89. ஸூரத்துல் ஃபஜ்ரி(விடியற்காலை)
மக்கீ, வசனங்கள்: 30

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
89:1
89:1 وَالْفَجْرِۙ‏
وَالْفَجْرِۙ‏ விடியற்காலையின் மீது சத்தியமாக
89:1. விடியற் காலையின் மீது சத்தியமாக,
89:1. விடியற்காலையின் மீதும், சத்தியமாக!
89:1. வைகறைப் பொழுதின் மீது சத்தியமாக!
89:1. விடியற்காலையின் மீது சத்தியமாக!
89:2
89:2 وَلَيَالٍ عَشْرٍۙ‏
وَلَيَالٍ நாள்களின் மீது சத்தியமாக عَشْرٍۙ‏ பத்து
89:2. பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
89:2. பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!
89:2. மேலும், பத்து இரவுகளின் மீதும்,
89:2. பத்து இரவுகளின்மீதும் சத்தியமாக!
89:3
89:3 وَّالشَّفْعِ وَالْوَتْرِۙ‏
وَّالشَّفْعِ இரட்டையின் மீது சத்தியமாக وَالْوَتْرِۙ‏ ஒற்றையின் மீது சத்தியமாக
89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
89:3. ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!
89:3. இரட்டை மற்றும் ஒற்றையின் மீதும்,
89:3. இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக!
89:4
89:4 وَالَّيْلِ اِذَا يَسْرِ‌ۚ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذَا يَسْرِ‌ۚ‏ அது செல்லும்போது
89:4. செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
89:4. நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).
89:4. சென்று கொண்டிருக்கும் இரவின் மீதும் சத்தியமாக!
89:4. இரவின் மீதும் அது சென்று விடும்போது – சத்தியமாக!
89:5
89:5 هَلْ فِىْ ذٰلِكَ قَسَمٌ لِّذِىْ حِجْرٍؕ‏
هَلْ فِىْ ذٰلِكَ இதில் இருக்கிறதா? قَسَمٌ சத்தியம் لِّذِىْ حِجْرٍؕ‏ அறிவுடையவருக்கு
89:5. இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
89:5. இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது.
89:5. அறிவுள்ள ஒருவருக்கு இனியும் சத்தியம் தேவையா, என்ன?
89:5. இதில் அறிவுடையோருக்கு (உறுதியளிக்கக்கூடிய) சத்தியம் இருக்கின்றதல்லவா?
89:6
89:6 اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍۙ‏
اَلَمْ تَرَ நீர் கவனிக்கவில்லையா? كَيْفَ எவ்வாறு فَعَلَ (வேதனை)செய்தான் رَبُّكَ உம் இறைவன் بِعَادٍۙ‏ ஆது சமுதாயத்தை
89:6. உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
89:6,7,6. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
89:6. ஆது கூட்டத்தாருடன் உம் இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
89:6. உமதிரட்சகன் ஆ(து கூட்டத்)தை எவ்வாறு செய்தான் என்பதை நீர் காணவில்லையா?
89:7
89:7 اِرَمَ ذَاتِ الْعِمَادِۙ‏
اِرَمَ இரம் ذَاتِ الْعِمَادِۙ‏ தூண்களுடைய
89:7. (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,
89:6,7,7. (நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
89:7. (அவர்கள்) உயரமான தூண்களையுடைய இரம் எனும் நகரவாசிகள்;
89:7. பெரும்பலசாலிகளான (தூண்களையுடைய) இரமை (அவரின் பிள்ளைகளை) –
89:8
89:8 الَّتِىْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِۙ‏
الَّتِىْ எது لَمْ يُخْلَقْ படைக்கவில்லை مِثْلُهَا அதுபோன்று فِى الْبِلَادِۙ‏ நகரங்களில்
89:8. அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
89:8. அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.
