14:5
14:5 وَلَـقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَاۤ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ ۙ وَذَكِّرْهُمْ بِاَيّٰٮمِ اللّٰهِ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لّـِكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ‏
وَلَـقَدْ اَرْسَلْنَا திட்டமாக அனுப்பினோம் مُوْسٰى மூஸாவை بِاٰيٰتِنَاۤ நம் அத்தாட்சிகளைக் கொண்டு اَنْ اَخْرِجْ வெளியேற்று قَوْمَكَ உம் சமுதாயத்தை مِنَ الظُّلُمٰتِ இருள்களிலிருந்து اِلَى النُّوْرِ ۙ ஒளியின் பக்கம் وَذَكِّرْ இன்னும் ஞாபகமூட்டு هُمْ அவர்களுக்கு بِاَيّٰٮمِ அருட்கொடைகளை اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّ فِىْ ذٰ لِكَ நிச்சயமாக/இதில் لَاٰيٰتٍ அத்தாட்சிகள் لّـِكُلِّ எல்லோருக்கும் صَبَّارٍ மிக பொறுமையாளர் شَكُوْرٍ‏ மிக நன்றியறிபவர்
14:5. நிச்சயமாக, நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பிவைத்து, “நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து, வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் கொண்டு வாரும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக” என்று கட்டளையிட்டோம்; நிச்சயமாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் எல்லோருக்கும் படிப்பினைகள் இருக்கின்றன.
14:5. நிச்சயமாக நாம் மூஸாவை நம் பல அத்தாட்சிகளுடன் அனுப்பிவைத்து “நீங்கள் உமது மக்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவீராக. அல்லாஹ்வி(ன் கட்டளையி)னால் ஏற்பட்ட பல சம்பவங்களை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக'' (என்று அவருக்குக் கட்டளையிட்டோம்.) (கஷ்டங்களைச்) சகித்துப் பொறுமையுடன் இருப்பவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
14:5. (இதற்கு முன்பு) மூஸாவையும் நம்முடைய சான்றுகளுடன் அனுப்பி, “உம் சமுதாயத்தினரை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வாரும்; மேலும், அல்லாஹ்வின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களை நினைவூட்டி, அவர்களுக்கு அறிவுரை வழங்கும்!” என்று கட்டளையிட்டிருந்தோம். பொறுமையாளராகவும் நன்றி செலுத்துபவராகவும் திகழும் ஒவ்வொருவருக்கும் இந்தச் சம்பவங்களில் பல சான்றுகள் இருக்கின்றன.
14:5. திட்டமாக நாம் மூஸாவை நம்முடைய பல அத்தாட்சிகளுடன் அனுப்பிவைத்து, நீர் உம் சமூகத்தாரை இருள்களிலிருந்து பிரகாசத்தின்பால் வெளியேற்றுவீராக! இன்னும், (சென்றுவிட்ட சமூகத்தாரில் அருட்கொடைகளாலும், தண்டனைகளாலும் நிறைய பெற்ற) அல்லாஹ்வின் (அந்)நாட்களை அவர்களுக்கு நீர் நினைவூட்டுவீராக” (என்று அவருக்கு நாம் ஏவினோம்.) மிகுந்த பொறுமையுடனிருப்போர், அதிக நன்றி செலுத்துவோர் ஆகிய ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
14:6
14:6 وَاِذْ قَالَ مُوْسٰى لِـقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ اَنْجٰٮكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَسُوْمُوْنَـكُمْ سُوْۤءَ الْعَذَابِ وَ يُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَيَسْتَحْيُوْنَ نِسَآءَكُمْ‌ ؕ وَفِىْ ذٰ لِكُمْ بَلَاۤ ءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِيْمٌ‏
وَاِذْ قَالَ கூறிய சமயம் مُوْسٰى மூஸா لِـقَوْمِهِ தன் சமுதாயத்திற்கு اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَةَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது اِذْ போது اَنْجٰٮكُمْ உங்களை காப்பாற்றினான் مِّنْ இருந்து اٰلِ கூட்டம் فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய يَسُوْمُوْنَـكُمْ சிரமம் தந்தார்கள்/உங்களுக்கு سُوْۤءَ الْعَذَابِ கடினமான வேதனையால் وَ يُذَبِّحُوْنَ இன்னும் அறுத்தார்கள் اَبْنَآءَ ஆண் பிள்ளைகளை كُمْ உங்கள் وَيَسْتَحْيُوْنَ இன்னும் வாழவிட்டார்கள் نِسَآءَ பெண்(பிள்ளை)களை كُمْ‌ ؕ உங்கள் وَفِىْ ذٰ لِكُمْ இன்னும் இதில் بَلَاۤ ءٌ ஒரு சோதனை مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் عَظِيْمٌ‏ மகத்தானது
14:6. மூஸா தம் சமூகத்தாரிடம்: ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது” என்று கூறினார்.
14:6. மூஸா தன் மக்களை நோக்கிக் கூறிய சமயத்தில் ‘‘அல்லாஹ் உங்களுக்குப் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்: அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றினான். அவர்களோ உங்களுக்குக் கொடிய நோவினை செய்துகொண்டு வந்ததுடன், உங்கள் ஆண்பிள்ளையை வதை செய்து பெண் பிள்ளையை (மட்டும்) உயிருடன் வாழ விட்டுக் கொண்டுமிருந்தார்கள். இதில் உங்கள் இறைவனால் உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது'' (என்று கூறினார்.)
14:6. மூஸா தம்முடைய சமூகத்தாரிடம் இவ்வாறு கூறியதை நினைவு கூருங்கள்: “அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள பேருதவிகளை நினைத்துப் பாருங்கள்! உங்களுக்குக் கடுமையான துன்பம் இழைத்துக் கொண்டும், உங்கள் ஆண்மக்களைக் கொலை செய்து கொண்டும், உங்கள் பெண்மக்களை உயிருடன் விட்டு வைத்துக் கொண்டும் இருந்த ஃபிர்அவ்னின் ஆட்களிடமிருந்து அவன் உங்களை விடுவித்தான்! இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.
14:6. மூஸா தன் சமூகத்தாரிடம்,“ அல்லாஹ் உங்கள் மீது – அவன் உங்களை ஃபிர் அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றியபொழுது – புரிந்திருக்கும் அருட்கொடையை நினைத்துப் பாருங்கள், அவர்கள் உங்களை கொடிய வேதனை செய்து கொண்டிருந்தார்கள், மேலும், உங்கள் ஆண் மக்களை அறுத்(துக் கொலை செய்)தும் பெண் மக்களை (உயிருடன் வாழ)விட்டும் விட்டார்கள், இதில் உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்குப் பெரும்சோதனை ஏற்பட்டிருந்தது” என்றும் கூறியதை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக!
14:7
14:7 وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَٮِٕنْ شَكَرْتُمْ لَاَزِيْدَنَّـكُمْ‌ وَلَٮِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِىْ لَشَدِيْدٌ‏
وَاِذْ تَاَذَّنَ இன்னும் அறிவித்த சமயம் رَبُّكُمْ உங்கள் இறைவன் لَٮِٕنْ شَكَرْتُمْ நீங்கள்நன்றி செலுத்தினால் لَاَزِيْدَنَّـكُمْ‌ அதிகப்படுத்துவேன்/ உங்களுக்கு وَلَٮِٕنْ كَفَرْتُمْ நீங்கள் நிராகரித்தால் اِنَّ நிச்சயமாக عَذَابِىْ என் வேதனை لَشَدِيْدٌ‏ கடுமையானதுதான்
14:7. “(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).
14:7. உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, ‘‘இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என் அருளை மேலும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என் அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என் வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக.
14:7. மேலும், உங்கள் இறைவன் இவ்வாறு அறிவித்திருந்ததையும் நினைவு கூருங்கள்: “நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் நிச்சயம் நான் உங்களுக்கு மேன்மேலும் வழங்குவேன்; நீங்கள் நன்றி கொல்வீர்களாயின் திண்ணமாக எனது தண்டனை மிகக்கடுமையானதாகும்.”
14:7. அன்றியும் உங்கள் இரட்சகன் (இதற்காக) நீங்கள் (எனக்கு)நன்றி செலுத்தினால் (என் அருளை) நிச்சயமாக உங்களுக்கு அதிகப்படுத்துவேன், இன்னும், நீங்கள் மாறு செய்தீர்களானால், நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடினமானது” என்று அறிவித்ததையும் (நபியே!) நீர் நினைவு கூர்வீராக!
14:8
14:8 وَقَالَ مُوْسٰٓى اِنْ تَكْفُرُوْۤا اَنْـتُمْ وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا ۙ فَاِنَّ اللّٰهَ لَـغَنِىٌّ حَمِيْدٌ‏
وَقَالَ கூறினார் مُوْسٰٓى மூஸா اِنْ تَكْفُرُوْۤا நீங்கள் நிராகரித்தால் اَنْـتُمْ நீங்கள் وَمَنْ இன்னும் எவர் فِى الْاَرْضِ பூமியில் جَمِيْعًا ۙ அனைவரும் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَـغَنِىٌّ நிறைவானவன் حَمِيْدٌ‏ மகா புகழாளன்
14:8. மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) “நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது;) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்” என்றும் கூறினார்.
14:8. இன்னும், மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘நீங்களும் உலகிலுள்ள மக்கள் அனைவரும் (இறைவனுக்கு முற்றிலும்) மாறு செய்தபோதிலும் (அவனுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (எவருடைய உதவியும்) தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்'' என்றும் கூறினார்.
14:8. மேலும், மூஸா கூறினார்: “நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்றால், ஏன் பூமியில் உள்ள அனைவருமே நிராகரிப்பாளர்களாய் ஆகிவிட்டாலும் கூட திண்ணமாக அல்லாஹ் தேவைகளற்றவனாகவும் தனக்குத்தானே புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான்.”
14:8. இன்னும், மூஸா (தன் சமூகத்தாரிடம்) “நீங்களும் பூமியிலுள்ள (மனிதர்கள்) அனைவரும் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவன், புகழப்படுபவன்” என்றும் கூறினார்.
14:9
14:9 اَلَمْ يَاْتِكُمْ نَبَـؤُا الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ‌  ۛؕ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْ ‌ۛؕ لَا يَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ‌ؕ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرَدُّوْۤا اَيْدِيَهُمْ فِىْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْـتُمْ بِهٖ وَاِنَّا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَـنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ‏
اَلَمْ يَاْتِكُمْ உங்களுக்கு வரவில்லையா? نَبَـؤُا சரித்திரம் الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் قَوْمِ மக்கள் نُوْحٍ நூஹூடைய وَّعَادٍ இன்னும் ஆது وَّثَمُوْدَ‌  ۛؕ ஸமூது وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் مِنْۢ بَعْدِهِمْ ۛؕ அவர்களுக்குப் பின்னர் لَا அறியமாட்டார் يَعْلَمُهُمْ அவர்களை اِلَّا தவிர اللّٰهُ‌ؕ அல்லாஹ் جَآءَتْهُمْ வந்தா(ர்க)ள்/அவர்களிடம் رُسُلُهُمْ தூதர்கள்/ அவர்களுடைய بِالْبَيِّنٰتِ தெளிவான சான்றுகளைக் கொண்டு فَرَدُّوْۤا திருப்பினர் اَيْدِيَهُمْ கைகளை/தங்கள் اَفْوَاهِهِمْ தங்கள் وَقَالُوْۤا இன்னும் கூறினர் اِنَّا நிச்சயமாக நாங்கள் كَفَرْنَا நிராகரித்தோம் بِمَاۤ எதைக் கொண்டு اُرْسِلْـتُمْ நீங்கள் அனுப்பப்பட்டீர்களோ بِهٖ அதைக் கொண்டு وَاِنَّا இன்னும் நிச்சயமாக நாங்கள் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّمَّا تَدْعُوْنَـنَاۤ எதில்/அழைக்கிறீர்கள்/எங்களை اِلَيْهِ அதன் பக்கம் مُرِيْبٍ‏ ஆழமான சந்தேகம்
14:9. உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
14:9. உங்களுக்கு முன்னர் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரம் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்க(ளின் விபரங்க)ளை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிந்துகொள்ள முடியாது. அந்த மக்களிடம் அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்(து நேரான வழிக்கு ‘‘வாருங்கள் வாருங்கள்'' என்று தங்கள் இரு கைகளையும் விரித்து அழைத்)த சமயத்தில், அவர்களுடைய கைகளை அவர்களுடைய வாயின் பக்கமே தட்டிவிட்டு (அவர்களை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் (இறைவனின் கட்டளை என்று) நீங்கள் கொண்டு வந்திருப்பதை நிராகரிக்கிறோம். நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று கூறினார்கள்.
14:9. உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமுதாயங்களின் செய்தி நூஹுடைய சமுதாயத்தினர் ஆத் மற்றும் ஸமூத் எனும் சமுதாயத்தினர், இன்னும் அவர்களுக்குப்பின் வந்த (ஏராளமான சமூகத்த)வர்களுடைய செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வே அறிவான். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது அவர்கள் தம் வாயில் கைகளை வைத்துக் கொண்டு கூறினார்கள்: “நீங்கள் எந்தச் செய்தியோடு அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதனைத் திண்ணமாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், நீங்கள் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீர்களோ அதைக் குறித்து நாங்கள் கடும் சந்தேகத்தில் உழன்று கொண்டிருக்கிறோம்.”
