46. ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்)
மக்கீ, வசனங்கள்: 35

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
46:1
46:1 حٰمٓ‏
حٰمٓ‏ ஹா மீம்
46:1. ஹா, மீம்.
46:1. ஹா மீம்.
46:1. ஹாமீம்.
46:1. ஹாமீம்.
46:2
46:2 تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ‏
تَنْزِيْلُ இறக்கப்படுகிறது الْكِتٰبِ இந்த வேதம் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து الْعَزِيْزِ மிகைத்தவன் الْحَكِيْمِ‏ மகா ஞானவான்
46:2. இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
46:2. (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் அருளப்பட்டுள்ளது.
46:2. இந்த வேதம், வல்லமை மிக்கோனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்வினால் இறக்கியருளப்பட்டதாகும்.
46:2. (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன் ஆகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறக்கப்பட்டிருக்கிறது.
46:3
46:3 مَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّى‌ؕ وَالَّذِيْنَ كَفَرُوْا عَمَّاۤ اُنْذِرُوْا مُعْرِضُوْنَ‏
مَا خَلَقْنَا நாம் படைக்கவில்லை السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَاۤ அவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும் اِلَّا தவிர بِالْحَقِّ உண்மையான காரணத்திற்கு(ம்) وَاَجَلٍ مُّسَمًّى‌ؕ ஒரு குறிப்பிட்ட தவணைக்கும் وَالَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்கள் عَمَّاۤ اُنْذِرُوْا அவர்கள் எச்சரிக்கப்பட்டதை مُعْرِضُوْنَ‏ புறக்கணிக்கின்றார்கள்
46:3. வானங்களையும், பூமியையும் இவையிரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் உண்மையையும், ஒரு குறிப்பிட்ட தவணையையும் கொண்டல்லாமல் நாம் படைக்கவில்லை; ஆனால் நிராகரிப்பவர்களோ, தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதைப் புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள்.
46:3. வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் தக்க காரணமும், (அவற்றுக்குக்) குறிப்பிட்ட தவணையுமின்றி நாம் படைக்கவில்லை. எவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிக்கிறார்களோ அவர்கள், தங்களுக்குப் பயமுறுத்தி எச்சரிக்கை செய்யப்பட்டதை மறுக்கின்றனர்.
46:3. நாம் வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையே உள்ள அனைத்தையும் சத்தியத்திற்கேற்பவும் ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயத்துடனும் படைத்திருக்கின்றோம். ஆனால், இந்த நிராகரிப்பாளர்கள், அவர்களுக்கு எந்த உண்மை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதோ, அதனைப் புறக்கணிக்கின்றார்கள்.
46:3. வானங்களையும் பூமியையும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவைகளையும், உண்மையைக்கொண்டும், குறிப்பிடப்பட்ட தவணையையும் கொண்டே தவிர நாம் படைக்கவில்லை, மேலும், (அல்லாஹ்வை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர், அவர்கள் தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டதைவிட்டும் புறக்கணிக்கின்றவர்களாக இருக்கின்றனர்.
46:4
46:4 قُلْ اَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِىْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِى السَّمٰوٰتِ‌ؕ اِیْتُوْنِىْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
قُلْ நீர் கூறுவீராக! اَرَءَيْتُمْ அறிவியுங்கள்! مَّا تَدْعُوْنَ நீங்கள் அழைக்கின்றவற்றை குறித்து مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اَرُوْنِىْ எனக்கு காண்பியுங்கள் مَاذَا எதை خَلَقُوْا படைத்தார்கள் مِنَ الْاَرْضِ பூமியில் اَمْ அல்லது لَهُمْ அவர்களுக்கு شِرْكٌ பங்கு فِى السَّمٰوٰتِ‌ؕ வானங்களில் اِیْتُوْنِىْ بِكِتٰبٍ ஒரு வேதத்தை என்னிடம் கொண்டு வாருங்கள் مِّنْ قَبْلِ هٰذَاۤ இதற்கு முன்னுள்ள اَوْ அல்லது اَثٰرَةٍ மீதமிருப்பதை مِّنْ عِلْمٍ கல்வியில் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
46:4. “நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன; அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
46:4. ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வை தவிர்த்து நீங்கள் (இறைவனென) எவற்றை அழைக்கிறீர்களோ அவற்றை நீங்கள் கவனித்தீர்களா? அவை பூமியில் எதைத்தான் படைத்திருக்கின்றன? அதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள் அல்லது வானங்களில் (அவற்றின் ஆட்சியிலோ அல்லது அவற்றை படைத்ததிலோ) அவற்றுக்குப் பங்குண்டா? நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள ஒரு வேதத்தை, அல்லது (இது சம்பந்தமான) ஞானமுடையவர்களின் ஒரு வாக்கியத்தைக் கொண்டு வாருங்கள்.
46:4. (நபியே! இவர்களிடம்) கூறும்: இறைவனை விட்டுவிட்டு எவற்றை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவை எப்படிப்பட்டவை என்று நீங்கள் எப்போதாவது கண்களைத் திறந்து பார்த்ததுண்டா? சற்று எனக்குக் காண்பித்துத் தாருங்கள். அவர்கள் பூமியில் எதையாவது படைத்திருக்கின்றார்களா? அல்லது வானங்களைப் படைத்து நிர்வகிப்பதில் அவர்களுக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா? நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், இதற்கு முன் வந்த ஏதேனும் வேதமோ அல்லது எஞ்சியுள்ள ஏதேனும் ஞானமோ (இந்தக் கொள்கைகளுக்கு ஆதாரமாக) உங்களிடம் இருப்பின் அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்.
46:4. (ஆகவே நபியே! அவர்களிடம்,) நீர் கூறுவீராக; அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைக்கின்றவற்றை நீங்கள் பார்த்தீர்களா? பூமியிலிருந்து எதனை அவர்கள் படைத்திருக்கிறார்கள்? அல்லது வானங்களின் படைப்பில் அவர்களுக்குக் கூட்டு உண்டா? என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு (ஆதாரமாக) முன்னுள்ள யாதொரு வேதத்தையோ, அல்லது (முன்னோர்களில் யாரிடமிருந்தாவது கிடைக்கப்பெற்ற) அடிச் சுவட்டிலிருந்து (எஞ்சியிருக்கும்) அறிவு ஆதாரத்தையோ கொண்டுவாருங்கள்.
46:5
46:5 وَمَنْ اَضَلُّ مِمَّنْ يَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا يَسْتَجِيْبُ لَهٗۤ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ وَهُمْ عَنْ دُعَآٮِٕهِمْ غٰفِلُوْنَ‏
وَمَنْ யார்? اَضَلُّ மிகப் பெரிய வழிகேடர்கள் مِمَّنْ يَّدْعُوْا அழைக்கின்ற வர்களை விட مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مَنْ لَّا يَسْتَجِيْبُ பதில் அளிக்க மாட்டார்கள் لَهٗۤ அவர்களுக்கு اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாள் வரை وَهُمْ அவர்கள் عَنْ دُعَآٮِٕهِمْ அவர்களின்துஆவை غٰفِلُوْنَ‏ அறியமாட்டார்கள்
46:5. கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.
46:5. மறுமை நாள் வரை (அழைத்தபோதிலும்) அவை இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, அல்லாஹ் அல்லாதவற்றை அழைப்பவர்களைவிட மிக வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையுமே அவை அறியாது.
46:5. பிறகு இப்படிப்பட்ட மனிதனைவிட அதிகம் வழிதவறியவன் யார் இருக்க முடியும்? அவன் அல்லாஹ்வை விடுத்து, மறுமைநாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைக்கின்றான். அதுமட்டுமல்ல, அழைப்பவர்கள் தங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் அறியாதவர்களாய் இருக்கின்றார்கள்.
46:5. மேலும், அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனைவிட மிக வழி கெட்டவன் யார்? அவர்களோ, இவர்களுடைய அழைப்பைப் பற்றி மறந்தவர்களாக உள்ளனர்.
46:6
46:6 وَاِذَا حُشِرَ النَّاسُ كَانُوْا لَهُمْ اَعْدَآءً وَّ كَانُوْا بِعِبَادَتِهِمْ كٰفِرِيْنَ‏
وَاِذَا حُشِرَ எழுப்பப்படும் போது النَّاسُ மக்கள் كَانُوْا ஆகிவிடுவார்கள் لَهُمْ அவர்களுக்கு اَعْدَآءً எதிரிகளாக وَّ كَانُوْا இன்னும் ஆகிவிடுவார்கள் بِعِبَادَتِهِمْ அவர்கள் தங்களை வணங்கியதை كٰفِرِيْنَ‏ மறுப்பவர்களாக
46:6. அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர்.
46:6. தவிர, மனிதர்களை (உயிர்கொடுத்து) எழுப்பப்படும் சமயத்தில், அவை இவர்களுக்கு எதிரிகளாகி, இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதையும் (அவை) நிராகரித்துவிடும்.
46:6. மேலும், மனிதர்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படும்போது தங்களை அழைத்தவர்களுக்கு அவர்கள் பகைவர்களாயும் ஆகிவிடுவார்கள்; மேலும், அவர்களின் வழிபாட்டை நிராகரிப்பவர்களாயும் இருப்பார்கள்.
46:6. மேலும், மனிதர்கள் (மறுமை நாளுக்காக) ஒன்று திரட்டப்பட்டால், (வணங்கப்பட்டவர்களான) அவர்கள் இவர்களுக்கு விரோதிகளாக இருப்பர். இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவர்.
46:7
46:7 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْۙ هٰذَا سِحْرٌ مُّبِيْنٌؕ‏
وَاِذَا تُتْلٰى ஓதிக் காண்பிக்கப்பட்டால் عَلَيْهِمْ இவர்கள் மீது اٰيٰتُنَا நமது வசனங்கள் بَيِّنٰتٍ தெளிவான அத்தாட்சிகளாக قَالَ கூறினார்கள் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلْحَقِّ சத்தியத்தைப் பார்த்து لَمَّا جَآءَ அது வந்த போது هُمْۙ அவர்களிடம் هٰذَا இது سِحْرٌ சூனியமாகும் مُّبِيْنٌؕ‏ தெளிவான
46:7. மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள், “இது தெளிவான சூனியமே!” என்றும் கூறுகிறார்கள்.
46:7. நம் தெளிவான வசனங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், தங்களிடம் வந்த அந்தச் சத்திய வசனங்களை நிராகரித்துவிட்டு, அவற்றைத் தெளிவான சூனியமென்றும் கூறுகின்றனர்.
