40. ஸூரத்துல் முஃமின்(ஈமான் கொண்டவர்)
மக்கீ, வசனங்கள்: 85

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
40:1
40:1 حٰمٓ‌ ۚ‏
حٰمٓ‌ ۚ‏ ஹா மீம்
40:1. ஹா, மீம்.
40:1. ஹா மீம்.
40:1. ஹா மீம்;
40:1. ஹாமீம்.
40:2
40:2 تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْعَلِيْمِۙ‏
تَنْزِيْلُ இறக்கப்பட்டது الْكِتٰبِ இந்த வேதம் مِنَ اللّٰهِ அல்லாஹ்வின் புறத்தில் இருந்து الْعَزِيْزِ மிகைத்தவன் الْعَلِيْمِۙ‏ நன்கறிந்தவன்
40:2. (யாவரையும்) மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதே இவ்வேதம்.
40:2. (இது அனைவரையும்) மிகைத்தவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதம்.
40:2. இவ்வேதம் அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டிருக்கின்றது. அவனே வல்லமை மிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன்!
40:2. (இது யாவரையும்_) மிகைத்தவனாகிய, (அனைத்தையும்) நன்கறிந்தவனாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கிவைக்கப்பட்ட வேதமாகும்.
40:3
40:3 غَافِرِ الذَّنْۢبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيْدِ الْعِقَابِ ذِى الطَّوْلِؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَؕ اِلَيْهِ الْمَصِيْرُ‏
غَافِرِ மன்னிப்பவன் الذَّنْۢبِ பாவங்களை وَقَابِلِ இன்னும் அங்கீகரிப்பவன் التَّوْبِ திருந்தி மன்னிப்புக் கோருவதை شَدِيْدِ கடுமையானவன் الْعِقَابِ தண்டிப்பதில் ذِى الطَّوْلِؕ அருள் உடையவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَؕ அவனைத் தவிர اِلَيْهِ அவன் பக்கமே الْمَصِيْرُ‏ மீளுமிடம்
40:3. பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை; அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
40:3. அவன் (குற்றவாளிகளுடைய) மன்னிப்புக் கோரலை அங்கீகரித்து பாவங்களை மன்னிப்பவன். (மனமுரண்டாக குற்றம் புரியும் பாவிகளை) வேதனை செய்வதிலும் கடினமானவன். (நல்லவர்கள் மீது) அருள் புரிபவன். அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. அவனிடமே (அனைவரும் விசாரணைக்காகச்) செல்ல வேண்டியதிருக்கிறது.
40:3. பாவத்தை மன்னிப்பவன்; பாவமன்னிப்புக் கோரி மீளுவதை ஏற்றுக் கொள்பவன். கடும் தண்டனையளிப்பவன்; அருட்பேறு உடையவன்! அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டி யிருக்கிறது.
40:3. (அவன்) பாவத்தை மன்னிப்பவன், (குற்றவாளிகளுடைய) தவ்பாவை (பாவ மீட்சியை) ஏற்பவன், (குற்றம் புரிந்தோரைத்) தண்டிப்பதில் கடுமையானவன், (நல்லோர் மீது) அருட்கொடைகள் உடையவன் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அவனிடமே திரும்ப வேண்டியதிருக்கின்றது.
40:4
40:4 مَا يُجَادِلُ فِىْۤ اٰيٰتِ اللّٰهِ اِلَّا الَّذِيْنَ كَفَرُوْا فَلَا يَغْرُرْكَ تَقَلُّبُهُمْ فِى الْبِلَادِ‏
مَا يُجَادِلُ விவாதம் செய்ய மாட்டார்(கள்) فِىْۤ اٰيٰتِ அத்தாட்சிகளில் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَّا தவிர الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களை فَلَا يَغْرُرْكَ ஆகவே, உம்மை மயக்கிவிட வேண்டாம் تَقَلُّبُهُمْ அவர்கள் சுற்றித்திரிவது فِى الْبِلَادِ‏ நகரங்களில்
40:4. நிராகரிப்பவர்களைத் தவிர(வேறு எவரும்) அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்ய மாட்டார்கள். ஆகவே, பட்டணங்களில் அவர்களுடைய (ஆடம்பர) நடமாட்டம் உம்மை ஏமாற்றி விட வேண்டாம்.
40:4. (நபியே!) நிராகரிப்பவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே! வீணாகத் தர்க்கிக்கும்) அவர்கள் பல நகரங்களிலும் (ஆடம்பரத்துடன் சுகபோகமாகச்) சுற்றித் திரிவது உம்மை மயக்கிவிட வேண்டாம்.
40:4. அல்லாஹ்வுடைய வசனங்களில் யாரும் தர்க்கம் புரிவதில்லை; நிராகரித்தவர்களைத் தவிர! இதன்பிறகு உலகநாடுகளில் அவர்களுடைய நடமாட்டம் உம்மை எந்த வகையிலும் ஏமாற்றிவிட வேண்டாம்.
40:4. (நபியே!) நிராகரிப்போரைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வுடைய வசனங்களில் தர்க்கிக்கமாட்டார்கள், ஆகவே, அவர்கள், நகரங்களில் (சுதந்திரமாக) சுற்றித்திரிவது உம்மை ஏமாற்றிவிட வேண்டாம்.
40:5
40:5 كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّ الْاَحْزَابُ مِنْۢ بَعْدِهِمْ وَهَمَّتْ كُلُّ اُمَّةٍۢ بِرَسُوْلِهِمْ لِيَاْخُذُوْهُ ؕ وَجَادَلُوْا بِالْبَاطِلِ لِيُدْحِضُوْا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمُ மக்களும் نُوْحٍ நூஹூடைய وَّ الْاَحْزَابُ இராணுவங்களும் مِنْۢ بَعْدِهِمْ அவர்களுக்குப் பின்னர் وَهَمَّتْ இன்னும் நாடினார்கள் كُلُّ எல்லா اُمَّةٍۢ சமுதாயத்தினரும் بِرَسُوْلِهِمْ தங்களது தூதரை لِيَاْخُذُوْهُ ؕ அவரைதண்டிப்பதற்கு وَجَادَلُوْا இன்னும் தர்க்கம் செய்தனர் بِالْبَاطِلِ அசத்தியத்தைக் கொண்டு لِيُدْحِضُوْا அவர்கள் அழிப்பதற்காக بِهِ அதன் மூலம் الْحَقَّ சத்தியத்தை فَاَخَذْتُهُمْ ஆகவே, நான் அவர்களைப் பிடித்தேன் فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தது عِقَابِ‏ எனது தண்டனை
40:5. இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது?
40:5. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய மக்களும், அவர்களுக்குப் பின் வந்த ஒவ்வொரு கூட்டத்தினரும் (நம் வசனங்களைப் பொய்யாக்கித்) தங்களிடம் வந்த தூதர்களிடம் குற்றம் கண்டு பிடிக்கவே கருதினார்கள். சத்தியத்தை அழித்து விடுவதற்காகப் பொய்யான விஷயங்களைக் கொண்டு (அவர்களுடன்) தர்க்கித்தார்கள். ஆதலால், அவர்களை நாம் (வேதனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம். ஆகவே, (அவர்களுக்கு) எனது தண்டனை எப்படி இருந்தது? (என்பதைக் கவனிப்பீராக!)
40:5. இவர்களுக்கு முன்பு நூஹுடைய சமூகத்தாரும் பொய்யென வாதிட்டிருக்கின்றனர். அவர்களுக்குப் பிறகு, வேறு பல கூட்டத்தினரும் இவ்வாறு செய்துள்ளனர். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்களுடைய தூதரைப் பிடிக்கப் பாய்ந்தனர். அவர்கள் அனைவரும் அசத்தியத்தின் ஆயுதங்களால் சத்தியத்தை வீழ்த்திட முயன்றனர். ஆனால், இறுதியில் நான் அவர்களைப் பிடித்துக் கொண்டேன்.
40:5. இவர்களுக்கு முன் நூஹ்வுடைய சமூகத்தாரும், அவர்களுக்குப் பின் (வந்த) பல கூட்டத்தினர்களும் (நம்மால் அனுப்பப்பட்டோரைப்) பொய்யாக்கினார்கள், மேலும், (அவர்களில்) ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்களிடம் வந்த தூதர்களை(க் கொலை செய்ய அல்லது சிறை)ப் பிடிக்க நாட்டங்கொண்டார்கள், அன்றியும், அவர்கள் அசத்தியத்தைக் கொண்டு_அதன் மூலம் சத்தியத்தை அழித்து விடுவதற்காக (அவர்களுடன்) தர்க்கித்தார்கள். ஆதலால், அவர்களை நான் பிடித்துக் கொண்டேன், ஆகவே, என்னுடைய தண்டனை எப்படி இருந்தது?
40:6
40:6 وَكَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّهُمْ اَصْحٰبُ النَّارِ ؔ‌ۘ‏
وَكَذٰلِكَ இவ்வாறுதான் حَقَّتْ உறுதியாகி விட்டது كَلِمَتُ வாக்கு رَبِّكَ உமது இறைவனின் عَلَى الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரித்தவர்கள் மீது اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اَصْحٰبُ النَّارِ ؔ‌ۘ‏ நரகவாசிகள்
40:6. இவ்வாறே, நிராகரிப்பவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தாம் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு அவர்கள் மீது உறுதியாகிவிட்டது.
40:6. இவ்வாறே இந்நிராகரிப்பவர்கள் மீதும், நிச்சயமாக இவர்கள் நரகவாசிகள்தான் என்ற உமது இறைவனின் வாக்கு நிறைவேறியது.
40:6. பிறகு பாருங்கள், என்னுடைய தண்டனை எத்துணைக் கடுமையானது! ‘அவர்கள் நரகத்தில் நுழைபவர்களே!’ எனும் உம் அதிபதியின் தீர்ப்பு, இவ்வாறு அந்த நிராகரிப்பாளர்கள் அனைவர் மீதும் சார்ந்து விட்டது.
40:6. இவ்வாறே, நிராகரித்தோர் மீது_நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள் என்ற உமதிரட்சகனின் வாக்கும் கடமையாகி (நிறைவேறி) விட்டது.
40:7
40:7 اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُوْنَ بِهٖ وَيَسْتَغْفِرُوْنَ لِلَّذِيْنَ اٰمَنُوْا‌ ۚ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَىْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ‏
اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ சுமப்பவர்களும் الْعَرْشَ அர்ஷை وَمَنْ حَوْلَهٗ அதைச் சுற்றி இருப்பவர்களும் يُسَبِّحُوْنَ துதிக்கின்றனர் بِحَمْدِ புகழை رَبِّهِمْ தங்கள் இறைவனின் وَيُؤْمِنُوْنَ بِهٖ இன்னும் அவனை நம்பிக்கை கொள்கின்றனர் وَيَسْتَغْفِرُوْنَ இன்னும் பாவமன்னிப்புக் கோருகின்றனர் لِلَّذِيْنَ اٰمَنُوْا‌ ۚ நம்பிக்கை கொண்டவர்களுக்காக رَبَّنَا எங்கள் இறைவா وَسِعْتَ நீ விசாலமடைந்து இருக்கின்றாய் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் رَّحْمَةً கருணையாலும் وَّعِلْمًا இன்னும் கல்வியாலும் فَاغْفِرْ ஆகவே மன்னிப்பாயாக! لِلَّذِيْنَ تَابُوْا திருந்தி மன்னிப்புக் கோரியவர்களை وَاتَّبَعُوْا இன்னும் பின்பற்றினார்கள் سَبِيْلَكَ உனது பாதையை وَقِهِمْ இன்னும் அவர்களை பாதுகாப்பாயாக! عَذَابَ வேதனையை விட்டு الْجَحِيْمِ‏ நரகத்தின்
40:7. அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்: “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!
40:7. எவர்கள், ‘அர்ஷை' சுமந்து கொண்டும், அதைச் சூழவும் இருக்கிறார்களோ அவர்கள், தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதி செய்தும், அவனை நம்பிக்கைகொண்டும், நம்பிக்கை கொண்டவர்களின் குற்றங்களை மன்னிக்கும்படி கோரியும், ‘‘எங்கள் இறைவனே! நீ ஞானத்தாலும் கருணையாலும் அனைவரையும்விட மிக்க விசாலமானவன். ஆகவே, (பாவங்களை விட்டு) விலகி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையில் இருந்து நீ பாதுகாத்துக் கொள்வாயாக!'' என்று பிரார்த்தித்துக் கொண்டும்,
40:7. அர்ஷை* சுமந்து கொண்டிருக்கும் வானவர்களும் அதனைச் சுற்றியிருப்பவர்களும் தம் இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும், இறைநம்பிக்கை கொண்டவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருகிறார்கள். (அவர்கள் கூறுகிறார்கள்:) “எங்கள் அதிபதியே! உனது கருணையாலும், உனது ஞானத்தினாலும் எல்லாவற்றையும் சூழ்ந்திருக்கிறாய். எவர்கள் பாவ மன்னிப்புக்கோரி உன்னுடைய வழியைப் பின்பற்றினார்களோ அவர்களை மன்னிப்பாயாக! மேலும், அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக!
40:7. “அர்ஷை” சுமந்து கொண்டிருப்பவர்களும், அதனைச் சுற்றி இருப்பவர்களும் தங்களிரட்சகனின் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்கிறார்கள், இன்னும், அவனை விசுவாசிக்கிறார்கள், மேலும், விசுவாசங்கொண்டோருக்காக (அவர்களின் குற்றங்களை) மன்னிக்குமாறு (அல்லாஹ்விடம்) கோருகிறார்கள், “எங்கள் இரட்சகனே! நீ (உன்னுடைய) கருணையாலும் அறிவாலும் ஒவ்வொரு பொருளையும் விசாலமாக அறிந்திருக்கின்றாய், ஆகவே, தவ்பா செய்து உன்னுடைய (நேர்) வழியைப் பின்பற்றியோருக்கும், நீ (பாவத்தை) பொறுத்தருள்வாயாக, அவர்களை நரக வேதனையிலிருந்து நீ காத்தருள்வாயாக!
40:8
40:8 رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ اۨلَّتِىْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآٮِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ۙ‏
رَبَّنَا எங்கள் இறைவா! وَاَدْخِلْهُمْ இன்னும் அவர்களை நுழைப்பாயாக! جَنّٰتِ சொர்க்கங்களில் عَدْنِ அத்ன் اۨلَّتِىْ எதை وَعَدْتَّهُمْ அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றாய் وَمَنْ صَلَحَ நல்லவர்களாக இருந்தவர்களை مِنْ اٰبَآٮِٕهِمْ அவர்களின் பெற்றோர்கள் وَاَزْوَاجِهِمْ அவர்களின் மனைவிகள் وَذُرِّيّٰتِهِمْ ؕ அவர்களின் சந்ததிகளில் اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ ۙ‏ மகா ஞானவான்
40:8. “எங்கள் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவர்க்கத்தில், அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும், அவர்கள் மனைவியர்களிலும், அவர்கள் சந்ததியார்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
40:8. ‘‘எங்கள் இறைவனே! நீ இவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சொர்க்கங்களில் இவர்களையும் இவர்களுடைய மூதாதைகள், இவர்களுடைய மனைவிகள், இவர்களுடைய சந்ததிகள் ஆகிய இவர்களில் உள்ள நல்லவர்களையும் புகுத்துவாயாக! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவன், (அனைத்தையும் அறிந்த) ஞானமுடையவன்'' என்றும்,
40:8. மேலும், நீ அவர்களுக்கு வாக்களித்த நிலையான சுவனங்களில் அவர்களை நுழையச் செய்வாயாக! அவர்களுடைய தாய் தந்தையர்களிலும், மனைவியரிலும் மற்றும் அவர்களுடைய வழித்தோன்றல்களிலும் நல்லவர்களாய் இருப்பவர்களையும் (அவர்களுடன் சுவனத்தில் சேர்த்து வைப்பாயாக!) திண்ணமாக, நீ வலிமை மிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கிறாய்.
40:8. “எங்கள் இரட்சகனே! நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும் நிலையான சுவனபதிகளில் அவர்களையும், அவர்களுடைய மூதாதையரிலும், அவர்கள் மனைவியரிலும், அவர்களுடைய சந்ததியினரிலும் (ஈமான் கொண்டு, நற்செயல்புரிந்து) யார் நல்லோராகி விட்டாரோ அவர்களையும் புகுத்துவாயாக! நிச்சயமாக நீயே (யாவரையும்) மிகைத்தோன், (யாவையும் அறிந்த) தீர்க்கமான அறிவுடையோன்.”
40:9
40:9 وَقِهِمُ السَّيِّاٰتِ ؕ وَمَنْ تَقِ السَّيِّاٰتِ يَوْمَٮِٕذٍ فَقَدْ رَحِمْتَهٗ ؕ وَذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏
وَقِهِمُ இன்னும் அவர்களை பாதுகாப்பாயாக! السَّيِّاٰتِ ؕ தீமைகளை விட்டு وَمَنْ تَقِ நீங்கள் எவரை பாதுகாப்பாயோ السَّيِّاٰتِ தீமைகளை விட்டு يَوْمَٮِٕذٍ அன்றைய தினம் فَقَدْ திட்டமாக رَحِمْتَهٗ ؕ அவர் மீது நீ கருணை புரிந்துவிட்டாய் وَذٰ لِكَ هُوَ அதுதான் الْفَوْزُ வெற்றியாகும் الْعَظِيْمُ‏ மகத்தான
40:9. “இன்னும், அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! அந்நாளில் நீ யாரை தீமைகளிலிருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சயமாக நீ அருள் புரிந்து விட்டாய் - அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவர்).  
40:9. ‘‘அவர்களை எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள். அன்றைய தினம் எவர்களை நீ எல்லா தீங்குகளிலிருந்தும் பாதுகாத்துக் கொண்டாயோ, அவர்கள் மீது நிச்சயமாக நீ பேரருள் புரிந்துவிட்டாய்'' என்றும் பிரார்த்திப்பார்கள். இதுதான் மிக மகத்தான பெரும் பாக்கியமாகும்.
40:9. மேலும், நீ அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாற்றுவாயாக! மறுமை நாளில் எவரை நீ தீமைகளிலிருந்து காப்பாற்றுகிறாயோ, அவர்மீது பெருங்கருணையைப் பொழிந்துவிட்டாய். இதுவே, மகத்தான வெற்றியாகும்.”
40:9. மேலும், “(சகல) தீமைகளிலிருந்தும் (அவற்றின் தண்டனையிலிருந்தும்), அவர்களைக் காப்பாயாக! அன்றைய தினம், எவரை நீ தீமைகளிலிருந்து காத்துக்கொள்கிறாயோ அவர்மீது திட்டமாக, நீ அருள் புரிந்துவிட்டாய், இன்னும், அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்றும் கூறுவார்கள்).
40:10
40:10 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا يُنَادَوْنَ لَمَقْتُ اللّٰهِ اَكْبَرُ مِنْ مَّقْتِكُمْ اَنْفُسَكُمْ اِذْ تُدْعَوْنَ اِلَى الْاِيْمَانِ فَتَكْفُرُوْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்கள் يُنَادَوْنَ அழைக்கப்படுவார்கள் لَمَقْتُ கோபிப்பது اللّٰهِ அல்லாஹ் اَكْبَرُ மிகப் பெரியது مِنْ مَّقْتِكُمْ நீங்கள் கோபிப்பதை விட اَنْفُسَكُمْ உங்களை اِذْ تُدْعَوْنَ நீங்கள் அழைக்கப்பட்டபோது اِلَى الْاِيْمَانِ நம்பிக்கை கொள்வதற்கு فَتَكْفُرُوْنَ‏ நிராகரித்தீர்கள்
40:10. நிச்சயமாக நிராகரிப்பவர்களிடம்: “இன்று நீங்கள் உங்கள் ஆன்மாக்களைக் கோபித்துக் கொள்வதைவிட அல்லாஹ்வுடைய கோபம் மிகப் பெரியதாகும்; ஏனென்றால் நீங்கள் நம்பிக்கையின் பால் அழைக்கப்பட்ட போது (அதை) நிராகரித்து விட்டீர்களே” என்று அவர்களிடம் கூறப்படும்.
40:10. நிச்சயமாக எவர்கள் நிராகரித்து விட்டார்களோ, அவர்களை நோக்கி, ‘‘இன்றைய தினம் நீங்கள் உங்கள் ஆத்மாவை (நிந்தித்துக்) கோபிப்பதை விட, (உங்கள் மீது) அல்லாஹ்வுடைய (நிந்தனையும்) கோபமும் மிகப் பெரியதாகும். ஏனென்றால், நீங்கள் நம்பிக்கையின் பக்கம் அழைக்கப்பட்ட சமயத்தில், அதை நிராகரித்து விட்டீர்கள்'' என்று அவர்களை நோக்கி சப்தமிட்டுக் கூறப்படும்.
40:10. எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களை (மறுமை நாளில்) அழைத்துக் கூறப்படும்: “இறைநம்பிக்கை கொள்ளுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது அல்லாஹ் உங்கள் மீது கொண்ட கோபம் (இன்று) நீங்கள் உங்கள் மீது கொள்கின்ற கோபத்தை விடவும் கடுமையானது.”
40:10. நிச்சயமாக நிராகரித்துவிட்டார்களே அவர்கள் _ “உங்களையே நீங்கள் கோபித்துகொள்வதை விட அல்லாஹ்வின் கோபம் (உங்களின் மீது) மிகப்பெரியதாகும், (ஏனென்றால்,) நீங்கள் விசுவாசத்தின்பால் (உலகில்) அழைக்கப்பட்ட சமயத்தில் (அதனை) நிராகரித்துவிட்டீர்கள்” என்றும் (மறுமையில் மலக்குகளால்) _ அழைக்கப்(பட்டு கூறப்)படுவார்கள்.
40:11
40:11 قَالُوْا رَبَّنَاۤ اَمَتَّنَا اثْنَتَيْنِ وَاَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰى خُرُوْجٍ مِّنْ سَبِيْلٍ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் رَبَّنَاۤ எங்கள் இறைவா! اَمَتَّنَا நீ எங்களுக்கு மரணத்தைக் கொடுத்தாய் اثْنَتَيْنِ இருமுறை وَاَحْيَيْتَنَا எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய் اثْنَتَيْنِ இருமுறை فَاعْتَرَفْنَا நாங்கள் ஒப்புக் கொண்டோம் بِذُنُوْبِنَا எங்கள் பாவங்களை فَهَلْ اِلٰى خُرُوْجٍ வெளியேறுவதற்கு ஏதேனும் உண்டா? مِّنْ سَبِيْلٍ‏ வழி
40:11. அதற்கவர்கள்: “எங்கள் இறைவனே! நீ எங்களை இருமுறை மரணமடையச் செய்தாய்; இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய்; ஆகையால் நாங்கள் (இப்பொழுது) எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டோம் - எனவே (இதிலிருந்து தப்பி) வெளியேர ஏதும் வழியுண்டா?” எனக் கூறுவர்.
