77. ஸூரத்துல் முர்ஸலாத் (அனுப்பப்படுபவை)
மக்கீ, வசனங்கள்: 50

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
77:1
77:1 وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۙ‏
وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۙ‏ தொடர்ச்சியாக வீசுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
77:1. தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக-
77:1. நன்மைக்காக அனுப்பப்படுபவர்கள் மீது சத்தியமாக!
77:1. தொடர்ந்து அனுப்பப்படுகின்ற காற்றுகள் மீது சத்தியமாக;
77:1. தொடர்ச்சியாக (ஒன்றன் பின் ஒன்றாக) அனுப்பப்படுபவைகளின் மீது சத்தியமாக-
77:2
77:2 فَالْعٰصِفٰتِ عَصْفًا ۙ‏
فَالْعٰصِفٰتِ عَصْفًا ۙ‏ அதிவேகமாக வீசுகின்ற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!
77:2. வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
77:2. இன்னும் அதி வேகமாகச் செல்லும் (புயல்) காற்றுகள் மீது சத்தியமாக!
77:2. பிறகு, புயல் வேகத்தில் வீசுகின்றவற்றின் மீது சத்தியமாக;
77:2. வீசும் கடும்புயல் காற்றுகளின் மீது சத்தியமாக!
77:3
77:3 وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۙ‏
وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۙ‏ பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!
77:3. (மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
77:3. (மேகங்களை பல திசைகளில்) பரப்பிவிடுபவர்கள் மீதும் சத்தியமாக!
77:3. (மேகங்களை) பரப்புகின்றவற்றின் மீது சத்தியமாக;
77:3. (மேகங்களைக்) கிளப்பி பரப்பிவிடுபவைகளின் மீது சத்தியமாக!
77:4
77:4 فَالْفٰرِقٰتِ فَرْقًا ۙ‏
فَالْفٰرِقٰتِ فَرْقًا ۙ‏ தெளிவாக பிரித்துவிடக்கூடியவற்றின் மீது சத்தியமாக!
77:4. (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
77:4. (உண்மை, பொய்களுக்கிடையில்) தெளிவாகப் பிரித்தறிவிப்பவை(யான வேதங்கள்) மீதும் சத்தியமாக!
77:4. பிறகு, அவற்றைத் துண்டு துண்டாகப் பிளக்கின்றவற்றின் மீது சத்தியமாக;
77:4. (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறு படுத்திக் காட்டு(ம் வஹீ எனும் கட்டளையைக் கொண்டு இறங்கு)பவர்கள் மீது சத்தியமாக!
77:5
77:5 فَالْمُلْقِيٰتِ ذِكْرًا ۙ‏
فَالْمُلْقِيٰتِ ذِكْرًا ۙ‏ இறக்குகின்றவர்கள் மீது சத்தியமாக!
77:5. (இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
77:5,6,5. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
77:5. பிறகு, (இதயங்களில் இறைவனின்) நினைவை உண்டாக்குபவைமீது சத்தியமாக;
77:5. (தூதர்கள்பால்) வஹீயைக் கொண்டுவந்து கொடுப்பவர்கள் மீது சத்தியமாக!
77:6
77:6 عُذْرًا اَوْ نُذْرًا ۙ‏
عُذْرًا ஒரு காரணமாக اَوْ அல்லது نُذْرًا ۙ‏ எச்சரிக்கையாக இருப்பதற்காக!
77:6. (அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
77:5,6,6. மன்னிப்பு அல்லது எச்சரிக்கையாக இருக்கும் நல்லுரைகளை (வஹ்யின் மூலம் இறைத்தூதர்களுக்கு) எடுத்துரைப்பவர்கள் மீதும் சத்தியமாக!
77:6. மன்னிப்புப் பெறுவதற்காக அல்லது அச்சமூட்டி எச்சரிப்பதற்காக!
77:6. (அந்த வஹீயின் மூலம் அறிவிக்கப்பட்டவை) மன்னிப்பாக அல்லது எச்சரிக்கையாக இருக்கும்.
77:7
77:7 اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ؕ‏
اِنَّمَا تُوْعَدُوْنَ நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது لَوَاقِعٌ ؕ‏ நிகழ்ந்தே தீரும்
77:7. நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
77:7. நிச்சயமாக உங்களுக்குப் பயமுறுத்தப்படும் (நாள்) வந்தே தீரும்.
