80. ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)
மக்கீ, வசனங்கள்: 42

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
80:1
80:1 عَبَسَ وَتَوَلّٰٓىۙ‏
عَبَسَ கடுகடுத்தார் وَتَوَلّٰٓىۙ‏ இன்னும் புறக்கணித்தார்
80:1. அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:1. (நம் நபி) கடுகடுத்தார்; புறக்கணித்தார். (எதற்காக?)
80:1. முகம் சுளித்தார்; மேலும், புறக்கணித்தார்,
80:1. (நமது நபியாகிய) அவர் கடுகடுத்தார்; மேலும், புறக்கணித்தார்.
80:2
80:2 اَنْ جَآءَهُ الْاَعْمٰىؕ‏
اَنْ جَآءَهُ அவரிடம் வந்ததற்காக الْاَعْمٰىؕ‏ பார்வையற்றவர்
80:2. அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:2. தன்னிடம் ஓர் பார்வையற்றவர் வந்ததற்காக.
80:2. அந்தப் பார்வையிழந்தவர் அவரிடம் வந்ததற்காக!
80:2. தன்னிடம் பார்வையிழந்தவர் வந்ததற்காக-
80:3
80:3 وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏
وَمَا يُدْرِيْكَ இன்னும் நீர் அறிவீரா? لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏ அவர் பரிசுத்தமடையலாம்
80:3. (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:3. (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக இருக்கலாம் என்பதை நீர் அறிவீரா?
80:3. அவர் சீர்திருந்தக்கூடும்
80:3. (நபியே! உம்மிடம் வந்த) அவர் பரிசுத்தவானாக ஆகிவிடக் கூடும் என்பதை உமக்கு எது அறிவித்தது?
80:4
80:4 اَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰىؕ‏
اَوْ அல்லது يَذَّكَّرُ அவர் அறிவுரை பெறுவார் فَتَنْفَعَهُ அவருக்கு பலனளிக்கலாம் الذِّكْرٰىؕ‏ அறிவுரை
80:4. அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
80:4. அல்லது அவர் நல்லுணர்வு பெறுவார். (உமது) நல்லுபதேசம் அவருக்குப் பயனளிக்கலாம் (என்பதை நீர் அறிவீரா? அவ்வாறிருக்க, அவரை நீர் ஏன் கடுகடுத்துப் புறக்கணித்தீர்?)
80:4. அல்லது அறிவுரைக்குச் செவி சாய்க்கக்கூடும்; அந்த அறிவுரை அவருக்குப் பயனளித்திருக்கும் என்பது பற்றி உமக்குத் தெரியுமா, என்ன?
80:4. அல்லது அவர் (உம்முடைய உபதேசத்தை) நினைவுபடுத்திக் கொள்பவராகலாம்; அப்போது அவ்வுபதேசம் அவருக்குப் பயனளிக்கும்.
80:5
80:5 اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ‏
اَمَّا مَنِ ஆக, எவன் اسْتَغْنٰىۙ‏ தேவையற்றவனாகக் கருதினானோ
80:5. (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
80:5. (நபியே! மார்க்கத்தை) எவன் அலட்சியம் செய்கிறானோ,
80:5. எவன் அலட்சியம் செய்கின்றானோ
80:5. ஆகவே, எவன் பொருளாதார மேம்பாடு உடையவனோ-
80:6
80:6 فَاَنْتَ لَهٗ تَصَدّٰىؕ‏
فَاَنْتَ நீர் لَهٗ அவனை تَصَدّٰىؕ‏ முன்னோக்குகிறீர்
80:6. நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:6. அவனை வரவேற்பதில் நீர் அதிக சிரமத்தை எடுத்துக் கொள்கிறீர்.
80:6. அவன் பக்கம் நீர் கவனம் செலுத்துகின்றீர்.
80:6. அவனுக்காக நீர் செவிமடுக்கிறீர்.
80:7
80:7 وَمَا عَلَيْكَ اَلَّا يَزَّكّٰٓىؕ‏
وَمَا இன்னும் இல்லை عَلَيْكَ உம்மீது اَلَّا يَزَّكّٰٓىؕ‏ அவன் பரிசுத்தமடையாதது
80:7. ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:7. அவன் பரிசுத்தவானாக ஆகாவிட்டால் அதைப் பற்றி உம் மீது ஒரு குற்றமும் இல்லை(யே)!
