85. ஸூரத்துல் புரூஜ்(கிரகங்கள்)
மக்கீ, வசனங்கள்: 22

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
85:1
85:1 وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِۙ‏
وَالسَّمَآءِ வானத்தின் மீது சத்தியமாக! ذَاتِ الْبُرُوْجِۙ‏ கோள்களுடைய
85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
85:1. கோள்கள் நிறைந்த வானத்தின் மீது சத்தியமாக,
85:1. உறுதியான கோட்டைகளைக் கொண்ட வானத்தின் மீது சத்தியமாக!
85:1. கிரகங்களுடைய வானின்மீது சத்தியமாக!
85:2
85:2 وَالْيَوْمِ الْمَوْعُوْدِۙ‏
وَالْيَوْمِ நாள் மீது சத்தியமாக الْمَوْعُوْدِۙ‏ வாக்களிக்கப்பட்ட
85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:2. வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக,
85:2. வாக்களிக்கப்பட்ட அந்த நாளின் மீது சத்தியமாக!
85:2. வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாளின் மீதும் சத்தியமாக!
85:3
85:3 وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍؕ‏
وَشَاهِدٍ சாட்சியாளர் மீது சத்தியமாக وَّمَشْهُوْدٍؕ‏ சாட்சியாக்கப்பட்டதின் மீது சத்தியமாக
85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
85:3. சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக!
85:3. மேலும், பார்க்கின்றவர் மீதும், பார்க்கப்படும் பொருளின் மீதும் சத்தியமாக!
85:3. சாட்சியாளர் மீதும், சாட்சி சொல்லப்படுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!
85:4
85:4 قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ‏
قُتِلَ அழிக்கப்பட்டார்கள் اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ‏ அகழ்காரர்கள்
85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
85:4. அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.)
85:4. தீக்குண்டத்தார் அழிக்கப்பட்டார்கள்!
85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையோர் சபிக்கப்பட்டுவிட்டனர்.
85:5
85:5 النَّارِ ذَاتِ الْوَقُوْدِۙ‏
النَّارِ நெருப்புடையவர்கள் ذَاتِ الْوَقُوْدِۙ‏ விறகுகளுடைய
85:5. விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
85:5. அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்).
85:5. (அது எத்தகைய தீக்குண்டமெனில்) அதில் நன்கு கொழுந்து விட்டெரியும் எரிபொருள் இருந்தது.
85:5. எரிபொருளுடைய (பெரும்) நெருப்பு(க்குண்டம்)
85:6
85:6 اِذْ هُمْ عَلَيْهَا قُعُوْدٌ ۙ‏
اِذْ போது هُمْ அவர்கள் عَلَيْهَا அதனருகில் قُعُوْدٌ ۙ‏ உட்கார்ந்திருந்தனர்
85:6. அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
85:6. அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில்,
85:6. அவர்கள் அதன் ஓரத்தில் அமர்ந்திருந்து
85:6. அதன்மேல் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த போது (சபிக்கப்பட்டுவிட்டனர்.)
85:7
85:7 وَّهُمْ عَلٰى مَا يَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِيْنَ شُهُوْدٌ ؕ‏
وَّهُمْ இன்னும் அவர்கள் عَلٰى مَا எதை يَفْعَلُوْنَ செய்வார்கள் بِالْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு شُهُوْدٌ ؕ‏ ஆஜராகி இருந்தார்கள்
85:7. முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
85:7. நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள்.
85:7. இறைநம்பிக்கையாளர்களுக்குத் தாம் செய்து கொண்டிருந்த செயல்களைப் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.
85:7. விசுவாசிகளை அவர்கள் (நெருப்புக்குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு (அவர்களே) சாட்சியாளர்கள்.
85:8
85:8 وَمَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ يُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ‏
وَمَا نَقَمُوْا இன்னும் தண்டிக்கவில்லை مِنْهُمْ அவர்களை اِلَّاۤ தவிர اَنْ يُّؤْمِنُوْا அவர்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே بِاللّٰهِ அல்லாஹ்வை الْعَزِيْزِ மிகைத்தவன் الْحَمِيْدِۙ‏ புகழாளன்
85:8. (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
85:8. (நம்பிக்கை கொண்ட) அவர்களில் ஒரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்.
85:8. அந்த இறை நம்பிக்கையாளர்களிடம் இவர்கள் பகைமை பாராட்டியதற்குக் காரணம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை: யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே புகழுக்குரியவனுமான அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதுதான்!
85:8. (யாவரையும்) மிகைத்தோன், மிக்க புகழுக்குரியோனாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசித்ததற்காகவே தவிர (வேறு எதற்கும் விசுவாசிகளான) அவர்களை அவர்கள் பழிவாங்கவில்லை.
85:9
85:9 الَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ ؕ‏
الَّذِىْ எப்படிப்பட்டவன் لَهٗ அவனுக்குரியதே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமி وَ اللّٰهُ இன்னும் அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்கள் மீதும் شَهِيْدٌ ؕ‏ சாட்சியாளன்
85:9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
85:9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அந்த பாவிகள் அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்திற்கும் சாட்சி ஆவான்.
