4. ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)
மதனீ, வசனங்கள்: 176

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
4:1
4:1 يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏
يٰۤـاَيُّهَا النَّاسُ மனிதர்களே! اتَّقُوْا அஞ்சுங்கள் رَبَّكُمُ உங்கள் இறைவனை الَّذِىْ எவன் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் مِّنْ نَّفْسٍ ஓர் ஆன்மாவிலிருந்து وَّاحِدَةٍ ஒரே وَّخَلَقَ இன்னும் படைத்தான் مِنْهَا அதிலிருந்து زَوْجَهَا அவருடைய மனைவியை وَبَثَّ இன்னும் பரப்பினான் مِنْهُمَا அவ்விருவரிலிருந்து رِجَالًا ஆண்களை كَثِيْرًا அதிகமான وَّنِسَآءً‌ ۚ இன்னும் பெண்களை وَاتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை الَّذِىْ எவன் تَسَآءَلُوْنَ உங்களுக்குள் கேட்டுக் கொள்கிறீர்கள் بِهٖ அவனைக்கொண்டு وَالْاَرْحَامَ‌ ؕ இன்னும் இரத்தபந்தங்களை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلَيْكُمْ உங்கள் மீது رَقِيْبًا‏ கண்காணிப்பாளனாக
4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.
4:1. மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான்.
4:1. மனிதர்களே, உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
4:1. மனிதர்களே! நீங்கள் உங்கள் இரட்சகனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள், அவன் எத்தகையவனென்றால், உங்களை (யாவரையும்) ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அதிலிருந்து அதற்குரிய ஜோடியையும் படைத்தான், இன்னும் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் பரவச்செய்தான், இன்னும், அல்லாஹ்வை-அவனை-க்கொண்டு (தமக்குரிய உரிமைகளை) நீங்கள் (ஒருவருக்கொருவர்) கேட்டுக்கொள்கிறீர்களே அத்தகையவனையும், மேலும் இரத்தக் கலப்பு சொந்தங்களை (த்துண்டித்து விடுவதை)யும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.
4:2
4:2 وَاٰ تُوا الْيَتٰمٰٓى اَمْوَالَهُمْ‌ وَلَا تَتَبَدَّلُوا الْخَبِيْثَ بِالطَّيِّبِ وَلَا تَاْكُلُوْۤا اَمْوَالَهُمْ‌ اِلٰٓى اَمْوَالِكُمْ‌ؕ اِنَّهٗ كَانَ حُوْبًا كَبِيْرًا‏‏
وَاٰ تُوا இன்னும் கொடுங்கள் الْيَتٰمٰٓى அநாதைகளுக்கு اَمْوَالَهُمْ‌ செல்வங்களை/அவர்களுடைய وَلَا تَتَبَدَّلُوا மாற்றி விடாதீர்கள் الْخَبِيْثَ கெட்டதை بِالطَّيِّبِ நல்லதிற்கு பதிலாக وَلَا تَاْكُلُوْۤا விழுங்காதீர்கள் اَمْوَالَهُمْ‌ செல்வங்களை/அவர்களுடைய اِلٰٓى اَمْوَالِكُمْ‌ؕ உங்கள்/செல்வங்கள்/உடன் اِنَّهٗ நிச்சயமாக அது كَانَ இருக்கிறது حُوْبًا பாவமாக كَبِيْرًا‏‏ பெரும்
4:2. நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.
4:2. நீங்கள் அநாதைகளின் பொருள்களை (அவர்கள் பருவமடைந்த பின் குறைவின்றி) அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாகக் கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருள்களை உங்கள் பொருள்களுடன் சேர்த்து விழுங்கி விடாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாகும்.
4:2. அநாதைகளுக்கு அவர்களுடைய உடைமைகளைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்! நல்ல பொருளுக்குப் பதிலாக தீய பொருளை மாற்றாதீர்கள்; மேலும், அவர்களின் பொருள்களை உங்களின் பொருள்களோடு கலந்து உண்ணாதீர்கள்; திண்ணமாக இது பெரும் பாவமாகும்.
4:2. மேலும், நீங்கள் அநாதைகளுக்கு அவர்களுடைய பொருட்களை (அவர்கள் பிராயமடைந்த பின், குறைவின்றி அவர்களுக்கு)க் கொடுத்து விடுங்கள், (அதிலுள்ள) நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் விடாதீர்கள், அவர்களுடைய பொருட்களையும் உங்களுடைய பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டும் விடாதீர்கள், நிச்சயமாக அது பெரும்பாவமாக இருக்கிறது.
4:3
4:3 وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ‌ ‌ۚ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَلَّا تَعُوْلُوْا ؕ‏
وَاِنْ خِفْتُمْ நீங்கள் பயந்தால் اَلَّا تُقْسِطُوْا நீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதை فِى الْيَتٰمٰى அநாதைகள் விஷயத்தில் فَانْكِحُوْا மணம் புரியுங்கள் مَا எவளை طَابَ விருப்பமாகி விட்டார் لَـكُمْ உங்களுக்கு مِّنَ النِّسَآءِ பெண்களிலிருந்து مَثْنٰى இரண்டிரண்டாக وَثُلٰثَ இன்னும் மும்மூன்றாக وَرُبٰعَ‌ ۚ இன்னும் நான்கு நான்காக فَاِنْ خِفْتُمْ நீங்கள் பயந்தால் اَلَّا تَعْدِلُوْا நீதமாக நடக்க மாட்டீர்கள் என்பதை فَوَاحِدَةً ஒருத்தியை اَوْ அல்லது مَا எவளை مَلَـكَتْ சொந்தமாக்கியது اَيْمَانُكُمْ‌ ؕ உங்கள் வலக்கரங்கள் ذٰ لِكَ இதுவே اَدْنٰٓى சுலபமாகும் اَلَّا تَعُوْلُوْاؕ‏ நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு
4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
4:3. அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாகவே நடந்துகொள்ள வேண்டும்.) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (மட்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்). அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே போதுமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்.
4:3. அநாதைகளுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால், உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள். ஆனால் (அவர்களிடையே) நீதமாக நடந்திட முடியாது என்று நீங்கள் அஞ்சுவீர்களாயின் ஒரு பெண்ணை மட்டும் மணமுடித்துக் கொள்ளுங்கள்; அல்லது உங்கள் கைகள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையே மனைவியாக்கிக் கொள்ளுங்கள். நீதி தவறாமலிருப்பதற்கு இதுவே மிக நெருக்கமானதாகும்.
4:3. அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்கள் விஷயத்தில் நீதம் செய்யமுடியாது என நீங்கள் அஞ்சினால் (மற்றப்) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளுங்கள், அவர்களுக்கிடையில், நீங்கள் நீதமாக நடக்க முடியாதெனப் பயந்தால், ஒரு பெண்ணை (திருமணம் செய்து கொள்ளுங்கள்) அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்பெண்ணில் உள்ள)தை(க்கொண்டு போதுமாக்கிக்கொள்ளுங்கள்). நீங்கள் அநீதி செய்யாமலிருப்பதற்கு, இதுவே சுலப(மான வழியா)கும்.
4:4
4:4 وَاٰ تُوا النِّسَآءَ صَدُقٰتِهِنَّ نِحْلَةً‌  ؕ فَاِنْ طِبْنَ لَـكُمْ عَنْ شَىْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوْهُ هَنِيْٓــٴًـــا مَّرِیْٓـــٴًﺎ‏
وَاٰ تُوا கொடுங்கள் النِّسَآءَ பெண்களுக்கு صَدُقٰتِهِنَّ மணக்கொடைகளை /அவர்களுடைய نِحْلَةً‌  ؕ கடமையாக فَاِنْ طِبْنَ அவர்கள் விரும்பினால் لَـكُمْ உங்களுக்கு عَنْ شَىْءٍ ஒரு சிறிதை مِّنْهُ அதிலிருந்து نَفْسًا மனதால் فَكُلُوْهُ அதைப் புசியுங்கள் هَنِيْٓــٴًـــا இன்பமாக مَّرِیْٓـــٴًﺎ‏ மகிழ்ச்சியாக
4:4. நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.
4:4. நீங்கள் (திருமணம் செய்துகொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய ‘‘மஹரை' (திருமணக் கட்டணத்தை)க் கண்ணியமான முறையில் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை அவர்கள் (தங்கள்) மனமாற உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் புசிக்கலாம்.
4:4. மேலும், பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) மனமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமின்றி அனுபவிக்கலாம்.
4:4. நீங்கள் (திருமணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர்களை (திருமணக்கொடைகளை) மகிழ்வோடு கொடுத்து விடுங்கள், அதிலிருந்து ஒரு சிறிதை, அவர்கள், (தங்கள்) மனமார உங்களுக்கு விட்டுக் கொடுத்தால் அதனை நீங்கள் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள்.
4:5
4:5 وَلَا تُؤْتُوا السُّفَهَآءَ اَمْوَالَـكُمُ الَّتِىْ جَعَلَ اللّٰهُ لَـكُمْ قِيٰمًا وَّارْزُقُوْهُمْ فِيْهَا وَاكْسُوْهُمْ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا‏
وَلَا تُؤْتُوا கொடுக்காதீர்கள் السُّفَهَآءَ புத்திக் குறைவானவர்களுக்கு اَمْوَالَـكُمُ செல்வங்களை/உங்கள் الَّتِىْ எது جَعَلَ ஆக்கினான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு قِيٰمًا வாழ்வாதாரமாக وَّارْزُقُوْهُمْ உணவளியுங்கள் فِيْهَا அதில்/அவர்களுக்கு وَاكْسُوْهُمْ இன்னும் ஆடை அணிவியுங்கள்/அவர்களுக்கு وَقُوْلُوْا கூறுங்கள் لَهُمْ அவர்களுக்கு قَوْلًا சொல்லை مَّعْرُوْفًا‏ நல்லது
4:5. (அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்.
4:5. (அநாதைகளின் பொருளுக்குப் பொறுப்பாளரான நீங்கள் அந்த அனாதைகள்) புத்திக் குறைவானவர்களாயிருந்தால் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமுள்ள (அவர்களின்) பொருள்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனினும், (அவர்களுக்குப் போதுமான) உணவையும், அவர்களுக்கு (வேண்டிய) ஆடைகளையும், அதிலிருந்து கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் கூறி (நல்லறிவைப் புகட்டி) வருவீர்களாக!
4:5. மேலும், உங்களுடைய வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள பொருள்களை விவரமறியாதவர்(களாய் உள்ள அநாதை)களிடம் ஒப்படைக்காதீர்கள்; ஆனால், அப்பொருள்களிலிருந்து அவர்களுக்கு உண்ணவும், உடுக்கவும் அளியுங்கள்! மேலும் அவர்களுக்கு நல்ல விஷயங்களை அறிவுறுத்துங்கள்!
4:5. (அநாதைகளின் பொருளுக்குக் காரியஸ்தராக ஏற்பட்ட நீங்கள் அவர்களின்) வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடமிருக்கும் (அவர்களுடைய) பொருட்களை, புத்திக் குறைவானவர்க(ளாக அவர்கள் இருந்தால், அவர்க)ளிடம் கொடுத்துவிட வேண்டாம், இன்னும் அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள், அவர்களுக்கு ஆடை(களை)யும் அணிவியுங்கள், அவர்களுக்கு நல்ல வார்த்தைகளையே கூறுங்கள்.
4:6
4:6 وَابْتَلُوا الْيَتٰمٰى حَتّٰىۤ اِذَا بَلَغُوا النِّكَاحَ‌ ۚ فَاِنْ اٰنَسْتُمْ مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوْۤا اِلَيْهِمْ اَمْوَالَهُمْ‌ۚ وَلَا تَاْكُلُوْهَاۤ اِسْرَافًا وَّبِدَارًا اَنْ يَّكْبَرُوْا‌ ؕ وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ‌ ۚ وَمَنْ كَانَ فَقِيْرًا فَلْيَاْكُلْ بِالْمَعْرُوْفِ‌ ؕ فَاِذَا دَفَعْتُمْ اِلَيْهِمْ اَمْوَالَهُمْ فَاَشْهِدُوْا عَلَيْهِمْ‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ حَسِيْبًا‏
وَابْتَلُوا சோதியுங்கள் الْيَتٰمٰى அநாதைகளை حَتّٰىۤ இறுதியாக اِذَا بَلَغُوا அவர்கள் அடைந்தால் النِّكَاحَ‌ ۚ திருமணத்தை فَاِنْ اٰنَسْتُمْ நீங்கள் கண்டால் مِّنْهُمْ அவர்களிடம் رُشْدًا தெளிவான அறிவை فَادْفَعُوْۤا ஒப்படையுங்கள் اِلَيْهِمْ அவர்களிடம் اَمْوَالَهُمْ‌ۚ செல்வங்களை/ அவர்களுடைய وَلَا تَاْكُلُوْهَاۤ சாப்பிடாதீர்கள் / அவற்றை اِسْرَافًا அளவு கடந்து وَّبِدَارًا இன்னும் அவரை அவசரமாக اَنْ يَّكْبَرُوْا‌ ؕ அவர்கள் பெரியவர்களாகுவதை وَمَنْ எவர் كَانَ இருக்கிறார் غَنِيًّا செல்வந்தராக فَلْيَسْتَعْفِفْ‌ ۚ அவர் தவிர்க்கவும் وَمَنْ இன்னும் எவர் كَانَ இருக்கிறார் فَقِيْرًا ஏழையாக فَلْيَاْكُلْ புசிக்கவும் بِالْمَعْرُوْفِ‌ ؕ முறையுடன் فَاِذَا دَفَعْتُمْ நீங்கள் ஒப்படைத்தால் اِلَيْهِمْ அவர்களிடம் اَمْوَالَهُمْ செல்வங்களை/ அவர்களுடைய فَاَشْهِدُوْا சாட்சியாக்குங்கள் عَلَيْهِمْ‌ ؕ அவர்கள் மீது وَكَفٰى இன்னும் போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ் حَسِيْبًا‏ துல்லியமாக கணக்கெடுப்பவனாக
4:6. அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
4:6. மேலும், அநாதை(ச் சிறுவர்களுக்கு நல்லொழுக்கம், கல்வி, தொழில் திறமைகளை கற்பித்து அவர்)களைச் சோதித்து வாருங்கள். அவர்கள் திருமண பருவத்தை அடைந்த பின்னர் (தங்கள் சொத்தை நிர்வகிக்கக்கூடிய) அறிவை (திறமையை) அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய செல்வங்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு) விடுவார்கள் என்ற எண்ணத்தின் மீது, அவர்களுடைய செல்வங்களை அவசரமாகவும் அளவு கடந்தும் சாப்பிட்டு அழித்து விடாதீர்கள். (அநாதைகளின் பொறுப்பாளர்) பணக்காரராக இருந்தால் (அநாதையின் செல்வங்களிலிருந்து தனக்காக எதையும் பயன்பெறாமல்) தவிர்த்துக் கொள்ளவும். அவர் ஏழையாக இருந்தாலோ முறையான அளவு (அதிலிருந்து) புசிக்கலாம். அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் அதற்காக சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (உண்மைக்) கணக்கை அறிய அல்லாஹ் போதுமானவன். (ஆகவே, அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்.)
4:6. மேலும், அநாதைகளை அவர்கள் திருமணப் பருவத்தை அடையும் வரை சோதித்து வாருங்கள்! அவர்களிடம் (பகுத்துணரும்) தகுதியை நீங்கள் கண்டால், அவர்களுக்குரிய உடைமைகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்களின் உரிமைகளைக் கேட்டு)விடுவார்களென அஞ்சி அந்த உடைமைகளை நீதிக்குப் புறம்பாக, வீண் விரயமாக, அவசரமாக விழுங்கி விடாதீர்கள்! அநாதைகளைப் பராமரிப்பவர் செல்வந்தராக இருந்தால், அவர் அநாதைகளின் சொத்துக்களிலிருந்து உண்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவோடு உண்ணலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அதற்குச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் கணக்கு கேட்பதற்கு அல்லாஹ் போதுமானவன்.
4:6. இன்னும், அநாதை(ச் சிறுவர்)களை அவர்கள் திருமண வயதையடையும் வரை (தொழில் முதலியவற்றில் ஈடுபடுத்தி, பழக்கிக், கல்வியும் கற்பித்துச்) சோதித்து வாருங்கள், (தங்கள் சொத்தை நிர்வகிக்கக் கூடிய) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைத்துவிடுங்கள், அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் பொருட்களையும் பெற்றுக் கொண்டு) விடுவார்கள் என்று (எண்ணி), அவர்களுடைய பொருட்களை அவசர அவசரமாகவும் அளவு கடந்தும் நீங்கள் தின்றுவிடாதீர்கள், இன்னும் (அநாதையின் பொருட்களையுடைய காரியஸ்தனாகிய) அவர் செல்வந்தனாக இருந்தால் (அதை நிர்வகிப்பதற்காக எதையும் தனக்காக எடுத்துக் கொள்ளாது!) தவிர்த்துக் கொள்ளவும், அவர் ஏழையாக இருந்தாலோ நியாயமான அளவு (அதிலிருந்து) அவரும் புசிக்கவும், மேலும், அவர்களுடைய பொருட்களை, நீங்கள் அவர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களுக்காகச் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், கணக்கெடுப்பதில் அல்லாஹ் போதுமானவன், (ஆகவே, அவர்களுடைய கணக்கில் ஏதும் மோசம் செய்யாதீர்கள்).
4:7
4:7 لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ وَلِلنِّسَآءِ نَصِيْبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ مِمَّا قَلَّ مِنْهُ اَوْ كَثُرَ ‌ؕ نَصِيْبًا مَّفْرُوْضًا‏
لِلرِّجَالِ ஆண்களுக்கு نَصِيْبٌ ஒரு பாகம் مِّمَّا எதிலிருந்து تَرَكَ விட்டுச் சென்றார் الْوَالِدٰنِ பெற்றோர் وَالْاَقْرَبُوْنَ இன்னும் நெருங்கிய உறவினர்கள் وَلِلنِّسَآءِ இன்னும் பெண்களுக்கு نَصِيْبٌ ஒரு பாகம் مِّمَّا எதிலிருந்து تَرَكَ விட்டுச் சென்றார் الْوَالِدٰنِ பெற்றோர் وَالْاَقْرَبُوْنَ இன்னும் நெருங்கிய உறவினர்கள் مِمَّا எதிலிருந்து قَلَّ குறைந்தது مِنْهُ அதில் اَوْ அல்லது كَثُرَ ؕ அதிகமானது نَصِيْبًا பாகமாக مَّفْرُوْضًا‏ கடமையாக்கப்பட்டது
4:7. பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.
4:7. (இறந்துபோன) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுப்போன பொருள்களில் (அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்த போதிலும்) ஆண்களுக்குப் பாகமுண்டு. (அவ்வான்ற) தாயோ, தந்தையோ, உறவினர்களோ விட்டுச் சென்ற பொருள்களில், அவை அதிகமாகவோ கொஞ்சமாகவோ இருந்தபோதிலும் பெண்களுக்கும் பாகமுண்டு. (இது அல்லாஹ்வினால்) ஏற்படுத்தப்பட்ட பாகமாகும்.
4:7. (மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. (அது போல) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு; அச்சொத்துக் குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இந்தப் பங்கு அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.
4:7. (இறந்துபோன) பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்றவை(களான பொருட்)களிலிருந்து ஆண்களுக்குப் பாகமுண்டு, (அவ்வாறே) பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்றவை(களான பொருட்)களிலிருந்து பெண்களுக்குப் பாகமுண்டு, (அவர்கள் விட்டுச்சென்ற சொத்து) குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருப்பினும் சரியே., (இது அல்லாஹ்வால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.
4:8
4:8 وَاِذَا حَضَرَ الْقِسْمَةَ اُولُوا الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنُ فَارْزُقُوْهُمْ مِّنْهُ وَقُوْلُوْا لَهُمْ قَوْلًا مَّعْرُوْفًا‏
وَاِذَا حَضَرَ வந்தால் الْقِسْمَةَ பங்கு வைக்கும்போது اُولُوا الْقُرْبٰى உறவினர்கள் وَالْيَتٰمٰى இன்னும் அனாதைகள் وَالْمَسٰكِيْنُ இன்னும் ஏழைகள் فَارْزُقُو கொடுங்கள் هُمْ அவர்களுக்கு مِّنْهُ அதிலிரு ந்து وَقُوْلُوْا இன்னும் கூறுங்கள் لَهُمْ அவர்களுக்கு قَوْلًا சொல்லை مَّعْرُوْفًا‏ நல்லது
4:8. பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.
4:8. (பாகப்) பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (பங்குதாரல்லாத) உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து, அவர்களுக்கு அன்பான வார்த்தைகளைக் (கொண்டு ஆறுதல்) கூறி (அனுப்பி)விடுங்கள்.
4:8. மேலும், பங்கீடு செய்யும்போது (வாரிசு அல்லாத) உறவினர்களோ, அநாதைகளோ, வறியவர்களோ வந்தால் அச்சொத்திலிருந்து அவர்களுக்கும் சிறிது வழங்குங்கள்! மேலும், அவர்களிடம் கனிவாகப் பேசுங்கள்!
4:8. மேலும், (பாகப்)பிரிவினை செய்துகொள்ளும் இடத்திற்கு (சொத்துக்கு உரிமையற்ற) உறவினரோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால் அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும்) கொடுத்து அவர்களுக்கு அன்பான வார்த்தையையும் கொண்டு ஆறுதல் கூறுங்கள்.
4:9
4:9 وَلْيَخْشَ الَّذِيْنَ لَوْ تَرَكُوْا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعٰفًا خَافُوْا عَلَيْهِمْ فَلْيَتَّقُوا اللّٰهَ وَلْيَقُوْلُوا قَوْلًا سَدِيْدًا‏
وَلْيَخْشَ பயப்படட்டும் الَّذِيْنَ எவர்கள் لَوْ تَرَكُوْا அவர்கள் விட்டுச் சென்றால் مِنْ இருந்து خَلْفِهِمْ அவர்களுக்குப் பின் ذُرِّيَّةً ஒரு சந்ததியை ضِعٰفًا பலவீனர்கள் خَافُوْا பயப்படுவார்கள் عَلَيْهِمْ அவர்கள் மீது فَلْيَتَّقُوا ஆகவே அவர்கள் அஞ்சட்டும் اللّٰهَ அல்லாஹ்வை وَلْيَقُوْلُوا இன்னும் அவர்கள் சொல்லட்டும் قَوْلًا சொல்லை سَدِيْدًا‏ நேர்மையானது
4:9. தங்களுக்கு பின்னால் பலஹீனமான சந்ததிகளை விட்டுச் சென்றால் (அவர்களுடைய நிலை என்னவாகும் என்று) அஞ்சுகிறார்களோ அவர்கள் பயந்து (முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்ளட்டும்; மேலும் அல்லாஹ்வை அஞ்சி, இதமான வார்த்தைகளையே அவர்கள் சொல்லட்டும்.
4:9. எவர்கள் தாங்கள் மரணித்தால் தங்களுக்குப்பின் உள்ள பலவீனமான (தமது) சந்ததிகளுக்கு என்ன நிலைமை ஆகும் என்று பயப்படுகிறார்களோ அதுபோன்று அவர்கள் பிற (உறவினர்களின்) அநாதைகளின் விஷயத்திலும் பயந்து கொள்ளட்டும். அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். மேலும், நேர்மையான வார்த்தையை சொல்லட்டும்.
4:9. மக்கள் தங்களுக்குப் பின்னால் ஒன்றுக்கும் இயலாத குழந்தைகளை விட்டுவிட்டு மரணமடைய நேரிட்டால், அப்பொழுது தம் குழந்தைகள் குறித்து எந்த அச்சங்களுக்கு அவர்கள் ஆளாவார்களோ அதனைக் கருத்தில் கொண்டு (இவர்கள் விஷயத்திலும் இப்பொழுது) அவர்கள் அஞ்சிக் கொள்ளட்டும்; எனவே அவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து வாழட்டும்; மேலும் நேர்மையான வார்த்தைகளையே பேசட்டும்!
4:9. தங்களுக்குப்பின், (தங்கள் காரியத்தை நிர்வகிக்கச்) சக்தியற்ற சந்ததிகளைவிட்டுச் சென்றால் அவர்களை(க் குறித்து) பயப்படுகிறார்களே அத்தகையோர்-(அனாதைகள், சிறுவர்கள் சொத்துப் பங்கீடு விஷயத்தில்) பயந்து கொள்ளவும், ஆகவே, அல்லாஹ்வை அஞ்சி (அவர்களுக்கு) நேர்மையான வார்த்தையே கூறவும்.
4:10
4:10 اِنَّ الَّذِيْنَ يَاْكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا‌ ؕ وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَاْكُلُوْنَ விழுங்குகிறார்கள் اَمْوَالَ செல்வங்களை الْيَتٰمٰى அநாதைகளின் ظُلْمًا அநியாயமாக اِنَّمَا எல்லாம் يَاْكُلُوْنَ விழுங்குகிறார்கள் فِىْ بُطُوْنِهِمْ வயிறுகளில் / அவர்களுடைய نَارًا‌ ؕ நெருப்பை وَسَيَـصْلَوْنَ இன்னும் எரிவார்கள் سَعِيْرًا‏ நரக ஜுவாலையில்
4:10. நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்.
4:10. எவர்கள் அநாதைகளின் பொருள்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிற்றில் நிச்சயமாக நெருப்பையே கொட்டிக் கொள்கிறார்கள். பின்னர் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவார்கள்.
4:10. அநாதைகளின் சொத்துகளை யார் அநியாயமாக உண்கிறார்களோ, அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், அதிவிரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் வீசி எறியப்படுவார்கள்.
4:10. நிச்சயமாக அநாதைகளின் பொருட்களை அநியாயமாக தின்கின்றார்களே அத்தகையோர்-அவர்கள் தங்கள் வயிறுகளில் (நிரப்பித்) தின்னுவதெல்லாம் நெருப்பையேதான், இன்னும், அவர்கள் (மறுமையில்) கொழுந்துவிட்டெரியும் நெருப்பினுள் நுழைவார்கள்.
4:11
4:11 يُوْصِيْكُمُ اللّٰهُ فِىْۤ اَوْلَادِكُمْ‌ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚ فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ‌ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ‌ ؕ وَلِاَ بَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ‌ ؕ فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِىْ بِهَاۤ اَوْ دَيْنٍ‌ ؕ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ ۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَـكُمْ نَفْعًا‌ ؕ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا‏
يُوْصِيْكُمُ உங்களுக்கு உபதேசிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் فِىْۤ اَوْلَادِكُمْ‌ பிள்ளைகளில் / உங்கள் لِلذَّكَرِ ஆணுக்கு مِثْلُ போன்று حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ۚ பங்கு/இருபெண்கள் فَاِنْ كُنَّ அவர்கள் இருந்தால் نِسَآءً பெண்களாக فَوْقَ மேல் اثْنَتَيْنِ இரு பெண்கள் فَلَهُنَّ அவர்களுக்கு உண்டு ثُلُثَا மூன்றில் இரண்டு مَا تَرَكَ‌ ۚ எது/விட்டுச் சென்றார் وَاِنْ كَانَتْ இருந்தால் وَاحِدَةً ஒருத்தியாக فَلَهَا அவளுக்கு النِّصْفُ‌ ؕ பாதி وَلِاَ بَوَيْهِ இன்னும் அவருடைய தாய் தந்தைக்கு لِكُلِّ وَاحِدٍ ஒவ்வொருவருக்கும் مِّنْهُمَا அவ்விருவரிலிருந்து السُّدُسُ ஆறில் ஒன்று مِمَّا எதிலிருந்து تَرَكَ விட்டுச் சென்றார் اِنْ كَانَ இருந்தால் لَهٗ அவருக்கு وَلَدٌ ۚ பிள்ளை فَاِنْ لَّمْ يَكُنْ இல்லையெனில் لَّهٗ அவருக்கு وَلَدٌ பிள்ளை وَّوَرِثَهٗۤ இன்னும் அவருக்கு வாரிசானார் اَبَوٰهُ அவருடைய தாய் தந்தை فَلِاُمِّهِ அவருடைய தாய்க்கு الثُّلُثُ‌ ؕ மூன்றில் ஒன்று فَاِنْ كَانَ இருந்தால் لَهٗۤ அவருக்கு اِخْوَةٌ சகோதரர்கள் فَلِاُمِّهِ அவருடைய தாய்க்கு السُّدُسُ ஆறில் ஒன்று مِنْۢ بَعْدِ பின்னர் وَصِيَّةٍ மரண சாசனம் يُّوْصِىْ மரண சாசனம் கூறுகிறார் بِهَاۤ அதை اَوْ دَيْنٍ‌ ؕ அல்லது கடன் اٰبَآؤُكُمْ உங்கள் தந்தைகள் وَاَبْنَآؤُكُمْ ۚ பிள்ளைகள் / உங்கள் لَا تَدْرُوْنَ அறியமாட்டீர்கள் اَيُّهُمْ அவர்களில் யார் اَقْرَبُ நெருங்கியவர் لَـكُمْ உங்களுக்கு نَفْعًا‌ ؕ பலனளிப்பதில் فَرِيْضَةً சட்டமாகும் مِّنَ இருந்து اللّٰهِ ؕ அல்லாஹ் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ மகா ஞானவானாக
4:11. உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:11. உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஓர் ஆணுக்கு இரு பெண்க ளுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆண் இன்றி) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே ஒரு பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்). உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (ஆகவே, இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்.)
4:11. உங்களுடைய பிள்ளைகள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு ஏவுகின்றான்: ஓர் ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானது. (இறந்து போனவருக்கு) இரண்டுக்கு மேற்பட்ட பெண் மக்கள் இருந்தால், இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு அவர்களுக்குரியதாகும். மேலும், ஒரு மகள் மட்டும் இருந்தால் (சொத்தில்) பாதி அவளுக்குரியதாகும். இறந்துபோனவருக்குக் குழந்தைகள் இருப்பின், அவருடைய பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு. மேலும், அவருக்குக் குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே வாரிசுகளாக இருப்பின், தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும்; அவருக்கு சகோதர சகோதரிகளுமிருந்தால் தாய் ஆறிலொரு பங்கிற்கு உரிமை பெறுவாள். இறந்து போனவர் செய்த வஸிய்யத் (மரண சாசனம்) நிறைவேற்றப்பட்ட பின்பும், (அவர் மீதுள்ள) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான் (சொத்துக்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்). உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வதில் யார் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். (இப்பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான். திண்ணமாக, அல்லாஹ் (எல்லா உண்மை நிலைகளையும்) நன்கறிந்தவனாகவும் (பயன்களை) நன்கு புரிந்தவனாகவும் இருக்கின்றான்.
4:11. உங்கள் மக்கள் விஷயத்தில், (சொத்துப்பங்கீட்டில், ஓர்) ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான், ஆகவே, அவர்கள் (ஆணின்றி) இருவருக்கும் அதிகமாக பெண்களாக இருந்தால், அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு பாகம் (அப்பெண்களாகிய) அவர்களுக்குண்டு. மேலும் ஒருத்தியாக அவள் இருந்தால், அவளுக்கு பாதி உண்டு, இன்னும் (உங்களில் இறந்த) அவருக்குப் பிள்ளை இருந்தால், அவருடைய தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற) (சொத்)தில் ஆறிலொன்று உண்டு, (இறந்த அவருக்குப் பிள்ளை இல்லாமலிருந்தால், பெற்றோர் (மட்டும்) அவருக்கு அனந்தரக்காரர்களானால் அப்பொழுது அவருடைய தாய்க்கு மூன்றிலொன்று உண்டு, மற்ற இருபாகமும் தகப்பனுக்குரியதாகும், (இறந்த) அவருக்குப் (பல)சகோதரர்கள் இருந்தால், அப்பொழுது எதனை அவர் (மரண) சாசனம் செய்தாரோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு அல்லது கடனுக்கு (அதை கொடுக்கப்பட்டதற்கு)ப் பின்னர் அவரின் தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு, உங்கள் தந்தைகளோ இன்னும் உங்கள் ஆண்மக்களோ இவர்களில் உங்களுக்குப் பயனளிப்பதில் மிக நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், (ஆகவே, இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கபபட்டுள்ள கட்டளையாகும், நிச்சயமாக அல்லாஹ் மிக்க அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
4:12
4:12 وَلَـكُمْ نِصْفُ مَا تَرَكَ اَزْوَاجُكُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّهُنَّ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَـكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ‌ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ‌ ؕ وَلَهُنَّ الرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ اِنْ لَّمْ يَكُنْ لَّكُمْ وَلَدٌ ۚ فَاِنْ كَانَ لَـكُمْ وَلَدٌ فَلَهُنَّ الثُّمُنُ مِمَّا تَرَكْتُمْ‌ مِّنْۢ بَعْدِ وَصِيَّةٍ تُوْصُوْنَ بِهَاۤ اَوْ دَ يْنٍ‌ ؕ وَاِنْ كَانَ رَجُلٌ يُّوْرَثُ كَلٰلَةً اَوِ امْرَاَةٌ وَّلَهٗۤ اَخٌ اَوْ اُخْتٌ فَلِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ‌ ۚ فَاِنْ كَانُوْۤا اَكْثَرَ مِنْ ذٰ لِكَ فَهُمْ شُرَكَآءُ فِى الثُّلُثِ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصٰى بِهَاۤ اَوْ دَ يْنٍ ۙ غَيْرَ مُضَآرٍّ‌ ۚ وَصِيَّةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَلِيْمٌ ؕ‏
وَلَـكُمْ உங்களுக்கு نِصْفُ பாதி مَا எது تَرَكَ விட்டுச் சென்ற اَزْوَاجُكُمْ உங்கள் மனைவிகள் اِنْ لَّمْ يَكُنْ இல்லையென்றால் لَّهُنَّ அவர்களுக்கு وَلَدٌ ۚ பிள்ளை فَاِنْ كَانَ இருந்தால் لَهُنَّ அவர்களுக்கு وَلَدٌ பிள்ளை فَلَـكُمُ உங்களுக்கு الرُّبُعُ கால் مِمَّا تَرَكْنَ‌ அவர்கள் விட்டுச் சென்ற مِنْۢ بَعْدِ பின்னர் وَصِيَّةٍ மரண சாசனம் يُّوْصِيْنَ மரண சாசனம் செய்கின்றனர் بِهَاۤ அதை اَوْ دَ يْنٍ‌ ؕ அல்லது கடன் وَلَهُنَّ இன்னும் அவர்களுக்கு الرُّبُعُ கால் مِمَّا تَرَكْتُمْ நீங்கள் விட்டுச் சென்ற اِنْ لَّمْ يَكُنْ இல்லையென்றால் لَّكُمْ உங்களுக்கு وَلَدٌ ۚ பிள்ளை فَاِنْ كَانَ இருந்தால் لَـكُمْ உங்களுக்கு وَلَدٌ பிள்ளை فَلَهُنَّ அவர்களுக்கு الثُّمُنُ எட்டில் ஒன்று مِمَّا எதிலிருந்து تَرَكْتُمْ‌ விட்டுச் சென்றீர்கள் مِّنْۢ بَعْدِ பின்னர் وَصِيَّةٍ மரண சாசனம் تُوْصُوْنَ மரண சாசனம் கூறுகிறீர்கள் بِهَاۤ அதை اَوْ دَ يْنٍ‌ ؕ அல்லது கடன் وَاِنْ كَانَ இருந்தால் رَجُلٌ ஓர் ஆண் يُّوْرَثُ வாரிசாக்கப்படுவான் كَلٰلَةً வாரிசு இல்லாதவர் اَوِ امْرَاَةٌ ஒரு பெண் وَّلَهٗۤ இன்னும் அவருக்கு اَخٌ சகோதரன் اَوْ அல்லது اُخْتٌ சகோதரி فَلِكُلِّ وَاحِدٍ ஒவ்வொருவருக்கும் مِّنْهُمَا அவ்விருவரில் السُّدُسُ‌ ۚ ஆறில் ஒன்று فَاِنْ كَانُوْۤا அவர்கள் இருந்தால் اَكْثَرَ அதிகமாக مِنْ ذٰ لِكَ அதை விட فَهُمْ அவர்கள் شُرَكَآءُ பங்குதாரர்கள் فِى الثُّلُثِ மூன்றில் ஒன்றில் مِنْۢ بَعْدِ பின்னர் وَصِيَّةٍ மரண சாசனம் يُّوْصٰى மரண சாசனம் கூறப்படுகிறது بِهَاۤ அதை اَوْ دَ يْنٍ ۙ அல்லது கடன் غَيْرَ அல்லாத مُضَآرٍّ‌ ۚ நஷ்டம் ஏற்படுத்துபவர் وَصِيَّةً நல்லுபதேசம் مِّنَ இருந்து اللّٰهِ‌ ؕ அல்லாஹ் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَلِيْمٌ ؕ‏ மகா சகிப்பாளன்
4:12. இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்; தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
4:12. உங்கள் மனைவி(கள் இறந்து அவர்)களுக்குப் பிள்ளைகளும் இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் உங்களுக்குப் பாதி உண்டு. அவர்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலோ அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் பாகம்தான் (கிடைக்கும்). அதுவும் அவர்களுடைய மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே! உங்களுக்குப் பிள்ளைகள் இல்லாத நிலைமையில் (நீங்கள் இறந்து விட்டாலோ) உங்கள் மனைவிகளுக்கு நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் கால் பாகம்தான் (கிடைக்கும்). உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தாலோ நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் எட்டில் ஒரு பாகம்தான் அவர்களுக்கு உண்டு. அதுவும் (உங்கள்) மரண சாசனத்தையும், கடனையும் நீங்கள் கொடுத்த பின்னரே! (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இறந்து, (அவர்களுக்கு) ஒரே ஒரு சகோதரன் அல்லது ஒரே ஒரு சகோதரி இருந்தால், ஒவ்வொருவருக்கும் (இறந்தவர் விட்டுச் சென்றதில்) ஆறில் ஒரு பாகமுண்டு. இதற்கு அதிகமாக (அதாவது ஒருவருக்கு மேற்பட்டு சகோதரனும், சகோதரியும் அல்லது இரண்டு சகோதரர்கள், சகோதரிகள்) இருந்தால் (சொத்தில்) மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் அனைவரும் சமமான பங்குதாரர்கள். இதுவும் (அவருடைய) மரண சாசனம், கடன் ஆகியவற்றைக் கொடுத்த பின்னரே! எனினும், (இந்தக் கடன், மற்றும் மரண சாசனத்தால் வாரிசுகளில் எவருக்கும்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக இருக்கவேண்டும். (இது) அல்லாஹ்வுடைய நல்லுபதேசமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன், பொறுமையுடையவன் ஆவான்.
4:12. மேலும் (மரணமடைந்த) உங்களுடைய மனைவியர் விட்டுச் சென்ற சொத்தில், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லையெனில் பாதிப்பங்கு உங்களுக்குரியது; அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால், அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் நான்கில் ஒரு பாகம் உங்களுக்குரியது. அவர்கள் செய்த மரண சாஸனம் நிறைவேற்றப்பட்ட பிறகும், அவர்கள் விட்டுச் சென்ற கடன் அடைக்கப்பட்ட பிறகும்தான் (அந்தப் பங்கு உங்களுக்கு உரியதாகும்). உங்களுக்குக் குழந்தைகள் இல்லையானால், நீங்கள் விட்டுச் சென்ற சொத்தில் நான்கில் ஒரு பாகம் மனைவியர்க்குரியது; ஆனால், உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற சொத்திலிருந்து எட்டில் ஒரு பாகம் அவர்களுக்குரியதாகும். நீங்கள் செய்கின்ற வஸிய்யத் மரண சாசனம் நிறைவேற்றப்பட்ட பிறகும் உங்களுடைய கடன் அடைக்கப்பட்ட பிறகும்தான் (அந்தப் பங்கு அவர்களுக்குரியதாகும்). தாய்தந்தையரும் பிள்ளைகளும் இல்லாத (நிலையில், இறந்து போன) ஓர் ஆண் அல்லது ஒரு பெண்ணுடைய சொத்து பங்கிடப்பட வேண்டியிருந்தால், அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருப்பின் அந்தச் சகோதரர் அல்லது சகோதரிக்கு ஆறில் ஒரு பாகம் கிட்டும். உடன்பிறப்புகள் ஒருவருக்கு மேற்பட்டவர்களாயிருந்தால் முழுச் சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தில் அவர்கள் எல்லோரும் பங்கு பெறுவார்கள். ஆனால், இது இறந்து போனவர் செய்திருந்த வஸிய்யத் மரண சாஸனம் நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவருடைய) கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான் (அந்தப் பங்கை அவர்கள் பெறுவார்கள். ஆனால் ஒரு நிபந்தனை:) அந்த மரண சாஸனம் யாருக்கும் கேடு விளைவிக்காத வகையில் அமைந்திருக்க வேண்டும். இது அல்லாஹ் இட்ட கட்டளையாகும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், மென்மையான இயல்புடையவனாகவும் இருக்கின்றான்.
4:12. இன்னும், உங்கள் மனைவிகள் விட்டுச் சென்ற (சொத்தில் அவர்களுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் உங்களுக்குப் பாதி(பாகம்) உண்டு, ஆனால் அவர்களுக்குப் பிள்ளை இருந்தாலோ எதனை அவர்கள் (மரண) சாசனம் செய்தார்களோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு – அல்லது கடனுக்கு (அதை கொடுக்கப்பட்டதற்கு)ம் பின்னர், அவர்கள் விட்டுச் சென்ற (சொத்தில்) உங்களுக்கு நான்கில் ஒன்று உண்டு, மேலும் உங்களுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (உங்கள் மனைவிகளாகிய) அவர்களுக்கு நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் நான்கில் ஒன்று உண்டு, உங்களுக்குப் பிள்ளை இருந்தாலோ எதனை நீங்கள் (மரண) சாசனம் செய்தீர்களோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு அல்லது கடனுக்கு (அதைக் கொடுக்கப்பட்டதற்கு)ம் பின்னர் நீங்கள் விட்டுச்சென்றதில் எட்டில் ஒன்று அவர்களுக்குண்டு, அனந்தரங்கொள்ளப்படுகின்ற வாரிசுகள் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இறந்து அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால் அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும், (இறந்தவர் விட்டுச்சென்றதில்) ஆறில் ஒன்று உண்டு, பின்னர், அவர்கள் அதைவிட அதிகமாக இருந்தால், (சொத்தில்) எதனைக்கொண்டு மரணசாசனம் செய்யப்பட்டதோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு அல்லது கடனுக்கு (அதை கொடுக்கப்பட்டதற்கு)ம் பின்னர், மூன்றிலொன்றில் அவர்கள் (யாவரும்) கூட்டானவர்களாவார்கள், எனினும், (மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகளில் எவருக்கும்) கஷ்டத்தை உண்டு பண்ணாதவராக இருக்க வேண்டும், (இது) அல்லாஹ்வுடைய கட்டளையாகும், இன்னும், அல்லாஹ் நன்கறிகிறவன், சகிப்புத் தன்மையுடையவன்.
4:13
4:13 تِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ ؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ يُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ وَذٰ لِكَ الْفَوْزُ الْعَظِيْمُ‏
تِلْكَ இவை حُدُوْدُ சட்டங்கள் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் وَمَنْ எவர் يُّطِعِ கீழ்ப்படிகிறார் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கு يُدْخِلْهُ நுழைப்பான்/அவரை جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ ஆறுகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَا‌ ؕ அதில் وَذٰ لِكَ الْفَوْزُ இதுதான்/வெற்றி الْعَظِيْمُ‏ மகத்தானது
4:13. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான்; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான வெற்றியாகும்.
4:13. இவை அல்லாஹ்வின் சட்டவரம்புகளாகும். எவர்கள் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் சேர்க்கிறான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். அதிலேயே அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான பெரும் வெற்றியாகும்.
4:13. இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் அவன் நுழையவைப்பான். அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
4:13. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும், எவர் (இவ் விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவரை சுவனபதிகளில் அவன் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள், மேலும், இது மகத்தான வெற்றியாகும்.
4:14
4:14 وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَا وَلَهٗ عَذَابٌ مُّهِيْنٌ‏
وَمَنْ இன்னும் எவர் يَّعْصِ மாறு செய்கிறார் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَرَسُوْلَهٗ இன்னும் அவனுடைய தூதருக்கு وَيَتَعَدَّ இன்னும் மீறுகிறார் حُدُوْدَهٗ அவனுடைய சட்டங்களை يُدْخِلْهُ நுழைப்பான்/அவரை نَارًا நரகத்தில் خَالِدًا நிரந்தரமானவன் فِيْهَا அதில் وَلَهٗ இன்னும் அவனுக்கு عَذَابٌ வேதனை مُّهِيْنٌ‏ இழிவுபடுத்தக்கூடியது
4:14. எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.
4:14. எவன் (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்து, அவன் ஏற்படுத்திய சட்டவரம்புகளை மீறுகிறானோ அவனை நரகத்தில் புகுத்தி விடுவான். அதிலேயே அவன் (என்றென்றும்) தங்கி விடுவான். இழிவுபடுத்தும் வேதனையும் அவனுக்கு உண்டு.
4:14. மேலும், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிய மறுத்து அவனுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்களை அல்லாஹ் நரகத்தில் தள்ளுவான்! அதில் அவர்கள் நிலையாக விழுந்து கிடப்பார்கள். அவர்களுக்கு (அங்கு) இழிவுபடுத்தும் தண்டனையும் இருக்கிறது.
4:14. இன்னும் எவர், (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, (அல்லாஹ்வாகிய) அவன் (ஏற்படுத்திய) வரம்புகளை மீறி விடுகின்றாரோ அவரை (அல்லாஹ்வாகிய) அவன் நரகத்தில் புகுத்தி விடுவான், அதில் அவர் நிரந்தரமாக (த்தங்கி)இருப்பவர், இன்னும் அவருக்கு இழிவுபடுத்தும் வேதனையும் (அதில்) உண்டு.
4:15
4:15 وَالّٰتِىْ يَاْتِيْنَ الْفَاحِشَةَ مِنْ نِّسَآٮِٕكُمْ فَاسْتَشْهِدُوْا عَلَيْهِنَّ اَرْبَعَةً مِّنْكُمْ‌ ۚ فَاِنْ شَهِدُوْا فَاَمْسِكُوْهُنَّ فِى الْبُيُوْتِ حَتّٰى يَتَوَفّٰٮهُنَّ الْمَوْتُ اَوْ يَجْعَلَ اللّٰهُ لَهُنَّ سَبِيْلًا‏
وَالّٰتِىْ எவர்கள் يَاْتِيْنَ செய்கிறார்கள்/ வருகிறார்கள் الْفَاحِشَةَ மானக்கேடானதிற்கு مِنْ இருந்து نِّسَآٮِٕكُمْ பெண்கள்/உங்கள் فَاسْتَشْهِدُوْا சாட்சியாக கொண்டு வாருங்கள் عَلَيْهِنَّ அவர்கள் மீது اَرْبَعَةً நான்கு (நபர்களை) مِّنْكُمْ‌ ۚ உங்களில் فَاِنْ شَهِدُوْا அவர்கள் சாட்சியளித்தால் فَاَمْسِكُوْهُنَّ தடுத்து வையுங்கள்/ அவர்களை فِى الْبُيُوْتِ வீடுகளில் حَتّٰى يَتَوَفّٰٮهُنَّ வரை/கைப்பற்றும்/அவர்களை الْمَوْتُ மரணம் اَوْ அல்லது يَجْعَلَ ஆக்குவான் اللّٰهُ அல்லாஹ் لَهُنَّ அவர்களுக்கு سَبِيْلًا‏ ஒரு வழியை
4:15. உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
4:15. உங்கள் பெண்களில் எவளேனும் விபசாரம் செய்து விட்(டதாகக் குற்றம் சாட்டப்பட்)டால் (அக்குற்றத்தை நிரூபிக்க) அவளுக்காக உங்களில் நான்கு சாட்சிகளை அழையுங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியம் கூறினால் மரணம் அவளுடைய காரியத்தை முடித்துவிடும் வரை அல்லது அல்லாஹ் அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வரை அவளை வீட்டினுள் தடுத்து வைக்கவும்.
4:15. உங்களுடைய பெண்களில் எவர்கள் மானக்கேடான செயல்புரிந்துவிடுகின்றார்களோ, அவர்களின் மீது குற்றத்தை நிரூபிக்க உங்களிலிருந்து நால்வரைச் சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் சாட்சியமளித்துவிட்டால், அப்பெண்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஏதேனுமொரு தீர்ப்பை வழங்கும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்!
4:15. மேலும், உங்கள் பெண்களில் மானக்கேடான செயலைச் செய்தோர்-அவர்கள்மீது (அதை நிரூபிக்க) உங்களிலிருந்து நான்கு நபரை சாட்சிகளாகக் கொண்டு வாருங்கள், அவர்கள் (அதற்கு) சாட்சியம் கூறினால் அப்பொழுது அவர்களை மரணம் கைப்பற்றிவிடும் வரையில் அல்லது அல்லாஹ் அவர்களுக்கு ஒருவழியை ஏற்படுத்தும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்.
4:16
4:16 وَالَّذٰنِ يَاْتِيٰنِهَا مِنْكُمْ فَاٰذُوْهُمَا‌ ۚ فَاِنْ تَابَا وَاَصْلَحَا فَاَعْرِضُوْا عَنْهُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ تَوَّابًا رَّحِيْمًا‏
وَالَّذٰنِ இன்னும் இரு ஆண்கள் يَاْتِيٰنِهَا அதைச் செய்தால் مِنْكُمْ உங்களிலிருந்து فَاٰذُو துன்புறுத்துங்கள் هُمَا‌ ۚ அவ்விருவரையும் فَاِنْ تَابَا அவ்விருவரும் மன்னிப்புக் கோரினால் وَاَصْلَحَا இன்னும் திருத்திக் கொண்டால் فَاَعْرِضُوْا புறக்கணித்துவிடுங்கள் عَنْهُمَا‌ ؕ அவ்விருவரை விட்டு اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் تَوَّابًا பிழை பொறுப்பவனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:16. உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்; அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களை திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான்.
4:16. உங்கள் ஆண்களில் இருவர் மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால் அவ்விருவரையும் (நிந்தித்து, அல்லது அடித்துத்) துன்புறுத்துங்கள். அவ்விருவரும் (தங்கள் குற்றத்திற்காக) வருத்தப்பட்டு (அதிலிருந்து விலகி) ஒழுங்காக நடந்துகொண்டால் அவர்களைப் புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்.
4:16. அதே செயலை உங்களில் இருவர் செய்துவிட்டால், அவ்விருவருக்கும் தண்டனை அளியுங்கள். பிறகு அவ்விருவரும் பாவ மன்னிப்புத் தேடித் தம்மைத் திருத்திக் கொண்டார்களாயின் அவர்களை விட்டுவிடுங்கள்! திண்ணமாக, அல்லாஹ் பாவ மன்னிப்புக் கோருதலை ஏற்றுக்கொள்ளக் கூடியவனாகவும் கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
4:16. உங்களில் இருவர், அ(ம்மானக்கேடான)தைச் செய்துவிட்டால், அவ்விருவரையும். துன்புறுத்துங்கள், அவ்விருவரும் பச்சாதாபப்பட்டு, (அதிலிருந்து விலகி) இருவரும் ஒழுங்காக நடந்து கொண்டால் அவர்களை விட்டுவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
4:17
4:17 اِنَّمَا التَّوْبَةُ عَلَى اللّٰهِ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السُّوْٓءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوْبُوْنَ مِنْ قَرِيْبٍ فَاُولٰٓٮِٕكَ يَتُوْبُ اللّٰهُ عَلَيْهِمْ‌ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏
اِنَّمَا التَّوْبَةُ மன்னிப்பெல்லாம் عَلَى اللّٰهِ அல்லாஹ்விடம் لِلَّذِيْنَ எவர்களுக்கு يَعْمَلُوْنَ செய்கிறார்கள் السُّوْٓءَ தீமையை بِجَهَالَةٍ அறியாமையினால் ثُمَّ பிறகு يَتُوْبُوْنَ திருந்தி திரும்புகின்றனர் مِنْ قَرِيْبٍ அதிசீக்கிரத்தில் فَاُولٰٓٮِٕكَ அவர்கள் يَتُوْبُ பிழை பொறுப்பான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ‌ؕ அவர்கள் மீது وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ மகா ஞானவானாக
4:17. எவர்கள் அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர் விரைவில் மன்னிப்புத் தேடி கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு உண்டு. அல்லாஹ் அவர்களின் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான். இன்னும் அல்லாஹ் நன்கறிந்தோனும். ஞானம் உடையோனுமாக இருக்கின்றான்.
4:17. எவர்கள் தங்கள் அறியாமையினால் பாவத்தைச் செய்து (அதை பாவமென அறிந்து) பின்னர் வருத்தப்பட்டு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) நீங்கி விடுகிறார்களோ அவர்களை மன்னிப்பதுதான் அல்லாஹ்வின் மீது கடமையாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
4:17. நன்கு அறிந்து கொள்ளுங்கள்: அறியாமையின் காரணமாக, ஏதேனும் பாவச் செயலைச் செய்துவிட்டாலும் உடனடியாக எவர்கள் பாவமன்னிப்புக் கோருகின்றார்களோ அவர்களின் பாவ மன்னிப்பை ஏற்றுக்கொள்வதே அல்லாஹ்வின் பொறுப்பாகும். ஆகவே அத்தகையோரை நோக்கி அல்லாஹ் தன் கருணைப் பார்வையை மீண்டும் திருப்புகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான்.
4:17. அல்லாஹ்விடம் தவ்பா அங்கீகாரமாவதெல்லாம், அறியாமையினால் தீமை செய்துவிட்டுப் ,பின்னர், (அதிலிருந்து) சமீபத்தில் (பாவமன்னிப்புத்தேடி) தவ்பாச் செய்கிறார்களே அத்தகையவர்களுக்குத்தான், ஆகவே, அத்தகையோர்-அவர்களின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், மேலும், அல்லாஹ் அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
4:18
4:18 وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ‌ ۚ حَتّٰۤى اِذَا حَضَرَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ اِنِّىْ تُبْتُ الْـــٰٔنَ وَلَا الَّذِيْنَ يَمُوْتُوْنَ وَهُمْ كُفَّارٌ ‌ؕ اُولٰٓٮِٕكَ اَعْتَدْنَا لَهُمْ عَذَابًا اَ لِيْمًا‏
وَلَيْسَتِ இன்னும் இல்லை التَّوْبَةُ பிழை பொறுப்பு لِلَّذِيْنَ எவர்களுக்கு يَعْمَلُوْنَ செய்கிறார்கள் السَّيِّاٰتِ‌ ۚ கெட்டவைகளை حَتّٰۤى வரை اِذَا حَضَرَ வந்தால் اَحَدَهُمُ அவர்களில்ஒருவருக்கு الْمَوْتُ மரணம் قَالَ கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் تُبْتُ திருந்தி விடுகிறேன் الْـــٰٔنَ இப்போது وَلَا கிடையாது الَّذِيْنَ எவர்கள் يَمُوْتُوْنَ இறக்கிறார்கள் وَهُمْ அவர்களோ كُفَّارٌ ؕ நிராகரிப்பாளர்களாக اُولٰٓٮِٕكَ அவர்கள் اَعْتَدْنَا ஏற்படுத்தினோம் لَهُمْ அவர்களுக்கு عَذَابًا வேதனையை اَ لِيْمًا‏ துன்புறுத்தக்கூடியது
4:18. இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, “நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்” என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரணிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
4:18. எவர்கள் பாவங்களைச் செய்துகொண்டேயிருந்து, அவர்களுக்கு மரணம் சமீபித்தபோது ‘‘இதோ நான் (என்) பாவங்களை விட்டுவிட்டேன்'' என்று கூறுகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் (நம்பிக்கை கொள்ளாது நிராகரித்துவிட்டு) நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுகிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
4:18. எவர்கள் தீய செயல்கள் புரிந்தவாறு இருந்து மரணம் நெருங்கும்போது ‘நான் இப்போது மன்னிப்புக் கோருகின்றேன்’ என்று கூறுகின்றார்களோ அவர்களுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது. மேலும் இறுதி மூச்சுவரை நிராகரிப்பிலேயே மூழ்கியிருப்பவர்களுக்கும் பாவமன்னிப்புக் கிடையாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்துள்ளோம்.
4:18. மேலும், தீயவற்றைச் செய்து கொண்டேயிருப்போருக்கு, -முடிவில் அவர்களில் ஒருவருக்கு மரணம் (சம்பவிக்க) ஆஜரானபோது “இப்போது நான் (என் பாவங்களுக்குப்) பச்சாதாபப்படுகிறேன்” என்று கூறுகின்றாரே! அவருக்கு-மற்றும் (விசுவாசம் கொள்ளாது நிராகரித்து விட்டு) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகிறார்களே, அவர்களுக்கும் தவ்பா (பாவமன்னிப்பு) அங்கீகாரமில்லை, அத்தகையோர்-(மன்னிக்கப்படுவதில்லை) அவர்களுக்காகத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம்.
4:19
4:19 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَحِلُّ لَـكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا‌ ؕ وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَيْتُمُوْهُنَّ اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ‌ ۚ وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ‌ ۚ فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا شَيْــٴًـــا وَّيَجْعَلَ اللّٰهُ فِيْهِ خَيْرًا كَثِيْرًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا يَحِلُّ ஹலால் ஆகாது لَـكُمْ உங்களுக்கு اَنْ تَرِثُوا நீங்கள்அனந்தரம் கொள்வது النِّسَآءَ பெண்களை كَرْهًا‌ ؕ பலவந்தமாக وَلَا تَعْضُلُو தடுக்காதீர்கள் هُنَّ அவர்களை لِتَذْهَبُوْا நீங்கள் செல்வதற்காக بِبَعْضِ சிலதைக் கொண்டு مَاۤ எதை اٰتَيْتُمُو கொடுத்தீர்கள் هُنَّ அவர்களுக்கு اِلَّاۤ தவிர اَنْ يَّاْتِيْنَ அவர்கள் செய்வது بِفَاحِشَةٍ ஒரு மானக்கேடானதை مُّبَيِّنَةٍ‌ ۚ பகிரங்கமானது وَعَاشِرُو இன்னும் வாழுங்கள் هُنَّ அவர்களுடன் بِالْمَعْرُوْفِ‌ ۚ நல்ல முறையில் فَاِنْ كَرِهْتُمُو நீங்கள் வெறுத்தால் هُنَّ அவர்களை فَعَسٰۤى اَنْ تَكْرَهُوْا நீங்கள் வெறுக்கலாம் شَيْــٴًـــا ஒன்றை وَّيَجْعَلَ இன்னும் ஆக்குவான் اللّٰهُ அல்லாஹ் فِيْهِ அதில் خَيْرًا நன்மையை كَثِيْرًا‏ அதிகமான
4:19. நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது; பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்; இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.