14:9. உங்களுக்கு முன்னர் இருந்தவர்களில் நூஹ், ஆது, ஸமூது ஆகிய சமூகத்தாருடையவும், அவர்களுக்குப் பின்னர் உள்ளவர்களுடையவும் செய்தி(கள்) உங்களுக்கு வரவில்லையா? அவர்(களின் விபரங்)களை அல்லாஹ்வைத் தவிர (மற்றெவரும்) அறிய மாட்டார், (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்தார்கள், நேரான வழிக்கு வாருங்கள் என்று அழைத்த சமயத்தில் அவர்களுடைய கைகளை அவர்களின் வாய்களின் பக்கமே கொண்டு சென்று (தூதர்களின் கூற்றை மறுத்து அவர்களிடம்,) “நிச்சயமாக நீங்கள் எதைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம், அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கின்றீர்களோ, அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்திலிருக்கிறோம்” என்றும் கூறினார்கள்.
14:10
14:10 قَالَتْ رُسُلُهُمْ اَفِى اللّٰهِ شَكٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ يَدْعُوْكُمْ لِيَـغْفِرَ لَـكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُؤَخِّرَكُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌ؕ قَالُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَاؕ تُرِيْدُوْنَ اَنْ تَصُدُّوْنَا عَمَّا كَانَ يَعْبُدُ اٰبَآؤُنَا فَاْتُوْنَا بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏
قَالَتْ கூறினா(ர்க)ள் رُسُلُهُمْ தூதர்கள்/ அவர்களுடைய اَفِى اللّٰهِ அல்லாஹ்வின் விஷயத்திலா? شَكٌّ சந்தேகம் فَاطِرِ படைப்பாளனாகிய السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி يَدْعُوْكُمْ அழைக்கிறான்/ உங்களை لِيَـغْفِرَ மன்னிப்பதற்காக لَـكُمْ உங்களுக்கு مِّنْ ذُنُوْبِكُمْ உங்கள் குற்றங்களை وَيُؤَخِّرَ இன்னும் விட்டு வைப்பதற்கு كُمْ உங்களை اِلٰٓى வரை اَجَلٍ ஒரு காலம் مُّسَمًّى‌ؕ குறிக்கப்பட்டது قَالُوْۤا கூறினர் اِنْ اَنْتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர بَشَرٌ மனிதர்களே مِّثْلُنَاؕ எங்களைப் போன்ற تُرِيْدُوْنَ நாடுகிறீர்கள் تَصُدُّوْنَا எங்களை عَمَّا எவற்றை விட்டு كَانَ يَعْبُدُ வணங்கிக் கொண்டிருந்தார் اٰبَآؤُنَا மூதாதைகள்/எங்கள் فَاْتُوْنَا ஆகவே வாருங்கள்/நம்மிடம் بِسُلْطٰنٍ ஆதாரத்தைக் கொண்டு مُّبِيْنٍ‏ தெளிவானது
14:10. அதற்கு, (இறைவன் அனுப்பிய) அவர்களுடைய தூதர்கள் “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்” என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை; எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்” எனக் கூறினார்கள்.
14:10. அதற்கு, அவர்களிடம் வந்த தூதர்கள் (அவர்களை நோக்கி) ‘‘வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்குச்) சந்தேகம்? அவன் உங்கள் குற்றங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கிறான். (அவனுக்கு பணிந்து வழிப்பட்டால்) ஒரு நீண்ட காலம் வரை உங்களை(ப் பூமியில் சுகமாக வாழ்ந்திருக்க) விட்டு வைப்பான்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள், நீங்கள் நம்மைப் போன்ற (சாதாரண) மனிதர்களே தவிர வேறில்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டு எங்களைத் தடை செய்யவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவ்வாறாயின் (அதற்குரிய) தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்.
14:10. தூதர்கள் கூறினார்கள்: “வானங்கள், பூமியின் படைப்பாளனாகிய இறைவனைக் குறித்தா உங்களுக்குச் சந்தேகம்? உங்கள் குற்றங்களை மன்னிக்கவும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு அவகாசம் அளிக்கவும் அவன் உங்களை அழைத்துக் கொண்டிருக்கிறான்.” அதற்கு அந்த மக்கள் கூறினார்கள்: “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களே தவிர வேறு ஒன்றுமில்லை. எங்கள் மூதாதையர் எவற்றை வணங்கி வந்தார்களோ அவற்றை நாங்கள் வணங்குவதிலிருந்து எங்களைத் தடுக்கவே நீங்கள் விரும்புகிறீர்கள். அப்படியானால் ஒரு தெளிவான சான்றினைக் கொண்டு வாருங்கள்!”
14:10. அதற்கு, அவர்களுடைய தூதர்கள் (அவர்களிடம்), “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா சந்தேகம்? உங்களுடைய குற்றங்களை உங்களுக்கு மன்னிப்பதற்காக உங்களை அவன் அழைக்கிறான். ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை (வாழ்ந்திருக்க) பிற்படுத்தியும் வைப்பான்” என்று கூறினார்கள், அ(தற்க)வர்கள், “நீங்கள் நம்மைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை, எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டு எங்களைத் தடை செய்ய நீங்கள் நாடுகிறீர்கள், அவ்வாறாயின் (அதற்குரிய) தெளிவான சான்றை எங்களுக்குக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள்
14:11
14:11 قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ اِنْ نَّحْنُ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلٰـكِنَّ اللّٰهَ يَمُنُّ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ‌ؕ وَمَا كَانَ لَنَاۤ اَنْ نَّاْتِيَكُمْ بِسُلْطٰنٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
قَالَتْ கூறினா(ர்க)ள் لَهُمْ அவர்களுக்கு رُسُلُهُمْ தூதர்கள்/ அவர்களுடைய اِنْ இல்லை نَّحْنُ நாங்கள் اِلَّا தவிர بَشَرٌ மனிதர்களே مِّثْلُكُمْ உங்களைப் போன்ற وَلٰـكِنَّ எனினும் اللّٰهَ அல்லாஹ் يَمُنُّ அருள் புரிகிறான் عَلٰى மீது مَنْ எவர் يَّشَآءُ நாடுவான் مِنْ عِبَادِهٖ‌ؕ தன் அடியார்களில் وَمَا كَانَ لَنَاۤ முடியாது/எங்களுக்கு نَّاْتِيَكُمْ உங்களிடம் بِسُلْطٰنٍ ஓர் ஆதாரத்தைக் கொண்டு اِلَّا தவிர بِاِذْنِ அனுமதி கொண்டே اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய وَعَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீதே فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைக்கட்டும் الْمُؤْمِنُوْنَ‏ நம்பிக்கையாளர்கள்
14:11. (அதற்கு) அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை; எனினும் அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது அருள் புரிகிறான்; அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை; இன்னும் உறுதியாக நம்பிக்கை கொண்டோர் எல்லாம், அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்” என்று கூறினார்கள்.
14:11. அதற்கு அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தான். எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் விரும்பியவர்கள் மீது அருள் புரிகிறான். அல்லாஹ்வுடைய அனுமதியின்றி (உங்கள் விருப்பப்படி) ஓர் ஆதாரத்தை நாம் உங்களிடம் கொண்டு வருவதற்கில்லை'' (என்று கூறி நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நம்பிக்கையாளர்கள் (அனைவரும்) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்'' என்றும்,
14:11. அதற்கு அவர்களுடைய தூதர்கள் கூறினார்கள்: “உண்மையில் நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள்தாம்! ஆனால், அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்குப் பேரருளை வழங்குகின்றான். மேலும், உங்களிடம் சான்றினைக் கொண்டு வருவது எங்களுடைய அதிகாரத்தில் இல்லை. சான்று, அல்லாஹ்வின் உத்தரவு கொண்டுதான் வெளிப்படுகின்றது. மேலும், இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வைச் சார்ந்து நிற்க வேண்டும்.
14:11. (அதற்கு) அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம், “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே தவிர வேறில்லை; எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது பேரருள் புரிகின்றான்; மேலும், அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டல்லாது எந்தச் சான்றையும் உங்களுக்கு நாங்கள் கொண்டு வருவது எங்களுக்கு (சாத்தியம்) இல்லை; விசுவாசிகள் (சகல காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும்” என்று கூறினார்கள்.
14:12
14:12 وَمَا لَـنَاۤ اَلَّا نَـتَوَكَّلَ عَلَى اللّٰهِ وَقَدْ هَدٰٮنَا سُبُلَنَا‌ؕ وَلَــنَصْبِرَنَّ عَلٰى مَاۤ اٰذَيْتُمُوْنَا‌ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ‏
وَمَا لَـنَاۤ எங்களுக்கென்ன? اَلَّا نَـتَوَكَّلَ நாங்கள் நம்பிக்கை வைக்காதிருக்க عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் وَقَدْ நேர்வழிபடுத்தினான் هَدٰٮنَا எங்களை سُبُلَنَا‌ؕ எங்கள் பாதைகளில் وَلَــنَصْبِرَنَّ நிச்சயமாக பொறுப்போம் عَلٰى مَاۤ اٰذَيْتُمُوْنَا‌ؕ நீங்கள் துன்புறுத்துவதில் எங்களை وَعَلَى اللّٰهِ அல்லாஹ் மீதே فَلْيَتَوَكَّلِ ஆகவே நம்பிக்கை வைக்கட்டும் الْمُتَوَكِّلُوْنَ‏ நம்பிக்கை வைப்பவர்கள்
14:12. “அல்லாஹ்வின் மீதே நாங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான், (நாங்கள் வெற்றி பெறும்) வழிகளையும் எங்களுக்கு காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாக பொறுத்துக் கொள்வோம்; உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்.)  
14:12. ‘‘நாங்கள் அல்லாஹ்வை நம்பாதிருக்க எங்களுக்கென்ன (தடை நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான் எங்களுக்கு நேரான வழியை அறிவித்தான். (நிராகரிப்பவர்களே!) நீங்கள் எங்களுக்கு இழைக்கும் துன்பங்களைச் சகித்துக் கொண்டு உறுதியாக இருப்போம். ஆகவே, நம்பிக்கை வைப்பவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்'' என்றும் கூறினார்கள்.
14:12. அல்லாஹ்வையே நாங்கள் முழுவதும் சாராதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? எங்கள் வாழ்க்கைப் பாதைகளில் அவன்தானே எங்களுக்கு நேர்வழியைக் காட்டினான். எங்களுக்கு நீங்கள் இழைத்துக் கொண்டிருக்கின்ற தொல்லைகளைத் திண்ணமாக நாங்கள் பொறுத்துக் கொள்வோம். எனவே, சார்ந்திருப்பவர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும்.”
14:12. “இன்னும், நாங்கள் அல்லாஹ்வின் மீது (முழுமையாக) நம்பிக்கை வைக்காதிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? திட்டமாக அவன் எங்களுடைய வழிகளை எங்களுக்கு காண்பித்துள்ளான், மேலும் (நிராகரிப்போரே!) நீங்கள் எங்களுக்கிழைக்கும் துன்பங்களை நிச்சயமாக நாங்கள் பொருத்துக் கொண்டு (உறுதியாக) இருப்போம், இன்னும், (சகல காரியங்களையும் அல்லாஹ்விடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கிறவர்கள் (யாவரும்) அல்லாஹ்வின் மீதே (முழுமையாக) நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்.)
14:13
14:13 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِرُسُلِهِمْ لَـنُخْرِجَنَّكُمْ مِّنْ اَرْضِنَاۤ اَوْ لَـتَعُوْدُنَّ فِىْ مِلَّتِنَا‌ ؕ فَاَوْحٰۤى اِلَيْهِمْ رَبُّهُمْ لَــنُهْلِكَنَّ الظّٰلِمِيْنَۙ‏
وَقَالَ கூறினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لِرُسُلِهِمْ தங்கள் தூதர்களிடம் لَـنُخْرِجَنَّكُمْ நிச்சயமாக வெளியேற்றுவோம்/உங்களை مِّنْ اَرْضِنَاۤ எங்கள் பூமியிலிருந்து اَوْ அல்லது لَـتَعُوْدُنَّ நீங்கள் நிச்சயமாக திரும்பிடவேண்டும் فِىْ مِلَّتِنَا‌ ؕ எங்கள் மார்க்கத்தில் فَاَوْحٰۤى ஆகவே வஹீ அறிவித்தான் اِلَيْهِمْ அவர்களுக்கு رَبُّهُمْ இறைவன்/அவர்களுடைய لَــنُهْلِكَنَّ நிச்சயமாக அழிப்போம் الظّٰلِمِيْنَۙ‏ அநியாயக்காரர்களை
14:13. நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள், அப்போது: “நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்” என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்.
14:13. நிராகரித்தவர்கள் தங்களிடம் வந்த (நமது) தூதர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக நீங்கள் எங்கள் மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்'' என்றும்
14:13. இறுதியில் இறைமறுப்பாளர்கள் தம் தூதர்களிடம் கூறிவிட்டார்கள்: “நீங்கள் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையெனில், நிச்சயமாக எங்கள் ஊரிலிருந்து உங்களை வெளியேற்றிவிடுவோம்!” அப்போது அத்தூதர்களுக்கு அவர்களின் அதிபதி அறிவித்தான்: “நாம் இந்த அக்கிரமக்காரர்களை அழித்தே விடுவோம்!
