20. ஸூரத்து தாஹா
மக்கீ, வசனங்கள்: 135

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
20:1
20:1 طٰهٰ‌ ۚ‏
طٰهٰ‌ ۚ‏ ஓ மனிதரே!
20:1. தாஹா.
20:1. தா ஹா.
20:1. தா; ஹா.
20:1. தா ஹா.
20:2
20:2 مَاۤ اَنْزَلْـنَا عَلَيْكَ الْـقُرْاٰنَ لِتَشْقٰٓى ۙ‏
مَاۤ اَنْزَلْـنَا நாம் இறக்கவில்லை عَلَيْكَ உம்மீது الْـقُرْاٰنَ குர்ஆனை لِتَشْقٰٓى ۙ‏ நீர் சிரமப்படுவதற்காக
20:2. (நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.
20:2. (நபியே!) நீர் சிரமப்படுவதற்காக இந்த குர்ஆனை நாம் உம் மீது இறக்கவில்லை.
20:2. நீர் துன்பத்திற்குள்ளாக வேண்டும் என்பதற்காக இந்தக் குர்ஆனை உம்மீது நாம் இறக்கியருளவில்லை.
20:2. நீர் சங்கடப்படுவதற்காக (இந்தக்) குர் ஆனை உம்மீது நாம் இறக்கி வைக்கவில்லை.
20:3
20:3 اِلَّا تَذْكِرَةً لِّمَنْ يَّخْشٰى ۙ‏
اِلَّا தவிர تَذْكِرَةً ஒரு நினைவூட்டலாகவே لِّمَنْ يَّخْشٰى ۙ‏ பயப்படுகின்றவருக்கு
20:3. (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).
20:3. ஆயினும், (இறைவனுக்கு அஞ்சக்கூடிய) இறையச்சம் உடையவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே (இதை இறக்கி வைத்தோம்).
20:3. இதுவோ அஞ்சுகின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு நினைவூட்டுதலாகும்;
20:3. (அல்லாஹ்வாகிய அவனை) பயந்தோருக்கு உபதேசமாகவே அன்றி (இதனை நாம் இறக்கவில்லை).
20:4
20:4 تَنْزِيْلًا مِّمَّنْ خَلَقَ الْاَرْضَ وَالسَّمٰوٰتِ الْعُلَى ؕ‏
تَنْزِيْلًا இறக்கப்பட்டதாகும் مِّمَّنْ خَلَقَ படைத்தவனிடமிருந்து الْاَرْضَ பூமியை وَالسَّمٰوٰتِ இன்னும் வானங்களை الْعُلَىؕ ‏ உயர்ந்த
20:4. பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.
20:4. உயர்ந்த வானங்களையும், பூமியையும் படைத்தவனிடமிருந்து இது அருளப்பட்டது.
20:4. பூமியையும் உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து இறக்கியருளப்பட்டதும் ஆகும்.
20:4. பூமியையும், உயர்ந்த வானங்களையும் படைத்தவனிடமிருந்து (இவ்வேதம்) இறக்கப்பட்டுள்ளது.
20:5
20:5 اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى‏
اَلرَّحْمٰنُ பேரருளாளன் عَلَى மீது الْعَرْشِ அர்ஷின் اسْتَوٰى‏ உயர்ந்து இருக்கிறான்
20:5. அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.
20:5. (அவற்றைப் படைத்த) ரஹ்மான் (-அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.
20:5. கருணைமிக்க இறைவன் (பேரண்டத்தின்) ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளான்.
20:5. அர்ரஹ்மான் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான்.
20:6
20:6 لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَمَا تَحْتَ الثَّرٰى‏
لَهٗ அவனுக்கே உரியன مَا உள்ளவை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَا இன்னும் உள்ளவை فِى الْاَرْضِ பூமியில் وَمَا இன்னும் உள்ளவை بَيْنَهُمَا அவ்விரண்டுக்கும் இடையில் وَمَا இன்னும் உள்ளவை تَحْتَ கீழ் الثَّرٰى‏ ஈரமான மண்ணுக்கு
20:6. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
20:6. வானங்களிலும், பூமியிலும், இவற்றுக்கு மத்தியிலும், இன்னும் பூமிக்குக் கீழ் புதைந்து கிடப்பவையும் அவனுக்கே சொந்தமானவை.
20:6. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றிற்கும் அவற்றிற்கிடையே உள்ளவற்றிற்கும் மற்றும் மண்ணுக்கு அடியில் உள்ளவற்றிற்கும் அவனே உரிமையாளன் ஆவான்.
20:6. வானங்களிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும், இவ்விரண்டிற்கு மத்தியில் உள்ளவையும் பூமிக்குக் கீழ் (ஈரமான மண்ணுக்கடியில்) உள்ளவையும் அவனுக்கே உரியவையாகும்.
20:7
20:7 وَاِنْ تَجْهَرْ بِالْقَوْلِ فَاِنَّهٗ يَعْلَمُ السِّرَّ وَاَخْفٰى‏
وَاِنْ تَجْهَرْ நீர் பகிரங்கப்படுத்தினாலும் بِالْقَوْلِ பேச்சை فَاِنَّهٗ நிச்சயமாக அவன் يَعْلَمُ நன்கறிவான் السِّرَّ இரகசியத்தை وَاَخْفٰى‏ இன்னும் மிக மறைந்ததை
20:7. (நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான்.
20:7. (நபியே!) நீர் (மெதுவாக அல்லது) சப்தமிட்டு கூறினால் (இரண்டும் அவனுக்குச் சமம்தான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் இரகசியத்தையும் அதைவிட மிக மறைவாக (மனதில்) இருப்பதையும் நன்கறிவான்.
20:7. நீர் உம்முடைய சொற்களை உரக்கக் கூறும்; ஆனால், இரகசியமாகப் பேசுவதையும் ஏன், அதைவிட மறைவானவற்றையும் திண்ணமாக அவன் அறிகின்றான்.
20:7. (நபியே! உம்) சொல்லை நீர் சப்தமாகக் கூறினாலும், நிச்சயமாக அவன் இரகசியத்தையும் அதைவிட மறைவானதையும் அறிகிறான்.
20:8
20:8 اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ‌ؕ لَـهُ الْاَسْمَآءُ الْحُسْنٰى‏
اَللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ ؕ அவனை لَـهُ அவனுக்கு உண்டு الْاَسْمَآءُ பெயர்கள் الْحُسْنٰى‏ மிக அழகிய
20:8. அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவனுக்கு அழகிய திரு நாமங்கள் இருக்கின்றன.
20:8. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனுக்கு அழகான (திருப்) பெயர்கள் இருக்கின்றன. (அவற்றில் எதைக் கொண்டேனும் அவனை அழையுங்கள்.)
20:8. அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனுக்கு மிகவும் அழகிய பெயர்கள் உள்ளன.
20:8. அல்லாஹ்-அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு நாயன் இல்லை, அவனுக்கு அழகான (பல) பெயர்கள் இருக்கின்றன.
20:9
20:9 ‌وَهَلْ اَتٰٮكَ حَدِيْثُ مُوْسٰى‌ۘ‏
وَهَلْ اَتٰٮكَ உமக்கு வந்ததா? حَدِيْثُ செய்தி مُوْسٰى‌ۘ‏ மூஸாவுடைய
20:9. இன்னும் (நபியே!) மூஸாவின் வரலாறு உம்மிடம் வந்ததா?
20:9. (நபியே!) மூஸாவின் சரித்திரம் உம்மிடம் வந்திருக்கிறதா?
20:9. மேலும் (நபியே!) மூஸாவின் செய்தி உமக்கு எட்டியதா?
20:9. இன்னும், (நபியே!) மூஸாவின் செய்தி உம்மிடம் வந்ததா?
20:10
20:10 اِذْ رَاٰ نَارًا فَقَالَ لِاَهْلِهِ امْكُثُوْۤا اِنِّىْۤ اٰنَسْتُ نَارًا لَّعَلِّىْۤ اٰتِيْكُمْ مِّنْهَا بِقَبَسٍ اَوْ اَجِدُ عَلَى النَّارِ هُدًى‏
اِذْ رَاٰ அவர் பார்த்தபோது نَارًا ஒரு நெருப்பை فَقَالَ அவர் கூறினார் لِاَهْلِهِ தனது குடும்பத்தினருக்கு امْكُثُوْۤا தங்கி இருங்கள் اِنِّىْۤ நிச்சயமாக நான் اٰنَسْتُ நான் காண்கின்றேன் نَارًا ஒரு நெருப்பை لَّعَلِّىْۤ اٰتِيْكُمْ உங்களிடம் கொண்டு வரலாம் مِّنْهَا அதிலிருந்து بِقَبَسٍ ஒரு எரிகொல்லியை اَوْ அல்லது اَجِدُ பெறலாம் عَلَى النَّارِ நெருப்பின் அருகில் هُدًى‏ வழிகாட்டுதலை
20:10. அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ; அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்” என்று (கூறினார்).
20:10. (அவர் தன் குடும்பத்தாருடன் சென்றபொழுது தான் செல்லவேண்டிய வழியை அறியாத நிலையில் தூர் என்னும் மலைமீது) அவர் நெருப்பைக் கண்ட சமயத்தில் தன் குடும்பத்தாரை நோக்கி ‘‘நீங்கள் (இங்கு சிறிது) தாமதித்திருங்கள். மெய்யாகவே நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஓர் எரி கொள்ளியை எடுத்துக்கொண்டு உங்களிடம் வருகிறேன். அல்லது நெருப்பி(ன் வெளிச்சத்தி)னால் (நாம் செல்லவேண்டிய) வழியை அறிந்து கொள்வேன்'' என்றார்.
20:10. அவர் நெருப்பைக் கண்டபோது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: “கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கின்றேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டு வரக்கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்துகொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல் எனக்குக் கிடைக்கக்கூடும்.”
20:10. (தூர் என்னும் மலை மீது) நெருப்பை அவர் கண்டபோது, தன் குடும்பத்தினரிடம், “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள், நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன், அதிலிருந்து ஒரு தீப்பந்தத்தை உங்களுக்குக் கொண்டு வரவோ, அல்லது நெருப்பி(ன் வெளிச்சத்தி)னால் வழியை நான் பெறவோ செய்யலாம்” என்றார்.
20:11
20:11 فَلَمَّاۤ اَتٰٮهَا نُوْدِىَ يٰمُوْسٰىؕ‏
فَلَمَّاۤ اَتٰٮهَا அவர் அதனிடம் வந்தபோது نُوْدِىَ அழைக்கப்பட்டார் يٰمُوْسٰىؕ‏ மூஸாவே!
20:11. அவர் (நெருப்பின்) அருகே வந்த போது “மூஸாவே!” என்று அழைக்கப் பட்டார்.
20:11. அவர் அதனிடம் வரவே (அவரை நோக்கி) ‘‘மூஸாவே!'' என்று சப்தமிட்டழைத்து (நாம் கூறியதாவது):
20:11. அங்குச் சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: “மூஸாவே!
20:11. ஆகவே, அவர் அதனிடம் வரவே மூஸாவே! என அவர் அழைக்கப்பட்டார்.
20:12
20:12 اِنِّىْۤ اَنَا رَبُّكَ فَاخْلَعْ نَـعْلَيْكَ‌ۚ اِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًىؕ‏
اِنِّىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் رَبُّكَ உமது இறைவன் فَاخْلَعْ கழட்டுவீராக نَـعْلَيْكَ‌ۚ உமது செருப்புகளை اِنَّكَ நிச்சயமாக நீர் بِالْوَادِ பள்ளத்தாக்கில் الْمُقَدَّسِ பரிசுத்தமான طُوًىؕ‏ துவா
20:12. “நிச்சயமாக நான் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
20:12. ‘‘நிச்சயமாக நான்தான் உமது இறைவன். உமது காலணிகள் இரண்டையும் கழற்றி விடுவீராக. நிச்சயமாக நீர் ‘துவா' என்னும் பரிசுத்த இடத்தில் இருக்கிறீர்.
20:12. நானே உம்முடைய இறைவன்; உம்முடைய காலணிகளைக் கழற்றிவிடும். திண்ணமாக நீர் “துவா” எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
20:12. “நிச்சயமாக நான்தான் உமதிரட்சகன், ஆகவே, உம்முடைய காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும், நிச்சயமாக நீர் “துவா” எனும் பரிசுத்தமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.”
20:13
20:13 وَاَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوْحٰى‏
وَاَنَا நான் اخْتَرْتُكَ உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் فَاسْتَمِعْ ஆகவே செவிமடுப்பீராக لِمَا يُوْحٰى‏ வஹீ அறிவிக்கப்படுபவற்றை
20:13. இன்னும் “நான் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.
20:13. நான் உம்மை (என் தூதராகத்) தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஆதலால், வஹ்யி மூலம் (உமக்கு) அறிவிக்கப்படுவதற்கு செவிசாய்ப்பீராக.
20:13. மேலும், நான் உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே “வஹியாக”* அருளப்படுகின்றவற்றைச் செவியேற்பீராக!
20:13. மேலும், “நான் உம்மை (என்னுடைய தூதராக)த் தேர்ந்தெடுத்துக் கொண்டேன், ஆதலால் (வஹீ மூலம் உமக்கு) அறிவிக்கப்படுபவைகளை நீர் செவியேற்பீராக!”
20:14
20:14 اِنَّنِىْۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدْنِىْ ۙ وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِىْ‏
اِنَّنِىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் اللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّاۤ தவிர اَنَا என்னை فَاعْبُدْنِىْ ۙ ஆகவே, என்னை வணங்குவீராக وَاَقِمِ இன்னும் நிலைநிறுத்துவீராக الصَّلٰوةَ தொழுகையை لِذِكْرِىْ‏ என் நினைவிற்காக
20:14. “நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.
20:14. நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. என்னையே வணங்குவீராக. என்னை தியானித்துக்கொண்டே இருக்கும்பொருட்டு தொழுகையைக் கடைப்பிடிப்பீராக.
20:14. திண்ணமாக, நான்தான் அல்லாஹ்; என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, எனக்கு அடிபணிவீராக! என்னை நினைவுகூர்வதற்காகத் தொழுகையை நிலைநிறுத்துவீராக!
20:14. “நிச்சயமாக நான்தான் அல்லாஹ், என்னைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு நாயன் இல்லை, ஆகவே, என்னையே நீர் வணங்குவீராக! என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையையும் நிறைவேற்றுவீராக”
20:15
20:15 اِنَّ السَّاعَةَ اٰتِيَـةٌ اَكَادُ اُخْفِيْهَا لِتُجْزٰى كُلُّ نَفْسٍۢ بِمَا تَسْعٰى‏
اِنَّ நிச்சயமாக السَّاعَةَ மறுமை اٰتِيَـةٌ வரக்கூடியதாகும் اَكَادُ اُخْفِيْهَا அதை நான் மறைத்தே வைத்திருப்பேன் لِتُجْزٰى கூலி கொடுக்கப்படுவதற்காக كُلُّ ஒவ்வொரு نَفْسٍۢ ஆன்மாவும் بِمَا تَسْعٰى‏ அது செய்கின்றவற்றுக்கு
20:15. “ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்குத் தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வரவிருக்கிறது; ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.
20:15. நிச்சயமாக மறுமை வந்தே தீரும். ஒவ்வோர் ஆத்மாவும் தன் செயலுக்குத் தக்க கூலியை அடையும் பொருட்டு அதை நான் (மனிதர்களுக்கு) மறைத்து வைக்க விரும்புகிறேன்.
20:15. மறுமைநாள் வருவது திண்ணம். அது வரும் நேரத்தை நான் மறைத்து வைக்க விரும்புகின்றேன்; ஒவ்வொரு ஆன்மாவும் அவரவரின் முயற்சிகளுக்கேற்ற கூலி பெற வேண்டும் என்பதற்காக!
20:15. “நிச்சயமாக மறுமை வரக்கூடியதாக இருக்கிறது ஒவ்வோர் ஆத்மாவும் அது முயற்சி செய்ததற்குத்தக்க கூலி வழங்கப்படுவதற்காக அதனை நான் (மனிதர்களுக்கு) மறைத்து வைக்க சமீபிக்கிறேன்” (முற்றிலும் மறைத்து வைத்துள்ளேன்).
20:16
20:16 فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَنْ لَّا يُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوٰٮهُ فَتَرْدٰى‏
فَلَا يَصُدَّنَّكَ உம்மை திருப்பிவிட வேண்டாம் عَنْهَا அதை விட்டு مَنْ لَّا يُؤْمِنُ எவன் நம்பிக்கை கொள்ளவில்லை بِهَا அதை وَاتَّبَعَ பின்பற்றியவன் هَوٰٮهُ தனது மன இச்சையை فَتَرْدٰى‏ நீர் அழிந்து விடுவீர்
20:16. “ஆகவே, அதனை நம்பாது, தன் (மன) இச்சையைப் பின்பற்றுபவன் திடனாக அதைவிட்டும் உம்மைத் திருப்பிவிட வேண்டாம். அவ்வாறாயின், நீர் அழிந்துபோவீர்.
20:16. ஆகவே, அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் சரீர இச்சையைப் பின்பற்றுபவன் அந்நாளை நம்பிக்கை கொள்வதிலிருந்து உம்மைத் தடுத்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிந்து விடுவீர்.''
20:16. எனவே, எவன் அந்த நாளின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தன் மன இச்சையைப் பின்பற்றுகின்றானோ அவன் அந்நாளைப் பற்றிய சிந்தனையிலிருந்து உம்மைத் தடுத்திட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிவிற்குள்ளாகி விடுவீர்
20:16. ஆகவே, அதனை நம்பிக்கை கொள்ளாது, தன் (மன) இச்சையையும் பின்பற்றியவன் அதனைவிட்டும் திண்ணமாக உம்மைத் தடுத்துவிட வேண்டாம், அவ்வாறாயின் நீர் அழிந்துவிடுவீர்! (என்று கூறி)
20:17
20:17 وَمَا تِلْكَ بِيَمِيْنِكَ يٰمُوْسٰى‏
وَمَا என்ன? تِلْكَ அது بِيَمِيْنِكَ உமது வலக்கையில் يٰمُوْسٰى‏ மூஸாவே!
20:17. “மூஸாவே! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் அல்லாஹ் கேட்டான்.)
20:17. ‘‘மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?'' (என்று கேட்டான்.)
20:17. மேலும், மூஸாவே! உம்முடைய வலக்கரத்தில் இருப்பது என்ன?”
20:17. “மேலும், மூஸாவே! உமது வலது கையில் இருப்பது என்ன?” (என்றும் கேட்டான்.)
20:18
20:18 قَالَ هِىَ عَصَاىَ‌ۚ اَتَوَكَّؤُا عَلَيْهَا وَاَهُشُّ بِهَا عَلٰى غَـنَمِىْ وَلِىَ فِيْهَا مَاٰرِبُ اُخْرٰى‏
قَالَ அவர் கூறினார் هِىَ அது عَصَاىَ‌ۚ எனது கைத்தடி اَتَوَكَّؤُا சாய்ந்து கொள்வேன் عَلَيْهَا அதன் மீது وَاَهُشُّ இன்னும் பறிப்பேன் بِهَا அதைக் கொண்டு عَلٰى غَـنَمِىْ என் ஆடுகளுக்கு وَلِىَ இன்னும் எனக்கு فِيْهَا அதில் உள்ளன مَاٰرِبُ اُخْرٰى‏ மற்ற பல தேவைகள்
20:18. (அதற்கவர்) “இது என்னுடைய கைத்தடி; இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன்; இன்னும் இதில் எனக்கு வேறு தேவைகளும் நிறைவேறுகின்றன” என்று கூறினார்.
20:18. அதற்கவர் ‘‘இது என் கைத்தடி. இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்குத் தழை (குழை)களைப் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறு (பல) பயன்களும் இருக்கின்றன'' என்று கூறினார்.
20:18. அதற்கு மூஸா பதிலளித்தார்: “இது என்னுடைய கைத்தடி; இதனை ஊன்றிக் கொண்டு நடப்பேன்; இதன் மூலம் என்னுடைய ஆடுகளுக்கு இலை தழைகளைப் பறித்துப் போடுவேன்; இன்னும் இதன் மூலம் என்னுடைய வேறு பல தேவைகளும் நிறைவேறுகின்றன.”
20:18. அ(தற்க)வர், “இது என்னுடைய கைத்தடி, இதன்மீது நான் சாய்ந்து கொள்வேன், இதைக்கொண்டு என்னுடைய ஆடுகளுக்கு(த்தழை குழைகளை) மரங்களிலிருந்து பறிப்பேன், இன்னும் இதில் எனக்கு வேறு பல தேவைகளும் இருக்கின்றன” என்று கூறினார்.
20:19
20:19 قَالَ اَلْقِهَا يٰمُوْسٰى‏
قَالَ அவன் கூறினான் اَلْقِهَا அதை நீர் எறிவீராக يٰمُوْسٰى‏ மூஸாவே!
20:19. அதற்கு (இறைவன்) “மூஸாவே! அதை நீர் கீழே எறியும்” என்றான்.
20:19. அதற்கு (இறைவன்) ‘‘மூஸாவே! அதை(த் தரையில்) எறிவீராக'' எனக் கூறினான்.
20:19. அப்போது இறைவன், “மூஸாவே! நீர் அதனைக் கீழே எறிந்துவிடும்” என்றான்.
20:19. (அதற்கு அல்லாஹ்) “மூஸாவே நீர் அதனை(த் தரையில்) போடுவீராக” என்று கூறினான்.
20:20
20:20 فَاَلْقٰٮهَا فَاِذَا هِىَ حَيَّةٌ تَسْعٰى‏
فَاَلْقٰٮهَا அதை அவர்எறிந்தார் فَاِذَا உடனே هِىَ அது ஆகிவிட்டது حَيَّةٌ ஓடுகின்றது تَسْعٰى‏ ஒரு பாம்பாக
20:20. அவ்வாறே அவர் அதனைக் கீழே எறிந்தார்; அப்போது அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாயிற்று.
20:20. அவர் அதை எறியவே அது ஒரு பெரிய பாம்பாகி ஓடிற்று.
20:20. அவர் அதனை எறிந்துவிட்டார். உடனே அது நெளிந்து செல்லும் பாம்பாயிற்று;
20:20. அப்பொழுது அவர் அதனைப் போட்டார், அச்சமயமே அது நெளிந்து செல்லும் ஒரு பெரிய பாம்பாயிற்று.
20:21
20:21 قَالَ خُذْهَا وَلَا تَخَفْ‌ سَنُعِيْدُهَا سِيْرَتَهَا الْاُوْلٰى‏
قَالَ அவன் கூறினான் خُذْهَا அதைப் பிடிப்பீராக! وَلَا تَخَفْ‌ பயப்படாதீர்! سَنُعِيْدُهَا அதை திருப்புவோம் سِيْرَتَهَا அதன் தன்மைக்கே الْاُوْلٰى‏ முந்திய
20:21. (இறைவன்) கூறினான்: “அதைப் பிடியும்; பயப்படாதீர்; உடனே நாம் அதை அதன் பழைய நிலைக்கே மீட்டுவோம்.”
20:21. அப்போது இறைவன் கூறினான்: (மூஸாவே!) ‘‘அதைப் பிடிப்பீராக; பயப்படாதீர். உடனே அதை (முன்பு போல் தடியாக) அதன் பழைய நிலைக்கு திருப்பி விடுவேன்.
20:21. இறைவன் கூறினான்: “இதனைப் பிடியும்; அஞ்சாதீர்; முன்பு எப்படி இருந்ததோ அப்படியே இதனை மீண்டும் ஆக்கிவிடுவோம்.
20:21. “நீர் அதைப் பிடியும், மேலும் பயப்படாதீர், உடனே அதனை முந்திய நிலைக்கே (கைத்தடியாக) நாம் மீட்டுவோம்” என்று அல்லாஹ்வாகிய அவன் கூறினான்.
20:22
20:22 وَاضْمُمْ يَدَكَ اِلَىٰ جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوْٓءٍ اٰيَةً اُخْرٰىۙ‏
وَاضْمُمْ இன்னும் சேர்ப்பீராக يَدَكَ உமது கரத்தை اِلَىٰ جَنَاحِكَ புஜத்தின் கீழ் تَخْرُجْ தோன்றும் بَيْضَآءَ வெண்மையாக مِنْ غَيْرِ سُوْٓءٍ நோயுமின்றி اٰيَةً அத்தாட்சியாக اُخْرٰىۙ‏ மற்றொரு
20:22. “இன்னும், உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி (வெளியில்) எடும்; அது ஒளி மிக்கதாய் மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இது மற்றோர் அத்தாட்சியாகும்.
20:22. உமது கையை உமது கக்கத்தில் சேர்த்து வைப்பீராக. (அதை எடுக்கும் போது) அது மிக்க ஒளியுடன் மாசற்ற வெண்மையாக வெளிவரும். (இது) மற்றொரு அத்தாட்சியாகும்.
20:22. மேலும், உம்முடைய கையை உம்முடைய கக்கத்தில் சேர்த்து வைப்பீராக! அது பிரகாசமாக வெளிப்படும், எத்தகைய ஊறுமின்றி! இது மற்றொரு சான்றாகும்.
20:22. மேலும் “உம்முடைய கையை உம்முடைய விலாப்புறத்தின்பால் சேர்ப்பீராக! அது இன்னொரு அத்தாட்சியாக எவ்விதத்தீங்குமின்றி வெண்மையாக வெளிவரும்.
20:23
20:23 لِنُرِيَكَ مِنْ اٰيٰتِنَا الْـكُبْـرٰى‌ۚ‏
لِنُرِيَكَ உமக்கு நாம் காண்பிப்பதற்காக مِنْ اٰيٰتِنَا நமது அத்தாட்சிகளில் الْـكُبْـرٰى‌ۚ‏ பெரிய
20:23. “(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்குக் காண்பிக்கிறோம்.
20:23. (இவ்வாறு இன்னும்) நமது பெரிய அத்தாட்சிகளை உமக்கு நாம் காண்பிப்போம்.
20:23. ஏனெனில், நாம் உமக்கு நம்முடைய மாபெரும் சான்றுகளைக் காண்பிக்கக் கூடியவராய் இருக்கிறோம்.
20:23. “(இவ்வாறு) நம்முடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து (சிலவற்றை) உமக்கு காண்பிப்பதற்காக (இவற்றைச் செய்யுமாறு நாம் கட்டளையிட்டோம்)
20:24
20:24 اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى‏
اِذْهَبْ நீர் செல்வீராக اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் اِنَّهٗ நிச்சயமாக அவன் طَغٰى‏ வரம்பு மீறிவிட்டான்
20:24. “ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்” (என்றும் அல்லாஹ் கூறினான்).
20:24. ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் மாறு செய்து கொண்டிருக்கிறான்''
20:24. இனி, நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும்; அவன் வரம்பு மீறியவனாக இருக்கின்றான்.”