46:7. நம்முடைய தெளிவான வசனங்கள் இம்மக்களிடம் ஓதிக்காட்டப்பட்டு, சத்தியம் இவர்கள் முன் வந்துவிட்டபோது இந்நிராகரிப்பாளர்கள் சத்தியத்தைக் குறித்து “இது வெளிப்படையான சூனியம்” என்று கூறுகின்றார்கள்.
46:7. இன்னும், நம்முடைய வசனங்கள் தெளிவானவையாக அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், சத்திய(வேத)த்தை நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்_அவ்வுண்மையானது, அவர்களிடம் வந்தபோது இது தெளிவான சூனியமாகும் என்று கூறினார்கள்.
46:8
46:8 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ‌ؕ قُلْ اِنِ افْتَـرَيْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِىْ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ هُوَ اَعْلَمُ بِمَا تُفِيْضُوْنَ فِيْهِ‌ؕ كَفٰى بِهٖ شَهِيْدًاۢ بَيْنِىْ وَبَيْنَكُمْ‌ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
اَمْ يَقُوْلُوْنَ கூறுகிறார்களா? افْتَـرٰٮهُ‌ؕ இவர் இதை இட்டுக்கட்டினார் قُلْ கூறுவீராக! اِنِ افْتَـرَيْتُهٗ நான் இதை இட்டுக்கட்டி இருந்தால் فَلَا تَمْلِكُوْنَ நீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள் لِىْ எனக்காக مِنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து شَیْـًٔا ؕ எதையும் هُوَ அவன் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا எதை تُفِيْضُوْنَ நீங்கள் ஈடுபடுகிறீர்களோ فِيْهِ‌ؕ அதில் كَفٰى போதுமானவன் بِهٖ அவனே شَهِيْدًاۢ சாட்சியால் بَيْنِىْ எனக்கு மத்தியிலும் وَبَيْنَكُمْ‌ ؕ உங்களுக்கு மத்தியிலும் وَهُوَ அவன்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ‏ மகா கருணையாளன்
46:8. அல்லது, “இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக: “நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் உங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்” என்று (நபியே! நீர் கூறும்).
46:8. (நபியே!) இதை நீர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீர் என்று இவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) கூறுவீராக: ‘‘இதை நான் பொய்யாகக் கற்பனை செய்துகொண்டால் (அதற்காக) அல்லாஹ் (என்னைத் தண்டிக்க மாட்டானா? அந்நேரத்தில் அல்லாஹ்)வுக்கு எதிரிடையாக நீங்கள் எனக்கு எதுவும் (உதவி) செய்ய சக்தியற்றவர்கள் (தானே!) இதைப் பற்றி (எனக்கு விரோதமாக) நீங்கள் என்னென்ன கூறுகிறீர்களோ, அவற்றை அவன் நன்கறிந்துமிருக்கிறான். ஆகவே, எனக்கும் உங்களுக்கும் மத்தியில் அவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். அவன்தான் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
46:8. என்ன, இவர்கள் “இறைத்தூதர் இதனைச் சுயமாகப் புனைந்துள்ளார்!” என்று கூறுகின்றார்களா? இவர்களிடம் கூறும்: “இதனை நான் சுயமாகப் புனைந்து கூறுகிறேன் எனில், இறைவனின் பிடியிலிருந்து சிறிதும் என்னை உங்களால் காப்பாற்ற முடியாது! நீங்கள் இட்டுக்கட்டும் பேச்சுக்களை அவன் நன்கு அறிகின்றவனாக இருக்கின்றான். எனக்கும் உங்களுக்கும் இடையே சாட்சியம் அளிப்பதற்கு அவனே போதுமானவன். மேலும், அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
46:8. அல்லது, (நபியே! குர் ஆனாகிய) இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார் என்று (உம்மைப்பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின், நபியே!) நீர் கூறுவீராக: “இதனை நான் இட்டுகட்டியிருந்தால் (அதற்காக) அல்லாஹ்விடமிருந்து (உள்ள தண்டனையில்) எதையும் (தடுத்து என்னைக்காப்பாற்றிட) நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள், இதைப்பற்றி (எனக்கு விரோதமாகக்கூறி) எதில் நீங்கள் மூழ்கியிருக்கிறீர்களோ, அவைகளை அவன் நன்கு அறிவான்: (ஆகவே) எனக்கும், உங்களுக்கும் மத்தியில் சாட்சியாளனாக இருக்க அவனே இதற்குப் போதுமானவன், அவன் மிக்க மன்னிப்போன், பெரும்கிருபையுடையோன்.
46:9
46:9 قُلْ مَا كُنْتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدْرِىْ مَا يُفْعَلُ بِىْ وَلَا بِكُمْؕ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا يُوْحٰٓى اِلَىَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌ‏
قُلْ கூறுவீராக! مَا كُنْتُ நான் இருக்கவில்லை بِدْعًا புதுமையானவனாக مِّنَ الرُّسُلِ தூதர்களில் وَمَاۤ اَدْرِىْ அறியமாட்டேன் مَا يُفْعَلُ என்ன செய்யப்படும் بِىْ எனக்கு وَلَا بِكُمْؕ இன்னும் உங்களுக்கு اِنْ اَتَّبِعُ பின்பற்ற மாட்டேன் اِلَّا தவிர مَا எது يُوْحٰٓى வஹீ அறிவிக்கப்படுகின்றது اِلَىَّ எனக்கு وَمَاۤ اَنَا اِلَّا நான் இல்லை/தவிர نَذِيْرٌ எச்சரிப்பாளராகவே مُّبِيْنٌ‏ தெளிவான
46:9. “(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.
46:9. (நபியே! அவர்களை நோக்கி, மேலும்) கூறுவீராக: (இறைவன் அனுப்பிய) தூதர்களில் நான் புதிதாக வந்தவனல்ல. (எனக்கு முன்னர் தூதர்கள் பலர் வந்தே இருக்கின்றனர்.) மேலும், என்னைப் பற்றியோ அல்லது உங்களைப் பற்றியோ என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியமாட்டேன். எனக்கு வஹ்யி மூலமாக அறிவிக்கப்பட்டவற்றை தவிர, (மற்ற எதையும்) நான் பின்பற்றுபவன் அல்ல. நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை.
46:9. இவர்களிடம் கூறும்: “இறைத்தூதர்களில் நான் ஒன்றும் புதுமையானவன் அல்லன். மேலும் (நாளை) எனக்கு என்ன நேரும் என்பதையும், உங்களுக்கு என்ன நேரும் என்பதையும் நான் அறியேன். என்னிடம் அனுப்பப்படும் வஹியைத்தான்* நான் பின்பற்றுகின்றேன். நான் வெளிப்படையாய் எச்சரிக்கை செய்பவனே அன்றி வேறல்லன்.”
46:9. (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக: “(அல்லாஹ் அனுப்பிய) தூதர்களில் நான் புதியவனாக இருக்கவில்லை, மேலும், என்னைக் கொண்டும், உங்களைக் கொண்டும் என்ன செய்யப்படும் என்பதையும் நான் அறியேன், எனக்கு வஹீ மூலமாக எதை அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர, (மற்றெதையும்) நான் பின்பற்றுவதில்லை, மேலும், நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை.”
46:10
46:10 قُلْ اَرَءَيْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ وَكَفَرْتُمْ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى مِثْلِهٖ فَاٰمَنَ وَاسْتَكْبَرْتُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
قُلْ கூறுவீராக! اَرَءَيْتُمْ அறிவியுங்கள் اِنْ كَانَ இது இருந்தால் مِنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து وَكَفَرْتُمْ இன்னும் நீங்கள் நிராகரித்து விட்டால் بِهٖ இதை وَشَهِدَ இன்னும் சாட்சியும் கூறினார் شَاهِدٌ ஒரு சாட்சியாளர் مِّنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களில் உள்ள عَلٰى مِثْلِهٖ இதுபோன்ற ஒன்றுக்கு فَاٰمَنَ அவர் நம்பிக்கை கொண்டிருக்க وَاسْتَكْبَرْتُمْ‌ ؕ நீங்களோ பெருமை அடித்தீர்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி காட்ட மாட்டான் الْقَوْمَ மக்களுக்கு الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார(ர்கள்)
46:10. “இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா?” என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.  
46:10. (நபியே!) கூறுவீராக: ‘‘(யூதர்களே! இவ்வேதம்) அல்லாஹ்விடம் இருந்தே வந்திருக்க, அதை நீங்கள் நிராகரித்து விட்டீர்களே! (உங்கள் இனத்தைச் சார்ந்த) இஸ்ராயீலின் சந்ததிகளிலுள்ள ஒருவர், இதைப் போன்ற ஒரு வேதம் வர வேண்டியதிருக்கிறது என்று சாட்சியம் கூறி, அதை அவர் நம்பிக்கை கொண்டுமிருக்க, நீங்கள் பெருமைகொண்டு (இதை நிராகரித்து) விட்டால், (உங்கள் கதி) என்னவாகும் என்பதை கவனித்தீர்களா? நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.''
46:10. (நபியே இவர்களிடம்) கூறும்: “நீங்கள் எப்போதேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்தே வந்ததாய் இருந்து, அதனை நீங்கள் நிராகரிக்கின்றீர்களெனில், (உங்கள் கதி என்னவாகும் என்று!) மேலும், இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலிருந்து சான்றுபகர்பவர் ஒருவர் இதுபோன்ற வேதத்தின் மீது சான்று பகர்ந்துள்ளார். அவர் நம்பிக்கையும் கொண்டிருந்தார்; ஆனால், நீங்கள் உங்களின் ஆணவத்திலேயே உழன்று கொண்டு இருந்தீர்கள். இத்தகைய கொடுமைக்காரர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை!”
46:10. (நபியே!) நீர் கூறுவீராக நீங்கள் பார்த்தீர்களா? இ(வ்வேதமான)து அல்லாஹ்விடமிருந்து வந்ததாக இருந்து, இதை நீங்கள் நிராகரித்தும் விட்டவர்களாக இருக்கும் நிலையில் (இது உண்மையானது என) இஸ்ராயீலின் மக்களில் உள்ள சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சியமும் கூறி (பின்னர் இதை) அவர் விசுவாசமும் கொண்டுள்ளார், (ஆனால், இதை ஏற்காது) நீங்கள் பெருமையும் அடித்துக் கொண்டீர்கள் (ஆகவே, உங்களை விட அநியாயக்காரர்கள் யார்?), நிச்சயமாக, அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தார்க்கு நேர்வழி காட்டமாட்டன்.