89:8. அவர்களைப் போன்று எந்தச் சமுதாயமும் உலகநாடுகளில் படைக்கப்படவில்லை;
89:8. அக்கூட்டத்தினர் எத்தகையோரென்றால் - (உலகத்திலுள்ள) நகரங்களில் (அக்கூட்டத்தினரைப்போன்று) பலசாலிகள் எவரும் படைக்கப்படவில்லை.
89:9
89:9 وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِۙ‏
وَثَمُوْدَ இன்னும் ஸமூது சமுதாயத்தை الَّذِيْنَ எவர்கள் جَابُوا குடைந்தனர் الصَّخْرَ பாறையை بِالْوَادِۙ‏ பள்ளத்தாக்கில்
89:9. பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
89:9. இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.
89:9. மேலும், பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்த ஸமூத் சமுதாயத்தாருடனும்
89:9. இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக் குடைந்து அதில் வசித்து வந்தவர்களான ஸமூது கூட்டத்தையும் -
89:10
89:10 وَفِرْعَوْنَ ذِى الْاَوْتَادِۙ‏
وَفِرْعَوْنَ இன்னும் ஃபிர்அவ்ன் ذِى الْاَوْتَادِۙ‏ ஆணிகளுடைய
89:10. மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
89:10. இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?)
89:10. மேலும், முளைகளையுடைய ஃபிர்அவ்னுடனும் (உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?)
89:10. இன்னும், முளைகளுடைய – (பெரும்படைகளையுடைய) ஃபிர் அவ்னையும் (உமதிரட்சகன் எவ்வாறு செய்தான் என்பதை நீர் காணவில்லையா?)
89:11
89:11 الَّذِيْنَ طَغَوْا فِى الْبِلَادِۙ‏
الَّذِيْنَ எவர்கள் طَغَوْا வரம்பு மீறினார்கள் فِى الْبِلَادِۙ‏ நகரங்களில்
89:11. அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
89:11. இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.
89:11. அந்த மக்களோ உலக நாடுகளில் வரம்புமீறிய செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள்;
89:11. அவர்கள் எத்தகையோரென்றால், நகரங்களில் அவர்கள் வரம்பு மீறி நடந்தார்கள்.
89:12
89:12 فَاَكْثَرُوْا فِيْهَا الْفَسَادَۙ‏
فَاَكْثَرُوْا இன்னும் அதிகப்படுத்தினர் فِيْهَا அவற்றில் الْفَسَادَۙ‏ விஷமத்தை
89:12. அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
89:12. (பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.
89:12. அங்கு பெரும் குழப்பத்தை விளைவித்திருந்தார்கள்.
89:12. பின்னர், அவைகளில் அவர்கள் குழப்பத்தை அதிகப்படுத்தினார்கள்.
89:13
89:13 فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ۙۚ‏
فَصَبَّ எனவே சுழற்றினான் عَلَيْهِمْ அவர்கள் மீது رَبُّكَ உம் இறைவன் سَوْطَ சாட்டையை عَذَابٍ ۙۚ‏ வேதனையின்
89:13. எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
89:13. ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.
89:13. இறுதியில், அவர்கள் மீது உம் இறைவன் தண்டனையின் சாட்டைகளைப் பொழிந்தான்.
89:13. எனவே, உமதிரட்சகன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைப் போட்டான்.
89:14
89:14 اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِؕ‏
اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் لَبِالْمِرْصَادِؕ‏ எதிர்பார்க்குமிடத்தில்
89:14. நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்.
89:14. நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்.
89:14. உண்மையில், உம் இறைவன் குறிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றான்.
