84. ஸூரத்துல் இன்ஷிகாக்(பிளந்து போதல்)
மக்கீ, வசனங்கள்: 25

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
84:1
84:1 اِذَا السَّمَآءُ انْشَقَّتْۙ‏
اِذَا போது السَّمَآءُ வானம் انْشَقَّتْۙ‏ பிளந்துவிடும்
84:1. வானம் பிளந்துவிடும் போது-
84:1. (உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது,
84:1. வானம் பிளக்கின்றபோது
84:1. வானம் பிளந்து விடும்போது-
84:2
84:2 وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْۙ‏
وَاَذِنَتْ இன்னும் அது செவிசாய்த்தது لِرَبِّهَا தன் இறைவனுக்கு وَحُقَّتْۙ‏ இன்னும் கீழ்ப்படிந்தது
84:2. தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது-
84:2. அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
84:2. மேலும், அது தன்னுடைய அதிபதியின் கட்டளையை செயல்படுத்தும்போது, இது(தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும்.
84:2. அது (பிளந்து விடவேண்டுமெனும்) தன் இரட்சகனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும் விட்டது; (அவ்வாறு செவி சாய்ப்பது) அதற்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டுவிட்டது.
84:3
84:3 وَاِذَا الْاَرْضُ مُدَّتْؕ‏
وَاِذَا இன்னும் போது الْاَرْضُ பூமி مُدَّتْؕ‏ விரிக்கப்படும்
84:3. இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
84:3. மேலும், பூமி விரிக்கப்படும்போது,
84:3. மேலும், பூமி பரப்பப்பட்டு விடும்போது
84:3. பூமியும் (நீண்டதாக) விரிக்கப்பட்டுவிடும்போது-
84:4
84:4 وَاَلْقَتْ مَا فِيْهَا وَتَخَلَّتْۙ‏
وَاَلْقَتْ இன்னும் எரிந்து(விடும்) مَا فِيْهَا தன்னில் உள்ளவற்றை وَتَخَلَّتْۙ‏ இன்னும் காலியாகிவிடும்
84:4. அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
84:4. மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,
84:4. இன்னும், அது தன்னுள் இருப்பவை அனைத்தையும் வெளியில் எறிந்துவிட்டு, ஏதுமற்றதாய் ஆகிவிடும்போது
84:4. அது தன்னுள்ளிருப்பதை வெளிப்படுத்தி அது வெறுமையாகியும் விடும்போது-
84:5
84:5 وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْؕ‏
وَاَذِنَتْ இன்னும் அது செவிசாய்த்து لِرَبِّهَا தன் இறைவனுக்கு وَحُقَّتْؕ‏ இன்னும் கீழ்படிந்து
84:5. தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
84:5. மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
84:5. மேலும், அது தன் அதிபதியின் கட்டளையைச் செயல்படுத்தும்போது, இது (தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும்.
84:5. அது (தன்னுள்ளிருப்பதை வெளிப்படுத்திவிட வேண்டுமெனும்) தன் இரட்சகனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும்விட்டது; (அவ்வாறு செய்வது) அதற்க்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டுவிட்டபோது..
84:6
84:6 يٰۤاَيُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدْحًا فَمُلٰقِيْهِ‌ۚ‏
يٰۤاَيُّهَا الْاِنْسَانُ மனிதனே! اِنَّكَ நிச்சயமாக நீ كَادِحٌ சிரமத்தோடு முயற்சிப்பவன் اِلٰى பக்கம் رَبِّكَ உன் இறைவன் كَدْحًا சிரமத்தோடு முயற்சித்தல் فَمُلٰقِيْهِ‌ۚ‏ அடுத்து நீ அவனை சந்திப்பாய்
84:6. மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
84:6. மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்.
84:6. “மனிதனே! நீ இடைவிடாமல் பாடுபட்டு உன் இறைவனின் பக்கம் சென்று கொண்டிருப்பவனாகவும் அவனை நீ சந்திக்கக் கூடியவனாகவும் இருக்கின்றாய்.
84:6. மனிதனே! நீ உன் இரட்சகனிடம் செல்லும் வரையில் (நன்மையோ, தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) கஷ்டத்துடன் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றாய்; பின்னர் (மறுமையில்) அவனை நீ சந்திக்கிறவனாக இருக்கிறாய்.
84:7
84:7 فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ‏
فَاَمَّا مَنْ ஆகவே, யார் اُوْتِىَ கொடுக்கப்பட்டாரோ كِتٰبَهٗ தன் பதிவேடு بِيَمِيْنِهٖۙ‏ தன் வலக்கரத்தில்
84:7. ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
84:7. ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ,
84:7. எவருடைய வினைப்பட்டியல் அவர் வலக்கையில் கொடுக்கப்படுமோ
84:7. எனவே (அந்நாளில்) எவர் அவருடைய பதிவுப்புத்தகத்தை அவருடைய வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ-
84:8
84:8 فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًا ۙ‏
فَسَوْفَ يُحَاسَبُ அவர் கணக்குக் கேட்கப்படுவார் حِسَابًا கணக்கு يَّسِيْرًا ۙ‏ இலகுவாகவே
84:8. அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
84:8. அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.
