74. ஸூரத்துல் முத்தஸ்ஸிர் (போர்த்திக்கொண்டிருப்பவர்)
மக்கீ, வசனங்கள்: 56

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
74:1
74:1 يٰۤاَيُّهَا الْمُدَّثِّرُۙ‏
يٰۤاَيُّهَا الْمُدَّثِّرُۙ‏ போர்வை போர்த்தியவரே!
74:1. (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
74:1. (நபியே! வஹ்யின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!
74:1. போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே!
74:1. (போர்வை) போர்த்திக் கொண்டிருப்பவரே!
74:2
74:2 قُمْ فَاَنْذِرْۙ‏
قُمْ எழுவீராக! فَاَنْذِرْۙ‏ எச்சரிப்பீராக!
74:2. நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
74:2. நீர் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக;
74:2. எழுந்து எச்சரிக்கை செய்வீராக!
74:2. நீர் எழுந்திருப்பீராக! பிறகு (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!
74:3
74:3 وَرَبَّكَ فَكَبِّرْۙ‏
وَرَبَّكَ இன்னும் உமது இறைவனை فَكَبِّرْۙ‏ பெருமைப்படுத்துவீராக!
74:3. மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
74:3. உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக;
74:3. மேலும், உம் இறைவனின் மேன்மையைப் பிரகடனப்படுத்துவீராக!
74:3. மேலும், உமதிரட்சகனைப் பெருமைப்படுத்துவீராக!.
74:4
74:4 وَثِيَابَكَ فَطَهِّرْۙ‏
وَثِيَابَكَ இன்னும் உமது ஆடையை فَطَهِّرْۙ‏ சுத்தப்படுத்துவீராக!
74:4. உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
74:4. உமது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக்கொள்வீராக;
74:4. மேலும், உம் ஆடைகளைத் தூய்மையாக்குவீராக!
74:4. மேலும், உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வீராக!
74:5
74:5 وَالرُّجْزَ فَاهْجُرْۙ‏
وَالرُّجْزَ சிலைகளை فَاهْجُرْۙ‏ விட்டு விலகுவீராக!
74:5. அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.
74:5. அசுத்தங்களை வெறுத்துவிடுவீராக.
74:5. அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக!
74:5. இன்னும், அசுத்தத்தை வெறுத்துவிடுவீராக!
74:6
74:6 وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُۙ‏
وَلَا تَمْنُنْ சொல்லிக் காண்பிக்காதீர்! تَسْتَكْثِرُۙ‏ நீர் பெரிதாக கருதி(யவராக)
74:6. (பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிகமாகப் பெறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.
74:6. எவருக்கும் நீர் (நன்மை) உபகாரம் செய்து, (அதைவிட) அதிகமாக (அவனிடம்) பெற்றுக்கொள்ளக் கருதாதீர்.
74:6. ஆதாயம் கருதி பிறருக்கு உதவி செய்யாதீர்;
74:6. (நீர் கொடுத்ததைவிட) அதிகமானதைப் பெறக்கருதி (மற்றவருக்கு) உபகாரம் செய்யாதீர்!
74:7
74:7 وَ لِرَبِّكَ فَاصْبِرْؕ‏
وَ لِرَبِّكَ இன்னும் உமது இறைவனுக்காக فَاصْبِرْؕ‏ நீர் பொறுமையாக இருப்பீராக!
74:7. இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.
74:7. உமது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக (சிரமங்களை) நீர் பொறுத்திருப்பீராக.
74:7. உம் இறைவனுக்காகப் பொறுமையைக் கைக்கொள்வீராக!
74:7. இன்னும், உமதிரட்சகனுக்காக(க் கஷ்டங்களைச் சகித்துக் கொண்டு) நீர் பொறுமையுடன் இருப்பீராக!
74:8
74:8 فَاِذَا نُقِرَ فِى النَّاقُوْرِۙ‏
فَاِذَا نُقِرَ ஊதப்பட்டால் فِى النَّاقُوْرِۙ‏ எக்காளத்தில்
74:8. மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-
74:8. எக்காளத்தில் (மகா ஊதுகுழாயில்) ஊதப்படும் சமயத்தில்,
74:8. எக்காளம் ஊதப்பட்டுவிட்டாலோ;
74:8. குழல் (ஸூர்) ஊதப்பட்டுவிட்டால்-
74:9
74:9 فَذٰلِكَ يَوْمَٮِٕذٍ يَّوْمٌ عَسِيْرٌۙ‏
فَذٰلِكَ அது يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّوْمٌ ஒரு நாள் عَسِيْرٌۙ‏ மிக சிரமமான
74:9. அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.
74:9. அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும்.
74:9. அந்த நாள் மிகக் கடுமையான நாளாய் இருக்கும்.
74:9. அந்நாளில் அ(வ்வாறு ஊதப்படுவதான)து கடினமான நாளாக இருக்கும்.
74:10
74:10 عَلَى الْكٰفِرِيْنَ غَيْرُ يَسِيْرٍ‏
عَلَى الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு غَيْرُ يَسِيْرٍ‏ இலகுவானதல்ல
74:10. காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.
74:10. (அந்நாள்) நிராகரிப்பவர்களுக்கு எளிதானதல்ல.
74:10. நிராகரிப்பாளர்களுக்கு இலேசானதாய் இராது.
74:10. (அந்நாள்) நிராகரிப்போருக்கு எளிதானதன்று.