4:19. நம்பிக்கையாளர்களே! ஒரு பெண்ணை (அவள் உங்களை விரும்பாது வெறுக்க, இறந்தவனுடைய பொருளாக மதித்து அவளைப்) பலவந்தமாக அடைவது உங்களுக்கு ஆகுமானதல்ல. மேலும், பகிரங்கமாக ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி (உங்கள் மனைவியாக வந்த) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களை (உங்கள் வீட்டில்) நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள். மேலும், அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத் தன்மையுடனும்) நடந்துகொள்ளுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்தபோதிலும் சரியே! ஏனென்றால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் பல நன்மைகளை வைத்திருக்கலாம்.
4:19. இறைநம்பிக்கை கொண்டவர்களே! விதவைப் பெண்களுக்கு பலவந்தமான வாரிசுதாரர்களாய் நீங்கள் திகழ்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! மேலும், அவர்களுக்கு நீங்கள் அளித்த மஹ்ரின் ஒரு பகுதியைப் பறித்துக் கொள்வதற்காக அவர்களைக் கஷ்டப்படுத்துவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல; அவர்கள் ஏதேனும் வெளிப்படையான இழிசெயலைச் செய்தாலேயன்றி! அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக் கூடும்.
4:19. விசுவாசங்கொண்டோரே! பெண்களை (இறந்தவருடைய சொத்தாக மதித்து அவர்களைப்) பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல, இன்னும், பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்தாலன்றி (உங்கள்) பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை (எடுத்துக்)கொண்டு போவதற்காக அவர்களை நீங்கள் தடுத்தும் வைக்காதீர்கள், மேலும், அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள், அவர்களை நீங்கள் வெறுத்துவிடுவீர்களானால் - நீங்கள் ஒன்றை வெறுக்கக்கூடும், (அவ்வாறு வெறுக்கக்கூடிய) அதில் அல்லாஹ் அநேக நன்மைகளை ஆக்கக்கூடும்.
4:20
4:20 وَاِنْ اَرَدْتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ ۙ وَّاٰتَيْتُمْ اِحْدٰٮهُنَّ قِنْطَارًا فَلَا تَاْخُذُوْا مِنْهُ شَيْئًا‌ ؕ اَ تَاْخُذُوْنَهٗ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا‏
وَاِنْ اَرَدْتُّمُ நீங்கள் நாடினால் اسْتِبْدَالَ மாற்றுவதற்கு زَوْجٍ ஒரு மனைவியை مَّكَانَ இடத்தில் زَوْجٍ ۙ ஒரு மனைவி وَّاٰتَيْتُمْ நீங்கள் கொடுத்தீர்கள் اِحْدٰٮهُنَّ அவர்களில்ஒருத்திக்கு قِنْطَارًا குவியலை فَلَا تَاْخُذُوْا எடுக்காதீர்கள் مِنْهُ அதிலிருந்து شَيْئًا‌ ؕ எதையும் اَ تَاْخُذُوْنَهٗ அதை எடுக்கிறீர்களா? بُهْتَانًا அபாண்டமாக وَّاِثْمًا இன்னும் பாவமாக مُّبِيْنًا‏ பகிரங்கமானது
4:20. நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?
4:20. ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவளு)க்குப் பதிலாக மற்றொரு பெண்ணை (மணந்துகொள்ள) நீங்கள் கருதினால் (நீக்கிவிட விரும்பும்) அந்த முந்திய மனைவிக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலைக் கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். அபாண்டமாகவும் பகிரங்கமாகவும் ஒரு குற்றத்தைச் சுமத்தி அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள் பறித்துக் கொள்ளலாமா?
4:20. நீங்கள் ஒரு மனைவிக்குப் பதிலாக வேறு ஒருத்தியை மனைவியாகக் கொண்டு வர நாடினால் நீங்கள் அவளுக்கு பணக்குவியலையே (மஹ்ராக) கொடுத்திருந்தாலும் கூட, அதிலிருந்து கொஞ்சம் கூட திரும்பப் பெறாதீர்கள். நீங்கள் அவதூறு கூறியும், வெளிப்படையாக கொடுமை இழைத்தும் அதனைத் திரும்பப் பெறுவீர்களா?
4:20. மேலும் ஒரு மனைவி(யை நீக்கிவிட்டு அவள்) இடத்தில் மற்றொரு மனைவியை மாற்றி (மணந்து)க்கொள்ள நீங்கள் நாடினால் (நீக்கிவிட விரும்பும்) அவர்களில் ஒருத்திக்கு நீங்கள் ஒரு (பொற்)குவியலைக் கொடுத்திருந்தபோதிலும் அதிலிருந்து எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள், அபாண்டமாகவும், பகிரங்கப் பாவமாகவும் அ(வளுக்கு நீங்கள் கொடுத்த)தை நீங்கள்(திருப்பி) எடுக்கிறீர்களா?
4:21
4:21 وَ كَيْفَ تَاْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا‏
وَ كَيْفَ எவ்வாறு ? تَاْخُذُوْنَهٗ அதை எடுப்பீர்கள் وَقَدْ திட்டமாக اَفْضٰى கலந்து விட்டார் بَعْضُكُمْ உங்களில் சிலர் اِلٰى بَعْضٍ சிலருடன் وَّاَخَذْنَ (அப்பெண்கள்) வாங்கி இருக்கிறார்கள் مِنْكُمْ உங்களிடம் مِّيْثَاقًا வாக்குறுதியை غَلِيْظًا‏ உறுதியானது
4:21. அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!
4:21. அதை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம். உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதியை (பலரும் அறிய) பெற்று உங்களில் ஒருவர் மற்றொருவருடன் (சேர்ந்து) கலந்து விட்டீர்களே!
4:21. சந்தேகமின்றி நீங்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து இன்பம் துய்த்திருக்கின்றீர்களே! மேலும் அந்த மனைவியர் உங்களிடமிருந்து உறுதியான ஒப்பந்தத்தையும் பெற்றிருக்கின்றார்களே! (அவ்வாறிருக்க) அப்பொருளை அவர்களிடமிருந்து எவ்வாறு திரும்பப் பெற முடியும்?
4:21. மேலும், உங்களில் சிலர் மற்ற சிலருடன் திட்டமாக (சேர்ந்து) கலந்து விட்டீர்கள், உங்களிடமிருந்து உறுதியான வாக்குறுதியை (அப்பெண்களாகிய) அவர்கள் எடுத்தும் இருக்கிறார்கள், (இந்நிலையில்) அதனை நீங்கள் எவ்வாறு எடுத்துக்கொள்வீர்கள்?
4:22
4:22 وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ ؕ اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ وَسَآءَ سَبِيْلًا‏
وَلَا تَنْكِحُوْا மணம் புரியாதீர்கள் مَا எவர்களை نَكَحَ மணம் புரிந்தார் اٰبَآؤُكُمْ உங்கள் தந்தைகள் مِّنَ இருந்து النِّسَآءِ பெண்கள் اِلَّا தவிர مَا قَدْ سَلَفَ‌ ؕ எது/முன்னர் நடந்து விட்டது اِنَّهٗ நிச்சயமாக இது كَانَ இருக்கிறது فَاحِشَةً மானக்கேடானதாக وَّمَقْتًا ؕ இன்னும் வெறுக்கப்பட்டதாக وَسَآءَ இன்னும் கெட்டுவிட்டது سَبِيْلًا‏ பழக்கம்
4:22. முன்னால் நடந்து போனதைத் தவிர, (இனிமேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும்.
4:22. முன்னர் நடந்துபோன சம்பவங்களைத் தவிர உங்கள் தந்தைகள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும் (அவர்கள் இறந்த பின்னர் இனி) நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கக்கூடியதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.
4:22. மேலும், உங்கள் தந்தையர் மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளாதீர்கள்! முன்னால் நடந்தது நடந்துவிட்டது. உண்மையில் இது ஒரு மானக்கேடான, வெறுக்கத்தக்க செயலாகும். கீழ்த்தரமான நடத்தையுமாகும்.
4:22. நிச்சயமாக, முன்னர் (அறியாமைக்காலத்தில்) நடந்துவிட்டதைத் தவிர உங்கள் தந்தைகள் (இறப்பிற்குப்பின் அவர்கள்) மணம் செய்துகொண்ட பெண்களில் எவரையும், நீங்கள் மணம் செய்து கொள்ளாதீர்கள், நிச்சயமாக இது மானக்கேடானதாகவும் (அல்லாஹ்வின்) கோபத்திற்குரியதாகவும் இருக்கிறது, இன்னும் வழியால் அதுமிகக் கெட்டதுமாகும்.
4:23
4:23 حُرِّمَتْ عَلَيْكُمْ اُمَّهٰتُكُمْ وَبَنٰتُكُمْ وَاَخَوٰتُكُمْ وَعَمّٰتُكُمْ وَخٰلٰتُكُمْ وَبَنٰتُ الْاَخِ وَبَنٰتُ الْاُخْتِ وَاُمَّهٰتُكُمُ الّٰتِىْۤ اَرْضَعْنَكُمْ وَاَخَوٰتُكُمْ مِّنَ الرَّضَاعَةِ وَ اُمَّهٰتُ نِسَآٮِٕكُمْ وَرَبَآٮِٕبُكُمُ الّٰتِىْ فِىْ حُجُوْرِكُمْ مِّنْ نِّسَآٮِٕكُمُ الّٰتِىْ دَخَلْتُمْ بِهِنَّ فَاِنْ لَّمْ تَكُوْنُوْا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَاۤٮِٕلُ اَبْنَآٮِٕكُمُ الَّذِيْنَ مِنْ اَصْلَابِكُمْۙ وَاَنْ تَجْمَعُوْا بَيْنَ الْاُخْتَيْنِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا ۙ‏
حُرِّمَتْ தடுக்கப்பட்டுள்ளது عَلَيْكُمْ உங்கள் மீது اُمَّهٰتُكُمْ உங்கள் தாய்கள் وَبَنٰتُكُمْ இன்னும் உங்கள் மகள்கள் وَاَخَوٰتُكُمْ இன்னும் உங்கள்சகோதரிகள் وَعَمّٰتُكُمْ இன்னும் உங்கள் மாமிகள் وَخٰلٰتُكُمْ இன்னும் உங்கள் தாயின் சகோதரிகள் وَبَنٰتُ இன்னும் மகள்கள் الْاَخِ சகோதரனின் وَبَنٰتُ இன்னும் மகள்கள் الْاُخْتِ சகோதரியின் وَاُمَّهٰتُكُمُ இன்னும் உங்கள் தாய்கள் الّٰتِىْۤ எவர்கள் اَرْضَعْنَكُمْ பாலூட்டினர்/ உங்களுக்கு وَاَخَوٰتُكُمْ இன்னும் உங்கள்சகோதரிகள் مِّنَ الرَّضَاعَةِ பால்குடியினால் وَ اُمَّهٰتُ தாய்கள் نِسَآٮِٕكُمْ உங்கள்மனைவிகளின் وَرَبَآٮِٕبُكُمُ இன்னும் உங்கள் வளர்ப்புப் பிள்ளைகள் الّٰتِىْ எவர்கள் فِىْ حُجُوْرِكُمْ உங்கள் மடிகளில் مِّنْ இருந்து نِّسَآٮِٕكُمُ உங்கள் மனைவிகள் الّٰتِىْ எவர்கள் دَخَلْتُمْ உறவு கொண்டீர்கள் بِهِنَّ அவர்களுடன் فَاِنْ لَّمْ تَكُوْنُوْا நீங்கள் இல்லையென்றால் دَخَلْتُمْ உறவு கொண்டீர்கள் بِهِنَّ அவர்களுடன் فَلَا جُنَاحَ குற்றமே இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது وَحَلَاۤٮِٕلُ இன்னும் மனைவிகள் اَبْنَآٮِٕكُمُ உங்கள் மகன்களின் الَّذِيْنَ எவர்கள் مِنْ இருந்து اَصْلَابِكُمْۙ உங்கள் முதுகந்தண்டு وَاَنْ تَجْمَعُوْا இன்னும் நீங்கள் ஒன்று சேர்ப்பது بَيْنَ மத்தியில் الْاُخْتَيْنِ இரு சகோதரிகள் اِلَّا தவிர مَا எது قَدْ سَلَفَ‌ؕ முன்னர் நடந்தது اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கின்றான் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا ۙ‏ பெரும் கருணையாளனாக
4:23. உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும்; உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்; அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது; ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்.
4:23. உங்கள் தாய்மார்களும், உங்கள் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் பெண்பிள்ளைகளும், உங்கள் சகோதரியின் பெண்பிள்ளைகளும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியின் தாய்மார்களும் (ஆகிய இவர்களை நீங்கள் திருமணம் செய்து கொள்வது) உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. அவ்வாறே நீங்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளுடன் நீங்கள் வீடு கூடிவிட்டால் அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளையும் (நீங்கள் திருமணம் செய்வது கூடாது). அவளைத் திருமணம் செய்த பின்னர் அவளுடன் வீடு கூடாதிருந்தாலோ (அவளை நீக்கிவிட்டு அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த மகளை திருமணம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவிகளையும் (நீங்கள் திருமணம் செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது). இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்த்து வைப்பதும் கூடாது. இதற்கு முன்னர் நடந்துவிட்டவற்றைத் தவிர (அறியாத நிலைமையில் முன்னர் நீங்கள் செய்துவிட்டதை அல்லாஹ் மன்னித்துவிடுவான். ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.
4:23. (பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது: உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள் மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன் பிறந்த சகோதரிகள்; மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள்; மேலும், உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், மேலும், உங்கள் பால்குடிச் சகோதரிகள், மேலும் உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து, உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்விகள், ஆனால் (திருமணம் ஆகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து, அவர்களின் புதல்விகளை மணமுடித்துக் கொள்வதில்) உங்கள் மீது எத்தகையக் குற்றமும் இல்லை. மேலும் உங்கள் முதுகுத் தண்டுகளிலிருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவிய ராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன.) ஆனால் முன்னால் நடந்தது நடந்துவிட்டது. திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
4:23. உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், (உங்கள்), சகோதரனுடைய புதல்விகளும், (உங்கள்), சகோதரியுடைய புதல்விகளும், உங்களுக்குப் பாலூட்டிய உங்கள் (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடிச் சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும், உங்கள்மீது (அவர்களைத் திருமணம் செய்வது) விலக்கப்பட்டுள்ளது, இன்னும் நீங்கள் உடலுறவு கொண்டு விட்டீர்களே, அத்தகைய உங்கள் மனைவியரிலிருந்து (முந்தைய கணவனிடத்துப் பிறந்து) உங்கள் மடிகளில் வளர்ந்துவரும் பெண்மக்களையும் (நீங்கள் திருமணம் செய்வது விலக்கப்பட்டிருக்கிறது). ஆனால், (நீங்கள் மணம் செய்து,) அவர்களுடன் உடலுறவு கொள்ளவில்லையானால், (அவளை விலக்கிவிட்டு அவளுடைய மகளை மணம்செய்து கொள்வதில்,) உங்கள்மீது குற்றமில்லை, இன்னும், உங்களுடைய முதுகந்தண்டுகளிலிருந்து உண்டான உங்கள் புதல்வர்களின் மனைவியர்களையும் (நீங்கள் மணம் செய்துகொள்வது விலக்கப்பட்டிருக்கிறது.) இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்த்துக்கொள்வதும் (விலக்கப்பட்டிருக்கிறது). இதற்கு முன்னர் நடந்துவிட்டவைகளைத் தவிர, (அவற்றை) நிச்சயமாக அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
4:24
4:24 وَّالْمُحْصَنٰتُ مِنَ النِّسَآءِ اِلَّا مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ۚ كِتٰبَ اللّٰهِ عَلَيْكُمْ‌ۚ وَاُحِلَّ لَـكُمْ مَّا وَرَآءَ ذٰ لِكُمْ اَنْ تَبْتَـغُوْا بِاَمْوَالِكُمْ مُّحْصِنِيْنَ غَيْرَ مُسَافِحِيْنَ‌ ؕ فَمَا اسْتَمْتَعْتُمْ بِهٖ مِنْهُنَّ فَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ فَرِيْضَةً‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا تَرٰضَيْـتُمْ بِهٖ مِنْۢ بَعْدِ الْـفَرِيْضَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا‏
وَّالْمُحْصَنٰتُ மணமானவர்கள் مِنَ இருந்து النِّسَآءِ பெண்களில் اِلَّا தவிர مَا எவர்கள் مَلَـكَتْ சொந்தமாக்கிக் கொண்டது اَيْمَانُكُمْ‌ۚ உங்கள் வலக்கரங்கள் كِتٰبَ சட்டம் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ‌ۚ உங்கள் மீது وَاُحِلَّ அனுமதிக்கப்பட்டது لَـكُمْ உங்களுக்கு مَّا எவர்கள் وَرَآءَ தவிர ذٰ لِكُمْ இவர்(கள்) اَنْ تَبْتَـغُوْا நீங்கள் தேடுவது بِاَمْوَالِكُمْ உங்கள் செல்வங்கள் மூலம் مُّحْصِنِيْنَ ஒழுக்கமுள்ளவர்களாக غَيْرَ مُسَافِحِيْنَ‌ ؕ விபச்சாரர்களாக இல்லாமல் فَمَا எவள் اسْتَمْتَعْتُمْ சுகம்அனுபவித்தீர்கள் بِهٖ அவளிடம் مِنْهُنَّ அவர்களில் فَاٰ تُو கொடுங்கள் هُنَّ அவர்களுக்கு اُجُوْر மஹர்களை هُنَّ அவர்களுடைய فَرِيْضَةً‌ ؕ கடமையாக وَلَا جُنَاحَ குற்றமில்லை عَلَيْكُمْ உங்கள் மீது فِيْمَا எதில் تَرٰضَيْـتُمْ விரும்பினீர்கள் بِهٖ அதில் مِنْۢ بَعْدِ பின்னர் الْـفَرِيْضَةِ‌ ؕ கடமை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلِيْمًا நன்கறிபவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:24. இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்.
4:24. கணவனுள்ள பெண்களையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்வது விலக்கப் பட்டுள்ளது). (எனினும், நிராகரிப்பவர்களுடன் நிகழ்ந்த போரில் பிடிக்கப்பட்டு உங்கள் ஆதிக்கத்தில் இருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர. (இவர்களை நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம்.) இவை உங்கள் மீது விதிக்கப்பட்ட அல்லாஹ்வின் கட்டளையாகும். மேற்கூறப்பட்ட பெண்களைத் தவிர மற்ற பெண்களை உங்கள் செல்வங்களின் மூலம் (திருமணக் கட்டணமாகிய ‘மஹரைக்' கொடுத்து சட்டரீதியாக திருமணம் செய்யத்) தேடிக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பத்தினித்தனம் உள்ளவர்களாக இருக்கவேண்டும், விபசாரர்களாக இருக்கக் கூடாது. நீங்கள் திருமணம் செய்துகொண்ட பெண்களில் எவர்களோடு வீடு கூடிவிட்டீர்களோ அவர்களுக்கு குறிப்பிட்ட ‘மஹரை' அவர்களிடம் (குறைவின்றி கண்டிப்பாக) நீங்கள் கொடுத்துவிடுங்கள். எனினும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர் (அதைக் குறைக்கவோ கூட்டவோ) நீங்கள் இருவரும் சம்மதப்பட்டால் அதனால் உங்கள் மீது ஒரு குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், (உங்கள் செயலை) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
4:24. மேலும், பிறருக்கு மனைவியராக இருக்கின்றவர்களும் (உங்களுக்குத் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் போரில்) உங்கள் கைவசம் வந்துவிட்ட பெண்கள் விதிவிலக்கானவர்கள். இது இறைச் சட்டமாகும். இதைப் பின்பற்றுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மற்றப் பெண்களை உங்கள் செல்வத்தின் வாயிலாக (மஹ்ர் கொடுத்து) அடைந்து கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; (ஆனால் இந்த நிபந்தனையுடன்:) திருமண வரையறைக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டு வந்துவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் நீங்கள் தகாத உறவில் ஈடுபடக்கூடாது. நீங்கள் அவர்களிடம் அனுபவித்த இன்ப சுகத்திற்குப் பதிலாக அவர்களின் மஹ்ரை கடமை என உணர்ந்து அதனைக் கட்டாயம் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! ஆயினும் மஹ்ரை நிர்ணயம் செய்த பின்பு ஒருவருக்கொருவர் மனநிறைவோடு நீங்கள் ஏதேனும் உடன்பாடு செய்துகொண்டால் உங்கள் மீது தவறேதுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
4:24. பெண்களில் கணவனுள்ளவர்களும் (திருமணம் செய்து கொள்ளப்படுவதற்கு விலக்கப்பட்டுள்ளனர், நிராகரிப்போருடன் நிகழ்ந்த யுத்தத்தில் பிடிக்கப்பட்டு) உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்ட (அடிமைப்) பெண்களைத் தவிர, (இவ்வாறு) உங்கள் மீது அல்லாஹ்வின் கட்டளையாக (இது விதியாக்கப்பட்டுள்ளது.) இவர்களைத் தவிர மற்ற பெண்களைத் திருமணம் செய்பவர்களாக விபச்சாரம் செய்யாதவர்களாக (திருமண அன்பளிப்பாக) உங்கள் செல்வங்களைக்கொண்டு (மஹரைக்குறிப்பிட்டு சட்டரீதியாக திருமணத்தின் மூலம்) தேடிக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டும் உள்ளது, ஆகவே, (இவ்வாறு மணமுடித்த பெண்களாகிய) அவர்களிடமிருந்து எதை நீங்கள் சுகமனுபவித்தீர்களோ, (அதற்காக) அவர்களுக்குக் குறிப்பிட்ட மஹரைக் கட்டாயக் கடமையாக அவர்களுக்கு (க்குறைவின்றி) நீஙகள் கொடுத்து விடுங்கள், மேலும், மஹரைக் குறிப்பிட்டதன் பின்னர், (அதனைக் குறைக்கவோ, கூட்டவோ) நீங்கள் ஒருவருக்கொருவர் பொருந்திக்கொள்வதில் உங்கள் மீது யாதொரு குற்றமுமில்லை, நிச்சயமாக (உங்கள் செயலை) அல்லாஹ் மிக்க அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
4:25
4:25 وَمَنْ لَّمْ يَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا اَنْ يَّنْكِحَ الْمُحْصَنٰتِ الْمُؤْمِنٰتِ فَمِنْ مَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ مِّنْ فَتَيٰـتِكُمُ الْمُؤْمِنٰتِ‌ ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِاِيْمَانِكُمْ‌ ؕ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍ‌ ۚ فَانْكِحُوْهُنَّ بِاِذْنِ اَهْلِهِنَّ وَاٰ تُوْهُنَّ اُجُوْرَهُنَّ بِالْمَعْرُوْفِ مُحْصَنٰتٍ غَيْرَ مُسٰفِحٰتٍ وَّلَا مُتَّخِذٰتِ اَخْدَانٍ‌ ؕ فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ اَ تَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ‌ ؕ ذٰ لِكَ لِمَنْ خَشِىَ الْعَنَتَ مِنْكُمْ‌ ؕ وَاَنْ تَصْبِرُوْا خَيْرٌ لَّكُمْ‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
وَمَنْ எவர் لَّمْ يَسْتَطِعْ சக்தி பெறவில்லை مِنْكُمْ உங்களில் طَوْلًا பொருளாதாரம் اَنْ يَّنْكِحَ மணம் முடிப்பதற்கு الْمُحْصَنٰتِ சுதந்திர பெண்களை الْمُؤْمِنٰتِ நம்பிக்கைகொண்ட பெண்களை فَمِنْ ஆகவே, இருந்து مَّا எவர்கள் مَلَـكَتْ சொந்தமாக்கின اَيْمَانُكُمْ உங்கள் வலக்கரங்கள் مِّنْ இருந்து فَتَيٰـتِكُمُ உங்கள் அடிமைப் பெண்கள் الْمُؤْمِنٰتِ‌ ؕ நம்பிக்கைகொண்ட பெண்கள் وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِاِيْمَانِكُمْ‌ ؕ உங்கள் நம்பிக்கையை بَعْضُكُمْ உங்களில் சிலர் مِّنْۢ بَعْضٍ‌ ۚ சிலரைச் சேர்ந்தவரே فَانْكِحُو ஆகவே மணமுடியுங்கள் هُنَّ அவர்களை بِاِذْنِ அனுமதியுடன் اَهْلِهِنَّ அவர்களின் உரிமையாளரின் وَاٰ تُوْهُنَّ கொடுங்கள் / அவர்களுக்கு اُجُوْرَهُنَّ அவர்களுடைய மஹர்களை بِالْمَعْرُوْفِ நல்ல முறையில் مُحْصَنٰتٍ பத்தினிகளாக غَيْرَ مُسٰفِحٰتٍ விபச்சாரிகளாக இல்லாமல் وَّلَا مُتَّخِذٰتِ ஆக்கிக் கொள்ளாதவர்களாக اَخْدَانٍ‌ ؕ ரகசிய நண்பர்களை فَاِذَاۤ اُحْصِنَّ அல்லது மணமுடிக்கப்பட்டால் فَاِنْ اَ تَيْنَ அவர்கள் செய்தால் بِفَاحِشَةٍ மானக்கேடானதை فَعَلَيْهِنَّ அவர்கள் மீது نِصْفُ பாதி مَا எது عَلَى மீது الْمُحْصَنٰتِ சுதந்திரமானபெண்கள் مِنَ இருந்து الْعَذَابِ‌ ؕ தண்டனை ذٰ لِكَ இது لِمَنْ எவருக்கு خَشِىَ பயந்தார் الْعَنَتَ பாவத்தை مِنْكُمْ‌ ؕ உங்களில் وَاَنْ تَصْبِرُوْا நீங்கள்சகித்திருப்பது خَيْرٌ நன்று لَّكُمْ‌ ؕ உங்களுக்கு وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
4:25. உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ - அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
4:25. உங்களில் எவருக்குச் சுதந்திரமான முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களிலிருந்து திருமணம் செய்து கொள்ளலாம். அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை நன்கறிந்தே இருக்கிறான். (இவ்வடிமைப் பெண்களைக் கேவலமாக எண்ணாதீர்கள். நம்பிக்கையாளர்களாகிய) உங்களில் எவரும் மற்றவருக்குச் சமம்தான். ஆகவே, (நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களையும்) அவர்களுடைய எஜமானனின் அனுமதியைப் பெற்று சட்டப்படி அவர்களுக்குரிய மஹரையும் கொடுத்தே நீங்கள் அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்க வேண்டும். விபசாரிகளாகவோ அல்லது கள்ள நட்புக் கொள்பவர்களாகவோ இருக்கக்கூடாது. திருமணம் செய்துகொள்ளப்பட்ட (அடிமைப்) பெண் விபசாரம் செய்து விட்டால் அவளுக்கு (இத்தகைய குற்றம் செய்த அடிமையல்லாத) திருமணமான சுதந்திரமான பெண்ணுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதி விதிக்கப்படும். தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடுமென பயப்படுகிறாரோ அவருக்குத்தான் இந்த அனுமதி (அதாவது அடிமைப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது.) எனினும், நீங்கள் சகித்துக்கொண்டு பொறுத்திருப்பது (முடியுமாயின் அதுவே) உங்களுக்கு நன்று. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
4:25. மேலும், ஈமான் இறைநம்பிக்கை கொண்ட அடிமைகளல்லாத பெண்களைத் திருமணம் செய்து கொள்ள உங்களில் எவர் வசதி வாய்ப்புப் பெறவில்லையோ அவர் உங்கள் ஆதிக்கத்தில் இருக்கின்ற இறைநம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளட்டும்! அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை நன்கறியக்கூடியவன். நீங்கள் ஒருவர் இன்னொருவரிலிருந்து தோன்றியிருக்கிறீர்கள். எனவே அவ்வடிமைப் பெண்களை, அவர்களைப் பராமரிப்போரின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்! மேலும் அவர்களுக்குரிய மஹ்ரை நல்ல முறையில் அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அப்பெண்கள் திருமண வரையறைக்கு உட்பட்டவர்களாகவும், தகாத உறவில் ஈடுபடாதவர்களாகவும், மற்றும் கள்ளக் காதலர்களை வைத்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக (இந்த வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன!) மேலும் அவ்வடிமைப் பெண்கள் திருமண வரம்புக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு ஒழுக்கக்கேடான செயல் எதனையும் செய்து விட்டால் அடிமைகளல்லாத பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதி அவர்களுக்கு உண்டு. திருமணம் முடிக்காத காரணத்தால் இறையச்சமுடைய வாழ்விலிருந்து பிறழ்ந்து விடுவோமோ என்ற அச்சமுடையவர்க்கே (அடிமைப் பெண்களை மணந்து கொள்ளலாம் எனும்) இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது. ஆயினும், நீங்கள் பொறுமையை மேற்கொள்வதே உங்களுக்குச் சிறந்ததாகும். மேலும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணை பொழிபவனும் ஆவான்.
4:25. மேலும், உங்களில் எவர் சுதந்திரமுள்ள விசுவாசியான பெண்களைத் திருமணம் செய்து கொள்ள (பொருளாதார) வசதியால் சக்தி பெறவில்லையோ, அவர், விசுவாசமுள்ள உங்களுடைய அடிமைப் பெண்களில், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டதிலிருந்து (திருமணம் செய்து கொள்ளலாம்). இன்னும் அல்லாஹ் உங்களுடைய விசுவாசத்தை நன்கு அறிந்து இருக்கின்றான், உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்களாவர், ஆகவே (அப்பெண்கள், பத்தினித்தனமான) பரிசுத்தமானவர்களாக விபச்சாரம் செய்யாதவர்களாக, மேலும் கள்ள நட்புக் கொள்ளாதவர்களாக இருக்கும் நிலையில் - அவர்களுடைய எஜமானனின் அனுமதி பெற்று மணம் முடித்துக் கொள்ளுங்கள், அவர்களுக்குரிய மஹரையும் அறியப்பட்ட (நியாயமான) முறையில் அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள், ஆகவே, (இவ்வாறு) திருமணம் செய்யப்பட்டால் (அதற்குப்)பின் (அடிமைப்பெண்களான) அவர்கள் விபச்சாரம் செய்துவிட்டால் (அடிமையல்லாத) திருமணமான உரிமைப் பெண்களுக்கு விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அவர்கள்மீது உண்டு, (அடிமைப் பெண்ணை திருமணம் செய்யும்) இது உங்களில் எவர், (மனைவியின்றி இருந்து) விபச்சாரத்தை பயந்தாரோ அவருக்குத்தான், இன்னும், நீங்கள் பொறுத்திருப்பது உங்களுக்கு நன்று, மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
4:26
4:26 يُرِيْدُ اللّٰهُ لِيُبَيِّنَ لَـكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ وَيَتُوْبَ عَلَيْكُمْ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
يُرِيْدُ நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் لِيُبَيِّنَ தெளிவுபடுத்துவதற்கு لَـكُمْ உங்களுக்கு وَيَهْدِيَكُمْ இன்னும் நேர்வழி நடத்துவதற்கு/உங்களை سُنَنَ வழிகளை الَّذِيْنَ எவர்களின் مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் وَيَتُوْبَ இன்னும் பிழை பொறுப்பதற்கு عَلَيْكُمْ‌ ؕ உங்கள் மீது وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ ஞானவான்
4:26. அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
4:26. அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்குத் தெளிவாக்கி உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும் செலுத்தி உங்கள் குற்றங்களை மன்னிப்பதை(யும் உங்கள் மீது அன்பு செலுத்துவதையும்) விரும்புகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மிக ஞானமுடையவன் ஆவான்.
4:26. உங்களுக்கு முன்சென்ற உத்தமர்களின் வழிமுறைகளை உங்களுக்கு விளக்கிடவும், அவ்வழிகளிலே உங்களை நடத்திச் செல்லவும் அல்லாஹ் விரும்புகின்றான் அவன் உங்கள் பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்ப நாட்டம் கொண்டுள்ளான். மேலும், அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவு மிக்கவனாகவும் இருக்கின்றான்.
4:26. அல்லாஹ், (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும், உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற நேரான வழிகளில் உங்களையும் செலுத்தி உங்களது தவ்பாக்களை (பாவமன்னிப்பை) அங்கீகரித்து விடவும் நாடுகிறான், மேலும், அல்லாஹ் நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்
4:27
4:27 وَاللّٰهُ يُرِيْدُ اَنْ يَّتُوْبَ عَلَيْكُمْ وَيُرِيْدُ الَّذِيْنَ يَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِيْلُوْا مَيْلًا عَظِيْمًا‏
وَاللّٰهُ அல்லாஹ் يُرِيْدُ நாடுகிறான் اَنْ يَّتُوْبَ பிழைபொறுக்க عَلَيْكُمْ உங்கள் மீது وَيُرِيْدُ நாடுகிறார்(கள்) الَّذِيْنَ எவர்கள் يَتَّبِعُوْنَ பின்பற்றுகிறார்கள் الشَّهَوٰتِ அற்ப ஆசைகளை اَنْ تَمِيْلُوْا நீங்கள் சாய்வதை مَيْلًا சாய்வது عَظِيْمًا‏ முற்றிலும்
4:27. மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
4:27. அல்லாஹ்வோ, (நீங்கள் பாவத்திலிருந்து மீண்ட பின்) உங்களை மன்னிப்பதையே விரும்புகிறான். (எனினும்) முற்றிலும் (சரீர) இச்சைகளை பின்பற்றி நடப்பவர்களோ (நேரான வழியிலிருந்து) நீங்கள் முற்றிலும் சாய்ந்து (பாவத்தில் ஆழ்ந்து) விடுவதையே விரும்புகின்றனர்.
4:27. ஆம்! அல்லாஹ் உங்கள் பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்பவே விரும்புகிறான். ஆனால், தம் மன இச்சைகளைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்களோ நேரிய வழியிலிருந்து நீங்கள் வெகுதூரம் விலகிச் சென்றிட வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
4:27. மேலும், அல்லாஹ் உங்களது தவ்பாவை (பாவமன்னிப்பை) நாடுகின்றான், இன்னும், (முற்றிலும்) மன இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ, நீங்கள் (நேர்வழியிலிருந்து) முற்றிலும் சாய்ந்து விடுவதையே நாடுகின்றனர்.
4:28
4:28 يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْ‌ۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا‏
يُرِيْدُ நாடுகிறான் اللّٰهُ அல்லாஹ் اَنْ يُّخَفِّفَ இலகுவாக்க عَنْكُمْ‌ۚ உங்களுக்கு وَخُلِقَ இன்னும் படைக்கப்பட்டுள்ளான் الْاِنْسَانُ மனிதன் ضَعِيْفًا‏ பலவீனனாக
4:28. அன்றியும், அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கவே விரும்புகிறான்; ஏனெனில் மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
4:28. அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகிறான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
4:28. அல்லாஹ் உங்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்த விரும்புகின்றான். ஏனென்றால், மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.
4:28. அல்லாஹ், (தன் சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கி வைக்க நாடுகின்றான், மேலும், மனிதன் பலவீனமானவனாக படைக்கப்பட்டுள்ளான்.
4:29
4:29 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوْۤا اَمْوَالَـكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِّنْكُمْ‌ وَلَا تَقْتُلُوْۤا اَنْـفُسَكُمْ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُمْ رَحِيْمًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَاْكُلُوْۤا புசிக்காதீர்கள் اَمْوَالَـكُمْ உங்கள் செல்வங்களை بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் بِالْبَاطِلِ தவறான முறையில் اِلَّاۤ தவிர اَنْ تَكُوْنَ இருப்பது تِجَارَةً வர்த்தகமாக عَنْ تَرَاضٍ பரஸ்பர விருப்பத்துடன் مِّنْكُمْ‌ உங்களின் وَلَا تَقْتُلُوْۤا இன்னும் கொல்லாதீர்கள் اَنْـفُسَكُمْ‌ؕ உங்கள் உயிர்களை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِكُمْ உங்கள் மீது رَحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:29. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.
4:29. நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். (இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக்கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகக் கருணையாளனாக இருக்கிறான்.
4:29. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவர் மற்றொரு வரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! (பொருளீட்டுவதற்கு) உங்களுக்கிடையே பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் கொடுக்கல்வாங்கல் இருக்க வேண்டும். உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்கள்மீது அளப்பரிய கருணை புரிபவனாக இருக்கின்றான்.
4:29. விசுவாசங்கொண்டோரே! உங்களிடையே இரு சாராரின் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவன்றி (உங்களுடைய) பொருள்களைத் தவறான முறையில் நீங்கள் உண்ணாதீர்கள், அன்றியும் (இதற்காக) உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ், உங்களிடம் மிக்க கிருபையுடையோனாக இருக்கின்றான்.
4:30
4:30 وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ عُدْوَانًا وَّظُلْمًا فَسَوْفَ نُصْلِيْهِ نَارًا‌ ؕ وَكَانَ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا‏
وَمَنْ எவர் يَّفْعَلْ செய்வாரோ ذٰ لِكَ அதை عُدْوَانًا வரம்பை மீறி وَّظُلْمًا இன்னும் அநியாயமாக فَسَوْفَ விரைவில் نُصْلِيْهِ அவரை எரிப்போம் نَارًا‌ ؕ நரகத்தில் وَكَانَ இருக்கிறது ذٰ لِكَ அது عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் يَسِيْرًا‏ சுலபமாக
4:30. எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்; அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.
4:30. எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமானதாக இருக்கிறது!
4:30. எவன் வரம்பு மீறியும் அநீதியாகவும் இவ்வாறு செய்கின்றானோ அவனை நாம் நெருப்பில் வீசியே தீருவோம்! மேலும், இது அல்லாஹ்வுக்கு இலகுவானதாக உள்ளது.
4:30. மேலும், எவரேனும், வரம்புமீறி அக்கிரமமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (விரைவில்) நரகத்தில் நுழையச் செய்து விடுவோம், இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க இலகுவானதாகவே இருக்கிறது.
4:31
4:31 اِنْ تَجْتَنِبُوْا كَبٰٓٮِٕرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَنُدْخِلْـكُمْ مُّدْخَلًا كَرِيْمًا‏
اِنْ تَجْتَنِبُوْا நீங்கள் விலகிக் கொண்டால் كَبٰٓٮِٕرَ பெரும் பாவங்களை مَا எது تُنْهَوْنَ தடுக்கப்படுகிறீர்கள் عَنْهُ அதை விட்டு نُكَفِّرْ அகற்றி விடுவோம் عَنْكُمْ உங்களை விட்டு سَيِّاٰتِكُمْ சிறு பாவங்களை/உங்கள் وَنُدْخِلْـكُمْ இன்னும் நுழைப்போம்/உங்களை مُّدْخَلًا இடத்தில் كَرِيْمًا‏ கண்ணியமான
4:31. நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.
4:31. உங்களுக்கு விலக்கப்பட்ட பெரும் பாவமான காரியங்களில் இருந்து நீங்கள் விலகிக்கொண்டால், உங்கள் (மற்ற) சிறிய பாவங்களுக்கு (அதை) நாம் பரிகாரமாக்கி உங்களை (மிக்க) கண்ணியமான இடங்களிலும் நுழைவிப்போம்.
4:31. உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம்.
4:31. எதை விட்டும் நீங்கள் விலக்கப்பட்டிருக்கிறீர்களோ அத்தகைய பெரும்பாவ(மான காரிய)ங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற சிறிய) தீயவைகளை உங்களை விட்டும் நாம் போக்கிவிடுவோம் , இன்னும், சங்கையான நுழைவிடத்தில் உங்களை நாம் நுழைவிப்போம்.
4:32
4:32 وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللّٰهُ بِهٖ بَعْضَكُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ لِلرِّجَالِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبُوْا ؕ‌ وَلِلنِّسَآءِ نَصِيْبٌ مِّمَّا اكْتَسَبْنَ‌ ؕ وَسْئَـلُوا اللّٰهَ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏
وَلَا تَتَمَنَّوْا ஏங்காதீர்கள் مَا எதை فَضَّلَ மேன்மையாக்கினான் اللّٰهُ அல்லாஹ் بِهٖ அதைக் கொண்டு بَعْضَكُمْ உங்களில் சிலரை عَلٰى விட بَعْضٍ‌ ؕ சிலர் لِلرِّجَالِ ஆண்களுக்கு نَصِيْبٌ ஒரு பங்கு مِّمَّا எதிலிருந்து اكْتَسَبُوْا ؕ சம்பாதித்தார்கள் وَلِلنِّسَآءِ இன்னும் பெண்களுக்கு نَصِيْبٌ ஒரு பங்கு مِّمَّا எதி லிருந்து اكْتَسَبْنَ‌ ؕ சம்பாதித்தார்கள் وَسْئَـلُوا கேளுங்கள் اللّٰهَ அல்லாஹ்விடம் مِنْ இருந்து فَضْلِهٖ ؕ அவனின் அருள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمًا‏ நன்கறிந்தவனாக
4:32. மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
4:32. உங்களில் சிலரை சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்குரியனவே. (அவ்வாறே) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்குரியனவே. ஆகவே, (ஆண் பெண் ஒவ்வொருவரும் உழைப்பின் மூலம்) அல்லாஹ்வுடைய அருளைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
4:32. அல்லாஹ் உங்களில் சிலருக்கு சிலரைவிட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும், பெண்களுக்கு அவர்கள் சம்பாதித் ததற்கேற்ப பங்கு உண்டு. இருப்பினும் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கோரிய வண்ணம் இருங்கள். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
4:32. இன்னும் உங்களில் சிலரைக்காண சிலரை, அல்லாஹ் மேன்மையாக்கி இருப்பதைப் பற்றி நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள், ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்தவற்றில் உரிய பங்குண்டு, (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்தவற்றில் (உரிய) பங்குண்டு, மேலும், (நற்செயல்களின் மூலம்) அல்லாஹ்விடத்தில் அவனின் பேரருளைக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
4:33
4:33 وَلِكُلٍّ جَعَلْنَا مَوَالِىَ مِمَّا تَرَكَ الْوَالِدٰنِ وَالْاَقْرَبُوْنَ‌ ؕ وَالَّذِيْنَ عَقَدَتْ اَيْمَانُكُمْ فَاٰ تُوْهُمْ نَصِيْبَهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدًا
وَلِكُلٍّ ஒவ்வொருவருக்கும் جَعَلْنَا ஆக்கினோம் مَوَالِىَ வாரிசுகளை مِمَّا எதில் تَرَكَ விட்டுச்சென்றார் الْوَالِدٰنِ தாய், தந்தை وَالْاَقْرَبُوْنَ‌ ؕ இன்னும் நெருங்கிய உறவினர்கள் وَالَّذِيْنَ எவர்கள் عَقَدَتْ ஒப்பந்தம் செய்தன اَيْمَانُكُمْ உங்கள் சத்தியங்கள் فَاٰ تُوْهُمْ கொடுத்து விடுங்கள் / அவர்களுக்கு نَصِيْبَهُمْ‌ؕ பங்கை/அவர்களின் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلٰى மீது كُلِّ எல்லாம் شَىْءٍ பொருள் شَهِيْدًا சாட்சியாளனாக
4:33. இன்னும், தாய் தந்தையரும், நெருங்கிய பந்துக்களும் விட்டுச் செல்கின்ற செல்வத்திலிருந்து (விகிதப்படி அதையடையும்) வாரிசுகளை நாம் குறிப்பாக்கியுள்ளோம்; அவ்வாறே நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டோருக்கும் அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான்.
4:33. தாய், தந்தை, உறவினர்கள் அல்லது நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள் விட்டுச் செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் (விகிதப்படி அவர்களுடைய சொத்தை அடையக்கூடிய) வாரிசுகளை நாம் குறிப்பிட்டே இருக்கிறோம். ஆகவே, அவர்களுடைய பாகத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடவும். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் (நன்கறிந்த) சாட்சியாளனாக இருக்கிறான்.
4:33. தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்துக்களிலிருந்து (பங்கு பெறுகின்ற) வாரிசுக்காரர்களை நாம் ஒவ்வொருவருக்கும் நிர்ணயித்துள்ளோம். நீங்கள் யாரோடு உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய பங்கைக் கொடுத்துவிடுங்கள்! திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
4:33. இன்னும், ஒவ்வொருவருக்கும் (அவருடைய) பெற்றோர், நெருங்கிய சுற்றத்தார் (ஆகியோர்) விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து (அதை அடையக்கூடிய) வாரிஸுகளை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம், இன்னும், உங்களுடைய வலக்கரங்கள் (எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டனவோ அத்தகையோர்-அவர்களுக்கு அவர்களுக்குரிய பங்கைக் கொடுத்து விடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
4:34
4:34 اَلرِّجَالُ قَوَّامُوْنَ عَلَى النِّسَآءِ بِمَا فَضَّلَ اللّٰهُ بَعْضَهُمْ عَلٰى بَعْضٍ وَّبِمَاۤ اَنْفَقُوْا مِنْ اَمْوَالِهِمْ‌ ؕ فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ‌ ؕ وَالّٰتِىْ تَخَافُوْنَ نُشُوْزَهُنَّ فَعِظُوْهُنَّ وَاهْجُرُوْهُنَّ فِى الْمَضَاجِعِ وَاضْرِبُوْهُنَّ‌ ۚ فَاِنْ اَطَعْنَكُمْ فَلَا تَبْغُوْا عَلَيْهِنَّ سَبِيْلًا‌ ؕاِنَّ اللّٰهَ كَانَ عَلِيًّا كَبِيْرًا‏
اَلرِّجَالُ ஆண்கள் قَوَّامُوْنَ நிர்வகிப்பவர்கள் عَلَى النِّسَآءِ பெண்களை بِمَا எதன் காரணமாக فَضَّلَ மேன்மையாக்கினான் اللّٰهُ அல்லாஹ் بَعْضَهُمْ அவர்களில் சிலரை عَلٰى விட بَعْضٍ சிலர் وَّبِمَاۤ எதன் காரணமாக اَنْفَقُوْا செலவழித்தார்கள் مِنْ இருந்து اَمْوَالِهِمْ‌ ؕ தங்கள் செல்வங்கள் فَالصّٰلِحٰتُ நல்லபெண்கள் قٰنِتٰتٌ பணிந்தவர்கள் حٰفِظٰتٌ பாதுகாப்பவர்கள் لِّلْغَيْبِ மறைவில் بِمَا எதைக் கொண்டு حَفِظَ பாதுகாத்தான் اللّٰهُ‌ ؕ அல்லாஹ் وَالّٰتِىْ எவர்கள் تَخَافُوْنَ பயப்படுகிறீர்கள் نُشُوْزَهُنَّ அவர்கள் மாறுபாடு செய்வதை فَعِظُو உபதேசியுங்கள் هُنَّ அவர்களுக்கு وَاهْجُرُو அப்புறப்படுத்துங்கள் هُنَّ அவர்களை فِى الْمَضَاجِعِ படுக்கைகளில் وَاضْرِبُو இன்னும் அடியுங்கள் هُنَّ‌ ۚ அவர்களை فَاِنْ اَطَعْنَكُمْ அவர்கள் கீழ்ப்படிந்தால் / உங்களுக்கு فَلَا تَبْغُوْا தேடாதீர்கள் عَلَيْهِنَّ அவர்கள் மீது سَبِيْلًا‌ ஒரு வழியை ؕاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلِيًّا உயர்ந்தவனாக كَبِيْرًا‏ பெரியவனாக
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.
4:34. (ஆண், பெண் இரு பாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக்கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் திருந்தாவிட்டால்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டுவிட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) ஒரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேலானவனாக, மிகப் பெரியவனாக இருக்கிறான்.
4:34. ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரைவிட உயர்வை அளித்திருக்கின்றான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே நடப்பார்கள். மேலும், ஆண்கள் இல்லாதபோது (அப்பெண்கள்) அல்லாஹ்வின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப் பேணுவார்கள். மேலும், எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவருக்கு)மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ அந்தப் பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்கள்; படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள்! மேலும் அவர்களை அடியுங்கள்! ஆனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்துவிட்டால், பிறகு அவர்களுக்கு எதிராகக் கை நீட்ட எந்த சாக்குபோக்குகளையும் தேடாதீர்கள்! திண்ணமாக நம்புங்கள்: அல்லாஹ் மேலே இருக்கின்றான்; அவன் உயர்வானவனும் பெரியோனுமாய் இருக்கின்றான்.
4:34. ஆண்கள், பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்களாவர், ஏனெனில், அவர்களில் சிலரைக்காண (மற்ற) சிலரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதாலும் (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்காக)ச் செலவு செய்வதாலுமாகும், ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள், (என்போர் அல்லாஹ்வுக்குப் பயந்து தங்கள் கணவனுக்கு) பணிந்து நடப்பவர்கள் (கற்பு மற்றும் தங்கள் கணவனது உடைமைகள் ஆகிய) மறைவானதை அல்லாஹ் பாதுகாக்கின்ற காரணத்தால் பேணிக்காத்துக் கொள்பவர்கள், இன்னும், (அப்பெண்களாகிய) அவர்களில் (தம் கணவனுக்கு) எவர்களின் மாறுபாட்டை அஞ்சுகிறீர்களோ, அப்போது அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள், (அவர்கள் திருந்தாவிடில்) படுக்கைகளிலும் அவர்களை வெறுத்து (ஒதுக்கி) விடுங்கள், (அதிலும் அவர்கள் சீர்திருந்தாவிடில்) அவர்களை (காயமேற்படாது) அடியுங்கள், அதனால் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்பட்டுவிட்டால், அவர்கள் மீது (இதர குற்றங்களைச் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்வானவனாக, மிகப் பெரியவனாக இருக்கின்றான்.
4:35
4:35 وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا‌ ۚ اِنْ يُّرِيْدَاۤ اِصْلَاحًا يُّوَفِّـقِ اللّٰهُ بَيْنَهُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا‏
وَاِنْ خِفْتُمْ நீங்கள் பயந்தால் شِقَاقَ பிளவை بَيْنِهِمَا அந்த இருவருக்குள் فَابْعَثُوْا ஏற்படுத்துங்கள் حَكَمًا ஒரு தீர்ப்பாளரை مِّنْ இருந்து اَهْلِهٖ அவனின் உறவினர் وَحَكَمًا இன்னும் ஒரு தீர்ப்பாளரை مِّنْ இருந்து اَهْلِهَا‌ ۚ அவளின் உறவினர் اِنْ يُّرِيْدَاۤ இருவரும் நாடினால் اِصْلَاحًا சீர்திருத்தத்தை يُّوَفِّـقِ ஒற்றுமை ஏற்படுத்துவான் اللّٰهُ அல்லாஹ் بَيْنَهُمَا‌ ؕ அந்த இருவருக்கிடையில் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلِيْمًا நன்கறிந்தவனாக خَبِيْرًا‏ ஆழ்ந்தறிந்தவனாக
4:35. (கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.
4:35. (கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவனுடைய உறவினர்களில் ஒருவரையும், அவளுடைய உறவினர்களில் ஒருவரையும் நடுவர்களாக நீங்கள் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் கணவன் மனைவி இவ்விருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனாக, நன்கு கவனிப்பவனாக இருக்கிறான்.
4:35. மேலும், கணவன், மனைவிக்கிடையே உறவு முறியுமோ என நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினரிலிருந்து ஒரு நடுவரையும், மனைவியரின் உறவினரிலிருந்து மற்றொரு நடுவரையும் நியமியுங்கள். அவ்விருவரும் உறவைச் சீர்படுத்த நாடினால், அல்லாஹ்வும் அவ்விருவருக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவான். திண்ணமாக, அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
4:35. இன்னும், (கணவன் மனைவியாகிய) இருவருக்கும், (பிணக்குண்டாகி) பிளவை நீங்கள் அஞ்சினால் அப்போது அவன் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும், அவள் குடும்பத்தாரில் ஒரு மத்தியஸ்தரையும் நீங்கள் (ஏற்படுத்தி) அனுப்புங்கள், அவ்விருவரும் (இவர்களுக்குள்) சமாதானத்தை உண்டுபண்ண நாடினால், அல்லாஹ் இவ்விருவரையும் ஒற்றுமையாக்கி விடுவான், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் தெரிந்தவனாக, நன்கு உணர்கிறவனாக, இருக்கின்றான்.
4:36
4:36 وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ ؕ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْۢبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏
وَاعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَلَا تُشْرِكُوْا இன்னும் இணையாக்காதீர்கள் بِهٖ அவனுக்கு شَيْــٴًـــا‌ ؕ எதையும் وَّبِالْوَالِدَيْنِ இன்னும் தாய் தந்தைக்கு اِحْسَانًا நன்மை செய்யுங்கள் وَّبِذِى الْقُرْبٰى இன்னும் உறவினருக்கு وَالْيَتٰمٰى இன்னும் அநாதைகள் وَ الْمَسٰكِيْنِ இன்னும் ஏழைகள் وَالْجَـارِ இன்னும் அண்டைவீட்டார் ذِى الْقُرْبٰى உறவினர் وَالْجَـارِ இன்னும் அண்டைவீட்டார் الْجُـنُبِ அந்நியர் وَالصَّاحِبِ இன்னும் நண்பர் بِالْجَـنْۢبِ அருகில் இருக்கும் وَابْنِ السَّبِيْلِ ۙ இன்னும் பயணி(கள்) وَمَا இன்னும் எவர் مَلَـكَتْ சொந்தமாக்கின اَيْمَانُكُمْ‌ ؕ உங்கள் வலக்கரங்கள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் مَنْ எவன் كَانَ இருக்கிறான் مُخْتَالًا கர்வமுடையவனாக فَخُوْرَا ۙ‏ பெருமையுடையவனாக
4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
4:36. அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்). எவன் கர்வம் கொண்டவனாக, பெருமை அடிப்பவனாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
4:36. மேலும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள்! மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், மற்றும் வழிப்போக்கர், உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடனும் நயமாக நடந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
4:36. மேலும், அல்லாஹ்வையே வணங்குங்கள், அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள், பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள், (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டினருக்கும், அந்நியரான அண்டை வீட்டினருக்கும் (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக்கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொணடவர்களுக்கும் (அன்புடன் உபகாரம் செய்யுங்கள்.) கர்வங்கொண்டவனாக, பெருமையாளனாக இருப்போரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்.
4:37
4:37 اۨلَّذِيْنَ يَـبْخَلُوْنَ وَيَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُوْنَ مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ ؕ وَ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا‌ ۚ‏
اۨلَّذِيْنَ எவர்கள் يَـبْخَلُوْنَ கருமித்தனம் செய்கிறார்கள் وَيَاْمُرُوْنَ இன்னும் ஏவுகிறார்கள் النَّاسَ மக்களுக்கு بِالْبُخْلِ கருமித்தனத்தை وَيَكْتُمُوْنَ இன்னும் மறைக்கிறார்கள் مَاۤ எதை اٰتٰٮهُمُ கொடுத்தான்/அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் مِنْ فَضْلِهٖ‌ ؕ தன் அருளிலிருந்து وَ اَعْتَدْنَا தயார்படுத்தினோம் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களுக்கு عَذَابًا வேதனையை مُّهِيْنًا‌ இழிவான
4:37. அத்தகையோர் உலோபித்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் உலோபித்தனம் செய்யும்படித் தூண்டி அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள்; அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
4:37. அவர்கள் (தாங்கள்) கஞ்சத்தனம் செய்வதுடன் (மற்ற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்குக் கொடுத்ததையும் (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்துக் கொள்கிறார்கள். அந்த நன்றிகெட்டோருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
4:37. அவர்கள் தாமும் உலோபிகளாயிருந்து பிற மக்களையும் உலோபித்தனம் புரியுமாறு ஏவுவார்கள். மேலும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியுள்ள செல்வங்களை மறைப்பார்கள். (இத்தகையவர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.) இத்தகைய நன்றி கெட்ட ஈனர்களுக்கு நாம் இழிவு தரும் வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
4:37. அத்தகைய (பெருமை குடி கொண்ட)வர்கள் உலோபித்தனம் செய்வார்கள், (மற்ற) மனிதர்களை உலோபித்தனம் செய்யும்படியும் தூண்டுவார்கள், அல்லாஹ் தன் பேரருளிலிருந்து தங்களுக்குக் கொடுத்ததை (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்தும் கொள்வார்கள், இன்னும் (நன்றி செய்யாத) நிராகரிப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனையையே நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
4:38
4:38 وَالَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَآءَ النَّاسِ وَلَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ وَمَنْ يَّكُنِ الشَّيْطٰنُ لَهٗ قَرِيْنًا فَسَآءَ قَرِيْنًا‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் يُنْفِقُوْنَ தர்மம் செய்கிறார்கள் اَمْوَالَهُمْ தங்கள் செல்வங்களை رِئَآءَ காண்பிப்பதற்காக النَّاسِ மக்களுக்கு وَلَا يُؤْمِنُوْنَ இன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ இன்னும் இறுதி நாளை وَمَنْ எவருக்கு يَّكُنِ ஆகிவிட்டான் الشَّيْطٰنُ ஷைத்தான் لَهٗ அவனுக்கு قَرِيْنًا நண்பனாக فَسَآءَ கெட்டுவிட்டான் قَرِيْنًا‏ நண்பனால்
4:38. இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்); எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)
4:38. எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருள்களைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கிறானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன் ஆவான்.
4:38. மேலும், எவர்கள் தம் பொருளை பிறர் மெச்சுவதற்காகச் செலவழிக்கின்றார்களோ, மேலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாதிருக்கின்றார்களோ அத்தகையவர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. உண்மை என்னவெனில், ஷைத்தான் யாருக்குத் தோழனாகின்றானோ அவர் மிகவும் கெட்ட தோழனையே அடையப் பெற்றவராவார்.
4:38. இன்னும், அத்தகைய பெருமை குடி கொண்டவர்கள் (பெருமையைநாடி) மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகத் தங்கள் செல்வங்களைச் செலவு செய்வார்கள், அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசங்கொள்ளவுமாட்டார்கள், மேலும், எவனுக்கு ஷைத்தான் தோழனாக இருக்கின்றானோ, அவன் தோழனால் மிகக் கெட்டவன்.
4:39
4:39 وَمَاذَا عَلَيْهِمْ لَوْ اٰمَنُوْا بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقَهُمُ اللّٰهُ‌ ؕ وَكَانَ اللّٰهُ بِهِمْ عَلِيْمًا‏
وَمَاذَا என்னதான் عَلَيْهِمْ அவர்கள் மீது لَوْ اٰمَنُوْا அவர்கள் நம்பிக்கை கொண்டால் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ இன்னும் நாளை الْاٰخِرِ இறுதி وَاَنْفَقُوْا இன்னும் தர்மம் செய்தனர் مِمَّا எதிலிருந்து رَزَقَهُمُ வழங்கினான்/அவர்களுக்கு اللّٰهُ‌ ؕ அல்லாஹ் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் بِهِمْ அவர்களை عَلِيْمًا‏ நன்கறிந்தவனாக
4:39. இவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இவர்களுக்கு அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்களானால் இவர்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிடப் போகிறது? அல்லாஹ் இவர்களை நன்கறிபவனாகவே இருக்கின்றான்.
