44. ஸூரத்துத் துகான் (புகை)
மக்கீ, வசனங்கள்: 59

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
44:1
44:1 حٰمٓ ‌ ۛ‌ۚ‏
حٰمٓ ۛ‌ۚ‏ ஹா மீம்
44:1. ஹா, மீம்.
44:1. ஹா மீம்.
44:1. ஹாமீம்;
44:1. ஹாமீம்.
44:2
44:2 وَالْكِتٰبِ الْمُبِيْنِ ‌ ۛ‌ۙ‏
وَالْكِتٰبِ இந்த வேதத்தின் மீது சத்தியமாக! الْمُبِيْنِ  ۛ‌ۙ‏ தெளிவான(து)
44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
44:2. தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
44:2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
44:3
44:3 اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் فِىْ لَيْلَةٍ ஓர் இரவில் مُّبٰـرَكَةٍ‌ அருள்நிறைந்த(து) اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا இருந்தோம் مُنْذِرِيْنَ‏ அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக
44:3. நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.
44:3. நிச்சயமாக இதை மிக்க பாக்கியமுள்ள (‘லைலத்துல் கத்ரு' என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம்.
44:3. நாம் இதனை, அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கிவைத்தோம். ஏனெனில், நாம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்ய நாடியிருந்தோம்!
44:3. நிச்சயமாக நாம், இதனைப் பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம், நிச்சயமாக நாம் (இவ்வேதத்தின் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியோராய் இருந்து கொண்டிருக்கிறோம்.
44:4
44:4 فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ‏
فِيْهَا இதில்தான் يُفْرَقُ முடிவு செய்யப்படுகின்றன كُلُّ اَمْرٍ எல்லாக்காரியங்களும் حَكِيْمٍۙ‏ ஞானமிக்க(து)
44:4. அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
44:4. உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம் கட்டளையின்படி (தீர்மானிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
44:4. அது எத்தகைய இரவு எனில், அதில்தான் ஒவ்வொரு விவகாரத்துக்கும் விவேக மிக்க தீர்ப்பு நம்முடைய கட்டளையினால் பிறப்பிக்கப்படுகின்றது.
44:4. அந்த இரவில் உறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் (பிரித்துத்) தெளிவு செய்யப்படுகிறது.
44:5
44:5 اَمْرًا مِّنْ عِنْدِنَا‌ؕ اِنَّا كُنَّا مُرْسِلِيْنَ‌ۚ‏
اَمْرًا கட்டளையின்படி مِّنْ عِنْدِنَا‌ؕ நம்மிடமிருந்து اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا இருந்தோம் مُرْسِلِيْنَ‌ۚ‏ தூதராக அனுப்பக்கூடியவர்களாகவே
44:5. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.
44:5. (நபியே!) நிச்சயமாக நாம் (உங்களை அவர்களிடம் நம் தூதராக) அனுப்புகிறோம்.
44:5. நாம் ஒரு தூதரை அனுப்புகிறவர்களாய் இருந்தோம்.
44:5. நம்மிடமிருந்துள்ள கட்டளையாக (அது நடந்தேறும்) நிச்சயமாக நாம் (தூதர்களை) அனுப்புகிறவர்களாக இருந்தோம்.
44:6
44:6 رَحْمَةً مِّنْ رَّبِّكَ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُۙ‏
رَحْمَةً ஓர் அருளாக مِّنْ رَّبِّكَ‌ؕ உமது இறைவனிடமிருந்து اِنَّهٗ நிச்சயமாக هُوَ அவன்தான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُۙ‏ நன்கறிந்தவன்
44:6. (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
44:6. (அது) உமது இறைவனின் அருளாகும். நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவனும், நன்கறிந்தவனும் ஆவான்.
44:6. உம் இறைவனுடைய கருணையின் அடிப்படையில்! திண்ணமாக, அவன் அனைத்தையும் கேட்கக்கூடியவனாகவும், அறியக்கூடியவனாகவும் இருக்கின்றான்
44:6. உமதிரட்சகனிடமிருந்துள்ள அருளாக (இதை இறக்கினோம்) நிச்சயமாக அவனே (யாவையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
44:7
44:7 رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا‌ۘ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏
رَبِّ இறைவனாவான் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا‌ۘ இன்னும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றின் اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏ நீங்கள் உறுதி கொள்பவர்களாக இருந்தால்
44:7. நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).
44:7. நீங்கள் (உண்மையை) உறுதி கொள்பவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றின் சொந்தக்காரன் அவனே (என்பதை நம்புங்கள்).
44:7. நீங்கள் உண்மையில் உறுதியான நம்பிக்கையுடையவர்களாய் இருந்தால்! அவன் வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியாகவும் அவ்விரண்டிற்கிடையே உள்ள அனைத்திற்கும் அதிபதியாகவும் இருக்கின்றான் (என்பதைக் காண்பீர்கள்).
44:7. (இவ்வேதத்தை இறக்கிவைத்தவனாகிய அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளுக்கும் இரட்சகன் (என்பதை) நீங்கள் உறுதியுடையவர்களாக இருப்பின் (அறிவீர்கள்).
44:8
44:8 لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحْىٖ وَيُمِيْتُ‌ؕ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ‏
لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا தவிர هُوَ அவனை يُحْىٖ உயிர்ப்பிக்கின்றான் وَيُمِيْتُ‌ؕ இன்னும் மரணிக்க வைக்கிறான் رَبُّكُمْ உங்கள் இறைவனும் وَرَبُّ இறைவனும் اٰبَآٮِٕكُمُ உங்கள் மூதாதைகளின் الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களான
44:8. அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
44:8. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. அவனே (படைப்புகளை) உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கவும் வைக்கிறான். அவனே உங்கள் இறைவனும் உங்கள் மூதாதைகளின் இறைவனுமாவான்.
44:8. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. வாழ்வளிப்பவன் அவனே; மரணத்தை அளிப்பவனும் அவனே! அவனே உங்களுக்கும் அதிபதி; முன்னர் வாழ்ந்து சென்ற உங்கள் முன்னோர்களுக்கும் அதிபதி.
44:8. அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அவனே உயிர்ப்பிக்கிறான், அவனே இறக்குமாறும் செய்கிறான், (அவனே) உங்களின் இரட்சகனும், முன்னோர்களான உங்கள் மூதாதையரின் இரட்சகனுமாவான்.
44:9
44:9 بَلْ هُمْ فِىْ شَكٍّ يَّلْعَبُوْنَ‏
بَلْ மாறாக هُمْ அவர்கள் فِىْ شَكٍّ சந்தேகத்தில் يَّلْعَبُوْنَ‏ விளையாடுகின்றனர்
44:9. ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
44:9. எனினும், அவர்கள் (இவ்விஷயத்திலும் வீண்) சந்தேகத்தில்தான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்!