46:11
46:11 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَيْرًا مَّا سَبَقُوْنَاۤ اِلَيْهِ‌ ؕ وَاِذْ لَمْ يَهْتَدُوْا بِهٖ فَسَيَقُوْلُوْنَ هٰذَاۤ اِفْكٌ قَدِيْمٌ‏
وَقَالَ கூறினார்கள் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி لَوْ كَانَ خَيْرًا இது சிறந்ததாக இருந்தால் مَّا سَبَقُوْنَاۤ இவர்கள் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள் اِلَيْهِ‌ ؕ இதனளவில் وَاِذْ لَمْ يَهْتَدُوْا அவர்கள் நேர்வழி பெறாமல் போனபோது بِهٖ இதன் மூலம் فَسَيَقُوْلُوْنَ கூறுகின்றனர் هٰذَاۤ இது اِفْكٌ பொய்யாகும் قَدِيْمٌ‏ பழைய(து)
46:11. நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பற்றி: “இது (குர்ஆன்) நல்லதாக இருந்தால், இவர்கள் எங்களைவிட அதன்பால் முந்தியிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது “இது பண்டைக்காலக் கட்டுக் கதை” எனக் கூறுவார்கள்.
46:11. நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘இவ்வேதம் நன்மையானதாக இருந்தால் (அதை நம்பிக்கைகொள்ள இப்பாமர மக்கள்) எங்களைவிட முந்தியிருக்க மாட்டார்கள். (இதில் ஒரு நன்மையுமே இல்லை. ஆதலால்தான், அதை நாங்கள் நிராகரித்து விட்டோம்)'' என்றும் கூறுகின்றனர். அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைப் பின்பற்றாத நிலைமையில், இது பழங்காலத்துப் பொய்யான கட்டுக்கதைகள்தான் என்றும் அவர்கள் கூறுவார்கள்.
46:11. இறைநிராகரிப்பாளர்கள் இறைநம்பிக்கையாளர்களைப் பற்றி கூறுகிறார்கள்: “இந்த வேதத்தை ஏற்றுக் கொள்வது ஒரு நற்செயலாக இருந்திருந்தால் இதனை ஏற்றுக் கொள்வதில் இவர்கள் நம்மை முந்தியிருக்க முடியாது.” இப்படியாக இதன் மூலம் இவர்கள் நேர்வழி பெறாதபோது “இதுவோ பழைய பொய்!” என்று திண்ணமாகக் கூறுவார்கள்.
46:11. நிராகரிப்போர் விசுவாசிகளிடம்,: “இது நன்மையானதாக இருந்தால், இதனளவில் அவர்கள் எங்களை முந்தியிருக்கமாட்டர்கள், என்றும் கூறுகின்றனர், அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைக் கொண்டு நேர்வழியும் பெறாத “இது பழைய பொய்யாகும்” என்று அவர்கள் கூறுவார்கள்.
46:12
46:12 وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰٓى اِمَامًا وَّرَحْمَةً  ‌ ؕ وَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِيًّا لِّيُنْذِرَ الَّذِيْنَ ظَلَمُوْا ‌ۖ  وَبُشْرٰى لِلْمُحْسِنِيْنَ‌ۚ‏
وَمِنْ قَبْلِهٖ இதற்கு முன்னர் كِتٰبُ مُوْسٰٓى மூஸாவின் வேதம் اِمَامًا ஒரு முன்னோடியாக(வும்) وَّرَحْمَةً  ؕ அருளாகவும் وَهٰذَا இதுவோ كِتٰبٌ ஒரு வேதமாகும் مُّصَدِّقٌ மெய்ப்பிக்கக்கூடிய(து) لِّسَانًا عَرَبِيًّا அரபி மொழியில் لِّيُنْذِرَ எச்சரிப்பதற்காக(வும்) الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்களை ۖ  وَبُشْرٰى நற்செய்தியாகவும் لِلْمُحْسِنِيْنَ‌ۚ‏ நல்லவர்களுக்கு
46:12. இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
46:12. இதற்கு முன்னர், மூஸாவுடைய வேதம் (மக்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தது. இதுவோ, (அதை) உண்மைப்படுத்தும் வேதமாகத் தெளிவான அரபி மொழியில் இருக்கிறது. இன்னும் அநியாயக்காரர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்துகொண்டும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி கூறிக்கொண்டும் இருக்கிறது.
46:12. இதற்கு முன்பு மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் கருணையாகவும் வந்துவிட்டிருந்தது. இந்த வேதம் (அதனை) உண்மைப்படுத்தக்கூடியதாகவும், அரபிமொழியிலும் வந்துள்ளது; அக்கொடுமைக்காரர்களை எச்சரிக்கை செய்வதற்காகவும் நல்ல நடத்தையை மேற்கொள்கிறவர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காகவும்தான்!
46:12. இதற்கு முன் மூஸாவுடைய வேதம் வழி காட்டியாகவும் அருளாகவும் இருந்தது, (குர் ஆனாகிய) இது (அதனை) உண்மைப்படுத்துகிற அரபி மொழியிலான வேதமாகும், (இது) அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நன்மை செய்வோருக்கு நன்மாராயமாகவும் இருக்கின்றது.
46:13
46:13 اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‌ۚ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் قَالُوْا கூறினார்கள் رَبُّنَا எங்கள் இறைவன் اللّٰهُ அல்லாஹ்தான் ثُمَّ பிறகு اسْتَقَامُوْا உறுதியாக இருந்தார்களோ فَلَا خَوْفٌ பயமில்லை عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا هُمْ يَحْزَنُوْنَ‌ۚ‏ இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
46:13. நிச்சயமாக எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
46:13. எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அவன் அருள்புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு,) அதில் உறுதியாகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
46:13. திண்ணமாக எவர்கள் “அல்லாஹ்தான் எங்கள் அதிபதி” என்று கூறினார்களோ பின்னர் அதில் அவர்கள் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
46:13. நிச்சயமாக “எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான்” என்று கூறி (அதன்) பிறகு (அதில்) நிலைத்து இருக்கின்றார்களோ, அத்தகையோர்_அவர்களுக்கு (யாதொரு) பயமுமில்லை, அவர்கள் கவலையும் அடையமாட்டார்கள்.
46:14
46:14 اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ خٰلِدِيْنَ فِيْهَا‌ ۚ جَزَآءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ الْجَنَّةِ சொர்க்கவாசிகள் خٰلِدِيْنَ நிரந்தரமாக இருப்பார்கள் فِيْهَا‌ ۚ அதில் جَزَآءًۢ கூலியாக بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு
46:14. அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்; அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்.
46:14. இவர்கள்தான் சொர்க்கவாசிகள். அவர்கள் செய்யும் நன்மைக்குக் கூலியாக என்றென்றுமே அதில் அவர்கள் தங்கிவிடுவார்கள்.
46:14. இத்தகையவர்களே சுவனம் செல்பவர்கள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள்; (உலகில்) அவர்கள் செய்துகொண்டிருக்கின்ற செயல்களின் பலனாக!
46:14. அவர்கள் சுவனவாசிகள், அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக நிரந்தரமாக அதில் (தங்கி) இருப்பவர்கள்.
46:15
46:15 وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا‌ ؕ حَمَلَـتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا‌ ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰـثُوْنَ شَهْرًا‌ ؕ حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً  ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏
وَوَصَّيْنَا நாம் உபதேசித்தோம் الْاِنْسَانَ மனிதனுக்கு بِوَالِدَيْهِ தன் பெற்றோருக்கு اِحْسَانًا‌ ؕ நன்மை செய்வதற்கு حَمَلَـتْهُ அவனை சுமந்தாள் اُمُّهٗ அவனது தாய் كُرْهًا சிரமத்துடன் وَّوَضَعَتْهُ இன்னும் அவனை ஈன்றெடுத்தாள் كُرْهًا‌ ؕ சிரமத்துடன் وَحَمْلُهٗ அவனை சுமந்ததும் وَفِصٰلُهٗ இன்னும் அவனுக்கு பால்குடி மறக்கச் செய்ததும் ثَلٰـثُوْنَ முப்பது شَهْرًا‌ ؕ மாதங்களாகும் حَتّٰٓى இறுதியாக اِذَا بَلَغَ அவன் அடைந்து (விட்டால்) اَشُدَّهٗ தனது வாலிபத்தை وَبَلَغَ இன்னும் அடைந்து(விட்டால்) اَرْبَعِيْنَ நாற்பது سَنَةً  ۙ வயதை قَالَ அவன் கூறுகிறான் رَبِّ என் இறைவா اَوْزِعْنِىْۤ என்னை தூண்டுவாயாக اَنْ اَشْكُرَ நான் நன்றி செலுத்துவதற்கு(ம்) نِعْمَتَكَ உனது அருளுக்கு الَّتِىْۤ எது اَنْعَمْتَ நீ அருள் புரிந்தாய் عَلَىَّ என்மீது(ம்) وَعَلٰى மீதும் وَالِدَىَّ என் பெற்றோர் وَاَنْ اَعْمَلَ நான் செய்வதற்கும் صَالِحًا நல்ல அமலை تَرْضٰٮهُ அதை நீ திருப்திபடுகின்றாய் وَاَصْلِحْ இன்னும் சீர்திருத்தம் செய் لِىْ எனக்கு فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ என் சந்ததியில் اِنِّىْ நிச்சயமாக நான் تُبْتُ திரும்பி விட்டேன் اِلَيْكَ உன் பக்கம் وَاِنِّىْ இன்னும் நிச்சயமாக நான் مِنَ الْمُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களில் ஒருவனாவேன்
46:15. மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
46:15. மனிதன் தன் தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், சிரமத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து சிரமத்துடனேயே பிரசவிக்கிறாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரை, முப்பது மாதங்கள் (மிக்க சிரமத்துடன்) செல்கின்றன. இவன் வாலிபமாகி நாற்பது வயதையடைந்தால் ‘‘என் இறைவனே! நீ என் மீதும், என் தாய் தந்தை மீதும் புரிந்த அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, உன் திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யும்படி(யான நல்லறிவை) நீ எனக்குத் தந்தருள்வாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என் குடும்பத்தை சீர்திருத்திவை. நிச்சயமாக நான் உன்னையே நோக்கினேன். (உனக்கு) முற்றிலும் வழிபட்டவர்களில் நானும் ஒருவன்'' என்று கூறுவான்.
46:15. தன்னுடைய தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய அன்னை, அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் அவனுக்கு பால் குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன. இறுதியில் அவன் தனது முழுபலத்தை அடைந்து அவனுக்கு நாற்பது வயது ஆகும்போது கூறுவான்: “என் அதிபதியே! நீ என் மீதும் என் தாய்தந்தையர் மீதும் பொழிந்த அருட்கொடைகளுக்காக (உனக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் உன் உவப்பைப் பெறும் வகையில் நற்செயலைச் செய்வதற்காகவும் எனக்கு நற்பேற்றினை அளிப்பாயாக! என் பிள்ளைகளையும் நல்லவர்களாக்கி எனக்கு ஆறுதல் அளிப்பாயாக! மேலும், நான் உன்னிடம் பாவமன்னிப்புக்கோரி மீளுகின்றேன். மேலும், கீழ்ப்படிந்து வாழும் அடியார்களில் (முஸ்லிம்களில்) சேர்ந்தவனாகவும் இருக்கின்றேன்.”