74:11
74:11 ذَرْنِىْ وَمَنْ خَلَقْتُ وَحِيْدًا ۙ‏
ذَرْنِىْ என்னை(யும்) விட்டு விடுவீராக! وَمَنْ இன்னும் எவனை خَلَقْتُ படைத்தேனோ وَحِيْدًا ۙ‏ தனியாக
74:11. என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.
74:11. (நபியே! நீர் சிபாரிசுக்கு வராது) என்னை(யும் அவனையும்) விட்டுவிடுவீராக. அவனை நான் தனியாகவே படைத்தேன்.
74:11. நான் தன்னந்தனியாகப் படைத்திருக்கின்ற அந்த மனிதனை என்னிடம் விட்டுவிடுவீராக!
74:11. என்னையும், தனித்த நிலையில் நான் படைத்தவனையும் விட்டுவிடுவீராக!
74:12
74:12 وَّجَعَلْتُ لَهٗ مَالًا مَّمْدُوْدًا ۙ‏
وَّجَعَلْتُ இன்னும் ஏற்படுத்திக் கொடுத்தேன் لَهٗ அவனுக்கு مَالًا செல்வத்தை مَّمْدُوْدًا ۙ‏ விசாலமான
74:12. இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.
74:12. பின்னர், நான் அவனுக்கு ஏராளமான பொருளையும் கொடுத்தேன்.
74:12. அவனுக்கு நான் அதிகமான செல்வத்தை வழங்கினேன்.
74:12. நான் அவனுக்கு ஏராளமான செல்வத்தையும் ஆக்கியிருந்தேன்.
74:13
74:13 وَّبَنِيْنَ شُهُوْدًا ۙ‏
وَّبَنِيْنَ இன்னும் ஆண் பிள்ளைகளை شُهُوْدًا ۙ‏ ஆஜராகி இருக்கக் கூடிய(வர்கள்)
74:13. அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).
74:13. எந்நேரமும் அவனுடன் இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்).
74:13. அவனுடனேயே இருக்கக்கூடிய புதல்வர்களையும் அளித்தேன்.
74:13. அவனுடன் இருக்கக்கூடிய ஆண்மக்களையும் (நான் அவனுக்குக் கொடுத்தேன்).
74:14
74:14 وَّمَهَّدْتُّ لَهٗ تَمْهِيْدًا ۙ‏
وَّمَهَّدْتُّ இன்னும் வசதிகளை ஏற்படுத்தினோம் لَهٗ அவனுக்கு تَمْهِيْدًا ۙ‏ மிகுந்த வசதிகளை
74:14. இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.
74:14. அவனுக்கு வேண்டியவை எல்லாம் ஏற்கனவே அவனுக்காக தயார்படுத்தியும் வைத்தேன்.
74:14. மேலும், அவனுக்குத் தலைமை தாங்கும் வழிவகையையும் வகுத்துக் கொடுத்தேன்.
74:14. அவனுக்கு (வாழ்வதற்கு வேண்டிய) தயாரிப்புகளை (ஏற்கெனவே) அவனுக்காக நான் தயார் செய்து வைத்தேன்.
74:15
74:15 ثُمَّ يَطْمَعُ اَنْ اَزِيْدَ  ۙ‏
ثُمَّ பிறகு يَطْمَعُ ஆசைப்படுகின்றான் اَنْ اَزِيْدَ  ۙ‏ நான் அதிகப்படுத்த வேண்டுமென்று
74:15. பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.
74:15. பிறகு, நான் அவனுக்கு (மறுமையில்) இன்னும் அதிகமாகவும் கொடுப்பேன் என்றும் எதிர்பார்க்கிறான்.
74:15. இதன் பிறகு நான் அவனுக்கு இன்னும் அதிகமாக வழங்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகின்றான்.
74:15. பின்னும், நான் (அவனுக்கு) அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகின்றான்.
74:16
74:16 كَلَّا ؕ اِنَّهٗ كَانَ لِاٰيٰتِنَا عَنِيْدًا ؕ‏
كَلَّا ؕ அவ்வாறல்ல اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருந்தான் لِاٰيٰتِنَا நமது வசனங்களுக்கு عَنِيْدًا ؕ‏ முரண்படக்கூடியவனாக
74:16. அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.
74:16. அவ்வாறு ஆகக்கூடியதல்ல. ஏனென்றால், நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு எதிரியாக இருக்கிறான்.
74:16. ஒருபோதுமில்லை! அவன் நம்முடைய வசனங்களுடன் பகைமை கொண்டவனாக இருக்கின்றான்.
74:16. (ஒருபோதும் அது நடந்தேறக்கூடியது) அல்ல! நிச்சயமாக அவன் நம்முடைய வசனங்களுக்கு முரண்பட்டவனாக இருக்கின்றான்.
74:17
74:17 سَاُرْهِقُهٗ صَعُوْدًا ؕ‏
سَاُرْهِقُهٗ விரைவில் நிர்ப்பந்தித்து விடுவேன் صَعُوْدًا ؕ‏ மிகப் பெரிய சிரமத்திற்கு
74:17. விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.
74:17. அதிசீக்கிரத்தில் அவனை ஒரு சிரமமான சிகரத்தில் ஏற்றிவிடுவேன்.
74:17. நான் அவனை அதிவிரைவில் வேதனையின்
74:17. (அதிசீக்கிரத்தில்) அவனை (வேதனையின்) ஒரு கடினமான சிகரத்தில் நான் ஏற்றிவிடுவேன்.
74:18
74:18 اِنَّهٗ فَكَّرَ وَقَدَّرَۙ‏
اِنَّهٗ நிச்சயமாக அவன் فَكَّرَ யோசித்தான் وَقَدَّرَۙ‏ இன்னும் திட்டமிட்டான்
74:18. நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.