4:39. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் இவர்களுக்கு அளித்தவற்றையும் தானம் செய்து வந்தால் அதனால் இவர்களுக்கு என்னதான் நஷ்டமேற்பட்டு விடும்? அல்லாஹ் இவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
4:39. இவர்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் தமக்கு அளித்தவற்றிலிருந்து செலவும் செய்தால் இவர்களுக்கு என்ன கேடு வந்துவிடப்போகிறது? (இவ்வாறு செய்திருந்தால்) இவர்கள் புரிந்த நன்மை அல்லாஹ்வைவிட்டு மறைந்துவிடாது.
4:39. மேலும், அவர்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசங்கொண்டு அல்லாஹ் அவர்களுக்களித்தவற்றிலிருந்து (தர்மமாக) செலவும் செய்து வந்தால், அதனால் அவர்களுக்கு என்ன(தான் நஷ்டம்) ஏற்பட்டுவிடப்போகிறது? இன்னும் அல்லாஹ் இவர்களை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
4:40
4:40 اِنَّ اللّٰهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ‌ ۚ وَاِنْ تَكُ حَسَنَةً يُّضٰعِفْهَا وَيُؤْتِ مِنْ لَّدُنْهُ اَجْرًا عَظِيْمًاؔ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَظْلِمُ அநியாயம் செய்ய மாட்டான் مِثْقَالَ ذَرَّةٍ‌ ۚ ஓர் அணு அளவு وَاِنْ تَكُ இருந்தால் حَسَنَةً நன்மையாக يُّضٰعِفْهَا அதை பன்மடங்காக்குவான் وَيُؤْتِ இன்னும் கொடுப்பான் مِنْ لَّدُنْهُ தன்னிடமிருந்து اَجْرًا கூலியை عَظِيْمًاؔ‏ மகத்தான
4:40. நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.
4:40. நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்வதில்லை. ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதை இரட்டிப்பாக்கித் தன் அருளால் மேலும், அதற்கு மகத்தான கூலியைக் கொடுக்கிறான்.
4:40. திண்ணமாக, அல்லாஹ் எவருக்கும் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அல்லாஹ் அதனை இரட்டிப்பாக்குகின்றான். தன்னிடமிருந்து மாபெரும் கூலியையும் வழங்குகின்றான்.
4:40. நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான், இன்னும், (ஓர் அணுவளவுள்ள) அது நன்மையாக இருந்தால் அதனை இரட்டிப்பாக்கி தன்னிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுக்கின்றான்.
4:41
4:41 فَكَيْـفَ اِذَا جِئْـنَا مِنْ كُلِّ اُمَّةٍ ۭ بِشَهِيْدٍ وَّجِئْـنَا بِكَ عَلٰى هٰٓؤُلَاۤءِ شَهِيْدًا ؕ‏
فَكَيْـفَ எவ்வாறிருக்கும்? اِذَا جِئْـنَا நாம் வந்தால் مِنْ இருந்து كُلِّ ஒவ்வொரு اُمَّةٍ ۭ சமுதாயம் بِشَهِيْدٍ ஒரு சாட்சியைக் கொண்டு وَّجِئْـنَا இன்னும் நாம் வந்தோம் بِكَ உம்மை கொண்டு عَلٰى மீது هٰٓؤُلَاۤءِ இவர்கள் شَهِيْدًا ؕ‏ சாட்சியாக
4:41. எனவே (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தினரையும் (அவர்களுடைய) சாட்சியுடன் நாம் கொண்டுவரும்போது, நாம் இவர்கள் மீது சாட்சியாக உம்மையும் கொண்டு வந்தால் (உம்மை நிராகரிக்கும் இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?
4:41. (நபியே!) ஒவ்வொரு சமூகத்தினரும் (தங்கள்) சாட்சி(களாகிய தங்கள் நபிமார்)களுடன் நம்மிடம் வரும் சமயத்தில் உம்மை இவர்கள் அனைவருக்கும் சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உம்மை நிராகரித்த இவர்களுடைய நிலைமை) எப்படி இருக்கும்?
4:41. (முஹம்மதே!) நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் சாட்சியாளர் ஒருவரைக் கொண்டு வந்து, உம்மையும் இவர்கள் மீது சாட்சியாளராகக் கொண்டு வரும் வேளையில் இவர்கள் என்ன செய்வார்கள் (என்று சிந்தியுங்கள்).
4:41. (நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டுவரும்போது இவர்களுக்கு (விரோதமான) சாட்சியாக உம்மை நாம் கொண்டும் வந்தால் (நிராகரித்த இவர்களுடைய நிலைமை) எவ்வாறிருக்கும்?
4:42
4:42 يَوْمَٮِٕذٍ يَّوَدُّ الَّذِيْنَ كَفَرُوْا وَعَصَوُا الرَّسُوْلَ لَوْ تُسَوّٰى بِهِمُ الْاَرْضُ ؕ وَلَا يَكْتُمُوْنَ اللّٰهَ حَدِيْـثًا‏
يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّوَدُّ விரும்புவர் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَعَصَوُا இன்னும் மாறு செய்தார்கள் الرَّسُوْلَ தூதருக்கு لَوْ تُسَوّٰى சமமாக்கப்பட வேண்டுமே? بِهِمُ அவர்களுடன் الْاَرْضُ ؕ பூமி وَلَا يَكْتُمُوْنَ மறைக்க மாட்டார்கள் اللّٰهَ அல்லாஹ்விடம் حَدِيْـثًا‏ ஒரு செய்தியை
4:42. அந்த நாளில், (இவ்வாறு) (அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வின்) தூதருக்கும் மாறு செய்தவர்கள், பூமி தங்களை விழுங்கி சமப்படுத்திடக் கூடாதா என்று விரும்புவார்கள்; ஆனால் அல்லாஹ்விடத்தில் எந்த விஷயத்தையும் அவர்கள் மறைக்கமுடியாது.
4:42. (இவ்வாறு அல்லாஹ்வை) நிராகரித்து, (அல்லாஹ்வுடைய) தூதருக்கு மாறுசெய்தவர்கள், பூமி தங்களை ஜீரணித்துவிட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் ஒரு விஷயத்தையும் மறைத்துவிட முடியாது.
4:42. எவர்கள் இறைத்தூதரின் சொல்லைக் கேட்காமலும், அவருக்கு மாறு செய்து கொண்டும் இருந்தார்களோ அவர்கள் பூமி பிளந்து தங்களை விழுங்கியிருக்கக் கூடாதா என அந்நாளில் ஏங்குவார்கள். அங்கு அவர்கள் (தம்முடைய) எந்தச் செய்தியையும் அல்லாஹ்விடம் மறைத்திட முடியாது.
4:42. நிராகரித்து (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் மாறு செய்தோர், (அவ்வாறு நாம் கொண்டுவரும்) நாளில் பூமி அவர்கள் மீது (தங்களை விழுங்கி தன்னுள்) சமமாக்கப்பட்டிருக்க வேண்டுமே, என்று விரும்புவார்கள், மேலும், இவர்கள் அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்தையும் மறைத்து விட முடியாது.
4:43
4:43 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِىْ سَبِيْلٍ حَتّٰى تَغْتَسِلُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَقْرَبُوا நெருங்காதீர்கள் الصَّلٰوةَ தொழுகைக்கு وَاَنْـتُمْ நீங்கள் இருக்கும்போது سُكَارٰى போதைஏறியவர்களாக حَتّٰى வரை تَعْلَمُوْا நீங்கள் அறிவது مَا تَقُوْلُوْنَ எதை கூறுகிறீர்கள் وَلَا جُنُبًا முழுக்காளிகளாக اِلَّا தவிர عَابِرِىْ سَبِيْلٍ பயணிகளாக حَتّٰى வரை تَغْتَسِلُوْا‌ ؕ குளிக்கிறீர்கள் وَاِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مَّرْضٰۤى நோயாளிகளாக اَوْ அல்லது عَلٰى سَفَرٍ பயணத்தில் اَوْ அல்லது جَآءَ வந்தால் اَحَدٌ ஒருவர் مِّنْكُمْ உங்களில் مِّنَ இருந்து الْغَآٮِٕطِ மலஜலம் اَوْ அல்லது لٰمَسْتُمُ உறவு கொண்டீர்கள் النِّسَآءَ பெண்களிடம் فَلَمْ تَجِدُوْا நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை مَآءً தண்ணீரை فَتَيَمَّمُوْا நாடுங்கள் صَعِيْدًا மண்ணை طَيِّبًا சுத்தமான فَامْسَحُوْا தடவுங்கள் بِوُجُوْهِكُمْ உங்கள் முகங்களை وَاَيْدِيْكُمْ‌ ؕ இன்னும் உங்கள் கைகளை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَفُوًّا பிழை பொறுப்பவனாக غَفُوْرًا‏ அதிகம் மன்னிப்பவனாக
4:43. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ, பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி “தயம்மும்” செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
4:43. நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்துகொள்ள முடியாதவாறு நீங்கள் போதையாயிருக்கும் சமயத்தில் தொழுகைக்குச் செல்லாதீர்கள். தவிர, நீங்கள் முழுக்காயிருந்தால் குளிக்கும் வரையிலும் (தொழுகைக்குச் செல்லாதீர்கள்). ஆயினும், பிரயாணத்தில் இருந்தாலே தவிர. ஆகவே, நீங்கள் நோயாளிகளாகவோ, பிரயாணத்திலோ, மலஜல உபாதைக் கழித்தோ, பெண்களைத் தீண்டி(ச் சேர்ந்து) இருந்தோ, (பிறகு, சுத்தம் செய்துகொள்ள) நீங்கள் தண்ணீரையும் பெற்றுக்கொள்ளாத சமயத்தில் (தொழுகையின் நேரம் வந்துவிடுமேயானால் அதற்காக நீங்கள் தொழுகையைப் பிற்படுத்த வேண்டியதில்லை.) சுத்தமான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் துடைத்து ‘‘தயம்மும்' செய்துகொள்ளுங்கள். (பிறகு, தொழுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாக, குற்றங்களை மன்னிப்பவனாக இருக்கிறான்.
4:43. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையோடிருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்; நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதை அறிகின்ற போதுதான் தொழ வேண்டும். மேலும், நீங்கள் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும் நிலையில், குளிக்கின்ற வரை தொழுகையை நெருங்காதீர்கள்! பாதையைக் கடப்பவர்களாக இருந்தாலே தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, பயணத்திலோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் மலஜலம் கழித்துவிட்டு வந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால், பிறகு தண்ணீர் உங்களுக்குக் கிடைக்கவில்லையெனில் சுத்தமான மண்ணைக் கொண்டு உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அதாவது (அதனை) உங்களின் முகங்களிலும் கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் கனிவு உடையவனாகவும், மன்னிப்பு வழங்குபவனாகவும் இருக்கின்றான்.
4:43. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் போதையுடையோராகயிருக்கும் நிலையில், நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்து கொள்ளும் வரை, தொழுகைக்கு நெருங்காதீர்கள், அன்றியும், நீங்கள் (முழுக்காளி) குளிப்பு கடமையானவராயிருந்தால், குளிக்கும் வரையிலும் (தொழுகைக்கு நெருங்காதீர்கள், ஆனால்) பள்ளியைக் கடந்து செல்பவர்களாகவே தவிர, இன்னும் நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ, அல்லது மலஜலம் கழித்தோ. அல்லது பெண்ணைத்தீண்டி (தாம்பத்திய உறவு கொண்டு) இருந்தோ, (சுத்தம் செய்து கொள்ள) நீங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாவிடில், பரிசுத்தமான மண்ணை நாடுங்கள், (அதைத் தொட்டு) உங்களுடைய முகங்களையும், கைகளையும் (தயம்மும் செய்து) தடவிக் கொள்ளுங்கள், (பிறகு தொழுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (பிழைகளை) மிகப் பொறுப்பவனாக (குற்றங்களை) மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்.
4:44
4:44 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يَشْتَرُوْنَ الضَّلٰلَةَ وَيُرِيْدُوْنَ اَنْ تَضِلُّوا السَّبِيْلَ ؕ‏
اَلَمْ تَرَ பார்க்கவில்லையா? اِلَى பக்கம் الَّذِيْنَ எவர்கள் اُوْتُوْا கொடுக்கப்பட்டார்கள் نَصِيْبًا ஒரு பாகம் مِّنَ இருந்து الْكِتٰبِ வேதம் يَشْتَرُوْنَ விலைக்கு வாங்குகிறார்கள் الضَّلٰلَةَ வழிகேட்டை وَيُرِيْدُوْنَ இன்னும் நாடுகின்றனர் اَنْ تَضِلُّوا நீங்கள் தவறுவதை السَّبِيْلَ ؕؕ‏ வழி
4:44. (நபியே!) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.
4:44. (நபியே!) வேதத்திலொரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்கள், வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொண்டதுடன் நீங்களும் வழிகெட்டுவிட வேண்டுமென்றே விரும்புகின்றனர்.
4:44. வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு வழங்கப்பட்டிருப்பவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள், வழிகேட்டினை விலைக்கு வாங்குகின்றார்கள்; நீங்களும் வழிதவறிட வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
4:44. (நபியே!) வேதத்திலொரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் (தாம்) வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர், நீங்களும் வழி கெட்டுவிட வேண்டுமென்றே அவர்கள் நாடுகின்றனர்.
4:45
4:45 وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَآٮِٕكُمْ‌ؕ وَكَفٰى بِاللّٰهِ وَلِيًّا وَّكَفٰى بِاللّٰهِ نَصِيْرًا‏
وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِاَعْدَآٮِٕكُمْ‌ؕ உங்கள் எதிரிகளை وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்தான் وَلِيًّا பாதுகாவலனாக وَّكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்தான் نَصِيْرًا‏ பேருதவியாளனாக
4:45. மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.
4:45. உங்கள் (இந்த) எதிரிகளை அல்லாஹ் மிக அறிவான். (உங்களை) காப்பதற்கு அல்லாஹ் போதுமானவன். (உங்களுக்கு) உதவி செய்யவும் அல்லாஹ் போதுமானவன்.
4:45. அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிபவனாயிருக்கின்றான். மேலும் உங்களுக்கு ஆதர வளிக்கவும், உதவி செய்யவும் அல்லாஹ்வே போதுமானவன்.
4:45. மேலும், அல்லாஹ், உங்களுடைய (இவ்)விரோதிகளை மிக்க அறிகிறவன், (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன், (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.
4:46
4:46 مِنَ الَّذِيْنَ هَادُوْا يُحَرِّفُوْنَ الْـكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ وَ يَقُوْلُوْنَ سَمِعْنَا وَعَصَيْنَا وَاسْمَعْ غَيْرَ مُسْمَعٍ وَّرَاعِنَا لَـيًّۢا بِاَ لْسِنَتِهِمْ وَطَعْنًا فِىْ الدِّيْنِ‌ ؕ وَلَوْ اَنَّهُمْ قَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا وَاسْمَعْ وَانْظُرْنَا لَـكَانَ خَيْرًا لَّهُمْ وَاَقْوَمَ ۙ وَ لٰـكِنْ لَّعَنَهُمُ اللّٰهُ بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًا‏
مِنَ இருந்து (சிலர்) الَّذِيْنَ எவர்கள் هَادُوْا யூதராகி விட்டார்கள் يُحَرِّفُوْنَ புரட்டுகின்றனர் الْـكَلِمَ வசனங்களை عَنْ இருந்து مَّوَاضِعِهٖ அதன் இடங்கள் وَ يَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் سَمِعْنَا செவியுற்றோம் وَعَصَيْنَا இன்னும் மாறுசெய்தோம் وَاسْمَعْ கேட்பீராக غَيْرَ مُسْمَعٍ கேட்கப்படாதவராக وَّرَاعِنَا இன்னும் ராயினா لَـيًّۢا வளைத்து بِاَ لْسِنَتِهِمْ தங்கள் நாவுகளை وَطَعْنًا இன்னும் குற்றம் சொல்வதற்காக فِىْ الدِّيْنِ‌ ؕ மார்க்கத்தில் وَلَوْ اَنَّهُمْ قَالُوْا நிச்சயமாக அவர்கள் கூறினால் سَمِعْنَا செவியுற்றோம் وَاَطَعْنَا இன்னும் கீழ்ப்படிந்தோம் وَاسْمَعْ இன்னும் கேட்பீராக وَانْظُرْنَا இன்னும் எங்களை பார்ப்பீராக لَـكَانَ இருந்திருக்கும் خَيْرًا நன்றாக لَّهُمْ அவர்களுக்கு وَاَقْوَمَ ۙ இன்னும் மிக நேர்மையாக وَ لٰـكِنْ எனினும் لَّعَنَهُمُ அவர்களை சபித்தான் اللّٰهُ அல்லாஹ் بِكُفْرِهِمْ அவர்களின் நிராகரிப்பின் காரணமாக فَلَا يُؤْمِنُوْنَ ஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் اِلَّا தவிர قَلِيْلًا‏ சிலரை
4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!” என்று கூறி, “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.
4:46. யூதர்களில் சிலர் (வேத) வசனங்களைக் கருத்து வேறுபடும்படிப் புரட்டி வருவதுடன் (உங்களை நோக்கி ‘‘நபியே! நீர் சொன்னதை) நாம் செவியுற்றோம். எனினும் நாம் (அதற்கு) மாறு செய்வோம்'' என்று கூறி (உமது) மார்க்கத்தில் குற்றம் சொல்லவும் கருதி (‘‘நபியே! நாம் சொல்வதை) நீர் கேட்பீராக. (இனி வேறு எதையும்) நீர் கேட்காதீர்'' என்றும் கூறி ‘ராயினா' என்று நாவைக் கோணி உளறுகின்றனர். (‘ராயினா' என்னும் பதத்திற்கு அரபி மொழியில் ‘எங்களைக் கவனிப்பீராக' என்பது அர்த்தம். எனினும் யூதர்களுடைய மொழியிலோ ‘மூடனே!' என்பது அர்த்தமாகும். எனினும் அவர்கள் உம்மை நோக்கி ‘‘நபியே! நீர் சொன்னதற்கு) நாம் செவிசாய்த்தோம். (உமக்கு) நாம் கட்டுப்பட்டோம். (நாம் சொல்வதை) நீர் கேட்பீராக (என்று கூறி ‘ராயினா' என்னும் பதத்திற்குப் பதிலாக ‘உன்ளுர்னா') ‘எங்களை அன்பாக நோக்குவீராக' என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்கே மிக நன்றாகவும், நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான். ஆதலால், அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
4:46. யூதர்களில் சிலர் (வேதத்தின்) சொற்களை அவற்றின் இடங்களிலிருந்து புரட்டுகின்றனர். சத்திய நெறியைப் பழித்துரைத்தவாறு தம் நாவுகளைச் சுழற்றி ‘ஸமிஃனா, வ அஸய்னா’ என்றும் ‘இஸ்மஃ கைர முஸ்மயின்’ என்றும் ‘ராயினா’ என்றும் கூறுகின்றனர், ஆனால் அவர்கள் ‘ஸமிஃனா வ அதஃனா’ என்றும் ‘இஸ்மஃ’ என்றும் ‘உன்ளுர்னா’ என்றும் கூறியிருப்பார்களேயானால் அது அவர்களுக்கு நன்மையானதாகவும், மிக நேர்மையான வழிமுறையாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களின் அசத்தியப் போக்கின் காரணமாக அவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டுவிட்டது. எனவே, அவர்கள் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றார்கள்.
4:46. யூதர்களில் சிலர், (வேத) வசனங்களை அதற்குரிய இடங்களிலிருந்து (அவற்றின் கருத்து வேறுபடும்படியான விதத்தில்) புரட்டுகின்றனர், (நபியே! உம்மை நோக்கி, நீர் சொன்னதை) நாம் செவியுற்றோம், இன்னும் நாம் (அதற்கு) மாறு செய்வோம், “(என்று கூறி உம்) மார்க்கத்தில் குற்றம் சொல்ல (“நபியே! இதுவரை) நீர் கேட்க முடியாததை நீர் கேளும்) என்றும் ‘ராயினா’ என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டும் சன்மார்க்கத்தைப் பழித்தும் கூறுகின்றனர், ‘(நபியே நீர் சொன்னதற்கு)’ நாம் செவி சாய்த்தோம், இன்னும் (உமக்கு) நாம் கீழ்ப்படிந்தோம், (நாம் சொல்வதை) நீர் கேளும்” என்று கூறி ராயினா என்னும் பதத்திற்குப் பதிலாக) ‘உள்ளுர்னா’ (எங்களை அன்பாக நோக்குவீராக!) என்றும் கூறியிருந்தால் அது அவர்களுக்கே மிக நன்மையாகவும், மிக நேர்மையானதாகவும் இருந்திருக்கும், எனினும் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்துவிட்டான், ஆதலால், (அவர்கள்) குறைவாகவேயன்றி விசுவாசங்கொள்ளமாட்டார்கள்.
4:47
4:47 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اٰمِنُوْا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِّمَا مَعَكُمْ مِّنْ قَبْلِ اَنْ نَّـطْمِسَ وُجُوْهًا فَنَرُدَّهَا عَلٰٓى اَدْبَارِهَاۤ اَوْ نَلْعَنَهُمْ كَمَا لَعَنَّاۤ اَصْحٰبَ السَّبْتِ‌ؕ وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اُوْتُوا கொடுக்கப்பட்டவர்களே! الْكِتٰبَ வேதம் اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் بِمَا எதை نَزَّلْنَا இறக்கினோம் مُصَدِّقًا உண்மைப்படுத்தக் கூடியதாக لِّمَا எதை مَعَكُمْ உங்களுடன் مِّنْ قَبْلِ முன்னர் اَنْ نَّـطْمِسَ நாம் மாற்றுவது وُجُوْهًا முகங்களை فَنَرُدَّهَا அவற்றை திருப்பி விடுவோம் عَلٰٓى மீது اَدْبَارِهَاۤ அவற்றின்பின்புறங்கள் اَوْ அல்லது نَلْعَنَهُمْ அவர்களை சபிப்போம் كَمَا போல் لَعَنَّاۤ சபித்தோம் اَصْحٰبَ السَّبْتِ‌ؕ சனிக்கிழமையில் வரம்பு மீறியோரை وَكَانَ ஆகும் اَمْرُ கட்டளையிட்டது اللّٰهِ அல்லாஹ் مَفْعُوْلًا‏ நிறைவேற்றப்பட்டே
4:47. வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) “அஸ்ஹாபுஸ் ஸப்து” என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.
4:47. வேதம் கொடுக்கப்பட்டவர்களே! நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள். (இதுவோ) உங்களிடமுள்ள (வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இன்றேல் (உங்கள்) முகங்களை மாற்றி அதைப் பின்புறமாகத் திருப்பிவிடுவோம். அல்லது (சனிக்கிழமைகளில் வரம்பு மீறியவர்களான) ‘அஸ்ஹாபுஸ் ஸப்த்தை' நாம் சபித்தவாறு உங்களையும் நாம் சபித்து விடுவோம். அல்லாஹ்வுடைய கட்டளை நடைபெற்றே தீரும்.
4:47. வேதம் வழங்கப்பட்டவர்களே! (இப்போது) நாம் இறக்கி வைத்துள்ள (வேதத்)தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இது (முன்பு) உங்களிடம் இருந்த (வேதத்)தை மெய்ப்படுத்தக்கூடியதாய் இருக்கின்றது! நாம் முகங்களை உருக்குலைத்து அவற்றைப் பின்புறமாய்த் திருப்பி விடுவதற்கு முன்பே அல்லது அஸ்ஹாபுஸ் ஸப்த்தை சபித்தது போல நாம் சபிப்பதற்கு முன்பே! (நம்பிக்கை கொண்டு விடுங்கள்.) இன்னும் அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்பட்டே தீரும் (என்பதை நினைவில் வையுங்கள்.)
4:47. வேதம் கொடுக்கப்பட்டோரே! உங்கள் முகங்களை மாற்றி, பின்னர் அவைகளை அவைகளின் பின்புறமாக நாம் திருப்பிவிடுவதற்கு முன்பே உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துகின்ற நாம் இறக்கிவைத்த இ(வ்வேதத்தை) விசுவாசங்கொள்ளுங்கள், அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறியோரான) அஸ்ஹாபுஸ்ஸப்தினரை நாம் சபித்த பிரகாரம் அவர்களையும் நாம் சபித்துவிடுவோம், மேலும் அல்லாஹ்வுடைய கட்டளை நிறைவேற்றப்பட்டதாக ஆகிவிடும்.
4:48
4:48 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَغْفِرُ மன்னிக்க மாட்டான் اَنْ يُّشْرَكَ இணை வைக்கப்படுவதை بِهٖ அவனுக்கு وَيَغْفِرُ இன்னும் மன்னிப்பான் مَا எது دُوْنَ தவிர ذٰ لِكَ இது لِمَنْ எவருக்கு يَّشَآءُ‌ ۚ நாடுகிறான் وَمَنْ எவர் يُّشْرِكْ இணைவைப்பார் بِاللّٰهِ அல்லாஹ்விற்கு فَقَدِ திட்டமாக افْتَـرٰۤى புனைந்து விட்டார் اِثْمًا பாவத்தை عَظِيْمًا‏ பெரும்
4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இதைத் தவிர (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்கிறார்கள்.
4:48. திண்ணமாக, தனக்கு இணை வைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகின்றவர்களுக்கு மன்னித்து விடுகின்றான். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்கள், திண்ணமாக பெரும் பொய்யைப் புனைந்தவராவர்; மேலும் பாவத்தைப் புரிந்தவராவர்.
4:48. நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான், இதனைத் தவிர (மற்ற) எதனையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான், எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாகக் கற்பனை செய்துவிட்டார்.
4:49
4:49 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يُزَكُّوْنَ اَنْفُسَهُمْ‌ ؕ بَلِ اللّٰهُ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اِلَى الَّذِيْنَ எவர்களை يُزَكُّوْنَ பரிசுத்தப்படுத்துகிறார்கள் اَنْفُسَهُمْ‌ ؕ தங்களை بَلِ மாறாக اللّٰهُ அல்லாஹ்தான் يُزَكِّىْ பரிசுத்தமாக்குகிறான் مَنْ எவரை يَّشَآءُ நாடுகிறான் وَلَا يُظْلَمُوْنَ அநீதி செய்யப்பட மாட்டார்கள் فَتِيْلًا‏ வெள்ளை நூலளவும்
4:49. (நபியே!) தங்களைத் தாங்களே பரிசுத்தமானவர்கள் என்(று கூறிக்கொள்)பவர்களை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள் கூறுவதுபோல்) அல்ல! அல்லாஹ் தான் நாடியவர்களைப் பரிசுத்தம் ஆக்குவான். (இது விஷயத்தில்) எவரும் ஓர் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
4:49. (நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது சரியன்று.) அல்லாஹ், தான் விரும்பிய (நல்ல)வர்களைத்தான் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணுவளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள்.
4:49. தம்மைத் தாமே தூய்மையானவர்கள் எனப் பெருமையடித்துக் கொள்கின்றவர்களை நீர் பார்க்கவில்லையா? உண்மை என்னவெனில், தான் நாடுகின்றவர்களையே அல்லாஹ் தூய்மையாக்குகிறான். (அவர்கள் தூய்மைப்படுத்தப்படவில்லை எனில் அதற்கு யார் பொறுப்பு?) மேலும் அவர்கள் யார் மீதும் அணுவளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது.
4:49. (நபியே!) தமக்குத் தாமே பரிசுத்தத்தைக் கற்பிப்போரை நீர் காணவில்லையா? (அவர்கள் கூறுவது சரி) அல்ல, அல்லாஹ், தான் நாடிய (நல்ல)வர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கிறான், (இவ்விஷயத்தில்) ஓர் அணுவளவும் அவர்கள் அநீதி செய்யப்படமாட்டார்கள்.
4:50
4:50 اُنْظُرْ كَيْفَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْـكَذِبَ‌ؕ وَكَفٰى بِهٖۤ اِثْمًا مُّبِيْنًا‏
اُنْظُرْ பார்ப்பீராக كَيْفَ எவ்வாறு يَفْتَرُوْنَ கற்பனை செய்கின்றனர் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது الْـكَذِبَ‌ؕ பொய்யை وَكَفٰى போதுமாகும் بِهٖۤ இதுவே اِثْمًا பாவத்திற்கு مُّبِيْنًا‏ பகிரங்கமான
4:50. (நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்; இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.
4:50. (நபியே!) அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) எவ்வாறு அவர்கள் அபாண்டமான பொய்யைக் கற்பனை செய்கின்றனர் என்பதை நீர் கவனிப்பீராக. பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமா(ன உதாரணமா)க இருக்கிறது.
4:50. பாருங்கள்! இவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்க சற்றும் தயங்குவதில்லையே! மேலும், வெளிப்படையான பாவியாவதற்கு இது ஒன்றே போதுமானதாகும்.
4:50. (நபியே!) அல்லாஹ்வின் மீது அவர்கள் (அபாண்டமான) பொய்யை எவ்வாறு கற்பனை செய்கின்றனர் என்பதை நீர் கவனிப்பீராக! பகிரங்கமான பாவத்திற்கு இதுவே போதுமானதாக இருக்கின்றது.
4:51
4:51 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُؤْمِنُوْنَ بِالْجِبْتِ وَالطَّاغُوْتِ وَيَقُوْلُوْنَ لِلَّذِيْنَ كَفَرُوْا هٰٓؤُلَۤاءِ اَهْدٰى مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا سَبِيْلًا‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اِلَى الَّذِيْنَ எவர்களை اُوْتُوْا கொடுக்கப்பட்டார்கள் نَصِيْبًا ஒரு பாகம் مِّنَ الْكِتٰبِ வேதத்தில் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கின்றனர் بِالْجِبْتِ ஷைத்தானை وَالطَّاغُوْتِ இன்னும் சிலையை وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் لِلَّذِيْنَ எவர்களை நோக்கி كَفَرُوْا நிராகரித்தார்கள் هٰٓؤُلَۤاءِ இவர்கள் اَهْدٰى மிக நேர்வழியாளர்(கள்) مِنَ விட الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் سَبِيْلًا‏ பாதையால்
4:51. (நபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.
4:51. (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் சிலைகளையும், ஷைத்தான்களையும் நம்பிக்கைகொண்டு (மற்ற) நிராகரிப்பவர் களைச் சுட்டிக் காண்பித்து ‘‘இவர்கள்தான் உண்மை நம்பிக்கையாளர்களைவிட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றனர்'' என்று கூறுகின்றனர்.
4:51. வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு வழங்கப்பட்டவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ ஜிப்தையும்*, தாஃகூத்தையும் ஏற்றுக்கொள்கின்றார்கள். மேலும் நம்பிக்கையற்றவர்களைக் குறித்து, “இவர்கள்தாம் இறை நம்பிக்கை கொண்டவர்களைவிட மிகவும் நேர்வழியிலிருக்கின்றார்கள்” என்று கூறுகிறார்கள்.
4:51. ((நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப் பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா?, அவர்கள் விக்கிரகங்களையும் தாகூத்தை(-ஷைத்தானையும் விசுவாசிக்கின்றனர், மேலும், (இணை வைப்போராகிய குறைஷியர்களைச் சுட்டிக்காண்பித்து) “இவர்கள்தாம் உண்மை விசுவாசிகளைவிட மிகவும் நேரான பாதையில் இருக்கின்றனர்” என்று காஃபிர்களுக்கு கூறுகின்றனர்.
4:52
4:52 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَعَنَهُمُ اللّٰهُ‌ ؕ وَمَنْ يَّلْعَنِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ نَصِيْرًا ؕ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் لَعَنَهُمُ அவர்களை சபித்தான் اللّٰهُ‌ ؕ அல்லாஹ் وَمَنْ எவரை يَّلْعَنِ சபிப்பான் اللّٰهُ அல்லாஹ் فَلَنْ تَجِدَ காணவே மாட்டீர் لَهٗ அவருக்கு نَصِيْرًا ؕ‏ உதவியாளரை
4:52. இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.
4:52. இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான். எவர்களை அல்லாஹ் சபித்து விடுகிறானோ அவர்களுக்கு உதவி செய்யும் ஒருவரையும் நீர் காணமாட்டீர்.
4:52. இத்தகையோரைத்தான் அல்லாஹ் சபித்துள்ளான். மேலும், யாரை அல்லாஹ் சபித்துவிட்டானோ அத்தகையவருக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்!
4:52. அவர்கள் எத்தகையோரென்றால்-அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான், எவரை அல்லாஹ் சபித்துவிட்டானோ அவருக்கு உதவி செய்பவரை நீர் காணவே மாட்டீர்.
4:53
4:53 اَمْ لَهُمْ نَصِيْبٌ مِّنَ الْمُلْكِ فَاِذًا لَّا يُؤْتُوْنَ النَّاسَ نَقِيْرًا ۙ‏
اَمْ அல்லது لَهُمْ இவர்களுக்கு نَصِيْبٌ பங்கு مِّنَ الْمُلْكِ ஆட்சியில் فَاِذًا அவ்வாறிருந்தால் لَّا يُؤْتُوْنَ கொடுக்க மாட்டார்கள் النَّاسَ மக்களுக்கு نَقِيْرًا கீறல் அளவும்
4:53. இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாகமாவது இருக்கிறதா? அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.
4:53. இவர்களுக்கு இவ்வுலக ஆட்சியில் சொற்ப பங்காவது இருக்கிறதா? அவ்வாறிருந்தால் மனிதர்களுக்கு ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.
4:53. ஆட்சி அதிகாரத்தில் இவர்களுக்கு ஏதாவது பங்குண்டா? அப்படி இருக்குமாயின் இவர்கள் மற்றவர்களுக்கு அற்பப் பொருளைக்கூட கொடுக்க மாட்டார்கள்.
4:53. (இவ்வுலக) ஆட்சியில் ஏதேனும்) ஒரு பங்கு (பாத்தியதை) அவர்களுக்கு சொற்ப பாகமாவது இருக்கின்றதா? (இல்லை) அவ்வாறிருந்தால், அவர்கள் (அதிலிருந்து மற்ற) மனிதர்களுக்கு இம்மியேனும் கொடுக்க மாட்டார்கள்.
4:54
4:54 اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ۚ فَقَدْ اٰتَيْنَاۤ اٰلَ اِبْرٰهِيْمَ الْـكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا‏
اَمْ அல்லது يَحْسُدُوْنَ பொறாமைப்படுகி றார்கள் النَّاسَ மக்களை عَلٰى மீது مَاۤ اٰتٰٮهُمُ எது/கொடுத்தான்/ அவர்களுக்கு اللّٰهُ அல்லாஹ் مِنْ فَضْلِهٖ‌ۚ தன் அருளிலிருந்து فَقَدْ திட்டமாக اٰتَيْنَاۤ கொடுத்தோம் اٰلَ குடும்பத்தாருக்கு اِبْرٰهِيْمَ இப்ராஹீமுடைய الْـكِتٰبَ வேதத்தை وَالْحِكْمَةَ இன்னும் ஞானத்தை وَاٰتَيْنٰهُمْ இன்னும் கொடுத்தோம்/ அவர்களுக்கு مُّلْكًا ஆட்சியை عَظِيْمًا‏ பெரிய
4:54. அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
4:54. அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு தன் அருளை வழங்கியுள்ளதைப் பற்றி இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? நிச்சயமாக நாம் இப்ராஹீமுடைய சந்ததிகளுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்து, அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.
4:54. மேலும், இவர்கள் அல்லாஹ் தன் அருளினால் மக்களுக்கு வழங்கியிருப்பதைக் கண்டு அவர்கள்மீது பொறாமை கொள்கின்றார்களா? அப்படியென்றால் நாம் இப்ராஹீமின் வழித்தோன்றல்களுக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் கொடுத்து மாபெரும் அரசாட்சியையும் வழங்கியிருக்கிறோமே!
4:54. அல்லது (நல்லடியார்களான) மனிதர்களை(ப் பற்றி) அவர்களுக்கு அல்லாஹ் தன் பேரருளால் கொடுத்தவற்றின்மீது (யூதர்களாகிய) அவர்கள் பொறாமைப்படுகிறார்களா? அவ்வாறாயின், இப்றாஹீமுடைய குடும்பத்தினருக்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்திருந்தோம். (அத்துடன்) மகத்தான அரசாங்கத்தையும் அவர்களுக்கு நாம் கொடுத்திருந்தோம்.
4:55
4:55 فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ‌ ؕ وَكَفٰى بِجَهَـنَّمَ سَعِيْرًا‏
فَمِنْهُمْ அவர்களில் உண்டு مَّنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் بِهٖ அதை وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவர் صَدَّ தடுத்தார் عَنْهُ‌ ؕ அதை விட்டு وَكَفٰى போதுமாகும் بِجَهَـنَّمَ நரகமே سَعِيْرًا‏ கொழுந்து விட்டெரியும் நெருப்பால்
4:55. (அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்; சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்; (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது.
4:55. அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றவர்கள் அதை நிராகரித்து விட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே தகுமா(ன கூலியா)கும்.
4:55. ஆனால், இவர்களில் சிலர் அதனை நம்பினார்கள்; மற்றும் சிலர் புறக்கணித்தார்கள். மேலும், (புறக்கணிப்பவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே போதுமானதாகும்.
4:55. (அவ்வாறிருந்தும்) அவர்களிலிருந்து அதை விசுவாசித்தவரும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து அதை விட்டும் விலகிக் கொண்டவரும் உண்டு, (நிராகரித்த அவர்களுக்குக்) கொழுந்து விட்டெரியும் நரகமே போதுமாகிவிட்டது.
4:56
4:56 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا سَوْفَ نُصْلِيْهِمْ نَارًا ؕ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَيْرَهَا لِيَذُوْقُوا الْعَذَابَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَزِيْزًا حَكِيْمًا‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் بِاٰيٰتِنَا நம் வசனங்களை سَوْفَ نُصْلِيْهِمْ அவர்களை எரிப்போம் نَارًا ؕ நரக நெருப்பில் كُلَّمَا போதெல்லாம் نَضِجَتْ கனிந்து விட்டது جُلُوْدُهُمْ அவர்களின் தோல்கள் بَدَّلْنٰهُمْ அவர்களுக்கு மாற்றுவோம் جُلُوْدًا தோல்களை غَيْرَهَا அவை அல்லாத لِيَذُوْقُوا அவர்கள் சுவைப்பதற்கு الْعَذَابَ‌ ؕ வேதனையை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَزِيْزًا மிகைத்தவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:56. யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
4:56. எவர்கள் நம் (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கருகி விடும்போதெல்லாம் வேறு புதிய தோல்களை மாற்றிக்கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
4:56. எவர்கள் நம் சான்றுகளை மறுக்கின்றார்களோ அவர்களை நிச்சயம் நாம் நரகில் வீசி எறிவோம்! அவர்களுடைய உடலின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றிக் கொண்டே இருப்போம்; வேதனையை அவர்கள் நன்கு சுவைத்துக் கொண்டேயிருப்பதற்காக! திண்ணமாக அல்லாஹ் மிகையான ஆற்றல் உள்ளவனாகவும் (தன் முடிவுகளைச் செயல்படுத்தும் நுட்பத்தை) நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
4:56. நிச்சயமாக நம்முடைய (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கின்றார்களே, அத்தகையோர்-அவர்களை, (விரைவில்) நாம் நரகத்தில் புகுத்தி விடுவோம், (அதில்) அவர்கள், வேதனையைச் (சதா) அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கருகி விடும்போதெல்லாம், அவையல்லாத (வேறு புதிய) தோல்களை நாம் மாற்றிக் கொண்டே இருப்போம், நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
4:57
4:57 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ لَـهُمْ فِيْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ  وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيْلًا‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகள் سَنُدْخِلُهُمْ அவர்களை நுழைப்போம் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَاۤ اَبَدًا‌ ؕ அவற்றில்/என்றும் لَـهُمْ அவர்களுக்கு فِيْهَاۤ அவற்றில் اَزْوَاجٌ மனைவிகள் مُّطَهَّرَةٌ  பரிசுத்தமான وَّنُدْخِلُهُمْ இன்னும் அவர்களை நுழைப்போம் ظِلًّا நிழலில் ظَلِيْلًا‏ அடர்ந்தது
4:57. (அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு; அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
4:57. (அவர்களில்) எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்கிறார்களோ அவர்களை சொர்க்கங்களில் புகுத்துவோம். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அதில் என்றென்றுமே தங்கி விடுவார்கள். பரிசுத்தமான மனைவிகளும் அங்கு அவர்களுக்கு உண்டு. அடர்ந்த (நீங்காத) நிழலிலும் அவர்களை நாம் அமர்த்துவோம்.
4:57. மேலும் எவர்கள் நம் வசனங்களை ஏற்று நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் நுழைவிப்போம். அங்கு அவர்கள் என்றென்றும் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். அங்கு அவர்களுக்கு மிகத் தூய்மையான துணைவியர் இருப்பர். மேலும் அவர்களை நாம் அடர்ந்த நிழலில் அமரச் செய்வோம்.
4:57. இன்னும் (அவர்களில்) விசுவாசங்கொண்டு, நற்செயல்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்-அவர்களைக் சுவனபதிகளில் நாம் பிரவேசிக்கச் செய்வோம், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள்.
4:58
4:58 اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَاْمُرُكُمْ உங்களுக்குக் கட்டளையிடுகிறான் اَنْ تُؤَدُّوا நீங்கள் ஒப்படைத்து விடுவது الْاَمٰنٰتِ அமானிதங்களை اِلٰٓى இடம் اَهْلِهَا ۙ அதன் சொந்தக்காரர் وَاِذَا حَكَمْتُمْ இன்னும் நீங்கள் தீர்ப்பளித்தால் بَيْنَ இடையில் النَّاسِ மக்கள் اَنْ تَحْكُمُوْا நீங்கள் தீர்ப்பளிப்பது بِالْعَدْلِ‌ ؕ நீதமாக اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் نِعِمَّا எது மிக சிறந்தது? يَعِظُكُمْ உங்களுக்கு உபதேசிக்கிறான் بِهٖ‌ ؕ அதை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் سَمِيْعًۢا செவியுறுபவனாக بَصِيْرًا‏ உற்று நோக்குபவனாக
4:58. நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
4:58. (நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் உரிமையாளர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்கும்படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
4:58. (முஸ்லிம்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான். அமானத் அடைக்கலப் பொருள்களை அவற்றிற்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள்; நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்களுக்கு வழங்குகின்ற அறிவுரை மிக உன்னதமானதாகும். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.
4:58. (விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுமாறும், மனிதர்ளுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான், நிச்சயமாக அல்லாஹ் எதனை உங்களுக்கு உபதேசிக்கிறானோ அது மிக்க நல்லதாகும். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவனாக பார்க்கிறவனாக இருக்கின்றான்.
4:59
4:59 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْـعُوا اللّٰهَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ وَاُولِى الْاَمْرِ مِنْكُمْ‌ۚ فَاِنْ تَنَازَعْتُمْ فِىْ شَىْءٍ فَرُدُّوْهُ اِلَى اللّٰهِ وَالرَّسُوْلِ اِنْ كُنْـتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اَطِيْـعُوا கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு وَاَطِيْـعُوا கீழ்ப்படியுங்கள் الرَّسُوْلَ தூதருக்கு وَاُولِى الْاَمْرِ இன்னும் அதிகாரிகளுக்கு مِنْكُمْ‌ۚ உங்களில் فَاِنْ تَنَازَعْتُمْ உங்களுக்குள் பிணக்கு ஏற்பட்டால் فِىْ شَىْءٍ ஒரு விஷயத்தில் فَرُدُّوْهُ அதைத் திருப்புங்கள் اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் وَالرَّسُوْلِ தூதர் اِنْ كُنْـتُمْ நீங்கள் இருந்தால் تُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறீர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَـوْمِ الْاٰخِرِ‌ ؕ இன்னும் இறுதி நாள் ذٰ لِكَ இதுதான் خَيْرٌ சிறந்தது وَّاَحْسَنُ இன்னும் மிக அழகானது تَاْوِيْلًا‏ முடிவால்
4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
4:59. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடங்கள். (அவ்வாறே அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் அதிபர்களுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்குள் ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்பட்டால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் மனதிருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு நன்மையும், அழகான முடிவும் ஆகும்.
4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். மேலும், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் (கீழ்ப்படியுங்கள்.) பின்னர், ஏதேனும் விவகாரத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால் அதனை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் திருப்பி விடுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை கொண்டோராயின் இதுதான் சரியான வழிமுறையாகும்; இறுதி விளைவின் கோணத்திலிருந்து பார்த்தாலும் இதுவே சிறந்தது.
4:59. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள், (அவனது) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், இன்னும் உங்களில் (அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கும்) அதிகாரம் உடைய (தலைவர்களுக்கும்) கீழ்ப்படியுங்கள், ஆனால் யாதொரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக்கொண்டால், அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் திருப்பி ஒப்படைத்து விடுங்கள், (அவர்களுடைய தீர்ப்பை நீங்கள் திருப்தியாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்) மெய்யாகவே நீங்கள், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால், இதுதான் நன்மையாகவும் மிக அழகான முடிவாகவும் இருக்கும்.
4:60
4:60 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يَزْعُمُوْنَ اَنَّهُمْ اٰمَنُوْا بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ يُرِيْدُوْنَ اَنْ يَّتَحَاكَمُوْۤا اِلَى الطَّاغُوْتِ وَقَدْ اُمِرُوْۤا اَنْ يَّكْفُرُوْا بِهٖ ؕ وَيُرِيْدُ الشَّيْـطٰنُ اَنْ يُّضِلَّهُمْ ضَلٰلًاۢ بَعِيْدًا‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? اِلَى பக்கம் الَّذِيْنَ எவர்கள் يَزْعُمُوْنَ எண்ணுகின்றனர் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் بِمَاۤ எதை اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உம் பக்கம் وَمَاۤ எவற்றை اُنْزِلَ இறக்கப்பட்டன مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் يُرِيْدُوْنَ நாடுகின்றனர் اَنْ يَّتَحَاكَمُوْۤا அவர்கள் தீர்ப்பு தேடிச்செல்ல اِلَى الطَّاغُوْتِ தீயவனிடம் وَقَدْ اُمِرُوْۤا கட்டளையிடப் பட்டுள்ளனர் اَنْ يَّكْفُرُوْا அவர்கள் புறக்கணிக்க வேண்டும் بِهٖ ؕ அவனை وَيُرِيْدُ நாடுகிறான் الشَّيْـطٰنُ اَنْ يُّضِلَّهُمْ ஷைத்தான்/அவர்களை வழிகெடுக்க ضَلٰلًاۢ வழிகேடு بَعِيْدًا‏ வெகு தூரம்
4:60. (நபியே!) உம்மீது இறக்கப்பட்ட இ(வ் வேதத்)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்ட (வேதங்கள் அனைத்)தையும் நம்புவதாக வாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? - (எந்த ஷைத்தானை) நிராகரிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்த ஷைத்தானைத் தீர்ப்புக் கூறுபவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் - அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் தள்ளிவிட விரும்புகிறான்.
4:60. (நபியே!) உம் மீது இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாகத் தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக எவர்கள் சாதிக்கின்றனரோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? புறக்கணிக்கப்பட வேண்டுமென்று கட்டளையிடப்பட்ட ஒரு விஷமியையே அவர்கள் (தங்களுக்குத்) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்கிக்கொள்ள விரும்புகின்றனர். (விஷமியாகிய) அந்த ஷைத்தானோ அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் செலுத்தவே விரும்புகிறான்.
4:60. (நபியே!) நீர் இவர்களைப் பார்க்கவில்லையா? “உமக்கு இறக்கியருளப்பட்ட வேதத்தையும் உமக்கு முன்னால் இறக்கியருளப்பட்ட வேதங்களையும் நாங்கள் நம்பினோம்” எனக் கூறுகின்றார்கள். எனினும், அவர்கள் தீர்ப்புக்காக தம் விவகாரங்களை தாஃகூத்திடம் கொண்டு செல்லவே விரும்புகின்றார்கள். ஆயினும் தாஃகூத்தை நிராகரிக்குமாறுதான் அவர்கள் கட்டளையிடப் பட்டிருந்தார்கள். ஷைத்தான் அவர்களை முற்றிலும் வழிகெடுத்து வெகுதூரம் கொண்டு செல்ல விரும்புகின்றான்.
4:60. (நபியே!) உம்மீது இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதத்தையும், உமக்கு முன்னர் இறக்கிவைக்கப்பட்டுள்ள (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே தாங்கள் விசுவாசிப்பதாக எண்ணிக் கொண்டிருப்போர்பால் நீர் பார்ககவில்லையா? அவர்கள் தாகூத்தை (ஷைத்தானை) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்க நாடுகிறார்கள், (ஆனால்) அவர்களோ, அவனை நிராகரித்து விடவேண்டுமெனத் திட்டமாகக் கட்டளையிடப்பட்டுள்ளார்கள், அந்த ஷைத்தானோ, அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுத்துவிடவே நாடுகின்றான்.
4:61
4:61 وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ رَاَيْتَ الْمُنٰفِقِيْنَ يَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًا‌ ۚ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களுக்கு تَعَالَوْا வாருங்கள் اِلٰى பக்கம் مَاۤ எதை اَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் وَاِلَى இன்னும் பக்கம் الرَّسُوْلِ தூதர் رَاَيْتَ காண்பீர் الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களை يَصُدُّوْنَ புறக்கணிக்கிறார்கள் عَنْكَ உம்மை விட்டு صُدُوْدًا‌ ۚ‏ புறக்கணித்தல்
4:61. மேலும் அவர்களிடம்: “அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்” என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்.
4:61. ‘‘(நியாயம் பெற) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கம், (அவனது) தூதரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்.)'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்கள் உம்மை விட்டு முற்றிலும் விலகி விடுவதையே நீர் காண்பீர்.
4:61. மேலும், ‘அல்லாஹ் இறக்கிவைத்த (சட்டத்)தின் பக்கமும், தூதரின் பக்கமும் வாருங்கள்’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வராமல் விலகிச் செல்வதையே நீர் பார்க்கின்றீர்.
4:61. மேலும், (நியாயம் பெற) “அல்லாஹ் இறக்கியருளிய (வேதத்)தின் பாலும் - அவனது தூதரின்பாலும் நீங்கள் வாருங்கள்” (அந்த ஷைத்தானிடம் செல்லாதீர்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகளை (வேஷதாரிகளை)-அவர்கள் உம்மைவிட்டு முற்றிலும் புறக்கணித்து விடுவதையே நீர் காண்பீர்.
4:62
4:62 فَكَيْفَ اِذَاۤ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ ثُمَّ جَآءُوْكَ يَحْلِفُوْنَ‌ۖ بِاللّٰهِ اِنْ اَرَدْنَاۤ اِلَّاۤ اِحْسَانًـا وَّتَوْفِيْقًا‏
فَكَيْفَ எவ்வாறு اِذَاۤ اَصَابَتْهُمْ அவர்களுக்கு ஏற்பட்டால் مُّصِيْبَةٌ ۢ ஒரு கஷ்டம் بِمَا எதன் காரணமாக قَدَّمَتْ முற்படுத்தியன اَيْدِيْهِمْ அவர்களின் கரங்கள் ثُمَّ பிறகு جَآءُوْكَ உம்மிடம் வந்தனர் يَحْلِفُوْنَ‌ۖ சத்தியம் செய்கின்றனர் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு اِنْ اَرَدْنَاۤ நாங்கள் நாடவில்லை اِلَّاۤ அன்றி اِحْسَانًـا நன்மையை وَّتَوْفِيْقًا‏ இன்னும் ஒற்றுமையை
4:62. அவர்களின் கைகள் முற்படுத்தியனுப்பிய தீவினையின் காரணத்தால், அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் எப்படியிருக்கும்? அப்பொழுது அவர்கள் உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மேல் சத்தியம் செய்து “நாங்கள் நன்மையையும் ஒற்றுமையையும் தவிர (வேறெதனையும்) நாடவில்லை” என்று கூறுகின்றனர்.
4:62. (நபியே!) அவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலின் காரணமாக அவர்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்ட சமயத்தில் (அதற்குப் பரிகாரம் தேடிக்கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழிநிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக)! பின்னர், அவர்கள் உம்மிடமே வந்து ‘‘(அந்த ஷைத்தானிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் விரும்பியே தவிர, வேறொன்றையும் நாங்கள் விரும்பவில்லை'' என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கின்றனர்.
4:62. பின்னர் அவர்களின் கைகள் செய்த தீவினைகளின் காரணத்தால் அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது நிலைமை என்னவாகும்? பிறகு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நன்மை செய்வதையும், இரு பிரிவினரிடையே உடன்பாடு ஏற்படுத்து வதையும் தவிர நாங்கள் வேறெதையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்துகொண்டு உம்மிடம் வருவார்கள்.
4:62. (நபியே!) அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவத்)தின் காரணமாக அவர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், (அதற்குப் பரிகாரம் தேடிக் கொள்ள முடியாமலாகிவிட்ட அவர்களின் இழிநிலைமை) எவ்வாறு இருக்கும்?(என்பதை நீர் பார்ப்பீராக) பின்னர், அவர்கள் - நன்மையையும் - ஒற்றுமையையும் தவிர (வேறெதையும்) நாங்கள் நாடவில்லை என்று அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்பவர்களாக உம்மிடம் வருகின்றனர்.
4:63
4:63 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يَعْلَمُ اللّٰهُ مَا فِىْ قُلُوْبِهِمْ فَاَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَّهُمْ فِىْۤ اَنْفُسِهِمْ قَوْلًاۢ بَلِيْغًا‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் يَعْلَمُ அறிவான் اللّٰهُ அல்லாஹ் مَا எதை فِىْ قُلُوْبِهِمْ அவர்களுடைய உள்ளங்களில் فَاَعْرِضْ ஆகவே புறக்கணிப்பீராக عَنْهُمْ அவர்களை وَعِظْهُمْ இன்னும் உபதேசிப்பீராக/அவர்களுக்கு وَقُلْ கூறுவீராக لَّهُمْ அவர்களுக்கு فِىْۤ اَنْفُسِهِمْ அவர்களுடைய உள்ளங்களில் قَوْلًاۢ கூற்றை بَلِيْغًا‏ தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய
4:63. அத்தகையோரின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கு அறிவான் - ஆகவே நீர் அவர்களிடமிருந்து விலகியிரும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யும்; மேலும், அவர்களின் மனங்களில் பதியும்படி தெளிவான வார்த்தைகளைக் கூறும்.
4:63. இவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். ஆகவே, (நபியே!) நீர் அவர்(களின் குற்றங்)களைப் புறக்கணித்து அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வீராக. மேலும், (அவர்களிடம் உள்ள கெடுதல்களை) அவர்களுக்கு மனதில் படும்படித் தெளிவாக எடுத்துக் கூறுவீராக.
4:63. இத்தகையவர்களின் இதயங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான். எனவே, நீர் அவர்களின் நடத்தையைப் புறக்கணித்து விடுவீராக! அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! மேலும் அவர்களின் உள்ளங்களில் பதியக்கூடிய நல்லுரையை நீர் அவர்களுக்குக் கூறுவீராக!
4:63. அவர்கள் எத்தகையோரென்றால்-அவர்களின் இதயங்களில் இருப்பவைகளை அல்லாஹ் அறிவான், ஆகவே (நபியே! நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! மேலும், அவர்களுக்கு நல்லுபதேசம் செய்வீராக! மேலும், அவர்களின் உள்ள கெடுதல்களை அவர்களுக்கு அவர்களது மனங்களில் படும்படித் தெளிவாக எடுத்துக்கூறுவீராக!
4:64
4:64 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا لِـيُـطَاعَ بِاِذْنِ اللّٰهِ ‌ؕ وَلَوْ اَنَّهُمْ اِذْ ظَّلَمُوْۤا اَنْفُسَهُمْ جَآءُوْكَ فَاسْتَغْفَرُوا اللّٰهَ وَاسْتَغْفَرَ لَـهُمُ الرَّسُوْلُ لَوَجَدُوا اللّٰهَ تَوَّابًا رَّحِيْمًا‏
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை مِنْ رَّسُوْلٍ எந்த தூதரையும் اِلَّا தவிர لِـيُـطَاعَ அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ ؕ அல்லாஹ்வுடைய وَلَوْ இருந்தால் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اِذْ போது ظَّلَمُوْۤا தீங்கிழைத்தார்கள் اَنْفُسَهُمْ தங்களுக்கு جَآءُوْكَ உம்மிடம் வந்தனர் فَاسْتَغْفَرُوا இன்னும் பாவமன்னிப்பு கோரினர் اللّٰهَ அல்லாஹ்விடம் وَاسْتَغْفَرَ இன்னும் பாவமன்னிப்பு கோரினார் لَـهُمُ அவர்களுக்கு الرَّسُوْلُ தூதர் لَوَجَدُوا கண்டிருப்பார்கள் اللّٰهَ அல்லாஹ்வை تَوَّابًا பிழை பொறுப்பவனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:64. அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. ஆகவே அவர்கள் எவரும் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டு, உம்மிடம் வந்து அல்லாஹ்வின் மன்னிப்பைக்கோரி அவர்களுக்காக (அல்லாஹ்வின்) தூதராகிய (நீரும்) மன்னிப்புக் கேட்டிருந்தால் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்.
4:64. அல்லாஹ்வுடைய அனுமதிகொண்டு (மக்கள்) அவருக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் நாம் எந்த தூதரையும் அனுப்பவில்லை. ஆகவே, அவர்களில் (எவரும் இதற்கு மாறு செய்து) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட சமயத்திலும், (நபியே!) உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் (தங்கள்) பாவமன்னிப்பைக் கோரினால், அத்துடன் அவர்களுக்காக அல்லாஹ்வுடைய தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் பிழைபொறுத்தலை அங்கீகரிப்பவனாக மிகக் கருணையாளனாக அவர்கள் அல்லாஹ்வைக் காண்பார்கள்.
4:64. மேலும் (அவர்களுக்கு அறிவித்துவிடுவீராக:) அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை. தமக்குத் தாமே அவர்கள் அநீதி இழைத்துக்கொண்ட வேளையில், உம்மிடம் அவர்கள் வந்திருந்தால், இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரியிருந்தால், அவர்களுக்காக தூதரும் மன்னிப்புக் கோரியிருந்தால், திண்ணமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பு வழங்குபவனாகவும் பெருங் கருணையுடையவனாகவும் இருப்பதைக் கண்டிருப்பார்கள்.