84:8. அவரிடம் எளிதான கணக்கு வாங்கப்படும்.
84:8. அவர் மிக்க இலகுவான கேள்வி கணக்காக கணக்குக் கேட்கப்படுவார்.
84:9
84:9 وَّيَنْقَلِبُ اِلٰٓى اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ‏
وَّيَنْقَلِبُ இன்னும் திரும்புவார் اِلٰٓى பக்கம் اَهْلِهٖ தன் குடும்பத்தார் مَسْرُوْرًا ؕ‏ மகிழ்ச்சியானவராக
84:9. இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
84:9. அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்.
84:9. மேலும், அவர் தம் குடும்பத்தாரை நோக்கி மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வார்.
84:9. இன்னும், அவர் மகிழ்ச்சியுடன் (சுவனத்திலுள்ள) தன்னுடைய குடும்பத்தாரிடம் திரும்புவார்.
84:10
84:10 وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖۙ‏
وَاَمَّا مَنْ இன்னும் ஆக, யார்? اُوْتِىَ கொடுக்கப்பட்டானோ كِتٰبَهٗ தன் பதிவேடு وَرَآءَ பின்னால் ظَهْرِهٖۙ‏ தன் முதுகுக்கு
84:10. ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
84:10. எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ,
84:10. ஆனால், எவனுடைய வினைப்பட்டியல் அவன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுமோ
84:10. மேலும், எவர்-அவருடைய பதிவுப்புத்தகத்தை அவருடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டாரோ-
84:11
84:11 فَسَوْفَ يَدْعُوْا ثُبُوْرًا ۙ‏
فَسَوْفَ يَدْعُوْا அவன் கூவுவான் ثُبُوْرًا ۙ‏ நாசமே
84:11. அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவனாக-
84:11. அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்,
84:11. அவன் மரணத்தை அழைப்பான்.
84:11. அவர் (தனக்குக் கேடுதான் என்று கூறி அழிவையே) அழைப்பார்.
84:12
84:12 وَّيَصْلٰى سَعِيْرًا ؕ‏
وَّيَصْلٰى இன்னும் பொசுங்குவான் سَعِيْرًا ؕ‏ சயீர் என்ற நரகத்தில்
84:12. அவன் நரகத்தில் புகுவான்.
84:12. நரகத்தில் நுழைவான்.
84:12. பிறகு, கொழுந்து விட்டெரியும் நரகத்தில் போய் வீழ்வான்.
84:12. நரகத்திலும் அவர் நுழைவார்.
84:13
84:13 اِنَّهٗ كَانَ فِىْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ‏
اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருந்தான் فِىْۤ اَهْلِهٖ தன் குடும்பத்தில் مَسْرُوْرًا ؕ‏ மகிழ்ச்சியானவனாக
84:13. நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
84:13. ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான்.
84:13. அவன் தன்னுடைய குடும்பத்தாரிடம் இன்பத்தில் மூழ்கியிருந்தான்.
84:13. (ஏனென்றால்,) நிச்சயமாக அவர் (இம்மையில்) தன் குடும்பத்தாருடன் மிக்க ஆனந்தமாக இருந்தார்.
84:14
84:14 اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ يَّحُوْرَ ۛۚ‏
اِنَّهٗ நிச்சயமாக அவன் ظَنَّ எண்ணினான் اَنْ لَّنْ يَّحُوْرَ ۛۚ‏ திரும்பிவரவே மாட்டான் என
84:14. நிச்சயமாக, தான் (இறைவன் பால்) “மீளவே மாட்டேன்” என்று எண்ணியிருந்தான்.
84:14. மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.
84:14. (தன்னுடைய இறைவனின் பக்கம்) ஒருபோதும் திரும்பி வர வேண்டியதில்லை என்று அவன் கருதியிருந்தான்.
84:14. நிச்சயமாக அவர் (தன் இரட்சகனின்பால்) மீளவே மாட்டார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
84:15
84:15 بَلٰٓى ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِيْرًا ؕ‏
بَلٰٓى ۛۚ ஏனில்லை اِنَّ நிச்சயமாக رَبَّهٗ அவனுடைய இறைவன் كَانَ இருக்கிறான் بِهٖ அவனை بَصِيْرًا ؕ‏ உற்றுநோக்குபவனாக
84:15. அப்படியல்ல; நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
84:15. அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
84:15. ஏன் திரும்பி வர வேண்டியதில்லை? அவனுடைய இறைவன் அவனுடைய இழிசெயல்களைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தான்!
84:15. ஆம்! (அவர் மீளத்தான் போகிறார்.) நிச்சயமாக அவருடைய இரட்சகன் அவரைப் பார்க்கக்கூடியவனாக இருந்தான்.
84:16
84:16 فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِۙ‏
فَلَاۤ اُقْسِمُ ஆகவே சத்தியமிடுகிறேன் بِالشَّفَقِۙ‏ செம்மேகத்தின்மேல்
84:16. இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
84:16. (மாலை நேர) செம்மேகத்தின் மீது சத்தியமாக!