74:18. நிச்சயமாக அவன் (இந்த குர்ஆனைப் பற்றி மிக மிகக்) கவனித்து (ஒரு பொய்யைக்) கற்பனை செய்தான்.
74:18. சிகரத்திற்கு ஏறச் செய்வேன். அவன் சிந்தித்தான்; சில விஷயங்களைப் புனைந்துகூற முயன்றான்!
74:18. நிச்சயமாக அவன் (இந்தக்குர் ஆனுக்கு எதிராக) சிந்தித்தான், இன்னும், (குர் ஆனைப்பற்றித் தன் மனதில் கற்பனையாக ஒரு கூற்றை) ஏற்படுத்திக் கொண்டான்.
74:19
74:19 فَقُتِلَ كَيْفَ قَدَّرَۙ‏
فَقُتِلَ அவன் அழியட்டும் كَيْفَ எப்படி قَدَّرَۙ‏ திட்டமிட்டான்
74:19. அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
74:19. அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்!
74:19. இறைவன் அவனை அழிக்கட்டும். அவன் எப்படிப்பட்ட விஷயங்களைப் புனைந்து கூற முற்பட்டுவிட்டான்.
74:19. ஆகவே, அவன் சபிக்கப்பட்டான்; எவ்வாறு அவன் (ஒரு கூற்றை) தன் மனதில்) ஏற்படுத்திக் கொண்டான்.
74:20
74:20 ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَۙ‏
ثُمَّ பிறகு قُتِلَ அவன் அழியட்டும் كَيْفَ எப்படி قَدَّرَۙ‏ திட்டமிட்டான்
74:20. பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
74:20. பின்னும், அவன் அழிந்துபோவான்; என்னதான் கற்பனை செய்து விட்டான்! (ஒன்றுமில்லை.)
74:20. ஆம்! இறைவன் அவனை அழிக்கட்டும். எப்படிப்பட்ட விஷயங்களைப் புனைந்துரைக்க அவன் முற்பட்டு விட்டான்!
74:20. பின்னரும் அவன் சபிக்கப்பட்டான்! எவ்வாறு அவன் (ஒரு கூற்றை தன் மனதில்) ஏற்படுத்திக் கொண்டான்?
74:21
74:21 ثُمَّ نَظَرَۙ‏
ثُمَّ பிறகு نَظَرَۙ‏ தாமதித்தான்
74:21. பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான்.
74:21. பின்னும், (அதைப் பற்றிக்) கவனித்தான்.
74:21. பிறகு (மக்களைப்) பார்த்தான்;
74:21. பின்னர் அவன் (நம் வசனங்களை சிந்தித்து) நோக்கினான்.
74:22
74:22 ثُمَّ عَبَسَ وَبَسَرَۙ‏
ثُمَّ பிறகு عَبَسَ முகம் சுளித்தான் وَبَسَرَۙ‏ இன்னும் கடுகடுத்தான்
74:22. பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான்; இன்னும் (முகஞ்) சுளித்தான்.
74:22. பின்னர், (தன் இயலாமையைப் பற்றி முகம்) கடுகடுத்தான்; (முகம்) சுளித்தான்.
74:22. பிறகு புருவத்தை நெரித்தான். பின்னர், முகத்தைச் சுளித்தான்;
74:22. பின்னர், கடுகடுத்தான்; முகமும் சுளித்தான்.
74:23
74:23 ثُمَّ اَدْبَرَ وَاسْتَكْبَرَۙ‏
ثُمَّ பிறகு اَدْبَرَ புறக்கணித்தான் وَاسْتَكْبَرَۙ‏ இன்னும் பெருமையடித்தான்
74:23. அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.
74:23. பின்னர், புறங்காட்டிச் சென்றான். (எனினும், பின்னும்) கர்வம் கொண்டான்.
74:23. பிறகு, திரும்பிச் சென்றான்; மேலும், தற்பெருமை கொண்டான்;
74:23. பின்னர் திரும்பிச் சென்றான்; இன்னும், அகந்தை கொண்டான்.
74:24
74:24 فَقَالَ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ يُّؤْثَرُۙ‏
فَقَالَ அவன் கூறினான் اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا தவிர سِحْرٌ சூனியமே يُّؤْثَرُۙ‏ கற்றுக்கொள்ளப்பட்ட
74:24. அப்பால் அவன் கூறினான்: “இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.
74:24. ஆகவே, ‘‘இது மயக்கக்கூடிய சூனியமே தவிர வேறில்லை'' என்றும்
74:24. இறுதியில் கூறினான்: “இது ஒன்றுமில்லை; ஒரு சூனியம்தான்: முன்பிருந்தே சொல்லப்பட்டு வருவதுதான்!
74:24. அப்பால் முன்னுள்ளோரிடமிருந்து கற்பிக்கப்பட்டு) “வழிவழியாக வந்த சூனியமேயன்றி இது (வேறு) இல்லை” எனக்கூறினான்.
74:25
74:25 اِنْ هٰذَاۤ اِلَّا قَوْلُ الْبَشَرِؕ‏
اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا தவிர قَوْلُ சொல்லே الْبَشَرِؕ‏ மனிதர்களின்
74:25. “இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை” (என்றும் கூறினான்.)
74:25. ‘‘இது மனிதர்களுடைய சொல்லே தவிர வேறில்லை'' என்றும் கூறினான்.
74:25. இது ஒரு மனித வாக்கேதான்!”
74:25. “இது மனிதரின் கூற்றே தவிர வேறில்லை” (என்றும் கூறினான்.)