4:64. இன்னும், அல்லாஹ்வின் கட்டளைக்கொப்ப கீழ்ப்படியப் படுவதற்காகவே தவிர, (மனிதர்களிடம்) நாம் தூதர்களில் எவரையும் அனுப்பி வைக்கவில்லை, இன்னும், நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே அநீதமிழைத்துக் கொண்டு, உம்மிடம் வந்து, பின்னர், அல்லாஹ்விடம் அவர்கள் பாவமன்னிப்புக் கோரி, அவர்களுக்காக (அல்லாஹ்வுடைய) தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரியிருந்தால், தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாக, மிகக் கிருபையுடையோனாக அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பபார்கள்.
4:65
4:65 فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا‏
فَلَا ஆகவே, இல்லை وَرَبِّكَ உம் இறைவன் மீது சத்தியமாக لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கையாளராக ஆகமாட்டார்கள் حَتّٰى يُحَكِّمُوْكَ வரை/அவர்கள் தீர்ப்பாளராக்குவது/உம்மை فِيْمَا எதில் شَجَرَ சச்சரவு ஏற்பட்டது بَيْنَهُمْ அவர்களுக்கிடையில் ثُمَّ பிறகு لَا يَجِدُوْا காணமாட்டார்கள் فِىْۤ اَنْفُسِهِمْ தங்கள் உள்ளங்களில் حَرَجًا அதிருப்தி مِّمَّا قَضَيْتَ நீர் தீர்ப்பளித்ததில் وَيُسَلِّمُوْا பணிவார்கள் تَسْلِيْمًا‏ முழுமையாக பணிதல்
4:65. உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
4:65. உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனதில் எத்தகைய அதிருப்தியுமின்றி முற்றிலுமாக ஏற்காதவரை அவர்கள் (உண்மை) நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்.
4:65. இல்லை! (முஹம்மதே!) உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்றுக்கொண்டு பின்னர் நீர் அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல் முற்றிலும், அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.
4:65. ஆனால், உமதிரட்சகன்மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக ஆக்கி நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் பெறாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாத வரையில் அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள்.
4:66
4:66 وَلَوْ اَنَّا كَتَبْنَا عَلَيْهِمْ اَنِ اقْتُلُوْۤا اَنْفُسَكُمْ اَوِ اخْرُجُوْا مِنْ دِيَارِكُمْ مَّا فَعَلُوْهُ اِلَّا قَلِيْلٌ مِّنْهُمْ‌ ؕ وَلَوْ اَنَّهُمْ فَعَلُوْا مَا يُوْعَظُوْنَ بِهٖ لَـكَانَ خَيْرًا لَّهُمْ وَاَشَدَّ تَثْبِيْتًا ۙ‏
وَلَوْ இருந்தால் اَنَّا நிச்சயமாக நாம் كَتَبْنَا விதித்தோம் عَلَيْهِمْ அவர்கள் மீது اَنِ اقْتُلُوْۤا கொல்லுங்கள் اَنْفُسَكُمْ உங்களை اَوِ அல்லது اخْرُجُوْا வெளியேறுங்கள் مِنْ இருந்து دِيَارِكُمْ உங்கள் இல்லங்கள் مَّا மாட்டார்கள் مَّا فَعَلُوْهُ அதை செய்திருக்க اِلَّا தவிர قَلِيْلٌ குறைவானவர் مِّنْهُمْ‌ ؕ அவர்களில் وَلَوْ இருந்தால் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் فَعَلُوْا செய்தார்கள் مَا எதை يُوْعَظُوْنَ உபதேசிக்கப்படுகிறார்கள் بِهٖ அதை لَـكَانَ ஆகி இருக்கும் خَيْرًا மிக நன்றாக لَّهُمْ அவர்களுக்கு وَاَشَدَّ இன்னும் மிக வலுவானது تَثْبِيْتًا ۙ‏ உறுதிப்படுத்துவதில்
4:66. மேலும், நாம் (அவர்களைப் பார்த்து) “நீங்கள் உங்களை வெட்டி மாய்த்துக் கொள்ளுங்கள், அல்லது உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று கட்டளைவிட்டிருப்போமானால், அவர்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் - அவர்கள் தங்களுக்கு உபதேசம் செய்யப்பட்டபடி நடந்திருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், (அவர்கள் நம்பிக்கையை) மிகவும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்.
4:66. நாம் அவர்களை நோக்கி ‘‘(நிராகரிக்கும்) உங்(கள் மக்)களை நீங்கள் வெட்டுங்கள். அல்லது உங்கள் இல்லங்களை விட்டு (வேறு நாட்டுக்குப்) புறப்பட்டுவிடுங்கள்'' என்று கட்டளையிட்டிருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பான்மையினர் இவ்வாறு) செய்யவே மாட்டார்கள். எனினும், அனைவரும் தங்களுக்கு அறிவுறுத்தியபடி செய்திருப்பார்களேயானால் அது அவர்களுக்கே மிக்க நன்றாய் இருந்திருக்கும். மேலும், (நம்பிக்கையில் அவர்களை) மிக உறுதிப்படுத்தியும் இருக்கும்.
4:66. உங்களை நீங்களே அழித்துக் கொள்ளுங்கள் என்றோ, உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறிச் செல்லுங்கள் என்றோ நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டால், அவர்களில் சிலர்தான் அதன் படி செயல்பட்டிருப்பார்கள். எனினும், அவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி செயலாற்றுவார்களேயானால், அது அவர்களுக்கு மிக நன்மை அளிப்பதாகவும் (சத்தியத்தில்) அவர்களை நன்கு உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருந்திருக்கும்.
4:66. இன்னும், “உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளுங்கள், அல்லது நீங்கள் உங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நிச்சயமாக நாம் அவர்களின்மீது விதித்திருந்தால், அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) இதனைச் செய்திருக்கவே மாட்டார்கள். மேலும், அவர்கள் எதை உபதேசிக்கப்பட்டார்களோ, அதை அவர்கள் செய்திருப்பார்களேயானால், அது அவர்களுக்கு மிக்க நன்மையாகவும், (விசுவாசத்தில் அவர்களை) உறுதிபடுத்துவதில் மிக்க வலுவாகவும் இருந்திருக்கும்.
4:67
4:67 وَّاِذًا لَّاٰتَيْنٰهُمْ مِّنْ لَّدُنَّاۤ اَجْرًا عَظِيْمًا ۙ‏
وَّاِذًا இன்னும் அப்போது لَّاٰتَيْنٰهُمْ கொடுத்திருப்போம்/அவர்களுக்கு مِّنْ இருந்து لَّدُنَّاۤ நம்மிடம் اَجْرًا கூலியை عَظِيْمًا ۙ‏ மகத்தானது
4:67. அப்போது, நாம் அவர்களுக்கு நம்மிடத்திலிருந்து மகத்தான நற்கூலியைக் கொடுத்திருப்போம்.
4:67. அது சமயம் அவர்களுக்கு நம்மிடமிருந்து மேலும், மகத்தான கூலியை நிச்சயமாக நாம் கொடுத்திருப்போம்.
4:67. மேலும், அவ்வாறு செயல்பட்டிருந்தால் நம்மிடமிருந்து அவர்களுக்கு மகத்தான கூலியைக் கண்டிப்பாக நாம் வழங்கியிருப்போம்.
4:67. மேலும், அது சமயம் அவர்களுக்கு, நம்மிடமிருந்து (மேற்கொண்டும்) மகத்தான ஒரு கூலியை நாம் கொடுத்திருப்போம்.
4:68
4:68 وَّلَهَدَيْنٰهُمْ صِرَاطًا مُّسْتَقِيْمًا‏
وَّلَهَدَيْنٰهُمْ இன்னும் நேர்வழி செலுத்தியிருப்போம்/அவர்களை صِرَاطًا பாதையில் مُّسْتَقِيْمًا‏ நேரானது
4:68. மேலும், அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.
4:68. மேலும், அவர்களை நாம் நேரான வழியில் செலுத்தியிருப்போம்.
4:68. மேலும், அவர்களுக்கு நாம் நேரான வழியைக் காட்டியுமிருப்போம்.
4:68. மேலும், அவர்களுக்கு நேரான வழியை நாம் காட்டி இருப்போம்.
4:69
4:69 وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌ ۚ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ؕ‏
وَمَنْ எவர்(கள்) يُّطِعِ கீழ்ப்படிகிறார்(கள்) اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَالرَّسُوْلَ இன்னும் தூதருக்கு فَاُولٰٓٮِٕكَ அவர்கள் مَعَ உடன் الَّذِيْنَ எவர்கள் اَنْعَمَ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ அவர்கள் மீது مِّنَ இருந்து النَّبِيّٖنَ நபிமார்கள் وَالصِّدِّيْقِيْنَ இன்னும் சத்தியவான்கள் وَالشُّهَدَآءِ இன்னும் உயிர்நீத்த தியாகிகள் وَالصّٰلِحِيْنَ‌ ۚ இன்னும் நல்லவர்கள் وَحَسُنَ அழகிய اُولٰٓٮِٕكَ இவர்கள் رَفِيْقًا ؕ‏ தோழர்கள்
4:69. யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
4:69. எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப் போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தான் மிக அழகான தோழர்கள்.
4:69. எவர்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படிகின்றார்களோ அவர்கள், அல்லாஹ் அருள்புரிந்துள்ள நபிமார்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்கள் மற்றும் உத்தமர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். இவர்கள் எத்துணைச் சிறந்த தோழர்கள்!
4:69. மேலும், எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றார்களோ அவர்கள்-நபிமார்கள், சத்தியவான்கள், (அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த) ஷஹீதுகள், நல்லடியார்கள் ஆகியோர்களிலிருந்து எவர்கள் மீது அல்லாஹ் அருள் செய்திருக்கிறானோ அத்தகையோருடன் (சுவனத்தில்) இருப்பார்கள், தோழமைக்கு இவர்கள் அழகானவர்கள்.
4:70
4:70 ذٰ لِكَ الْـفَضْلُ مِنَ اللّٰهِ‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ عَلِيْمًا‏
ذٰ لِكَ இது الْـفَضْلُ அருள் مِنَ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்விடமிருந்து وَكَفٰى போதுமாகி விட்டான் بِاللّٰهِ அல்லாஹ்வே عَلِيْمًا‏ நன்கறிபவனாக
4:70. இந்த அருட்கொடை அல்லாஹ்விடமிருந்து கிடைத்ததாகும்; (எல்லாவற்றையும்) அறிந்து கொள்வதில் அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
4:70. இது அல்லாஹ்வின் மகத்தான அருட்கொடையாகும். அல்லாஹ்தான் நிறைவான அறிஞனாக இருக்கிறான்.
4:70. இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் உண்மையான அருளாகும். மேலும் (இந்த மக்களுடைய) உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
4:70. இப்பேரருள் அல்லாஹ்விடமிருந்துள்ளதாகும், இன்னும், (இவர்கள் செயலை) நன்கறிகிறவனாக இருக்க அல்லாஹ் போதுமானவனாக இருக்கின்றான்.
4:71
4:71 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا خُذُوْا حِذْرَكُمْ فَانْفِرُوْا ثُبَاتٍ اَوِ انْفِرُوْا جَمِيْعًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே خُذُوْا பற்றிப் பிடியுங்கள் حِذْرَكُمْ எச்சரிக்கையை/உங்கள் فَانْفِرُوْا புறப்படுங்கள் ثُبَاتٍ சிறு கூட்டங்களாக اَوِ அல்லது انْفِرُوْا புறப்படுங்கள் جَمِيْعًا‏ அனைவருமாக
4:71. நம்பிக்கை கொண்டவர்களே! (போர் நடக்கும்போது) நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; பிரிவு, பிரிவாகவோ அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாகவோ (எச்சரிக்கையுடன்) செல்லுங்கள்.
4:71. நம்பிக்கையாளர்களே! (எதிரிகளிடம் எப்பொழுதும்) எச்சரிக்கையாகவே இருங்கள் உங்களின் தற்காப்பு சாதனங்களை உங்களுடன் எடுத்துக் கொள்ளுங்கள். சிறு சிறு கூட்டங்களாகவோ அல்லது அனைவரும் ஒன்று சேர்ந்தோ போருக்கு புறப்படுங்கள்.
4:71. நம்பிக்கையுடையவர்களே! (போராடுவதற்காக எந்நேரமும்) நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள்! பிறகு (சந்தர்ப்பத்திற்கு ஏற்ப) தனித்தனிப் பிரிவுகளாகக் கிளம்புங்கள்! அல்லது எல்லோரும் சேர்ந்து புறப்படுங்கள்!
4:71. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் (யுத்தத்திற்குச் சென்றால்) உங்கள் எச்சரிக்கையை (முதல் ஆயுதமாக) எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு, அணி அணியாகவோ, அல்லது அனைவரும் (கூட்டாக) இணைந்தோ செல்லுங்கள்.
4:72
4:72 وَاِنَّ مِنْكُمْ لَمَنْ لَّيُبَطِّئَنَّ‌ۚ فَاِنْ اَصَابَتْكُمْ مُّصِيْبَةٌ قَالَ قَدْ اَنْعَمَ اللّٰهُ عَلَىَّ اِذْ لَمْ اَكُنْ مَّعَهُمْ شَهِيْدًا‏
وَاِنَّ நிச்சயமாக مِنْكُمْ உங்களில் لَمَنْ திட்டமாக எவர் لَّيُبَطِّئَنَّ‌ۚ நிச்சயமாக பின்தங்கிவிடுகிறான் فَاِنْ اَصَابَتْكُمْ ஏற்பட்டால் / உங்களுக்கு مُّصِيْبَةٌ ஒரு சோதனை قَالَ கூறுகிறான் قَدْ திட்டமாக اَنْعَمَ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَىَّ என் மீது اِذْ ஏனெனில் لَمْ اَكُنْ நான் இருக்கவில்லை مَّعَهُمْ அவர்களுடன் شَهِيْدًا‏ பிரசன்னமாகி இருப் பவன்
4:72. (போரிடாமல்) பின்தங்கி விடுகிறவர்களும் உங்களில் சிலர் நிச்சயமாக உள்ளனர்; உங்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், “அவர்களுடன் கலந்து கொள்ளாமல் இருந்ததினால் அல்லாஹ் என் மீது அருள் புரிந்துள்ளான்” என்று (அவர்கள்) கூறுகிறார்கள்.
4:72. (போருக்கு வராது) பின்தங்கி விடுபவர்களும் நிச்சயமாக உங்களில் சிலர் இருக்கின்றனர். (அவர்கள் நயவஞ்சகர்களே! ஏனெனில், போருக்குச் சென்ற) உங்களுக்கு ஒரு கஷ்டமேற்பட்டாலோ (அவர்கள்) ‘‘நாங்கள் உங்களுடன் வராமல் இருந்தது அல்லாஹ் எங்கள் மீது புரிந்த அருள்தான்'' என்று கூறுகிறார்கள்.
4:72. உண்மையில், போரில் கலந்து கொள்ளாமல் பின்தங்கி விடுபவனும் உங்களில் இருக்கின்றான். பிறகு உங்களுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் அவன் “திண்ணமாக, அல்லாஹ் என் மீது கருணை புரிந்துள்ளான். ஏனெனில், நான் அவர்களுடன் கலந்து கொள்ளவில்லை” என்று கூறுவான்.
4:72. மேலும், (யுத்தத்திற்கு வராது) பின் தங்கியவர்களும் நிச்சயமாக உங்களில் (சிலர்) இருக்கின்றனர், (அவர்கள் முனாஃபிக்குகளே! ஏனெனில் யுத்தத்திற்குச் சென்ற) உங்களுக்கு யாதொரு கஷ்டமேற்பட்டாலோ, அ(வர்களில் ஒரு)வன் நான் அவர்களுடன் (அங்கு) பிரசன்னமாகி இல்லாதிருந்தபோது நிச்சயமாக அல்லாஹ் என்மீது அருள் புரிந்துவிட்டான்” என்று கூறுகின்றான்.
4:73
4:73 وَلَٮِٕنْ اَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللّٰهِ لَيَـقُوْلَنَّ كَاَنْ لَّمْ تَكُنْۢ بَيْنَكُمْ وَبَيْنَهٗ مَوَدَّةٌ يّٰلَيْتَنِىْ كُنْتُ مَعَهُمْ فَاَ فُوْزَ فَوْزًا عَظِيْمًا‏
وَلَٮِٕنْ اَصَابَكُمْ அடைந்தால் / உங்களை فَضْلٌ ஓர் அருள் مِّنَ இருந்து اللّٰهِ அல்லாஹ் لَيَـقُوْلَنَّ நிச்சயமாக கூறுகிறான் كَاَنْ போன்று لَّمْ تَكُنْۢ இருக்கவில்லை بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهٗ இன்னும் அவனுக்கிடையில் مَوَدَّةٌ நட்பு يّٰلَيْتَنِىْ كُنْتُ நான் இருந்திருக்க வேண்டுமே مَعَهُمْ அவர்களுடன் فَاَ فُوْزَ வெற்றிபெற்றிருப்பேன் فَوْزًا வெற்றி عَظِيْمًا‏ மகத்தானது
4:73. அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைக்குமானால், உங்களுக்கும் அவர்களுக்கு மிடையே நேசமே இல்லாத (அன்னியர்கள்) போல்; “நானும் அவர்களுடன் இருந்திருக்கக் கூடாதா? நானும் பெரும் பாக்கியத்தை அடைந்திருப்பேனே!” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
4:73. அல்லாஹ்வுடைய அருள் உங்களுக்குக் கிடைத்தாலோ ‘‘நானும் உங்களுடன் இருந்திருக்க வேண்டாமா? அவ்வாறு இருந்திருந்தால் பெரும் பாக்கியத்தை நானும் அடைந்திருப்பேனே!'' என்று உங்களுடன் நட்பு(ம் நேசமும்) இல்லாதவர்கள் கூறுவதைப்போல் அவர்கள் கூறுகின்றனர்.
4:73. ஆனால், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு நல்லருள் கிடைத்தால் உங்களுக்கும் அவனுக்கும் இடையே எவ்வித நட்பும் இல்லாததுபோல் “அய்யகோ! நானும் அவர்களுடன் இருந்திருக்கலாமே; அதன் மூலம் மாபெரும் வெற்றியை நான் அடைந்திருப்பேனே!” என்று புலம்புவான்.
4:73. இன்னும், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு பாக்கியம் கிடைத்தால் “நானும் அவர்களுடன் இருந்திருக்க வேண்டுமே, அவ்வாறிருந்தால் பெரும் பாக்கியத்தை நானும் அடைந்திருப்பேனே! என்று உங்களுக்கும் அவனுக்கும் இடையில் எத்தகைய நட்பும் இல்லாமலிருந்ததைப் போல் நிச்சயமாக அவன் கூறுகிறான்.
4:74
4:74 فَلْيُقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ الَّذِيْنَ يَشْرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا بِالْاٰخِرَةِ‌ ؕ وَمَنْ يُّقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَيُقْتَلْ اَوْ يَغْلِبْ فَسَوْفَ نُـؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا‏
فَلْيُقَاتِلْ போரிடட்டும் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் الَّذِيْنَ எவர்கள் يَشْرُوْنَ விற்கிறார்கள் الْحَيٰوةَ வாழ்க்கையை الدُّنْيَا இவ்வுலகம் بِالْاٰخِرَةِ‌ ؕ மறுமைக்குப் பகரமாக وَ இன்னும் مَنْ எவர் يُّقَاتِلْ போரிடுவாரோ فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் فَيُقْتَلْ அவர் கொல்லப்பட்டாலும் اَوْ அல்லது يَغْلِبْ வெற்றி பெற்றாலும் فَسَوْفَ விரைவாக نُـؤْتِيْهِ கொடுப்போம் / அவருக்கு اَجْرًا கூலியை عَظِيْمًا‏ மகத்தானது
4:74. எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக; யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
4:74. மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யட்டும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வெட்டப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவருக்கு அதிசீக்கிரத்தில் மகத்தான கூலியைக் கொடுப்போம்.
4:74. (இத்தகையோர்க்கு இவ்வுண்மை தெரிந்திருக்க வேண்டுமே:) இவ்வுலக வாழ்வை விற்று மறுமையைப் பெற விரும்புவோர் அல்லாஹ்வின் வழியில் போர் புரியட்டும்! பிறகு, யார் அல்லாஹ்வின் வழியில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றி பெற்றாலும் சரி, அவருக்கு உறுதியாக மகத்தான கூலியை நாம் வழங்குவோம்.
4:74. மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்யவும், இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிந்து (அதில்) அவர் கொல்லப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவருக்கு மகத்தான கூலியைக் கொடுப்போம்.
4:75
4:75 وَمَا لَـكُمْ لَا تُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْـقَرْيَةِ الظَّالِمِ اَهْلُهَا‌ ۚ وَاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙۚ وَّاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ نَصِيْرًا ؕ‏
وَمَا لَـكُمْ உங்களுக்கு என்ன لَا تُقَاتِلُوْنَ நீங்கள் போரிடாமல் இருக்க فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَالْمُسْتَضْعَفِيْنَ பலவீனர்கள் مِنَ இருந்து الرِّجَالِ ஆண்கள் وَالنِّسَآءِ இன்னும் பெண்கள் وَالْوِلْدَانِ இன்னும் சிறுவர்கள் الَّذِيْنَ எவர்கள் يَقُوْلُوْنَ கூறுகின்றனர் رَبَّنَاۤ எங்கள் இறைவா اَخْرِجْنَا வெளியேற்று/ எங்களை مِنْ இருந்து هٰذِهِ இந்த الْـقَرْيَةِ ஊர் الظَّالِمِ அநியாயக்காரர்(கள்) اَهْلُهَا‌ ۚ இந்த ஊர் வாசிகள் وَاجْعَلْ இன்னும் ஏற்படுத்து لَّـنَا எங்களுக்கு مِنْ இருந்து لَّدُنْكَ உன் புறம் وَلِيًّا ۙۚ ஒரு பாதுகாவலரை وَّاجْعَلْ இன்னும் ஏற்படுத்து لَّـنَا எங்களுக்கு مِنْ இருந்து لَّدُنْكَ உன் புறம் نَصِيْرًا ؕ‏ ஓர் உதவியாளரை
4:75. பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
4:75. பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர்புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன? அவர்களோ (இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்று! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்து! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்து!'' என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர்.
4:75. மேலும், பலவீனர்களாக்கப்பட்ட அடக்கி ஒடுக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில், நீங்கள் போர் புரியாமல் இருக்க என்னதான் காரணம்? அவர்களோ, “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வாழும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! மேலும் எங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரை உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்பவரையும் உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக!” என்று பிரார்த்தனை செய்கின்றார்கள்.
4:75. இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரில் பலவீனமானவர்களின் (பாதுகாப்பு) விஷயத்திலும், நீங்கள் யுத்தம் செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களோ, எங்கள் இரட்சகனே! இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றிவிடுவாயாக! அதை (அவ்வூரை)யுடையவர்கள், அநியாயக்காரர்களாக இருக்கின்றனர். நீ எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஆக்குவாயாக! நீ எங்களுக்கு உன் புறத்தால் ஓர் உதவியாளரையும் அளித்தருள்வாயாக” என்று (பிரார்த்தனை செய்து) கூறுகின்றனர்.
4:76
4:76 اَلَّذِيْنَ اٰمَنُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌‌ ۚ وَالَّذِيْنَ كَفَرُوْا يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ الطَّاغُوْتِ فَقَاتِلُوْۤا اَوْلِيَآءَ الشَّيْطٰنِ‌ۚ اِنَّ كَيْدَ الشَّيْطٰنِ كَانَ ضَعِيْفًا‏
اَلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்கள் يُقَاتِلُوْنَ போரிடுவார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ‌ ۚ அல்லாஹ்வின் وَالَّذِيْنَ كَفَرُوْا இன்னும் நிராகரிப்பாளர்கள் يُقَاتِلُوْنَ போரிடுவார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் الطَّاغُوْتِ ஷைத்தானின் فَقَاتِلُوْۤا ஆகவே போரிடுங்கள் اَوْلِيَآءَ நண்பர்களிடம் الشَّيْطٰنِ‌ۚ ஷைத்தானின் اِنَّ كَيْدَ நிச்சயமாக சூழ்ச்சி الشَّيْطٰنِ ஷைத்தானின் كَانَ இருக்கிறது ضَعِيْفًا‏ பலவீனமாக
4:76. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்; நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்; ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.
4:76. (ஆகவே, இத்தகைய சமயத்தில்) உண்மை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் வழியில் (அவசியம்) போர்புரிவார்கள். நிராகரிப்பவர்களோ (இவர்களுக்கு எதிராக) ஷைத்தானுடைய வழியில்தான் போர்புரிவார்கள். ஆகவே, ஷைத்தானுடைய நண்பர்களிடம் நீங்கள் போர்புரியுங்கள். (அவர்களின் என்னிக்கையைப் பார்த்து தயங்கி விடாதீர்கள்.) நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகவே இருக்கிறது.
4:76. இறைநம்பிக்கையுடைய நடத்தையை மேற்கொண்டவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர்புரிவார்கள். நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்டவர்கள் தாஃகூத்தின் வழியில் போர்புரிவார்கள். எனவே ஷைத்தானின் தோழர்களுடன் போர் புரியுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாகும்.
4:76. (ஆகவே இது போன்ற சமயத்தில்) விசுவாசங்கொண்டார்களே அத்தகையோர்-அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வார்கள், இன்னும், நிராகரித்தார்களே அத்தகையோர்-அவர்கள் (இவர்களுக்கு எதிராக) தாகூத்துடைய (ஷைத்தானுடைய) பாதையில் யுத்தம் செய்வார்கள், ஆகவே, ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராக போர் செய்யுங்கள், நிச்சயமாக ஷைத்தானுடைய சூழ்ச்சி மிகவும் பலவீனமானதாக இருக்கிறது.
4:77
4:77 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ قِيْلَ لَهُمْ كُفُّوْۤا اَيْدِيَكُمْ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰ تُوا الزَّكٰوةَ ۚ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللّٰهِ اَوْ اَشَدَّ خَشْيَةً‌ ۚ وَقَالُوْا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ ۚ لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍ‌ ؕ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيْلٌ‌ ۚ وَالْاٰخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقٰى وَلَا تُظْلَمُوْنَ فَتِيْلًا‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلَى الَّذِيْنَ எவர்களை قِيْلَ கூறப்பட்டது لَهُمْ அவர்களுக்கு كُفُّوْۤا தடுத்துக் கொள்ளுங்கள் اَيْدِيَكُمْ உங்கள் கரங்களை وَاَقِيْمُوا இன்னும் நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَاٰ تُوا இன்னும் கொடுங்கள் الزَّكٰوةَ ۚ ஸகாத்தை فَلَمَّا كُتِبَ விதிக்கப்பட்ட போது عَلَيْهِمُ அவர்கள் மீது الْقِتَالُ போர் اِذَا அப்போது فَرِيْقٌ ஒரு பிரிவினர் مِّنْهُمْ அவர்களில் يَخْشَوْنَ பயப்படுகின்றனர் النَّاسَ மக்களை كَخَشْيَةِ பயப்படுவதுபோல் اللّٰهِ அல்லாஹ்வை اَوْ அல்லது اَشَدَّ மிகக் கடுமையாக خَشْيَةً‌ ۚ பயத்தால் وَقَالُوْا இன்னும் கூறினார்கள் رَبَّنَا எங்கள் இறைவா لِمَ كَتَبْتَ ஏன் விதித்தாய் عَلَيْنَا எங்கள் மீது الْقِتَالَ ۚ போரை لَوْلَاۤ اَخَّرْتَنَاۤ எங்களை நீ பிற்படுத்த வேண்டாமா? اِلٰٓى வரை اَجَلٍ ஒரு தவணை قَرِيْبٍ‌ ؕ சமீபமாக قُلْ கூறுவீராக مَتَاعُ இன்பம் الدُّنْيَا உலகத்தின் قَلِيْلٌ‌ ۚ அற்பமானது وَالْاٰخِرَةُ மறுமை خَيْرٌ மேலானது لِّمَنِ எவருக்கு اتَّقٰى அஞ்சினார் وَلَا تُظْلَمُوْنَ அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள் فَتِيْلًا‏ ஒரு நூலும்
4:77. “உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”
4:77. உங்கள் கைகளைத் (தற்சமயம் போர்புரியாது) தடுத்துக் கொள்ளவும், தொழுகையை உறுதியாகக் கடைப்பிடிக்கவும், ஜகாத்தைக் கொடுத்துவரவும் என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? போர்புரிய அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபொழுது அவர்களில் ஒரு பிரிவினரோ அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப்போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயந்து ‘‘எங்கள் இறைவனே! ஏன் எங்கள் மீது போரைக் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலத்திற்கு இதைப் பிற்படுத்த வேண்டாமா?'' என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். (இதற்கு நபியே!) நீர் கூறுவீராக: ‘‘இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே! எவன் (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கிறானோ அவனுக்கு மறுமை(யின் வாழ்க்கை)தான் மிக மேலானது. (உங்கள் நன்மையைக் குறைத்தோ, பாவத்தைக் கூட்டியோ) நீங்கள் ஒரு நூலளவும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
4:77. (போர் புரியாமல்) உங்கள் கரங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்; மேலும் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஜகாத்தையும் கொடுங்கள் என்று எவர்களிடம் கூறப்பட்டதோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? இப்பொழுது போர் புரியுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதைப் போல ஏன் அதைவிட அதிகமாக மனிதர்களுக்கு அஞ்சுகின்றார்கள்! “எங்கள் இறைவனே! போர் புரிவதை எங்கள் மீது ஏன் கடமையாக்கினாய்? இன்னும் சிறிது காலம் வரை எங்களுக்குத் தவணை அளித்திருக்கக் கூடாதா?” என்று கேட்கிறார்கள். (நபியே! அவர்களிடம்) கூறுவீராக: இவ்வுலக வாழ்வின் இன்பமனைத்தும் அற்பமானதே! மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சி வாழ்பவர்க்கு மறுமை மிகவும் சிறந்ததாகும். இன்னும் உங்களுக்கு இம்மியளவும் அநீதியிழைக்கப்படமாட்டாது.
4:77. “உங்களுடைய கைகளைத் (தற்சமயம் யுத்தம் செய்யாது) தடுத்துக் கொள்ளுங்கள், தொழுகையையும் (உறுதியாக) நிறைவேற்றுங்கள், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ, அத்தகையோர்பால் (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (பின்னர்) யுத்தம் செய்வது அவர்கள்மீது விதிக்கப்பட்ட பொழுது அவர்களில் ஒரு பிரிவினரோ, அல்லாஹ்வுக்குப் பயப்படுவதைப்போல் அல்லது பயத்தால் அதைவிட கடினமாக (எதிரிகளான) மனிதர்களுக்குப் பயந்தார்கள், மேலும், எங்கள் இரட்சகனே! ஏன் எங்கள் மீது யுத்தத்தை விதியாக்கினாய்?, இன்னும் சிறிது காலம் எங்களுக்காக இதனைப் பிற்படுத்தி இருக்க வேண்டாமா?” என்றும் கூறினார்கள், (இதற்கு, நபியே!) நீர் கூறுவீராக! இவ்வுலக சுகம் அற்பமானதே, (அல்லாஹ்வை) பயந்து நடப்பவருக்கு மறுமை(யின் வாழ்க்கை) தான் மிக்க மேலானது (உங்களுடைய நன்மையைக் குறைத்தோ, பாவத்தைக் கூட்டியோ) நீங்கள் ஒரு நூல் அளவும் அநீதம் செய்யப்பட மாட்டீர்கள்.
4:78
4:78 اَيْنَ مَا تَكُوْنُوْا يُدْرِكْكُّمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِىْ بُرُوْجٍ مُّشَيَّدَةٍ‌ ؕ وَاِنْ تُصِبْهُمْ حَسَنَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِ اللّٰهِ‌ ۚ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ يَّقُوْلُوْا هٰذِهٖ مِنْ عِنْدِكَ‌ ؕ قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللّٰهِ‌ ؕ فَمَالِ ھٰٓؤُلَۤاءِ الْقَوْمِ لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ حَدِيْثًا‏
اَيْنَ مَا تَكُوْنُوْا நீங்கள் எங்கிருந்தாலும் يُدْرِكْكُّمُ அடையும்/உங்களை الْمَوْتُ மரணம் وَلَوْ كُنْتُمْ நீங்கள் இருந்தாலும் فِىْ بُرُوْجٍ கோபுரங்களில் مُّشَيَّدَةٍ‌ ؕ பலமான وَاِنْ تُصِبْهُمْ அவர்களை அடைந்தால் حَسَنَةٌ ஒரு நன்மை يَّقُوْلُوْا கூறுகின்றனர் هٰذِهٖ இது مِنْ இருந்து عِنْدِ اللّٰهِ‌ ۚ அல்லாஹ்விடம் وَاِنْ تُصِبْهُمْ அவர்களை அடைந்தால் سَيِّئَةٌ ஒரு தீங்கு يَّقُوْلُوْا கூறுகின்றனர் هٰذِهٖ இது مِنْ இருந்து عِنْدِكَ‌ ؕ உம்மிடம் قُلْ கூறுவீராக كُلٌّ எல்லாம் مِّنْ இருந்து عِنْدِ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்விடம் فَمَالِ ھٰٓؤُلَۤاءِ الْقَوْمِ இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது? لَا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ அவர்கள் விரைவாக விளங்குவதில்லையே حَدِيْثًا‏ ஒரு பேச்சை
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (போருக்குச் சென்ற முனாஃபிக்களுக்கு) ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டாலோ, “இது உம்மிடம் இருந்துதான் ஏற்பட்டது” என்று கூறுகிறார்கள், (நபியே! அவர்களிடம்) கூறும்: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்திருக்கின்றன; இந்த மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எந்த ஒரு விஷயத்தையும் அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லையே!”
4:78. நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (நபியே! உமது கட்டளைப்படி போருக்குச் சென்ற) அவர்களை ஒரு நன்மை அடையும் பட்சத்தில் ‘‘இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டு விட்டாலோ ‘‘(நபியே!) இது உம்மால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது)'' எனக் கூறுகின்றனர். (ஆகவே,) நீர் கூறுவீராக: ‘‘(நானாக என் இஷ்டப்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லை. அல்லாஹ் அறிவித்தபடியே நான் உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆகவே,) அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றன. இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் அறிந்து கொள்வதில்லையே!
4:78. நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதி மிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே! மேலும், அவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது” என்கிறார்கள்; ஆனால் அவர்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமாயின், “(முஹம்மதே!) இது உம்மிடமிருந்து வந்தது” எனக் கூறுகிறார்கள். நீர் கூறுவீராக: அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன. இம்மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்வதில்லையே!
4:78. நீங்கள் எங்கிருந்தபோதிலும், மரணம் உங்களை அடைந்தே தீரும், மிகப்பலமாகக் கட்டப்பட்ட கோட்டை (கொத்தளங்களில் நீங்கள் இருந்தபோதிலும் சரியே! மேலும், (நபியே! உம்முடைய கட்டளைப்படி யுத்தத்திற்குச் சென்ற அவர்களுக்கு யாதொரு நன்மையும் ஏற்பட்டால், இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது எனக் கூறுகின்றனர், (ஆனால்) அவர்களுக்கு யாதொரு தீங்கு ஏற்பட்டுவிட்டாலோ (நபியே! இது உம்மால்தான் (எங்களுக்கு ஏற்பட்டது) எனக் கூறுகின்றனர், (ஆகவே) நீர் கூறுவீராக, (இவை) ஒவ்வொன்றும் அல்லாஹ்விடமிருந்தே உள்ளது, இந்த சமூகத்தவர்க்கு என்ன நேர்ந்து விட்டது? எவ்விஷயத்தையுமே இவர்கள் விளங்கிக் கொள்ள நெருங்கமாட்டார்கள்.
4:79
4:79 مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ‌ وَمَاۤ اَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَّـفْسِكَ‌ ؕ وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا‏
مَاۤ எது اَصَابَكَ அடைந்தது/உம்மை مِنْ இருந்து حَسَنَةٍ நன்மை فَمِنَ இருந்து اللّٰهِ‌ அல்லாஹ் وَمَاۤ இன்னும் எது اَصَابَكَ அடைந்தது/உம்மை مِنْ இருந்து سَيِّئَةٍ தீமை فَمِنْ نَّـفْسِكَ‌ ؕ உன்னிலிருந்து وَاَرْسَلْنٰكَ அனுப்பினோம்/உம்மை لِلنَّاسِ மக்களுக்கு رَسُوْلًا‌ ؕ தூதராக وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ் شَهِيْدًا‏ சாட்சியாளனாக
4:79. உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது; (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.
4:79. மேலும், (இவ்வாறு கூறுகின்றவனை நோக்கி) ‘‘உனக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் அது அல்லாஹ்வினால் ஏற்பட்டது'' என்றும் ‘‘உனக்கு ஒரு தீங்கேற்பட்டால் அது (நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் வந்தது'' (என்றும் கூறுவீராக. நபியே!) நாம் உம்மை ஒரு தூதராகவே மனிதர்களுக்கு அனுப்பியிருக்கிறோம். (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான்.
4:79. (மனிதனே!) உனக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமாயின் அது அல்லாஹ்வின் அருளால்தான் கிடைக்கின்றது. ஆனால் உனக்கு ஏதேனும் கேடு ஏற்பட்டால் அது உன் வினையினால்தான் விளைகிறது. (முஹம்மதே!) மக்களுக்காக உம்மைத் தூதராய் நாம் அனுப்பியுள்ளோம். மேலும், இதற்கு அல்லாஹ்வின் சாட்சியே போதுமானது.
4:79. (அன்றி, இவ்வாறு கூறுகின்றவனுக்கு) “உமக்கு யாதொரு நன்மை ஏற்பட்டால் (அது) அல்லாஹ்வினால் ஏற்பட்டது? என்றும் உமக்கு யாதொரு தீமை ஏற்பட்டால், (அது நீ இழைத்த குற்றத்தின் காரணமாக) உன்னால்தான் (வந்தது)” என்றும் (கூறுவீராக!) இன்னும், (நபியே!) நாம் உம்மை ஒரு தூதராகவே மனிதர்களிடம் அனுப்பியிருக்கின்றோம், இன்னும் (இதற்கு) சாட்சியாளனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்.
4:80
4:80 مَنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ اَطَاعَ اللّٰهَ ‌ۚ وَمَنْ تَوَلّٰى فَمَاۤ اَرْسَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًا ؕ‏
مَنْ எவர் يُّطِعِ கீழ்ப்படிகிறார் الرَّسُوْلَ தூதருக்கு فَقَدْ திட்டமாக اَطَاعَ கீழ்ப்படிந்தார் اللّٰهَ ۚ அல்லாஹ்விற்கு وَمَنْ இன்னும் எவர்(கள்) تَوَلّٰى திரும்பினார்(கள்) فَمَاۤ இல்லை اَرْسَلْنٰكَ உம்மை அனுப்ப عَلَيْهِمْ அவர்கள் மீது حَفِيْظًا ؕ‏ பாதுகாவலராக
4:80. எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்; யாராவது ஒருவர் (இவ்வாறு கீழ்படிவதை) நிராகரித்தால் (நீர் வருந்த வேண்டியதில்லை, ஏனெனில்) நாம் உம்மை அவர்களின் மேல் கண்காணிப்பவராக அனுப்பவில்லை.
4:80. எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கட்டுப்பட்டு நடக்கிறாரோ அவர்தான் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டார்.ஆகவே, (நபியே! உம்மை) எவர்களும் புறக்கணித்தால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம்.) அவர்களை கண்காணிப்பவராக உம்மை நாம் அனுப்பவில்லை.
4:80. யார், அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்ப்படிகின்றாரோ அவர் உண்மையில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிபவராவார். மேலும் யாரேனும் புறக்கணித்துவிட்டால், அவர்களின் பாதுகாவலராக உம்மை நாம் அனுப்பவில்லை.
4:80. எவர் (அல்லாஹ்வுடைய) தூதருக்கு (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர், நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கீழப்படிந்து விட்டார், இவ்வாறு கீழ்ப்படிவதை எவரும் புறக்கணித்தால், (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம். ஏனெனில்) உம்மை அவர்கள் மீது கண்காணிப்பவராக நாம் அனுப்பவில்லை.
4:81
4:81 وَيَقُوْلُوْنَ طَاعَةٌ فَاِذَا بَرَزُوْا مِنْ عِنْدِكَ بَيَّتَ طَآٮِٕفَةٌ مِّنْهُمْ غَيْرَ الَّذِىْ تَقُوْلُ‌ ؕ وَاللّٰهُ يَكْتُبُ مَا يُبَيِّتُوْنَ‌ ۚ فَاَعْرِضْ عَنْهُمْ وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا‏
وَيَقُوْلُوْنَ கூறுகின்றனர் طَاعَةٌ கீழ்ப்படிதல் فَاِذَا بَرَزُوْا அவர்கள் வெளியேறினால் مِنْ இருந்து عِنْدِكَ உம்மிடம் بَيَّتَ சதி செய்கின்றனர் طَآٮِٕفَةٌ ஒரு கூட்டம் مِّنْهُمْ அவர்களில் غَيْرَ மாறாக الَّذِىْ எது تَقُوْلُ‌ ؕ கூறுகிறீர் وَاللّٰهُ அல்லாஹ் يَكْتُبُ பதிவு செய்கிறான் مَا يُبَيِّتُوْنَ‌ ۚ எதை/சதிசெய்கிறார்கள் فَاَعْرِضْ ஆகவே புறக்கணிப்பீராக عَنْهُمْ அவர்களை விட்டு وَتَوَكَّلْ இன்னும் நம்பிக்கை வைப்பீராக عَلَى اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் மீது وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே وَكِيْلًا‏ பொறுப்பாளனாக
4:81. (நபியே! உங்களுக்கு நாங்கள்) கீழ்படிகிறோம் என்று அவர்கள் (வாயளவில்) கூறுகின்றனர்;; உம்மை விட்டு அவர் வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு சாரார், நீர் (அவர்களுக்குக்) கூறியதற்கு மாறாக இரவு முழுவதும் சதியாலோசனை செய்கின்றனர்; அவர்கள் இரவில் செய்த சதியாலோசனையை அல்லாஹ் பதிவு செய்கிறான்; ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பீராக - பொறுப்பேற்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.
4:81. (நபியே! ‘‘உமக்கு நாம் முற்றிலும்) கட்டுப்பட்டோம்'' என அவர்கள் (தங்கள் வாயால்) கூறுகின்றனர். (எனினும்,) அவர்கள் உமது சமூகத்தில் இருந்து சென்றுவிட்டாலோ அவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் வாயால்) கூறியதற்கு மாறாக இரவெல்லாம் சதி ஆலோசனை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் இரவெல்லாம் சதி ஆலோசனை செய்பவற்றை அல்லாஹ் பதிவு செய்து கொள்கிறான். ஆதலால், நீர் அவர்களைப் புறக்கணித்து அல்லாஹ்வையே நம்புவீராக. (உங்களுக்கு) பொறுப்பேற்க அல்லாஹ்வே போதுமானவன்.
4:81. ‘நாங்கள் கீழ்ப்படிகிறோம்’ என (நேரில்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால், உம்மை விட்டு வெளியேறிவிட்டால், அவர்களில் ஒரு பிரிவினர் இரவில் கூடி நீர் கூறுகின்றவற்றிற்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டுகின்றனர். அவர்களின் இந்த இரகசி யப் பேச்சுக்களையெல்லாம் அல்லாஹ் பதிவு செய்து வைக்கிறான். எனவே நீர் அவர்களைப் பொருட்படுத்தாதீர். மேலும், அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! சார்ந்திருப்பதற்கு அல்லாஹ் போதுமானவன்.
4:81. (நபியே! “உம்மிடமிருக்கும்போது உமக்கு முற்றிலும்) கீழ்ப்படிதலாகும்” என அவர்கள் (தங்கள் வாயால்) கூறுகின்றனர், பிறகு, அவர்கள் உம்மிடத்திலிருந்து வெளியேறிவிட்டாலோ, அவர்களில் ஒரு கூட்டத்தினர் (உம்மிடம்) தாம் கூறியதற்கு மாறாக இரவெல்லாம் (சதி) ஆலோசனை செய்து கொண்டே இருக்கின்றனர், அவர்கள் இரவெல்லாம் (சதி) ஆலோசனை செய்பவற்றை அல்லாஹ்பதிவு செய்து கொள்கின்றான், ஆதலால் நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (சகல காரியங்களையும் ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக! உம்மைப் பாதுகாப்பதற்கு) பொறுப்பேற்பவனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்.
4:82
4:82 اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ‌ؕ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللّٰهِ لَوَجَدُوْا فِيْهِ اخْتِلَافًا كَثِيْرًا‏
اَفَلَا يَتَدَبَّرُوْنَ அவர்கள் ஆழ்ந்தாராய வேண்டாமா? الْقُرْاٰنَ‌ؕ குர்ஆனை وَلَوْ كَانَ இருந்திருந்தால் مِنْ இருந்து عِنْدِ இடம் غَيْرِ அல்லாதவர் اللّٰهِ அல்லாஹ் لَوَجَدُوْا கண்டிருப்பார்கள் فِيْهِ இதில் اخْتِلَافًا முரண்பாட்டை كَثِيْرًا‏ பல
4:82. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
4:82. இந்த குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் கண்டிருப்பார்கள்.
4:82. அவர்கள் குர்ஆனைப் பற்றிச் சிந்திப்பதில்லையா? இது அல்லாஹ்வை அன்றி வேறொருவரிடமிருந்து வந்திருந்தால் அதிகமான முரண்பாடுகளை இதில் கண்டிருப்பார்கள்.
4:82. இந்தக்குர்ஆனை அவர்கள் ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து உள்ளதாக இது இருந்தால் இதில் அநேக முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
4:83
4:83 وَاِذَا جَآءَهُمْ اَمْرٌ مِّنَ الْاَمْنِ اَوِ الْخَـوْفِ اَذَاعُوْا بِهٖ‌ ۚ وَلَوْ رَدُّوْهُ اِلَى الرَّسُوْلِ وَاِلٰٓى اُولِى الْاَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِيْنَ يَسْتَنْۢبِطُوْنَهٗ مِنْهُمْ‌ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ لَاتَّبَعْتُمُ الشَّيْطٰنَ اِلَّا قَلِيْلًا‏
وَاِذَا جَآء வந்தால் هُمْ அவர்களிடம் اَمْرٌ ஒரு செய்தி مِّنَ பற்றி الْاَمْنِ பாதுகாப்பு اَوِ அல்லது الْخَـوْفِ பயம் اَذَاعُوْا பரப்புகின்றனர் بِهٖ‌ ۚ அதை وَلَوْ رَدُّوْهُ அவர்கள் கொண்டு சென்றால் / அதை اِلَى الرَّسُوْلِ தூதரிடம் وَاِلٰٓى اُولِى الْاَمْرِ இன்னும் அதிகாரிகளிடம் مِنْهُمْ அவர்களில் لَعَلِمَهُ அதை நன்கறிந்து கொள்வார்கள் الَّذِيْنَ எவர்கள் يَسْتَنْۢبِطُوْنَهٗ யூகிப்பார்கள்/அதை مِنْهُمْ‌ؕ அவர்களில் وَلَوْلَا இல்லையென்றால் فَضْلُ அருள் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது وَرَحْمَتُهٗ இன்னும் அவனுடைய கருணை لَاتَّبَعْتُمُ பின்பற்றி இருப்பீர்கள் الشَّيْطٰنَ ஷைத்தானை اِلَّا தவிர قَلِيْلًا‏ சிலரை
4:83. மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை (அல்லாஹ்வின்) தூதரிடமோ, அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களிலிருந்து அதை ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும் அவனுடைய அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பார்கள்.
4:83. பயத்தையோ (பொது மக்களின்) பாதுகாப்பையோ பற்றிய ஒரு செய்தி அவர்களுக்கு எட்டினால் (உடனே) அதை (வெளியில்) கூற ஆரம்பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், தங்கள் அதிகாரிகளிடமும் (மட்டும்) தெரிவித்தால் அவர்களில் ஊகிக்கக்கூடிய (ஆராயக்கூடிய அ)வர்கள் உண்மையை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் உங்கள்மீது இல்லையென்றால் (உங்களில்) சிலரைத் தவிர நீங்கள் அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.
4:83. அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால், அதனை அவர்கள் பரப்பி விடுகின்றார்கள். ஆனால், அதனைத் தூதரிடமும், தம்மில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார்களேயானால், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அச்செய்தியின் உண்மை நிலையை நன்கு அறிந்திருப்பார்கள். (உங்களிடம் எந்த அளவுக்குப் பலவீனங்கள் இருந்தன என்றால்) உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாமல் போயிருந்தால், உங்களில் சிலரைத் தவிர அனைவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.
4:83. மேலும், (யுத்த) அமைதியோ, அல்லது பீதியோ பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு வந்துவிட்டால் (உடனே, அதனை (வெளியில் மக்களிடையே) பரப்பி விடுகின்றனர், (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில் (மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை (நன்கு) அறிந்து கொள்வார்கள், மேலும் (விசுவாசிகளே!) அல்லாஹ்வுடைய பேரருளும், அவனுடைய கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், (உங்களில்) குறைவானவர்களைத் தவிர நீங்கள் யாவரும் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.
4:84
4:84 فَقَاتِلْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ ۚ لَا تُكَلَّفُ اِلَّا نَـفْسَكَ‌ وَحَرِّضِ الْمُؤْمِنِيْنَ‌ ۚ عَسَی اللّٰهُ اَنْ يَّكُفَّ بَاْسَ الَّذِيْنَ كَفَرُوْا‌ ؕ وَاللّٰهُ اَشَدُّ بَاْسًا وَّاَشَدُّ تَـنْكِيْلًا‏
فَقَاتِلْ ஆகவே போரிடுவீராக فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ‌ ۚ அல்லாஹ்வின் لَا تُكَلَّفُ பணிக்கப்பட மாட்டீர் اِلَّا نَـفْسَكَ‌ உம்மைத் தவிர وَحَرِّضِ இன்னும் தூண்டுவீராக الْمُؤْمِنِيْنَ‌ ۚ நம்பிக்கையாளர்களை عَسَى கூடும் اللّٰهُ அல்லாஹ் اَنْ يَّكُفَّ அவன் தடுக்க بَاْسَ ஆற்றலை الَّذِيْنَ كَفَرُوْا‌ ؕ நிராகரிப்பாளர்களின் وَاللّٰهُ அல்லாஹ் اَشَدُّ மிக கடுமையானவன் بَاْسًا ஆற்றலால் وَّاَشَدُّ இன்னும் கடுமையானவன் تَـنْكِيْلًا‏ தண்டிப்பதால்
4:84. எனவே, நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை; எனினும் முஃமின்களைத் தூண்டுவீராக; நிராகரிப்போரின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான் - ஏனெனில் அல்லாஹ் வலிமை மிக்கோன், இன்னும் தண்டனை கொடுப்பதிலும் கடுமையானவன்.
4:84. (நபியே!) நீர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவீராக. நீர் உம்மைத் தவிர (மற்றெவரையும் போருக்குச் செல்லும்படி) நிர்ப்பந்திப்பதற்கில்லை. (ஆயினும்,) நம்பிக்கையாளர்களை (போருக்குச் செல்ல) தூண்டுவீராக. நிராகரிப்பவர்களின் எதிர்ப்பை அல்லாஹ் தடுத்துவிடுவான். (ஏனென்றால்) அல்லாஹ் போர் செய்வதில் மிக வல்லவன், தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
4:84. எனவே, (நபியே!) நீர் அல்லாஹ்வின் வழியில் போர் புரிவீராக! உம்மைத் தவிர வேறு யாருக்கும் நீர் பொறுப்பாளியல்லர். ஆயினும், இறைநம்பிக்கையாளர்களுக்கு(ப் போர் புரியும்படி) ஆர்வமூட்டுவீராக! அல்லாஹ் இறைமறுப்பாளர்களின் பலத்தை முறியடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லாஹ் அனைவரையும்விட வலிமை மிக்கவன். மேலும், தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்!
4:84. எனவே, (நபியே!) நீர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வீராக! நீர் உம்மைத் தவிர (வேறெவரும்) கட்டாயப்படுத்தப்படுவதற்கில்லை, இன்னும் விசுவாசிகளை (போர் செய்ய)த் தூண்டுவீராக! நிராகரிப்போரின் யுத்தத்தை உங்களை விட்டும் அல்லாஹ் தடுத்து விடக்கூடும், (ஏனென்றால்) அல்லாஹ் யுத்தம் செய்வதில் மிக வல்லவன், தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன்.
4:85
4:85 مَنْ يَّشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَّكُنْ لَّهٗ نَصِيْبٌ مِّنْهَا‌ ۚ وَمَنْ يَّشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَّكُنْ لَّهٗ كِفْلٌ مِّنْهَا‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ مُّقِيْتًا‏
مَنْ எவர் يَّشْفَعْ சிபாரிசு செய்வார் شَفَاعَةً சிபாரிசு حَسَنَةً நல்ல يَّكُنْ இருக்கும் لَّهٗ அவருக்கு نَصِيْبٌ ஒரு பங்கு مِّنْهَا‌ ۚ அதிலிருந்து وَمَنْ இன்னும் எவர் يَّشْفَعْ சிபாரிசு செய்வார் شَفَاعَةً சிபாரிசு سَيِّئَةً தீயது يَّكُنْ இருக்கும் لَّهٗ அவருக்கு كِفْلٌ குற்றம் مِّنْهَا‌ ؕ அதிலிருந்து وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீது مُّقِيْتًا‏ கண்காணிப்பவனாக
4:85. எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
4:85. எவரேனும் ஒரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு. (அவ்வாறே) ஒரு தீய விஷயத்திற்கு யாரும் சிபாரிசு செய்தால் அத்தீமையில் இருந்தும் அவருக்கொரு பாகம் உண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக இருக்கிறான்.
4:85. யார் நன்மைக்காகப் பரிந்துரைக்கின்றாரோ அவர் அந்நன்மையில் பங்கு பெறுவார்; மேலும், யார் தீமைக்காகப் பரிந்துரைக்கின்றாரோ அவர் அத்தீமையில் பங்கு பெறுவார். மேலும், அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
4:85. எவரேனும் (யாதொரு) நன்மையான காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதில் அவருக்கும் ஒரு பங்கு இருக்கும், (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு எவரேனும் பரிந்துரை செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பங்கு இருக்கும், மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
4:86
4:86 وَاِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوْا بِاَحْسَنَ مِنْهَاۤ اَوْ رُدُّوْهَا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلٰى كُلِّ شَىْءٍ حَسِيْبًا‏
وَاِذَا حُيِّيْتُمْ உங்களுக்கு முகமன் கூறப்பட்டால் بِتَحِيَّةٍ ஒரு முகமனைக் கொண்டு فَحَيُّوْا முகமன் கூறுங்கள் بِاَحْسَنَ மிக அழகியதைக்கொண்டு مِنْهَاۤ அதைவிட اَوْ அல்லது رُدُّوْهَا‌ ؕ திரும்பக் கூறுங்கள் / அதையே اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீது حَسِيْبًا‏ பாதுகாவலனாக
4:86. உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
4:86. (எவரேனும்) உங்களுக்கு ‘ஸலாம்' கூறினால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கூறுங்கள். அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
4:86. மேலும், உங்களுக்கு (ஸலாம் எனும்) வாழ்த்துக் கூறப்பட்டால் நீங்கள் அதைவிட அழகிய முறையில் அல்லது (குறைந்தபட்சம்) அதைப் போன்றாவது பதில் வாழ்த்துக் கூறுங்கள்! திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு செயலுக்கும் கணக்கு வாங்குபவனாய் இருக்கின்றான்.
4:86. (எவராலும்) உங்களுக்கு முகமன் (“ஸலாம்”) கூறப்பட்டால் (அதற்குப் பிரதியாக) அதைவிட அழகான (வாக்கியத்)தைக் கொண்டு நீங்கள் முகமன் கூறுங்கள், அல்லது அதனையே திருப்பிக் கூறுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப்பற்றியும் கணக்குப் பார்க்கிறவனாக இருக்கின்றான்.
4:87
4:87 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ؕ لَيَجْمَعَنَّكُمْ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَا رَيْبَ فِيْهِ‌ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ حَدِيْثًا‏
اللّٰهُ அல்லாஹ் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ‌ؕ لَيَجْمَعَنَّكُمْ அவன்/நிச்சயமாக ஒன்று சேர்ப்பான்/உங்களை اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாளில் لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِ‌ؕ அதில் وَمَنْ யார் اَصْدَقُ மிக உண்மையானவன் مِنَ விட اللّٰهِ அல்லாஹ் حَدِيْثًا‏ பேச்சால்
4:87. அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை; நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை; மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்?
4:87. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. அவன் நிச்சயமாக உங்கள் அனைவரையும் மறுமைநாளில் ஒன்று சேர்ப்பான். இதில் சந்தேகமேயில்லை. அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்?
4:87. அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் உங்கள் அனைவரையும் மறுமைநாளில் திண்ணமாக ஒன்று திரட்டுவான். அ(ந் நாள் வருவ)தில் எவ்வித ஐயமும் இல்லை. மேலும், அல்லாஹ்வைவிட உண்மை பேசுபவர் வேறு எவருமில்லை.
4:87. அல்லாஹ் – அவனைத் தவிர (வேறு) வணங்கப்படுபவன் இல்லை. அவன் நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான், இதில் சந்தேகமேயில்லை, இன்னும், வார்த்தையால் (அதை அறிவிப்பதில்) அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?
4:88
4:88 فَمَا لَـكُمْ فِىْ الْمُنٰفِقِيْنَ فِئَـتَيْنِ وَاللّٰهُ اَرْكَسَهُمْ بِمَا كَسَبُوْا‌ؕ اَ تُرِيْدُوْنَ اَنْ تَهْدُوْا مَنْ اَضَلَّ اللّٰهُ‌ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا‏
فَمَا لَـكُمْ உங்களுக்கு என்ன? فِىْ الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களில் فِئَـتَيْنِ இரு பிரிவினராக وَاللّٰهُ அல்லாஹ் اَرْكَسَهُمْ தாழ்த்தினான்/அவர்களை بِمَا எதன் காரணமாக كَسَبُوْا‌ؕ செய்தார்கள் اَ تُرِيْدُوْنَ நாடுகிறீர்களா? اَنْ تَهْدُوْا நீங்கள் நேர்வழிப்படுத்த مَنْ எவரை اَضَلَّ வழிகெடுத்தான் اللّٰهُ‌ ؕ அல்லாஹ் وَمَنْ இன்னும் எவரை يُّضْلِلِ வழிகெடுப்பான் اللّٰهُ அல்லாஹ் فَلَنْ تَجِدَ அறவே காணமாட்டீர் لَهٗ அவருக்கு سَبِيْلًا‏ ஒரு வழியை
4:88. நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர்.