40:11. அதற்கவர்கள், ‘‘எங்கள் இறைவனே! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு விண்ணப்பம் செய்கிறோம். ஆகவே, (இதில் இருந்து நாங்கள்) வெளிப்பட ஏதும் வழி உண்டா?'' என்று கேட்பார்கள்.
40:11. அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ உண்மையில் எங்களுக்கு இரு தடவை இறப்பும், இரு தடவை வாழ்வும் அளித்துவிட்டாய்! இப்போது நாங்கள் எங்கள் தவறுகளை ஒப்புக்கொள்கிறோம். இனி, இங்கிருந்து வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?”
40:11. அ(தற்க)வர்கள், “எங்கள் இரட்சகனே! இருமுறை நீ எங்களை மரணமடையச் செய்தாய், இன்னும், இருமுறை நீ எங்களை உயிர்ப்பித்தாய், ஆகவே, எங்களுடைய பாவங்களை நாங்கள் ஒப்புக்கொண்டோம், எனவே, (இதிலிருந்து நாங்கள் தப்பித்து) வெளியேறுவதற்கு ஏதும் வழி உண்டா?” என்று அவர்கள் கேட்பார்கள்.
40:12
40:12 ذٰ لِكُمْ بِاَنَّهٗۤ اِذَا دُعِىَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْ ۚ وَاِنْ يُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا ؕ فَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِىِّ الْكَبِيْرِ‏
ذٰ لِكُمْ இது بِاَنَّهٗۤ ஏனென்றால் நிச்சயமாக اِذَا دُعِىَ அழைக்கப்பட்டால் اللّٰهُ அல்லாஹ் وَحْدَهٗ அவன் ஒருவனை மட்டும் كَفَرْتُمْ ۚ நீங்கள் நிராகரித்தீர்கள் وَاِنْ يُّشْرَكْ இணை வைக்கப்பட்டால் بِهٖ அவனுக்கு تُؤْمِنُوْا ؕ நம்பிக்கை கொள்கிறீர்கள் فَالْحُكْمُ எல்லா அதிகாரமும் لِلّٰهِ அல்லாஹ்வுக்கே الْعَلِىِّ மிக உயர்ந்தவனும் الْكَبِيْرِ‏ மிகப் பெரியவனுமாகிய
40:12. (பதில் கூறப்படும்:) “அதற்குக் காரணம் அல்லாஹ் ஒருவனே (வணக்கத்திற்குரியவன்; எனவே அவனை வணங்குங்கள்) என்று அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்தீர்கள்; ஆனால், அவனுக்கு (எதையும்) இணையாக்கப்பட்டால் (அதன் மீது) நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள்; ஆகவே இத்தீர்ப்பு மிக்க மேலானவனும், மகாப் பெரியவனுமான அல்லாஹ்வுக்கே உரியது.”
40:12. (அதற்கு இறைவன்,) ‘‘உங்களுக்கு இ(த்தண்டனை வந்த)தன் காரணமாவது: அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறினால், அதை நீங்கள் மறுத்தீர்கள். அவனுக்கு எவரும் இணை உண்டு என்று கூறப்பட்டால், அதை நீங்கள் நம்பினீர்கள்! ஆதலால், (இன்றைய தினம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இவ்வேதனை) மிகப் பெரியவனும், மேலானவனுமாகிய அல்லாஹ்வுடைய தீர்ப்பே!'' (என்று கூறுவான்).
40:12. (பதில் கூறப்படும்:) இந்நிலை உங்களுக்கு ஏற்பட்டதற்குக் காரணம், ஏக அல்லாஹ்வின் பக்கம் மட்டும் அழைக்கப்பட்டபோது நீங்கள் ஏற்க மறுத்ததும், அவனோடு மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளப்பட்டபோது அதை ஏற்றுக் கொண்டதும்தான்! இனி தீர்ப்பு வழங்குவது, மேலானவனும் உயர்ந்தவனுமாகிய அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது.
40:12. இ(த்தண்டனையான)து_ நிச்சயமாக அதன் காரணம்: அல்லாஹ், அவன் தனித்தவனாக அழைக்கப்பட்டால் நீங்கள் நிராகரித்தீர்கள், மேலும், அவனுக்கு (உங்கள் தெய்வங்கள்) இணையாக்கப்பட்டால் (அதை) விசுவாசித்தீர்கள், இப்பொழுது தீர்ப்பு (வழங்குவது) மிக்க உயர்வானவனாகிய மிகப் பெரியவனான அல்லாஹ்விற்கு (மட்டும்) உரியதாகும் (என்று கூறப்படும்).
40:13
40:13 هُوَ الَّذِىْ يُرِيْكُمْ اٰيٰتِهٖ وَيُنَزِّلُ لَـكُمْ مِّنَ السَّمَآءِ رِزْقًا ؕ وَمَا يَتَذَكَّرُ اِلَّا مَنْ يُّنِيْبُ‏
هُوَ الَّذِىْ அவன்தான் يُرِيْكُمْ உங்களுக்கு காண்பிக்கின்றான் اٰيٰتِهٖ தனது அத்தாட்சிகளை وَيُنَزِّلُ இறக்குகின்றான் لَـكُمْ உங்களுக்கு مِّنَ السَّمَآءِ வானத்திலிருந்து رِزْقًا ؕ உணவை وَمَا يَتَذَكَّرُ நல்லுபதேசம் பெற மாட்டார்கள் اِلَّا مَنْ يُّنِيْبُ‏ திரும்புகின்றவர்களைத் தவிர
40:13. அவனே தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; உங்களுக்கு வானத்திலிருந்து உணவையும் இறக்கிவைக்கிறான் - எனவே அவனையே முன்னோக்கி நிற்பவர்களைத் தவிர (வேறு யாரும்) நல்லுணர்வு பெறமாட்டார்கள்.
40:13. அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவித்து, வானத்தில் இருந்து உங்களுக்கு உணவுகளையும் இறக்கிவைக்கிறான். (ஒவ்வொரு விஷயத்திலும்) அவனையே முன்நோக்குபவர்களைத் தவிர, மற்றெவரும் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெற மாட்டார்கள்.
40:13. அவன்தான் உங்களுக்குத் தன்னுடைய சான்றுகளைக் காண்பிக்கிறான். மேலும், வானத்திலிருந்து உங்களுக்காக உணவை இறக்குகிறான். ஆனால், அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிறவன் மட்டுமே (இந்தச் சான்றுகளைக் கொண்டு) படிப்பினை பெறுகிறான்.
40:13. அவன் எத்தகையவனென்றால், தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்கு அவன் காண்பிக்கிறான், மேலும், வானத்திலிருந்து உங்களுக்கு உணவை இறக்கிவைக்கிறான், (ஒவ்வொரு விஷயத்திலும் அவனுக்குக் கீழ்ப்படிந்து அவன் பக்கம்) திரும்புபவர்களைத் தவிர, (வேறெவரும் இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறவுமாட்டார்கள்.
40:14
40:14 فَادْعُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْـكٰفِرُوْنَ‏
فَادْعُوا ஆகவே அழையுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مُخْلِصِيْنَ لَهُ அவனுக்கு பரிசுத்தமாக்கியவர்களாக الدِّيْنَ வழிபாடுகளை وَلَوْ كَرِهَ வெறுத்தாலும் சரியே! الْـكٰفِرُوْنَ‏ நிராகரிப்பவர்கள்
40:14. ஆகவே, காஃபிர்கள் வெறுத்த போதிலும், நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க்கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தித்து) அழையுங்கள்.
40:14. ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிப்பட்டு, கலப்பற்ற மனதுடையவர்களாக அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருங்கள்.
40:14. எனவே (அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்றவர்களே!) உங்கள் தீனை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிய வண்ணம் அவனையே அழையுங்கள்; உங்களுடைய இந்தச் செயல் இறைநிராகரிப்பாளர்களுக்கு எவ்வளவு வெறுப்பூட்டக்கூடியதாய் இருந்தாலும் சரியே!
40:14. ஆகவே, நிராகரித்துக் கொண்டிருப்போர் வெறுத்தபோதிலும், நீங்கள் அல்லாஹ்வை_ முற்றிலும் வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றவர்களாக்கி வைக்கிறவர்களாக (பிரார்த்தித்து) அழையுங்கள்.
40:15
40:15 رَفِيْعُ الدَّرَجٰتِ ذُو الْعَرْشِ‌ ۚ يُلْقِى الرُّوْحَ مِنْ اَمْرِهٖ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ لِيُنْذِرَ يَوْمَ التَّلَاقِ ۙ‏
رَفِيْعُ உயர்த்தக்கூடியவன் الدَّرَجٰتِ அந்தஸ்துகளை ذُو الْعَرْشِ‌ ۚ அர்ஷுடையவன் يُلْقِى இறக்கினான் الرُّوْحَ வஹ்யை مِنْ اَمْرِهٖ தனது கட்டளையை உள்ளடக்கிய عَلٰى مَنْ يَّشَآءُ தான் நாடியவர் மீது مِنْ عِبَادِهٖ தனது அடியார்களில் لِيُنْذِرَ அவர்எச்சரிப்பதற்காக يَوْمَ التَّلَاقِ ۙ‏ சந்திக்கின்ற நாளைப் பற்றி
40:15. (அவனே) அந்தஸ்துகளை உயர்த்துபவன்; அர்ஷுக்குரியவன்; சந்திப்புக்குரிய (இறுதி) நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது தன் கட்டளையை வஹீ மூலம் இறக்கி வைக்கிறான்.
40:15. அவன் மிக்க உயர்ந்த பதவிகள் உடையவன், அர்ஷுக்கு சொந்தக்காரன். (தன்னைச்) சந்திக்கும் நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களின் மீது தன் கட்டளையை வஹ்யி மூலம் அவன் இறக்கிவைக்கிறான்.
40:15. அவன் உயர்ந்த அந்தஸ்துகளை உடையவன்; அர்ஷின் உரிமையாளன்; அவன் தன்னுடைய அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது தனது கட்டளையால் ரூஹை இறக்கி வைக்கிறான்; சந்திக்கவிருக்கும் நாளைக் குறித்து அவர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக!
40:15. (அவன்) பதவிகளை உயர்த்துபவன், அர்ஷூடையவன், (தன்னைச்) சந்திக்கும் நாளை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக தன் அடியார்களில், தான் நாடியவர்களின் மீது தன் கட்டளையின்படி வஹீயை இறக்கிவைக்கின்றான்.
40:16
40:16 يَوْمَ هُمْ بَارِزُوْنَ ۚ لَا يَخْفٰى عَلَى اللّٰهِ مِنْهُمْ شَىْءٌ ؕ لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ ؕ لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ‏
يَوْمَ நாளை(ப் பற்றி) هُمْ அவர்கள் بَارِزُوْنَ ۚ வெளிப்பட்டு நிற்பார்கள் لَا يَخْفٰى மறைந்துவிடாது عَلَى முன்னால் اللّٰهِ அல்லாஹ்வின் مِنْهُمْ அவர்களில் شَىْءٌ ؕ எதுவும் لِمَنِ யாருக்கு உரியது? الْمُلْكُ ஆட்சி الْيَوْمَ ؕ இன்று لِلّٰهِ அல்லாஹ்விற்கே உரியது الْوَاحِدِ ஒருவனும் الْقَهَّارِ‏ அடக்கி ஆள்பவனுமாகிய
40:16. அந்நாளில் அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள்; அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது; அந்நாளில் ஆட்சி யாருக்குடையதாக இருக்கும் - ஏகனாகிய, அடக்கியாளும் வல்லமை மிக்க அல்லாஹ்வுக்கே யாகும்.
40:16. (மரணித்த) அவர்கள் அந்நாளில் (சமாதிகளிலிருந்து) வெளிப்பட்டு(த் தங்கள் இறைவனின்) முன் வந்து நிற்பார்கள். அவர்கள் செய்த ஒரு விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்து விடாது. (அவர்களை நோக்கி,) இன்றைய தினம், ‘‘எவருடைய ஆட்சி? (என்று கேட்டு, அனைவரையும்) அடக்கி ஆளும் ஒருவனாகிய அந்த அல்லாஹ்வுக்குரியதே!'' (என்று பதில் கூறப்படும்).
40:16. அந்நாளிலோ மக்கள் எந்தத் திரையுமின்றி வெளிப்பட்டுவிடுவார்கள். அவர்களுடைய எந்த விஷயமும் அல்லாஹ்வை விட்டு மறைந்திருக்காது. (அன்று அழைத்துக் கேட்கப்படும்:) “இன்று ஆட்சியதிகாரம் யாருக்குரியது?” (அனைத்துலகமும் கூறும்:) “எல்லாவற்றையும் அடக்கியாளும் ஏகன் ஆகிய அல்லாஹ்விற்குரியது.”
40:16. (மரணித்த) அவர்கள் (மண்ணறைகளிலிருந்து) வெளிப்பட்டவர்களாக வரும் நாளில், அவர்களிலிருந்து எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது, “ஆட்சி, இன்று யாருக்குரியது?” (என்று கேட்டுவிட்டு, அதற்கு விடையாக, “யாவரையும்) அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது” (என்று அவன் கூறுவான்).
40:17
40:17 اَ لْيَوْمَ تُجْزٰى كُلُّ نَـفْسٍۢ بِمَا كَسَبَتْ ؕ لَا ظُلْمَ الْيَوْمَ ؕ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏
اَ لْيَوْمَ இன்று تُجْزٰى கூலி கொடுக்கப்படும் كُلُّ எல்லா نَـفْسٍۢ ஆன்மாவுக்கும் بِمَا كَسَبَتْ ؕ அவைசெய்தவற்றுக்கு لَا ظُلْمَ எவ்வித அநியாயமும் இருக்காது الْيَوْمَ ؕ இன்று اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் سَرِيْعُ மிக விரைவானவன் الْحِسَابِ‏ விசாரிப்பதில்
40:17. அந்நாளில் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்ததற்குக் கூலி கொடுக்கப்படும்; அந்நாளில் எந்த அநியாயமும் இல்லை. நிச்சயமாக, அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
40:17. இன்றைய தினம் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அவை செய்த செயல்களுக்குத் தக்க கூலி கொடுக்கப்படும். இன்றைய தினம் ஒரு அநியாயமும் நடைபெறாது. அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்(டுத் தீர்ப்பளிப்)பதில் மிகத் தீவிரமானவன்.
40:17. (அப்போது கூறப்படும்:) “இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எதைச் சம்பாதித்தானோ, அதற்குரிய கூலி வழங்கப்படும். இன்று எவர் மீதும் எந்தவித அநீதியும் ஏற்படாது. திண்ணமாக, அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிக விரைவானவன்!”
40:17. “இன்றையத்தினம் ஒவ்வோர் ஆத்மாவும், அது சம்பாதித்தது கொண்டு கூலி கொடுக்கப்படும். இன்றையத் தினம் (எவ்வித) அநியாயமும் இல்லை, நிச்சயமாக அல்லாஹ் (கேள்வி) கணக்குக் கேட்பதில் மிகத் தீவிரமானவன்” (என்றும் கூறப்படும்).
40:18
40:18 وَاَنْذِرْهُمْ يَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَى الْحَـنَاجِرِ كٰظِمِيْنَ ؕ مَا لِلظّٰلِمِيْنَ مِنْ حَمِيْمٍ وَّلَا شَفِيْعٍ يُّطَاعُ ؕ‏
وَاَنْذِرْهُمْ அவர்களை நீர் எச்சரிப்பீராக! يَوْمَ الْاٰزِفَةِ நெருங்கி வரக்கூடிய நாளைப் பற்றி اِذِ போது الْقُلُوْبُ உள்ளங்கள் لَدَى الْحَـنَاجِرِ தொண்டைகளுக்கு அருகில் كٰظِمِيْنَ ؕ துக்கம் நிறைந்தவர்களாக مَا لِلظّٰلِمِيْنَ அந்த அநியாயக்காரர்களுக்கு இருக்கமாட்டார் مِنْ حَمِيْمٍ நண்பர் எவரும் وَّلَا شَفِيْعٍ இன்னும் ஒரு பரிந்துரையாளரும் இருக்க மாட்டார் يُّطَاعُ ؕ‏ ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்
40:18. (நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக; இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.
40:18. (நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத்தால் அவர்களின் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும். அநியாயம் செய்பவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்கமாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்கமாட்டார்.
40:18. (நபியே!) அண்மித்துவிட்டிருக்கும் அந்த நாளினைக் குறித்து இவர்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வீராக! அன்றோ இதயங்கள் தொண்டையை அடைத்துக் கொள்ளும். மேலும், மக்கள் துக்கத்தை மென்று விழுங்கிக் கொண்டிருப்பார்கள். அப்போது கொடுமைக்காரர்களுக்கு இரக்கம் காட்டுகிற எந்த நண்பனும் கிடைக்கமாட்டான். ஏற்றுக்கொள்ளத் தக்க எந்தப் பரிந்துரையாளனும் கிடைக்க மாட்டான்.
40:18. மேலும், (நபியே!) சமீபித்து வரும் (மறுமை) நாளைப் பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அழுதவர்களாக, இதயங்கள் தொண்டைக்குழிகளை அடைந்துவிடும் சமயத்தில் (_அந்நாளில்) அநியாயக்காரர்களுக்கு (இரக்கப்படும்) நண்பனோ, (அல்லாஹ்விடம்) அங்கீகரிக்கப்படும் பரிந்துரை செய்பவனோ இருக்கமாட்டான்.
40:19
40:19 يَعْلَمُ خَآٮِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ‏
يَعْلَمُ அவன் நன்கறிவான் خَآٮِٕنَةَ மோசடிகளையும் الْاَعْيُنِ கண்களின் وَمَا تُخْفِى மறைப்பதையும் الصُّدُوْرُ‏ நெஞ்சங்கள்
40:19. கண்கள் செய்யும் மோசத்தையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான்.
40:19. (மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்கள் மறைப்பவற்றையும் அல்லாஹ் நன்கறிவான்.
40:19. கண்களின் கள்ளத்தனங்களையும், நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவற்றையும் அல்லாஹ் அறிகின்றான்.
40:19. (மனிதர்களின்) கண்களின் மோசடியையும், நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அவன் நன்கறிவான்.
40:20
40:20 وَاللّٰهُ يَقْضِىْ بِالْحَقِّؕ وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ لَا يَقْضُوْنَ بِشَىْءٍؕ اِنَّ اللّٰهَ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏
وَاللّٰهُ அல்லாஹ் يَقْضِىْ தீர்ப்பளிக்கின்றான் بِالْحَقِّؕ உண்மையைத்தான் وَالَّذِيْنَ எவர்களை يَدْعُوْنَ அவர்கள் அழைக்கின்றார்களோ مِنْ دُوْنِهٖ அவனையன்றி لَا يَقْضُوْنَ அவர்கள் தீர்ப்பளிக்க மாட்டார்கள் بِشَىْءٍؕ எதையும் اِنَّ நிச்சயமாக اللّٰهَ هُوَ அல்லாஹ்தான் السَّمِيْعُ நன்கு செவிமடுப்பவன் الْبَصِيْرُ‏ உற்று நோக்குபவன்
40:20. மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டே தீர்ப்பளிப்பவன். அன்றியும், அவனையன்றி அவர்கள் (வேறு) எவர்களை அழைத்(துப் பிரார்த்தித்)தார்களோ, அவர்கள் யாதொரு விஷயத்தைப் பற்றியும் தீர்ப்புச் செய்ய மாட்டார்கள் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், தீர்க்கமாகப் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.  
40:20. ஆதலால், முற்றிலும் நீதமாகவே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். இவர்கள் (இறைவனென) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவையோ (அதற்கு மாறாக) எத்தகைய தீர்ப்பும் கூறமுடியாது. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
40:20. மேலும், அல்லாஹ் பாரபட்சமின்றி துல்லியமான தீர்ப்பு வழங்குவான். ஆனால், அல்லாஹ்வை விடுத்து யாரை இவர்கள் (இணைவைப்பாளர்கள்) அழைக்கிறார்களோ அவர்கள் எந்த விஷயத்திலும் தீர்ப்பு வழங்கக்கூடியவர்களல்லர். ஐயமின்றி, அல்லாஹ்தான் அனைத்தையும் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
40:20. மேலும், அல்லாஹ் உண்மையைக் கொண்டு (நீதமாகவே) தீர்ப்பளிப்பான், அவனையன்றி அவர்கள் அழைக்கிறார்களே அத்தகையோர் _ (இவர்களுக்காக) எந்த ஒன்றையும் _ அவர்கள் தீர்ப்புச் செய்யமாட்டார்கள், நிச்சயமாக அல்லாஹ், அவனே (யாவையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
40:21
40:21 اَوَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْؕ كَانُوْا هُمْ اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاٰثَارًا فِى الْاَرْضِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْؕ وَمَا كَانَ لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ وَّاقٍ‏
اَوَلَمْ يَسِيْرُوْا அவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா? فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرُوْا பார்த்திருப்பார்களே! كَيْفَ كَانَ எப்படி இருந்தது عَاقِبَةُ முடிவு الَّذِيْنَ كَانُوْا مِنْ قَبْلِهِمْؕ தங்களுக்கு முன்னுள்ளவர்களின் كَانُوْا இருந்தார்கள் هُمْ அவர்கள் اَشَدَّ மிகபலசாலிகளாகவும் مِنْهُمْ இவர்களை விட قُوَّةً (உடல்) வலிமையால் وَّاٰثَارًا இன்னும் அடையாளங்களால் فِى الْاَرْضِ பூமியில் فَاَخَذَ தண்டித்தான் هُمُ அவர்களை اللّٰهُ அல்லாஹ் بِذُنُوْبِهِمْؕ அவர்களின் பாவங்களினால் وَمَا كَانَ இருக்கவில்லை لَهُمْ அவர்களை مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مِنْ وَّاقٍ‏ பாதுகாப்பவர் எவரும்
40:21. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.
40:21. (நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? (திரிந்திருந்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். (முன்னிருந்த) அவர்களோ, பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் இவர்களைவிட மிகைத்தவர்களாகவே இருந்தனர். (எனினும்,) அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான். அல்லாஹ்வின் பிடியிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள ஒருவரும் இருக்கவில்லை.