77:7. எதைப் பற்றி உங்களிடம் வாக்களிக்கப்படுகின்றதோ, அது திண்ணமாக நிகழக்கூடியதே!
77:7. நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் நிகழக்கூடியதேயாகும்.
77:8
77:8 فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ‏
فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْۙ‏ நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது
77:8. இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
77:8. அந்நேரத்தில், நட்சத்திரங்கள் அழிக்கப்பட்டுவிடும்.
77:8. பிறகு, நட்சத்திரங்கள் ஒளியிழந்து போகும்பொழுது,
77:8. ஆகவே, நட்சத்திரங்கள் -(அவற்றின் ஒளி) அழிக்கப்பட்டுவிடும்போது-
77:9
77:9 وَ اِذَا السَّمَآءُ فُرِجَتْۙ‏
وَ اِذَا السَّمَآءُ فُرِجَتْۙ‏ வானம் பிளக்கப்படும் போது
77:9. மேலும், வானம் பிளக்கப்படும் போது-
77:9. அப்போது வானம் திறக்கப்பட்டுவிடும்.
77:9. வானம் பிளக்கப்படும்பொழுது,
77:9. மேலும், வானம் - அது பிளக்கப்பட்டுவிடும்போது-
77:10
77:10 وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ‏
وَاِذَا الْجِبَالُ نُسِفَتْۙ‏ மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது
77:10. அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
77:10. அப்போது மலைகள் (தூசிகளைப் போல்) தவிடு பொடியாக்கப்படும்.
77:10. மலைகள் தூள்தூளாக் கப்படும்பொழுது,
77:10. இன்னும், மலைகள் (தூசிகளைப்போன்று) பறக்கடிக்கப்பட்டு விடும்போது-
77:11
77:11 وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْؕ‏
وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْؕ‏ தூதர்கள் ஒன்று சேர்க்கப்படும்போது
77:11. மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
77:11. அப்போது தூதர்கள் விசாரணைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.
77:11. இறைத்தூதர்கள் ஆஜராகும் நேரம் வரும் பொழுது (அது நிகழ்ந்துவிடும்).
77:11. மேலும், தூதர்களுக்கு நேரம் குறிக்கப்பட்டு விடும்போது-
77:12
77:12 لِاَىِّ يَوْمٍ اُجِّلَتْؕ‏
لِاَىِّ يَوْمٍ எந்த நாளுக்காக? اُجِّلَتْؕ‏ அவர்கள் தாமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்
77:12. எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
77:12. (இவை எல்லாம்) எதுவரை பிற்படுத்தப்பட்டிருக்கின்றன (என்பதை நபியே! நீர் அறிவீரா)?
77:12. எந்த நாளுக்காக இந்தக் காரியம் பிற்படுத்தப்பட்டுள்ளது?
77:12. எந்த நாளுக்காக (இவை யாவும்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
77:13
77:13 لِيَوْمِ الْفَصْلِ‌ۚ‏
لِيَوْمِ الْفَصْلِ‌ۚ‏ தீர்ப்பு நாளுக்காக
77:13. தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
77:13. தீர்ப்பு கூறப்படும் நாள் வரைதான்!
77:13. தீர்ப்பு நாளுக்காகத் தான்!
77:13. தீர்ப்பு நாளுக்காக (பிற்படுத்தப்பட்டன என்று கூறப்படும்)
77:14
77:14 وَمَاۤ اَدْرٰٮكَ مَا يَوْمُ الْفَصْلِؕ‏
وَمَاۤ اَدْرٰٮكَ உமக்குத் தெரியுமா? مَا يَوْمُ الْفَصْلِؕ‏ தீர்ப்பு நாள் என்னவென்று
77:14. மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
77:14. (நபியே!) தீர்ப்பு கூறப்படும் நாளின் தன்மையை நீர் அறிவீரா?.
77:14. அந்தத் தீர்ப்புநாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?
77:14. மேலும் (நபியே!) தீர்ப்பு (க்கூறப்படும்) நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
77:15
77:15 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:15. (நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
77:15. (நம் வசனங்களைப்) பொய்யாக்கியவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:15. பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:15. (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:16
77:16 اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِيْنَؕ‏
اَلَمْ نُهْلِكِ நாம் அழிக்கவில்லையா? الْاَوَّلِيْنَؕ‏ முன்னோர்களை
77:16. முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
77:16. (அதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தவர்களையும் நாம் அழித்துவிடவில்லையா?