80:7. அவன் திருந்தாவிட்டால் அதற்கு நீர் பொறுப்பாளியா, என்ன?
80:7. மேலும், அவன் (இஸ்லாத்தை ஏற்காது) பரிசுத்தம் அடையாவிட்டால் உம்மீது குற்றமில்லை.
80:8
80:8 وَاَمَّا مَنْ جَآءَكَ يَسْعٰىۙ‏
وَاَمَّا مَنْ ஆக, எவர் جَآءَ வந்தாரோ كَ உம்மிடம் يَسْعٰىۙ‏ விரைந்தவராக
80:8. ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:8. எவர் (தானாகவே) உம்மிடம் ஓடி வருகிறாரோ,
80:8. மேலும், எவர் உம்மிடம் விரைந்து வருகின்றாரோ
80:8. இன்னும், எவர் உம்மிடம் விரைந்தவராக வந்தாரோ அவர்,
80:9
80:9 وَهُوَ يَخْشٰىۙ‏
وَهُوَ அவரோ يَخْشٰىۙ‏ பயப்படுகிறவராக
80:9. அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:9. அவர்தான் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறவர்.
80:9. (இறைவனை) அஞ்சியவராக
80:9. அவரோ (அல்லாஹ்வைப்) பயந்த நிலையில் (உம்மிடம் வர)
80:10
80:10 فَاَنْتَ عَنْهُ تَلَهّٰى‌ۚ‏
فَاَنْتَ நீர் عَنْهُ அவரை تَلَهّٰى‌ۚ‏ அலட்சியப்படுத்துகிறீர்
80:10. அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
80:10. எனினும், நீர் அவரை அலட்சியம் செய்து விடுகிறீர்.
80:10. அவரைக் குறித்து நீர் பாராமுகமாக இருந்துவிடுகின்றீர்!
80:10. அப்போது அவரை விட்டும் நீர் அசட்டை செய்கிறீர்.
80:11
80:11 كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۚ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّهَا நிச்சயமாக இது تَذْكِرَةٌ ۚ‏ ஓர் அறிவுரை
80:11. அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
80:11. அவ்வாறு செய்யாதீர். (திரு குர்ஆனாகிய) இது ஒரு நல்லுபதேசம்தான்.
80:11. அவ்வாறன்று! நிச்சயமாக, இது ஓர் அறிவுரையாகும்.
80:11. அவ்வாறன்று! நிச்சயமாக (குர் ஆனாகிய) இது உபதேசமாகும்.
80:12
80:12 فَمَنْ شَآءَ ذَكَرَهٗ‌ۘ‏
فَمَنْ ஆகவே, யார் شَآءَ நாடுகிறாரோ ذَكَرَهٗ‌ۘ‏ இதை நினைவில் வைப்பார்
80:12. எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
80:12. எவர் (நேரான வழியில் செல்ல) விரும்புகிறாரோ அவர் இதை(ச் செவியுற்று) ஞாபகத்தில் வைத்துக் கொள்வார்.
80:12. எவர் விரும்புகின்றாரோஅவர் இதனை ஏற்றுக் கொள்ளட்டும்.
80:12. எனவே, எவர் (இதனைக்கொண்டு நேரான வழியில் செல்ல) நாடுகின்றாரோ அவர் இதனை நினைவு கொள்வார்.
80:13
80:13 فِىْ صُحُفٍ مُّكَرَّمَةٍۙ‏
فِىْ صُحُفٍ ஏடுகளில் مُّكَرَّمَةٍۙ‏ கண்ணி யப்படுத்தப்பட்ட
80:13. (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
80:13. இது (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) மிக்க கண்ணியமான புத்தகத்தில் (வரையப்பட்டுள்ளது);
80:13. இது கண்ணியமிக்க,
80:13. (இவ்வேதமானது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் (இருக்கிறது).
80:14
80:14 مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍ ۭۙ‏
مَّرْفُوْعَةٍ உயர்வாக்கப்பட்ட مُّطَهَّرَةٍ ۭۙ‏ தூய்மையாக்கப்பட்ட
80:14. உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.
80:14. உயர்வுமிக்க தூய்மையான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது; (அது) மிகப் பரிசுத்தமானது.