44:9. (ஆனால், உண்மையில் இவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை.) ஏனெனில், இவர்கள் சந்தேகத்தில் வீழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
44:9. எனினும், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
44:10
44:10 فَارْتَقِبْ يَوْمَ تَاْتِى السَّمَآءُ بِدُخَانٍ مُّبِيْنٍۙ‏
فَارْتَقِبْ ஆகவே, எதிர்ப்பார்ப்பீராக! يَوْمَ நாளை تَاْتِى வருகின்ற(து) السَّمَآءُ வானம் بِدُخَانٍ புகையைக் கொண்டு مُّبِيْنٍۙ‏ தெளிவான(து)
44:10. ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
44:10. (நபியே!) தெளிவானதொரு புகை, வானத்திலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக.
44:10. சரி, இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும்.
44:10. ஆகவே, (நபியே!) வானம் தெளிவானதொரு புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர்பார்ப்பீராக!
44:11
44:11 يَغْشَى النَّاسَ‌ؕ هٰذَا عَذَابٌ اَلِيْمٌ‏
يَغْشَى அது சூழ்ந்துகொள்ளும் النَّاسَ‌ؕ மக்களை هٰذَا இது عَذَابٌ வேதனையாகும் اَلِيْمٌ‏ வலி தரக்கூடிய(து)
44:11. (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; “இது நோவினை செய்யும் வேதனையாகும்.”
44:11. மனிதர்கள் அனைவரையும் அது சூழ்ந்து கொள்ளும். அது ஒரு துன்புறுத்தும் வேதனையாகும்.
44:11. அது மக்கள் மீது மூடிக்கொள்ளும். இது துன்புறுத்தக்கூடிய தண்டனையாகும்.
44:11. மனிதர்களை அ(ப்புகையான)து சூழ்ந்து கொள்ளும், “இது துன்புறுத்தும் வேதனையாகும்”.
44:12
44:12 رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ‏
رَبَّنَا எங்கள் இறைவா! اكْشِفْ அகற்றி விடுவாயாக عَنَّا எங்களை விட்டு الْعَذَابَ வேதனையை اِنَّا நிச்சயமாக நாங்கள் مُؤْمِنُوْنَ‏ நம்பிக்கையாளர்கள்
44:12. “எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்” (எனக் கூறுவர்).
44:12. (அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம்'' (என்று கூறுவார்கள்).
44:12. (அப்போது கூறுவார்கள்:) “எங்கள் அதிபதியே! எங்களை விட்டு இந்த வேதனையை நீக்கி அருள். நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டு விடுகிறோம்.”
44:12. “எங்கள் இரட்சகனே! நீ எங்களைவிட்டும் இவ்வேதனையை நீக்கி விடுவாயாக, நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசங்கொண்டவர்களாக இருக்கின்றோம்” (என்று அந்நாளில் மனிதர்கள், அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்).
44:13
44:13 اَنّٰى لَهُمُ الذِّكْرٰى وَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مُّبِيْنٌۙ‏
اَنّٰى எப்படி? لَهُمُ அவர்களுக்கு الذِّكْرٰى நல்லறிவு பெறுவது وَقَدْ திட்டமாக جَآءَ வந்தார் هُمْ அவர்களிடம் رَسُوْلٌ ஒரு தூதர் مُّبِيْنٌۙ‏ தெளிவான(வர்)
44:13. நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.
44:13. (அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நமது) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கிறார்.
44:13. இவர்களின் உணர்வில்லாத நிலை எங்கே மாறப்போகிறது? வெளிப்படையான இறைத்தூதர் இவர்களிடம் வந்தும்,
44:13. (அந்நேரத்தில்) அவர்களுக்கு நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும்? நிச்சயமாக (சத்தியத்தை) விளக்குபவரான (நம்முடைய) தூதர் (இதற்குமுன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கின்றார்.
44:14
44:14 ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌ‌ۘ‏
ثُمَّ பிறகு تَوَلَّوْا அவர்கள் விலகிவிட்டனர் عَنْهُ அவரை விட்டு وَقَالُوْا இன்னும் , கூறினர் مُعَلَّمٌ கற்பிக்கப்பட்டவர் مَّجْنُوْنٌ‌ۘ‏ பைத்தியக்காரர்
44:14. அவர்கள் அவரை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) “கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்” எனக் கூறினர்.
44:14. எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து, (அவரைப்பற்றி ‘‘இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தான்'' என்று கூறினர்.
44:14. இவர்கள் அவர் பக்கம் கவனம் செலுத்தவில்லை என்பதுதானே இவர்களின் நிலை! “இவர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பைத்தியக்காரர்!” என்று சொன்னார்கள்.
44:14. பின்னர் அவர்கள் அவரைப் புறக்கணித்தனர், (அவரைப் பற்றி, “இவர் பிறரால்) கற்றுக்கொடுக்கப்பட்டவர், பைத்தியக்காரர்” என்றும் கூறினர்.
44:15
44:15 اِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِيْلًا اِنَّكُمْ عَآٮِٕدُوْنَ‌ۘ‏
اِنَّا நிச்சயமாக நாம் كَاشِفُوا நீக்குவோம் الْعَذَابِ இந்த வேதனையை قَلِيْلًا கொஞ்சம் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் عَآٮِٕدُوْنَ‌ۘ‏ திரும்புவீர்கள்
44:15. நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.
44:15. (மெய்யாகவே நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்கள் என்று) அவ்வேதனையை மேலும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகிறீர்கள்.
44:15. நாம் சற்று வேதனையை அகற்றிவிடுகின்றோம். அப்போது நீங்கள் முன்னர் செய்து கொண்டிருந்ததைத்தான் மீண்டும் செய்வீர்கள்.
44:15. நிச்சயமாக அவ்வேதனயை(ப் பின்னும்) சிறிது (காலத்திற்கு) நாம் நீக்குவோராய் இருக்கிறோம், (எனினும்) நிச்சயமாக நீங்கள், (நிராகரிப்பின்பாலே) மீளக்கூடியவர்களாக இருக்கிறீர்கள்.
44:16
44:16 يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْـرٰى‌ۚ اِنَّا مُنْتَقِمُوْنَ‏
يَوْمَ நாளில் نَبْطِشُ தாக்குவோம் الْبَطْشَةَ தாக்குதல் الْكُبْـرٰى‌ۚ பெரிய اِنَّا நிச்சயமாக நாம் مُنْتَقِمُوْنَ‏ பழிவாங்குவோம்
44:16. ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.
44:16. மிக்க பலமாக (அவர்களை) நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம்.
44:16. நாம் பலத்த அடி கொடுக்கும் நாளில் நாம் உங்களிடம் பழி வாங்கியே தீருவோம்.
44:16. மிகப் பெரும்பிடியாக அவர்களை நாம் பிடிக்கும் (அந்) நாளில் நிச்சயமாக (அவர்களைத்) தண்டிப்போராய் இருக்கிறோம்.
