19. ஸூரத்து மர்யம்
மக்கீ, வசனங்கள்: 98

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
19:1
19:1 كٓهٰيٰـعٓـصٓ‌ ۚ‏
كٓهٰيٰـعٓـصٓ‌ ۚ‏ காஃப் ஹா யா ஐன் ஸாத்
19:1. காஃப், ஹா, யா, ஐன், ஸாத்
19:1. காஃப் ஹா யா ஐன் ஸாத்.
19:1. காஃப், ஹா, யா, ஐன், ஸாத்.
19:1. காஃப் ஹா யா ஐன் ஸாத்.
19:2
19:2 ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَـبْدَهٗ زَكَرِيَّا ‌ ۖ ‌ۚ‏
ذِكْرُ நினைவு கூர்வது رَحْمَتِ அருள் செய்ததை رَبِّكَ உமது இறைவன் عَـبْدَهٗ தன் அடியார் زَكَرِيَّا ۖ ۚ‏ ஸகரிய்யாவுக்கு
19:2. (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
19:2. (நபியே!) உமது இறைவன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருளை (இங்கு) நினைவு கூர்வீராக.
19:2. உம் இறைவன் தன் அடியார் ஜகரிய்யா மீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும் இது.
19:2. (நபியே! இது) உம்முடைய இரட்சகன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருள் பற்றி நினைவு கூர்வதாகும்.
19:3
19:3 اِذْ نَادٰى رَبَّهٗ نِدَآءً خَفِيًّا‏
اِذْ نَادٰى அவர் அழைத்தபோது رَبَّهٗ தன் இறைவனை نِدَآءً அழைத்தல் خَفِيًّا‏ மறைவாக
19:3. அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).
19:3. அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் (பணிவாக) அழைத்தபோது,
19:3. அவர் தம் இறைவனை மெதுவாக அழைத்தபோது!
19:3. அவர் தன் இரட்சகனைத் தாழ்ந்த குரலில் அழைத்(துப் பிரார்த்தித்)த பொழுது,
19:4
19:4 قَالَ رَبِّ اِنِّىْ وَهَنَ الْعَظْمُ مِنِّىْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْۢ بِدُعَآٮِٕكَ رَبِّ شَقِيًّا‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் وَهَنَ பலவீனமடைந்து விட்டது الْعَظْمُ எலும்பு مِنِّىْ என்னில் وَاشْتَعَلَ வெளுத்து விட்டது الرَّاْسُ தலை شَيْبًا நரையால் وَّلَمْ اَكُنْۢ நான் ஆகமாட்டேன் بِدُعَآٮِٕكَ உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில் رَبِّ என் இறைவா شَقِيًّا‏ துர்பாக்கியவனாக
19:4. (அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.
19:4. ‘‘என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்து விட்டது. என் இறைவனே! (இதுவரை) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கிறாய்.)
19:4. அவர் பணிவுடன் வேண்டினார்: “என் அதிபதியே! என் எலும்புகளோ நலிவடைந்துவிட்டன. மேலும், நரையினால் என் தலை மினுமினுத்துவிட்டது. மேலும், என் அதிபதியே! நான் உன்னிடம் பிரார்த்தனை புரிந்து ஒருபோதும் ஏமாற்றம் அடைந்ததில்லை.
19:4. “என்னுடைய இரட்சகனே! நிச்சயமாக நான் - என் எலும்புகள் பலவீனமடைந்து விட்டன, என் தலையும் நரையால் இலங்குகிறது, என் இரட்சகனே! (இதுவரையில்) நான் உன்னிடம் பிரார்த்தனை செய்து (கேட்டதில்) பாக்கியம் இல்லாதவனாக நான் ஆகவில்லை” என்று கூறினார்.
19:5
19:5 وَاِنِّىْ خِفْتُ الْمَوَالِىَ مِنْ وَّرَآءِىْ وَكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا فَهَبْ لِىْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ‏
وَاِنِّىْ நிச்சயமாக நான் خِفْتُ பயப்படுகிறேன் الْمَوَالِىَ உறவினர்களை مِنْ وَّرَآءِىْ எனக்குப் பின்னால் وَكَانَتِ இன்னும் இருக்கிறாள் امْرَاَتِىْ என் மனைவி عَاقِرًا மலடியாக فَهَبْ ஆகவே, தா! لِىْ எனக்கு مِنْ لَّدُنْكَ உன் புறத்திலிருந்து وَلِيًّا ۙ‏ ஒரு வாரிசை
19:5. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!
19:5. நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளர்களைப் பற்றிப் பயப்படுகிறேன். என் மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கொரு பாதுகாவலனை (குழந்தையை) வழங்கு!
19:5. எனக்குப்பின் என் உறவினர்கள் (மேற்கொள்ளக்கூடிய) தீயவழி பற்றி நான் அஞ்சுகிறேன். மேலும், என்னுடைய மனைவி மலடியாக இருக்கின்றாள். எனவே, உனது தனிப்பட்ட அருளால் எனக்கு ஒரு வாரிசை வழங்குவாயாக!
19:5. “நிச்சயமாக நான் எனக்குப் பின் என் உறவினர்(களின் தீமைக)ளை பயப்படுகிறேன்; என்னுடைய மனைவியோ மலடாக ஆகிவிட்டாள்; ஆகவே உன்னிடத்திலிருந்து (எனக்குப்பின் என் காரியங்களை கவனிக்கும்) ஒரு வாரிசை நீ அளிப்பாயாக!”
19:6
19:6 يَّرِثُنِىْ وَيَرِثُ مِنْ اٰلِ يَعْقُوْبَ ۖ ‌ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا‏
يَّرِثُنِىْ அவர் எனக்கும் வாரிசாக ஆகுவார் وَيَرِثُ இன்னும் வாரிசாக ஆகுவார் مِنْ اٰلِ கிளையினருக்கு يَعْقُوْبَ ۖ  யஃகூபுடைய وَاجْعَلْهُ இன்னும் அவரை ஆக்கு رَبِّ என் இறைவா! رَضِيًّا‏ பொருந்திக் கொள்ளப்பட்டவராக
19:6. “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”
19:6. அவன் எனக்கும், யஅகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக் கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை'' என்று பிரார்த்தித்தார்.
19:6. அவர் எனக்கும் யஃகூபுடைய குடும்பத்தினருக்கும் வாரிசாகத் திகழட்டும். மேலும், என் இறைவா! அவரை விரும்பத்தக்க மனிதராய் ஆக்குவாயாக!”
19:6. “அவர் எனக்கு (என் உடமையில்) வாரிஸாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததிகளிலிருந்து (நபித்துவத்திற்கு) வாரிஸாகவும் இருப்பார், என் இரட்சகனே! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் நீர் ஆக்கி வைப்பாயாக” (என்று பிரார்த்தித்துக் கூறினார்.)
19:7
19:7 يٰزَكَرِيَّاۤ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ اۨسْمُهٗ يَحْيٰى ۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِيًّا‏
يٰزَكَرِيَّاۤ ஸகரிய்யாவே! اِنَّا நிச்சயமாக நாம் نُبَشِّرُكَ உமக்கு நற்செய்தி தருகிறோம் بِغُلٰمِ ஒரு ஆண் குழந்தையைக் கொண்டு اۨسْمُهٗ அதன் பெயர் يَحْيٰى ۙ யஹ்யா لَمْ نَجْعَلْ நாம் படைக்கவில்லை لَّهٗ அதற்கு مِنْ قَبْلُ இதற்கு முன் سَمِيًّا‏ ஒப்பானவரை
19:7. “ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).
19:7. (அதற்கு இறைவன் அவரை நோக்கி) ‘‘ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் ‘யஹ்யா' என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உமக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை'' (என்று கூறினான்.)
19:7. (பதிலளிக்கப்பட்டது:) “ஜகரிய்யாவே! உமக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று நாம் நற்செய்தி அறிவிக்கின்றோம்; அதன் பெயர் ‘யஹ்யா’ ஆகும். இந்தப் பெயருடைய எவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை.”
19:7. (அதற்கு அல்லாஹ் அவரிடம்) “ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் ஒரு மகனை(த்தருவதாக) உமக்கு நன்மாராயங் கூறுகிறோம், அவர் பெயர் யஹ்யாவாகும், இதற்கு முன் அப்பெயரிடப்பட்ட ஒருவரையும் அதற்கு நாம் ஆக்கவில்லை” (என்று கூறினான்.)
19:8
19:8 قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا وَّقَدْ بَلَـغْتُ مِنَ الْـكِبَرِ عِتِيًّا‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா اَنّٰى எப்படி? يَكُوْنُ கிடைக்கும் لِىْ எனக்கு غُلٰمٌ குழந்தை وَّكَانَتِ இருக்கிறாள் امْرَاَتِىْ என் மனைவி عَاقِرًا மலடியாக وَّقَدْ بَلَـغْتُ நானோ அடைந்து விட்டேன் مِنَ الْـكِبَرِ முதுமையின் عِتِيًّا‏ எல்லையை
19:8. (அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.
19:8. அதற்கவர் ‘‘என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என் மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்து விட்டேன்'' என்று கூறினார்.
19:8. அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையினால் தளர்ந்து போய்விட்டேன்.”
19:8. அ(தற்க)வர் “என் இரட்சகனே! என் மனைவியோ மலடியாக இருக்கிறாள், நானோ முதுமையின் முடிவை திட்டமாக அடைந்து விட்டேன், (இந்நிலையில்) எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாவான்?,” என்று கேட்டார்.
19:9
19:9 قَالَ كَذٰلِكَ‌ۚ قَالَ رَبُّكَ هُوَ عَلَىَّ هَيِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْـٴًـــا‏
قَالَ கூறினான் كَذٰلِكَ‌ۚ அப்படித்தான் قَالَ கூறினான் رَبُّكَ உம் இறைவன் هُوَ அது عَلَىَّ எனக்கு هَيِّنٌ மிக எளிது وَّقَدْ திட்டமாக خَلَقْتُكَ நான் உன்னைப் படைத்திருக்கிறேன் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் وَلَمْ تَكُ நீர் இருக்காதபோது شَيْـٴًـــا‏ ஒரு பொருளாக
19:9. “(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்” என்று இறைவன் கூறினான்.
19:9. அதற்கவன் ‘‘(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அ(வ்வாறு செய்வ)து எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீர் ஒன்றுமில்லாமல் இருந்த சமயத்தில் நானே உம்மைப் படைத்தேன் என்று உமது இறைவனே கூறுகிறான்'' என்றும் கூறினான்.
19:9. பதில் கிடைத்தது: “அவ்வாறே ஆகும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “இது என்னைப் பொறுத்து சுலபமானதாகும் இதற்கு முன், நீர் எப்பொருளாகவும் இல்லாதிருந்தபோது, நான் உம்மைப் படைத்திருக்கின்றேனே!”
19:9. “அ(தற்க)வன், அவ்வாறே (நடைபெறும்) என்று கூறினான், இது எனக்கு மிக்க எளிதானது, இதற்கு முன்னர், நீர் ஒன்றுமில்லாமலிருந்த நிலையில் நானே உம்மைப் படைத்தேன்” என்று உமதிரட்சகன் கூறினான்.
19:10
19:10 قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً‌  ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَيَالٍ سَوِيًّا‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா اجْعَلْ لِّىْۤ எனக்கு ஏற்படுத்து اٰيَةً‌  ؕ ஓர் அத்தாட்சியை قَالَ அவன் கூறினான் اٰيَتُكَ உமக்கு அத்தாட்சியாகும் اَلَّا تُكَلِّمَ பேசாமல் இருப்பது தான் النَّاسَ மக்களிடம் ثَلٰثَ மூன்று لَيَالٍ இரவுகள் سَوِيًّا‏ நீர் சுகமாக இருக்க
19:10. (அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!” என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்” என்று கூறினான்.
19:10. அதற்கவர் ‘‘என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி'' என்று கேட்டார். (அதற்கு இறைவன்) ‘‘உமக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது நீர் (சுகமாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்'' என்று கூறினான்.
19:10. அதற்கு ஜகரிய்யா, “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்வாயாக” என்றார். அதற்கு இறைவன், “உமக்கு அடையாளம், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மக்களிடம் உம்மால் பேச இயலாமல் போவதாகும்” என்றான்.
19:10. “அ(தற்க)வர், “என் இரட்சகனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சியை ஆக்குவாயாக! என (பிரார்த்தித்து)க் கேட்டார், அவன் “உமக்கு அத்தாட்சியாவது, நீர் சரீர சுகவாசியாக இருக்க மூன்று இரவுகள் (பகல்கள்) மனிதர்களுடன் பேச முடியாமல் இருப்பதாகும்” என்று கூறினான்.
19:11
19:11 فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ مِنَ الْمِحْرَابِ فَاَوْحٰٓى اِلَيْهِمْ اَنْ سَبِّحُوْا بُكْرَةً وَّعَشِيًّا‏
فَخَرَجَ அவர் வெளியேறி வந்தார் عَلٰى قَوْمِهٖ தனது மக்களுக்கு முன் مِنَ இருந்து الْمِحْرَابِ தொழுமிடம் فَاَوْحٰٓى ஜாடை காண்பித்தார் اِلَيْهِمْ அவர்களை நோக்கி اَنْ سَبِّحُوْا துதியுங்கள் என்று بُكْرَةً காலையிலும் وَّعَشِيًّا‏ மாலையிலும்
19:11. ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், “காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்” என்று உணர்த்தினார்.
19:11. பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடை காண்பித்தார்.
19:11. பிறகு, அவர் மாடத்திலிருந்து வெளியேறி தம் சமுதாயத்தாரிடம் வந்து, “நீங்கள் காலையிலும் மாலையிலும் இறைவனைத் துதியுங்கள்” என்று சாடையாய் உணர்த்தினார்.
19:11. பின்னர், அவர் தொழுமிடத்திலிருந்து தன் சமூகத்தினர்பால் வெளியேறி (முன் வந்து) காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வைப் புகழ்ந்து) துதிசெய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு சாடையாகக் காண்பித்தார்.
19:12
19:12 يٰيَحْيٰى خُذِ الْكِتٰبَ بِقُوَّةٍ‌ ؕ وَاٰتَيْنٰهُ الْحُكْمَ صَبِيًّا ۙ‏
يٰيَحْيٰى யஹ்யாவே خُذِ பற்றிப் பிடிப்பீராக الْكِتٰبَ வேதத்தை بِقُوَّةٍ‌ ؕ பலமாக وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்குக் கொடுத்தோம் الْحُكْمَ ஞானத்தை صَبِيًّا ۙ‏ சிறு குழந்தை
19:12. (அதன் பின்னர்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்” (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
19:12. (நாம் கூறியவாறே ஜகரிய்யாவுக்கு யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரை நோக்கி) ‘‘யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்வீராக'' என்று கூறி, நாம் அவருக்கு (அவருடைய) சிறு வயதிலேயே ஞானத்தையும் அளித்தோம்.
19:12. “யஹ்யாவே, நீர் வேதத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளும்.” குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு நாம் ஹுக்மை* வழங்கினோம்.
19:12. (நாம் வாக்களித்தவாறே யஹ்யா பிறந்த பின்னர் நாம் அவரிடம்) “யஹ்யாவே! நீர் இவ்வேதத்தை பலமாகப் பிடித்துக் கொள்வீராக! (என்று கூறினோம்.) அவர் குழந்தையாக இருந்தபோதே அவருக்கு (சட்ட) ஞானத்தையும் நாம் அளித்தோம்.
19:13
19:13 وَّحَنَانًا مِّنْ لَّدُنَّا وَزَكٰوةً  ؕ وَّكَانَ تَقِيًّا ۙ‏
وَّحَنَانًا இரக்கத்தையும் مِّنْ لَّدُنَّا நம்மிடமிருந்து وَزَكٰوةً  ؕ தூய்மையையும் وَّكَانَ இன்னும் அவர் இருந்தார் تَقِيًّا ۙ‏ இறையச்சமுடையவராக
19:13. அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்.
19:13. இன்னும், இரக்கமுள்ள மனதையும், பரிசுத்தத் தன்மையையும் நாம் அவருக்குக் கொடுத்தோம். ஆகவே, அவர் மிக இறையச்சமுடையவராகவே இருந்தார்.
19:13. மேலும், நம்மிடமிருந்து இளகிய மனத்தையும் தூய்மையையும் வழங்கியிருந்தோம்.
19:13. அன்றியும், நம்மிடமிருந்து இரக்கத்தன்மையையும், பரிசுத்தத் தன்மையையும் (நாம் அவருக்குக் கொடுத்தோம்.) இன்னும், அவர் மிக்க பயபக்தியுடையவராக இருந்தார்.