14:13. நிராகரித்துக் கொண்டிருந்தோர், தங்களின்(பால் அனுப்பப்பட்ட அத்) தூதர்களிடம் நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றிவிடுவோம், அல்லது நிச்சயமாக எங்கள் மார்க்கத்தில் நீங்கள் திரும்பிவிடவேண்டும் என்று கூறினார்கள், அப்போது அநியாயக்காரர்களை நிச்சயமாக நாம் அழித்துவிடுவோம், என அவர்கள்பால் அவர்களின் இரட்சகன் (வஹீ) அறிவித்தான்.
14:14
14:14 وَلَـنُسْكِنَنَّكُمُ الْاَرْضَ مِنْۢ بَعْدِهِمْ‌ؕ ذٰ لِكَ لِمَنْ خَافَ مَقَامِىْ وَخَافَ وَعِيْدِ‏
وَلَـنُسْكِنَنَّكُمُ நிச்சயமாக குடி அமர்த்துவோம்/உங்களை الْاَرْضَ பூமியில் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ‌ؕ அவர்களுக்கு ذٰ لِكَ இது لِمَنْ எவருக்கு خَافَ பயந்தார் مَقَامِىْ என் முன்னால் நிற்பதை وَخَافَ இன்னும் பயந்தார் وَعِيْدِ‏ என் எச்சரிக்கையை
14:14. “நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்” (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்).
14:14. ‘‘உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்'' (என்றும் வஹ்யி மூலம் அறிவித்து) ‘‘இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கிறானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்'' என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.
14:14. மேலும், அவர்களுக்குப் பிறகு இப்பூமியில் உங்களை வசிக்கச் செய்வோம். என்னிடத்தில் பதில் சொல்லியாக வேண்டும் என்று யார் பயப்படுகின்றாரோ, மேலும் என் எச்சரிக்கைக்கு யார் அஞ்சுகிறாரோ அவருக்குரிய வெகுமதியாகும் இது!”
14:14. இன்னும், “அவர்களுக்குப் பின்னர் உங்களை (இந்த) பூமியில் நிச்சயமாக நாம் குடியேற்றுவோம்” (என்றும் வஹீ மூலம் அறிவித்து) “இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தவருக்கும் என் (அச்சமூட்டலைப் பயந்தவர்களுக்குமாகும் (என்றும் இரட்சகன் அறிவித்தான்.)
14:15
14:15 وَاسْتَفْتَحُوْا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيْدٍۙ‏
وَاسْتَفْتَحُوْا ஆகவே வெற்றிபெற முயற்சித்தார்கள் وَخَابَ அழிந்தார்(கள்) كُلُّ எல்லோரும் جَبَّارٍ பிடிவாதக்காரர்(கள்) عَنِيْدٍۙ‏ வம்பர்(கள்)
14:15. ஆகவே, அ(த் தூது)வர்கள் அல்லாஹ்வின் உதவியை நாடினார்கள்; பிடிவாதக்காரவம்பன் ஒவ்வொருவனும் அழிவை அடைந்தான்.
14:15. ஆகவே, (நபிமார்கள்) அனைவரும் (அல்லாஹ்வின்) உதவியைக் கோரினார்கள். பிடிவாதக்கார வம்பர்கள் அனைவருமே ஏமாற்றமடைந்(து அழிந்)தனர்.
14:15. அவர்கள் தீர்ப்பு வேண்டுமென விரும்பினார்கள். (ஆகையால் இவ்வாறு அவர்களுக்குத் தீர்ப்பு அளிக்கப்பட்டது). மேலும், சத்தியத்திற்கு விரோதியான ஒவ்வோர் ஆணவக்காரனும் இழப்புக்குள்ளாகி விட்டான்.
14:15. இன்னும், அ(த்தூது)வர்கள் (அல்லாஹ்வின்) உதவியைக் கோரினார்கள், பிடிவாதக்கார வம்பன் ஒவ்வொருவனும் நஷ்டமடைந்துவிட்டான்.
14:16
14:16 مِّنْ وَّرَآٮِٕهٖ جَهَـنَّمُ وَيُسْقٰى مِنْ مَّآءٍ صَدِيْدٍۙ‏
مِّنْ وَّرَآٮِٕهٖ அவனுக்கு பின்புறத்தில் جَهَـنَّمُ நரகம் وَيُسْقٰى இன்னும் புகட்டப்படுவான் مِنْ இருந்து مَّآءٍ நீர் صَدِيْدٍۙ‏ சீழ்
14:16. அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.
14:16. அவர்களுக்கு பின்னால் நரகம்தான் இருக்கிறது. (அங்குதான் அவர்கள் செல்ல வேண்டும். நரகவாசிகளின் தேகத்திலிருந்து வடியும்) சீழ்தான் அவர்களுக்கு (நீராக)ப் புகட்டப்படும்.
14:16. இனி, அவனுக்கு நரகம்தான் இருக்கின்றது. அங்கு அவனுக்குச் சீழ் புகட்டப்படும்.
14:16. அவனுக்கு முன்பாக நரகம்(தான்) இருக்கிறது, மேலும், சீழ் நீரிலிருந்து அவன் புகட்டப்படுவான்.
14:17
14:17 يَّتَجَرَّعُهٗ وَلَا يَكَادُ يُسِيْـغُهٗ وَيَاْتِيْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَيِّتٍؕ‌ وَمِنْ وَّرَآٮِٕهٖ عَذَابٌ غَلِيْظٌ‏
يَّتَجَرَّعُهٗ அள்ளிக் குடிப்பான்/அதை وَلَا يَكَادُ يُسِيْـغُهٗ இலகுவாக குடித்து விடமாட்டான்/அதை وَيَاْتِيْهِ வரும்/அவனுக்கு الْمَوْتُ மரணம் مِنْ كُلِّ مَكَانٍ ஒவ்வொரு இடத்திலிருந்தும் وَّمَا இல்லை هُوَ அவன் بِمَيِّتٍؕ‌ இறந்து விடுபவனாக وَمِنْ وَّرَآٮِٕهٖ அவனுக்குப்பின்னால் عَذَابٌ வேதனை غَلِيْظٌ‏ கடினமானது
14:17. அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது; ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.
14:17. அதை அவர்கள் (மிக சிரமத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவார்கள். எனினும், அது அவர்களுடைய தொண்டைகளில் இறங்காது; (விக்கிக் கொள்ளும்.) ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணமே அவர்களை நோக்கி வந்துகொண்டிருக்கும்; எனினும், அவர்கள் இறந்துவிட மாட்டார்கள். இதற்குப் பின் கடினமான வேதனையும் (அவர்களுக்கு) உண்டு.
14:17. அதனை அவன் கஷ்டப்பட்டு விழுங்க முயல்வான்; எனினும், அதனை எளிதில் விழுங்கிட அவனால் முடியாது. அனைத்துத் திசைகளிலிருந்தும் மரணம் அவனை நோக்கி வரும். ஆயினும், அவனால் மரணம் அடைய முடியாது. அதைத் தவிர ஒரு கடும்வேதனை அவன் உயிரை வதைத்துக் கொண்டிருக்கும்.
14:17. அதனை அவன் (சங்கடத்தோடு) சிறுகச் சிறுக விழுங்குவான், எனினும், அதை அவன் எளிதாக விழுங்க நெருங்க மாட்டான், ஒவ்வொரு திசையிலிருந்தும் மரணம் அவனுக்கு வந்துகொண்டுமிருக்கும், அவன் மரணிப்பவனுமல்லன், மேலும், அதற்கப்பால் கடினமான வேதனையுமுண்டு.
14:18
14:18 مَثَلُ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ‌ اَعْمَالُهُمْ كَرَمَادِ ۨاشْتَدَّتْ بِهِ الرِّيْحُ فِىْ يَوْمٍ عَاصِفٍ‌ؕ لَا يَقْدِرُوْنَ مِمَّا كَسَبُوْا عَلٰى شَىْءٍ‌ؕ ذٰ لِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِيْدُ‏
مَثَلُ உதாரணம் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் بِرَبِّهِمْ‌ தங்கள் இறைவனை اَعْمَالُهُمْ அவர்களுடைய செயல்கள் كَرَمَادِ சாம்பல் ۨاشْتَدَّتْ கடுமையாக அடித்துச் சென்றது بِهِ அதை الرِّيْحُ காற்று فِىْ يَوْمٍ காலத்தில் عَاصِفٍ‌ؕ புயல் لَا يَقْدِرُوْنَ அவர்கள் சக்தி பெறமாட்டார்கள் مِمَّا كَسَبُوْا அவர்கள் செய்ததில் عَلٰى شَىْءٍ‌ؕ எதையும் ذٰ لِكَ هُوَ இதுதான் الضَّلٰلُ வழிகேடு الْبَعِيْدُ‏ தூரமானது
14:18. எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது: அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை: புயல் காற்று கடினமாக வீசும் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது; இதுவே வெகு தூரமான வழிகேடாகும்.
14:18. எவர்கள் தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபாலிக்கின்ற இறைவனை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய செயல்களின் உதாரணம்: சாம்பலைப்போல் இருக்கிறது! புயல் காலத்தில் அடித்த கனமான காற்று அதை அடித்துக்கொண்டு போய்விட்டது. தாங்கள் தேடிக்கொண்டதில் ஒன்றையும் அவர்கள் அடைய மாட்டார்கள். இது வெகு தூரமான வழிகேடாகும்.
14:18. எவர்கள் தம் அதிபதியை நிராகரித்தார்களோ அவர்களின் செயல்களுக்கான உவமை, கடும் புயல் வீசக்கூடிய ஒரு நாளில் அடித்துச் செல்லப்படும் சாம்பலைப் போன்றதாகும். தாங்கள் செய்த செயல்களிலிருந்து எந்தப் பலனையும் அவர்கள் பெற முடியாது. இதுவே அளவு கடந்த வழிகேடாகும்.
14:18. தங்கள் இரட்சகனை நிராகரிக்கின்றார்களே, அத்தகையவர்களுக்கு உதாரணம், அவர்களுடைய செயல்கள் சாம்பலைப் போலிருக்கிறது! கடும் புயல் வீசும் நாளில் காற்று கடினமாக அதனை அடித்துக்கொண்டு போய்விட்டது, இது போன்றே தாங்கள் சம்பாதித்தவற்றிலிருந்து எதன் மீதும் (எப்பயனையும், அடைய) அவர்கள் சக்தி பெற மாட்டார்கள், இதுவே வெகு தூரமான வழிகேடாகும்.
14:19
14:19 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَـقِّ‌ؕ اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ وَيَاْتِ بِخَلْقٍ جَدِيْدٍۙ‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் خَلَقَ படைத்துள்ளான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை بِالْحَـقِّ‌ؕ உண்மையைக் கொண்டு اِنْ يَّشَاْ அவன் நாடினால் يُذْهِبْكُمْ போக்கி விடுவான்/உங்களை وَيَاْتِ இன்னும் வருவான் بِخَلْقٍ படைப்பைக் கொண்டு جَدِيْدٍۙ‏ புதியது
14:19. நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை நீர் பார்க்கவிலலையா? அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான்.
14:19. நிச்சயமாக அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் மிக்க மேலான அமைப்பில் படைத்திருக்கிறான் என்பதை (மனிதனே!) நீ கவனிக்கவில்லையா? அவன் விரும்பினால் உங்களைப் போக்கிவிட்டு (உங்களைப் போன்ற) புதியதோர் படைப்பைக் கொண்டுவந்து விடுவான்.
14:19. நிச்சயமாக, அல்லாஹ் வானங்களையும் பூமியையும் சத்தியத்தின் அடிப்படையில் படைத்து, நிலைபெறச் செய்துள்ளான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அவன் நாடினால் உங்களை அழித்துவிட்டு (அந்த இடத்தில்) ஒரு புதிய படைப்பைக் கொண்டு வருவான்.
14:19. நிச்சயமாக அல்லாஹ்(தான்) வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கிறான் என்பதை (மனிதனே!) நீ பார்க்கவில்லையா? அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வந்தும் விடுவான்.
14:20
14:20 وَّمَا ذٰلِكَ عَلَى اللّٰهِ بِعَزِيْزٍ‏
وَّمَا இல்லை ذٰلِكَ அது عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் بِعَزِيْزٍ‏ சிரமமானதாக
14:20. இன்னும், இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
14:20. அல்லாஹ்வுக்கு இது ஒரு சிரமமான காரியம் அல்ல.
14:20. இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்குச் சிறிதும் சிரமமானதல்ல!
14:20. மேலும், அ(வ்வாறு செய்வதான)து அல்லாஹ்வின் மீது சிரமமானதுமல்ல.