44:17
44:17 وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَ جَآءَهُمْ رَسُوْلٌ كَرِيْمٌۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக فَتَنَّا சோதித்தோம் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمَ மக்களை فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய وَ جَآءَهُمْ அவர்களிடம் வந்தார் رَسُوْلٌ ஒரு தூதர் كَرِيْمٌۙ‏ கண்ணியமான(வர்)
44:17. அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.
44:17. இவர்களுக்கு முன்னரும், ஃபிர்அவ்னுடைய மக்களை நிச்சயமாக நாம் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான (நம்) தூதர் ஒருவர் வந்தார்.
44:17. திண்ணமாக, நாம் இவர்களுக்கு முன்னர் ஃபிர்அவ்னின் சமூகத்தை சோதித்திருக்கிறோம். அவர்களிடம் கண்ணியமான ஓர் இறைத்தூதர் வந்தார்.
44:17. மேலும், இவர்களுக்கு முன்னர் ஃபிர் அவ்னுடைய சமூகத்தவரை திட்டமாக நாம் சோதித்தோம் அவர்களிடம் கண்ணியமான (நம்முடைய) தூதரும் வந்தார்.
44:18
44:18 اَنْ اَدُّوْۤا اِلَىَّ عِبَادَ اللّٰهِ‌ؕ اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏
اَنْ اَدُّوْۤا ஒப்படைத்துவிடுங்கள்! اِلَىَّ என்னிடம் عِبَادَ اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் அடியார்களை اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு رَسُوْلٌ தூதர் اَمِيْنٌۙ‏ நம்பிக்கைக்குரிய(வர்)
44:18. அவர் (கூறினார்:) “என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.
44:18. ‘‘அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான தூதர் ஆவேன்.
44:18. மேலும், அவர் கூறினார்: “அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் உங்களுக்காக அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய இறைத்தூதராவேன்.
44:18. (அவர்) “அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் மக்)களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக, நான் உங்களுக்கு (அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள) நம்பிக்கைக்குரிய ஒரு தூதனாவேன் (என்றும்),
44:19
44:19 وَّاَنْ لَّا تَعْلُوْا عَلَى اللّٰهِ‌ۚ اِنِّىْۤ اٰتِيْكُمْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‌ۚ‏
وَّاَنْ لَّا تَعْلُوْا அழிச்சாட்டியம் செய்யாதீர்கள் عَلَى اللّٰهِ‌ۚ அல்லாஹ்விற்கு முன் اِنِّىْۤ நிச்சயமாக நான் اٰتِيْكُمْ உங்களிடம் வருவேன் بِسُلْطٰنٍ ஆதாரத்தைக் கொண்டு مُّبِيْنٍ‌ۚ‏ தெளிவான(து)
44:19. அன்றியும், “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.
44:19. அல்லாஹ்வுக்கு (முன் ஆணவம் கொள்ளாதீர்கள், அவனுக்கு) நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்திருக்கிறேன்'' என்று அவர் கூறினார். (அதற்கவர்கள் ‘‘நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்'' என்று கூறினார்கள்.)
44:19. மேலும், அல்லாஹ்வின் விஷயத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். நான் உங்களிடம் (என்னுடைய நியமனம் பற்றிய) தெளிவான ஒரு சான்றினைக் கொண்டு வந்திருக்கின்றேன்.
44:19. மேலும், அல்லாஹ்வின் (கட்டளைகளுக்குக் கீழ்ப் படிவதை விட்டுவிடுவதன் மூலம் அவன்) மீது உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளாதீர்கள், நிச்சயமாக நான், உங்களிடம் தெளிவான ஒரு சான்றைக் கொண்டுவந்திருக்கிறேன்” (என்றும் கூறினார்.)
44:20
44:20 وَاِنِّىْ عُذْتُ بِرَبِّىْ وَرَبِّكُمْ اَنْ تَرْجُمُوْنِ ۚ‏
وَاِنِّىْ நிச்சயமாக நான் عُذْتُ பாதுகாவல் தேடினேன் بِرَبِّىْ எனது இறைவனிடம் وَرَبِّكُمْ இன்னும் உங்கள் இறைவனிடம் اَنْ تَرْجُمُوْنِ ۚ நீங்கள் என்னை கொல்வதில் இருந்து
44:20. அன்றியும், “என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
44:20. (அதற்கு மூஸா) ‘‘என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்வதை விட்டும் எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றார்.
44:20. நீங்கள் என்மீது தாக்குதல் தொடுப்பதைவிட்டு என்னுடையவும் உங்களுடையவும் அதிபதியிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றேன்.
44:20. “என்னை நீங்கள் கல்லாலெறிந்து (கொன்று) விடுவதைவிட்டும் என் இரட்சகனும், உங்கள் இரட்சகனுமாகியவனிடம் நிச்சயமாக, நான் பாதுகாவல் தேடிக்கொண்டுவிட்டேன்” (என்றும்),
44:21
44:21 وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِىْ فَاعْتَزِلُوْنِ‏
وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِىْ நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் فَاعْتَزِلُوْنِ‏ என்னை விட்டு விலகிவிடுங்கள்
44:21. “மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்).
44:21. ‘‘நீங்கள் என்னை நம்பாவிடில் என்னைவிட்டு விலகிக் கொள்ளுங்கள்'' (என்றும் கூறி),
44:21. நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில் என் மீது கைவைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.”
44:21. இன்னும், நீங்கள் என்னை (அல்லாஹ்வின்) நபியென) நம்பிக்கைக் கொள்ளவில்லையாயின், என்னை விட்டு நீங்கிவிடுங்கள் (என்றும் கூறினார்.)
44:22
44:22 فَدَعَا رَبَّهٗۤ اَنَّ هٰۤؤُلَاۤءِ قَوْمٌ مُّجْرِمُوْنَ‏‏
فَدَعَا அவர் அழைத்தார் رَبَّهٗۤ தனது இறைவனை اَنَّ நிச்சயமாக هٰۤؤُلَاۤءِ இவர்கள் قَوْمٌ மக்கள் مُّجْرِمُوْنَ‏‏ குற்றம் செய்கின்றவர்கள்
44:22. (அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). “நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்” என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
44:22. தன் இறைவனை அழைத்து ‘‘நிச்சயமாக இவர்கள் பாவம் செய்யும் மக்களாகவே இருக்கிறார்கள்'' என்று கூறினார்.
44:22. இறுதியில், “இவர்கள் குற்றம் புரியக்கூடிய மக்களாய் இருக்கின்றனர்” என்று அவர் தம் இறைவனிடம் முறையிட்டார்.
44:22. பின்னர், நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தவராகவே இருக்கிறார்கள் என தன் இரட்சகனை அவர் அழைத்துப் பிரார்த்தித்தார்.
