67. ஸூரத்துல் முல்க் (ஆட்சி)
மக்கீ, வசனங்கள்: 30

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
67:1
67:1 تَبٰرَكَ الَّذِىْ بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرُۙ‏
تَبٰرَكَ அருள் வளமிக்கவன் الَّذِىْ எவன் بِيَدِهِ அவனுடைய கரத்தில் الْمُلْكُ ஆட்சி وَهُوَ அவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்கள் மீதும் قَدِيْرُۙ‏ பேராற்றலுடையவன்
67:1. எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
67:1. (மனிதர்களே! வானம் பூமி உடைய) ஆட்சி எல்லாம் எவன் கையில் இருக்கிறதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவற்றைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.
67:1. யாருடைய கைவசத்தில் (பேரண்டத்தின்) ஆட்சியதிகாரம் உள்ளதோ அவன் உயர்வும் கண்ணியமும் மிக்கவனாவான். மேலும், அவன் அனைத்துப் பொருளின் மீதும் ஆற்றல் பெற்றவனாக உள்ளான்.
67:1. எவனது கரத்தில் (இம்மை, மறுமையில் வானம் மற்றும் பூமியின்) ஆட்சி இருக்கின்றதோ, அவன் மிக்க பாக்கியமுடையவன், இன்னும், அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
67:2
67:2 اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏
اۨلَّذِىْ எவன் خَلَقَ படைத்தான் الْمَوْتَ மரணத்தை(யும்) وَالْحَيٰوةَ வாழ்க்கையையும் لِيَبْلُوَكُمْ அவன் உங்களை சோதிப்பதற்காக اَيُّكُمْ உங்களில் யார் اَحْسَنُ மிக அழகானவர் عَمَلًا ؕ செயலால் وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْغَفُوْرُۙ‏ மகா மன்னிப்பாளன்
67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
67:2. உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன் ஆவான்.
67:2. அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்.
67:2. அவன் எத்தகையவனென்றால், உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும், ஜீவியத்தையும் அவன் படைத்திருக்கின்றான், அவனே (யாவற்றையும்) மிகைத்தவன், மிக்க மன்னிக்கிறவன்.
67:3
67:3 الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا‌ ؕ مَا تَرٰى فِىْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ‌ ؕ فَارْجِعِ الْبَصَرَۙ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ‏
الَّذِىْ எவன் خَلَقَ படைத்தான் سَبْعَ سَمٰوٰتٍ ஏழு வானங்களை طِبَاقًا‌ ؕ அடுக்கடுக்காக مَا تَرٰى நீர் பார்ப்பதில்லை فِىْ خَلْقِ படைப்பில் الرَّحْمٰنِ பேரருளாளனின் مِنْ تَفٰوُتٍ‌ ؕ எவ்வித ஏற்றத் தாழ்வையும் فَارْجِعِ நீர் மீண்டும் திருப்புவீராக! الْبَصَرَۙ பார்வையை هَلْ تَرٰى நீர் பார்க்கிறீரா? مِنْ فُطُوْرٍ‏ ஏதாவது பிளவுகளை
67:3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர்; பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?
67:3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தவன். (மனிதனே!) அந்த ரஹ்மானுடைய படைப்பில் நீ ஒரு ஒழுங்கீனத்தையும் காணமாட்டாய். மற்றொரு முறை (அதைக் கவனித்துப்)பார். அதில் ஒரு பிளவை நீ காண்கிறாயா?
67:3. அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். கருணைமிக்க இறைவனின் படைப்பில் எந்த முரண்பாட்டையும் நீர் காணமாட்டீர்! பிறகு, திரும்பவும் பாரீர்! எங்காவது பழுதுகளேதும் உமக்குத் தென்படுகின்றதா?
67:3. அவன் எத்தகையவனென்றால், ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான், (மனிதனே!) அர்ரஹ்மானுடைய படைப்பில் நீ யாதொரு முரண்பாட்டையும் காணமாட்டாய், ஆகவே, பார்வையை மீட்டிப்பார், (அதில்) பிளவுகளை நீ காண்கிறாயா?
67:4
67:4 ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ اِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِيْرٌ‏
ثُمَّ பிறகு ارْجِعِ மீண்டும் திருப்புவீராக! الْبَصَرَ பார்வையை كَرَّتَيْنِ இரு முறை يَنْقَلِبْ திரும்பிவிடும் اِلَيْكَ உம் பக்கம் الْبَصَرُ அந்தப் பார்வை خَاسِئًا இழிவடைந்ததாக وَّهُوَ இன்னும் அது حَسِيْرٌ‏ கலைத்துவிடும்
67:4. பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார்; உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்.
67:4. (பின்னும்) மேலும் இரு முறைப் பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்த போதிலும் ஒரு குறையையும் காண முடியாது.) உன் பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும்.
67:4. மீண்டும் மீண்டும் பார்வையைச் செலுத்துவீர்! உமது பார்வை தளர்வுற்று, தோல்வியடைந்த நிலையில் திரும்பும்!
67:4. பின்னும் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், (எக்குறையையும் காணாது) அப்பார்வை இழிவடைந்ததாக அது களைப்புற்று உன்னிடம் திரும்பிவரும்.
67:5
67:5 وَلَـقَدْ زَيَّـنَّا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّيٰطِيْنِ‌ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيْرِ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக زَيَّـنَّا அலங்கரித்தோம் السَّمَآءَ வானத்தை الدُّنْيَا கீழ் بِمَصَابِيْحَ விளக்குகளால் وَجَعَلْنٰهَا இன்னும் அவற்றை ஏற்படுத்தினோம் رُجُوْمًا எறிவதற்காக لِّلشَّيٰطِيْنِ‌ ஷைத்தான்களை وَاَعْتَدْنَا இன்னும் தயார் செய்துள்ளோம் لَهُمْ அவர்களுக்கு عَذَابَ السَّعِيْرِ‏ கொழுந்து விட்டெரியும் நரகநெருப்பின் வேதனையை
67:5. அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம்.