14:21
14:21 وَبَرَزُوْا لِلّٰهِ جَمِيْعًا فَقَالَ الضُّعَفٰۤؤُا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَـكُمْ تَبَعًا فَهَلْ اَنْـتُمْ مُّغْـنُوْنَ عَنَّا مِنْ عَذَابِ اللّٰهِ مِنْ شَىْءٍ‌ؕ قَالُوْا لَوْ هَدٰٮنَا اللّٰهُ لَهَدَيْنٰكُمْ‌ؕ سَوَآءٌ عَلَيْنَاۤ اَجَزِعْنَاۤ اَمْ صَبَرْنَا مَا لَــنَا مِنْ مَّحِيْصٍ‏
وَبَرَزُوْا வெளிப்படுவார்கள் لِلّٰهِ அல்லாஹ்விற்கு முன் جَمِيْعًا அனைவரும் فَقَالَ கூறுவார்(கள்) الضُّعَفٰۤؤُا பலவீனர்கள் لِلَّذِيْنَ எவர்களுக்கு اسْتَكْبَرُوْۤا பெருமையடித்தனர் اِنَّا நிச்சயமாக நாங்கள் كُنَّا இருந்தோம் لَـكُمْ உங்களை تَبَعًا பின்பற்றுபவர்களாக فَهَلْ ஆகவே ? اَنْـتُمْ நீங்கள் مُّغْـنُوْنَ தடுப்பீர்கள் عَنَّا எங்களை விட்டு مِنْ عَذَابِ வேதனையிலிருந்து اللّٰهِ அல்லாஹ்வின் مِنْ شَىْءٍ‌ؕ எதையும் قَالُوْا கூறினர் لَوْ هَدٰٮنَا வழிகாட்டினால் اللّٰهُ அல்லாஹ் لَهَدَيْنٰ வழிகாட்டுவோம் كُمْ‌ؕ உங்களுக்கு سَوَآءٌ சமமே عَلَيْنَاۤ நம் மீது اَجَزِعْنَاۤ நாம் பதட்டப்பட்டால் என்ன? اَمْ அல்லது صَبَرْنَا சகித்தோம் مَا இல்லை لَــنَا நமக்கு مِنْ அறவே مَّحِيْصٍ‏ தப்புமிடம்
14:21. அன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி: “நிச்சயமாக நாங்கள்(உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம்; இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா?” என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், “அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியே அன்றி, வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்று தான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே!” என்று (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள்.  
14:21. (மறுமையில் பாவிகள்) அனைவரும் வெளிப்பட்டு அல்லாஹ்வின் முன் நிற்கும் சமயத்தில் (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் என்று கருதப்பட்டவர்கள், (பலசாலிகளென) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றி நடந்தோம். ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவையேனும் எங்களுக்கு நீங்கள் தடுத்து விட வேண்டாமா?'' என்று கூறுவார்கள். அதற்கு அவர்கள் (வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அல்லாஹ் எங்களுக்கு ஒரு வழி வைத்திருந்தால் (அதை) நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். (தப்ப வழி இல்லை. எங்கள் வேதனையைப்பற்றி) நாங்கள் பதட்டப்பட்டு துடிதுடிப்பதும் அல்லது (அதைச்) சகித்துக் கொண்டு பொறுத்திருப்பதும் ஒன்றாகவே இருக்கிறது. (இவ் வேதனையிலிருந்து) தப்ப எங்களுக்கு ஒரு வழியும் இல்லையே!'' என்று புலம்புவார்கள்.
14:21. மேலும், இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் திருமுன் ஒளிவு மறைவின்றி ஒன்று சேர்க்கப்படும்போது (உலகில்) பலவீனர்களாய் இருந்த மக்கள், ‘பெரிய மனிதர்களாய்க்’ கருதிக் கொண்டிருந்தவர்களை நோக்கி “(உலகில்) நாங்கள் உங்களைப் பின்பற்றி வந்தோம். (இப்போது) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்ற உங்களால் ஏதேனும் செய்ய முடியுமா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு (ஈடேற்றத்திற்கான) ஏதேனும் வழியைக் காட்டியிருந்தால், நாங்கள் அதனை உங்களுக்கும் நிச்சயம் காட்டித் தந்திருப்போம். இப்போது நாம் பதறினாலும் சரி, பொறுமையாய் இருந்தாலும் சரி இரண்டுமே நமக்கு சமம்தான்! எந்நிலையிலும் நாம் தப்புவதற்கு வழியே இல்லை!”
14:21. மேலும், (மறுமையில்) அனைவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் வெளிப்பட்டு (நின்று) விடுவார்கள், (இவ்வுலகில்) பலவீனமானவர்கள் கர்வங்கொண்டிருந்தவர்களிடம், “நிச்சயமாக (உலகில்) நாங்கள் (நீங்கள் காட்டியவழியில்) உங்களையே பின்தொடர்ந்தவர்களாக இருந்தோம், ஆகவே (வர இருக்கும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவையேனும், எங்களைவிட்டும் நீங்கள் தடுக்கக் கூடியவர்களா?” என்று கேட்பார்கள்; (அ(தற்க)வர்கள், “அல்லாஹ் எங்களுக்கு (யாதொரு) வழியைக் காண்பித்தால் (அதனை) நாங்கள் உங்களுக்குக் காண்பித்துத் தருவோம், (எங்கள் வேதனையைப்பற்றி) நாங்கள் பதைபதைத்துத் துடிதுடிப்பதும் அல்லது பொறுத்திருப்பதும் எங்களுக்கு சமமானதாகும்; (இவ்வேதனையிலிருந்து விலகி) தப்பிச் செல்லுமிடம் எங்களுக்கில்லையே” என்று (வருந்திக்) கூறுவார்கள்.
14:22
14:22 وَقَالَ الشَّيْطٰنُ لَمَّا قُضِىَ الْاَمْرُ اِنَّ اللّٰهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَـقِّ وَوَعَدْتُّكُمْ فَاَخْلَفْتُكُمْ‌ؕ وَمَا كَانَ لِىَ عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّاۤ اَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِىْ‌ ۚ فَلَا تَلُوْمُوْنِىْ وَلُوْمُوْۤا اَنْفُسَكُمْ‌ ؕ مَاۤ اَنَا بِمُصْرِخِكُمْ وَمَاۤ اَنْتُمْ بِمُصْرِخِىَّ‌ ؕ اِنِّىْ كَفَرْتُ بِمَاۤ اَشْرَكْتُمُوْنِ مِنْ قَبْلُ‌ ؕ اِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
وَقَالَ கூறுவான் الشَّيْطٰنُ ஷைத்தான் لَمَّا قُضِىَ முடிக்கப்பட்டபோது الْاَمْرُ காரியம் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் وَعَدَ வாக்களித்தான் كُمْ உங்களுக்கு وَعْدَ வாக்கை الْحَـقِّ உண்மையானது وَوَعَدْتُّكُمْ நான் வாக்களித்தேன்/உங்களுக்கு فَاَخْلَفْتُكُمْ‌ؕ நான் வஞ்சித்தேன்/உங்களை وَمَا كَانَ இல்லை لِىَ எனக்கு عَلَيْكُمْ அறவே مِّنْ உங்கள் மீது سُلْطٰنٍ அதிகாரம் اِلَّاۤ اَنْ دَعَوْتُكُمْ எனினும்/உங்களை அழைத்தேன் فَاسْتَجَبْتُمْ பதில் தந்தீர்கள் لِىْ‌ ۚ எனக்கு فَلَا تَلُوْمُوْنِىْ ஆகவே, என்னை நிந்திக்காதீர்கள் وَلُوْمُوْۤا நிந்தியுங்கள் اَنْفُسَكُمْ‌ ؕ உங்களையே مَاۤ اَنَا நான் இல்லை بِمُصْرِخِكُمْ உங்களுக்கு உதவுபவனாக وَمَاۤ இல்லை اَنْتُمْ நீங்கள் بِمُصْرِخِىَّ‌ உதவுபவர்களாக اِنِّىْ நிச்சயமாக நான் كَفَرْتُ நிராகரித்தேன் اَشْرَكْتُمُوْنِ என்னை مِنْ قَبْلُ‌ ؕ முன்னரே اِنَّ நிச்சயமாக الظّٰلِمِيْنَ அணியாயக்காரர்கள் لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தக் கூடியது
14:22. (மறுமையில் இவர்கள் பற்றித்)தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தான்; நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் - ஆனால் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறு செய்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன்; அப்போது நீங்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை; ஆகவே நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்து கொள்ளுங்கள்; உங்களை நான் காப்பாற்றுபவன் இல்லை; நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன் - நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று கூறுவான்.
14:22. (இக்குற்றவாளிகளைப் பற்றி) தீர்ப்புக் கூறப்பட்டதும் பின்னர், ஷைத்தான் (இவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக அல்லாஹ் (இவ்வேதனையைத் தருவதாக) உங்களுக்கு மெய்யாகவே வாக்களித்திருந்தான். (அவ்வாறே கொடுத்தும் விட்டான்.) நானும் உங்களுக்கு(ப் பொய்யாக) வாக்களித்தேன்; எனினும், நான் உங்களை வஞ்சித்து விட்டேன்; ‘‘நான் உங்களை அழைத்தேன்; நீங்கள் என்னைப் பின்பற்றினீர்கள்'' என்பதைத் தவிர, உங்களை நான் நிர்ப்பந்திப்பதற்கு எனக்கு ஓர் அதிகாரமும் இல்லாமலே இருந்தது. ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. நீங்களும் எனக்கு ஓர் உதவியும் செய்ய முடியாது. இதற்கு முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக (உங்களைப் போன்ற) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு என்று கூறுவான்.
14:22. பிறகு விவகாரம் தீர்க்கப்பட்டுவிடும்போது ஷைத்தான் கூறுவான்: “திண்ணமாக அல்லாஹ் உங்களுக்கு என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருந்தானோ அவை அனைத்தும் உண்மையானவையே! மேலும், நான் உங்களுக்கு அளித்திருந்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றித் தரவில்லை. உங்கள்மீது எனக்கு எந்த ஆதிக்கமும் இருக்கவில்லை. ஆனால் நான் செய்ததெல்லாம் என் வழியில் வருமாறு உங்களை அழைத்ததுதான்! நீங்கள் எனது அழைப்பைத் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டீர்கள். எனவே, இப்பொழுது என்னை இகழாதீர்கள்; உங்களையே இகழ்ந்து கொள்ளுங்கள்! (இங்கு) நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. உங்களாலும் எனக்கு உதவி செய்ய முடியாது. இதற்கு முன்பு இறைவனுக்கு இணையாக நீங்கள் என்னை ஆக்கியதற்கு நான் பொறுப்பல்ல. இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு திண்ணமாக துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது.”
14:22. (இக்குற்றவாளிகளைப் பற்றித்)தீர்ப்புக் கூறப்பட்ட பின்னர் ஷைத்தான் (இவர்களிடம்) “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியை வாக்களித்திருந்தான், (அவ்வாறே நிறைவேற்றியும் விட்டான்) உங்களுக்கு நானும் (பொய்யாக) வாக்களித்திருந்தேன், ஆனால் நான் உங்களுக்கு கொடுத்த வாக்கில் மாறு செய்தேன், நான் உங்களை அழைத்தேன், நீங்கள் எனக்கு பதில் கூறினீர்கள் என்பதைத் தவிர எனக்கு யாதோர் அதிகாரமும் உங்கள் மீது இல்லை, ஆதலால், நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள், உங்களையே நீங்கள் நிந்தித்துக் கொள்ளுங்கள், நான் உங்களை காப்பாற்றுபவனல்ல, என்னை நீங்கள் காப்பாற்றுபவர்களுமல்லர், (இதற்கு) முன்னர் நீங்கள் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும் நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன், நிச்சயமாக அநியாயக்காரர்கள் - அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு” என்று கூறுவான்.
14:23
14:23 وَاُدْخِلَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ؕ تَحِيَّتُهُمْ فِيْهَا سَلٰمٌ‏
وَاُدْخِلَ புகுத்தப்படுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ நன்மைகளை جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக فِيْهَا அதில் بِاِذْنِ அனுமதிப்படி رَبِّهِمْ‌ؕ தங்கள் இறைவன் تَحِيَّتُهُمْ அவர்களின் முகமன் فِيْهَا அதில் سَلٰمٌ‏ ஸலாம்
14:23. இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் என்றென்றும் அவற்றில் தங்கியிருப்பார்கள் - அங்கு அவர்களுடைய காணிக்கையாவது “ஸலாமுன் (சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!”) என்பதாகும்.
14:23. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கங்களில் புகுத்தப்படுவார்கள். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். தங்கள் இறைவனின் கட்டளைப்படி அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அவர்களில் (ஒருவர் மற்றொருவரை நோக்கி ‘‘உங்களுக்கு தொடர்ந்து) ஈடேற்றம் (ஸலாம்) உண்டாவதாகுக!'' என்று முகமன் கூறுவார்கள்.
14:23. ஆனால், எவர்கள் (இவ்வுலகில்) இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் சுவனங்களில் நுழைவிக்கப்படுவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் தம் இறைவனின் அனுமதி கொண்டு என்றென்றும் வாழ்வார்கள். மேலும், ‘உங்கள்மீது சாந்தி நிலவட்டும்!” என்று அங்கு அவர்களுக்கு முகமன் கூறப்படும்.
14:23. இன்னும், விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர் சுவனபதிகளில் பிரவேசிக்கப்படுவார்கள், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், தங்கள் இரட்சகனின் உத்தரவு கொண்டு அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள், அவற்றில் அவர்களின் காணிக்கை(யானது ஒருவர் மற்றவருக்கு உங்களுக்கு) சாந்தி உண்டாவதாக” என்பதாகும்.