77:16. நாம் முன் சென்றோரை அழிக்கவில்லையா, என்ன?
77:16. (அதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்த) முன்னிருந்தோரை, நாம் அழிக்கவில்லையா?
77:17
77:17 ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِيْنَ‏
ثُمَّ பிறகு نُتْبِعُهُمُ அவர்களுக்கு பின்தொடர வைத்தோம் الْاٰخِرِيْنَ‏ பின்னோர்களை
77:17. பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
77:17. அதற்கு பின்னுள்ளவர்களையும் (அழிந்து போன அவர்களைப்) பின்தொடரும்படி நாம் செய்வோம்,
77:17. பின்னர் அவர்களின் அடிச்சுவட்டில்தானே பின்வருவோரையும் நடக்கச் செய்வோம்!
77:17. பின்னர், பின்னுள்ளோரை (அழிக்கப்பட்ட) அவர்களைப் பின் தொடருமாறு நாம் செய்தோம்.
77:18
77:18 كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ‏
كَذٰلِكَ இவ்வாறுதான் نَفْعَلُ நாம் செய்வோம் بِالْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளுக்கு
77:18. குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
77:18. (அவர்களையும் அழித்தோம்.) அவ்வாறே, இக்குற்றவாளிகளையும் நாம் (அழிந்துபோகச்) செய்வோம்.
77:18. குற்றவாளிகளிடம் நாம் இப்படித்தான் நடந்துகொள்கின்றோம்.
77:18. குற்றவாளிகளை அவ்வாறுதான் நாம் (அழித்து நாசம்) செய்வோம்.
77:19
77:19 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான்! يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:19. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:19. ஆகவே, (நம் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
77:19. பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:19. (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:20
77:20 اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِيْنٍۙ‏
اَلَمْ نَخْلُقْكُّمْ நாம் உங்களை படைக்கவில்லையா? مِّنْ مَّآءٍ ஒரு நீரிலிருந்து مَّهِيْنٍۙ‏ பலவீனமான
77:20. அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
77:20. ஓர் அற்பத் துளியைக் கொண்டு நாம் உங்களைப் படைக்கவில்லையா?
77:20. என்ன, நாம் உங்களை அற்பமானதொரு நீரிலிருந்து படைக்கவில்லையா?
77:20. இழிவான நீரிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
77:21
77:21 فَجَعَلْنٰهُ فِىْ قَرَارٍ مَّكِيْنٍۙ‏
فَجَعَلْنٰهُ அதை வைத்தோம் فِىْ قَرَارٍ ஓர் இடத்தில் مَّكِيْنٍۙ‏ உறுதியான
77:21. பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
77:21,22,21. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,
77:21. மேலும், அதனை பாதுகாப்பான ஓர் இடத்தில் வைக்கவில்லையா
77:21. பின்னர், அதனைப் பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப் பையில்) ஆக்கினோம்.
77:22
77:22 اِلٰى قَدَرٍ مَّعْلُوْمٍۙ‏
اِلٰى قَدَرٍ ஒரு தவணை வரை مَّعْلُوْمٍۙ‏ குறிப்பிட்ட
77:22. ஒரு குறிப்பிட்ட (கால) அளவு வரை.
77:21,22,22. அதை(ப் பத்திரமாக) உறுதிமிக்க (கர்ப்ப) ஸ்தானத்தில் குறிப்பிட்ட காலம் வரை தங்கும்படி நாம் செய்தோம்,
77:22. ஒரு குறிப்பிட்ட காலம்வரை.
77:22. குறிப்பிட்ட (கால) அளவு வரை,
77:23
77:23 فَقَدَرْنَا ۖ فَنِعْمَ الْقٰدِرُوْنَ‏
فَقَدَرْنَا ۖ நாம் திட்டமிட்டோம் فَنِعْمَ الْقٰدِرُوْنَ‏ நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்
77:23. இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
77:23. பின்னர் நாமே அதை (மனிதனாகவும்) நிர்ணயம் செய்தோம். நிர்ணயம் செய்பவர்களில் நாமே மிக மேலானோர்.