67:5. நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ளவர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். மேலும், அவற்றை ஷைத்தான்களுக்கு ஓர் எறிகல்லாகவும் அமைத்தோம். இன்னும் அவர்களுக்கு நரக வேதனையையும் நாம் தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
67:5. நாம் உங்களுக்கு அருகிலிருக்கும் வானத்தை மாபெரும் விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றோம். மேலும், அவற்றை நாம் ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்துவிட் டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
67:5. மேலும், நிச்சயமாக நாம் (பூமிக்குச்) சமீபமான வானத்தை (நட்சத்திரங்களால் ஆன) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம், இன்னும், அவைகளை ஷைத்தான்களுக்கு எறியப்படுபவைகளாகவும் நாம் அமைத்தோம், அவர்களுக்கு நரக நெருப்பின் வேதனையையும் நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
67:6
67:6 وَلِلَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏
وَلِلَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்களுக்கு بِرَبِّهِمْ தங்கள் இறைவனை عَذَابُ தண்டனை جَهَنَّمَ‌ؕ நரகத்தின் وَبِئْسَ இன்னும் மிகக் கெட்டது الْمَصِيْرُ‏ மீளுமிடங்களில்
67:6. இன்னும், எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனை உண்டு; (அது) மிகக் கெட்ட மீளுமிடமாகும்.
67:6. இன்னும் எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு நரக வேதனையுண்டு. அது மகாகெட்ட செல்லுமிடமாகும்.
67:6. எவர்கள் தங்களுடைய அதிபதியை நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக வேதனை இருக்கின்றது. அது மிகவும் கேடுகெட்ட இருப்பிடமாகும்.
67:6. இன்னும், தங்கள் இரட்சகனை நிராகரிக்கின்றார்களே அத்தகையோருக்கு நரக வேதனையுண்டு, அது திரும்பிச் சேருமிடத்தில் மிகவும் கெட்டது.
67:7
67:7 اِذَاۤ اُلْقُوْا فِيْهَا سَمِعُوْا لَهَا شَهِيْقًا وَّهِىَ تَفُوْرُۙ‏
اِذَاۤ اُلْقُوْا அவர்கள் எறியப்பட்டால் فِيْهَا அதில் سَمِعُوْا செவியுறுவார்கள் لَهَا அதில் شَهِيْقًا கடுமையான சப்தத்தை وَّهِىَ இன்னும் அது تَفُوْرُۙ‏ கொதிக்கும்
67:7. அதில் அவர்கள் போடப்படுவார்களாயின், அது கொதிக்கும் நிலை (கழுதையின் பெருங்குரலைப் போல்) அருவருப்பான சப்தம் உண்டாவதை அவர்கள் கேட்பார்கள்.
67:7. அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் கொதி சப்தத்தைக் கேட்பார்கள்.
67:7. அதில் அவர்கள் வீசியெறியப்படும்போது அதனுடைய கடுமையான கர்ஜனையைக் கேட்பார்கள். அது கொதித்துக் கொண்டிருக்கும்
67:7. அதில் அவர்கள் தூக்கிப்போடப்பட்டால், அதுவோ கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் (கழுதையின் சப்தத்தைப்போல்) அருவருப்பான சப்தம் அதற்கிருப்பதை அவர்கள் கேட்பார்கள்.
67:8
67:8 تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ‌ؕ كُلَّمَاۤ اُلْقِىَ فِيْهَا فَوْجٌ سَاَلَهُمْ خَزَنَـتُهَاۤ اَلَمْ يَاْتِكُمْ نَذِيْرٌ‏
تَكَادُ அது நெருங்கிவிடும் تَمَيَّزُ தெரித்துவிட مِنَ الْغَيْظِ‌ؕ கோபத்தால் كُلَّمَاۤ اُلْقِىَ எறியப்படும் போதெல்லாம் فِيْهَا அதில் فَوْجٌ ஒரு கூட்டம் سَاَلَهُمْ அவர்களிடம் கேட்பார்(கள்) خَزَنَـتُهَاۤ அதன் காவலாளிகள் اَلَمْ يَاْتِكُمْ உங்களிடம் வரவில்லையா? نَذِيْرٌ‏ ஓர் எச்சரிப்பாளர்
67:8. அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது; அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், “அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.
67:8. அது கோபத்தால் வெடித்து விடுவதைப்போல் குமுறிக் கொண்டிருக்கும். அதில் ஒரு கூட்டத்தினர் எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலாளர் அவர்களை நோக்கி (‘‘இவ்வேதனையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் உங்களிடம் வரவில்லையா'' என்று கேட்பார்கள்.
67:8. கடுமையான கோபத்தால் வெடித்துவிடுவது போல் இருக்கும். ஒவ்வொரு குழுக்களும் அதில் தள்ளப்படும்போது அதன் பாதுகாவலர்கள் அவர்களிடம் கேட்பார்கள், “எச்சரிக்கை செய்பவர் எவரும் உங்களிடம் வரவில்லையா?” என்று!
67:8. நிராகரிப்போரின் மீதுள்ள) கடுங்கோபத்தால் வெடித்துவிட, அது சமீபித்துவிடும், அதில் ஒரு கூட்டத்தினரைப் போடப்படும் பொழுதெல்லாம் அதன் காவலர்கள் அவர்களிடம், “(இது பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர் உங்களிடம் வரவில்லையா?” என்று கேட்பார்கள்.