85:9. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனும் அந்த இறைவனே. மேலும், அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
85:9. அவன் எத்தகையவனென்றால் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; அல்லாஹ்வோ ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்.
85:10
85:10 اِنَّ الَّذِيْنَ فَتَـنُوا الْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيْقِؕ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக எவர்கள் فَتَـنُوا துன்புறுத்தினார்கள் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்ட ஆண்களை وَ الْمُؤْمِنٰتِ இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களை ثُمَّ பிறகு لَمْ يَتُوْبُوْا அவர்கள் திருந்தவில்லை فَلَهُمْ அவர்களுக்கு عَذَابُ வேதனை جَهَنَّمَ ஜஹன்னம் என்ற நரகத்தின் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு عَذَابُ வேதனை الْحَرِيْقِؕ‏ சுட்டெரிக்கக்கூடிய
85:10. நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
85:10. ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்தி பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. மேலும், (அவர்கள் நம்பிக்கையாளர்களை நெருப்பிட்டவாறு) அவர்களுக்கும் பொசுக்குகின்ற வேதனையுண்டு.
85:10. இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மீது எவர்கள் கொடுமைகள் புரிந்தார்களோ, பிறகு, அதற்காக மன்னிப்புக் கோரி மீளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயம் நரகவேதனை இருக்கிறது. மேலும், சுட்டெரிக்கும் தண்டனையும் உண்டு,
85:10. (ஆகவே,) நிச்சயமாக விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங்கொண்ட பெண்களையும் (இவ்வாறு) துன்புறுத்திப் பின்னர், அவர்கள் (தவ்பாச் செய்து) மன்னிப்புக் கோரவுமில்லையோ அத்தகையோர் - அவர்களுக்கு நரக வேதனையுண்டு; அவர்களுக்கு (விசுவாசிகளை அவர்கள் கரித்தவாறு நெருப்பால்) கரிக்கும் வேதனையுமுண்டு.
85:11
85:11 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕؔ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِيْرُؕ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்களை لَهُمْ அவர்களுக்கு جَنّٰتٌ சொர்க்கங்கள் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழிருந்து الْاَنْهٰرُ ؕؔ நதிகள் ذٰلِكَ அதுதான் الْفَوْزُ வெற்றி الْكَبِيْرُؕ‏ பெரும்
85:11. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
85:11. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. இதுதான் மாபெரும் வெற்றி.
85:11. எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இதுவே பெரும் வெற்றியாகும்.
85:11. நிச்சயமாக விசுவாசங்கொணடு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர் - அவர்களுக்குச் சுவனங்கள் உண்டு; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அது மாபெரும் வெற்றியாகும்.
85:12
85:12 اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ ؕ‏
اِنَّ நிச்சயமாக بَطْشَ பிடி رَبِّكَ உம் இறைவனின் لَشَدِيْدٌ ؕ‏ கடுமையானதுதான்
85:12. நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
85:12. (நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)
85:12. உண்மையில், உம் இறைவனின் பிடி மிகக் கடுமையானது.
85:12. (நபியே!) நிச்சயமாக உமதிரட்சகனின் பிடி மிகக் கடுமையானது.
85:13
85:13 اِنَّهٗ هُوَ يُبْدِئُ وَيُعِيْدُ‌ ۚ‏
اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் يُبْدِئُ உற்பத்திசெய்கிறான் وَيُعِيْدُ‌ ۚ‏ இன்னும் மீட்கிறான்
85:13. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்திற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
85:13. நிச்சயமாக அவன்தான் (அவர்களை) உற்பத்தி செய்கிறான். (அவர்கள் மரணித்த பின்னரும்) அவர்களை மீளவைப்பான்.
85:13. திண்ணமாக, அவனே முதன் முதலாகப் படைக்கின்றான். அவனே மீண்டும் படைப்பான்.
85:13. நிச்சயமாக அவன்தான் (அவர்களை) ஆரம்பமாக படைக்கிறான், (அவர்கள் மரணித்த பின்னரும் அவர்களை) அவனே மீளவைப்பான்.
85:14
85:14 وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُۙ‏
وَهُوَ இன்னும் அவன்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الْوَدُوْدُۙ‏ மகா நேசன்
85:14. அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
85:14. அவன்தான் (நம்பிக்கை கொண்டவர்களை) மிக்க மன்னிப்பவனும், மிக நேசிப்பவனும் ஆவான்.
85:14. மேலும், அவன் அதிகம் மன்னித்தருள்பவனாகவும், அன்பு செலுத்துபவனாகவும் இருக்கின்றான்.
85:14. இன்னும் அவனே (விசுவாசங்கொண்டோரான தன் அடியார்களை) மிக்க மன்னிப்பவன், மிக்க நேசிப்பவன்-
85:15
85:15 ذُو الْعَرْشِ الْمَجِيْدُ ۙ‏
ذُو الْعَرْشِ அர்ஷுடையவன் الْمَجِيْدُ ۙ‏ பெரும் மதிப்பிற்குரியவன்
85:15. (அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.