80:14. உயர்வான, தூய்மையான ஏடுகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.
80:14. உயர்வாக்கப்பட்ட, பரிசுத்தமாக்கப்பட்ட (ஏடுகளில் இருக்கிறது).
80:15
80:15 بِاَيْدِىْ سَفَرَةٍۙ‏
بِاَيْدِىْ கைகளில் سَفَرَةٍۙ‏ எழுதுபவர்களின்
80:15. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
80:15. எழுதுபவர்களின் கைகளினால் (வரையப்பட்டது).
80:15. (அந்த ஏடுகள்) எழுத்தர்களின் கைகளில் உள்ளன.
80:15. (வானவர்களான) எழுதுவோரின் கரங்கள் கொண்டு (எழுதப்படுகின்றது)
80:16
80:16 كِرَامٍۢ بَرَرَةٍؕ‏
كِرَامٍۢ கண்ணிய மானவர்களான بَرَرَةٍؕ‏ நல்லவர்களான
80:16. (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
80:16. (அவர்கள்) மிக கண்ணியமானவர்கள், மிக நல்லவர்கள்.
80:16. (அந்த எழுத்தர்கள்) கண்ணியம் மிகுந்தவர்கள், நல்லவர்கள்.
80:16. (அவர்கள்) நல்லோர்களான சங்கை மிக்கவர்கள்.
80:17
80:17 قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗؕ‏
قُتِلَ அழியட்டும் الْاِنْسَانُ மனிதன் مَاۤ اَكْفَرَهٗؕ‏ அவன் எவ்வளவு நன்றி கெட்டவன்
80:17. (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
80:17. (பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
80:17. மனிதன் மீது சாபம் உண்டாகட்டும்! அவன் சத்தியத்தை எத்துணைக் கடுமையாக மறுப்பவனாய் இருக்கின்றான்!
80:17. (காஃபிரான) மனிதன் சபிக்கப்பட்டுவிட்டான்; (நன்றி கெட்டு) அவனை நிராகரிக்கிறவனாக இருக்கச் செய்தது எது?
80:18
80:18 مِنْ اَىِّ شَىْءٍ خَلَقَهٗؕ‏
مِنْ اَىِّ شَىْءٍ எந்த பொருளிலிருந்து خَلَقَهٗؕ‏ அவனைப் படைத்தான்
80:18. எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
80:18. எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)?
80:18. அல்லாஹ், அவனை எதிலிருந்து படைத்திருக்கின்றான்?
80:18. எப்பொருளிலிருந்து (நிராகரிக்கும்) அவனை (அல்லாஹ்வாகிய) அவன் படைத்தான் (என்று சிந்தித்தானா?)
80:19
80:19 مِنْ نُّطْفَةٍؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۙ‏
مِنْ نُّطْفَةٍؕ விந்திலிருந்து خَلَقَهٗ அவனைப் படைத்தான் فَقَدَّرَهٗ ۙ‏ அவனை அமைத்தான்
80:19. (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
80:19. ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான்.
80:19. ஒரு துளி இந்திரியத்திலிருந்துதானே அல்லாஹ் அவனைப் படைத்தான்! பின்னர், அவனுடைய விதியை நிர்ணயித்தான்.
80:19. ஒரு துளி (இந்திரியத்திலிருந்து, அவனை (அல்லாஹ்வாகிய) அவன் படைத்தான்; பின்னர் அவனுக்கு (உரிய அனைத்தையும்) அவன் நிர்ணயித்தான்.
80:20
80:20 ثُمَّ السَّبِيْلَ يَسَّرَهٗۙ‏
ثُمَّ பிறகு السَّبِيْلَ பாதையை يَسَّرَهٗۙ‏ அதை எளிதாக்கினான்
80:20. பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
80:20. பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான்.
80:20. பிறகு, வாழ்வின் பாதையை அவனுக்கு எளிதாக்கினான்.
80:20. அப்பால் அவனுக்கு (விசுவாசம், விசுவாசமின்மை, நல்லவை, கெட்டவை, தாய் வயிற்றிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றின்) வழியை அவன் எளிதாக்கினான்.