67:9
67:9 قَالُوْا بَلٰى قَدْ جَآءَنَا نَذِيْرٌ  ۙ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَىْءٍ ۖۚ اِنْ اَنْتُمْ اِلَّا فِىْ ضَلٰلٍ كَبِيْرٍ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் بَلٰى ஏன் வரவில்லை قَدْ திட்டமாக جَآءَنَا எங்களிடம் வந்தார் نَذِيْرٌ  ۙ எச்சரிப்பாளர் فَكَذَّبْنَا ஆனால் பொய்ப்பித்தோம் وَقُلْنَا இன்னும் கூறினோம் مَا نَزَّلَ இறக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் مِنْ شَىْءٍ ۖۚ எதையும் اِنْ اَنْتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர فِىْ ضَلٰلٍ வழிகேட்டிலேயே كَبِيْرٍ‏ பெரிய
67:9. அதற்கவர்கள் கூறுவார்கள்: “ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, “அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.”
67:9. அதற்கவர்கள் ‘‘மெய்தான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். எனினும், நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் (உங்கள் மீது) எதையும் இறக்கிவைக்கவே இல்லை. நீங்கள் பெரும் வழிகேட்டிலே தவிர இருக்கவில்லை என்று (அவர்களை நோக்கி) நாங்கள் கூறினோம்'' என்று கூறுவார்கள்.
67:9. அதற்கு அவர்கள் பதில் கூறுவார்கள்: “ஆம்! எச்சரிக்கை செய்பவர் எங்களிடம் வந்திருந்தார். ஆனால் நாங்கள் அவரைப் பொய்யரெனத் தூற்றினோம். அல்லாஹ் எதனையும் இறக்கி வைக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் வீழ்ந்து கிடக்கின்றீர்கள் என்றும் கூறினோம்.”
67:9. அ(தற்க)வர்கள் “மெய்தான்! அச்சமூட்டி எச்சரிக்கின்றவர் நிச்சயமாக எங்களிடம் வந்தார், பின்னர் நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் எதையும் (உம்மீது) இறக்கி வைக்கவில்லை, நீங்கள் பெரும்வழிகேட்டிலல்லாமல் (வேறு) இல்லை என்று நாங்கள் கூறினோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
67:10
67:10 وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِىْۤ اَصْحٰبِ السَّعِيْرِ‏
وَقَالُوْا இன்னும் கூறுவார்கள் لَوْ كُنَّا நாங்கள் இருந்தால் نَسْمَعُ செவி ஏற்பவர்களாக اَوْ அல்லது نَعْقِلُ சிந்தித்து புரிபவர்களாக مَا كُنَّا ஆகி இருக்க மாட்டோம் فِىْۤ اَصْحٰبِ السَّعِيْرِ‏ நரகவாசிகளில்
67:10. இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.”
67:10. இன்னும் ‘‘(அத்தூதர்களின் வார்த்தைகளுக்கு) நாங்கள் செவிசாய்த்து அவற்றை நாங்கள் சிந்தித்திருந்தால், நாங்கள் நரகவாசிகளில் ஆகியிருக்கவே மாட்டோம்'' என்று கூறுவார்கள்.
67:10. மேலும் அவர்கள் கூறுவார்கள்: “அந்தோ! நாங்கள் செவிதாழ்த்திக் கேட்பவர்களாய் அல்லது புரிந்துகொள்பவர்களாய் இருந்திருந்தால், (இன்று) நாங்கள் கொழுந்து விட்டெரியும் இந்த நெருப்பின் தண்டனைக்குரியவர்களோடு சேர்ந்திருக்க மாட்டோம்.”
67:10. (அவர் உபதேசத்தை) “நாங்கள் செவியுற்றோ, அல்லது (அவைகளை) நாங்கள் விளங்கியோ இருந்திருந்தால் நாங்கள் நரகவாசிகளில் ஆகியிருக்கமாட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
67:11
67:11 فَاعْتَرَفُوْا بِذَنْۢبِهِمْ‌ۚ فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِيْرِ‏
فَاعْتَرَفُوْا ஒப்புக் கொள்வார்கள் بِذَنْۢبِهِمْ‌ۚ தங்கள் குற்றத்தை فَسُحْقًا ஆகவே கேடுதான் لِّاَصْحٰبِ السَّعِيْرِ‏ நரகவாசிகளுக்கு
67:11. (இவ்வாறு) தங்கள் பாவங்களை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் - எனவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
67:11. மேலும் தங்கள் பாவத்தை ஒப்புக் கொள்வார்கள். ஆகவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான்.
67:11. இவ்வாறு அவர்களே தங்களின் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள். சாபம் உண்டாகட்டும், இந்த நரகவாசிகள் மீது!
67:11. எனவே, (இவ்வாறு கூறுவதன் மூலம்) அவர்கள் தங்கள் பாவத்தை ஒப்புக்கொண்டு விடுகின்றனர், ஆகவே, நரகவாசிகளுக்கு (அல்லாஹ்வின் அருள்) தூரமே!
67:12
67:12 اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يَخْشَوْنَ பயப்படுகின்றார்கள் رَبَّهُمْ தங்கள் இறைவனை بِالْغَيْبِ மறைவில் لَهُمْ அவர்களுக்கு உண்டு مَّغْفِرَةٌ மன்னிப்பு(ம்) وَّاَجْرٌ كَبِيْرٌ‏ பெரிய கூலியும்
67:12. நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனை(ப் பார்க்காதிருந்தும்) அந்தரங்கத்தில் அவனுக்கு அஞ்சுகிறார்களோ, அவர்களுக்கு மன்னிப்புமுண்டு, பெரிய நற்கூலியும் உண்டு.
67:12. நிச்சயமாக எவர்கள் மறைவான சமயத்திலும், தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு.
67:12. பார்க்காமலேயே தங்களின் அதிபதிக்கு எவர்கள் அஞ்சுகின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாக மன்னிப்பும் பெரும் கூலியும் உண்டு.
67:12. நிச்சயமாக (தங்கள் இரட்சகனைப் பார்க்காதிருந்தும்) மறைவில் தங்கள் இரட்சகனைப் பயப்படுகிறார்களே அத்தகையோர் - அவர்களுக்கு மன்னிப்பும், பெருங்கூலியுமுண்டு.