77:23. (இதோ பாருங்கள்!) நாம் இதற்கான ஆற்றலுடையவர்கள்தாம். ஆம்! நாம் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவர்கள்தாம்!
77:23. பின்னர், நாமே அதனை (சிசுவாக) ஏற்படுத்தினோம்; ஏற்படுத்துவோரில் (நாம்) நல்லோராவோம்.
77:24
77:24 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:24. பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:24. ஆகவே, (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
77:24. பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:24. (ஆகவே இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
77:25
77:25 اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۙ‏
اَلَمْ نَجْعَلِ நாம் ஆக்கவில்லையா? الْاَرْضَ பூமியை كِفَاتًا ۙ‏ ஒன்று சேர்க்கக்கூடியதாக
77:25. பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
77:25,26,25. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?
77:25. நாம் பூமியை ஒன்று திரட்டி வைக்கக்கூடியதாக ஆக்கவில்லையா?
77:25. அணைத்துக் கொள்ளக்கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?
77:26
77:26 اَحْيَآءً وَّاَمْوَاتًا ۙ‏
اَحْيَآءً உயிருள்ளவர்களையும் وَّاَمْوَاتًا ۙ‏ இறந்தவர்களையும்
77:26. உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
77:25,26,26. பூமியை, (உங்களில்) உயிரோடு இருப்பவர்களுக்கும், மரணித்தவர்களுக்கும் இடமளிக்கக்கூடியதாக நாம் ஆக்கி வைக்கவில்லையா?
77:26. உயிருள்ளவர்களையும் மரித்தவர்களையும்.
77:26. உயிரோடிருப்போரையும், மரணித்தோரையும் (அணைத்துக் கொள்ளக் கூடியதாக அதை நாம் ஆக்கினோம்.)
77:27
77:27 وَّجَعَلْنَا فِيْهَا رَوَاسِىَ شٰمِخٰتٍ وَّ اَسْقَيْنٰكُمْ مَّآءً فُرَاتًا ؕ‏
وَّجَعَلْنَا நாம் ஆக்கினோம் فِيْهَا அதில் رَوَاسِىَ மலைகளை شٰمِخٰتٍ மிக பிரமாண்டமான وَّ اَسْقَيْنٰكُمْ இன்னும் உங்களுக்கு புகட்டினோம் مَّآءً நீரை فُرَاتًا ؕ‏ மதுரமான
77:27. அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
77:27. அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து (அவற்றிலிருந்து) மதுரமான நீரையும் உங்களுக்குப் புகட்டுகிறோம்.
77:27. மேலும், மிக உயர்ந்த மலைகளை அதில் நாம் நாட்டவில்லையா? உங்களுக்கு சுவையான நீரைப் புகட்டவும் இல்லையா, என்ன?
77:27. மேலும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் அமைத்து, இனிமையான நீரையும் (அவற்றிலிருந்து) உங்களுக்குப் புகட்டுகின்றோம்.
77:28
77:28 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:28. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:28. (நம் அருட்கொடைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
77:28. பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:28. (நம்முடைய இவ்வருட்கொடையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
77:29
77:29 اِنْطَلِقُوْۤا اِلٰى مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ‌ۚ‏
اِنْطَلِقُوْۤا செல்லுங்கள் اِلٰى مَا எதன் பக்கம் كُنْتُمْ இருந்தீர்களோ بِهٖ அதை تُكَذِّبُوْنَ‌ۚ‏ பொய்ப்பிப்பவர்களாக
77:29. “நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
77:29. ‘‘எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அதன் பாலே நீங்கள் செல்லுங்கள்.
77:29. இப்போது செல்லுங்கள், நீங்கள் எதனைப் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்களோ அதன் பக்கம்!
77:29. (மறுமையில் இவர்களிடம்) எ(ந்த நரகத்)தை நீங்கள் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அதன்பாலே நீங்கள் நடந்து செல்லுங்கள் (என்றும்)
77:30
77:30 اِنْطَلِقُوْۤا اِلٰى ظِلٍّ ذِىْ ثَلٰثِ شُعَبٍۙ‏
اِنْطَلِقُوْۤا செல்லுங்கள் اِلٰى ظِلٍّ புகையின் பக்கம் ذِىْ உடைய ثَلٰثِ மூன்று شُعَبٍۙ‏ கிளைகளை
77:30. மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.