46:15. மேலும், தன்னுடைய பெற்றோர்க்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம், அவனுடைய தாய், சிரமத்துடன் அவனைச் சுமந்திருந்து, சிரமத்துடன் அவனைப் பிரசவிக்கின்றாள், (அவன்) கர்ப்பத்தில் அவனைச் சுமப்பதும், அவனுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும். முடிவாக இவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும். “என் இரட்சகனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த உன் அருளுக்காக உனக்கு நான் நன்றி செலுத்தி, நீ எதனைப் பொருந்திக் கொள்வாயோ அந்த நற்செயலைச் செய்யவும் (நல்லறிவை) நீ எனக்கு உதிக்கச் செய்வாயாக! எனக்காக என்னுடைய சந்ததியில் (உள்ளோரை) நீ சீர்திருத்தியும் வைப்பாயாக! நிச்சயமாக, நான் தவ்பா செய்து உன்பக்கம் திரும்பிவிட்டேன், நிச்சயமாக, நானோ (உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்த முஸ்லிம்களில் (ஒருவனாகவும்) இருக்கிறேன்” என்று கூறுவான்.
46:16
46:16 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ نَـتَقَبَّلُ عَنْهُمْ اَحْسَنَ مَا عَمِلُوْا وَنَـتَجَاوَزُ عَنْ سَيِّاٰتِهِمْ فِىْۤ اَصْحٰبِ الْجَنَّةِ‌ ؕ وَعْدَ الصِّدْقِ الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எப்படிப்பட்டவர்கள் نَـتَقَبَّلُ ஏற்றுக் கொள்வோம் عَنْهُمْ இவர்களிடமிருந்து اَحْسَنَ மிக அழகானதை مَا عَمِلُوْا இவர்கள் செய்தவற்றில் وَنَـتَجَاوَزُ இன்னும் மன்னித்து விடுவோம் عَنْ سَيِّاٰتِهِمْ இவர்களின் பாவங்களை فِىْۤ اَصْحٰبِ الْجَنَّةِ‌ ؕ சொர்க்க வாசிகளில் وَعْدَ الصِّدْقِ உண்மையான வாக்காகும் الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ‏ எது/வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
46:16. சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான - நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்; இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மையான வாக்குறுதியாகும்.
46:16. இத்தகையவர்கள் செய்த நன்மைகள் அனைத்தையும் நாம் அங்கீகரித்துக் கொண்டு, சொர்க்கவாசிகளான இவர்களின் பாவங்களையும் மன்னித்து விட்டு விடுவோம். இவர்களுக்கு அளிக்கப்பட்ட இவ்வாக்கு உண்மையான வாக்குறுதியாகும்.
46:16. இத்தகைய மனிதர்களிடமிருந்து அவர்களின் நல்ல செயல்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். மேலும், அவர்களின் தீமைகளை நாம் பொறுத்துக் கொள்கின்றோம். அவர்களிடம் அளிக்கப்பட்ட உண்மையான வாக்குறுதியின்படி அவர்கள் சுவனவாசிகளுடன் சேர்ந்திருப்பார்கள்.
46:16. அவர்கள் எத்தகயோரேன்றால்_சொர்க்க வாசிகளில் உள்ளவர்களாக இருக்க, அவர்கள் செய்தவற்றில் (உள்ள) மிக அழகானதை நாம் அங்கீகரித்துக் கொண்டு, அவர்களுடைய தீமைகளை விட்டும் புறக்கணித்து விடுவோம், அவர்கள் வாக்களிக்கப் பட்டிருந்தார்களே அத்தகையது உண்மையான வாக்குறுதியாகும்.
46:17
46:17 وَالَّذِىْ قَالَ لِـوَالِدَيْهِ اُفٍّ لَّكُمَاۤ اَتَعِدٰنِنِىْۤ اَنْ اُخْرَجَ وَقَدْ خَلَتِ الْقُرُوْنُ مِنْ قَبْلِىْ‌ ۚ وَهُمَا يَسْتَغِيْثٰنِ اللّٰهَ وَيْلَكَ اٰمِنْ ۖ  اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ  ۖۚ فَيَقُوْلُ مَا هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
وَالَّذِىْ எவர் قَالَ கூறினார் لِـوَالِدَيْهِ தனது பெற்றோரை நோக்கி اُفٍّ “சீ” لَّكُمَاۤ உங்கள் இருவருக்கும் اَتَعِدٰنِنِىْۤ என்னை எச்சரிக்கிறீர்களா? اَنْ اُخْرَجَ நான் வெளியேற்றப்படுவேன் وَقَدْ திட்டமாக خَلَتِ சென்றுள்ளனர் الْقُرُوْنُ பல தலைமுறைகள் مِنْ قَبْلِىْ‌ ۚ எனக்கு முன்னர் وَهُمَا அவ்விருவரும் يَسْتَغِيْثٰنِ உதவி தேடுகின்றனர் اللّٰهَ அல்லாஹ்விடம் وَيْلَكَ உனக்கு என்ன கேடு! اٰمِنْ நீ நம்பிக்கை கொள்! ۖ  اِنَّ وَعْدَ நிச்சயமாக வாக்கு اللّٰهِ அல்லாஹ்வின் حَقٌّ  ۖۚ உண்மையானதே! فَيَقُوْلُ அவன் கூறுகிறான் مَا هٰذَاۤ இது இல்லை اِلَّاۤ اَسَاطِيْرُ கதைகளே தவிர الْاَوَّلِيْنَ‏ முன்னோரின்
46:17. ஆனால் (சன்மார்க்கத்தை தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி; “சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே (அவர்கள் எழுப்பப்படவில்லையா)!” என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும், (அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்) “உனக்கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது” என்று அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்; அதற்கவன் “இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று கூறுகிறான்.
46:17. எவன் தன் தாய் தந்தையை நோக்கி (அவர்கள் மறுமையைப் பற்றிக் கூறிய அறிவுரைகளை மறுத்து) ‘‘சீச்சீ! உங்களுக்கென்ன நேர்ந்தது! (நான் இறந்தபின்) உயிர்ப்பிக்கப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தார் சென்று விட்டனர். (அவர்களில் ஒருவருமே திரும்ப வராது இருக்க நான் மட்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?) என்று அவன் கூறுகிறான். அதற்கு அவ்விருவரும் (அவனை) பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து (பின்னர் அவனை நோக்கி) ‘‘உனக்கென்ன கேடு! நீ அல்லாஹ்வை நம்பிக்கை கொள். நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி மெய்யானது'' என்று கூறுகிறார்கள். அதற்கவன், ‘‘இவையெல்லாம் முன்னுள்ளோரின் கட்டுக் கதைகளே தவிர வேறில்லை, (இதை நான் நம்பவே மாட்டேன்)'' என்று கூறுகிறான்.
46:17. ஒருவன் தன் தாய்தந்தையரிடம் இவ்வாறு கூறுகின்றான்: “சீ! என்னை நீங்கள் கஷ்டப்படுத்திவிட்டீர்கள். நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகின்றீர்களா? எனக்கு முன்னர் ஏராளமான தலைமுறையினர் வாழ்ந்து சென்றுள்ளார்களே! (அவர்களில் எவரும் எழுந்து வரவில்லையே!)” தாய்தந்தையர் இருவரும் அல்லாஹ்வின் உதவியை வேண்டியவர்களாகக் கூறுகின்றார்கள்: “அட, துர்ப்பாக்கியமுடையவனே! ஏற்றுக்கொள்; அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது!” ஆனால், அவனோ “இவையெல்லாம் முற்காலத்துக் கட்டுக் கதைகள்” என்று கூறுகின்றான்.
46:17. ஒருவன் தன் பெற்றோரிடம் (அவர்கள் மறுமையைப் பற்றிக் கூறிய நன்மொழிகளை மறுத்து இகழ்ச்சிக்குரிய வார்த்தையான), “சீச்சீ! உங்களுக்குகென்ன நேர்ந்தது! நான் இறந்த பின் உயிர்பித்து வெளியாக்கப்படுவேன் என்று நீங்கள் இருவரும் என்னை பயமுறுத்துகிறீர்களா? திட்டமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்றுவிட்டனர், (அவர்களின் நிலை என்ன?)” என்று கூறுகிறான், (அவனது தீமையிலிருந்து காத்து) இரட்சிக்குமாறு அவ்விருவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து (பின்னர் அவனிடம்) “உனக்கென்ன கேடு? நீ (அல்லாஹ்வை விசுவாசிப்பாயாக! நிச்சயமாக, அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது” (என்றும் கூறுகின்றார்கள்), அப்பொழுது, “இவைகளெல்லாம் முன்னோரின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை,” என்று அவன் கூறுகின்றான்.
46:18
46:18 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ فِىْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ‌ؕ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِيْنَ‏
اُولٰٓٮِٕكَ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் حَقَّ உறுதியாகிவிட்டது عَلَيْهِمُ இவர்கள் மீதும் الْقَوْلُ வாக்கு فِىْۤ اُمَمٍ சமுதாயங்களுடன் قَدْ திட்டமாக خَلَتْ சென்றுவிட்ட(னர்) مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் مِّنَ الْجِنِّ ஜின்களில் وَالْاِنْسِ‌ؕ மற்றும் மனித(ர்கள்) اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் كَانُوْا இருக்கின்றனர் خٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளாகவே
46:18. இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.
46:18. இத்தகையவர்களின் கதியோ, இவர்களுக்கு முன் சென்றுபோன (பாவிகளான) மனித, ஜின்களிலுள்ள கூட்டத்தார்களைப்போல் (இவர்களும் அழிந்து) இவர்களின் மீதும் (அல்லாஹ்வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) வாக்குறுதி உண்மையாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டமடைந்து விட்டார்கள்.
46:18. இத்தகைய மக்கள் மீது வேதனையின் தீர்ப்பு உறுதியாகிவிட்டது. இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்ற இத்தகைய தவறான நடத்தை கொண்ட ஜின் மற்றும் மனித இனத்தாருடன் இவர்களும் சேர்க்கப்படுவார்கள். ஐயமின்றி, இவர்கள் மாபெரும் நஷ்டத்திற்கு ஆளாகிவிட்டவர்களாய் இருக்கின்றார்கள்.