67:13
67:13 وَاَسِرُّوْا قَوْلَـكُمْ اَوِ اجْهَرُوْا بِهٖؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
وَاَسِرُّوْا இரகசியமாகப் பேசுங்கள் قَوْلَـكُمْ உங்கள் பேச்சை اَوِ اجْهَرُوْا அல்லது உரக்கப் பேசுங்கள் بِهٖؕ அதை اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளதை
67:13. மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள்; அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் - நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்.
67:13. (மனிதர்களே!) நீங்கள் உங்கள் வார்த்தைகளை இரகசியமாகக் கூறுங்கள் அல்லது பகிரங்கமாகவே கூறுங்கள். (எவ்விதம் கூறியபோதிலும், இறைவன் அதை நன்கறிவான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிபவன் ஆவான்.
67:13. மேலும், நீங்கள் இரகசியமாகப் பேசினாலும் சரி; வெளிப்படையாகப் பேசினாலும் சரி! (அல்லாஹ்வைப் பொறுத்தமட்டில் இரண்டும் சமம்தான்!) திண்ணமாக அவன் இதயங்களில் இருப்பவற்றையும் நன்கறிகிறான்.
67:13. மேலும், (மனிதர்களே!) நீங்கள் உங்கள் கூற்றை இரகசியாக ஆக்குங்கள், அல்லது அதை (சப்தமிட்டு) பகிரங்கமாக ஆக்குங்கள், (யாவற்றையும் அல்லாஹ் நன்கறிந்து கொள்வான், ஏனென்றால்,) நிச்சயமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கறியக்கூடியவன்.
67:14
67:14 اَلَا يَعْلَمُ مَنْ خَلَقَؕ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ‏
اَلَا يَعْلَمُ அவன் அறிய மாட்டானா? مَنْ எவன் خَلَقَؕ படைத்தான் وَهُوَ அவன்தான் اللَّطِيْفُ நுட்பமானவன் الْخَبِيْرُ‏ ஆழ்ந்தறிபவன்
67:14. (அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்றையும் நன்கு தெரிந்தவன்.  
67:14. (அனைவரையும்) படைத்தவன் (அவற்றில் உள்ளவற்றை) அறிய மாட்டானா? அவனோ அருளுடையவனும் (அனைத்தையும்) வெகு நுட்பமாக அறிந்தவனும் ஆவான்.
67:14. எவன் படைத்து இருக்கின்றானோ அவன் அறியமாட்டானா என்ன? அவன் நுணுக்கமானவனாகவும் நன்கு அறிந்தவனாகவும் இருக்கின்றான்.
67:14. (யாவையும்) படைத்தவன், அவனோ நுட்பமான (அறிவுடைய)வனாக, யாவையும் நன்குணர்பவனாக இருக்க (நெஞ்சங்களில் உள்ளவற்றை) அவன் அறியமாட்டானா?
67:15
67:15 هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِىْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ‌ؕ وَاِلَيْهِ النُّشُوْرُ‏
هُوَ الَّذِىْ அவன்தான் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்கு الْاَرْضَ பூமியை ذَلُوْلًا இலகுவாக فَامْشُوْا ஆகவே செல்லுங்கள் فِىْ مَنَاكِبِهَا அதன் பல பகுதிகளில் وَكُلُوْا இன்னும் உண்ணுங்கள் مِنْ رِّزْقِهٖ‌ؕ அவனுடைய உணவில் இருந்து وَاِلَيْهِ அவன் பக்கம்தான் النُّشُوْرُ‏ எழுப்பப்படுதல்
67:15. அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.
67:15. அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவற்றைப் புசித்துக் கொண்டிருங்கள். (மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது.
67:15. அவனே பூமியை உங்களுக்கு வசப்பட்டதாக அமைத்து வைத்திருக்கின்றான். அதன் மார்பின் மீது நடந்து செல்லுங்கள். மேலும் அல்லாஹ்வின் உணவை உண்ணுங்கள். நீங்கள் (மரணித்த பின்) மீண்டும் உயிர் பெற்று அவனிடமே செல்ல வேண்டி இருக்கிறது.
67:15. அவன் எத்தகையவனென்றால், உங்களுக்கு பூமியை (வாழ்வதற்கு) எளிதானதாக அவன் ஆக்கி வைத்தான், ஆகவே, அதன் பல பாகங்களில் சென்று அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள், (உங்களுடைய மண்ணறைகளிலிருந்து) உயிர்பெற்றெழுதல் அவன்பாலே இருக்கிறது.
67:16
67:16 ءَاَمِنْتُمْ مَّنْ فِىْ السَّمَآءِ اَنْ يَّخْسِفَ بِكُمُ الْاَرْضَ فَاِذَا هِىَ تَمُوْرُۙ‏
ءَاَمِنْتُمْ பயமற்று இருக்கின்றீர்களா? مَّنْ فِىْ السَّمَآءِ வானத்தின் மேல் உள்ளவன் اَنْ يَّخْسِفَ சொருகிவிடுவதை بِكُمُ உங்களை الْاَرْضَ பூமியில் فَاِذَا هِىَ அப்போது அது تَمُوْرُۙ‏ குலுங்கும்
67:16. வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.
67:16. வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கிறீர்களா? அந்நேரத்தில் பூமி அதிர்ந்து நடு நடுங்(கிக்) கு(முறு)ம்.
67:16. வானத்திலிருப்பவன் உங்களைப் பூமியினுள் ஆழ்த்தி விடுவதையும் அப்போது உடனே பூமி அதிரத் தொடங்குவதையும் குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா?
67:16. வானத்திலிருப்பவன், உங்களை பூமியில் அழுந்தச்செய்து விடுவான் என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? (பூமியாகிய) அது அந்நேரத்தில் நடுங்கும்.