77:30. மூன்று கிளைகளையுடைய (நரகத்தின்) புகையின் நிழலின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்'' (என்றும் கூறப்படும்).
77:30. செல்லுங்கள், மூன்று கிளைகளையுடைய நிழலின் பக்கம்!
77:30. மூன்று கிளைகளையுடைய (நரகப் புகையின்) நிழலின்பால் நீங்கள் நடந்து செல்லுங்கள் (என்றும் அவர்களுக்குக் கூறப்படும்.)
77:31
77:31 لَّا ظَلِيْلٍ وَّلَا يُغْنِىْ مِنَ اللَّهَبِؕ‏
لَّا ظَلِيْلٍ நிழல்தரக் கூடியது அல்ல وَّلَا يُغْنِىْ அது தடுக்காது مِنَ اللَّهَبِؕ‏ ஜுவாலையை
77:31. (அது) நிழலளிப்பதுமல்ல; (நரகின்) தீச்சுவாலையை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
77:31. அதில் (குளிர்ச்சிதரும்) நிழலுமிராது; உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய எதுவுமிராது.
77:31. அது குளிரச் செய்யக்கூடியதுமன்று, தீச்சுவாலையிலிருந்து காப்பாற்றக்கூடியதுமன்று.
77:31. (அது குளிர்ச்சி தரும்) நிழல் தரக்கூடியதல்ல; தீச்சுவாலையிலிருந்து அது காக்கக்கூடியதுமல்ல.
77:32
77:32 اِنَّهَا تَرْمِىْ بِشَرَرٍ كَالْقَصْرِ‌ۚ‏
اِنَّهَا நிச்சயமாக அது تَرْمِىْ எறியும் بِشَرَرٍ நெருப்பு கங்குகளை كَالْقَصْرِ‌ۚ‏ மாளிகையைப் போல் உள்ள
77:32. நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
77:32. (எனினும்,) பெரிய மாளிகைகளைப்போன்ற நெருப்புக் கங்குகளை அது கக்கிக் கொண்டே இருக்கும்.
77:32. அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்.
77:32. (எனினும்) நிச்சயமாக அது-(பெரிய) மாளிகையைப் போன்ற நெருப்புப் பொறிகளை அது வீசி எறியும்.
77:33
77:33 كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ؕ‏
كَاَنَّهٗ போல்/அவையோ جِمٰلَتٌ ஒட்டகைகளை صُفْرٌ ؕ‏ கரு மஞ்சள் நிற
77:33. நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
77:33. அவை மஞ்சள் நிறமுள்ள (பெரிய) ஒட்டகங்களைப் போல் தோன்றும்.
77:33. அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போலிருக்கும்.
77:33. நிச்சயமாக அது மஞ்சள் நிறமான (பெரிய) ஒட்டகங்களைப்போல் இருக்கும்.
77:34
77:34 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:34. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:34. (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
77:34. பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:34. (இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:35
77:35 هٰذَا يَوْمُ لَا يَنْطِقُوْنَۙ‏
هٰذَا இது يَوْمُ நாளாகும் لَا يَنْطِقُوْنَۙ‏ அவர்கள் பேசாத
77:35. இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.
77:35. இது ஒரு நாளாகும். (இந்நாளில் எதுவுமே) அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.
77:35. இது எத்தகைய நாள் எனில், இதில் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்;
77:35. இது அவர்கள் பேச முடியாத நாளாகும்.
77:36
77:36 وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَـعْتَذِرُوْنَ‏
وَلَا يُؤْذَنُ அனுமதி தரப்படாது لَهُمْ அவர்களுக்கு فَيَـعْتَذِرُوْنَ‏ அவர்கள் காரணம் கூறுவதற்கு
77:36. அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகல் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
77:36. மேலும், புகல் கூறவும் அவர்களுக்கு அனுமதி கிடைக்காது.
77:36. எந்தச் சாக்குப்போக்கும் கூறிட அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது.
77:36. அன்றியும், அவர்களுக்கு (எதுவும் கூற) அனுமதிக்கப்படமாட்டாது; (அவ்வாறிருந்தும் வேதனை தாங்காது) அவர்கள் புகல் கூறுவர்.