44:23
44:23 فَاَسْرِ بِعِبَادِىْ لَيْلًا اِنَّكُمْ مُّتَّبَعُوْنَۙ‏
فَاَسْرِ நீங்கள் அழைத்துச் செல்லுங்கள் بِعِبَادِىْ என் அடியார்களை لَيْلًا இரவில் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مُّتَّبَعُوْنَۙ‏ பின்தொடரப்படுவீர்கள்
44:23. “என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” (என்று இறைவன் கூறினான்.)
44:23. (அதற்கு இறைவன்) ‘‘நீர் (இஸ்ரவேலர்களாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக சென்று விடுங்கள். எனினும், நிச்சயமாக (அவர்கள்) உங்களைப் பின்தொடர்ந்து வருவார்கள்.
44:23. (பதிலளிக்கப்பட்டது:) “என் அடியார்களை இரவோடிரவாக அழைத்துச் சென்றுவிடும்! திண்ணமாக, நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்.
44:23. (அதற்கு அல்லாஹ்,) “நீர் (இஸ்ராயீலீன் மக்களாகிய) என்னுடைய அடியார்களை (அழைத்து)க்கொண்டு இரவில் செல்வீராக, நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்_
44:24
44:24 وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا‌ؕ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ‏
وَاتْرُكِ விட்டுவிடுங்கள்! الْبَحْرَ கடலை رَهْوًا‌ؕ அமைதியாக اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் جُنْدٌ ராணுவம் مُّغْرَقُوْنَ‏ மூழ்கடிக்கப்படுகின்ற
44:24. “அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி” இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).
44:24. (நீங்கள் செல்வதற்காகப் பிளந்த) கடலை வறண்டுபோன அதே நிலையில் விட்டு விட்டு (நீங்கள் கடலைக் கடந்து) விடுங்கள். நிச்சயமாக அவர்களுடைய படைகள் அனைத்தும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு விடும்'' (என்று கூறி, அவ்வாறே மூழ்கடித்தான்.)
44:24. கடலினை அதன் பிளந்த நிலையிலேயே விட்டுவிடும். திண்ணமாக, இந்தப் படையினர் அனைவரும் மூழ்கடிக்கப்பட வேண்டியவர்களாவர்!”
44:24. “அன்றியும், (பிளந்த) அக்கடலை பிளவுபட்டதாக விட்டு (நீங்கள் அதை கடந்து) விடுங்கள், நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராக இருக்கிறார்கள் (என்று கூறி, அவ்விதமே மூழ்கடித்தான்).
44:25
44:25 كَمْ تَرَكُوْا مِنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏
كَمْ எத்தனையோ تَرَكُوْا விட்டுச் சென்றார்கள் مِنْ جَنّٰتٍ தோட்டங்களையும் وَّعُيُوْنٍۙ‏ ஊற்றுகளையும்
44:25. எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?
44:25. (அவர்கள்) எத்தனையோ சோலைகளையும், நீரருவிகளையும் விட்டுச் சென்றனர்.
44:25. எத்தனையோ தோட்டங்களையும், நீரூற்றுகளையும்,
44:25. எத்தனை(யோ) தோட்டங்களையும், நீரூற்றுகளையும், அவர்கள் விட்டுச் சென்றுவிட்டனர்.
44:26
44:26 وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ‏
وَّزُرُوْعٍ விவசாய நிலங்களையும் وَّمَقَامٍ இடங்களையும் كَرِيْمٍۙ‏ கண்ணியமான
44:26. இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).
44:26. இன்னும் எவ்வளவோ விவசாயங்களையும், மேலான வீடுகளையும் (விட்டுச் சென்றனர்).
44:26. வயல்களையும், மிகச்சிறப்பான இல்லங்களையும்,
44:26. இன்னும் (எத்தனையோ) விவசாய (நில)ங்களையும், (அழகுமிகுந்த) மேலான வீடுகளையும் (விட்டுச் சென்றனர்).
44:27
44:27 وَّنَعْمَةٍ كَانُوْا فِيْهَا فٰكِهِيْنَۙ‏
وَّنَعْمَةٍ வசதிகளையும் كَانُوْا இருந்த(னர்) فِيْهَا அவற்றில் فٰكِهِيْنَۙ‏ இன்புற்றவர்களாக
44:27. இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).
44:27. அவர்கள் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனையோ சுகம் தரும் பொருள்களையும் (விட்டுச் சென்றனர்).
44:27. அவர்கள் பயன்படுத்தி மகிழ்ந்த எத்தனையோ வாழ்க்கைச் சாதனங்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்.
44:27. இன்னும், அவர்கள் எதில் இன்பம் அனுபவித்துக்கொண்டிருந்தனரோ அத்தகைய (எத்தனையோ) சுகானுபவப் பொருளையும் (விட்டுச் சென்றனர்).
44:28
44:28 كَذٰلِكَ‌ وَاَوْرَثْنٰهَا قَوْمًا اٰخَرِيْنَ‏
كَذٰلِكَ‌ இப்படித்தான் وَاَوْرَثْنٰهَا இவற்றை சொந்தமாக்கினோம் قَوْمًا மக்களுக்கு اٰخَرِيْنَ‏ வேறு
44:28. அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.
44:28. இவ்வாறே (நடைபெற்றது). அவற்றையெல்லாம் அவர்கள் அல்லாத வேறு மக்களுக்குச் சொந்தமாக்கி வைத்தோம்.
44:28. இதுவே அவர்கள் அடைந்த கதி. மேலும், இந்தப் பொருள்களுக்கு வேறு மக்களை நாம் வாரிசுகளாக்கினோம்
44:28. இவ்வாறே_(நடந்தேறியது), அவற்றிக்கு வேறு சமூகத்தாரையும் அனந்தரக்காரர்களாக்கினோம்.
44:29
44:29 فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَآءُ وَالْاَرْضُ وَمَا كَانُوْا مُنْظَرِيْنَ‏
فَمَا بَكَتْ அழவில்லை عَلَيْهِمُ அவர்கள் மீது السَّمَآءُ வானமும் وَالْاَرْضُ பூமியும் وَمَا كَانُوْا அவர்கள் இருக்கவில்லை مُنْظَرِيْنَ‏ தவணைத் தரப்படுபவர்களாக(வும்)
44:29. ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை; (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.  
44:29. (அழிந்துபோன) அவர்களைப் பற்றி, வானமோ பூமியோ (ஒன்றுமே துக்கித்து) அழவில்லை! (தப்பித்துக் கொள்ளவும்) அவர்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட வில்லை.
44:29. பிறகு அவர்களுக்காக வானமும் அழவில்லை, பூமியும் அழவில்லை. இன்னும் சிறிதளவு அவகாசம் கூட அவர்களுக்குத் தரப்படவில்லை.