67:17
67:17 اَمْ اَمِنْتُمْ مَّنْ فِى السَّمَآءِ اَنْ يُّرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا‌ ؕ فَسَتَعْلَمُوْنَ كَيْفَ نَذِيْرِ‏
اَمْ اَمِنْتُمْ அல்லது பயமற்று இருக்கின்றீர்களா? مَّنْ فِى السَّمَآءِ வானத்தின் மேல் உள்ளவன் اَنْ يُّرْسِلَ அனுப்புவதை عَلَيْكُمْ உங்கள் மீது حَاصِبًا‌ ؕ கல் மழையை فَسَتَعْلَمُوْنَ விரைவில் அறிவீர்கள் كَيْفَ எப்படி (இருந்தது) نَذِيْرِ‏ என் எச்சரிக்கை
67:17. அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
67:17. அல்லது வானத்திலிருப்பவன், உங்கள் மீது கல்மழையை பொழிய மாட்டான் என்று நீங்கள் பயமற்றிருக்கிறீர்களா? அவ்வாறாயின், எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
67:17. அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கற்களைப் பொழியும் காற்றை அனுப்புவது குறித்து நீங்கள் அச்சமின்றி இருக்கின்றீர்களா? பிறகு உங்களுக்குத் தெரிந்துவிடும், எனது எச்சரிக்கை எப்படி இருக்கின்றது என்று!
67:17. அல்லது வானத்திலிருப்பவன், உங்கள் மீது கல்மாரியை அவன் அனுப்பி வைப்பான், என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
67:18
67:18 وَلَـقَدْ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيْرِ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக كَذَّبَ பொய்ப்பித்தார்(கள்) الَّذِيْنَ எவர்கள் مِن قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தது نَكِيْرِ‏ எனது மறுப்பு
67:18. அன்றியும் அவர்களுக்கு முன் இருந்தார்களே அவர்களும் (நம் வசனங்களை இவ்வாறே) பொய்ப்பித்துக் கொண்டிருந்தனர்; என் எச்சரிக்கை எவ்வளவு கடுமையாக இருந்தது?
67:18. இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி (நிராகரித்து)க் கொண்டிருந்தனர். ஆகவே (அவர்களுக்கு) எனது கண்டிப்பு எவ்வாறு இருத்தது என்பதை (நபியே! கவனித்தீரா)?
67:18. இவர்களுக்கு முன்னர் சென்றுபோன மக்கள் பொய்யென வாதிட்டிருக்கின்றார்கள். பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்; என்னுடைய பிடி எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதை!
67:18. மேலும், அவர்களுக்கு முன்னிருந்தார்களே அவர்கள் (இவர்களைப் போலவே நம் வசனங்களைப்) பொய்யாக்கி (நிராகரித்து)க் கொண்டிருந்தனர், ஆனால் (அவர்களை அழிப்பது கொண்டு) என்னுடைய மறுப்பு எவ்வாறிருந்தது?
67:19
67:19 اَوَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّيَقْبِضْنَؕؔ ۘ مَا يُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُ‌ؕ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍۢ بَصِيْرٌ‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اِلَى الطَّيْرِ பறவைகளை فَوْقَهُمْ தங்களுக்கு மேல் صٰٓفّٰتٍ விரித்தவைகளாகவும் وَّيَقْبِضْنَؕؔ ۘ மடக்கியவைகளாகவும் مَا يُمْسِكُهُنَّ அவற்றை தடுக்க முடியாது اِلَّا الرَّحْمٰنُ‌ؕ ரஹ்மானைத் தவிர اِنَّهٗ நிச்சயமாக அவன் بِكُلِّ شَىْءٍۢ எல்லாப் பொருளையும் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
67:19. இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.
67:19. இறக்கைகளை விரித்துக்கொண்டும், மடக்கிக்கொண்டும் இவர்களுக்கு மேல் ஆகாயத்தில் (அணி) அணியாகச் செல்லும் பறவைகளை இவர்கள் கவனிக்கவில்லையா? ரஹ்மானைத் தவிர, (மற்றெவரும்) அவற்றை (ஆகாயத்தில் தூக்கி)ப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை! நிச்சயமாக அவன் அனைத்தையும் உற்று நோக்குபவன் ஆவான்.
67:19. சிறகுகளை விரித்தும் மடக்கியும் தங்களுக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா என்ன? அவற்றைத் தடுத்து வைத்திருப்பவன் கருணைமிக்க இறைவனைத் தவிர வேறு எவருமில்லை! திண்ணமாக, அவனே ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
67:19. இறக்கைகளை விரித்துக்கொண்டும் மடித்துக் கொண்டும் அவர்களுக்கு மேல் (ஆகாயத்தில் அணியணியாகப் பறக்கும்) பட்சிகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத்தவிர, (மற்றெவரும்) அவைகளை (ஆகாயத்தில்) தடுத்துக் கொண்டிருக்கவில்லை, நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் பார்க்கக்கூடியவன்.
67:20
67:20 اَمَّنْ هٰذَا الَّذِىْ هُوَ جُنْدٌ لَّكُمْ يَنْصُرُكُمْ مِّنْ دُوْنِ الرَّحْمٰنِ‌ؕ اِنِ الْكٰفِرُوْنَ اِلَّا فِىْ غُرُوْرٍ‌ۚ‏
اَمَّنْ மாறாக, யார்? هٰذَا இவர்(கள்) الَّذِىْ எவர்(கள்) هُوَ அவர்(கள்) جُنْدٌ لَّكُمْ உங்கள் ராணுவமாக يَنْصُرُكُمْ உங்களுக்கு உதவுகின்றார்(கள்) مِّنْ دُوْنِ அன்றி الرَّحْمٰنِ‌ؕ பேரருளாளனை اِنِ الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் இல்லை اِلَّا தவிர فِىْ غُرُوْرٍ‌ۚ‏ ஏமாற்றத்தில்
67:20. அன்றியும், அர்ரஹ்மானை தவிர வேறு எவர் உங்களுக்குப் பட்டாளமாக இருந்து கொண்டு உதவி செய்வார்? காஃபிர்கள் ஏமாற்றத்திலன்றி வேறில்லை.