20:24. “நீர் ஃபிர் அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் தன் (தகுதியை மறந்து இரட்சகனின்) வரம்பை மீறி விட்டான்” (என்றும் கூறினான்)
20:25
20:25 قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா اشْرَحْ لِىْ எனக்கு விரிவாக்கு صَدْرِىْ ۙ‏ என் நெஞ்சத்தை
20:25. (அதற்கு மூஸா) கூறினார்: “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
20:25. அவர் கூறினார் ‘‘என் இறைவனே! என் உள்ளத்தை(த் திடப்படுத்தி) விரிவாக்கு;
20:25. அதற்கு மூஸா வேண்டிக் கொண்டார்: “என் இறைவா, என் நெஞ்சத்தை விரிவாக்கியருள்வாயாக!
20:25. (அதற்கு மூஸா) கூறினார் “என் இரட்சகனே! என் நெஞ்சத்தை(த் திடப்படுத்தி விரிவாக்கி வைப்பாயாக”)
20:26
20:26 وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ‏
وَيَسِّرْ இன்னும் இலகுவாக்கு لِىْۤ எனக்கு اَمْرِىْ ۙ‏ என் காரியத்தை
20:26. “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
20:26. (நான் செய்ய வேண்டிய) என் காரியங்களை எனக்குச் சுலபமாக்கி வை.
20:26. மேலும், என் செயல்களை எனக்கு இலகுவாக்கித் தருவாயாக.
20:26. என்னுடைய காரியத்தை எனக்கு எளிதாக்கியும் வைப்பாயாக!
20:27
20:27 وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ‏
وَاحْلُلْ இன்னும் அவிழ்த்துவிடு عُقْدَةً கொன்னலை مِّنْ لِّسَانِیْ ۙ‏ என் நாவிலிருந்து
20:27. “என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
20:27. என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு;
20:27. என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்து விடுவாயாக;
20:27. என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்த்தும் விடுவாயாக!
20:28
20:28 يَفْقَهُوْا قَوْلِیْ ‏
يَفْقَهُوْا அவர்கள் புரிந்து கொள்வார்கள் قَوْلِیْ ‏ என் பேச்சை
20:28. “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!
20:28. என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்வார்கள்.
20:28. நான் கூறுவதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
20:28. (அப்பொழுது) என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.
20:29
20:29 وَاجْعَلْ لِّىْ وَزِيْرًا مِّنْ اَهْلِىْ ۙ‏
وَاجْعَلْ இன்னும் ஏற்படுத்து لِّىْ எனக்கு وَزِيْرًا ஓர் உதவியாளரை مِّنْ اَهْلِىْ ۙ‏ என்குடும்பத்திலிருந்து
20:29. “என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!
20:29. என் குடும்பத்தில் ஒருவரை எனக்கு உற்ற துணையாக (மந்திரியாக) ஆக்கிவை;
20:29. மேலும், என் குடும்பத்தாரிலிருந்து ஒருவரை;
20:29. என் குடும்பத்திலிருந்து எனக்கு உதவியாளரை ஆக்கியும் வைப்பாயாக!
20:30
20:30 هٰرُوْنَ اَخِى ۙ‏
هٰرُوْنَ ஹாரூனை اَخِى ۙ‏ என் சகோதரர் فِىْۤ اَهْلِ வாசிகளிடம்
20:30. “என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!
20:30. அவர் என் சகோதரர் ஹாரூனாகவே இருக்கட்டும்.
20:30. என்னுடைய சகோதரர் ஹாரூனை எனக்கு உதவியாளராக நியமிப்பாயாக;
20:30. என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஆக்கி வைப்பாயாக).
20:31
20:31 اشْدُدْ بِهٖۤ اَزْرِىْ ۙ‏
اشْدُدْ பலப்படுத்து بِهٖۤ அதன் மூலம் اَزْرِىْ ۙ‏ எனது முதுகை
20:31. “அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!
20:31. அவரைக் கொண்டு என் ஆற்றலை உறுதிப்படுத்தி வை.
20:31. அவரைக் கொண்டு என் கையை வலுப்படுத்துவாயாக!
20:31. அவரைக் கொண்டு என் பலத்தை உறுதிப்படுத்தி வைப்பாயாக!
20:32
20:32 وَاَشْرِكْهُ فِىْۤ اَمْرِىْ ۙ‏
وَاَشْرِكْهُ அவரை இணைத்துவிடு فِىْۤ اَمْرِىْ ۙ‏ எனது காரியத்தில்
20:32. “என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!
20:32. என் காரியங்களில் அவரையும் கூட்டா(ளியா)க்கி வை.
20:32. மேலும், என் பணியில் அவரை துணைவராக்குவாயாக
20:32. என் காரியங்களில் அவரைக் கூட்டாக்கியும் வைப்பாயாக!
20:33
20:33 كَىْ نُسَبِّحَكَ كَثِيْرًا ۙ‏
كَىْ نُسَبِّحَكَ நாங்கள் உன்னை துதிப்பதற்காக كَثِيْرًا ۙ‏ அதிகம்
20:33. “நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும்;
20:33. நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் துதித்து புகழ்வதற்காக,
20:33. நாங்கள் உன்னை அதிகம் துதித்து மேலும்,
20:33. நாங்கள் உன்னை அதிகமாகத் துதி செய்து போற்றுவதற்காகவும்,
20:34
20:34 وَّنَذْكُرَكَ كَثِيْرًا ؕ‏
وَّنَذْكُرَكَ இன்னும் நாங்கள் உன்னை நினைவு கூருவதற்காக كَثِيْرًا ؕ‏ அதிகம்
20:34. “உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக!)
20:34. மேலும் உன்னை அதிகமாகவே நினைவு கூர்வதற்காக.
20:34. உன்னை அதிகம் நினைவுகூரவேண்டும் என்பதற்காக!
20:34. “நாங்கள் உன்னை அதிகமாக நினைவு கூர்வதர்க்காகவும் (என் கோரிக்கைகளை ஏற்று அருள்வாயாக)
20:35
20:35 اِنَّكَ كُنْتَ بِنَا بَصِيْرًا‏
اِنَّكَ நிச்சயமாக நீ كُنْتَ இருக்கின்றாய் بِنَا எங்களை بَصِيْرًا‏ உற்று நோக்கியவனாக
20:35. “நிச்சயமாக, நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய்” (என்றார்)
20:35. (எங்கள் இறைவனே!) நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்'' (என்று மூஸா பிரார்த்தனை செய்தார்).
20:35. திண்ணமாக, நீ எங்கள் நிலைமைகளை எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றாய்.”
20:35. “நிச்சயமாக நீ எங்களை பார்க்கக்கூடியவனாகவே இருக்கிறாய்” (என்று மூஸா நபி பிரார்த்தனை செய்தார்).
20:36
20:36 قَالَ قَدْ اُوْتِيْتَ سُؤْلَـكَ يٰمُوْسٰى‏
قَالَ அவன் கூறினான் قَدْ اُوْتِيْتَ திட்டமாக கொடுக்கப்பட்டீர் سُؤْلَـكَ உமது கோரிக்கையை يٰمُوْسٰى‏ மூஸாவே!
20:36. “மூஸாவே! நீர் கேட்டவை, நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன” என்று (அல்லாஹ்) கூறினான்.
20:36. அதற்கு (இறைவன்) கூறினான், ‘‘மூஸாவே! நீர் கேட்ட அனைத்தும் நிச்சயமாக உமக்குக் கொடுக்கப்பட்டன.
20:36. இறைவன் கூறினான்: “மூஸாவே! நீர் வேண்டியவை யாவும் உமக்கு வழங்கப்பட்டுவிட்டன.
20:36. (அதற்கு) “மூஸாவே! நீர் கேட்டவற்றை திட்டமாக நீர் கொடுக்கப்பட்டு விட்டீர்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
20:37
20:37 وَلَـقَدْ مَنَـنَّا عَلَيْكَ مَرَّةً اُخْرٰٓىۙ‏
وَلَـقَدْ திட்டமாக مَنَـنَّا அருள் புரிந்திருக்கின்றேன் عَلَيْكَ உம்மீது مَرَّةً முறை اُخْرٰٓىۙ‏ மற்றொரு
20:37. மேலும், முன்னர் மற்றொரு முறையும் நிச்சயமாக நாம் உம்மீது பேரருள் புரிந்துள்ளோம்.
20:37. (இதற்கு) முன்னரும் ஒருமுறை நிச்சயமாக நாம் உமக்குப் பேரருள் புரிந்திருக்கிறோம்.'' (அதாவது:)
20:37. நாம் மற்றொரு தடவையும் உமக்கு உபகாரம் செய்துள்ளோம்.
20:37. மற்றொரு தடவையும் திட்டமாக நாம் உம்மீது பேரருள் புரிந்திருக்கிறோம்.
20:38
20:38 اِذْ اَوْحَيْنَاۤ اِلٰٓى اُمِّكَ مَا يُوْحٰٓى ۙ‏
اِذْ اَوْحَيْنَاۤ நாம் அறிவித்தபோது اِلٰٓى اُمِّكَ உமது தாய்க்கு مَا يُوْحٰٓى ۙ‏ அறிவிக்கப்பட வேண்டியவற்றை
20:38. “உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)!
20:38. வஹ்யில் அறிவிக்கப்படுபவற்றை நாம் உமது தாய்க்கு வஹ்யி அறிவித்தபோது, (அதாவது;)
20:38. வஹியின் மூலமாகவே உணர்த்தப்படுகின்ற செய்தியை நாம் உம்முடைய தாய்க்கு உணர்த்திய நேரத்தை நினைவு கூரும்.
20:38. உமது தாய்க்கு (உம்மைப்பற்றி) அறிவிக்கப்பட வேண்டியவற்றை நாம் அறிவித்த சமயம்-(அதாவது)
20:39
20:39 اَنِ اقْذِفِيْهِ فِى التَّابُوْتِ فَاقْذِفِيْهِ فِى الْيَمِّ فَلْيُلْقِهِ الْيَمُّ بِالسَّاحِلِ يَاْخُذْهُ عَدُوٌّ لِّىْ وَعَدُوٌّ لَّهٗ‌ ؕ وَاَلْقَيْتُ عَلَيْكَ مَحَـبَّةً مِّنِّىْ ۚ وَلِتُصْنَعَ عَلٰى عَيْنِىْ ۘ‏
اَنِ اقْذِفِيْهِ அதாவது அவரை போடுவீராக فِى التَّابُوْتِ பேழையில் فَاقْذِفِيْهِ அதை போடுவீராக فِى الْيَمِّ கடலில் فَلْيُلْقِهِ அதை எறியும் الْيَمُّ கடல் بِالسَّاحِلِ கரையில் يَاْخُذْهُ அதை எடுப்பான் عَدُوٌّ எதிரி لِّىْ எனது وَعَدُوٌّ இன்னும் எதிரி لَّهٗ‌ ؕ அவரது وَاَلْقَيْتُ இன்னும் ஏற்படுத்தினேன் عَلَيْكَ உம்மீது مَحَـبَّةً அன்பை مِّنِّىْ ۚ என் புறத்திலிருந்து وَلِتُصْنَعَ இன்னும் நீ பராமரிக்கப்படுவதற்காக عَلٰى عَيْنِىْ ۘ‏ என் கண்பார்வையில்
20:39. அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும்; அங்கே எனக்கு பகைவனும்; அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்” (எனப் பணித்தோம்). மேலும், ”(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.
20:39. ‘‘(உங்கள் இனத்தாரின் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். உம்மைப் பற்றி உமது தாய் கவலை கொண்டாள். ஆகவே, உமது தாயை நோக்கி) ‘‘உம்மைப் பேழையில் வைத்து கடலில் எறிந்து விடு. அக்கடல் அதைக் கரையில் சேர்த்துவிடும். எனக்கும் அந்த குழந்தைக்கும் எதிரியாக உள்ளவனே அதை எடுத்துக்கொள்வான்'' (என்று உமது தாய்க்கு அறிவித்தோம்). நீர் என் கண் பார்வையில் வளர்க்கப்படுவதற்காக (இவ்வாறு) உம் மீது என் அன்பை சொரிந்(து உம்மைப் பார்ப்பவர்கள் விரும்பும்படிச் செய்)தோம்.
20:39. “நீர் இக்குழந்தையைப் பெட்டகத்தினுள் வைத்து, பெட்டகத்தை ஆற்றில் விட்டு விடும். ஆறு, அதனைக் கரையில் ஒதுக்கிவிடும்; எனக்கும் அக்குழந்தைக்கும் பகைவனான ஒருவன் அதனை எடுத்துக்கொள்வான்.” “மேலும், என்னிடமிருந்து அன்பை உம்மீது பொழிந்திருக்கின்றேன். இன்னும் என் மேற்பார்வையில் உம்மை வளர்க்க ஏற்பாடு செய்தேன்.
20:39. “அவரை பேழையில் வைத்து (நைல்) நதியில் அதனை எறிந்துவிடு, அந்நதி அவரைக் கரையில் சேர்த்து விடும், எனக்கு விரோதியும், அவருக்கு விரோதியாகவும் உள்ளவன் அவரை எடுத்துக் கொள்வான்” என்றும் (உம் தாய்க்கு அறிவித்தோம்) என்னிடமிருந்து அன்பையும் உம்மீது நான் பொழிந்தேன், இன்னும் என் கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக.
20:40
20:40 اِذْ تَمْشِىْۤ اُخْتُكَ فَتَقُوْلُ هَلْ اَدُلُّـكُمْ عَلٰى مَنْ يَّكْفُلُهٗ‌ ؕ فَرَجَعْنٰكَ اِلٰٓى اُمِّكَ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ؕ وَقَتَلْتَ نَـفْسًا فَنَجَّيْنٰكَ مِنَ الْغَمِّ وَفَتَـنّٰكَ فُتُوْنًا فَلَبِثْتَ سِنِيْنَ فِىْۤ اَهْلِ مَدْيَنَ ۙ ثُمَّ جِئْتَ عَلٰى قَدَرٍ يّٰمُوْسٰى‏
اِذْ تَمْشِىْۤ நடந்து சென்றபோது اُخْتُكَ உமது சகோதரி فَتَقُوْلُ கூறினாள் هَلْ اَدُلُّـكُمْ நான் உங்களுக்கு அறிவிக்கவா? عَلٰى مَنْ يَّكْفُلُهٗ‌ ؕ அவரை பொறுப்பேற்பவரை فَرَجَعْنٰكَ உம்மை திரும்பக் கொண்டு வந்தோம் اِلٰٓى اُمِّكَ உமது தாயிடமே كَىْ تَقَرَّ குளிர்வதற்காக عَيْنُهَا அவளது கண் وَلَا تَحْزَنَ ؕ இன்னும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காக وَقَتَلْتَ நீர் கொன்று விட்டீர் نَـفْسًا ஓர் உயிரை فَنَجَّيْنٰكَ உம்மை நாம் பாதுகாத்தோம் مِنَ الْغَمِّ அந்த துக்கத்திலிருந்து وَفَتَـنّٰكَ இன்னும் உம்மை நாம் சோதித்தோம் فُتُوْنًا  பல சோதனைகளில் فَلَبِثْتَ ஆக, நீர் தங்கினீர் سِنِيْنَ பல ஆண்டுகள் فِىْۤ اَهْلِ வாசிகளிடம் مَدْيَنَ ۙ மத்யன் ثُمَّ பிறகு جِئْتَ நீர் அடைந்தீர் عَلٰى قَدَرٍ ஒரு குறிப்பிட்ட நேரத்தை يّٰمُوْسٰى‏ மூஸாவே!
20:40. (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, “இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்டாள்; ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும்; அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம்; பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர்; அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம்; மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிருந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.
20:40. உமது சகோதரி சென்று (உம்மை எடுத்தவர்களிடம்) ‘‘இக்குழந்தைக்கு(ப் பால் கொடுக்கும்) பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று கூறும்படிச் செய்து, உமது தாய் கவலைப்படாது அவளின் கண் குளிர்ந்திருக்கும் பொருட்டு, உமது தாயிடமே உம்மைக் கொண்டு வந்(து சேர்த்)தோம். பின்னர், நீர் ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டு (அதற்காக) நீர் கொண்ட கவலையில் இருந்து உம்மைக் காப்பாற்றினோம். (இவ்வாறு) உம்மைப் பல வகைகளிலும் சோதித்தோம். பின்னர், மத்யன்வாசிகளிடமும் நீர் பல வருடங்கள் தங்கியிருந்தீர். மூஸாவே! இதற்குப் பின்னர்தான் நீர் (நமது தூதுக்குரிய) தக்க பக்குவமடைந்தீர்.
20:40. இதனையும் நினைத்துப் பாரும்: உம்முடைய சகோதரி நடந்து சென்று கொண்டிருந்தாள்; பிறகு, அங்குச் சென்று, “இக்குழந்தையை நல்லவிதமாக வளர்க் கக்கூடிய ஒருவரை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?” என்று கேட்டாள். இவ்வாறு நாம் உம் தாயாரிடம் உம்மைக் கொண்டு வந்து சேர்த்தோம், அவர் கண்குளிரவும் கவலைப்படாமலும் இருப்பதற்காக! மேலும் (இதனையும் நினைத்துப்பாரும்:) நீர் ஒருவனைக் கொலை செய்துவிட்டிருந்தீர். அந்தச் சிக்கலில் இருந்தும் நாம் உம்மை விடுவித்தோம்! மேலும், நாம் உம்மைப் பல வகைகளிலும் சோதித்தோம். நீர் ‘மத்யன்’ வாசிகளிடம் பல ஆண்டுகள் தங்கியிருந்தீர். பின்னர் மூஸாவே, இப்போது நீர் சரியான நேரத்தில் வந்திருக்கின்றீர்.
20:40. உம் சகோதரி நடந்தபோது (அப்பேழையை எடுத்தவர்களிடம்) “அவருக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒருவரை (செவிலித்தாயை) உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கூறினாள், பின்னர், உமது தாயாரின்பால், அவரின் கண் குளிர்ந்திருப்பதற்காக இன்னும், அவர் கவலை கொள்ளாதிருப்பதற்காக உம்மை நாம் திருப்பிக் கொடுத்தோம், இன்னும் நீர் ஒரு மனிதரைக் கொலை செய்துவிட்டீர், (அதன்) கவலையிலிருந்து உம்மை நாம் ஈடேற்றினோம், இன்னும், உம்மை சோதிப்பதற்காக (பல சோதனைகளைக் கொண்டு) சோதித்தோம், பின்னர் மத்யன்வாசிகளிடையே பல வருடங்கள் நீர் தங்கியிருந்தீர், அதன் பின்னர் (நாம் உம்மை முன்பு நம் தூதராக்க) நிர்ணயித்தபடி மூஸாவே நீர் வந்தீர்.
20:41
20:41 وَاصْطَنَعْتُكَ لِنَفْسِى‌ۚ‏
وَاصْطَنَعْتُكَ இன்னும் நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் لِنَفْسِى‌ۚ‏ எனக்காகவே
20:41. இன்னும், “எனக்காகவே நான் உம்மைத் (தூதராகத்) தேர்ந்தெடுத்திருக்கின்றேன்.
20:41. இன்னும் எனக்காகவே நான் உம்மை(உருவாக்கி)த் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
20:41. நான் உம்மை என்னுடைய பணிக்காகத் தேர்ந்தெடுத்திருக்கின்றேன்;
20:41. மேலும், உம்மை எனக்காக நான் தேர்ந்தெடுத்திருக்கின்றேன்.
20:42
20:42 اِذْهَبْ اَنْتَ وَاَخُوْكَ بِاٰيٰتِىْ وَلَا تَنِيَا فِىْ ذِكْرِى‌ۚ‏
اِذْهَبْ செல்வீர்களாக! اَنْتَ நீரும் وَاَخُوْكَ உனது சகோதரரும் بِاٰيٰتِىْ என் அத்தாட்சிகளைக் கொண்டு وَلَا تَنِيَا இன்னும் நீங்கள் இருவரும் சோர்வடையாதீர்கள் فِىْ ذِكْرِى‌ۚ‏ என்னை நினைவு கூர்வதில்
20:42. “ஆகவே, நீரும் உம் சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்வீர்களாக! மேலும் என்னைத் தியானிப்பதில் (நீங்களிருவரும்) சளைக்காதீர்கள்.
20:42. ஆகவே, ‘‘நீர் உமது சகோதரருடன் என் அத்தாட்சிகளை எடுத்துக் கொண்டு செல்வீராக. நீங்கள் இருவரும் என்னை நினைவு கூர்வதில் சோர்வடைந்து விடாதீர்கள்.
20:42. எனவே, நீரும் உம் சகோதரரும் என்னுடைய சான்றுகளோடு செல்லுங்கள். மேலும் (பாருங்கள்) என்னை நினைவுகூர்வதில் நீங்கள் குறைபாடு செய்து விடக்கூடாது.
20:42. (ஆகவே,) “நீரும் உம்முடைய சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளைக் கொண்டு செல்லுங்கள், நீங்கள் இருவரும் என்னைத் தியானிப்பதில் சோர்வடைந்தும் விடாதீர்கள்.
20:43
20:43 اِذْهَبَاۤ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى‌ ‌ۖۚ‌‌‌‏
اِذْهَبَاۤ நீங்கள் இருவரும் செல்வீர்களாக اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் اِنَّهٗ நிச்சயமாக அவன் طَغٰى‌ ۖۚ‌‏ வரம்பு மீறிவிட்டான்
20:43. “நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
20:43. நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான்.
20:43. நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; திண்ணமாக, அவன் வரம்பு மீறிவிட்டிருக்கின்றான்.
20:43. “நீங்கள் இருவரும் ஃபிர் அவ்னிடம் செல்லுங்கள், நிச்சயமாக அவன் மிக்க வரம்பு கடந்துவிட்டான்.
20:44
20:44 فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى‏
فَقُوْلَا நீங்கள் இருவரும் கூறுவீர்களாக لَهٗ அவனுக்கு قَوْلًا சொல்லை لَّيِّنًا மென்மையான لَّعَلَّهٗ يَتَذَكَّرُ அவன் நல்லறிவு பெறுகிறானா اَوْ அல்லது يَخْشٰى‏ பயப்படுகிறானா
20:44. “நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.”
20:44. நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அவன் நல்லுணர்ச்சி பெறலாம் அல்லது அச்சம் கொள்ளலாம்'' (என்றும் கூறினோம்.)
20:44. அவனிடம் நீங்கள் மென்மையாகப் பேசுங்கள். அவன் அறிவுரையை ஏற்கக்கூடும்; அல்லது அஞ்சக்கூடும்.”
20:44. ஆகவே, நீங்கள் இருவரும் கனிவான சொல்லை அவனுக்குச் சொல்லுங்கள், அதனால் அவன் நல்லுபதேசம் பெறலாம், அல்லது அச்சமடையலாம், (என்று அல்லாஹ் கூறினான்).
20:45
20:45 قَالَا رَبَّنَاۤ اِنَّـنَا نَخَافُ اَنْ يَّفْرُطَ عَلَيْنَاۤ اَوْ اَنْ يَّطْغٰى‏
قَالَا இருவரும் கூறினர் رَبَّنَاۤ எங்கள் இறைவன் اِنَّـنَا நிச்சயமாக நங்கள் نَخَافُ பயப்படுகிறோம் اَنْ يَّفْرُطَ அவசரப்படுவதை عَلَيْنَاۤ எங்கள் மீது اَوْ அல்லது اَنْ يَّطْغٰى‏ வரம்பு மீறுவதை
20:45. “எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.
20:45. அதற்கு அவ்விருவரும் ‘‘எங்கள் இறைவனே! அவன் எங்கள் மீது (வரம்பு) மீறி கொடுமை செய்வானோ அல்லது விஷமம் செய்வானோ என்று நாங்கள் பயப்படுகிறோம்'' என்று கூறினார்கள்.
20:45. இருவரும் பணிந்து கூறினர்: “எங்கள் இறைவனே! அவன் அநீதியாகவோ, அல்லது கொடூரமாகவோ எங்களுடன் நடந்து கொள்வான் என்று நாங்கள் அஞ்சுகின்றோம்.”
20:45. (அதற்கு) “எங்கள் இரட்சகனே! அவன் எங்களுக்கு (தீங்கிழைக்க) அவசரப்படவோ, அல்லது வரம்பு மீறவோ செய்யலாம், என்று நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.
20:46
20:46 قَالَ لَا تَخَافَآ‌ اِنَّنِىْ مَعَكُمَاۤ اَسْمَعُ وَاَرٰى‏
قَالَ கூறினான் لَا تَخَافَآ‌ இருவரும் பயப்படாதீர்கள் اِنَّنِىْ நிச்சயமாக நான் مَعَكُمَاۤ உங்கள் இருவருடன் اَسْمَعُ (நான்) கேட்பவனாக وَاَرٰى‏ இன்னும் பார்ப்பவனாக (இருக்கிறேன்)
20:46. (அதற்கு அல்லாஹ்) “நீங்களிருவரும் அஞ்ச வேண்டாம்; நிச்சயமாக நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் உங்களிருவருடனும் இருக்கிறேன்” என்று கூறினான்.
20:46. (அதற்கு இறைவன்) கூறினான்: ‘‘நீங்கள் பயப்படவேண்டாம். நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக்கொண்டும் பார்த்துக் கொண்டும் இருப்பேன்.''
20:46. அதற்கு அல்லாஹ் கூறினான்: “அஞ்சாதீர்கள். நான் உங்களுடன் இருக்கின்றேன். அனைத்தையும் கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கின்றேன்.”
20:46. “நீங்கள் இருவரும் பயப்பட வேண்டாம், நிச்சயமாக நான் உங்களிருவருடன் (யாவையும்) கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருப்பேன் என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்”.
20:47
20:47 فَاْتِيٰهُ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلَا رَبِّكَ فَاَرْسِلْ مَعَنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ ۙ وَلَا تُعَذِّبْهُمْ‌ ؕ قَدْ جِئْنٰكَ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكَ‌ ؕ وَالسَّلٰمُ عَلٰى مَنِ اتَّبَعَ الْهُدٰى‏
فَاْتِيٰهُ ஆகவே இருவரும் வாருங்கள் فَقُوْلَاۤ இன்னும் கூறுங்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் رَسُوْلَا தூதர்கள் رَبِّكَ உனது இறைவனின் فَاَرْسِلْ ஆகவே அனுப்பி விடு مَعَنَا எங்களுடன் بَنِىْۤ اِسْرَآءِيْلَ ۙ இஸ்ரவேலர்களை وَلَا تُعَذِّبْهُمْ‌ ؕ இன்னும் அவர்களை வேதனை செய்யாதே قَدْ جِئْنٰكَ திட்டமாக உன்னிடம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம் بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியை مِّنْ رَّبِّكَ‌ ؕ உமது இறைவனிடமிருந்து وَالسَّلٰمُ ஈடேற்றம் உண்டாகுக عَلٰى مَنِ اتَّبَعَ பின்பற்றியவருக்கு الْهُدٰى‏ நேர்வழியை
20:47. “ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: “நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள்; பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு; மேலும் அவர்களை வேதனை படுத்தாதே; திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக” என்று சொல்லுங்கள்” (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்).