89:14. நிச்சயமாக, உமதிரட்சகன் (அடியார்களின் ஒவ்வொரு செயலையும்) கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
89:15
89:15 فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰٮهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ  ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَكْرَمَنِؕ‏
فَاَمَّا ஆக الْاِنْسَانُ மனிதன் اِذَا مَا ابْتَلٰٮهُ அவனைச் சோதித்த போது رَبُّهٗ அவனுடைய இறைவன் فَاَكْرَمَهٗ இன்னும் அவனைக் கண்ணியப்படுத்தினான் وَنَعَّمَهٗ  ۙ இன்னும் அவனுக்கு அருட்கொடை புரிந்தான் فَيَقُوْلُ கூறுகிறான் رَبِّىْۤ என் இறைவன் اَكْرَمَنِؕ‏ என்னைக் கண்ணியப்படுத்தினான்
89:15. ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.
89:15. ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.
89:15. ஆனால், மனிதனின் நிலை எப்படி இருக்கின்றதெனில், அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனை கண்ணியப்படுத்தி, அருட்கொடைகளையும் வழங்கினால், “என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்” என்று கூறுகின்றான்.
89:15. ஆகவே, மனிதன், அவனுடைய இரட்சகன் அவனை சோதித்து பின்னர் அவனைக் கண்ணியப்படுத்தி, அவனுக்கு அருட்கொடைகளையும் அளித்தால் “என்னை என்னுடைய இரட்சகன் கண்ணியப்படுத்தினான்” என்று கூறுகிறான்.
89:16
89:16 وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِ‌ۚ‏
وَاَمَّاۤ ஆக اِذَا مَا ابْتَلٰٮهُ அவனைச் சோதித்த போது فَقَدَرَ இன்னும் சுருக்கினான் عَلَيْهِ அவன் மீது رِزْقَهٗ ۙ அவனுடைய வாழ்வாதாரத்தை فَيَقُوْلُ கூறுகிறான் رَبِّىْۤ என் இறைவன் اَهَانَنِ‌ۚ‏ என்னை இழிவுபடுத்திவிட்டான்
89:16. எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.
89:16. ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்.
89:16. மேலும், அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால் “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று கூறுகின்றான்.
89:16. இன்னும், (அல்லாஹ்) அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரங்களை நெருக்கடியாக்கி விட்டால், அப்போது “எனதிரட்சகன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று அவன்(குறை) கூறுகிறான்.
89:17
89:17 كَلَّا‌ بَلْ لَّا تُكْرِمُوْنَ الْيَتِيْمَۙ‏
كَلَّا‌ அவ்வாறல்ல بَلْ மாறாக لَّا تُكْرِمُوْنَ நீங்கள் கண்ணியப்படுத்துவதில்லை الْيَتِيْمَۙ‏ அநாதையை
89:17. அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
89:17. (விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.
89:17. ஒருபோதும் இல்லை! ஆனால், அநாதையுடன் கண்ணியமாய் நீங்கள் நடந்து கொள்வதில்லை;
89:17. (காரியம்) அவ்வாறன்று! எனினும், நீங்கள் அநாதையை கண்ணியப்படுத்துவதில்லை.
89:18
89:18 وَلَا تَحٰٓضُّوْنَ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۙ‏
وَلَا تَحٰٓضُّوْنَ இன்னும் தூண்டுவதில்லை عَلٰى طَعَامِ உணவிற்கு الْمِسْكِيْنِۙ‏ ஏழையின்
89:18. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
89:18. ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.
89:18. மேலும், வறியவர்க்கு உணவளிக்க ஒருவரையொருவர் தூண்டுவதுமில்லை!
89:18. ஏழைக்கு நீங்கள் உணவளிக்காததுடன் மற்றெவரையும் உணவளிக்கும்படித் தூண்டுவதுமில்லை.
89:19
89:19 وَتَاْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّـمًّا ۙ‏
وَتَاْكُلُوْنَ இன்னும் புசிக்கிறீர்கள் التُّرَاثَ பிறருடைய சொத்தை اَكْلًا لَّـمًّا ۙ‏ புசித்தல்/சேர்த்து
89:19. இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
89:19. பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்.
89:19. மேலும், வாரிசுச் சொத்துக்களை முழுமையாக நீங்களே விழுங்கிவிடுகின்றீர்கள்.