77:37
77:37 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:37. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:37. (இவற்றைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
77:37. பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:37. (இவைகளைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:38
77:38 هٰذَا يَوْمُ الْفَصْلِ‌ۚ جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِيْنَ‏
هٰذَا இது يَوْمُ நாளாகும் الْفَصْلِ‌ۚ தீர்ப்பு جَمَعْنٰكُمْ உங்களை(யும்) ஒன்று சேர்த்துள்ளோம் وَالْاَوَّلِيْنَ‏ முன்னோரையும்
77:38. இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
77:38. இதுவே தீர்ப்பு நாள். உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (விசாரணைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிடுவோம்.
77:38. இது தீர்ப்பளிக்கும் நாளாகும். நாம் உங்களையும் உங்களுக்கு முன் சென்றவர்களையும் ஒன்று திரட்டியுள்ளோம்.
77:38. இது தீர்ப்பு நாள், உங்களையும், (உங்களுக்கு) முன்னுள்ளோரையும் (அந்நாளைக்காக) நாம் ஒன்று சேர்த்துவிட்டோம்.
77:39
77:39 فَاِنْ كَانَ لَـكُمْ كَيْدٌ فَكِيْدُوْنِ‏
فَاِنْ كَانَ இருந்தால் لَـكُمْ உங்களிடம் كَيْدٌ ஒரு சூழ்ச்சி فَكِيْدُوْنِ‏ எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள்
77:39. எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
77:39. ஆகவே, (அந்நாளில் அவர்களை நோக்கி, ‘‘தப்பித்துக் கொள்ள) நீங்கள் ஏதும் சூழ்ச்சி செய்யக் கூடுமானால் சூழ்ச்சி செய்து பாருங்கள்'' (என்றும் கூறப்படும்).
77:39. இப்போது உங்களால் ஏதேனும் சூழ்ச்சி செய்ய முடியுமெனில், எனக்கெதிராக சூழ்ச்சி செய்து பாருங்கள்!
77:39. ஆகவே, (“தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள) உங்களிடம் ஏதும் சூழ்ச்சி இருந்தால் என்னிடம் சூழ்ச்சி செய்து பாருங்கள்” (என்றும் கூறப்படும்)
77:40
77:40 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:40. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:40. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:40. பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:40. பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:41
77:41 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ ظِلٰلٍ وَّعُيُوْنٍۙ‏
اِنَّ நிச்சயமாக الْمُتَّقِيْنَ இறையச்சமுடையவர்கள் فِىْ ظِلٰلٍ நிழல்களிலும் وَّعُيُوْنٍۙ‏ ஊற்றுகளிலும்
77:41. நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
77:41. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள், நிச்சயமாக (அந்நாளில் சொர்க்கத்திலுள்ள மரங்களின்) நிழல்களிலும் (அதன் அடியில் உள்ள) ஊற்றுக்களிலும் இருப்பார்கள்.
77:41. இறையச்சம் கொண்டோர் (இன்று) நிழல்களிலும், ஊற்றுகளிலும் தங்கி வாழ்கிறார்கள்.
77:41. நிச்சயமாக பயபக்தியுடையோர்கள், (அந்நாளில் சுவனபதியிலுள்ள மாளிகைகளை, மரங்களின், நிழல்களிலும், ஊற்றுகளின் அருகிலும்) இருப்பார்கள்-
77:42
77:42 وَّفَوَاكِهَ مِمَّا يَشْتَهُوْنَؕ‏
وَّفَوَاكِهَ பழங்களிலும் مِمَّا يَشْتَهُوْنَؕ‏ அவர்கள் விரும்புகின்ற
77:42. இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
77:42. அவர்கள் விரும்பிய கனிவர்க்கங்கள் அவர்களுக்குண்டு.
77:42. மேலும், அவர்கள் விரும்பும் பழங்கள் (அவர்களுக்காக உள்ளன).
77:42. அவர்கள் விரும்பியவற்றிலுள்ள கனிகளி(லிருந்து புசித்து இன்புறு)வதிலும் இருப்பார்கள்.
77:43
77:43 كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْٓئًا ۢ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
كُلُوْا உண்ணுங்கள் وَاشْرَبُوْا இன்னும் பருகுங்கள் هَنِيْٓئًا ۢ இன்பமாக بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு பகரமாக
77:43. “நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என்று கூறப்படும்).