20:47. நீங்கள் இருவரும் அவனிடத்தில் சென்று சொல்லுங்கள்: ‘‘நாங்கள் உன் இறைவனின் தூதர்கள். இஸ்ராயீலின் சந்ததிகளை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களை வேதனை செய்யாதே! மெய்யாகவே நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறோம். நேரான வழியைப் பின்பற்றியவர்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்.
20:47. அவனிடம் சென்று கூறுங்கள்: “நாங்கள் இருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்களாவோம். இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை எங்களுடன் அனுப்பிவிடு; அவர்களைத் துன்புறுத்தாதே! உன் இறைவனுடைய சான்றை உன்னிடம் நாம் கொண்டு வந்திருக்கின்றோம். மேலும், சாந்தி உண்டாகும் நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு!
20:47. “ஆகவே, நீங்களிருவரும் அவனிடம் வந்து பின்னர், “நாங்கள் இருவரும் உன் இரட்சகனின் தூதர்கள், இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பிவிடு, அவர்களை வேதனையும் செய்யாதே, திட்டமாக நாங்கள் உன் இரட்சகனிடமிருந்து அத்தாட்சியை உன்னிடம் கொண்டு வந்திருக்கின்றோம், நேர்வழியைப் பின்பற்றியவர் மீது சாந்தியும் உண்டாவதாக!” என்று நீங்களிருவரும் கூறுங்கள்.
20:48
20:48 اِنَّا قَدْ اُوْحِىَ اِلَـيْنَاۤ اَنَّ الْعَذَابَ عَلٰى مَنْ كَذَّبَ وَتَوَلّٰى‏
اِنَّا நிச்சயமாக நாங்கள் قَدْ திட்டமாக اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது اِلَـيْنَاۤ எங்களுக்கு اَنَّ நிச்சயமாக الْعَذَابَ தண்டனை عَلٰى மீது مَنْ كَذَّبَ பொய்ப்பித்தவர் وَتَوَلّٰى‏ புறக்கணித்து திரும்பினார்
20:48. “எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ அவன் மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது” (என்று நீங்கள் இருவரும் அவனுக்குக் கூறுங்கள்).
20:48. (எங்களை) பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றவன் மீது வேதனை இறங்குமென்று எங்களுக்கு வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது'' (என்பதை தெரிவியுங்கள்).
20:48. வஹி மூலம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அளிக்கும் வேதனை திண்ணமாக இருக்கிறது பொய்யென்று தூற்றுபவர்க்கும், புறக்கணிப்பவர்க்கும்.”
20:48. “நிச்சயமாக நாங்கள்-எங்கள்பால்-எவன் பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றானோ அவன்மீது நிச்சயமாக வேதனை ஏற்படுமென்று திட்டமாக (வஹீ மூலம்) அறிவிக்கப்பட்டுள்ளது” (என்றும் கூறுங்கள்).
20:49
20:49 قَالَ فَمَنْ رَّبُّكُمَا يٰمُوْسٰى‏
قَالَ அவன் கூறினான் فَمَنْ யார் رَّبُّكُمَا உங்கள் இருவரின் இறைவன் يٰمُوْسٰى‏ மூஸாவே!
20:49. (இதற்கு ஃபிர்அவ்ன்) “மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?” என்று கேட்டான்.
20:49. (அதற்கு) அவன் ‘‘மூஸாவே! உங்கள் (இருவரின்) இறைவன் யார்?'' என்றான்.
20:49. ஃபிர்அவ்ன் கேட்டான்: “மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?”
20:49. (அவ்விருவரும் ஃபிர் அவ்னிடம் வந்து கூறவே, அதற்கு) அவன் “மூஸாவே உங்களிருவரின் இரட்சகன் யார்?” என்று கேட்டான்.
20:50
20:50 قَالَ رَبُّنَا الَّذِىْۤ اَعْطٰـى كُلَّ شَىْءٍ خَلْقَهٗ ثُمَّ هَدٰى‏
قَالَ அவர் கூறினார் رَبُّنَا எங்கள் இறைவன் الَّذِىْۤ எவன் اَعْطٰـى கொடுத்தான் كُلَّ ஒவ்வொரு شَىْءٍ பொருளுக்கும் خَلْقَهٗ அதற்குரியபடைப்பை ثُمَّ பிறகு هَدٰى‏ வழிகாட்டினான்
20:50. “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறானே அவன்தான் எங்கள் இறைவன்” என்று கூறினார்.
20:50. அதற்கு மூஸா ‘‘எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய இயற்கைத் தன்மையைக் கொடுத்து (அவற்றை பயன்படுத்தும்) வழியையும் (அவற்றுக்கு) அறிவித்தானோ அவன்தான் எங்கள் இறைவன்'' என்றார்.
20:50. அதற்கு மூஸா கூறினார்: “ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய படைப்பமைப்பைக் கொடுத்து பின்னர் அதற்கு வழிகாட்டியவன் யாரோ அவன்தான் எங்கள் இறைவன்.”
20:50. (அதற்கு) “எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை கொடுத்து பின்னர் வழியையும் காட்டியிருக்கிறானோ அவன்தான் எங்கள் இரட்சகன்” என்று அவர் கூறினார்.
20:51
20:51 قَالَ فَمَا بَالُ الْقُرُوْنِ الْاُوْلٰى‏
قَالَ அவன் கூறினான் فَمَا بَالُ நிலை என்னவாகும் الْقُرُوْنِ தலைமுறையினர்கள் الْاُوْلٰى‏ முந்திய
20:51. “அப்படியென்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன?” என்று கேட்டான்.
20:51. அதற்கவன் ‘‘முன்னர் சென்றுபோன (சிலை வணக்கம் செய்து கொண்டிருந்த)வர்களின் கதி என்னவாகும்?'' என்று கேட்டான்.
20:51. ஃபிர்அவ்ன் கேட்டான்: “முன்சென்ற தலைமுறையினரின் நிலைமை என்ன?”
20:51. (அதற்கு) அவன் “முன்னர் சென்றுபோன தலைமுறையினரின் (உண்மை) நிலையாது?” என்று கேட்டான்.
20:52
20:52 قَالَ عِلْمُهَا عِنْدَ رَبِّىْ فِىْ كِتٰبٍ‌‌ۚ لَا يَضِلُّ رَبِّىْ وَلَا يَنْسَى‏
قَالَ அவர் கூறினார் عِلْمُهَا அவர்களைப் பற்றிய ஞானம் عِنْدَ رَبِّىْ என் இறைவனிடம் فِىْ كِتٰبٍ‌ۚ பதிவுப் புத்தகத்தில் لَا يَضِلُّ தவறு செய்துவிட மாட்டான் رَبِّىْ என் இறைவன் وَلَا يَنْسَى‏ இன்னும் மறக்கமாட்டான்
20:52. “இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” என்று (மூஸா பதில்) சொன்னார்.
20:52. அதற்கவர் கூறினார்: ‘‘அதைப்பற்றிய ஞானம் என் இறைவனிடம் உள்ள பதிவுப் புத்தகத்தில் இருக்கிறது. என் இறைவன் (அவர்கள் செய்து வந்ததில் எதையும்) தவறவிடவும் மாட்டான்; மறந்து விடவும் மாட்டான்.
20:52. மூஸா கூறினார்: “அதைப் பற்றிய விவரம் என் இறைவனிடம் ஒரு பதிவேட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது. என்னுடைய இறைவன் தவறிழைப்பதுமில்லை. மறப்பதுமில்லை;
20:52. அவர், “அது பற்றிய அறிவு என் இரட்சகனிடம் (இருக்கும் பதிவுப்) புத்தகத்தில் இருக்கின்றது, என் இரட்சகன் (அதில் யாதொன்றைத்) தவறிழைத்து (விட்டு)விடவுமாட்டான், மறந்துவிடவும்மாட்டான்” என்று கூறினார்.
20:53
20:53 الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّسَلَكَ لَـكُمْ فِيْهَا سُبُلًا وَّ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ؕ فَاَخْرَجْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْ نَّبَاتٍ شَتّٰى‏
الَّذِىْ எவன் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்கு الْاَرْضَ பூமியை مَهْدًا விரிப்பாக وَّسَلَكَ இன்னும் ஏற்படுத்தினான் لَـكُمْ உங்களுக்கு فِيْهَا அதில் سُبُلًا பாதைகளை وَّ اَنْزَلَ இன்னும் இறக்கினான் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً ؕ மழையை فَاَخْرَجْنَا உற்பத்தி செய்கிறோம் بِهٖۤ அதன்மூலம் اَزْوَاجًا பல வகைகளை مِّنْ نَّبَاتٍ தாவரங்களிலிருந்து شَتّٰى‏ பலதரப்பட்ட
20:53. “(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்; இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்).
20:53. அவன்தான் பூமியை உங்களுக்கு இருப்பிடமாக அமைத்து (பயணத்திற்கான) வழிகளையும் அதில் உங்களுக்கு ஏற்படுத்தி மேகத்தில் இருந்து மழையையும் பொழியச் செய்கிறான்.'' (மேலும் என் இறைவன் கூறுகிறான்:) ‘‘நாம் இறக்கிவைக்கும் (ஒரே வித) மழை நீரைக்கொண்டு (குணத்திலும், ரசனையிலும் மாறுபட்ட) பல விதமான புற்பூண்டுகளில் (ஆண், பெண்) ஜோடிகளை வெளிப்படுத்துகிறோம்.
20:53. அவன்தான் உங்களுக்காக பூமியை விரிப்பாக அமைத்து, அதில் நீங்கள் நடப்பதற்கான வழிகளை ஏற்படுத்தினான். மேலும், வானத்திலிருந்து மழையைப் பொழியச்செய்து அதன் மூலம் பல்வேறு வகையான தாவரங்களை வெளிப்படுத்தினான்.
20:53. “(என்னுடைய இரட்சகன்) எத்தகையவனென்றால், அவன் பூமியை உங்களுக்கு விரிப்பாக அமைத்து, அதில் உங்களுக்காக பாதைகளையும் ஏற்படுத்தினான், மேலும், வானத்திலிருந்து (மழை) நீரை இறக்கினான், இதைக்கொண்டு நாம் பலதரப்பட்ட தாவரங்களிலிருந்து பல வகைகளை வெளிப்படுத்தி விட்டோம்” (என்று தன் இரட்சகனின் தகுதி பற்றி மூஸா கூறினார்).
20:54
20:54 كُلُوْا وَارْعَوْا اَنْعَامَكُمْ‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّاُولِى الـنُّهٰى‏
كُلُوْا சாப்பிடுங்கள் وَارْعَوْا இன்னும் மேய்த்துக் கொள்ளுங்கள் اَنْعَامَكُمْ‌ ؕ உங்கள் கால் நடைகளை اِنَّ நிச்சயம் فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّاُولِى الـنُّهٰى‏ அறிவுடையவர்களுக்கு
20:54. “(அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள்; நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.”
20:54. (ஆகவே, அவற்றை நீங்களும்) புசியுங்கள்; உங்கள் (ஆடு மாடு போன்ற) கால்நடைகளை(யும்) மேயவிடுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
20:54. உண்ணுங்கள்; உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள். திண்ணமாக, இதில் அறிவுடையோர்க்கு நிறையச் சான்றுகள் உள்ளன.”
20:54. “(அவற்றை) நீங்களும் உண்ணுங்கள், உங்கள் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் மேயவிடுங்கள், அறிவுடையோருக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
20:55
20:55 مِنْهَا خَلَقْنٰكُمْ وَفِيْهَا نُعِيْدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً اُخْرٰى‏
مِنْهَا அதிலிருந்துதான் خَلَقْنٰكُمْ உங்களைப் படைத்தோம் وَفِيْهَا இன்னும் அதில்தான் نُعِيْدُ மீட்டுக் கொண்டுவருவோம் كُمْ உங்களை وَمِنْهَا இன்னும் அதிலிருந்துதான் نُخْرِجُكُمْ வெளியேற்றுவோம் تَارَةً முறை اُخْرٰى‏ மற்றொரு
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
20:55. பூமியிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம். பின்னர், அதிலேயே உங்களை மீண்டும் சேர்த்து விடுவோம். மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே உங்களை வெளிப்படுத்துவோம்.'' (இவ்வாறு ஃபிர்அவ்னிடம் மூஸா கூறினார்.)
20:55. இதே பூமியிலிருந்துதான் நாம் உங்களைப் படைத்தோம். இதிலேயே நாம் உங்களைத் திருப்பிச் சேர்த்து விடுவோம். மேலும், இதிலிருந்தே உங்களை நாம் மறு தடவையும் வெளிக்கொணர்வோம்.
20:55. (பூமியாகிய) அதிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம், பின்னர், அதிலேயே நாம் உங்களை மீளவைப்போம், மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே நாம் உங்களை வெளிப்படுத்துவோம்” (என்று அவனுக்குக் கூறும்படிச் செய்தோம்).
20:56
20:56 وَلَـقَدْ اَرَيْنٰهُ اٰيٰتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَاَبٰى‏
وَلَـقَدْ اَرَيْنٰهُ திட்டமாக அவனுக்கு நாம் காண்பித்தோம் اٰيٰتِنَا நமது அத்தாட்சிகள் كُلَّهَا அனைத்தும் فَكَذَّبَ எனினும் அவன் பொய்ப்பித்தான் وَاَبٰى‏ இன்னும் ஏற்க மறுத்தான்
20:56. நாம் நம்முடைய அத்தாட்சிகளையெல்லாம் ஃபிர்அவ்னுக்குக் காண்பித்தோம்; ஆனால் அவன் (அவற்றையெல்லாம்) பொய்யெனக் கூறி, நம்பிக்கை கொள்ள மறுத்து விட்டான்.
20:56. நம் அத்தாட்சிகள் அனைத்தையும் அவனுக்குக் காண்பித்தோம். எனினும், அவனோ (இவை அனைத்தும்) பொய்யெனக் கூறி (நம்பிக்கை கொள்ளாது) விலகிக்கொண்டான்.
20:56. நாம் ஃபிர்அவ்னுக்கு நம் சான்றுகள் அனைத்தையும் காட்டினோம். ஆயினும், அவன் அவற்றைப் பொய்யென்று தூற்றிக்கொண்டே இருந்தான்; ஏற்க மறுத்தான்.
20:56. இன்னும், நம்முடைய அத்தாட்சிகளை-அவை யாவையும் நாம் அவனுக்குக் காண்பித்தோம், ஆனால் அவனோ (அவை யாவற்றையும்) பொய்ப்படுத்தி விட்டான், மேலும், (விசுவாசிக்காது) விலகிக் கொண்டான்.
20:57
20:57 قَالَ اَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ اَرْضِنَا بِسِحْرِكَ يٰمُوْسٰى‏
قَالَ அவன் கூறினான் اَجِئْتَنَا எங்களிடம் வந்தீரா? لِتُخْرِجَنَا எங்களை நீர் வெளியேற்றுவதற்காக مِنْ اَرْضِنَا எங்கள் பூமியிலிருந்து بِسِحْرِكَ உமது சூனியத்தால் يٰمُوْسٰى‏ மூஸாவே!
20:57. “மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று கூறினான்.
20:57. ‘‘மூஸாவே! உமது சூனியத்தின் மூலம் எங்களை, எங்களின் ஊரை விட்டு வெளியேற்றவா எங்களிடம் வந்தீர்?
20:57. மேலும், கேட்டான்: “மூஸாவே! நீ உன்னுடைய சூனிய வலிமையால் எங்களுடைய நாட்டை விட்டு எங்களை வெளியேற்றவா வந்திருக்கிறாய்?
20:57. “மூஸாவே! உம்முடைய சூனியத்தின் மூலம் எங்களை எங்களின் பூமியைவிட்டு வெளியேற்றுவதற்காகவா எங்களிடம் நீர் வந்தீர்?” என்று கூறினான்.
20:58
20:58 فَلَنَاْتِيَنَّكَ بِسِحْرٍ مِّثْلِهٖ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَّا نُخْلِفُهٗ نَحْنُ وَلَاۤ اَنْتَ مَكَانًـا سُوًى‏
فَلَنَاْتِيَنَّكَ நிச்சயமாக உம்மிடம் கொண்டு வருவோம் بِسِحْرٍ ஒரு சூனியத்தை مِّثْلِهٖ அதுபோன்ற فَاجْعَلْ ஆகவே, ஏற்படுத்து بَيْنَنَا எங்களுக்கு மத்தியிலும் وَبَيْنَكَ உங்களுக்கு மத்தியிலும் مَوْعِدًا குறிப்பிட்ட நேரத்தை لَّا نُخْلِفُهٗ அதற்கு மாறுசெய்ய மாட்டோம் نَحْنُ நாமும் وَلَاۤ اَنْتَ நீயும் (அதற்கு மாறுசெய்யக் கூடாது) مَكَانًـا ஓர் இடத்தில் سُوًى‏ சமமான
20:58. “அவ்வாறாயின் இதைப் போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குத் திடனாகச் செய்து காண்பிப்போம்; ஆகவே, நாங்களோ அல்லது நீரோ மாற்றம் செய்ய முடியாதபடி நமக்கும் உமக்குமிடையே ஒரு வார்த்தைப் பாட்டை (எல்லோரும் வந்து காணக் கூடிய) ஒரு சரியான தலத்தில் ஏற்படுத்தும் (என்றான்).
20:58. இதைப்போன்ற சூனியத்தை நாங்களும் உமக்குச் செய்து காண்பிப்போம். நாங்களோ அல்லது நீரோ தவறிவிடாதவாறு ஒரு சமமான பூமியில் (செய்து காண்பிக்க) எங்களுக்கும் உமக்குமிடையில் ஒரு தவணையைக் குறிப்பிடுவீராக!'' என்று கூறினான்.
20:58. நாமும் அதே போன்ற சூனியத்தை உனக்கு எதிராகக் கொண்டு வருவோம். எப்போது எங்கே போட்டி போடலாம் என்று முடிவு செய்துகொள்! அதிலிருந்து நாங்களும் பின்வாங்க மாட்டோம். நீயும் பின் வாங்கக் கூடாது. ஒரு திறந்தவெளியில் நேரில் வா!”
20:58. அவ்வாறாயின் இதைப்போன்ற சூனியத்தை (எதிராக)க் கொண்டு நிச்சயமாக நாங்களும் உம்மிடம் வருவோம், ஆகவே, நாங்களோ அல்லது நீரோ, மாறுபடாது இருக்கக்கூடியவாறு மையமான இடத்தில் நமக்கும், உமக்குமிடையே ஒரு தவணையை(க்குறிப்பிட்டு) ஆக்குவீராக! என்று கூறினான்.
20:59
20:59 قَالَ مَوْعِدُكُمْ يَوْمُ الزِّيْنَةِ وَاَنْ يُّحْشَرَ النَّاسُ ضُحًى‏
قَالَ அவர் கூறினார் مَوْعِدُ வாக்களிக்கப் பட்ட நேரம் كُمْ உங்களுக்கு يَوْمُ الزِّيْنَةِ யவ்முஸ் ஸீனா وَاَنْ يُّحْشَرَ இன்னும் ஒன்றுதிரட்டப்படுவது النَّاسُ மக்கள் ضُحًى‏ முற்பகலில்
20:59. “யவ்முஜ் ஸீனத்” (பண்டிகை நாளே) உங்களுடைய தவணையாகவும், மக்கள் யாவரும் ஒன்று சேரப்பெறும் ளுஹா (முற் பகல்) நேரமும் ஆக இருக்கட்டும்” என்று சொன்னார்.
20:59. அதற்கு மூஸா ‘‘(உங்கள்) பண்டிகை நாளே உங்களுக்குத் தவணையாகும். (ஆனால்,) மக்கள் அனைவரும் முற்பகலிலேயே கூட்டப்பட வேண்டும்'' என்று கூறினார்.
20:59. அதற்கு மூஸா கூறினார்: “பண்டிகை நாளில் வைத்துக்கொள்ளலாம். மேலும் அன்று மக்கள் அனைவரும் முற்பகலில் ஒன்று சேர்க்கப்படட்டும்.”
20:59. (அதற்கு மூஸா “உங்கள்) பண்டிகை நாளே உங்களுக்குத் தவணையாகும், இன்னும், மனிதர்கள் யாவரும் முற்பகலிலேயே ஒன்று திரட்டப்பட்டுவிட வேண்டும்” என்று கூறினார்.
20:60
20:60 فَتَوَلّٰى فِرْعَوْنُ فَجَمَعَ كَيْدَهٗ ثُمَّ اَتٰى‏
فَتَوَلّٰى திரும்பிச் சென்றான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் فَجَمَعَ ஒன்றிணைத்தான் كَيْدَهٗ தனது சூழ்ச்சியை ثُمَّ பிறகு اَتٰى‏ வந்தான்
20:60. அவ்வாறே ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று, (சூனியத்திற்கான) சூழ்ச்சிக்காரர்களை ஒன்று திரட்டிக் கொண்டு, மீண்டும் வந்தான்.
20:60. பின்னர், ஃபிர்அவ்ன் அவரைவிட்டு விலகி (தன் இருப்பிடம் சென்று சூனியத்திற்குரிய) தனது எல்லா சூழ்ச்சிகளையும் சேகரித்துக் கொண்டு பின்பு, (குறித்த நாளில், குறித்த இடத்திற்கு) வந்தான்.
20:60. ஃபிர்அவ்ன் திரும்பி வந்து தன்னுடைய (மந்திரச்) சூழ்ச்சிகள் அனைத்தையும் திரட்டிக்கொண்டு (போட்டிக்கு) வந்தான்.
20:60. பின்னர், ஃபிர்அவன் (அங்கிருந்து) திரும்பிச்சென்று, (சூனியத்திற்குரிய) தன்னுடைய (சகல) சூழ்ச்சிகளையும் சேகரித்துக் கொண்டு பின்னர் (குறித்த இடத்திற்கு) வந்தான்.
20:61
20:61 قَالَ لَهُمْ مُّوْسٰى وَيْلَكُمْ لَا تَفْتَرُوْا عَلَى اللّٰهِ كَذِبًا فَيُسْحِتَكُمْ بِعَذَابٍ‌ۚ وَقَدْ خَابَ مَنِ افْتَرٰى‏
قَالَ கூறினார் لَهُمْ அவர்களுக்கு مُّوْسٰى மூஸா وَيْلَكُمْ உங்களுக்கு கேடுதான் لَا تَفْتَرُوْا கற்பனை செய்யாதீர்கள் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை فَيُسْحِتَكُمْ உங்களை அழித்து விடுவான் بِعَذَابٍ‌ۚ வேதனையைக் கொண்டு وَقَدْ திட்டமாக خَابَ நஷ்டமடைந்து விட்டான் مَنِ எவன் افْتَرٰى‏ கற்பனை செய்தான்
20:61. (அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறினார்.
20:61. மூஸா (அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி) ‘‘உங்களுக்கென்ன கேடு? அல்லாஹ்வின் மீது அபாண்டமாகப் பொய்யைக் கற்பனை செய்து கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால்) அவன் (தன்) வேதனையைக்கொண்டு உங்களை அழித்துவிடுவான். பொய் சொன்னவர்களெல்லாம் அழிந்தே போனார்கள்'' என்று கூறினார்.
20:61. மூஸா (உரிய நேரத்தில் எதிர்த்தரப்பினரை நோக்கி) கூறினார்: “துர்ப்பாக்கியவான்களே! அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்காதீர்கள். அவ்வாறு செய்வீர்களாயின் ஒரு கடுமையான வேதனையின் மூலம் உங்களை அவன் அழித்து நாசமாக்கிவிடுவான். பொய்யை எவர்கள் புனைந்துரைத்தார்களோ அவர்கள் நிச்சயம் தோல்வியைத்தான் அடைந்தார்கள்.”
20:61. மூஸா, அ(ங்கு கூடியிருந்த)வர்களிடம், “உங்களுக்குக் கேடுதான், அல்லாஹ்வின்மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் (தன்)வேதனையைக் கொண்டு உங்களை அழித்து விடுவான், இன்னும், எவன் (பொய்யை) இட்டுக்கட்டுகிறானோ திட்டமாக அவன் நஷ்டப்பட்டுவிட்டான்” என்று கூறினார்.
20:62
20:62 فَتَنَازَعُوْۤا اَمْرَهُمْ بَيْنَهُمْ وَاَسَرُّوا النَّجْوٰى‏
فَتَنَازَعُوْۤا அவர்கள் தர்க்கித்துக் கொண்டனர் اَمْرَ காரியத்தில் هُمْ தங்கள் بَيْنَهُمْ தங்களுக்கு மத்தியில் وَاَسَرُّوا இன்னும் அவர்கள் இரகசியமாக ஆக்கிக் கொண்டனர் النَّجْوٰى‏ அந்த பேச்சை
20:62. சூனியக்காரர்கள் தமக்குள்ளே தங்கள் காரியத்தைக் குறித்து(த் தங்களிடையே) விவாதித்து, (அவ்விவாதத்தை) இரகசிய ஆலோசனையாகவும் வைத்துக் கொண்டனர்.
20:62. (இதைக் கேட்ட) அவர்கள் தங்களுக்குள் இதைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டு இரகசியமாகவும் ஆலோசனை செய்து (ஒரு முடிவு கட்டிக்) கொண்டனர்.
20:62. அவர்கள் (இதனைக் கேட்டு) தங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொண்டார்கள். மேலும் இரகசிய ஆலோசனை செய்யலானார்கள்.
20:62. (இதைக்கேட்ட) அவர்கள், தங்களுடைய காரியத்தில் தங்களுக்கிடையே தர்க்கித்துக் கொண்டு, இரகசியமாக ஆலோசனையும் செய்தனர்.
20:63
20:63 قَالُوْۤا اِنْ هٰذٰٮنِ لَسٰحِرٰنِ يُرِيْدٰنِ اَنْ يُّخْرِجٰكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهِمَا وَيَذْهَبَا بِطَرِيْقَتِكُمُ الْمُثْلٰى‏
قَالُوْۤا அவர்கள் கூறினார்கள் اِنْ هٰذٰٮنِ நிச்சயமாக இந்த இருவரும் لَسٰحِرٰنِ சூனியக்காரர்கள் يُرِيْدٰنِ அவ்விருவரும் நாடுகின்றனர் اَنْ يُّخْرِجٰكُمْ உங்களை வெளியேற்றுவதற்கு(ம்) مِّنْ اَرْضِكُمْ உங்கள் பூமியிலிருந்து بِسِحْرِهِمَا தங்கள் சூனியத்தைக் கொண்டு وَيَذْهَبَا இன்னும் அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கு بِطَرِيْقَتِكُمُ உங்கள்தலைவர்களை الْمُثْلٰى‏ சிறந்த
20:63. (சூனியக்காரர்கள் மக்களை நோக்கி:) “நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தம்மிருவருடைய சூனியத்தைக் கொண்டு உங்களை உங்களுடைய நாட்டை விட்டு வெளியேற்றவும், சிறப்பான உங்களுடைய (மார்க்கப்) பாதையைப் போக்கிவிடவுமே இவ்விருவரும் விரும்புகிறார்கள்.