80:21
80:21 ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ‏
ثُمَّ اَمَاتَهٗ பிறகு அவனை மரணிக்கச் செய்தான் فَاَقْبَرَهٗۙ‏ அவனைப் புதைக்குழியில் தள்ளினான்
80:21. பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.
80:21. பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான்.
80:21. பிறகு, அவனை மரணமடையச் செய்தான்; மேலும், மண்ணறையில் கொண்டு சேர்த்தான்.
80:21. பிறகு, அவனை அவன் மரணிக்கச் செய்தான்; அப்பால் மண்ணறையில் அவனை அவன் ஆக்குகின்றான்.
80:22
80:22 ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗؕ‏
ثُمَّ பிறகு اِذَا شَآءَ அவன் நாடியபோது اَنْشَرَهٗؕ‏ அவனை உயிர்ப்பிப்பான்
80:22. பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
80:22. பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான்.
80:22. பிறகு, அவன் நாடும்போது அவனை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வான்.
80:22. பின்னர் தான் நாடும்போது அவனுக்கு (உயிர் கொடுத்து) அவன் எழுப்புவான்.
80:23
80:23 كَلَّا لَمَّايَقْضِ مَاۤ اَمَرَهٗؕ‏
كَلَّا அவ்வாறல்ல لَـمَّا يَقْضِ அவன் நிறைவேற்றவில்லை مَاۤ اَمَرَهٗؕ‏ எதை/கட்டளையிட்டான்/அவனுக்கு
80:23. (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
80:23. எனினும், நிச்சயமாக மனிதன் இறைவனுடைய கட்டளையை நிறைவேற்றுவதில்லை.
80:23. ஒருபோதுமில்லை! அல்லாஹ் அவன் மீது விதித்திருந்த கடமைகளை அவன் நிறைவேற்றவில்லை!
80:23. (கடமையை நிறைவேற்றி விட்டதாக காஃபிரானவன் கூறுவது போன்று) அல்ல! (அல்லாஹ்வாகிய) அவன் இவனுக்கு ஏவியதை இவன் நிறைவேற்றவில்லை.
80:24
80:24 فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤۙ‏
فَلْيَنْظُرِ ஆகவே பார்க்கட்டும் الْاِنْسَانُ மனிதன் اِلٰى பக்கம் طَعَامِهٖۤۙ‏ தன் உணவின்
80:24. எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
80:24. மனிதன் தன் உணவை (அது எங்கிருந்து எவ்வாறு வருகிறது என்பதைச்) சிறிது கவனித்துப் பார்க்கவும்.
80:24. பிறகு, மனிதன் தனது உணவின் பக்கம் சற்று நோட்டமிடட்டும்.
80:24. ஆகவே, மனிதன் தன்னுடைய உணவின்பால் பார்க்கவும்,
80:25
80:25 اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۙ‏
اَنَّا நிச்சயமாக நான் صَبَبْنَا பொழிந்தோம் الْمَآءَ நீரை صَبًّا ۙ‏ பொழிதல்
80:25. நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
80:25. நிச்சயமாக நாமே ஏராளமான மழையை பொழியச் செய்தோம்,
80:25. நிச்சயமாக, நாம் நீரை நிறையப் பொழிந்தோம்.
80:25. (அதை உண்டாக்குவதற்கு) நிச்சயமாக நாமே (வானத்திலிருந்து ஏராளமான) நீரைத் தாராளமாகப் பொழியச் செய்தோம்.
80:26
80:26 ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۙ‏
ثُمَّ பிறகு شَقَقْنَا பிளந்தோம் الْاَرْضَ பூமியை شَقًّا ۙ‏ பிளத்தல்
80:26. பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
80:26. பின்னர், பூமியையும் பிளந்(து வெடிக்கச் செய்)தோம்.
80:26. பின்னர், வியக்கத்தக்க முறையில் பூமியைப் பிளந்தோம்.
80:26. பின்னர் பூமியை நன்கு பிளக்கச்செய்தோம்.
80:27
80:27 فَاَنْۢبَتْنَا فِيْهَا حَبًّا ۙ‏
فَاَنْۢبَتْنَا இன்னும் முளைக்க வைத்தோம் فِيْهَا அதில் حَبًّا ۙ‏ தானியம்
80:27. பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
80:27. பின்னர், அதிலிருந்து வித்துக்களை முளைத்து வளரும்படி செய்கிறோம்.