46:18. (இவ்வாறு கூறும்) இத்தகையோர்_இவர்களுக்கு சென்று போன மனு, ஜின்களிலுள்ள சமூகத்தார்களில் (பாவம் செய்தால், அல்லாஹ்வுடைய வேதனை வந்திறங்கியே தீருமென்ற) இரட்சகனின் கூற்று அவர்களின் மீது உண்மையாகி விட்டது, நிச்சயமாக, அவர்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர்.
46:19
46:19 وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا‌ ۚ وَلِيُوَفِّيَهُمْ اَعْمَالَهُمْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَلِكُلٍّ எல்லோருக்கும் دَرَجٰتٌ தகுதிகள் உண்டு مِّمَّا عَمِلُوْا‌ ۚ அவர்கள் செய்தவற்றின் அடிப்படையில் وَلِيُوَفِّيَهُمْ இன்னும் இறுதியாக அவன் அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான் اَعْمَالَهُمْ அவர்களுடைய செயல்களுக்கு وَهُمْ இன்னும் அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
46:19. அன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு - ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
46:19. இவர்களில் ஒவ்வொருவருக்கும் (நன்மையோ தீமையோ) அவர்கள் செயலுக்குத் தக்க பதவிகள் இருக்கின்றன. ஆகவே, அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியை முழுமையாகவே கொடுக்கப்படுவார்கள். (நன்மையைக் குறைத்தோ, பாவத்தை அதிகரித்தோ) இவர்களில் ஒருவருக்கும் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டாது.
46:19. (இந்த இரு பிரிவினர்களில்) அவரவருடைய செயல்களுக்கேற்பவே அவரவருடைய நிலைகள் இருக்கும். மேலும், அல்லாஹ் அவர்களின் செயல்களுக்குரிய கூலியை அவர்களுக்கு முழுக்க முழுக்க அளித்திட வேண்டும் என்பதற்காகத்தான் (இவ்வாறு செய்கின்றான்). அவர்கள் மீது ஒருபோதும் கொடுமை இழைக்கப்படமாட்டாது.
46:19. (இவர்களில்) ஒவ்வொருவருக்கும் அவ(ரவ)ர்கள் செயலுக்குத் தக்க பதவிகளிறுக்கின்றன, அவர்களின் செயல்(களுக்குரிய கூலி)களை அவன் அவர்களுக்கு நிறைவு செய்வதற்காகவும், (பதவிகளை நல்குகிறான்,) அவர்கள் அநீதமிழைக்கப்படவும் மாட்டார்கள்.
46:20
46:20 وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِ ؕ اَذْهَبْتُمْ طَيِّبٰـتِكُمْ فِىْ حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ‌ۚ فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْـتُمْ تَسْتَكْبِرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ‏
وَيَوْمَ يُعْرَضُ சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் عَلَى النَّارِ ؕ நரகத்தின் முன் اَذْهَبْتُمْ நீங்கள் போக்கிக் கொண்டீர்கள் طَيِّبٰـتِكُمْ உங்கள் நன்மைகளை فِىْ حَيَاتِكُمُ உங்கள் வாழ்க்கையிலே الدُّنْيَا உலக وَاسْتَمْتَعْتُمْ இன்னும் இன்பம் அடைந்தீர்கள் بِهَا ۚ அவற்றின் மூலம் فَالْيَوْمَ ஆகவே இன்றைய தினம் تُجْزَوْنَ கூலியாக கொடுக்கப்படுவீர்கள் عَذَابَ தண்டனையை الْهُوْنِ கேவலமான بِمَا كُنْـتُمْ நீங்கள் இருந்த காரணத்தாலும் تَسْتَكْبِرُوْنَ நீங்கள் பெருமையடிப்பவர்களாக فِى الْاَرْضِ பூமியில் بِغَيْرِ الْحَقِّ அநியாயமாக وَبِمَا كُنْتُمْ நீங்கள் இருந்த காரணத்தாலும் تَفْسُقُوْنَ‏ நீங்கள் பாவம் செய்பவர்களாக
46:20. அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).  
46:20. நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் உலகத்தில் வாழ்ந்திருந்த காலத்தில், நீங்கள் பெற்றிருந்த நல்லவற்றை எல்லாம், (நன்மையான காரியங்களில் உபயோகிக்காது) உங்கள் சுகபோகங்களிலேயே உபயோகித்து இன்பமனுபவித்து விட்டீர்கள். ஆகவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக்கொண்டும், பாவம் செய்துகொண்டும் இருந்ததன் காரணமாக, இழிவு தரும் வேதனையே இன்றைய தினம் உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும்'' (என்று கூறப்படும்).
46:20. பின்னர் இந்த இறைநிராகரிப்பாளர்கள் நரகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படும்போது அவர்களிடம் கூறப்படும்; நீங்கள் உங்கள் (பங்கில் உள்ள) அருட்கொடைகளை உங்கள் உலக வாழ்க்கையிலேயே முடித்துக் கொண்டீர்கள். அவற்றால் பயன் அடைந்துவிட்டீர்கள். நீங்கள் பூமியில் எவ்வித நியாயமுமின்றி பெருமையடித்துக் கொண்டிருந்ததற்கும், பாவம் செய்து கொண்டிருந்ததற்கும் பகரமாக இன்று உங்களுக்கு இழிவுமிக்க வேதனை கூலியாகத் தரப்படும்.
46:20. அன்றியும், நிராகரிப்போர் நரகத்தின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்), “உங்களுடைய நல்லவைகளை உங்களுடைய உலக வாழ்க்கையில் நீங்கள் போக்கிவிட்டீர்கள், அவற்றைக் கொண்டு இன்பமனுவித்தும் விட்டீர்கள், அதுவே, நீங்கள் பூமியில் நியாயமின்றிப் பெருமையடித்துக் கொண்டிருந்த காரணத்தாலும், இன்னும், பாவம் செய்துகொண்டிருந்த காரணத்தாலும் இழிவு தரும் வேதனையை இன்றையத் தினம் நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள் (என்று கூறப்படும்).
46:21
46:21 وَاذْكُرْ اَخَا عَادٍؕ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖۤ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக اَخَا சகோதரரை عَادٍؕ ஆது சமுதாயத்தின் اِذْ اَنْذَرَ அவர் எச்சரித்த சமயத்தை قَوْمَهٗ தனது மக்களை بِالْاَحْقَافِ மணல் பாங்கான இடத்தில் وَقَدْ திட்டமாக خَلَتِ சென்றுள்ளனர் النُّذُرُ எச்சரிப்பாளர்கள் مِنْۢ بَيْنِ يَدَيْهِ இவருக்கு முன்னரும் وَمِنْ خَلْفِهٖۤ இவருக்கு பின்னரும் اَلَّا تَعْبُدُوْۤا நீங்கள் வணங்காதீர்கள் اِلَّا اللّٰهَ ؕ அல்லாஹ்வை அன்றி اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ தண்டனையை يَوْمٍ நாளின் عَظِيْمٍ‏ பெரிய(து)
46:21. மேலும் “ஆது” (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூத்) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, “அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்” என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக.
46:21. (நபியே!) நீர் (ஹூத் நபியாகிய) ‘ஆது' உடைய சகோதரரை நினைவு கூறுவீராக. அவருக்கு முன்னும், பின்னும் தூதர்கள் பலர் (அவர்களிடம்) வந்திருக்கின்றனர். (அவர்) தன் மக்களை ‘அஹ்காஃப்' என்ற (மணற்பாங்கான) இடத்தில் (சந்தித்து), ‘‘அல்லாஹ்வைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்காதீர்கள். நிச்சயமாக மகத்தான நாளின் வேதனை உங்கள் மீது இறங்கி விடுமென்று நான் பயப்படுகிறேன்'' என்று அச்சமூட்டி எச்சரித்தார்.
46:21. ஆத் சமூகத்தாரின் சகோதரர் (ஹூத் நபியுடைய) செய்தியை இவர்களுக்கு எடுத்துக் கூறும். அப்போது அவர் அஹ்காஃப் எனும் பகுதியில் தன் சமூகத்தாருக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்திருந்தார் எச்சரிக்கை செய்பவர்கள் அவருக்கு முன்பும் வாழ்ந்திருக்கிறார்கள். அவருக்குப் பிறகும் வந்து கொண்டிருந்தார்கள் அதாவது, “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அடிபணியாதீர்கள். உங்கள் விஷயத்தில் மிகப் பயங்கரமான ஒரு நாளின் வேதனைக்கு நான் அஞ்சுகின்றேன்!”
46:21. (நபியே!) நீர் (ஹூத் நபியாகிய)” ஆது” உடைய சகோதரரை நினைவு கூர்வீராக! அவர் மணல் குன்றுகளில் (குடி) இருந்த தன் சமூகத்தாரை எச்சரிக்கை செய்த போது, அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் எச்சரிக்கை செய்வோர் திட்டமாக வந்து சென்று விட்டனர், (அவர் தன் சமூகத்தாரிடம்)” அல்லாஹ்வையன்றி (வேறெதனையும்) நீங்கள் வணங்காதீர்கள், நிச்சயமாக மகத்தான நாளின் வேதனையை உங்கள் மீது நான் பயப்படுகிறேன்” (என்றார்).
46:22
46:22 قَالُـوْۤا اَجِئْتَـنَا لِتَاْفِكَنَا عَنْ اٰلِهَـتِنَا‌ ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏
قَالُـوْۤا அவர்கள் கூறினர் اَجِئْتَـنَا நீர் எங்களிடம் வந்தீரா? لِتَاْفِكَنَا எங்களை திருப்புவதற்காக عَنْ اٰلِهَـتِنَا‌ ۚ எங்கள் தெய்வங்களை விட்டு فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ எங்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதை எங்களிடம் கொண்டு வருவீராக! اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மையாளர்களில்
46:22. அதற்கு அவர்கள்: “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
46:22. அதற்கவர்கள், ‘‘எங்கள் தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பிவிடவா நீர் எங்களிடம் வந்தீர்? நீர் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீர் எங்களைப் பயமுறுத்தும் வேதனையை நம்மிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள்.
46:22. அப்போது அவர்கள் கூறினார்கள்: “எங்களை எங்கள் கடவுள்களை விட்டு திசை திருப்பவா நீர் வந்திருக்கின்றீர்? சரி! நீர் உண்மையாளர் எனில், எங்களை எந்த வேதனையைக் கூறி அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையைக் கொண்டு வாரும்.”