20:63. அவர்கள் (மக்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இவ்விருவரும் சூனியக்காரர்களே! தங்கள் சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றி விடவும், உங்கள் மேலான மார்க்கத்தை அழித்து விடவும் விரும்புகிறார்கள்.
20:63. இறுதியில், சிலர் கூறினர்: “இவர்கள் இருவரும் சூனியக்காரர்களே ஆவர். தம் சூனிய வலிமையால் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்றும் உங்களின் முன்மாதிரியான வாழ்க்கை முறையை ஒழித்துவிட வேண்டும் என்றும் இவர்கள் கருதுகிறார்கள்.
20:63. அவர்கள், “நிச்சயமாக இவ்விருவரும் இரு சூனியக்காரர்களே! தங்களுடைய சூனியத்தினால் உங்களை, உங்களுடைய பூமியை விட்டும் இவ்விருவரும் வெளியேற்றி விடவும், உங்களுடைய மேலான (மார்க்கப்)பாதையை இருவரும் போக்கிவிடவும் இவ்விருவரும் நாடுகிறார்கள்” என்று கூறினார்கள்.
20:64
20:64 فَاَجْمِعُوْا كَيْدَكُمْ ثُمَّ ائْتُوْا صَفًّا‌ ۚ وَقَدْ اَفْلَحَ الْيَوْمَ مَنِ اسْتَعْلٰى‏
فَاَجْمِعُوْا ஆகவே உறுதிப்படுத்துங்கள் كَيْدَ சூழ்ச்சிகளை كُمْ உங்கள் ثُمَّ பின்பு ائْتُوْا வாருங்கள் صَفًّا‌ ۚ ஓர் அணியாக وَقَدْ திட்டமாக اَفْلَحَ வெற்றி அடைந்து விட்டார் الْيَوْمَ இன்றைய தினம் مَنِ اسْتَعْلٰى‏ மிகைத்தவர்
20:64. “ஆகவே உங்கள் திட்டத்தை ஒரு சேரத் தீர்மானித்துக் கொண்டு அணி அணியாக வாருங்கள்; இன்றைய தினம் எவருடைய (கை) மேலோங்குகிறதோ, நிச்சயமாக அவர்தாம் வெற்றியடைவார்” (என்றுங் கூறினார்).
20:64. ஆதலால் உங்கள் சூனியங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பின்பு (அவரை எதிர்க்க) அணியணியாக வாருங்கள். இன்றைய தினம் எவருடைய காரியம் மேலோங்கியதோ அவரே நிச்சயமாக வெற்றி பெறுவார்'' என்று கூறினார்கள்.
20:64. எனவே (இன்று) உங்களின் அனைத்து சூழ்ச்சிகளையும் ஒன்றுதிரட்டி ஒருசேர (களத்திற்கு) வாருங்கள். இன்று எவருடைய கை மேலோங்குகிறதோ அவர்தான் வெற்றியடைந்தவராவார் (என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.)”
20:64. “ஆதலால் உங்கள் சூழ்ச்சித் திட்டத்தில் நீங்கள் உறுதிகொண்டு அதன் பின்னர் அணியாக வாருங்கள், (இன்றையத்தினம்) மற்றவரை மிகைத்துவிட்டவர் திட்டமாக வெற்றி பெறுவார்” என்று கூறினார்கள்.
20:65
20:65 قَالُوْا يٰمُوْسٰٓى اِمَّاۤ اَنْ تُلْقِىَ وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ اَوَّلَ مَنْ اَلْقٰى‏
قَالُوْا அவர்கள் கூறினர் يٰمُوْسٰٓى மூஸாவே! اِمَّاۤ اَنْ تُلْقِىَ ஒன்று நீர் எறிவீராக وَاِمَّاۤ اَنْ نَّكُوْنَ அவர்கள் நாங்கள் இருப்போம் اَوَّلَ முதலாவதாக مَنْ اَلْقٰى‏ எறிபவர்களில்
20:65. “மூஸாவே! நீர் எறிகின்றீரா? எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
20:65. பின்னர் (சூனியம் செய்ய வந்த) அவர்கள் (மூஸாவை நோக்கி) ‘‘மூஸாவே! (சூனியத்தை) நீர் எறிகிறீரா? அல்லது முதலாவதாக நாங்கள் எறியவா?'' என்று கேட்டார்கள்.
20:65. சூனியக்காரர்கள் கூறினர்: “மூஸாவே, நீர் எறிகின்றீரா? அல்லது நாங்கள் முதலில் எறியட்டுமா?”
20:65. பின்னர், (சூனியம் செய்ய வந்த) அவர்கள், (மூஸாவிடம்) “மூஸாவே! ஒன்று நீர் போடுகிறீரா? அல்லது போடுபவரில் முதலாவதாக நாங்கள் இருக்கவா?” என்று கேட்டார்கள்.
20:66
20:66 قَالَ بَلْ اَلْقُوْا‌ۚ فَاِذَا حِبَالُهُمْ وَعِصِيُّهُمْ يُخَيَّلُ اِلَيْهِ مِنْ سِحْرِهِمْ اَنَّهَا تَسْعٰى‏
قَالَ அவர் கூறினார் بَلْ மாறாக اَلْقُوْا‌ۚ நீங்கள் எறியுங்கள் فَاِذَا ஆக, அப்போது حِبَالُهُمْ அவர்களுடைய கயிர்களும் وَعِصِيُّهُمْ அவர்களுடைய தடிகளும் يُخَيَّلُ தோற்றமளிக்கப்பட்டது اِلَيْهِ அவருக்கு مِنْ سِحْرِهِمْ அவர்களுடைய சூனியத்தால் اَنَّهَا அவை تَسْعٰى‏ ஓடுவதாக
20:66. அதற்கவர்: “அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். (அவர்கள் எறியவே) அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாக) நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது.
20:66. அதற்கவர், ‘‘இல்லை! நீங்களே (முதலாவதாக) எறியுங்கள்'' என்று கூறினார். (அவர்கள் எறியவே, எறியப்பட்ட) அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தின் காரணமாக மெய்யாகவே அவை (பாம்புகளாகி) ஓடுவதுபோல் இவருக்குத் தோன்றின.
20:66. (அதற்கு மூஸா கூறினார்:) “இல்லை, நீங்களே எறியுங்கள்.” உடனே அவர்களின் கயிறுகளும் கம்புகளும் அவர்களின் சூனிய வலிமையால் ஓடுவதுபோல் மூஸாவிற்குத் தென்படலாயின.
20:66. அ(தற்)கவர் “அவ்வாறன்று, நீங்கள் (முதலில்) போடுங்கள்” என்று கூறினார், (அவர்கள் போடவே, போடப்பட்ட) அந்நேரத்தில் அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும், அவர்களின் சூனியத்தின் காரணமாக, நிச்சயமாகவே அவை (பாம்புகளாக) விரைந்து ஓடுவதுபோல் இவருக்குத் தோன்றியது.
20:67
20:67 فَاَوْجَسَ فِىْ نَفْسِهٖ خِيْفَةً مُّوْسٰى‏
فَاَوْجَسَ அவர் உணர்ந்தார் فِىْ نَفْسِهٖ தனது உள்ளத்தில் خِيْفَةً பயத்தை مُّوْسٰى‏ மூஸா
20:67. அப்போது, மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.
20:67. ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்.
20:67. மூஸா தம் மனத்திற்குள் அஞ்சினார்.
20:67. ஆகவே, மூஸா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்.
20:68
20:68 قُلْنَا لَا تَخَفْ اِنَّكَ اَنْتَ الْاَعْلٰى‏
قُلْنَا நாம் கூறினோம் لَا تَخَفْ பயப்படாதீர் اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْاَعْلٰى‏ மிகைத்தவர்
20:68. “(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!” என்று நாம் சொன்னோம்.
20:68. (அச்சமயம் நாம் அவரை நோக்கி) ‘‘பயப்படாதீர்! நிச்சயமாக நீர்தான் (இவர்களைவிட) மிக உயர்ந்தவர்'' என்று கூறினோம்.
20:68. நாம் கூறினோம்: “அஞ்சாதீர்! நீர்தான் வெற்றியாளராவீர்.
20:68. (அது சமயம் அவரிடம்,) “நீர் பயப்படாதீர், நிச்சயமாக நீர் தான் (இந்த சூனியக்காரர்களை மிகைத்து) மிக மேலோங்கியவர்” என்று நாம் கூறினோம்.
20:69
20:69 وَاَ لْقِ مَا فِىْ يَمِيْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا‌ ؕاِنَّمَا صَنَعُوْا كَيْدُ سٰحِرٍ‌ ؕ وَلَا يُفْلِحُ السّٰحِرُ حَيْثُ اَتٰى‏
وَاَ لْقِ இன்னும் எறிவீராக مَا فِىْ يَمِيْنِكَ உமது கையில் உள்ளதை تَلْقَفْ விழுங்கி விடும் مَا صَنَعُوْا‌ அவர்கள் செய்ததை ؕاِنَّمَا صَنَعُوْا அவர்கள் செய்ததெல்லாம் كَيْدُ சூழ்ச்சிதான் سٰحِرٍ‌ ؕ ஒரு சூனியக்காரனின் وَلَا يُفْلِحُ வெற்றிபெற மாட்டான் السّٰحِرُ சூனியக்காரன் حَيْثُ اَتٰى‏ எங்கிருந்து வந்தாலும்
20:69. “இன்னும், உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும்; அவர்கள் செய்த (சூனியங்கள் யா)வற்றையும் அது விழுங்கி விடும்; அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும்; ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்).
20:69. இன்னும் உமது வலது கையில் இருப்பதை நீர் எறிவீராக! அவர்கள் செய்த (சூனியங்கள்) அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரர்களின் (வெறும்) சூழ்ச்சியே (தவிர உண்மையல்ல). சூனியக்காரன் எங்கிருந்து வந்தபோதிலும் வெற்றி பெறவே மாட்டான்'' (என்றும் கூறினோம்).
20:69. உம்முடைய கையில் உள்ளதை எறியும்! அவர்கள் உருவாக்கியவை அனைத்தையும் அது விழுங்கிவிடும். அவர்கள் போலியாக உருவாக்கிக் கொண்டு வந்திருப்பவை சூனியக்காரர்களின் சூழ்ச்சியே ஆகும். சூனியக்காரன் ஒருபோதும் வெற்றியடைவதில்லை. அவன் எத்தனை ஆரவாரத்தோடு வந்தாலும் சரியே!”
20:69. மேலும், “உமது வலக்கையில் இருப்பதை நீர் போடுவீராக, அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும், அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரரின் சூழ்ச்சியே ஆகும், சூனியக்காரன் எங்கு வந்தபோதிலும் வெற்றி பெறமாட்டான்? “ (என்றும் கூறினோம்).
20:70
20:70 فَاُلْقِىَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ هٰرُوْنَ وَمُوْسٰى‏
فَاُلْقِىَ ஆக, விழுந்தனர் السَّحَرَةُ சூனியக்காரர்கள் سُجَّدًا சிரம்பணிந்தவர்களாக قَالُوْۤا கூறினார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِرَبِّ இறைவனைக்கொண்டு هٰرُوْنَ ஹாரூன் وَمُوْسٰى‏ இன்னும் மூஸாவுடைய
20:70. (மூஸா வெற்றி பெற்றதும்) சூனியக்காரர்கள் ஸுஜூது செய்தவர்களாக வீழ்த்தப்பட்டு - “ஹாரூனுடைய மூஸாவுடைய இறைவன் மீதே நாங்கள் ஈமான் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.
20:70. (மூஸா தன் தடியை எறியவே அது பெரியதொரு பாம்பாகி, அவர்கள் செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டது. இதைக் கண்ணுற்ற) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு ‘‘மூஸா, ஹாரூன் (ஆகிய இவ்விருவருடைய) இறைவனை நாங்களும் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினார்கள்.
20:70. இறுதியில் சூனியக்காரர்கள் அனைவரும் ஸஜ்தாவிற்குத் தள்ளப்பட்டார்கள். மேலும், “நாங்கள் ஹாரூன் மற்றும் மூஸாவின் இறைவனை ஏற்றுக் கொண்டோம்” என்று உரக்கக் கூறினார்கள்.
20:70. (மூஸா மேலோங்கிய பொழுது) அச்சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக (ஸஜ்தாவில்) வீழ்த்தப்பட்டு, நாங்கள் ஹாரூன், மூஸா ஆகிய இவ்விருவருடைய இரட்சகனை(க் கொண்டு) விசுவாசித்து விட்டோம்”, என்று கூறினார்கள்.
20:71
20:71 قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْ‌ؕ اِنَّهٗ لَـكَبِيْرُكُمُ الَّذِىْ عَلَّمَكُمُ السِّحْرَ‌ۚ فَلَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَـنَّكُمْ فِىْ جُذُوْعِ النَّخْلِ وَلَـتَعْلَمُنَّ اَيُّنَاۤ اَشَدُّ عَذَابًا وَّاَبْقٰى‏
قَالَ கூறினான் اٰمَنْتُمْ நம்பிக்கை கொண்டீர்களா? لَهٗ அவரை قَبْلَ முன்னர் اَنْ اٰذَنَ நான் அனுமதியளிப்பதற்கு لَـكُمْ‌ؕ உங்களுக்கு اِنَّهٗ நிச்சயமாக அவர் لَـكَبِيْرُكُمُ உங்கள் பெரியவர் الَّذِىْ عَلَّمَكُمُ அவர் உங்களுக்கு கற்றுக்கொடுத்தார் السِّحْرَ‌ۚ சூனியத்தை فَلَاُقَطِّعَنَّ ஆகவே, நிச்சயமாக வெட்டுவேன் اَيْدِيَكُمْ உங்கள் கைகளை وَاَرْجُلَكُمْ உங்கள் கால்களை مِّنْ خِلَافٍ மாற்றமாக وَّلَاُصَلِّبَـنَّكُمْ உங்களை நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன் فِىْ جُذُوْعِ பலகைகளில் النَّخْلِ பேரித்த மரத்தின் وَلَـتَعْلَمُنَّ நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள் اَيُّنَاۤ எங்களில் யார் اَشَدُّ கடினமானவர் عَذَابًا வேதனை செய்வதில் وَّاَبْقٰى‏ நிரந்தரமானவர்
20:71. “நான் உங்களை அனுமதிக்கும் முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தலைவர் (போல் தோன்றுகிறது); எனவே, நான் உங்களை மாறு கை, மாறு கால் வாங்கி, பேரீத்த மரக்கட்டைகளில் உங்களைக் கழுவேற்றுவேன்; மேலும் வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையானவர் யார், அதில் நிலையாக இருப்பவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.
20:71. (இதைக் கண்ட ஃபிர்அவ்ன்) ‘‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் அவரை நம்பிக்கைகொண்டு விட்டீர்கள். நிச்சயமாக அவர்தான் உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்கள் தலைவராயிருக்கும் (போல் தோன்றுகிறது). உங்களை மாறுகை, மாறுகால் வெட்டிப் பேரீச்ச மரத்தின் கிளைகளில் நிச்சயமாக உங்களைக் கழுவேற்றி விடுவேன். வேதனை கொடுப்பதில் நம்மில் கடுமையான வரும் நிலையானவரும் யார் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்'' என்று கூறினான்.
20:71. அப்போது ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன் நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? அவர்தான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்கள் குரு என்பது தெரிந்துவிட்டது. இப்பொழுது நான் உங்களின் மாறுகை, மாறுகால்களைத் துண்டித்துவிடுவேன்; மேலும் பேரீச்ச மரத்தின் கம்பங்களில் உங்களை அறைந்து கொல்லப்போகின்றேன். அப்போது, எங்களில் யாருடைய வேதனை மிகக்கடுமையானது; நீடித்து நிற்கக்கூடியது (அதாவது, என்னால் உங்களுக்கு அதிக தண்டனை கொடுக்க முடியுமா? அல்லது மூஸாவினாலா) என்பது உங்களுக்குத் தெரிந்துவிடும்.”
20:71. (இதனைக் கண்ட ஃபிர் அவ்ன்) “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவருக்கு நீங்கள் விசுவாசங்கொண்டு விட்டீர்கள், உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தாரே அத்தகைய உங்களின் பெரியவர் நிச்சயமாக அவர்தான், ஆகவே, நிச்சயமாக நான் உங்களது கைகளையும், உங்களது கால்களையும், மாறாக (ஒரு பக்கத்துக் காலையும் மறு பக்கத்துக் கையையும்) துண்டிப்பேன், இன்னும் பேரீச்ச மரங்களின் அடிப்பாகங்களில் உங்களை நிச்சயமாக நான் கழுவேற்றுவேன், வேதனை செய்வதில் மிகக் கடுமையானவரும், (அவ்வேதனையில்) மிக நிலையானவரும் நம்மில் யார் என நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று கூறினான்.
20:72
20:72 قَالُوْا لَنْ نُّؤْثِرَكَ عَلٰى مَا جَآءَنَا مِنَ الْبَيِّنٰتِ وَالَّذِىْ فَطَرَنَا‌ فَاقْضِ مَاۤ اَنْتَ قَاضٍ‌ ؕ اِنَّمَا تَقْضِىْ هٰذِهِ الْحَيٰوةَ الدُّنْيَا ؕ‏
قَالُوْا அவர்கள் கூறினர் لَنْ نُّؤْثِرَكَ நாம் உம்மை தேர்ந்தெடுக்க மாட்டோம் عَلٰى مَا جَآءَنَا எங்களிடம் வந்ததை விட مِنَ الْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளில் இருந்து وَالَّذِىْ فَطَرَنَا‌ எங்களைப் படைத்தவனை விட فَاقْضِ ஆகவே நீ செய் مَاۤ எதை اَنْتَ நீ قَاضٍ‌ ؕ செய்பவனாக இருக்கிறாயோ اِنَّمَا تَقْضِىْ நீ செய்வதெல்லாம் هٰذِهِ இந்த الْحَيٰوةَ الدُّنْيَا ؕ‏ உலக வாழ்க்கையில்தான்
20:72. (மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) “எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள்; நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்” என்று கூறினார்.
20:72. அதற்கவர்கள் (ஃபிர்அவ்னை நோக்கி) ‘‘எங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் எங்களைப் படைத்தவனைப் புறக்கணித்து விட்டு உன்னை நாங்கள் ஒரு காலத்திலும் விரும்பவே மாட்டோம். உன்னால் இயன்றதை நீ முடிவு செய்துகொள். நீ முடிவு செய்யக்கூடியதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான்.
20:72. அதற்கு சூனியக்காரர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்: “எங்களைப் படைத்த இறைவன் மீது சத்தியமாக! தெளிவான சான்றுகள் எங்கள் கண்ணெதிரே வந்த பின்னரும் நாங்கள் (சத்தியத்தை விட) உனக்கு ஒருபோதும் முன்னுரிமை தரமாட்டோம். எனவே, நீ என்ன செய்ய விரும்புகின்றாயோ செய்துகொள். (அதிகபட்சம்) இவ்வுலக வாழ்வில் மட்டுமே உன்னால் தீர்ப்பு வழங்க முடியும்.
20:72. (அதற்கவர்கள் ஃபிர் அவ்னிடம்) “எங்களுக்கு வந்துவிட்ட தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தானே அவனைவிடவும், உன்னை நாங்கள் (பெரிதாகக் கருதி) தேர்வு செய்யமாட்டோம், ஆகவே எதை நீ தீர்ப்புக் கூற இருக்கிறாயோ (அதை) நீ தீர்ப்புக் கூறிவிடு, நீ தீர்ப்புக் கூறுவதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில்தான்” என்று கூறினர்.
20:73
20:73 اِنَّاۤ اٰمَنَّا بِرَبِّنَا لِيَـغْفِرَ لَـنَا خَطٰيٰنَا وَمَاۤ اَكْرَهْتَـنَا عَلَيْهِ مِنَ السِّحْرِؕ‌ وَاللّٰهُ خَيْرٌ وَّاَبْقٰى‏
اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِرَبِّنَا எங்கள் இறைவனை لِيَـغْفِرَ அவன் மன்னிப்பதற்காக لَـنَا எங்களுக்கு خَطٰيٰنَا எங்கள் பாவங்களை وَمَاۤ இன்னும் எது اَكْرَهْتَـنَا நீ எங்களை நிர்ப்பந்தித்தாய் عَلَيْهِ அதை செய்வதற்கு مِنَ السِّحْرِؕ‌ சூனியத்தில் وَاللّٰهُ அல்லாஹ்தான் خَيْرٌ மிகச் சிறந்தவன் وَّاَبْقٰى‏ மிக நிரந்தரமானவன்
20:73. “எங்களின் தவறுகளையும், எங்களை நீ கட்டாயப் படுத்தியதினால் (நாங்கள் செய்ய நேர்ந்த) சூனியத்தையும், எங்களுக்கு மன்னிப்பதற்காக எங்கள் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும், அல்லாஹ் தான் மிக்க மேலானவனாகவும், (என்றும்) நிலைத்திருப்பவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்கள்).
20:73. நிச்சயமாக நாங்கள் (மெய்யான) எங்கள் இறைவனையே நம்பிக்கை கொள்வோம். எங்கள் குற்றங்களையும் உன் நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ்தான் (உன்னைவிட) மிக்க மேலானவனும், என்றும் நிலையானவனும் ஆவான்'' என்று கூறினார்கள்.
20:73. திண்ணமாக, நாங்கள் எங்கள் இறைவன்மீது நம்பிக்கை கொண்டுவிட்டோம், எங்களின் குற்றங்களையும் எந்த சூனியத்தைக் கையாளுமாறு எங்களை நீ நிர்பந்தித்தாயோ அந்த சூனியச் செயலையும் அவன் மன்னிக்க வேண்டும் என்பதற்காக! அல்லாஹ்தான் சிறந்தவனும் நிலைத்திருப்பவனுமாவான்”
20:73. “நிச்சயமாக நாங்கள், (மெய்யான) எங்கள் இரட்சகனையே விசுவாசித்திருந்தோம், எங்களுடைய குற்றங்களையும், உன்னுடைய நிர்ப்பந்தத்தினால் நாங்கள் செய்த சூனிய(த்தின் குற்ற)ங்களையும் அவன் எங்களுக்கு மன்னித்துவிடுவான், அல்லாஹ் மிக்க மேலானவனும், நிலைத்திருப்பவனும் ஆவான்” என்று கூறினார்கள்.
20:74
20:74 اِنَّهٗ مَنْ يَّاْتِ رَبَّهٗ مُجْرِمًا فَاِنَّ لَهٗ جَهَـنَّمَ‌ۚ لَا يَمُوْتُ فِيْهَا وَ لَا يَحْيٰى‏
اِنَّهٗ நிச்சயமாக விஷயமாவது مَنْ எவன் يَّاْتِ வருகிறானோ رَبَّهٗ தன் இறைவனிடம் مُجْرِمًا பாவியாக فَاِنَّ நிச்சயமாக لَهٗ அவனுக்கு جَهَـنَّمَ‌ۚ நரகம்தான் لَا يَمُوْتُ அவன் மரணிக்க மாட்டான் فِيْهَا அதில் وَ لَا يَحْيٰى‏ வாழவும் மாட்டான்
20:74. நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது; அதில் அவன் மரணிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
20:74. உண்மையாகவே எவன் குற்றவாளியாகத் தன் இறைவனிடம் வருகிறானோ அவனுக்கு நிச்சயமாக நரகம்தான் (கூலியாகும்). அதில் அவன் சாகவும் மாட்டான்; (சுகத்துடன்) வாழவும் மாட்டான். (வேதனையை அனுபவித்துக்கொண்டு வாழவும் சாகவும் வழியில்லாமல் தவிப்பான்.)
20:74. எவன் குற்றம் புரிந்தவனாய் தன் இறைவனிடம் வருவானோ அவனுக்குத் திண்ணமாக நரகம் உண்டு. அதில் அவன் வாழவும் மாட்டான். சாகவும் மாட்டான்.
20:74. நிச்சயமாக எவன் தன் இரட்சகனிடம் குற்றவாளியாக வருகின்றானோ, அவனுக்கு நிச்சயமாக நரகம் இருக்கிறது, அதில் அவன் சாகவும் மாட்டான், (சுகத்துடன்) வாழவும் மாட்டான், (வேதனையை அனுபவித்துக் கொண்டேயிருப்பான்).
20:75
20:75 وَمَنْ يَّاْتِهٖ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصّٰلِحٰتِ فَاُولٰٓٮِٕكَ لَهُمُ الدَّرَجٰتُ الْعُلٰىۙ‏
وَمَنْ இன்னும் யார் يَّاْتِهٖ அவனிடம்வருவாரோ مُؤْمِنًا நம்பிக்கையாளராக قَدْ عَمِلَ திட்டமாக செய்தார் الصّٰلِحٰتِ நன்மைகளை فَاُولٰٓٮِٕكَ لَهُمُ அவர்களுக்குத்தான் الدَّرَجٰتُ தகுதிகள் உண்டு الْعُلٰىۙ‏ மிக உயர்ந்த
20:75. ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.
20:75. எவர் நம்பிக்கை கொண்டவராக நற்செயல்களைச் செய்து (தன் இறைவனிடம்) வருகிறாரோ அவர்களுக்கு மேலான பதவிகள் இருக்கின்றன.
20:75. மேலும், எவர்கள் நம்பிக்கையாளராய் நற்செயல்கள் புரிந்த வண்ணம் அவன் திருமுன் வருகின்றார்களோ அத்தகைய அனைவருக்கும் உயர்பதவிகள் உள்ளன.
20:75. மேலும், எவர் விசுவாசங்கொண்டவராக, திட்டமாக நற்கருமங்களைச் செய்த நிலையில் (அல்லாஹ்வாகிய) அவனிடத்தில் வருகின்றாரோ – அத்தகையோர்களுக்கு உயர் பதவிகள் இருக்கின்றன.
20:76
20:76 جَنّٰتُ عَدْنٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ وَذٰ لِكَ جَزَآءُ مَنْ تَزَكّٰى‏
جَنّٰتُ சொர்க்கங்கள் عَدْنٍ அத்ன் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழே الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமானவர்களாக فِيْهَا‌ ؕ அதில் وَذٰ لِكَ இதுதான் جَزَآءُ கூலியாகும் مَنْ எவர் تَزَكّٰى‏ பரிசுத்தமானார்
20:76. (அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர்; இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும்.
20:76. (மறுமையிலோ அவர்களுக்கு) ‘அத்ன்' என்ற நிலையான சொர்க்கங்கள் உள்ளன. அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இதுதான் பரிசுத்தவான்களுடைய கூலியாகும்.