14:24
14:24 اَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ اَصْلُهَا ثَابِتٌ وَّفَرْعُهَا فِى السَّمَآءِۙ‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? كَيْفَ எவ்வாறு? ضَرَبَ விவரித்தான் اللّٰهُ அல்லாஹ் مَثَلًا ஓர் உதாரணத்தை كَلِمَةً ஒரு வாக்கியத்திற்கு طَيِّبَةً நல்லது كَشَجَرَةٍ ஒரு மரத்திற்கு ஒப்பாக طَيِّبَةٍ நல்லது اَصْلُهَا அதன் வேர் ثَابِتٌ உறுதியானது وَّفَرْعُهَا இன்னும் அதன் கிளை فِى السَّمَآءِۙ‏ வானத்தில்
14:24. (நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.
14:24. (நபியே! ‘தவ்ஹீத் கலிமா' என்னும்) நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எப்படி (மிக்க மேலான) உதாரணத்தைக் கூறுகிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவ்வாக்கியம்) வானளாவிய கிளைகளையும் (பூமியில்) ஆழப்பாய்ந்த வேரையும் உடைய ஒரு நல்ல மரத்திற்கு ஒப்பாக இருக்கிறது.
14:24. நல்ல வார்த்தை (கலிமா தய்யிபாவு)க்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப்பதிந்திருக்கின்றது; அதன் கிளைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன;
14:24. நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணத்தைக் கூறியுள்ளான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (அது) நல்ல மரத்தைப் போன்றதாகும், அதன் வேர் (பூமியில்) ஆழப்பதிந்தும் அதன் கிளை வானளாவியும் இருக்கிறது.
14:25
14:25 تُؤْتِىْۤ اُكُلَهَا كُلَّ حِيْنٍۢ بِاِذْنِ رَبِّهَا‌ؕ وَيَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏
تُؤْتِىْۤ கொடுக்கிறது اُكُلَهَا தன் கனிகளை كُلَّ حِيْنٍۢ எல்லாக் காலத்திலும் بِاِذْنِ அனுமதி கொண்டு رَبِّهَا‌ؕ தன் இறைவனின் وَيَضْرِبُ இன்னும் விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் الْاَمْثَالَ உதாரணங்களை لِلنَّاسِ மனிதர்களுக்கு لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
14:25. அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது; மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.
14:25. அது (பருவ காலத்தில் மட்டுமன்றி) இறைவனின் அருளைக் கொண்டு எக்காலத்திலும் கனிகளைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு, அவர்களுக்கு அல்லாஹ் (பல) உதாரணங்களை விவரிக்கிறான்.
14:25. எந்நேரமும் அம்மரம் தன் இறைவனின் ஆணைக்கேற்பக் கனிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் படிப்பினை பெற வேண்டுமென்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு இத்தகைய உவமைகளைக் கூறுகின்றான்.
14:25. அது தன் இரட்சகனின் அனுமதிகொண்டு ஒவ்வொரு நேரத்திலும் கனிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது, மேலும் மனிதர்களுக்கு-அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக இவ்வுதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான்.
14:26
14:26 وَمَثَلُ كَلِمَةٍ خَبِيْثَةٍ كَشَجَرَةٍ خَبِيْثَةٍ ۨاجْتُثَّتْ مِنْ فَوْقِ الْاَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ‏
وَمَثَلُ இன்னும் உதாரணம் كَلِمَةٍ வாசகத்திற்கு خَبِيْثَةٍ கெட்டது كَشَجَرَةٍ மரத்திற்கு ஒப்பாகும் خَبِيْثَةٍ கெட்டது ۨاجْتُثَّتْ அறுபட்டது مِنْ இருந்து فَوْقِ மேல் الْاَرْضِ பூமியின் مَا இல்லை لَهَا அதற்கு مِنْ அறவே قَرَارٍ‏ எந்த உறுதி
14:26. (இணை வைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நிற்கும் தன்மையுமில்லை.
14:26. (நிராகரிப்பவர்களின் குஃப்ரு, ஷிர்க்கான) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம்: வேர் அறுபட்டு பூமிக்கு மேல் (உறுதியின்றி) நிற்கும் (பட்டுப் போன ஒரு) கெட்ட மரத்திற்கு ஒப்பாகும்; அது நிலைத்திருக்காது.
14:26. மேலும், கெட்ட வார்த்தைக்கு உவமை, ஒன்றுக்கும் உதவாத ஒரு கெட்ட மரத்தைப் போன்றதாகும். அந்த மரம் பூமியின் மேல் மட்டத்திலிருந்து பிடுங்கி எறியப்படுகின்றது; அதற்கு எவ்வித நிலையான தன்மையும் கிடையாது!
14:26. இன்னும், கெட்ட வாக்கியத்திற்கு உதாரணமாகிறது: பூமியின் மேற்புறத்திலிருந்து வேறோடு பிடுங்கப்பட்ட கெட்ட மரத்தைப் போன்றாகும், அதற்கு (நிலைத்து நிற்கும்) உறுதியான நிலை இல்லை
14:27
14:27 يُثَبِّتُ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ ۚ وَيُضِلُّ اللّٰهُ الظّٰلِمِيْنَ‌ ۙ وَيَفْعَلُ اللّٰهُ مَا يَشَآءُ‏
يُثَبِّتُ உறுதிப்படுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ எவர்களை اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் بِالْقَوْلِ சொல்லைக் கொண்டு الثَّابِتِ உறுதியானது فِى الْحَيٰوةِ வாழ்வில் الدُّنْيَا உலக(ம்) وَفِى الْاٰخِرَةِ‌ ۚ இன்னும் மறுமையில் وَيُضِلُّ வழிகெடுக்கிறான் اللّٰهُ அல்லாஹ் الظّٰلِمِيْنَ‌ ۙ அநியாயக்காரர்கள் وَيَفْعَلُ இன்னும் செய்கிறான் اللّٰهُ அல்லாஹ் مَا يَشَآءُ‏ தான் நாடுவதை
14:27. எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான்.  
14:27. மெய்யாகவே எவர்கள் நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களை மறுமையிலும், இம்மையிலும் (‘கலிமா தையிப்' என்னும்) உறுதிமிக்க இந்த வார்த்தையைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். அநியாயக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக) தவறான வழியில் அல்லாஹ் விட்டுவிடுகிறான்; அல்லாஹ் நாடியதைச் செய்கிறான். (அதைத் தடை செய்ய எவராலும் முடியாது.)
14:27. நம்பிக்கை கொண்டோருக்கு, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்பாட்டை அருளுகின்றான். ஆனால், அக்கிரமக்காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்கின்றான். அல்லாஹ், தான் நாடியவற்றைச் செய்(வதற்கு அதிகாரம் உள்ளவனாக இருக்)கின்றான்.
14:27. விசுவாசங்கொண்டுள்ளார்களே அத்தகையோரை, இம்மை வாழ்விலும் மறுமையிலும் (ஷஹாதத்துக் கலிமாவை கூறுவதன் மூலம்) உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் நிலைப்படுத்துகிறான், மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக)த் தவறான வழியில் விட்டும் விடுகிறான், மேலும் அல்லாஹ் தான் நாடியதை, செய்கிறான்.
14:28
14:28 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ بَدَّلُوْا نِعْمَتَ اللّٰهِ كُفْرًا وَّاَحَلُّوْا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِۙ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلَى பக்கம் الَّذِيْنَ எவர்கள் بَدَّلُوْا மாற்றினார்கள் نِعْمَتَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் كُفْرًا நிராகரிப்பால் وَّاَحَلُّوْا இன்னும் தங்க வைத்தார்கள் قَوْمَهُمْ தங்கள் சமுதாயத்தை دَارَ الْبَوَارِۙ‏ அழிவு இல்லத்தில்
14:28. அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில் நுழையும்படி செய்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
14:28. (நபியே!) அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பைக் கொண்டு மாற்றி, தங்கள் மக்களையும் அழிவுக்கிடங்கில் இறக்கிவிட்டவர்களை நீர் பார்க்கவில்லையா?
14:28. அல்லாஹ்வின் அருட்கொடையைப் பெற்று பின்பு அதனை நன்றிகொல்லும் போக்கைக் கொண்டு மாற்றி (தங்களுடன்) தம் சமூகத்தையும் அழிவுக் கிடங்கில் தள்ளியவர்களை நீர் கவனிக்கவில்லையா?
14:28. அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிப்பாக மாற்றி, தங்கள் சமூகத்தினரை அழிவு வீட்டில் இறக்கிவிட்டவர்களையும் (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
14:29
14:29 جَهَـنَّمَ‌ۚ يَصْلَوْنَهَا‌ؕ وَبِئْسَ الْقَرَارُ‏
جَهَـنَّمَ நரகம் يَصْلَوْنَهَا‌ؕ அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள் وَبِئْسَ மிகக் கெட்டது الْقَرَارُ‏ தங்குமிடத்தால்
14:29. (அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் - இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்.
14:29. அவர்கள் நரகத்தைத்தான் வந்தடைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
14:29. (அந்த) நரகில் அவர்கள் எரிந்து கருகிவிடுவார்கள்! அது கொடிய இருப்பிடமாகும்.
14:29. (அழிவு வீடானது) நரகமாகும், அதில் அவர்கள் பிரவேசிப்பார்கள், இன்னும், தங்குமிடத்தில் (அது) மிகக்கெட்டது.
14:30
14:30 وَجَعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا لِّيُـضِلُّوْا عَنْ سَبِيْلِهٖ‌ؕ قُلْ تَمَتَّعُوْا فَاِنَّ مَصِيْرَكُمْ اِلَى النَّارِ‏
وَجَعَلُوْا இன்னும் ஏற்படுத்தினர் لِلّٰهِ அல்லாஹ்விற்கு اَنْدَادًا இணைகளை لِّيُـضِلُّوْا அவர்கள் வழிகெடுப்பதற்காக عَنْ سَبِيْلِهٖ‌ؕ அவனுடைய பாதையிலிருந்து قُلْ கூறுவீராக تَمَتَّعُوْا சுகமனுபவியுங்கள் فَاِنَّ நிச்சயமாக مَصِيْرَكُمْ உங்கள் மீட்சி اِلَى பக்கம் النَّارِ‏ நரகத்தின்
14:30. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி, “இவ்வுலகில் சிறிது காலம்) சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் (இறுதியாகச்) சேருமிடம் நரகம்தான்” என்று நீர் கூறிவிடும்.
14:30. அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு (பல பொய் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘(இவ்வுலகில் சிறிது காலம்) நீங்கள் சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். (முடிவில்) நிச்சயமாக நீங்கள் சேருமிடம் நரகம்தான்.
14:30. அல்லாஹ்வின் வழியிலிருந்து (மக்களைப்) பிறழச் செய்வதற்காக மற்றவர்களையும் அவனுக்கு நிகராய் ஆக்கினார்கள். (நபியே! அவர்களிடம்) கூறுவீராக: “நன்கு சுவைத்துக் கொள்ளுங்கள்; இறுதியில் நீங்கள் திரும்பிச் செல்வது நரகத்திற்குத்தான்!”
14:30. இன்னும், அல்லாஹ்வுக்கு-அவனுடைய பாதையை விட்டும் அவர்கள் (மக்களை) வழி கெடுப்பதற்காக-சமமானவர்களை அவர்கள் ஆக்கினர்; (நபியே!) அவர்களிடம், “நீங்கள் சுகமனுபவித்துக் கொள்ளுங்கள், நிச்சயமாக, நீங்கள் திரும்பிச் சேருமிடம் நரகம்தான்” என்று கூறுவீராக!
14:31
14:31 قُلْ لِّـعِبَادِىَ الَّذِيْنَ اٰمَنُوْا يُقِيْمُوا الصَّلٰوةَ وَيُنْفِقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيْهِ وَلَا خِلٰلٌ‏
قُلْ கூறுவீராக لِّـعِبَادِىَ என் அடியார்களுக்கு الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் يُقِيْمُوا நிலை நிறுத்தட்டும் الصَّلٰوةَ தொழுகையை وَيُنْفِقُوْا இன்னும் தானம் செய்யட்டும் مِمَّا நாம் வசதியளித்தவற்றில் رَزَقْنٰهُمْ அவர்களுக்கு سِرًّا இரகசியமாக وَّعَلَانِيَةً இன்னும் வெளிப்படையாக مِّنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِىَ வருவதற்கு يَوْمٌ ஒரு நாள் لَّا இல்லை بَيْعٌ கொடுக்கல் வாங்கல் فِيْهِ அதில் وَلَا இல்லை خِلٰلٌ‏ நட்பு
14:31. ஈமான் கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) “கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகட்டும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து, இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (தான தருமங்களில்) செலவு செய்யட்டும்” என்று நீர் கூறுவீராக.
14:31. (நபியே!) நம்பிக்கை கொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக: அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத நாள் வருவதற்கு முன்னதாகவே இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தானம் செய்யட்டும்.
14:31. (நபியே!) நம்பிக்கை கொண்ட என் அடியார்களிடம், எவ்விதக் கொடுக்கல் வாங்கலும் நட்பும் பலன் தராத ஒருநாள் வருவதற்கு முன்பே தொழுகையை நிலைநாட்டும்படியும், மேலும், நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் (நற்பாதையில்) செலவிடும்படியும் கூறுவீராக!