67:20. ரஹ்மானையன்றி உங்களுக்கு உதவி செய்யக்கூடிய படைகள் எவை? இந்நிராகரிப்பவர்கள் வெறும் மாயையிலே தவிர வேறில்லை.
67:20. சொல்லுங்கள் பார்ப்போம்; கருணைமிக்க இறைவனுக்கு எதிராக உங்களுக்கு உதவி புரிவதற்கு உங்களிடம் எந்தப் படை இருக்கிறது? உண்மை யாதெனில், இந்த நிராகரிப்பாளர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள்
67:20. அர்-ரஹ்மானையன்றி உங்களுக்குப் படையாக உள்ள இத்தகையவனா? – அவன் உங்களுக்கு உதவி செய்வான், நிராகரிப்போர் ஏமாற்றத்திலன்றி (வேறு) இல்லை.
67:21
67:21 اَمَّنْ هٰذَا الَّذِىْ يَرْزُقُكُمْ اِنْ اَمْسَكَ رِزْقَهٗ‌ ۚ بَلْ لَّجُّوْا فِىْ عُتُوٍّ وَّنُفُوْرٍ‏
اَمَّنْ மாறாக, யார்? هٰذَا இவர்(கள்) الَّذِىْ எவர்(கள்) يَرْزُقُكُمْ உங்களுக்கு உணவளிக்கின்றார்(கள்) اِنْ اَمْسَكَ அவன் தடுத்துவிட்டால் رِزْقَهٗ‌ ۚ தனது உணவை بَلْ மாறாக, لَّجُّوْا பிடிவாதம் பிடித்தனர் فِىْ عُتُوٍّ வரம்பு மீறுவதிலும் وَّنُفُوْرٍ‏ விலகிச் செல்வதிலும்தான்
67:21. அல்லது, தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.
67:21. அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன் உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதையும் இவர்கள் கவனிப்பதில்லை.) மாறாக, இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர்.
67:21. அல்லது கருணைமிக்க இறைவன் தான் வழங்கும் உணவை நிறுத்திக்கொண்டால் பிறகு, உங்களுக்கு உணவு வழங்குவது யார் என்பதைச் சொல்லுங்கள் பார்ப்போம்! உண்மை யாதெனில், இவர்கள் வரம்பை மீறுவதிலும், சத்தியத்தைப் புறக்கணிப்பதிலும் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.
67:21. (ரஹ்மானாகிய அவன் அளித்துவரும்) அவனுடைய ரிஜ்கை (அருள் விஸ்தீரணத்தை) அவன் தடுத்துக் கொண்டால், (உங்களுக்கு எதிராக உள்ள இவனா? அவனுக்கு எதிராக) உங்களுக்கு ரிஜ்கை அளிப்பான்? அன்று! இவர்கள் பெருமையடிப்பதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலேயுமே மூழ்கிக்கிடக்கின்றனர்.
67:22
67:22 اَفَمَنْ يَّمْشِىْ مُكِبًّا عَلٰى وَجْهِهٖۤ اَهْدٰٓى اَمَّنْ يَّمْشِىْ سَوِيًّا عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
اَفَمَنْ யார்? يَّمْشِىْ நடக்கின்றான் مُكِبًّا கவிழ்ந்தவனாக عَلٰى وَجْهِهٖۤ தனது முகத்தின் மீது اَهْدٰٓى நேர்வழி பெற்றவனா اَمَّنْ அல்லது யார்? يَّمْشِىْ நடக்கின்றான் سَوِيًّا சரியாக عَلٰى صِرَاطٍ பாதையில் مُّسْتَقِيْمٍ‏ நேரான
67:22. முகம் குப்புற விழுந்து செல்பவன் மிக நேர்வழி அடைந்தவனா? அல்லது நேரான பாதையில் செவ்வையாக நடப்பவ(ன் மிக நேர்வழி அடைந்தவ)னா.
67:22. என்னே! முகங்குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா? அல்லது நேரான பாதையில் ஒழுங்காகச் செல்பவன் அடைவானா?
67:22. சற்று சிந்தித்துப் பாருங்கள்! முகங்குப்புற நடந்து செல்பவன் மிகச் சரியான வழியை அடைபவனா? அல்லது தலைநிமிர்ந்து ஒரு நேரான வழியில் நடந்து சென்று கொண்டிருப்பவனா?
67:22. தன் முகத்தின் மீது முகங்குப்புற விழுந்து செல்பவன் மிக்க நேரான வழியில் இருக்கின்றானா? அல்லது நேரான பாதையில் சீராக நடப்பவனா?
67:23
67:23 قُلْ هُوَ الَّذِىْۤ اَنْشَاَكُمْ وَجَعَلَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ الْاَفْـــِٕدَةَ ‌ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏
قُلْ கூறுவீராக! هُوَ الَّذِىْۤ அவன்தான் اَنْشَاَكُمْ உங்களை உருவாக்கினான் وَجَعَلَ இன்னும் ஏற்படுத்தினான் لَـكُمُ உங்களுக்கு السَّمْعَ செவியை(யும்) وَالْاَبْصَارَ பார்வைகளையும் وَ الْاَفْـــِٕدَةَ ؕ உள்ளங்களையும் قَلِيْلًا மிகக் குறைவாகவே مَّا تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள்
67:23. (நபியே!) நீர் கூறுவீராக: “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.”
67:23. (நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், உள்ளங்களையும் கொடுத்தவன். (அவ்வாறிருந்தும்) நீங்கள் வெகு சொற்பமாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகிறீர்கள்.