80:27. பிறகு, அதில் தானியங்களையும்,
80:27. பின்னர் அதிலிருந்து தானியங்களை முளைப்பிக்கச் செய்கின்றோம்.
80:28
80:28 وَّ عِنَبًا وَّقَضْبًا ۙ‏
وَّ عِنَبًا இன்னும் திராட்சை وَّقَضْبًا ۙ‏ இன்னும் காய்கறி
80:28. திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
80:28. (இவ்வாறு) திராட்சைக் கனிகளையும் மற்ற காய்கறிகளையும்,
80:28. திராட்சைகளையும், காய்கறிகளையும்,
80:28. (இவ்வாறே) திராட்சை)க் கனிகளையும் (மற்ற) காய்கறிகளையும்,
80:29
80:29 وَّزَيْتُوْنًا وَّنَخْلًا ؕ‏
وَّزَيْتُوْنًا இன்னும் ஸைத்தூன் وَّنَخْلًا ؕ‏ இன்னும் பேரிச்சை மரம்
80:29. ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
80:29. ஜைத்தூனையும், பேரீச்சை மரத்தையும்,
80:29. ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும்,
80:29. ஜைத்தூனையும், பேரீச்சையையும்-
80:30
80:30 وَحَدَآٮِٕقَ غُلْبًا ۙ‏
وَحَدَآٮِٕقَ இன்னும் தோட்டங்கள் غُلْبًا ۙ‏ அடர்ந்த
80:30. அடர்ந்த தோட்டங்களையும்,
80:30. கிளைகள் அடர்ந்த தோப்புகளையும்,
80:30. அடர்ந்த தோட்டங்களையும்,
80:30. மரங்கள் அடர்ந்த தோப்புக்களையும்,
80:31
80:31 وَّفَاكِهَةً وَّاَبًّا ۙ‏
وَّفَاكِهَةً இன்னும் கனி وَّاَبًّا ۙ‏ இன்னும் புற்பூண்டு
80:31. பழங்களையும், தீவனங்களையும்-
80:31. கனிவர்க்கங்களையும், புற்பூண்டுகளையும்,
80:31. விதவிதமான கனிகளையும் மற்றும் புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம்,
80:31. கனியையும், புல்லை (-தீவனங்களையும்)-
80:32
80:32 مَّتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ‏
مَّتَاعًا பலன் தருவதற்காக لَّـكُمْ உங்களுக்கும் وَلِاَنْعَامِكُمْؕ‏ உங்கள் கால்நடைகளுக்கும்
80:32. (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
80:32. உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும், பயனளிக்குமாறு (முளைக்க வைக்கிறோம்).
80:32. உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வதாராப் பொருட்களாகும் பொருட்டு!
80:32. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (முளைக்கச் செய்தோம்)
80:33
80:33 فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ‏
فَاِذَا جَآءَتِ ஆகவே, வந்தால் الصَّآخَّةُ‏ செவிடாக்கும் சப்தம்
80:33. ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
80:33. (உலக முடிவின்பொழுது செவிகளை) செவிடாக்கும்படியான (பயங்கரச்) சப்தம் ஏற்படுமாயின்,
80:33. இறுதியில், காதைச் செவிடாக்கும் அந்தப் பேரோசை முழங்கும்போது
80:33. எனவே, (காதைச் செவிடாக்கும்) பயங்கர சப்தம் வந்து விடும்போது,
80:34
80:34 يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ‏
يَوْمَ நாளில் يَفِرُّ விரண்டோடுவான் الْمَرْءُ மனிதன் مِنْ விட்டும் اَخِيْهِۙ‏ தன் சகோதரன்
80:34. அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:34. அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்,
80:34. அந்நாளில் மனிதன் விரண்டோடுவான் தன் சகோதரனை விட்டும்
80:34. அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான்-
80:35
80:35 وَاُمِّهٖ وَاَبِيْهِۙ‏
وَاُمِّهٖ இன்னும் தன் தாய் وَاَبِيْهِۙ‏ இன்னும் தன் தந்தை
80:35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்,
80:35. தாயையும் தந்தையையும் விட்டும்
80:35. தன் தாயையும், தன் தந்தையையும் (விட்டு)- விட்டும் வெருண்டோடுவான்
80:36
80:36 وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِؕ‏
وَصَاحِبَتِهٖ இன்னும் தன் மனைவி وَبَنِيْهِؕ‏ இன்னும் தான் பிள்ளைகள்
80:36. தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:36. தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).