44:29. (அழிந்துபோன) அவர்களுக்காக வானமும், பூமியும் (துக்கித்து) அழவில்லை, (தப்பிச் செல்ல) அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்கள் இருக்கவில்லை.
44:30
44:30 وَلَقَدْ نَجَّيْنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ مِنَ الْعَذَابِ الْمُهِيْنِۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக نَجَّيْنَا நாம் காப்பாற்றினோம் بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களை مِنَ الْعَذَابِ வேதனையிலிருந்து الْمُهِيْنِۙ‏ இழிவுபடுத்தும்
44:30. நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;
44:30. (இவ்வாறே) இழிவு தரும் வேதனையில் இருந்து இஸ்ராயீலின் சந்ததிகளை பாதுகாத்துக் கொண்டோம்.
44:30. இவ்வாறு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை நாம் கடும் இழிவுபடுத்தும் வேதனையிலிருந்து அதாவது ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினோம்.
44:30. மேலும், (ஃபிர் அவ்ன் இழைத்த) இழிவுதரும் வேதனையிலிருந்து இஸ்ராயீலின் மக்களை நாம் திட்டமாகக் காப்பாற்றினோம்.
44:31
44:31 مِنْ فِرْعَوْنَ‌ؕ اِنَّهٗ كَانَ عَالِيًا مِّنَ الْمُسْرِفِيْنَ‏
مِنْ فِرْعَوْنَ‌ؕ ஃபிர்அவ்னிடமிருந்து اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருந்தான் عَالِيًا அழிச்சாட்டியம் செய்பவனாக(வும்) مِّنَ الْمُسْرِفِيْنَ‏ வரம்புமீறிகளில்
44:31. ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்); நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான்.
44:31. ஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களைப் பாதுகாத்தோம்). நிச்சயமாக அவன் வரம்பு மீறிகளில் ஓர் ஆணவம் கொண்டவனாக இருந்தான்.
44:31. உண்மையில், அவன் வரம்பு மீறுவோரில் அனைவரையும்விட மிகக் கொடியவனாக இருந்தான்.
44:31. ஃபிர் அவ்னைவிட்டும் (காப்பாற்றிவிட்டோம்), நிச்சயமாக, அவன் (அடக்கி ஆளுதல், ஆணவம் கொள்ளுதல் ஆகியவற்றில்) உயர்ந்தவனாக (நிராகரிப்பில்) வரம்பு மீறியவர்களில் (உள்ளவனாக) இருந்தான்.
44:32
44:32 وَلَقَدِ اخْتَرْنٰهُمْ عَلٰى عِلْمٍ عَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏
وَلَقَدِ اخْتَرْنٰهُمْ திட்டவட்டமாக அவர்களை நாம் தேர்ந்தெடுத்தோம் عَلٰى عِلْمٍ அறிந்தே عَلَى الْعٰلَمِيْنَ‌ۚ‏ அகிலத்தாரை விட
44:32. நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.
44:32. (இவ்வாறு ஃபிர்அவ்னை மூழ்கடித்த பின்னர்) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் தன்மையை அறிந்தே உலகத்தார் அனைவரிலும் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.
44:32. மேலும், அவர்களின் நிலைமையை அறிந்தே உலகின் பிற சமுதாயங்களைவிட அவர்களுக்கு முன்னுரிமை அளித்தோம்.
44:32. (இஸ்ராயீலின் மக்களாகிய) அவர்களை நன்கு அறிந்தே அகிலத்தாரை விடவும் அவர்களை நாம் திட்டமாகத் தெரிவு செய்தோம்.
44:33
44:33 وَاٰتَيْنٰهُمْ مِّنَ الْاٰيٰتِ مَا فِيْهِ بَلٰٓؤٌا مُّبِيْنٌ‏
وَاٰتَيْنٰهُمْ அவர்களுக்கு நாம் கொடுத்தோம் مِّنَ الْاٰيٰتِ அத்தாட்சிகளில் مَا எது فِيْهِ அதில் بَلٰٓؤٌا சோதனை مُّبِيْنٌ‏ தெளிவான(து)
44:33. அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.
44:33. இன்னும், அவர்களுக்கு (மன்னு ஸல்வா போன்ற) பல அத்தாட்சிகளையும் நாம் கொடுத்தோம். அவற்றில், அவர்களுக்குப் பெரும் சோதனை இருந்தது.
44:33. மேலும், அவர்களுக்கு எத்தகைய அத்தாட்சிகளை காண்பித்தோம் எனில் அவற்றில் வெளிப்படையான சோதனை இருந்தது.
44:33. மேலும், எதில் தெளிவான சோதனை இருந்ததோ அத்தகைய அத்தாட்சிகளை (மன்னு, ஸல்வா என்னும் உணவை இறக்கிவைத்தது, கடலை பிளக்கவைத்தது போன்றவற்றை) அவர்களுக்கு நாம் கொடுத்தோம்.
44:34
44:34 اِنَّ هٰٓؤُلَاۤءِ لَيَقُوْلُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக هٰٓؤُلَاۤءِ இவர்கள் لَيَقُوْلُوْنَۙ‏ கூறுகின்றனர்
44:34. நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்:
44:34. (எனினும்,) நிச்சயமாக (நிராகரிப்பாளர்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்:
44:34. இந்த மக்கள் கூறுகின்றார்கள்:
44:34. நிச்சயமாக (காஃபிர்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்.
44:35
44:35 اِنْ هِىَ اِلَّا مَوْتَتُنَا الْاُوْلٰى وَمَا نَحْنُ بِمُنْشَرِيْنَ‏
اِنْ هِىَ இது இல்லை اِلَّا مَوْتَتُنَا நமது மரணமே தவிர الْاُوْلٰى முதல் وَمَا نَحْنُ இன்னும் நாங்கள் இல்லை بِمُنْشَرِيْنَ‏ எழுப்பப்படுபவர்களாக
44:35. “எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை; நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்.”
44:35. ‘‘இவ்வுலகில் நாம் மரிக்கும் இம்மரணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. (மரணித்த பின்னர்,) நாம் உயிர் கொடுத்து எழுப்பப்பட மாட்டோம்''
44:35. “எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை. அதன் பிறகு நாங்கள் மீண்டும் எழுப்பப்பட மாட்டோம்.
44:35. “அது (இவ்வுலகில்) எங்களுக்கு ஏற்படும் முதல் மரணத்தைத் தவிர வேறில்லை, இன்னும், (மரணித்த பின்னர்) நாங்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்களுமல்லர்.”
44:36
44:36 فَاْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
فَاْتُوْا بِاٰبَآٮِٕنَاۤ எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்! اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
44:36. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்.”
44:36. (மேலும், நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நீங்கள் கூறுவது உண்மையாயின், (இறந்து போன) எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்'' (என்றனர்).
44:36. நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், எங்களுடைய முன்னோரை எழுப்பிக் கொண்டு வாருங்கள்.”