20:76. நிலையான சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கியிருப்பார்கள். நற்கூலியாகும் இது, தூய வாழ்க்கையை மேற்கொள்பவர்களுக்காக!
20:76. (அத்தகையோருக்கு) நிலையான சொர்க்கங்கள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள், மேலும், அது பரிசுத்தமானவருடைய கூலியாகும்.
20:77
20:77 وَلَقَدْ اَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى ۙ اَنْ اَسْرِ بِعِبَادِىْ فَاضْرِبْ لَهُمْ طَرِيْقًا فِى الْبَحْرِ يَبَسًا ۙ لَّا تَخٰفُ دَرَكًا وَّلَا تَخْشٰى‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلٰى مُوْسٰٓى ۙ மூஸாவிற்கு اَنْ اَسْرِ இரவில் அழைத்துச் செல்வீராக بِعِبَادِىْ என் அடியார்களை فَاضْرِبْ இன்னும் ஏற்படுத்துவீராக لَهُمْ அவர்களுக்காக طَرِيْقًا ஒரு பாதையை فِى الْبَحْرِ கடலில் يَبَسًا ۙ காய்ந்த لَّا تَخٰفُ நீர் பயப்பட மாட்டீர் دَرَكًا பிடிக்கப்படுவதை وَّلَا تَخْشٰى‏ அஞ்சமாட்டீர்
20:77. இன்னும்: “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.
20:77. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். ‘நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக நடந்து (சென்று) விடுவீராக. (வழியில் குறுக்கிடும்) கடலில் (உமது தடியால் அடித்து) உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துவீராக. (உம்மை எதிரிகள்) அடைந்து விடுவார்கள் என்று நீர் பயப்பட வேண்டாம். (அக்கடலில் உமது மக்கள் மூழ்கி விடுவார்கள் என்றும்) நீர் அஞ்சாதீர்'' (என்றும் அறிவித்தோம்).
20:77. நாம் மூஸாவிற்கு வஹி அனுப்பினோம்: “நீர் இரவோடு இரவாக என் அடியார்களை அழைத்துக் கொண்டு செல்வீராக! மேலும், கடலில் அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைப்பீராக! உம்மை யாரேனும் பின் தொடர்வார்களோ என சற்றும் நீர் அஞ்சத் தேவையில்லை: (கடலைக் கடந்து செல்லும் போது) உமக்கு பயமும் ஏற்பட வேண்டியதில்லை.”
20:77. மேலும், நிச்சயமாக நாம் மூஸாவுக்கு “நீர் என்னுடைய அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவில் சென்றுவிடுவீராக! (வழியில்) கடலில் (உமது தடியால்) அடித்து உலர்ந்த வழியை அவர்களுக்கு ஏற்படுத்துவீராக! (உம்மை ஃபிர் அவ்ன்) அடைத்து விடுவானென்று நீர் பயப்படவேண்டாம், (கடலில் மூழ்கிவிடுவோம் என) நீர் அஞ்சவும் வேண்டாம் என்றும் அறிவித்தோம்.
20:78
20:78 فَاَتْبَعَهُمْ فِرْعَوْنُ بِجُنُوْدِهٖ فَغَشِيَهُمْ مِّنَ الْيَمِّ مَا غَشِيَهُمْؕ‏
فَاَتْبَعَهُمْ அவர்களைப் பின்தொடர்ந்தான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் بِجُنُوْدِهٖ தனது படைகளைக்கொண்டு فَغَشِيَهُمْ ஆகவே, அவர்களை சூழவேண்டியது مِّنَ الْيَمِّ கடலில் இருந்து مَا غَشِيَهُمْؕ‏ எது/ சூழ்ந்தது/அவர்களை
20:78. மேலும் ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின் தொடர்ந்தான்; ஆனால் கடல் அவர்களை முற்றாக மூழ்கடித்து விட்டது.
20:78. (அவ்வாறே மூஸா நபி இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு சென்றுவிடவே) ஃபிர்அவ்ன் தன் சேனைகளுடன் அவர்களைப் பின்பற்றிச் சென்றான். (அவன் கடலிலும் அவர்களைப் பின்பற்றிச் செல்லவே) கடலும் (இவர்களில் ஒருவரும் தப்பிவிடாதபடி) இவர்களை மூழ்கடிக்க வேண்டியவாறு மூழ்கடித்து விட்டது.
20:78. ஃபிர்அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். பிறகு அவர்களைக் கடல் எவ்வாறு மூழ்கடிக்க வேண்டுமோ அவ்வாறு மூழ்கடித்தது.
20:78. ஃபிர் அவன், தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான், அப்போது அவர்களை மூடிக்கொள்கிற (அலையான)து அவர்களை மூடிக்கொண்டது.
20:79
20:79 وَاَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهٗ وَمَا هَدٰى‏
وَاَضَلَّ வழிகெடுத்தான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் قَوْمَهٗ தன் சமுதாயத்தினரை وَمَا هَدٰى‏ அவன் நேர்வழி காட்டவில்லை
20:79. ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரை வழி கெடுத்தான்; நேரான பாதையை (அவர்களுக்குக்) காட்டவுமில்லை.
20:79. ஃபிர்அவ்ன் தன் மக்களை நேரான வழியில் செலுத்தாமல் தவறான வழியிலேயே செலுத்தினான்.
20:79. ஃபிர்அவ்ன் தன்னுடைய சமுதாயத்தை வழிகெடுத்தே இருந்தான்; அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டியிருக்கவில்லை.
20:79. ஃபிர் அவ்ன் தன் சமூகத்தாரை வழி கெடுத்தான், (அவர்களுக்கு) நேர் வழியை அவன் காட்டவுமில்லை.
20:80
20:80 يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ قَدْ اَنْجَيْنٰكُمْ مِّنْ عَدُوِّكُمْ وَوٰعَدْنٰكُمْ جَانِبَ الطُّوْرِ الْاَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰى‏
يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களே! قَدْ திட்டமாக اَنْجَيْنٰكُمْ உங்களை நாம் பாதுகாத்தோம் مِّنْ عَدُوِّ எதிரிகளிடமிருந்து كُمْ உங்கள் وَوٰعَدْنٰكُمْ இன்னும் உங்களுக்கு வாக்களித்தோம் جَانِبَ பகுதியை الطُّوْرِ தூர் மலை الْاَيْمَنَ வலது وَنَزَّلْنَا இன்னும் இறக்கினோம் عَلَيْكُمُ உங்கள் மீது الْمَنَّ மன்னு وَالسَّلْوٰى‏ ஸல்வா
20:80. “இஸ்ராயீலின் சந்ததியினரே! நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம்; மேலும், தூர்(ஸினாய் மலையின்) வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் வேதத்தை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம்; இன்னும் “மன்னு ஸல்வாவை” (உணவாக) உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம்.
20:80. இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நாம் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி ‘தூர்' என்னும் மலையின் வலது பாக(ம் வந்தால் உங்களுக்குத் தவ்றாத்)த்தை(த் தருவதாக) வாக்களித்து (உணவு கிடைக்காத பாலைவனத்தில்) உங்களுக்கு ‘மன்னு சல்வா'வையும் இறக்கிவைத்தோம்.
20:80. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! “நாம் உங்கள் பகைவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றினோம். மேலும், ‘தூர்’ மலையின் வலப் பக்கத்தில் நீங்கள் வருவதற்கென நேரம் நிர்ணயித்தோம். ‘மன்னு’ மற்றும் ‘ஸல்வா’வை* உங்களுக்கு இறக்கி அருளினோம்.
20:80. “இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நாம் உங்களை, உங்களுடைய பகைவனிடமிருந்து ஈடேற்றிக் கொண்டோம், (ஸினாய் மலையான) ‘தூரின்’ வலப்பாகத்தை உங்களுக்கு நாம் வாக்களித்தோம், உணவாக உங்களுக்கு ‘மன்னு ஸல்வா’வையும் இறக்கி வைத்தோம்.
20:81
20:81 كُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَلَا تَطْغَوْا فِيْهِ فَيَحِلَّ عَلَيْكُمْ غَضَبِىْ‌ۚ وَمَنْ يَّحْلِلْ عَلَيْهِ غَضَبِىْ فَقَدْ هَوٰى‏
كُلُوْا புசியுங்கள் مِنْ طَيِّبٰتِ நல்லவற்றிலிருந்து مَا رَزَقْنٰكُمْ நாம் உங்களுக்கு வழங்கிய وَلَا تَطْغَوْا எல்லை மீறாதீர்கள் فِيْهِ அதில் فَيَحِلَّ இறங்கிவிடும் عَلَيْكُمْ உங்கள் மீது غَضَبِىْ‌ۚ என் கோபம் وَمَنْ எவன் يَّحْلِلْ இறங்கி விடுகிறதோ عَلَيْهِ மீது غَضَبِىْ என் கோபம் فَقَدْ திட்டமாக هَوٰى‏ அவன் வீழ்ந்து விடுவான்
20:81. “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; (அதற்கு நன்றி செலுத்தாமல்) அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்; (அப்படி செய்வீர்களானால்) உங்கள் மீது என் கோபம் இறங்கி விடும்; மேலும், எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ, அவன் நிச்சயமாக வீழ்வான்.
20:81. நாம் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லதைப் புசித்து வாருங்கள். அதில் நீங்கள் வரம்பு மீறிவிடாதீர்கள். (மீறினால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். எவன் மீது என் கோபம் இறங்குகிறதோ அவன் நிச்சயமாக அழிந்தே விடுவான்.
20:81. புசியுங்கள் நாம் உங்களுக்கு வழங்கியுள்ள தூய்மையான உண் பொருள்களை! அவற்றைப் புசித்துவிட்டு வரம்பு மீறிச் செயல்படாதீர்கள். அப்படிச் செய்தால் எனது கோபம் உங்கள் மீது இறங்கும்! எவன்மீது எனது கோபம் இறங்குகிறதோ அவன் நிச்சயமாக வீழ்ச்சி அடைந்தே தீருவான்.
20:81. “நாம் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், அதில் நீங்கள் வரம்பு மீறியும் விடாதீர்கள், (மீறினால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும், எவரின் மீது என்னுடைய கோபம் இறங்குகிறதோ அவர், நிச்சயமாக (ஹாவியா எனும் நரகத்தில்) வீழ்ந்து விட்டார்.
20:82
20:82 وَاِنِّىْ لَـغَفَّارٌ لِّمَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا ثُمَّ اهْتَدٰى‏
وَاِنِّىْ நிச்சயமாக நான் لَـغَفَّارٌ மிகவும் மன்னிக்கக்கூடியவன் لِّمَنْ تَابَ திருந்தியவரை وَاٰمَنَ இன்னும் நம்பிக்கைகொண்டார் وَعَمِلَ صَالِحًـا நன்மை செய்தார் ثُمَّ பின்னர் اهْتَدٰى‏ நேர்வழி பெற்றார்
20:82. “எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்” (என்று கூறினோம்).
20:82. எவர் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து நேரான வழியில் நிலைத்திருக்கிறாரோ அவரை நிச்சயமாக நான் மிக மன்னிப்பவன் ஆவேன்.
20:82. ஆயினும், எவன் பாவமன்னிப்புக் கோரி நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து, பிறகு நேர்மையாகவும் வாழ்கின்றானோ, அவனைத் திண்ணமாக, நான் பெரிதும் மன்னிக்கக்கூடியவனாய் இருக்கின்றேன்.
20:82. “இன்னும், எவர் பச்சாதாபப்பட்டு (பாவத்திலிருந்து தவ்பாச்செய்து), விசுவாசமும் கொண்டு நற்கருமங்களையும் செய்து அதன் பின்னர் நேர் வழியில் நிலைத்திருக்கிறாரோ அவருக்கு நிச்சயமாக நான் மிக மன்னிக்கிறவன்.
20:83
20:83 وَمَاۤ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ يٰمُوْسٰى‏
وَمَاۤ எது? اَعْجَلَكَ உம்மை அவசரமாக வரவழைத்தது عَنْ قَوْمِكَ உமது சமுதாயத்தை விட்டு يٰمُوْسٰى‏ மூஸாவே!
20:83. “மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது?” (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர்கள் வந்த போது அல்லாஹ் கேட்டான்.)
20:83. (மூஸா தூர் ஸீனாய் மலைக்கு விரைந்து வந்த சமயத்தில், அவரிடம்) ‘‘மூஸாவே! நீர் உமது மக்களை விட்டுப் பிரிந்து இவ்வளவு அவசரமாக ஏன் வந்தீர்?'' (என்று இறைவன் கேட்டான்).
20:83. மேலும், “மூஸாவே! உம்மை உமது சமூகத்தாரை விட முதலில் வரச்செய்தது எது?”
20:83. மேலும், (அவரிடம்) மூஸாவே நீர் உம்முடைய சமூகத்தாரைவிட்டு (விட்டு நீர் மட்டும் வர) உம்மை அவசரப்படுத்தியது எது? (என்று அல்லாஹ்வாகிய அவன் கூறினான்.
20:84
20:84 قَالَ هُمْ اُولَاۤءِ عَلٰٓى اَثَرِىْ وَ عَجِلْتُ اِلَيْكَ رَبِّ لِتَرْضٰى‏
قَالَ அவர் கூறினார் هُمْ اُولَاۤءِ அவர்கள் عَلٰٓى மீது اَثَرِىْ என் அடிச்சுவட்டின் وَ عَجِلْتُ நான் விரைந்தேன் اِلَيْكَ உன் பக்கம் رَبِّ என் இறைவா لِتَرْضٰى‏ நீ திருப்தி கொள்வதற்காக
20:84. (அதற்கவர்) “அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்” என்று கூறினார்.
20:84. அதற்கவர் ‘‘அவர்கள் இதோ என்னைப் பின்தொடர்ந்தே வருகின்றனர். என் இறைவனே! நீ திருப்திபடுவதற்காக அவசர அவசரமாக (முன்னதாகவே) உன்னிடம் வந்தேன்'' என்று கூறினார்.
20:84. அதற்கு அவர் கூறினார்: “இதோ! அவர்கள் எனக்குப் பின்னால் வந்து கொண்டே இருக்கிறார்கள். என் இறைவனே! நான் அவசரமாக உன் திருச்சமூகம் வந்து விட்டிருப்பது நீ என்மீது திருப்திகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்!”
20:84. அ(தற்க)வர், “அவர்கள் என் அடிச்சுவட்டின் மீது வருகின்றனர், என் இரட்சகனே! நீ (என் மீது) திருப்திப்படுவதற்காக துரிதமாக உன்னிடம் (முன்னதாகவே) வந்துவிட்டேன்” என்று கூறினார்.
20:85
20:85 قَالَ فَاِنَّا قَدْ فَتَـنَّا قَوْمَكَ مِنْۢ بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِىُّ‏
قَالَ கூறினான் فَاِنَّا நிச்சயமாக நாம் قَدْ فَتَـنَّا திட்டமாக சோதித்தோம் قَوْمَكَ உமது சமுதாயத்தை مِنْۢ بَعْدِكَ உமக்குப் பின்னர் وَاَضَلَّهُمُ இன்னும் அவர்களை வழிகெடுத்தான் السَّامِرِىُّ‏ ஸாமிரி
20:85. “நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை “ஸாமிரி” வழிகெடுத்து விட்டான்” என்று (அல்லாஹ்) கூறினான்.
20:85. அதற்கு (இறைவன்) ‘‘நீர் வந்த பின்னர் நாம் உமது மக்களை ஒரு சோதனைக்குள்ளாக்கி விட்டோம். ‘ஸாமிரீ' (என்பவன்) அவர்களை வழிகெடுத்து விட்டான்'' என்று கூறினான்.
20:85. அவன் (இறைவன்) கூறினான்: “கேளும்! நீர் வந்த பிறகு நாம் உம்முடைய சமுதாயத்தினரைத் திண்ணமாக சோதனைக்குள்ளாக்கியிருக்கிறோம். அவர்களை ஸாமிரி வழிகெடுத்துவிட்டான்.”
20:85. அதற்கு, “நீர் வந்த பின்னர் நிச்சயமாக நாம் உம்முடைய சமூகத்தாரை ஒரு சோதனைக்குள்ளாக்கினோம், சாமிரீ என்பவன் அவர்களை வழி கெடுத்துவிட்டான்” என்று (அவர் ஸினாய் மலைக்கு வந்த சமயம் அல்லாஹ்வாகிய அவன்) கூறினான்.
20:86
20:86 فَرَجَعَ مُوْسَىٰۤ اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا  ۙ قَالَ يٰقَوْمِ اَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا  ۙ اَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ اَمْ اَرَدْتُّمْ اَنْ يَّحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّنْ رَّبِّكُمْ فَاَخْلَفْتُمْ مَّوْعِدِىْ‏
فَرَجَعَ திரும்பினார் مُوْسَىٰۤ மூஸா اِلٰى قَوْمِهٖ தனது சமுதாயத்திடம் غَضْبَانَ கோபமானவராக اَسِفًا  ۙ கவலையடைந்தவராக قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اَلَمْ يَعِدْ வாக்களிக்கவில்லையா كُمْ உங்களுக்கு رَبُّكُمْ உங்கள் இறைவன் وَعْدًا حَسَنًا  ۙ அழகிய வாக்கை اَفَطَالَ தூரமாகிவிட்டதா عَلَيْكُمُ உங்களுக்கு الْعَهْدُ காலம் اَمْ அல்லது اَرَدْتُّمْ நீங்கள் நாடுகிறீர்களா اَنْ يَّحِلَّ இறங்குவதை عَلَيْكُمْ உங்கள் மீது غَضَبٌ கோபம் مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவன் புறத்திலிருந்து فَاَخْلَفْتُمْ அதனால் மாறு செய்தீர்களா مَّوْعِدِىْ‏ எனது குறிப்பிட்ட நேரத்திற்கு
20:86. ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).
20:86. (உடனே) மூஸா பெரும் துக்கத்துடன் கோபம் கொண்டவராகத் தன் மக்களிடம் திரும்பி வந்து ‘‘என் மக்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு(த் தவ்றாத் என்னும் வேதத்தைத் தருவதாக) அழகான வாக்குறுதி அளிக்கவில்லையா? அவன் வாக்குறுதி அளித்து உங்களுக்கு அதிக நாட்களாகி விட்டனவா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனின் கோபம் இறங்க வேண்டும் என்று நீங்கள் விரும்பியே எனக்குச் செய்த வாக்குறுதிக்கு நீங்கள் மாறு செய்தீர்களா?'' என்று கேட்டார்.
20:86. மூஸா கடுஞ்சினத்துடனும், மனவேதனையுடனும் தம் சமூகத்தாரிடம் திரும்பிவந்து கூறினார்: “என் சமூகத்தாரே! உங்கள் இறைவன் உங்களிடம் அழகிய வாக்குறுதி அளிக்கவில்லையா? அவ்வாறு வாக்குறுதி அளித்து நீண்டகாலம் ஓடிவிட்டதா என்ன? அல்லது உங்கள் இறைவனின் சினம் உங்கள் மீது இறங்க வேண்டும் என்று கருதி என்னிடம் வாக்குறுதிக்கு மாற்றமாய் நடந்து கொண்டீர்களா?”
20:86. (உடனே) மூஸா கோபங்கொண்டவராக-பெரும் வருத்தம் நிறைந்தவராகத் தன்னுடைய சமூகத்தாரிடம் திரும்பி வந்து “என்னுடைய சமூகத்தார்களே! உங்கள் இரட்சகன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அவன் வாக்களிக்கவில்லையா? எனவே அவ்வாக்குறுதி(யின் காலம்) உங்களுக்கு நீண்டுவிட்டதா? அல்லது உங்கள்மீது, உங்கள் இரட்சகனின் கோபம் இறங்கவேண்டுமென்று நீங்கள் விரும்பியே எனக்கு நீங்கள் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா? என்று அவர் கேட்டார்.
20:87
20:87 قَالُوْا مَاۤ اَخْلَـفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰـكِنَّا حُمِّلْنَاۤ اَوْزَارًا مِّنْ زِيْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَى السَّامِرِىُّ ۙ‏
قَالُوْا கூறினார்கள் مَاۤ اَخْلَـفْنَا நாங்கள் மாறுசெய்யவில்லை مَوْعِدَكَ உமது குறிப்பிட்டநேரத்திற்கு بِمَلْكِنَا எங்கள் விருப்பப்படி وَلٰـكِنَّا என்றாலும் حُمِّلْنَاۤ நாங்கள் சுமத்தப்பட்டோம் اَوْزَارًا பலசுமைகளை مِّنْ زِيْنَةِ ஆபரணங்களில் الْقَوْمِ மக்களின் فَقَذَفْنٰهَا ஆகவே அவற்றை நாங்கள் எறிந்தோம் فَكَذٰلِكَ அவ்வாறே اَلْقَى எறிந்தான் السَّامِرِىُّ ۙ‏ சாமிரி
20:87. “உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை; ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.
20:87. அதற்கவர்கள் ‘‘நாங்கள் உமக்குச் செய்த வாக்குறுதிக்கு எங்கள் இஷ்டப்படி மாறுசெய்யவில்லை. ஆனால், நாங்கள் சுமந்துகொண்டு வந்த (ஃபிர்அவ்னுடைய) மக்களின் நகைகளை (நெருப்பில் எறியும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு அதில் அவற்றை) நாங்கள் எறிந்தோம். அவ்வாறே ஸாமிரீயும் (தன்னிடமிருந்த நகைகளை) எறிந்தான்.
20:87. அதற்கு அவர்கள் கூறினர்: “நாங்கள் எங்களின் சுய நாட்டப்படி உம்மிடம் வாக்குறுதிக்கு மாற்றமாய் நடந்து கொள்ளவில்லை; நடந்தது என்னவெனில், மக்களுடைய நகைகளின் பெருஞ்சுமை எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அவற்றை எறிந்து விட்டோம். பிறகு இதே போன்று ஸாமிரியும் கொஞ்சம் எறிந்தான்.
20:87. அ(தற்க)வர்கள் நாங்கள் உமக்குச் செய்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தி கொண்டு (சுயமாக) மாறு செய்யவில்லை, என்றாலும், நாங்கள் (ஃபிர் அவ்னுடைய) சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங்களிலிருந்து கனமான சுமைகளைச் சுமத்தப்பட்டோம், ஆகவே, அவற்றை நாங்கள் (நெருப்பில்) எறிந்தோம், அவ்வாறே சாமிரீயும் (தன்னிடமிருந்தவற்றை) எறிந்தான்.
20:88
20:88 فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَاۤ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰى  فَنَسِىَ‏
فَاَخْرَجَ உருவாக்கினான் لَهُمْ அவர்களுக்கு عِجْلًا ஒரு காளைக் கன்றை جَسَدًا ஓர் உடலை لَّهٗ அதற்கு خُوَارٌ மாட்டின் சப்தத்தை உடைய فَقَالُوْا கூறினர் هٰذَاۤ இதுதான் اِلٰهُكُمْ உங்களது தெய்வமும் وَاِلٰهُ தெய்வமும் مُوْسٰى  மூஸாவுடைய فَنَسِىَ‏ ஆனால் மறந்து விட்டார்
20:88. பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.
20:88. பின்னர், அவன் ஒரு காளை கன்றின் சிலையை (மக்கள் முன்) வெளியாக்கினான். அதற்கு(க் காளை மாட்டின் சப்தத்தைப் போல் அர்த்தமற்ற) சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர், இதுதான் உங்களுக்கும் மூஸாவுக்கும் இறைவனாகும். ஆனால் அவர் (இதை) மறந்து (விட்டு மலைக்குச் சென்று)விட்டார்'' என்று கூறினார்கள்.
20:88. மேலும், அவன் அவர்களுக்கு ஒரு காளைக் கன்றின் உருவச் சிலையைச் செய்து கொடுத்தான். அதிலிருந்து காளை மாட்டின் குரலைப் போன்று ஓசை வெளியாகிக்கொண்டிருந்தது. உடனே, மக்கள் உரக்கக் கூறினார்கள்: “உங்கள் இறைவனும் மூஸாவின் இறைவனும் இதுதான். ஆனால் மூஸா இதனை மறந்து விட்டார்.”
20:88. “பின்னர், அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை-(உருவாக்கி) உடலாக வெளியாக்கினான், அதற்கு (அர்த்தமற்ற) சப்தமுமிருந்தது, (இதைக்கேட்ட) சிலர் (இதுதான் உங்களுடைய வணக்கத்திற்குரிய) இரட்சகனும், மூஸாவினுடைய (வணக்கத்திற்குரிய) இரட்சகனுமாகும், (இதனை) அவர் (மூஸா) மறந்து (மலைக்குச் சென்று) விட்டார்” என்று கூறினார்கள்.
20:89
20:89 اَفَلَا يَرَوْنَ اَلَّا يَرْجِعُ اِلَيْهِمْ قَوْلًا ۙ وَّلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَّلَا نَفْعًا‏
اَفَلَا يَرَوْنَ அவர்கள் பார்க்கவேண்டாமா اَلَّا அது يَرْجِعُ திரும்ப اِلَيْهِمْ அவர்களுக்கு قَوْلًا ۙ பேசாமல் இருப்பதை وَّلَا يَمْلِكُ இன்னும் ஆற்றல் பெறவில்லை لَهُمْ அவர்களுக்கு ضَرًّا தீமை செய்வதற்கும் وَّلَا نَفْعًا‏ நன்மை செய்வதற்கும்
20:89. அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா?
20:89. (என்ன ஆச்சரியம்!) அவர்களு(டைய கேள்விகளு)க்கு அச்சிலை ஒரு பதில் கூறாமலிருப்பதையும், நன்மையோ தீமையோ (எதையும்) அவர்களுக்குச் செய்ய சக்தியற்று இருப்பதையும் அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா?
20:89. ‘அது, அவர்களின் கூற்றுக்கு மறுமொழி அளிக்காது என்பதையும், அவர்களுக்கு இலாபமோ, நட்டமோ அளிக்கும் யாதொரு ஆற்றலையும் அது பெற்றிருக்கவில்லை என்பதையும் இவர்கள் பார்க்கவில்லையா?’
20:89. நிச்சயமாக-அவர்களுடைய எந்தப்பேச்சுக்கும் அவர்களின்பால் அ(க்காளை மாடான)து (பதில் கூற) திரும்பாமல் இருப்பதையும், அவர்களுக்கு தீமையோ, நன்மையோ செய்யச் சக்தி பெறாமல் இருப்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?
20:90
20:90 وَلَـقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ يٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖ‌ۚ وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِىْ وَاَطِيْعُوْۤا اَمْرِىْ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக قَالَ கூறினார் لَهُمْ அவர்களுக்கு هٰرُوْنُ ஹாரூன் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் يٰقَوْمِ என் சமுதாயமே اِنَّمَا فُتِنْتُمْ நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள் بِهٖ‌ۚ இதைக் கொண்டு وَاِنَّ நிச்சயமாக رَبَّكُمُ உங்கள் இறைவன் الرَّحْمٰنُ பேரருளாளன் தான் فَاتَّبِعُوْنِىْ ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள் وَاَطِيْعُوْۤا கீழ்ப்படியுங்கள் اَمْرِىْ‏ என் கட்டளைக்கு
20:90. இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.