80:36. தன்னுடைய மனைவியையும் குழந்தைகளையும் விட்டும்.
80:36. தன் மனைவியையும், தன் மக்களையும் (விட்டும் வெருண்டோடுவான்_)
80:37
80:37 لِكُلِّ امْرِیءٍ مِّنْهُمْ يَوْمَٮِٕذٍ شَاْنٌ يُّغْنِيْهِؕ‏
لِكُلِّ امْرِیءٍ ஒவ்வொரு மனிதனுக்கும் مِّنْهُمْ அவர்களில் يَوْمَٮِٕذٍ அந்நாளில் شَاْنٌ நிலைமை يُّغْنِيْهِؕ‏ அவனைத் திருப்பிவிடுகின்ற
80:37. அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
80:37. அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.
80:37. அவர்களில் ஒவ்வொருவருக்கும் அந்நாளில் தன்னைத் தவிர வேறெவரைப் பற்றியும் கவனம் செலுத்தமுடியாத நிலை வந்தே தீரும்!
80:37. அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதருக்கும் (தன் சுற்றத்தாரை விட்டும்) அவரைத் திருப்பிவிடும் ஒரு காரியம் உண்டு.
80:38
80:38 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ ۙ‏
وُجُوْهٌ (சில) முகங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் مُّسْفِرَةٌ ۙ‏ ஒளிரக்கூடியதாக
80:38. அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
80:38. எனினும், அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாகவும்,
80:38. சில முகங்கள் அந்நாளில் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும்;
80:38. (எனினும்,) அந்நாளில் சில முகங்கள் பிரகாசமுள்ளவையாக (இருக்கும்)
80:39
80:39 ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ‏
ضَاحِكَةٌ சிரித்தவையாக مُّسْتَبْشِرَةٌ ۚ‏ நற்செய்தி பெற்றவையாக
80:39. சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
80:39. சந்தோஷத்தால் சிரித்தவையாகவும் இருக்கும்.
80:39. சிரித்துக் கொண்டும் மலர்ச்சியுடனும் இருக்கும்.
80:39. சிரித்தவையாக மகிழ்வுடையவையாக (இருக்கும்)-
80:40
80:40 وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌ ۙ‏
وَوُجُوْهٌ இன்னும் (சில) முகங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் عَلَيْهَا அவற்றின் மீது غَبَرَةٌ ۙ‏ புழுதி
80:40. ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
80:40. அந்நாளில் வேறு சில முகங்கள் மீது, புழுதி படிந்து கிடக்கும்.
80:40. மேலும், அந்நாளில் வேறு சில முகங்களில் புழுதி படிந்திருக்கும்.
80:40. இன்னும், சில முகங்கள் அவற்றின் மீது அந்நாளில் புழுதி படிந்திருக்கும்.
80:41
80:41 تَرْهَقُهَا قَتَرَةٌ ؕ‏
تَرْهَقُهَا அவற்றை மூடிக்கொள்ளும் قَتَرَةٌ ؕ‏ கருமை
80:41. அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
80:41. கருமை இருள் அவற்றை மூடிக்கொள்ளும், (துக்கத்தால் அவர்களது முகங்கள் இருளடைந்து கிடக்கும்).
80:41. அவற்றில் இருளும் கருமையும் கப்பியிருக்கும்.
80:41. (துக்கத்தால்) கருமை இருள் அவற்றை மூடியிருக்கும்-
80:42
80:42 اُولٰٓٮِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ‏
اُولٰٓٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْكَفَرَةُ நிராகரிப்பாளர்கள் الْفَجَرَةُ‏ பெரும் பாவிகளான
80:42. அவர்கள்தாம், நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.
80:42. இவர்கள்தான் (மறுமையை) நிராகரித்துப் பாவம் செய்பவர்கள்.
80:42. அவர்கள்தாம் நிராகரிப்பாளர்கள்; தீயவர்கள்.
80:42. அவர்கள் தாம் (இதயத்தால்) நிராகரித்தவர்கள்; (அவர்களின் செயல்களால்) பாவிகள்.