4:88. (நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் ஏன் இருவகை கருத்துக் கொள்கிறீர்கள்? அவர்கள் செய்த தீங்கின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தலை குனியும்படி செய்தான். எவர்களை அல்லாஹ் தவறான வழியில் செல்ல விட்டுவிட்டானோ அவர்களை நீங்கள் நேரான வழியில் செலுத்த விரும்புகிறீர்களோ? (அது முடியாத காரியம்! ஏனென்றால் நபியே!) எவரை அல்லாஹ் வழிதவற விட்டு விட்டானோ அவருக்கு (மீட்சி பெற்றுத் தர) ஒரு வழியையும் நீர் காணமாட்டீர்!
4:88. பிறகு உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு கருத்துடையவர்களாய் ஆகிவிட்டீர்கள்! ஆயினும் அல்லாஹ் அவர்கள் சம்பாதித்துக் கொண்ட தீவினைகளின் காரணமாக அவர்களைத் தலைகீழாகப் புரட்டி விட்டிருக்கின்றான். அல்லாஹ் எவருக்கு நேர்வழி வழங்கவில்லையோ, அவருக்கு நேர்வழிகாட்ட நீங்கள் விரும்புகின்றீர்களா? எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்தானோ அவர்களுக்கு எவ்வித வழியையும் நீர் காணமாட்டீர்.
4:88. (விசுவாசிகளே! வேஷதாரிகளான) முனாஃபிக்குகளைப்பற்றி நீங்கள் இருவகை (அபிப்பிராயங் கொண்ட) பிரிவினர்களாக இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த (தீ)வினையின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தலை கீழாக்கி விட்டான், எவரை அல்லாஹ் தவறான பாதையில் செல்ல விட்டு விட்டானோ அவரை, நீங்கள் நேரான வழியில் செலுத்த நாடுகின்றீர்களா? எவரை அல்லாஹ் தவறான வழியில் செல்ல விட்டானோ அவருக்கு யாதொரு வழியையும் நீர் காணவே மாட்டீர்!
4:89
4:89 وَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ كَمَا كَفَرُوْا فَتَكُوْنُوْنَ سَوَآءً‌ فَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ اَوْلِيَآءَ حَتّٰى يُهَاجِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ فَاِنْ تَوَلَّوْا فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَيْثُ وَجَدْتُّمُوْهُمْ‌ وَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ وَلِيًّا وَّلَا نَصِيْرًا ۙ‏
وَدُّوْا விரும்புகிறார்கள் لَوْ تَكْفُرُوْنَ நீங்கள் நிராகரிப்பதை كَمَا போன்று كَفَرُوْا நிராகரித்தார்கள் فَتَكُوْنُوْنَ ஆகிவிடுவீர்கள் سَوَآءً‌ فَلَا تَتَّخِذُوْا சமமாக/ ஆகவே எடுத்துக் கொள்ளாதீர்கள் مِنْهُمْ அவர்களில் اَوْلِيَآءَ பொறுப்பாளர்களை حَتّٰى வரை يُهَاجِرُوْا ஹிஜ்ரா செல்வார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் فَاِنْ تَوَلَّوْا அவர்கள் விலகினால் فَخُذُو பிடியுங்கள் هُمْ அவர்களை وَاقْتُلُو இன்னும் கொல்லுங்கள் هُمْ அவர்களை حَيْثُ இடம் وَجَدْتُّمُوْ கண்டீர்கள் هُمْ‌ அவர்களை وَلَا تَتَّخِذُوْا مِنْهُمْ இன்னும் எடுத்துக் கொள்ளாதீர்கள்/அவர்களில் وَلِيًّا பொறுப்பாளரை وَّلَا نَصِيْرًا ۙ‏ இன்னும் உதவியாளரை
4:89. (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.
4:89. (நம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டபடியே நீங்களும் நிராகரிப்பவர்களாகி அவர்களுக்கு சமமாகிவிடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, (தங்கள் இல்லங்களைவிட்டு) அல்லாஹ்வுடைய பாதையில் அவர்கள் வெளியே புறப்படும் வரை நீங்கள் அவர்களை நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். (இல்லங்களைவிட்டு வெளியேற வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் கண்ட இடமெல்லாம் அவர்களை(க் கைதியாக)ப் பிடித்துக்கொள்ளுங்கள்; (கைதியாகாது தப்ப முயற்சிப்பவரை) கொல்லுங்கள். தவிர, அவர்களில் எவரையுமே (உங்களுக்கு) நண்பர்களாகவும், உதவியாளர்களாகவும் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
4:89. அவர்கள் நம்பிக்கை கொள்ளாததைப் போலவே நீங்களும் நம்பிக்கை கொள்ளாதிருக்க வேண்டும்; (இவ்வகையில்) நீங்களும் அவர்களும் சமமாகிவிட வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றார்கள். எனவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்* செய்யும் வரையில், அவர்களில் எவரையும் நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! மேலும், அவர்கள் (ஹிஜ்ரத்தைப்) புறக்கணித்துவிட்டால், அவர்களை நீங்கள் எங்குக் கண்டாலும் பிடித்துக் கொன்று விடுங்கள். மேலும், அவர்களில் எவரையும் உங்களின் நண்பராகவோ, உதவியாளராகவோ ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
4:89. (விசுவாசிகளே!) அவர்கள் நிராகரிப்போராகிவிட்டதைப் போல் நீங்கள் நிராகரிப்போராகி பின்னர் நீங்கள் (அவர்களுக்குச்) சமமாகிவிடுவதை அவர்கள் நாடுகிறார்கள், ஆகவே, அவர்கள் (தங்கள்) இல்லங்களைவிட்டு அல்லாஹ்வுடைய பாதையில் (ஹிஜ்ரத்துச்செய்து) புறப்படும் வரையில், நீங்கள் அவர்களிலிருந்து எவர்களையும் நண்பர்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம், (ஹிஜ்ரத்துச்செய்து புறப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்து விட்டால், அவர்களை (க்கைதியாக)ப் பிடித்துக் கொள்ளுங்கள், (எதிர்த்துப் போரிடும்) அவர்களைக் கண்டவிடமெல்லாம் கொன்று விடுங்கள், தவிரவும், அவர்களிலிருந்து (யாரையும்) நண்பராகவும், உதவியாளராகவும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
4:90
4:90 اِلَّا الَّذِيْنَ يَصِلُوْنَ اِلٰى قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ اَوْ جَآءُوْكُمْ حَصِرَتْ صُدُوْرُهُمْ اَنْ يُّقَاتِلُوْكُمْ اَوْ يُقَاتِلُوْا قَوْمَهُمْ‌ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقٰتَلُوْكُمْ‌‌ ۚ فَاِنِ اعْتَزَلُوْكُمْ فَلَمْ يُقَاتِلُوْكُمْ وَاَلْقَوْا اِلَيْكُمُ السَّلَمَ ۙ فَمَا جَعَلَ اللّٰهُ لَـكُمْ عَلَيْهِمْ سَبِيْلًا‏
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் يَصِلُوْنَ சேருகிறார்கள் اِلٰى قَوْمٍۢ சமுதாயத்திடம் بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கு இடையில் مِّيْثَاقٌ உடன்படிக்கை اَوْ அல்லது جَآءُوْكُمْ உங்களிடம் வந்தனர் حَصِرَتْ நெருக்கடிக்குள்ளாகின صُدُوْر நெஞ்சங்கள் هُمْ அவர்களுடைய اَنْ يُّقَاتِلُو அவர்கள் போரிடுவது كُمْ உங்களிடம் اَوْ அல்லது يُقَاتِلُوْا அவர்கள் போரிடுவது قَوْمَهُمْ‌ ؕ தங்கள் சமுதாயத்திடம் وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ சாட்டியிருப்பான்/அவர்களை/உங்கள் மீது فَلَقٰتَلُو போரிட்டிருப்பார்கள் كُمْ‌ ۚ உங்களிடம் فَاِنِ اعْتَزَلُو அவர்கள் விலகினால் كُمْ உங்களை فَلَمْ يُقَاتِلُو அவர்கள் போரிடவில்லை كُمْ உங்களிடம் وَاَلْقَوْا இன்னும் சமர்ப்பித்தார்கள் اِلَيْكُمُ உங்கள் முன் السَّلَمَ ۙ சமாதானத்தை فَمَا جَعَلَ ஆக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு عَلَيْهِمْ அவர்கள் மீது سَبِيْلًا‏ ஒரு வழியை
4:90. ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை.
4:90. (ஆயினும்) உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்து கொண்டவர்களிடம் சென்று விட்டவர்களையும், உங்களை எதிர்த்து போர்புரிய மனம் ஒப்பாது (உங்கள் எதிரிகளை விட்டுப்பிரிந்து) உங்களிடம் வந்தவர்களையும், தங்கள் இனத்தாரை எதிர்த்துச் சண்டை செய்(ய மனம் ஒப்பாது உங்களிடமிருந்து பிரிந்)தவர்களையும் (வெட்டாதீர்கள்; சிறை பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடினால் உங்களை அவர்கள் வெற்றிகொண்டு (அவர்கள்) உங்களை வெட்டும்படிச் செய்திருப்பான். ஆகவே, (இவர்கள்) உங்களுடன் போர்புரியாது விலகியிருந்து சமாதானத்தைக் கோரினால் (அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில்,) இவர்கள் மீது (போர்புரிய) அல்லாஹ் உங்களுக்கு ஒரு வழியையும் வைக்கவில்லை.
4:90. ஆனால், எந்தச் சமுதாயத்திடம் நீங்கள் உடன் படிக்கை செய்துள்ளீர்களோ அந்தச் சமுதாயத்தோடு சேர்ந்துகொள்ளும் நயவஞ்சகர்கள் (இந்தக் கட்டளையிலிருந்து) விதிவிலக்கானவர்கள்! அதேபோல், உங்களுடன் போர் புரியவோ, தம் கூட்டத்தாருடன் போர் புரியவோ மனமில்லாமல் உங்களிடம் வருகின்ற நயவஞ்சகர்களும் விதிவிலக்கானவர்கள்! அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் மீது அவர்களின் ஆதிக்கத்தைத் திணித்திருப்பான். அவர்களும் உங்களுக்கு எதிராகப் போர் புரிந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் உங்களோடு போர் புரியாமல், உங்களை விட்டு விலகியிருந்தால், மேலும் அவர்கள் உங்களிடம் சமாதானக் கரம் நீட்டினால் அவர்களுக்கெதிராக கை நீட்டிட அல்லாஹ் உங்களுக்கு வழியேதும் வைத்திடவில்லை.
4:90. எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை இருக்கிறதோ அந்த சமூகத்தவர் பால் சென்று சேர்ந்து விட்டவர்களையும், அல்லது உங்களை எதிர்த்து யுத்தம் புரியவோ, தங்கள் இனத்தாரை) எதிர்த்து யுத்தம் புரியவோ, அவர்களின் மனங்கள் நெருக்கடிக்குள்ளான நிலையில் உங்களிடம் வந்து சேர்ந்தவர்களையும் தவிர – (இத்தகையோரைக் கொல்லாதீர்கள், சிறையும் பிடிக்காதீர்கள்! ஏனென்றால்) மேலும், அல்லாஹ் நாடியிருந்தால். அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான், அப்போது உங்களை எதிர்த்து அவர்கள் போர் செய்திருப்பார்கள், ஆகவே, அவர்கள் உங்களை விட்டு விலகி இருந்து உங்களிடம் யுத்தம் புரியாமல், உங்களிடம் சமாதானத்தைக் கோரினால் (அதனை அங்கீகரித்துக் கொள்ளுங்கள்., (ஏனெனில்) அவர்களுக்கெதிராக (யுத்தம் புரிய) அல்லாஹ் உங்களுக்கு யாதொரு வழியையும் ஆக்கவில்லை.
4:91
4:91 سَتَجِدُوْنَ اٰخَرِيْنَ يُرِيْدُوْنَ اَنْ يَّاْمَنُوْكُمْ وَيَاْمَنُوْا قَوْمَهُمْ ؕ كُلَّمَا رُدُّوْۤا اِلَى الْفِتْنَةِ اُرْكِسُوْا فِيْهَا‌‌ ۚ فَاِنْ لَّمْ يَعْتَزِلُوْكُمْ وَيُلْقُوْۤا اِلَيْكُمُ السَّلَمَ وَيَكُفُّوْۤا اَيْدِيَهُمْ فَخُذُوْهُمْ وَاقْتُلُوْهُمْ حَيْثُ ثَقِفْتُمُوْهُمْ‌ ؕ وَاُولٰٓٮِٕكُمْ جَعَلْنَا لَـكُمْ عَلَيْهِمْ سُلْطٰنًا مُّبِيْنًا‏
سَتَجِدُوْنَ காண்பீர்கள் اٰخَرِيْنَ மற்றவர்களை يُرِيْدُوْنَ நாடுகிறார்கள் اَنْ يَّاْمَنُوْ அவர்கள் பாதுகாப்புப்பெறவும் كُمْ உங்களிடம் وَيَاْمَنُوْا அல்லது பாதுகாப்புப்பெறவும் قَوْمَهُمْ ؕ தங்கள் சமுதாயத்திடம் كُلَّمَا எல்லாம் رُدُّوْۤا திருப்பப்பட்டார்கள் اِلَى الْفِتْنَةِ குழப்பம் விளைவிப்பதற்கு (இணைவைத்தல்) اُرْكِسُوْا குப்புற விழுந்து விடுகிறார்கள் فِيْهَا‌‌ ۚ فَاِنْ لَّمْ يَعْتَزِلُوْ அதில்/அவர்கள் விலகவில்லையென்றால் كُمْ உங்களை وَيُلْقُوْۤا இன்னும் சமர்ப்பிக்காமல் اِلَيْكُمُ உங்கள் முன் السَّلَمَ சமாதானத்தை وَيَكُفُّوْۤا இன்னும் அவர்கள் தடுக்காமல் اَيْدِيَهُمْ தங்கள் கைகளை فَخُذُوْ பிடியுங்கள் هُمْ இவர்களை وَاقْتُلُوْ இன்னும் கொல்லுங்கள் هُمْ அவர்களை حَيْثُ எங்கெல்லாம் ثَقِفْتُمُوْ பெறுகிறீர்கள் هُمْ‌ ؕ وَاُولٰٓٮِٕكُمْ அவர்கள்/இவர்கள் جَعَلْنَا ஆக்கி விட்டோம் لَـكُمْ உங்களுக்கு عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராக سُلْطٰنًا ஆதாரத்தை مُّبِيْنًا‏ தெளிவானது
4:91. வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும், (உங்கள் பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும் விரும்புவார்கள்; எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார்கள்; இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும், உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும், (உங்களுக்குத் தீங்கிழைப் பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.
4:91. (நம்பிக்கையாளர்களே!) வேறுசிலரையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்பு பெற்றுக்கொள்வதுடன் (உங்கள் எதிரிகளாகிய) தங்கள் இனத்தாரிடமும் பாதுகாப்பு பெற்றிருக்க விரும்புவார்கள். எனினும், விஷமத்திற்கு இவர்கள் அழைக்கப்பட்டால் அதில் (கண்மூடி முகங்)குப்புற விழுந்து விடுவார்கள். இவர்கள் உங்களை எதிர்ப்பதிலிருந்து விலகாமலும், உங்களிடம் சமாதானத்தைக் கோராமலும், தங்கள் கைகளை (உங்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களை நீங்கள் கண்ட இடமெல்லாம் (சிறை பிடியுங்கள். தப்பி ஓடுகிறவர்களை) வெட்டிசாயுங்கள். இவர்களிடம் (போர்புரிய) உங்களுக்குத் தெளிவான அனுமதி கொடுத்துவிட்டோம்.
4:91. மற்றொரு வகை நயவஞ்சகர்களையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் உங்களிடமும் பாதுகாப்புப் பெற வேண்டும்; தமது சமுதாயத்திலும் பாதுகாப்புப் பெற வேண்டும் என விரும்புகின்றார்கள். ஆனால், குழப்பத்திற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதில் அவர்கள் குதித்து விடுவார்கள்! இத்தகையோர் உங்களோடு மோதுவதிலிருந்து விலகி உங்களிடம் சமாதானத்திற்கு வரவில்லையாயின், மேலும் தம் கைகளைத் தடுத்துக் கொள்ளவில்லையாயின், அப்போது அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் பிடித்துக் கொன்றுவிடுங்கள்! அவர்களுக்கெதிராக கைநீட்டிட உங்களுக்குத் தெளிவான ஆதாரத்தை நாம் அளித்துவிட்டோம்.
4:91. (விசுவாசிகளே!) வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள், அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்வதுடன், (உங்களுடைய விரோதிகளாகிய) தங்கள் இனத்தாரிடமும் அபயம் பெற்றுக்கொள்ளவும் நாடுகிறார்கள், குழப்பம் செய்வதின் பக்கம் அவர்கள் திருப்பப்படும் போதெல்லாம், அதில் (கண் மூடி முகங்)குப்புற விழுந்து விடுவார்கள்! ஆகவே, அவர்கள் உங்கள் விரோதத்திலிருந்து விலகாமலும், உங்களிடம் சமாதானத்தைக் கோராமலும், தங்கள் கைகளை (உங்களுக்குத் தீங்கிழைப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், அவர்களை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள், (பிடித்த அவர்களைச் சிறையாக்குங்கள், எதிர்த்துப் போரிடும்) அவர்களைக் கண்டவிடமெல்லாம் கொன்றுவிடுங்கள், இன்னும் அத்தகையோர் - அவர்களுக்கு எதிராக (யுத்தம் புரிய) உங்களுக்குத் தெளிவான அதிகாரத்தை நாம் ஆக்கிவிட்டோம்.
4:92
4:92 وَمَا كَانَ لِمُؤْمِنٍ اَنْ يَّقْتُلَ مُؤْمِنًا اِلَّا خَطَـــٴًــا‌ ۚ وَمَنْ قَتَلَ مُؤْمِنًا خَطَـــٴًــا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَّدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖۤ اِلَّاۤ اَنْ يَّصَّدَّقُوْا‌ ؕ فَاِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَّـكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌ ؕ وَاِنْ كَانَ مِنْ قَوْمٍۢ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِّيْثَاقٌ فَدِيَةٌ مُّسَلَّمَةٌ اِلٰٓى اَهْلِهٖ وَ تَحْرِيْرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ‌ ۚ فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةً مِّنَ اللّٰهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏
وَمَا كَانَ ஆகுமானதல்ல لِمُؤْمِنٍ ஒரு நம்பிக்கையாளருக்கு اَنْ يَّقْتُلَ அவர் கொல்வது مُؤْمِنًا ஒரு நம்பிக்கையாளரை اِلَّا தவிர خَطَـــٴًــا‌ ۚ தவறுதலாக وَمَنْ எவராவது قَتَلَ கொன்றால் مُؤْمِنًا ஒரு நம்பிக்கையாளரை خَطَـــٴًــا தவறுதலாகவே فَتَحْرِيْرُ உரிமையிடவேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமையை مُّؤْمِنَةٍ நம்பிக்கையாளரான وَّدِيَةٌ இன்னும் நஷ்டஈடு مُّسَلَّمَةٌ ஒப்படைக்கப்பட்டது اِلٰٓى இடம் اَهْلِهٖۤ அவருடைய குடும்பத்தார் اِلَّاۤ தவிர اَنْ يَّصَّدَّقُوْا‌ ؕ அவர்கள் தானமாக்குவது فَاِنْ كَانَ இருந்தால் مِنْ قَوْمٍ ஒரு சமுதாயம் சேர்ந்தவராக عَدُوٍّ எதிரி لَّـكُمْ உங்கள் وَهُوَ அவர் مُؤْمِنٌ நம்பிக்கையாளர் فَتَحْرِيْرُ உரிமையிடவேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமை مُّؤْمِنَةٍ‌ ؕ நம்பிக்கையாளரான وَاِنْ كَانَ இருந்தால் مِنْ قَوْمٍۢ ஒரு சமுதாயத்தை சேர்ந்தவராக بَيْنَكُمْ உங்களுக்கிடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கு இடையில் مِّيْثَاقٌ உடன்படிக்கை فَدِيَةٌ நஷ்டஈடு مُّسَلَّمَةٌ ஒப்படைக்கப்பட்டது اِلٰٓى اَهْلِهٖ அவருடைய குடும்பத்தாரிடம் وَ تَحْرِيْرُ இன்னும் உரிமையிடுவது வேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமை مُّؤْمِنَةٍ‌ ۚ நம்பிக்கையாளரான فَمَنْ எவர் لَّمْ يَجِدْ பெறவில்லை فَصِيَامُ நோன்பிருத்தல் شَهْرَيْنِ இரண்டு மாதங்கள் مُتَتَابِعَيْنِ தொடர்ந்து تَوْبَةً மன்னிப்புக் கோரி مِّنَ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்விடம் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:92. தவறாக அன்றி, ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்வது ஆகுமானதல்ல; உங்களில் எவரேனும் ஒரு முஃமினை தவறாக கொலை செய்துவிட்டால், அதற்குப் பரிகாரமாக முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் - அவனுடைய குடும்பத்தார் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலொழிய; கொல்லப்பட்ட அவன் உங்கள் பகை இனத்தைச் சார்ந்தவனாக (ஆனால்) முஃமினாக இருந்தால், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும் (நஷ்ட ஈடில்லை; இறந்த) அவன் உங்களுடன் சமாதான (உடன்படிக்கை) செய்து கொண்ட வகுப்பாரைச் சேர்ந்தவனாக இருந்தால் அவன் சொந்தக்காரருக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன், முஃமினான ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும்; இவ்வாறு (பரிகாரம்) செய்வதற்கு சக்தியில்லாதவனாக இருந்தால், அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறுவதற்காகத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு வைக்க வேண்டும் - அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவும், பூரண ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.
4:92. தவறுதலாகவே தவிர, ஓர் இறை நம்பிக்கையாளரை (முஃமினை) கொலை செய்வது வேறு எந்த இறை நம்பிக்கையாளருக்கும் ஆகுமானதல்ல. (உங்களில்) எவரேனும் ஓர் இறை நம்பிக்கையாளரை தவறுதலாகக் கொலை செய்து விட்டால் (அதற்குப் பரிகாரமாக) இறை நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் இறந்தவருடைய வாரிசுகள் (மன்னித்துத்) தானமாக விட்டாலே தவிர, அதற்குரிய நஷ்ட ஈட்டையும் அவர்களிடம் செலுத்த வேண்டும். (இறந்த) அவன் உங்கள் எதிரி இனத்தவனாக இருந்து நம்பிக்கையாளராகவும் இருந்தால் நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும். (நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதில்லை. இறந்த) அவன் உங்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட வகுப்பாரில் உள்ளவனாக இருந்தால் அவனுடைய வாரிசுகளுக்கு நஷ்டஈட்டைச் செலுத்துவதுடன் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். (இவ்வாறு பரிகாரம் செய்வதற்குரிய பொருளை) எவரேனும் அடையாவிட்டால் அவன் அல்லாஹ்விடம் (தன் குற்றத்தை) மன்னிக்கக் கோரி இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
4:92. ஓர் இறைநம்பிக்கையாளருக்கு மற்றோர் இறை நம்பிக்கையாளரைக் கொல்வது என்பது ஏற்ற செயல் அல்ல; தவறாகக் கொன்றுவிட்டாலே தவிர! ஒருவர் ஓர் இறைநம்பிக்கையாளரைத் தவறாகக் கொலை செய்துவிட்டால் (அதற்குரிய பாவப் பரிகாரம்) இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்வதாகும். மேலும், கொல்லப்பட்ட வரின் வாரிசுகளுக்கு உயிரீட்டுத் தொகையைக் கொடுத்துவிட வேண்டும்; அவர்கள் அதனை மன்னித்துவிட்டாலே தவிர! ஆனால் கொல்லப்பட்டவர் உங்களோடு பகைமை கொண்ட சமுதாயத்தைச் சார்ந்த இறைநம்பிக்கையாளராய் இருந்தால், (அதற்குரிய பரிகாரம்) ஓர் இறைநம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்வதாகும். மேலும், கொல்லப்பட்டவர் உங்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட (முஸ்லிமல்லாத) சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தால் (அதற்குரிய பரிகாரம்) அவருடைய வாரிசுகளுக்கு உயிரீட்டுத் தொகையை அளிப்பதுடன், இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்யவும் வேண்டும். ஆனால், அடிமை கிடைக்கப் பெறாதவன் தொடர்ந்து இரு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இவை பாவமன்னிப்புக்காக, அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட முறைகளாகும். மேலும், அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவுடையவனாகவும் இருக்கின்றான்.
4:92. மேலும், தவறுதலாக அன்றி ஒரு விசுவாசிக்கு மற்றொரு விசுவாசியைக் கொலை செய்வது, ஆகுமானதல்ல; இன்னும் (உங்களில்) எவர் யாதொரு விசுவாசியைத் தவறுதலாகக் கொலை செய்து விட்டால், (அதற்கு நஷ்ட ஈடாக) விசுவாசியாகிய ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும்; இன்னும் அவர் குடும்பத்தார்பால் ஒப்படைக்கப்படும் நஷ்ட ஈடுமாகும். அ(க்குடும்பத்த)வர்கள் (மன்னித்து அதை) தர்மமாக விட்டுவிட்டாலன்றி, ஆகவே (இறந்த) அவர், உங்களுக்கு விரோதமுள்ள சமூகத்தாரில் உள்ளவராக இருந்து, விசுவாசியாகவும் அவர் இருந்தால் அப்போது, விசுவாசியாகிய ஓர் அடிமையை விடுதலை செய்தலாகும். இன்னும் உங்களுக்கும், எவர்களுக்கும் மத்தியில் உடன்படிக்கை இருக்கிறதோ அந்த சமூகத்தாரில் உள்ளவராக அவர் இருந்தால், அவருடைய குடும்பத்தார்பால் ஒப்படைக்கப்படும் நஷ்டஈடும், விசுவாசியான ஓர் அடிமையை விடுதலை செய்தலுமாகும், (இவ்வாறு செய்யும் வசதியை) யார் பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் பாவ மீட்சி பெறுவதற்காக (மன்னிக்கக் கோரி) இரண்டு மாதம் தொடராக நோன்பு நோற்க வேண்டும். மேலும், அல்லாஹ் நன்கறிந்தவனாக; தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
4:93
4:93 وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَـنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِيْمًا‏
وَمَنْ எவர் يَّقْتُلْ கொல்வார் مُؤْمِنًا ஒரு நம்பிக்கையாளரை مُّتَعَمِّدًا நாடியவராக فَجَزَآؤُهٗ அவருடைய கூலி جَهَـنَّمُ நரகம் خَالِدًا நிரந்தரமானவராக فِيْهَا அதில் وَغَضِبَ இன்னும் கோபிப்பான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِ அவர் மீது وَلَعَنَهٗ இன்னும் சபிப்பான்/அவரை وَاَعَدَّ இன்னும் தயார்படுத்துவான் لَهٗ அவருக்கு عَذَابًا வேதனையை عَظِيْمًا‏ பெரிய
4:93. எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்.
4:93. எவனேனும் ஒரு முஸ்லிமை (நன்கறிந்து) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் நீண்ட காலம் தங்கி விடுவான். அவன்மீது அல்லாஹ் கோபம்கொண்டு அவனை சபித்துவிடுவான். இன்னும் மகத்தான வேதனையையும் அவனுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
4:93. ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால், அவனுக்குரிய கூலி நரகமாகும். அதில் அவன் நிலையாக வீழ்ந்துகிடப்பான். மேலும், அவன் மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் திணிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
4:93. மேலும், எவர், விசுவாசியை, வேண்டுமென்றே கொலை செய்தால், அவருக்குரிய கூலி நரகமாகும், அதில் அவர் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர், இன்னும் அல்லாஹ் அவர் மீது கோபங்கொண்டு அவரைச் சபித்தும் விடுவான், மகத்தான வேதனையையும் அவன் அவருக்குத் தயாராக்கி வைத்திருக்கின்றான்.
4:94
4:94 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا ضَرَبْتُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ فَتَبَـيَّـنُوْا وَلَا تَقُوْلُوْا لِمَنْ اَ لْقٰٓى اِلَيْكُمُ السَّلٰمَ لَسْتَ مُؤْمِنًا‌ ۚ تَبْـتَـغُوْنَ عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ مَغَانِمُ كَثِيْرَةٌ‌ ؕ كَذٰلِكَ كُنْتُمْ مِّنْ قَبْلُ فَمَنَّ اللّٰهُ عَلَيْكُمْ فَتَبَـيَّـنُوْا‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே اِذَا ضَرَبْتُمْ நீங்கள் பயணித்தால் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் فَتَبَـيَّـنُوْا தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் وَلَا تَقُوْلُوْا இன்னும் கூறாதீர்கள் لِمَنْ اَ لْقٰٓى எவருக்கு/கூறினார் اِلَيْكُمُ உங்கள் முன் السَّلٰمَ ஸலாம் لَسْتَ நீர் இல்லை مُؤْمِنًا‌ ۚ நம்பிக்கையாளராக تَبْـتَـغُوْنَ தேடுகிறீர்கள் عَرَضَ பொருளை الْحَيٰوةِ வாழ்க்கையின் الدُّنْيَا இவ்வுலகம் فَعِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَغَانِمُ செல்வங்கள் كَثِيْرَةٌ‌ ؕ ஏராளமான كَذٰلِكَ இவ்வாறே كُنْتُمْ இருந்தீர்கள் مِّنْ قَبْلُ (இதற்கு) முன்னர் فَمَنَّ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْكُمْ உங்கள் மீது فَتَبَـيَّـنُوْا‌ ؕ ஆகவே தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் خَبِيْرًا‏ ஆழ்ந்தறிந்தவனாக
4:94. முஃமின்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்கு) நீங்கள் சென்றால், (போர் முனையில் உங்களை எதிர்த்துச் சண்டை செய்வோர் முஃமின்களா அல்லது மற்றவர்களா என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில்) எவரேனும் (தாம் முஃமின் என்பதை அறிவிக்கும் பொருட்டு) உங்களுக்கு “ஸலாம்” சொன்னால், இவ்வுலக வாழ்க்கையின் அற்பமான அழியக் கூடிய பொருட்களை அடையும் பொருட்டு “நீ முஃமினல்ல” என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள்; அல்லாஹ்விடம் ஏராளமான பொருட்கள் இருக்கின்றன; இதற்கு முன்னர் நீங்களும் (பயந்து பயந்து) இவ்வாறே இருந்தீர்கள் - அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான்; எனவே (மேலே கூறியாவாறு போர் முனையில்) நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
4:94. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (போர்முனையில் எதிர்படுபவர்கள் நம்பிக்கையாளர்களா? நிராகரிப்பவர்களா? என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில் எவரேனும் தம்மை நம்பிக்கையாளர் என்று உங்களுக்கு அறிவிப்பதற்காக) உங்களுக்கு ஸலாம் கூறினால் (அவர்களிடமிருந்து) இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் அடையக்கருதி ‘‘நீ நம்பிக்கையாளரல்ல'' என்று அவரைக் கூறி (வெட்டி) விடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. (அவற்றை நீங்கள் அடையலாம்.) இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே (பயந்து பயந்து இஸ்லாமை வெளியிட்டுக் கொண்டு) இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். (அதன் பின்னரே நீங்கள் உண்மை நம்பிக்கையாளராக ஆனீர்கள்.) ஆகவே, (போர்புரிவதற்கு முன்னதாகவே உங்கள் முன் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்களா? இல்லையா? என்பதைத் தீர விசாரித்துத்) தெரிந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
4:94. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வழியில் (ஜிஹாத் செய்யப்) புறப்படுவீர்களாயின் (பகைவனையும் நண்பனையும்) தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளுங்கள். மேலும், உங்களுக்கு ஸலாம் (சாந்தி உண்டாகட்டும் என்று) சொன்னவரைப் பார்த்து, “நீ இறை நம்பிக்கை கொண்டவன் அல்லன்” எனக் கூறாதீர்கள். நீங்கள் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களைத்தான் தேடுகிறீர்கள் என்றால், அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன்பு நீங்களும் இதே நிலையில்தான் இருந்தீர்கள். பிறகு அல்லாஹ் உங்களுக்குப் பேருதவி புரிந்தான். எனவே, நீங்கள் தெளிவாகப் புரிந்து செயல்படுங்கள்! நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் திண்ணமாகத் தெரிந்திருக்கின்றான்.
4:94. விசுவாசங்கொண்டோரே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (வழியில் எதிர்ப்படுவோர் யார் என்பதைத்) தெளிவு படுத்திக் கொள்ளுங்கள், உங்களுக்கு ஸலாம் கூறியவரை இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் தேடியவர்களாக, “நீ விசுவாசியல்ல” என்று கூறி (அவரைக் கொன்று) விடாதீர்கள், அல்லாஹ்விடத்தில் ஏராளமான போர்ப்பரிசுகள் இருக்கின்றன, இதற்கு முன்னர், நீங்களும் இவ்வாறே (பயந்து கொண்டு) இருந்தீர்கள், அப்போது அல்லாஹ் உங்கள் மீது பேருபகாரம் செய்தான், ஆகவே, (உங்கள் முன் இருப்பவர்கள், விசுவாசிகளா அல்லவா என்பதைத்) தெளிவு படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்பவனாக இருக்கின்றான்.
4:95
4:95 لَا يَسْتَوِى الْقَاعِدُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ غَيْرُ اُولِى الضَّرَرِ وَالْمُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ‌ ؕ فَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِيْنَ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ عَلَى الْقٰعِدِيْنَ دَرَجَةً‌  ؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰى‌ؕ وَفَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِيْنَ عَلَى الْقٰعِدِيْنَ اَجْرًا عَظِيْمًا ۙ‏
لَا يَسْتَوِى சமமாக மாட்டார்(கள்) الْقَاعِدُوْنَ தங்கியவர்கள் مِنَ الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களில் غَيْرُ அல்லாதவர் اُولِى الضَّرَرِ குறையுடையோர் وَالْمُجَاهِدُوْنَ இன்னும் போரிடுபவர்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய بِاَمْوَالِهِمْ தங்கள் செல்வங்களைக் கொண்டு وَاَنْفُسِهِمْ‌ ؕ இன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டு فَضَّلَ இன்னும் மேன்மையாக்கினான் اللّٰهُ அல்லாஹ் الْمُجٰهِدِيْنَ போரிடுபவர்களை بِاَمْوَالِهِمْ தங்கள் செல்வங்களைக் கொண்டு وَاَنْفُسِهِمْ இன்னும் தங்கள் உயிர்களைக் கொண்டு عَلَى விட الْقٰعِدِيْنَ தங்கியவர்கள் دَرَجَةً‌  ؕ பதவியால் وَكُلًّا எல்லோருக்கும் وَّعَدَ வாக்களித்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் الْحُسْنٰى‌ؕ சொர்க்கத்தை وَفَضَّلَ இன்னும் மேன்மையாக்கினான் اللّٰهُ அல்லாஹ் الْمُجٰهِدِيْنَ போராளிகளை عَلَى الْقٰعِدِيْنَ தங்கியவர்களை விட اَجْرًا عَظِيْمًا ۙ‏ கூலி/மகத்தானது
4:95. ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
4:95. நம்பிக்கையாளர்களில் நோய் போன்ற (சரியான) காரணங்களின்றி (போருக்குச் செல்லாது) இருந்து கொண்டவர்கள் தங்கள் பொருள்களையும், உயிர்களையும், அல்லாஹ்வுடைய பாதையில் தியாகம் செய்து போர்புரிபவர்களுக்குச் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) தங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர்புரிந்தவர்களின் பதவியை (போருக்குச் செல்லாது) தங்கி விட்டவர்களைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். எனினும் இவர்கள் அனைவருக்கும் (இவர்களிடம் இறைநம்பிக்கை இருப்பதால்) நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். ஆயினும், போர் செய்தவர்களுக்கு மகத்தான கூலியையும் அருள்புரிந்து, தங்கி விட்டோரைவிட மேன்மையாக்கி வைக்கிறான்.
4:95. இறைநம்பிக்கையாளர்களில் எவர்கள் தக்க காரணம் எதுவுமின்றி ஜிஹாதில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் தங்கி விடுகின்றார்களோ அவர்களும், எவர்கள் தங்களுடைய உயிராலும் பொருளாலும், அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் செய்கின்றார்களோ அவர்களும் சமமாக மாட்டார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களை விட தங்களுடைய உயிராலும் பொருளாலும் ஜிஹாத் செய்பவர்களுக்கு அல்லாஹ் சிறப்பான அந்தஸ்தை வைத்திருக்கின்றான். ஒவ்வொருவருக்கும் நன்மையையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். எனினும் ஜிஹாதில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்டவர்களைவிட கலந்து கொண்டவர்களின் கூலி அவனிடம் மிக அதிகமானதாக இருக்கிறது.
4:95. விசுவாசிகளில், தங்கடம் உடையவர்களைத் தவிர (வீட்டில்) உட்கார்ந்து கொண்டவர்கள், (யுத்தத்திற்குச் சென்று) தங்களுடைய செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்வோருக்குச் சமமாக மாட்டார்கள், (ஏனென்றால்) தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் அறப்போர் புரிந்தோரை படித்தரத்தால் (வீட்டில்) உட்கார்ந்து விட்டவர்களைவிட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கின்றான், இன்னும் (இவ்விரு பிரிவினரும் விசுவாசிகளாகவே இருப்பதனால்) இவர்கள் யாவருக்கும், நன்மையையே அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான், இன்னும், அறப்போர் செய்வோரை (அதில் கலந்து கொள்ளாது) உட்கார்ந்திருப்போரைவிட மகத்தான நற்கூலியால் அல்லாஹ் சிறப்பாக்கியிருக்கிறான்.
4:96
4:96 دَرَجٰتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَّرَحْمَةً‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
دَرَجٰتٍ (பல) பதவிகளை مِّنْهُ தன்னிடமிருந்து وَمَغْفِرَةً இன்னும் மன்னிப்பை وَّرَحْمَةً‌ ؕ இன்னும் கருணையை وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:96. (இதுவன்றி) தன்னிடமிருந்து (மேலான) பதவிகளையும், மன்னிப்பையும், அருளையும் (அவர்களுக்கு) அருள்கின்றான்; ஏனென்றால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
4:96. (இன்னும், அவர்களுக்குத்) தன்னிடமுள்ள (மகத்தான) பதவிகளையும், மன்னிப்பையும், அன்பையும் அருளுகிறான். (ஏனெனில்) அல்லாஹ், மிக மன்னிப்பவனாக மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.
4:96. அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிக உயர்ந்த பதவிகளும் மன்னிப்பும் பேரருளும் இருக்கின்றன. மேலும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், அருளிரக்கம் உடையவனுமாய் இருக்கின்றான்.
4:96. (அல்லாஹ்) தன்னிடமிருந்து பதவிகளையும், மன்னிப்பையும் அருளையும் (அவர்களுக்கு அளிக்கிறான்.) இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக (இத்தகையோர் மீது) மிகக் கிருபையுடையவனாக இருக்கின்றான்.
4:97
4:97 اِنَّ الَّذِيْنَ تَوَفّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ ظَالِمِىْۤ اَنْفُسِهِمْ قَالُوْا فِيْمَ كُنْتُمْ‌ؕ قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِيْنَ فِىْ الْاَرْضِ‌ؕ قَالُوْۤا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِيْهَا‌ؕ فَاُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ؕ وَسَآءَتْ مَصِيْرًا ۙ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் تَوَفّٰٮهُمُ உயிர் வாங்கினார்(கள்)/அவர்களை الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் ظَالِمِىْۤ தீங்கிழைத்தவர்களாக اَنْفُسِهِمْ தங்களுக்கு قَالُوْا கூறினர் فِيْمَ كُنْتُمْ‌ؕ எவ்வாறுஇருந்தீர்கள்? قَالُوْا கூறினார்கள் كُنَّا இருந்தோம் مُسْتَضْعَفِيْنَ பலவீனர்களாக فِىْ الْاَرْضِ‌ؕ இந்த பூமியில் قَالُوْۤا கூறினார்கள் اَلَمْ تَكُنْ இருக்கவில்லையா? اَرْضُ பூமி اللّٰهِ அல்லாஹ்வின் وَاسِعَةً விசாலமானதாக فَتُهَاجِرُوْا ஹிஜ்ரா சென்றிருக்க வேண்டாமா? فِيْهَا‌ؕ அதில் فَاُولٰٓٮِٕكَ இவர்கள் مَاْوٰٮهُمْ இவர்களின் ஒதுங்குமிடம் جَهَـنَّمُ‌ؕ நரகம் وَسَآءَتْ கெட்டுவிட்டது مَصِيْرًا ۙ மீளுமிடத்தால்
4:97. (அல்லாஹ்வின்ஆணையை நிறைவேற்றாது) எவர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்களோ அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும்போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) “நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலஹீனர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?” என (மலக்குகள்) கேட்பார்கள்; எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும்.
4:97. எவர்கள் (தங்கள் மார்க்கக் கட்டளையை சரிவர நிறைவேற்ற முடியாமல் நிராகரிப்பவர்களின் நாட்டில் இருந்து கொண்டு) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை வானவர்கள் கைப்பற்றும்பொழுது (அவர்களை நோக்கி ‘‘மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்'' என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள் ‘‘அந்தப் பூமியில் நாங்கள் சிறுபான்மையினர்களாகவே இருந்தோம்'' என்று (பதில்) கூறுவார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதல்லவா? நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?'' என்று கேட்பார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகம்தான். அது ஒதுங்கும் இடங்களில் மிகக் கெட்டது!
4:97. தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது, அவர்களிடம் “நீங்கள் எந்நிலையில் இருந்தீர்கள்?” என வினவுவார்கள். அதற்கு அவர்கள் “பூமியில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்” என பதிலளிப்பார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?” என வானவர்கள் வினவுவார்கள். இவர்களுக்குரிய இருப்பிடம் நரகம்தான்! மேலும் அது மிகக் கொடிய இருப்பிடமாகும்.
4:97. தமக்குத்தாமே அநீதமிழைத்துக் கொண்டவர்களாக இருக்க அவர்களின் உயிரை மலக்குகள் கைப்பற்றும் பொழுது (அவர்களிடம்) “நீங்கள் எதில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள், அ(தற்க)வர்கள், “இப்பூமியில் நாங்கள் பலவீனமாக்கப்பட்டவர்களாக இருந்தோம்” என்று (பதில்) கூறுவார்கள், (அதற்கு மலக்குகள்) “அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதாக இல்லையா? நீங்கள் (இருந்த) இவ்விடத்தைவிட்டு ஹிஜ்ரத்துச் செய்து புறப்பட்டிருக்க வேண்டாமா?” என்று கேட்பார்கள், இத்தகையோர், அவர்கள் தங்குமிடம் நரகந்தான், செல்லுமிடத்தால் அது மிக்க கெட்டது.
4:98
4:98 اِلَّا الْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيْعُوْنَ حِيْلَةً وَّلَا يَهْتَدُوْنَ سَبِيْلًا ۙ‏
اِلَّا தவிர الْمُسْتَضْعَفِيْنَ பலவீனர்கள் مِنَ இருந்து الرِّجَالِ ஆண்கள் وَالنِّسَآءِ இன்னும் பெண்கள் وَالْوِلْدَانِ இன்னும் சிறுவர்கள் لَا يَسْتَطِيْعُوْنَ இயலமாட்டார்கள் حِيْلَةً ஓர் ஆற்றலை وَّلَا يَهْتَدُوْنَ இன்னும் வழி காணமாட்டார்கள் سَبِيْلًا ۙ‏ ஒரு வழியையும்
4:98. (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலஹீனமானவர்களைத் தவிர - ஏனெனில் இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள்.
4:98. எனினும் ஆண், பெண், சிறியோர், பெரியோர் ஆகியோர்களில் (உண்மையில்) பலவீனமானவர்கள் ஒரு பரிகாரமும் தேடிக்கொள்ள சக்தியற்று (அதைவிட்டு வெளியேற) வழி காணாதிருந்தால்...
4:98. ஆனால், எவ்வித உபாயத்தையும் மேற்கொள்ள முடியாமல், எந்த வழிவகையும் பெறாமல், உண்மையிலேயே இயலாதவர்களாயிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர.
4:98. (ஆனால்) ஆண்களிலும் பெண்களிலும் சிறுவர்களிலும் பலவீனமாக்கப்பட்டவர்களைத் தவிர, (இவர்கள்) யாதொரு உபாயம் செய்துகொள்ள சக்திபெற மாட்டார்கள், (அதை விட்டு வெளியேற) எந்த வழியையும் அறியமாட்டார்கள்.
4:99
4:99 فَاُولٰٓٮِٕكَ عَسَى اللّٰهُ اَنْ يَّعْفُوَ عَنْهُمْ‌ؕ وَكَانَ اللّٰهُ عَفُوًّا غَفُوْرًا‏
فَاُولٰٓٮِٕكَ இவர்கள் عَسَى கூடும் اللّٰهُ அல்லாஹ் اَنْ يَّعْفُوَ அவன் மன்னிக்க عَنْهُمْ‌ؕ இவர்களை وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَفُوًّا மன்னிப்பாளானாக غَفُوْرًا‏ பாவங்களை மறைப்பவனாக
4:99. அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன்; ஏனெனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.
4:99. அவர்களை அல்லாஹ் மன்னித்து விடக்கூடும். ஏனென்றால், அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, பிழை பொறுப்பவனாக இருக்கிறான்.
4:99. அவர்களை அல்லாஹ் பிழை பொறுக்கக்கூடும். அல்லாஹ் மிக்க பிழை பொறுப்பவனும், மன்னிப்பு வழங்குபவனும் ஆவான்.
4:99. ஆகவே, அத்தகையோர் - அவர்களை அல்லாஹ் மன்னித்துவிடக் கூடும், இன்னும், அல்லாஹ், மிக்க மன்னிப்பவனாக, (பிழைகளை) மிகப் பொறுப்பவனாக இருக்கிறான்.
4:100
4:100 وَمَنْ يُّهَاجِرْ فِىْ سَبِيْلِ اللّٰهِ يَجِدْ فِى الْاَرْضِ مُرٰغَمًا كَثِيْرًا وَّسَعَةً‌ ؕ وَمَنْ يَّخْرُجْ مِنْۢ بَيْتِهٖ مُهَاجِرًا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَى اللّٰهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
وَمَنْ எவர் يُّهَاجِرْ ஹிஜ்ரா செல்கிறார் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வுடைய يَجِدْ பெறுவார் فِى الْاَرْضِ பூமியில் مُرٰغَمًا அடைக்கலங்களை كَثِيْرًا பல وَّسَعَةً‌ ؕ இன்னும் வசதியை وَمَنْ எவர் يَّخْرُجْ வெளியேறுவார் مِنْۢ இருந்து بَيْتِهٖ தன் இல்லம் مُهَاجِرًا ஹிஜ்ரா செல்பவராக اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் وَرَسُوْلِهٖ இன்னும் அவனின் தூதர் ثُمَّ பிறகு يُدْرِكْهُ அடையும்/அவரை الْمَوْتُ மரணம் فَقَدْ திட்டமாக وَقَعَ கடமையாகிவிடுகிறது اَجْرُهٗ அவனுடைய கூலி عَلَى اللّٰهِ‌ ؕ அல்லாஹ் மீது وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகாமன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:100. இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது - மேலும் அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், பேரன்பு மிக்கோனாகவும் இருக்கின்றான்.
4:100. (இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் (தான் இருந்த இடத்தைவிட்டு) எவர் வெளியேறி விடுகிறாரோ, அவர் பூமியில் வசதியான பல இடங்களையும், சௌகரியத்தையும் அடைவார். எவரேனும் தன் இல்லத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் இறந்துவிட்டால் அவருடைய வெகுமதி நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகிறது. (ஏனெனில்,) அல்லாஹ் மிக மன்னிப்பவனாக, மிகக் கருணையாளனாக இருக்கிறான்.
4:100. எவர் அல்லாஹ்வின் வழியில் ஹிஜ்ரத் செய்கின்றாரோ, அவர் பூமியில் எண்ணற்ற தங்குமிடங்களையும் வாழ்வதற்கான பெரும் வசதி வாய்ப்பையும் காண்பார். மேலும் ஒருவர் அல்லாஹ்வின் பக்கமும், அவனுடைய தூதரின் பக்கமும் ஹிஜ்ரத் செய்வதற்காகத் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறிய பிறகு (வழியிலேயே) அவருக்கு மரணம் ஏற்பட்டுவிட்டால், திண்ணமாக அவருக்கு நற்கூலி வழங்குவது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. அல்லாஹ் மிகவும் மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.
4:100. மேலும் (இத்தகைய நிலைமையில்) அல்லாஹ்வுடைய பாதையில் எவர் ஹிஜ்ரத்துச் செய்து) வெளியேறிவிடுகின்றாரோ அவர் பூமியில் வசதியான அநேக புகலிடங்களையும், (பொருளாதார) வசதியையும் அடைவர், இன்னும், எவர் அல்லாஹ்வின்பாலும், அவனுடைய தூதரின்பாலும், ஹிஜ்ரத்துச் செய்தவராக தன் இல்லத்திலிருந்து புறப்பட்டுப்பின்னர் (வழியிலேயே) அவரை மரணம் வந்தடைந்து விட்டால் அப்போது அவருடைய (நற்)கூலி திட்டமாக அல்லாஹ்வின் மீது கடமையாக ஆகிவிடுகின்றது, மேலும், (இத்தகையோருக்கு) அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
4:101
4:101 وَاِذَا ضَرَبْتُمْ فِى الْاَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَقْصُرُوْا مِنَ الصَّلٰوةِ ‌ۖ اِنْ خِفْتُمْ اَنْ يَّفْتِنَكُمُ الَّذِيْنَ كَفَرُوْا‌ ؕ اِنَّ الْـكٰفِرِيْنَ كَانُوْا لَـكُمْ عَدُوًّا مُّبِيْنًا‏
وَاِذَا ضَرَبْتُمْ நீங்கள் பயணித்தால் فِى الْاَرْضِ பூமியில் فَلَيْسَ இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது جُنَاحٌ குற்றம் اَنْ تَقْصُرُوْا நீங்கள் சுருக்குவது مِنَ الصَّلٰوةِ தொழுகையை ۖ اِنْ خِفْتُمْ நீங்கள் பயந்தால் اَنْ உங்களை يَّفْتِنَكُمُ துன்புறுத்துவதை الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا‌ ؕ நிராகரித்தார்கள் اِنَّ الْـكٰفِرِيْنَ நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் كَانُوْا இருக்கின்றனர் لَـكُمْ உங்களுக்கு عَدُوًّا எதிரிகளாக مُّبِيْنًا‏ பகிரங்கமான
4:101. நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது, காஃபிர்கள் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது; நிச்சயமாக காஃபிர்கள் உங்களுக்குப் பகிரங்கமான பகைவர்களாக இருக்கின்றனர்.
4:101. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணம் செய்தால் (நீங்கள் தொழுது கொண்டிருக்கும் போது) நிராகரிப்பவர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என பயந்தால் நீங்கள் தொழுகையை ‘கஸ்ர்' செய்வது (சுருக்கிக் கொள்வது) உங்கள் மீது குற்றமாகாது. ஏனெனில், நிராகரிப்பவர்கள் உங்களுக்குப் பகிரங்கமான எதிரிகளாகவே இருக்கின்றனர்.
4:101. மேலும், நீங்கள் பயணம் புறப்பட்டுச் சென்றால் சில தொழுகைகளைச் சுருக்கிக் கொள்வதில் உங்கள் மீது தவறேதுமில்லை. (குறிப்பாக) இறைநிராகரிப்பாளர்கள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள் என்று நீங்கள் அஞ்சினால் (சுருக்கிக் கொள்ளலாம்). ஏனென்றால், திண்ணமாக நிராகரிப்பாளர்கள் உங்களுக்கு வெளிப்படையான பகைவர்களாய் இருக்கின்றார்கள்.
4:101. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் பூமியில் பிரயாணம் செய்தால் நிராகரிப்போர் உங்களைத் துன்புறுத்துவர் எனப் பயந்தால் நீங்கள் (கஸர் தொழுவது, அதாவது உங்கள்) தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்களின் மீது குற்றமாகாது, (ஏனென்றால்) நிச்சயமாக நிராகரிப்போர் உங்களுக்குப் பகிரங்கமான விரோதிகளாகவே இருக்கின்றனர்.
4:102
4:102 وَاِذَا كُنْتَ فِيْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآٮِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْيَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ فَاِذَا سَجَدُوْا فَلْيَكُوْنُوْا مِنْ وَّرَآٮِٕكُمْ وَلْتَاْتِ طَآٮِٕفَةٌ اُخْرٰى لَمْ يُصَلُّوْا فَلْيُصَلُّوْا مَعَكَ وَلْيَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ‌ ۚ وَدَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَيَمِيْلُوْنَ عَلَيْكُمْ مَّيْلَةً وَّاحِدَةً‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَ ذًى مِّنْ مَّطَرٍ اَوْ كُنْـتُمْ مَّرْضٰۤى اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ‌ ۚ وَ خُذُوْا حِذْرَكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا‏
وَاِذَا كُنْتَ நீர் இருந்தால் فِيْهِمْ அவர்களில் فَاَقَمْتَ இன்னும் நிலைநிறுத்தினால் لَهُمُ அவர்களுக்கு الصَّلٰوةَ தொழுகையை فَلْتَقُمْ நிற்கவும் طَآٮِٕفَةٌ ஒரு பிரிவு مِّنْهُمْ அவர்களில் مَّعَكَ உம்முடன் وَلْيَاْخُذُوْۤا அவர்கள் எடுக்கவும் اَسْلِحَتَهُمْ ஆயுதங்களை/தங்கள் فَاِذَا سَجَدُوْا அவர்கள் சஜ்தா செய்து விட்டால் فَلْيَكُوْنُوْا அவர்கள் இருக்கவும் مِنْ وَّرَآٮِٕكُمْ உங்களுக்குப் பின்னர் وَلْتَاْتِ இன்னும் வரவும் طَآٮِٕفَةٌ ஒரு பிரிவு اُخْرٰى மற்ற لَمْ يُصَلُّوْا அவர்கள் தொழவில்லை فَلْيُصَلُّوْا அவர்கள் தொழவும் مَعَكَ உம்முடன் وَلْيَاْخُذُوْا அவர்கள் எடுக்கவும் حِذْرَهُمْ தங்கள் தற்காப்பை وَاَسْلِحَتَهُمْ‌ ۚ இன்னும் தங்கள் ஆயுதங்களை وَدَّ விரும்பினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் لَوْ تَغْفُلُوْنَ நீங்கள் கவனமற்று விடுவதை عَنْ இருந்து اَسْلِحَتِكُمْ உங்கள் ஆயுதங்கள் وَاَمْتِعَتِكُمْ இன்னும் உங்கள் பொருள்கள் فَيَمِيْلُوْنَ அவர்கள் பாய்ந்து விடுவார்கள் عَلَيْكُمْ உங்கள் மீது مَّيْلَةً பாய்ச்சல் وَّاحِدَةً‌ ؕ ஒரே பாய்ச்சல் وَلَا جُنَاحَ குற்றமில்லை عَلَيْكُمْ உங்கள் மீது اِنْ كَانَ இருந்தால் بِكُمْ உங்களுக்கு اَ ذًى சிரமம் مِّنْ காரணமாக مَّطَرٍ மழை اَوْ அல்லது كُنْـتُمْ இருந்தீர்கள் مَّرْضٰۤى நோயாளிகளாக اَنْ تَضَعُوْۤا நீங்கள் வைப்பது اَسْلِحَتَكُمْ‌ ۚ உங்கள் ஆயுதங்களை وَ خُذُوْا இன்னும் எடுங்கள் حِذْرَكُمْ‌ ؕ உங்கள் தற்காப்பை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اَعَدَّ ஏற்படுத்தினான் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابًا வேதனையை مُّهِيْنًا‏ இழிவான
4:102. (நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது; எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.
4:102. (நபியே! போர் முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு தொழ வைக்க நீர் (இமாமாக) முன்னின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (மட்டும் தங்கள் கைகளில்) தங்கள் ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டே உங்களுடன் தொழவும். இவர்கள் உங்களுடன் (தொழுது) ‘ஸஜ்தா' செய்துவிட்டால் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும். (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உங்களுடன் சேர்ந்து தொழவும். எனினும் அவர்களும் தங்கள் (கைகளில்) ஆயுதங்களைப் பிடித்த வண்ணம் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருக்கவும். ஏனென்றால், நீங்கள் உங்கள் பொருள்களிலிருந்தும், உங்கள் ஆயுதங்களிலிருந்தும் பராமுகமாகிவிட்டால் உங்கள் மீது ஒரேயடியாக பாய்ந்து தாக்குதல் நடத்திட வேண்டுமென்று அந்நிராகரிப்பவர்கள் விரும்புகின்றனர். இந்நிலைமையில், மழையின் தொந்தரவினால் அல்லது நீங்கள் நோயாளிகளாகவோ இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் (கைகளில் பிடிக்க முடியாவிட்டால்) கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. எனினும் நீங்கள் (அவர்களைப் பற்றி) எச்சரிக்கையாகவே இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
4:102. மேலும், (நபியே!) நீர் முஸ்லிம்களிடையே இருக்கும்போது (போர் நிலையில்) அவர்களுக்குத் தொழ வைப்பீராயின் அவர்களில் ஒரு குழுவினர் தங்களுடைய ஆயுதங்களை ஏந்திக் கொண்டு உம்மோடு நின்று கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் ஸுஜூது செய்து முடித்துவிட்டால் பின்னால் சற்று விலகிச் சென்றுவிட வேண்டும். தொழாமல் இருக்கும் மற்றொரு குழுவினர் வந்து உம்மோடு தொழ வேண்டும். அத்துடன் அவர்களும் முன்னெச்சரிக்கையோடு தம் ஆயுதங்களை ஏந்திக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் ஆயுதங்களிலும் பொருள்களிலும் நீங்கள் கவனக் குறைவாக இருந்துவிட்டால், உங்கள் மீது ஒரேயடியாக திடீர் தாக்குதல் நடத்த நிராகரிப்போர் தக்க தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆயினும் மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயுற்றவர்களாய் இருந்தால், ஆயுதங்களைக் கீழே வைத்துவிடுவதில் உங்கள் மீது தவறேதுமில்லை. ஆனாலும் எச்சரிக்கையாகவே இருங்கள். திண்ணமாக, அல்லாஹ் நிராகரிப்போருக்கு இழிவுபடுத்தும் வேதனையைத் தயார் செய்து வைத்துள்ளான்.