67:23. (இவர்களிடம்) கூறும்: “அல்லாஹ்தான் உங்களைப் படைத்து, கேட்கின்ற மற்றும் பார்க்கின்ற ஆற்றல்களையும் சிந்தித்துணரும் உள்ளங்களையும் உங்களுக்கு வழங்கியுள்ளான்.” ஆனால், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
67:23. (நபியே!) நீர் கூறுவீராக (ரஹ்மானாகிய) அவன் எத்தகையவனென்றால், உங்களை அவன் (ஆரம்பமாக) உற்பத்தி செய்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் அவன் ஆக்கினான், (இத்தகு பேரருட்களைச் செய்த அவனுக்கு) நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
67:24
67:24 قُلْ هُوَ الَّذِىْ ذَرَاَكُمْ فِى الْاَرْضِ وَاِلَيْهِ تُحْشَرُوْنَ‏
قُلْ கூறுவீராக! هُوَ الَّذِىْ அவன்தான் ذَرَاَكُمْ உங்களை பரத்தினான் فِى الْاَرْضِ பூமியில் وَاِلَيْهِ அவன் பக்கமே تُحْشَرُوْنَ‏ ஒன்று திரட்டப்படுவீர்கள்
67:24. “அவனே உங்களைப் பூமியின் (பல பாகங்களிலும்) பரவச் செய்தான்; அன்றியும், அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்” என்று கூறுவீராக.
67:24. (நபியே!) கூறுவீராக: அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருக்கிறான். (மறுமையில்) அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
67:24. (இவர்களிடம் கூறும்:) “அல்லாஹ்தான் உங்களைப் பூமியில் பரவச் செய்தான். அவனிடமே நீங்கள் ஒன்றுதிரட்டப்பட இருக்கின்றீர்கள்.”
67:24. (நபியே!) நீர் கூறுவீராக! அவன் எத்தகையவனென்றால், பூமியில் (பலபாகங்களிலும்) உங்களை அவன் பரவச் செய்திருக்கின்றான், (மறுமையில்) அவன் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
67:25
67:25 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ அவர்கள் கூறுகின்றனர் مَتٰى எப்போது நிகழும் هٰذَا இந்த الْوَعْدُ வாக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
67:25. ஆயினும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், வாக்களிக்கப்பட்ட (மறுமையான)து எப்பொழுது (வரும்)?” என்று (காஃபிர்கள்) கேட்கிறார்கள்.
67:25. (இவ்வாறிருந்தும் அவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி,) ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (மறுமையைப் பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்?)'' என்று கேட்கிறார்கள்.
67:25. மேலும் இவர்கள் கேட்கின்றார்கள்: “இந்த வாக்குறுதி எப்போது நிறைவேறும்? நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், காண்பித்துத் தாருங்கள்!”
67:25. மேலும், (மறுமை நாளைப்பற்றி) “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த வாக்கு எப்பொழுது (வரும்)?” என்று கேட்கின்றார்கள்.
67:26
67:26 قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ وَاِنَّمَاۤ اَنَا نَذِيْرٌ مُّبِيْنٌ‏
قُلْ கூறுவீராக! اِنَّمَا الْعِلْمُ அறிவெல்லாம் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம்தான் وَاِنَّمَاۤ اَنَا நான் எல்லாம் نَذِيْرٌ எச்சரிப்பாளர்தான் مُّبِيْنٌ‏ தெளிவான
67:26. “இதைப் பற்றிய ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடமே தான் இருக்கிறது; தவிர, நிச்சயமாக நான் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறும்.
67:26. அதற்கு (நபியே!) கூறுவீராக: (‘‘அது எப்போது வரும் என்ற) ஞானம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது. நான் (அதைப் பற்றிப்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்.
67:26. நீர் கூறும்: “இதனைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது. நானோ தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் மட்டும்தான்!”
67:26. (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக “நிச்சயமாக (அது பற்றிய) அறிவெல்லாம், அல்லாஹ்விடத்தில் உள்ளது, அன்றியும், நிச்சயமாக நானோ (அதைப்பற்றி) தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்”
67:27
67:27 فَلَمَّا رَاَوْهُ زُلْفَةً سِيْٓئَتْ وُجُوْهُ الَّذِيْنَ كَفَرُوْا وَقِيْلَ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَدَّعُوْنَ‏
فَلَمَّا رَاَوْهُ அவர்கள் அதை பார்க்கின்றபோது زُلْفَةً மிக நெருக்கமாக سِيْٓئَتْ கெட்டுவிடும் وُجُوْهُ முகங்கள் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களின் وَقِيْلَ இன்னும் கூறப்படும் هٰذَا இதுதான் الَّذِىْ எதை كُنْتُمْ நீங்கள் இருந்தீர்களோ بِهٖ அதை تَدَّعُوْنَ‏ தேடுபவர்களாக
67:27. எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும்; இன்னும், “நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்” என்று அவர்களுக்குக் கூறப்படும்.
67:27. (நீர் அச்சமூட்டிய) வேதனை (இவர்களை) நோக்கி வருவதை அவர்கள் கண்டால், அந்நிராகரிப்பவர்களுடைய முகங்கள் கருகிவிடும். (இன்னும், அவர்களை நோக்கி) ‘‘(எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தது இதுதான்'' என்றும் கூறப்படும்.
67:27. பின்னர், அவர்கள் அதை அருகில் பார்க்கும் போது, எவர்கள் அதை நிராகரித்தார்களோ அவர்களின் முகங்கள் அலங்கோலமாகிவிடும். (அவர்களிடம்) கூறப்படும்: “நீங்கள் எதனைக் குறித்து வற்புறுத்திக் கொண்டிருந்தீர்களோ அதுதான் இது!”