20:90. இதற்கு முன்னதாகவே ஹாரூன் அவர்களை நோக்கி ‘‘என் மக்களே! (இச்சிலையை வணங்கி) இதன் மூலம் நீங்கள் வழி தவறிவிட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் (அல்லாஹ்வாகிய) ரஹ்மான்தான். (இச்சிலை அல்ல!) என்னைப் பின்பற்றுங்கள்; என் கட்டளைக்கு கட்டுப்படுங்கள்'' என்று கூறினார்.
20:90. (மூஸா வருவதற்கு) முன்னரே அவர்களிடம் ஹாரூன் கூறியிருந்தார்: “என் சமூகத்தினரே! இக்காளைக் கன்றின் காரணமாக நீங்கள் குழப்பத்தில் வீழ்ந்துவிட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக ரஹ்மான் கருணை மிக்க இறைவன்தான் உங்கள் அதிபதி ஆவான். எனவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் சொல்வதை நம்புங்கள்.”
20:90. இன்னும், (இதற்கு) முன்னதாகவே ஹாரூன் அவர்களிடம், “என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் சோதனைக்குள்ளாக்கப் பட்டதெல்லாம் இதைக் கொண்டுதான், நிச்சயமாக உங்கள் இரட்சகன் அர்ரஹ்மான்தான் (இதுவல்ல) ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள், என்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள் என திட்டமாகக் கூறியிருந்தார்.
20:91
20:91 قَالُوْا لَنْ نَّبْرَحَ عَلَيْهِ عٰكِفِيْنَ حَتّٰى يَرْجِعَ اِلَيْنَا مُوْسٰى‏
قَالُوْا அவர்கள் கூறினர் لَنْ نَّبْرَحَ நாங்கள் நீடித்திருப்போம் عَلَيْهِ இதை عٰكِفِيْنَ வணங்கியவர்களாகவே حَتّٰى يَرْجِعَ திரும்புகின்ற வரை اِلَيْنَا எங்களிடம் مُوْسٰى‏ மூஸா
20:91. “மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.
20:91. அதற்கவர்கள் ‘‘மூஸா நம்மிடம் திரும்ப வரும்வரை இதன் ஆராதனையை நாங்கள் விடமாட்டோம்'' என்று கூறிவிட்டார்கள்.
20:91. ஆயினும் அவர்கள், “மூஸா எங்களிடம் திரும்பி வரும்வரை நாங்கள் இதனை வழிபட்டுக்கொண்டே இருப்போம்” என்று (அவரிடம்) கூறிவிட்டார்கள்.
20:91. அ(தற்க)வர்கள் “மூஸா எங்கள் பால் திரும்பி வரும்வரையில் இதன் (வணக்கத்தின்) மீதே நிலைத்தவர்களாக நீங்காது இருப்போம்” என்று கூறி விட்டார்கள்.
20:92
20:92 قَالَ يٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَيْتَهُمْ ضَلُّوْٓا ۙ‏
قَالَ கூறினார் يٰهٰرُوْنُ ஹாரூனே مَا எது مَنَعَكَ உம்மை தடுத்தது اِذْ رَاَيْتَهُمْ நீர் அவர்களைப் பார்த்தபோது ضَلُّوْٓا ۙ‏ அவர்கள் வழிதவறி விட்டார்கள்
20:92. (மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.
20:92. (மூஸா அவர்களிடம் வந்தபின், ஹாரூனை நோக்கி) ‘‘ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் (என்னை நீர் பின்பற்றி நடக்க) உம்மைத் தடை செய்தது எது?
20:92. மூஸா (தம் சமூகத்தினரைக் கண்டித்துவிட்டு ஹாரூனை நோக்கி) “ஹாரூனே! அவர்கள் வழிதவறிச் சென்று கொண்டிருந்ததை நீர் பார்த்தபோது, என் வழிமுறைப்படி செயல் படுவதிலிருந்து உம்மைத் தடுத்தது எது?
20:92. (மூஸா, ஹாரூனிடம்) “ஹாரூனே! இவர்கள் வழிகெட்டு விட்டார்கள் என்பதை நீர் கண்டபோது (அதை மறுக்காமலிருக்க) எது உம்மைத் தடுத்தது? எனக் கேட்டார்.
20:93
20:93 اَلَّا تَتَّبِعَنِ‌ؕ اَفَعَصَيْتَ اَمْرِىْ‏
اَلَّا تَتَّبِعَنِ‌ؕ நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா اَفَعَصَيْتَ மாறு செய்துவிட்டீரா اَمْرِىْ‏ எனது கட்டளைக்கு
20:93. “நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?”
20:93. நீர் என்னைப் பின்பற்றி நடந்திருக்க வேண்டாமா? நீர் என் கட்டளைக்குமாறு செய்ய கருதினீரா?'' (என்று கூறி அவருடைய தாடியையும் தலை முடியையும் பிடித்து இழுத்தார்.)
20:93. நீர் என் கட்டளைக்கு ஏன் மாறு செய்துவிட்டீர்?” என்று கேட்டார்.
20:93. “நீர் என்னைப் பின்பற்றுவதிலிருந்து (உம்மைத் தடுத்தது எது?) என் கட்டளைக்கு மாறு செய்தீரா? (என்று கேட்டார்).
20:94
20:94 قَالَ يَابْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْيَتِىْ وَلَا بِرَاْسِىْ‌ۚ اِنِّىْ خَشِيْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَيْنَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِىْ‏
قَالَ அவர் கூறினார் يَابْنَؤُمَّ என் தாயின் மகனே لَا تَاْخُذْ பிடிக்காதே بِلِحْيَتِىْ எனது தாடியையும் وَلَا بِرَاْسِىْ‌ۚ என் தலையையும் اِنِّىْ خَشِيْتُ நிச்சயமாக நான் பயந்தேன் اَنْ تَقُوْلَ நீர் கூறிவிடுவதை فَرَّقْتَ பிரித்து விட்டாய் بَيْنَ மத்தியில் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களுக்கு وَلَمْ تَرْقُبْ நீர் கவனிக்காமல் قَوْلِىْ‏ என் கூற்றை
20:94. (இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.
20:94. அதற்கவர் ‘‘என் தாய் மகனே! என் தலையையும் என் தாடியையும் பிடி(த்திழு)க்காதீர். (நான் அச்சமயமே அவர்களை விட்டு விலகி இருந்தால்) ‘‘இஸ்ராயீலின் சந்ததிகளுக் கிடையில் நீ பிரிவினையை ஏற்படுத்தி விட்டாய். என் வார்த்தைகளை நீ கவனிக்கவில்லை என்று என்னை நீர் கடுகடுப்பீர் என நிச்சயமாக நான் பயந்(துதான் அவர்களுடன் இருந்)தேன்'' எனக் கூறினார்.
20:94. அதற்கு ஹாரூன் பதிலளித்தார்: “என் தாயின் மகனே! என் தாடியைப் பிடிக்காதீர்; என் தலைமுடியை இழுக்காதீர்; ‘இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடையே நீ பிரிவினை ஏற்படுத்திவிட்டாய்; மேலும், என்னுடைய சொல்லுக்காக காத்திருக்கவும் இல்லை’ என்று நீர் கூறிவிடுவீரோ என நான் அஞ்சினேன்.”
20:94. அ(தற்க)வர் “என் தாயின் மகனே! என்னுடைய தாடியையும், என்னுடைய தலையையும் பிடி(த்திழு)க்காதீர், இஸ்ராயீலின் மக்களுக்கிடையில், நீர் பிரிவினையை உண்டுபண்ணிவிட்டீர், என்னுடைய வார்த்தைக்காக நீர் காத்திருக்கவில்லை என்று நீர் கூறுவீர் என்பதை நிச்சயமாக நான் பயந்தேன்” என்று கூறினார்.
20:95
20:95 قَالَ فَمَا خَطْبُكَ يٰسَامِرِىُّ‏
قَالَ கூறினார் فَمَا خَطْبُكَ உன் விஷயம் என்ன يٰسَامِرِىُّ‏ ஸாமிரியே
20:95. “ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?” என்று மூஸா அவனிடம் கேட்டார்.
20:95. (பின்னர் மூஸா ஸாமிரீயை நோக்கி) ‘‘ஸாமிரீயே! உன் விஷயமென்ன? (ஏன் இவ்வாறு செய்தாய்?)'' என்று கேட்டார்.
20:95. மூஸா கேட்டார்: “ஸாமிரியே! உன் விவகாரமென்ன?”
20:95. (பின்னர், மூஸா) “சாமிரீயே! உன் விஷயமென்ன? எனக் கேட்டார்.
20:96
20:96 قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَـبْصُرُوْا بِهٖ فَقَبَـضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِىْ نَفْسِى‏
قَالَ அவன் கூறினான் بَصُرْتُ நான் பார்த்தேன் بِمَا لَمْ يَـبْصُرُوْا எதை/அவர்கள் பார்க்கவில்லை بِهٖ அதை فَقَبَـضْتُ ஆகவே, எடுத்தேன் قَبْضَةً ஒரு பிடி مِّنْ اَثَرِ காலடி சுவடிலிருந்து الرَّسُوْلِ தூதரின் فَنَبَذْتُهَا இன்னும் அதை எறிந்தேன் وَكَذٰلِكَ இப்படித்தான் سَوَّلَتْ அலங்கரித்தது لِىْ எனக்கு نَفْسِى‏ என் மனம்
20:96. “அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.
20:96. அதற்கவன் ‘‘அவர்கள் பார்க்காத ஒன்றை நான் பார்த்தேன். (வானவத்) தூதர் காலடி மண்ணில் ஒரு பிடியை எடுத்து (பசுவின்) சிலையில் எறிந்தேன். (அது சப்தமிட்டது.) இவ்வாறு (செய்யும் படியாக) என் மனமே என்னைத் தூண்டியது'' என்று கூறினான்.
20:96. அதற்கு அவன், “இவர்களுக்குத் தென்படாத ஒன்றை நான் கண்டேன்; தூதரின் காலடியிலிருந்து நான் ஒரு பிடி மண்ணை எடுத்து அதனை எறிந்தேன்; இவ்வாறு செய்யும்படியே என் மனம் என்னைத் தூண்டியது.”
20:96. அ(தற்க)வன், “அவர்கள் பார்க்காத (வியப்பான) ஒன்றை நான் பார்த்தேன், தூதருடைய (அடிச்) சுவட்டிலிருந்து ஒரு பிடி (மண்) பிடித்து அதில் எறிந்தேன் இவ்வாறு (செய்யுமாறு) என் மனம் என்னைத் தூண்டிற்று” என்று கூறினான்.
20:97
20:97 قَالَ فَاذْهَبْ فَاِنَّ لَـكَ فِى الْحَيٰوةِ اَنْ تَقُوْلَ لَا مِسَاسَ‌ وَاِنَّ لَـكَ مَوْعِدًا لَّنْ تُخْلَفَهٗ‌ ۚ وَانْظُرْ اِلٰٓى اِلٰهِكَ الَّذِىْ ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا‌ ؕ لَّـنُحَرِّقَنَّهٗ ثُمَّ لَـنَنْسِفَنَّهٗ فِى الْيَمِّ نَسْفًا‏
قَالَ அவர் கூறினார் فَاذْهَبْ நீ சென்று விடு فَاِنَّ لَـكَ நிச்சயமாக உனக்கு فِى الْحَيٰوةِ இவ்வாழ்க்கையில் اَنْ تَقُوْلَ என்று சொல்வதுதான் لَا مِسَاسَ‌ தொடாதீர் وَاِنَّ لَـكَ இன்னும் உமக்கு உண்டு مَوْعِدًا ஒரு குறிப்பிட்ட நேரம் لَّنْ تُخْلَفَهٗ‌ ۚ அதை நீ தவறவிடமாட்டாய் وَانْظُرْ இன்னும் பார் اِلٰٓى اِلٰهِكَ உனது தெய்வத்தை الَّذِىْ எது ظَلْتَ இருந்தாய் عَلَيْهِ அதனை عَاكِفًا‌ ؕ வணங்கியவனாக لَّـنُحَرِّقَنَّهٗ நிச்சயமாக நாம் அதை எறிந்து விடுவோம் ثُمَّ பிறகு لَـنَنْسِفَنَّهٗ அதை பரப்பிவிடுவோம் فِى الْيَمِّ கடலில் نَسْفًا‏ பரப்பப்பட்டதாக
20:97. “நீ இங்கிருந்து போய் விடு; நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) “தீண்டாதீர்கள்” என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு; அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்: நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த “நாயனைப்” பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்” என்றார்.
20:97. அதற்கு மூஸா (அவனை நோக்கி ‘‘இங்கிருந்து) அப்புறப்பட்டுவிடு. நிச்சயமாக நீ (எவரைக் கண்டபோதிலும்) ‘‘என்னைத் தீண்டாதீர்கள்'' என்று கூறித்திரிவதுதான் இவ்வுலகத்தில் உனக்குரிய தண்டனை. (மறுமையிலோ) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட கொடிய வேதனையுண்டு. நீ அதிலிருந்து தப்பவே மாட்டாய். இதோ! நீ ஆராதனை செய்து கொண்டிருந்த தெய்வத்தைப் பார். நிச்சயமாக நான் அதை உருக்கி(ப் பஸ்பமாக்கி) கடலில் தூற்றி விடுவேன்'' என்றும் கூறினார்.
20:97. அதற்கு மூஸா கூறினார்: “சரி, நீ போய்விடு, வாழ்நாள் முழுவதும் ‘என்னைத் தொடவேண்டாம்’ என்றே நீ கூறிக்கொண்டிருப்பாய். மேலும், உனக்காக விசாரணை நேரம் ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது உன்னைவிட்டு ஒருபோதும் நீங்கிவிடாது. இன்னும் நீ ஆர்வத்துடன் வழிபட்டு வந்த உனது தெய்வத்தைப் பார். இப்போது நாம் அதனை எரித்து விடுவோம். பிறகு, அதனைச் சாம்பலாக்கிக் கடலில் வீசி விடுவோம்.
20:97. (அதற்கு) மூஸா (“இங்கிருந்து) நீ சென்று விடு, நிச்சயமாக நீ (யாரைப்பார்த்தாலும்) என்னைத் தீண்டாதீர் என்று கூறுவதுதான், இவ்வுலக வாழ்க்கையில் உனக்குரியது, (மறுமையிலோ,) நிச்சயமாக உனக்கு ஒரு தவணையும் உண்டு, அதில் நீ மாற்றம் செய்யப்பட மாட்டாய்,” (அதிலிருந்து நீ தப்பிவிட மாட்டாய்.) மேலும், (வணக்கம் செலுத்துவது கொண்டு) எதன் மீது நீ நிலையானவனாக இருந்தாயோ அத்தகைய உனது (வணக்கத்திற்குரிய) தெய்வத்தைப்பார், நிச்சயமாக நாம் அதனை நெருப்பிலிட்டு எரிப்போம், பின்னர், திண்ணமாகக் கடலில் அதை முற்றிலுமாகத் தூவி விடுவோம்” என்று கூறினார்.
20:98
20:98 اِنَّمَاۤ اِلٰهُكُمُ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰـهَ اِلَّا هُوَ‌ؕ وَسِعَ كُلَّ شَىْءٍ عِلْمًا‏
اِنَّمَاۤ اِلٰهُكُمُ நிச்சயமாக உங்கள் (வணக்கத்திற்குரிய) இறைவன் اللّٰهُ அல்லாஹ்தான் الَّذِىْ அவன் لَاۤ அறவே இல்லை اِلٰـهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ‌ؕ அவனை وَسِعَ அவன் விசாலமாகி இருக்கின்றான் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் عِلْمًا‏ அறிவால்
20:98. “உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.
20:98. உங்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறொருவன் இல்லை. அவன் அனைத்தையும் அறியக்கூடிய விசாலமான கல்வி ஞானமுடையவன்'' (என்றும் கூறினார்).
20:98. (மக்களே!) உங்கள் இறைவன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனுடைய அறிவு அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.”
20:98. “உங்கள் (வணக்கத்திற்குரிய) நாயன் அல்லாஹ் (ஒருவன்) தான், அவன் எத்தகையவனென்றால் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு எவரும்) இல்லை, அவன் ஒவ்வொரு பொருளையும் (தன்) அறிவால் விசாலமாக (அறிந்து) வைத்துள்ளான்” (என்றும் மூஸா) கூறினார்.
20:99
20:99 كَذٰلِكَ نَقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَآءِ مَا قَدْ سَبَقَ‌ ۚ وَقَدْ اٰتَيْنٰكَ مِنْ لَّدُنَّا ذِكْرًا ‌ ۖ‌ ۚ‏
كَذٰلِكَ இவ்வாறு نَقُصُّ நாம் விவரிக்கிறோம் عَلَيْكَ உமக்கு مِنْ اَنْۢبَآءِ செய்திகளை مَا قَدْ سَبَقَ‌ ۚ முன் சென்றுவிட்டவர்களின் وَقَدْ திட்டமாக اٰتَيْنٰكَ உமக்கு கொடுத்தோம் مِنْ لَّدُنَّا நம் புறத்திலிருந்து ذِكْرًا ۖ‌ ۚ‏ ஒரு நல்லுரையை
20:99. (நபியே!) இவ்வாறே முன் சென்று போனவர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; மேலும் திட்டமாக நம்மிடமிருந்து நினைவூட்டும் நல்லுபதேசத்தை (இத்திருக் குர்ஆனை) நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம்.
20:99. (நபியே!) இவ்வாறே உமக்கு முன்னர் சென்றுபோனவர்களின் சரித்திரத்தை (மேலும்) நாம் உமக்குக் கூறுவோம். நம்மிடமிருந்து நல்லுபதேசத்தை(உடைய இவ்வேதத்தை) நிச்சயமாக நாம்தான் உமக்கு அளித்தோம்.
20:99. (நபியே!) இவ்வாறே கடந்தகால நிகழ்ச்சிகளை நாம் உமக்கு எடுத்துச் சொல்கின்றோம். மேலும் நம் சார்பிலிருந்து தனிப்பட்ட ஒரு ஞானத்தை உமக்கு நாம் வழங்கியுள்ளோம்.
20:99. (நபியே!) இவ்வாறே (உமக்கு) முன்னர் சென்று போனவர்களின் செய்திகளை நாம் உமக்குக் கூறுவோம், நம்மிடமிருந்து (இவ்வேதமாகிய) நல்லுபதேசத்தை நிச்சயமாக நாம் உமக்குக் கொடுத்திருக்கிறோம்.
20:100
20:100 مَنْ اَعْرَضَ عَنْهُ فَاِنَّهٗ يَحْمِلُ يَوْمَ الْقِيٰمَةِ وِزْرًا ۙ‏
مَنْ யார் اَعْرَضَ புறக்கணித்தாரோ عَنْهُ அதை فَاِنَّهٗ நிச்சயமாக அவர் يَحْمِلُ அவர் சுமப்பார் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் وِزْرًا ۙ‏ பாவத்தை
20:100. எவன் அதனைப் புறக்கணிக்கின்றானோ, அவன் கியாம நாளில் (பாவச்) சுமையைச் சுமப்பான்.
20:100. எவன் இதை (நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக்கிறானோ அவன் மறுமை நாளில் நிச்சயமாக(ப் பெரியதொரு) பாவத்தையே சுமப்பான்.
20:100. யாரேனும் அதனைப் புறக்கணிப்பாராயின் அவர் மறுமைநாளில் கடுமையான பாவச் சுமையைச் சுமப்பார்.
20:100. எவர் அதனைப் புறக்கணிக்கின்றாரோ, நிச்சயமாக அவர், மறுமை நாளில் (பெரியதொரு) பாவத்தை (அதற்குரிய தண்டனையையே) சுமப்பார்.
20:101
20:101 خٰلِدِيْنَ فِيْهِ‌ ؕ وَسَآءَ لَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ حِمْلًا ۙ‏
خٰلِدِيْنَ அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் فِيْهِ‌ ؕ அதில் وَسَآءَ மிகக் கெட்டது لَهُمْ அவர்களுக்கு يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் حِمْلًاۙ‏ சுமையால்
20:101. அ(ப்படிச் சுமப்ப)வர்கள் அதில் எந்நாளும் (அதைச் சுமந்தவாறே) இருப்பார்கள்; கியாம நாளில் இச்சுமை அவர்களுக்கு மிகவும் கெட்டது.
20:101. அதில் அவன் எந்நாளும் (அதைச் சுமந்து கொண்டே) இருப்பான். மறுமை நாளில் அவர்கள் சுமக்கும் இச்சுமை மிகக் கெட்டது.
20:101. இத்தகையோர் அனைவரும் அந்தத் துன்பத்தில் என்றென்றும் கிடப்பார்கள்; மறுமைநாளில் இந்த(க் குற்றத்திற்குப் பொறுப்பேற்கும்) சுமை அவர்களுக்கு மிகக் கடுமையான சுமையாக இருக்கும்.
20:101. அ(ந்நரகத்)தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பவர்கள், மறுமைநாளில் சுமையால் அவர்களுக்கு அது மிகக் கெட்டது.
20:102
20:102 يَّوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ‌ وَنَحْشُرُ الْمُجْرِمِيْنَ يَوْمَٮِٕذٍ زُرْقًا‌ ۖ ‌ۚ‏
يَّوْمَ நாளில் يُنْفَخُ ஊதப்படும் فِى الصُّوْرِ‌ சூரில் وَنَحْشُرُ நாம் எழுப்புவோம் الْمُجْرِمِيْنَ பாவிகளை يَوْمَٮِٕذٍ அந்நாளில் زُرْقًا‌ ۖ ۚ‏ கண்கள் நீலமானவர்களாக
20:102. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாள் அது; குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம்.
20:102. எக்காளம் (சூர்) ஊதப்பட்டு குற்றவாளிகளை நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களுடைய கண்கள் (பயத்தினால்) நீலம் பூத்திருக்கும்.
20:102. எக்காளம் ஊதப்படும் நாளில், மேலும் (திகைப்பின் காரணத்தால்) கண்கள் நீலம் பூத்திருக்கும் நிலையில் குற்றவாளிகளை நாம் ஒன்று திரட்டுவோம்.
20:102. (ஸூர்) “குழல்” ஊதப்படும்நாளை (நினைவு கூர்வீராக!) குற்றவாளிகளை அந்நாளில், நீலம் பூத்த கண்களுடைய)வர்களாக (இழுத்துக்கொண்டு வந்து) ஒன்று திரட்டுவோம்.
20:103
20:103 يَّتَخَافَـتُوْنَ بَيْنَهُمْ اِنْ لَّبِثْتُمْ اِلَّا عَشْرًا‏
يَّتَخَافَـتُوْنَ அவர்கள் மெதுவாகப் பேசிக் கொள்வார்கள் بَيْنَهُمْ தங்களுக்கு மத்தியில் اِنْ لَّبِثْتُمْ நீங்கள் தங்கவில்லை اِلَّا தவிர عَشْرًا‏ பத்து நாட்களே
20:103. “நீங்கள் பத்து (நாட்களு)க்கு மேல் (பூமியில்) தங்கியதில்லை” என்று அவர்கள் தங்களுக்கிடையில் இரகசியம் பேசிக் கொள்வார்கள்.
20:103. அவர்கள் தங்களுக்குள் மெதுவாக(ப் பேசி) ‘‘நீங்கள் ஒரு பத்து (நாள்களு)க்கு அதிகமாக (உலகத்தில்) தங்கவில்லை'' (என்று கூறுவார்கள்).
20:103. அந்நாளில் அவர்கள் தமக்கிடையே மெதுவாகப் பேசிக் கொள்வார்கள்: “நீங்கள் (உலகில்) அதிகபட்சம் பத்து நாட்கள் தங்கியிருந்திருப்பீர்கள்”
20:103. நீங்கள் பத்து (நாட்கள்) தவிர (உலகில்) தங்கியிருக்கவில்லை என்று அவர்களுக்கு மத்தியில் இரகசியமாக பேசிக்கொள்வார்கள்.
20:104
20:104 نَحْنُ اَعْلَمُ بِمَا يَقُوْلُوْنَ اِذْ يَقُوْلُ اَمْثَلُهُمْ طَرِيْقَةً اِنْ لَّبِثْتُمْ اِلَّا يَوْمًا‏
نَحْنُ நாம் اَعْلَمُ நன்கறிந்தவர்கள் بِمَا يَقُوْلُوْنَ அவர்கள் பேசுவதை اِذْ يَقُوْلُ கூறும் போது اَمْثَلُهُمْ முழுமையானவர்/அவர்களில் طَرِيْقَةً அறிவால் اِنْ لَّبِثْتُمْ நீங்கள் தங்கவில்லை اِلَّا தவிர يَوْمًا‏ ஒரு நாளே
20:104. “ஒரு நாளேயன்றி (அதிகமாக) நீங்கள் தங்கவில்லை” என்று அவர்களில் நல்வழியில் சென்றவர்கள் கூறுவதையும் நாம் நன்கறிவோம்.
20:104. அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்களில் மிக்க ஞானமுள்ளவன் (என்று கருதப்படுபவன் அவர்களை நோக்கி) ‘‘ஒரு நாளே தவிர நீங்கள் (அதிகம்) தங்கவில்லை'' என்று கூறுவான்.
20:104. அவர்கள் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவ்வேளை அவர்களில் மிகமிகக் கவனமாக மதிப்பிடக்கூடியவர், “ஒரே நாள்தான் நீங்கள் (உலகில்) வாழ்ந்துள்ளீர்கள்” என்று கூறுவார் (என்பதையும் நாம் நன்கறிவோம்)
20:104. அவர்களில் நிறையறிவுடையவர்கள் (அவர்களிடம்) “ஒரு நாளேயன்றி நீங்கள் தங்கியிருக்கவில்லை” என்று கூறும் சமயத்தில், அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம்.
20:105
20:105 وَيَسْــٴَــلُوْنَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنْسِفُهَا رَبِّىْ نَسْفًا ۙ‏
وَيَسْــٴَــلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ الْجِبَالِ மலைகளைப் பற்றி فَقُلْ நீர் கூறுவீராக يَنْسِفُهَا அவற்றை தூளாக ஆக்கி விடுவான் رَبِّىْ என் இறைவன் نَسْفًا ۙ‏ தூள்
20:105. (நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப்பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என் இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல் பரப்பி)விடுவான்” என்று நீர் கூறுவீராக.
20:105. (நபியே!) உம்மிடம் அவர்கள் மலைகளைப் பற்றி (அதன் கதி உலக முடிவின்போது என்னவாகும் என)க் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘என் இறைவன் அவற்றைத் தூள் தூளாக்கி(ப் பரப்பி) விடுவான்.