4:102. (நபியே! யுத்த முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு நீர் தொழவைக்க (இமாமாக முன்) நின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (தொழ) நிற்கட்டும், மேலும் தங்களுடைய ஆயுதங்களை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும், உம்முடன் இவர்கள் ஸஜ்தா செய்து முடித்துவிட்டால் அவர்கள் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும் (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உம்முடன் (சேர்ந்து) தொழவும், அவர்கள் தம் எச்சரிக்கையையும் தம் ஆயுதங்களையும் எடுத்துக்கொள்ளவும், (ஏனென்றால்,) நீங்கள் உங்கள் பொருட்களிலிருந்தும் உங்கள் ஆயுதங்களிலிருந்தும் கவனக்குறைவாக இருந்துவிட்டால், உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து தாக்க வேண்டுமென்று அந்நிராகரிப்போர் விரும்புகின்றனர், இந்நிலைமையில் மழையின் காரணமாக உங்களுக்கு சங்கடமிருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தாலோ, உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை, இன்னும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாராக்கி வைத்திருக்கின்றான்.
4:103
4:103 فَاِذَا قَضَيْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِكُمْ ۚؕ فَاِذَا اطْمَاْنَنْتُمْ فَاَقِيْمُوا الصَّلٰوةَ‌ ۚ اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا‏
فَاِذَا قَضَيْتُمُ நீங்கள் முடித்தால் الصَّلٰوةَ தொழுகையை فَاذْكُرُوا நினைவு கூருங்கள் اللّٰهَ அல்லாஹ்வை قِيَامًا நின்றவர்களாக وَّقُعُوْدًا இன்னும் உட்கார்ந்தவர்களாக وَّعَلٰى இன்னும் மீது جُنُوْبِكُمْ ۚؕ உங்கள் விலாக்கள் فَاِذَا اطْمَاْنَنْتُمْ நீங்கள் நிம்மதியடைந்தால் فَاَقِيْمُوا நிலை நிறுத்துங்கள் الصَّلٰوةَ‌ ۚ தொழுகையை اِنَّ الصَّلٰوةَ நிச்சயமாக தொழுகை كَانَتْ இருக்கிறது عَلَى மீது الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்கள் كِتٰبًا கடமையாக مَّوْقُوْتًا‏ நேரம் குறிக்கப்பட்டது
4:103. நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் - ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.
4:103. (நம்பிக்கையாளர்களே! இவ்வாறு) நீங்கள் (தொழுது) தொழுகையை முடித்துக் கொண்டால் உங்கள் நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூறி ‘திக்ரு' செய்துகொண்டே இருங்கள். (எதிரியின் தாக்குதலிலிருந்து) நீங்கள் அச்சமற்றவர்களாகி விட்டால் (முறைப்படி) தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகையோ குறிப்பிட்ட நேரத்தில் (தவறாமல்) நம்பிக்கையாளர்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவே இருக்கிறது.
4:103. நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுக்கும்போதும் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். மேலும், எதிரிகள் குறித்து அச்சம் நீங்கிவிட்டால் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுங்கள்! உண்மையாகவே குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் இறைநம்பிக்கையாளர்கள் மீது தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது.
4:103. (விசுவாசங் கொண்டோரே! இவ்வாறு) நீங்கள் தொழுகையை முடித்துக்கொண்டால், பின்னர் நின்ற நிலையிலும் இருப்பிலும், உங்களுடைய விலாப்புறங்களின் மீது படுத்திருக்கும் நிலையிலும், அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள், (விரோதிகளின் எதிர்ப்பிலிருந்து) நீங்கள் அச்சமற்றவர்களாகி விட்டால், அப்பொழுது (முறைப்படி) தொழுங்கள், ஏனென்றால், நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.
4:104
4:104 وَلَا تَهِنُوْا فِى ابْتِغَآءِ الْقَوْمِ‌ ؕ اِنْ تَكُوْنُوْا تَاْلَمُوْنَ فَاِنَّهُمْ يَاْلَمُوْنَ كَمَا تَاْلَمُوْنَ‌ ۚ وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا يَرْجُوْنَ‌ ؕ وَ كَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏
وَلَا تَهِنُوْا சோர்வடையாதீர்கள் فِى ابْتِغَآءِ தேடுவதில் الْقَوْمِ‌ ؕ கூட்டத்தை اِنْ تَكُوْنُوْا நீங்கள் இருந்தால் تَاْلَمُوْنَ வேதனைப் படுபவர்களாக فَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் يَاْلَمُوْنَ வேதனைப்படுகிறார்கள் كَمَا போன்று تَاْلَمُوْنَ‌ ۚ வேதனைப் படுபவர்களாக وَتَرْجُوْنَ இன்னும் ஆதரவு வைக்கிறீர்கள் مِنَ اللّٰهِ مَا அல்லாஹ்விடம்/எது لَا يَرْجُوْنَ‌ ؕ அவர்கள் ஆதரவு வைக்க மாட்டார்கள் وَ كَانَ اللّٰهُ இருக்கிறான்/அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:104. மேலும், (பகைக்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் ஊக்கம் குன்றாதீர்கள்; நீங்கள் (போரில்) துன்பப்படுவீர்களானால், நிச்சயமாக அவர்களும் உங்களைப் போன்றே துன்பப்படுகிறார்கள் - அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காத (நற்கூலியும் வெற்றியும்) நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:104. எதிரிகளைத் தேடிச் செல்வதில் நீங்கள் (சிறிதும்) சோர்வடையாதீர்கள். (அதனால்) உங்களுக்கு வலி ஏற்பட்டால் (பொருட்படுத்தாதீர்கள். ஏனென்றால்) நீங்கள் வலியை அனுபவிப்பதைப் போலவே அவர்களும் வலியை அனுபவிப்பதுடன் அவர்கள் எதிர்பார்க்க முடியாத (வெற்றி, நற்கூலி அனைத்)தையும் அல்லாஹ்விடமிருந்து நீங்கள் எதிர்பார்த்திருக்கிறீர்கள். அல்லாஹ் மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
4:104. அந்தக் கூட்டத்தைத் துரத்திச் செல்வதில் தளர்ந்து விடாதீர்கள்! நீங்கள் கஷ்டப்படுகிறீர்களென்றால், உங்களைப் போன்று அவர்களும்தான் கஷ்டப்படுகிறார்கள். மேலும், அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எதிர்பார்க்காதவற்றை நீங்கள் விரும்பி எதிர்பார்க்கின்றீர்கள். மேலும், அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
4:104. மேலும் (பகைவரின்) கூட்டத்தைத் தேடிச் செல்வதில் நீங்கள் (சிறிதும்) சோர்வடையாதீர்கள், நீங்கள் (போரில் காயமடைந்து) துன்பமடைந்திருப்பீர்களானால், நீங்கள் துன்பம் அடைந்தது போன்று நிச்சயமாக அவர்களும் துன்பம் அடைவர், மேலும், அவர்கள் ஆதரவு வைக்காததை (நற்கூலியை) அல்லாஹ்விடமிருந்து நீங்கள் ஆதரவு வைக்கிறீர்கள், மேலும், அல்லாஹ் நன்கறிகிறவனாக தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
4:105
4:105 اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَيْكَ الْكِتٰبَ بِالْحَـقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَاۤ اَرٰٮكَ اللّٰهُ‌ ؕ وَلَا تَكُنْ لِّـلْخَآٮِٕنِيْنَ خَصِيْمًا ۙ‏
اِنَّاۤ நிச்சயமாக நாமே اَنْزَلْنَاۤ இறக்கினோம் اِلَيْكَ உம்மீது الْكِتٰبَ இவ்வேதத்தை بِالْحَـقِّ உண்மையுடன் لِتَحْكُمَ நீர் தீர்ப்பளிப்பதற்காக بَيْنَ மத்தியில் النَّاسِ மக்கள் بِمَاۤ எதைக்கொண்டு اَرٰٮكَ உமக்கு அறிவித்தான் اللّٰهُ‌ ؕ அல்லாஹ் وَلَا تَكُنْ ஆகிவிடாதீர் لِّـلْخَآٮِٕنِيْنَ மோசடிக்காரர்களுக்கு خَصِيْمًا ۙ‏ தர்க்கிப்பவராக
4:105. (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, நீர் மனிதர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக, முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கியுள்ளோம்; எனவே சதி மோசக்காரர்கள் சார்பில் வாதாடுபவராகி விடாதீர்.
4:105. (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நாமே உம் மீது இறக்கினோம். (ஆகவே,) நீர் மோசடிக்காரர்களுக்கு தர்க்கிப்பவராக இருக்காதீர்!.
4:105. (நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்துத் தந்த நேரிய வழியின்படி மக்களிடையே நீர் தீர்ப்பு வழங்கவேண்டும் என்பதற்காகவே உம்மீது இத்திருமறையை சத்தியத்துடன் நாம் இறக்கி வைத்தோம். நீர் நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களுக்கு வாதாடுபவராய் இருக்க வேண்டாம்.
4:105. அல்லாஹ் உமக்கு அறிவித்ததைக் கொண்டு, மனிதர்களுக்கிடையில் நீர் தீர்ப்பளிப்பதற்காக, நிச்சயமாக (நபியே!) முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை, நாமே உம்மீது இறக்கி வைத்திருக்கின்றோம், மேலும் சதிகாரர்களுக்கு(சார்பாக) வாதாடுபவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
4:106
4:106 وَّاسْتَغْفِرِ اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا‌ ۚ‏
وَّاسْتَغْفِرِ இன்னும் மன்னிப்புக் கோருவீராக اللّٰهَ‌ ؕ அல்லாஹ்விடம் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‌ பெரும் கருணையாளனாக
4:106. (தவறுகளுக்காக) நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
4:106. (இதில் ஏதும் தவறேற்பட்டுவிட்டால் அதற்காக) நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க பிழைபொறுப்பவனாக மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்.
4:106. மேலும், அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக! திண்ணமாக அல்லாஹ், மன்னிப்பு வழங்குபவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
4:106. இன்னும் நீர் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
4:107
4:107 وَلَا تُجَادِلْ عَنِ الَّذِيْنَ يَخْتَانُوْنَ اَنْفُسَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِيْمًا ۙ‌ ۚ‏
وَلَا تُجَادِلْ இன்னும் வாதிடாதீர் عَنِ சார்பாக الَّذِيْنَ எவர்கள் يَخْتَانُوْنَ மோசடி செய்கிறார்கள் اَنْفُسَهُمْ‌ ؕ தங்களுக்கே اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் مَنْ எவன் كَانَ இருக்கிறான் خَوَّانًا சதிகாரனாக اَثِيْمًا ۙ‌ பாவியாக
4:107. (நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
4:107. (நபியே!) எவர்கள் (மனிதர்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே சதி செய்துகொண்டார்களோ அவர்களுக்காக (என்னிடம் மன்னிப்பைக் கோரி) நீர் தர்க்கிக்க வேண்டாம். ஏனென்றால், எவன் சதிசெய்யும் பாவியாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
4:107. தமக்குத் தாமே வஞ்சகம் செய்து கொள்கின்றவர்களுக்காக நீர் வாதாடாதீர்! திண்ணமாக, நம்பிக்கைத் துரோகம் செய்பவனையும் பாவம் புரிவதையே வழக்கமாகக் கொண்டவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
4:107. (நபியே! பிறருக்குத் தீங்கிழைத்து) தமக்குத்தாமே மோசடி செய்து கொண்டுள்ளார்களே அத்தகையவர்களுக்காக, நீர் வாதாட வேண்டாம், (ஏனென்றால்,) கொடிய பாவியான மிக மோசக்காரனாக இருக்கிறவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
4:108
4:108 يَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ يُبَيِّتُوْنَ مَا لَا يَرْضٰى مِنَ الْقَوْلِ‌ؕ وَكَانَ اللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطًا‏
يَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ மறைக்கத் தேடுகிறார்கள்/மக்களிடம் وَلَا يَسْتَخْفُوْنَ அவர்கள் மறைக்கத் தேடுவதில்லை مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் وَهُوَ அவன் مَعَهُمْ அவர்களுடன் اِذْ போது يُبَيِّتُوْنَ சதித்திட்டம் செய்கின்றனர் مَا எதை لَا يَرْضٰى விரும்பமாட்டான் مِنَ الْقَوْلِ‌ؕ பேச்சில் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் بِمَا எதை يَعْمَلُوْنَ செய்கிறார்கள் مُحِيْطًا‏ சூழ்ந்தவனாக
4:108. இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் (சதி) ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான். மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.
4:108. இவர்கள் (சதி செய்யும் தங்கள் குற்றத்தை) மனிதர்களுக்கு மறைக்கிறார்கள். எனினும், (அதை) அல்லாஹ்வுக்கு மறைத்துவிட முடியாது. (அல்லாஹ்) விரும்பாத விஷயங்களைக்கொண்டு இவர்கள் இரவெல்லாம் பேசி சதி ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன்தான் இருக்கிறான். அல்லாஹ் அவர்களுடைய (சதிச்) செயலை(த் தன் ஞானத்தால்) சூழ்ந்துகொண்டும் இருக்கிறான்.
4:108. அவர்கள் (தம் இழிசெயல்களை) மனிதர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்ளலாம். ஆனால், அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. அவனோ அவனுடைய விருப்பத்திற்கு மாறாக அவர்கள் சதியாலோசனை செய்து கொண்டிருக்கும்போது கூட அவர்களுடன் இருக்கின்றான். மேலும், அல்லாஹ் அவர்கள் செய்கின்ற அனைத்துச் செயல்களையும் சூழ்ந்தறிந்து கொண்டிருக்கின்றான்.
4:108. இவர்கள் (தங்கள் மோசடிகளை) மனிதர்களிடமிருந்து மறைக்கின்றார்கள், அவர்கள் (அதனை) அல்லாஹ்விடமிருந்து மறைத்துவிடவே முடியாது, (ஏனெனில்) அவன் பேச்சால் பொருந்திக்கொள்ளாததைக் கொண்டு இவர்கள் இரவெல்லாம் (சதிசெய்ய) ஆலோசனை செய்யும்போது அவன் அவர்களுடன்தான் இருக்கின்றான், மேலும், அல்லாஹ் அவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை (தன் அறிவால்) சூழ்ந்து கொண்டவனாக இருக்கின்றான்.
4:109
4:109 هٰۤاَنْتُمْ هٰٓؤُلَۤاءِ جَادَلْـتُمْ عَنْهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا فَمَنْ يُّجَادِلُ اللّٰهَ عَنْهُمْ يَوْمَ الْقِيٰمَةِ اَمْ مَّنْ يَّكُوْنُ عَلَيْهِمْ وَكِيْلًا‏
هٰۤاَنْتُمْ நீங்கள் هٰٓؤُلَۤاءِ இவர்கள் جَادَلْـتُمْ வாதிடுகிறீர்களா? عَنْهُمْ இவர்கள் சார்பாக فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْيَا இவ்வுலகம் فَمَنْ யார் يُّجَادِلُ வாதிடுவார் اللّٰهَ அல்லாஹ்விடம் عَنْهُمْ இவர்கள் சார்பாக يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் اَمْ அல்லது مَّنْ யார் يَّكُوْنُ இருப்பார் عَلَيْهِمْ இவர்கள் மீது وَكِيْلًا‏ பொறுப்பாளராக
4:109. (முஃமின்களே!) என்னே! இத்தகைய மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள் - நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) அவர்களுக்காக பொறுப்பாளியாக ஆகுபவன் யார்?
4:109. நம்பிக்கையாளர்களே! இவர்களுக்(கு உதவுவதற்)காகவா நீங்கள் இவ்வுலகத்தில் தர்கிக்கிறீர்கள்? மறுமைநாளில் இவர்களுக்காக அல்லாஹ்விடம் தர்க்கிப்பவன் யார்? இன்னும், (அந்நாளில்) இவர்களுக்குப் பரிந்து பேசுபவன் யார்?
4:109. சரி! இக்குற்றவாளிகளின் சார்பில் உலக வாழ்க்கையின்போது நீங்கள் வாதாடிவிட்டீர்கள். ஆனால், மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்காக வாதாடுபவர் யார்? அல்லது அவர்களுக்காக பொறுப்பேற்பவர் யார்?
4:109. அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் தானே அவர்கள், அவர்களுக்காக உலகவாழ்வில் நீங்கள் வாதாடுகிறீர்கள், கியாமத்து நாளில் அவர்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுபவர் யார்? அல்லது எவர் இவர்களுக்கு பொறுப்பேற்பவராக இருப்பார்?
4:110
4:110 وَ مَنْ يَّعْمَلْ سُوْٓءًا اَوْ يَظْلِمْ نَفْسَهٗ ثُمَّ يَسْتَغْفِرِ اللّٰهَ يَجِدِ اللّٰهَ غَفُوْرًا رَّحِيْمًا‏
وَ مَنْ يَّعْمَلْ எவர்/செய்வார் سُوْٓءًا ஒரு தீமையை اَوْ அல்லது يَظْلِمْ அநீதியிழைப்பார் نَفْسَهٗ தனக்கு ثُمَّ பிறகு يَسْتَغْفِرِ மன்னிப்புக் கேட்பார் اللّٰهَ அல்லாஹ்விடம் يَجِدِ காண்பார் اللّٰهَ அல்லாஹ்வை غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:110. எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் - அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
4:110. எவரேனும், ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத் துக்கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கைசேதப்பட்டு) அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், (அவன் மீது) மிகக் கருணையுடையவனாகவும் காண்பான்.
4:110. மேலும் ஒருவர் தீய செயல்புரிந்து, அல்லது தனக்குத்தானே அநீதி இழைத்துக்கொண்டு பின்னர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையாளனாகவும் இருப்பதை அவர் காண்பார்.
4:110. மேலும், எவர் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தனக்குத் தானே அநீதமிழைத்துவிட்டு பின்னர் (பச்சாதாபப்பட்டு) அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், அல்லாஹ்வை மிக்க மன்னிப்பவனாக, மிகக் கிருபையுடையவனாக அவர் காண்பார்.
4:111
4:111 وَمَنْ يَّكْسِبْ اِثْمًا فَاِنَّمَا يَكْسِبُهٗ عَلٰى نَفْسِهٖ‌ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏
وَمَنْ இன்னும் எவர் يَّكْسِبْ சம்பாதிப்பார் اِثْمًا ஒரு பாவத்தை فَاِنَّمَا எல்லாம் يَكْسِبُهٗ சம்பாதிப்பார்/அதை عَلٰى نَفْسِهٖ‌ؕ தனக்கெதிராகத்தான் وَكَانَ اللّٰهُ அல்லாஹ் இருக்கின்றான் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:111. எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:111. எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே அதைச் சம்பாதிக்கிறான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
4:111. ஆனால், ஒருவன் பாவத்தைச் சம்பாதிப்பானாகில் தனக்குக் கேடாகவே அவன் அதைச் சம்பாதித்துக் கொள்கின்றான். அல்லாஹ் நன்கறிபவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
4:111. இன்னும், எவர் பாவத்தைச் சம்பாதிக்கின்றாரோ, அவர் அதனைச் சம்பாதிப்பதெல்லாம் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே (தான்), இன்னும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
4:112
4:112 وَمَنْ يَّكْسِبْ خَطِيْٓــٴَــةً اَوْ اِثْمًا ثُمَّ يَرْمِ بِهٖ بَرِيْٓــٴًـــا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا‏
وَمَنْ எவர் يَّكْسِبْ சம்பாதிப்பார் خَطِيْٓــٴَــةً ஒரு குற்றத்தை اَوْ அல்லது اِثْمًا ஒரு பாவத்தை ثُمَّ பிறகு يَرْمِ எறிகிறார் بِهٖ அதை بَرِيْٓــٴًـــا ஒரு நிரபராதியை فَقَدِ திட்டமாக احْتَمَلَ சுமந்து கொண்டார் بُهْتَانًا அவதூறை وَّاِثْمًا இன்னும் பாவத்தை مُّبِيْنًا‏ பகிரங்கமான
4:112. மேலும், எவன் ஒரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்துவிட்டு அப்பால் அதனை ஒரு நிரபராதி மீது வீசி விடுகிறானோ அவன் நிச்சயமாக அவதூற்றையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கின்றான்.
4:112. எவரேனும், ஒரு குற்றத்தையோ அல்லது பாவத்தையோ செய்து அதை(த் தான் செய்யவில்லையென்று மறைத்து) குற்றமற்ற (மற்றொரு)வர் மீது சுமத்தினால் நிச்சயமாக அவன் அபாண்டமான பொய்யையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கிறான்.
4:112. மேலும், ஒருவன் ஒரு தவறை அல்லது ஒரு பாவத்தைச் செய்துவிட்டு ஒரு நிரபராதியின் மீது அதைச் சுமத்திவிட்டால் அவன் பெரும் அவதூறையும் வெளிப்படையான பாவத்தையும் நிச்சயம் சுமந்து கொள்பவனாவான்.
4:112. அன்றியும் எவர், யாதொரு தவறையோ அல்லது பாவத்தையோ சம்பாதித்து பின்னர் நிரபராதியான (மற்றொரு)வர்மீது அதனைச் சுமத்தினால் அப்போது நிச்சயமாக அவர் அவதூரையும், பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொண்டவராவார்.
4:113
4:113 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكَ وَرَحْمَتُهٗ لَهَمَّتْ طَّآٮِٕفَةٌ مِّنْهُمْ اَنْ يُّضِلُّوْكَ ؕ وَمَا يُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ‌ وَمَا يَضُرُّوْنَكَ مِنْ شَىْءٍ ‌ؕ وَاَنْزَلَ اللّٰهُ عَلَيْكَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ‌ؕ وَكَانَ فَضْلُ اللّٰهِ عَلَيْكَ عَظِيْمًا‏
وَلَوْلَا فَضْلُ அருளும் இல்லாதிருந்தால் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكَ உம்மீது وَرَحْمَتُهٗ அவனின் கருணை لَهَمَّتْ திட்டமாக நாடியிருக்கும் طَّآٮِٕفَةٌ ஒரு பிரிவு مِّنْهُمْ அவர்களில் اَنْ يُّضِلُّوْ அல்லது வழிகெடுத்துவிட كَ ؕ உம்மை وَمَا يُضِلُّوْنَ அவர்கள் வழிகெடுக்க மாட்டார்கள் اِلَّاۤ தவிர اَنْفُسَهُمْ‌ தங்களையே وَمَا மாட்டார்கள் يَضُرُّوْنَكَ தீங்கிழைக்க / உமக்கு مِنْ شَىْءٍ ؕ எதையும் وَاَنْزَلَ இறக்கினான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْكَ உம்மீது الْكِتٰبَ இவ்வேதத்தை وَالْحِكْمَةَ இன்னும் ஞானத்தை وَعَلَّمَكَ இன்னும் உமக்குக் கற்பித்தான் مَا எவற்றை لَمْ تَكُنْ நீர் இருக்கவில்லை تَعْلَمُ‌ؕ அறிகிறீர் وَكَانَ இருக்கிறது فَضْلُ اللّٰهِ அல்லாஹ்வின்அருள் عَلَيْكَ உம்மீது عَظِيْمًا‏ மகத்தானது
4:113. (நபியே!) உம் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழி தவறி நடக்கும்படி செய்ய முயன்றிருப்பார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி தவறும்படி செய்ய முடியாது; இன்னும் அவர்களால் உமக்கு எந்த விதமான தீங்கும் செய்துவிட முடியாது; மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது.
4:113. (நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனது கிருபையும் உம் மீது இல்லாதிருந்தால் (நீர் தவறிழைத்திருக்கக் கூடும். ஏனென்றால், எந்தவிதத்திலும்) உம்மை வழி கெடுத்துவிட வேண்டுமென்று அவர்களில் ஒரு கூட்டத்தினர் முடிவு கட்டியிருந்தனர். எனினும், அவர்கள் தங்களையே அன்றி (உம்மை) வழிகெடுக்கவில்லை. அவர்கள் உமக்கு கொஞ்சமும் தீங்கிழைத்துவிட முடியாது. அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம் மீது இறக்கி நீங்கள் அறியாத அனைத்தையும் உமக்குக் கற்பித்திருக்கிறான். உம் மீது அல்லாஹ்வுடைய அருள் மகத்தானதாகவே இருக்கிறது.
4:113. (நபியே!) அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருளும் உம்மீது பொழிந்திராவிட்டால் (உம்மை அவர்கள் வழி தவறச் செய்திருப்பார்கள். ஏனெனில்) அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மைத் தவறான கருத்தில் ஆழ்த்திட வேண்டும் என்று முடிவு கட்டியிருந்தார்கள். உண்மையில், அவர்கள் தங்களை அன்றி வேறெவரையும் தவறான கருத்தில் ஆழ்த்திக்கொள்ளவில்லை. மேலும், அவர்களால் உமக்கு யாதொரு தீங்கையும் இழைக்க முடியாது. அல்லாஹ் உமக்கு வேதத்தையும், நுண்ணறிவையும் அருளினான். மேலும், நீர் அறியாதவற்றையும் உமக்குக் கற்றுத் தந்தான். அல்லாஹ் உம்மீது பொழிந்த அருட்கொடையோ மகத்தானதாகும்.
4:113. இன்னும், (நபியே!) உம்மீது அல்லாஹ்வின் பேரருளும், அவனது கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தினர் உம்மை வழி தவறச் செய்ய முயன்றிருப்பர், இன்னும், அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்க முடியாது, அவர்கள் உமக்கு யாதொரு தீங்கிழைத்துவிடவும் முடியாது, மேலும், அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கி வைத்தான், இன்னும், நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான், மேலும், உம்மீது அல்லாஹ்வுடைய பேரருள் மகத்தானதாகவே இருக்கின்றது.
4:114
4:114 لَا خَيْرَ فِىْ كَثِيْرٍ مِّنْ نَّجْوٰٮهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍۢ بَيْنَ النَّاسِ‌ ؕ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُـؤْتِيْهِ اَجْرًا عَظِيْمًا‏
لَا அறவே இல்லை خَيْرَ நன்மை فِىْ كَثِيْرٍ அதிகமானவற்றில் مِّنْ இருந்து نَّجْوٰٮهُمْ அவர்களின் ரகசியம் اِلَّا தவிர مَنْ எவர் اَمَرَ ஏவினார் بِصَدَقَةٍ தர்மத்தை اَوْ அல்லது مَعْرُوْفٍ நன்மையை اَوْ அல்லது اِصْلَاحٍۢ சமாதானத்தை بَيْنَ இடையில் النَّاسِ‌ ؕ மக்கள் وَمَن எவர் يَّفْعَلْ செய்வார் ذٰ لِكَ அதை ابْتِغَآءَ நாடி مَرْضَاتِ பொருத்தம் اللّٰهِ அல்லாஹ்வின் فَسَوْفَ தருவோம் نُـؤْتِيْهِ அவர்களுக்கு اَجْرًا கூலியை عَظِيْمًا‏ மகத்தானது
4:114. (நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை; ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்.
4:114. (நபியே!) அவர்கள் (உம்முடன்) பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் ஒரு நன்மையுமில்லை. ஆயினும், தானம் கொடுப்பதைப் பற்றியோ, நன்மையானவற்றைப் பற்றியோ, மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப் பற்றியோ பேசுபவற்றைத் தவிர. ஆகவே, எவரேனும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இவ்வாறு (இரகசியம்) பேசினால் (மறுமையில்) நாம் அவர்களுக்கு மகத்தான (நற்) கூலியைத் தருவோம்.
4:114. மனிதர்களின் பெரும்பாலான இரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும்படியோ, மனிதர்களுக்கிடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர்களின் பேச்சுக்களைத் தவிர! (அவற்றில் நன்மை உண்டு.) மேலும் எவர் அல்லாஹ்வின் உவப்பைத் தேடுவதற்காக இவ்வாறு செய்கின்றாரோ அவருக்கு நாம் விரைவில் மகத்தான கூலியை வழங்குவோம்.
4:114. தர்மத்தைப்பற்றி, அல்லது நன்மையானவற்றைப்பற்றி, அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதைப்பற்றி ஏவியவரைத் தவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை, மேலும், அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி அதைச் செய்தால் நாம் அவர்களுக்கு மகத்தான (நற்)கூலியைத் தருவோம்.
4:115
4:115 وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ‌ ؕ وَسَآءَتْ مَصِيْرًا‏
وَمَنْ எவர் يُّشَاقِقِ முரண்படுகிறார் الرَّسُوْلَ தூதருக்கு مِنْۢ بَعْدِ பின்னர் مَا تَبَيَّنَ தெளிவானது لَـهُ தனக்கு الْهُدٰى நேர்வழி وَ يَـتَّبِعْ பின்பற்றுவார் غَيْرَ அல்லாதது سَبِيْلِ பாதை الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களின் نُوَلِّهٖ திருப்பி விடுவோம்/ அவரை مَا எது تَوَلّٰى திரும்பினார் وَنُصْلِهٖ இன்னும் நுழைப்போம்/ அவரை جَهَـنَّمَ‌ ؕ நரகத்தில் وَسَآءَتْ கெட்டுவிட்டது مَصِيْرًا‏ மீளுமிடத்தால்
4:115. எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
4:115. எவர் நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னரும் (அல்லாஹ்வுடைய) இத்தூதரை விட்டுப் பிரிந்து நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததில் செல்கிறாரோ அவரை நாம் அவர் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு (பின்னர்) அவரை நரகத்தில் சேர்த்து விடுவோம். அது செல்லும் இடங்களில் மிகக் கெட்டது.
4:115. மேலும், தனக்கு நேர்வழி தெளிவாகிவிட்ட பின்னரும், எவன் இறைத்தூதரிடம் பகைமை காட்டுவதில் முனைப்பாக இருக்கின்றானோ, இறைநம்பிக்கையாளர்களின் நடத்தைக்கு மாறான பாதையில் செல்கின்றானோ, அவனை அவன் திரும்பிவிட்ட திசையிலேயே நாம் செலுத்துவோம்; பின்னர் அவனை நரகத்தில் வீசி எறிவோம்! அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.
4:115. இன்னும், நேரான வழி இன்னதென்று தனக்குத் தெளிவானதன் பின்னர் எவர், (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து விசுவாசிகளின் வழியல்லாத (வேறுவழியான)தைப் பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம், (பின்னர்) அவரை நரகத்தில் புகுத்திவிடுவோம், அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது.
4:116
4:116 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَغْفِرُ மன்னிக்க மாட்டான் اَنْ يُّشْرَكَ بِهٖ இணைவைக்கப்படுவதை/அவனுக்கு وَيَغْفِرُ இன்னும் மன்னிப்பான் مَا دُوْنَ ذٰ لِكَ அது அல்லாததை لِمَنْ எவருக்கு يَّشَآءُ‌ ؕ நாடுவான் وَمَنْ எவர் يُّشْرِكْ இணைவைப்பார் بِاللّٰهِ அல்லாஹ்வுக்கு فَقَدْ திட்டமாக ضَلَّ வழிகெட்டார் ضَلٰلًاۢ வழிகேடு بَعِيْدًا‏ தூரமானது
4:116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
4:116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதை அல்லாத (குற்றத்)தை (அதுவும்) தான் விரும்பியவர்களுக்கே மன்னிப்பான். ஆகவே, எவரேனும் அல்லாஹ்வுக்கு இணைவைத்தால் அவர் வெகுதூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்.
4:116. திண்ணமாக தனக்கு இணைவைப்பதை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்; இது தவிர அனைத்தையும் தான் நாடுகின்றவர்களுக்கு அவன் மன்னித்து விடுவான். எனவே, யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவன் வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான்.
4:116. நிச்சயமாக, அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கமாட்டான், மேலும் இதல்லாத (குற்றத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான், இன்னும் யார் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாரோ, அவர் திட்டமாக வெகு தூரமான வழிகேடாக வழி கெட்டுவிட்டார்.
4:117
4:117 اِنْ يَّدْعُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اِنٰـثًـا‌ ۚ وَاِنْ يَّدْعُوْنَ اِلَّا شَيْـطٰنًا مَّرِيْدًا ۙ‏
اِنْ يَّدْعُوْنَ அவர்கள் பிரார்த்திப்பதில்லை مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اِلَّاۤ தவிர اِنٰـثًـا‌ ۚ பெண்(சிலை)களை وَاِنْ يَّدْعُوْنَ அவர்கள் பிரார்த்திப்பதில்லை اِلَّا தவிர شَيْـطٰنًا ஷைத்தானிடம் مَّرِيْدًا ۙ‏ கீழ்ப்படியாதவன்
4:117. அவனை (அல்லாஹ்வை) விட்டு அவர்கள் அழைப்பவை எல்லாம் பெண் தெய்வங்களேயன்றி வேறில்லை; இன்னும் துஷ்ட ஷைத்தானையும் தவிர, வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை.
4:117. அல்லாஹ்வையன்றி அவர்கள் (தெய்வங்களாக) அழைப்பவைகள் பெண் (பெயருடையவை)களேயன்றி வேறில்லை. துஷ்ட ஷைத்தானை அன்றி (மற்றெதையும்) அவர்கள் அழைக்கவில்லை.
4:117. அவர்கள் அல்லாஹ்வை விடுத்து தேவதைகளை வணக்கத்திற்குரியவர்களாக எடுத்துக்கொள்கின்றார்கள்! மூர்க்கத்தனம் கொண்ட ஷைத்தானை அவர்கள் வணக்கத்திற்கு உரியவனாக எடுத்துக் கொள்கிறார்கள்!
4:117. அவனைத்தவிர்த்து, அவர்கள் பெண் (தெய்வங்)களைத் தவிர (வணக்கத்தில்) (வேறெதனையும்) அழைக்கவில்லை, மூர்க்கத்தனம் கொண்டவனான ஷைத்தானைத் தவிர (வேறு யாரையும்) அவர்கள் அழைக்கவுமில்லை.
4:118
4:118 لَّـعَنَهُ اللّٰهُ‌ ۘ وَقَالَ لَاَ تَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِيْبًا مَّفْرُوْضًا ۙ‏
لَّـعَنَهُ சபித்தான்/அவனை اللّٰهُ‌ ۘ அல்லாஹ் وَقَالَ கூறினான் لَاَ تَّخِذَنَّ நிச்சயமாக எடுத்துக்கொள்வேன் مِنْ இருந்து عِبَادِكَ அடியார்கள்/உன் نَصِيْبًا ஒரு தொகையை مَّفْرُوْضًا ۙ‏ குறிப்பிட்டது
4:118. அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான். “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நான் நிச்சயமாக எடுத்துக் கொள்வேன்” என்றும்,
4:118. அந்த ஷைத்தானை அல்லாஹ் கோபித்து சபித்தான். அதற்கவன் ‘‘உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்'' என்று கூறினான்.
4:118. அவனையோ அல்லாஹ் சபித்திருக்கின்றான். (இவர்கள் பின்பற்றும் ஷைத்தான் எத்தகையவன் எனில்) அவன் அல்லாஹ்வை நோக்கிக் கூறினான்: “உன் அடிமைகளிடமிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கினை திண்ணமாக நான் வாங்கியே தீருவேன்.
4:118. (தீய வழி நடத்தும் ஷைத்தானாகிய) அவனை அல்லாஹ் சபித்தான், அ(தற்க)வன், “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நிச்சயமாக நான் எடுத்துக் கொள்வேன்” என்று கூறினான்.
4:119
4:119 وَّلَاُضِلَّـنَّهُمْ وَلَاُمَنِّيَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُبَـتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللّٰهِ‌ؕ وَمَنْ يَّتَّخِذِ الشَّيْطٰنَ وَلِيًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِيْنًا ؕ‏
وَّلَاُضِلَّـنَّهُمْ இன்னும் நிச்சயம் வழிகெடுப்பேன்/அவர்கû ள وَلَاُمَنِّيَنَّهُمْ இன்னும் நிச்சயமாக வீண் நம்பிக்கையூட்டுவேன்/அவர்களுக்கு وَلَاٰمُرَنَّهُمْ இன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்கு فَلَيُبَـتِّكُنَّ ஆகவே நிச்சயம் அறுப்பார்கள் اٰذَانَ காதுகளை الْاَنْعَامِ கால்நடைகளின் وَلَاٰمُرَنَّهُمْ இன்னும் நிச்சயம் ஏவுவேன்/அவர்களுக்கு فَلَيُغَيِّرُنَّ நிச்சயமாக அவர்கள் மாற்றுவார்கள் خَلْقَ படைப்புகளை اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَمَنْ எவன் يَّتَّخِذِ எடுத்துக் கொள்வான் الشَّيْطٰنَ ஷைத்தானை وَلِيًّا நண்பனாக, பாதுகாவலனாக مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி فَقَدْ خَسِرَ திட்டமாகநஷ்டமடைந்தான் خُسْرَانًا நஷ்டம் مُّبِيْنًا ؕ‏ பகிரங்கமானது
4:119. “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
4:119. அன்றி ‘‘நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன். அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை உண்டு பண்ணி (பிசாசுகளுக்காக பிரார்த்தனை செய்துவிடப்பட்ட) ஆடு, மாடுகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். அல்லாஹ்வின் படைப்பினங்(களின் கோலங்)களை மாற்றும்படியாகவும் நிச்சயமாக நான் அவர்களை ஏவுவேன்'' (என்று கூறினான்.) ஆகவே, எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை (தனக்கு) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கிறானோ அவன் நிச்சயமாக பகிரங்கமான நஷ்டத்தையே அடைந்துவிடுவான்.
4:119. மேலும், நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன்; ஆசைகளில் அவர்களை உழலவைப்பேன். இன்னும், நான் அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; (அதன்படி) அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுத்து விடுவார்கள். மேலும், நான் அவர்களுக்கு ஆணை பிறப்பிப்பேன்; (அதன்படி) அல்லாஹ் படைத்த ஒழுங்கமைப்பில் அவர்கள் மாற்றங்கள் செய்வார்கள்.” எவன் அல்லாஹ்வை விட்டுவிட்டு, இந்த ஷைத்தானைத் தன்னுடைய நண்பனாகவும், பாதுகாவலனாகவும் எடுத்துக் கொள்கின்றானோ அவன் அப்பட்டமான இழப்புக் குரியவன் ஆவான்.
4:119. “இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழிகெடுப்பேன், அவர்களுக்கு வீணாண ஆசைகளையும் உண்டாக்குவேன், நிச்சயமாக அவர்களுக்கு நான் கட்டளையும் இடுவேன், அப்போது (அல்லாஹ் அல்லாதவருக்காக நேர்ச்சை செய்து விடப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளின் காதுகளை அவர்கள் அறுத்து விடுவர், இன்னும், அவர்களை நிச்சயமாக நான் ஏவுவேன், அப்போது அல்லாஹ்வின் சிருஷ்டி(களுடைய கோலங்)களை நிச்சயமாக அவர்கள் மாற்றிவிடுவர், (என்றும் ஷைத்தான் கூறினான்.) மேலும் எவர் அல்லாஹ்வையன்றி, (இத்தகைய) ஷைத்தானை (தனக்குப்) பாதுகாவலனாக எடுத்துக் கொள்கின்றாரோ, நிச்சயமாக அவர் தெளிவான நஷ்டத்தையே அடைந்துவிடுவார்.
4:120
4:120 يَعِدُهُمْ وَيُمَنِّيْهِمْ‌ ؕ وَمَا يَعِدُهُمُ الشَّيْـطٰنُ اِلَّا غُرُوْرًا‏
يَعِد வாக்களிக்கிறான் هُمْ அவர்களுக்கு وَيُمَنِّيْهِمْ‌ ؕ இன்னும் வீண்நம்பிக்கையூட்டுகிறான் / அவர்களுக்கு وَمَا மாட்டான் يَعِدُهُمُ அவர்களுக்கு வாக்களிக்க الشَّيْـطٰنُ ஷைத்தான் اِلَّا غُرُوْرًا‏ ஏமாற்றத்தைத் தவிர
4:120. ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத் தவிர வேறு (எதனையும்) அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.
4:120. (ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கிறான். அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகிறான். எனினும், ஏமாற்றுவதற்கே தவிர ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
4:120. அவன் அவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றான்; ஆசையூட்டுகின்றான். ஆனால், ஷைத்தான் அவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
4:120. (ஷைத்தானாகிய) அவன் அவர்களுக்கு வாக்களிக்கின்றான், அவர்களுக்கு வீணாண ஆசைகளையும் ஊட்டுகின்றான், மேலும், ஏமாற்றத்தைத் தவிர (வேறு எதையும்) ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை.
4:121
4:121 اُولٰٓٮِٕكَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ وَلَا يَجِدُوْنَ عَنْهَا مَحِيْصًا‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் مَاْوٰٮهُمْ அவர்களுடைய ஒதுங்குமிடம் جَهَـنَّمُ நரகம் وَلَا يَجِدُوْنَ பெறமாட்டார்கள் عَنْهَا அதை விட்டு مَحِيْصًا‏ ஒரு மீளுமிடத்தை
4:121. இத்தகையோருக்கு நரகமே ஒதுங்குமிடமாகும்; அதைவிட்டுத் தப்பிச் செல்ல அவர்கள், ஒருவழியையும் காண மாட்டார்கள்.
4:121. இவர்களின் செல்லுமிடம் நரகம்தான். அவர்கள் அதிலிருந்து தப்ப ஒரு வழியையும் காணமாட்டார்கள்.
4:121. இத்தகையோர் தங்குமிடம் நரகம்தான்! அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழி எதனையும் அவர்கள் காணமாட்டார்கள்.
4:121. இத்தகையோர் - அவர்கள் தங்குமிடம் நரகந்தான், அவர்கள் அதை விட்டும் தப்பி ஓடும் இடத்தையும் காண மாட்டார்கள்.
4:122
4:122 وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ وَعْدَ اللّٰهِ حَقًّا‌ ؕ وَمَنْ اَصْدَقُ مِنَ اللّٰهِ قِيْلًا‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ நன்மைகளை سَنُدْخِلُهُمْ அவர்களை நுழைப்போம் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَاۤ அவற்றில் اَبَدًا‌ ؕ என்றென்றும் وَعْدَ வாக்குறுதி اللّٰهِ அல்லாஹ்வுடைய حَقًّا‌ ؕ உண்மையான وَمَنْ யார் اَصْدَقُ மிக உண்மையானவன் مِنَ اللّٰهِ அல்லாஹ்வை விட قِيْلًا‏ சொல்லில்
4:122. மேலும் எவர் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களை நாம் சுவனபதிகளில் நுழைய வைப்போம்; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள் - அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; இன்னும் வார்த்தைப்பாட்டில் அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் யார்?
4:122. எவர்கள் (ஷைத்தானை நிராகரித்து விட்டு அல்லாஹ்வை) நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை (மறுமையில்) நாம் சொர்க்கங்களில் புகுத்துவோம். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றில் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே! அல்லாஹ்வைவிட உண்மை சொல்பவர் யார்?
4:122. யார் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடும் சுவனப்பூங்காக்களில் நுழைய வைப்போம்; அவற்றில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இது அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதியாகும். தம் சொல்லில், அல்லாஹ்வைவிட உண்மையானவர்கள் வேறு யார் உளர்?
4:122. மேலும், விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்கின்றார்களே அத்தகையோர் - அவர்களை நாம் (மறுமையில்) சுவனபதிகளில், பிரவேசிக்கச் செய்வோம், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அதில் நிரந்தரமாக என்றென்றும் (தங்கி) இருப்பவர்கள், அல்லாஹ்வுடைய (இவ்)வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே, மேலும், அல்லாஹ்வைவிட சொல்லால் மிக்க உண்மையானவர் யார்?
4:123
4:123 لَـيْسَ بِاَمَانِيِّكُمْ وَلَاۤ اَمَانِىِّ اَهْلِ الْـكِتٰبِ‌ؕ مَنْ يَّعْمَلْ سُوْٓءًا يُّجْزَ بِهٖۙ وَ لَا يَجِدْ لَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا‏
لَـيْسَ இல்லை بِاَمَانِيِّكُمْ உங்கள் விருப்பங்களைக் கொண்டு وَلَاۤ இன்னும் இல்லை اَمَانِىِّ விருப்பங்கள் اَهْلِ الْـكِتٰبِ‌ؕ வேதக்காரர்களின் مَنْ எவன் يَّعْمَلْ செய்வான் سُوْٓءًا ஒரு தீமையை يُّجْزَ கூலி கொடுக்கப்படுவான் بِهٖۙ அதற்கு وَ لَا يَجِدْ இன்னும் பெறமாட்டான் لَهٗ தனக்கு مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ் وَلِيًّا பாதுகாவலரை وَّلَا نَصِيْرًا‏ இன்னும் உதவியாளரை
4:123. (முஃமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பிய படியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பிய படியோ நடந்து விடுவதில்லை - எவன் தீமை செய்கிறானோ, அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான்; இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காண மாட்டான்.
4:123. (நம்பிக்கையாளர்களே! மறுமையில்) உங்கள் விருப்பப்படியோ, வேதத்தையுடை யவர்களின் விருப்பப்படியோ (காரியம் நடப்பது) இல்லை. ஆயினும், எவன் பாவம் செய்கிறானோ அவன் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீருவான். அவன் அல்லாஹ்வையன்றி தனக்கு உதவி செய்பவரையோ அல்லது துணை புரிபவரையோ (அங்கு) காணமாட்டான்.
4:123. இறுதி விளைவு, நீங்கள் ஆசைப்படுவது போலவோ, வேதம் அருளப்பட்டவர்கள் ஆசைப்படுவது போலவோ ஏற்படப்போவதில்லை. எவன் தீமை செய்தாலும் அவன் அதற்குரிய விளைவை அடைவான். அல்லாஹ்வைத் தவிர தனக்கு வேறெந்த காப்பாளனையும், உதவியாளனையும் அவன் காணமாட்டான்.
4:123. (விசுவாசிகளே மறுமையில்) உங்கள் வீண் ஆசைப் படியோ வேதத்தையுடையோர் வீண் ஆசைப்படியோ (சுவனம் பிரவேசிப்பதென்பது) இல்லை, எவர் தீமை செய்கின்றாரோ அவர் அதற்குரிய தண்டனையைக் கொடுக்கப்படுவார், அவர் அல்லாஹ்வையன்றித் தனக்குப்பாதுகாவலனையோ அல்லது உதவி புரிவோரையோ (அங்கு)காணமாட்டார்.
4:124
4:124 وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ مِنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ وَلَا يُظْلَمُوْنَ نَقِيْرًا‏
وَمَنْ இன்னும் எவர் يَّعْمَلْ செய்வார் مِنَ இருந்து الصّٰلِحٰتِ நன்மைகள் مِنْ இருந்து ذَكَرٍ ஓர் ஆண் اَوْ அல்லது اُنْثٰى ஒரு பெண் وَهُوَ அவர் இருக்க مُؤْمِنٌ நம்பிக்கையாளராக فَاُولٰٓٮِٕكَ அவர்கள்தான் يَدْخُلُوْنَ நுழைவார்கள் الْجَـنَّةَ சொர்க்கத்தில் وَلَا يُظْلَمُوْنَ இன்னும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள் نَقِيْرًا‏ கீறல் அளவும்
4:124. ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள்; இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
4:124. ஆகவே, ஆணாயினும் பெண்ணாயினும் எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள்தான் சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் அற்ப அளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
4:124. மேலும் நற்செயல்கள் புரிவோர் அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பின், அவர்கள்தாம் சுவனத்தில் நுழைவார்கள். மேலும் இம்மியளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
4:124. இன்னும், ஆணாயினும் அல்லது பெண்ணாயினும், எவர் உண்மையாகவே விசுவாசங்கொண்டவராக இருக்க நற்கருமங்களைச் செய்வாராயின் - அத்தகையோர் சுவனத்தில் பிரவேசிப்பார்கள், அவர்கள் அற்ப அளவு அநீதியும் செய்யப்படமாட்டார்கள்.
4:125
4:125 وَمَنْ اَحْسَنُ دِيْنًا مِّمَّنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ وَّاتَّبَعَ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا‌ ؕ وَاتَّخَذَ اللّٰهُ اِبْرٰهِيْمَ خَلِيْلًا‏
وَمَنْ யார் اَحْسَنُ மிக அழகானவர் دِيْنًا மார்க்கத்தால் مِّمَّنْ எவரைவிட اَسْلَمَ பணியவைத்தார் وَجْهَهٗ தன் முகத்தை لِلّٰهِ அல்லாஹ்விற்கு وَهُوَ அவர் இருக்க مُحْسِنٌ நற்குணமுடையவராக وَّاتَّبَعَ இன்னும் பின்பற்றினார் مِلَّةَ மார்க்கத்தை اِبْرٰهِيْمَ இப்ராஹீமுடைய حَنِيْفًا‌ ؕ உறுதியுடையவராக وَاتَّخَذَ இன்னும் எடுத்துக்கொண்டான் اللّٰهُ அல்லாஹ் اِبْرٰهِيْمَ இப்ராஹீமை خَلِيْلًا‏ நண்பராக
4:125. மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.
4:125. எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் தன்முகத்தை பணியவைத்து இஸ்லாமில் உறுதியானவராக இருந்து, நன்மையும்செய்து, இப்றாஹீமுடைய (நேரான) மார்க்கத்தையும் பின்பற்றுகிறாரோ அவரைவிட அழகான மார்க்கத்தை உடையவர் யார்? அல்லாஹ் இப்றாஹீமை(த் தன்) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கிறான்.
4:125. மேலும், எவர் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து, தன்னுடைய நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு ஒருமனப்பட்டு இப்ராஹீமின் வழிமுறையையும் பின்பற்றினாரோ அவரை விடச் சிறந்த வாழ்க்கை நெறி உடையவர் யார்? இப்ராஹீமையோ அல்லாஹ் தன் உற்ற நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
4:125. எவர் அல்லாஹ்வுக்கு (முற்றிலும் வழிப்பட்டு) தன் முகத்தை ஒப்படைத்துவிட்டு, அவர் நன்மை செய்தவராக இருக்க (அசத்தியத்திலிருந்து நீங்கி)சத்தியத்தைச் சார்ந்த இப்ராஹீமுடைய மார்க்கத்தையும் பின்பற்றுகிறாரோ அவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்? மேலும் அல்லாஹ் இப்றாஹீமைத் (தன்னுடைய) உற்ற தோழராக எடுத்துக் கொண்டான்.
4:126
4:126 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ مُّحِيْـطًا‏
وَلِلّٰهِ அல்லாஹ்வுக்கு مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَمَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியிலுள்ளவை وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் مُّحِيْـطًا‏ சூழ்ந்தறிபவனாக
4:126. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
4:126. வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் அனைத்தையும் (தன் ஞானத்தைக் கொண்டு) சூழ்ந்தறிபவனாக இருக்கிறான்.
4:126. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது; மேலும் அல்லாஹ் யாவற்றையும் சூழ்ந்தறிந்தவனாக இருக்கின்றான்.
4:126. வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் சூழ்(ந்தறிப)வனாக இருக்கின்றான்.
4:127
4:127 وَيَسْتَفْتُوْنَكَ فِى النِّسَآءِ ‌ؕ قُلِ اللّٰهُ يُفْتِيْكُمْ فِيْهِنَّ ۙ وَمَا يُتْلٰى عَلَيْكُمْ فِى الْكِتٰبِ فِىْ يَتٰمَى النِّسَآءِ الّٰتِىْ لَا تُؤْتُوْنَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُوْنَ اَنْ تَـنْكِحُوْهُنَّ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الْوِلْدَانِ ۙ وَاَنْ تَقُوْمُوْا لِلْيَتٰمٰى بِالْقِسْطِ‌ ؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ كَانَ بِهٖ عَلِيْمًا‏
وَيَسْتَفْتُوْنَكَ மார்க்கத் தீர்ப்பு கோருகின்றனர்/உம்மிடம் فِى النِّسَآءِ ؕ பெண்களைப் பற்றி قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ் يُفْتِيْكُمْ தீர்ப்பளிக்கிறான் فِيْهِنَّ ۙ அவர்களைப் பற்றி وَمَا يُتْلٰى இன்னும் எது ஓதப்படுகிறதோ عَلَيْكُمْ உங்களுக்கு فِى الْكِتٰبِ வேதத்தில் فِىْ يَتٰمَى அனாதைகளில் النِّسَآءِ பெண்கள் الّٰتِىْ எவர்கள் لَا இல்லை تُؤْتُوْنَهُنَّ நீங்கள் அவர்களுக்கு கொடுப்பது مَا எது كُتِبَ விதிக்கப்பட்டது لَهُنَّ அவர்களுக்கு وَتَرْغَبُوْنَ விரும்புகிறீர்கள் اَنْ تَـنْكِحُو நீங்கள் மண முடிப்பது هُنَّ அவர்களை وَالْمُسْتَضْعَفِيْنَ பலவீனர்கள் مِنَ இருந்து الْوِلْدَانِ ۙ சிறுவர்கள் وَاَنْ تَقُوْمُوْا இன்னும் நீங்கள் நிற்பது لِلْيَتٰمٰى அனாதைகளுக்கு بِالْقِسْطِ‌ ؕ நீதத்தைக் கொண்டு وَمَا எது تَفْعَلُوْا செய்வீர்கள் مِنْ இருந்து خَيْرٍ நன்மை فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِهٖ அதை عَلِيْمًا‏ நன்கறிந்தவனாக
4:127. (நபியே! மக்கள்) உம்மிடம் பெண்கள் பற்றி (மார்க்கக் கட்டளைக்) கேட்கிறார்கள்; அதற்கு நீர், “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு தீர்ப்புக் கூறுவான்” என்று சொல்லும்; தவிர: வேதத்தில் உங்ளுக்கு ஓதிக்காண்பிக்கப்படுவது அநாதைப் பெண்கள் சம்பந்தமாக அவர்களுக்கு விதிக்கப்பட்டதை (மஹரை) நீங்கள் அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை நீங்கள் மணந்து கொள்ள விரும்பிக் கொண்டிருந்ததைப் பற்றியும்; குழந்தைகளில் பலவீனமானவர்களைப் பற்றியும், அநாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்பது பற்றியுமாகும்; ஆகவே, (அவர்களுக்கு) நன்மையாக நீங்கள் எதைச் செய்தாலும், அதை அல்லாஹ் நிச்சயமாக நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
4:127. (நபியே!) அவர்கள் உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கின்றார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்கு (அடுத்த வசனத்திலிருந்து) கட்டளையிடுகிறான். இதற்கு முன்னர் (பெண்களைப் பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டது அநாதைப் பெண்களைப் பற்றியதாகும். அவர்களுக்குக் குறிப்பிட்டுள்ள மஹரை நீங்கள் கொடுக்காமல் அவர்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதைப் பற்றியும் (அவர்களிலுள்ள) விவரமறியா குழந்தைகளைப் பற்றியும் (அதில் கூறி) ‘‘அநாதைகள் விஷயத்தில் நீங்கள் நீதமாக நடந்து கொள்ளுங்கள்'' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகவே, (அவர்களுக்கு) நீங்கள் என்ன நன்மை செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்தவனாக இருக்கிறான்.
4:127. பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்குமாறு அவர்கள் உம்மிடம் கோருகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்: “அவர்கள் விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்ற சட்டங்களையும் (நினைவுபடுத்துகின்றான்). அதாவது எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்பதில்லையோ, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதுமில்லையோ (அல்லது பேராசையின் காரணமாக நீங்களே அவர்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறீர்களோ) அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் மற்றும் பலவீனமான குழந்தைகள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவுபடுத்துகிறான்). மேலும், அநாதைகள் விஷயத்தில் நீதியைக் கடைப்பிடியுங்கள் என்றும் அல்லாஹ் உங்களுக்கு ஏவுரை வழங்குகின்றான். மேலும், நீங்கள் செய்யும் எந்த ஒரு நன்மையையும் திண்ணமாக அல்லாஹ் நன்கு அறிந்தே இருக்கின்றான்.
4:127. (நபியே!) உம்மிடம் அவர்கள் பெண்கள் பற்றிய மார்க்கத்தீர்ப்பைக் கேட்கின்றார்கள், அவர்கள் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்புக் கூறுவான் என்று நீர் கூறுவீராக! மேலும், (இதற்கு முன்னர் பெண்களைப்பற்றி) வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுவது எந்தப் பெண்களுக்கு அவர்களை நீங்கள் திருமணம் முடிக்க ஆசித்தவர்களாக இருக்க அவர்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்கமாட்டீர்களோ அத்தகைய அனாதைப் பெண்களைப் பற்றியதும், சிறார்களில் பலவீனமாக்கப்பட்டவர்கள் பற்றியதும், இன்னும் அனாதைகளுக்கு நீங்கள் நீதியை நிலைநிறுத்துவது பற்றியதுமாகும், இன்னும், (அவர்களுக்கு) நீங்கள் நன்மையில் எதைச் செய்கின்றீர்களோ அதனை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
4:128
4:128 وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْۢ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَاۤ اَنْ يُّصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا‌ ؕ وَالصُّلْحُ خَيْرٌ‌ ؕ وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ‌ ؕ وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏
وَاِنِ امْرَاَةٌ خَافَتْ ஒரு பெண் பயந்தால் مِنْۢ இருந்து بَعْلِهَا தனது கணவன் نُشُوْزًا வெறுப்பை اَوْ அல்லது اِعْرَاضًا புறக்கணிப்பை فَلَا جُنَاحَ குற்றமே இல்லை عَلَيْهِمَاۤ அவ்விருவர் மீது اَنْ يُّصْلِحَا அவ்விருவரும் சமாதானம் செய்வது بَيْنَهُمَا அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில் صُلْحًا‌ ؕ ஒரு சமாதான ஒப்பந்தத்தை وَالصُّلْحُ خَيْرٌ‌ ؕ சமாதானம்/சிறந்தது وَاُحْضِرَتِ அமைக்கப்பட்டுள்ளன الْاَنْفُسُ ஆன்மாக்கள் الشُّحَّ‌ ؕ கஞ்சத்தனம் மீது وَاِنْ تُحْسِنُوْا நீங்கள் நன்மைசெய்தால் وَتَتَّقُوْا இன்னும் நீங்கள் அஞ்சினால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் خَبِيْرًا‏ ஆழ்ந்தறிந்தவனாக
4:128. ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
4:128. எந்த ஒரு பெண்ணாவது தன் கணவன் (தனக்கு) கடுமையாக இடையூறளிப்பான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்களிருவரும் (சம்மதித்து) தங்களுக்குள் ஒரு சமாதான முடிவை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் மீது குற்றமில்லை. (எவ்விதத்திலும் இருவரும் சம்மதித்த) சமாதானமே மிக மேலானது. (இத்தகைய சந்தர்ப்பங்களில் ஏதும் பொருள் கொடுக்கும்படி நேரிட்டால் பொதுவாக) ஒவ்வொரு ஆத்மாவும் கஞ்சத்தனத்திற்கு உட்பட்டு விடுகிறது. ஆகவே, நீங்கள் (கஞ்சத்தனத்திற்கு உட்படாமல்) ஒவ்வொருவரும் மற்றவருக்கு நன்மை செய்பவராக இருந்து அல்லாஹ்வுக்கும் பயந்து நடந்து கொண்டால் (அது மிக நல்லது.) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
4:128. ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்து விடுவான் என்றோ அஞ்சினால் கணவன்மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை; எந்நிலையிலும் சமாதானம் செய்து கொள்வதே நலம் தரக்கூடியதாகும். மனித உள்ளங்கள் குறுகிய எண்ணத்திற்கும் உலோபித்தனத்திற்கும் (விரைவாக) உட்பட்டுவிடுகின்றன. ஆனால், நீங்கள் இஹ்ஸான் நன்முறையில் வாழ்ந்து, இறையச்சத்தோடு செயல்படுவீர்களானால் திண்ணமாக அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
4:128. இன்னும் ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பையோ அல்லது புறக்கணிப்பையோ பயந்தாளானால், அவர்களிவரும் தங்களிருவருக்கிடையே ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வதில் அவ்விருவர் மீதும் குற்றமில்லை, சமாதானமே மிக மேலானது, (பொதுவாக) மனங்கள் உலோபித்தனத்திற்கு உட்பட்டு விடுகின்றன, இன்னும் நீங்கள் (ஒவ்வொருவரும் மற்றவருக்கு) உபகாரியாயிருந்து (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்ந்து கொண்டவனாக இருக்கின்றான்.