19:14
19:14 وَّبَرًّۢا بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ جَبَّارًا عَصِيًّا‏
وَّبَرًّۢا இன்னும் நன்மை புரிபவராக بِوَالِدَيْهِ தன் பெற்றோருக்கு وَلَمْ يَكُنْ அவர் இருக்கவில்லை جَبَّارًا முரடராக عَصِيًّا‏ மாறுசெய்பவராக
19:14. மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.
19:14. மேலும், தன் தாய் தந்தைக்கு நன்றி செய்பவராகவே இருந்தார். (அவர்களுக்கு) மாறு செய்பவராகவோ முரடராகவோ இருக்கவில்லை.
19:14. அவர் மிகவும் பேணுதல் உள்ளவராயும் தம் தாய் தந்தையரின் கடமைகளைச் செவ்வனே ஆற்றுபவராகவும் திகழ்ந்தார். அவர் முரடராகவோ, கீழ்ப்படியாதவராகவோ இருக்கவில்லை.
19:14. இன்னும் அவர் தம் பெற்றோர்க்கு நன்மை செய்பவராகவும் (இருந்தார்), அவர் பெருமை கொண்டவராகவோ (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.
19:15
19:15 وَسَلٰمٌ عَلَيْهِ يَوْمَ وُلِدَ وَيَوْمَ يَمُوْتُ وَيَوْمَ يُبْعَثُ حَيًّا‏
وَسَلٰمٌ இன்னும் ஈடேற்றம் عَلَيْهِ அவருக்கு يَوْمَ நாளிலும் وُلِدَ பிறந்த وَيَوْمَ நாளிலும் يَمُوْتُ அவர் மரணிக்கின்ற وَيَوْمَ يُبْعَثُ அவர் எழுப்பப்படுகின்ற நாளிலும் حَيًّا‏ உயிர் பெற்றவராக
19:15. ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.  
19:15. அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும் (மறுமையில்) அவர் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும் அவர் மீது ஸலாம் நிலவுக!
19:15. அவர்மீது சாந்தி உண்டாகட்டும் அவர் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளிலும்!
19:15. அவர் பிறந்த நாளிலும் அவர் இறக்கும் நாளிலும், அவர் உயிர் பெற்றவராக எழுப்பப்படும் (மறுமை) நாளிலும் அவர் மீது சாந்தி உண்டாவதாக.
19:16
19:16 وَاذْكُرْ فِى الْـكِتٰبِ مَرْيَمَ‌ۘ اِذِ انْتَبَذَتْ مِنْ اَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا ۙ‏
وَاذْكُرْ இன்னும் நினைவு கூறுவீராக فِى الْـكِتٰبِ இவ்வேதத்தில் مَرْيَمَ‌ۘ மர்யமை اِذِ انْتَبَذَتْ ஒதுங்கியபோது مِنْ اَهْلِهَا தன் குடும்பத்தினரை விட்டு مَكَانًا இடத்திற்கு شَرْقِيًّا ۙ‏ கிழக்கில்
19:16. (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக; அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,
19:16. (நபியே!) இவ்வேதத்தில் (ஈஸாவின் தாயாகிய) மர்யமைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: அவர் தன் குடும்பத்தினரை விட்டு விலகி கிழக்குத் திசையிலுள்ள (தன்) அறைக்குச் சென்று,
19:16. மேலும் (நபியே!) மர்யத்தைப் பற்றி இந்த வேதத்தில் (உள்ளதை) நீர் விவரித்துக் கூறுவீராக! அவர் தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கியிருந்த நேரத்தில்
19:16. (நபியே!) இவ்வேதத்தில், மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக! அவர் தன் குடும்பத்தினரை விட்டு கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் தனித்தபோது
19:17
19:17 فَاتَّخَذَتْ مِنْ دُوْنِهِمْ حِجَابًا فَاَرْسَلْنَاۤ اِلَيْهَا رُوْحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا‏
فَاتَّخَذَتْ அவர் ஏற்படுத்திக் கொண்டார் مِنْ دُوْنِهِمْ அவர்களுக்கு முன்னாலிருந்து حِجَابًا ஒரு திரையை فَاَرْسَلْنَاۤ நாம் அனுப்பினோம் اِلَيْهَا அவரிடம் رُوْحَنَا நமது தூதரை فَتَمَثَّلَ அவர் தோன்றினார் لَهَا அவளுக்கு بَشَرًا ஒரு மனிதராக سَوِيًّا‏ முழுமையான
19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
19:17. (குளிப்பதற்காகத்) தன் மக்களின் முன் திரையிட்டுக் கொண்ட சமயத்தில் (ஜிப்ரயீல் என்னும்) நம் தூதரை அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் முழுமையான ஒரு மனிதனுடைய கோலத்தில் அவர் முன் தோன்றினார்.
19:17. அவர் ஒரு திரையிட்டு அவர்களிலிருந்து மறைந்திருந்தார். (அப்போது) நாம் அவரிடம் நம்முடைய ரூஹை (வானவரை) அனுப்பினோம். அவர் மர்யத்தின் முன்னிலையில் முழு மனித உருவில் தோன்றினார்.
19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை ஆக்கிக் கொண்டார், அப்பொழுது (ஜிப்ரீல் என்னும்) நம்முடைய ரூஹை அவரிடம் நாம் அனுப்பி வைத்தோம், அவர் சரியான ஒரு மனிதருடைய உருவத்தில் அவருக்கு முன் தோற்றமளித்தார்.
19:18
19:18 قَالَتْ اِنِّىْۤ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا‏
قَالَتْ கூறினார் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَعُوْذُ பாதுகாவல் தேடுகிறேன் بِالرَّحْمٰنِ ரஹ்மானிடம் مِنْكَ உம்மிடமிருந்து اِنْ كُنْتَ நீர் இருந்தால் تَقِيًّا‏ இறையச்சமுடையவராக
19:18. (அப்படி அவரைக் கண்டதும்,) “நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)” என்றார்.
19:18. (அவரைக் கண்டதும்) ‘‘நிச்சயமாக நான் உம்மிடமிருந்து என்னை பாதுகாக்க ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (இங்கிருந்து அப்புறப்பட்டு விடுவீராக)'' என்றார்.
19:18. உடனே மர்யம் கூறினார்: “உம்மை விட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாவல் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்!”
19:18. (மர்யம் ஜிப்ரீலைக் கண்டதும்,) “நிச்சயமாக நான் உம்மைவிட்டும் (காக்குமாறு) ரஹ்மானிடம் பாதுகாவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (என்னிடம் நெருங்காதீர்)” என்று கூறினார்.
19:19
19:19 ‌قَالَ اِنَّمَاۤ اَنَا رَسُوْلُ رَبِّكِ ‌ ۖ  لِاَهَبَ لَـكِ غُلٰمًا زَكِيًّا‏
قَالَ அவர் கூறினார் اِنَّمَاۤ اَنَا நானெல்லாம் رَسُوْلُ தூதர்தான் رَبِّكِ ۖ உமது இறைவனின்  لِاَهَبَ நான்வழங்குவதற்காக لَـكِ உமக்கு غُلٰمًا ஒரு குழந்தையை زَكِيًّا‏ பரிசுத்தமான
19:19. “நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு நன்கொடை அளிக்க (வந்துள்ளேன்”) என்று கூறினார்.
19:19. அதற்கவர், பரிசுத்தமான ஒரு மகனை ‘‘உமக்களி(க்கப்படும் என்பதை உமக்கு அறிவி)ப்ப தற்காக உமது இறைவனால் அனுப்பப்பட்ட (வானவ) தூதர்தான் நான்'' என்றார்.
19:19. அதற்கு அவர் கூறினார்: “நான் உம் இறைவனின் தூதராவேன்; தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக நான் அனுப்பப்பட்டுள்ளேன்.”
19:19. அ(தற்க)வர், “பரிசுத்தமான ஒரு மகனை (அல்லாஹ்விடமிருந்து) உமக்கு நான் நன்கொடையளிப்பதற்காக நிச்சயமாக நான் உமதிரட்சகனின் (மலக்காகிய) ஒரு தூதன்தான்” என்று கூறினார்.
19:20
19:20 قَالَتْ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِيًّا‏
قَالَتْ அவர் கூறினார் اَنّٰى எப்படி? يَكُوْنُ لِىْ எனக்கு ஏற்படும் غُلٰمٌ குழந்தை وَّلَمْ يَمْسَسْنِىْ இன்னும் என்னை தொடவில்லை بَشَرٌ ஓர் ஆடவர் وَّلَمْ اَكُ இன்னும் நான் இல்லையே بَغِيًّا‏ விபச்சாரியாக
19:20. அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
19:20. அதற்கவர் ‘‘எனக்கு எப்படி சந்ததி ஏற்படும்? எம்மனிதனும் என்னைத் தீண்டியதில்லையே; நான் கெட்ட நடத்தையுள்ளவளும் அல்லவே'' என்று கூறினார்.
19:20. மர்யம் கூறினார்: “எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்? என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே; நான் தீய நடத்தையுடையவளும் அல்லவே!”
19:20. அ(தற்க)வர், “எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்? (விவாகத்தின் மூலம்) எந்த ஆடவரும் என்னைத் தீண்டியதில்லையே! நான் கெட்ட நடத்தையுள்ளவளுமல்லவே” என்று கூறினார்.
19:21
19:21 قَالَ كَذٰلِكِ‌ ۚ قَالَ رَبُّكِ هُوَ عَلَىَّ هَيِّنٌ‌ ۚ وَلِنَجْعَلَهٗۤ اٰيَةً لِّلنَّاسِ وَرَحْمَةً مِّنَّا‌ ۚ وَكَانَ اَمْرًا مَّقْضِيًّا‏
قَالَ அவர் கூறினார் كَذٰلِكِ‌ ۚ அப்படித்தான் நடக்கும் قَالَ கூறுகிறான் رَبُّكِ உமது இறைவன் هُوَ அது عَلَىَّ தனக்கு هَيِّنٌ‌ ۚ எளிதாகும் وَلِنَجْعَلَهٗۤ அவரை நாம் ஆக்குவதற்காகவும் اٰيَةً ஓர் அத்தாட்சியாக لِّلنَّاسِ மனிதர்களுக்கு وَرَحْمَةً ஓர் அருளாக مِّنَّا‌ ۚ நம்புறத்திலிருந்து وَكَانَ இது இருக்கிறது اَمْرًا ஒரு காரியமாக مَّقْضِيًّا‏ முடிவுசெய்யப்பட்ட
19:21. “அவ்வாறேயாகும்; “இது எனக்கு மிகவும் சுலபமானதே; மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்” என்று உம் இறைவன் கூறுகிறான்” எனக் கூறினார்.
19:21. அதற்கவர் ‘‘அவ்வாறே (நடைபெறும் என்று) உமது இறைவன் கூறுகிறான் (என்றும்), அது தனக்கு எளிது (என்றும்), அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம் அருளாகவும் நாம் ஆக்குவோம் (என்றும்) இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது'' என்றும் கூறுகிறான்.
19:21. அதற்கு வானவர் கூறினார்: “அவ்வாறே நிகழும்.” உம் இறைவன் கூறுகின்றான்: “அவ்வாறு செய்வது எனக்கு மிகவும் எளிதானது;மேலும், நாம் அக்குழந்தையை மக்களுக்கு ஒரு சான்றாகவும் நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும் ஆக்குவதற்காகவே இவ்வாறு செய்கின்றோம். மேலும், அது நடந்தே தீரும்!”
19:21. அ(தற்க)வர், அவ்வாறே! “அது எனக்கு எளிது அவரை மனிதர்களுக்கு, ஒரு அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காக (நாம் அவரை உண்டாக்கினோம்) என்றும், இது விதிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயம் என்றும் உமதிரட்சகனே கூறுகிறான்” என்று கூறினார்.
19:22
19:22 فَحَمَلَـتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا‏
فَحَمَلَـتْهُ பின்னர், அவர் அவரை கர்ப்பத்தில் சுமந்தாள் فَانْتَبَذَتْ بِهٖ அதனுடன் விலகிச் சென்றார் مَكَانًا இடத்திற்கு قَصِيًّا‏ தூரமான
19:22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
19:22. பின்னர், மர்யம் அந்த குழந்தையை கர்ப்பத்தில் சுமந்து அதனுடன் (அவர் இருந்த இடத்திலிருந்து வெளியேறி) தூரத்திலுள்ள ஓர் இடத்தைச் சென்றடைந்தார்.
19:22. பின்னர், மர்யம் அக்குழந்தையைக் கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஓர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார்.
19:22. பின்னர், அவர் (-மர்யம், ஈஸாவாகிய) அவரைக் கருவுற்றார், (பின்னர், அ(க்கர்ப்ப)த்துடன் தூரமான ஓர் இடத்திற்கு ஓதுங்கிச் சென்றடைந்தார்.
19:23
19:23 فَاَجَآءَهَا الْمَخَاضُ اِلٰى جِذْعِ النَّخْلَةِ‌ۚ قَالَتْ يٰلَيْتَنِىْ مِتُّ قَبْلَ هٰذَا وَكُنْتُ نَسْيًا مَّنْسِيًّا‏
فَاَجَآءَ கொண்டு சென்றது هَا அவரை الْمَخَاضُ பிரசவ வேதனை اِلٰى جِذْعِ மரத்தடிக்கு النَّخْلَةِ‌ۚ பேரிச்சமரம் قَالَتْ அவர் கூறினார் يٰلَيْتَنِىْ مِتُّ நான் மரணிக்க வேண்டுமே قَبْلَ முன்னரே هٰذَا இதற்கு وَكُنْتُ இன்னும் நான் இருக்க வேண்டுமே نَسْيًا مَّنْسِيًّا‏ முற்றிலும் மறக்கப்பட்டவளாக
19:23. பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: “இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா” என்று கூறி(அரற்றி)னார்.
19:23. பின்பு, அவர் ஒரு பேரீச்ச மரத்தடியில் செல்லும்பொழுது அவருக்குப் பிரசவ வேதனை ஏற்பட்டு ‘‘இதற்கு முன்னதாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இறந்திருந்தால் என் எண்ணமே (ஒருவருடைய ஞாபகத்திலும் இல்லாதவாறு) முற்றிலும் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே'' என்று (வேதனையுடன்) கூறினார்.
19:23. பிரசவ வேதனை அவரை ஒரு பேரீச்சை மரத்தடியின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது. அப்போது அவர், “அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டுப் போயிருந்திருக்கக் கூடாதா?” என்று கூறலானார்.
19:23. பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை, ஒரு பேரீச்ச மரத்தின் (காய்ந்த அடிபாகத்தின்பால் அவரைக் கொண்டுவந்து சேர்த்தது, “இதற்கு முன்னதாகவே நான் இறந்து முற்றிலும் மறக்கடிக்கப்பட்டவளாக நான் ஆகியிருக்க வேண்டுமே” என்று (மர்யம்) கூறினார்.
19:24
19:24 فَنَادٰٮهَا مِنْ تَحْتِهَاۤ اَلَّا تَحْزَنِىْ قَدْ جَعَلَ رَبُّكِ تَحْتَكِ سَرِيًّا‏
فَنَادٰٮهَا அவரை அவர் கூவி அழைத்தார் مِنْ تَحْتِهَاۤ அதனுடைய அடிப்புறத்திலிருந்து اَلَّا تَحْزَنِىْ கவலைப்படாதீர் قَدْ جَعَلَ ஏற்படுத்தி இருக்கின்றான் رَبُّكِ உமது இறைவன் تَحْتَكِ உமக்குக் கீழ் سَرِيًّا‏ ஓர் ஊற்றை
19:24. (அப்போது ஜிப்ரீல்) அவருக்குக் கீழிருந்து: “(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்” என்று அழைத்து கூறினார்.
19:24. (பேரீச்ச மரத்தின்) அடிப்புறமிருந்து (ஜிப்ரயீல்) சப்தமிட்டு ‘‘(மர்யமே!) கவலைப்படாதீர்! உமக்குச் சமீபமாக உமது இறைவன் ஓர் ஊற்றை (உதித்து) ஓடச் செய்திருக்கிறான்.
19:24. அப்பொழுது கீழே இருந்து ஒரு வானவர் அவரை அழைத்துக் கூறினார்: “நீர் கவலைப்படாதீர்; உம் இறைவன் உமக்குக் கீழே ஒரு நீரூற்றை அமைத்துள்ளான்.