46:22. அ(தற்க)வர்கள் “எங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை விட்டு, எங்களைத் திருப்பிவிட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளர்களில் இருந்தால், நீர் எங்களுக்கு எதைக் கொண்டுவாக்களித்தீரோ அ(வ்வேதனையான)தை நம்மிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
46:23
46:23 قَالَ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ‌ۖ وَاُبَلِّغُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖ وَلٰـكِنِّىْۤ اَرٰٮكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ‏
قَالَ அவர் கூறினார் اِنَّمَا الْعِلْمُ அறிவெல்லாம் عِنْدَ اللّٰهِ ۖ அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. وَاُبَلِّغُكُمْ உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன் مَّاۤ எதை اُرْسِلْتُ அனுப்பப்பட்டேன் بِهٖ அதைக் கொண்டு وَلٰـكِنِّىْۤ என்றாலும் நான் اَرٰٮكُمْ உங்களை கருதுகிறேன் قَوْمًا மக்களாக تَجْهَلُوْنَ‏ நீங்கள் அறியாத(வர்கள்)
46:23. அதற்கவர்: “(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது; மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்” என்று கூறினார்.
46:23. அதற்கவர், (அவர்களை நோக்கி ‘‘உங்களுக்கு வேதனை எப்பொழுது அனுப்பப்படும் என்ற) ஞானம் எல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. எவ்விஷயத்தை உங்களுக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேனோ, அதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். ஆயினும், நீங்கள் அறிவில்லாத மக்கள் என்று நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்.
46:23. அவர் கூறினார்: “இது பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எந்தத் தூதோடு அனுப்பப்பட்டிருக்கின்றேனோ அதனை மட்டுமே உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். ஆனால், அறியாமையில் மூழ்கியிருக்கும் சமுதாயமாக நான் உங்களைக் காண்கிறேன்.”
46:23. அ(தற்க)வர்கள் (“வேதனை எப்பொழுது என்ற) அறிவு எல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றது, அன்றியும், எதனைக்கொண்டு நான் அனுப்பப்பட்டேனோ அதனையே நான் உங்களுக்கு எத்திவைக்கிறேன், என்றாலும் உங்களை நான் அறிவில்லாத சமூகத்தவராகவே காணுகிறேன்” என்றார்.
46:24
46:24 فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِيَتِهِمْ ۙ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا‌ ؕ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ‌ۚ رِيْحٌ فِيْهَا عَذَابٌ اَ لِيْمٌۙ‏
فَلَمَّا رَاَوْهُ அவர்கள் அதை பார்த்த போது عَارِضًا அடர்த்தியான கார் மேகமாக مُّسْتَقْبِلَ முன்னோக்கி வரக்கூடிய(து) اَوْدِيَتِهِمْ ۙ தங்களது பள்ளத்தாக்கை قَالُوْا கூறினார்கள் هٰذَا இது عَارِضٌ அடர்த்தியான கார்மேகமாகும் مُّمْطِرُنَا‌ ؕ நமக்கு மழை பொழிவிக்கும் بَلْ هُوَ மாறாக இது مَا எதை اسْتَعْجَلْتُمْ நீங்கள் அவசரமாகத் தேடினீர்கள் بِهٖ ۚ அதை رِيْحٌ (இது) ஒரு காற்றாகும் فِيْهَا இதில் உள்ளது عَذَابٌ தண்டனை اَ لِيْمٌۙ‏ வலி தரக்கூடிய(து)
46:24. ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது:
46:24. பின்னர், (வேதனைக்கு அறிகுறியாக வந்த) மேகம் அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி வருவதை அவர்கள் காணவே, ‘‘இது எங்களுக்கு மழை பெய்ய வரும் மேகம்தான்'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களை நோக்கி) ‘‘அல்ல! இது நீங்கள் அவசரப்பட்ட வேதனைதான் என்றும், இது ஒரு காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது'' (என்றும் கூறப்பட்டது).
46:24. பின்னர், அந்த வேதனை தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவர்கள் கண்டபோது கூறலாயினர். “இது நமக்கு மழையைப் பொழிவிக்கக்கூடிய மேகமாகும்” “இல்லை! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது! இது புயல்காற்று; இதில் துன்புறுத்தும் வேதனை வந்து கொண்டிருக்கின்றது.
46:24. பின்னர், அதனை தம்முடைய பள்ளத் தாக்குகளை முன்னோக்கி வருகின்ற மேகமாக அவர்கள் கண்டபோது, இது எங்களுக்கு பெய்யவரும் மேகம்தான் என்று கூறினார்கள், (அதற்கு அவர்களிடம்) அப்படியல்ல! இது நீங்கள் எதற்காக அவரசரப்பட்டீர்களோ அதுதான், (இது ஒரு) கொடுங்காற்று, இதில் துன்புறுத்தும் வேதனை இருக்கின்றது” (என்றும்).
46:25
46:25 تُدَمِّرُ كُلَّ شَىْءٍ ۭ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا يُرٰٓى اِلَّا مَسٰكِنُهُمْ‌ؕ كَذٰلِكَ نَجْزِى الْقَوْمَ الْمُجْرِمِيْنَ‏
تُدَمِّرُ இது சின்னா பின்னமாக்கிவிடும் كُلَّ شَىْءٍ ۭ எல்லாவற்றையும் بِاَمْرِ கட்டளைப்படி رَبِّهَا தனது இறைவனின் فَاَصْبَحُوْا ஆகிவிட்டனர் لَا يُرٰٓى பார்க்க முடியாதபடி اِلَّا தவிர مَسٰكِنُهُمْ‌ؕ அவர்களின் வசிப்பிடங்களை كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி கொடுப்போம் الْقَوْمَ மக்களுக்கு الْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளான
46:25. “அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்” (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
46:25. ஆகவே, அது தன் இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் அழித்து விட்டது. அவர்கள் இருந்த வீடுகளைத் தவிர, (அனைவரும் அழிந்து ஒருவருமே) காணப்படாமல் ஆகிவிட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
46:25. தன் இறைவனின் கட்டளையால் ஒவ்வொன்றையும் இது அழித்துவிடும்.” இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அங்கு தென்படவில்லை. இவ்வாறே, குற்றம்புரியும் மக்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம்.
46:25. அது தன் இரட்சகனின் கட்டளைப்படி சகல பொருட்களையும் அழித்து விடும் (என்றும் ஹூத் கூறினார். அவர்கள் வசித்திருந்து அழிந்த) அவர்களுடைய குடியிருப்புகளைத் தவிர வேறென்றும் காணப்படாதாவாறு காலையில் அவர்கள் (அழிவிற்குள்) ஆகி விட்டனர், இவ்வாறே குற்றவாளிகளான கூட்டத்தினருக்கு கூலி கொடுக்கின்றோம்.
46:26
46:26 وَلَقَدْ مَكَّنّٰهُمْ فِيْمَاۤ اِنْ مَّكَّنّٰكُمْ فِيْهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَّاَبْصَارًا وَّاَفْـِٕدَةً  ۖ فَمَاۤ اَغْنٰى عَنْهُمْ سَمْعُهُمْ وَلَاۤ اَبْصَارُهُمْ وَلَاۤ اَفْـِٕدَتُهُمْ مِّنْ شَىْءٍ اِذْ كَانُوْا يَجْحَدُوْنَۙ بِاٰيٰتِ اللّٰهِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக مَكَّنّٰهُمْ அவர்களுக்கு நாம் வசதியளித்தோம் فِيْمَاۤ எதில் اِنْ مَّكَّنّٰكُمْ உங்களுக்கு நாம் வசதியளிக்கவில்லை(யோ) فِيْهِ அதில் وَجَعَلْنَا இன்னும் ஏற்படுத்தினோம் لَهُمْ அவர்களுக்கு سَمْعًا செவியை(யும்) وَّاَبْصَارًا பார்வைகளையும் وَّاَفْـِٕدَةً  ۖ உள்ளங்களையும் فَمَاۤ اَغْنٰى தடுக்கவில்லை عَنْهُمْ அவர்களை விட்டும் سَمْعُهُمْ அவர்களின் செவி(யும்) وَلَاۤ اَبْصَارُ பார்வைகளும் هُمْ அவர்களின் وَلَاۤ اَفْـِٕدَتُهُمْ அவர்களின் உள்ளங்களும் مِّنْ شَىْءٍ எதையும் اِذْ كَانُوْا அவர்கள் இருந்தபோது يَجْحَدُوْنَۙ மறுப்பவர்களாக بِاٰيٰتِ அத்தாட்சிகளை اللّٰهِ அல்லாஹ்வின் وَحَاقَ இன்னும் சூழ்ந்து கொண்டது بِهِمْ அவர்களை مَّا எது كَانُوْا இருந்தார்கள் بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகாசம் செய்பவர்களாக
46:26. உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.  
46:26. உங்களுக்குச் செய்து கொடுக்காத வசதிகளையெல்லாம் நிச்சயமாக நாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் நாம் அவர்களுக்குச் செவியையும் (கொடுத்தோம்.) கண்களையும் (கொடுத்தோம். சிந்திக்கக்கூடிய) உள்ளத்தையும் கொடுத்தோம். ஆயினும், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்ததன் காரணமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய உள்ளங்களும் அவர்களுக்கு ஒரு பயனுமளிக்கவில்லை. அவர்கள் பரிகாசம் செய்துகொண்டிருந்த தண்டனை அவர்களைச் சூழ்ந்துகொண்டது.
46:26. உங்களுக்கு நாம் தந்திடாத சிலவற்றை அவர்களுக்கு வழங்கி இருந்தோம். அவர்களுக்கு நாம், காதுகளையும், கண்களையும், இதயத்தையும் கொடுத்திருந்தோம். ஆனால், அவர்களின் காதுகளும், கண்களும் இதயமும் எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்கவில்லை. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தார்கள்! எதனை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது.
46:26. மேலும், உங்களுக்கு எதில் நாம் வசதி செய்து கொடுக்கவில்லையோ அதில் அவர்களுக்குத் திட்டமாக நாம் வசதி செய்து கொடுத்திருந்தோம், மேலும், அவர்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் நாம் ஆக்கினோம், ஆயினும் அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்தவர்களாக இருந்த சமயத்தில் அவர்களுடைய செவிப்புலனும், அவர்களுடைய பார்வைகளும், அவர்களுடைய இதயங்களும் அவர்களுக்கு யாதொரு பயனுமளிக்கவில்லை, எதனை பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்தும் கொண்டது.
46:27
46:27 وَلَقَدْ اَهْلَكْنَا مَا حَوْلَـكُمْ مِّنَ الْقُرٰى وَصَرَّفْنَا الْاٰيٰتِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَهْلَكْنَا நாம் அழித்தோம் مَا حَوْلَـكُمْ உங்களை சுற்றி உள்ளவற்றை مِّنَ الْقُرٰى ஊர்களில் وَصَرَّفْنَا இன்னும் நாம் விவரித்தோம் الْاٰيٰتِ அத்தாட்சிகளை لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ அவர்கள் திரும்புவதற்காக
46:27. அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்திருக்கிறோம், அவர்கள் (நேர்வழிக்கு) மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தோம்.