40:21. இவர்கள் என்றாவது பூமியில் சுற்றித் திரிந்து, தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் கதி என்னவாயிற்று என்பதைப் பார்த்ததில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக வலிமையுடையவர்களாய் இருந்தார்கள். மேலும், இவர்களைவிட அதிகமாகப் பூமியில் பெரும் பெரும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அல்லாஹ் அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைப் பிடித்துக் கொண்டான். மேலும், அவர்களை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுவோர் எவரும் இருக்கவில்லை.
40:21. (நபியே!) இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (முன்னிருந்த) அவர்களோ, பலத்தாலும், பூமியில் விட்டுச்சென்ற (பூர்வ) அடையாளங்களாலும் இவர்களை விட மிகக் கடினமானவர்களாகவே இருந்தனர். அப்போது, அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான், அல்லாஹ்வி(ன் பிடியி)லிருந்து அவர்களைக் காப்பவர் எவரும் இருக்கவில்லை.
40:22
40:22 ذٰلِكَ بِاَنَّهُمْ كَانَتْ تَّاْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَكَفَرُوْا فَاَخَذَهُمُ اللّٰهُؕ اِنَّهٗ قَوِىٌّ شَدِيْدُ الْعِقَابِ‏
ذٰلِكَ بِاَنَّهُمْ அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் كَانَتْ تَّاْتِيْهِمْ அவர்களிடம் வந்து கொண்டிருந்தார்கள் رُسُلُهُمْ அவர்களின் தூதர்கள் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளுடன் فَكَفَرُوْا ஆனால், அவர்கள் நிராகரித்தார்கள் فَاَخَذَ ஆகவே தண்டித்தான் هُمُ அவர்களை اللّٰهُؕ அல்லாஹ் اِنَّهٗ நிச்சயமாக அவன் قَوِىٌّ வலிமை மிக்கவன் شَدِيْدُ الْعِقَابِ‏ தண்டிப்பதில் கடுமையானவன்
40:22. அது (ஏனெனில்): நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தார்கள்; ஆனால், அவர்கள் நிராகரித்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்தான் - நிச்சயமாக (அல்லாஹ்) வலிமை மிக்கவன்; தண்டிப்பதில் கடுமையானவன்.
40:22. இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்களிடம், தெளிவான அத்தாட்சிகளுடன் நம் தூதர்கள் வந்து கொண்டிருந்தனர். (அவர்களை) இவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அவன் மிக பலமுடையவன், (பாவிகளை) வேதனை செய்வதில் மிக கடினமானவன்.
40:22. அவர்களுக்கு நேர்ந்த இந்த கதிக்குக் காரணம், அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தும், அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதுதான். இறுதியில், அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். திண்ணமாக, அவன் வலிமை மிக்கவனாகவும் கடுமையாகத் தண்டிப்பவனாகவும் இருக்கிறான்.
40:22. அது (ஏனெனில்) நிச்சயமாக (அத்தாட்சிகளில்) தெளிவானவற்றுடன் அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் வந்து கொண்டிருந்தனர். ஆனால், (அவர்களை) இவர்கள் நிராகரித்துவிட்டனர் என்ற காரணத்தினாலாகும். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்துக்கொண்டான், நிச்சயமாக, அவன் மிக்க பலமுடையவன், (குற்றவாளிகளைத்) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்.
40:23
40:23 وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا அனுப்பினோம் مُوْسٰى மூஸாவை بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளுடன் وَسُلْطٰنٍ இன்னும் ஆதாரத்துடன் مُّبِيْنٍۙ‏ தெளிவான
40:23. மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்-
40:23. மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம் வசனங்களையும் தெளிவான அத்தாட்சிகளையும் கொடுத்து அனுப்பிவைத்தோம்.
40:23. திண்ணமாக, நாம் மூஸாவை நம் அத்தாட்சிகளுடனும், தெளிவான நியமனச் சான்றுகளுடனும் அனுப்பினோம்.
40:23. மேலும், திட்டமாக நாம், மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டும், தெளிவான சான்றைக் கொண்டும் அனுப்பிவைத்தோம்.
40:24
40:24 اِلٰى فِرْعَوْنَ وَ هَامٰنَ وَقَارُوْنَ فَقَالُوْا سٰحِرٌ كَذَّابٌ‏
اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் وَ هَامٰنَ இன்னும் ஹாமான் وَقَارُوْنَ இன்னும் காரூன் فَقَالُوْا அவர்கள் கூறினார்கள் سٰحِرٌ சூனியக்காரர் كَذَّابٌ‏ பொய்யர்
40:24. ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம்; ஆனால் அவர்களோ: “(இவர்) பொய்யுரைப்பவர், சூனியக்காரர்” என்று கூறினர்.
40:24. ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களிடம் (அவரை அனுப்பி வைத்தோம்). அதற்கவர்கள் (மூஸாவை அவர்) ‘‘பெரும் பொய் சொல்லும் சூனியக்காரர்'' என்று கூறினார்கள்.
40:24. ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். ஆனால் அவர்கள் கூறிவிட்டார்கள், “சூனியக்காரர், பெரும் பொய்யர்” என்று!
40:24. ஃபிர் அவ்ன், ஹாமான், காரூன் ஆகியவர்களின்பால் (அவரை அனுப்பி வைத்தோம்). அப்பொழுது அவர்களோ (அவரைச்) சூனியக்காரர், பெரும் பொய்யர் என்று கூறினார்கள்.
40:25
40:25 فَلَمَّا جَآءَهُمْ بِالْحَقِّ مِنْ عِنْدِنَا قَالُوْا اقْتُلُوْۤا اَبْنَآءَ الَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ وَاسْتَحْيُوْا نِسَآءَهُمْؕ وَمَا كَيْدُ الْكٰفِرِيْنَ اِلَّا فِىْ ضَلٰلٍ‏
فَلَمَّا جَآءَ அவர் வந்த போது هُمْ அவர்களிடம் بِالْحَقِّ சத்தியத்தைக்கொண்டு مِنْ عِنْدِنَا நம்மிடமிருந்து قَالُوْا அவர்கள் கூறினார்கள் اقْتُلُوْۤا கொன்று விடுங்கள்! اَبْنَآءَ ஆண் பிள்ளைகளை الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களின் مَعَهٗ இவருடன் وَاسْتَحْيُوْا இன்னும் வாழவிடுங்கள்! نِسَآءَ பெண்களை هُمْؕ அவர்களின் وَمَا كَيْدُ சூழ்ச்சி இல்லை الْكٰفِرِيْنَ நிராகரிப்பவர்களின் اِلَّا தவிர فِىْ ضَلٰلٍ‏ வழிகேட்டில்
40:25. ஆகவே, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது, அவர்கள்: “இவருடன் ஈமான் கொண்டிருப்போரின் ஆண் குழந்தைகளை கொன்று, அவர்களின் பெண் குழந்தைகளை உயிருடன் விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள்; மேலும் காஃபிர்களின் சதி வழிகேட்டிலன்றி வேறில்லை.
40:25. அவர், உண்மையான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுசென்ற போதெல்லாம் அதற்கவர்கள், ‘‘(மூஸாவை) நம்பிக்கை கொண்டிருப்பவர்களுடைய ஆண் மக்களை கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ விடுங்கள்'' என்று (தன் மக்களுக்குக்) கூறினார்கள். ஆகவே, இந்நிராகரிப்பவர்களின் சூழ்ச்சி வழிகேட்டிலேயே தவிர (வேறு எதிலும்) செல்லவில்லை.
40:25. பின்னர், அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “எவர்கள் நம்பிக்கை கொண்டு இவர்களுடன் சேர்ந்துவிட்டார்களோ, அவர்கள் அனைவரின் ஆண் மக்களையும் கொன்றுவிடுங்கள்; பெண்மக்களை உயிரோடு விட்டுவிடுங்கள்.” ஆனால், நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி வீணாகவே போயிற்று.
40:25. ஆகவே அவர், நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்தபோது, அவர்கள், (மூஸாவாகிய) “அவருடன் விசுவாசங் கொண்டிருக்கின்றார்களே, அவர்களுடைய ஆண் மக்களைக் கொன்றுவிடுங்கள், இன்னும், அவர்களுடைய பெண் மக்களை உயிருடன் வாழ (விட்டு) விடுங்கள்” என்று கூறினார்கள். மேலும், நிராகரிப்போரின் சூழ்ச்சி வழிகேட்டிலேயே தவிர இல்லை.
40:26
40:26 وَقَالَ فِرْعَوْنُ ذَرُوْنِىْۤ اَقْتُلْ مُوْسٰى وَلْيَدْعُ رَبَّهٗ‌ۚ اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّبَدِّلَ دِيْنَكُمْ اَوْ اَنْ يُّظْهِرَ فِى الْاَرْضِ الْفَسَادَ‏
وَقَالَ கூறினான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் ذَرُوْنِىْۤ என்னை விடுங்கள் اَقْتُلْ கொன்று விடுகிறேன் مُوْسٰى மூஸாவை وَلْيَدْعُ அவர் அழைக்கட்டும் رَبَّهٗ‌ۚ தன் இறைவனை اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் اَنْ يُّبَدِّلَ அவர் மாற்றிவிடுவார் என்று دِيْنَكُمْ உங்கள் மார்க்கத்தை اَوْ அல்லது اَنْ يُّظْهِرَ உருவாக்கி விடுவார் என்று فِى الْاَرْضِ இந்த பூமியில் الْفَسَادَ‏ குழப்பத்தை
40:26. மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று.
40:26. மேலும், ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) ‘‘என்னை(த் தடை செய்யாது) விட்டுவிடுங்கள். நான் மூஸாவைக் கொலை செய்து விடுகிறேன். அவர் (தன்னை காத்துக்கொள்ள) தனது இறைவனை அழைக்கட்டும். நிச்சயமாக அவர் உங்கள் மார்க்கத்தையே மாற்றிவிடக்கூடும்; அல்லது பூமியில் விஷமத்தைப் பரப்பி விடக்கூடும் என்று நான் பயப்படுகிறேன்'' என்றும் கூறினான்.
40:26. ஃபிர்அவ்ன் (ஒரு நாள் தன் அவையோரிடம்) கூறினான்: “விடுங்கள் என்னை! நான் இந்த மூஸாவைக் கொன்று விடுகின்றேன். அவர் அழைத்துப் பார்க்கட்டும், தன் அதி பதியை! இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார் அல்லது நாட்டில் அராஜகம் விளைவிப்பார் என்று நான் அஞ்சுகிறேன்!”
40:26. ஃபிர் அவ்ன் (தன் ஜனங்களிடம்) “என்னை விட்டுவிடுங்கள், மூஸாவை நான் கொலை செய்துவிடுவேன், மேலும், அவர் (தன்னைக்காத்துக்கொள்ள) தன் இரட்சகனை அழைக்கட்டும், அவர் உங்களுடைய மார்க்கத்தை மாற்றிவிடுவார், அல்லது, பூமியில் குழப்பத்தை வெளிப்படுத்துவார் என்று நிச்சயமாக, நான் பயப்படுகிறேன்” என்றும் கூறினான்.
40:27
40:27 وَقَالَ مُوْسٰٓى اِنِّىْ عُذْتُ بِرَبِّىْ وَرَبِّكُمْ مِّنْ كُلِّ مُتَكَبِّرٍ لَّا يُؤْمِنُ بِيَوْمِ الْحِسَابِ‏
وَقَالَ கூறினார் مُوْسٰٓى மூஸா اِنِّىْ நிச்சயமாக நான் عُذْتُ பாதுகாவல் தேடுகிறேன் بِرَبِّىْ எனது இறைவனிடம் وَرَبِّكُمْ இன்னும் உங்கள் இறைவனிடம் مِّنْ كُلِّ எல்லோரை விட்டும் مُتَكَبِّرٍ பெருமை அடிக்கின்றவன் لَّا يُؤْمِنُ நம்பிக்கைகொள்ள மாட்டான் بِيَوْمِ الْحِسَابِ‏ விசாரணை நாளை
40:27. மூஸா கூறினார்: “கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாள் மீது நம்பிக்கை கொள்ளாத, பெருமையடிக்கும் எல்லோரையும் விட்டு, என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருப்பவனிடம் நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.”  
40:27. அதற்கு மூஸா, (அவனை நோக்கி) ‘‘கேள்வி கணக்கு(க் கேட்கப்படும்) நாளை நம்பாது, கர்வம்கொண்ட (உங்கள்) அனைவருடைய தீங்கை விட்டும், என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவன் என்னை பாதுகாத்துக் கொள்ளுமாறு கோருகிறேன்'' என்று கூறினார்.
40:27. மூஸா கூறினார்: “கணக்கு வாங்கப்படும் நாளின் மீது நம்பிக்கை கொள்ளாத அனைத்து ஆணவக்காரர்களை விட்டும் நான் என்னுடையவும், உங்களுடையவும் அதிபதியிடம் பாதுகாப்பு தேடியிருக்கிறேன்.”
40:27. அதற்கு மூஸா (அவனிடம், “கேள்வி) கணக்கு(க் கேட்கப்படும்) நாளை நம்பிக்கை கொள்ளாத கர்வங்கொண்ட (தீயவர்களாகிய உங்கள்) ஒவ்வொருவரையும் விட்டு, என் இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாகிய அவனிடமே நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்” என்று கூறினார்.
40:28
40:28 وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ ‌ۖ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَكْتُمُ اِيْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ يَّقُوْلَ رَبِّىَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَيِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ وَاِنْ يَّكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهٗ ؕ وَاِنْ يَّكُ صَادِقًا يُّصِبْكُمْ بَعْضُ الَّذِىْ يَعِدُكُمْ ۚ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ‏
وَقَالَ கூறினார் رَجُلٌ ஓர் ஆடவர் مُّؤْمِنٌ ۖ நம்பிக்கைகொண்டவர் مِّنْ اٰلِ குடும்பத்தாரில் فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய يَكْتُمُ மறைத்தவராக اِيْمَانَهٗۤ தனது நம்பிக்கையை اَتَقْتُلُوْنَ நீங்கள்கொல்கின்றீர்களா? رَجُلًا ஒரு மனிதரை اَنْ يَّقُوْلَ கூறியதற்காக رَبِّىَ என் இறைவன் என்று اللّٰهُ அல்லாஹ்தான் وَقَدْ திட்டமாக جَآءَ அவர் கொண்டு வந்திருக்கிறார் كُمْ உங்களுக்கு بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளை مِنْ رَّبِّكُمْ ؕ உங்கள் இறைவனிடமிருந்து وَاِنْ يَّكُ அவர் இருந்தால் كَاذِبًا பொய்யராக فَعَلَيْهِ அவருக்குத்தான் கேடாக அமையும் كَذِبُهٗ ؕ அவருடைய பொய் وَاِنْ يَّكُ அவர் இருந்தால் صَادِقًا உண்மையாளராக يُّصِبْكُمْ உங்களைவந்தடையும் بَعْضُ சில الَّذِىْ يَعِدُ அவர் எச்சரிப்பதில் كُمْ ۚ உங்களை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَهْدِىْ مَنْ هُوَ நேர்வழி செலுத்தமாட்டான்/எவரை/அவர் مُسْرِفٌ வரம்புமீறுபவராக(வும்) كَذَّابٌ‏ பெரும் பொய்யராக(வும்)
40:28. ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.”
40:28. ஃபிர்அவ்னுடைய கூட்டத்திலுள்ள ஒரு மனிதர் நம்பிக்கைகொண்டு இருந்தார். அவர் தன் நம்பிக்கையை மறைத்துக்கொண்டுமிருந்தார். அவர் (அச்சமயம் அவர்களை நோக்கி,) ‘‘அல்லாஹ்தான் என் இறைவன் என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொலை செய்துவிடலாமா? அவரோ, உங்கள் இறைவனிடமிருந்து பல தெளிவான அத்தாட்சிகளை மெய்யாகவே உங்களிடம் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய் சொல்பவராயிருந்தால், அவர் சொல்லும் பொய்யின் கேடு அவர் மீதே சாரும். (அதனால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை.) அவர் சொல்வது உண்மையாக இருந்துவிட்டாலோ, அவர் பயமுறுத்துகிற வேதனைகளில் பல உங்களை வந்தடைந்து விடுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறி பொய் சொல்பவர்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்'' என்றார்.
40:28. (இந்தச் சந்தர்ப்பத்தில்) ஃபிர்அவ்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த தம் நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த இறைநம்பிக்கையாளர் ஒருவர் கூறலானார்: “ஒரு மனிதர், அல்லாஹ்தான் என் இறைவன் என்று கூறுகிறார் என்பதற்காகவா அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராயிருந்தால், அவருடைய பொய் அவருக்கே கேடாக அமையும். ஆனால், அவர் உண்மையாளராய் இருந்தால், எந்த பயங்கரமான விளைவுகளைக் குறித்து அவர் உங்களை எச்சரிக்கை செய்கிறாரோ, அவற்றில் சில அவசியம் உங்களைப் பீடிக்கவே செய்யும். எவன் வரம்பு மீறுபவனாகவும் பெரும் பொய்யனாகவும் இருக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
40:28. மேலும், “ஃபிர் அவ்னுடைய குடும்பத்தினரில் தன் ஈமானை மறைத்து வைத்திருந்த விசுவாசியான ஒரு மனிதர், (அச்சமயம் அவர்களிடம்,) ஒரு மனிதரை_அவர் அல்லாஹ்தான் என்னுடைய இரட்சகன் என்று கூறியதற்காக, நீங்கள் கொலை செய்துவிடுவீர்களா? அவரோ உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளைத் திட்டமாக உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றார், அவர் பொய்யராக இருந்தால், அவருடைய பொய் அவரின் மீதே (கேடாக) ஆகும், (ஆனால், வேதனை வருமென்பதில்) அவர் உண்மையாளராகவும் இருந்து விட்டால், அவர் உங்களுக்கு வாக்களிப்பவற்றில் சில உங்களை வந்தடைந்துவிடும். யார் வரம்பு மீறுகிறவரோ, பெரும் பொய்யரோ அவரை நிச்சயமாக அல்லாஹ், நேர் வழியில் செலுத்தமாட்டான்” என்று கூறினார்.
40:29
40:29 يٰقَوْمِ لَـكُمُ الْمُلْكُ الْيَوْمَ ظٰهِرِيْنَ فِى الْاَرْضِ فَمَنْ يَّنْصُرُنَا مِنْۢ بَاْسِ اللّٰهِ اِنْ جَآءَنَا ؕ قَالَ فِرْعَوْنُ مَاۤ اُرِيْكُمْ اِلَّا مَاۤ اَرٰى وَمَاۤ اَهْدِيْكُمْ اِلَّا سَبِيْلَ الرَّشَادِ‏
يٰقَوْمِ எனது மக்களே! لَـكُمُ உங்களுக்கு الْمُلْكُ ஆட்சி الْيَوْمَ இன்றைய தினம் ظٰهِرِيْنَ நீங்கள் மிகைத்திருக்கிறீர்கள் فِى الْاَرْضِ பூமியில் فَمَنْ யார்? يَّنْصُرُنَا நமக்கு உதவுவார் مِنْۢ بَاْسِ தண்டனையில்இருந்து اللّٰهِ அல்லாஹ்வின் اِنْ جَآءَنَا ؕ நம்மிடம்அதுவந்தால் قَالَ فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் கூறினான் مَاۤ اُرِيْكُمْ உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன் اِلَّا தவிர مَاۤ اَرٰى நான் கருதுவதையே وَمَاۤ اَهْدِيْكُمْ உங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன் اِلَّا سَبِيْلَ பாதையைத் தவிர الرَّشَادِ‏ நேரான
40:29. “என்னுடைய சமூகத்தார்களே! இன்று ஆட்சி உங்களிடம்தான் இருக்கிறது; நீங்கள் தாம் (எகிப்து) பூமியில் மிகைத்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்; ஆயினும் அல்லாஹ்வின் தண்டனை நமக்கு வந்து விட்டால், நமக்கு உதவி செய்பவர் யார்?” என்றும் கூறினார்;) அதற்கு: “நான் (உண்மை எனக்) காண்பதையே உங்களுக்கு நான் காண்பிக்கிறேன்; நேரான பாதையல்லாது (வேறு) எதையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை” என ஃபிர்அவ்ன் கூறினான்.
40:29. ‘‘என் மக்களே! இன்றைய தினம் அதிகாரம் உங்கள் கையில்தான் இருக்கிறது. இத்தேசத்தில் (நீங்களே) ஆதிக்கம் வகிக்கிறீர்கள். ஆயினும், அல்லாஹ்வுடைய வேதனை நமக்கு வந்து விட்டால், (அதைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?'' (என்றும் கூறினார்). அதற்கு, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) ‘‘நான் (சரி என்று) கண்டவற்றை தவிர (வேறொன்றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை. நேரான வழியைத் தவிர மற்றெதனையும் நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை'' என்று கூறினான்.
40:29. என் சமுதாய மக்களே! இன்று உங்களுக்கு ஆட்சியதிகாரம் இருக்கிறது; பூமியில் நீங்கள் மேலோங்கியவர்களாய் இருக்கிறீர்கள். ஆனால், இறைவனுடைய தண்டனை நம்மீது வந்து விட்டால் நமக்கு உதவக்கூடியவர் யார் இருக்கிறார்?” ஃபிர்அவ்ன் கூறினான்: “எனக்குப் பொருத்தமாகத் தென்படுகின்ற கருத்தைத்தான் நான் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். மேலும், நேரான வழியைத்தான் நான் உங்களுக்குக் காண்பிக்கின்றேன்.”
40:29. “என்னுடைய சமூகத்தாரே! இந்த பூமியில் (நீங்களே) மிகைத்தவர்களாக இருக்க இன்றையத்தினம் ஆட்சி உங்களிடம்தான் இருக்கின்றது. ஆகவே, அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து _ அது நமக்கு வந்துவிட்டால், (அதனைத் தடுத்து) நமக்கு உதவி செய்பவன் யார்?” (என்றும் கூறினார், அதற்கு) ஃபிர் அவ்ன் (தன் சமூகத்தாரிடம்,) “நான் (சரி என்று) கண்டதைத் தவிர (வேறொன்றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை, நேரான வழியையே தவிர (மற்றெதனையும்) உங்களுக்கு நான் காட்டவில்லை” என்று கூறினான்.