19:24. அப்போது அவருக்குக் கீழ் புறமிருந்து (ஜிப்ரீயீலாகிய) அவர் சப்தமிட்டு அவரை அழைத்து “(மர்யமே!) நீர் கவலைப்படாதீர்” உம(து பாதத்து)க்கு கீழாக உமதிரட்சகன் ஓர் ஊற்றை திட்டமாக ஆக்கியிருக்கின்றான்” (என்றும்),
19:25
19:25 وَهُزِّىْۤ اِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسٰقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا‏
وَهُزِّىْۤ இன்னும் அசைப்பீராக اِلَيْكِ உம் பக்கம் بِجِذْعِ நடுத்தண்டை النَّخْلَةِ பேரிச்ச மரத்தின் تُسٰقِطْ கொட்டும் عَلَيْكِ உம்மீது رُطَبًا பழங்களை جَنِيًّا‏ பழுத்த
19:25. “இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
19:25. இப்பேரீச்ச மரத்தின் கிளையை, உமது பக்கம் பிடித்து (இழுத்து)க் குலுக்குவீராக. அது பழுத்த பழங்களை உம் மீது சொரியும்.
19:25. மேலும், பேரீச்சை மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்கும். அது உம்மீது புத்தம் புதிய பேரீச்சம் பழங்களை உதிர்க்கும்;
19:25. மேலும், “இப்பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தை நீர் உம்பக்கம் (இழுத்துக்) குலுக்குவீராக! அது பழுத்த பழங்களை உம்மீது சொரியும்” (என்றும்,)
19:26
19:26 فَكُلِىْ وَاشْرَبِىْ وَقَرِّىْ عَيْنًا‌ ۚ فَاِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ اَحَدًا ۙ فَقُوْلِىْۤ اِنِّىْ نَذَرْتُ لِلرَّحْمٰنِ صَوْمًا فَلَنْ اُكَلِّمَ الْيَوْمَ اِنْسِيًّا ‌ۚ‏
فَكُلِىْ இன்னும் நீர் புசிப்பீராக وَاشْرَبِىْ பருகுவீராக وَقَرِّىْ குளிர்வீராக عَيْنًا‌ ۚ கண் فَاِمَّا تَرَيِنَّ ஆகவே நீர் பார்த்தால் مِنَ الْبَشَرِ மனிதரில் اَحَدًا ۙ யாரையும் فَقُوْلِىْۤ கூறுவீராக اِنِّىْ நிச்சயமாக நான் نَذَرْتُ நேர்ச்சை செய்துள்ளேன் لِلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு صَوْمًا நோன்பை فَلَنْ اُكَلِّمَ ஆகவே நான் அறவே பேசமாட்டேன் الْيَوْمَ இன்று اِنْسِيًّا ۚ‏ எந்த மனிதனிடமும்
19:26. “ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், “மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்” என்று கூறும்.
19:26. ஆகவே, (அப்பழங்களை) நீர் புசித்து (இந்த ஊற்றின் நீரைக்) குடித்து (இக்குழந்தையைக் கண்டு) கண் குளிர்ந்திருப்பீராக! மனிதரில் எவரைக் கண்ட போதிலும் ‘‘நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்க முடிவு செய்துள்ளேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன் என்று கூறிவிடுவீராக'' என்றும் கூறினார்.
19:26. ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் (அவரிடம்) கூறிவிடும்: “கருணைமிக்க இறைவனுக்காக நோன்பு நோற்க வேண்டுமென நான் நேர்ந்திருக்கின்றேன். ஆதலால், இன்று நான் எவரிடமும் பேசமாட்டேன்.”
19:26. “அப்போது, (அப்பழங்களை) நீர் உண்பீராக! இன்னும், (ஊற்றின் நீரைக்) குடித்துக் கொள்வீராக! (இக்குழந்தையினால் உம்) கண் குளிர்ந்துமிருப்பீராக! பின்னர், மனிதர்களில் எவரையேனும் நிச்சயமாக நீர் கண்டால், நான் அர்ரஹ்மானுக்கு நோன்பை நேர்ச்சை செய்திருக்கின்றேன்; ஆகவே, இன்றையத்தினம் எந்த மனிதருடனும் நான் பேசவே மாட்டேன் என்று (சைகை மூலம்) கூறிவிடுவீராக” (என்றும் கூறினார்)
19:27
19:27 فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ‌ؕ قَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـٴًـــا فَرِيًّا‏
فَاَتَتْ அவர் வந்தார் بِهٖ அதைக் கொண்டு قَوْمَهَا தனது மக்களிடம் تَحْمِلُهٗ‌ؕ அதைச் சுமந்தவராக قَالُوْا அவர்கள் கூறினார்கள் يٰمَرْيَمُ மர்யமே! لَقَدْ جِئْتِ நீ செய்து விட்டாய் شَيْـٴًـــا ஒரு காரியத்தை فَرِيًّا‏ பெரிய
19:27. பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!”
19:27. பின்னர், (மர்யம் தான் பெற்ற) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தன் மக்களிடம் வரவே, அவர்கள் (இவரை நோக்கி) ‘‘மர்யமே! நிச்சயமாக நீ மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய்.
19:27. பிறகு, அவர் அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார். அவர்கள் கூறினர்: “மர்யமே! நீ ஒரு பெரும் பாவச்செயலைச் செய்து விட்டாயே...!
19:27. (அக்குழந்தையைப் பிரசவித்த) பின்னர், அவர் (மர்யம்) அதைச் சுமந்து கொண்டு தன் சமூகத்தாரிடம் வந்தார், அவர்கள் (இவரை நோக்கி) “மர்யமே! நிச்சயமாக மறுக்கப்பட்ட (இழிவான ஒரு பெருங்)காரியத்தை நீர் கொண்டு வந்து விட்டீர்” என்று கூறினார்கள்.
19:28
19:28 يٰۤـاُخْتَ هٰرُوْنَ مَا كَانَ اَ بُوْكِ امْرَاَ سَوْءٍ وَّمَا كَانَتْ اُمُّكِ بَغِيًّا‌ ۖ‌ ۚ‏
يٰۤـاُخْتَ சகோதரியே هٰرُوْنَ ஹாரூனுடைய مَا كَانَ இருக்கவில்லை اَ بُوْكِ உமது தந்தை امْرَاَ سَوْءٍ கெட்டவராக وَّمَا كَانَتْ இருக்கவில்லை اُمُّكِ உமது தாயும் بَغِيًّا‌ ۖ‌ ۚ‏ நடத்தைகெட்டவளாக
19:28. “ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை” (என்று பழித்துக் கூறினார்கள்).
19:28. ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்டவராக இருக்கவில்லை(யே); உன் தாயும் நடத்தைக் கெட்டவளாக இருக்கவில்லையே!'' என்று கூறினார்கள்.
19:28. ஹாரூனின் சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராய் இருக்கவில்லை; உன் தாயும் தீய நடத்தையுடையவளாய் இருக்கவில்லை!”
19:28. “ஹாரூனுடைய சகோதரியே! உன் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை(யே) உன் தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை” என்று (நிந்தித்துக்) கூறினார்கள்.
19:29
19:29 فَاَشَارَتْ اِلَيْهِ‌ ؕ قَالُوْا كَيْفَ نُـكَلِّمُ مَنْ كَانَ فِى الْمَهْدِ صَبِيًّا‏
فَاَشَارَتْ ஜாடை காண்பித்தார் اِلَيْهِ‌ ؕ அதன் பக்கம் قَالُوْا அவர்கள் கூறினார்கள் كَيْفَ எப்படி نُـكَلِّمُ நாங்கள் பேசுவோம் مَنْ كَانَ இருக்கின்றவரிடம் فِى الْمَهْدِ மடியில் صَبِيًّا‏ குழந்தையாக
19:29. (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; “நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?” என்று கூறினார்கள்.
19:29. (அதற்கவர், இதைப் பற்றித் தன் குழந்தையிடம் கேட்கும்படி) அதன் பக்கம் (கையை) ஜாடை காண்பித்தார். அதற்கவர்கள் ‘‘மடியிலிருக்கக்கூடிய சிறு குழந்தையிடம் நாங்கள் எப்படி பேசுவோம்'' என்று கூறினார்கள்.
19:29. அப்போது, மர்யம் குழந்தையின் பக்கம் சைக்கினை செய்தார். அதற்கு மக்கள் கேட்டார்கள்: “தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் நாங்கள் எப்படிப் பேசுவது?”
19:29. (இதைப்பற்றித் தன் குழந்தையிடமே கேட்குமாறு மர்யமாகிய) அவர் அதன் பக்கம் சுட்டிக் காண்பித்தார், அ(தற்க)வர்கள், “மடியில் குழந்தையாக இருப்பவரிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம்? என்று கூறினார்கள்.
19:30
19:30 قَالَ اِنِّىْ عَبْدُ اللّٰهِ ؕ اٰتٰٮنِىَ الْكِتٰبَ وَجَعَلَنِىْ نَبِيًّا ۙ‏
قَالَ அவர் கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் عَبْدُ அடிமை اللّٰهِ ؕ அல்லாஹ்வின் اٰتٰٮنِىَ எனக்குக்கொடுப்பான் الْكِتٰبَ வேதத்தை وَجَعَلَنِىْ என்னை ஆக்குவான் نَبِيًّا ۙ‏ நபியாக
19:30. “நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
19:30. (இதைச் செவியுற்ற அக்குழந்தை அவர்களை நோக்கிக்) கூறியதாவது: ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை நபியாகவும் ஆக்குவான்.
19:30. உடனே, குழந்தை கூறிற்று: “நான் அல்லாஹ்வின் அடிமை ஆவேன். அவன் எனக்கு வேதம் அருளினான்; என்னைத் தூதராகவும் ஆக்கினான்;
19:30. (அப்பொழுது அவர்களிடம்) “நிச்சயமாக நான், அல்லாஹ்வுடைய அடியான், அவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் என்னை அவன் ஆக்கி இருக்கிறான்” என்று (அக்குழந்தை) கூறியது.
19:31
19:31 وَّجَعَلَنِىْ مُبٰـرَكًا اَيْنَ مَا كُنْتُ وَاَوْصٰنِىْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَيًّا ‌ۖ ‏
وَّجَعَلَنِىْ இன்னும் அவன் என்னை ஆக்குவான் مُبٰـرَكًا அருள்மிக்கவனாக اَيْنَ مَا كُنْتُ நான் எங்கிருந்தாலும் وَاَوْصٰنِىْ எனக்கு கட்டளையிட்டுள்ளான் بِالصَّلٰوةِ தொழுகையைக் கொண்டும் وَالزَّكٰوةِ ஸகாத்தைக் கொண்டும் مَا دُمْتُ நான்இருக்கின்றவரை حَيًّا ۖ ‏ உயிருள்ளவனாக
19:31. “இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
19:31. நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான்.
19:31. பெரும் பாக்கியமுடையவனாயும் ஆக்கினான் நான் எங்கிருந்தாலும் சரியே! தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறும் அவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான், நான் உயிரோடு இருக்கும் காலம் வரை!
19:31. “நான் எங்கிருந்த போதிலும், அவன் என்னை (மிக்க) பரக்கத்துச் செய்யப்பட்டவனாகவும் ஆக்கியிருக்கிறான், நான் ஜீவித்திருக்கும் காலமெல்லாம் தொழுகையை (நிறைவேற்றுவது)க் கொண்டும், ‘ஜகாத்தைக் (கொடுத்து வருவது) கொண்டும் அவன் எனக்கு உபதேசம் செய்திருக்கிறான்.
19:32
19:32 وَّبَرًّۢابِوَالِدَتِىْ وَلَمْ يَجْعَلْنِىْ جَبَّارًا شَقِيًّا‏
وَّبَرًّۢا நன்மைசெய்பவனாக بِوَالِدَتِىْ என் தாய்க்கு وَلَمْ يَجْعَلْنِىْ இன்னும் அவன் என்னை ஆக்கவில்லை جَبَّارًا பெருமையுடையவனாக شَقِيًّا‏ தீயவனாக
19:32. “என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
19:32. என் தாய்க்கு நான் நன்றி செய்யும்படியாகவும் (எனக்கு உபதேசித்து) நான் முரடனாக வழி கெட்டவனாக ஆகாதபடியும் செய்வான்.
19:32. மேலும், என் தாயின் கடமையை நிறைவேற்றுபவனாயும் என்னை ஆக்கினான். மேலும், முரடனாகவும், துர்ப்பாக்கியமுடையவனாகவும் என்னை ஆக்கவில்லை.
19:32. “இன்னும், என்னுடைய தாயாருக்கு நான் நன்றி செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்.) பெருமைக்காரனாக(வோ), துர்ப்பாக்கியமுள்ளவனாக(வோ) அவன் என்னை ஆக்கவில்லை.
19:33
19:33 وَالسَّلٰمُ عَلَىَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا‏
وَالسَّلٰمُ ஈடேற்றம் உண்டாகுக عَلَىَّ எனக்கு يَوْمَ நாளிலும் وُلِدْتُّ நான் பிறந்த وَيَوْمَ اَمُوْتُ நான் மரணிக்கின்றநாளிலும் وَيَوْمَ اُبْعَثُ நான் எழுப்பப்படுகின்ற நாளிலும் حَيًّا‏ உயிருள்ளவனாக
19:33. “இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்” என்று (அக்குழந்தை) கூறியது.
19:33. நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிருள்ளவராக எழுப்பப்படும் நாளிலும், என்மீது ஸலாம் உண்டாகுக!'' (என்றும் அக்குழந்தை கூறியது).
19:33. என் மீது சாந்தி உண்டாகும் நான் பிறந்த நாளிலும், இறக்கும் நாளிலும், உயிரோடு மீண்டும் எழுப்பப்படும் நாளிலும்!”
19:33. “நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும், (மறுமையில்) நான் உயிர்பெற்றவனாக எழுப்பப்படும் நாளிலும், (அல்லாஹ்வின்) சாந்தி என் மீது உண்டாவதாக” (என்றும் கூறியது.)
19:34
19:34 ذٰ لِكَ عِيْسَى ابْنُ مَرْيَمَ ‌ۚ قَوْلَ الْحَـقِّ الَّذِىْ فِيْهِ يَمْتَرُوْنَ‏
ذٰ لِكَ இவர்தான் عِيْسَى ஈஸா ابْنُ மகன் مَرْيَمَ ۚ மர்யமுடைய قَوْلَ கூறுங்கள் الْحَـقِّ உண்மையானகூற்றை الَّذِىْ எது فِيْهِ இதில்தான் يَمْتَرُوْنَ‏ அவர்கள் தர்க்கிக்கின்றனர்
19:34. இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
19:34. இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா. அவரைப் பற்றி (மக்கள் வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் உண்மையான விஷயம் இதுதான்.
19:34. இவர்தான் மர்யமின் குமாரர் ஈஸா! இதுதான் இவரைக் குறித்து மக்கள் ஐயம் கொண்டிருக்கும் விஷயத்தில் உண்மையான கூற்றாகும்.
19:34. அவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா (ஆவார்), எதில் அவர்கள் (சந்தேகித்து) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அது பற்றிய உண்மையான சொல் இதுதான்.
19:35
19:35 مَا كَانَ لِلّٰهِ اَنْ يَّتَّخِذَ مِنْ وَّلَدٍ‌ۙ سُبْحٰنَهٗ‌ؕ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُؕ‏
مَا كَانَ தகுந்ததல்ல لِلّٰهِ அல்லாஹ்விற்கு اَنْ يَّتَّخِذَ அவன் எடுத்துக் கொள்வது مِنْ وَّلَدٍ‌ۙ குழந்தையை سُبْحٰنَهٗ‌ؕ அவன் மகா பரிசுத்தமானவன் اِذَا قَضٰٓى அவன் முடிவு செய்தால் اَمْرًا ஒரு காரியத்தை فَاِنَّمَا يَقُوْلُ அவன் கூறுவதெல்லாம் لَهٗ அதற்கு كُنْ ஆகு فَيَكُوْنُؕ‏ அது ஆகிவிடும்
19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
19:35. ஆகவே, ‘‘(அவர் இறைவனுமல்ல; இறைவனுடைய பிள்ளையுமல்ல. ஏனென்றால்) தனக்குச் சந்ததி எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்கு (ஒரு சிறிதும்) தகுதியல்ல. அவன் மிகப் பரிசுத்தமானவன். எதையும் படைக்கக் கருதினால் அதை ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்). உடனே அது ஆகிவிடும்.
19:35. எவரையும் மகனாக ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வின் நியதியல்ல! அவன் புனிதமானவன்; அவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்தால் “ஆகிவிடு” என்றுதான் ஆணையிடுகின்றான்; உடனே அது ஆகிவிடுகின்றது.