4:129
4:129 وَلَنْ تَسْتَطِيْعُوْۤا اَنْ تَعْدِلُوْا بَيْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ‌ فَلَا تَمِيْلُوْا كُلَّ الْمَيْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ‌ ؕ وَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا‏
وَلَنْ تَسْتَطِيْعُوْۤا அறவே இயலமாட்டீர்கள் اَنْ تَعْدِلُوْا நீங்கள் நீதமாக நடப்பதற்கு بَيْنَ இடையில் النِّسَآءِ பெண்கள்,மனைவிகள் وَلَوْ حَرَصْتُمْ‌ நீங்கள் ஆசைப்பட்டாலும் فَلَا تَمِيْلُوْا ஆகவே சாய்ந்து விடாதீர்கள் كُلَّ الْمَيْلِ முற்றிலும் சாய்தல் فَتَذَرُو விட்டு விடுவீர்கள் هَا அவளை كَالْمُعَلَّقَةِ‌ ؕ தொங்கவிடப்பட்டவளைப் போன்று وَاِنْ تُصْلِحُوْا நீங்கள் சமாதானம் செய்து கொண்டால் وَتَتَّقُوْا இன்னும் அல்லாஹ்வை அஞ்சினால் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் كَانَ இருக்கிறான் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ பெரும் கருணையாளனாக
4:129. (முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
4:129. (நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள் (உங்கள்) மனைவிகளுக்கிடையில் அன்புகாட்டுவதில் நீதமாக நடக்க வேண்டுமென்று விரும்பியபோதிலும் (அது) உங்களால் சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கியவளாக விட்டுவிடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கருணை புரிபவனாக இருக்கிறான்.
4:129. மனைவியருக்கு இடையே முழுக்க முழுக்க நீதியாக நடந்துகொள்ள நீங்கள் விரும்பினாலும், அது உங்களால் முடியாது. எனவே, நீங்கள் (ஒரு மனைவியின் பக்கமே) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் விடப்பட்டவள் போல் ஒதுக்கிவிடாதீர்கள். (இதுவே இறைச்சட்டத்தின் நோக்கத்தை நிறைவு செய்யப் போதுமானதாகும்.) நீங்கள், உங்கள் நடத்தையைச் சீராக்கிக் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி வாழ்ந்தால் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றான்.
4:129. இன்னும், நீங்கள் (உங்கள்) மனைவியருக்கிடையில் எவ்வளவு விரும்பிய போதிலும் நீதமாக நடக்க நீங்கள் சக்திபெறவே மாட்டீர்கள், ஆனால், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து (மற்ற) அவளை (அந்தரத்தில்) தொங்கவிடப் பட்டவளைப்போல் விட்டுவிடாதீர்கள், இன்னும் நீங்கள் சமாதானமாக நடந்துகொண்டு (அல்லாஹ்வையும்) பயந்து கொண்டால் அப்போது நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் குற்றங்களை) மிக்க மன்னிப்பவனாக மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.
4:130
4:130 وَاِنْ يَّتَفَرَّقَا يُغْنِ اللّٰهُ كُلًّا مِّنْ سَعَتِهٖ‌ ؕ وَكَانَ اللّٰهُ وَاسِعًا حَكِيْمًا‏
وَاِنْ يَّتَفَرَّقَا அவ்விருவரும் பிரிந்து விட்டால் يُغْنِ நிறைவடையச் செய்வான் اللّٰهُ அல்லாஹ் كُلًّا ஒவ்வொருவரையும் مِّنْ سَعَتِهٖ‌ ؕ தன் கொடையினால் وَكَانَ இன்னும் இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் وَاسِعًا விசாலமானவனாக حَكِيْمًا‏ ஞானவானாக
4:130. (சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
4:130. (சமாதானத்துடன் சேர்ந்து வாழ முடியாமல்) அவ்விருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையைக் கொண்டு (ஒவ்வொருவரையும் மற்றவரிலிருந்து) முற்றிலும் தேவையற்றவராக ஆக்கிவிடுவான். (வழங்குவதில்) அல்லாஹ் மிக விசாலமானவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
4:130. ஆனால் கணவன் மனைவியரில் ஒருவர் மற்றவரை விட்டுப் பிரிந்து போவார்களானால், அல்லாஹ், தனது பரந்த ஆற்றலினால் அவர்களை ஒருவர் மற்றவரின் பக்கம் தேவையற்றவராய் ஆக்கிவிடுவான். அல்லாஹ் பரந்த ஆற்றலுடையவனும் அறிவார்ந்தவனுமாவான்.
4:130. மேலும் (சேர்ந்து வாழ முடியாமல்) அவ்விருவரும் பிரிந்து விட்டால் அல்லாஹ், தன் தாராளத்தினால் (அவர்களில்) ஒவ்வொருவரையும் முற்றிலும் தேவையற்றவராக ஆக்கி விடுவான், (கொடையளிப்பதில்) அல்லாஹ் மிக விசாலமானவானக தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
4:131
4:131 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ‌ؕ وَلَـقَدْ وَصَّيْنَا الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِيَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ‌ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَكَانَ اللّٰهُ غَنِيًّا حَمِيْدًا‏
وَلِلّٰهِ அல்லாஹ் விற்குரியனவே مَا فِى السَّمٰوٰتِ எவை/வானங்களில் وَمَا இன்னும் எவை فِى الْاَرْضِ ؕ பூமியில் وَلَـقَدْ திட்டவட்டமாக وَصَّيْنَا உபதேசித்தோம் الَّذِيْنَ எவர்களுக்கு اُوْتُوا கொடுக்கப்பட்டார்கள் الْكِتٰبَ வேதம் مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் وَاِيَّاكُمْ இன்னும் உங்களுக்கு اَنِ اتَّقُوا அஞ்சுங்கள் اللّٰهَ‌ ؕ அல்லாஹ்வை وَاِنْ تَكْفُرُوْا நீங்கள் நிராகரித்தால் فَاِنَّ لِلّٰهِ நிச்சயமாக அல்லாஹ்விற்கு مَا فِى السَّمٰوٰتِ எவை/வானங்களில் وَمَا இன்னும் எவை فِى الْاَرْضِ‌ؕ பூமியில் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் غَنِيًّا நிறைவானவனாக, மகா செல்வனாக حَمِيْدًا‏ புகழுக்குரியவனாக
4:131. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம். உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப்பட்டவர்களையும், உங்களையும் அல்லாஹ்வுக்கே பயந்து நடக்குமாறு (வஸிய்யத்து) உபதேசம் செய்தோம்; நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் (அவனுக்கு நஷ்டம் ஒன்றுமில்லை) - நிச்சயமாக வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எவர் தேவையும் அற்றவனாகவும், புகழுக்கு உரியவனாகவும் இருக்கின்றான்.
4:131. (ஏனென்றால்) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்குரியனவே! (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் ‘‘அல்லாஹ் ஒருவனையே பயப்படுங்கள்'' என்றே நல்லுபதேசம் செய்திருக்கிறோம். ஆகவே, (அவனுக்கு) நீங்கள் மாறுசெய்தால் (அதனால் அவனுக்கொன்றும் நஷ்டமில்லை.) நிச்சயமாக வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்குரியனவே. அல்லாஹ் தேவையற்றவனாக, (அனைவராலும்) புகழப்பட்டவனாக இருக்கிறான்.
4:131. வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் செயல்படுங்கள் என்றே உங்களுக்கு முன்னால் வேதம் வழங்கப்பட்டவர்களுக்கு நாம் அறிவுறுத்தியிருந்தோம். இப்போது உங்களுக்கும் (அதனையே அறிவுறுத்துகின்றோம்.) நீங்கள் நம்பவில்லையெனில் நம்பாதிருங்கள்! வானங்களிலுள்ள வையும், பூமியிலுள்ளவையும் திண்ணமாக அல்லாஹ்வுக்கே உரியன (என்பதை நினைவில் வையுங்கள்!) அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும், அனைத்துப் புகழுக்கும் உரியவனாகவும் இருக்கின்றான்.
4:131. மேலும், வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், இன்னும் உங்களுக்கும் அல்லாஹ்வையே பயந்து கொள்ளுங்கள் என்று நிச்சயமாக நாம் (நல்) உபதேசம் செய்தோம், நீங்கள் அவனை நிராகரித்து விட்டால் நிச்சயமாக, வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, அல்லாஹ் எவருடைய தேவையும் அற்றவனாக (யாவரின்) புகழுக்குரியவனாக இருக்கின்றான்.
4:132
4:132 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ ‌ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا‏
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே உரியன مَا எவை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَا فِى இன்னும் எவை الْاَرْضِ ؕ பூமியில் وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே وَكِيْلًا‏ பொறுப்பாளனாக
4:132. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் யாவும் அல்லாஹ்வுக்கே சொந்தம் - இன்னும், (உங்கள் எல்லாக் காரியங்களையும் பொறுப்பேற்றுக் கொள்வதில்) அல்லாஹ்வே போதுமானவன்.
4:132. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (இவற்றிலுள்ள எதைக் கொண்டும் உங்களுக்கு உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமான பொறுப்பாளனாக இருக்கிறான்.
4:132. ஆம்! வானங்கள் பூமியிலுள்ள அனைத்திற்கும் அல்லாஹ்வே உரிமையாளன் ஆவான். அவற்றின் பொறுப்புகளை ஏற்க அவனே போதுமானவன்!
4:132. வானங்களிலுள்ளவை மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன, (உங்களின் எல்லாக்காரியங்களையும்) பொறுப்பேற்றுக் கொள்வதில் அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.
4:133
4:133 اِنْ يَّشَاْ يُذْهِبْكُمْ اَيُّهَا النَّاسُ وَيَاْتِ بِاٰخَرِيْنَ‌ؕ وَكَانَ اللّٰهُ عَلٰى ذٰلِكَ قَدِيْرًا‏
اِنْ يَّشَاْ அவன் நாடினால் يُذْهِبْكُمْ போக்கி விடுவான்/உங்களை اَيُّهَا النَّاسُ மனிதர்களே وَيَاْتِ இன்னும் வருவான் بِاٰخَرِيْنَ‌ؕ மற்றவர்களைக் கொண்டு وَكَانَ இன்னும் இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى மீது ذٰلِكَ அது قَدِيْرًا‏ பேராற்றலுடையவனாக
4:133. மனிதர்களே! அவன் நாடினால், உங்களை அழித்துவிட்டு (உங்களுடைய இடத்தில்) வேறு மனிதர்களைக் கொண்டு வருவான்; இன்னும், அவ்வாறு செய்ய அல்லாஹ் பேராற்றல் உடையவன்.
4:133. மனிதர்களே! அவன் விரும்பினால் உங்களை அழித்து (உங்களுக்குப் பதிலாக) வேறு மனிதர்களைக் கொண்டுவந்து விடுவான். அல்லாஹ் இவ்வாறு செய்ய பேராற்றலுடையவனாகவே இருக்கிறான்.
4:133. மனிதர்களே, அவன் நினைத்தால் உங்களை அகற்றிவிட்டு (உங்களுக்குப் பகரமாக) மற்றவர்களைக் கொண்டு வருவான். இவ்வாறு செய்ய அல்லாஹ் முழு வலிமை பெற்றவனாக இருக்கின்றான்.
4:133. மனிதர்களே! அவன் நாடினால் உங்களை அழித்து (உங்கள் இடத்தில்) மற்றவர்களை கொண்டு வருவான், இன்னும் அல்லாஹ் இவ்வாறு செய்ய பேராற்றலுடையோனாகவே இருக்கின்றான்.
4:134
4:134 مَنْ كَانَ يُرِيْدُ ثَوَابَ الدُّنْيَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ ؕ وَكَانَ اللّٰهُ سَمِيْعًاۢ بَصِيْرًا‏
مَنْ எவர் كَانَ இருந்தார் يُرِيْدُ நாடுகிறார் ثَوَابَ பலனை الدُّنْيَا இவ்வுலகத்தின் فَعِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் ثَوَابُ பலன் الدُّنْيَا இவ்வுலகத்தின் وَالْاٰخِرَةِ‌ ؕ இன்னும் மறுமையின் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் سَمِيْعًاۢ நன்கு செவியுறுபவனாக بَصِيْرًا‏ உற்று நோக்குபவனாக
4:134. எவரேனும் இவ்வுலகின் பலனை(மட்டும்) அடைய விரும்பினால், “அல்லாஹ்விடம் இவ்வுலகப்பலனும், மறுவுலகப்பலனும் உள்ளன. அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.”
4:134. (நம்பிக்கையாளர்களே!) இம்மையின் பலனை மட்டும் எவன் விரும்புவான்? அல்லாஹ்விடத்திலோ இம்மை மற்றும் மறுமையின் பலன் இருக்கிறது. அல்லாஹ் (ஒவ்வொருவரின் பிரார்த்தனையையும்) செவியுறுபவனாக, (ஒவ்வொருவரின் உள்ளத்தையும்) உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
4:134. இம்மைக்குரிய பயனை மட்டும் விரும்புகின்றவர், அல்லாஹ்விடத்தில் இம்மை, மறுமை இரண்டிற்குரிய நற்பயன்களும் இருக்கின்றன என்பதனைத் தெரிந்து கொள்ளட்டும்! மேலும் அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
4:134. விசுவாசங்கொண்டோரே! எவர், இம்மையின் பலனை (மட்டும் அடைய) நாடுபவராக இருப்பின் (அவர் அறிந்து கொள்ளட்டும்) அல்லாஹ்விடத்திலோ, இம்மை இன்னும் மறுமையின் பலன் இருக்கின்றது, மேலும் அல்லாஹ் செவியேற்கிறவனாக, பார்க்கிறவனாக இருக்கின்றான்.
4:135
4:135 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌ ؕ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே كُوْنُوْا ஆகிவிடுங்கள் قَوَّامِيْنَ நிலைநிறுத்துபவர்களாக بِالْقِسْطِ நீதத்தை شُهَدَآءَ சாட்சி கூறுபவர்களாக لِلّٰهِ அல்லாஹ்விற்காக وَلَوْ இருப்பினும் عَلٰٓى எதிராக اَنْفُسِكُمْ உங்களுக்கு اَوِ அல்லது الْوَالِدَيْنِ பெற்றோருக்கு وَالْاَقْرَبِيْنَ‌ ؕ இன்னும் உறவினர்களுக்கு اِنْ يَّكُنْ அவர் இருந்தால் غَنِيًّا ஒரு செல்வந்தனாக اَوْ அல்லது فَقِيْرًا ஓர் ஏழையாக فَاللّٰهُ அல்லாஹ் اَوْلٰى மிக ஏற்றமானவன் بِهِمَا‌ அவ்விருவருக்கும் فَلَا تَتَّبِعُوا பின்பற்றாதீர்கள் الْهَوٰٓى ஆசைகளை اَنْ تَعْدِلُوْا ۚ நீங்கள் நீதி செலுத்துவதில் وَاِنْ تَلْوٗۤا நீங்கள் மாற்றினால் اَوْ அல்லது تُعْرِضُوْا புறக்கணித்தால் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கிறான் بِمَا எதை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் خَبِيْرًا‏ ஆழ்ந்தறிந்தவனாக
4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
4:135. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் தாய், தந்தைக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தபோதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராயினும் ஏழையாயினும் (உண்மையையே கூறுங்கள். ஏனென்றால்) அல்லாஹ் அவ்விருவருக்குமே (உதவி செய்ய) மிகத் தகுதியானவன். ஆகவே, நீங்கள் (உங்கள்) ஆசை (அபிலாஷை)களைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்! (பரிவு அல்லது குரோதத்தை முன்னிட்டு) நீங்கள் தவறாக (சாட்சி) கூறினாலும் அல்லது (சாட்சி) கூற மறுத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் (இத்தவறான) செயலை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
4:135. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவராகவும் அல்லாஹ்வுக்காக சான்று வழங்குபவராகவும் திகழுங்கள்! (நீங்கள் செலுத்தும் நீதியும், வழங்கும் சாட்சியும்) உங்களுக்கோ உங்கள் பெற்றோருக்கோ நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! (நீங்கள் யாருக்காக சாட்சி சொல்கின்றீர்களோ) அவர் செல்வந்தராகவோ ஏழையாகவோ இருந்தாலும் சரியே! அல்லாஹ் அவர்களின் நலனில் உங்களைவிட அதிக அக்கறை உள்ளவனாக இருக்கின்றான். எனவே, மன இச்சையைப் பின்பற்றி நீதி தவறி விடாதீர்கள். நீங்கள் உண்மைக்குப் புறம்பாக சாட்சி சொன்னாலோ, சாட்சியளிக்காமல் விலகிச் சென்றாலோ திண்ணமாக அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
4:135. விசுவாசங்கொண்டோரே! (நீங்கள் சாட்சி கூறினால், அது உங்களுக்கோ, அல்லது உங்கள் பெற்றோருக்கோ, அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்த போதிலும், நீதியை நிலைநிறுத்தியவர்களாக அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள், (சாட்சி கூறப்படும்) அவர் பணக்காரராக இருந்தாலும் சரி, அல்லது ஏழையாக இருந்தாலும் சரி (உண்மையையே கூறுங்கள்.) அல்லாஹ் அவ்விருவருக்கும் (அவர்களைக் காப்பாற்றுவதற்கு) மிக உரியவன், இன்னும், நீங்கள் நியாயம் வழங்குவதில் (உங்கள் மனோ) இச்சையைப் பின்பற்றாதீர்கள், நீங்கள் (சாட்சியத்தை) மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறாது) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவனாக இருக்கின்றான்.
4:136
4:136 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًاۢ بَعِيْدًا‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرَسُوْلِهٖ இன்னும் அவனின் தூதரை وَالْكِتٰبِ இன்னும் வேதத்தை الَّذِىْ எது نَزَّلَ இறக்கினான் عَلٰى மீது رَسُوْلِهٖ தன் தூதர் وَالْكِتٰبِ இன்னும் வேதத்தை الَّذِىْۤ எது اَنْزَلَ இறக்கினான் مِنْ قَبْلُ‌ؕ முன்னர் وَمَنْ எவர் يَّكْفُرْ நிராகரிப்பார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَلٰٓٮِٕكَتِهٖ இன்னும் அவனின் வானவர்களை وَكُتُبِهٖ இன்னும் அவனின் வேதங்களை وَرُسُلِهٖ இன்னும் அவனின் தூதர்களை وَالْيَوْمِ இன்னும் நாளை الْاٰخِرِ மறுமை فَقَدْ திட்டமாக ضَلَّ வழிகெட்டார் ضَلٰلًاۢ வழிகேடாக بَعِيْدًا‏ தூரமானது
4:136. முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார்.
4:136. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்தூதர் மீது அருளிய இவ்வேதத்தையும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கிறானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில்தான் செல்கிறான்.
4:136. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும், அவன் தன்னுடைய தூதர் மீது இறக்கி அருளிய வேதத்தின் மீதும், இதற்கு முன்னால் அவன் இறக்கி வைத்த வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், மறுமைநாளையும் மறுக்கின்றானோ அவன் வழி கேட்டிலே உழன்று வெகுதூரம் சென்றுவிட்டான்.
4:136. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் அவன் தன்னுடைய (இத்)தூதர் மீது இறக்கிவைத்த இவ்வேதத்தையும் (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதங்களையும் விசுவாசியுங்கள், இன்னும் எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நிராகரிக்கின்றாரோ, நிச்சயமாக அவர் மிக தூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டார்.
4:137
4:137 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ يَكُنِ اللّٰهُ لِيَـغْفِرَ لَهُمْ وَلَا لِيَـهْدِيَهُمْ سَبِيْلًا ؕ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் ثُمَّ பிறகு كَفَرُوْا நிராகரித்தனர் ثُمَّ பிறகு اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் ثُمَّ பிறகு كَفَرُوْا நிராகரித்தனர் ثُمَّ பிறகு ازْدَادُوْا அதிகப்படுத்தினார்கள் كُفْرًا நிராகரிப்பை لَّمْ يَكُنِ இருக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لِيَـغْفِرَ அவன் மன்னிப்பதற்கு لَهُمْ அவர்களை وَلَا இன்னும் இல்லை لِيَـهْدِيَهُمْ நேர்வழிகாட்டுவதற்கு/அவர்களை سَبِيْلًا ؕ‏ ஒரு வழியை
4:137. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை; மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை.
4:137. எவர்கள், நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்து, பின்னர் நம்பிக்கை கொண்டு (அதன்) பின்னரும் நிராகரித்து (அந்த) நிராகரிப்பையே மென்மேலும் அதிகரிக்கிறார்களோ அவர்(களின் குற்றங்)களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பதில்லை. அன்றி, (அவர்களின் தீயசெயல்களின் காரணமாக) அவர்களை நேரான பாதையில் செலுத்தவுமாட்டான்.
4:137. எவர்கள் நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரித்தார்களோ, மறுமுறையும் நம்பிக்கை கொண்டு அதற்குப் பின்பும் நிராகரித்தார்களோ பிறகு தம் நிராகரிப்பில் தீவிரமாக மூழ்கிக்கொன்டே சென்றார்களோ அத்தகையோரை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்; மேலும், அவர்களுக்கு நேர்வழி காட்டவும் மாட்டான்.
4:137. நிச்சயமாக விசுவாசங்கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் அவர்கள் விசுவாசங்கொண்டு, பின்னரும், நிராகரித்து, பின்னரும் நிராகரிப்பை அதிகப்படுத்திக் கொண்டனரே அத்தகையோர் - அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை; இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டுபவனாகவும், இல்லை.
4:138
4:138 بَشِّرِ الْمُنٰفِقِيْنَ بِاَنَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًاۙ‏
بَشِّرِ நற்செய்தி கூறுவீராக الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களுக்கு بِاَنَّ நிச்சயமாக/என்று لَهُمْ அவர்களுக்கு عَذَابًا வேதனை اَلِيْمًاۙ‏ துன்புறுத்துகின்ற
4:138. (நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு “நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு” என்று நன்மாராயங் கூறுவீராக!
4:138. (நபியே!) ‘‘நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக உண்டு'' என்று நீர் அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
4:138. நயவஞ்சகர்களுக்கு திண்ணமாக துன்புறுத்தும் தண்டனை இருக்கின்றது எனும் நற்செய்தியை அறிவிப்பீராக!
4:138. (நபியே! வேஷதாரிகளாகிய) முனாஃபிக்குகளுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனை உண்டென்று நீர் அவர்களுக்கு நன்மாராயங் கூறுவீராக.
4:139
4:139 ۨالَّذِيْنَ يَتَّخِذُوْنَ الْـكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ ؕ اَيَبْتَغُوْنَ عِنْدَهُمُ الْعِزَّةَ فَاِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِيْعًا ؕ‏
ۨالَّذِيْنَ எவர்கள் يَتَّخِذُوْنَ எடுத்துக் கொள்கிறார்கள் الْـكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களை اَوْلِيَآءَ பாதுகாவலர்களாக مِنْ دُوْنِ அன்றி الْمُؤْمِنِيْنَ‌ ؕ நம்பிக்கையாளர்களை اَيَبْتَغُوْنَ தேடுகின்றார்களா? عِنْدَهُمُ அவர்களிடம் الْعِزَّةَ கண்ணியத்தை فَاِنَّ الْعِزَّةَ நிச்சயமாக கண்ணியம் لِلّٰهِ அல்லாஹ்வுக்குரியதே جَمِيْعًا ؕ‏ அனைத்தும்
4:139. இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.
4:139. இவர்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களையே (தங்கள்) நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கண்ணியத்தை (பெற) விரும்புகிறார்களா? நிச்சயமாக கண்ணியங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அவர்களுக்குரியவை அல்ல.)
4:139. இவர்கள் இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு நிராகரிப்போரைத் தம் நண்பர்களாக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்நிராகரிப்போரிடம் கண்ணியத்தை தேடிச் செல்கின்றார்களா? உண்மையில் எல்லாவிதமான கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
4:139. அத்தகையோர் விசுவாசிகளைத் தவிர்த்து நிராகரிப்போரையே (தங்கள்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்கிறார்கள், இவர்கள், அவர்களிடத்தில் கண்ணியத்தை அடையத் தேடுகிறார்களா? (அது அவர்களுக்கில்லை, ஏனெனில்) நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
4:140
4:140 وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْـكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُبِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖۤ‌ ‌ ۖ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ جَامِعُ‌‌‌الْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِىْ جَهَـنَّمَ جَمِيْعَاۨ ۙ‏
وَقَدْ نَزَّلَ இறக்கி விட்டான் عَلَيْكُمْ உங்கள் மீது فِى الْـكِتٰبِ வேதத்தில் اَنْ என்று اِذَا سَمِعْتُمْ நீங்கள் செவியுற்றால் اٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் يُكْفَرُ நிராகரிக்கப்படுகிறது بِهَا அவற்றை وَيُسْتَهْزَا இன்னும் பரிகசிக்கப்படுகிறது بِهَا அவற்றை فَلَا تَقْعُدُوْا உட்காராதீர்கள் مَعَهُمْ அவர்களுடன் حَتّٰى வரை يَخُوْضُوْا ஈடுபடுவார்கள் فِىْ حَدِيْثٍ பேச்சில் غَيْرِهٖۤ‌ ۖ அது அல்லாத வேறு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اِذًا அப்போது مِّثْلُهُمْ‌ؕ அவர்களைப் போன்று اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் جَامِع ஒன்று சேர்ப்பான் ‌الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களை وَالْكٰفِرِيْنَ இன்னும் நிராகரிப்பவர்களை فِىْ جَهَـنَّمَ நரகத்தில் جَمِيْعَاۨ ۙ‏ அனைவரையும்
4:140. (முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.
4:140. நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்: அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரை நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்). நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான்.
4:140. எங்காவது (சிலரால்) அல்லாஹ்வின் திருவசனங்கள் மறுத்துரைக்கப்படுவதையும் அவை ஏளனம் செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால், அவர்கள் வேறு பேச்சில் ஈடுபடும் வரை (அங்கு) அவர்களுடன் நீங்கள் உட்காராதீர்கள் என்று (முன்பே) இவ்வேதத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். இனி அவ்வாறு செய்வீர்களாயின் நீங்களும் அவர்களைப் போன்றவராவீர்கள். உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்; அல்லாஹ் நயவஞ்சகர்களையும், நிராகரிப்பவர்களையும் நரகத்தில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றான்.
4:140. மேலும், அல்லாஹ்வுடைய வசனங்களை – அவற்றை நிராகரிக்கப்படுவதையோ-அல்லது பரிகசிக்கப்படுவதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம் என நிச்சயமாக அல்லாஹ்வாகிய அவன் (இவ்)வேதத்தில் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கிறான், (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்), நிச்சயமாக அல்லாஹ் (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் இன்னும் நிராகரிப்போர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடக்கூடியவன்.
4:141
4:141 الَّذِيْنَ يَتَرَ بَّصُوْنَ بِكُمْ‌ ۚ فَاِنْ كَانَ لَـكُمْ فَتْحٌ مِّنَ اللّٰهِ قَالُـوْۤا اَلَمْ نَـكُنْ مَّعَكُمْ ‌ ۖ وَاِنْ كَانَ لِلْكٰفِرِيْنَ نَصِيْبٌۙ قَالُـوْۤا اَلَمْ نَسْتَحْوِذْ عَلَيْكُمْ وَنَمْنَعْكُمْ مِّنَ الْمُؤْمِنِيْنَ‌ ؕ فَاللّٰهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ ‌ؕ وَلَنْ يَّجْعَلَ اللّٰهُ لِلْكٰفِرِيْنَ عَلَى الْمُؤْمِنِيْنَ سَبِيْلًا‏
الَّذِيْنَ எவர்கள் يَتَرَ بَّصُوْنَ எதிர்பார்க்கின்றனர் بِكُمْ‌ ۚ உங்களுக்கு فَاِنْ كَانَ இருந்தால் لَـكُمْ உங்களுக்கு فَتْحٌ ஒரு வெற்றி مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து قَالُـوْۤا கூறினர் اَلَمْ نَـكُنْ நாங்களும் இருக்க வில்லையா? مَّعَكُمْ ۖ உங்களுடன் وَاِنْ كَانَ இருந்தால் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு نَصِيْبٌۙ ஓர் அளவு قَالُـوْۤا கூறினர் اَلَمْ نَسْتَحْوِذْ நாங்கள் வெற்றி கொள்ளவில்லையே عَلَيْكُمْ உங்கள் மீது وَنَمْنَعْكُمْ இன்னும் உங்களைப் பாதுகாக்க(வில்லையா) مِّنَ இருந்து الْمُؤْمِنِيْنَ‌ ؕ நம்பிக்கையாளர்கள் فَاللّٰهُ அல்லாஹ் يَحْكُمُ தீர்ப்பளிப்பான் بَيْنَكُمْ உங்களுக்கிடையில் يَوْمَ الْقِيٰمَةِ ؕ மறுமை நாளில் وَلَنْ يَّجْعَلَ ஆக்கவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَلَى மீது الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்கள் سَبِيْلًا‏ ஒரு வழியை
4:141. (இந்நயவஞ்சகர்கள்) உங்களை எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர்; அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், (அவர்கள் உங்களிடம் வந்து) “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுகின்றனர்; மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று: அவர்களுடன் சேர்ந்து) “உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா?” என்று கூறுகின்றனர்; எனவே அல்லாஹ் உங்களுக்கும் (அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான்; மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்.
4:141. (நயவஞ்சகர்களாகிய) இவர்கள் உங்களைக் கவனித்த வண்ணம் இருக்கின்றனர். அல்லாஹ்வி(ன் உதவியி)னால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால் (உங்களிடம் வந்து) நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர். நிராகரிப்பவர்களுக்கு ஏதும் வெற்றி கிடைத்துவிட்டால் (அவர்களிடம் சென்று) ‘‘நாங்கள் (நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவி புரிந்து) உங்களை வெற்றி கொள்ளக் கூடுமாயிருந்தும் நம்பிக்கைகொண்ட அவர்களிடமிருந்து நாம் உங்களைப் பாதுகாக்கவில்லையா?'' என்று கூறுகின்றனர். உங்களுக்கும் அ(ந்நய)வ(ஞ்சக)ர்களுக்கும் இடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை வெற்றிகொள்ள அல்லாஹ் ஒரு வழியையும் வைக்கமாட்டான்.
4:141. இந்நயவஞ்சகர்கள் உங்களுக்கு என்ன நேரப் போகிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு வெற்றி கிட்டினால், “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறுவார்கள். நிராகரிப்போரின் கை ஓங்கியிருந்தால், “உங்களுக்கு எதிராகப் போரிட நாங்கள் சக்தி பெற்றிருக்கவில்லையா? (இருந்தும்) இறை நம்பிக்கையாளரிடமிருந்து நாங்கள் உங்களைக் காப்பாற்றவில்லையா?” என்று (அவர்களிடம்) கூறுவார்கள். உங்களுக்கும் அவர்களுக்குமிடையே இதைக் குறித்து மறுமைநாளில் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். (அத்தீர்ப்பில்) இறைநம்பிக்கையாளர்களுக்கு எதிராக, நிராகரிப்பவர்கள் மேலோங்க எவ்வழியும் அல்லாஹ் ஒரு போதும் வைத்திடமாட்டான்.
4:141. (வேஷதாரிகளாகிய) இத்தகையோர் - உங்களைப்பற்றி எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர், அல்லாஹ்வின் உதவியினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர், நிராகரிப்போருக்கு பங்கேதும் கிடைத்துவிட்டால் “நாங்கள் உங்களை வெற்றி கொள்ளக் கூடிய நிலையிலிருந்தும், விசுவாசங் கொண்ட அவர்களிடமிருந்து நாங்கள் உங்களைத் தடுக்கவில்லையா?” என்று கூறுகின்றனர், ஆகவே, உங்களுக்கிடையில் அல்லாஹ் மறுமைநாளில் தீர்ப்பளிப்பான், இன்னும், விசுவாசிகளுக்கு எதிராக அந்நிராகரிப்பவர்களுக்கு அல்லாஹ் யாதொரு வழியையும் ஆக்கவே மாட்டான்.
4:142
4:142 اِنَّ الْمُنٰفِقِيْنَ يُخٰدِعُوْنَ اللّٰهَ وَهُوَ خَادِعُهُمْ‌ ۚ وَاِذَا قَامُوْۤا اِلَى الصَّلٰوةِ قَامُوْا كُسَالٰى ۙ يُرَآءُوْنَ النَّاسَ وَلَا يَذْكُرُوْنَ اللّٰهَ اِلَّا قَلِيْلًا ۙ‏
اِنَّ நிச்சயமாக الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்கள் يُخٰدِعُوْنَ வஞ்சிக்கின்றனர் اللّٰهَ அல்லாஹ்வை وَهُوَ அவன் خَادِعُوْهُمْ‌ ۚ வஞ்சிப்பவன்/அவர்களை وَاِذَا قَامُوْۤا அவர்கள் நின்றால் اِلَى الصَّلٰوةِ தொழுகைக்கு قَامُوْا நிற்கின்றனர் كُسَالٰى ۙ சோம்பேறிகளாக يُرَآءُوْنَ காண்பிக்கின்றனர் النَّاسَ மனிதர்களுக்கு وَلَا يَذْكُرُوْنَ நினைவு கூரமாட்டார்கள் اللّٰهَ அல்லாஹ்வை اِلَّا தவிர قَلِيْلًا ۙ‏ குறைவாகவே
4:142. நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
4:142. நிச்சயமாக (நிராகரிக்கும்) இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக் கருது)கின்றனர். எனினும், அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகிறான். அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கிறார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே தவிர அல்லாஹ்வை தியானிப்பதில்லை.
4:142. இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகின்றார்கள். உண்மையில் அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல்பட்டுக் கொண்டே நிற்கிறார்கள். மக்களுக்குக் காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள். இன்னும், அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவுகூருகிறார்கள்.
4:142. நிச்சயமாக (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் அல்லாஹ்வை வஞ்சிக்க கருதுகின்றனர், இன்னும், அவனோ அவர்களை வஞ்சிக்க்ககூடியவனாக இருக்கின்றான், இன்னும், அவர்கள் தொழுகைக்காகத் தயாரானால் சோம்பேறிகளாகவே நிற்கிறார்கள், மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கின்றார்கள், இன்னும், அவர்கள் வெகு சொற்பமாகத் தவிர அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
4:143
4:143 مُّذَبْذَبِيْنَ بَيْنَ ‌ ۖ ذٰ لِكَ لَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ وَلَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ‌ ؕ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا‏
مُّذَبْذَبِيْنَ தடுமாறியவர்களாக بَيْنَ ۖ இடையில் ذٰ لِكَ அதற்கு لَاۤ இல்லை اِلٰى هٰٓؤُلَاۤءِ இவர்களுடன் وَلَاۤ இல்லை اِلٰى உடன் هٰٓؤُلَاۤءِ‌ ؕ இவர்கள் وَمَنْ எவரை يُّضْلِلِ வழிகெடுப்பான் اللّٰهُ அல்லாஹ் فَلَنْ تَجِدَ அறவே பெறமாட்டீர் لَهٗ அவருக்கு سَبِيْلًا‏ ஒரு வழியை
4:143. இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை; இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்; அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்.
4:143. இவர்கள் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களுடனுமில்லை. (வஞ்சகர்களாகிய) இவர்களுடனுமில்லை. மத்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எவர்களை அல்லாஹ் வழிதவறவிட்டு விட்டானோ அவர்களுக்கு நீர் ஒரு வழியையும் காணமாட்டீர்.
4:143. (முழுமையாக இவர்களோடுமில்லாமல், அவர்களோடுமில்லாமல்), இறைநம்பிக்கைக்கும் நிராகரிப்புக்கும் இடையில் தடுமாறி நிற்கிறார்கள். அல்லாஹ் எவனை வழிகெடுக்கின்றானோ அவனை (நேர்வழிப் படுத்த) வேறு எந்த வழிவகையும் நீர் காணமாட்டீர்.
4:143. அ(ந்த முனாஃபிக்குகள் இறை நிராகரிப்பு, விசுவாசம் ஆகிய)வற்றிற்கு மத்தியில் தத்தளித்தவர்களாக இருக்கின்றனர். (இவர்கள் மூமின்களாகிய) அவர்களுடனுமில்லை; (காஃபிர்களாகிய) இவர்களுடனுமில்லை. இன்னும் அல்லாஹ் எவரை வழிதவறவிட்டுவிடுகிறானோ அவருக்கு(நபியே!) நீர் யாதொரு வழியைக் காணவேமாட்டீர்
4:144
4:144 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوا الْكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ ؕ اَ تُرِيْدُوْنَ اَنْ تَجْعَلُوْا لِلّٰهِ عَلَيْكُمْ سُلْطٰنًا مُّبِيْنًا‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَتَّخِذُوا ஆக்காதீர்கள் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களை اَوْلِيَآءَ பொறுப்பாளர்களாக مِنْ دُوْنِ அன்றி الْمُؤْمِنِيْنَ‌ ؕ நம்பிக்கையாளர்கள் اَ تُرِيْدُوْنَ நாடுகிறீர்களா? اَنْ تَجْعَلُوْا நீங்கள் ஆக்குவது لِلّٰهِ அல்லாஹ்விற்கு عَلَيْكُمْ உங்களுக்கு எதிராக سُلْطٰنًا ஒரு சான்றை مُّبِيْنًا‏ தெளிவானது
4:144. முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?
4:144. நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களையன்றி நிராகரிப்பவர்களை (உங்களுக்குப்) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (இதன் மூலம் உங்களைத் தண்டிக்க) அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான அத்தாட்சியை ஏற்படுத்திவிட நீங்கள் விரும்புகிறீர்களா?
4:144. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு நிராகரிப்போரை உங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான ஆதாரத்தை நீங்களே அல்லாஹ்விடம் கொடுத்திட விரும்புகின்றீர்களா?
4:144. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் விசுவாசிகளையல்லாமல், நிராகரிப்போரை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள், (இதன் மூலம் உங்களுக்கெதிராக அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான சான்றை ஏற்படுத்திவிட நீங்கள் நாடுகின்றீர்களா?
4:145
4:145 اِنَّ الْمُنٰفِقِيْنَ فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ‌ ۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيْرًا ۙ‏
اِنَّ நிச்சயமாக الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்கள் فِى الدَّرْكِ அடுக்கில் الْاَسْفَلِ மிகக் கீழ் مِنَ النَّارِ‌ ۚ நரகத்தின் وَلَنْ تَجِدَ காணமாட்டீர் لَهُمْ அவர்களுக்கு نَصِيْرًا ۙ‏ ஓர் உதவியாளரை
4:145. நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர்.
4:145. நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்ப்பாகத்தில்தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீர் காணமாட்டீர்.
4:145. திண்ணமாக, நயவஞ்சகர்கள் நரகத்தின் மிக அடித்தட்டிற்கே செல்வார்கள். மேலும், அவர்களுக்கு உதவி செய்வோர் எவரையும் நீர் காணமாட்டீர்.
4:145. நிச்சயமாக (இவ்வேஷதாரிகளாகிய) முனாஃபிக்குகள் நரகத்தின் மிகவும் கீழான அடித்தளத்தில் இருப்பார்கள், இன்னும் (அங்கு) அவர்களுக்கு உதவியாளரை நீர் காணவே மாட்டீர்.
4:146
4:146 اِلَّا الَّذِيْنَ تَابُوْا وَاَصْلَحُوْا وَاعْتَصَمُوْا بِاللّٰهِ وَاَخْلَصُوْا دِيْنَهُمْ لِلّٰهِ فَاُولٰٓٮِٕكَ مَعَ الْمُؤْمِنِيْنَ‌ ؕ وَسَوْفَ يُـؤْتِ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ اَجْرًا عَظِيْمًا‏
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் تَابُوْا திருந்தி பாவமன்னிப்புக் கோரினார் وَاَصْلَحُوْا இன்னும் சீர்திருத்தினர் وَاعْتَصَمُوْا இன்னும் பற்றிப் பிடித்தனர் بِاللّٰهِ அல்லாஹ்வை وَاَخْلَصُوْا இன்னும் தூய்மைப்படுத்தினர் دِيْنَهُمْ தங்கள் வழிபாட்டை لِلّٰهِ அல்லாஹ்விற்கு فَاُولٰٓٮِٕكَ அவர்கள் مَعَ உடன் الْمُؤْمِنِيْنَ‌ ؕ நம்பிக்கையாளர்கள் وَسَوْفَ يُـؤْتِ கொடுப்பான் اللّٰهُ அல்லாஹ் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு اَجْرًا கூலியை عَظِيْمًا‏ மகத்தானது
4:146. யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்; மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.
4:146. எனினும் எவர்கள் (தங்கள் பாவத்திற்காக கைசேதப்பட்டு அதிலிருந்து) விலகி, நற்செயல்களையும் செய்து, அல்லாஹ்வை (அவனுடைய கட்டளைகளை) உறுதியாகப் பிடித்துக் கொண்டு, தங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகக் கலப்பற்றதாகவும் ஆக்கி வைக்கிறார்களோ அவர்கள் உண்மை நம்பிக்கையாளர்களுடன்தான் (நேசமாக) இருப்பார்கள். உண்மை நம்பிக்கையாளர்களுக்கு (மறுமையில்) அல்லாஹ் மகத்தான (நற்)கூலியை அளிப்பான்.
4:146. ஆயினும், (இவர்களில்) யார் பாவமன்னிப்புக் கோருபவராக விளங்கி, தம் செயல்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ, மேலும், அல்லாஹ்வின் வேதத்தை இறுகப் பற்றிக்கொண்டு தமது தீனை நெறியை அல்லாஹ்வுக்கே உரித்தானதாக்கிக் கொள்கின்றார்களோ, அத்தகையோர் இறைநம்பிக்கையாளர்களுடன் இருப்பர். மேலும், இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை விரைவில் வழங்குவான்.
4:146. (ஆனால் அவர்களில்) தங்கள் பாவத்திற்காகப் பச்சாதாபப்பட்டு (அதிலிருந்து விலகி தங்கள் செயல்களை) சீர்திருந்தி அல்லாஹ்வை (அவனுடைய வேதத்தை) உறுதியாகப் பிடித்துக்கொண்டு தங்கள் மார்க்கத்தை (-வணக்கத்தை) அல்லாஹ்வுக்காகக் கலப்பற்றதாக்கிக் கொள்கின்றார்களே அத்தகையோர் தவிர, அவர்கள் விசுவாசிகளுடன் (மறுமையில்) இருப்பார்கள், இத்தகைய விசுவாசிகளுக்கு அல்லாஹ் மகத்தான (நற்)கூலியை வழங்குவான்.
4:147
4:147 مَا يَفْعَلُ اللّٰهُ بِعَذَابِكُمْ اِنْ شَكَرْتُمْ وَاٰمَنْتُمْ‌ ؕ وَكَانَ اللّٰهُ شَاكِرًا عَلِيْمًا‏
مَا என்ன? يَفْعَلُ செய்வான் اللّٰهُ அல்லாஹ் بِعَذَابِكُمْ உங்களை வேதனை செய்வது கொண்டு اِنْ شَكَرْتُمْ நீங்கள் நன்றி செலுத்தினால் وَاٰمَنْتُمْ‌ ؕ இன்னும் நீங்கள் நம்பிக்கை கொண்டால் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் شَاكِرًا நன்றியாளனாக عَلِيْمًا‏ நன்கறிந்தவனாக
4:147. நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்திக் கொண்டும், (அவன் மீது) ஈமான் கொண்டும் இருந்தால்; உங்களை வேதனை செய்வதால் அல்லாஹ் என்ன இலாபம் அடையப் போகிறான்? அல்லாஹ் நன்றியறிவோனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் இருக்கிறான்.
4:147. நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடையப்போகிறான்? அல்லாஹ்வோ (நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும் கூலிகொடுப்பவனாக, யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
4:147. நீங்கள் நன்றி செலுத்துபவர்களாய் இருந்து இறைநம்பிக்கையின் வழியில் நடப்பீர்களாயின் உங்களை ஏன் அல்லாஹ் தண்டிக்கப் போகின்றான்? மேலும், அல்லாஹ் நன்றியை மதிப்பவனாகவும், யாவையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
4:147. நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக்கொண்டும் (அவனை) விசுவாசம் கொண்டுமிருப்பின் உங்களை வேதனை செய்து அவன் என்ன செய்யப்போகிறான்? இன்னும் அல்லாஹ்வோ நன்றி பாராட்டுகிறவனாக, யாவையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
4:148
4:148 لَا يُحِبُّ اللّٰهُ الْجَــهْرَ بِالسُّوْٓءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ‌ؕ وَكَانَ اللّٰهُ سَمِيْعًا عَلِيْمًا‏
لَا يُحِبُّ விரும்ப மாட்டான் اللّٰهُ அல்லாஹ் الْجَــهْرَ பகிரங்கப்படுத்தி பேசுவதை بِالسُّوْٓءِ தீமையை مِنَ الْقَوْلِ பேச்சில் اِلَّا தவிர مَنْ எவர் ظُلِمَ‌ؕ அநீதி இழைக்கப்பட்டார் وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் سَمِيْعًا நன்குசெவியுறுபவனாக عَلِيْمًا‏ நன்கறிபவனாக
4:148. அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
4:148. அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர (மற்றெவரும் யாரைப் பற்றியும்) பகிரங்கமாகக் (கூச்சலிட்டுக்) குற்றம் கூறுவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ் செவியுறுபவனாக நன்கறிபவனாக, இருக்கிறான்.
4:148. அநீதி இழைக்கப்பட்டவனைத் தவிர வேறு யாரும் தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேசுவதை அல்லாஹ் விரும்புவதில்லை. மேலும், அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
4:148. அநீதமிழைக்கப்பட்டவரைத் தவிர வார்த்தையில் தீயதை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பமாட்டான், அல்லாஹ் (யாவையும்) செவியேற்கிறவனாக நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
4:149
4:149 اِنْ تُبْدُوْا خَيْرًا اَوْ تُخْفُوْهُ اَوْ تَعْفُوْا عَنْ سُوْٓءٍ فَاِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا قَدِيْرًا‏
اِنْ تُبْدُوْا நீங்கள்வெளிப்படுத்தினால் خَيْرًا நன்மையை اَوْ அல்லது تُخْفُوْهُ நீங்கள் மறைத்தால்/அதை اَوْ அல்லது تَعْفُوْا நீங்கள் மன்னித்தால் عَنْ سُوْٓءٍ ஒரு கெடுதியை فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் كَانَ இருக்கிறான் عَفُوًّا பெரிதும் பிழை பொறுப்பவனாக قَدِيْرًا‏ பேராற்றலுடையவனாக
4:149. நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) - ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான்.
4:149. (ஒருவருக்குச் செய்யும்) நன்மையை நீங்கள் வெளியாக்கினாலும் அல்லது அதை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீங்கை நீங்கள் மன்னித்துவிட்டாலும் (அது உங்களுக்கே மிக நன்று. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (குற்றங்களை) மிக மன்னிப்பவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
4:149. (அநீதி இழைக்கப்பட்ட நிலையில், தீங்கான சொற்களை வெளிப்படையாகப் பேச உங்களுக்கு அனுமதியுண்டு.) ஆனால், நீங்கள் வெளிப்படையாகவும் மறைவாகவும் நற்செயலை செய்தவண்ணம் இருங்கள்; அல்லது குறைந்தபட்சம் (அநீதியாளர்களின் தீங்கை) மன்னித்துவிடுங்கள். அவ்வாறு செய்தால் (தண்டனை வழங்க) அவன் முழு ஆற்றல் பெற்றிருக்கின்றான். (ஆயினும்) அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான்.
4:149. செய்யும் நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது ஒருவர் உங்களுக்குச் செய்த யாதொரு தீங்கை நீங்கள் மன்னித்துவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ், (குற்றங்களை) மிக்க மன்னிப்போனாக, (தண்டிக்கப்) பேராற்றலுடையோனாக இருக்கின்றான்.
4:150
4:150 اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاللّٰهِ وَرُسُلِهٖ وَيُرِيْدُوْنَ اَنْ يُّفَرِّقُوْا بَيْنَ اللّٰهِ وَرُسُلِهٖ وَيَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَّنَكْفُرُ بِبَعْضٍۙ وَّيُرِيْدُوْنَ اَنْ يَّتَّخِذُوْا بَيْنَ ذٰ لِكَ سَبِيْلًا ۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَكْفُرُوْنَ நிராகரிக்கிறார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرُسُلِهٖ இன்னும் அவனுடைய தூதர்களை وَيُرِيْدُوْنَ இன்னும் நாடுகிறார்கள் اَنْ يُّفَرِّقُوْا அவர்கள் பிரிவினை செய்வது بَيْنَ இடையில் اللّٰهِ அல்லாஹ் وَرُسُلِهٖ இன்னும் அவனுடைய தூதர்களை وَيَقُوْلُوْنَ இன்னும் கூறுகின்றனர் نُؤْمِنُ நம்பிக்கை கொள்வோம் بِبَعْضٍ சிலரை وَّنَكْفُرُ இன்னும் நிராகரிப்போம் بِبَعْضٍۙ சிலரை وَّيُرِيْدُوْنَ இன்னும் நாடுகிறார்கள் اَنْ يَّتَّخِذُوْا அவர்கள் ஏற்படுத்த بَيْنَ மத்தியில் ذٰ لِكَ அதற்கு سَبِيْلًا ۙ‏ ஒரு பாதையை
4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
4:150. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்துவிடக் கருதி (தூதர்களில்) ‘‘சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்'' எனவும் கூறி (நிராகரிப்புக்கும் நம்பிக்கைக்கும்) மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த விரும்புகிறார்களோ,
4:150. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையில் வேற்றுமையை ஏற்படுத்த விரும்புகின்றார்களோ, மேலும் நாங்கள் இறைத்தூதர்களில் சிலரை ஏற்றுக்கொள்வோம்; சிலரை ஏற்கமாட்டோம் என்று கூறுகின்றார்களோ, மேலும், இறைநம்பிக்கைக்கும் நிராகரிப்புக்கும் இடைப்பட்ட ஒரு வழியினை அமைத்திட விரும்புகின்றார்களோ
4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பாகுபாடு செய்வதை நாடி, “தூதர்களில் சிலரை நாம் விசுவாசிப்போம், இன்னும் சிலரை நாம் நிராகரிப்போம் எனவும் கூறி, (நிராகரிப்பு, விசுவாசம் ஆகிய) இவற்றிற்கு மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்தவும் நாடுகின்றார்களே அத்தகையோர்,
4:151
4:151 اُولٰٓٮِٕكَ هُمُ الْـكٰفِرُوْنَ حَقًّا‌ ۚ وَ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا‏
اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْـكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் حَقًّا‌ ۚ உண்மையில் وَ اَعْتَدْنَا இன்னும் ஏற்படுத்தியுள்ளோம் لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابًا வேதனையை مُّهِيْنًا‏ இழிவு தரும்
4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
4:151. அவர்கள்தான் உண்மையில் நிராகரிப்பவர்கள். நாம் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையையே சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்.
4:151. அவர்கள்தாம் உண்மையில் அப்பட்டமான நிராகரிப்போர் ஆவர். இந்நிராகரிப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம்.
4:151. அவர்கள்தான் உண்மையாகவே நிராகரிப்போராவர், இன்னும், நிராகரிப்போருக்கு, நாம் இழிவுதரும் வேதனையையே தயார் படுத்தியும் வைத்திருக்கின்றோம்.
4:152
4:152 وَالَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ وَلَمْ يُفَرِّقُوْا بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ اُولٰٓٮِٕكَ سَوْفَ يُؤْتِيْهِمْ اُجُوْرَهُمْ ‌ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏
وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرُسُلِهٖ இன்னும் அவனுடைய தூதர்களை وَلَمْ يُفَرِّقُوْا இன்னும் பிரிவினை செய்யவில்லை بَيْنَ இடையில் اَحَدٍ ஒருவர் مِّنْهُمْ அவர்களில் اُولٰٓٮِٕكَ அவர்கள் سَوْفَ விரைவில்  يُؤْتِيْهِمْ அவர்களுக்கு கொடுப்பான் اُجُوْرَ கூலிகளை هُمْ ‌ؕ அவர்களுடைய وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் غَفُوْرًا மகா மன்னிப்பாளனாக رَّحِيْمًا‏ மகாகருணையாளனாக
4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
4:152. எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கிடையில் பிரிவினை செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய கூலிகளை (அல்லாஹ் மறுமையில்) கொடுப்பான். அல்லாஹ் மிக்க பிழைபொறுப்பவனாக, மிகக் கருணை காட்டுபவனாக இருக்கிறான்.
4:152. (ஆனால்) எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்கள் அனைவரையும் நம்பி தூதர்களுக்கிடையே வேற்றுமை பாராட்டவுமில்லையோ அவர்களுக்கு அவர்களின் கூலிகளை நிச்சயம் வழங்குவோம். மேலும், அல்லாஹ் அதிக மன்னிப்பு வழங்குபவனும் கருணை நிறைந்தோனுமாய் இருக்கின்றான்.
4:152. மேலும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் விசுவாசித்து அவர்களில் எவருக்கிடையிலும் பிரிவினை செய்யவில்லையோ அத்தகையோர் - அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலிகளை விரைவில் அல்லாஹ் (மறுமையில்) கொடுப்பான், இன்னும் அல்லாஹ் மிக்க (பிழை) பொறுப்போனாக மிகக் கிருபையுடையோனாக இருக்கின்றான்.
4:153
4:153 يَسْأَلُكَ اَهْلُ الْـكِتٰبِ اَنْ تُنَزِّلَ عَلَيْهِمْ كِتٰبًا مِّنَ السَّمَآءِ‌ فَقَدْ سَاَ لُوْا مُوْسٰٓى اَكْبَرَ مِنْ ذٰ لِكَ فَقَالُوْۤا اَرِنَا اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ بِظُلْمِهِمْ‌‌ ۚ ثُمَّ اتَّخَذُوا الْعِجْلَ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ فَعَفَوْنَا عَنْ ذٰ لِكَ‌‌‌‌ ۚ وَاٰتَيْنَا مُوْسٰى سُلْطٰنًا مُّبِيْنًا‏
يَسْأَلُكَ கேட்கிறார்(கள்)/உம்மிடம் اَهْلُ الْـكِتٰبِ வேதக்காரர்கள் اَنْ تُنَزِّلَ நீர் இறக்கும்படி عَلَيْهِمْ அவர்கள் மீது كِتٰبًا ஒரு வேதத்தை مِّنَ السَّمَآءِ‌ வானத்திலிருந்து فَقَدْ திட்டமாக سَاَ لُوْا கேட்டனர் مُوْسٰٓى மூஸா(விடம்) اَكْبَرَ மிகப் பெரியதை مِنْ ذٰ لِكَ இதை விட فَقَالُوْۤا கூறினர் اَرِنَا எங்களுக்குக் காண்பி اللّٰهَ அல்லாஹ்வை جَهْرَةً கண்கூடாக فَاَخَذَتْهُمُ ஆகவே, அவர்களைப் பிடித்தது الصّٰعِقَةُ இடிமுழக்கம் بِظُلْمِهِمْ‌ ۚ அவர்களின் அநியாயத்தினால் ثُمَّ பிறகு اتَّخَذُوا எடுத்துக் கொண்டனர் الْعِجْلَ காளைக் கன்றை مِنْۢ بَعْدِ பின்னர் مَا جَآءَتْهُمُ அவர்களிடம் வந்த(து) الْبَيِّنٰتُ தெளிவான அத்தாட்சிகள் فَعَفَوْنَا மன்னித்தோம் عَنْ ذٰ لِكَ‌ ۚ அதை وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் مُوْسٰى மூஸாவிற்கு سُلْطٰنًا சான்றை مُّبِيْنًا‏ தெளிவான(து)
4:153. (நபியே!) வேதமுடையவர்கள் தங்கள் மீது ஒரு வேதத்தை வானத்திலிருந்து நீர் இறக்கி வைக்க வேண்டுமென்று உம்மிடம் கேட்கின்றனர்; அவர்கள் மூஸாவிடம் இதைவிடப் பெரியது ஒன்றைக் கேட்டு: “எங்களுக்கு அல்லாஹ்வைப் பகிரங்கமாகக் காட்டுங்கள்” எனக் கூறினர்; ஆகவே அவர்களுடைய அக்கிரமத்திற்காக அவர்களை இடி தாக்கியது; அப்பால் அவர்களுக்குத் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னும் அவர்கள் காளைக் கன்றை வணங்கினார்கள்; அதையும் நாம் மன்னித்தோம்; இன்னும், நாம் மூஸாவுக்குத் தெளிவான ஆதாரத்தையும் கொடுத்தோம்.
4:153. (நபியே!) வேதத்தையுடையவர்கள் (அவர்கள் விரும்புகிறபடி) வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு வேதத்தை இறக்கிவைக்குமாறு உம்மிடம் கேட்கின்றனர். நிச்சயமாக இதைவிடப் பெரியதொன்றையே மூஸாவிடம் அவர்கள் கேட்டு ‘‘அல்லாஹ்வை எங்களுக்குக் கண்கூடாகக் காண்பிப்பீராக'' என்று கூறினார்கள்.ஆகவே, அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை இடி முழக்கம் பிடித்துக்கொண்டது. (இதுமட்டுமா?) அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னரும் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். இதையும் நாம் மன்னித்து (அவர்களுடைய நபி) மூஸாவுக்கு தெளிவான அத்தாட்சியைக் கொடுத்தோம்.