40:30
40:30 وَقَالَ الَّذِىْۤ اٰمَنَ يٰقَوْمِ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ مِّثْلَ يَوْمِ الْاَحْزَابِۙ‏
وَقَالَ கூறினார் الَّذِىْۤ اٰمَنَ நம்பிக்கை கொண்டவர் يٰقَوْمِ என் மக்களே! اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது مِّثْلَ போன்றதை يَوْمِ நாளை الْاَحْزَابِۙ‏ ராணுவங்களின்
40:30. நம்பிக்கை கொண்டிருந்த அவர் இன்னும் கூறினார்: “என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் நிச்சயமாக பயப்படுகிறேன்.”
40:30. அதற்கு, நம்பிக்கைகொண்(டு தன் நம்பிக்கையை மறைத்துக் கொண்)டிருந்த அவர் (அவர்களை நோக்கி,) ‘‘என் மக்களே! (அழிந்துபோன) மற்ற கூட்டத்தினர்களின் (கெட்ட) நாள்களைப் போன்றவை, உங்கள் மீது வந்துவிடுமென்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.
40:30. இறைநம்பிக்கை கொண்டிருந்த அந்த மனிதர் கூறினார்: “என்னுடைய சமுதாய மக்களே! இதற்கு முன் பல கூட்டத்தார்களின் மீது வந்த அந்த நாள் உங்களின் மீதும் வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.
40:30. மேலும், விசுவாசங்கொண்டிருந்தாரே அவர்_ “என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் (கெட்ட) நாள் போன்றது உங்கள் மீதும் (வந்துவிடுமென்று) நிச்சயமாக நான் பயப்படுகின்றேன்” என்று கூறினார்.
40:31
40:31 مِثْلَ دَاْبِ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْؕ وَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعِبَادِ‏
مِثْلَ போன்று دَاْبِ வழமையான வேதனையை قَوْمِ மக்கள் نُوْحٍ நூஹூடைய وَّعَادٍ இன்னும் ஆது وَّثَمُوْدَ இன்னும் ஸமூது وَالَّذِيْنَ مِنْۢ بَعْدِهِمْؕ இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்ட وَمَا اللّٰهُ அல்லாஹ் இல்லை يُرِيْدُ நாடுகின்றவனாக ظُلْمًا அநியாயத்தை لِّلْعِبَادِ‏ அடியார்களுக்கு
40:31. “நூஹுடைய சமூகத்திற்கும், இன்னும் “ஆது”, “ஸமூது”டைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான நிலையைப் போன்று (உங்களுக்கு நிகழ்ந்து விடுமோ எனப் பயப்படுகிறேன்); ஆனால் அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் (என்றும்).
40:31. (இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய மக்களுக்கும், ஆதுடைய மக்களுக்கும், ஸமூதுடைய மக்களுக்கும், அதற்குப் பின் வந்த மக்களுக்கும் நிகழ்ந்தது போன்ற (ஆபத்)து (உங்களுக்கும்) நிகழ்ந்து விடுமென்று நான் பயப்படுகிறேன். அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான்'' என்றும்,
40:31. நூஹின் சமூகத்தினர், ஆத், ஸமூத் சமூகத்தினர் மற்றும் அவர்களுக்குப் பின்வந்த சமுதாயத்தினர் ஆகியோர் மீது வந்த நாளைப் போன்று! மேலும், உண்மையில் அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு எந்த அநீதியும் இழைக்க வேண்டுமென்று கருதுவதில்லை.
40:31. “(இதற்கு முன்னிருந்த) நூஹ்வுடைய சமூகத்தார், ஆது, ஸமூது, இன்னும் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் நிலைமை போன்ற (ஆபத்)து (உங்களுக்கும் வந்துவிடுமென்று நான் பயப்படுகிறேன்), மேலும், அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயத்தை நாடமாட்டான் (என்று கூறினார்).
40:32
40:32 وَيٰقَوْمِ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِۙ‏
وَيٰقَوْمِ என் மக்களே اِنِّىْۤ اَخَافُ நிச்சயமாக பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது يَوْمَ التَّنَادِۙ‏ கூவி அழைக்கின்ற நாளை
40:32. “என்னுடைய சமூகத்தாரே! உங்கள் மீது அழைக்கப்படும் (தீர்ப்பு) நாளைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்.
40:32. ‘‘என் மக்களே! உங்கள் மீது (நீங்கள்) அழைக்கப்படும் (மறுமை) நாளைப் பற்றியும் நான் பயப்படுகிறேன்.
40:32. மேலும் என் சமூகத்தாரே! அழுது புலம்பி ஒருவர் மற்றவரை அழைக்கும் நாள் உங்களுக்கு வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
40:32. மேலும், “என்னுடைய சமூகத்தாரே! அழைக்கப்படும் (மறுமை) நாளைப்பற்றியும் உங்கள் மீது நிச்சயமாக நான் பயப்படுகிறேன்(என்றும்),
40:33
40:33 يَوْمَ تُوَلُّوْنَ مُدْبِرِيْنَ‌ۚ مَا لَكُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍۚ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ‏
يَوْمَ நாளில் تُوَلُّوْنَ நீங்கள் திரும்புகின்றீர்கள் مُدْبِرِيْنَ‌ۚ புறமுதுகிட்டவர்களாக مَا لَكُمْ உங்களுக்கு இருக்க மாட்டார் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مِنْ எவரும் عَاصِمٍۚ பாதுகாக்கக்கூடியவர் وَمَنْ எவரை يُّضْلِلِ வழிகெடுத்தானோ اللّٰهُ அல்லாஹ் فَمَا لَهٗ அவருக்கு இல்லை مِنْ هَادٍ‏ நேர்வழி காட்டுபவர் யாரும்
40:33. “அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றுபவர் எவருமில்லாத நிலையில் நீங்கள் பின் வாங்கும் நாள் (அது); அன்றியும் அல்லாஹ் யாரைத் தவறான வழியில் விட்டுவிடுகின்றானோ, அவனுக்கு நேர்வழி காட்டுவோர் எவருமில்லை.
40:33. நீங்கள் (வேதனைக்குப் பயந்து) புறங்காட்டி ஓடும் அந்நாளில், அல்லாஹ்வை விட்டும் உங்களைக் காப்பாற்றக் கூடியவர் ஒருவரும் இருக்க மாட்டார். அல்லாஹ் எவனை வழி கெடுத்து விடுகிறானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
40:33. அன்று நீங்கள் திரும்பிப் பாராமல் ஓடிக்கொண்டிருப்பீர்கள். ஆனால், அவ்வேளை அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார். உண்மையாதெனில், எவனை அல்லாஹ் வழிகெடுக்கின்றானோ அவனுக்கு வழிகாட்டுபவர் எவரும் இருப்பதில்லை.
40:33. “நீங்கள் (தண்டனைக்கு பயந்து) புறங்காட்டியவர்களாக ஓடும் நாளை (பயப்படுகிறேன், அந்நாளில்) அல்லாஹ்விடமிருந்து காப்பற்றக்கூடியவர் உங்களுக்கு எவருமில்லை, அல்லாஹ் எவரைத் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ, அவரை நேர்வழியில் செலுத்தக்கூடியவனும் இல்லை.
40:34
40:34 وَلَقَدْ جَآءَكُمْ يُوْسُفُ مِنْ قَبْلُ بِالْبَيِّنٰتِ فَمَا زِلْـتُمْ فِىْ شَكٍّ مِّمَّا جَآءَكُمْ بِهٖ ؕ حَتّٰٓى اِذَا هَلَكَ قُلْتُمْ لَنْ يَّبْعَثَ اللّٰهُ مِنْۢ بَعْدِهٖ رَسُوْلًا ؕ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنْ هُوَ مُسْرِفٌ مُّرْتَابٌ  ۚ ۖ‏
وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَكُمْ உங்களிடம் வந்தார் يُوْسُفُ யூஸுஃப் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளுடன் فَمَا زِلْـتُمْ فِىْ شَكٍّ ஆனால், நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள் مِّمَّا எதில் جَآءَكُمْ உங்களிடம் வந்தார் بِهٖ ؕ அதைக் கொண்டு حَتّٰٓى இறுதியாக اِذَا هَلَكَ அவர் இறந்துவிட்ட போது قُلْتُمْ கூறினீர்கள் لَنْ يَّبْعَثَ அனுப்பவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் مِنْۢ بَعْدِهٖ அவருக்குப் பின்னர் رَسُوْلًا ؕ ஒரு தூதரை كَذٰلِكَ இவ்வாறுதான் يُضِلُّ வழிகெடுப்பான் اللّٰهُ அல்லாஹ் مَنْ எவர் هُوَ அவர் مُسْرِفٌ வரம்புமீறுபவராக(வும்) مُّرْتَابٌ  ۚ ۖ‏ சந்தேகம் கொள்பவராக(வும்)
40:34. “மேலும், முற்காலத்தில் திட்டமாக யூஸுஃப் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார், எனினும் அவர் இறந்து விடும் வரையில், அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகத்திலேயே இருந்தீர்கள்; இறுதியில் (அவர் இறந்தபின்) “அவருக்குப் பின் எந்த ரஸூலையும் (தூதரையும்) அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” என்றும் கூறினீர்கள்; இவ்வாறே, எவர் வரம்பு மீறிச் சந்தேகிக்கிறாரோ அவரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான்.
40:34. இதற்கு முன்னரும், யூஸுஃப் (நபி) மெய்யாகவே தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்தார். அவர் இறந்துவிடும் வரை, அவர் உங்களிடம் கொண்டு வந்ததைப் பற்றி நீங்கள் சந்தேகித்துக் கொண்டே இருந்தீர்கள். அவர் இறந்த பின்னரோ, (அவரைப் போற்றிப் புகழ்ந்து, இத்தகைய) ஒரு தூதரை அவருக்குப் பின்னர் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் (என்று கூற முற்பட்டீர்கள்). வரம்பு மீறி (உங்களைப் போல) சந்தேகிப்பவர்களை இவ்வாறே அல்லாஹ் வழிகெடுத்து விடுகிறான்.'' என்றும் கூறினார்.
40:34. இதற்கு முன் யூஸுஃப், உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்கள் அவர் கொண்டு வந்த அறிவுரைகள் குறித்து சந்தேகத்தில் விழுந்து கிடந்தீர்கள். பிறகு அவர் மரணமடைந்தபோது நீங்கள் கூறினீர்கள், “அவருக்குப் பின் அல்லாஹ் எந்தத் தூதரையும் ஒருபோதும் அனுப்பமாட்டான்” என்று இவ்வாறு வரம்பு மீறுவோர், ஐயம் கொள்வோர் அனைவரையும் அல்லாஹ் வழிகேட்டில் தள்ளுகிறான்.
40:34. “(மூஸாவுக்கு) முன்னர், யூஸுஃபும் திட்டமாக தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டுவந்தார், பின்னர், அவர் எதை உங்களிடம் கொண்டுவந்தாரோ அதை பற்றிய சந்தேகத்திலேயே (தொடர்ந்து) நீங்கள் இருந்தீர்கள், இறுதியாக அவர் இறந்தபோது, அவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்” என்று கூறினீர்கள். (உங்களைப் போல) எவர் (செயலில்) வரம்பு மீறி (உள்ளத்தில்) சந்தேகிக்கிறாரோ அவரை, இவ்வாறே அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிடுகிறான் (என்றும் கூறினார்).
40:35
40:35 اۨلَّذِيْنَ يُجَادِلُوْنَ فِىْۤ اٰيٰتِ اللّٰهِ بِغَيْرِ سُلْطٰنٍ اَتٰٮهُمْ ؕ كَبُـرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ وَعِنْدَ الَّذِيْنَ اٰمَنُوْا ؕ كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى كُلِّ قَلْبِ مُتَكَبِّرٍ جَبَّارٍ‏
اۨلَّذِيْنَ எவர்கள் يُجَادِلُوْنَ தர்க்கம் செய்கின்றார்கள் فِىْۤ اٰيٰتِ அத்தாட்சிகளில் اللّٰهِ அல்லாஹ்வின் بِغَيْرِ سُلْطٰنٍ எவ்வித ஆதாரமின்றி اَتٰٮهُمْ ؕ தங்களிடம் வந்த(து) كَبُـرَ மிகப் பெரிய(து) مَقْتًا கோபத்திற்குரியது عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விட(மு)ம் وَعِنْدَ الَّذِيْنَ اٰمَنُوْا ؕ நம்பிக்கையாளர்களிடமும் كَذٰلِكَ இவ்வாறுதான் يَطْبَعُ முத்திரையிடுகிறான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ قَلْبِ எல்லோருடைய உள்ளத்திலும் مُتَكَبِّرٍ பெருமை அடிக்கின்றவர்கள் جَبَّارٍ‏ அநியாயக்காரர்கள்
40:35. “(இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் ஈமான் கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்டதாகும்; இவ்வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வோர் இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான்” (என்றும் அவர் கூறினார்).
40:35. எவர்கள் (இறைவனிடமிருந்து) தங்களுக்கு வந்துள்ளதாகக் கூறக்கூடிய ஓர் ஆதாரமுமின்றியே, அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாகத்) தர்க்கிக்கிறார்களோ... (அவர்கள் நஷ்டமடைந்து விடுவார்கள்). ஏனென்றால், இது அல்லாஹ்விடத்திலும், நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் பெரும் அருவருப்பானதாகும். இவ்வாறே, பெருமை கொள்ளும் வம்பர்களின் உள்ளங்களிலெல்லாம் முத்திரையிட்டு விடுகிறான்'' (என்றும் அவர் கூறினார்).
40:35. அவர்கள் எத்தகையவர்கள் எனில், அல்லாஹ்வின் வசனங்களைக் குறித்து தர்க்கம் புரிகிறார்கள், எவ்விதச் சான்றும் ஆதாரமும் தங்களிடம் வராமலேயே! இந்த நடத்தை அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டோரிடமும் மிகவும் வெறுப்புக்குரியதாகும். இவ்வாறே ஒவ்வொரு ஆணவக்காரனுடையவும் கொடுங்கோலனுடையவும் உள்ளத்தின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்.
40:35. அவர்கள் எத்தகையோரென்றால் (அல்லாஹ்விடமிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமின்றி அல்லாஹ்வுடைய வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர், அ(வ்வாறு தர்க்கம் செய்வ)து அல்லாஹ்விடத்திலும், விசுவாசங்கொண்டவர்களிடத்திலும் கோபத்தால் பெரிதாகிவிட்டது, இவ்வாறே பெருமைகொண்ட, வம்பு செய்கின்ற ஒவ்வோர் இதயத்தின் மீது(ம்) அல்லாஹ் முத்திரையிட்டுவிடுகிறான்” (என்றும் அவர் கூறினார்).
40:36
40:36 وَقَالَ فِرْعَوْنُ يٰهَامٰنُ ابْنِ لِىْ صَرْحًا لَّعَلِّىْۤ اَبْلُغُ الْاَسْبَابَۙ‏
وَقَالَ கூறினான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் يٰهَامٰنُ ஹாமானே! ابْنِ கட்டு لِىْ எனக்காக صَرْحًا ஒரு கோபுரத்தை لَّعَلِّىْۤ اَبْلُغُ நான் ஏற வேண்டும் الْاَسْبَابَۙ‏ வாசல்களில்
40:36. (இவ்வளவு உபதேசித்த பின்னரும்:) “ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக - நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு!
40:36. (அதற்குப் ஃபிர்அவ்ன் தன் மந்திரி ஹாமானை நோக்கி,) ‘‘ஹாமானே! வானங்களின் வாசல்களை நான் அடையக்கூடிய உயர்ந்ததொரு கோபுரத்தை நீ எழுப்பு.
40:36. ஃபிர்அவ்ன் கூறினான்: “ஹாமானே! நீ எனக்கு ஓர் உயர்ந்த கோபுரம் எழுப்பு. ஏனெனில், நான் வழிகளைச் சென்றடைவதற்காக
40:36. (அதற்கு) ஃபிர் அவ்ன், “ஹாமானே! (சகலருக்கும் தெரியும்படியான) உயர்ந்த (ஒரு) மாளிகையை எனக்காக கட்டும் (அதன் மூலம் உயரச் செல்லும்) வழிகளை நான் அறியலாம்” என்று கூறினான்.
40:37
40:37 اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰٓى اِلٰهِ مُوْسٰى وَاِنِّىْ لَاَظُنُّهٗ كَاذِبًا ؕ وَكَذٰلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوْٓءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِيْلِ ؕ وَمَا كَيْدُ فِرْعَوْنَ اِلَّا فِىْ تَبَابٍ‏
اَسْبَابَ வாசல்களில் السَّمٰوٰتِ வானங்களின் فَاَطَّلِعَ நான் எட்டிப்பார்க்க வேண்டும் اِلٰٓى اِلٰهِ கடவுளை مُوْسٰى மூஸாவின் وَاِنِّىْ நிச்சயமாக நான் لَاَظُنُّهٗ அவரைக்கருதுகிறேன் كَاذِبًا ؕ பொய்யராகவே وَكَذٰلِكَ இவ்வாறுதான் زُيِّنَ அலங்காரமாக்கப் பட்டது لِفِرْعَوْنَ ஃபிர்அவ்னுக்கு سُوْٓءُ தீய عَمَلِهٖ அவனது செயல் وَصُدَّ இன்னும் அவன் தடுக்கப்பட்டான் عَنِ السَّبِيْلِ ؕ நேரான பாதையை விட்டு وَمَا كَيْدُ சூழ்ச்சி இல்லை فِرْعَوْنَ ஃபிர்அவ்னின் اِلَّا தவிர فِىْ تَبَابٍ‏ அழிவில்
40:37. “(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;” என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன; இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.
40:37. மூஸாவுடைய ஆண்டவனை நான் பார்க்க வேண்டும். அவர் பொய் சொல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்'' என்று கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு, அவனுடைய தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு, நேரான வழியிலிருந்தும் அவன் தடுக்கப்பட்டு விட்டான். ஃபிர்அவ்னுடைய சூழ்ச்சி எல்லாம் (வீண்) அழிவிலே தவிர (வேறொன்றிலும்) இருக்கவில்லை.
40:37. வானத்தின் வழிகளை! மேலும், மூஸாவின் இறைவனை நான் எட்டிப்பார்க்க வேண்டும். நான் இந்த மூஸாவைப் பொய்யராகத்தான் கருதுகின்றேன்!” இவ்வாறு ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல் அழகாக்கிக் காட்டப்பட்டது. மேலும், அவன் நேரிய வழியை விட்டுத் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சிகள் அனைத்தும் அவனது அழிவுப்பாதையில்தான் செலவாயின.
40:37. வானங்களை அடையும் வழிகளை (நான் அறியலாம், அவற்றின் மூலம் சென்று) மூஸாவுடைய வணக்கத்திற்குரியவனை நான் பார்க்கவேண்டும், அவர் பொய் சொல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்” (என்றும் ஃபிர் அவ்ன் கூறினான்). இவ்வாறே ஃபிர் அவ்னுக்கு, அவனுடைய செயலின் தீமை அலங்கரித்துக் காட்டப்பட்டு விட்டது, (நேரான) வழியிலிருந்து அவன் தடுக்கபட்டும்விட்டான், ஃபிர் அவ்னுடைய சூழ்ச்சி அழிவிலேயே தவிர இல்லை.
40:38
40:38 وَقَالَ الَّذِىْۤ اٰمَنَ يٰقَوْمِ اتَّبِعُوْنِ اَهْدِكُمْ سَبِيْلَ الرَّشَادِ‌ۚ‏
وَقَالَ கூறினார் الَّذِىْۤ اٰمَنَ நம்பிக்கை கொண்டவர் يٰقَوْمِ என் மக்களே! اتَّبِعُوْنِ என்னை பின்பற்றுங்கள்! اَهْدِكُمْ நான் உங்களுக்கு வழி காட்டுகிறேன் سَبِيْلَ பாதையை الرَّشَادِ‌ۚ‏ நேரான
40:38. ஈமான் கொண்டிருந்த அம்மனிதர் மேலும் கூறினார்: “என்னுடைய சமூகத்தாரே! என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு நேர்மையுடைய பாதையைக் காண்பிக்கிறேன்.
40:38. அதற்கு, அவர்களில் நம்பிக்கை (கொண்டு தன் நம்பிக்கையை மறைத்துக்) கொண்டிருந்தவர் கூறினார்: ‘‘என் மக்களே! என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேரான வழியைக் காண்பிப்பேன்.
40:38. இறைநம்பிக்கை கொண்டிருந்த அந்த மனிதர் கூறினார்: “என் சமுதாய மக்களே! நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குச் சரியான வழியைத்தான் காட்டுகின்றேன்.
40:38. மேலும், அவர்களில் விசுவாசங்கொண்டிருந்தாரே அவர்_ “என்னுடைய சமூகத்தாரே! என்னை நீங்கள் பின்பற்றுங்கள், நான் உங்களுக்கு நேரான வழியைக் காண்பிக்கிறேன்” என்று கூறினார்.
40:39
40:39 يٰقَوْمِ اِنَّمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَا مَتَاعٌ وَّاِنَّ الْاٰخِرَةَ هِىَ دَارُ الْقَرَارِ‏
يٰقَوْمِ என் மக்களே! اِنَّمَا هٰذِهِ الْحَيٰوةُ இந்த வாழ்க்கை எல்லாம் الدُّنْيَا உலக مَتَاعٌ அற்ப இன்பம்தான் وَّاِنَّ இன்னும் நிச்சயமாக الْاٰخِرَةَ هِىَ மறுமைதான் دَارُ الْقَرَارِ‏ நிரந்தரமான இல்லம்
40:39. “என்னுடைய சமூகத்தாரே! இவ்வுலக வாழ்க்கை யெல்லாம் அற்ப சுகம்தான்; அன்றியும் நிச்சயமாக, மறுமையோ - அதுதான் (என்றென்றுமிருக்கும்) நிலையான வீடு.
40:39. என் மக்களே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் சொற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமை தான் நிலையான (இன்பம் தரும்) வீடு.
40:39. என் சமூகத்தினரே! இந்த உலக வாழ்க்கை சில நாட்கள்தாம்! திண்ணமாக, மறுமைதான் நிலையான தங்குமிடமாகும்;
40:39. “என்னுடைய சமூகத்தாரே! நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் (அழிந்து விடும்) இன்பந்தான்; நிச்சயமாக மறுமையோ_அதுதான் நிலையான (இன்பந்தரும்) வீடாகும்.