74:26
74:26 سَاُصْلِيْهِ سَقَرَ‏
سَاُصْلِيْهِ سَقَرَ‏ நான் விரைவில் பொசுக்குவேன்/அவனை/சகர்
74:26. அவனை நான் “ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன்.
74:26. ஆகவே, நாம் அவனை ‘சகர்' நரகத்தில் எறிவோம்.
74:26. அதிவிரைவில் நான் அவனை நரகத்தில் வீசி எறிவேன்.
74:26. நான் அவனை “ஸகர்” எனும் நரகத்தில் புகச் செய்வேன்.
74:27
74:27 وَمَاۤ اَدْرٰٮكَ مَا سَقَرُؕ‏
وَمَاۤ اَدْرٰٮكَ உமக்குத் தெரியுமா? مَا سَقَرُؕ‏ சகர் என்றால் என்ன
74:27. “ஸகர்” என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?
74:27. (நபியே!) அந்த ‘சகர்' நரகம் என்னவென்று நீர் அறிவீரா?
74:27. மேலும், அந்த நரகம் என்னவென்று நீர் அறிவீரா, என்ன?
74:27. இன்னும் “ஸகர்” என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
74:28
74:28 لَا تُبْقِىْ وَ لَا تَذَرُ‌ۚ‏
لَا تُبْقِىْ வாழவைக்காது وَ لَا تَذَرُ‌ۚ‏ இன்னும் விட்டுவிடாது
74:28. அது (எவரையும்) மிச்சம் வைக்காது; விட்டு விடவும் செய்யாது.
74:28. அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது.
74:28. அது இருக்கவும் விடாது; விட்டும் வைக்காது!
74:28. அது (நரகவாசிகளில் எவரையும்) மிச்சம் வைக்காது; (எவரையும்) விட்டும் விடாது.
74:29
74:29 لَـوَّاحَةٌ لِّلْبَشَرِ‌ۖ‌ۚ‏
لَـوَّاحَةٌ கரித்துவிடும் لِّلْبَشَرِ‌ۖ‌ۚ‏ தோல்களை
74:29. (அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.
74:29. அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும்.
74:29. அது சருமத்தைக் கரித்துவிடக்கூடியது.
74:29. மனிதர்களை (சுட்டுக்கரித்து அவர்களின் மேனியை) மாற்றிவிடக் கூடியது.
74:30
74:30 عَلَيْهَا تِسْعَةَ عَشَرَؕ‏
عَلَيْهَا அதன் மீது تِسْعَةَ عَشَرَؕ‏ பத்தொன்பது வானவர்கள்
74:30. அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
74:30. (அவனை வேதனை செய்ய) அதில் பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர்.
74:30. பத்தொன்பது பேர் காவலர்களாய் அதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
74:30. (காவலர்களாக மலக்குகளில்) அதன்மீது பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர்.
74:31
74:31 وَمَا جَعَلْنَاۤ اَصْحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓٮِٕكَةً‌ وَّمَا جَعَلْنَا عِدَّتَهُمْ اِلَّا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا ۙ لِيَسْتَيْقِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَيَزْدَادَ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِيْمَانًا‌ وَّلَا يَرْتَابَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْمُؤْمِنُوْنَ‌ۙ وَلِيَقُوْلَ الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ وَّالْكٰفِرُوْنَ مَاذَاۤ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ‌ؕ كَذٰلِكَ يُضِلُّ اللّٰهُ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ ‌ؕ وَمَا يَعْلَمُ جُنُوْدَ رَبِّكَ اِلَّا هُوَ ‌ؕ وَمَا هِىَ اِلَّا ذِكْرٰى لِلْبَشَرِ‏
وَمَا جَعَلْنَاۤ நாம் ஆக்கவில்லை اَصْحٰبَ النَّارِ நரகத்தின் காவலாளிகளை اِلَّا தவிர مَلٰٓٮِٕكَةً‌ வானவர்களாக وَّمَا جَعَلْنَا இன்னும் நாம் ஆக்கவில்லை عِدَّتَهُمْ அவர்களின் எண்ணிக்கையை اِلَّا தவிர فِتْنَةً ஒரு குழப்பமாகவே لِّلَّذِيْنَ كَفَرُوْا ۙ நிராகரித்தவர்களுக்கு لِيَسْتَيْقِنَ உறுதி கொள்ளவேண்டும் என்பதற்காக(வும்) الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ வேதம் கொடுக்கப்பட்டவர்கள் وَيَزْدَادَ அதிகரிப்பதற்காகவும் الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கை கொண்டவர்கள் اِيْمَانًا‌ நம்பிக்கையால் وَّلَا يَرْتَابَ சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ வேதம் கொடுக்கப்பட்டவர்களும் وَالْمُؤْمِنُوْنَ‌ۙ நம்பிக்கையாளர்களும் وَلِيَقُوْلَ கூறுவதற்காகவும் الَّذِيْنَ எவர்கள் فِىْ قُلُوْبِهِمْ தங்கள் உள்ளங்களில் مَّرَضٌ நோய் وَّالْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்களும் مَاذَاۤ என்ன اَرَادَ நாடுகின்றான் اللّٰهُ அல்லாஹ் بِهٰذَا இதன் மூலம் مَثَلًا ؕ உதாரணத்தை كَذٰلِكَ இவ்வாறுதான் يُضِلُّ வழிகெடுக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் مَنْ يَّشَآءُ தான் நாடுகின்றவர்களை وَيَهْدِىْ நேர்வழி செலுத்துகின்றான் مَنْ يَّشَآءُ ؕ தான் நாடுகின்றவர்களை وَمَا يَعْلَمُ அறிய மாட்டார்(கள்) جُنُوْدَ இராணுவங்களை رَبِّكَ உமது இறைவனின் اِلَّا தவிர هُوَ ؕ அவனை وَمَا இல்லை هِىَ இது اِلَّا தவிர ذِكْرٰى ஒரு நினைவூட்டலே لِلْبَشَرِ‏ மனிதர்களுக்கு
74:31. அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை; காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்: “அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?” என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான்; இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான்; அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள்; (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.  
