بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1:5-7 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏  ، اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏  ، صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ ۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏ 
اِيَّاكَ உன்னையே نَعْبُدُ வணங்குவோம் وَاِيَّاكَ இன்னும் உன்னிடமே نَسْتَعِيْنُؕ‏ உதவி தேடுவோம் اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தார்களின் الرَّحْمٰنِ பேரருளாளன் الرَّحِيْمِۙ‏ பேரன்பாளன் مٰلِكِ அதிபதி يَوْمِ الدِّيْنِؕ‏ நாளின்/கூலி اِيَّاكَ உன்னையே نَعْبُدُ வணங்குவோம் وَاِيَّاكَ இன்னும் உன்னிடமே نَسْتَعِيْنُؕ‏ உதவி தேடுவோம்
1:5-7. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.
2:127-128 رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏ 
رَبَّنَا எங்கள் இறைவா تَقَبَّلْ ஏற்றுக் கொள் مِنَّا ؕ எங்களிடமிருந்து اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ மிக அறிந்தவன் وَتُبْ عَلَيْنَا ۚ இன்னும் மன்னித்திடு/ எங்களை اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் التَّوَّابُ தவ்பாவை அங்கீகரிப்பவன் الرَّحِيْمُ‏ பேரன்பாளன்
2:127-128. “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
2:201 رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ‏
رَبَّنَآ எங்கள் இறைவா اٰتِنَا எங்களுக்குத் தா فِى الدُّنْيَا இம்மையில் حَسَنَةً அழகியதை وَّفِى الْاٰخِرَةِ இன்னும் மறுமையில் حَسَنَةً அழகியதை وَّ قِنَا இன்னும் காத்துக்கொள்/ எங்களை عَذَابَ வேதனையிலிருந்து النَّارِ‏ (நரக) நெருப்பின்
2:201. “ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!”
2:250 رَبَّنَآ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْکٰفِرِيْنَؕ‏ 
رَبَّنَآ எங்கள் இறைவா اَفْرِغْ இறக்கு عَلَيْنَا எங்கள் மீது صَبْرًا பொறுமையை وَّثَبِّتْ இன்னும் உறுதிப்படுத்து اَقْدَامَنَا எங்கள் பாதங்களை وَانْصُرْنَا இன்னும் எங்களுக்கு உதவு عَلَى எதிராக الْقَوْمِ மக்களுக்கு الْکٰفِرِيْنَؕ‏ நிராகரிப்பாளர்கள்
2:250. “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”.
2:285 سَمِعْنَا وَاَطَعْنَا‌ غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ 
سَمِعْنَا செவியுற்றோம் وَاَطَعْنَا‌ இன்னும் கட்டுப்பட்டோம் غُفْرَانَكَ உன் மன்னிப்பை رَبَّنَا எங்கள் இறைவா وَاِلَيْكَ இன்னும் உன் பக்கமே الْمَصِيْرُ‏ மீளுமிடம்
2:285. எங்கள் இறைவனே (உன் வசனங்களை) செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்”.