4:153. (நபியே!) வேதம் அருளப்பட்டவர்கள் (எழுதப்பட்ட நிலையில்) ஒரு வேதத்தை வானத்திலிருந்து தங்கள் மீது இறக்கி வைக்குமாறு இன்று உம்மிடம் கேட்கின்றார்கள் எனில், உண்மையில் இவர்கள் மூஸாவிடம் இதைவிடக் கொடூரமான கோரிக்கை விடுத்திருந்தார்கள். அவரிடமோ அவர்கள், “அல்லாஹ்வை எங்களுக்கு வெளிப்படையாகக் காட்டுவீராக!” என்று கூறியிருந்தனர். இவ்வாறு அவர்கள் அக்கிரமமாக நடந்து கொண்டதால், திடீரென அவர்களை ஒரு பேரிடி தாக்கியது. பிறகு அவர்களுக்குத் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் பசுவின் கன்றைத் தங்களுடைய தெய்வமாக்கிக் கொண்டார்கள். அதனையும் நாம் மன்னித்தோம். நாம் மூஸாவிற்குத் தெளிவான கட்டளையை வழங்கினோம்.
4:153. (நபியே!) வேதத்தையுடையவர்கள், (தாங்கள் விரும்புகின்ற பிரகாரம்) வானத்திலிருந்து தங்கள் மீது ஒரு வேதத்தை நீர் இறக்கிவைக்குமாறு உம்மிடம் கேட்கின்றனர், நிச்சயமாக இதைவிடப் பெரிய தொன்றையே மூஸாவிடம் அவர்கள் கேட்டார்கள், ஆகவே, அல்லாஹ்வை எங்களுக்குப் பகிரங்கமாகக் காண்பிப்பீராக” என்று கூறினார்கள், பின்னர் அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை பெரும் சப்தம் (நெருப்பு வடிவில்) தாக்கியது., பின்னர் அவர்களிடம் அத்தாட்சிகள் வந்ததன் பின்னும் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர், அப்பொழுது(ம்) அதனை நாம் மன்னித்தோம், இன்னும் மூஸாவுக்குத் தெளிவான சான்றையும் கொடுத்தோம்.
4:154
4:154 وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّوْرَ بِمِيْثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَّقُلْنَا لَهُمْ لَا تَعْدُوْا فِى السَّبْتِ وَاَخَذْنَا مِنْهُمْ مِّيْثَاقًا غَلِيْظًا‏
وَرَفَعْنَا மேலும் உயர்த்தினோம் فَوْقَهُمُ அவர்களுக்கு மேல் الطُّوْرَ மலையை بِمِيْثَاقِهِمْ அவர்களுடைய வாக்குறுதியின் காரணமாக وَقُلْنَا இன்னும் கூறினோம் لَهُمُ அவர்களுக்கு ادْخُلُوا நுழையுங்கள் الْبَابَ வாசலில் سُجَّدًا தலை குணிந்தவர்களாக وَّقُلْنَا இன்னும் கூறினோம் لَهُمْ அவர்களுக்கு لَا تَعْدُوْا வரம்பு மீறாதீர்கள் فِى السَّبْتِ சனிக்கிழமையில் وَاَخَذْنَا இன்னும் எடுத்தோம் مِنْهُمْ அவர்களிடம் مِّيْثَاقًا வாக்குறுதியை غَلِيْظًا‏ உறுதியானது
4:154. மேலும், அவர்களிடம் வாக்குறுதி வாங்கும் பொருட்டு, அவர்கள் மேல் தூர் (ஸினாய் மலையை) உயர்த்தினோம்; இன்னும் “இந்த வாசலில் தலை குனிந்து (தாழ்மையாக) நுழையுங்கள்” என்று சொன்னோம்; மேலும் “(மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்கு கூறினோம்; இன்னும் அவர்களிடமிருந்து மிக உறுதியான வாக்குறுதியும் வாங்கினோம்.
4:154. அவர்களிடம் வாக்குறுதி வாங்குவதற்காகத் ‘தூர்' (ஸீனாய்) என்னும் மலையை அவர்கள் மீது உயர்த்திய சமயத்தில் ‘‘(இந்நகரத்தின்) வாயிலில் தலைகுனிந்து வணங்கியவர்களாகவே செல்லுங்கள்'' என்று நாம் அவர்களுக்கு கூறினோம். (மீன் வேட்டையாட) சனிக்கிழமையில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறி (இவற்றிற்காகவும்) உறுதியான வாக்குறுதியை நாம் அவர்களிடம் பெற்றிருந்தோம். (எனினும் அவர்கள் மாறிவிட்டனர்.)
4:154. இன்னும், தூர்மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தி (இக்கட்டளைக்குக் கீழ்ப்படியுமாறு) அவர்களிடம் வாக்குறுதி வாங்கினோம். “தலை தாழ்த்தியவாறு வாயிலில் நுழையுங்கள்!” என்று நாம் அவர்களுக்குக் கட்டளையிட்டோம். ஸப்த் சனிக்கிழமை விதியை மீறாதீர்கள் என்றும் நாம் அவர்களுக்குக் கூறினோம்; மேலும், இவ்விஷயத்தில் திடமான வாக்குறுதியையும் அவர்களிடம் நாம் வாங்கினோம்.
4:154. மேலும், அவர்களிடம் உடன்படிக்கை வாங்குவதற்காக தூர்(ஸினாய் மலையை) அவர்களின் மீது உயர்த்தினோம், அன்றியும் “அந்நகரத்தின் (வாயிலில் தலைகுனிந்தவர்களாக பிரவேசியுங்கள்” என்று நாம் அவர்களுக்குக் கூறினோம், மேலும் (மீன் வேட்டையாடி) சனிக்கிழமையில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள் என்றும் நாம் அவர்களுக்குக் கூறினோம், (இன்னும் இவற்றிற்காக) உறுதியான வாக்குறுதியையும் நாம் அவர்களிடம் வாங்கினோம்., (எனினும்) அவர்கள் வாக்குறுதியை மீறி விட்டனர்.
4:155
4:155 فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ وَكُفْرِهِمْ بِاٰيٰتِ اللّٰهِ وَقَتْلِهِمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ وَّقَوْلِهِمْ قُلُوْبُنَا غُلْفٌ ؕ بَلْ طَبَعَ اللّٰهُ عَلَيْهَا بِكُفْرِهِمْ فَلَا يُؤْمِنُوْنَ اِلَّا قَلِيْلًا‏
فَبِمَا نَقْضِهِمْ ஆகவே, அவர்கள் முறித்ததாலும் مِّيْثَاقَهُمْ தங்கள் வாக்குறுதியை وَكُفْرِهِمْ இன்னும் அவர்கள் நிராகரித்ததாலும் بِاٰيٰتِ வசனங்களை اللّٰهِ அல்லாஹ்வின் وَقَتْلِهِمُ இன்னும் அவர்கள் கொலை செய்ததாலும் الْاَنْۢبِيَآءَ நபிமார்களை بِغَيْرِ حَقٍّ நியாயமின்றி وَّقَوْلِهِمْ இன்னும் அவர்கள் கூறியதாலும் قُلُوْبُنَا எங்கள் உள்ளங்கள் غُلْفٌ ؕ திரையிடப்பட்டுள்ளன بَلْ மாறாக طَبَعَ முத்திரையிட்டான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهَا அவற்றின் மீது بِكُفْرِهِمْ அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக فَلَا يُؤْمِنُوْنَ ஆகவே நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் اِلَّا قَلِيْلًا‏ சிலரைத் தவிர
4:155. அவர்களுடைய வாக்குறுதியை அவர்கள் மீறியதாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்து விட்டதாலும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்ததாலும், “எங்கள் இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன.” (எனவே எந்த உபதேசமும் அங்கே செல்லாது) என்று அவர்கள் கூறியதாலும், (அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்;) அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் அல்லாஹ் (அவர்களுடைய இருதயங்களின் மீது) முத்திரையிட்டுவிட்டான். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஈமான் கொள்ள மாட்டார்கள்.
4:155. ஆகவே, அவர்கள் தங்கள் வாக்குறுதிகளுக்கு மாறு செய்ததினாலும், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டிருந்ததாலும், ‘‘எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டு விட்டன. (ஆகவே, எவருடைய உபதேசமும் பலனளிக்காது) என்று அவர்கள் கூறிவந்ததாலும் (நாம் அவர்களைச் சபித்து விட்டோம்). அவர்கள் கூறியதைப் போல் அல்ல! மாறாக, அல்லாஹ்தான் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களின் மீது முத்திரையிட்டுவிட்டான். ஆதலால், (அவர்களில் நல்லோர்) சிலரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்.
4:155. அவர்கள் தம் வாக்குறுதியை மீறியதாலும், அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்ததாலும், இறைத்தூதர்கள் பலரை நியாயமின்றி அவர்கள் கொலை செய்ததாலும், மற்றும் எங்களுடைய உள்ளங்கள் உறைக்குள் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கின்றன என்று கூறியதாலும் அவர்களை நாம் சபித்தோம் உண்மை என்னவெனில், அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவே அவர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரை வைத்துவிட்டான். எனவே, அவர்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கின்றனர்.
4:155. ஆகவே, அவர்கள் தங்கள் உடன்படிக்கையை முறித்ததன் காரணமாகவும் அல்லாஹ்வுடைய வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும் நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும் இன்னும் ‘எங்களுடைய இதயங்கள் திரையிடப் பட்டுவிட்டன” என்று அவர்கள் கூறியதாலும் (அல்லாஹ் அவர்களை சபித்து விட்டான், அதுமட்டும்) அல்ல, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவற்றின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான், ஆதலால் (அவர்கள்) குறைவாகவேயன்றி விசுவாசங்கொள்ள மாட்டார்கள்.
4:156
4:156 وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰى مَرْيَمَ بُهْتَانًـا عَظِيْمًا ۙ‏
وَّبِكُفْرِهِمْ இன்னும் அவர்கள் நிராகரித்ததாலும் وَقَوْلِهِمْ இன்னும் அவர்கள் கூறியதாலும் عَلٰى மீது مَرْيَمَ மர்யம் بُهْتَانًـا அவதூறை عَظِيْمًا ۙ‏ மாபெரும்
4:156. இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).
4:156. அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் (அவர்களை நாம் சபித்தோம்).
4:156. மேலும், அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், (அவர்களை நாம் சபித்தோம்).
4:156. இன்னும், அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூரை அவர்கள் கூறியதாலும் (அவர்களை அல்லாஹ் சபித்து விட்டான்.)
4:157
4:157 وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ‌ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ‌ ؕ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ‌ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ‌ ۚ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۢ ۙ‏
وَّقَوْلِهِمْ இன்னும் அவர்கள் கூறியதாலும் اِنَّا நிச்சயமாக நாம் قَتَلْنَا கொன்றோம் الْمَسِيْحَ மஸீஹை عِيْسَى ஈஸா ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய رَسُوْلَ தூதர் اللّٰهِ‌ ۚ அல்லாஹ்வின் وَمَا இல்லை قَتَلُوْهُ அவர்கள் அவரை கொன்றார்கள் وَمَا இன்னும் இல்லை صَلَبُوْهُ அவரை அவர்கள் சிலுவையில் அறைய وَلٰـكِنْ எனினும் شُبِّهَ தோற்றமாக்கப்பட்டான் لَهُمْ‌ ؕ அவர்களுக்கு وَاِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اخْتَلَـفُوْا முரண்பட்டனர் فِيْهِ அவர் விஷயத்தில் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில்தான் مِّنْهُ‌ ؕ அதில் مَا لَهُمْ அவர்களுக்கு இல்லை بِهٖ அதில் مِنْ عِلْمٍ ஓர் அறிவும் اِلَّا தவிர اتِّبَاعَ பின்பற்றுவது الظَّنِّ‌ ۚ சந்தேகத்தை وَمَا இன்னும் இல்லை قَتَلُوْهُ அவர்கள் அவரை கொல்ல يَقِيْنًا ۢ ۙ‏ உறுதியாக
4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
4:157. மேலும், ‘‘அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்துவிட்டோம்'' என்று அவர்கள் கூறியதனாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்துவிட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அதில் அவர்களுக்கு உண்மையான ஞான (ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை.
4:157. மேலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா மஸீஹை நாங்கள்தாம் கொன்றோம் என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை! மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை மஸீஹை கொலை செய்யவேயில்லை.
4:157. இன்னும், “அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம்” என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான்), அவரை அவர்கள் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும், அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற) ஒருவனை ஒப்பாக்கிக் காண்பிக்கப்பட்டது, இன்னும் நிச்சயமாக இவ்விஷயத்தில் கருத்துவேறுபாடு கொண்டிருக்கிறார்களே அத்தகையோர், அதுபற்றி சந்தேகத்திலேயே உள்ளனர், வெறும் யூகத்தைப் பின்பற்றுவதைத்தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாது, மேலும், உறுதியாக அவர்கள் அவரை கொலை செய்யவே இல்லை.
4:158
4:158 بَلْ رَّفَعَهُ اللّٰهُ اِلَيْهِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏
بَلْ மாறாக رَّفَعَهُ உயர்த்தினான்/அவரை اللّٰهُ அல்லாஹ் اِلَيْهِ‌ ؕ தன்னளவில் وَكَانَ இன்னும் இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَزِيْزًا மிகைத்தவனாக حَكِيْمًا‏ மகா ஞானவானாக
4:158. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
4:158. எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
4:158. மாறாக, அல்லாஹ் அவரைத் தன் பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான்.
4:158. மாறாக, அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான், இன்னும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
4:159
4:159 وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَيُـؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ‌ ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكُوْنُ عَلَيْهِمْ شَهِيْدًا‌ ۚ‏
وَاِنْ இல்லை (இருக்கமாட்டார்) مِّنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் எவரும் اِلَّا தவிர لَيُـؤْمِنَنَّ நிச்சயமாக நம்பிக்கை கொள்வார் بِهٖ அவரை قَبْلَ முன்னர் مَوْتِهٖ‌ ۚ அவர் இறப்பதற்கு وَيَوْمَ الْقِيٰمَةِ இன்னும் மறுமை நாளில் يَكُوْنُ இருப்பார் عَلَيْهِمْ இவர்களுக்கு எதிராக شَهِيْدًا‌ ۚ‏ சாட்சி கூறுபவராக
4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
4:159. வேதத்தையுடையவர்களில் ஒவ்வொருவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதில்லை. எனினும், மறுமை நாளில் இவர்களுக்கு எதிராகவே அவர் சாட்சியம் கூறுவார்.
4:159. வேதம் அருளப்பட்டவர்களில் யாரும் அவர் மரணமாவதற்கு முன்னால் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமலிருக்க மாட்டார்கள். மேலும், மறுமைநாளில் அவர்களுக்கு எதிராக அவர் சாட்சி சொல்பவராய் இருப்பார்.
4:159. வேதத்தையுடையவர்களிலிருந்து எவரும் அவர் இறப்பதற்கு முன்னதாக திட்டமாக அவரை விசுவாசிக்காமல் இருப்பதில்லை, இன்னும், மறுமைநாளில் அவர்களுக்கு அவர் பாதகமான சாட்சியாளராக இருப்பார்.
4:160
4:160 فَبِظُلْمٍ مِّنَ الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبٰتٍ اُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيْلِ اللّٰهِ كَثِيْرًا ۙ‏
فَبِظُلْمٍ அநியாயத்தின் காரணமாக مِّنَ الَّذِيْنَ هَادُوْا யூதர்களின் حَرَّمْنَا விலக்கினோம் عَلَيْهِمْ அவர்களுக்கு طَيِّبٰتٍ நல்லவற்றை اُحِلَّتْ அனுமதிக்கப்பட்டன لَهُمْ அவர்களுக்கு وَبِصَدِّهِمْ இன்னும் அவர்கள் தடுப்பது عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ அல்லாஹ்வின் كَثِيْرًا அதிகமானவர்களை
4:160. எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்; இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)
4:160. ஆகவே, யூதர்களின் (இத்தகைய) அநியாயங்களின் காரணமாகவும், (அவ்வாறே) அல்லாஹ்வின் பாதையை விட்டு பலரைத் தடுத்துக் கொண்டிருந்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப் பட்டிருந்தவற்றில் நல்லவற்றை நாம் அவர்களுக்கு விலக்கிவிட்டோம்.
4:160. யூதர்கள் செய்த அக்கிரமத்தின் காரணமாகவும், அல்லாஹ்வின் வழியிலிருந்து அதிகமான மனிதர்களை அவர்கள் தடுத்துக் கொண்டிருப்பதாலும், (முன்பு) அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல தூய்மையான நல்ல பொருள்களை அவர்கள் மீது நாம் தடை செய்துவிட்டோம்.
4:160. ஆகவே, யூதர்களாக இருந்த அவர்களின் அநியாயத்தின் காரணமாகவும், இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையைவிட்டும் (அதில் செல்லவிடாது) தடுத்துக் கொண்டதன் காரணமாகவும் அவர்களுக்கு (முன்னர்) அனுமதிக்கப் பட்டவைகளில் நல்லவைகளை நாம் அவர்களுக்குத் தடுத்து (ஹராமாக்கி) விட்டோம்.
4:161
4:161 وَّاَخْذِهِمُ الرِّبٰوا وَقَدْ نُهُوْا عَنْهُ وَاَكْلِـهِمْ اَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ‌ ؕ وَاَعْتَدْنَـا لِلْـكٰفِرِيْنَ مِنْهُمْ عَذَابًا اَ لِيْمًا‏
وَّاَخْذِهِمُ இன்னும் அவர்கள் வாங்குவது الرِّبٰوا வட்டியை وَقَدْ نُهُوْا அவர்களுமோ தடுக்கப்பட்டிருக்க عَنْهُ அதிலிருந்து وَاَكْلِـهِمْ இன்னும் அவர்கள் சாப்பிடுவது اَمْوَالَ செல்வங்களை النَّاسِ மக்களின் بِالْبَاطِلِ‌ ؕ தப்பான வழியில் وَاَعْتَدْنَـا இன்னும் ஏற்படுத்தினோம் لِلْـكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு مِنْهُمْ அவர்களில் عَذَابًا வேதனையை اَ لِيْمًا‏ துன்புறுத்தக் கூடிய(து)
4:161. வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்.
4:161. அவர்களுக்கு வட்டி விலக்கப்பட்டிருந்தும், அதை வாங்கி வந்ததினாலும், மனிதர்களின் பொருள்களை அவர்கள் நியாயமின்றி விழுங்கி வந்ததினாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). அவர்களில் (இத்தகைய) நிராகரிப்பவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை மறுமையில் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
4:161. மேலும் வட்டி அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்க அதனை அவர்கள் வாங்கிக் கொண்டிருப்பதாலும், மக்களின் சொத்துகளைத் தவறான முறையில் அவர்கள் விழுங்கிக் கொண்டிருப்பதாலும் (முன்பு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பல தூய்மையான நல்ல பொருள்களை அவர்கள் மீது நாம் தடை செய்து விட்டோம்). மேலும் அவர்களில் நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார்செய்து வைத்துள்ளோம்.
4:161. வட்டியை அதைவிட்டும் அவர்கள் தடுக்கப்பட்டவர்களாக இருந்தும் (அதனை) வாங்கி வந்ததன் காரணமாகவும், மனிதர்களின் செல்வங்களை அவர்கள் நியாயமின்றி உண்டு வந்ததன் காரணமாகவும், அவர்களில், (இத்தகைய) நிராகரிப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்தும் வைத்திருக்கிறோம்.
4:162
4:162 لٰـكِنِ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ مِنْهُمْ وَالْمُؤْمِنُوْنَ يُـؤْمِنُوْنَ بِمَاۤ اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ‌ وَالْمُقِيْمِيْنَ الصَّلٰوةَ‌ وَالْمُؤْتُوْنَ الزَّكٰوةَ وَ الْمُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ ؕ اُولٰٓٮِٕكَ سَنُؤْتِيْهِمْ اَجْرًا عَظِيْمًا‏
لٰـكِنِ எனினும் الرّٰسِخُوْنَ தேர்ச்சி பெற்றவர்கள் فِى الْعِلْمِ கல்வியில் مِنْهُمْ அவர்களில் وَالْمُؤْمِنُوْنَ இன்னும் நம்பிக்கையாளர்கள் يُـؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கின்றனர் بِمَاۤ எதை اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْكَ உமக்கு وَمَاۤ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது مِنْ قَبْلِكَ‌ உமக்கு முன்னர் وَالْمُقِيْمِيْنَ இன்னும் நிலை நிறுத்துபவர்கள் الصَّلٰوةَ‌ தொழுகையை وَالْمُؤْتُوْنَ இன்னும் கொடுப்பவர்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَ الْمُؤْمِنُوْنَ இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ ؕ இன்னும் மறுமை நாளை اُولٰٓٮِٕكَ இவர்கள் سَنُؤْتِيْهِمْ கொடுப்போம்/இவர்களுக்கு اَجْرًا கூலியை عَظِيْمًا‏ மகத்தானது
4:162. எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
4:162. எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி மிக்கவர்களும், உண்மை நம்பிக்கையாளர்களும், உம் மீது அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் அருளப்பட்டிருந்த (வேதங்கள் யா)வற்றையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள் தொழுகையையும் கடைப்பிடித்துத் தொழுபவர்கள்; ஜகாத்தும் கொடுத்து வருபவர்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகிய இவர்களுக்கு (மறுமையில்) மகத்தான கூலியை நாம் கொடுப்போம்.
4:162. ஆனால், அவர்களில் அறிவுத்திறன் மிக்கவர்கள் மற்றும் இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் (நபியே!) உம்மீதும், உமக்கு முன்னரும் இறக்கியருளப்பட்ட அறிவுரைகளை நம்புகின்றார்கள்! (இவ்வாறு நம்பிக்கை கொண்டு) தொழுகையையும், ஜகாத்தையும் முறையாகப் பேணுபவர்கள், மேலும், அல்லாஹ்வையும் மறுமைநாளையும் உறுதியாக நம்புபவர்கள் ஆகியோருக்கு அதிவிரைவில் மகத்தான கூலியை நாம் நிச்சயமாக வழங்குவோம்.
4:162. எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும் இன்னும் விசுவாசிகளும் உம்மீது இறக்கிவைக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கி வைக்கப்பட்டிருந்தவற்றையும் விசுவாசிக்கிறார்கள், இன்னும் (அவர்கள்) தொழுகையை (முறையாக) நிறைவேற்றுபவர்களாகவும், ஜகாத்தை கொடுப்பவர்களாகவும், அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள், அத்தகையோருக்கு மறுமையில் மகத்தான நற்கூலியை நாம் கொடுப்போம்.
4:163
4:163 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு كَمَاۤ போன்றே اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى نُوْحٍ நூஹுக்கு وَّالنَّبِيّٖنَ இன்னும் நபிமார்களுக்கு مِنْۢ بَعْدِهٖ‌ ۚ அவருக்குப் பின்னர் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلٰٓى اِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَعِيْسٰى இன்னும் ஈஸா وَاَيُّوْبَ இன்னும் அய்யூப் وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَهٰرُوْنَ இன்னும் ஹாரூன் وَسُلَيْمٰنَ‌ ۚ இன்னும் ஸுலைமான் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا‌ ஸபூரை
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தவாறே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். மேலும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும், ஈஸா, ஐயூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் (இவ்வாறே) நாம் வஹ்யி அறிவித்திருக்கிறோம். தாவூதுக்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தை நாமே கொடுத்தோம்.
4:163. (நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னால் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி அறிவித்ததுபோல திண்ணமாக உமக்கும் நாம் வஹி அறிவித்துள்ளோம். மேலும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோருக்கும் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்களுக்கும் ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் ஸுலைமான் ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு ஜபூரை வழங்கினோம்.
4:163. (நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும நாம் வஹீ அறிவித்தவாறே, உமக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம், அன்றியும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும் (அவர்களுடைய) சந்ததிகளுக்கும், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸூலைமான் முதலியவர்களுக்கும் (இவ்வாறே நாம் வஹீ அறிவித்தோம்), இன்னும், தாவூதுக்கு ஜபூர் (என்னும்) வேதத்தை நாம் கொடுத்தோம்.
4:164
4:164 وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَيْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ‌ ؕ وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًا ‌ۚ‏
وَرُسُلًا இன்னும் தூதர்களை قَدْ திட்டமாக قَصَصْنٰهُمْ عَلَيْكَ விவரித்தோம்/அவர்களை/உமக்கு مِنْ قَبْلُ முன்னர் وَرُسُلًا இன்னும் தூதர்களை لَّمْ نَقْصُصْهُمْ விவரிக்கவில்லை / அவர்களை عَلَيْكَ‌ ؕ உமக்கு وَكَلَّمَ பேசினான் اللّٰهُ அல்லாஹ் مُوْسٰى மூஸாவுடன் تَكْلِيْمًا பேசுதல்
4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
4:164. (இவர்களைப்போல் இன்னும் வேறு) பல நபிமார்களையும் (நாம் அனுப்பி வைத்தோம்). அவர்களுடைய சரித்திரங்களையும் இதற்கு முன்னர் நாம் உமக்குக் கூறியிருக்கிறோம். வேறு பல நபிமார்களையும் (நாம் அனுப்பியிருக்கிறோம். எனினும்) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உமக்குக் கூறவில்லை. மூஸாவு(க்கு வஹ்யி அறிவித்தது)டன் அல்லாஹ் பேசியும் இருக்கிறான்.
4:164. மேலும், முன்னரே உம்மிடம் நாம் எந்த இறைத்தூதர்கள் பற்றி எடுத்துரைத்துள்ளோமோ அந்த இறைத்தூதர்களுக்கும் உம்மிடம் எடுத்துரைக்கப்படாத இறைத்தூதர்களுக்கும் (வஹி அறிவித்திருக்கின்றோம்). அல்லாஹ் மூஸாவிடம் நேரடியாகப் பேசியும் இருக்கின்றான்.
4:164. இன்னும் தூதர்கள் பலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் முன்னர் நாம் திட்டமாக உமக்குக் கூறியிருக்கின்றோம், வேறு தூதர்கள் பலரையும் (நாம் அனுப்பியிருக்கின்றோம், எனினும்,) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உமக்குக் கூறவில்லை, இன்னும், அல்லாஹ் மூஸாவுடன் உறுதியாக பேசியுமிருக்கின்றான்.
4:165
4:165 رُسُلًا مُّبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَى اللّٰهِ حُجَّةٌ ۢ بَعْدَ الرُّسُلِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏
رُسُلًا தூதர்களை مُّبَشِّرِيْنَ நற்செய்தி கூறுபவர்களாக وَمُنْذِرِيْنَ இன்னும் எச்சரிப்பவர்களாக لِئَلَّا يَكُوْنَ இல்லாதிருக்க لِلنَّاسِ மக்களுக்கு عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது حُجَّةٌ ۢ ஓர் ஆதாரம் بَعْدَ பின்னர் الرُّسُلِ‌ ؕ தூதர்கள் وَكَانَ اللّٰهُ அல்லாஹ் இருக்கின்றான் عَزِيْزًا மிகைத்தவனாக حَكِيْمًا‏ மகா ஞானவானாக
4:165. தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாராயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்); மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.
4:165. அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மனிதர்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க இத்தூதர்களுக்குப் பின்னரும் (யஹ்யா போன்ற வேறு) பல தூதர்களை (சொர்க்கத் தைக்கொண்டு) நற்செய்தி கூறுகிறவர்களாகவும், (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கிறவர்களாகவும் (நாம் அனுப்பிவைத்தோம்). அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
4:165. இறைத்தூதர்கள் அனைவரும் நற்செய்தி அறிவிப்பவர்களாகவும் எச்சரிப்பவர்களாகவும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஏனெனில், அத்தூதர்கள் அனுப்பப்பட்ட பிறகு அல்லாஹ்விடம் முறையிட மக்களுக்கு ஆதாரம் ஏதும் இருக்கக் கூடாது என்பதற்காக! மேலும், எந்நிலையிலும், அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
4:165. அல்லாஹ்வின் மீது மனிதர்களுக்கு (சாதகமாக) யாதொரு ஆதாரமும் இல்லாதிருப்பதற்காக, இத்தூதர்களுக்குப் பின்னரும், தூதர்கள் பலரை, (சுவர்க்கத்தைக் கொண்டு) நன்மாராயங் கூறுகின்றவர்களாகவும் (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பி வைத்தான்). மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
4:166
4:166 لٰـكِنِ اللّٰهُ يَشْهَدُ بِمَاۤ اَنْزَلَ اِلَيْكَ‌ اَنْزَلَهٗ بِعِلْمِهٖ‌ ۚ وَالْمَلٰٓٮِٕكَةُ يَشْهَدُوْنَ‌ ؕ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا ؕ‏
لٰـكِنِ என்றாலும் اللّٰهُ அல்லாஹ் يَشْهَدُ சாட்சி கூறுகிறான் بِمَاۤ اَنْزَلَ இறக்கியதற்கு اِلَيْكَ‌ உமக்கு اَنْزَلَهٗ இறக்கினான்/அதை بِعِلْمِهٖ‌ ۚ அவனுடைய அறிவைக் கொண்டே وَالْمَلٰٓٮِٕكَةُ இன்னும் வானவர்கள் يَشْهَدُوْنَ‌ ؕ சாட்சி கூறுகின்றனர் وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே شَهِيْدًا ؕ‏ சாட்சியாளனாக
4:166. (நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்; மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.
4:166. (நபியே! இவர்கள் உம்மை நிராகரித்து விட்டதனால் ஆவதென்ன?) உம்மீது அருளப்பட்ட வேதம் உண்மையானதென்றும் (உமது மேலான தகுதியை) அறிந்தே அதை (உம்மீது அவன்) இறக்கிவைத்தான் என்றும் அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். (அவ்வாறே) வானவர்களும் சாட்சி கூறுகின்றனர். அல்லாஹ்வே போதுமான சாட்சி ஆவான்.
4:166. (இவர்கள் நம்பினாலும் சரி; நம்பாவிட்டாலும் சரி) ஆனால் (நபியே!) அல்லாஹ் உம்மீது இறக்கியருளியவற்றை தன் பேரறிவைக்கொண்டே இறக்கியருளினான் என்பதற்கு தானே சான்று வழங்குகின்றான்; வானவர்களும் சாட்சி வழங்குபவர்களாக இருக்கின்றார்கள். ஆயினும், அல்லாஹ்வின் சான்றே முற்றிலும் போதுமானது;
4:166. எனினும், அவன் உமக்கு இறக்கிவைத்த (குர் ஆனாகிய இ)தற்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகின்றான், அ(வ்வேதத்)தை தன் அறிவுகொண்டே (உம்மீது) இறக்கிவைத்தான், (இதற்கு) மலக்குகளும் சாட்சி கூறுகின்றனர், மேலும் சாட்சியால் அல்லாஹ் போதுமானவன்.
4:167
4:167 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَ صَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ قَدْ ضَلُّوْا ضَلٰلًاۢ بَعِيْدًا‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَ صَدُّوْا இன்னும் தடுத்தார்கள் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ அல்லாஹ்வுடைய قَد ضَلُّوْا திட்டமாக வழி கெட்டனர் ضَلٰلًاۢ வழிகேடாக بَعِيْدًا‏ தூரமான(து)
4:167. நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மனிதர்களை) தடுத்து கொண்டு இருக்கிறார்களே நிச்சயமாக அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் வழி கெட்டுச் சென்று விட்டார்கள்.
4:167. (நபியே! உம்மை) எவர்கள் நிராகரித்து (மற்றவர்களையும்) அல்லாஹ்வுடைய வழியிலிருந்து மக்களை தடுத்தார்களோ அவர்கள் நிச்சயமாக வெகுதூரமான ஒரு வழிகேட்டில்தான் சென்று விட்டனர்.
4:167. எவர்கள் (இவற்றை) தாமும் ஏற்க மறுத்து, அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மற்றவர்களையும் தடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக வழிகேட்டில் (மூழ்கி, சத்தியத்தைவிட்டு) வெகுதூரம் சென்றுவிட்டார்கள்.
4:167. நிச்சயமாக நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் தடுத்தார்களே அத்தகையோர் - அவர்கள் - திட்டமாக வெகு தூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டனர்.
4:168
4:168 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَظَلَمُوْا لَمْ يَكُنِ اللّٰهُ لِيَـغْفِرَ لَهُمْ وَلَا لِيَـهْدِيَهُمْ طَرِيْقًا ۙ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَظَلَمُوْا இன்னும் அநியாயம் செய்தார்கள் لَمْ يَكُنِ இல்லை اللّٰهُ அல்லாஹ் لِيَـغْفِرَ மன்னிப்பவனாக لَهُمْ அவர்களை وَلَا இன்னும் இல்லை لِيَـهْدِيَهُمْ அவர்களுக்கு வழிகாட்டுபவனாக طَرِيْقًا ۙ‏ ஒரு வழியை
4:168. நிச்சயமாக (இவ்வாறு) நிராகரித்து, அக்கிரமம் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பளிக்க மாட்டான்; அன்றி அவர்களை நேர் வழியிலும் செலுத்த மாட்டான்.
4:168. (நபியே!) எவர்கள் (உம்மை) நிராகரித்துவிட்டு அநியாயம் செய்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. (நேரான) ஒரு வழியில் அவர்களைச் செலுத்தவும் மாட்டான்.
4:168. எவர்கள் இவ்வாறு நிராகரிப்பை அல்லாஹ்வை எதிர்க்கும் போக்கை மேற்கொண்டு, அக்கிரமம் புரிந்தார்களோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கமாட்டான்.
4:168. (நபியே!) நிச்சயமாக நிராகரித்துவிட்டு, அநியாயமும் செய்தார்களே அத்தகையவர்கள்-அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை, அல்லாஹ் இன்னும் (நேரான) வழியில் அவன் அவர்களைச் செலுத்துபவனாகவும் இல்லை.
4:169
4:169 اِلَّا طَرِيْقَ جَهَـنَّمَ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ وَكَانَ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرًا‏
اِلَّا தவிர طَرِيْقَ வழி جَهَـنَّمَ நரகத்தின் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்கள் فِيْهَاۤ அதில் اَبَدًا‌ ؕ என்றென்றும் وَكَانَ ذٰ لِكَ ஆகிவிட்டது/இது عَلَى اللّٰهِ அல்லாஹ்வுக்கு يَسِيْرًا‏ சுலபமாக
4:169. நரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.
4:169. நரகத்தின் வழியைத்தவிர (அதில்தான் அவர்களை செலுத்துவான்.) அ(ந்த நரகத்)தில்தான் அவர்கள் என்றென்றும் தங்கியும் விடுவார்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிகச் சுலபமே!
4:169. அவர்களுக்கு நரகத்திற்கான வழியினைத் தவிர வேறெந்த வழியையும் காட்டவும் மாட்டான். அவர்கள் நிரந்தரமாக அதில் வீழ்ந்து கிடப்பார்கள்! இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக எளிதான செயலே ஆகும்.
4:169. நரகத்தின் வழியைத் தவிர-அதில்தான் அவர்கள் நிரந்தரமாக என்றென்றும் (தங்கி) இருப்பவர்கள். இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக எளிதாக இருக்கிறது.
4:170
4:170 يٰۤـاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الرَّسُوْلُ بِالْحَـقِّ مِنْ رَّبِّكُمْ فَاٰمِنُوْا خَيْرًا لَّـكُمْ‌ ؕ وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ ؕ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا‏
يٰۤـاَيُّهَا النَّاسُ மக்களே قَدْ جَآء வந்து விட்டார் كُمُ உங்களிடம் الرَّسُوْلُ இத்தூதர் بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு مِنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் فَاٰمِنُوْا ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள் خَيْرًا மிக்க நன்று لَّـكُمْ‌ ؕ உங்களுக்கு وَاِنْ تَكْفُرُوْا நீங்கள் நிராகரித்தால் فَاِنَّ நிச்சயமாக لِلّٰهِ அல்லாஹ்விற்கு مَا فِى السَّمٰوٰتِ எவை/வானங்களில் وَالْاَرْضِ‌ ؕ இன்னும் பூமி وَكَانَ இருக்கிறான் اللّٰهُ அல்லாஹ் عَلِيْمًا நன்கறிந்தவனாக حَكِيْمًا‏ மகா ஞானவானாக
4:170. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான்.
4:170. மனிதர்களே! உங்கள் இறைவனால் முற்றிலும் உண்மையைக் கொண்டே அனுப்பப்பட்ட தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் அவரை நம்பிக்கைகொள்ளுங்கள். (அது) உங்களுக்கே மிக்க நன்று. நீங்கள் (அவரை) நிராகரித்துவிட்டால் (அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடாது. ஏனென்றால்) வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே! அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
4:170. மனிதர்களே! இந்தத் தூதர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றார். எனவே, நம்பிக்கை கொள்ளுங்கள். அது உங்களுக்கே நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் நிராகரித்தால் வானங்கள், பூமியிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்! மேலும் அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
4:170. மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உண்மையானவற்றுடன் ஒரு தூதர் திட்டமாக உங்களிடம் வந்துவிட்டார், ஆகவே, நீங்கள் (அவர் கொண்டுவந்ததை) விசுவாசியுங்கள், (அது) உங்களுக்கு மிக்க நன்று, நீங்கள் நிராகரித்தும் விட்டால் வானங்கள், மற்றும் பூமியில் உள்ளவை நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன, அல்லாஹ்வோ, (யாவரையும்) நன்கறிந்தவனாக தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.
4:171
4:171 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ‌ ؕ اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ‌ ۚ اَ لْقٰٮهَاۤ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ‌ ؕ اِنْتَهُوْا خَيْرًا لَّـكُمْ‌ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰـهٌ وَّاحِدٌ‌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ يَّكُوْنَ لَهٗ وَلَدٌ‌ ۘ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا‏
يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لَا تَغْلُوْا அளவு கடக்காதீர் فِىْ دِيْـنِكُمْ உங்கள் மார்க்கத்தில் وَلَا تَقُوْلُوْا இன்னும் கூறாதீர்கள் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது اِلَّا الْحَـقَّ‌ ؕ உண்மையைத் தவிர اِنَّمَا எல்லாம் الْمَسِيْحُ மஸீஹ் عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَكَلِمَتُهٗ‌ ۚ இன்னும் அவனுடைய வார்த்தை اَ لْقٰٮهَاۤ சேர்ப்பித்தான்/அதை اِلٰى مَرْيَمَ மர்யமின் பக்கம் وَرُوْحٌ இன்னும் உயிர் مِّنْهُ‌ அவன் புறத்திலிருந்து فَاٰمِنُوْا ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرُسُلِهٖ‌ ۚ இன்னும் அவனுடைய தூதர்களை وَلَا تَقُوْلُوْا இன்னும் கூறாதீர்கள் ثَلٰثَةٌ‌ ؕ மூவர் اِنْتَهُوْا விலகுங்கள் خَيْرًا மிக நன்று لَّـكُمْ‌ ؕ உங்களுக்கு اِنَّمَا اللّٰهُ அல்லாஹ் எல்லாம் اِلٰـهٌ ஒரு கடவுள் وَّاحِدٌ‌ ؕ ஒரே سُبْحٰنَهٗۤ அவன் மிக பரிசுத்தமானவன் اَنْ يَّكُوْنَ இருப்பதைவிட்டு لَهٗ அவனுக்கு وَلَدٌ‌ ۘ குழந்தை لَهٗ அவனுக்கே مَا எவை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் எவை/பூமியில் وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே وَكِيْلًا‏ பொறுப்பாளனாக
4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
4:171. வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் அளவு கடந்து சென்றுவிடாதீர்கள். மேலும், அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதர்தான். (அவனுடைய மகனல்ல.) அவனுடைய (‘குன்' என்ற) வாக்கா(ல் பிறந்தவரா)கவும் இருக்கிறார். அல்லாஹ் (தன்) வாக்கை மர்யமுக்கு அளித்தான். (மற்ற ஆத்மாக்களைப் போன்று அவரும்) அவனால் படைக்கப்பட்ட ஓர் ஆத்மாவே. ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்கள்) ‘மூவர்' என்றும் கூறாதீர்கள். (இவ்வாறு கூறுவதை) விட்டுவிடுங்கள். (அது) உங்களுக்குத்தான் மிக நன்று. ஏனென்றால், அல்லாஹ் ஒருவன்தான் வணக்கத்திற்குரியவன். அவன் சந்ததிகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன். வானங்கள், பூமியில் இருப்பவை அனைத்தும் அவனுக்கு உரியவையே! (உங்கள் அனைவரையும்) பாதுகாக்க அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன். (ஈஸா அவசியமில்லை.)
4:171. வேதம் அருளப்பட்டவர்களே! உங்களுடைய தீனில் மார்க்கத்தில் (எதையும்) மிகைப்படுத்தாதீர்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் சத்தியத்தைத் தவிர வேறு எதையும் கூறாதீர்கள். திண்ணமாக, மர்யமின் மகன் ஈஸாஅல்மஸீஹ், அல்லாஹ்வின் தூதரும் மர்யமுக்கு அவன் அனுப்பிய அவனுடைய கட்டளையுமாவார். மேலும், அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு ரூஹும் ஆவார். (அது மர்யமின் கருவறையில் குழந்தையாக வடிவம் பெற்றது.) எனவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்! மேலும், மூன்று (கடவுள்) எனச் சொல்லாதீர்கள். (அப்படிச் சொல்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள்! இதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். ஏனெனில், அல்லாஹ் ஒரே இறைவன்தான்; தனக்கு மகனை ஏற்படுத்திக் கொள்வதை விட்டு அவன் தூய்மையானவன். வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியனவாகும். மேலும் (அவை அனைத்தையும் பராமரித்துப் பாதுகாக்கும்) பொறுப்பினை ஏற்பதற்கு அவனே போதுமானவனாவான்.
4:171. வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில், நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள், இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள், நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதரும், அவனுடைய வாக்கும் ஆவார், அல்லாஹ், மர்யமின் பால் அ(ந்த வாக்கான)தைப் போட்டான், (மற்ற ஆன்மாக்களைப் போன்று அவரும்,) அவனிடமிருந்து (படைக்கப்பட்ட) ஓர் ஆன்மாவே, ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசியுங்கள், இன்னும் (வணக்கத்திற்குரிய தெய்வங்கள்) மூன்று என்று கூறாதீர்கள், (இவ்வாறு கூறுவதை விட்டு விலகி விடுங்கள், (அது) உங்களுக்குத்தான் மிக்க நன்று, (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் ஒரே நாயன்தான், அவனுக்கு மக்கள் இருப்பதைவிட்டும் அவன் மிகப் பரிசுத்தமானவன். வானங்களில் உள்ளவை மற்றும் பூமியில் உள்ளவை அவனுக்கே உரியன- (உங்கள் யாவரின் காரியங்களை) பொறுப்பேற்றுக் கொள்ள அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.
4:172
4:172 لَنْ يَّسْتَـنْكِفَ الْمَسِيْحُ اَنْ يَّكُوْنَ عَبْدًالِّلّٰهِ وَلَا الْمَلٰٓٮِٕكَةُ الْمُقَرَّبُوْنَ‌ؕ وَمَنْ يَّسْتَـنْكِفْ عَنْ عِبَادَ تِهٖ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ اِلَيْهِ جَمِيْعًا‏
لَنْ يَّسْتَـنْكِفَ திமிரு கொள்ளமாட்டார்(கள்) الْمَسِيْحُ ஈஸா (மஸீஹ்) اَنْ يَّكُوْنَ இருப்பதைவிட்டு عَبْدً அடிமையாக الِّلّٰهِ அல்லாஹ்விற்கு وَلَا இன்னும் இல்லை الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் الْمُقَرَّبُوْنَ‌ؕ நெருக்கமானவர்கள் وَمَنْ எவர்(கள்) يَّسْتَـنْكِفْ திமிரு கொள்வார்(கள்) عَنْ விட்டு عِبَادَ تِهٖ அவனைவணங்குவது وَيَسْتَكْبِرْ இன்னும் பெருமை கொள்வார்(கள்) فَسَيَحْشُرُ ஒன்று திரட்டுவான் هُمْ அவர்கள் اِلَيْهِ தன் பக்கம் جَمِيْعًا‏ அனைவரையும்
4:172. (ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
4:172. ஈஸாவும், சிறப்பு வாய்ந்த வானவர்களும் அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைப்பற்றி குறைவாகக் கருத மாட்டார்கள். எவர்கள் கர்வம் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் காண்கின்றனரோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன்னிடமே கொண்டுவரச் செய்வான்.
4:172. தான் அல்லாஹ்வின் அடிமையாக இருப்பதை மஸீஹ் எப்போதுமே இழிவாகக் கருதியதில்லை. இறையண்மை பெற்ற வானவர்களும் அதனை இழிவாகக் கருதுவதில்லை. எவர்கள் அல்லாஹ்வுக்குப் பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதி, தற்பெருமையும் கொள்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் விரைவில் அல்லாஹ் ஒன்று திரட்டித் தன்முன் கொண்டுவருவான்.
4:172. மஸீஹும், அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளும், அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ளவே மாட்டார்கள், எவர்கள் அவனுக்கு வணக்கம் செலுத்துவதைவிட்டும் குறைவாகக்கருதி, கர்வமும் கொள்வார்களோ அவர்கள் யாவரையும் (மறுமையில் எழுப்பி) அவன் தன் பக்கமே ஒன்று திரட்டுவான்.
4:173
4:173 فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيْهِمْ اُجُوْرَهُمْ وَ يَزِيْدُهُمْ مِّنْ فَضْلِهٖ‌ۚ وَاَمَّا الَّذِيْنَ اسْتَـنْكَفُوْا وَاسْتَكْبَرُوْا فَيُعَذِّبُهُمْ عَذَابًا اَ لِيْمًا  ۙ وَّلَا يَجِدُوْنَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ وَلِيًّا وَّلَا نَصِيْرًا‏
فَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை فَيُوَفِّيْهِمْ முழுமையாக நிறைவேற்றுவான்/ அவர்களுக்கு اُجُوْرَهُمْ கூலிகளை/அவர்களுடைய وَ يَزِيْدُ இன்னும் அதிகப்படுத்துவான் هُمْ அவர்களுக்கு مِّنْ فَضْلِهٖ‌ۚ தன் அருளிலிருந்து وَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் اسْتَـنْكَفُوْا திமிரு பிடித்தார்கள் وَاسْتَكْبَرُوْا இன்னும் பெருமையடித்தார்கள் فَيُعَذِّبُهُمْ வேதனை செய்வான்/அவர்களை عَذَابًا வேதனையால் اَ لِيْمًا  ۙ துன்புறுத்தும் وَّلَا يَجِدُوْنَ இன்னும் காணமாட்டார்கள் لَهُمْ தங்களுக்கு مِّنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ்வை وَلِيًّا பாதுகாவலரை وَّلَا نَصِيْرًا‏ இன்னும் உதவியாளரை
4:173. ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழுமையாக (அல்லாஹ்) கொடுப்பான்; இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான்; எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணி கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான்; அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணமாட்டார்கள்.
4:173. ஆகவே, எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, நற் செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு முழுமையாக அளித்து, தன் அருளால் மென்மேலும், அவர்களுக்கு அதிகப்படுத்துவான். எவர்கள் கர்வம் கொண்டு (அல்லாஹ்வுக்கு அடிமையாய் இருப்பதைக்) குறைவாகக் காண்கின்றனரோ அவர்களைத் துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வைத் தவிர தங்களுக்குத் துணை புரிபவர்களையும் உதவி புரிபவர்களையும் (அங்கு) அவர்கள் காணமாட்டார்கள்.
4:173. (அவ்வேளையில்) எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்கு அவன் அவர்களுடைய கூலிகளை நிறைவாகக் கொடுப்பான். மேலும், தனது அருளால் இன்னும் அதிகம் (கூலி) வழங்குவான். மேலும், எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பணிந்து வாழ்வதை இழிவாகக் கருதித் தற்பெருமையும் கொண்டிருந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் துன்புறுத்தும் தண்டனை அளிப்பான். மேலும், அல்லாஹ்வை அன்றி (தாம் நம்பிக்கை கொண்டிருந்த) பாதுகாவலர் மற்றும் உதவியாளர் எவரையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்.
4:173. எனவே (உண்மையாகவே) விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்-அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்குப் பூரணமாக அளிப்பான், இன்னும் தன் பேரருளிலிருந்து அவர்களுக்கு அதிகப்படுத்துவான், மேலும் (அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக்) குறைவாகக் கண்டு கர்வமும் கொண்டார்களே அத்தகையோர்-அவர்களை துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவன் வேதனை செய்வான், அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் தங்களுக்கு காரியஸ்தனாகவோ, இன்னும் உதவிபுரிபவனாகவோ (அங்கு) அவர்கள் காணமாட்டார்கள்.
4:174
4:174 يٰۤـاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَيْكُمْ نُوْرًا مُّبِيْنًا‏
يٰۤـاَيُّهَا النَّاسُ மனிதர்களே! قَدْ திட்டமாக جَآءَ வந்துள்ளது كُمْ உங்களிடம் بُرْهَانٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّكُمْ உங்கள் இறைவன் وَاَنْزَلْنَاۤ இன்னும் இறக்கினோம் اِلَيْكُمْ உங்களுக்கு نُوْرًا ஓர் ஒளியை مُّبِيْنًا‏ தெளிவானது
4:174. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்.
4:174. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து (போதுமான) அத்தாட்சியாளர் நிச்சயமாக உங்களிடம் வந்துவிட்டார். (அவருடன்) மிகத்தெளிவான (வேதமென்னும்) ஒளியை நாம் உங்களுக்கு இறக்கியிருக்கிறோம்.
4:174. மனிதர்களே! உங்களுடைய அதிபதியிடமிருந்து உங்களுக்குத் தெளிவான சான்று வந்துள்ளது. தெள்ளத் தெளிவாய் வழிகாட்டும் ஒளியையும் நாம் உங்களுக்கு அனுப்பியிருக்கின்றோம்.
4:174. மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து (போதுமான) சான்று திட்டமாக உங்களிடம் வந்துவிட்டது, இன்னும், தெளிவான பேரொளியையே நாம் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கின்றோம்.
4:175
4:175 فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَاعْتَصَمُوْا بِهٖ فَسَيُدْخِلُهُمْ فِىْ رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍۙ وَّيَهْدِيْهِمْ اِلَيْهِ صِرَاطًا مُّسْتَقِيْمًا ؕ‏
فَاَمَّا ஆகவே الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் بِاللّٰهِ அல்லாஹ்வை وَاعْتَصَمُوْا இன்னும் பற்றிப்பிடித்தார்கள் بِهٖ அவனை فَسَيُدْخِلُهُمْ நுழைப்பான்/ அவர்களை فِىْ رَحْمَةٍ கருணையில் مِّنْهُ தன் புறத்திலிருந்து وَفَضْلٍۙ இன்னும் அருள் وَّيَهْدِيْهِمْ இன்னும் வழிகாட்டுவான்/அவர்களுக்கு اِلَيْهِ தன் பக்கம் صِرَاطًا வழியை مُّسْتَقِيْمًا ؕ‏ நேரானது
4:175. ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவ(ன் அருளிய நேர் வழியி)னை பலமாகப் பிடித்துக் கொள்கிறார்களோ, அவர்களைத் தன் ரஹ்மத்திலும், அருளிலும் புகச் செய்கிறான்; இன்னும் தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.
4:175. ஆகவே, எவர்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, அ(ந்த வேதத்)தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்கிறார்களோ அவர்களை அவன் தன் அன்பிலும், அருளிலும் செலுத்தி விடுகிறான். தன்னிடம் வருவதற்குரிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துகிறான்.
4:175. (இனி) எவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ, மேலும் அவனிடம் புகலிடம் தேடுகின்றார்களோ அவர்களை அதிவிரைவில் தனது கருணையிலும் அருளிலும் அல்லாஹ் நுழையச் செய்வான். மேலும், தன் பக்கம் வருவதற்கான நேரான வழியையும் அவர்களுக்குக் காண்பிப்பான்.
4:175. ஆகவே, அல்லாஹ்வை (உண்மையாகவே) விசுவாசித்து அவனைப் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்கின்றார்களே, அத்தகையோர்-அவர்களை, அவன் தன்னிடமிருந்துள்ள அன்பிலும், பேரருளிலும் பிரவேசிக்கச் செய்வான், அன்றியும் தன்பக்கம் (வருவதற்குரிய) நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.
4:176
4:176 يَسْتَفْتُوْنَكَ ؕ قُلِ اللّٰهُ يُفْتِيْكُمْ فِى الْـكَلٰلَةِ‌ ؕ اِنِ امْرُؤٌا هَلَكَ لَـيْسَ لَهٗ وَلَدٌ وَّلَهٗۤ اُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ‌ ۚ وَهُوَ يَرِثُهَاۤ اِنْ لَّمْ يَكُنْ لَّهَا وَلَدٌ‌  ؕ فَاِنْ كَانَـتَا اثْنَتَيْنِ فَلَهُمَا الثُّلُثٰنِ مِمَّا تَرَكَ‌ ؕ وَاِنْ كَانُوْۤا اِخْوَةً رِّجَالًا وَّنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ‌ ؕ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اَنْ تَضِلُّوْا‌ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
يَسْتَفْتُوْنَكَ ؕ தீர்ப்பு கேட்கின்றனர் / உம்மிடம் قُلِ கூறுவீராக اللّٰهُ அல்லாஹ் يُفْتِيْكُمْ உங்களுக்கு கட்டளையிடுகிறான் فِى الْـكَلٰلَةِ‌ ؕ வாரிசு அற்றவர் பற்றி اِنِ امْرُؤٌا (ஆண்) மனிதன் هَلَكَ இறந்து விட்டான் لَـيْسَ இல்லை لَهٗ அவனுக்கு وَلَدٌ சந்ததி وَّلَهٗۤ இன்னும் அவனுக்கு اُخْتٌ ஒரு சகோதரி فَلَهَا அவளுக்கு نِصْفُ பாதி مَا تَرَكَ‌ ۚ எது/விட்டுச்சென்றான் وَهُوَ அவன் يَرِثُهَاۤ வாரிசாக ஆவான்/அவளுக்கு اِنْ لَّمْ يَكُنْ இல்லையென்றால் لَّهَا அவளுக்கு وَلَدٌ‌  ؕ சந்ததி فَاِنْ كَانَـتَا இருந்தால் اثْنَتَيْنِ இரு பெண்களாக فَلَهُمَا அவ்விருவருக்கும் الثُّلُثٰنِ மூன்றில் இரண்டு مِمَّا எதிலிருந்து تَرَكَ‌ ؕ விட்டுச் சென்றான் وَاِنْ كَانُوْۤا அவர்கள் இருந்தால் اِخْوَةً உடன் பிறந்தவர்கள் رِّجَالًا ஆண்களாக وَّنِسَآءً இன்னும் பெண்களாக فَلِلذَّكَرِ ஆணுக்கு مِثْلُ போன்று حَظِّ பங்கு الْاُنْثَيَيْنِ‌ ؕ இரு பெண்களின் يُبَيِّنُ விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு اَنْ تَضِلُّوْا‌ ؕ நீங்கள் வழிதவறாமல் இருப்பதற்காக وَاللّٰهُ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
4:176. (நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்; ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு மக்கள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான்; இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள்; அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு - நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
4:176. (நபியே!) ‘கலாலா' பற்றிய (அதாவது தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத பொருளைப் பற்றிய) மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். சந்ததியில்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்ற (சொத்)தில் பாதி கிடைக்கும். (இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து) அவளுக்குச் சந்ததி இல்லாமலிருந்(து ஒரே ஒரு சகோதரன் மட்டும் இருந்)தால் அவள் விட்டுச்சென்ற அனைத்தையும் அவன் அடைவான். ஆணின்றி இரு பெண்கள் (மட்டும்) இருந்தால், அவள் விட்டுச் சென்றதில் மூன்றில் இரு பாகத்தை இவ்விருவரும் அடைவார்கள். மேலும், ஆணும் பெண்ணும் (ஆகப் பலர்) சகோதரர்களாயிருந்தால், (இறந்தவர் விட்டுச்சென்றதில்) ஆணுக்குப் பெண்ணுக்கிருப்பதைப் போல இரண்டு பங்கு உண்டு. (அதாவது பெண்ணுக்கு ஒரு பங்கும் ஆணுக்கு இரு பங்குகளும் கிடைக்கும்.) நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக (இவற்றை) அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) தெளிவாக விவரிக்கிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
4:176. (நபியே!) மக்கள் உம்மிடம் கலாலா பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு கலாலா பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான்: குழந்தை இல்லாத ஒருவன், ஒரு சகோதரி அவனுக்கு இருக்கும் நிலையில் இறந்துவிட்டால், அவன் விட்டுச் சென்ற சொத்தில் பாதி அவளுக்கு உரியதாகும். குழந்தை இல்லாமல் அந்தச் சகோதரி இறந்துவிட்டால் சகோதரன் அவளுக்கு வாரிசாவான். இறந்து போனவருக்கு இரு சகோதரிகள் இருந்தால், அவ்விருவருக்கும் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு உரியதாகும். சகோதர சகோதரிகள் பலர் இருந்தால், அவர்களில் ஓர் ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்குச் சமமானதாகும். அல்லாஹ் உங்களுக்குச் சட்ட திட்டங்களைத் தெளிவாக விவரிக்கின்றான்; நீங்கள் வழி தவறிவிடக் கூடாது என்பதற்காக! மேலும், அல்லாஹ் ஒவ்வொரு விஷயத்தைக் குறித்தும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
4:176. ‘கலாலா’ (-தாய், தகப்பன், பாட்டன் பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை (நபியே!) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், (அதற்கு) ‘கலாலா’ பற்றி அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான் என்று (நபியே!) நீர் கூறுவீராக! எவரேனுமொரு மனிதன் இறந்து அவனுக்கு குழந்தையில்லாது, ஒரு சகோதரி இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச்சென்ற (சொத்)தில் பாதி உண்டு, (இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து) அவளுக்கு குழந்தையில்லாதிருந்தால் அவன், அவள் விட்டுச் சென்றவைகளுக்கு வாரிசு ஆகி விடுவான், (சகோதரிகளான) அவர்கள் இரு பெண்களாக இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு (பாகங்கள்) அவ்விருவருக்கும் உண்டு, அன்றியும், ஆண்களும் பெண்களுமான சகோதரர்களாயிருந்தால் (இறந்தவர் விட்டுச் சென்றதில்) ஆணுக்கு பெண்ணுக்கிருப்பதைப் போல் இரண்டு பங்குண்டு, நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக (இவைகளை) அல்லாஹ், உங்களுக்கு (இவ்வாறு) தெளிவாக விவரிக்கின்றான், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகிறவன்.