74:31. நரகத்தின் காவலாளிகளாக வானவர்களையே தவிர (மற்றெவரையும்) நாம் ஏற்படுத்தவில்லை. நிராகரிப்பவர்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு)இவர்களுடைய தொகையை(ப் பத்தொன்பதாக) நாம் ஏற்படுத்தினோம். வேதத்தையுடையவர்கள் இதை உறுதியாக நம்பவும். நம்பிக்கை கொண்டவர்களின் நம்பிக்கையை இது அதிகப்படுத்தும். வேதத்தை உடையவர்களும், நம்பிக்கையாளர்களும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்கவே வேண்டாம். எனினும், எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களும், நிராகரிப்பவர்களும் இந்த உதாரணத்தைக் கொண்டு, அல்லாஹ் என்ன அறிவிக்க நாடினான்? என்று கூறுவார்கள். (நபியே!) இவ்வாறே, அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டு விடுகிறான். தான் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். (நபியே!) உமது இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள். இவை மனிதர்களுக்கு நல்லுபதேசங்களே தவிர வேறில்லை.
74:31. நாம் வானவர்களையே இந்த நரகத்தின் காவலர்களாய் ஆக்கியுள்ளோம். அவர்களின் இந்த எண்ணிக்கையை நிராகரிப்பாளர்களுக்கு சோதனையாக ஆக்கியுள்ளோம். எதற்காகவெனில், வேதம் வழங்கப்பட்ட மக்களுக்கு உறுதி ஏற்படுவதற்காகவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் நம்பிக்கை இன்னும் அதிகமாவதற்காகவும், மேலும், வேதம் வழங்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் எவ்வித ஐயத்திற்கும் ஆளாகக்கூடாது என்பதற்காகவும், மேலும், நெஞ்சில் நோய் உள்ளவர்களும், நிராகரிப்பாளர்களும் “அல்லாஹ் இந்த விநோதமான சொல்லால் என்ன நாடுகின்றான்?” என்று கேட்பதற்காகவும்தான்! இவ்வாறு அல்லாஹ் தான் நாடுபவர்களை வழிகேட்டில் தள்ளிவிடுகின்றான். மேலும், தான் நாடுபவர்களுக்கு நேர்வழியை அளிக்கின்றான். மேலும், உம் இறைவனின் படைகளை அவனைத் தவிர வேறெவரும் அறிந்திட மாட்டார் நரகத்தைப் பற்றிய இந்த விவரம் எடுத்துரைக்கப்பட்டதன் நோக்கம், மக்களுக்கு இதன் மூலம் ஓர் அறிவுரை கிடைக்கட்டும் என்பதே அன்றி வேறில்லை.
74:31. மேலும், நரகத்தின் காவலர்களை மலக்குகளாகவே தவிர நாம் ஆக்கவில்லை; இன்னும், அவர்களுடைய எண்ணிக்கையை நிராகரிப்போருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை; வேதம் கொடுக்கப்பட்டோர் (இதனை) உறுதி கொள்வதற்காகவும், விசுவாசங்கொண்டோர் (தம்) விசுவாசத்தை அதிகமாக்கிக் கொள்வதற்காகவும், இன்னும், வேதம் கொடுக்கப்பட்டோரும், விசுவாசிகளும் (இதைப் பற்றிச்) சந்தேகிக்காமலிருப்பதற்காகவும், (நாம் அவ்வாறு ஆக்கினோம்). இன்னும், எவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கின்றனதோ அவர்களும், நிராகரித்துக் கொண்டிருப்போரும் “இதனைக் கொண்டு, உதாரணமாக அல்லாஹ் எதை (அறிவிக்க) நாடினான்?” என்று கூறுவதற்காகவும் (இவ்வாறு ஆக்கினோம் நபியே!) இவ்வாறே அல்லாஹ், தான் நாடியவர்களை வழிகெடச் செய்கிறான்; தான் நாடியவர்களை நேர் வழியிலும் செலுத்துகின்றான்; இன்னும், உமதிரட்சகனின் படைகளை அவனைத் தவிர (மற்றெவரும்) அறியமாட்டார்; அது மனிதர்களுக்கு உபதேசமேயன்றி வேறில்லை.
74:32
74:32 كَلَّا وَالْقَمَرِۙ‏
كَلَّا அவ்வாறல்ல وَالْقَمَرِۙ‏ சந்திரன் மீது சத்தியமாக!
74:32. (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
74:32. அவ்வாறு அல்ல! நிச்சயமாக சந்திரன் மீது சத்தியமாக!
74:32. ஒருபோதுமில்லை! சந்திரன் மீது சத்தியமாக!
74:32. (நரகக்காவலர்கள் விஷயமாக நிராகரிப்போர் கூறுவது போன்று) அல்ல! சந்திரனின் மீதும் சத்தியமாக!
74:33
74:33 وَالَّيْلِ اِذْ اَدْبَرَۙ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذْ اَدْبَرَۙ‏ அது முடியும் போது!