40:40
40:40 مَنْ عَمِلَ سَيِّـئَـةً فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا ۚ وَمَنْ عَمِلَ صَالِحًـا مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ يُرْزَقُوْنَ فِيْهَا بِغَيْرِ حِسَابٍ‏
مَنْ عَمِلَ யார் செய்வாரோ سَيِّـئَـةً ஒரு தீமையை فَلَا يُجْزٰٓى அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார் اِلَّا தவிர مِثْلَهَا ۚ அது போன்றதே وَمَنْ யார் ஒருவர் عَمِلَ செய்வாரோ صَالِحًـا நன்மையை مِّنْ இல் ذَكَرٍ ஆண்(கள்) اَوْ அல்லது اُنْثٰى பெண்(கள்) وَهُوَ அவர் இருக்கின்ற நிலையில் مُؤْمِنٌ நம்பிக்கையாளராக فَاُولٰٓٮِٕكَ அவர்கள் يَدْخُلُوْنَ நுழைக்கப்படுவார்கள் الْجَـنَّةَ சொர்க்கத்தில் يُرْزَقُوْنَ அவர்கள் உணவளிக்கப்படுவார்கள் فِيْهَا அதில் بِغَيْرِ حِسَابٍ‏ கணக்கின்றி
40:40. “எவர் தீமை செய்கிறாரோ, அவர் அதைப் போன்றதையே கூலியாகக் கொடுக்கப்படுவார்; எவர் ஒருவர், ஆணோ அல்லது பெண்ணோ முஃமினான நிலையில் ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறாரோ அவர்கள் சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்; அதில் கணக்கில்லாது அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.
40:40. எவனேனும் தீங்கு செய்தால், அதைப் போன்ற தீங்கே தவிர (அதற்கதிகமாய்) அவனுக்குக் கூலியாகக் கொடுக்கப்பட மாட்டாது. ஆணோ பெண்ணோ எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார்கள். அதில் கணக்கின்றி (அதிகமாகவும்) கொடுக்கப்படுவார்கள்.
40:40. தீய செயல் புரிந்தவனுக்கு அவன் செய்த தீமைக்கேற்பவே கூலி கிடைக்கும். எவர்கள் நற்செயல் புரிகின்றார்களோ அவர்கள் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் பட்சத்தில் அனைவரும் சுவனம் செல்வார்கள். அங்கு அவர்களுக்குக் கணக்கின்றி உணவு வழங்கப்படும்.
40:40. எவர் ஒரு தீமையைச் செய்கிறாரோ, அவர் அதைப்போன்றதையே தவிர (அதற்கதிமாய்) கூலியாகக் கொடுக்கப்படமாட்டார், இன்னும், எவர் ஆணாயினும், அல்லது பெண்ணாயினும் அவர் விசுவாசங்கொண்டவராக இருக்கும் நிலையில், நல்ல செயலைச் செய்தாரோ அ(த்தகைய)வர்கள் சுவனபதியில் நுழைந்துவிடுவார்கள், அதில் கணக்கின்றியே (அனைத்து சுவனத்து அருட்கொடைகளிலிருந்தும்) அவர்கள் கொடுக்கப்படுவார்கள்.
40:41
40:41 وَيٰقَوْمِ مَا لِىْۤ اَدْعُوْكُمْ اِلَى النَّجٰوةِ وَتَدْعُوْنَنِىْۤ اِلَى النَّارِؕ‏
وَيٰقَوْمِ என் மக்களே مَا لِىْۤ எனக்கு என்ன நேர்ந்தது اَدْعُوْكُمْ நான் உங்களை அழைக்கிறேன் اِلَى النَّجٰوةِ பாதுகாக்கப்படுவதற்கு وَتَدْعُوْنَنِىْۤ நீங்களோ என்னை அழைக்கின்றீர்கள் اِلَى النَّارِؕ‏ நரகத்தின் பக்கம்
40:41. “என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நான் உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கிறேன்; ஆனால் நீங்களோ என்னை (நரக) நெருப்பினால் அழைக்கிறீர்கள்.
40:41. என் மக்களே! எனக்கென்ன, (ஆச்சரியமாக இருக்கிறது!) நானோ உங்களை ஈடேற்றத்திற்கு அழைக்கிறேன். நீங்கள் என்னை நரகத்திற்கு அழைக்கிறீர்கள்.
40:41. மேலும், என் சமூகத்தினரே, இது என்ன நியாயம்? நானோ உங்களை ஈடேற்றத்தின் பக்கம் அழைக்கின்றேன். ஆனால், நீங்களோ என்னை நெருப்பின் பக்கம் அழைக்கின்றீர்கள்.
40:41. இன்னும், “என்னுடைய சமூகத்தாரே! எனக்கென்ன? நானோ, உங்களை ஈடேற்றத்தின் பால் அழைக்கின்றேன், நீங்களோ என்னை நரகத்தின் பக்கம் அழைக்கின்றீர்கள்,
40:42
40:42 تَدْعُوْنَنِىْ لِاَكْفُرَ بِاللّٰهِ وَاُشْرِكَ بِهٖ مَا لَيْسَ لِىْ بِهٖ عِلْمٌ وَّاَنَا اَدْعُوْكُمْ اِلَى الْعَزِيْزِ الْغَفَّارِ‏
تَدْعُوْنَنِىْ நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள் لِاَكْفُرَ நான் நிராகரிப்பதற்கு(ம்) بِاللّٰهِ அல்லாஹ்வை وَاُشْرِكَ بِهٖ அவனுக்கு நான் இணைவைப்பதற்கும் مَا لَيْسَ لِىْ بِهٖ عِلْمٌ எனக்கு அறிவில்லாத ஒன்றை وَّاَنَا اَدْعُوْكُمْ நான்/அழைக்கின்றேன்/உங்களை اِلَى الْعَزِيْزِ மிகைத்தவன் பக்கம் الْغَفَّارِ‏ மகா மன்னிப்பாளன்
40:42. “நான் அல்லாஹ்வுக்கு (மாறு செய்து அவனை) நிராகரிக்க வேண்டுமென்றும், எனக்கு எதைப்பற்றி அறிவு இல்லையோ அதை நான் அவனுக்கு இணைவைக்க வேண்டுமென்றும் என்னை அழைக்கின்றீர்கள். ஆனால் நானோ யாவரையும் மிகைத்தவனும், மிக மன்னிப்பவனுமாகியவனிடம் அழைக்கின்றேன்.
40:42. தவிர, நான் அல்லாஹ்வை நிராகரித்துவிட்டு (இறைவனென) நான் நம்பாததை அவனுக்கு இணைவைக்கும்படி என்னை நீங்கள் அழைக்கிறீர்கள். நானோ, உங்களை (அனைவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்புடையவனின் பக்கம் அழைக்கிறேன்.
40:42. அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும், நான் அறிந்திடாதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கும் நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். அதே நேரத்தில் நானோ வல்லமை மிக்கவனும் பெரும் மன்னிப்பாளனுமான இறைவனின் பக்கம் உங்களை அழைத்துக்கொண்டிருக்கின்றேன்.
40:42. “நான் அல்லாஹ்வை நிராகரிக்கவும், எதைப்பற்றி எனக்கு அறிவில்லையோ அதை அவனுக்கு நான் இணையாக்கவும் என்னை நீங்கள் அழைக்கின்றீர்கள், நானோ, (யாவரையும்) மிகைத்தவன், மிக்க மன்னிப்பவனின் பக்கம் உங்களை அழைக்கிறேன்.
40:43
40:43 لَا جَرَمَ اَنَّمَا تَدْعُوْنَنِىْۤ اِلَيْهِ لَيْسَ لَهٗ دَعْوَةٌ فِى الدُّنْيَا وَلَا فِى الْاٰخِرَةِ وَاَنَّ مَرَدَّنَاۤ اِلَى اللّٰهِ وَاَنَّ الْمُسْرِفِيْنَ هُمْ اَصْحٰبُ النَّارِ‏
لَا جَرَمَ கண்டிப்பாக اَنَّمَا تَدْعُوْنَنِىْۤ நிச்சயமாக/எவை /நீங்கள் அழைக்கின்றீர்கள்/என்னை اِلَيْهِ அவற்றின் பக்கம் لَيْسَ لَهٗ அவற்றுக்கு இல்லை دَعْوَةٌ எவ்வித பிரார்த்தனை فِى الدُّنْيَا இவ்வுலகத்திலும் وَلَا فِى الْاٰخِرَةِ மறுமையிலும் وَاَنَّ இன்னும் நிச்சயமாக مَرَدَّنَاۤ நாம் திரும்புவது اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம்தான் وَاَنَّ இன்னும் நிச்சயமாக الْمُسْرِفِيْنَ வரம்புமீறிகள் هُمْ அவர்கள்தான் اَصْحٰبُ النَّارِ‏ நரகவாசிகள்
40:43. “என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது நிச்சயமாக இவ்வுலகிலும் மறுமையிலும் (நாயன் என) அழைப்பதற்கு சிறிதும் தகுதியில்லாதது; மேலும் நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமே திரும்பச் செல்வோம். இன்னும் நிச்சயமாக வரம்பு மீறியவர்கள் நரக வாசிகளாகவே இருக்கிறார்கள்.
40:43. என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ, அது இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி (இறைவனென்று) அழைக்கப்படுவதற்கு ஒரு சிறிதும் நிச்சயமாக அதற்குத் தகுதி இல்லை என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹ்விடமே நாம் அனைவரும் திரும்பச் செல்வோம் (என்பதிலும் அறவே சந்தேகமில்லை). வரம்பு மீறுபவர்கள் நிச்சயமாக நரகவாசிகள்தான் (என்பதிலும் அறவே சந்தேகமில்லை).
40:43. இல்லை; சத்தியம் இதுதான்; இதற்கு மாறாக நடக்காது; அதாவது, நீங்கள் என்னை எவற்றின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கின்றீர்களோ அவற்றிற்கு எவ்வித அழைப்பும் இந்த உலகில் இல்லை. மறுமையிலும் இல்லை. மேலும், நாம் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்ப வேண்டியுள்ளது. வரம்பு மீறுவோர் நரகம் செல்லக்கூடியவர்களாவர்.
40:43. “என்னை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது இம்மையிலும், மறுமையிலும் (நாயனென்று) அழைப்பதற்கு நிச்சயமாக, ஒரு, சிறிதும் தகுதியற்றது நம்முடைய திரும்புமிடம் அல்லாஹ்வின் பக்கமேயாகும், இன்னும் நிச்சயமாக வரம்பு மீறுவோர் நரகவாசிகள் தாம் என்பதில் சந்தேகமில்லை.
40:44
40:44 فَسَتَذْكُرُوْنَ مَاۤ اَقُوْلُ لَـكُمْؕ وَاُفَوِّضُ اَمْرِىْۤ اِلَى اللّٰهِؕ اِنَّ اللّٰهَ بَصِيْرٌۢ بِالْعِبَادِ‏
فَسَتَذْكُرُوْنَ நீங்கள் விரைவில் நினைவு கூர்வீர்கள் مَاۤ اَقُوْلُ நான் கூறுவதை لَـكُمْؕ உங்களுக்கு وَاُفَوِّضُ இன்னும் நான் ஒப்படைக்கிறேன் اَمْرِىْۤ என் காரியத்தை اِلَى اللّٰهِؕ அல்லாஹ்விடம் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் بَصِيْرٌۢ உற்று நோக்குகின்றான் بِالْعِبَادِ‏ அடியார்களை
40:44. “எனவே, நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் விரைவில் உணர்வீர்கள்; மேலும், நான் என் காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுகிறேன் - நிச்சயமாக அல்லாஹ் அடியார்களைக் கண்ணுற்றவனாகவே இருக்கின்றான்” (என்றும் அவர் கூறினார்).
40:44. நான் உங்களுக்குக் கூறுவதன் உண்மையை நிச்சயமாக அதிசீக்கிரத்தில் நீங்கள் (அறிந்து) நினைத்துப் பார்ப்பீர்கள். எனது எல்லா காரியங்களையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குபவன்'' (என்று கூறினார்.)
40:44. இன்று உங்களுக்கு நான் சொல்லிக் கொண்டிருப்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கும் ஒரு நேரம் அதிவிரைவில் வந்துவிடும். மேலும், நான் என் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கின்றேன். திண்ணமாக, அல்லாஹ் தன் அடிமைகளை கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
40:44. “நான் உங்களுக்குக் கூறுவதை நிச்சயமாக நீங்கள் நினைவு கூர்வீர்கள், மேலும் என்னுடைய காரியத்தை அல்லாஹ்விடம் நான் ஒப்படைக்கின்றேன், நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைப் பார்க்கிறவன்” (என்றும் கூறினார்).
40:45
40:45 فَوَقٰٮهُ اللّٰهُ سَيِّاٰتِ مَا مَكَرُوْا وَحَاقَ بِاٰلِ فِرْعَوْنَ سُوْٓءُ الْعَذَابِ‌ۚ‏
فَوَقٰٮهُ ஆக, அவரை பாதுகாத்தான் اللّٰهُ அல்லாஹ் سَيِّاٰتِ தீங்குகளை விட்டு مَا مَكَرُوْا அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் وَحَاقَ இன்னும் சூழ்ந்துகொண்டது بِاٰلِ குடும்பத்தார்களை فِرْعَوْنَ ஃபிர்அவ்னின் سُوْٓءُ الْعَذَابِ‌ۚ‏ கெட்ட வேதனை
40:45. ஆகவே, அவர்கள் திட்டமிட்ட தீமைகளை விட்டும் அல்லாஹ் அவரைக் காத்துக் கொண்டான். மேலும் வேதனையின் கேடு ஃபிர்அவ்னின் கூட்டத்தாரைச் சூழ்ந்து கொண்டது.
40:45. ஆகவே, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளிலிருந்து அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனை சூழ்ந்துகொண்டது.
40:45. இறுதியில், (அந்நம்பிக்கையாளருக்கு எதிராக) அந்த மக்கள் கையாண்ட எல்லாவிதமான மோசமான சூழ்ச்சிகளிலிருந்தும் அல்லாஹ் அவரைக் காப்பாற்றிக் கொண்டான். மேலும், ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கொடிய வேதனை சூழ்ந்து கொண்டது.
40:45. ஆகவே, அவர்கள் சூழ்ச்சி செய்ததின் தீமைகளை விட்டும் (ஈமானை மறைத்துக்கொண்டிருந்த) அவரை அல்லாஹ் பாதுகாத்துக்கொண்டான், மேலும் ஃபிர் அவ்னைச் சார்ந்தோரை தீயவேதனை சூழ்ந்து கொண்டது.
40:46
40:46 اَلنَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا ۚ وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ‏
اَلنَّارُ நரக நெருப்பாகும் يُعْرَضُوْنَ அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள் عَلَيْهَا அதில் غُدُوًّا காலையிலும் وَّعَشِيًّا ۚ மாலையிலும் وَيَوْمَ நாள் تَقُوْمُ நிகழும் السَّاعَةُ மறுமை اَدْخِلُوْۤا நுழையுங்கள் اٰلَ فِرْعَوْنَ ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை اَشَدَّ கடுமையான الْعَذَابِ‏ வேதனையில்
40:46. காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் “ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என்று கூறப்படும்).
40:46. காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றனர். மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களை மிகக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்.
40:46. நரக நெருப்பு! அதன் முன்பு காலையிலும் மாலையிலும் அவர்கள் கொண்டுவரப்படுகிறார்கள். மேலும், மறுமைநாள் வந்துவிடும்போது ஆணையிடப்படும்: ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மிகக் கடுமையான வேதனையில் புகுத்துங்கள்!
40:46. அந்(நரக)நெருப்பு_அதன் மீது காலையிலும், மாலையிலும் அவர்கள் எடுத்துக் காட்டப்படுகிறார்கள், மேலும் மறுமை நாள் நிலைபெற்று விடும் நாளில், “ஃபிர் அவ்னைச் சார்ந்தோரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்” (என மலக்குகளுக்குக் கூறப்படும்).
40:47
40:47 وَاِذْ يَتَحَآجُّوْنَ فِى النَّارِ فَيَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَـكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِيْبًا مِّنَ النَّارِ‏
وَاِذْ يَتَحَآجُّوْنَ அவர்கள் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போது فِى النَّارِ நரகத்தில் فَيَقُوْلُ கூறுவார்கள் الضُّعَفٰٓؤُا பலவீனமானவர்கள் لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا பெருமை கொண்டிருந்தவர்களுக்கு اِنَّا كُنَّا நிச்சயமாக நாங்கள் இருந்தோம் لَـكُمْ உங்களை تَبَعًا பின்பற்றுபவர்களாக فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ ஆகவே நீங்கள் தடுப்பீர்களா? عَنَّا எங்களை விட்டு نَصِيْبًا ஒரு பகுதியை مِّنَ النَّارِ‏ நரகத்தில் இருந்து
40:47. அவர்கள் நரக நெருப்பில் தர்க்கம் செய்து கொண்டு, பலஹீனர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தோரை நோக்கி: “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம் - எனவே, எங்களை விட்டும் இந்நெருப்பிலிருந்து ஒரு பகுதியையாவது விலக்கி வைப்பீர்களாக?” என்று அவர்கள் சொல்லும் வேளையை (நினைவுட்டுவீராக!).
40:47. நரகத்தில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (அவர்களில் உள்ள) பலவீனமானவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்த (தலை)வர்களை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் உங்களையே பின்பற்றியிருந்தோம். இன்றைய தினம் நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு சிறிதேனும் எங்களை விட்டு நீங்கள் தடுத்துவிட முடியுமா?'' என்று கேட்பார்கள்.
40:47. பிறகு, நரகத்தில் இவர்கள் ஒருவர் மற்றவருடன் தர்க்கம் செய்துகொண்டிருக்கும் நேரத்தைச் சற்று நினைத்துப் பாருங்கள். (உலகில்) பலவீனர்களாய் இருந்த மக்கள், பெரியவர்கள் போல் காட்டிக் கொண்டவர்களை நோக்கிச் சொல்வார்கள்: “நாங்கள் உங்களைப் பின்பற்றுவோராய் இருந்தோம். (இப்போது இங்கு) நரக வேதனையிலிருந்து சிறிதளவாவது எங்களைக் காப்பாற்றுவீர்களா?”
40:47. மேலும், (நரகவாசிகளாகிய) அவர்கள் நரகத்தில் தர்க்கம் செய்துகொள்ளும் சமயத்தில், அப்போது (அவர்களிலுள்ள) பலவீனமானவர்கள், பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களிடம், “நிச்சயமாக நாங்கள் உங்களையே பின்பற்றுவோராக இருந்தோம், ஆகவே, (இன்று) நரகத்தி(ன் வேதனையி)லிருந்து ஒரு பகுதியையேனும் எங்களை விட்டும் நீங்கள் தடுத்துவிடக்கூடியவர்களா?” என்று கேட்பர்.
40:48
40:48 قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُلٌّ فِيْهَاۤ ۙاِنَّ اللّٰهَ قَدْ حَكَمَ بَيْنَ الْعِبَادِ‏
قَالَ கூறுவார்(கள்) الَّذِيْنَ اسْتَكْبَرُوْۤا பெருமை அடித்தவர்கள் اِنَّا நிச்சயமாக நாம் كُلٌّ எல்லோரும் فِيْهَاۤ அதில்தான் ۙاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் قَدْ حَكَمَ திட்டமாக தீர்ப்பளித்து விட்டான் بَيْنَ الْعِبَادِ‏ அடியார்களுக்கு மத்தியில்
40:48. (அப்போது:) “நிச்சயமாக நாம் எல்லோருமே இதிலிருக்கிறோம்; நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களுக்கிடையில் தீர்ப்புச் செய்து விட்டான்” என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்கள் கூறுவார்கள்.
40:48. அதற்கு, பெருமையடித்துக் கொண்டிருந்த அ(வர்களுடைய தலை)வர்கள், ‘‘மெய்யாகவே (நாங்களும், நீங்களும் ஆக) நாம் அனைவரும் நரகத்தில்தான் இருக்கிறோம். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு(ச் செய்ய வேண்டிய) தீர்ப்பைச் செய்து விட்டான். (ஆகவே, உங்களுக்காக நாங்கள் ஒன்றும் உதவி செய்வதற்கில்லை)'' என்று கூறுவார்கள்.
40:48. பெரியவர்கள் போல் காட்டிக் கொண்டிருந்தவர்கள் பதில் அளிப்பார்கள்: “நாம் அனைவரும் இங்கு ஒரே நிலையில் இருக்கின்றோம்; அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து விட்டான்.”
40:48. (அதற்கு அவர்களுடைய தலைவர்களான) பெருமையடித்துக் கொண்டிருந்தோர் “நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் இதில்தான் இருக்கிறோம், நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கிடையே திட்டமாக தீர்ப்பளித்துவிட்டான்” என்று கூறுவர்.
40:49
40:49 وَقَالَ الَّذِيْنَ فِى النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ يُخَفِّفْ عَنَّا يَوْمًا مِّنَ الْعَذَابِ‏
وَقَالَ கூறுவார்(கள்) الَّذِيْنَ فِى النَّارِ நரகத்தில் உள்ளவர்கள் لِخَزَنَةِ காவலாளிகளுக்கு جَهَنَّمَ நரகத்தின் ادْعُوْا அழையுங்கள்! رَبَّكُمْ உங்கள் இறைவனை يُخَفِّفْ அவன் இலகுவாக்குவான் عَنَّا எங்களை விட்டு يَوْمًا ஒரு நாளாவது مِّنَ الْعَذَابِ‏ வேதனையை
40:49. “இவ்வேதனையை ஒரு நாளைக்கு (மட்டுமாவது) எங்களுக்கு இலேசாக்கும்படி உங்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று (நரக) நெருப்பில் இருப்பவர்கள் நரகத்தின் காவலாளிகளை நோக்கி கூறுவார்கள்.
40:49. பின்னர், நரகத்திலுள்ளவர்கள் நரகத்தின் காவலாளர்களை நோக்கி ‘‘வேதனையை ஒரு நாளேனும் எங்களுக்கு இலேசாக்குமாறு உங்கள் இறைவனிடம் நீங்கள் கேளுங்கள்'' எனக் கூறுவார்கள்.
40:49. மேலும், நரகத்தில் வீழ்ந்துகிடக்கும் அம்மக்கள் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்: “எங்களின் வேதனையை ஒரு நாளைக்கேனும் குறைப்பதற்கு நீங்கள் உங்கள் இறைவனிடம் இறைஞ்சுங்கள்.”
40:49. இன்னும், நரகத்திலுள்ளவர்கள்; நரகக்காவலர்களிடம், “உங்கள் இரட்சகனிடம் (எங்களுக்காக) நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள், வேதனையே ஒரு நாளேனும் எங்களுக்கு அவன் இலேசாக்குவான்” என்று கூறுவார்கள்.