44:36. (என்று கூறுவதுடன் விசுவாசிகளிடம்) “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இறந்துபோன) எங்கள் மூதாதையரைக் கொண்டுவாருங்கள்” (என்றனர்).
44:37
44:37 اَهُمْ خَيْرٌ اَمْ قَوْمُ تُبَّعٍۙ وَّ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ اَهْلَكْنٰهُمْ‌ اِنَّهُمْ كَانُوْا مُجْرِمِيْنَ‏
اَهُمْ خَيْرٌ இவர்கள் சிறந்தவர்களா اَمْ قَوْمُ மக்களா? تُبَّعٍۙ துப்பஃ உடைய وَّ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ இன்னும் இவர்களுக்கு முன்னுள்ளவர்களா? اَهْلَكْنٰهُمْ‌ அவர்களை நாம் அழித்துவிட்டோம் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் مُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளாக
44:37. இவர்கள் மேலா? அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.
44:37. (நபியே!) இவர்கள் மேலானவர்களா? அல்லது ‘துப்பஉ' என்னும் மக்களும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களும் மேலானவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். ஏனென்றால், நிச்சயமாக அவர்களும் பாவம் செய்பவர்களாகவே இருந்தனர்.
44:37. இவர்கள் சிறந்தவர்களா? ‘துப்பஃஉ’ சமூகத்தாரும் அவர்களுக்கு முந்தியவர்களும் சிறந்தவர்களா? நாம் அவர்களை அழித்தோம். அவர்கள் குற்றம் புரிவோராய் இருந்த காரணத்தால்!
44:37. (நபியே!) அவர்கள் மிகச் சிறந்தவர்களா? அல்லது “துப்பஃஉ“ சமூகத்தாரும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? அவர்களை(யும்) நாம் அழித்துவிட்டோம், (ஏனென்றால்,) நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்.
44:38
44:38 وَمَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ‏
وَمَا خَلَقْنَا நாம் படைக்கவில்லை السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَا அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் لٰعِبِيْنَ‏ விளையாட்டாக
44:38. மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.
44:38. வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
44:38. இந்த வானங்களையும், பூமியையும் அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
44:38. வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் விளையாடுவோராய் நாம் படைக்கவில்லை.
44:39
44:39 مَا خَلَقْنٰهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏
مَا خَلَقْنٰهُمَاۤ அவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை اِلَّا بِالْحَقِّ உண்மையான காரணத்திற்கே தவிர وَلٰكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
44:39. இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
44:39. நிச்சயமாக தக்க காரணத்திற்காகவே தவிர, இவற்றை நாம் படைக்கவில்லை. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இதை அறிந்துகொள்வதில்லை.
44:39. அவற்றைச் சத்தியத்துடன் படைத்திருக்கின்றோம். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
44:39. (நிச்சயமாக) அவ்விரண்டையும் உண்மையைக்கொண்டே தவிர_நாம் படைக்கவில்லை, எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள்.
44:40
44:40 اِنَّ يَوْمَ الْفَصْلِ مِيْقَاتُهُمْ اَجْمَعِيْنَۙ‏
اِنَّ يَوْمَ الْفَصْلِ நிச்சயமாக தீர்ப்பு நாள் مِيْقَاتُهُمْ اَجْمَعِيْنَۙ‏ இவர்கள் அனைவரின் நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்
44:40. நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
44:40. நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்தான் அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.
44:40. இவர்கள் அனைவரையும் எழுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் காலம் தீர்ப்பளிக்கும் நாளாகும்.
44:40. நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள் அவர்கள் அனைவருக்கும் (குறிப்பிடப்பட்ட) தவணையாகும்.
44:41
44:41 يَوْمَ لَا يُغْنِىْ مَوْلًى عَنْ مَّوْلًى شَيْــٴًــا وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ‏
يَوْمَ அந்நாளில் لَا يُغْنِىْ தடுக்க மாட்டான் مَوْلًى நண்பன் عَنْ مَّوْلًى நண்பனை விட்டு شَيْــٴًــا எதையும் وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙ‏ இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
44:41. ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
44:41. அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய உதவியும் புரிந்து பயனளிக்க மாட்டான். அவனுக்கும் எவருடைய உதவியும் கிடைக்காது.
44:41. அந்நாளில் எந்த நண்பரும் தன்னுடைய நெருங்கிய எந்த நண்பருக்கும் எந்தப் பயனையும் அளிக்கமாட்டார். மேலும், அவர்களுக்கு எங்கிருந்தும் எந்த உதவியும் கிடைக்காது;
44:41. அந்நாளில், ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எத்தகைய (உதவியும் புரிந்து) பயனும் அளிக்கமாட்டான், அன்றியும், அவர்கள் (மற்றவர்களிடமிருந்து) உதவியும் செய்யப்படமாட்டார்கள்.
44:42
44:42 اِلَّا مَنْ رَّحِمَ اللّٰهُ‌ؕ اِنَّهٗ هُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏
اِلَّا தவிர مَنْ எவர்கள் (மீது) رَّحِمَ கருணை புரிந்தான் اللّٰهُ‌ؕ அல்லாஹ் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُ‏ மகா கருணையாளன்
44:42. (எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.  
44:42. ஆயினும், எவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ (அவர்களுக்கு எல்லா உதவியும் கிடைக்கும்). நிச்சயமாக அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.
44:42. ஆனால், அல்லாஹ்வே யாருக்காவது கருணை புரிந்தாலே தவிர! திண்ணமாக, அவனோ மிக வலிமை வாய்ந்தவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
44:42. (ஆயினும்) அல்லாஹ் அருள் புரிந்தோர் தவிர (அவர்களுக்கு சகல உதவியும் கிடைக்கும்) நிச்சயமாக அவனே (யாவரையும்) மிகைத்தவன், மிகக் கிருபையுடையவன்.
44:43
44:43 اِنَّ شَجَرَتَ الزَّقُّوْمِۙ‏
اِنَّ شَجَرَتَ நிச்சயமாக மரம் الزَّقُّوْمِۙ‏ ஸக்கூம்
44:43. நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).
44:43. நிச்சயமாக (நரகத்திலிருக்கும்)கள்ளி மரம்தான்
44:43. ‘ஸக்கூம்’ மரம்;
44:43. நிச்சயமாக (நரகத்திலிருக்கும்) கள்ளிமரம்.
44:44
44:44 طَعَامُ الْاَثِيْمِ ۛۚ   ۖ‏
طَعَامُ உணவாகும் الْاَثِيْمِ ۛۚ   ۖ‏ பாவிகளின்
44:44. பாவிகளுக்குரிய உணவு;
44:44. பாவியின் உணவு.
44:44. பாவியின் உணவாக இருக்கும்.
44:44. (அதுவே) பாவிகளின் ஆகாரமாகும்.