89:19. (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் சேர்த்து உண்டு வருகிறீர்கள்.
89:20
89:20 وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ؕ‏
وَّتُحِبُّوْنَ இன்னும் நேசிக்கிறீர்கள் الْمَالَ செல்வத்தை حُبًّا நேசித்தல் جَمًّا ؕ‏ கடுமையாக
89:20. இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
89:20. மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்.
89:20. மேலும், செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம் கொண்டுள்ளீர்கள்.
89:20. மேலும், நீங்கள் மிக்க அளவு கடந்து செல்வத்தை நேசிக்கிறீர்கள்.
89:21
89:21 كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا ۙ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِذَا دُكَّتِ தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது الْاَرْضُ பூமி دَكًّا دَكًّا ۙ‏ தூள் தூளாகத் தகர்க்கப்படுதல்
89:21. அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
89:21. அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,
89:21. ஒருபோதுமில்லை! பூமி தூள் தூளாக அடித்து நொறுக்கப்படும்போது,
89:21. (உங்கள் செயல்கள் இவ்வாறிருப்பது சிறந்தது) அல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்பட்டுவிடும்போது –
89:22
89:22 وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ۚ‏
وَّجَآءَ இன்னும் வருவான் رَبُّكَ உம் இறைவன் وَالْمَلَكُ இன்னும் மலக்கு صَفًّا صَفًّا ۚ‏ அணி அணியாக
89:22. இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்
89:22. உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்.
89:22. மேலும் வானவர்கள் அணி அணியாக நிற்கும் நிலையில் உம் இறைவன் வருகை தரும்போது,
89:22. உமது இரட்சகன், மேலும் - மலக்குகள் அணி அணியாக வரும்போது-
89:23
89:23 وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ  ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ‏
وَجِاىْٓءَ இன்னும் வரப்படும் يَوْمَٮِٕذٍۢ அந்நாளில் بِجَهَنَّمَ  ۙ‌ நரகத்தைக்கொண்டு يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّتَذَكَّرُ நல்லறிவு பெறுவான் الْاِنْسَانُ மனிதன் وَاَنّٰى இன்னும் எப்படி لَـهُ அவனுக்கு الذِّكْرٰىؕ‏ நல்லறிவு
89:23. அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
89:23. அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்?
89:23. மேலும், அந்நாளில் நரகம் கண்ணெதிரில் கொண்டு வரப்படும்போது அந்நாளில்தான் மனிதன் புரிந்து கொள்வான். அப்போது அவன் புரிந்துகொள்வது என்ன பயனை அளிக்கும்?
89:23. அந்நாளில் (பாவிகளுக்காக) நரகமும் கொண்டுவரப்பட்டுவிட்டால், அந்நாளில் மனிதன் (உலகில் அவன் அல்லாஹ்விற்கு மாற்றமாக நடந்ததை) நினைவு கூர்வான்; இன்னும், (அச்சமயம்) அவனுக்கு நினைவு கூர்வது எவ்வாறு (பயனுள்ளதாக) ஆகும்?
89:24
89:24 يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِى‌ۚ‏
يَقُوْلُ கூறுவான் يٰلَيْتَنِىْ قَدَّمْتُ நான் முற்படுத்தி இருக்க வேண்டுமே لِحَـيَاتِى‌ۚ‏ என் வாழ்வுக்காக
89:24. “என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.
89:24. ‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்.
89:24. அவன் புலம்புவான்: ‘அய்யகோ! எனது இந்த வாழ்க்கைக்காக சில ஏற்பாடுகளை, நான் முன்னரே செய்திருக்கக்கூடாதா?
89:24. “என்னுடைய (இந்த) வாழ்க்கைக்காக (நன்மையைச் செய்து) நான் முற்படுத்தி (அனுப்பி) இருக்க வேண்டுமே என்று அப்போது மனிதன் கூறுவான்.
