91. ஸூரத்துஷ் ஷம்ஸ்(சூரியன்)
மக்கீ, வசனங்கள்: 15

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
91:1
91:1 وَالشَّمْسِ وَضُحٰٮهَاۙ‏
وَالشَّمْسِ சூரியனின் மீது சத்தியமாக وَضُحٰٮهَا  ۙ‏ அதன் பகலின் மீது சத்தியமாக
91:1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
91:1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக,
91:1. சூரியன் மீதும் அதன் வெயிலின் மீதும் சத்தியமாக!
91:1. சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
91:2
91:2 وَالْقَمَرِ اِذَا تَلٰٮهَا  ۙ‏
وَالْقَمَرِ சந்திரன் மீது சத்தியமாக اِذَا تَلٰٮهَا  ۙ‏ அதைத் தொடரும்போது
91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
91:2. (அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும்,
91:2. மேலும், சந்திரன் மீது சத்தியமாக, அது சூரியனைத் தொடர்ந்து வரும்போது!
91:2. சந்திரன் மீதும் சத்தியமாக-அது அச்சூரியனாகியதை அடுத்து தொடர்ந்துவிடும்போது-
91:3
91:3 وَالنَّهَارِ اِذَا جَلّٰٮهَا ۙ‏
وَالنَّهَارِ பகலின் மீது சத்தியமாக اِذَا جَلّٰٮهَا ۙ‏ அதை வெளிப்படுத்தும்போது
91:3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
91:3. (சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும்,
91:3. மேலும், பகலின் மீது சத்தியமாக, அது சூரியனை வெளிப்படுத்திக் காட்டும்போது!
91:3. பகலின் மீதும் சத்தியமாக –அது அச்சூரியனாகியதை வெளிப்படுத்திவிடும்போது-
91:4
91:4 وَالَّيْلِ اِذَا يَغْشٰٮهَا ۙ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذَا يَغْشٰٮهَا ۙ‏ அது அதை மூடும்போது
91:4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
91:4. (அதை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்,
91:4. மேலும், இரவின் மீது சத்தியமாக, அது சூரியனை மூடி மறைத்துக் கொள்ளும்போது!
91:4. இரவின் மீது சத்தியமாக-அது அ(ச்சூரியனாகிய)தை மூடிக்கொண்டுவிடும்போது-
91:5
91:5 وَالسَّمَآءِ وَمَا بَنٰٮهَا ۙ‏
وَالسَّمَآءِ வானத்தின் மீது சத்தியமாக وَمَا بَنٰٮهَا ۙ‏ அதை அமைத்தவன் மீது சத்தியமாக
91:5. வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
91:5. வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும்,
91:5. மேலும், வானத்தின் மீதும் அதை அமைத்தவன் மீதும் சத்தியமாக!
91:5. வானத்தின்மீதும் அதை (ஒழுங்குற) அமைத்தவன் மீதும் சத்தியமாக-
91:6
91:6 وَالْاَرْضِ وَمَا طَحٰٮهَا ۙ‏
وَالْاَرْضِ பூமியின் மீது சத்தியமாக وَمَا طَحٰٮهَا ۙ‏ அதை விரித்தவன் மீது சத்தியமாக
91:6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
91:6. பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும்,
91:6. மேலும், பூமியின் மீதும் அதை விரித்தவன் மீதும் சத்தியமாக!
91:6. பூமியின் மீதும் - அதை விரித்தவன் மீதும் சத்தியமாக-
91:7
91:7 وَنَفْسٍ وَّمَا سَوّٰٮهَا ۙ‏
وَنَفْسٍ ஆன்மாவின் மீது சத்தியமாக وَّمَا سَوّٰٮهَا ۙ அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக
91:7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
91:7. ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்,
91:7. மேலும், மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப்படுத்தி பின்னர்,
91:7. ஆத்மாவின் மீதும்-அதனைச் செவ்வையாக்கியவனின் மீதும் சத்தியமாக-
91:8
91:8 فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰٮهَا ۙ‏
فَاَلْهَمَهَا அதற்கு அறிவித்தவன் فُجُوْرَهَا அதன் தீமையை وَتَقْوٰٮهَا ۙ‏ இன்னும் அதன் நன்மையை
91:8. அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
91:8. அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக!
91:8. அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீதும் சத்தியமாக!
91:8. பின்னர், அதற்கு அதன் தீமையையும் அதற்குரிய நன்மையையும் உணர்த்தினான்.
91:9
91:9 قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا ۙ‏
قَدْ திட்டமாக اَفْلَحَ வெற்றி பெற்றார் مَنْ زَكّٰٮهَا ۙ‏ எவர்/அதைப் பரிசுத்தமாக்கினார்
91:9. அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
91:9. எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார்.
91:9. திண்ணமாக, வெற்றி பெற்றுவிட்டான் மனத்தைத் தூய்மைப்படுத்தியவன்;
91:9. எவர் (ஆத்மாவாகிய) அதை பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், திட்டமாக வெற்றியடைந்து விட்டார்.