14:31. விசுவாசங்கொண்ட என் அடியார்களுக்கு-“அவர்கள் தொழுகையை நிறைவேற்றவும், கொடுக்கல் வாங்கலோ, நட்போ இராத நாள் வருவதற்கு முன்னதாகவே, நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (தர்மச்) செலவு செய்யவும்”-என்று (நபியே!) நீர் கூறுவீராக!
14:32
14:32 اَللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ ۚ وَسَخَّرَ لَـكُمُ الْـفُلْكَ لِتَجْرِىَ فِى الْبَحْرِ بِاَمْرِهٖ‌ۚ وَسَخَّرَ لَـكُمُ الْاَنْهٰرَ‌ۚ‏
اَللّٰهُ அல்லாஹ்தான் الَّذِىْ எத்தகையவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை وَاَنْزَلَ இன்னும் இறக்கினான் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً மழையை فَاَخْرَجَ வெளிப்படுத்தினான் بِهٖ அதைக் கொண்டு مِنَ الثَّمَرٰتِ கனிகளில் رِزْقًا لَّـكُمْ‌ ۚ உணவாக/உங்களுக்கு وَسَخَّرَ வசப்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு الْـفُلْكَ கப்பலை لِتَجْرِىَ அது செல்வதற்காக فِى الْبَحْرِ கடலில் بِاَمْرِهٖ‌ۚ அவனுடைய கட்டளையைக் கொண்டு وَسَخَّرَ இன்னும் வசப்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு الْاَنْهٰرَ‌ۚ‏ ஆறுகளை
14:32. அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.
14:32. அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தவன். அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக(ப் பற்பல) கனிவர்க்கங்களையும் வெளிப்படுத்துகிறான். (நீங்கள் பயணம் செய்யும் பொருட்டுத்) தன் கட்டளையைக் கொண்டு கப்பலை உங்கள் இஷ்டப்படி கடலில் செல்ல வைக்கிறான். ஆறுகளையும், (கால்வாய்களையும்) உங்கள் விருப்பப்படி பாய வசதியளித்தான்.
14:32. அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் படைத்தவன். மேலும், அவன் வானத்திலிருந்து மழை பொழியச் செய்தான். பிறகு அதன் மூலம் உங்களுக்கு உணவாக விதவிதமான விளைபொருட்களை உற்பத்தி செய்தான். இன்னும், கப்பலை அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்; அது அவனது கட்டளைக்கேற்பக் கடலில் செல்கிறது. மேலும், உங்களுக்கு ஆறுகளை வசப்படுத்தித் தந்தான்.
14:32. அல்லாஹ் எத்தகையவனென்றால், அவன் தான் வானங்களையும் பூமியையும் படைத்தான், அவனே வானத்திலிருந்து மழை பொழியச் செய்து பின்னர், அதைக் கொண்டு உங்களுக்கு உணவாக(ப் பற்பல) கனிவர்க்கங்களையும் வெளிப்படுத்தினான், மேலும், (நீங்கள் பிரயாணம் செய்வதற்காகக்) கப்பலை தன் கட்டளைப்படி கடலில் அது செல்வதற்காக உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான், மேலும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தான்.
14:33
14:33 وَسَخَّرَ لَـكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآٮِٕبَيْنِ‌ۚ وَسَخَّرَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَ‌ۚ‏
وَسَخَّرَ இன்னும் வசப்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு الشَّمْسَ சூரியனை وَالْقَمَرَ இன்னும் சந்திரனை دَآٮِٕبَيْنِ‌ۚ தொடர்ந்து செயல்படக்கூடியதாக وَسَخَّرَ இன்னும் வசப்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு الَّيْلَ இரவை وَالنَّهَارَ‌ۚ‏ இன்னும் பகலை
14:33. (தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.
14:33. (தவறாது) ஒழுங்காக நடைபெற்று வருமாறு சூரியனையும் சந்திரனையும் (படைத்து) உங்களுக்குப் பயனளிக்கக்கூடிய விதத்தில் (அவற்றை)அமைத்தான். (மாறி மாறி) வரக்கூடிய இரவு பகலையும் உங்களுக்காக (அமைத்து அதில்) பயனடைய வகை செய்தான்.
14:33. மேலும், சூரியனையும் சந்திரனையும் அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் வண்ணம் உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான். மேலும், இரவையும் பகலையும் உங்களுக்காக வசப்படுத்தித் தந்தான்.
14:33. சூரியனையும், சந்திரனையும் (முறைப்படி தத்தம் வழிகளில்) அவ்விரண்டும் சென்று கொண்டேயிருக்க, அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான், மேலும், (மாறி மாறி வரும்) இரவையும், பகலையும் உங்களுக்கு அவன் வசப்படுத்தித் தந்தான்.
14:34
14:34 وَاٰتٰٮكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْـتُمُوْهُ‌ ؕ وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ اِنَّ الْاِنْسَانَ لَـظَلُوْمٌ كَفَّارٌ‏
وَاٰتٰٮكُمْ தந்தான்/உங்களுக்கு مِّنْ كُلِّ مَا سَاَلْـتُمُوْهُ‌ ؕ நீங்கள் கேட்டதிலிருந்தெல்லாம்/அவனிடம் وَاِنْ تَعُدُّوْا நீங்கள் கணக்கிட்டால் نِعْمَتَ அருளை اللّٰهِ அல்லாஹ்வின் لَا تُحْصُوْهَا ؕ நீங்கள் எண்ண முடியாது/அதை اِنَّ நிச்சயமாக الْاِنْسَانَ மனிதன் لَـظَلُوْمٌ மகா அநியாயக்காரன் كَفَّارٌ‏ மிக நன்றிகெட்டவன்
14:34. (இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.
14:34. இன்னும், நீங்கள் கேட்டவற்றை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான். ஆகவே, அல்லாஹ்வுடைய அருட் கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதை உங்களால் எண்ண முடியாது! (இவ்வாறு எல்லாமிருந்தும்) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறவன், மிக மிக நன்றிகெட்டவன் ஆவான்.
14:34. மேலும், நீங்கள் அவனிடம் வேண்டிக்கொண்ட அனைத்தையும் அவனே உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிடுவீர்களாயின், அவற்றை உங்களால் வரையறுக்கவே முடியாது. உண்மை யாதெனில், மனிதன் பெரும் அநீதியாளனாகவும், நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.
14:34. (இவையன்றி) மேலும், எவற்றை நீங்கள் அவனிடம் கேட்டீர்களோ அவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான், ஆகவே அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை நீங்கள் எண்ணுவீர்களாயின் அவற்றை நீங்கள் கணக்கிட்டு (எண்ணி வரையறுத்து) விட மாட்டீர்கள்; நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரன்; மிக்க நன்றி கெட்டவன்.
14:35
14:35 وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِىْ وَبَنِىَّ اَنْ نَّـعْبُدَ الْاَصْنَامَؕ‏
وَاِذْ قَالَ கூறியபோது اِبْرٰهِيْمُ இப்றாஹீம் رَبِّ என் இறைவா اجْعَلْ ஆக்கு هٰذَا الْبَلَدَ இந்த ஊரை اٰمِنًا அபயமளிப்பதாக وَّاجْنُبْنِىْ இன்னும் தூரமாக்கு/என்னை وَبَنِىَّ இன்னும் என் பிள்ளைகளை اَنْ نَّـعْبُدَ நாங்கள் வணங்குவதை الْاَصْنَامَؕ‏ சிலைகளை
14:35. நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
14:35. இப்றாஹீம் (தன் இறைவனை நோக்கிக்) கூறியதை (நபியே!) (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (அவர்கள் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக நீ ஆக்கிவைப்பாயாக! என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக!
14:35. இப்ராஹீம் இவ்வாறு பிரார்த்தனை புரிந்ததை நினைவுகூருங்கள்: “என் இறைவனே! (மக்காவாகிய) இந் நகரத்தை அமைதி அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக! மேலும், என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!
14:35. இப்றாஹீம், “என்னுடைய இரட்சகனே! (மக்காவாகிய) இவ்வூரை, அபயமளிக்கக்கூடியதாய் நீ ஆக்கி வைப்பாயாக! மேலும், என்னையும், என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து தூரப்படுத்துவாயாக!” என்று கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!)
14:36
14:36 رَبِّ اِنَّهُنَّ اَضْلَلْنَ كَثِيْرًا مِّنَ النَّاسِ‌ۚ فَمَنْ تَبِعَنِىْ فَاِنَّهٗ مِنِّىْ‌ۚ وَمَنْ عَصَانِىْ فَاِنَّكَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
رَبِّ என் இறைவா اِنَّهُنَّ நிச்சயமாக இவை اَضْلَلْنَ வழி கெடுத்தன كَثِيْرًا பலரை مِّنَ النَّاسِ‌ۚ மக்களில் فَمَنْ ஆகவே, எவர் تَبِعَنِىْ பின்பற்றினார்/என்னை فَاِنَّهٗ நிச்சயமாக அவர் مِنِّىْ‌ۚ என்னை சேர்ந்த وَمَنْ இன்னும் எவர் عَصَانِىْ மாறு செய்தார்/எனக்கு فَاِنَّكَ நிச்சயமாக நீ غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
14:36. (“என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன; எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை; என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.”
14:36. என் இறைவனே! நிச்சயமாக இச்சிலைகள் மனிதர்களில் பலரை வழிகெடுத்து விட்டன. (ஆகவே, எவன் சிலைகளை வணங்காது) என்னைப் பின்பற்றுகிறானோ அவன்தான் நிச்சயமாக என்னில் (என் சந்ததியில்) உள்ளவன்; எவன் எனக்கு மாறுசெய்கிறானோ (அவன் என் சந்ததி இல்லை. எனினும், என் இறைவனே!) நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவன், மிகக் கருணையுடையவன் ஆவாய்.
14:36. என் இறைவனே! திண்ணமாக இந்தச் சிலைகள் பெரும்பாலான மக்களை வழிகேட்டிலாழ்த்திவிட்டன; (என்னுடைய வழித்தோன்றல்களும் இவற்றால் வழி கெடலாம்; எனவே, அவர்களில்) எவர்கள் என்னுடைய வழிமுறையின்படி நடந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக என்னைச் சார்ந்தவர்களாவர். எவர்கள் எனக்கு முரணான வழியினை மேற்கொண்டார்களோ திண்ணமாக நீ பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றாய்;
14:36. “என் இரட்சகனே! நிச்சயமாக (சிலைகளாகிய) அவைகள் மனிதர்களில் அநேகரை வழிகெடுத்துவிட்டன, ஆகவே, (அவைகளை வணங்காது) எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ, அவர்தான் நிச்சயமாக என்னில் உள்ளவராவார், மேலும், எவர் எனக்கு மாறு செய்கிறாரோ, அப்போது நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபைசெய்பவன்”
14:37
14:37 رَبَّنَاۤ اِنِّىْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِىْ بِوَادٍ غَيْرِ ذِىْ زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِۙ رَبَّنَا لِيُقِيْمُوْا الصَّلٰوةَ فَاجْعَلْ اَ فْـٮِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِىْۤ اِلَيْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنِّىْۤ நிச்சயமாக நான் اَسْكَنْتُ வசிக்க வைத்தேன் مِنْ ذُرِّيَّتِىْ என் சந்ததிகளில் சில بِوَادٍ ஒரு பள்ளத்தாக்கில் غَيْرِ ذِىْ زَرْعٍ விவசாயமற்றது عِنْدَ அருகில் بَيْتِكَ உன் வீட்டின் الْمُحَرَّمِۙ புனிதமாக்கப்பட்டது رَبَّنَا எங்கள் இறைவா لِيُقِيْمُوْا அவர்கள் நிலைநிறுத்துவதற்காக الصَّلٰوةَ அவர்கள் தொழுகையை فَاجْعَلْ ஆகவே ஆக்கு اَ فْـٮِٕدَةً உள்ளங்களை مِّنَ النَّاسِ மக்களிலிருந்து تَهْوِىْۤ ஆசைப்படக்கூடியதாக اِلَيْهِمْ அவர்கள் பக்கம் وَارْزُقْهُمْ இன்னும் உணவளி/அவர்களுக்கு مِّنَ الثَّمَرٰتِ கனிகளிலிருந்து لَعَلَّهُمْ يَشْكُرُوْنَ‏ அவர்கள் நன்றி செலுத்துவதற்காக
14:37. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலைநாட்டுவதற்காக குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!”
14:37. எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததிகளை, மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக வசித்திருக்கச் செய்து விட்டேன். அது விவசாய மற்றதொரு பள்ளத்தாக்கு! எங்கள் இறைவனே! அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருப்பதற்காக (அங்கு வசிக்கச் செய்தேன்). மனிதர்களில் ஒரு தொகையினரின் உள்ளங்கள் அவர்களை நேசிக்கும்படி நீ செய்வாயாக! (பற்பல) கனிவர்க்கங்களையும் நீ அவர்களுக்கு உணவாக அளித்து வருவாயாக! (அதற்கு) அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவார்கள்.