74:33. இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
74:33. செல்கின்ற இரவின் மீது சத்தியமாக!
74:33. இரவின் மீதும் சத்தியமாக, அது திரும்பிச் செல்லும்போது!
74:33. இரவின் மீதும் சத்தியமாக-அது பின் செல்லும்போது!
74:34
74:34 وَالصُّبْحِ اِذَاۤ اَسْفَرَۙ‏
وَالصُّبْحِ அதிகாலை மீது சத்தியமாக اِذَاۤ اَسْفَرَۙ‏ அது ஒளி வீசும் போது!
74:34. விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,
74:34. வெளிச்சமாகும் விடியற்காலை மீது சத்தியமாக!
74:34. விடியற்காலையின் மீது சத்தியமாக, அது பிரகாசமடையும்போது!
74:34. அதிகாலையின் மீதும் சத்தியமாக-அது வெளிச்சமாகும்போது!
74:35
74:35 اِنَّهَا لَاِحْدَى الْكُبَرِۙ‏
اِنَّهَا நிச்சயமாக அது لَاِحْدَى الْكُبَرِۙ‏ மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்
74:35. நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.
74:35. நிச்சயமாக அது (நரகம்) மிகப் பெரிய காரியங்களில் ஒன்றாகும்.
74:35. இந்த நரகம் மிகப்பெரியவற்றுள் ஒன்றாகும்.
74:35. நிச்சயமாக (நரகமாகிய) அது மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.
74:36
74:36 نَذِيْرًا لِّلْبَشَرِۙ‏
نَذِيْرًا எச்சரிக்கை செய்யக்கூடியதாகும் لِّلْبَشَرِۙ‏ மனிதர்களுக்கு
74:36. (அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-
74:36. அது, மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது.
74:36. அது மனிதர்களை அச்சுறுத்தக்கூடியதாகும்;
74:36. அது மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்ற நிலையில் (மிகப் பெரியதாகும்.)
74:37
74:37 لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ يَّتَقَدَّمَ اَوْ يَتَاَخَّرَؕ‏
لِمَنْ யார் شَآءَ நாடினாரோ مِنْكُمْ உங்களில் اَنْ يَّتَقَدَّمَ முன்னேறுவதற்கு اَوْ அல்லது يَتَاَخَّرَؕ‏ பின் தங்கிவிடுவதற்கு
74:37. உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).
74:37. உங்களில் எவன் (அதனளவில்) முந்திச் செல்லவோ அல்லது (அதை விட்டும்) விலகிக் கொள்ளவோ விரும்புகிறானோ அவன் அவ்வாறு செய்யவும்.
74:37. உங்களில் முன்னேறிச் செல்வதற்கோ பின்தங்கி விடுவதற்கோ விரும்பும் ஒவ்வொரு மனிதரையும் அச்சுறுத்தக் கூடியதாகும்.
74:37. உங்களில் எவர் (நன்மைக்காக) முந்திச் செல்வதற்கோ – அல்லது (நன்மையை விட்டும்) பின்தங்கிவிடுவதற்கோ விரும்புகின்றாரோ அவருக்கு (அது அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்கிறது.
74:38
74:38 كُلُّ نَفْسٍ ۢ بِمَا كَسَبَتْ رَهِيْنَةٌ ۙ‏
كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ۢ ஆன்மாவும் بِمَا كَسَبَتْ தான் செய்ததற்காக رَهِيْنَةٌ ۙ‏ பிடிக்கப்படும்
74:38. ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.
74:38. ஒவ்வொரு மனிதனும், தான் செய்யும் செயலுக்கே பிணையாளியாக இருக்கிறான்.
74:38. ஒவ்வொரு மனிதனும் தன் சம்பாத்தியத்திற்குப் பகரமாக பிணையாக இருக்கின்றான்;
74:38. ஓவ்வோர் ஆத்மாவும், தான் சம்பாதித்தவற்றுக்குப் பிணையாக்கப் பட்டதாகும்.
74:39
74:39 اِلَّاۤ اَصْحٰبَ الْيَمِيْنِۛ ؕ‏
اِلَّاۤ اَصْحٰبَ الْيَمِيْنِۛ ؕ‏ வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர
74:39. வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர
74:39. ஆயினும், (எவர்களுடைய செயலேடு வலது கையில் கொடுக்கப்பட்டதோ அவர்கள்) வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
74:39. வலப்பக்கத்தாரைத் தவிர!
74:39. ஆயினும் (வலக்கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்பட்ட) வலது சாரியினர் தவிர-
74:40
74:40 فِىْ جَنّٰتٍ ۛ يَتَسَآءَلُوْنَۙ‏
فِىْ جَنّٰتٍ ۛ சொர்க்கங்களில் يَتَسَآءَلُوْنَۙ‏ தங்களுக்குள் கேட்டுக்கொள்வார்கள்
74:40. (அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-
74:40-42,40. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.
74:40. அவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள்.
74:40. (அவர்கள்) சுவனங்களில் (இருப்பர்) அப்போது தங்களுக்குள் (விசாரித்துக்) கேட்பார்கள்.
74:41
74:41 عَنِ الْمُجْرِمِيْنَۙ‏
عَنِ الْمُجْرِمِيْنَۙ‏ பாவிகளைப் பற்றி
74:41. குற்றவாளிகளைக் குறித்து-
74:40-42,41. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.
74:41. அவர்கள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள்:
74:41. குற்றவாளிகளைப்பற்றி-
74:42
74:42 مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ‏
مَا سَلَـكَكُمْ உங்களை நுழைத்தது எது? فِىْ سَقَرَ‏ சகர் நரகத்தில்
74:42. “உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.)