44:45
44:45 كَالْمُهْلِ ۛۚ يَغْلِىْ فِى الْبُطُوْنِۙ‏
كَالْمُهْلِ ۛۚ உருக்கப்பட்ட செம்பைப் போல் இருக்கும் يَغْلِىْ அது கொதிக்கும் فِى الْبُطُوْنِۙ‏ வயிறுகளில்
44:45. அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.
44:45. (அது) உருகிய செம்பைப்போல் அவனுடைய வயிற்றில் கொதிக்கும்.
44:45. அது எண்ணெய்க் கசடு போலிருக்கும்.
44:45. (அது) உருகிய செம்பைப்போல் (அவர்களுடைய) வயிறுகளில் கொதிக்கும்.
44:46
44:46 كَغَلْىِ الْحَمِيْمِ‏
كَغَلْىِ கொதிப்பதைப் போல் الْحَمِيْمِ‏ கொதிக்கின்ற தண்ணீர்
44:46. வெந்நீர் கொதிப்பதைப் போல்.
44:46. சூடான தண்ணீர் கொதிப்பதைப் போல் (அது கொதித்துப் பொங்கி வரும்).
44:46. சூடேறிய நீர் கொதிப்பது போன்று வயிற்றில் அது கொதிக்கும்.
44:46. கடுமையாகக் காய்ச்சப்பட்ட நீர் கொதிப்பதைபோல் (அது கொதித்துப் பொங்கிவரும்).
44:47
44:47 خُذُوْهُ فَاعْتِلُوْهُ اِلٰى سَوَآءِ الْجَحِيْمِ   ۖ‏
خُذُوْهُ அவனைப் பிடியுங்கள்! فَاعْتِلُوْهُ அவனை இழுத்து வாருங்கள்! اِلٰى سَوَآءِ நடுவில் الْجَحِيْمِ   ‏ நரகத்தின்
44:47. “அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
44:47. ‘‘அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு நரகத்தின் மத்தியில் செல்லுங்கள்.
44:47. “பிடியுங்கள் அவனை! நரகத்தின் நடுப்பகுதியில் இழுத்துச் செல்லுங்கள்.
44:47. (குற்றவாளியான) அவனைப் பிடியுங்கள்; பின்னர், நரகத்தின் மையத்திற்கு இழுத்துக்கொண்டு செல்லுங்கள்.
44:48
44:48 ثُمَّ صُبُّوْا فَوْقَ رَاْسِهٖ مِنْ عَذَابِ الْحَمِيْمِؕ‏
ثُمَّ பிறகு صُبُّوْا ஊற்றுங்கள் فَوْقَ மேல் رَاْسِهٖ அவனது தலைக்கு مِنْ عَذَابِ வேதனையை الْحَمِيْمِؕ‏ கொதிக்கின்ற நீரின்
44:48. “பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.
44:48. பிறகு, அவனுடைய தலைக்குமேல் கொதித்(துக் காய்ந்)த தண்ணீரை ஊற்றி நோவினை செய்யுங்கள்'' (என்று கூறப்படுவதுடன், அவனை நோக்கி ஏளனமாக,)
44:48. அவனது தலைமீது கொதிக்கும் நீரை ஊற்றி வேதனைப்படுத்துங்கள்.
44:48. பின்னர், அவனுடைய தலைக்கு மேல், கொதித்த நீரின் வேதனையிலிருந்து ஊற்றுங்கள், (என்று நரகக்காவலாளிகளுக்குக் கூறப்படுவதுடன், அதிலிருக்கும் பாவிகளிடம்.)
44:49
44:49 ذُقْ ۖۚ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْكَرِيْمُ‏
ذُقْ ۖۚ நீ சுவை! اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْعَزِيْزُ கண்ணியமானவன் الْكَرِيْمُ‏ மதிப்பிற்குரியவன்
44:49. “நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!
44:49. ‘‘நிச்சயமாக நீ மிக்க கண்ணியமும் மரியாதையும் உடையவன். ஆதலால், நீ (இவ்வேதனையைச் சிறிது) சுவைத்துப் பார்'' (என்றும் கூறப்படும்)
44:49. நீ சுவைத்துப் பார், இதன் சுவையை! பெரும் வல்லமை படைத்த கண்ணியமிக்கவனல்லவா நீ
44:49. “நீ (இவ்வேதனையைச்) சுவைத்துப்பார், நிச்சயமாக, நீ தான் மிக்க கண்ணியமும் மரியாதையுமுடையவன், (என்று ஏளனமாகக் கூறப்படும்).
44:50
44:50 اِنَّ هٰذَا مَا كُنْتُمْ بِهٖ تَمْتَرُوْنَ‏
اِنَّ هٰذَا நிச்சயமாக இதுதான் مَا எது كُنْتُمْ இருந்தீர்கள் بِهٖ அதை تَمْتَرُوْنَ‏ சந்தேகிப்பவர்களாக
44:50. “நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்” (என்று அவர்களிடம் சொல்லப்படும்).
44:50. நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தவை.
44:50. நீங்கள் எதன் வருகையை சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது!”
44:50. நிச்சயமாக இது எதை நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களோ அதுவேயாகும் (என்றும் கூறப்படும்).
44:51
44:51 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ مَقَامٍ اَمِيْنٍۙ‏
اِنَّ நிச்சயமாக الْمُتَّقِيْنَ இறையச்சமுள்ளவர்கள் فِىْ مَقَامٍ இடத்தில் اَمِيْنٍۙ‏ பாதுகாப்பான
44:51. பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.
44:51. இறையச்சமுடையவர்களோ, நிச்சயமாக அச்சமற்ற இடத்தில்,
44:51. இறையச்சமுடையவர்கள் அமைதியான இடத்தில் இருப்பார்கள்;
44:51. நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் அச்சமற்ற இடத்திலிருப்பார்கள்.
44:52
44:52 فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍ ۙ ۚ‏
فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களில் وَّعُيُوْنٍ ۙ ۚ‏ இன்னும் ஊற்றுகளில் இருப்பார்கள்
44:52. சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).
44:52. அதுவும் சொர்க்கச் சோலைகளில், ஊற்றுகளின் சமீபமாக,
44:52. தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
44:52. சுவனபதி(யின் சோலை)களிலும், நீர் ஊற்றுக்களிலே (அவற்றினிடையே)யும் (இருப்பார்கள்).
44:53
44:53 يَّلْبَسُوْنَ مِنْ سُنْدُسٍ وَّاِسْتَبْرَقٍ مُّتَقٰبِلِيْنَۚ ۙ‏
يَّلْبَسُوْنَ அணிவார்கள் مِنْ سُنْدُسٍ மென்மையான பட்டு وَّاِسْتَبْرَقٍ இன்னும் தடிப்பமான பட்டு ஆடைகளை مُّتَقٰبِلِيْنَۚ ۙ‏ ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
44:53. ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பிதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.