19:35. அல்லாஹ்விற்கு – எந்த ஒரு புதல்வனையும் - அவன் எடுத்துக் கொள்ள வேண்டியது (அவசியம்) இல்லை, அவன் மிகப் பரிசுத்தமானவன், அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால், அவன் அதற்குச் சொல்லுவதெல்லாம் “ஆகுக” என்பதுதான் (உடனே) அது ஆகிவிடும்.
19:36
19:36 وَاِنَّ اللّٰهَ رَبِّىْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ‌ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
وَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ்தான் رَبِّىْ என் இறைவனும் وَرَبُّكُمْ உங்கள் இறைவனும் فَاعْبُدُوْهُ ؕ ஆகவே, அவனையே வணங்குங்கள்! هٰذَا இதுதான் صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏ நேரான பாதை
19:36. “நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்” (என்று நபியே! நீர் கூறும்).
19:36. நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்று நபியே! கூறுவீராக.)
19:36. மேலும் (ஈஸா கூறியிருந்தார்:) “திண்ணமாக, என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனும் அல்லாஹ்தான்! எனவே, அவனுக்கே நீங்கள் அடிபணியுங்கள். இதுதான் நேரான வழியாகும்!”
19:36. (மனிதர்களே!) “நிச்சயமாக அல்லாஹ்தான் என்னுடைய இரட்சகனும், உங்களின் இரட்சகனுமாவான், (ஈஸாவாகிய நானல்ல.) ஆகவே, அ(வன் ஒரு)வனையே நீங்கள் வணங்குங்கள், இதுதான் நேரான வழி (என்று ஈஸா கூறினார்.)
19:37
19:37 فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْۢ بَيْنِهِمْ‌ۚ فَوَيْلٌ لِّـلَّذِيْنَ كَفَرُوْا مِنْ مَّشْهَدِ يَوْمٍ عَظِيْمٍ‏
فَاخْتَلَفَ ஆனால் தர்க்கித்தனர் الْاَحْزَابُ பல பிரிவினர் مِنْۢ بَيْنِهِمْ‌ۚ தங்களுக்கு மத்தியில் فَوَيْلٌ ஆகவே கேடுதான் لِّـلَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்களுக்கு مِنْ مَّشْهَدِ அவர் காணும்போது يَوْمٍ நாளை عَظِيْمٍ‏ மகத்தான
19:37. ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங் கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்!
19:37. ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே (நாம் கூறிய) இதை நிராகரிப்பவர்களுக்கு, அனைவரும் நம்மிடம் ஒன்று சேரக்கூடிய மகத்தான நாளில் கேடுதான்.
19:37. ஆயினும், அவர்களில் பல்வேறு பிரிவினர் தமக்குள் கருத்து மாறுபாடு கொள்ளலாயினர். எனவே, அந்த மாபெரும் மறுமை நாளினை அவர்கள் பார்க்கும்போது இறைவனை நிராகரித்தவர்களுக்கு பெரும் கேடுதான் விளையும்!
19:37. ஆனால், அவர்களிலுள்ள (பல்வேறு கருத்துக் கொண்ட) கூட்டத்தார்கள் (இதைப்பற்றி) தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டனர், ஆகவே (நாம் கூறிய இதனை) நிராகரிப்போருக்கு மகத்தான (மறுமை) நாளின் (பெரும்) காட்சியை காணுமிடத்தில் கேடுதான் (உண்டு),
19:38
19:38 اَسْمِعْ بِهِمْ وَاَبْصِرْۙ يَوْمَ يَاْتُوْنَنَا‌ لٰـكِنِ الظّٰلِمُوْنَ الْيَوْمَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
اَسْمِعْ நன்றாக செவிசாய்ப்பார்கள் بِهِمْ அவர்கள் وَاَبْصِرْۙ நன்றாக பார்ப்பார்கள் يَوْمَ நாளில் يَاْتُوْنَنَا‌ நம்மிடம் அவர்கள் வருகின்ற لٰـكِنِ எனினும் الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் الْيَوْمَ இன்றைய தினம் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில்தான் مُّبِيْنٍ‏ தெளிவான
19:38. அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள்.
19:38. (இன்றைய தினம் இதை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம் கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவிசாய்ப்பார்கள். (நம் வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்.
19:38. அவர்கள் நம்மிடம் வரும் நாளில் அவர்களுடைய காதுகள் நன்கு கேட்டுக்கொண்டிருக்கும்; கண்கள் நன்கு பார்த்துக் கொண்டிருக்கும். ஆயினும், இந்தக் கொடுமையாளர்கள் இன்று வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றார்கள்!
19:38. நம்மிடம் அவர்கள் வரும் (மறுமை) நாளில் அவர்களைக் கேட்கச் செய்ததும், பார்க்கச் செய்ததும் எது? (நன்றாகக் கேட்கவும், பார்க்கவும் செய்வார்கள்) எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றையத்தினம் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்
19:39
19:39 وَاَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ اِذْ قُضِىَ الْاَمْرُ‌‌ۘ وَهُمْ فِىْ غَفْلَةٍ وَّهُمْ لَا يُؤْمِنُوْنَ‏
وَاَنْذِرْهُمْ அவர்களை எச்சரிப்பீராக يَوْمَ நாளை(ப் பற்றி) الْحَسْرَةِ துயரமான اِذْ قُضِىَ الْاَمْرُ‌ۘ தீர்ப்பு முடிவு செய்யப்படும்போது وَهُمْ அவர்கள் இருக்கின்றனர் فِىْ غَفْلَةٍ அறியாமையில் وَّهُمْ அவர்கள் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
19:39. மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கலலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
19:39. ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
19:39. (நபியே!) இம்மக்கள் கவனமின்றியும், நம்பிக்கை கொள்ளாதவர்களாயும் உள்ள இந்நிலையில், அந்த மறுமைநாளைக் குறித்து இவர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! அந்நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்போது வருந்துவதைத்தவிர வேறு வழியேதும் இராது.
19:39. மேலும், (நபியே! நியாயத் தீர்ப்பளிக்கப்பட்டு) காரியம் முடிக்கப் பட்டுவிடும்போது, மிக்க கைசேதமான (அந்த) நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! இன்னும், (இன்றையத் தினம்) அவர்கள் (அதுபற்றி) மறதியில் இருக்கிறார்கள், அவர்களோ விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
19:40
19:40 اِنَّا نَحْنُ نَرِثُ الْاَرْضَ وَمَنْ عَلَيْهَا وَاِلَـيْنَا يُرْجَعُوْنَ‏
اِنَّا نَحْنُ நிச்சயமாக நாம்தான் نَرِثُ வாரிசாகுவோம் الْاَرْضَ وَمَنْ عَلَيْهَا பூமி/இன்னும் அதில் இருப்பவர்களுக்கு وَاِلَـيْنَا இன்னும் நம்மிடமே يُرْجَعُوْنَ‏ அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்
19:40. நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.  
19:40. நிச்சயமாக நாம்தான் பூமிக்கும், அதிலுள்ளவர்களுக்கும் சொந்தம் கொள்வோம். அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.
19:40. இறுதியில், இப்பூமிக்கும் இதன் மீதுள்ள பொருள்கள் அனைத்திற்கும் நாமே வாரிசாகிவிடுவோம். மேலும், எல்லாரும் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
19:40. நிச்சயமாக நாமே பூமியையும், அதன் மீதிருப்பவர்களையும் வாரிசாக்கிக் (அனந்தரமாக்கி)க் கொள்வோம், அவர்கள் (யாவரும்) நம்மிடமே மீட்கப்பட்டுக் கொண்டு வரப்படுவார்கள்.
19:41
19:41 وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِبْرٰهِيْمَ ۙ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக فِى الْكِتٰبِ இவ்வேதத்தில் اِبْرٰهِيْمَ ۙ இப்றாஹீமை اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் صِدِّيْقًا உண்மையாளராக نَّبِيًّا‏ நபியாக
19:41. (நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் - நபியாகவும் - இருந்தார்.
19:41. (நபியே!) இவ்வேதத்தில் இப்றாஹீமை பற்றியும் கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க உண்மையானவராக, நபியாக இருந்தார்.
19:41. மேலும், இவ்வேதத்தில் உள்ள இப்ராஹீமின் சரிதையை விவரிப்பீராக! திண்ணமாக, அவர் வாய்மை உள்ளவராகவும், நபியாகவும் இருந்தார்.
19:41. மேலும், (நபியே!) இவ்வேதத்தில், இப்றாஹீமைப் பற்றி நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராக, நபியாக இருந்தார்.
19:42
19:42 اِذْ قَالَ لِاَبِيْهِ يٰۤـاَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَ لَا يُغْنِىْ عَنْكَ شَيْــٴًـــا‏
اِذْ قَالَ (அந்த) சமயத்தை கூறினார் لِاَبِيْهِ தனது தந்தைக்கு يٰۤـاَبَتِ என் தந்தையே لِمَ تَعْبُدُ ஏன் வணங்குகிறீர்? مَا لَا يَسْمَعُ கேட்காதவற்றை وَلَا يُبْصِرُ இன்னும் பார்க்காதவற்றை وَ لَا يُغْنِىْ இன்னும் தடுக்காதவற்றை عَنْكَ உம்மை விட்டு شَيْــٴًـــا‏ எதையும்
19:42. “என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்தத் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
19:42. அவர் தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பார்க்காத, கேட்காத, எந்த ஒரு தீங்கையும் உம்மை விட்டு தடைசெய்யாதவற்றை ஏன் வணங்குகிறீர்?'' என்று கேட்டார்.
19:42. (சற்று அவர்களுக்குப் பின்வரும் சந்தர்ப்பத்தை நினைவூட்டும்:) அப்போது அவர் தம் தந்தையிடம் கூறினார்: “என் அன்புத் தந்தையே! கேட்கவோ, பார்க்கவோ முடியாத, உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவோ இயலாதவற்றை நீங்கள் ஏன் வணங்குகின்றீர்கள்?
19:42. அவர் தன் தந்தையிடம், “என் தந்தையே! எதையும் செவியேற்காத மற்றும் (எதையும்) பார்க்காத (நன்மையை ஈர்த்தும், தீமையைத் தடுத்தும்) உம்மைவிட்டும் எதையும் தடுக்காததை நீர் ஏன் வணங்குகிறீர்? என்று கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக” அப்போது)
19:43
19:43 يٰۤـاَبَتِ اِنِّىْ قَدْ جَآءَنِىْ مِنَ الْعِلْمِ مَا لَمْ يَاْتِكَ فَاتَّبِعْنِىْۤ اَهْدِكَ صِرَاطًا سَوِيًّا‏
يٰۤـاَبَتِ என் தந்தையே اِنِّىْ நிச்சயமாக நான் قَدْ جَآءَنِىْ எனக்கு வந்திருக்கிறது مِنَ الْعِلْمِ கல்வியில் مَا لَمْ يَاْتِكَ உமக்கு வரவில்லை فَاتَّبِعْنِىْۤ ஆகவே, என்னைப் பின்பற்றுவீராக اَهْدِكَ நான் உமக்கு வழிகாட்டுவேன் صِرَاطًا பாதையை سَوِيًّا‏ நேரான
19:43. “என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது; ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்.
19:43. ஆகவே, ‘‘என் தந்தையே! உமக்குக் கிடைக்காத கல்வி ஞானம் (என் இறைவன் அருளால்) எனக்கு கிடைத்துள்ளது. என்னைப் பின்பற்றுவீராக. நான் உம்மை நேரான வழியில் நடத்துவேன்.
19:43. என் தந்தையே! உங்களுக்குக் கிடைக்காத ஒரு ஞானம் எனக்குக் கிடைத்துள்ளது. எனவே, என்னைப் பின்பற்றுவீர்களாக! நான் உங்களுக்கு நேரிய வழியைக் காண்பிப்பேன்.
19:43. “என் தந்தையே! நிச்சயமாக நான் - என்னிடம் அறிவிலிருந்து உமக்கு வந்திராதது திட்டமாக வந்திருக்கிறது, ஆகவே நீர் என்னைப் பின்பற்றுவீராக! (அப்பொழுது) நான் உமக்கு செவ்வையான வழியைக் காட்டுவேன் (என்றும்),
19:44
19:44 يٰۤـاَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطٰنَ‌ ؕ اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِيًّا‏
يٰۤـاَبَتِ என் தந்தையே لَا تَعْبُدِ வணங்காதீர் الشَّيْطٰنَ‌ ؕ ஷைத்தானை اِنَّ நிச்சயமாக الشَّيْطٰنَ ஷைத்தான் كَانَ இருக்கிறான் لِلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு عَصِيًّا‏ மாறுசெய்பவனாக
19:44. “என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன்.
19:44. என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர். நிச்சயமாக ஷைத்தான் ரஹ்மானுக்கு மாறு செய்பவனாக இருக்கிறான்.
19:44. என் தந்தையே! நீங்கள் ஷைத்தானுக்கு அடிபணியாதீர்கள்; திண்ணமாக, ஷைத்தான் கருணைமிக்க இறைவனின் கட்டளைக்கு மாறு செய்பவன் ஆவான்.
19:44. “என் தந்தையே ஷைத்தானை நீர் வணங்காதீர், நிச்சயமாக ஷைத்தான் மிகக் கிருபையுடையோ(னாகிய ரஹ்மா)னுக்கு மாறு செய்பவனாக இருக்கிறான் (என்றும்),
19:45
19:45 يٰۤاَبَتِ اِنِّىْۤ اَخَافُ اَنْ يَّمَسَّكَ عَذَابٌ مِّنَ الرَّحْمٰنِ فَتَكُوْنَ لِلشَّيْطٰنِ وَلِيًّا‏
يٰۤاَبَتِ என் தந்தையே اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ நான் பயப்படுகிறேன் اَنْ يَّمَسَّكَ உம்மைவந்தடைந்தால் عَذَابٌ ஒரு வேதனை مِّنَ இருந்து الرَّحْمٰنِ பேரருளாளன் فَتَكُوْنَ நீர் ஆகிவிடுவீர் لِلشَّيْطٰنِ ஷைத்தானுக்கு وَلِيًّا‏ நண்பராக
19:45. “என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனை வந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்” (என்றார்).
19:45. என் தந்தையே! ரஹ்மானுடைய வேதனை உம்மை பிடித்துக் கொள்ளுமோ என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன். (ரஹ்மானுக்கு மாறு செய்தால்) ஷைத்தானுக்கு நண்பனாகிவிடுவீர்'' (என்று கூறினார்).
19:45. என் தந்தையே! கருணைமிக்க இறைவனின் தண்டனைக்கு நீங்கள் இலக்காகி விடுவீர்களோ; மேலும் ஷைத்தானின் தோழனாகி விடுவீர்களோ என்று நான் அஞ்சுகின்றேன்!”
19:45. “என் தந்தையே! மிகக் கிருபையுடையவனிலிருந்து வேதனை உம்மைப் பிடித்து (அதனால்) ஷைத்தானுக்கு நீர் சினேகிதராகிவிடுவதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” (என்றும் கூறியபோது)
19:46
19:46 قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِىْ يٰۤاِبْرٰهِيْمُ‌ۚ لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ‌ وَاهْجُرْنِىْ مَلِيًّا‏
قَالَ கூறினார் اَرَاغِبٌ நீ வெறுக்கிறாயா? اَنْتَ நீ عَنْ اٰلِهَتِىْ என் தெய்வங்களை يٰۤاِبْرٰهِيْمُ‌ۚ இப்றாஹீமே لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ நீர் விலகவில்லை என்றால் لَاَرْجُمَنَّكَ‌ நிச்சயமாக நான் உன்னை கடுமையாக ஏசுவேன் وَاهْجُرْنِىْ இன்னும் என்னை விட்டு விலகிவிடு مَلِيًّا‏ பாதுகாப்புப் பெற்றவராக
19:46. (அதற்கு அவர்) “இப்ராஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்றார்.
19:46. அதற்கவர் ‘‘இப்றாஹீமே! நீ என் தெய்வங்களைப் புறக்கணித்து விட்டீரா? நீ இதிலிருந்து விலகிக் கொள்ளாவிடில், கல்லெறிந்து உன்னைக் கொன்று விடுவேன்; (இனி) நீ எப்பொழுதுமே என்னைவிட்டு விலகி நில்லும்'' என்று கூறினார்.
19:46. அதற்கு அவருடைய தந்தை கூறினார்: “இப்ராஹீமே! நீ என்னுடைய தெய்வங்களை நிராகரித்து விட்டாயா? இதனை நீ தவிர்த்துக் கொள்ளாவிடில் நிச்சயம் உன்னை நான் கல்லால் அடிப்பேன்; நீ என்றென்றும் என்னை விட்டுப் பிரிந்து போய்விடு!”