77:43. (அவர்களை நோக்கி,) ‘‘நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மையின் காரணமாக, மிக தாராளமாக இவற்றைப் புசித்துப் பருகிக் கொண்டிருங்கள்'' (என்று கூறப்படும்).
77:43. நன்கு உண்ணுங்கள்; பருகுங்கள்; நீங்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்குப் பரிசாக!
77:43. (“உலகில் நற்செயல்களை) நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக இன்பமாக உண்ணுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்.)
77:44
77:44 اِنَّا كَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
اِنَّا நிச்சயமாக நாம் كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி கொடுப்போம் الْمُحْسِنِيْنَ‏ நல்லறம் புரிபவர்களுக்கு
77:44. நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
77:44. இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுப்போம்.
77:44. நாம் நல்லவர்களுக்கு இத்தகைய கூலியைத்தான் வழங்குகின்றோம்.
77:44. இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நிச்சயமாக நாம் கூலி வழங்குவோம்.
77:45
77:45 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:45. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:45. (இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
77:45. பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:45. (இதனைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:46
77:46 كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِيْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ‏
كُلُوْا உண்ணுங்கள் وَتَمَتَّعُوْا இன்புறுங்கள் قَلِيْلًا கொஞ்ச காலம் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مُّجْرِمُوْنَ‏ குற்றவாளிகள்
77:46. (பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
77:46. (இதைப் பொய்யாக்குபவர்களே! இம்மையில்) நீங்கள் புசித்துச் சிறிது சுகமனுபவித்துக் கொள்ளுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள்தான்.
77:46. உண்ணுங்கள்; சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள், சில நாட்களுக்கு! உண்மையில் நீங்கள் குற்றவாளிகள்தாம்.
77:46. (நம் அத்தாட்சிகளைப்) பொய்யாக்குபவர்களே! உலகில்) நீங்கள் புசியுங்கள், கொஞ்சம் சுகமும் அனுபவியுங்கள்; நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே-
77:47
77:47 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ நாசம்தான் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:47. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:47. (இறைவனின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
77:47. பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவு தான்!
77:47. (அல்லாஹ்வின் வசனங்களைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:48
77:48 وَاِذَا قِيْلَ لَهُمُ ارْكَعُوْا لَا يَرْكَعُوْنَ‏
وَاِذَا قِيْلَ சொல்லப்பட்டால் لَهُمُ அவர்களுக்கு ارْكَعُوْا தொழுங்கள் لَا يَرْكَعُوْنَ‏ தொழ மாட்டார்கள்
77:48. “நீங்கள் குனிந்து வணங்குங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
77:48. அவர்களை நோக்கி, ‘‘(இறைவன் முன்) நீங்கள் குனிந்து வணங்குங்கள்'' என்று கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கவே மாட்டார்கள்.
77:48. “(அல்லாஹ்வின் திருமுன்) அடிபணிந்து விடுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அடிபணிவதில்லை.
77:48. மேலும், அவர்களிடம், “நீங்கள் குனிந்து (தொழுது) கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டால், அவர்கள் (தொழுது) குனியமாட்டார்கள்.
77:49
77:49 وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَ‏
وَيْلٌ எந்த குர்ஆனை يَّوْمَٮِٕذٍ அந்நாளில் لِّلْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களுக்கு
77:49. பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:49. (அவனுடைய இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
77:49. பொய்யென்று வாதிடுபவர்களுக்கு அந்நாளில் அழிவுதான்!
77:49. (அவனது இக்கட்டளையைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:50
77:50 فَبِاَىِّ حَدِيْثٍۢ بَعْدَهٗ يُؤْمِنُوْنَ‏
فَبِاَىِّ حَدِيْثٍۢ எந்த குர்ஆனை بَعْدَهٗ இதற்குப் பின்னர் يُؤْمِنُوْنَ‏ இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்
77:50. எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?
77:50. இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ!
77:50. இனி, இதற்குப் பின் (இந்தக் குர்ஆனுக்குப்பின்) இவர்கள் எந்த வாக்கின் மீதுதான் நம்பிக்கை கொள்ளப் போகின்றார்கள்?
77:50. எனவே (குர் ஆனாகிய) இதற்குப் பின்னர், எவ்விஷயத்தைத்தான் அவர்கள் விசுவாசிப்பார்கள்?