74:40-42,42. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.
74:42. “உங்களை நரகத்திற்குக் கொண்டு வந்தது எது?”
74:42. “உங்களை ஸகர் எனும் நரகத்தில் புகுத்தியது எது?”
74:43
74:43 قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் لَمْ نَكُ நாங்கள் இருக்கவில்லை مِنَ الْمُصَلِّيْنَۙ‏ தொழுகையாளிகளில்
74:43. அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
74:43. அதற்கவர்கள் கூறுவார்கள்: ‘‘நாங்கள் தொழவில்லை.
74:43. அதற்கு அவர்கள் கூறுவார்கள்: “தொழக்கூடியவர்களில் நாங்கள் இருக்கவில்லை.
74:43. அ(தற்க)வர்கள், “தொழக்கூடியவர்களில் (உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுவார்கள்.
74:44
74:44 وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙ‏
وَلَمْ نَكُ இன்னும் நாங்கள் இருக்கவில்லை نُطْعِمُ உணவளிப்பவர்களாக الْمِسْكِيْنَۙ‏ ஏழைகளுக்கு
74:44. “அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.
74:44. நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை.
74:44. நாங்கள் ஏழைகளுக்கு உணவு அளிக்கவில்லை.
74:44. “இன்னும் நாங்கள் ஏழைக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்கவில்லை”
74:45
74:45 وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ‏
وَكُنَّا நாங்கள் இருந்தோம் نَخُوْضُ ஈடுபடுபவர்களாக مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ‏ வீணான காரியங்களில் ஈடுபடுவோருடன்
74:45. “(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.
74:45. வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்.
74:45. மேலும், சத்தியத்திற்கெதிராகப் பேசுகிறவர்களுடன் நாங்களும் சேர்ந்து அதில் ஈடுபட்டோம்.
74:45. “(வீணானவற்றில்) மூழ்கி இருந்தோருள் நாங்களும் மூழ்கி இருந்தோம்”
74:46
74:46 وَ كُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّيْنِۙ‏
وَ كُنَّا நாங்கள் இருந்தோம் نُكَذِّبُ பொய்ப்பிப்பவர்களாக بِيَوْمِ நாளை الدِّيْنِۙ‏ கூலி
74:46. “இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.
74:46. கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம்.
74:46. மேலும், கூலி கொடுக்கும் நாளினைப் பொய்யென்று கூறி வந்தோம்;
74:46. மேலும் “கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்குபவர்களாக இருந்தோம்.”
74:47
74:47 حَتّٰٓى اَتٰٮنَا الْيَقِيْنُؕ‏
حَتّٰٓى இறுதியாக اَتٰٮنَا எங்களுக்கு வந்தது الْيَقِيْنُؕ‏ மரணம்
74:47. “உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்” எனக் கூறுவர்).
74:47. (நாங்கள் மரணித்து) இதை உறுதியாகக் காணும் வரை (இவ்வாறே இருந்தோம்). ''(இவ்வாறு ‘சகர்' நரகவாசிகள் கூறுவார்கள்.)
74:47. அந்த உறுதியான விஷயம் எங்களை வந்தடையும் வரை!”
74:47. “எங்களுக்கு (மரணம் எனும்) உறுதி வரும்வரை (இவ்வாறு இருந்தோம்” என்றும் கூறுவார்கள்).
74:48
74:48 فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشّٰفِعِيْنَؕ‏
فَمَا تَنْفَعُهُمْ அவர்களுக்கு பலனளிக்காது شَفَاعَةُ பரிந்துரை الشّٰفِعِيْنَؕ‏ பரிந்துரை செய்பவர்களின்
74:48. ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.
74:48. ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்து பேசும் எவருடைய சிபாரிசும், அன்றைய தினம் அவர்களுக்கு ஒரு பயனுமளிக்காது.
74:48. அந்நேரத்தில் பரிந்துரை செய்வோரின் பரிந்துரை எதுவும் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது.
74:48. ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்வோரின் பரிந்துரை அவர்களுக்குப் பயனளிக்காது.
74:49
74:49 فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِيْنَۙ‏
فَمَا لَهُمْ அவர்களுக்கு என்ன ஆனது عَنِ التَّذْكِرَةِ இந்த அறிவுரையை விட்டு مُعْرِضِيْنَۙ‏ புறக்கணித்து செல்கிறார்கள்
74:49. நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?
74:49. அவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்நல்லுபதேசத்தை (இவ்வாறு) புறக்கணிக்கின்றனர்.
74:49. இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? இவர்கள் இந்த அறிவுரையைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்களே!
74:49. எனவே, நல்லுபதேசத்தை விட்டும் புறக்கணிக்கக் கூடியவர்களாக இருக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?
74:50
74:50 كَاَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنْفِرَةٌ ۙ‏
كَاَنَّهُمْ போல்/அவர்கள் حُمُرٌ கழுதைகளை مُّسْتَنْفِرَةٌ ۙ‏ பயந்துபோன
74:50. அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-
74:50. வெருண்டோடும் (காட்டுக்) கழுதையைப்போல் அவர்கள் இருக்கின்றனர்!
74:50. மிரண்டு விரண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல
74:50. அவர்கள் வெருண்டோடுகின்ற (காட்டுக்) கழுதைகளைப்போல் (இருக்கின்றனர்!)