19:46. (அதற்கு) அவர் தந்தை, “இப்றாஹீமே! நீர் என்னுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களைப் புறக்கணிக்கின்றீரா? நீர் இவ்வெண்ணத்திலிருந்து விலகிக் கொள்ளாவிடில் உம்மைக் கல்லால் எறிந்து கொல்வேன், (இனி) நீர் என்னை விட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்” என்று கூறினார்.
19:47
19:47 قَالَ سَلٰمٌ عَلَيْكَ‌ۚ سَاَسْتَغْفِرُ لَـكَ رَبِّىْؕ اِنَّهٗ كَانَ بِىْ حَفِيًّا‏
قَالَ கூறினார் سَلٰمٌ பாதுகாப்பு உண்டாகுக عَلَيْكَ‌ۚ உமக்கு سَاَسْتَغْفِرُ பாவமன்னிப்புக் கோருவேன் لَـكَ உமக்காக رَبِّىْؕ என் இறைவனிடம் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் بِىْ என் மீது حَفِيًّا‏ அருளுடையவனாக
19:47. (அதற்கு இப்ராஹீம்) “உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்” என்று கூறினார்.
19:47. அதற்கு (இப்றாஹீம், இதோ நான் செல்கிறேன்) ‘‘உம்மீது ஸலாம் உண்டாவதாக! பின்னர் நான் உமக்காக என் இறைவனிடத்தில் மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக என் இறைவன் என் மீது மிக்க இரக்கமுடையவனாக இருக்கிறான்'' என்று கூறினார்.
19:47. அதற்கு இப்ராஹீம் கூறினார்: “உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! உங்களை மன்னித்தருளுமாறு என் இறைவனிடம் நான் இறைஞ்சுவேன். நிச்சயமாக, என் இறைவன் என் மீது மிகவும் கிருபையுள்ளவனாக இருக்கின்றான்.
19:47. (அதற்கு (இப்றாஹீம்) “உம்மீது சாந்தி உண்டாவதாக! (பின்னர்) நான் உமக்காக என் இரட்சகனிடத்தில் பாவமன்னிப்புக் கோருவேன், நிச்சயமாக அவன் என்னுடன் இரக்கமுடையோனாக இருக்கிறான்” என்று கூறினார்.
19:48
19:48 وَ اَعْتَزِلُـكُمْ وَمَا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَاَدْعُوْا رَبِّىْ‌ ‌ۖ  عَسٰٓى اَلَّاۤ اَكُوْنَ بِدُعَآءِ رَبِّىْ شَقِيًّا‏
وَ اَعْتَزِلُـكُمْ இன்னும் உங்களை விட்டு விலகி விடுகின்றேன் وَمَا تَدْعُوْنَ இன்னும் நீங்கள் வணங்குகின்றவற்றை مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி وَاَدْعُوْا நான் பிரார்த்திப்பேன் رَبِّىْ‌ ۖ  என் இறைவனிடம் عَسٰٓى اَلَّاۤ اَكُوْنَ ஆகாமல் இருப்பேன் بِدُعَآءِ பிரார்த்திப்பதில் رَبِّىْ என் இறைவனிடம் شَقِيًّا‏ நம்பிக்கை அற்றவனாக
19:48. நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்ப்பாக்கியவனாகாமல் இருக்கப் போதும்” (என்றார்).
19:48. ‘‘உங்களை விட்டும் அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் (தெய்வமென) அழைப்பவற்றை விட்டும் நான் விலகிக்கொள்கிறேன். என் இறைவனையே நான் (வணங்கி) பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். என் இறைவனிடம் நான் செய்யும் பிரார்த்தனைகள் எனக்குத் தடுக்கப்படாதிருக்கும் என்று நான் நம்புகிறேன்'' (என்றும் கூறினார்.)
19:48. மேலும், உங்களைவிட்டும், அல்லாஹ்வை அன்றி, நீங்கள் பிரார்த்தித்து வருகின்ற தெய்வங்களை விட்டும் நான் ஒதுங்கிக் கொள்கின்றேன்; நான் என் இறைவனையே பிரார்த்திக்கின்றேன். நான் என் இறைவனைப் பிரார்த்தித்து ஏமாந்து போகமாட்டேன் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.”
19:48. “உங்களையும், அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வமென) அழைப்பவைகளையும் விட்டு நான் விலகிக் கொள்கிறேன்; என் இரட்சகனையே நான் பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன்; என் இரட்சகனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் துர்ப்பாக்கியமுடையவனாக ஆகாமல் இருக்கப் போதும் (என்றும் கூறினார்.)
19:49
19:49 فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا يَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِيًّا‏
فَلَمَّا اعْتَزَلَهُمْ அவர் அவர்களை விட்டு விலகியபோது وَمَا يَعْبُدُوْنَ இன்னும் அவர்கள் வணங்கியதை مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ ۙ அல்லாஹ்வை وَهَبْنَا வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ‌ ؕ இன்னும் யஃகூபை وَكُلًّا இன்னும் ஒவ்வொருவரையும் جَعَلْنَا ஆக்கினோம் نَبِيًّا‏ நபியாக
19:49. (இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
19:49. பின்னர் அவர் அவர்களை விட்டும் அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டார். அதன் பின்னர் இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் வழங்கினோம். அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாகவும் ஆக்கினோம்.
19:49. பிறகு, அம்மக்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கி வருகின்ற பிற தெய்வங்களையும் விட்டு அவர் ஒதுங்கிக் கொண்டபோது, நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் மற்றும் யஃகூப் போன்ற மக்களையும் வழங்கினோம். மேலும், அவர்கள் ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
19:49. பின்னர், அவர், அவர்களையும், அல்லாஹ்வையுமன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் விட்டு விலகிக் கொண்டபோது இஸ்ஹாக்கையும் யஃகூபையும் அவருக்கு(ச் சந்ததிகளாக) நாம் அன்பளிப்பாக அளித்தோம், அவர்கள் ஒவ்வொருவரையும், நபியாக நாம் ஆக்கினோம்.
19:50
19:50 وَوَهَبْنَا لَهُمْ مِّنْ رَّحْمَتِنَا وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا‏
وَوَهَبْنَا வழங்கினோம் لَهُمْ அவர்களுக்கு مِّنْ رَّحْمَتِنَا நமது அருளிலிருந்து وَجَعَلْنَا இன்னும் ஏற்படுத்தினோம் لَهُمْ அவர்களுக்கு لِسَانَ புகழை صِدْقٍ உண்மையான عَلِيًّا‏ உயர்வான
19:50. மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.  
19:50. அவர்களுக்கு நம் அருட்கொடையையும் அளித்தோம். உண்மையே பேசும்படியான மேலான நாவையும் அவர்களுக்குக் கொடுத்தோம். (பின் வருபவர்கள் ‘அலைஹிஸ் ஸலாம்' (அவர்மீது சாந்தி நிலவுக!) என்று எந்நாளும் அவர்களுக்காக துஆ பிரார்த்தனை செய்யக்கூடிய உயர் பதவியையும் அவர்களுக்கு அளித்தோம்.)
19:50. மேலும், அவர்களுக்கு நம்முடைய அருட்கொடையிலிருந்து வழங்கினோம். உயர்ந்த, உண்மையான புகழையும் அவர்களுக்கு அளித்தோம்.
19:50. இன்னும், அவர்களுக்கு நம் அருளிலிருந்து அன்பளிப்பாகக் கொடுத்தோம், (எல்லாச் சமூகத்தாரிடத்தும்) உயர்வான நற்பெயரையும் நாம் அவர்களுக்கு ஆக்கினோம்.
19:51
19:51 وَاذْكُرْ فِى الْكِتٰبِ مُوْسٰٓى‌ اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِيًّا‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக فِى الْكِتٰبِ இவ்வேதத்தில் مُوْسٰٓى‌ மூஸாவை اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் مُخْلَصًا தேர்ந்தெடுக்கப்பட்டவராக وَّكَانَ இன்னும் இருக்கிறார் رَسُوْلًا தூதராக نَّبِيًّا‏ நபியாக
19:51. (நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார்.
19:51. (நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
19:51. மேலும், மூஸாவைப் பற்றி இவ்வேதத்தில் உள்ளதைக் கூறுவீராக. நிச்சயமாக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தார்; தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
19:51. மேலும், இவ்வேதத்தில் மூஸாவைப்பற்றி (நபியே) நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தார், இன்னும், அவர் (நம்முடைய) தூதராக, நபியாக இருந்தார்,
19:52
19:52 وَنَادَيْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَيْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِيًّا‏
وَنَادَيْنٰهُ இன்னும் அவரை அழைத்தோம் مِنْ جَانِبِ பக்கத்தில் الطُّوْرِ மலை الْاَيْمَنِ வலது وَقَرَّبْنٰهُ அவரை நாம் நெருக்கமாக்கினோம் نَجِيًّا‏ அவரை இரகசியம் பேசுகிறவராக
19:52. இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம்.
19:52. தூர் (ஸீனாய் என்னும் பாக்கியம் பெற்ற) மலையின் வலது பக்கத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம்.
19:52. மேலும், நாம் ‘தூர்’ மலையின் வலப்பக்கத்தில் இருந்து அவரை அழைத்தோம்; தனியே உரையாடுவதன் மூலம் நம்மிடம் நெருங்குவதற்கான வாய்ப்பை அவருக்கு அளித்தோம்.
19:52. இன்னும் தூர்(ஸினாய்) மலையின் வலப் பக்கத்திலிருந்து அவரை நாம் கூப்பிட்டோம், இரகசியம் பேசுகிறவராக அவரை நாம் (நமக்கு) நெருக்கமாக்கியும் வைத்தோம்.
19:53
19:53 وَ وَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِيًّا‏
وَ وَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗ அவருக்கு مِنْ رَّحْمَتِنَاۤ நமது அருளால் اَخَاهُ அவருடைய சகோதரர் هٰرُوْنَ ஹாரூனை نَبِيًّا‏ நபியாக
19:53. மேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம்.
19:53. நம் கருணையினால் அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு வழங்கினோம்.
19:53. மேலும், நம் தயவினால் அவருடைய சகோதரர் ஹாரூனை ஒரு நபியாக நியமித்து அவருக்கு உதவியாளராக ஆக்கினோம்.
19:53. மேலும், நம் அருளிலிருந்து அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தோம்.
19:54
19:54 وَاذْكُرْ فِى الْـكِتٰبِ اِسْمٰعِيْلَ‌ اِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا‌ ۚ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக فِى الْـكِتٰبِ இவ்வேதத்தில் اِسْمٰعِيْلَ‌ இஸ்மாயீலை اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் صَادِقَ உண்மையாளராக الْوَعْدِ வாக்கில் وَكَانَ இன்னும் இருக்கிறார் رَسُوْلًا தூதராக نَّبِيًّا‌ ۚ‏ நபியாக
19:54. (நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
19:54. (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்) தூதராகவும் நபியாகவும் இருந்தார்.
19:54. (நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
19:54. மேலும், இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றி (நபியே!) நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையானவராக இருந்தார், இன்னும் அவர் (நம்முடைய) தூதராக நபியாக இருந்தார்.
19:55
19:55 وَ كَانَ يَاْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا‏
وَ كَانَ இருந்தார் يَاْمُرُ ஏவுகின்றவராக اَهْلَهٗ தனது குடும்பத்தினரை بِالصَّلٰوةِ தொழுகையைக் கொண்டு وَالزَّكٰوةِ ஸகாத்தைக் கொண்டு وَكَانَ இருந்தார் عِنْدَ رَبِّهٖ தன் இறைவனிடம் مَرْضِيًّا‏ திருப்திக்குரியவராக
19:55. அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
19:55. தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் அவர் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார்.
19:55. மேலும், அவர் தொழுகை மற்றும் ஜகாத்தை நிறைவேற்றுமாறு தம்முடைய குடும்பத்தாரைப் பணிப்பவராக இருந்தார்; மேலும், தம் இறைவனிடம் விரும்பத்தக்க மனிதராகவும் இருந்தார்.
19:55. இன்னும், அவர் தன் குடும்பத்தினரை, தொழுகையை (நிறைவேற்றுவது)க் கொண்டும், ஜகாத்தைக்(கொடுத்து வருவது) கொண்டும் ஏவுகிறவராக இருந்தார், அவர் தன் இரட்சகனிடத்தில் பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்.
19:56
19:56 وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِدْرِيْسَ‌ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا ۙ ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக فِى الْكِتٰبِ இவ்வேதத்தில் اِدْرِيْسَ‌ இத்ரீஸை اِنَّهٗ நிச்சயமாக அவர் كَانَ இருக்கிறார் صِدِّيْقًا உண்மையாளராக نَّبِيًّا ۙ ‏ நபியாக
19:56. (நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.
19:56. (நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுவீராக: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் நபியாகவும் இருந்தார்.
19:56. (நபியே!) இத்ரீஸைப் பற்றி இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக! திண்ணமாக, அவர் ஒரு நேர்மையாளராகவும், நபியாகவும் இருந்தார்.
19:56. மேலும், இத்ரீஸைப் பற்றி (நபியே!) இவ்வேதத்தில் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராக (நம்முடைய) நபியாக இருந்தார்.
19:57
19:57 وَّرَفَعْنٰهُ مَكَانًا عَلِيًّا‏
وَّرَفَعْنٰهُ இன்னும் அவரை உயர்த்தினோம் مَكَانًا இடத்திற்கு عَلِيًّا‏ உயர்ந்த
19:57. மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்.
19:57. இன்னும் அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம்.
19:57. மேலும், நாம் அவரை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம்.
19:57. மேலும், அவரை மிக்க மேலான இடத்திற்கு நாம் உயர்த்திவிட்டோம்.
19:58
19:58 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَآءِيْلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا‌ ؕ اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا ۩
اُولٰٓٮِٕكَ இவர்கள்தான் الَّذِيْنَ எவர்கள் اَنْعَمَ அருள் புரிந்திருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ இவர்கள் மீது مِّنَ النَّبِيّٖنَ நபிமார்களில் مِنْ ذُرِّيَّةِ சந்ததிகளில் اٰدَمَ ஆதமுடைய وَمِمَّنْ حَمَلْنَا இன்னும் நாம் ஏற்றியவர்களிலும் مَعَ نُوْحٍ நூஹூடன் وَّمِنْ ذُرِّيَّةِ சந்ததிகளிலும் اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاِسْرَآءِيْلَ இன்னும் இஸ்ராயீல் وَمِمَّنْ هَدَيْنَا நாம் நேர்வழிகாட்டி وَاجْتَبَيْنَا‌ ؕ தேர்ந்தெடுத்தவர்கள் اِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتُ வசனங்கள் الرَّحْمٰنِ பேரருளாளனுடைய خَرُّوْا விழுந்து விடுவார்கள் سُجَّدًا சிரம்பணிந்தவர்களாக وَّبُكِيًّا ۩‏ அழுதவர்களாக
19:58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
19:58. (ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்றாஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஅகூப்)உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். மேலும் நாம் தேர்ந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள்.
19:58. இவர்களோ, அல்லாஹ் தன் அருட்பேறுகளை வழங்கியுள்ள நபிமார்கள் ஆவர். இவர்கள் ஆதத்தின் வழித்தோன்றல்களிலிருந்தும், நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றியிருந்த மக்களின் வழித்தோன்றல்களிலிருந்தும் இப்ராஹீம் மற்றும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலிருந்தும் தோன்றியவர்களாவர். மேலும், நாம் நேர்வழி காட்டி, தேர்ந்தெடுத்துக் கொண்ட மக்களைச் சார்ந்தவர்களுமாவர். இவர்களின் நிலைமை எவ்வாறிருந்த தெனில் கருணைமிக்க இறைவனின் வசனங்கள் இவர்களிடம் ஓதிக்காட்டப்பட்டால், அழுதுகொண்டே ஸுஜூதில்* விழுந்துவிடுவார்கள்.
19:58. (மேற் கூறப்பட்ட) அவர்கள் எத்தகையோரென்றால், ஆதமுடைய சந்ததியிலுள்ள நபிமார்களிலிருந்தும், (நபி) நூஹ்வுடன் கப்பலில் நாம் ஏற்றிக் கொண்டவர்களின் சந்ததிகளிலிருந்தும், இப்றாஹீம் இஸ்ராயீலின் சந்ததியிலிருந்தும் நாம் நேர் வழியில் செலுத்தி நாம் தேர்ந்தெடுத்தவர்களிலுமிருந்து(ம் உள்ளோராவர்). அவர்களின் மீது அல்லாஹ் அருள் செய்து விட்டான், அவர்கள் மீது அர்ரஹ்மானுடைய வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால் (சிரம் பணிந்து) ஸுஜூது செய்தவர்களாக மற்றும் அழுதவர்களாக விழுந்து விடுவார்கள்.