85:15. (அவன்தான்) அர்ஷுடையவன், மகா கீர்த்தியுடையவன்.
85:15. அர்ஷின் உரிமையாளனாகவும், மேன்மை மிக்கவனாகவும்,
85:15. (அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் கீர்த்தியுடையவன்-
85:16
85:16 فَعَّالٌ لِّمَا يُرِيْدُ ؕ‏
فَعَّالٌ செய்து முடிப்பவன் لِّمَا يُرِيْدُ ؕ‏ தான் நாடுவதை
85:16. தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
85:16. தான் விரும்பியதையெல்லாம் செய்யக் கூடியவன்.
85:16. தான் நாடுகின்றவற்றை செயல்படுத்துபவனாகவும் இருக்கின்றான்.
85:16. தான் நாடியதையெல்லாம் மிகுதியாகச் செய்யக்கூடியவன்.
85:17
85:17 هَلْ اَتٰٮكَ حَدِيْثُ الْجُـنُوْدِۙ‏
هَلْ اَتٰٮكَ உமக்கு வந்ததா? حَدِيْثُ செய்தி الْجُـنُوْدِۙ‏ ராணுவங்களின்
85:17. (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
85:17. (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு எட்டியதா? (யாருடைய படைகள்?)
85:17. படைகளைப் பற்றிய செய்தி உமக்கு எட்டியதா?
85:17. அந்தப் படைகளின் செய்தி (நபியே!) உமக்கு வந்ததா?
85:18
85:18 فِرْعَوْنَ وَثَمُوْدَؕ‏
فِرْعَوْنَ ஃபிர்அவ்ன் وَثَمُوْدَؕ‏ இன்னும் ஸமூது
85:18. ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
85:18. ஃபிர்அவ்ன், ஸமூதுடைய (படைகள்).
85:18. ஃபிர்அவ்ன் மற்றும் ஸமூத் சமுதாயத்தினரின் (படைகளைப் பற்றிய) செய்தி
85:18. ஃபிர் அவ்னுடையவும் ஸமூதுடையவும்;
85:19
85:19 بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ تَكْذِيْبٍۙ‏
بَلِ மாறாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் فِىْ تَكْذِيْبٍۙ‏ பொய்ப்பிப்பதில்தான்
85:19. எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
85:19. எனினும், இந்நிராகரிப்பவர்கள் (குர்ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (முனைந்து) கிடக்கின்றனர்.
85:19. ஆனால், நிராகரிப்பாளர்கள் பொய்யெனத் தூற்றுவதில் முனைந்துள்ளார்கள்.
85:19. எனினும், நிராகரிப்போர் (குர் ஆனைப்) பொய்யாக்குவதிலேயே (மூழ்கி) இருக்கின்றனர்.
85:20
85:20 وَّاللّٰهُ مِنْ وَّرَآٮِٕهِمْ مُّحِيْطٌۚ‏
وَّاللّٰهُ இன்னும் அல்லாஹ் مِنْ وَّرَآٮِٕهِمْ அவர்களுக்குப் பின்னாலிருந்து مُّحِيْطٌۚ‏ சூழ்ந்திருக்கின்றான்
85:20. ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
85:20. அல்லாஹ்வோ, அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறான்.
85:20. ஆயினும், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.
85:20. (ஆனால்) அல்லாஹ்வோ, அவர்களுக்கு அப்பாலிருந்து (அவர்களை எல்லாப் பகுதிகளிலிருந்தும்) சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.
85:21
85:21 بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِيْدٌ ۙ‏
بَلْ மாறாக هُوَ இது قُرْاٰنٌ குர்ஆன் مَّجِيْدٌ ۙ‏ பெரும்மதிப்பிற்குரிய
85:21. (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
85:21. (இது கவியல்ல.) மாறாக, இது கீர்த்திமிக்க குர்ஆன்,
85:21. (அவர்கள் பொய்யெனத் தூற்றுவதால் இந்தக் குர்ஆனுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்பட்டுவிடாது) மாறாக, இந்தக் குர்ஆன் அதிக மகத்துவம் மிக்கது;
85:21. எனினும், அது கீர்த்திமிக்க குர் ஆனாகும்.
85:22
85:22 فِىْ لَوْحٍ مَّحْفُوْظٍ‏
فِىْ لَوْحٍ பலகையில் مَّحْفُوْظٍ‏ பாதுகாக்கப்பட்டது
85:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.
85:22. (இது) லவ்ஹுல் மஹ்பூளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதை இவர்கள் நிராகரிப்பதனால் ஆகக்கூடியதென்ன?)
85:22. பாதுகாக்கப்பட்ட பலகையில் (பதிக்கப்பட்டு) உள்ளது.
85:22. பாதுகாக்கப்பட்ட (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பலகையில் (உள்ளது)