46:27. உங்களைச் சூழ்ந்து (வசித்து) இருந்த ஊரார்களையும் நிச்சயமாக நாம் அழித்து விட்டோம். அவர்கள் (பாவத்திலிருந்து விலகி நம்மிடம்) திரும்பி வரும் பொருட்டுப் பல அத்தாட்சிகளை (ஒன்றன் பின் ஒன்றாக) நாம் காண்பித்து வந்தோம். (எனினும், அவற்றை அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. ஆதலால், நாம் அவர்களை அழித்துவிட்டோம்.)
46:27. உங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல ஊர்களை நாம் அழித்திருக்கின்றோம். நாம் நம்முடைய வசனங்களை பல தடவை அருளி அவர்களுக்கு விதவிதமாக விளக்கினோம்; அவர்கள் திரும்பிவிடக்கூடும் என்பதற்காக!
46:27. ஊர்களில் உங்களைச் சுற்றியுள்ளவைகளையும் நிச்சயமாக நாம் அழித்து விட்டோம், அவர்கள் (பாவத்திலிருந்து) திரும்புவதற்காக அத்தாட்சிகளை நாம் திரும்பத் திரும்பக் காண்பித்தோம்.
46:28
46:28 فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ قُرْبَانًا اٰلِهَةً ؕ بَلْ ضَلُّوْا عَنْهُمْ‌ۚ وَذٰلِكَ اِفْكُهُمْ وَمَا كَانُوْا يَفْتَرُوْنَ‏
فَلَوْلَا نَصَرَهُمُ (அவர்கள்) இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? الَّذِيْنَ எவர்களை اتَّخَذُوْا எடுத்துக் கொண்டார்கள் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி قُرْبَانًا வழிபாட்டுக்காக اٰلِهَةً ؕ தெய்வங்களாக بَلْ மாறாக ضَلُّوْا அவர்கள் மறைந்து விட்டனர் عَنْهُمْ‌ۚ இவர்களை விட்டு وَذٰلِكَ இது اِفْكُهُمْ இவர்களின்பொய்(யும்) وَمَا இன்னும் எதை كَانُوْا இருந்தார்களோ يَفْتَرُوْنَ‏ இட்டுக் கட்டுபவர்களாக
46:28. (அல்லாஹ்விடம் தங்களை) நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர் - அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியவையும், இட்டுக் கட்டியவையுமாகும்.
46:28. (அல்லாஹ்வுக்குத்) தங்களைச் சமீபமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்கள் என்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவையேனும் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? ஆனால், அவையெல்லாம் இவர்களை விட்டும் மறைந்து விட்டன. இவையெல்லாம் அவர்கள் கற்பனை செய்துகொண்டு பொய்யாகக் கூறியவைதான் (என்று தெளிவாகி விட்டது).
46:28. அல்லாஹ்வை விடுத்து, இவர்கள் யாரை அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்கான காரணமாகக் கருதிக்கொண்டு தமது கடவுளராக ஏற்படுத்திக் கொண்டார்களோ அவர்கள் இவர்களுக்கு ஏன் உதவி செய்யவில்லை? உண்மையாதெனில், அவர்கள் இவர்களைவிட்டுக் காணாமல் போய்விட்டார்கள்! இதுவே, இவர்களின் பொய்யும் இவர்கள் இட்டுக்கட்டிய கொள்கையின் விளைவுமாகும்.
46:28. (தங்களை அல்லாஹ்வுக்கு) சமீபமாக்கி வைக்ககூடிய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே அத்தகையவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? இல்லை, அவர்களெல்லாம் இவர்களை விட்டு மறைந்து விட்டனர், இது, அவர்கள் பொய்யாகக் கூறியதும், அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தார்களே அதுவுமாகும் (என்று தெளிவாகிவிட்டது).
46:29
46:29 وَاِذْ صَرَفْنَاۤ اِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُوْنَ الْقُرْاٰنَ‌ۚ فَلَمَّا حَضَرُوْهُ قَالُوْۤا اَنْصِتُوْا‌ۚ فَلَمَّا قُضِىَ وَلَّوْا اِلٰى قَوْمِهِمْ مُّنْذِرِيْنَ‏
وَاِذْ صَرَفْنَاۤ اِلَيْكَ நாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக!/உம் பக்கம் نَفَرًا சில நபர்களை مِّنَ الْجِنِّ ஜின்களின் يَسْتَمِعُوْنَ செவிமடுக்கின்றனர் الْقُرْاٰنَ‌ۚ குர்ஆனை فَلَمَّا حَضَرُوْهُ அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது قَالُوْۤا கூறினார்கள் اَنْصِتُوْا‌ۚ வாய்மூடி இருங்கள்! فَلَمَّا قُضِىَ முடிக்கப்பட்ட போது وَلَّوْا திரும்பினார்கள் اِلٰى قَوْمِهِمْ தங்களது சமுதாயத்தினர் பக்கம் مُّنْذِرِيْنَ‏ எச்சரிப்பவர்களாக
46:29. மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, “மௌனமாக இருங்கள்” என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.
46:29. (நபியே!) இந்த குர்ஆனைக் கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) ‘‘நீங்கள் வாய் பொத்தி (இதைக் கேட்டுக்கொண்டு) இருங்கள்'' என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர்.
46:29. (பின்வரும் நிகழ்ச்சியும் நினைவுகூரத்தக்கதாகும்:) ஒருபோது நாம் ஜின்களின் ஒரு குழுவினரை உம் பக்கம் கொண்டு வந்தோம்; அவை குர்ஆனைச் செவியுற வேண்டும் என்பதற்காக. (நீர் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த) அந்த இடத்திற்கு அவை வந்து சேர்ந்தபோது தங்களுக்குள் பேசிக் கொண்டன: “மௌனமாய் இருங்கள்!” பின்னர் அது ஓதி முடிக்கப்பட்டபோது அந்த ஜின்கள் தம் கூட்டத்தாரிடம் எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாய்த் திரும்பிச் சென்றனர்;
46:29. (நபியே!) ஜின்களில் சிலரை இந்தக் குர் ஆனை அவர்கள் செவியேற்பதற்காக உம்மிடம் நாம் திருப்பியதையும் (நினைவு கூர்வீராக!) பின்னர் அவர்கள் அங்கு வந்தடைந்து (சிலர் சிலரிடம்) “நீங்கள் வாய் பொத்தி இருங்கள்” என்று கூறினார்கள், பிறகு அது முடிக்கப்பட்டபோது, தங்கள் கூட்டத்தாரிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகத் திரும்பினர்.
46:30
46:30 قَالُوْا يٰقَوْمَنَاۤ اِنَّا سَمِعْنَا كِتٰبًا اُنْزِلَ مِنْۢ بَعْدِ مُوْسٰى مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ يَهْدِىْۤ اِلَى الْحَقِّ وَاِلٰى طَرِيْقٍ مُّسْتَقِيْمٍ‏
قَالُوْا கூறினார்கள் يٰقَوْمَنَاۤ எங்கள் சமுதாயமே! اِنَّا سَمِعْنَا நிச்சயமாக நாங்கள் செவியுற்றோம் كِتٰبًا ஒரு வேதத்தை اُنْزِلَ இறக்கப்பட்ட(து) مِنْۢ بَعْدِ பின்னர் مُوْسٰى மூஸாவிற்கு مُصَدِّقًا உண்மைப்படுத்தக்கூடிய لِّمَا بَيْنَ يَدَيْهِ தனக்கு முந்தியவற்றை يَهْدِىْۤ அது வழி காட்டுகிறது اِلَى الْحَقِّ உண்மைக்கு(ம்) وَاِلٰى طَرِيْقٍ பாதைக்கும் مُّسْتَقِيْمٍ‏ மிக நேரான
46:30. (ஜின்கள்) கூறினார்கள்: “எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) “வழி” காட்டுகின்றது.
46:30. (அவர்களை நோக்கி) ‘‘எங்கள் இனத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கிறது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகிறது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகிறது.
46:30. சென்று கூறினர்: “எங்களின் சமூகத்தாரே! நாங்கள் மூஸாவுக்குப் பின் இறக்கியருளப்பட்டிருக்கும் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது தனக்கு முன்பு வந்திருந்த வேதங்களை மெய்ப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. சத்தியத்தின் பக்கமும் நேரிய மார்க்கத்தின் பக்கமும் அது வழிகாட்டுகின்றது.
46:30. (அவர்களிடம்,) “எங்களுடைய கூட்டத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செயவியுற்றோம், (அது) தனக்கு முன்னுள்ளதை (வேதங்களை) உண்மைப்படுத்துகின்ற நிலையில் மூஸாவுக்குப் பின் (அது) இறக்கப்பட்டுள்ளது, அது சத்தியத்தின் (உண்மை மார்க்கத்தின்) பாலும், நேரான வழியின் பாலும் வழி காட்டுகிறது” என்று கூறினார்கள்.
46:31
46:31 يٰقَوْمَنَاۤ اَجِيْبُوْا دَاعِىَ اللّٰهِ وَاٰمِنُوْا بِهٖ يَغْفِرْ لَـكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُجِرْكُمْ مِّنْ عَذَابٍ اَ لِيْمٍ‏
يٰقَوْمَنَاۤ எங்கள் சமுதாயமே! اَجِيْبُوْا பதில் தாருங்கள்! دَاعِىَ அழைப்பாளருக்கு اللّٰهِ அல்லாஹ்வின் وَاٰمِنُوْا இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள் بِهٖ அவரை يَغْفِرْ அவன் மன்னிப்பான் لَـكُمْ உங்களுக்கு مِّنْ ذُنُوْبِكُمْ உங்கள் பாவங்களை وَيُجِرْكُمْ இன்னும் உங்களை பாதுகாப்பான் مِّنْ عَذَابٍ தண்டனையிலிருந்து اَ لِيْمٍ‏ வலி தரக்கூடிய(து)
46:31. “எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.
46:31. எங்கள் இனத்தார்களே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான்.
46:31. எங்கள் சமூகத்தாரே! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். மேலும், அவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.”
46:31. “எங்களுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு நீங்கள் பதில் கூறுங்கள், மேலும், அவரை விசுவாசியுங்கள், (அதன் பொருட்டு) உங்களுடைய பாவங்களை உங்களுக்கு அவன் (அல்லாஹ்) மன்னித்து விடுவான், துன்புறுத்தும் வேதனையிலிருந்தும் உங்களை அவன் காத்துக்கொள்வான்” (என்றும்).