84:16. அவ்வாறில்லை! அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீதும்,
84:16. அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
84:17
84:17 وَالَّيْلِ وَمَا وَسَقَۙ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக وَمَا وَسَقَۙ‏ ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக
84:17. மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
84:17. இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியமாக!)
84:17. இரவின் மீதும், மேலும், அது ஒன்றுதிரட்டி வைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும்
84:17. இரவின் மீதும், அது அணைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியம் செய்கிறேன்).
84:18
84:18 وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏
وَالْقَمَرِ சந்திரன் மீது சத்தியமாக اِذَا اتَّسَقَۙ‏ அது முழுமையடையும் போது
84:18. பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
84:18. பூரணச் சந்திரன் மீது சத்தியமாக!
84:18. மேலும், முழுமையாய் மலர்ந்து விடும் சந்திரன் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
84:18. சந்திரன் மீதும் அது பூரணமாகிவிட்டபோது(ம் சத்தியம் செய்கிறேன்.)
84:19
84:19 لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ‏
لَتَرْكَبُنَّ நிச்சயமாக பயணிக்கிறீர்கள் طَبَقًا ஒரு நிலைக்கு عَنْ طَبَقٍؕ‏ ஒரு நிலையிலிருந்து
84:19. நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
84:19. (ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கிறது.
84:19. திண்ணமாக, நீங்கள் படிப்படியாய் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
84:19. (ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு நிச்சயமாக நீங்கள் படிப்படியாக ஏறிச்செல்வீர்கள்.
84:20
84:20 فَمَا لَهُمْ لَا يُؤْمِنُوْنَۙ‏
فَمَا ஆகவே என்ன لَهُمْ அவர்களுக்கு لَا يُؤْمِنُوْنَۙ‏ அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை
84:20. எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்ளவதில்லை.
84:20. ஆகவே, (இதை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதை நம்பிக்கை கொள்வதில்லை.
84:20. பிறகு, இம்மக்களுக்கு என்ன நேர்ந்தது? நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்களே!
84:20. ஆகவே, (இதனை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் நம்புவதில்லை.
84:21
84:21 وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ؕ ۩
وَاِذَا قُرِئَ இன்னும் ஓதப்பட்டால் عَلَيْهِمُ அவர்கள் மீது الْقُرْاٰنُ அல்குர்ஆன் لَا يَسْجُدُوْنَ ؕ ۩‏ அவர்கள் சிரம் பணிவதில்லை
84:21. மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
84:21. அவர்களுக்கு இந்த குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.
84:21. மேலும், இவர்களின் முன்னிலையில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இவர்கள் ஸஜ்தா* செய்வதுமில்லையே!
84:21. மேலும், அவர்களுக்கு இந்தக்குர் ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அல்லாஹ்விற்கு) அவர்கள் சிரம்பணி(ந்து ஸுஜூது செய்)வதில்லை.
84:22
84:22 بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَ ۖ‏
بَلِ மாறாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் يُكَذِّبُوْنَ ۖ‏ பொய்ப்பிக்கின்றனர்
84:22. அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
84:22. அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்த குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
84:22. மாறாக, இந்த நிராகரிப்பாளர்களோ பொய்யெனத் தூற்றுகின்றார்கள்.
84:22. அன்றியும் நிராகரிப்போர் (இந்தக்குர் ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
84:23
84:23 وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يُوْعُوْنَ ۖ‏
وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا يُوْعُوْنَ ۖ‏ அவர்கள் சேகரிப்பதை
84:23. ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
84:23. எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான்.
84:23. உண்மையில், இவர்கள் (தம் வினைச்சுவடிகளில்) சேர்த்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ் நன்கறிகின்றான்.
84:23. இன்னும், அவர்கள் (தங்கள் மனங்களில் சேகரித்து) மறைத்து வைத்திருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தேயிருக்கின்றான்.
84:24
84:24 فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ‏
فَبَشِّرْ ஆகவே நற்செய்தி கூறுவீராக هُمْ அவர்களுக்கு بِعَذَابٍ வேதனையைக் கொண்டு اَلِيْمٍۙ‏ துன்புறுத்தும்
84:24. (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
84:24. ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
84:24. எனவே, இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைக்கான “நற்செய்தியை” அறிவித்துவிடுவீராக!
84:24. ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
84:25
84:25 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ‏
اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்கள் لَهُمْ அவர்களுக்கு اَجْرٌ நன்மை (கூலி) غَيْرُ مَمْنُوْنٍ‏ முடிவுறாத
84:25. எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
84:25. எனினும், இவர்களில் எவர்கள் (தங்கள் பாவத்திலிருந்து திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.
84:25. ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் நற்செயல்கள் செய்தவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கிறது.
84:25. விசுவாசங் கொண்டு நற்கருமங்களும் செய்தார்களே அத்தகையவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (நற்) கூலியுண்டு.