19:59
19:59 فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ‌ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ‏
فَخَلَفَ தோன்றினார்கள் مِنْۢ بَعْدِ பின் هِمْ அவர்களுக்கு خَلْفٌ ஒரு கூட்டம் اَضَاعُوا பாழாக்கினர் الصَّلٰوةَ தொழுகையை وَاتَّبَعُوا இன்னும் பின்பற்றினர் الشَّهَوٰتِ‌ மன இச்சைகளை فَسَوْفَ يَلْقَوْنَ அவர்கள் சந்திப்பார்கள் غَيًّا ۙ‏ கய்யை
19:59. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
19:59. (இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள்.
19:59. அவர்களுக்குப் பிறகு, சீர்கெட்ட மக்கள் அவர்களுடைய பிற்சந்ததிகளாகத் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள். மன இச்சைகளைப் பின்பற்றினார்கள்! அத்தகையவர்கள் தங்கள் வழிகேட்டின் தீயவிளைவை விரைவில் சந்திப்பார்கள்.
19:59. இவர்களுக்குப் பின்னர், (வழிகெட்ட) தீய பின்தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை (த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே, அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள்.
19:60
19:60 اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ‏
اِلَّا தவிர مَنْ تَابَ திருந்தியவர்கள் وَاٰمَنَ நம்பிக்கை கொண்டு وَعَمِلَ இன்னும் செய்தவரை صَالِحًـا நல்லது فَاُولٰٓٮِٕكَ அவர்கள் يَدْخُلُوْنَ நுழைவார்கள் الْجَـنَّةَ சொர்க்கத்தில் وَلَا يُظْلَمُوْنَ شَيْــٴًـــا ۙ‏ அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்
19:60. தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
19:60. ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (அவர்கள் அடையவேண்டிய கூலியில்) ஒரு சிறிதும் (குறைக்கப்பட்டு) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
19:60. ஆயினும், எவர்கள் பாவமன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ, அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். மேலும், அவர்களுக்கு இம்மியளவும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
19:60. (ஆயினும்,) அவர்களில் எவர் (பச்சாதாபப்பட்டு) தவ்பாச் செய்து விசுவாசமுங் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களோ அவர்களைத்தவிர, அத்தகையோர் சுவனத்தில் பிரவேசிப்பார்கள், இன்னும் அவர்கள் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
19:61
19:61 جَنّٰتِ عَدْنٍ اۨلَّتِىْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَيْبِ‌ ؕ اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَاْتِيًّا‏
جَنّٰتِ சொர்க்கங்களில் عَدْنٍ அத்ன் اۨلَّتِىْ எது وَعَدَ வாக்களித்துள்ளான் الرَّحْمٰنُ பேரருளாளன் عِبَادَهٗ தன் அடியார்களுக்கு بِالْغَيْبِ‌ ؕ மறைவில் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கிறது وَعْدُهٗ அவனுடைய வாக்கு مَاْتِيًّا‏ நிகழக்கூடியதாக
19:61. அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை அவர்கள் காண முடியாத போதே - வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும்.
19:61. அது ‘அத்ன்' என்னும் என்றென்றும் நிலையான சொர்க்கங்களாகும். (அவை தற்சமயம்) மறைவாக இருந்தபோதிலும், அவற்றை ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கிறான். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும்.
19:61. கருணைமிக்க இறைவன் தன்னுடைய அடியார்களுக்கு அவர்கள் காணாத நிலையில், அளித்துள்ள வாக்குறுதியான நிலையான சுவனபதிகள் அவர்களுக்கு இருக்கின்றன. நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறியே தீரும்.
19:61. “அத்னு” என்ற நிலையான சொர்க்கங்கள் (அவர்களுக்கு கூலியாகும்.) – அவை எத்தகையவையென்றால், ரஹ்மான் தன் (நல்) அடியார்களுக்கு (அவை) மறைவாக இருக்கும் நிலையில் வாக்களித்துள்ளான், நிச்சயமாக அவனுடைய வாக்கு வரக்கூடியதாகவே உள்ளது.
19:62
19:62 لَّا يَسْمَعُوْنَ فِيْهَا لَـغْوًا اِلَّا سَلٰمًا‌ؕ وَلَهُمْ رِزْقُهُمْ فِيْهَا بُكْرَةً وَّعَشِيًّا‏
لَّا يَسْمَعُوْنَ செவிமடுக்க மாட்டார்கள் فِيْهَا அவற்றில் لَـغْوًا வீணானவற்றை اِلَّا எனினும் سَلٰمًا‌ؕ ஸலாமை وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு رِزْقُهُمْ அவர்களுடைய உணவு فِيْهَا அவற்றில் بُكْرَةً காலையிலும் وَّعَشِيًّا‏ மாலையிலும்
19:62. ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது.
19:62. (அவற்றில்) ஸலாம் (என்ற முகமனைத்) தவிர வீணான வார்த்தைகளைச் செவியுற மாட்டார்கள். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவு அளிக்கப்படும்.
19:62. அங்கு அவர்கள் எவ்வித வீணான விஷயத்தையும் செவியுறமாட்டார்கள். எதைச் செவியுற்றாலும் சரியானவற்றையே செவியுறுவார்கள். மேலும், அங்கு அவர்களுக்குரிய உணவு காலையிலும், மாலையிலும் (தொடர்ந்து) அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
19:62. அவற்றில் அவர்கள் ஸலாம் (எனும் சாந்தி) என்பதைத் தவிர (வார்த்தைகளால் வேறு) வீணானதைச் செவியேற்க மாட்டார்கள், அவற்றில் அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவும் உண்டு.
19:63
19:63 تِلْكَ الْجَـنَّةُ الَّتِىْ نُوْرِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا‏
تِلْكَ இந்த الْجَـنَّةُ சொர்க்கம் الَّتِىْ نُوْرِثُ வாரிசாக ஆக்குவோம் مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் مَنْ எவர் كَانَ இருக்கின்றார் تَقِيًّا‏ இறையச்சமுடையவராக
19:63. இத்தகைய சுவர்க்கத்திற்கு நம் அடியார்களில் தக்வா - பயபக்தி - உடையவர்களை நாம் வாரிசாக்கிவிடுவோம்.
19:63. இத்தகைய சொர்க்கத்திற்கு நம் அடியார்களில் இறையச்சமுடையவர்களை நாம் வாரிசாக்கி விடுவோம்.
19:63. இத்தகைய சுவனமாகும் அது! நம் அடியார்களில் எவர்கள் இறையச்சம் கொண்டு வாழ்கின்றார்களோ அவர்களையே இதற்கு வாரிசுகளாக்குவோம்.
19:63. அந்த சொர்க்கம் எத்தகையதென்றால் அடியார்களில் பயபக்தியுடையவர்களுக்கு (அதை) நாம் அனந்தரமாக்கி விடுவோம்.
19:64
19:64 وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَ‌ ۚ لَهٗ مَا بَيْنَ اَيْدِيْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذٰ لِكَ‌ ۚ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا‌ ۚ‏
وَمَا نَتَنَزَّلُ இறங்க மாட்டோம் اِلَّا بِاَمْرِ உத்தரவைக் கொண்டே தவிர رَبِّكَ‌ ۚ உமது இறைவனின் لَهٗ அவனுக்கே சொந்தம் مَا بَيْنَ اَيْدِيْنَا எங்களுக்கு முன் இருப்பவையும் وَمَا خَلْفَنَا எங்களுக்கு பின் இருப்பவையும் وَمَا بَيْنَ ذٰ لِكَ‌ ۚ அவற்றுக்கு மத்தியில் இருப்பவையும் وَمَا كَانَ இருக்கவில்லை رَبُّكَ உமது இறைவன் نَسِيًّا‌ ۚ‏ மறதியாளனாக
19:64. (மலக்குகள் கூறுகிறார்கள்: நபியே!) “உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பதும் அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன; உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்.”
19:64. (வானவர்கள் கூறுகின்றனர்: நபியே!) உமது இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. இதில் (எதையும்) உமது இறைவன் மறப்பவனல்ல.
19:64. (நபியே!) “நாங்கள் உம் இறைவனின் உத்தரவின்றி இறங்குவதில்லை; எங்களுக்கு முன்னால் இருப்பவை, பின்னால் இருப்பவை மற்றும் இவற்றிற்கிடையேயுள்ளவை ஆகிய ஒவ்வொன்றுக்கும் அவனே உரிமையாளன் ஆவான். மேலும், உம் இறைவன் மறக்கக் கூடியவனல்லன்.
19:64. மேலும், (ஜிப்ரீலானவர், நபியிடம்) உமதிரட்சகனின் கட்டளையைக் கொண்டல்லாது நாம் இறங்குவதில்லை, எங்களுக்கு முன்னிருப்பவைகளும், பின்னிருப்பவைகளும், இவ்விரண்டிற்கும் மத்தியிலிருப்பவைகளும், அவனுக்குச் சொந்தமானவைகளாக இருக்கின்றன.
19:65
19:65 رَّبُّ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِـعِبَادَتِهٖ‌ؕ هَلْ تَعْلَمُ لَهٗ سَمِيًّا‏
رَّبُّ இறைவன் السَّمٰوٰتِ وَ الْاَرْضِ வானங்கள்/இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவை فَاعْبُدْهُ ஆகவே, அவனை வணங்குவீராக وَاصْطَبِرْ இன்னும் பொறுமையாக இருப்பீராக لِـعِبَادَتِهٖ‌ؕ அவனை வணங்குவதில் هَلْ تَعْلَمُ நீர் அறிவீரா لَهٗ அவனுக்கு سَمِيًّا‏ ஒப்பானவரை
19:65. “(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ள வற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”  
19:65. வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவற்றையும் படைத்த இறைவன் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே வணங்குவீராக. அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக. அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீர் அறிவீரா? (இல்லையே).
19:65. வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்குமிடையே உள்ள அனைத்திற்கும் அவன் அதிபதி ஆவான். எனவே, அவனுக்கு நீர் அடிபணிவீராக! மேலும், அவனுக்கு அடிபணிவதிலேயே நிலைத்திருப்பீராக! அவனுக்கு சமமானவர் எவரையேனும் நீர் அறிவீரா?”
19:65. வானங்களுக்கும், பூமிக்கும் அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளுக்கும் (அவனே) இரட்சகனாவான், ஆதலால், அ(வன் ஒரு)வனையே நீர் வணங்குவீராக! அவனை வணங்குவதில் (உமக்கு ஏற்படும் கஷ்டங்களையும்) நீர் பொறுத்துக் கொள்வீராக! (பெயரில், வல்லமையில் மற்றும் அனைத்துப் பண்புகளில்) அவனுக்கு ஒப்பானவனை நீர் அறிவீரா? (இவற்றில் ஒப்பானவர் அவனுக்கு நிகராக எவருமே இல்லை)
19:66
19:66 وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا‏
وَيَقُوْلُ கூறுகிறான் الْاِنْسَانُ மனிதன் ءَاِذَا مَا مِتُّ நான் மரணித்து விட்டால் لَسَوْفَ اُخْرَجُ கண்டிப்பாக எழுப்பப்படுவேனா حَيًّا‏ உயிருள்ளவனாக
19:66. (எனினும்) மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்டுவேனா? என்று.
19:66. (இவ்வாறிருக்க) மனிதன் ‘‘நான் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?'' என்று (பரிகாசமாகக்) கேட்கிறான்.
19:66. மனிதன், கேட்கின்றான்: “நான் இறந்துவிட்டால், உண்மையிலேயே மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படுவேனா?”
19:66. (இவ்வாறிருக்க) “மனிதன் நான் இறந்துவிட்டால், பின்னர் உயிருள்ளவனாக வெளியாக்கப்படுவேனா? என்று கேட்கிறான்.
19:67
19:67 اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـٴًـــا‏
اَوَلَا يَذْكُرُ சிந்திக்க வேண்டாமா! الْاِنْسَانُ மனிதன் اَنَّا நிச்சயமாக நாம் خَلَقْنٰهُ அவனைப் படைத்ததை مِنْ قَبْلُ முன்னர் وَلَمْ يَكُ அவன் இருக்கவில்லை شَيْـٴًـــا‏ எந்த ஒரு பொருளாகவும்
19:67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
19:67. இதற்கு முன்னர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாக படைத்தோம் என்பதை அவன் நினைத்துப்பார்க்க வேண்டாமா?
19:67. முன்பு அவன் எப்பொருளாயும் இல்லாதிருந்தபோது நாம்தாம் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்ப்பதில்லையா?
19:67. (அதற்கு) “முன்னர் யாதொரு பொருளாகவும் இல்லாதிருக்க, நாம்தான் அவனைப் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?”
19:68
19:68 فَوَرَبِّكَ لَـنَحْشُرَنَّهُمْ وَالشَّيٰطِيْنَ ثُمَّ لَــنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَـنَّمَ جِثِيًّا‌ ۚ‏
فَوَرَبِّكَ உம் இறைவன் மீது சத்தியமாக لَـنَحْشُرَنَّهُمْ நிச்சயமாக நாம் அவர்களை எழுப்புவோம் وَالشَّيٰطِيْنَ இன்னும் ஷைத்தான்களை ثُمَّ பிறகு لَــنُحْضِرَنَّهُمْ அவர்களைக் கொண்டு வருவோம் حَوْلَ சுற்றி جَهَـنَّمَ நரகத்தை جِثِيًّا‌ ۚ‏ முழந்தாளிட்டவர்களாக
19:68. ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.
19:68. ஆகவே, (நபியே!) உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், (அவர்கள் வணங்குகிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பி நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டவர்களாக அவர்களை ஒன்று சேர்ப்போம்.
19:68. உம் இறைவன் மீது ஆணையாக! அவர்கள் அனைவரையும் (அவர்களோடு) ஷைத்தான்களையும் அவசியம் நாம் ஒன்று திரட்டிக் கொண்டு வருவோம். பிறகு, நரகத்தைச் சுற்றிலும் அவர்களைக் கொண்டுவந்து முழங்காலிட்டு நிறுத்துவோம்.
19:68. ஆகவே, (நபியே!) உமதிரட்சகன் மீது சத்தியமாக! நாம் அவர்களையும் (அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கிற) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) ஒன்று திரட்டுவோம், பின்னர் நரகத்தைச் சூழ முழந்தாளிட்டவர்களாக அவர்களை நாம் நிச்சயமாக முன்னிலைப் படுத்துவோம்.
19:69
19:69 ثُمَّ لَـنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِيْعَةٍ اَيُّهُمْ اَشَدُّ عَلَى الرَّحْمٰنِ عِتِيًّا‌ ۚ‏
ثُمَّ பிறகு لَـنَنْزِعَنَّ கழட்டி எடுப்போம் مِنْ كُلِّ ஒவ்வொரு شِيْعَةٍ கூட்டத்திலும் اَيُّهُمْ அவர்களில் اَشَدُّ கடுமையானவரை عَلَى الرَّحْمٰنِ ரஹ்மானுக்கு عِتِيًّا‌ ۚ‏ பாவம் செய்வதில்
19:69. பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.
19:69. பின்னர், ரஹ்மானுக்கு மாறுசெய்வதில் கடினமாக இருந்த அனைவரையும் ஒவ்வொரு கூட்டத்திலிருந்து நிச்சயமாக நாம் பிரித்து விடுவோம்.
19:69. பிறகு, அவர்களில் எவன் கருணைமிக்க இறைவனுக்கு மாறு செய்வதில் தீவிரமாக இருந்தானோ அவனை ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் தனியே பிரித்துவிடுவோம்.
19:69. பின்னர், ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அவர்களில் எவர் ரஹ்மானுக்கு மாறு செய்வதில் மிகக் கடினமானவரோ அவரை நிச்சயமாக நாம் (பிரித்து)கழற்றி எடுத்து விடுவோம்.
19:70
19:70 ثُمَّ لَـنَحْنُ اَعْلَمُ بِالَّذِيْنَ هُمْ اَوْلٰى بِهَا صِلِيًّا‏
ثُمَّ பிறகு لَـنَحْنُ நாம் اَعْلَمُ மிக அறிந்தவர்கள் بِالَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் اَوْلٰى மிகவும் தகுதியானவர்கள் بِهَا அதில் صِلِيًّا‏ கடுமையாக வேதனை அனுபவிப்பதற்கு
19:70. பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
19:70. பின்னர், நரகத்தில் எரிவதற்கு தகுதி உடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிந்து கொள்வோம்.