20:105. மலைகள் (அன்றைய நாளில் எங்குச் சென்றுவிடும் என்பது) பற்றியும் அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறுவீராக: “என் இறைவன் அவற்றைத் தூள்தூளாக்கிப் பறக்க விட்டுவிடுவான்.
20:105. மேலும், நபியே!) உம்மிடம் அவர்கள் மலைகளைப் பற்றிக் கேட்கிறார்கள், (அதற்கு) நீர் கூறும், என் இரட்சகன் அவைகளைத் தூள் தூளாக்கிவிடுவான்.
20:106
20:106 فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا ۙ‏
فَيَذَرُهَا இன்னும் அவற்றை விட்டுவிடுவான் قَاعًا சமமான صَفْصَفًا ۙ‏ பூமியாக
20:106. “பின்பு, அவற்றைச் சமவெளியாக்கி விடுவான்.
20:106. பூமியை சமமான வெட்டவெளியாக்கி விடுவான்.
20:106. பூமியை அதில் யாதொரு மேடுபள்ளத்தையும் நீர் காணாத அளவுக்கு
20:106. (பின்னர்) அவற்றை (புற்பூண்டோ, கட்டிடங்களோ இல்லாத) சமவெளியாக்கி விட்டுவிடுவான்.
20:107
20:107 لَّا تَرٰى فِيْهَا عِوَجًا وَّلَاۤ اَمْتًا ؕ‏
لَّا تَرٰى நீர் காணமாட்டீர் فِيْهَا அவற்றில் عِوَجًا கோணலை وَّلَاۤ اَمْتًا ؕ‏ இன்னும் வளைவை
20:107. “அதில் நீர் மேடு பள்ளத்தை காணமாட்டீர்.”
20:107. அதில் ஒரு சிறிதும் மேடு பள்ளத்தை நீர் காணமாட்டீர்.
20:107. சமதளமாக்கிவிடுவான்.
20:107. அதில் பள்ளத்தையோ மேட்டையோ நீர் காண மாட்டீர்.
20:108
20:108 يَوْمَٮِٕذٍ يَّتَّبِعُوْنَ الدَّاعِىَ لَا عِوَجَ لَهٗ‌ؕ وَخَشَعَتِ الْاَصْوَاتُ لِلرَّحْمٰنِ فَلَا تَسْمَعُ اِلَّا هَمْسًا‏
يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّتَّبِعُوْنَ பின் தொடர்வார்கள் الدَّاعِىَ அழைப்பாளரை لَا عِوَجَ திரும்ப முடியாது لَهٗ‌ؕ அவரை விட்டு وَخَشَعَتِ இன்னும் அமைதியாகிவிடும் الْاَصْوَاتُ சப்தங்கள் எல்லாம் لِلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு முன் فَلَا تَسْمَعُ செவிமடுக்க மாட்டீர் اِلَّا தவிர هَمْسًا‏ மென்மையான சப்தத்தைத்
20:108. அந்நாளில் அவர்கள் (ஸூர் மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும் (அவ் வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச் சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர (வேறெதையும்) நீர் கேட்கமாட்டீர்.
20:108. அந்நாளில் (அனைவரும் எக்காளத்தின் மூலம்) அழைப்பவனின் சப்தத்தையே பின்பற்றிச் செல்வார்கள். அதில் தவறு ஏற்படாது. ரஹ்மானுக்குப் பயந்து எல்லாச் சப்தங்களும் தணிந்து விடும். (மெதுவான) காலடி சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) நீர் கேட்கமாட்டீர்.
20:108. அந்நாளில் மக்கள் அனைவரும் அழைப்பாளரின் அழைப்பைக் கேட்டு நேராக நடந்து வருவார்கள். யாரும் சிறிதளவும் முரண்டு பிடிக்க முடியாது. மேலும், கருணைமிக்க இறைவனின் முன்னிலையில் குரல்களெல்லாம் அடங்கி ஒடுங்கி விடும். இலேசான முணுமுணுப்பைத் தவிர வேறு எதையும் நீர் கேட்கமாட்டீர்.
20:108. அந்நாளில் (ஸூர் ஊதுகின்ற) அழைப்பாளரையே பின்பற்றிச் செல்வார்கள்; அதில் எவ்விதக் கோணலும் (மறுப்பும்) இருக்காது; சப்தங்கள் (அனைத்தும்) அர்ரஹ்மானுக்குப் பணிந்து (அடங்கி)விடும்; ஆகவே, (மெதுவான) காலடிச் சப்தத்தைத் தவிர (வேறெதனையும்) நீர் கேட்கமாட்டீர்.
20:109
20:109 يَوْمَٮِٕذٍ لَّا تَنْفَعُ الشَّفَاعَةُ اِلَّا مَنْ اَذِنَ لَـهُ الرَّحْمٰنُ وَرَضِىَ لَـهٗ قَوْلًا‏
يَوْمَٮِٕذٍ அந்நாளில் لَّا تَنْفَعُ பலனளிக்காது الشَّفَاعَةُ பரிந்துரை اِلَّا தவிர مَنْ எவர் اَذِنَ அனுமதித்தான் لَـهُ எவருக்கு الرَّحْمٰنُ பேரருளாளன் وَرَضِىَ இன்னும் அவன் விரும்பினான் لَـهٗ அவருடைய قَوْلًا‏ பேச்சை
20:109. அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.
20:109. அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதி அளித்து அவரின் பேச்சைக் கேட்க அவன் விரும்பினானோ அவரைத்தவிர மற்ற எவருடைய சிபாரிசும் பயனளிக்காது.
20:109. அந்நாளில் எவருடைய பரிந்துரையும் பலனளிக்காது, கருணைமிக்க இறைவன் எவருக்கு அனுமதியளிப்பானோ எவருடைய பேச்சைக் கேட்க விரும்புவானோ அவருடைய பரிந்துரையைத் தவிர!
20:109. அந்நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி அளித்து, சொல்லால் அவருக்காக பொருந்திக் கொண்டானோ அவரைத் தவிர (மற்றெவருக்கும்) பரிந்துரை பயனளிக்காது.
20:110
20:110 يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيْطُوْنَ بِهٖ عِلْمًا‏
يَعْلَمُ அவன் நன்கறிவான் مَا بَيْنَ உள்ளதையும் اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன் وَمَا خَلْفَهُمْ இன்னும் அவர்களுக்குப் பின் وَلَا يُحِيْطُوْنَ அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள் بِهٖ அவனை عِلْمًا‏ அறிவால்
20:110. அவர்களுக்கு முன்னிருப்பதையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன் நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்) கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.
20:110. அவர்களுக்கு முன்னுள்ளதையும் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான். எனினும், அவர்கள் அவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.
20:110. அவன், மக்களின் முந்தைய பிந்தைய நிலைமைகள் அனைத்தையும் நன்கறிகின்றான். ஆனால், மற்றவர்களுக்கோ அவனைப் பற்றிய முழுமையான ஞானம் இல்லை.
20:110. அவர்களுக்கு முன்னுள்ளதையும், அவர்களுக்குப் பின்னுள்ளதையும் அவன் நன்கறிவான், அவர்கள் அவனை(த் தங்கள்) கல்வியால் தீர அறிந்து கொள்ள மாட்டார்கள்.
20:111
20:111 وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَىِّ الْقَيُّوْمِ‌ؕ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا‏
وَعَنَتِ பணிந்து விட்டன الْوُجُوْهُ முகங்கள் لِلْحَىِّ என்றும் உயிருள்ளவன் الْقَيُّوْمِ‌ؕ என்றும் நிலையானவன் وَقَدْ திட்டமாக خَابَ நஷ்டமடைந்தான் مَنْ حَمَلَ சுமந்தவன் ظُلْمًا‏ அநியாயத்தை
20:111. இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.
20:111. (அந்நாளில்) நிரந்தரமானவன், நிலையானவன் (அல்லாஹ்வின்) முன், அனைவருடைய (தலைகளும்) முகங்களும் குனிந்துவிடும். எவன் அநியாயத்தைச் சுமந்து கொண்டானோ அவன் நஷ்டம் அடைந்தே தீருவான்.
20:111. நித்திய ஜீவனும் (பேரண்டம் முழுவதையும்) நன்கு நிர்வகிப்பவனுமாகிய இறைவன் முன்னிலையில் மக்களின் தலைகள் பணிந்துவிடும். (அன்று) அக்கிரமத்தின் பாவச் சுமையைச் சுமந்து கொண்டவன் தோல்வி அடைந்தவன் ஆவான்.
20:111. (அந்நாளில் அல்லாஹ்வான) நிலையானவனாகிய நித்திய ஜீவனுக்கு (முன்) யாவருடைய முகங்களும் கவிழ்ந்துவிடும், எவன் (இணையாக்குதல் என்னும்) அநியாயத்தைச் சுமந்து கொண்டானோ அவன் திட்டமாக நஷ்டமடைந்து விட்டான்.
20:112
20:112 وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخٰفُ ظُلْمًا وَّلَا هَضْمًا‏
وَمَنْ யார் يَّعْمَلْ செய்வாரோ مِنَ الصّٰلِحٰتِ நன்மைகளை وَهُوَ அவரோ இருக்க مُؤْمِنٌ நம்பிக்கையாளராக فَلَا يَخٰفُ பயப்பட மாட்டார் ظُلْمًا அநியாயத்தை وَّلَا هَضْمًا‏ இன்னும் நன்மைகள் குறைக்கப்படுவதை
20:112. எவர் முஃமினாக இருந்து, ஸாலிஹான- நற்செயல்களைச் செய்கிறாரோ அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ, (தமக்குரிய) நற்கூலி குறைந்துவிடுமென்றோ பயப்படமாட்டார்கள்.
20:112. எவர் நம்பிக்கை கொண்டவராக இருந்து நற்செயல்களைச் செய்கிறாரோ அவர், (தன் நற்கூலி) அழிந்து விடுமென்றோ குறைந்து விடுமென்றோ பயப்படமாட்டார்.
20:112. ஆனால், எவர் நம்பிக்கையாளராயிருந்து நற்செயல்கள் புரிகின்றாரோ (அவருக்கு அநீதி மற்றும் உரிமைப் பறிப்பு பற்றிய எந்த அச்சமும் இருக்காது.)
20:112. எவர் விசுவாசங்கொண்ட நிலையில், நற்கருமங்களையும் செய்கிறாரோ அவர், (தனக்கு) அநீதத்தையோ, (தன் செயல்களுக்குரிய நற்கூலியில்) குறைவையோ பயப்படமாட்டார்.
20:113
20:113 وَكَذٰلِكَ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِيًّا وَّ صَرَّفْنَا فِيْهِ مِنَ الْوَعِيْدِ لَعَلَّهُمْ يَتَّقُوْنَ اَوْ يُحْدِثُ لَهُمْ ذِكْرًا‏
وَكَذٰلِكَ இவ்வாறே اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் قُرْاٰنًا குர்ஆனாக عَرَبِيًّا அரபி மொழியிலான وَّ صَرَّفْنَا فِيْهِ நாம் விவரித்து இருக்கிறோம்/அதில் مِنَ الْوَعِيْدِ எச்சரிக்கையை பலவாறாக لَعَلَّهُمْ يَتَّقُوْنَ அவர்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக اَوْ அல்லது يُحْدِثُ அது ஏற்படுத்துவதற்காக لَهُمْ அவர்களுக்கு ذِكْرًا‏ ஓர் அறிவுரையை
20:113. மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்.
20:113. இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம். இது அவர்களுக்கு நல்லுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் அவர்கள் (பாவத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காகவும் இதில் (நாம் நம் வேதனையைப் பற்றி) எச்சரிக்கைகளை விவரித்தோம்.
20:113. (நபியே!) இது போன்றே நாம் இதனை அரபி மொழியிலுள்ள குர்ஆனாக இறக்கியருளியுள்ளோம். மேலும், இதில் விதவிதமான எச்சரிக்கைகளும் கொடுத்துள்ளோம். இதன் மூலம் இவர்கள் (தவறான நடத்தையை) தவிர்த்துக் கொள்ளக்கூடும் அல்லது இது இவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும்.
20:113. இவ்வாறே, இதனை அரபி மொழியிலான குர் ஆனாக நாம் இறக்கி வைத்தோம், அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆவதற்காக, அல்லது இது அவர்களுக்கு நல்லுபதேசத்தை உண்டாக்குவதற்காக இதில் நாம் (நம்முடைய வேதனையைப் பற்றி) அவர்களுக்கு எச்சரிக்கையை (பலவாறாக) திரும்பத்திரும்ப விவரித்திருக்கிறோம்.
20:114
20:114 فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ‌ ۚ وَلَا تَعْجَلْ بِالْقُرْاٰنِ مِنْ قَبْلِ اَنْ يُّقْضٰٓى اِلَيْكَ وَحْيُهٗ‌ وَقُلْ رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏
فَتَعٰلَى மிக உயர்ந்தவன் اللّٰهُ அல்லாஹ் الْمَلِكُ அரசனாகிய الْحَـقُّ‌ ۚ உண்மையாளனாகிய وَلَا تَعْجَلْ அவசரப்படாதீர் بِالْقُرْاٰنِ குர்ஆனில் مِنْ قَبْلِ முன்னர் اَنْ يُّقْضٰٓى முழுமையாக அறிவிக்கப்படுவதற்கு اِلَيْكَ உமக்கு وَحْيُهٗ‌ அதனுடைய வஹீ وَقُلْ இன்னும் கூறுவீராக رَّبِّ என் இறைவா زِدْنِىْ எனக்குஅதிகப்படுத்து عِلْمًا‏ ஞானத்தை
20:114. ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!” என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக!
20:114. உண்மையான அரசனாகிய அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனைப் பற்றி உமக்கு வஹ்யி அறிவித்து முடிவதற்கு முன்னதாகவே (அதை ஓத) நீர் அவசரப்படாதீர். ‘‘என் இறைவனே! என் கல்வி ஞானத்தை மேலும் அதிகப்படுத்து'' என்று நீர் பிரார்த்தனை செய்வீராக.
20:114. அல்லாஹ் மிக உயர்ந்தவன் உண்மையான அரசன். மேலும் (பாரும்) குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; அதனுடைய வஹி முழுமையாக உமக்கு நிறைவு பெறுவதற்கு முன்பே! “என் இறைவனே எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக!” என்றும் இறைஞ்சுவீராக!
20:114. எனவே உண்மையான அரசனாகிய அல்லாஹ் (இணை வைப்பவர்களின் இணைவைப்பிபிலிருந்து) உயர்ந்துவிட்டான், (நபியே!) குர் ஆனைக்கொண்டு – அதனுடைய அறிவிப்பு உம்மளவில் முடிக்கப்படுவதற்கு முன்னதாக (அதனை ஓத) நீர் அவசரப்படவேண்டாம், “இன்னும், என் இரட்சகனே! எனக்கு அறிவை அதிகப்படுத்துவாயாக” என்று நீர் (பிரார்த்தனை செய்து) கூறுவீராக!
20:115
20:115 وَلَـقَدْ عَهِدْنَاۤ اِلٰٓى اٰدَمَ مِنْ قَبْلُ فَنَسِىَ وَلَمْ نَجِدْ لَهٗ عَزْمًا‏
وَلَـقَدْ عَهِدْنَاۤ திட்டவட்டமாக நாம் கட்டளையிட்டோம் اِلٰٓى اٰدَمَ ஆதமுக்கு مِنْ قَبْلُ இதற்கு முன்னர் فَنَسِىَ மறந்து விட்டார் وَلَمْ نَجِدْ நாம் காணவில்லை لَهٗ அவரிடம் عَزْمًا‏ உறுதியை
20:115. முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார்; (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை.
20:115. இதற்கு முன்னர் ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம். எனினும், (அதை) அவர் மறந்துவிட்டார். ஆனால், (மனமுரண்டாக அதற்கு மாறு செய்யும்) உறுதியான எண்ணத்தை நாம் அவரிடம் காணவில்லை.
20:115. நாம் முன்னர் ஆதத்துக்கு ஒரு கட்டளை பிறப்பித்திருந்தோம். ஆயினும் அவர் அதனை மறந்துவிட்டார். மேலும், நாம் அவரிடத்தில் மன உறுதியைக் காணவில்லை.
20:115. மேலும், இதற்கு முன்னர், ஆதமிடம் நிச்சயமாக நாம் வாக்குறுதி வாங்கியிருந்தோம், பின்னர், (அதனை) அவர் மறந்து விட்டார், மேலும், (அதன்படி நடக்கும்) உறுதியை நாம் அவரிடம் காணவில்லை.
20:116
20:116 وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ اَبٰى‏
وَاِذْ சமயத்தை قُلْنَا நாம் கூறிய لِلْمَلٰٓٮِٕكَةِ வானவர்களுக்கு اسْجُدُوْا நீங்கள் சிரம் தாழ்த்துங்கள் لِاٰدَمَ ஆதமுக்கு فَسَجَدُوْۤا அவர்கள் சிரம் தாழ்த்தினர் اِلَّاۤ اِبْلِيْسَؕ இப்லீஸைத் தவிர اَبٰى‏ மறுத்து விட்டான்
20:116. “நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான்.
20:116. வானவர்களை நோக்கி ‘‘நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்'' என்று கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (அவர்கள் அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் (சிரம் பணியாது) விலகிக் கொண்டான்.
20:116. ‘ஆதத்துக்குச் சிரம்பணியுங்கள்’ என்று வானவர்களுக்கு நாம் கூறியதை நினைவுகூருங்கள். அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள், இப்லீஸைத் தவிர! அவன் மட்டும் மறுத்துவிட்டான்.
20:116. மேலும், மலக்குகளிடம் நீங்கள் ஆதமுக்குச் சிரம் பணியுங்கள் என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் சிரம் பணிந்தார்கள், அவன் விலகிக் கொண்டான் (என்பதை நபியே! நீர் நினைவு கூர்வீராக)
20:117
20:117 فَقُلْنَا يٰۤاٰدَمُ اِنَّ هٰذَا عَدُوٌّ لَّكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَـنَّةِ فَتَشْقٰى‏
فَقُلْنَا ஆகவே நாம் கூறினோம் يٰۤاٰدَمُ ஆதமே اِنَّ நிச்சயமாக هٰذَا இவன் عَدُوٌّ எதிரி لَّكَ உமக்கு وَلِزَوْجِكَ இன்னும் உமது மனைவிக்கு فَلَا يُخْرِجَنَّكُمَا ஆகவே, அவன் உங்கள் இருவரையும் வெளியேற்றிவிட வேண்டாம் مِنَ الْجَـنَّةِ சொர்க்கத்திலிருந்து فَتَشْقٰى‏ நீர்சிரமப்பட்டுவிடுவீர்
20:117. அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனானான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர்.
20:117. ஆதலால், (நாம் ஆதமை நோக்கி) ‘‘ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரியாவான். உங்கள் இருவரையும் இச்சோலையிலிருந்து அவன் வெளிப்படுத்தி விடவேண்டாம். (எச்சரிக்கையாக இருப்பீராக!) இன்றேல் நீர் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்'' என்று கூறினோம்.
20:117. அப்போது நாம் கூறினோம்: “ஆதமே! (பாருங்கள்) இவன் உமக்கும் உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான். இவன் உங்களிருவரையும் சுவனத்திலிருந்து வெளியேற்றிவிடக்கூடாது. மேலும், நீங்கள் துன்பத்தில் விழுந்து விடவும் கூடாது.
20:117. ஆதலால் (நாம் ஆதமிடம்) “ஆதமே! நிச்சயமாக இவன் உனக்கும் உம்முடைய மனைவிக்கும் விரோதியாவான், எனவே உங்களிருவரையும் இச்சுவனத்திலிருந்து (தன் சூழ்ச்சியால்) அவன் நிச்சயமாக வெளியேற்றிவிட வேண்டாம், அவ்வாறெனில், நீர் கஷ்டத்திற்குள்ளாகி விடுவீர்” என்று கூறினோம்.
20:118
20:118 اِنَّ لَـكَ اَلَّا تَجُوْعَ فِيْهَا وَلَا تَعْرٰىۙ‏
اِنَّ நிச்சயமாக لَـكَ உமக்கு اَلَّا تَجُوْعَ நீர் பசித்திருக்காத فِيْهَا அதில் وَلَا تَعْرٰىۙ‏ இன்னும் ஆடையற்றிருக்காத
20:118. “நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.
20:118. ‘‘நிச்சயமாக நீர் இதில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.
20:118. பசி தெரியாமலும் நிர்வாணமாகாமலும் இருக்க இங்கு உமக்கு வசதிகள் இருக்கின்றன.
20:118. நீர், பசியில்லாதிருப்பதும், நீர் நிர்வாணமாகாதிருப்பதும் இ(ச்சுவனத்)தில் நிச்சயமாக உமக்கு உண்டு.
20:119
20:119 وَاَنَّكَ لَا تَظْمَؤُا فِيْهَا وَلَا تَضْحٰى‏
وَاَنَّكَ இன்னும் நிச்சயமாக நீர் لَا تَظْمَؤُا فِيْهَا அதில்தர்கிக்கமாட்டீர் وَلَا تَضْحٰى‏ இன்னும் வெட்பத்தை உணர மாட்டீர்
20:119. “இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிலில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்).
20:119. நிச்சயமாக நீர் இதில் தாகிக்காமலும் வெயிலால் தாக்கப்படாமலும் இருப்பீர்'' (என்று கூறினான்).
20:119. மேலும், இங்கே தாகமும் வெப்பமும் உம்மை வாட்டாது.”
20:119. அன்றியும் இதில் நிச்சயமாக நீர் தாகிக்கவுமாட்டீர், வெயிலில் (கஷ்டப்படவுமாட்டீர்) என்று கூறினோம்.
20:120
20:120 فَوَسْوَسَ اِلَيْهِ الشَّيْطٰنُ قَالَ يٰۤاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلٰى‏
فَوَسْوَسَ ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான் اِلَيْهِ அவருக்கு الشَّيْطٰنُ ஷைத்தான் قَالَ கூறினான் يٰۤاٰدَمُ ஆதமே هَلْ اَدُلُّكَ நான் உமக்கு அறிவிக்கவா? عَلٰى شَجَرَةِ மரத்தையும் الْخُلْدِ நிரந்தரத்தின் وَمُلْكٍ ஆட்சியையும் لَّا يَبْلٰى‏ அழியாத
20:120. ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி: “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான்.
20:120. எனினும், ஷைத்தான் அவர்களுக்கு ஊசலாட்டத்தை உண்டுபண்ணி ‘‘ஆதமே! நிரந்தர வாழ்க்கைக்குரிய மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் நான் உமக்கு அறிவிக்கவா?'' என்று கூறினான்.
20:120. ஆயினும் ஷைத்தான் அவரைக் குழப்பினான். “ஆதமே! உமக்கு நிலையான வாழ்வையும் அழியாத அதிகாரத்தையும் தரக்கூடிய ஒரு மரத்தைக் காண்பிக்கவா?” என்று கேட்டான்
20:120. ஆனால் ஷைத்தான் அவருக்கு (அவர் மனதில்) ஊசாட்டத்தை உண்டாக்கி விட்டான், நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், முடிவில்லா அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? என்று கேட்டான்.
20:121
20:121 فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰ تُہُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ‌ وَعَصٰۤى اٰدَمُ رَبَّهٗ فَغَوٰى‌ۖ‏
فَاَكَلَا ஆக, அவ்விருவரும் சாப்பிட்டனர் مِنْهَا அதிலிருந்து فَبَدَتْ ஆகவே தெரியவந்தன لَهُمَا அவ்விருவருக்கும் سَوْاٰ تُہُمَا அவ்விருவரின் மறைவிடங்கள் وَطَفِقَا இன்னும் முற்பட்டனர் يَخْصِفٰنِ அவ்விருவரும் கட்டிக்கொள்வதற்கு عَلَيْهِمَا தங்கள் இருவர் மீது مِنْ وَّرَقِ இலைகளை الْجَـنَّةِ‌ சொர்க்கத்தின் وَعَصٰۤى இன்னும் மாறுசெய்தார் اٰدَمُ ஆதம் رَبَّهٗ தன் இறைவனுக்கு فَغَوٰى‌ۖ‏ ஆகவே வழி தவறி விட்டார்
20:121. பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்; உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின; ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார்.
20:121. ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானம் அவ்விருவருக்கும் வெளியாகவே, அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறுசெய்து வழி தவறிவிட்டார்.
20:121. இறுதியில் (கணவன்மனைவியாகிய) அவ்விருவரும் அம்மரத்தின் பழத்தைப் புசித்துவிட்டார்கள். உடனே, அவ்விருவரின் மர்மஸ்தலங்கள் பரஸ்பரம் வெளிப்பட்டு விட்டன. மேலும், இருவரும் சுவனத்தின் இலைகளால் தங்களை மறைத்துக் கொள்ளலாயினர். ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்தார். நேர்வழி தவறினார்.
20:121. (முடிவாக) அவ்விருவரும் அ(ம்மரத்)திலிருந்து புசித்து விட்டார்கள், உடனே (அவ்விருவரின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருந்த) அவ்விருவரின் மர்மஸ்தானங்களும் அவ்விருவருக்கும் வெளியாயின, அச்சுவனத்தின் இலைகளைக் கொண்டு, தங்களை மறைத்துக்கொள்ள அவ்விருவரும் முற்பட்டனர், ஆகவே, ஆதம் தன் இரட்சகனுக்கு மாறு செய்து விட்டார், எனவே, அவர் வழிதவறிவிட்டார்.
20:122
20:122 ثُمَّ اجْتَبٰهُ رَبُّهٗ فَتَابَ عَلَيْهِ وَهَدٰى‏
ثُمَّ பிறகு اجْتَبٰهُ அவரை தேர்ந்தெடுத்தான் رَبُّهٗ அவருடையஇறைவன் فَتَابَ மன்னித்தான் عَلَيْهِ அவரை وَهَدٰى‏ நேர்வழி காட்டினான்
20:122. பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான்.
20:122. பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங்களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் அவரை செலுத்தினான்.
20:122. பிறகு, அவருடைய இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்தான். மேலும் அவருடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவருக்கு நேர்வழி அருளினான்.
20:122. பின்னர், அவருடைய இரட்சகன் அவரைத் தேர்தெடுத்தான், அவருடைய தவ்பாவை (பாவமீட்சியை) ஏற்று (அவருக்கு) நல்வழியும் காட்டினான்.