67:27. (வாக்களிக்கப்பட்டதான) அதனை (அவர்களுக்குச்) சமீபமாக அவர்கள் பார்த்துவிடும்போது அந்நிராகரித்தோருடைய முகங்கள் வேதனையால் (பேதலித்துக்) கெட்டுவிடும்; அன்றியும், (அவர்களிடம்) “நீங்கள் (எப்பொழுது வருமென்று அவசரமாகத்) தேடிக் கொண்டிருந்தீர்களே அத்தகையது இதுதான்” என்று கூறப்படும்.
67:28
67:28 قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَهْلَـكَنِىَ اللّٰهُ وَمَنْ مَّعِىَ اَوْ رَحِمَنَا ۙ فَمَنْ يُّجِيْرُ الْكٰفِرِيْنَ مِنْ عَذَابٍ اَلِيْمٍ‏
قُلْ கூறுவிராக اَرَءَيْتُمْ அறிவியுங்கள் اِنْ اَهْلَـكَنِىَ என்னை(யும்) அழித்துவிட்டால் اللّٰهُ அல்லாஹ் وَمَنْ مَّعِىَ என்னுடன் இருப்பவர்களையும் اَوْ அல்லது رَحِمَنَا ۙ எங்கள் மீது கருணை புரிந்தால் فَمَنْ யார்? يُّجِيْرُ காப்பாற்றுவார் الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களை مِنْ عَذَابٍ தண்டனையிலிருந்து اَلِيْمٍ‏ வலி தரக்கூடிய(து)
67:28. கூறுவீராக: அல்லாஹ், என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் ஆசிப்பது போல்) அழித்து விட்டாலும், அல்லது (நாங்கள் நம்புவது போல்) அவன் எங்கள் மீது கிருபை புரிந்தாலும், நோவினை செய்யும் வேதனையை விட்டு, காஃபிர்களைக் காப்பவர் யார் என்பதை கவனித்தீர்களா?
67:28. (நபியே!) கூறுவீராக: என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் விரும்புகிறபடி) அல்லாஹ் அழித்து விட்டாலும் அல்லது அவன் எங்களுக்கு அருள் புரிந்தாலும் (அது எங்கள் விஷயம். ஆயினும்,) துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிக்கும் உங்களை பாதுகாப்பவர் யார் என்பதை(க் கவனித்து)ப் பார்த்தீர்களா?
67:28. (இவர்களிடம்) கேளும்: “அல்லாஹ் என்னையும் என் தோழர்களையும் அழித்துவிட்டால் அல்லது எங்கள் மீது கருணை புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிப்பாளர்களைக் காப்பாற்றுபவன் யார் என்பதை எப்போதேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா?”
67:28. “என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் அல்லாஹ் அழித்துவிட்டாலும், அல்லது அவன் எங்களுக்கு அருள் செய்துவிட்டாலும், துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிப்போரைக் காப்பாற்றுபவர் யார்?” என்பதை எனக்குத் தெரிவியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
67:29
67:29 قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَيْهِ تَوَكَّلْنَا‌ۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
قُلْ கூறுவீராக! هُوَ அவன்தான் الرَّحْمٰنُ பேரருளாளன் اٰمَنَّا நாங்கள் நம்பிக்கை கொண்டோம் بِهٖ அவனை وَعَلَيْهِ இன்னும் அவன் மீதே تَوَكَّلْنَا‌ۚ நாங்கள் நம்பிக்கை வைத்தோம் فَسَتَعْلَمُوْنَ விரைவில் அறிவீர்கள் مَنْ هُوَ فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் உள்ளவர்களை مُّبِيْنٍ‏ தெளிவான
67:29. (நபியே!) நீர் கூறும்: (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான்; அவன் மீதே நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!”
67:29. (நபியே!) கூறுவீராக: ‘‘அவன்தான் ரஹ்மான். அவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அவனையே நாங்கள் நம்பியும் இருக்கிறோம். ஆகவே, பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள் யாரென்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.''
67:29. மேலும் (இவர்களிடம்) கூறும்: “அவன் பெரும் கருணையாளனாவான். அவன் மீதே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். அவனையே நாங்கள் முழுமையாகச் சார்ந்திருக்கின்றோம். வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடப்பவன் யார் என்பது விரைவில் உங்களுக்குத் தெரிந்துவிடும்.
67:29. “அவன் தான் ரஹ்மான், அவனையே நாங்கள் விசுவாசித்திருக்கின்றோம், (எங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அவன் மீதே நம்பிக்கையும் வைத்திருக்கிறோம், ஆகவே, தெளிவான வழிகேட்டிலிருப்பவர் யாரென்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
67:30
67:30 قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّاْتِيْكُمْ بِمَآءٍ مَّعِيْنٍ‏
قُلْ கூறுவீராக اَرَءَيْتُمْ அறிவியுங்கள் اِنْ اَصْبَحَ சென்று விட்டால் مَآؤُكُمْ உங்கள் தண்ணீர் غَوْرًا ஆழத்தில் فَمَنْ யார் يَّاْتِيْكُمْ بِمَآءٍ உங்களுக்கு தண்ணீரைக் கொண்டு வருவார் مَّعِيْنٍ‏ மதுரமான
67:30. (நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).
67:30. (நபியே!) கூறுவீராக: ‘‘(நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால், பிறகு தண்ணீரின் (வேறொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா?
67:30. (இவர்களிடம்) கேளும்: “உங்கள் (கிணறுகளின்) நீர் பூமிக்குள் போய்விட்டால் பிறகு தண்ணீர் ஊற்றுகளை உங்களுக்கு வெளிக்கொணர்பவன் யார் என்பதையும் நீங்கள் எப்போதேனும் சிந்தித்ததுண்டா?”
67:30. “உங்களுடைய தண்ணீர் (நீங்கள் பெறமுடியாதவாறு)) பூமியினுள் (இழுக்கப்பட்டு வெகு ஆழத்தில்) சென்றுவிட்டால், பொங்கி ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார், என எனக்குத் தெரிவியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!