40:50
40:50 قَالُوْۤا اَوَلَمْ تَكُ تَاْتِيْكُمْ رُسُلُكُمْ بِالْبَيِّنٰتِ ؕ قَالُوْا بَلٰى ؕ قَالُوْا‌ فَادْعُوْا ۚ وَمَا دُعٰٓـؤُا الْكٰفِرِيْنَ اِلَّا فِىْ ضَلٰلٍ‏
قَالُوْۤا அவர்கள் கூறுவார்கள் اَوَلَمْ تَكُ تَاْتِيْكُمْ உங்களிடம் வந்திருக்கவில்லையா? رُسُلُكُمْ உங்கள் தூதர்கள் بِالْبَيِّنٰتِ ؕ தெளிவான அத்தாட்சிகளுடன் قَالُوْا அவர்கள் கூறுவார்கள் بَلٰى ؕ ஏன் வரவில்லை! قَالُوْا‌ அவர்கள் கூறுவார்கள் فَادْعُوْا ۚ நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள் وَمَا دُعٰٓـؤُا பிரார்த்தனை இல்லை الْكٰفِرِيْنَ காஃபிர்களின் اِلَّا فِىْ ضَلٰلٍ‏ வழிகேட்டில் தவிர
40:50. “உங்கள் ரஸூல்கள் (தூதர்கள்) உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வரவில்லையா?” என (அக்காவலாளிகள்) கேட்பார்கள். “ஆம்! நிச்சயமாக” என அவர்கள் பதில் கூறுவார்கள். “அவ்வாறாயின் நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று அவர்கள் கூறுவர். ஆனால் காஃபிர்களின் பிரார்த்தனை வழி கேட்டிலில்லாமல் இல்லை.  
40:50. அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) ‘‘உங்களிடம் வந்த (இறைவனுடைய) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வரவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கு இவர்கள் ‘‘ஆம்! மெய்தான் (வந்தார்கள்)'' என்று கூறுவார்கள். அதற்கவர்கள், ‘‘அவ்வாறாயின், (நாங்கள் இறைவனிடம் கேட்பதற்கில்லை.) நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்'' என்று கூறிவிடுவார்கள். இந்நிராகரிப்பவர்களின் பிரார்த்தனை ஒரு பயனும் அளிக்காது.
40:50. அதற்கு அவர்கள் கேட்பார்கள்: “உங்களிடம் இறைத்தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் வந்து கொண்டிருக்கவில்லையா? அதற்கு அவர்கள் “ஆம்” என்று பதிலளிப்பார்கள். அப்பொழுது நரகத்தின் காவலர்கள் கூறுவர்: “அப்படியாயின் நீங்களே இறைஞ்சிக் கொள்ளுங்கள்!” நிராகரிப்பாளர்களின் இறைஞ்சுதல் பயனற்றுப் போய்விடும்.
40:50. அ(தற்க)வர்கள் (இவர்களிடம் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) “உங்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்து கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்பார்கள், அ(தற்க)வர்கள், “ஆம்,!” என்று கூறுவார்கள், அ(தற்க)வர்கள், “அவ்வாறாயின் (நாங்கள் அல்லாஹ்விடம் கேட்க மாட்டோம்) நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்” என்று கூறிவிடுவார்கள், மேலும், நிராகரிப்போரின் பிரார்த்தனை வழிகேட்டிலேயே தவிர இல்லை.
40:51
40:51 اِنَّا لَنَـنْصُرُ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُوْمُ الْاَشْهَادُ ۙ‏
اِنَّا நிச்சயமாக நாம் لَنَـنْصُرُ உதவுவோம் رُسُلَنَا நமது தூதர்களுக்கு(ம்) وَالَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களுக்கும் فِى الْحَيٰوةِ வாழ்க்கையிலும் الدُّنْيَا இவ்வுலக وَيَوْمَ நாளிலும் يَقُوْمُ நிற்கின்ற الْاَشْهَادُ ۙ‏ சாட்சிகள்
40:51. நிச்சயமாக, நாம் நம்முடைய ரஸூல்(தூதர்)களுக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் நாளிலும் உதவி செய்வோம்.
40:51. நிச்சயமாக நாம் நம் தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் (உதவி செய்வோம். இவர்களுக்காக) சாட்சிகள் வந்து கூறும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்.
40:51. உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்: நாம் நம்முடைய தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்விலும் அவசியம் உதவி செய்கின்றோம்; சாட்சிகள் நிற்கும் (மறுமை) நாளிலும் உதவி செய்வோம்.
40:51. நிச்சயமாக நாம், நம்முடைய தூதர்களுக்கும், விசுவாசங்கொண்டோருக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் நிலைபெறும் (மறுமை) நாளிலும் திண்ணமாக உதவி செய்வோம்.
40:52
40:52 يَوْمَ لَا يَنْفَعُ الظّٰلِمِيْنَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ‏
يَوْمَ (அந்)நாளில் لَا يَنْفَعُ பலனளிக்காது الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு مَعْذِرَتُهُمْ அவர்களின் சாக்குபோக்கு(கள்) وَلَهُمُ இன்னும் அவர்களுக்கு اللَّعْنَةُ சாபம்தான் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு سُوْٓءُ الدَّارِ‏ கெட்ட வீடும்
40:52. அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகல் கூறுதல் பயனளிக்காது - அவர்களுக்கு லஃனத்தும் (சாபமும்) உண்டு; தீய இருப்பிடமும் அவர்களுக்குண்டு.
40:52. அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் கூறும் புகல்கள் ஒன்றுமே பயனளிக்காது. அவர்களுக்கு (இறைவனின்) சாபமும் உண்டு; அவர்களுக்குத் தீய இருப்பிடமும் உண்டு.
40:52. அந்நாளில் கொடுமைக்காரர்களுக்கு அவர்களுடைய சாக்குப்போக்குகள் எந்தப் பயனையும் அளித்திடமாட்டா; அவர்கள் மீது சாபம் உண்டாகும். மேலும், மிக மோசமான தங்குமிடம் அவர்களுக்குக் கிடைக்கும்.
40:52. (அந் நாள்) அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகல் (கூறுதல் ஒன்றுமே) பயனளிக்காத நாள், அவர்களுக்கு (அல்லாஹ்வின்) சாபமும் உண்டு, அவர்களுக்கு (வேதனையால் மறுமை) வீட்டின் கெடுதியுமுண்டு.
40:53
40:53 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْهُدٰى وَاَوْرَثْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ الْكِتٰبَۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْهُدٰى நேர்வழியை وَاَوْرَثْنَا நாம் வாழையடி வாழையாகக் கொடுத்தோம் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு الْكِتٰبَۙ‏ வேதத்தை
40:53. நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி (காட்டும் வேதத்தை) நாம் அளித்தோம் - அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்.
40:53. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத் வேதத்தில்) நேரான வழியைக் கொடுத்து, இஸ்ராயீலின் சந்ததிகளை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கி வைத்தோம்.
40:53. தெரிந்துகொள்ளுங்கள்: மூஸாவுக்கு நாம் நேர்வழி காட்டினோம். மேலும், இஸ்ராயீலின் வழித் தோன்றல்களை வேதத்தின் வாரிசுகளாய் ஆக்கினோம்;
40:53. மேலும், திட்டமாக நாம் மூஸாவுக்கு (தவ்ராத் வேதமாகிய) நேர் வழியைக் கொடுத்தோம், இஸ்ராயீலின் மக்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாகவும் ஆக்கினோம்.
40:54
40:54 هُدًى وَّذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ‏
هُدًى நேர்வழியாக(வும்) وَّذِكْرٰى உபதேசமாகவும் لِاُولِى الْاَلْبَابِ‏ அறிவுள்ளவர்களுக்கு
40:54. (அது) நேரான வழிகாட்டியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது.
40:54. அது நேரான வழியாகவும் அறிவுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது. (எனினும், அதை அவர்கள் பின்பற்றவில்லை.)
40:54. அவ்வேதம் அறிவுடையோருக்கு வழிகாட்டியாகவும் அறிவுரையாகவும் திகழ்ந்தது.
40:54. (அது) நேர்வழியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் (இருந்தது).
40:55
40:55 فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِىِّ وَالْاِبْكَارِ‏
فَاصْبِرْ ஆகவே, பொறுமை காப்பீராக! اِنَّ நிச்சயமாக وَعْدَ اللّٰهِ அல்லாஹ்வின்வாக்கு حَقٌّ உண்மையானதே! وَّاسْتَغْفِرْ இன்னும் மன்னிப்புக்கேட்பீராக! لِذَنْۢبِكَ உமது பாவங்களுக்காக وَسَبِّحْ இன்னும் துதிப்பீராக! بِحَمْدِ புகழ்ந்து رَبِّكَ உமது இறைவனை بِالْعَشِىِّ மாலையிலும் وَالْاِبْكَارِ‏ காலையிலும்
40:55. ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
40:55. (நபியே!) நீர் (கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டு பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. நீர் உமது தவறுகளுக்கு மன்னிப்பைக் கோரிக்கொண்டும், காலையிலும், மாலையிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து கொண்டும் இருப்பீராக!
40:55. எனவே, (நபியே!) நீர் பொறுமையாய் இரும்! அல்லாஹ்வின் வாக்குறுதி முற்றிலும் உண்மையானது. மேலும், உம் தவறுக்காக மன்னிப்புக் கோரும்! காலையிலும் மாலையிலும் உம் இறைவனைப் புகழ்வதுடன் அவனைத் துதித்துக் கொண்டுமிரும்.
40:55. எனவே, (நபியே!) நீர் (கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும், மேலும், நீர் உம்முடைய பாவத்திற்காக மன்னிப்புக்கோருவீராக! மேலும், மாலையிலும், காலையிலும் உமதிரட்சிகனின் புகழைக் கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக!
40:56
40:56 اِنَّ الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِىْۤ اٰيٰتِ اللّٰهِ بِغَيْرِ سُلْطٰنٍ اَتٰٮهُمْۙ اِنْ فِىْ صُدُوْرِهِمْ اِلَّا كِبْرٌ مَّا هُمْ بِبَالِغِيْهِؕ فَاسْتَعِذْ بِاللّٰهِؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يُجَادِلُوْنَ தர்க்கம் செய்பவர்கள் فِىْۤ اٰيٰتِ அத்தாட்சிகள் விஷயத்தில் اللّٰهِ அல்லாஹ்வின் بِغَيْرِ سُلْطٰنٍ எவ்வித ஆதாரமும் இன்றி اَتٰٮهُمْۙ தங்களிடம் வந்த اِنْ فِىْ صُدُوْرِهِمْ அவர்களின் உள்ளங்களில் இல்லை اِلَّا தவிர كِبْرٌ பெருமையை مَّا هُمْ بِبَالِغِيْهِؕ அவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாது فَاسْتَعِذْ ஆகவே, நீர் பாதுகாப்புத் தேடுவீராக! بِاللّٰهِؕ அல்லாஹ்விடம் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْبَصِيْرُ‏ உற்று நோக்குபவன்
40:56. நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு எதுவும்) இல்லை; ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.
40:56. நிச்சயமாக எவர்கள் தங்களிடம் ஆதாரம் ஏதும் இல்லாதிருக்க அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கிறார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் (வெறும்) பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. (அப்பெருமையை) அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (உம்மை) பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் நீர் கோருவீராக. நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
40:56. சான்றோ, ஆதாரமோ எதுவுமே தங்களிடம் வந்திருக்காத நிலையில், எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் புரிகின்றார்களோ அவர்களின் நெஞ்சங்களில் (தாமே பெரியவர்கள் எனும்) அகங்காரம் நிறைந்துள்ளது. ஆனாலும், அவர்கள் அந்தப் பெருமையை அடையப் போவதில்லை. எனவே (நபியே!) அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக! திண்ணமாக, அவன் அனைத்தையும் பார்ப்பவனாகவும் கேட்பவனாகவும் இருக்கின்றான்.
40:56. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வசனங்களில், தங்களுக்கு வந்த எவ்வித சான்றுமில்லாமல் தர்க்கம் செய்கின்றார்களே அத்தகையவர்கள் _ அவர்களுடைய இதயங்களில் (வெறும்) பெருமையல்லாது (வேறு) இல்லை, அதை அவர்கள் அடையக்கூடியவர்களல்லர், ஆகவே, நீர் அல்லாஹ்வைக்கொண்டு பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
40:57
40:57 لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
لَخَلْقُ படைப்பதுதான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضِ பூமியையும் اَكْبَرُ மிகப் பெரியது مِنْ خَلْقِ படைப்பதைவிட النَّاسِ மனிதர்களை وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மனிதர்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
40:57. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட மிகவும் பெரிதாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
40:57. வானங்களையும் பூமியையும் படைத்திருப்பது, (இறந்த) மனிதர்களை (மறு முறை) படைப்பதைவிட நிச்சயமாக மிகப் பெரிய காரியமாகும். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதைக்கூட அறிந்து கொள்வதில்லை.
40:57. வானங்களையும் பூமியையும் படைப்பது, மனிதர்களைப் படைப்பதை விட நிச்சயம் மாபெரும் சாதனையாகும். எனினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
40:57. திட்டமாக வானங்களையும், பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதைவிட மிகப்பெரியதாகும், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறியமாட்டார்கள்.
40:58
40:58 وَمَا يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ۙ وَالَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِىْٓءُ ؕ قَلِيْلًا مَّا تَتَذَكَّرُوْنَ‏
وَمَا يَسْتَوِى சமமாக மாட்டார்(கள்) الْاَعْمٰى குருடரும் وَالْبَصِيْرُ ۙ பார்வையுள்ளவரும் وَالَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَ عَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை وَلَا الْمُسِىْٓءُ ؕ இன்னும் கெட்டவர்(கள்) قَلِيْلًا மிகக் குறைவாகத்தான் مَّا تَتَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்
40:58. குருடரும், பார்வையுடையோரும் சமமாகார்; அவ்வாறே, ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்; உங்களில் சொற்பமானவர்களே (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.
40:58. குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களும் (நம்பிக்கை கொள்ளாத) பாவிகளும் சமமாக மாட்டார்கள். வெகு சொற்பமாகவே இதைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்.
40:58. மேலும், குருடனும் பார்வையுள்ளவனும் சமமாக முடியாது; இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவரும் தீயவரும் சமமாக முடியாது; ஆனால், நீங்கள் மிகக் குறைவாகவே உணர்கின்றீர்கள்.
40:58. குருடரும், பார்வையுடையவரும் சமமாக மாட்டார்கள், (அவ்வாறே,) விசுவாசங்கொண்டு நற்கருமங்கள் செய்தார்களே அவர்களும், தீயவரும் (சமமாக மாட்டார்கள்) வெகு சொற்பமாகவே (இதனைக்கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்.
40:59
40:59 اِنَّ السَّاعَةَ لَاٰتِيَةٌ لَّا رَيْبَ فِيْهَا وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ‏
اِنَّ السَّاعَةَ நிச்சயமாக மறுமை لَاٰتِيَةٌ வந்தே தீரும் لَّا رَيْبَ فِيْهَا அதில் எவ்வித சந்தேகமும் இல்லை وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மனிதர்களில் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
40:59. (விசாரணைக்குரிய) காலம் நிச்சயமாக வந்தே தீரும்; அதில் சந்தேகமே இல்லை - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதில் ஈமான் கொள்வதில்லை.
40:59. விசாரணைக் காலம் நிச்சயமாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) நம்புவதில்லை.
40:59. திண்ணமாக, மறுமை நாள் வரத்தான் போகின்றது; அதில் எவ்வித ஐயமுமில்லை. எனினும், மக்களில் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை.
40:59. நிச்சயமாக மறுமைநாள் வரக்கூடியதே, அதில் சந்தேகமே இல்லை, எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) நம்பமாட்டார்கள்.
40:60
40:60 وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِىْۤ اَسْتَجِبْ لَـكُمْؕ اِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِىْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ‏
وَقَالَ கூறுகிறான் رَبُّكُمُ உங்கள் இறைவன் ادْعُوْنِىْۤ என்னிடம் பிரார்த்தியுங்கள்! اَسْتَجِبْ நான் அங்கீகரிப்பேன் لَـكُمْؕ உங்களுக்கு اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ பெருமை அடிப்பவர்கள் عَنْ عِبَادَتِىْ எனது வணக்க வழிபாடுகளை விட்டு سَيَدْخُلُوْنَ நுழைவார்கள் جَهَنَّمَ நரகத்தில் دَاخِرِيْنَ‏ சிறுமைப்பட்டவர்களாக
40:60. உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
40:60. உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள்.
40:60. உங்கள் இறைவன் கூறுகின்றான்: “என்னிடம் இறைஞ்சுங்கள்! நான் உங்கள் இறைஞ்சுதலை ஏற்றுக் கொள்வேன். திண்ணமாக, எவர்கள் தற்பெருமை கொண்டு எனக்கு வழிபட மறுக்கின்றார்களோ அவர்கள் இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாகி அவசியம் நரகில் நுழைவார்கள்.
40:60. இன்னும், உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், “நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன், நிச்சயமாக, என்னை வணங்குவதைவிட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர்_ அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள்”.
40:61
40:61 اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَ لٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ‏
اَللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எப்படிப்பட்டவன் جَعَلَ لَـكُمُ உங்களுக்கு ஆக்கினான் الَّيْلَ இரவை لِتَسْكُنُوْا நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக(வும்) فِيْهِ அதில் وَالنَّهَارَ இன்னும் பகலை مُبْصِرًا ؕ வெளிச்ச முள்ளதாக(வும்) اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَذُوْ فَضْلٍ அருளுடையவன் عَلَى النَّاسِ மக்கள் மீது وَ لٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மனிதர்களில் لَا يَشْكُرُوْنَ‏ நன்றி செலுத்தமாட்டார்கள்
40:61. நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
40:61. அல்லாஹ்தான், நீங்கள் (இளைப்பாறி) சுகமடைவதற்காக இரவையும், (வெளிச்சத்தால் பலவற்றையும்) நீங்கள் பார்க்கும்படி பகலையும் படைத்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களின் மீது பேரருள் புரிகிறான். ஆயினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவதில்லை.
40:61. அல்லாஹ்தான் உங்களுக்காக இரவைப் படைத்தான்; அதில் நீங்கள் அமைதி பெறுவதற்காக! மேலும், பகலை ஒளியுடையதாக்கினான். உண்மையில், அல்லாஹ் மக்கள் மீது அருள்புரிபவனாக இருக்கின்றான். ஆனால், மக்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
40:61. அல்லாஹ்_அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக இரவை_அதில் நீங்கள் ஓய்வு பெறுவதற்க்காகவும், பகலைப் பார்ப்பதற்க்காகவும் அவன் அமைத்தான், நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பேரருள் உடையவன், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்தமாட்டர்கள்.
40:62
40:62 ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ ۘ لَّاۤ اِلٰهَ اِلَّا هُوَ ‌ۚ  فَاَ نّٰى تُؤْفَكُوْنَ‏
ذٰ لِكُمُ اللّٰهُ அந்த அல்லாஹ்தான் رَبُّكُمْ உங்கள் இறைவன் خَالِقُ படைத்தவன் كُلِّ شَىْءٍ‌ ۘ எல்லாவற்றையும் لَّاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ ۚ  அவனைத் தவிர فَاَ نّٰى تُؤْفَكُوْنَ‏ எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்
40:62. அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் - அவனைத் தவிர வேறு நாயனில்லை; எனவே நீங்கள் (சத்தியத்தை விட்டும்) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
40:62. உங்கள் இறைவனான அந்த அல்லாஹ்தான் (மற்ற) பொருள்கள் அனைத்தையும் படைப்பவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
40:62. (உங்களுக்காக இவை அனைத்தையும் செய்திருக்கும்) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன்; ஒவ்வொரு பொருளின் படைப்பாளன்; அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. பின்னர் நீங்கள் எங்கிருந்து வழிபிறழச் செய்யப்படுகின்றீர்கள்?
40:62. அவன்தான் அல்லாஹ்_உங்களுடைய இரட்சகன், ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன், அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, ஆகவே (அவனைப் புறக்கணித்து விட்டு) நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள்?
40:63
40:63 كَذٰلِكَ يُؤْفَكُ الَّذِيْنَ كَانُوْا بِاٰيٰتِ اللّٰهِ يَجْحَدُوْنَ‏
كَذٰلِكَ இவ்வாறுதான் يُؤْفَكُ திருப்பப்பட்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَانُوْا இருந்தார்கள் بِاٰيٰتِ அத்தாட்சிகளை اللّٰهِ அல்லாஹ்வின் يَجْحَدُوْنَ‏ மறுப்பவர்களாக
40:63. அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்களும் இவ்வாறே திருப்பப்பட்டனர்.
40:63. அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்துக்கொண்டு (முன்னர்) இருந்தவர்களும், இவ்வாறுதான் வெருண்டோடிச் சென்றனர்.
40:63. இவ்வாறே, அல்லாஹ்வின் வசனங்களை மறுத்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் வழிபிறழச் செய்யப்படுகிறார்கள்.
40:63. அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்துக்கொண்டிருந்தார்களே, அவர்களும் இவ்வாறே திருப்பப்படுகிறார்கள்.
40:64
40:64 اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً وَّصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ وَرَزَقَكُمْ مِّنَ الطَّيِّبٰتِ ؕ ذٰ لِكُمُ اللّٰهُ رَبُّكُمْ ‌ ۖۚ فَتَبٰـرَكَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏
اَللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எப்படிப்பட்டவன் جَعَلَ அமைத்தான் لَـكُمُ உங்களுக்கு الْاَرْضَ பூமியை قَرَارًا வசிப்பதற்கு வசதியாக وَّالسَّمَآءَ இன்னும் வானத்தை بِنَآءً ஒரு கட்டிடமாக وَّصَوَّرَكُمْ இன்னும் உங்களை உருவமைத்தான் فَاَحْسَنَ அழகாக்கினான் صُوَرَكُمْ உங்கள் உருவங்களை وَرَزَقَكُمْ இன்னும் உங்களுக்கு உணவளித்தான் مِّنَ الطَّيِّبٰتِ ؕ நல்ல உணவுகளில் இருந்து ذٰ لِكُمُ اللّٰهُ அவன் தான் அல்லாஹ் رَبُّكُمْ ۖۚ உங்கள் இறைவனாகிய فَتَبٰـرَكَ மிக்க அருள்வளம் நிறைந்தவன் اللّٰهُ அல்லாஹ் رَبُّ இறைவனாகிய الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
40:64. அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
40:64. அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசித்திருக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, உங்களைச் சித்தரித்து, அழகான கோலத்திலும் உங்களை அமைத்தான். அவனே உங்களுக்கு மேலான உணவுகளையும் வழங்குகிறான். அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன். அகிலத்தார்களின் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியம் உடையவன்.