19:70. பின்னர், அனைவரையும்விட நரகில் புகுத்தப்படுவதற்கு யார் அதிகம் தகுதியுடையவர்களோ அவர்களை நாம் நன்கு அறிவோம்.
19:70. பின்னர், அ(ந்நரகத்)தில் நுழைவதற்கு எவர்கள் மிகத் தகுதியுடையோரோ, அவர்களை நிச்சயமாக நாம் அறிவோம்.
19:71
19:71 وَاِنْ مِّنْکُمْ اِلَّا وَارِدُهَا ‌ؕ كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا‌ ۚ‏
وَاِنْ مِّنْکُمْ உங்களில் (ஒவ்வொருவரும்) இல்லை اِلَّا وَارِدُهَا ؕ தவிர/அதில் நுழையக்கூடியவராக كَانَ இருக்கிறது عَلٰى رَبِّكَ உமது இறைவன் மீது حَتْمًا தீர்ப்பாக مَّقْضِيًّا‌ ۚ‏ முடிவு செய்யப்பட்ட
19:71. மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.
19:71. அதைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.
19:71. உங்களில் எவரும் நரகத்தைக் கடந்து செல்லாதவராய் இருக்க முடியாது. இது முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயமாகும்; இதனை நிறைவேற்றுவது உம்முடைய இறைவனின் பொறுப்பாகும்.
19:71. இன்னும், உங்களில் எவரும் (ஸிராத் எனும் பாலமான) அதற்கு வரக்கூடியவராகவேயல்லாது இல்லை, உமது இரட்சகன்மீது இது கட்டாயமான முடிவு செய்யப்பட்டதாக ஆகிவிட்டது.
19:72
19:72 ثُمَّ نُـنَجِّى الَّذِيْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِيْنَ فِيْهَا جِثِيًّا‏
ثُمَّ பிறகு نُـنَجِّى பாதுகாப்போம் الَّذِيْنَ اتَّقَوْا இறையச்சமுடையவர்களை وَّنَذَرُ இன்னும் விட்டுவிடுவோம் الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களை فِيْهَا அதில் جِثِيًّا‏ முழந்தாளிட்ட வர்களாக
19:72. அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.
19:72. ஆனால், இறையச்சத்துடன் வாழ்ந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம்.
19:72. (உலக வாழ்வில்) இறையச்சம் கொண்டு வாழ்ந்தவர்களை நாம் காப்பாற்றுவோம். கொடுமையாளர்களை அதிலேயே வீழ்ந்து கிடக்குமாறு விட்டுவிடுவோம்.
19:72. (அவ்வாறு வந்ததன்) பின்னர் பயபக்தியுடையோராக இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம், அநியாயக்காரர்களை முழந்தாளிட்டவர்களாக அதில் விட்டும் விடுவோம்.
19:73
19:73 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْۤا ۙ اَىُّ الْفَرِيْقَيْنِ خَيْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِيًّا‏
وَاِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் மீது اٰيٰتُنَا நமது வசனங்கள் بَيِّنٰتٍ தெளிவான قَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلَّذِيْنَ اٰمَنُوْۤا ۙ நம்பிக்கையாளர்களுக்கு اَىُّ யார்? الْفَرِيْقَيْنِ இரு பிரிவினரில் خَيْرٌ சிறந்தவர் مَّقَامًا தங்குமிடத்தால் وَّاَحْسَنُ மிக அழகானவர் نَدِيًّا‏ சபையால்
19:73. இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள்முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில், (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்: “நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடை சபை மிக அழகானதாகவும் இருக்கிறது?” என்று கேட்கின்றனர்.
19:73. நிராகரிப்பவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?'' என்று கேட்கின்றனர்.
19:73. இவர்களிடம் நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காட்டப்பட்டால், நிராகரிப்பவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களிடம், “நம் இரு பிரிவினரில் யார் நல்ல நிலையில் உள்ளவர்கள், யாருடைய அவைகள் மிகக் கம்பீரமாக இருக்கின்றன என்பதைக் காட்டுங்கள்” என்று கூறுவார்கள்.
19:73. மேலும், அவர்கள் மீது நம்முடைய வசனங்கள் தெளிவானவையாக ஓதப்பட்டால், விசுவாசிகளிடம் நிராகரிப்பவர்கள், நம் இரு வகுப்பாரில் தங்குமிடத்தால் மிகச் சிறந்தவர் யார், இன்னும் சபையால் மிக்க அழகானவர் யார்? என்று கூறுகின்றனர்.
19:74
19:74 وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِءْيًا‏
وَكَمْ எத்தனையோ اَهْلَكْنَا நாம் அழித்தோம் قَبْلَهُمْ அவர்களுக்கு முன் مِّنْ قَرْنٍ தலைமுறையினரை هُمْ அவர்கள் اَحْسَنُ மிக அழகானவர்கள் اَثَاثًا பொருட்களாலும் وَّرِءْيًا‏ தோற்றத்தாலும்
19:74. இன்னும், இவர்களைவிட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
19:74. இவர்களை விட அழகான தோற்றத்தையும், தட்டு முட்டு சாமான்களையும் கொண்ட எத்தனையோ கூட்டத்தாரை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
19:74. உண்மையில், இவர்களுக்கு முன் இவர்களைவிட எவ்வளவோ அதிகச் சாதனங்களை வைத்திருந்தவர்களும் வெளிப்பகட்டில் இவர்களைவிட மிகைத்திருந்தவர்களுமான எத்தனையோ சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம்.
19:74. இன்னும், அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ கூட்டத்தாரை அழித்திருக்கின்றோம், அவர்கள் தளவாடங்களாலும், தோற்றத்தாலும் மிக அழகானவர்கள் (ஆவர்).
19:75
19:75 قُلْ مَنْ كَانَ فِى الضَّلٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ۚ‌ حَتّٰٓى اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ؕ فَسَيَـعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا‏
قُلْ கூறுவீராக مَنْ யார் كَانَ இருக்கின்றாரோ فِى الضَّلٰلَةِ வழிகேட்டில் فَلْيَمْدُدْ நீட்டிவிடட்டும் لَهُ அவருக்கு الرَّحْمٰنُ பேரருளாளன் مَدًّا ۚ‌ நீட்டிவிடுதல் حَتّٰٓى இறுதியாக اِذَا رَاَوْا அவர்கள் பார்த்தால் مَا يُوْعَدُوْنَ அவர்கள் வாக்களிக்கப்பட்டதை اِمَّا ஒன்று الْعَذَابَ வேதனையை وَاِمَّا அல்லது السَّاعَةَ ؕ மறுமையை فَسَيَـعْلَمُوْنَ அறிவார்கள் مَنْ யார் هُوَ என்பதை شَرٌّ மிகக் கெட்டவர் مَّكَانًا தங்குமிடத்தால் وَّاَضْعَفُ மிகப் பலவீனமானவர் جُنْدًا‏ படையால்
19:75. “யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
19:75. (நபியே!) கூறுவீராக: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரை ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும். அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் (மறுமையில்) அறிந்து கொள்வார்கள்.
19:75. இவர்களிடம் கூறுங்கள்: எவர்கள் வழிகேட்டிலே வீழ்ந்திருக்கின்றார்களோ அவர்களுக்கு கருணைமிக்க இறைவன் கால அவகாசம் அளிக்கின்றான். எதுவரையெனில், தங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்ததை அது அல்லாஹ் அளிக்கும் வேதனையாக இருந்தாலும் சரி, மறுமையாக இருந்தாலும் சரி, அதனை அவர்கள் காண்கிறார்கள்; அப்போது யாருடைய நிலைமை மோசமானது; யாருடைய கூட்டம் பலம் குன்றியது என்பது அவசியம் அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
19:75. “எவர் வழிகேட்டிலிருக்கிறாரோ அவருக்கு அர்ரஹ்மான் கால அவகாசத்தை நீட்டி விடுகிறான், முடிவாக அவர்கள் வாக்களிக்கப்பட்டதை-(அதாவது) ஒன்று இம்மையில் வேதனையை, மற்றொன்று மறுமையை அவர்கள் கண்டுவிட்டால்-அப்போது இடத்தால் கெட்டவர் யார்? படையால் மிகவும் பலவீனமானவர் யார்? என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்” (என்று நபியே!) நீர் (அவர்களுக்குக்) கூறுவீராக!
19:76
19:76 وَيَزِيْدُ اللّٰهُ الَّذِيْنَ اهْتَدَوْا هُدًى‌ؕ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ مَّرَدًّا‏
وَيَزِيْدُ அதிகப்படுத்துவான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اهْتَدَوْا நேர்வழி நடப்போருக்கு هُدًى‌ؕ நேர்வழியை وَالْبٰقِيٰتُ நிரந்தரமான الصّٰلِحٰتُ நன்மைகள்தான் خَيْرٌ மிகச் சிறந்தது عِنْدَ رَبِّكَ உங்கள் இறைவனிடம் ثَوَابًا நற்கூலியால் وَّخَيْرٌ இன்னும் மிகச் சிறந்தது مَّرَدًّا‏ முடிவால்
19:76. “மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்; இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்.”
19:76. நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உமது இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன.
19:76. (இதற்கு மாறாக) எவர்கள் நேர்வழியை மேற்கொள்கின்றார்களோ, அவர்களுக்கு அல்லாஹ் நேர் வழியில் முன்னேற்றத்தை வழங்குகின்றான். மேலும், நிலைத்திருக்கும் நற்செயல்கள்தாம் உம் இறைவனிடத்தில் நற்கூலியையும் நல்ல முடிவையும் பொறுத்து மிகவும் சிறந்தவையாகும்.
19:76. இன்னும், நேர் வழியில் செல்கிறார்களே அத்தகையோருக்கு அல்லாஹ் (மேலும்) நேர் வழியை அதிகப்படுத்துகிறான், நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள் தாம் உம்முடைய இரட்சகனிடத்தில் நற்கூலியால் மிகச் சிறந்ததாகும், திரும்பிச் செல்லும் இடத்தாலும் மிகச் சிறந்ததாகும்.
19:77
19:77 اَفَرَءَيْتَ الَّذِىْ كَفَرَ بِاٰيٰتِنَا وَقَالَ لَاُوْتَيَنَّ مَالًا وَّوَلَدًا ؕ‏
اَفَرَءَيْتَ நீர் பார்த்தீரா? الَّذِىْ كَفَرَ நிராகரித்தவனை بِاٰيٰتِنَا நமது வசனங்களை وَقَالَ கூறுகின்றான் لَاُوْتَيَنَّ நிச்சயமாக நான் கொடுக்கப்படுவேன் مَالًا செல்வமும் وَّوَلَدًا ؕ‏ சந்ததியும்
19:77. “நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, (மறுமையிலும்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன்” என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?
19:77. (நபியே!) நம் வசனங்களை நிராகரித்தவனை நீர் பார்த்தீரா? ‘‘(மறுமையிலும்) நிச்சயமாக நான் ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்'' என்று கூறுகிறான்.
19:77. எவன் நம்முடைய சான்றுகளை மறுக்கின்றானோ மேலும், ‘பொருட் செல்வமும் மக்கட் செல்வமும் எனக்கு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும்’ என்றும் கூறுகின்றானோ அவனை நீர் பார்த்தீரா?
19:77. (நபியே!) நம்முடைய வசனங்களை நிராகரித்தோனை நீர் பார்த்தீரா? அவன் (மறுமையிலும்) நான் நிச்சயமாக செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன் எனவும் கூறினான்.
19:78
19:78 اَطَّلَعَ الْغَيْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۙ‏
اَطَّلَعَ அறிந்துகொண்டானா الْغَيْبَ மறைவானதை اَمِ அல்லது اتَّخَذَ ஏற்படுத்திக் கொண்டானா عِنْدَ الرَّحْمٰنِ ரஹ்மானிடம் عَهْدًا ۙ‏ ஓர் ஒப்பந்தத்தை
19:78. (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டானா; அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?
19:78. அவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்து கொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா?
19:78. அவன் மறைவான உண்மைகளை அறிந்துகொண்டானா? அல்லது கருணை மிக்க இறைவனிடம் ஏதேனும் உடன்படிக்கை செய்து வைத்திருக்கின்றானா?
19:78. (மறுமையில் அவன் கூறியது போன்றது உண்டா? (என்ற) மறைவானதை அவன் அறிந்திருக்கின்றானா? அல்லது அர்ரஹ்மானிடத்தில் அது பற்றியதொரு உறுதிமொழியைப் பெற்றிருக்கின்றானா?
19:79
19:79 كَلَّا ‌ ؕ سَنَكْتُبُ مَا يَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۙ‏
كَلَّا ؕ ஒருக்காலும் அவ்வாறல்ல سَنَكْتُبُ பதிவு செய்கிறோம் مَا يَقُوْلُ அவன் கூறுவதை وَنَمُدُّ இன்னும் அதிகப்படுத்துவோம் لَهٗ அவனுக்கு مِنَ الْعَذَابِ வேதனையில் مَدًّا ۙ‏ அதிகப்படுத்துதல்
19:79. அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம்; இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.
19:79. (இவன் கூறுகிறபடி) அல்ல! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக் கொண்டே வருகிறோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்திவிடுவோம்.
19:79. அப்படி ஒன்றும் இல்லை. அவன் பிதற்றுவதை நாம் எழுதி வைத்துக் கொள்வோம். அவனுக்குத் தண்டனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.
19:79. (அவன் கூறுகிற அவ்வாறு) அன்று! அவன் கூறுகின்றவற்றை நாம் எழுதி வருவோம், (அதற்குத் தக்கவாறு) வேதனையிலிருந்து நாம் அவனுக்கு மிக மிக அதிகப்படுத்தியும் விடுவோம்.
19:80
19:80 وَّنَرِثُهٗ مَا يَقُوْلُ وَيَاْتِيْنَا فَرْدًا‏
وَّنَرِثُهٗ இன்னும் வாரிசாகி விடுவோம் مَا يَقُوْلُ அவன் கூறியவற்றுக்கு وَيَاْتِيْنَا இன்னும் நம்மிடம் வருவான் فَرْدًا‏ தனியாக
19:80. இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
19:80. அவன் (தனக்குரியதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவற்றை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான்.
19:80. எந்தப் பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத்தையும் பற்றி அவன் பெருமையடித்துக் கொள்கின்றானோ அவை அனைத்தும் இறுதியில் நமக்கே உரியனவாகிவிடும்; அவன் தனியாகவே நம்மிடம் வருவான்.
19:80. இன்னும், அவன் கூறுகின்றவற்றுக்கு நாமே அனந்தரங்கொண்டு விடுவோம், (இவைகளை இழந்துவிட்டு) தனியாகவே நம்மிடம் அவன் வருவான்.
19:81
19:81 وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّيَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۙ‏
وَاتَّخَذُوْا இன்னும் ஏற்படுத்திக் கொண்டனர் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اٰلِهَةً பல தெய்வங்களை لِّيَكُوْنُوْا அவை இருக்கும் என்பதற்காக لَهُمْ தங்களுக்கு عِزًّا ۙ‏ பாதுகாப்பாக
19:81. (முஷ்ரிக்குகள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்!
19:81. (இணைவைத்து வணங்கும்) இவர்கள் தங்களுக்கு உதவியாக இருக்குமென்று அல்லாஹ் அல்லாதவற்றைத் தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர்.
19:81. அல்லாஹ்வை விடுத்து வேறு கடவுளரை இவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் இவர்களுக்கு உதவியாளராய் ஆக வேண்டும் என்பதற்காக!
19:81. (இணை வைத்துக்கொண்டிருந்த) இவர்கள், (அல்லாஹ்வின் வேதனையிலிருந்து காத்து) தங்களுக்கு உதவியாக அவர்கள் ஆவதற்காக அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
19:82
19:82 كَلَّا‌ ؕ سَيَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَيَكُوْنُوْنَ عَلَيْهِمْ ضِدًّا‏
كَلَّا‌ ؕ அவ்வாறல்ல سَيَكْفُرُوْنَ அவை நிராகரித்து விடும் بِعِبَادَتِهِمْ அவர்களின் வழிபாட்டை وَيَكُوْنُوْنَ இன்னும் அவை மாறிவிடும் عَلَيْهِمْ அவர்களுக்கு ضِدًّا‏ எதிரானவையாக
19:82. அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் ஆகிவிடும்.