20:123
20:123 قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيْعًا‌ۢ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ‌ ۚ فَاِمَّا يَاْتِيَنَّكُمْ مِّنِّىْ هُدًى ۙ فَمَنِ اتَّبَعَ هُدَاىَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقٰى‏
قَالَ கூறினான் اهْبِطَا நீங்கள் இறங்குங்கள் مِنْهَا இதிலிருந்து جَمِيْعًا‌ۢ அனைவரும் بَعْضُكُمْ உங்களில் சிலர் لِبَعْضٍ சிலருக்கு عَدُوٌّ‌ ۚ எதிரி فَاِمَّا يَاْتِيَنَّكُمْ உங்களுக்கு வந்தால் مِّنِّىْ என்னிடமிருந்து هُدًى ۙ நேர்வழியை فَمَنِ எவர் اتَّبَعَ பின்பற்றுவாரோ هُدَاىَ எனது நேர்வழியை فَلَا يَضِلُّ வழிதவற மாட்டார் وَلَا يَشْقٰى‏ இன்னும் சிரமப்பட மாட்டார்
20:123. “இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவே யிருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார்.
20:123. ‘‘நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள். அச்சமயம் நிச்சயமாக என் நேர்வழி உங்களிடம் வரும். எவர் என் நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார்.'' என்றும் கூறினான்.
20:123. மேலும், கூறினான்: நீங்கள் இருவரும் (மனிதனும், ஷைத்தானும்) இங்கிருந்து வெளியேறிவிடுங்கள், நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாயிருப்பீர்கள்; இனி, என்னிடமிருந்து ஏதேனும் வழிகாட்டல் உங்களுக்குக் கிடைத்தால், யார் என் வழிகாட்டலைப் பின்பற்றினாரோ அவர் வழிதவற மாட்டார்; துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகவும் மாட்டார்.
20:123. (அன்றி, அவ்விருவரிடம்) ”நீங்கள் இருவரும் இதிலிருந்து சேகரமாக இறங்கிவிடுங்கள், உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு விரோதிகளாவார்கள், நிச்சயமாக என்னிடமிருந்து நேர்வழி உங்களுக்கு வரும், ஆகவே, என்னுடைய நேர்வழியை எவர் பின்பற்றுகிறாரோ, அவர் வழி தவறமாட்டார், துர்பாக்கியவானாக ஆகவுமாட்டார்” என்று கூறினான்.
20:124
20:124 وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏
وَمَنْ எவன் اَعْرَضَ புறக்கணிப்பானோ عَنْ ذِكْرِىْ என் அறிவுரையை விட்டு فَاِنَّ நிச்சயமாக لَـهٗ அவனுக்கு مَعِيْشَةً வாழ்க்கைதான் ضَنْكًا நெருக்கடியான وَّنَحْشُرُهٗ இன்னும் அவனை நாம் எழுப்புவோம் يَوْمَ الْقِيٰمَةِ மறுமையில் اَعْمٰى‏ குருடனாக
20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
20:124. எவன் என் நல்லுபதேசங்களைப் புறக்கணிக்கிறானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடியானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.
20:124. எவன் என்னுடைய ‘திக்ரை’ (நல்லுரையைப்) புறக்கணிக்கின்றானோ அவனுக்கு (இவ்வுலகில்) கடினமான வாழ்க்கை இருக்கிறது. மேலும், மறுமை நாளில் அவனை நாம் குருடனாக எழுப்புவோம்”
20:124. மேலும், “எவர் என்னுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கின்றாரோ, நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது, மேலும், மறுமைநாளில் நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.
20:125
20:125 قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِىْۤ اَعْمٰى وَقَدْ كُنْتُ بَصِيْرًا‏
قَالَ அவன் கூறுவான் رَبِّ என் இறைவா لِمَ حَشَرْتَنِىْۤ ஏன் என்னை எழுப்பினாய் اَعْمٰى குருடனாக وَقَدْ كُنْتُ நான் இருந்தேனே بَصِيْرًا‏ பார்வை உள்ளவனாக
20:125. (அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.
20:125. (அச்சமயம்) அவன் ‘‘என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் பார்வையுடையவனாக இருந்தேன்ன!'' என்று கேட்பான்.
20:125. அவன் கேட்பான்: “என் இறைவா! (உலகில்) நான் பார்வையுள்ளவனாக இருந்தேனே, இங்கு நீ என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?”
20:125. (அதுசமயம்) அவன் “என் இரட்சகனே! ஏன் என்னை குருடனாக நீ எழுப்பினாய்? நான் திட்டமாக (உலகத்தில்) பார்க்கிறவனாக இருந்தேனே” என்று கேட்பான்.
20:126
20:126 قَالَ كَذٰلِكَ اَتَـتْكَ اٰيٰتُنَا فَنَسِيْتَهَا‌ۚ وَكَذٰلِكَ الْيَوْمَ تُنْسٰى‏
قَالَ அவன் கூறுவான் كَذٰلِكَ அவ்வாறுதான் اَتَـتْكَ உன்னிடம் வந்தன اٰيٰتُنَا எனது வசனங்கள் فَنَسِيْتَهَا‌ۚ ஆனால், நீ அவற்றை மறந்தாய் وَكَذٰلِكَ அவ்வாறே الْيَوْمَ இன்று تُنْسٰى‏ நீ மறக்கப்படுவாய்
20:126. (அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான்.
20:126. அதற்கு (இறைவன்) ‘‘இவ்வாறே (குருடனைப்போன்றே உன் காரியங்கள் இருந்தன) நம்வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவற்றை(க் கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனிக்கப்படாது) மறக்கப்பட்டுவிட்டாய்'' என்று கூறுவான்.
20:126. அதற்கு அல்லாஹ், “ஆம்; இவ்வாறே நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்திருந்தபோது நீ அவற்றை மறந்து விட்டிருந்தாய்; அவ்வாறே இன்று நீயும் மறக்கடிக்கப்படுகின்றாய்” என்று கூறுவான்.
20:126. (அதற்கு) “அவ்வாறே! நம் வசனங்கள் உன்னிடம் வந்தன, நீ அவைகளை மறந்து விட்டாய், (நீ மறந்த) அவ்வாறே இன்றையத்தினம் நீயும் (நம் அருளிலிருந்து) மறக்கப்படுகிறாய்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
20:127
20:127 وَكَذٰلِكَ نَجْزِىْ مَنْ اَسْرَفَ وَلَمْ يُؤْمِنْۢ بِاٰيٰتِ رَبِّهٖ‌ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَدُّ وَاَبْقٰى‏
وَكَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِىْ கூலி கொடுப்போம் مَنْ எவர் اَسْرَفَ வரம்பு மீறினார் وَلَمْ يُؤْمِنْۢ இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை بِاٰيٰتِ வசனங்களை رَبِّهٖ‌ؕ தன் இறைவனின் وَلَعَذَابُ தண்டனை الْاٰخِرَةِ மறுமையின் اَشَدُّ மிகக் கடுமையானது وَاَبْقٰى‏ இன்னும் நிரந்தரமானது
20:127. ஆகவே, எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறுதான் நாம் கூலி கொடுப்போம்; மேலும் மறுமையின் வேதனை மிகவும் கடினமானதும் நிலையானதுமாகும்.
20:127. எவன் வரம்பு மீறி, தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ள வில்லையோ அவனுக்கும் இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அவனுக்குக் கிடைக்கும்) மறுமையின் வேதனையோ மகா கடினமானதும் நிலையானதும் ஆகும்.
20:127. இவ்விதமே, வரம்பு மீறிச் செல்வோருக்கும் தம்முடைய இறைவனின் வசனங்களை ஏற்காதோருக்கும் நாம் (இவ்வுலகில்) கூலி வழங்குகின்றோம். மேலும், மறுமையின் வேதனை மிகக் கடினமானதும் நீடித்து நிற்கக்கூடியதாகவும் இருக்கிறது.
20:127. எனவே, தன் இரட்சகனின் வசனங்களை விசுவாசிக்காது வரம்பு மீறி நடக்கின்றவருக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம், (அவனுக்குக் கிடைக்கும்) மறுமையின் வேதனையோ மிகக் கடினமானதும், நிலையானதுமாகும்.
20:128
20:128 اَفَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ يَمْشُوْنَ فِىْ مَسٰكِنِهِمْ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّاُولِى النُّهٰى‏
اَفَلَمْ يَهْدِ தெளிவுபடுத்தவில்லையா لَهُمْ அவர்களுக்கு كَمْ எத்தனையோ اَهْلَكْنَا நாம் அழித்தது قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் مِّنَ الْقُرُوْنِ தலைமுறையினர்களை يَمْشُوْنَ செல்கிறார்கள் فِىْ مَسٰكِنِهِمْ‌ؕ அவர்களின் இருப்பிடங்களில் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّاُولِى النُّهٰى‏ அறிவுடையவர்களுக்கு
20:128. இவர்களுக்கு முன் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு(ப் படிப்பினையைத் தந்து) நேர் வழி காட்டவில்லையா? (அழிந்து போன) அவர்கள் குடியிருந்த இடங்களில் தானே இவர்கள் நடக்கிறார்கள்; நிச்சயமாக அதில் அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.
20:128. இவர்களுக்கு முன்னிருந்த எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்து விட்டோம் என்ற விஷயம் இவர்களை நேரான வழியில் செலுத்தவில்லையா? (அழிந்து போன) அவர்கள் வசித்திருந்த இடங்களுக்குச் சமீபமாகவே இவர்கள் செல்கின்றனர். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக அதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
20:128. பிறகு, இவர்களுக்கு முன்னர் எத்தனையோ சமூகத்தினரை நாம் அழித்திருக்கின்றோம். (இந்த வரலாற்றின் படிப்பினைகளிலிருந்து) இவர்களுக்கு நேர்வழி கிடைக்கவில்லையா என்ன? அவ்வாறு (அழிக்கப்பட்ட) அவர்களின் ஊர்களில் (இன்று) இவர்கள் நடமாடித் திரிகின்றார்கள். உண்மையில் இதில் நல்லறிவு உடையவர்களுக்கு சான்றுகள் நிறைய உள்ளன.
20:128. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்து விட்டோம் என்பது இவர்களை நேர்வழியில் செலுத்தவில்லையா? (அழிக்கப்பட்ட) அவர்கள் குடியிருந்த இடங்களில் (சமீபமாகவே) இவர்கள் செல்கின்றனர், அறிவுடையோருக்கு, நிச்சயமாக அதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
20:129
20:129 وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَــكَانَ لِزَامًا وَّاَجَلٌ مُّسَمًّىؕ‏
وَلَوْلَا كَلِمَةٌ ஒரு வாக்கு(ம்) இருக்கவில்லையெனில் سَبَقَتْ முந்தி مِنْ رَّبِّكَ உமது இறைவனிடம் لَــكَانَ لِزَامًا கண்டிப்பாக மரணம் ஏற்பட்டே இருக்கும் وَّاَجَلٌ தவணையும் مُّسَمًّىؕ‏ ஒரு குறிப்பிட்ட
20:129. உமது இறைவனிடமிருந்து ஒரு வாக்கும் (தண்டனைக்கான) குறிப்பிடபட்ட ஒரு தவணையும் முந்திரா விட்டால் அது (வேதனை) ஏற்பட்டு இருக்கும்.
20:129. (நபியே! அவர்களின் தண்டனைக்குரிய காலம் மறுமைதான் என்று) ஒரு தவணையைக் குறிப்பிட்டிருக்கும் உமது இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிருக்காவிட்டால் (இச்சமயமே) வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டிருக்கும்.
20:129. உம் இறைவனிடமிருந்து முன்னரே ஒரு விஷயம் முடிவாகாமலும், மேலும், குறிப்பிட்ட ஒரு காலத்தவணை நிர்ணயிக்கப்படாமலும் இருந்திருந்தால் இவர்களுடைய விஷயம் கண்டிப்பாக முன்பே தீர்க்கப்பட்டிருக்கும்.
20:129. மேலும், (நபியே! தீர்ப்பளிக்கப்படுவது மறுமையில்தான் என்ற) உம்முடைய இரட்சகனின் வாக்கு மற்றும் குறிப்பிடப்பட்ட தவணை முந்தியிராவிட்டால் அ(ழிவான)து கட்டாயமாகியிருக்கும்.
20:130
20:130 فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا‌ ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى‏
فَاصْبِرْ நீர் பொறுத்துக் கொள்வீராக عَلٰى مَا يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவதை وَسَبِّحْ இன்னும் தொழுவீராக بِحَمْدِ புகழ்ந்து رَبِّكَ உமது இறைவனை قَبْلَ முன்னரும் طُلُوْعِ உதிக்கும் الشَّمْسِ சூரியன் وَقَبْلَ முன்னரும் غُرُوْبِهَا‌ ۚ அது மறையும் وَمِنْ اٰنَآىٴِ நேரங்களிலும் الَّيْلِ இரவின் فَسَبِّحْ இன்னும் தொழுவீராக وَاَطْرَافَ ஓரங்களிலும் النَّهَارِ பகலின் لَعَلَّكَ تَرْضٰى‏ நீர் திருப்தி பெறுவீர்
20:130. ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக; இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக; மேலும் இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக; இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தி பெறலாம்.
20:130. ஆகவே, அவர்கள் (உம்மைக் குறைவுபடுத்திக்) கூறுவதைப் பற்றி நீர் பொறுமையுடன் சகித்திருப்பீராக. சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவு காலங்களிலும், (பகல் காலங்களிலும்) பகலின் இருமுனைகளிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருப்பீராக. (இதனால்) நீர் திருப்தி அடையலாம்.
20:130. எனவே (நபியே!) இவர்கள் இட்டுக்கட்டிக்கூறும் விஷயத்தை நீர் பொறுத்துக் கொள்ளும். சூரியன் உதிப்பதற்கு முன்பும் அது மறைவதற்கு முன்பும் மேலும், இரவு நேரங்களிலும் பகலின் ஓரங்களிலும் உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! இதன் மூலம் நீர் மனத்திருப்தி அடையக் கூடும்.
20:130. ஆகவே, அவர்கள் (உம்மைக் குறை) கூறுவதைப்பற்றி நீர் பொறுத்துக் கொள்வீராக! மேலும் சூரிய உதயத்திற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உம்முடைய இரட்சகனின் புகழைக்கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக! இரவு நேரங்களிலும் (இவ்வாறே) பகலின் ஓரங்களிலும் (இரட்சகனைப் புகழ்ந்து) துதி செய்து கொண்டிருப்பீராக! இதனால் நீர் திருப்தியடையலாம்.
20:131
20:131 وَلَا تَمُدَّنَّ عَيْنَيْكَ اِلٰى مَا مَتَّعْنَا بِهٖۤ اَزْوَاجًا مِّنْهُمْ زَهْرَةَ الْحَيٰوةِ الدُّنْيَا ۙ لِنَفْتِنَهُمْ فِيْهِ‌ ؕ وَرِزْقُ رَبِّكَ خَيْرٌ وَّاَبْقٰى‏
وَلَا تَمُدَّنَّ நீர் திருப்பாதீர் عَيْنَيْكَ உமது கண்களை اِلٰى مَا مَتَّعْنَا எவற்றின் பக்கம் இன்பமளித்தோம் بِهٖۤ அதன் மூலம் اَزْوَاجًا போன்றவர்கள் مِّنْهُمْ இவர்களை زَهْرَةَ அலங்காரமாக الْحَيٰوةِ الدُّنْيَا ۙ உலக வாழ்க்கையின் لِنَفْتِنَهُمْ அவர்களை நாம் சோதிப்பதற்காக فِيْهِ‌ ؕ அதில் وَرِزْقُ அருட்கொடை رَبِّكَ உமது இறைவனின் خَيْرٌ சிறந்தது وَّاَبْقٰى‏ நிலையானது
20:131. இன்னும், அவர்களில் சில பிரிவினர் இன்பமனுபவிக்க நாம் கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதீர்; (இவை யெல்லாம்) அவர்களைச் சோதிப்பதற்காகவே நாம் கொடுத்துள்ள உலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். உமது இறைவன் (மறுமையில் உமக்கு) வழங்கவிருப்பது சிறந்ததும் நிலையானதும் ஆகும்.
20:131. (நபியே!) அவர்களில் சிலருக்கு சுகமனுபவிக்க நாம் கொடுத்தவற்றின் பக்கம் நீர் உமது பார்வையைச் செலுத்தாதீர். இவை அனைத்தும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களே! அவர்களைச் சோதிப்பதற்காகவே (நாம் இவற்றை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.) ஆனால், உமது இறைவன் உமக்குக் கொடுத்திருப்பதோ மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.
20:131. மேலும், நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழ்க்கையின் சுக போகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்க்காதீர். அவர்களை சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம். மேலும், உம் இறைவனால் வழங்கப்பட்டுள்ள (ஆகுமான) வாழ்வாதாரம்தான் சிறந்ததும் நிலையானதுமாகும்.
20:131. (நபியே!) அவர்களில் சில பிரிவாருக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக எதைக்கொண்டு சுகமனுபவிக்கச் செய்திருக்கிறோமோ அதன் பக்கம் உம்முடைய இரு கண்களையும் நீர் திண்ணமாகச் செலுத்த வேண்டாம், (இவையாவும்) அதில் அவர்களை சோதிப்பதற்காகவே (நாம் கொடுத்திருக்கிறோம்.) ஆனால் உம் இரட்சகன் (உமக்கு மறுமையில்) கொடுக்கவிருப்பது மிகச் சிறந்ததும், மிக நிலையானதுமாகும்.
20:132
20:132 وَاْمُرْ اَهْلَكَ بِالصَّلٰوةِ وَاصْطَبِرْ عَلَيْهَا‌ ؕ لَا نَسْــٴَــلُكَ رِزْقًا‌ ؕ نَحْنُ نَرْزُقُكَ‌ ؕ وَالْعَاقِبَةُ لِلتَّقْوٰى‏
وَاْمُرْ ஏவுவீராக اَهْلَكَ உமது குடும்பத்திற்கு بِالصَّلٰوةِ தொழுகையை وَاصْطَبِرْ உறுதியாக இருப்பீராக عَلَيْهَا‌ ؕ அதன் மீது لَا نَسْــٴَــلُكَ நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை رِزْقًا‌ ؕ உணவு எதையும் نَحْنُ نَرْزُقُكَ‌ ؕ நாம்தான் உமக்கு உணவளிக்கிறோம் وَالْعَاقِبَةُ நல்ல முடிவு لِلتَّقْوٰى‏ இறையச்சத்திற்குத்தான்
20:132. (நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை; ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம்; இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.
20:132. (நபியே!) தொழுது வருமாறு நீர் உமது குடும்பத்தினரை ஏவுவீராக. நீரும் அதன் மீது உறுதியாக இருப்பீராக. (இதற்காக) நாம் உம்மிடம் எதையும் கேட்கவில்லை. உமக்கு வேண்டியவற்றை எல்லாம் நாமே கொடுக்கிறோம். முடிவான நன்மை இறையச்சத்திற்குத்தான்.
20:132. மேலும், தொழுகையைப் பேணி வருமாறு உம்முடைய குடும்பத்தார்க்கு நீர் கட்டளையிடுவீராக! நீரும் அதனை முறையாகக் கடைப்பிடிப்பீராக. ஏதேனும் வாழ்வாதாரம் அளிக்குமாறு உம்மிடம் நாம் கோருவதில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் அளித்துக் கொண்டிருக்கின்றோம். மேலும், நல்ல முடிவு இறையச்சத்திற்கே இருக்கின்றது.
20:132. மேலும், (நபியே!) “நீர் உம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கொண்டு ஏவுவீராக! நீரும் அதன் மீது (பொறுமையுடன்) நிலைத்திருப்பீராக! நாம் உம்மிடம் உணவைக்கேட்கவில்லை, உமக்கு நாமே உணவளிக்கிறோம், மேலும் நல்ல முடிவு பயபக்தி (உடையவர்களு)க்கே உரியதாகும்.
20:133
20:133 وَقَالُوْا لَوْلَا يَاْتِيْنَا بِاٰيَةٍ مِّنْ رَّبِّهٖ ‌ؕ اَوَلَمْ تَاْتِہِمْ بَيِّنَةُ مَا فِى الصُّحُفِ الْاُوْلٰى‏
وَقَالُوْا இவர்கள் கூறினார்கள் لَوْلَا يَاْتِيْنَا நம்மிடம் கொண்டு வரமாட்டாரா بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியை مِّنْ رَّبِّهٖ ؕ தன் இறைவனிடமிருந்து اَوَلَمْ تَاْتِہِمْ அவர்களிடம் வரவில்லையா بَيِّنَةُ தெளிவான சான்று مَا فِى الصُّحُفِ வேதங்களில் உள்ள الْاُوْلٰى‏ முந்திய
20:133. “தம் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை ஏன் அவர் நம்மிடம் கொண்டு வரவில்லை?” என்று (நிராகரிப்போர்) கேட்கின்றனர்; முந்தைய வேதங்களில் உள்ள தெளிவான அத்தாட்சிகள் அவர்களுக்கு வரவில்லையா?
20:133. (‘‘இறைவனின் தூதராகிய) அவர் தன் இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) நம்மிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். முந்திய வேதங்களிலுள்ள தெளிவான ஆதாரங்கள் அவர்களிடம் வரவில்லையா? (வந்தே இருக்கிறது.)
20:133. “தம் இறைவனிடமிருந்து ஏதேனும் ஒரு சான்றை (முஃஜிஸாவை) இவர் ஏன் கொண்டுவரவில்லை” என்று அவர்கள் கேட்கின்றார்கள். முந்தைய வேதங்களில் உள்ள முழு அறிவுரைகளின் விளக்கம் அவர்களிடம் வரவில்லையா என்ன?
20:133. “தன் இரட்சகனிடமிருந்து ஓர் அத்தாட்சியை அவர் நம்மிடம் கொண்டு வர வேண்டாமா?” என்றும் அவர்கள் கூறுகின்றனர், முந்திய வேதங்களிலுள்ள தெளிவு, (அத்தாட்சி) அவர்களிடம் வரவில்லையா?
20:134
20:134 وَلَوْ اَنَّاۤ اَهْلَكْنٰهُمْ بِعَذَابٍ مِّنْ قَبْلِهٖ لَـقَالُوْا رَبَّنَا لَوْلَاۤ اَرْسَلْتَ اِلَـيْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰيٰتِكَ مِنْ قَبْلِ اَنْ نَّذِلَّ وَنَخْزٰى‏
وَلَوْ اَنَّاۤ اَهْلَكْنٰهُمْ இவர்களை நாம் அழித்திருந்தால் بِعَذَابٍ ஒரு வேதனையைக் கொண்டு مِّنْ قَبْلِهٖ இதற்கு முன்னரே لَـقَالُوْا கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா لَوْلَاۤ اَرْسَلْتَ நீ அனுப்பி இருக்கக்கூடாதா? اِلَـيْنَا எங்களுக்கு رَسُوْلًا ஒரு தூதரை فَنَتَّبِعَ பின்பற்றி இருப்போமே اٰيٰتِكَ உனது வசனங்களை مِنْ قَبْلِ முன்னர் اَنْ نَّذِلَّ இழிவடைவதற்கும் وَنَخْزٰى‏ கேவலப்படுவதற்கும்
20:134. இன்னும் (நம் தூதர்) வருவதற்கு முன், நாம் இவர்களை வேதனை செய்து அழித்திருந்தால், அவர்கள், “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? அவ்வாறாயின் நாங்கள் சிறுமைப்படுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன் உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே” என்று கூறுவார்கள்.
20:134. (நம் தூதராகிய) இவர் வருவதற்கு முன்னதாகவே நாம் அவர்களை வேதனை செய்தால் “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறு அனுப்பியிருந்தால்) நாங்கள் இந்த இழிவுக்கும் நிந்தனைக்கும் உள்ளாவதற்கு முன்னதாகவே உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போம்'' என்று கூறுவார்கள்.
20:134. அவர் வருகைக்கு முன்பே ஏதேனும் ஒரு வேதனையை இறக்கி அவர்களை நாம் அழித்திருந்தால் அப்போது அவர்களே கூறுவர்: “எங்கள் இறைவனே! எங்களிடம் ஒரு தூதரை நீ அனுப்பியிருக்கக் கூடாதா? அவ்வாறு அனுப்பியிருந்தால் இழிவிற்கும் கேவலத்திற்கும் நாங்கள் ஆளாகும் முன்பே, உன் வசனங்களைப் பின்பற்றியிருப்போமே!”
20:134. மேலும், (நம் தூதராகிய) இவருக்கு முன்னதாகவே நிச்சயமாக நாம் இவர்களை வேதனையைக் கொண்டு அழித்திருந்தால், “எங்கள் இரட்சகனே! நீ எங்களுக்கு ஒரு தூதரை அனுப்பியிருக்க வேண்டாமா? (அவ்வாறிருந்தால்) நாங்கள் இழிவுபடுவதற்கும், கேவலப்படுவதற்கும் முன்னதாகவே உன்னுடைய வசனங்களை நாங்கள் பின்பற்றியிருப்போமே” என்று கூறுவார்கள்.
20:135
20:135 قُلْ كُلٌّ مُّتَرَبِّصٌ فَتَرَبَّصُوْا‌ ۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ اَصْحٰبُ الصِّرَاطِ السَّوِىِّ وَمَنِ اهْتَدٰى‏
قُلْ கூறுவீராக كُلٌّ ஒவ்வொருவரும் مُّتَرَبِّصٌ எதிர்பார்ப்பவர்களே فَتَرَبَّصُوْا‌ ۚ ஆகவே எதிர்பாருங்கள் فَسَتَعْلَمُوْنَ நீங்கள் அறிந்து கொள்வீர்கள் مَنْ யார் اَصْحٰبُ الصِّرَاطِ பாதையுடையவர்கள் السَّوِىِّ நேரான وَمَنِ யார் اهْتَدٰى‏ நேர்வழி பெற்றவர்
20:135. (நபியே! “இறுதி நாளை) அனைவரும் எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே நீங்களும் எதிர்பார்த்திருங்கள், நேரான வழியை உடையவர் யார்? நேர் வழி அடைந்து விட்டவர்கள் யார்? என்பதையும் திடமாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று நீர் கூறுவீராக.
20:135. (நபியே! நீர்) கூறுவீராக: ‘‘ஒவ்வொருவரும் (தங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருப்பவர்களே! ஆகவே, நீங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்ப்பீராக. நேரான வழியில் இருப்பவர் யார்? (தவறான வழியில் இருப்பவர் யார்?) நேரான வழியை அடைந்து விட்டவர்கள் யார்? என்பதைப் பின்னர் நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள்.
20:135. (நபியே, அவர்களிடம்) நீர் கூறும்! “(தமது செயலின் விளைவை) ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தாம். எனவே நீங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். அதிவிரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும் நேர்வழியில் நடப்பவர் யார், மேலும், நேர்வழியைப் பெற்றவர்கள் யார் என்பது!”
20:135. (நபியே!) நீர் கூறுவீராக! ஒவ்வொருவரும் (மறுமைநாளை) எதிர்பார்த்திருப்பவரே! ஆகவே, நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நேரான வழியை உடையவர்கள் யார்? என்பதையும், நேர்வழி பெற்றவர் யார்? என்பதையும் (பின்னர்) நீங்கள் நிச்சயமாக நன்கறிந்து கொள்வீர்கள்.