40:64. அல்லாஹ்தான் உங்களுக்காகப் பூமியைத் தங்குமிடமாகவும் மேலே வானத்தை முகடாகவும் அமைத்தான். அவனே உங்களுக்கு வடிவங்கள் அமைத்தான்; உங்கள் வடிவங்களை மிகவும் அழகுபட அமைத்தான். மேலும், அவன் உங்களுக்குத் தூய்மையான பொருள்களிலிருந்து உணவளித்தான். (இவற்றைச் செய்த) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன்; அகில உலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன்.
40:64. அல்லாஹ்_அவன் எத்தகையவனென்றால், உங்களுக்காக பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை முகடாகவும் அவன் அமைத்தான், மேலும், உங்க(ள் தோற்றங்க)ளை உருவகப்படுத்தினான், பின்னர், உங்களின் தோற்றங்களை அவன் அழகாக்கினான், இன்னும், (பரிசுத்தமான) நல்லவைகளிலிருந்து உங்களுக்கு அவன் உணவும் அளித்தான், (இத்தகுதிகளுக்குரியவனான) அவன் தான் உங்களுடய இரட்சகனாகிய அல்லாஹ்; ஆகவே, அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் மிக்க பாக்கியமிக்கவன்.
40:65
40:65 هُوَ الْحَىُّ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ فَادْعُوْهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَؕ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ‏
هُوَ அவன்தான் الْحَىُّ என்றும் உயிரோடு இருப்பவன் لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ அவனைத் தவிர فَادْعُوْهُ ஆகவே அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள் مُخْلِصِيْنَ தூய்மைப்படுத்தியவர்களாக لَهُ அவனுக்கு الدِّيْنَؕ வழிபாடுகளை اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே رَبِّ இறைவனாகிய الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
40:65. அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.
40:65. அவன் நிரந்தரமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஓர் இறைவன் அறவே இல்லை. ஆகவே, அவனுக்கு நீங்கள் முற்றிலும் வழிப்பட்டுக் கலப்பற்ற மனதுடன் அவனை அழைப்பீர்களாக! உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது.
40:65. அவனே நித்திய ஜீவனாக இருக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறெவரும் இல்லை. ஆகவே, அவனிடமே இறைஞ்சுங்கள்; உங்களுடைய தீனை கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்கியவர்களாய்! புகழ் அனைத்தும் அகில உலகங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும்.
40:65. அவனே உயிரோடிருப்பவன், அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, எனவே, நீங்கள் வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை பிரார்த்தி(த்து அழை)யுங்கள். அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியவையாகும்.
40:66
40:66 قُلْ اِنِّىْ نُهِيْتُ اَنْ اَعْبُدَ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَمَّا جَآءَنِىَ الْبَيِّنٰتُ مِنْ رَّبِّىْ وَاُمِرْتُ اَنْ اُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِيْنَ‏
قُلْ கூறுவீராக! اِنِّىْ நிச்சயமாக நான் نُهِيْتُ தடுக்கப்பட்டு விட்டேன் اَنْ اَعْبُدَ நான் வணங்குவதற்கு الَّذِيْنَ تَدْعُوْنَ நீங்கள் பிரார்த்திக்கின்றவர்களை مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி لَمَّا جَآءَنِىَ என்னிடம்வந்துவிட்டபோது الْبَيِّنٰتُ தெளிவான அத்தாட்சிகள் مِنْ رَّبِّىْ என் இறைவனிடமிருந்து وَاُمِرْتُ நான் ஆணை இடப்பட்டுள்ளேன் اَنْ اُسْلِمَ நான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும் لِرَبِّ இறைவனுக்கு الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
40:66. (நபியே!) கூறுவீராக: “என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் - அன்றியும் - அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.”
40:66. (நபியே!) கூறுவீராக: ‘‘என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் என்னிடம் வந்ததன் பின்னர், அல்லாஹ்வையன்றி நீங்கள் (இறைவனென)அழைப்பவற்றை நான் வணங்கக்கூடாதென்று தடுக்கப்பட்டுள்ளேன். நிச்சயமாக உலகத்தாரின் இறைவனுக்கே நான் முற்றிலும் பணிந்து வழிபட்டு நடக்கும்படியும் ஏவப்பட்டுள்ளேன்''
40:66. (நபியே! இம்மக்களிடம்) கூறிவிடும்: “நீங்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு எவற்றையெல்லாம் அழைக்கின்றீர்களோ அவற்றை வணங்குவதைவிட்டு நான் தடுக்கப்பட்டிருக்கின்றேன்; என் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகள் என்னிடம் வந்திருக்கும்போது (நான் இதனை எப்படிச் செய்ய முடியும்?) அகில உலகங்களின் அதிபதியின் முன்னால் கீழ்ப்படிந்துவிட வேண்டும் என நான் பணிக்கப்பட்டிருக்கின்றேன்.
40:66. (நபியே!) நீர் கூறுவீராக: “என் இரட்சகனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்தபோது, அல்லாஹ்வையன்றி நீங்கள் (தெய்வங்களாக) அழைப்பவைகளை நான் வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டு விட்டேன். அன்றியும், அகிலத்தாரின் இரட்சகனுக்கே நான் முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்குமாறு நான் கட்டளையிடப்பட்டு விட்டேன்.”
40:67
40:67 هُوَ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ يُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ثُمَّ لِتَكُوْنُوْا شُيُوْخًا ؕ وَمِنْكُمْ مَّنْ يُّتَوَفّٰى مِنْ قَبْلُ وَلِتَبْلُغُوْۤا اَجَلًا مُّسَمًّى وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
هُوَ அவன் الَّذِىْ எப்படிப்பட்டவன் خَلَقَكُمْ உங்களைப்படைத்தான் مِّنْ تُرَابٍ மண்ணிலிருந்து ثُمَّ பிறகு مِنْ نُّطْفَةٍ இந்திரியத்தில் இருந்து ثُمَّ مِنْ عَلَقَةٍ பிறகு/இரத்தக் கட்டியில் இருந்து ثُمَّ பிறகு يُخْرِجُكُمْ உங்களை வெளிக்கொண்டு வருகிறான் طِفْلًا குழந்தைகளாக ثُمَّ பிறகு لِتَبْلُغُوْۤا நீங்கள் அடைவதற்காக اَشُدَّ வலிமையை كُمْ உங்கள் ثُمَّ பிறகு لِتَكُوْنُوْا நீங்கள்ஆகுவதற்காக شُيُوْخًا ؕ வயோதிகர்களாக وَمِنْكُمْ உங்களில் مَّنْ يُّتَوَفّٰى உயிர் கைப்பற்றப்படுபவரும் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் وَلِتَبْلُغُوْۤا இன்னும் நீங்கள் அடைவதற்காக اَجَلًا ஒரு தவணையை مُّسَمًّى குறிப்பிட்ட(து) وَّلَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏ இன்னும் நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
40:67. அவன்தான் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின் இந்திரியத்திலிருந்தும் பின் அலக் என்னும் நிலையிலிருந்தும் (உருவாக்கி) உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான்; பின் நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் முதியோராகுகிறீர்கள்; இதற்கு முன்னர் இறந்து விடுவோரும் உங்களில் இருக்கின்றனர் - இன்னும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணையை அடைவீர்கள்; (இதிலிருந்து) நீங்கள் உணர்வு பெறும் பொருட்டு (இதை அறிந்து கொள்ளுங்கள்).
40:67. அவன்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்தும் பின்னர், இந்திரியத்துளியிலிருந்தும், பின்னர், கருவிலிருந்தும் படைத்தான். பிறகு, அவனே உங்களை ஒரு சிசுவாகவும் வெளிப்படுத்துகிறான். பின்னர், (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைந்து, பின்னர் நீங்கள் முதியவர்களாக ஆகிறீர்கள். இதற்கு முன்னரும் உங்களில் பலர் இறந்து விடுகின்றனர். ஆயினும், (உங்களில் ஒவ்வொருவரும்) குறிப்பிட்ட தவணையை அடைந்தே தீருகிறீர்கள். இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!
40:67. அவனே உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பின்னர் விந்திலிருந்து பின்னர் இரத்தக்கட்டியிலிருந்து! பின்னர், அவன் உங்களைக் குழந்தையின் வடிவில் வெளிக்கொணர்கின்றான். பின்னர், நீங்கள் உங்கள் முழு வலிமையை அடையும் வரை உங்களை வளர்த்து வருகின்றான்; பிறகு நீங்கள் முதுமையை அடையும் வரையிலும் வளர்க்கின்றான்! மேலும், உங்களில் சிலர் முன்னதாகவே திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகின்றனர். எதற்காக இவையனைத்தும் செய்யப்படுகின்றனவெனில் உங்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை நீங்கள் அடைவதற்காகவும் நீங்கள் உண்மையை அறிவதற்காகவும்தான்!
40:67. அவன் எத்தகையவனென்றால், உங்களை (ஆரம்பத்தில்) மண்ணிலிருந்து படைத்தான், பின்னர், இந்திரியத் துளியிலிருந்தும், பின்னர், இரத்தத் கட்டியிலிருந்தும் (உருவாக்கி) பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியாக்குகிறான், பின்னர் (படிப்படியாக) நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைவதற்காகவும், பின்னர் நீங்கள் முதியோராக ஆவதற்காகவும், (உங்களைப் படைத்தான். இதற்கு) முன்னரே மரணிப்பவரும் உங்களில் இருக்கிறார்கள், இன்னும், குறிப்பிடப்பட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும், (இதிலிருந்து அவனின் சக்தியை) நீங்கள் விளங்கிக் கொள்வதற்காகவும் (இவ்வாறு செய்தான்).
40:68
40:68 هُوَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُؕ فَاِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
هُوَ அவன் الَّذِىْ எப்படிப்பட்டவன் يُحْىٖ உயிர்ப்பிக்கின்றான் وَيُمِيْتُؕ இன்னும் மரணிக்கச் செய்கிறான் فَاِذَا قَضٰٓى அவன் முடிவு செய்துவிட்டால் اَمْرًا ஒரு காரியத்தை فَاِنَّمَا يَقُوْلُ அவன் கூறுவதெல்லாம் لَهٗ அதற்கு كُنْ ஆகு فَيَكُوْنُ‏ உடனே அது ஆகிவிடும்
40:68. அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான். ஆகவே அவன் ஒரு காரியத்தை(ச் செய்ய)த் தீர்மானித்தால்: “ஆகுக!” என்று அதற்குக் கூறுகிறான். உடன் அது ஆகிவிடுகிறது.  
40:68. அவனே உயிர் கொடுக்கிறான்; உயிர் வாங்குகின்றான். எதையும் (படைக்க) அவன் தீர்மானித்தால் அதை ‘ஆகுக' என்று அவன் கூறியவுடன் அது ஆகிவிடுகிறது.
40:68. அவனே வாழ்வளிப்பவனும் மரணிக்கச் செய்பவனும் ஆவான். அவன் எந்த விஷயத்தைத் தீர்மானித்தாலும் ‘ஆகு!’ என்றுதான் ஆணையிடுகின்றான். உடனே அது ஆகிவிடுகின்றது.
40:68. அவன் எத்தகையவனென்றால், அவனே உயிரளிக்கின்றான், இன்னும், மரணிக்கச் செய்கின்றான், எனவே, ஏதேனும் ஒரு காரியத்தை(ச் செய்ய) அவன் தீர்மானித்தால், அப்போது அதற்கு அவன் கூறுவதெல்லாம் ஆகுக! என்பதைத்தான் (அப்போது) உடனே அது ஆகிவிடும்.
40:69
40:69 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِىْۤ اٰيٰتِ اللّٰهِؕ اَنّٰى يُصْرَفُوْنَ  ۛۚ ۙ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلَى الَّذِيْنَ يُجَادِلُوْنَ தர்க்கம் செய்கின்றவர்களை فِىْۤ اٰيٰتِ اللّٰهِؕ அல்லாஹ்வின் வசனங்களில் اَنّٰى يُصْرَفُوْنَ  ۛۚ ۙ‏ அவர்கள் எவ்வாறு திருப்பப்படுகிறார்கள்
40:69. அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்பவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்) திருப்பப்படுகின்றனர்?
40:69. (நபியே!) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றி (வீணாக)த் தர்க்கிப்பவர்கள் எவ்வாறு (உண்மையை விட்டும்) திருப்பப்படுகின்றனர் என்பதை நீர் பார்க்கவில்லையா?
40:69. அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றவர்களை நீர் பார்க்கவில்லையா? எங்கிருந்து அவர்கள் திசைதிருப்பப்படுகின்றார்கள்?
40:69. (நபியே!) அல்லாஹ்வின் (அத்தாட்சிகளாகிய அவனது) வசனங்களில் தர்க்கம் செய்கின்றார்களே அத்தகையோர்பால்_அவர்கள் எவ்வாறு (சத்தியத்திலிருந்து) திருப்பப்படுகின்றனர் என்று நீர் பார்க்கவில்லையா?
40:70
40:70 الَّذِيْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَاۤ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۛ  فَسَوْفَ يَعْلَمُوْنَ ۙ‏
الَّذِيْنَ كَذَّبُوْا பொய்ப்பித்தவர்கள் بِالْكِتٰبِ வேதத்தை(யும்) وَبِمَاۤ اَرْسَلْنَا இன்னும் /எதைக் கொண்டு/நாம்அனுப்பினோமோ بِهٖ அதைக் கொண்டு رُسُلَنَا நமது தூதர்களை ۛ  فَسَوْفَ يَعْلَمُوْنَ ۙ‏ விரைவில் அறிந்து கொள்வார்கள்
40:70. எவர் இவ்வேதத்தையும், நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள்.
40:70. எவர்கள் இந்த வேதத்தையும், நமது (மற்ற) தூதர்கள் கொண்டு வந்த (வேதத்)தையும் பொய்யாக்குகின்றனரோ, அவர்கள் (பின்னர் அதை உண்மைதான் என்று) நிச்சயமாக அறிந்து கொள்வார்கள்.
40:70. இவர்கள் இந்த வேதத்தையும் நாம், நம் தூதர்களுடன் அனுப்பிவைத்திருந்த அனைத்து வேதங்களையும் பொய்யெனக் கூறுகின்றார்கள். விரைவில் இவர்களுக்குத் தெரிந்துவிடும்;
40:70. அவர்கள் எத்தகையோரென்றால், (நம்முடைய) இவ் வேதத்தையும், இன்னும், எ(வ்வேதத்)தைக் கொண்டு நமது தூதர்களை நாம் அனுப்பி வைத்தோமோ, அதையும் பொய்யாக்கினார்கள், ஆகவே (விரைவில் அதன் பலனை) அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
40:71
40:71 اِذِ الْاَغْلٰلُ فِىْۤ اَعْنَاقِهِمْ وَالسَّلٰسِلُؕ يُسْحَبُوْنَۙ‏
اِذِ الْاَغْلٰلُ அப்போது சங்கிலிகளும் فِىْۤ اَعْنَاقِهِمْ அவர்களின் கழுத்துகளில் وَالسَّلٰسِلُؕ இன்னும் விலங்குகளும் يُسْحَبُوْنَۙ‏ அவர்கள் இழுக்கப்படுவார்கள்
40:71. அவர்களுடைய கழுத்துகளில் மோவாய்க்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடனும் இழுத்துக் கொண்டு வரப்பட்டு;
40:71. அவர்களுடைய கழுத்துகளில் விலங்கிட்டு, சங்கிலிகளால் கட்டப்பட்டு (வேதனை செய்ய) இழுத்துக் கொண்டு போகப்படுவார்கள்.
40:71. அப்பொழுது அவர்களுடைய கழுத்துகள் விலங்குகளாலும் சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டிருக்கும்.
40:71. அவர்களின் கழுத்துக்களில் வளையங்களாலும், சங்கிலிகளாலும் (கட்டப்பட்டு மலக்குகளால்) அவர்கள் இழுத்து வரப்படும் போது_(அதனை அறிவார்கள்).
40:72
40:72 فِى الْحَمِيْمِ ۙ ثُمَّ فِى النَّارِ يُسْجَرُوْنَ‌ ۚ‏
فِى الْحَمِيْمِ ۙ கொதிக்கின்ற நீரில் ثُمَّ பிறகு فِى النَّارِ நரக நெருப்பில் يُسْجَرُوْنَ‌ ۚ‏ அவர்கள் எரிக்கப்படுவார்கள்
40:72. கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள்.
40:72. (அவர்கள்) முதலில் கொதிக்கும் நீரின் பக்கமும், பின்னர் நரகத்திற்கும் (கொண்டு போகப்பட்டு, அதில்) எரிக்கப்படுவார்கள்.
40:72. அவர்கள் கொதிநீரின் பக்கம் இழுத்துவரப்படுவார்கள்; பின்னர் நரகத்தில் வீசியெறியப்படுவார்கள்.
40:72. கொதிக்கும் நீரில், பின்னர், நரகத்தில் (அவர்களைக் கொண்டுவந்து தீ) மூட்டப்படுவார்கள்.
40:73
40:73 ثُمَّ قِيْلَ لَهُمْ اَيْنَ مَا كُنْتُمْ تُشْرِكُوْنَۙ‏
ثُمَّ பிறகு قِيْلَ கூறப்படும் لَهُمْ அவர்களிடம் اَيْنَ எங்கே? مَا كُنْتُمْ تُشْرِكُوْنَۙ‏ நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை
40:73. பிறகு அவர்களுக்குச் சொல்லப்படும்: “(அல்லாஹ்வையன்றி,) நீங்கள் (அவனுக்கு) இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே?” என்று.
40:73. பின்னர், அவர்களை நோக்கி ‘‘(அல்லாஹ்வுக்கு) இணையென்று நீங்கள் கூறிக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?'' என்று கேட்கப்படும்.
40:73. “அல்லாஹ்வை விடுத்து நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்த மற்ற கடவுள்கள் இப்போது எங்கே?” என்று அவர்களிடம் கேட்கப்படும்.
40:73. பின்னர், அவர்களிடமே நீங்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்துக் கொண்டிருந்தவை எங்கே? என்று கேட்கப்படும்.
40:74
40:74 مِنْ دُوْنِ اللّٰهِ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا بَلْ لَّمْ نَـكُنْ نَّدْعُوْا مِنْ قَبْلُ شَيْــٴًـــا ؕ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ الْكٰفِرِيْنَ‏
مِنْ دُوْنِ اللّٰهِ ؕ அல்லாஹ்வையன்றி قَالُوْا அவர்கள் கூறுவார்கள் ضَلُّوْا அவை தவறிவிட்டன عَنَّا எங்களை விட்டும் بَلْ لَّمْ نَـكُنْ மாறாக/நாங்கள் இருக்கவில்லையே!” نَّدْعُوْا நாங்கள் வணங்குகின்றவர்களாக مِنْ قَبْلُ இதற்கு முன்னர் شَيْــٴًـــا ؕ எதையும் كَذٰلِكَ இவ்வாறுதான் يُضِلُّ வழிகெடுக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களை
40:74. “அல்லாஹ்வையன்றி” (நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை எங்கே என்று கேட்கப்பட்டதும்): “அவை எங்களை விட்டும் மறைந்து விட்டன; அன்றியும் முன்னர் நாங்கள் (அல்லாஹ்வைத் தவிர எதையும்) அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!” என்று கூறுவார்கள். இவ்வாறுதான் காஃபிர்களை அல்லாஹ் வழி கெடச் செய்கிறான்.
40:74. அதற்கவர்கள், ‘‘அவையெல்லாம் எங்களை விட்டும் மறைந்து விட்டன. இதற்கு முன்னர் நாம் (அல்லாஹ் அல்லாத) எதையுமே அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!'' என்று (பொய்) கூறுவார்கள். இவ்வாறு நிராகரிப்பவர்கள் (உடைய புத்தி) தடுமாறும்படி அல்லாஹ் செய்துவிடுவான்.
40:74. அப்போது அவர்கள் பதில் அளிப்பார்கள்: “அவர்கள் எங்களை விட்டும் காணாமல் போய் விட்டார்கள். உண்மையில், நாங்கள் இதற்கு முன்பு எதனையும் அழைத்துக் கொண்டிருக்கவில்லை.” இவ்வாறாக, நிராகரிப்பாளர்கள் வழிகெட்டிருப்பதை அல்லாஹ் உறுதிப்படுத்தி விடுவான்.
40:74. அல்லாஹ்வையன்றி (நீங்கள் இணை வைத்துக் கொண்டிருந்தவை எங்கே? எனக் கேட்கப்படும், அதற்கு) “எங்களை விட்டும் அவை மறைந்து விட்டன, எனினும் இதற்கு முன்னர் நாங்கள் (அல்லாஹ் அல்லாத) யாதொன்றையும் (ஆண்டவனென) அழைத்துக் கொண்டிருக்கவில்லையே” என்று (பொய்) கூறுவார்கள். இவ்வாறு நிராகரிப்போரை அல்லாஹ் வழிகெடச் செய்கிறான்.
40:75
40:75 ذٰ لِكُمْ بِمَا كُنْتُمْ تَفْرَحُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْـتُمْ تَمْرَحُوْنَ‌ ۚ‏
ذٰ لِكُمْ بِمَا كُنْتُمْ இது/நீங்கள் இருந்த காரணத்தாலும் تَفْرَحُوْنَ மகிழ்ச்சி அடைபவர்களாக فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَقِّ அநியாயத்தைக் கொண்டு وَبِمَا كُنْـتُمْ நீங்கள் இருந்த காரணத்தாலும் تَمْرَحُوْنَ‌ ۚ‏ மமதை கொள்பவர்களாக
40:75. “இது, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் (பெருமையடித்து) மகிழ்ந்து பூரித்துக் கொண்டிருந்தீர்களே (அதற்கான தண்டனையாகும்).
40:75. (பின்னர், அவர்களை நோக்கி) ‘‘பூமியில் நீங்கள் செய்த உண்மையற்றதைக் கொண்டு அளவுகடந்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்ததாலும், இறுமாப்போடு இருந்ததாலும் இதுவே உங்களுக்கு (தகுமான கூலியாகும்)
40:75. அவர்களிடம் கூறப்படும்: “உங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டதற்குக் காரணம், நீங்கள் உண்மைக்கு மாற்றமானதைக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தீர்கள்; பூரிப்பில் இறுமாந்து கொண்டும் இருந்தீர்கள்.