14:37. எங்கள் இறைவனே! நான் என் மக்களில் சிலரை விவசாயம் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், கண்ணியத்திற்குரிய உன்னுடைய இல்லத்தருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவனே! அவர்கள் (இங்கு) தொழுகையை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்). எனவே, அவர்கள்மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர்களாய்த் திகழக்கூடும்!
14:37. “எங்களுடைய இரட்சகனே! நிச்சயமாக நான் என்னுடைய சந்ததியை மிக்க கண்ணியம் வாய்ந்த உன் வீட்டின் சமீபமாக, விவசாயமில்லாத பள்ளத்தாக்கில் குடியேற்றிவிட்டேன், எங்களுடைய இரட்சகனே! அவர்கள் (அங்கு) தொழுகையை நிறைவேற்றுவதற்காக, ஆகவே மனிதர்களி(ல் ஒரு சிலரி)ன் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்தவையாக நீ ஆக்குவாயாக! அவர்கள் உனக்கு நன்றி செலுத்துவதற்காக (பற்பல) கனி வர்க்கங்களிலிருந்து நீ அவர்களுக்கு உணவும் அளிப்பாயாக!”
14:38
14:38 رَبَّنَاۤ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِىْ وَمَا نُعْلِنُ‌ ؕ وَمَا يَخْفٰى عَلَى اللّٰهِ مِنْ شَىْءٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّكَ நிச்சயமாக நீ تَعْلَمُ அறிவாய் مَا எதை نُخْفِىْ நாங்கள் மறைப்போம் وَمَا எதை نُعْلِنُ‌ ؕ வெளிப்படுத்துவோம் وَمَا يَخْفٰى மறையாது عَلَى اللّٰهِ அல்லாஹ்விற்கு مِنْ شَىْءٍ எதுவும் فِى الْاَرْضِ பூமியில் وَلَا فِى السَّمَآءِ‏ இன்னும் வானத்தில்
14:38. “எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, வானத்திலோ உள்ள எந்த பொருளும் மறைந்ததாக இல்லை.
14:38. எங்கள் இறைவனே! நாங்கள் (உள்ளங்களில்) மறைத்துக்கொள்வதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். வானத்திலோ பூமியிலோ உள்ளவற்றில் எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல.
14:38. எங்கள் இறைவனே! திண்ணமாக நாங்கள் மறைத்து வைக்கிற மற்றும் வெளிப்படுத்துகின்ற அனைத்தையும் நீ அறிவாய் பூமியிலும் சரி, வானத்திலும் சரி, எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல.
14:38. “எங்களுடைய இரட்சகனே! நாங்கள் (இதயங்களில்) மறைத்துக் கொள்வதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய்! பூமியிலோ, வானத்திலோ (உள்ளவற்றில்) எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததல்ல.”
14:39
14:39 اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ وَهَبَ لِىْ عَلَى الْـكِبَرِ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ‌ؕ اِنَّ رَبِّىْ لَسَمِيْعُ الدُّعَآءِ‏
اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْ எத்தகையவன் وَهَبَ வழங்கினான் لِىْ எனக்கு عَلَى الْـكِبَرِ வயோதிகத்தில் اِسْمٰعِيْلَ இஸ்மாயீலை وَاِسْحٰقَ‌ؕ இன்னும் இஸ்ஹாக்கை اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் لَسَمِيْعُ நன்கு செவியுறுபவன் الدُّعَآءِ‏ பிரார்த்தனையை
14:39. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.
14:39. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்குரியது; அவன்தான் இவ்வயோதிக (கால)த்தில் இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் எனக்கு(ச் சந்ததிகளாக) அளித்தான். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனைகளை (கருணையுடன்) செவியுறுபவன் ஆவான்.
14:39. முதுமைக் காலத்தில் இஸ்மாயீல், இஸ்ஹாக் போன்ற மக்களை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! திண்ணமாக என்னுடைய இறைவன் பிரார்த்தனைகளைச் செவியேற்பவனாவான்.
14:39. “(என்னுடைய) வயோதிக) காலத்தில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் எனக்கு அன்பளிப்பாக வழங்கினானே அத்தகைய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், நிச்சயமாக என் இரட்சகன் பிரார்த்தனையைச் செவியேற்கிறவன்”
14:40
14:40 رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌ ۖ  رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ‏
رَبِّ என் இறைவா اجْعَلْنِىْ ஆக்கு/என்னை مُقِيْمَ நிலைநிறுத்துபவனாக الصَّلٰوةِ தொழுகையை وَمِنْ ذُرِّيَّتِىْ‌ இன்னும் என் சந்ததிகளிலிருந்து ۖ  رَبَّنَا எங்கள் இறைவா وَتَقَبَّلْ இன்னும் ஏற்றுக் கொள் دُعَآءِ‏ என் பிரார்த்தனையை
14:40. (“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”
14:40. என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக!
14:40. என் இறைவா! தொழுகையை நிலைநிறுத்துபவனாய் என்னை ஆக்குவாயாக! என் வழித்தோன்றல்களிலிருந்தும் (தொழுகையை நிலைநாட்டுபவர்களை) தோற்றுவிப்பாயாக! எங்கள் இறைவனே! மேலும், எனது இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!
14:40. மேலும், “என்னுடைய இரட்சகனே! என்னையும் என் சந்ததியிலுள்ளோரையும் தொழுகையை நிறைவேற்றுபவர்களாக ஆக்கி வைப்பாயாக! எங்களுடைய இரட்சகனே! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்தும் கொள்வாயாக!
14:41
14:41 رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ‏
رَبَّنَا எங்கள் இறைவா اغْفِرْ மன்னிப்பளி لِىْ எனக்கு وَلـِوَالِدَىَّ இன்னும் என் தாய் தந்தைக்கு وَلِلْمُؤْمِنِيْنَ இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு يَوْمَ நாளில் يَقُوْمُ நிறைவேறும் الْحِسَابُ‏ விசாரணை
14:41. “எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” (என்று பிரார்த்தித்தார்).  
14:41. எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்கு நிறைவேறுகின்ற (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!'' (என்று பிரார்த்தித்தார்.)
14:41. எங்கள் இறைவனே! எனக்கும் என் பெற்றோருக்கும் நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில் மன்னிப்பை அருள்வாயாக!”
14:41. “எங்களுடைய இரட்சகனே! எனக்கும், என் பெற்றோருக்கும், (மற்ற) விசுவாசிகளுக்கும் கேள்வி கணக்கு நிலைபெறும் (மறுமை) நாளில் மன்னித்தருள்வாயாக” (என்றும் பிரார்த்தித்தார்).
14:42
14:42 وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظّٰلِمُوْنَ‌ ؕ اِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيْهِ الْاَبْصَارُ ۙ‏
وَلَا تَحْسَبَنَّ எண்ணி விடாதீர் اللّٰهَ அல்லாஹ்வை غَافِلًا கவனிக்காதவனாக عَمَّا يَعْمَلُ செய்வதைப் பற்றி الظّٰلِمُوْنَ‌ ؕ அக்கிரமக்காரர்கள் اِنَّمَا يُؤَخِّرُ பிற்படுத்துவதெல்லாம் هُمْ அவர்களை لِيَوْمٍ ஒரு நாளுக்காக تَشْخَصُ கூர்ந்து விழித்திடும் فِيْهِ அதில் الْاَبْصَارُ ۙ‏ பார்வைகள்
14:42. மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.
14:42. (நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீர் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடிய தொரு மறுமை) நாள் வரும் வரைதான்!
14:42. இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை அல்லாஹ் கவனிக்காமல் இருக்கின்றான் என்று (நபியே!) நீர் கருத வேண்டாம்! அவர்களை அவன் விட்டுவைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும்தான்! அந்நாளில் அவர்களின் விழிகள் மருளும்;
14:42. மேலும், (நபியே!) அநியாயக்காரர்கள் செய்கின்றவைகளைப் பற்றி அல்லாஹ்வை பராமுகமானவனாக நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம், அவர்களை அவன் தாமதப்படுத்துவதெல்லாம் பார்வைகள் எதில் நிலை குத்தியவாறு இருக்குமோ அந்த (கொடியதொரு மறுமை) நாளுக்காகத்தான்.,
14:43
14:43 مُهْطِعِيْنَ مُقْنِعِىْ رُءُوْسِهِمْ لَا يَرْتَدُّ اِلَيْهِمْ طَرْفُهُمْ‌ ۚ وَاَفْـِٕدَتُهُمْ هَوَآءٌ ؕ‏
مُهْطِعِيْنَ விரைந்தவர்களாக مُقْنِعِىْ உயர்த்தியவர்களாக رُءُوْسِهِمْ தங்கள் தலைகளை لَا يَرْتَدُّ திரும்பாது اِلَيْهِمْ அவர்களிடம் طَرْفُهُمْ‌ ۚ அவர்களின் பார்வை وَاَفْـِٕدَتُهُمْ அவர்களுடைய உள்ளங்கள் هَوَآءٌ ؕ‏ வெற்றிடமாக
14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங் கொண்டு) சூனியமாக இருக்கும்.
14:43. (அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும்.
14:43. அவர்கள் தம் தலைகளை மேலே உயர்த்திக் கொண்டு ஓடுவார்கள்; அவர்களின் பார்வை நிலை குத்தியிருக்கும்; மேலும், அவர்களுடைய இதயங்கள் சூன்யமாகிவிட்டிருக்கும்!
14:43. (அந்நாளில்) அவர்கள் விரைந்து ஓடக்கூடியவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தி(மேல் நோக்கி)யவர்களாக இருப்பர், அவர்களுடைய (நிலைகுத்திய) பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது, அவர்களுடைய இதயங்கள் (திக் பிரமை கொண்டு) செயலற்றுவிடும்.
14:44
14:44 وَاَنْذِرِ النَّاسَ يَوْمَ يَاْتِيْهِمُ الْعَذَابُ فَيَـقُوْلُ الَّذِيْنَ ظَلَمُوْا رَبَّنَاۤ اَخِّرْنَاۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ نُّجِبْ دَعْوَتَكَ وَنَـتَّبِعِ الرُّسُلَ‌ؕ اَوَلَمْ تَكُوْنُوْۤااَقْسَمْتُمْ مِّنْ قَبْلُ مَالَـكُمْ مِّنْ زَوَالٍۙ‏
وَاَنْذِرِ எச்சரிப்பீராக النَّاسَ மக்களை يَوْمَ நாள் يَاْتِيْهِمُ அவர்களுக்கு வரும் الْعَذَابُ வேதனை فَيَـقُوْلُ கூறுவர் الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا அநியாயம் செய்தனர் رَبَّنَاۤ எங்கள் இறைவா اَخِّرْنَاۤ எங்களை பிற்படுத்து اِلٰٓى வரை اَجَلٍ ஒரு தவனை قَرِيْبٍۙ சமீபமானது نُّجِبْ பதிலளிப்போம் دَعْوَتَكَ உன் அழைப்புக்கு وَنَـتَّبِعِ இன்னும் பின்பற்றுவோம் الرُّسُلَ‌ؕ தூதர்களை اَوَلَمْ تَكُوْنُوْۤا நீங்கள் இருக்கவில்லையா? اَقْسَمْتُمْ சத்தியம் செய்தீர்கள் مِّنْ قَبْلُ இதற்கு முன்னர் مَالَـكُمْ உங்களுக்கு இல்லை مِّنْ زَوَالٍۙ‏ அழிவே
14:44. எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; “எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்” என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) “உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா?” (என்றும்)
14:44. ஆகவே, (நபியே!) இத்தகைய வேதனை நாள் வருவதைப் பற்றி நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. வரம்பு மீறியவர்கள் (அந்நாளில் தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு சொற்பத் தவணையளி! நாங்கள் உன் அழைப்புக்கு (இனி) செவி கொடுத்து, (உன்) தூதரைப் பின்பற்றி நடப்போம்'' என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன் அவர்களை நோக்கி) ‘‘இதற்கு முன்னர் நீங்கள் உங்களுக்கு (இவ்வுலகில்) அழிவே இல்லை என்று சத்தியம் செய்து கூறிக் கொண்டிருக்கவில்லையா?'' (என்று கேட்பான்.)
14:44. வேதனை வரக்கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அன்று இந்த அக்கிரமக்காரர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவனே! இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! அவ்வாறு அளித்தால், உனது அழைப்பினை நாங்கள் விரைந்து ஏற்றுக் கொள்வோம். மேலும், (உன்) தூதர்களையும் பின்பற்றுவோம்.” (அப்போது அவர்களுக்கு இவ்வாறு தெளிவாகப் பதில் கூறப்படும்:) “எங்களுக்கு அழிவே இல்லை” என்று இதற்கு முன்னர் (பல முறை) சத்தியம் செய்து கூறிக் கொண்டிருந்தவர்கள்தாமே நீங்கள்!