44:53. மெல்லியதும் மொத்தமானதும் (ஆக, அவர்கள் விரும்பிய) பட்டாடைகளை அணிந்து, ஒருவரை ஒருவர் முகம் நோக்கி (உட்கார்ந்து மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு) இருப்பார்கள்.
44:53. தடித்த மற்றும் மெல்லிய பட்டாடைகளை அணிந்து கொண்டு எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள்.
44:53. ஒருவரையொருவர் முன் நோக்கியவர்களாக மெல்லியதும், திடமானதுமான பட்டாடைகளை அணிந்து கொண்டிருப்பார்கள்.
44:54
44:54 كَذٰلِكَ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِيْنٍؕ‏
كَذٰلِكَ இவ்வாறுதான் وَزَوَّجْنٰهُمْ இன்னும் அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம் بِحُوْرٍ வெண்மையான கண்ணிகளை عِيْنٍؕ‏ கண்ணழகிகளான
44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
44:54. இவ்வாறே (சந்தேகமின்றி நடைபெறும்). மேலும், ‘ஹூருல் ஈன்' (என்னும் கண்ணழகிகளாகிய கன்னி)களையும் நாம் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம்.
44:54. இதுதான் அவர்களின் நிலைமையாகும். மேலும், நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம்.
44:54. இவ்வாறே (அது நடைபெறும்), மேலும், “ஹூருல்ஈன்” (என்னும் கண்ணழகிகளாகிய கன்னிகை)களையும் நாம் அவர்களுக்குத் திருமணம் செய்துவைப்போம்.
44:55
44:55 يَدْعُوْنَ فِيْهَا بِكُلِّ فَاكِهَةٍ اٰمِنِيْنَۙ‏
يَدْعُوْنَ கேட்பார்கள் فِيْهَا அதில் بِكُلِّ எல்லா فَاكِهَةٍ பழங்களையும் اٰمِنِيْنَۙ‏ நிம்மதியானவர்களாக
44:55. அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.
44:55. அச்சமற்றவர்களாக (அவர்கள் விரும்பிய) கனிவர்க்கங்கள் அனைத்தையும், அங்கு கேட்டு (வாங்கிப் புசித்து) கொண்டும் இருப்பார்கள்.
44:55. அங்கு அவர்கள் மன நிம்மதியுடன் எல்லாவிதமான சுவைமிகு பொருட்களையும் கேட்பார்கள்.
44:55. அச்சமற்றவர்களாக கனி வர்க்கங்கள் ஒவ்வொன்றையும், அங்கு கேட்டுக் கொண்டும் இருப்பார்கள்.
44:56
44:56 لَا يَذُوْقُوْنَ فِيْهَا الْمَوْتَ اِلَّا الْمَوْتَةَ الْاُوْلٰى‌ ۚ وَوَقٰٮهُمْ عَذَابَ الْجَحِيْمِۙ‏
لَا يَذُوْقُوْنَ சுவைக்க மாட்டார்கள் فِيْهَا அதில் الْمَوْتَ மரணத்தை اِلَّا الْمَوْتَةَ மரணத்தை தவிர الْاُوْلٰى‌ ۚ முதல் وَوَقٰٮهُمْ இன்னும் அவன் அவர்களைப் பாதுகாத்தான் عَذَابَ வேதனையை விட்டும் الْجَحِيْمِۙ‏ நரகத்தின்
44:56. முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.
44:56. முந்திய மரணத்தைத் தவிர, அதில் அவர்கள் வேறு ஒரு மரணத்தையும் அனுபவிக்க மாட்டார்கள். (அதாவது: மரணிக்காது என்றென்றும் வாழ்வார்கள்.) இன்னும், அவர்களை நரக வேதனையிலிருந்து, (இறைவன்) காப்பாற்றினான்.
44:56. ஏற்கனவே உலகில் அடைந்த மரணம் தவிர, மறு மரணத்தை அவர்கள் அனுபவிக்க மாட்டார்கள். மேலும், உம் இறைவன் தன்னுடைய கருணையினால் அவர்களை நரக வேதனையிலிருந்து காப்பாற்றிவிடுவான்.
44:56. முந்திய மரணத்தைத் தவிர, அவற்றில் அவர்கள் (வேறு யாதொரு) மரணத்தையும் சுவைக்கமாட்டார்கள், மேலும், நரக வேதனையை விட்டும் அவர்களை (அல்லாஹ்வாகிய) அவன் காத்துக்கொண்டான்.
44:57
44:57 فَضْلًا مِّنْ رَّبِّكَ ‌ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ‏
فَضْلًا அருளினால் مِّنْ رَّبِّكَ ؕ உமது இறைவனின் ذٰ لِكَ هُوَ இதுதான் الْفَوْزُ الْعَظِيْمُ‏ மகத்தான வெற்றி
44:57. (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும்.
44:57. (நபியே! இது) உமது இறைவனின் அருளாகும். இதுதான் மகத்தான பெரும் வெற்றியுமாகும்.
44:57. இதுவே மாபெரும் வெற்றியாகும்.
44:57. (நபியே! இது) உமதிரட்சகனின் பேரருளாக (வழங்கப்படுகிறது), அதுதான் மகத்தான வெற்றியாகும்.
44:58
44:58 فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏
فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ இதை நாம் இலேசாக்கினோம்/உமது மொழியில் لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
44:58. அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.
44:58. (நபியே!) அவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இவ்வேதத்தை நாம் உமது மொழியில் (இறக்கி அதை) எளிதாக்கி வைத்தோம்.
44:58. (நபியே!) இவர்கள் அறவுரை பெற வேண்டும் என்பதற்காக நாம் இந்த வேதத்தை உம்முடைய மொழியில் எளிமையாக்கித் தந்துள்ளோம்.
44:58. ஆகவே, (வேதமாகிய) இதனை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கி வைத்திருப்பதெல்லாம், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகத்தான்.
44:59
44:59 فَارْتَقِبْ اِنَّهُمْ مُّرْتَقِبُوْنَ‏
فَارْتَقِبْ ஆகவே, நீர் எதிர்பார்த்திருப்பீராக! اِنَّهُمْ நிச்சயமாக அவர்களும் مُّرْتَقِبُوْنَ‏ எதிர்பார்க்கின்றார்கள்
44:59. ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  
44:59. (இதைக் கொண்டு அவர்கள் நல்லுணர்ச்சி பெறவில்லையெனில், அவர்களுக்கு வரக்கூடிய தீங்கை) நீர் எதிர்பார்த்திருப்பீராக. நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்தே இருப்பார்கள்.
44:59. இனி நீரும் எதிர்பாரும்! இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்!
44:59. ஆகவே, (நல்லுபதேசம் பெறாவிடில், அதனால் ஏற்படும் தீயமுடிவை) நீர் எதிர்பார்த்திரும், நிச்சயமாக, அவர்களும் எதிர்ப்பார்க்கக் கூடியவர்கள்தாம்.