40:75. (பின்னர் அவர்களிடம்,) “அ(வ்வாறு வழி கெடுத்த)து நீங்கள் பூமியில் நியாயமின்றி (அளவு கடந்து) மகிழ்ச்சியடைந்தவர்களாக இருந்ததன் காரணமாகவும், இறுமாப்புக் கொண்டவர்களாக இருந்ததன் காரணத்தினாலுமாகும்” (என்றும்),
40:76
40:76 اُدْخُلُوْۤا اَبْوَابَ جَهَـنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ۚ فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِيْنَ‏
اُدْخُلُوْۤا நீங்கள் நுழையுங்கள்! اَبْوَابَ வாசல்களில் جَهَـنَّمَ நரகத்தின் خٰلِدِيْنَ நிரந்தரமானவர்களாக فِيْهَا ۚ அதில் فَبِئْسَ மிகக் கெட்டது مَثْوَى தங்குமிடம் الْمُتَكَبِّرِيْنَ‏ பெருமையடிப்பவர்களின்
40:76. “நீங்கள் நரகத்தின் வாயில்களுள் அதில் என்றென்றும் தங்குபவர்களாக - பிரவேசியுங்கள்” (என்று கூறப்படும்). எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
40:76. நீங்கள் நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள். அதில் என்றென்றும் தங்கி விடுங்கள்'' (என்று கூறப்படும்). கர்வம்கொண்ட இவர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது.
40:76. இப்போது நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள்; நீங்கள் அதிலேயே நிரந்தரமாக வீழ்ந்துகிடக்க வேண்டியுள்ளது, அகங்காரம் கொண்டவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டதாகும்.
40:76. “நரகத்தின் வாயல்களில் நுழையுங்கள், அ(ந்நரகத்)தில் நிரந்தரமக(த்தங்கி) இருப்பவர்களாக நீங்கள் இருக்கும் நிலையில்,“ (என்றும் கூறப்படும்), எனவே, பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களின் ஒதுங்குமிடம் மிகக் கெட்டது.
40:77
40:77 فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ فَاِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا يُرْجَعُوْنَ‏
فَاصْبِرْ ஆகவே, பொறுமையாக இருப்பீராக! اِنَّ وَعْدَ நிச்சயமாக வாக்கு اللّٰهِ அல்லாஹ்வின் حَقٌّ ۚ உண்மையானதே! فَاِمَّا ஒன்று نُرِيَنَّكَ நாம் உங்களுக்கு காண்பிப்போம் بَعْضَ சிலதை الَّذِىْ نَعِدُهُمْ அவர்களை நாம் எச்சரித்தவற்றில் اَوْ அல்லது نَتَوَفَّيَنَّكَ உம்மை உயிர் கைப்பற்றிக் கொள்வோம் فَاِلَيْنَا நம் பக்கம்தான் يُرْجَعُوْنَ‏ அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்
40:77. ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது; அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை, நாம் உமக்குக் காண்பித்தாலும் அல்லது அதற்கு முன்னரே நிச்சயமாக நாம் உம்மை மரணமடையச் செய்தாலும், அவர்கள் நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.
40:77. (நபியே!) பொறுமையுடன் (உறுதியாக) இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. அவர்களை நாம் பயமுறுத்துகின்ற வேதனைகளில் சிலவற்றை (உமது வாழ்நாளில்) நாம் உமக்குக் காண்பித்தாலும் சரி, அல்லது, (அவை வருவதற்கு முன்னதாகவே) நாம் உம்மைக் கைப்பற்றி (நீர் இறந்து) விட்டாலும் சரி, நிச்சயமாக அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.
40:77. (நபியே!) பொறுமையைக் கைக்கொள்ளும்! திண்ணமாக, அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. எந்தத் தீய விளைவுகளைப் பற்றி நாம் இவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றோமோ அவற்றில் சிலவற்றை நாம் உம் கண்ணெதிரில் காட்டித் தந்தாலும் சரி; அல்லது (அதற்கு முன்பே) உலகைவிட்டு உம்மை எடுத்துக் கொண்டாலும் சரி. இவர்கள் நம் பக்கமே திரும்பி வர வேண்டியுள்ளது.
40:77. ஆகவே, (நபியே!) நீர் பொறுமையுடன் (உறுதியாக) இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானதாகும், ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சிலவற்றை நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு முன்) நாம் உம்மை மரணிக்கச் செய்தாலும் (இரு நிலையிலும்) அவர்கள் பின்னர், நம்மிடமே திருப்பிக்கொண்டு வரப்படுவார்கள்.
40:78
40:78 وَلَقَدْ اَرْسَلْنَا رُسُلًا مِّنْ قَبْلِكَ مِنْهُمْ مَّنْ قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُمْ مَّنْ لَّمْ نَقْصُصْ عَلَيْكَؕ وَمَا كَانَ لِرَسُوْلٍ اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰه‌ِۚ فَاِذَا جَآءَ اَمْرُ اللّٰهِ قُضِىَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் رُسُلًا பல தூதர்களை مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் مِنْهُمْ அவர்களில் مَّنْ எவரை (சிலரை) قَصَصْنَا நாம் விவரித்தோம் عَلَيْكَ உமக்கு وَمِنْهُمْ இன்னும் அவர்களில் مَّنْ எவரை (சிலரை) لَّمْ نَقْصُصْ நாம்விவரிக்கவில்லை عَلَيْكَؕ உமக்கு وَمَا كَانَ முடியாது لِرَسُوْلٍ எந்த ஒரு தூதருக்கும் اَنْ يَّاْتِىَ بِاٰيَةٍ அவர் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவதற்கு اِلَّا தவிர بِاِذْنِ அனுமதி கொண்டே اللّٰه‌ِۚ அல்லாஹ்வின் فَاِذَا جَآءَ வந்துவிட்டால் اَمْرُ கட்டளை اللّٰهِ அல்லாஹ்வின் قُضِىَ தீர்ப்பளிக்கப்படும் بِالْحَقِّ நீதமாக وَخَسِرَ நஷ்டமடைவார்(கள்) هُنَالِكَ அப்போது الْمُبْطِلُوْنَ‏ பொய்யர்கள்
40:78. திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை; ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளைவரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்; அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.  
40:78. (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதர்கள் பலரை அனுப்பியிருக்கிறோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தையே நாம் உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உமக்குக் கூறவில்லை. (இவ்விரு வகுப்பாரில்) எந்தத் தூதராயினும் சரி, அல்லாஹ்வுடைய அனுமதியின்றி ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவது அவருக்குச் சாத்தியமானதல்ல. அல்லாஹ்வுடைய கட்டளை வரும் சமயத்தில் (அவர்களுக்கு) நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். அதைப் பொய்யாக்கியவர்கள் அந்நேரத்தில் நஷ்டத்திற்குள்ளாவார்கள்.
40:78. மேலும், (நபியே!) நாம் உமக்கு முன்பு இறைத்தூதர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலரைக் குறித்து உமக்கு எடுத்துரைத்திருக்கின்றோம். வேறு சிலரைப் பற்றி உமக்கு நாம் எடுத்துரைக்கவில்லை. அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த ஒரு சான்றையும் சுயமாகக் கொண்டு வரும் ஆற்றல் எந்தத் தூதருக்கும் இருக்கவில்லை. பிறகு, அல்லாஹ்வின் கட்டளை வந்தபோது சத்தியத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது; மேலும், அப்போது தவறு செய்தவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.
40:78. மேலும், (நபியே!) திட்டமாக, நாம் உமக்கு முன்னர் (பல) தூதர்களை அனுப்பி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை நாம் உமக்குக் கூறி இருக்கின்றோம்; இன்னும், அவர்களில் சிலருடைய வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை, (இவ்விரு சாராரில்) எந்தத் தூதருக்கும் அல்லாஹ்வுடைய அனுமதியின்றி யாதோர் அத்தாட்சியையும் அவர் கொண்டு வருவதற்கு (அதிகாரம்) இல்லை; ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளை வந்து விடுமானால் நீதியைக் கொண்டு தீர்ப்பளிக்கப்படும், மேலும், (அதனைப்) பொய்யாக்கியவர்கள் அந்த இடத்தில் நஷ்டமடைவார்கள்.
40:79
40:79 اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَكُمُ الْاَنْعَامَ لِتَرْكَبُوْا مِنْهَا وَمِنْهَا تَاْكُلُوْنَ‏
اَللّٰهُ அல்லாஹ் الَّذِىْ எப்படிப்பட்டவன் جَعَلَ لَكُمُ உங்களுக்காக படைத்தான் الْاَنْعَامَ கால்நடைகளை لِتَرْكَبُوْا நீங்கள் வாகனிப்பதற்காக مِنْهَا அவற்றில் وَمِنْهَا அவற்றில் சிலவற்றை تَاْكُلُوْنَ‏ நீங்கள் புசிக்கின்றீர்கள்
40:79. அல்லாஹ்தான் கால் நடைகளை உங்களுக்காக உண்டாக்கியிருக்கிறான் - அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள் - இன்னும் அவற்றி(ல் சிலவற்றி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
40:79. அல்லாஹ்தான் உங்களுக்காக ஆடு, மாடு, ஒட்டகங்களைப் படைத்திருக்கிறான். (அவற்றில்) சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள்; சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள்.
40:79. அல்லாஹ்தான் உங்களுக்காக இந்தக் கால்நடைகளைப் படைத்திருக்கின்றான் அவற்றில் சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்வதற்காகவும், வேறு சிலவற்றின் இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும்!
40:79. அல்லாஹ்_அவன் எத்தகையவனென்றால் கால் நடைகளை உங்களுக்காக உண்டாக்கி இருக்கிறான், அவற்றில் (சிலவற்றின்மீது) நீங்கள் சவாரி செய்வதற்காக, இன்னும், அவைகளி(ல் சிலவற்றி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்.
40:80
40:80 وَلَكُمْ فِيْهَا مَنَافِعُ وَ لِتَبْلُغُوْا عَلَيْهَا حَاجَةً فِىْ صُدُوْرِكُمْ وَعَلَيْهَا وَعَلَى الْفُلْكِ تُحْمَلُوْنَؕ‏
وَلَكُمْ இன்னும் உங்களுக்கு فِيْهَا அவற்றில் உள்ளன مَنَافِعُ பல பலன்கள் وَ لِتَبْلُغُوْا இன்னும் நீங்கள்அடைவதற்காக عَلَيْهَا அதன் மூலம் حَاجَةً ஓர் ஆசையை فِىْ صُدُوْرِكُمْ உங்கள் நெஞ்சங்களில் உள்ள وَعَلَيْهَا இன்னும் அவற்றின் மீது(ம்) وَعَلَى الْفُلْكِ கப்பலின் மீதும் تُحْمَلُوْنَؕ‏ நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்
40:80. இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன; மேலும் உங்கள் உள்ளங்களிலுள்ள விருப்பங்களை அதனால் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.
40:80. அவற்றில் உங்களுக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன. உங்கள் மனதிலுள்ள கோரிக்கைகளை நீங்கள் அடைவதற்காக அவற்றிலும் கப்பல்களிலும் (பல இடங்களுக்கு) நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்.
40:80. அவற்றில் உங்களுக்கு இன்னும் பல பயன்கள் உள்ளன. உங்கள் இதயம் விரும்புகின்ற இடத்தை நீங்கள் அடைவதற்கு அவற்றின் மீது சவாரி செய்கிறீர்கள். அந்தக் கால்நடைகளின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் ஏற்றிச்செல்லப் படுகின்றீர்கள்.
40:80. இன்னும், அவற்றில் உங்களுக்கு (வேறு பல) பயன்களும் இருக்கின்றன; மேலும், உங்கள் நெஞ்சங்களிலுள்ள தேவையை அவற்றின் மூலம் நீங்கள் அடைந்து கொள்வதற்காகவும் (படைத்தான்); அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் (பல பகுதிகளுக்கும்) நீங்கள் சுமந்து செல்லப் படுகிறீர்கள்.
40:81
40:81 وَيُرِيْكُمْ اٰيٰتِهٖ ۖ  فَاَىَّ اٰيٰتِ اللّٰهِ تُنْكِرُوْنَ‏
وَيُرِيْكُمْ அவன் உங்களுக்கு காண்பிக்கிறான் اٰيٰتِهٖ தனது அத்தாட்சிகளை ۖ  فَاَىَّ எதை اٰيٰتِ அத்தாட்சிகளில் اللّٰهِ அல்லாஹ்வின் تُنْكِرُوْنَ‏ நீங்கள் மறுப்பீர்கள்
40:81. இன்னும், அவன் தன் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிக்கிறான்; ஆகவே அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?
40:81. இன்னும், அவன் உங்களுக்குத் தனது (கணக்கற்ற) அத்தாட்சிகளைக் காண்பிப்பான். அல்லாஹ்வுடைய அந்த அத்தாட்சிகளில் எதைத்தான் நீங்கள் நிராகரிப்பீர்கள்?
40:81. அல்லாஹ் இத்தகைய தன்னுடைய சான்றுகளை உங்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கின்றான். அவ்வாறிருக்க, அவனுடைய எந்தெந்தச் சான்றுகளை நீங்கள் மறுப்பீர்கள்?
40:81. மேலும், அவன் உங்களுக்கு தன் அத்தாட்சிகளைக் காண்பிக்கிறான், ஆகவே அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளில் எதனை நீங்கள் நிராகரிக்கிறீர்கள்.
40:82
40:82 اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ كَانُوْۤا اَكْثَرَ مِنْهُمْ وَاَشَدَّ قُوَّةً وَّ اٰثَارًا فِى الْاَرْضِ فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يَكْسِبُوْنَ‏
اَفَلَمْ يَسِيْرُوْا அவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா? فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرُوْا அவர்கள் பார்த்திருப்பார்களே! كَيْفَ كَانَ எப்படி இருந்தது عَاقِبَةُ முடிவு الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ தங்களுக்கு முன்னுள்ளவர்களின் كَانُوْۤا இருந்தனர் اَكْثَرَ அதிகமாக(வும்) مِنْهُمْ இவர்களை விட وَاَشَدَّ மிக பலசாலிகளாகவும் قُوَّةً வலிமையால் وَّ اٰثَارًا இன்னும் அடையாளங்களால் فِى الْاَرْضِ பூமியில் فَمَاۤ اَغْنٰى ஆனால், தடுக்கவில்லை عَنْهُمْ அவர்களை விட்டு مَّا كَانُوْا يَكْسِبُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தது
40:82. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள் இவர்களை விட (எண்ணிக்கையில்) அதிகமாகவும், பலத்திலும், பூமியில் விட்டுச் சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள் - எனினும், அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
40:82. (நிராகரிக்கும்) இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? அப்போது, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டுகொள்வார்கள். அவர்கள், இவர்களை விட மக்கள் தொகையில் அதிகமானவர்களாகவும் பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள். எனினும், அவர்கள் தேடி சேகரித்து வைத்திருந்தவற்றில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
40:82. பூமியில் சுற்றித் திரிந்து, தமக்கு முன் வாழ்ந்து சென்றவர்களுக்கு நேர்ந்த கதியை இவர்கள் காணவில்லையா? அவர்கள் இவர்களைவிட அதிக எண்ணிக்கையுடையவர்களாகவும், மிக்க பலமுடையவர்களாகவும் இருந்தனர். மேலும், பூமியில் இவர்களைவிட மாபெரும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றார்கள். அவர்கள் எவற்றையெல்லாம் சம்பாதித்தார்களோ அவை இறுதியில் அவர்களுக்கு என்ன பயனைத் தந்தது?
40:82. இவர்கள் பூமியில் சுற்றித் திரியவில்லையா? அப்போது அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை அவர்கள் பார்த்திருப்பர். அவர்களோ இவர்களை விட (எண்ணிக்கையால்) மிக அதிகமானவர்களாகவும், (உடல்களின்) பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற) அடையாளச் சின்னங்களாலும் (மற்றவர்களைவிட) மிகக் கடினமானவர்களாக இருந்தார்கள், பின்னர் அவர்கள் சம்பாதித்(து வைத்)திருந்தது அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
40:83
40:83 فَلَمَّا جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَرِحُوْا بِمَا عِنْدَهُمْ مِّنَ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
فَلَمَّا جَآءَتْهُمْ அவர்களிடம் வந்தபோது رُسُلُهُمْ அவர்களின் தூதர்கள் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு فَرِحُوْا அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் بِمَا عِنْدَهُمْ தங்களிடம் இருந்ததைக் கொண்டு مِّنَ الْعِلْمِ திறமைகள் وَحَاقَ இன்னும் சூழ்ந்து கொண்டது بِهِمْ அவர்களை مَّا எது كَانُوْا இருந்தார்களோ بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகாசம் செய்பவர்களக
40:83. ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்த போது, அவர்கள் தங்களிடமிருந்த கல்வியைக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களை சூழ்ந்து கொண்டது.
40:83. அவர்களு(க்காக அனுப்பப்பட்ட நம்மு)டைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுவந்த சமயத்தில் (அதை அவர்கள் பரிகாசம் செய்து நிராகரித்துவிட்டு, இவ்வுலக வாழ்க்கைச் சம்பந்தமாகத்) தங்களிடமுள்ள கல்வி (திறமைகளைப்) பற்றிப் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். எனினும், (இறுதியில்) அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தது அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
40:83. அவர்களின் இறைத்தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது, தங்களிடம் என்ன ஞானம் இருந்ததோ அதிலேயே அவர்கள் மகிழ்ந்துபோயிருந்தார்கள். பின்னர், அவர்கள் எதைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தார்களோ அதன் சுழற்சியிலேயே அவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள்.
40:83. எனவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்த சமயத்தில் (அதனை அவர்கள் பரிகாசம் செய்து நிராகரித்து விட்டு) கல்வியினால் தங்களிடமுள்ளதைக் கொண்டு பெரு மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள், இன்னும், அவர்கள் எதைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
40:84
40:84 فَلَمَّا رَاَوْا بَاْسَنَا قَالُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَحْدَهٗ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهٖ مُشْرِكِيْنَ‏
فَلَمَّا رَاَوْا அவர்கள் பார்த்த போது بَاْسَنَا நமது தண்டனையை قَالُوْۤا அவர்கள் கூறினார்கள் اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை وَحْدَهٗ அவன் ஒருவனை وَكَفَرْنَا நிராகரித்து விட்டோம் بِمَا எதை كُنَّا இருந்தோமோ بِهٖ அதை مُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களாக
40:84. எனவே அவர்கள் நம்(கட்டளையால் உண்டான) வேதனையை கண்டபோது, “நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்” என்று கூறினார்கள்.
40:84. நமது வேதனையை அவர்கள் கண்ணால் கண்ட சமயத்தில் அவர்கள், ‘‘அல்லாஹ் ஒருவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டு, நாங்கள் இணைவைத்து வணங்கி வந்த தெய்வங்களை நிராகரிக்கிறோம்'' என்று கூறினார்கள்.
40:84. அவர்கள் நம்முடைய தண்டனையைக் கண்டபோது, “இணை துணையற்ற ஏகனாகிய அல்லாஹ்வை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்; அவனுக்கு இணையானவையாக நாங்கள் ஏற்படுத்தியிருந்த தெய்வங்கள் அனைத்தையும் நிராகரிக்கின்றோம்” என்று உரக்கக் கூறினர்.
40:84. பிறகு நம்முடைய வேதனையைக் (கண் கூடாக) கண்ட சமயத்தில், அவர்கள் “அல்லாஹ்வை அவன் தனித்தவன் என நாங்கள் விசுவாசிக்கின்றோம். நாங்கள் இணைவைக்கக்கூடியவர்களாக இருந்தவற்றை நாங்கள் நிராகரித்தும் விட்டோம்” எனக் கூறினார்கள்.
40:85
40:85 فَلَمْ يَكُ يَنْفَعُهُمْ اِيْمَانُهُمْ لَمَّا رَاَوْا بَاْسَنَا ؕ سُنَّتَ اللّٰهِ الَّتِىْ قَدْ خَلَتْ فِىْ عِبَادِهٖ‌ۚ وَخَسِرَ هُنَالِكَ الْكٰفِرُوْنَ‏
فَلَمْ يَكُ ஆனால், இருக்கவில்லை يَنْفَعُهُمْ அவர்களுக்கு பலன் தரக்கூடியதாக اِيْمَانُهُمْ அவர்களின் ஈமான் لَمَّا رَاَوْا அவர்கள் பார்த்த போது بَاْسَنَا ؕ நமது தண்டனையை سُنَّتَ اللّٰهِ அல்லாஹ்வின் நடைமுறையைத்தான் الَّتِىْ எது قَدْ خَلَتْ சென்றுவிட்டது فِىْ عِبَادِهٖ‌ۚ அவனது அடியார்கள் விஷயத்தில் وَخَسِرَ நஷ்டமடைந்தார்(கள்) هُنَالِكَ அப்போது الْكٰفِرُوْنَ‏ நிராகரிப்பாளர்கள்
40:85. ஆயினும், நம் (கட்டளையால் உண்டான) வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. (இதுவே) அல்லாஹ்வுடைய வழியாகும்; அவனுடைய அடியார்களுக்கு (முன்னரும் இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், அந்நேரத்தில் காஃபிர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.
40:85. ஆயினும், நம் வேதனையைக் கண்ணால் கண்ட பின்னர், அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. இதுவே, அல்லாஹ்வுடைய வழி. (இதற்கு முன்னரும்) அவனுடைய அடியார்களில் (இவ்வாறே) நிகழ்ந்திருக்கிறது. ஆதலால், (வேதனை இறங்கிய) அந்த நேரத்தில் நிராகரிப்பவர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.
40:85. ஆனால், நம்முடைய தண்டனையைக் கண்ட பின்னால் அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது போயிற்று. ஏனெனில், இதுவே அல்லாஹ்வின் நியதி; இது அவனுடைய அடிமைகளுக்கிடையே என்றென்றும் நடைபெற்று வருகின்றது. மேலும், அந்நேரம் நிராகரிப்பாளர்கள் நஷ்டத்துக்கு ஆளாகி விட்டார்கள்.
40:85. ஆகவே, நம்முடைய வேதனையை அவர்கள் கண்டபோது, அவர்களின் விசுவாசம் அவர்களுக்குப் பயனளிப்பதாக இருக்கவில்லை,_(இதற்கு முன்னர்) அவனுடைய அடியார்களில் சென்றுவிட்டதே அத்தகைய அல்லாஹ்வுடைய வழி முறையாக_(இது நடந்தேறியது) அவ்விடத்தில் நிராகரிப்போர் நஷ்டத்தையே அடைந்தார்கள்.