14:44. அன்றியும், (நபியே!) மனிதர்களை – அவர்களுக்கு வேதனை வரும்நாளைப் பற்றி நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அநியாயம் செய்தார்களே அத்தகையோர் - (அந்நாளில்) “எங்கள் இரட்சகனே! சமீபத்திய (சொற்ப) தவணை வரை எங்களைப் பிற்படுத்துவாயாக! (அவ்வாறு நீ எங்களை பிற்படுத்தினால்) நாங்கள் உன் அழைப்பை ஏற்கின்றோம், (உன்) தூதர்களையும் பின்பற்றுகின்றோம்” என்று கூறுவார்கள், “(இதற்கு) முன்னர் உங்களுக்கு அழிவே இல்லை என்று நீங்கள் சத்தியம் செய்து (கூறிக்) கொண்டிருக்கவில்லையா?” (என்றும்),
14:45
14:45 وَّسَكَنْتُمْ فِىْ مَسٰكِنِ الَّذِيْنَ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ وَتَبَيَّنَ لَـكُمْ كَيْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَـكُمُ الْاَمْثَالَ‏
وَّسَكَنْتُمْ இன்னும் வசித்தீர்கள் فِىْ مَسٰكِنِ வசிப்பிடங்களில் الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْۤا தீங்கிழைத்தனர் اَنْفُسَهُمْ தமக்குத்தாமே وَتَبَيَّنَ இன்னும் தெளிவானது لَـكُمْ உங்களுக்கு كَيْفَ எப்படி فَعَلْنَا நாம் செய்தோம் بِهِمْ அவர்களுக்கு وَضَرَبْنَا இன்னும் விவரித்தோம் لَـكُمُ உங்களுக்கு الْاَمْثَالَ‏ உதாரணங்களை
14:45. அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்கு தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).
14:45. ‘‘தமக்குத்தாமே தீங்கிழைத்து(க் கொண்டு அழிந்து போனவர்கள்) வசித்திருந்த இடத்தில் நீங்களும் வசித்திருக்கவில்லையா? (என்றும்), நாம் அவர்களை என்ன செய்தோம் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கவில்லையா? (இதைப் பற்றி) உங்களுக்குப் பல உதாரணங்களையும் நாம் எடுத்துக் கூறவில்லையா'' (என்றும் பதில் கூறுவான்.)
14:45. உண்மையில் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்கள் வாழ்ந்த ஊர்களில்தான் நீங்கள் வசித்து வந்தீர்கள்; அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டிருந்தது; மேலும், அவர்களை உதாரணமாகக் கூறியும் உங்களுக்கு உண்மையைப் புரிய வைத்திருந்தோம்!
14:45. “அன்றியும் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களின் வசிப்பிடங்களில் நீங்கள் வசித்தீர்கள், நாம் அவர்களை எவ்வாறு (வேதனை) செய்தோம் என்பது உங்களுக்கு நன்கு தெளிவாகியும் விட்டது, (இதனைப்பற்றி) உங்களுக்குப் பல (முன்) உதாரணங்களையும் நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம்” (என்றும் அல்லாஹ் பதில் கூறுவான்).
14:46
14:46 وَقَدْ مَكَرُوْا مَكْرَهُمْ وَعِنْدَ اللّٰهِ مَكْرُهُمْؕ وَاِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُوْلَ مِنْهُ الْجِبَالُ‏
وَقَدْ திட்டமாக مَكَرُوْا சூழ்ச்சி செய்தனர் مَكْرَهُمْ தங்கள் சூழ்ச்சியை وَعِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَكْرُهُمْؕ அவர்களுடைய சூழ்ச்சி وَاِنْ كَانَ இருந்தாலும் مَكْرُ சூழ்ச்சி هُمْ அவர்களுடைய لِتَزُوْلَ பெயர்த்துவிடும்படி مِنْهُ அதனால் الْجِبَالُ‏ மலைகள்
14:46. எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.
14:46. எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளை இறைவன் முன்பாகவே செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய சூழ்ச்சிகளோ மலைகளையும் பெயர்த்து விடக்கூடியவையாக இருக்கின்றன! (ஆயினும், அவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றும் பலிக்கப் போவதில்லை!)
14:46. அவர்கள் விதவிதமான சூழ்ச்சிகளைச் செய்து பார்த்தனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளையே பெயர்த்துவிடக் கூடியவையாக இருப்பினும் அவர்களுடைய ஒவ்வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் சூட்சுமம் அல்லாஹ்விடம் இருந்தது.
14:46. இன்னும், அவர்கள் தங்கள் சூழ்ச்சியை உறுதியாகச் செய்து கொண்டிருந்தனர், அவர்களுடைய சூழ்ச்சி(க்குரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது, அவர்களுடைய சூழ்ச்சி, அதனால் மலைகளும் பெயர்ந்துவிடக் கூடியவைகளாக இருந்தபோதிலும் (ஒன்றும் பலனளிக்கப் போவதில்லை.)
14:47
14:47 فَلَا تَحْسَبَنَّ اللّٰهَ مُخْلِفَ وَعْدِهٖ رُسُلَهٗؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ ذُوْ انْتِقَامٍؕ‏
فَلَا تَحْسَبَنَّ நிச்சயமாகஎண்ணாதீர் اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِفَ மீறுபவனாக وَعْدِهٖ தனது வாக்கை رُسُلَهٗؕ தனது தூதர்களுக்கு اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَزِيْزٌ மிகைத்தவன் ذُوْ انْتِقَامٍؕ‏ பழிவாங்குபவன்
14:47. ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே!) நீர் எண்ண வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழிவாங்குபவனாகவும் இருக்கின்றான்.
14:47. அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியில் மாறி விடுவான் என்று (நபியே!) நீர் ஒருக்காலும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (அவர்கள் அனைவரையும்) மிகைத்தவன், பழிவாங்குபவன் ஆவான்.
14:47. (நபியே!) அல்லாஹ் தன் தூதர்களிடம் அளித்துள்ள வாக்குறுதிக்கு மாறு செய்வான் என்று நீர் ஒருபோதும் கருதவேண்டாம். திண்ணமாக, அல்லாஹ் வல்லமையுடையவனும், பழிவாங்குபவனும் ஆவான்.
14:47. அல்லாஹ்வை – தன்னுடைய தூதர்களுக்கு தான் வாக்களித்ததற்கு மாறு செய்கின்றவன் என (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம், மேலும், நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன், தண்டித்தலையுடையவன்.
14:48
14:48 يَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَيْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ‌ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ‏
يَوْمَ நாளில் تُبَدَّلُ மாற்றப்படும் الْاَرْضُ பூமி غَيْرَ الْاَرْضِ வேறு பூமியாக وَالسَّمٰوٰتُ‌ இன்னும் வானங்கள் وَبَرَزُوْا இன்னும் வெளிப்படுவர் لِلّٰهِ அல்லாஹ்விற்கு الْوَاحِدِ ஒருவன் الْقَهَّارِ‏ அடக்கி ஆளுபவன்
14:48. இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.
14:48. (நபியே! ஒரு நாளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக:) அந்நாளில் இந்தப் பூமியை மாற்றி வேறுவித பூமியாக அமைக்கப்பட்டுவிடும்; வானங்களும் அவ்வாறே. (ஒவ்வொருவரும் தத்தம் இடத்திலிருந்து) வெளிப்பட்டு அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் முன்னால் கூடிவிடுவார்கள்.
14:48. அந்த நாளில் இந்த பூமி வேறு பூமியாகவும், இந்த வானங்கள் வேறு வானங்களாகவும் மாற்றப்பட்டு, அடக்கியாளும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் திருமுன்னர் ஒளிவு மறைவின்றி எல்லாரும் வந்து சேர்வார்கள்
14:48. இந்த பூமி வேறு(விதப்) பூமியாகவும், வானங்களும் (அவ்வாறே) மாற்றப்படும் நாளில் (அல்லாஹ் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவான்.) மேலும், யாவரையும் அடக்கி ஆளுகின்ற ஒருவனாகிய அல்லாஹ்வின் சந்நிதியில் அவர்கள் (அனைவரும், அணியணியாக) வெளியாகி (நின்று) விடுவர்.
14:49
14:49 وَتَرَى الْمُجْرِمِيْنَ يَوْمَٮِٕذٍ مُّقَرَّنِيْنَ فِى الْاَصْفَادِ‌ۚ‏
وَتَرَى இன்னும் காண்பீர் الْمُجْرِمِيْنَ குற்றவாளிகளை يَوْمَٮِٕذٍ அந்நாளில் مُّقَرَّنِيْنَ பிணைக்கப்பட்டவர்களாக فِى الْاَصْفَادِ‌ۚ‏ விலங்குகளில்
14:49. இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.
14:49. குற்றவாளிகள் அனைவரும், அந்நாளில் விலங்கிடப்பட்டிருப்பதையும் நீர் காண்பீர்.
14:49. அத்தகைய ஒரு நாளைக் குறித்து நீர் அவர்களை எச்சரிப்பீராக! அந்நாளில் குற்றவாளி(களின் கை கால்)கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பதை நீர் காண்பீர்.
14:49. அன்றியும், அந்நாளில் குற்றவாளிகளை (சிலரைச்சிலரோடு) சங்கிலிகளில் இணைக்கபபட்டவர்களாக நீர் காண்பீர்.
14:50
14:50 سَرَابِيْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰى وُجُوْهَهُمُ النَّارُۙ‏
سَرَابِيْلُهُمْ சட்டைகள்/அவர்களுடைய مِّنْ قَطِرَانٍ தாரினால் وَّتَغْشٰى இன்னும் சூழும் وُجُوْهَهُمُ அவர்களுடைய முகங்கள் النَّارُۙ‏ நெருப்பு
14:50. அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.
14:50. அவர்களுடைய சட்டைகள் தாரால் செய்யப்பட்டிருக்கும். அவர்களுடைய முகத்தை நெருப்பு சூழ்ந்து கொண்டிருக்கும்.
14:50. அவர்கள் தார் ஆடைகளை அணிந்திருப்பார்கள். மேலும், அவர்களின் முகங்களை தீக்கொழுந்துகள் மூடியிருக்கும்.
14:50. அவர்களுடைய சட்டைகள் தாரால் (செய்யப்பட்டு) இருக்கும், அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடிக் கொண்டுமிருக்கும்.
14:51
14:51 لِيَجْزِىَ اللّٰهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْ‌ؕ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏
لِيَجْزِىَ கூலி கொடுப்பதற்காக اللّٰهُ அல்லாஹ் كُلَّ ஒவ்வொரு نَفْسٍ ஆன்மா مَّا எவற்றை كَسَبَتْ‌ؕ செய்தது اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் سَرِيْعُ மிகத் தீவிரமானவன் الْحِسَابِ‏ விசாரிப்பதில்
14:51. அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
14:51. ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்குத் தக்க கூலியை அல்லாஹ் (இவ்வாறு) அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க தீவிரமானவன்.
14:51. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் செய்த செயல்களின் கூலியை அல்லாஹ் வழங்க வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்யப்படும்)! திண்ணமாக, அல்லாஹ் விரைவாய்க் கணக்கு வாங்குபவனாவான்.
14:51. ஓவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தவற்றுக்கு அல்லாஹ் கூலி நல்குவதற்காக (இவ்வாறு நபியே! நீர் காண்பீர்) நிச்சயமாக அல்லாஹ் (கேள்வி) கணக்குக் கேட்பதில் மிக்க தீவிரமானவன்.
14:52
14:52 هٰذَا بَلٰغٌ لِّـلنَّاسِ وَلِيُنْذَرُوْا بِهٖ وَلِيَـعْلَمُوْۤا اَنَّمَا هُوَ اِلٰـهٌ وَّاحِدٌ وَّلِيَذَّكَّرَ اُولُوا الْا َلْبَابِ‏
هٰذَا இது بَلٰغٌ எடுத்துச் சொல்லப்படும் செய்தி لِّـلنَّاسِ மக்களுக்கு وَلِيُنْذَرُوْا இன்னும் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காக بِهٖ இதன் மூலம் وَلِيَـعْلَمُوْۤا இன்னும் அவர்கள் அறிவதற்காக اَنَّمَا هُوَ அவன்தான் اِلٰـهٌ வணக்கத்திற்குரியவன் وَّاحِدٌ ஒரே ஒருவன் وَّلِيَذَّكَّرَ இன்னும் நல்லுபதேசம் பெறுவதற்காக اُولُوا الْا َلْبَابِ‏ அறிவுடையவர்கள்
14:52. இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.
14:52. மனிதர்கள் இதைக்கொண்டு எச்சரிக்கப்பட்டு வணக்கத்திற்குரியவன் ஒரே ஓர் இறைவன்தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்கும், அறிவுடையவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்கும் (குர்ஆனாகிய) இது (அல்லாஹ்வின் கட்டளைகள் உள்ளடங்கிய) ஓர் அறிக்கையாகும்.
14:52. இது, மனிதகுலம் முழுவதற்கும் உரிய தூதுச் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்பட வேண்டும்; மேலும், உண்மையில் இறைவன் ஒருவனே என்பதை அவர்கள் அறிந்திட வேண்டும்; மேலும், அறிவுடையவர்கள் படிப்பினை பெற்றிட வேண்டும் என்பதற்காகவே (இந்தத் தூதுச் செய்தி அனுப்பப்பட்டுள்ளது.)
14:52. இ(வ்வேதமான)து மனிதர்களுக்கு எத்தி வைத்தலாகும், இதனைக்கொண்டு அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும், வணக்கத்திற்குரியவன் ஒரே நாயன் (ஆன அல்லாஹ்)தான் என்று அவர்கள் உறுதியாக அறிந்து கொள்வதற்காகவும் இன்னும் அறிவுடையோர் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவுமாகும்.