91:10
91:10 وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا ؕ‏
وَقَدْ திட்டமாக خَابَ நஷ்டமடைந்தான் مَنْ எவன் دَسّٰٮهَا ؕ‏ அதை மறைத்தான்
91:10. ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
91:10. எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்.
91:10. மேலும், தோற்றுவிட்டான் அதனை நசுக்கியவன்!
91:10. இன்னும், எவர் அதனை (ப்பாவத்தைக்கொண்டு) களங்கப்படுத்திவிட்டாரோ, அவர் திட்டமாக நஷ்டமடைந்து விட்டார்.
91:11
91:11 كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰٮهَآ  ۙ‏
كَذَّبَتْ பொய்பித்தது ثَمُوْدُ ஸமூது சமுதாயம் بِطَغْوٰٮهَآ  ۙ‏ தன் அழிச்சாட்டியத்தால்
91:11. “ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
91:11. ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள்.
91:11. ஸமூத் சமுதாயத்தார் தங்கள் வரம்பு மீறிய போக்கினால் பொய்யெனத் தூற்றினார்கள்.
91:11. ஸமூது (கூட்டத்தினர் ஸாலிஹ் நபியை) தங்கள் அக்கிரமத்தால் பொய்யாக்கினார்கள்.
91:12
91:12 اِذِ انْۢبَعَثَ اَشْقٰٮهَا  ۙ‏
اِذِ انْۢبَعَثَ புறப்பட்டபோது اَشْقٰٮهَا  ۙ‏ அதன் தீயவன்
91:12. அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
91:12. அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது,
91:12. அவர்களில் மிகவும் கேடுகெட்ட ஒருவன் எழுந்து வந்தபோது
91:12. அக்கூட்டத்திலுள்ள மிக துர்பாக்கியமுடையவன் விரைந்து முன்வந்தபொழுது-
91:13
91:13 فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْيٰهَا ؕ‏
فَقَالَ கூறினார் لَهُمْ அவர்களுக்கு رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வின் نَاقَةَ பெண் ஒட்டகத்தை اللّٰهِ அல்லாஹ்வுடைய وَسُقْيٰهَا ؕ‏ இன்னும் அது நீர் பருகுவதை
91:13. அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
91:13. அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார்.
91:13. அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் கூறினார்: “எச்சரிக்கை! அல்லாஹ்வின் ஒட்டகம் (அதன் மீது கை வைக்காதீர்கள்;) அது நீர் அருந்துவதைத் (தடுக்காதீர்கள்).”
91:13. அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ் நபி) அ(ந்த ஸமூது கூட்டத்த)வர்களிடம் “அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தை (இம்சிப்பதை)யும் அது தண்ணீர் அருந்துவதையயும் (விட்டுவிடுங்கள்)” என்று கூறினார்.
91:14
91:14 فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا   ۙفَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰٮهَا  ۙ‏
فَكَذَّبُوْهُ அவரைப் பொய்ப்பித்தார்கள் فَعَقَرُوْهَا அதைக் கொன்றார்கள்   ۙفَدَمْدَمَ ஆகவே, கடுமையான வேதனையை இறக்கினான் عَلَيْهِمْ அவர்களின் மீது رَبُّهُمْ அவர்களுடைய இறைவன் بِذَنْۢبِهِمْ அவர்களின் பாவத்தினால் فَسَوّٰٮهَا  ۙ‏ அதை சமமாக்கினான்
91:14. ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
91:14. எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.
91:14. ஆனால், அம்மக்கள் அவருடைய பேச்சைப் பொய்யெனத் தூற்றினார்கள். மேலும், ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள். இறுதியில், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பாவத்தின் விளைவாக கடுமையானதொரு ஆபத்தை இறக்கி, அனைவரையும் அழித்து, மண்ணோடு மண்ணாக்கி விட்டான்.
91:14. பின்னர், அவர்கள் அவரைப் பொய்யாக்கி (அதன் கால் நரம்பைத்தறித்து) அதை அறுத்துவிட்டனர்; ஆகவே, அவர்களின் இரட்சகன் அவர்களுடைய (இந்தப்)பாவத்தின் காரணமாக அவர்களின் மீது (மண்ணோடு மண்ணாகிவிடும்) கடும் வேதனையை இறக்கிவைத்து பிறகு அதனை (ச் சகலருக்கும்) சமமாக்கினான்.
91:15
91:15 وَلَا يَخَافُ عُقْبٰهَا‏
وَلَا يَخَافُ இன்னும் பயப்பட மாட்டான் عُقْبٰهَا‏ அதன் முடிவை
91:15. அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.
91:15. இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை.
91:15. மேலும், (தனது இந்தச் செயலின்) எந்தவொரு தீயவிளைவு பற்றியும் அவனுக்கு அச்சம் இல்லை.
91:15. அதனுடைய முடிவைப்பற்றியும் அவன் பயப்படவில்லை.