19:82. அவ்வாறல்ல; அத்தெய்வங்கள் இவர்கள் தங்களை வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் மாறிவிடும்.
19:82. அவ்வாறு (எந்த உதவியாளரும்) இல்லை! அக்கடவுளர் அனைவரும் இவர்களின் வழிபாட்டை மறுத்துவிடுவர். ஏன், இவர்களுக்கு எதிரிகளாகவும் மாறிவிடுவர்.
19:82. அவ்வாறன்று! தங்களை இவர்கள் வணங்கியதையும் (அத்தெய்வங்கள்) நிராகரிப்பார்கள், இவர்களுக்கு விரோதமாகவும் அவர்கள் ஆகிவிடுவர்.
19:83
19:83 اَلَمْ تَرَ اَنَّاۤ اَرْسَلْنَا الشَّيٰـطِيْنَ عَلَى الْكٰفِرِيْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۙ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنَا ஏவி விட்டுள்ளோம் الشَّيٰـطِيْنَ ஷைத்தான்களை عَلَى الْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்கள் மீது تَؤُزُّ பிடித்துஅசைக்கின்றன هُمْ அவர்களை اَزًّا ۙ‏ பிடித்து அசைத்தல்
19:83. காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?
19:83. (நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பிவைக்கிறோம் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
19:83. நீர் கவனிக்கவில்லையா? சத்தியத்தை நிராகரிப்போர் மீது ஷைத்தான்களை நாம் ஏவி விட்டிருக்கின்றோம். அவர்கள் (சத்தியத்தை எதிர்க்குமாறு) இவர்களை அதிகம் அதிகம் தூண்டிக் கொண்டிருக்கின்றார்கள்!
19:83. (நபியே!) நிராகரிப்போரை (தீயவைகளைச் செய்யுமாறு) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்கவில்லையா?
19:84
19:84 فَلَا تَعْجَلْ عَلَيْهِمْ‌ ؕ اِنَّمَا نَـعُدُّ لَهُمْ عَدًّا‌ ۚ‏
فَلَا تَعْجَلْ ஆகவே அவசரப்படாதீர் عَلَيْهِمْ‌ ؕ அவர்கள் மீது اِنَّمَا நிச்சயமாக நாம் نَـعُدُّ எண்ணுகிறோம் لَهُمْ அவர்களுக்காக عَدًّا‌ ۚ‏ எண்ணுதல்
19:84. எனவே அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர்! அவர்களுக்கு (வேதனைக்குரிய தவணையின்) கணக்கை நாம் கணக்கிட்டுக் கொண்டுதானிக்கிறோம்.
19:84. ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீர் அவசரப்படாதீர். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம்.
19:84. எனவே, இவர்கள் மீது வேதனை இறங்க வேண்டுமென நீர் அவசரப்படாதீர். நாம் அவர்களுக்காக (நாட்களை) எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
19:84. ஆதலால், அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர், அவர்களுக்காக (வேதனை ஏற்படக்கூடிய நாட்களை) எண்ணிக்கையால் நாம் கணித்துக் கொண்டேயிருக்கிறோம்.
19:85
19:85 يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِيْنَ اِلَى الرَّحْمٰنِ وَفْدًا‌ ۙ‏
يَوْمَ நாளில்... نَحْشُرُ நாம் ஒன்று திரட்டுகின்றோம் الْمُتَّقِيْنَ இறையச்சமுள்ளவர்களை اِلَى الرَّحْمٰنِ ரஹ்மானின் பக்கம் وَفْدًا‌ ۙ‏ குழுவாக
19:85. அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்;
19:85. இறையச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளிகளைப் போல) குழுக்களாக நாம் ஒன்று சேர்க்கும் நாளில்,
19:85. அந்த நாள் வரத்தான் போகின்றது. அன்று, கருணை மிக்க இறைவனின் திருமுன் இறையச்சமுள்ள மக்களை, விருந்தினரைப் போன்று ஒன்று சேர்ப்போம்.
19:85. பயபக்தியுடையவர்களை அர்ரஹ்மானிடம், கண்ணியமிக்க (விருந்தினர்) குழுவாக நாம் ஒன்று திரட்டும் நாளில்-
19:86
19:86 وَّنَسُوْقُ الْمُجْرِمِيْنَ اِلٰى جَهَـنَّمَ وِرْدًا‌ ۘ‏
وَّنَسُوْقُ இன்னும் நாம் ஓட்டிக் கொண்டு வருகின்றோம் الْمُجْرِمِيْنَ பாவிகளை, குற்றவாளிகளை اِلٰى جَهَـنَّمَ நரகத்தின் பக்கம் وِرْدًا‌ ۘ‏ தாகித்தவர்களாக
19:86. குற்றவாளிகளை (அவர்கள்) தாகம் தீர்த்துக் கொள்வதற்காக நரகை நோக்கி நாம் விரட்டுவோம்.
19:86. இன்னும் குற்றவாளிகளை தாகத்துடன் நரகத்தின் பக்கம் நாம் ஓட்டுகின்ற நாளில்,
19:86. குற்றவாளிகளையோ தாகித்த மிருகங்களைப் போன்று நரகத்தின் பக்கம் விரட்டிச் செல்வோம்.
19:86. மேலும் குற்றவாளிகளைத் தாகித்தவர்களாக நரகத்தின்பால் (அந்நாளில்) நாம் ஓட்டிச் செல்வோம்.
19:87
19:87 لَا يَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا‌ ۘ‏
لَا يَمْلِكُوْنَ அவர்கள் உரிமை பெறமாட்டார்கள் الشَّفَاعَةَ சிபாரிசுக்கு اِلَّا தவிர مَنِ اتَّخَذَ ஏற்படுத்தியவரை عِنْدَ الرَّحْمٰنِ ரஹ்மானிடம் عَهْدًا‌ ۘ‏ ஓர் ஒப்பந்தத்தை
19:87. அர்ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்து கொண்டோரைத் தவிர, எவரும் ஷஃபாஅத்திற்கு - மன்றாட்டத்திற்கு - அதிகாரம் பெற மாட்டார்கள்.
19:87. ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச உரிமை பெறமாட்டார்.
19:87. அந்நாளில் எவராலும் எவ்விதப் பரிந்துரையும் சமர்ப்பிக்க இயலாது கருணை மிக்க இறைவனின் ஒப்புதல் பெற்றவர்களைத் தவிர!
19:87. அர்ரஹ்மானிடம் உறுதிமொழி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) பரிந்துரை செய்ய அதிகாரம் பெறமாட்டார்கள்.
19:88
19:88 وَقَالُوْا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ؕ‏
وَقَالُوْا இன்னும் கூறுகிறார்கள் اتَّخَذَ எடுத்துக் கொண்டான் الرَّحْمٰنُ பேரருளாளன் وَلَدًا ؕ‏ குழந்தையை
19:88. இன்னும், “அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
19:88. ரஹ்மான் சந்ததி எடுத்துக் கொண்டதாக அ(ந்த கிறிஸ்தவர்கள், இன்னும் இணைவைப்ப)வர்கள் கூறுகின்றனர்.
19:88. “கருணைமிக்க இறைவன் ஒருவரை மகனாக ஏற்படுத்தியுள்ளான்” என்று அவர்கள் கூறுகின்றார்கள்.
19:88. இன்னும், (கிறிஸ்தவர்களான) அவர்கள் ரஹ்மான் (தனக்கு) குமாரனை எடுத்துக்கொண்டான் எனக் கூறுகின்றனர்.
19:89
19:89 لَـقَدْ جِئْتُمْ شَيْــٴًـــا اِدًّا ۙ‏
لَـقَدْ திட்டமாக جِئْتُمْ சொல்லி விட்டீர்கள் شَيْــٴًـــا ஒரு காரியத்தை اِدًّا ۙ‏ பெரிய
19:89. “நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள்.
19:89. (நபியே! அவர்களை நோக்கி கூறுவீராக:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள்.
19:89. எத்தகைய அபத்தமான விஷயத்தை நீங்கள் இட்டுக்கட்டுகிறீர்கள்!
19:89. நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்கள் (என்று நபியே! அவர்களிடம் நீர் கூறுவீராக!)
19:90
19:90 تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَـنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۙ‏
تَكَادُ நெருங்கி விட்டன السَّمٰوٰتُ வானங்கள் يَتَفَطَّرْنَ مِنْهُ துண்டு துண்டாகி விடுவதற்கு وَتَـنْشَقُّ இன்னும் பிளந்து விடுவதற்கு الْاَرْضُ பூமி وَتَخِرُّ இன்னும் விழுந்து விடுவதற்கு الْجِبَالُ மலைகள் هَدًّا ۙ‏ விழுவது
19:90. இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போதிலும்.
19:90. வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்து விடவும் நெருங்கி விட்டன.
19:90. அதனால் வானங்கள் உடைந்துவிடவும், பூமி பிளந்துவிடவும், மலைகள் தகர்ந்து நொறுங்கிவிடவும் போகின்றன.
19:90. இ(வ்வாறு நீங்கள் கூறுவ)தனால் வானங்கள் வெடித்துவிடவும், பூமி பிளந்துவிடவும் மலைகள் இடிந்து நொறுங்கி விடவும் நெருங்கிவிடும்.
19:91
19:91 اَنْ دَعَوْا لِـلرَّحْمٰنِ وَلَدًا‌ ۚ‏
اَنْ دَعَوْا அவர்கள் ஏற்படுத்தியதால் لِـلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு وَلَدًا‌ ۚ‏ குழந்தையை
19:91. அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச்செய்வதினால்-
19:91. ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதன் காரணத்தால்.
19:91. (ஏனெனில்) இப்படி கருணைமிக்க இறைவனுக்கு சந்ததி இருக்கிறது என்று மக்கள் கூறுவது கொடூரமான பேச்சாகும்.
19:91. ரஹ்மானுக்கு குமாரன் உண்டென்று அவர்கள் அழைத்ததன் காரணமாக (அவை நிகழக்கூடும்).
19:92
19:92 وَمَا يَنْۢبَـغِىْ لِلرَّحْمٰنِ اَنْ يَّتَّخِذَ وَلَدًا ؕ‏
وَمَا يَنْۢبَـغِىْ தகுந்ததல்ல لِلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு اَنْ يَّتَّخِذَ ஏற்படுத்திக்கொள்வது وَلَدًا ؕ‏ குழந்தையை
19:92. ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.
19:92. சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதல்ல.
19:92. ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க இறைவனுக்கு ஏற்றது அல்ல!
19:92. குமாரனை எடுத்துக்கொள்வது அர்ரஹ்மானுக்கு அவசியமுமல்ல.
19:93
19:93 اِنْ كُلُّ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّاۤ اٰتِى الرَّحْمٰنِ عَبْدًا ؕ‏
اِنْ இல்லை كُلُّ ஒவ்வொருவரும் مَنْ فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ள وَالْاَرْضِ இன்னும் பூமியில் اِلَّاۤ தவிர اٰتِى வருவாரே الرَّحْمٰنِ பேரருளாளனிடம் عَبْدًا ؕ‏ அடிமையாக
19:93. ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை.
19:93. ஏனென்றால், நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகிறது.
19:93. வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் அடிமைகளாய் கருணை மிக்க இறைவனின் திருமுன் வரத்தான் போகின்றனர்.
19:93. (ஏனென்றால்,) வானங்களிலும், பூமியிலும் உள்ள (மனிதர்கள், ஜின் இனத்தவர், அமரர்கள் ஆகியோரில்) ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாக வந்தேயல்லாமல் (வேறு) இல்லை.
19:94
19:94 لَـقَدْ اَحْصٰٮهُمْ وَعَدَّهُمْ عَدًّا‏
لَـقَدْ திட்டமாக اَحْصٰٮهُمْ அவர்களை கணக்கிட்டு வைத்திருக்கிறான் وَعَدَّهُمْ இன்னும் அவர்களை எண்ணி வைத்திருக்கிறான் عَدًّا‏ எண்ணுதல்
19:94. நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான்.
19:94. அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கிறான்.
19:94. அவன் அவர்கள் அனைவரையும் சூழ்ந்து கொண்டும் இருக்கின்றான்; மேலும், அவர்களைக் கணக்கிட்டும் வைத்துள்ளான்.
19:94. அவர்களை திட்டமாக அவன் (பூரணமாக) சூழ்ந்தறிந்துள்ளான், அவர்(களின் எண்ணிக்கை)களை துல்லியமாக கணக்கிட்டும் வைத்திருக்கிறான்.
19:95
19:95 وَكُلُّهُمْ اٰتِيْهِ يَوْمَ الْقِيٰمَةِ فَرْدًا‏
وَكُلُّهُمْ அவர்கள் ஒவ்வொருவரும் اٰتِيْهِ அவனிடம் வருவார் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் فَرْدًا‏ தனியாக
19:95. கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர்.
19:95. அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் (எவருடைய உதவியுமில்லாமல்) அவனிடம் தனித்தனியாகவே வரும்.
19:95. மறுமை நாளில் இவர்கள் எல்லோரும் தனித்தனியாக அவனது திருமுன் வருவார்கள்.
19:95. அவர்களில் ஒவ்வொருவரும் மறுமைநாளில் அவனிடம் தனியாகவே வருவர்.
19:96
19:96 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை سَيَجْعَلُ ஏற்படுத்துவான் لَهُمُ அவர்களுக்கு الرَّحْمٰنُ பேரருளாளன் وُدًّا‏ அன்பை
19:96. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.
19:96. நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறவர்களை (அனைவரும்) நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான்.
19:96. எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்காக விரைவில் கருணை மிக்க இறைவன் (மக்களின் உள்ளங்களில்) அன்பைத் தோற்றுவிப்பான்.
19:96. நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் அவர்களுக்கு (விசுவாசிகளின் இதயங்களில்) நேசத்தையும் அர்ரஹ்மான் நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுப்பான்.
19:97
19:97 فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِيْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا‏
فَاِنَّمَا يَسَّرْنٰهُ இதை நாம் இலகுவாக்கியதெல்லாம் بِلِسَانِكَ உமது நாவில் لِتُبَشِّرَ நீர் நற்செய்தி கூறுவதற்காகவும் بِهِ இதன் மூலம் الْمُتَّقِيْنَ இறையச்சமுள்ளவர்களுக்கு وَتُنْذِرَ நீர் எச்சரிப்பதற்காகவும் بِهٖ இதன் மூலம் قَوْمًا மக்களை لُّدًّا‏ தர்க்கிக்கின்ற(வர்கள்)
19:97. (நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்.
19:97. (நபியே!) உமது மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் இறையச்சமுடையவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு இதன் மூலம் நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும்.
19:97. எனவே (நபியே!) நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் (இறக்கியருளி) எளிதாக்கி இருப்பது, இறையச்சம் கொண்டவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி அறிவிப்பதற்காகவும் மேலும், பிடிவாதத்தில் மூழ்கியிருக்கும் சமூகத்தை இதன் மூலம் எச்சரிக்கை செய்வதற்காகவுமே ஆகும்.
19:97. (நபியே!) உம்முடைய மொழியில் நாம் இதை (இறக்கி,) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதைக்கொண்டு நீர் பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறுவதற்காகவும், இன்னும், இதனைக் கொண்டு வீண்தர்க்கம் செய்யும் சமூகத்தார்க்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும்தான்.
19:98
19:98 وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍؕ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا‏
وَكَمْ எத்தனையோ اَهْلَكْنَا நாம் அழித்தோம் قَبْلَهُمْ இவர்களுக்கு முன் مِّنْ قَرْنٍؕ தலைமுறையினரை هَلْ تُحِسُّ நீர் பார்க்கிறீரா? مِنْهُمْ அவர்களில் مِّنْ اَحَدٍ யாரையும் اَوْ அல்லது تَسْمَعُ நீர் கேட்கிறீரா لَهُمْ அவர்களுடைய رِكْزًا‏ சப்தத்தை
19:98. அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?
19:98. இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்களில் ஒருவரையேனும் நீர் காண்கிறீரா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தையேனும் நீர் கேட்கிறீரா?
19:98. இவர்களுக்கு முன்னால் எத்தனையோ சமூகங்களை நாம் அழித்து விட்டிருக்கின்றோம்; (இன்று) அவர்களில் எவருடைய அடையாளத்தையேனும், நீர் எங்கேயாவது காண்கின்றீரா? அல்லது அவர்களுடைய எந்த அரவத்தையாவது எங்கேயாவது கேட்கின்றீரா?
19:98. அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம், அவர்களில் எவரையேனும் நீர் காண்கின்றீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தையேனும் நீர் கேட்கின்றீரா?