89:25
89:25 فَيَوْمَٮِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۙ‏
فَيَوْمَٮِٕذٍ ஆகவே அந்நாளில் لَّا يُعَذِّبُ வேதனை செய்ய மாட்டான் عَذَابَهٗۤ அவனுடைய வேதனையை اَحَدٌ ۙ‏ ஒருவனும்
89:25. ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
89:25. அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)
89:25. அந்நாளில் அல்லாஹ் தண்டிப்பதுபோல், தண்டிப்பவர் எவருமிலர்.
89:25. எனவே, அந்நாளில் (அல்லாஹ்வாகிய) அவன் செய்யும் வேதனையைப் போல், மற்றெவனும் வேதனை செய்யமாட்டான்.
89:26
89:26 وَّلَا يُوْثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ؕ‏
وَّلَا يُوْثِقُ இன்னும் கட்டமாட்டான் وَثَاقَهٗۤ அவனுடைய கட்டுதலை اَحَدٌ ؕ‏ ஒருவனும்
89:26. மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
89:26. (பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)
89:26. அவன் கட்டுவதுபோல் கட்டுபவரும் எவரும் இலர்.
89:26. இன்னும், அவன் கட்டுவதுபோல் வேறு எவனும் கட்டமாட்டான்.
89:27
89:27 يٰۤاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَٮِٕنَّةُ  ۖ‏
يٰۤاَيَّتُهَا النَّفْسُ ஆன்மாவே! الْمُطْمَٮِٕنَّةُ  ۖ‏ நிம்மதியடைந்த
89:27. (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
89:27. (எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே!
89:27. (மற்றொரு புறத்தில் அறிவிக்கப்படும்:) ஓ! அமைதியடைந்த ஆன்மாவே!
89:27. (அல்லாஹ்வின் கட்டளைகளை உண்மைப்படுத்துவது கொண்டு) அமைதிபெற்ற ஆத்மாவே!
89:28
89:28 ارْجِعِىْۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً‌ ۚ‏
ارْجِعِىْۤ திரும்பு اِلٰى பக்கம் رَبِّكِ உன் இறைவன் رَاضِيَةً திருப்தி பெற்றதாக مَّرْضِيَّةً‌ ۚ‏ திருப்தி கொள்ளப்பட்டதாக
89:28. நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
89:28. நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)
89:28. செல் உன் இறைவனின் பக்கம்! (உன் நல்ல முடிவைக்கொண்டு) மகிழ்ந்த நிலையில்; (மேலும் உன் இறைவனின்) திருப்தியைப் பெற்ற நிலையில்!
89:28. நீ உன் இரட்சகன் பக்கம் (அவனைத்) திருப்தியடைந்த நிலையிலும், (அவனிடம்) பொருந்திக் கொள்ளப்பட்ட நிலையிலும் மீள்வாயாக!
89:29
89:29 فَادْخُلِىْ فِىْ عِبٰدِىۙ‏
فَادْخُلِىْ இன்னும் சேர்ந்து விடு فِىْ عِبٰدِىۙ‏ என் அடியார்களில்
89:29. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
89:29. ‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து,
89:29. இணைந்துவிடு, என்னுடைய (நல்) அடியார்களுடன்!
89:29. நீ எனது அடியார்(களான நல்லோர்களின் கூட்டங்)களில் பிரவேசிப்பாயாக!
89:30
89:30 وَادْخُلِىْ جَنَّتِى‏
وَادْخُلِىْ இன்னும் நுழைந்து விடு جَنَّتِى‏ என் சொர்க்கத்தில்
89:30. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
89:30. என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்).
89:30. மேலும், புகுந்துவிடு, என்னுடைய சுவனத்தில்!”
89:30. மேலும், என்னுடைய சுவனத்தில் நீ நுழைந்துவிடுவாயாக! (என்றும் அல்லாஹ் கூறுவான்.)