46:32
46:32 وَمَنْ لَّا يُجِبْ دَاعِىَ اللّٰهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِى الْاَرْضِ وَلَيْسَ لَهٗ مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءُ ‌ؕ اُولٰٓٮِٕكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
وَمَنْ எவர் لَّا يُجِبْ பதில் தரவில்லையோ دَاعِىَ அழைப்பாளருக்கு اللّٰهِ அல்லாஹ்வின் فَلَيْسَ بِمُعْجِزٍ அவர் தப்பித்துவிட மாட்டார் فِى الْاَرْضِ பூமியில் وَلَيْسَ இல்லை لَهٗ அவருக்கு مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اَوْلِيَآءُ ؕ பாதுகாவலர்கள் اُولٰٓٮِٕكَ இப்படிப்பட்டவர்கள் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் இருக்கின்றனர் مُّبِيْنٍ‏ மிகத் தெளிவான
46:32. “ஆனால், எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்க வில்லையோ, அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்க முடியாது; அவனையன்றி அவரை பாதுகாப்போர் எவருமில்லை, அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.”
46:32. எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையில் இருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடியபோதிலும் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. பாதுகாப்பவர் அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இவர்கள் பகிரங்கமான வழி கேட்டில்தான் இருப்பர்'' என்றார்கள்.
46:32. இன்னும், யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருடைய சொல்லை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வை) தோல்வியுறச் செய்திட எந்த வலிமையும் பெற்றிருக்கவில்லை. அல்லாஹ்விடமிருந்து அவரைப் பாதுகாக்கக் கூடிய எந்த ஆதரவாளர்களும் அவருக்கு இல்லை. இப்படிப்பட்டவர்கள் வெளிப்படையான வழிகேட்டில் கிடப்பவர்களாவர்.
46:32. “எவர் அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதில் கூறவில்லையோ அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்கி விடுபவரல்லர், (அல்லாஹ்வாகிய) அவனையன்றி, அவருக்கு உதவியாளர்களுமில்லை, அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள்” (என்றும் ஜின்கள் கூறினார்கள்).
46:33
46:33 اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَمْ يَعْىَ بِخَلْقِهِنَّ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ يُّحْیَِۧ الْمَوْتٰى ‌ؕ بَلٰٓى اِنَّهٗ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் கவனிக்கவில்லையா? اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் الَّذِىْ خَلَقَ படைத்தவன் السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضَ பூமியையும் وَلَمْ يَعْىَ கலைத்து விடாதவனுமாகிய بِخَلْقِهِنَّ அவற்றைபடைத்ததால் بِقٰدِرٍ ஆற்றலுடையவன் (என்பதை) عَلٰۤی اَنْ يُّحْیَِۧ உயிர்ப்பிப்பதற்கு الْمَوْتٰى ؕ இறந்தவர்களை بَلٰٓى ஏன் இல்லை اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرٌ‏‏ பேராற்றலுடையவன்
46:33. வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
46:33. வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? ஆம், நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன்.
46:33. இந்த வானங்களையும் பூமியையும் படைத்தவனும் அவற்றைப் படைப்பதனால் களைப்புறாதவனுமாகிய அல்லாஹ், இறந்தவர்களை உயிர்ப்பித்து எழுப்புவதற்கு திண்ணமாக ஆற்றலுள்ளவன் என்பது இவர்களுக்குப் புலப்படவில்லையா? ஆம்! புலப்படுகிறது. திண்ணமாக, அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் கொண்டவனாயிருக்கின்றான்.
46:33. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்து, இன்னும், அவைகளைப் படைத்ததால் சோர்வடையவில்லையே அத்தகைய அல்லாஹ் மரணித்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆம்! நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
46:34
46:34 وَيَوْمَ يُعْرَضُ الَّذِيْنَ كَفَرُوْا عَلَى النَّارِ ؕ اَلَيْسَ هٰذَا بِالْحَقِّ‌ ؕ قَالُوْا بَلٰى وَرَبِّنَا‌ ؕ قَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْـتُمْ تَكْفُرُوْنَ‏
وَيَوْمَ நாளில் يُعْرَضُ கொண்டுவரப்படும் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் عَلَى النَّارِ ؕ நரகத்தின் முன் اَلَيْسَ இல்லையா? هٰذَا இது بِالْحَقِّ‌ ؕ உண்மையாக قَالُوْا அவர்கள் கூறுவார்கள் بَلٰى ஏன் இல்லை? وَرَبِّنَا‌ ؕ எங்கள் இறைவன் மீது சத்தியமாக قَالَ கூறுவான் فَذُوْقُوا நீங்கள் சுவையுங்கள்! الْعَذَابَ இந்த வேதனையை بِمَا كُنْـتُمْ நீங்கள் இருந்த காரணத்தால் تَكْفُرُوْنَ‏ நிராகரிப்பவர்களாக
46:34. மேலும், நிராகரிப்பவர்கள் (நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்) “இது உண்மையல்லவா?” (என்று கேட்கப்படும்;) அதற்கவர்கள், “எங்கள் இறைவன் மீது சத்தியமாக, உண்மைதான்” என்று கூறுவார்கள். “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்” என்று அவன் கூறுவான்.
46:34. நிராகரிப்பவர்களை நரகத்தின்முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களை நோக்கி,) ‘‘இது உண்மையல்லவா? (என்று கேட்கப்படும்.) அதற்கு அவர்கள் ஏனில்லை! ‘‘எங்கள் இறைவன் மீது சத்தியமாக! உண்மைதான்'' என்று கூறுவார்கள். (அதற்கவர்களை நோக்கி) ‘‘நீங்கள் இதை நிராகரித்ததன் காரணமாக இதன் வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' என்று கூறுவான்.
46:34. மேலும், இந்நிராகரிப்பாளர்கள் நரகத்தின் முன்னால் கொண்டு வரப்படும் நாளில், அவர்களிடம் வினவப்படும்: “இது சத்தியம் இல்லையா?” அவர்கள் கூறுவார்கள்: “ஆம்! எங்கள் இறைவன்மீது ஆணையாக! இது உண்மையில், சத்தியம்தான்.” அல்லாஹ் கூறுவான்: “சரி! நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்குப் பதிலாக இப்போது வேதனையைச் சுவையுங்கள்.”
46:34. மேலும், நிராகரிப்போரை நரகத்தின் முன் கொண்டு வரப்படும் நாளில் (அவர்களிடம்,) “இது உண்மையானதாக இல்லையா?” (என்று கேட்கப்படும்) அ(தற்க)வர்கள் “எங்களிரட்சகன் மீது சத்தியமாக! ஆம், (உண்மைதான்)” என்று கூறுவார்கள். (அதற்கவர்களிடம்) ”நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (இதன்) வேதனையை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள்” என்று (அல்லாஹ்) கூறுவான்.
46:35
46:35 فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُوا الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْ‌ؕ كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَ مَا يُوْعَدُوْنَۙ لَمْ يَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنْ نَّهَارٍ ؕ بَلٰغٌ ۚ فَهَلْ يُهْلَكُ اِلَّا الْقَوْمُ الْفٰسِقُوْنَ‏
فَاصْبِرْ பொறுமை காப்பீராக! كَمَا صَبَرَ பொறுத்தது போன்று اُولُوا الْعَزْمِ மிகவும் வீரமிக்கவர்கள் مِنَ الرُّسُلِ தூதர்களில் وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْ‌ؕ அவர்களுக்காக அவசரமாகக் கேட்காதீர்! كَاَنَّهُمْ அவர்களுக்குத் தோன்றும் يَوْمَ நாளில் يَرَوْنَ அவர்கள் பார்க்கின்ற(னர்) مَا يُوْعَدُوْنَۙ அவர்கள் எச்சரிக்கப்பட்டதை لَمْ يَلْبَثُوْۤا அவர்கள் தங்கவில்லை اِلَّا سَاعَةً சில மணிநேரம் தவிர مِّنْ نَّهَارٍ ؕ பகலின் بَلٰغٌ ۚ இது எடுத்து சொல்லப்படும் செய்தியாகும் فَهَلْ يُهْلَكُ அழிக்கப்படுவார்களா? اِلَّا الْقَوْمُ மக்களைத் தவிர الْفٰسِقُوْنَ‏ பாவிகளான
46:35. “(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேண்டியதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?
46:35. (நபியே!) நம் தூதர்களிலுள்ள உறுதியுடைய வீரர்கள் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபடியே நீரும் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பீராக. அவர்களுக்கு (வேதனையை) நீர் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை அவர்கள் காணும் நாளில் (இப்புவியில்) பகலின் ஒரு நாழிகையே தவிர (அதற்கு அதிகமாக)த் தங்கியிருக்கவில்லை என்று அவர்கள் எண்ணுவார்கள். (இதை) அவர்களுக்கு (நீர்) அறிவிக்க வேண்டும். ஆகவே, பாவம் செய்த மக்களைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா? (இல்லவே இல்லை.)
46:35. எனவே (நபியே!) நீரும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக; மனஉறுதிமிக்க இறைத்தூதர்கள் கடைப்பிடித்த பொறுமையைப் போன்று! இவர்களின் விவகாரத்தில் அவசரப்படாதீர். இவர்களுக்கு எது பற்றி அச்சுறுத்தப்படுகின்றதோ அதை இவர்கள் கண்கூடாகப் பார்க்கும் நாளில் இவர்களுக்குப் புரிந்துவிடும்; ஒரு நாழிகையே அன்றி அதிகமாக உலகில் அவர்கள் தங்கியிருக்கவில்லை என்பது! செய்தி எடுத்துச்சொல்லப்பட்டு விட்டது; கீழ்ப்படியாத மக்களைத் தவிர வேறெவரேனும் இனி அழிவுக்குள்ளாக்கப்படுவார்களா, என்ன!
46:35. (நபியே! நம்முடைய) தூதர்களிலுள்ள உறுதிமிக்கவர்கள், (கஷ்டங்களை) பொறுத்துக் கொண்டிருந்த பிரகாரமே, நீரும் பொறுமையாக இருப்பீராக! (நிராகரித்த) அவர்களுக்காக (வேதனையை) நீர் அவசரப்பட வேண்டாம், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை அவர்கள் காணும் நாளில், (இப்புவியில்) ஒரு பகலில் ஒரு நாழிகையேயன்றி (அதிகமாகத்) தாம் தங்காதவர்களைப் போன்றிருப்பார்கள் (இது உம்மால் அவர்களுக்கு) எத்திவைக்கப்பட வேண்டியதாகும், ஆகவே, பாவம் செய்த கூட்டத்தினரைத் தவிர (மற்றெவரும்) அழிக்கப்படுவார்களா?