74:51
74:51 فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ ؕ‏
فَرَّتْ விரண்டோடுகின்ற(து) مِنْ قَسْوَرَةٍ ؕ‏ சிங்கத்தைப் பார்த்து
74:51. (அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).
74:51. அதுவும், சிங்கத்தைக் கண்டு வெருண்டோடும் (கழுதையைப் போல் ஓடுகின்றனர்).
74:51. அதுவும் சிங்கத்தைக் கண்டு மிரண்டு (விரண்டோடும் காட்டுக் கழுதைகளைப் போல இருக்கின்றனர்);
74:51. (காட்டுக் கழுதைகளான) அவை சிங்கத்தைவிட்டும் வெருண்டோடின.
74:52
74:52 بَلْ يُرِيْدُ كُلُّ امْرِىٴٍ مِّنْهُمْ اَنْ يُّؤْتٰى صُحُفًا مُّنَشَّرَةً ۙ‏
بَلْ மாறாக يُرِيْدُ நாடுகின்றனர் كُلُّ امْرِىٴٍ ஒவ்வொரு மனிதனும் مِّنْهُمْ அவர்களில் اَنْ يُّؤْتٰى தனக்கு தரப்பட வேண்டும் என்று صُحُفًا ஏடுகள் مُّنَشَّرَةً ۙ‏ விரிக்கப்பட்ட
74:52. ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.
74:52. (இதுமட்டுமா?) அவர்களில் ஒவ்வொருவனும், விரித்து ஓதப்படும் ஒரு வேதம் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறான்.
74:52. அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய பெயருக்குத் திறந்த மடல் அனுப்பப்பட வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
74:52. மாறாக, அவர்களில் ஒவ்வொரு மனிதனும், விரிக்கப்பட்ட ஆகமங்கள் (தனக்கும்) கொடுக்கப்பட வேண்டும் என நாடுகிறான்.
74:53
74:53 كَلَّا ‌ؕ بَلْ لَّا يَخَافُوْنَ الْاٰخِرَةَ ؕ‏
كَلَّا ؕ அவ்வாறல்ல بَلْ மாறாக لَّا يَخَافُوْنَ அவர்கள் பயப்படுவதில்லை الْاٰخِرَةَ ؕ‏ மறுமையை
74:53. அவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.
74:53. அவ்வாறு ஒருகாலும் நடக்கப்போவதில்லை. மாறாக இவர்கள் மறுமையைப் பற்றி பயப்படுவதேயில்லை.
74:53. ஒருபோதுமில்லை! உண்மை யாதெனில், இவர்கள் மறுமையைக் குறித்துப் பயப்படுவதில்லை.
74:53. (அது நடக்கப்போவது) இல்லை! மாறாக, மறுமையைப்பற்றி அவர்கள் பயப்படுவதில்லை.
74:54
74:54 كَلَّاۤ اِنَّهٗ تَذْكِرَةٌ‌ ۚ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّهٗ நிச்சயமாக இது تَذْكِرَةٌ‌ ۚ‏ ஒரு நல்லுபதேசமாகும்
74:54. அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.
74:54. அவ்வாறு ஒருகாலும் நடக்கப் போவதில்லை. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமே ஆகும்.
74:54. ஒருபோதுமில்லை! இது ஓர் அறிவுரையே ஆகும்.
74:54. நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.
74:55
74:55 فَمَنْ شَآءَ ذَكَرَهٗ ؕ‏
فَمَنْ شَآءَ யார் நாடுகின்றாரோ ذَكَرَهٗ ؕ‏ இதன் மூலம் உபதேசம் பெறுவார்
74:55. (எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,
74:55. (நல்லுபதேசம் பெற) விரும்பியவன் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும்.
74:55. இனி எவர் விரும்புகின்றாரோ அவர் இதிலிருந்து படிப்பினை பெற்றுக்கொள்ளட்டும்.
74:55. (உபதேசம் பெற) யார் நாடுகிறாரோ அவர் இதனை நினைவில் வைத்து (உபதேசம் பெற்று)க் கொள்ளவும்.
74:56
74:56 وَمَا يَذْكُرُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ‌ ؕ هُوَ اَهْلُ التَّقْوٰى وَاَهْلُ الْمَغْفِرَةِ‏
وَمَا يَذْكُرُوْنَ اِلَّاۤ உபதேசம் பெறமாட்டார்கள்/தவிர اَنْ يَّشَآءَ اللّٰهُ‌ ؕ அல்லாஹ் நாடினால் هُوَ அவன்தான் اَهْلُ التَّقْوٰى அஞ்சுவதற்கு(ம்) மிகத் தகுதியானவன் وَاَهْلُ الْمَغْفِرَةِ‏ மன்னிப்பதற்கும் மிகத் தகுதியானவன்
74:56. இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன்; அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.
74:56. அல்லாஹ் நாடினால் தவிர, அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது.(படைப்பினங்கள்) அஞ்சுவதற்கு அவனே தகுதியானவன், (படைப்பினங்களை) மன்னிப்பதற்கும் அவனே தகுதியானவன்.
74:56. இவர்கள் எந்தப் படிப்பினையும் பெறமாட்டார்கள்; அல்லாஹ் அதை நாடினாலே தவிர! அஞ்சப்படுவதற்குத் தகுதியுடையவன் அவன் ஒருவனே! தனக்கு அஞ்சுபவர்களை மன்னிப்பதற்கு அவனே தகுதியுடையவனாக இருக்கின்றான்.
74:56. இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற மாட்டார்கள், அவனே, பயப்படுவதற்குரியவனும் (விசுவாசிகளை) மன்னிப்பதற்குரியவனும் ஆவான்.