2:286 رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌ۚرَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ 
رَبَّنَا எங்கள் இறைவா لَا تُؤَاخِذْنَاۤ எங்களைத் தண்டிக்காதே اِنْ نَّسِيْنَاۤ நாங்கள் மறந்தால் اَوْ அல்லது اَخْطَاْنَا ۚ நாங்கள் தவறிழைத்தால் رَبَّنَا எங்கள் இறைவா وَلَا تَحْمِلْ இன்னும் சுமத்தாதே عَلَيْنَاۤ எங்கள் மீது اِصْرًا கடினமான சுமையை كَمَا போன்று حَمَلْتَهٗ அதைச் சுமத்தினாய் عَلَى மீது الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِنَا எங்களுக்கு முன்  ۚرَبَّنَا எங்கள் இறைவா وَلَا تُحَمِّلْنَا இன்னும் எங்களை சுமக்க வைக்காதே مَا எது لَا طَاقَةَ அறவே ஆற்றல் இல்லை لَنَا எங்களுக்கு بِهٖ‌ ۚ அதற்கு وَاعْفُ இன்னும் (பிழைகளை) அழித்தருள் عَنَّا எங்களை விட்டு وَاغْفِرْ இன்னும் மன்னித்தருள் لَنَا எங்களுக்கு وَارْحَمْنَا اَنْتَ இன்னும் எங்களுக்கு கருணைபுரி / நீ مَوْلٰٮنَا எங்கள் தலைவன் فَانْصُرْنَا ஆகவே நீஎங்களுக்கு உதவு عَلَى الْقَوْمِ கூட்டத்திற்கு எதிராக الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்கள்
2:286. “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
3:8 رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏ 
رَبَّنَا எங்கள் இறைவா لَا تُزِغْ கோணலாக்கி விடாதே قُلُوْبَنَا எங்கள் உள்ளங்களை بَعْدَ பின்னர் اِذْ هَدَيْتَنَا எங்களைநேர்வழியில்செலுத்தினாய் وَهَبْ இன்னும் வழங்கு لَنَا எங்களுக்கு مِنْ لَّدُنْكَ உன்னிடமிருந்து رَحْمَةً  ۚ கருணையை اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْوَهَّابُ‏ வாரி வழங்குபவன்
3:8. “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!”
3:9 رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّكَ நிச்சயமாக நீ جَامِعُ ஒன்று சேர்ப்பவன் النَّاسِ மக்களை لِيَوْمٍ ஒரு நாளில் لَّا அறவே இல்லை رَيْبَ சந்தேகம் فِيْهِ‌ؕ அதில் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُخْلِفُ மாற்ற மாட்டான் الْمِيْعَادَ‏ வாக்கை
3:9. “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்”
3:16 رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ‌ۚ‏ 
رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّنَاۤ நிச்சயமாக நாங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் فَاغْفِرْ எனவே மன்னி لَنَا எங்களுக்கு ذُنُوْبَنَا எங்கள் பாவங்களை وَقِنَا இன்னும் எங்களை காப்பாற்று عَذَابَ வேதனையிலிருந்து النَّارِ‌ۚ‏ நரக நெருப்பின்
3:16. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!”
3:26 اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
اللّٰهُمَّ அல்லாஹ்வே مٰلِكَ உரிமையாளனே الْمُلْكِ ஆட்சிகளுக்கெல்லாம் تُؤْتِى கொடுக்கிறாய் الْمُلْكَ ஆட்சியை مَنْ எவர் تَشَآءُ நாடுகிறாய் وَتَنْزِعُ இன்னும் பறிக்கிறாய் الْمُلْكَ ஆட்சியை مِمَّنْ எவரிடமிருந்து تَشَآءُ நாடுகிறாய் وَتُعِزُّ இன்னும் கண்ணியப் படுத்துகிறாய் مَنْ எவர் تَشَآءُ நாடுகிறாய் وَتُذِلُّ இன்னும் இழிவுபடுத்துகிறாய் مَنْ எவர் تَشَآءُ‌ ؕ நாடுகிறாய் بِيَدِكَ உன் கையில்தான் الْخَيْرُ‌ؕ நன்மை اِنَّكَ நிச்சயமாக நீ عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
3:26. “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
3:38 رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏ 
رَبِّ என் இறைவா هَبْ لِىْ எனக்கு தா! مِنْ لَّدُنْكَ உன் புறத்திலிருந்து ذُرِّيَّةً ஒரு சந்ததியை طَيِّبَةً‌  ۚ اِنَّكَ நல்லது/நிச்சயமாக நீ سَمِيْعُ நன்கு செவியுறுபவன் الدُّعَآءِ‏ பிரார்த்தனை
3:38. “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
3:53 رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏ 
رَبَّنَاۤ எங்கள் இறைவா اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِمَاۤ எதை اَنْزَلْتَ நீ இறக்கினாய் وَاتَّبَعْنَا இன்னும் பின்பற்றினோம் الرَّسُوْلَ தூதர் فَاكْتُبْنَا ஆகவே எங்களை பதிவு செய் مَعَ الشّٰهِدِيْنَ‏ சாட்சியாளர்களுடன்
3:53. “எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!”
3:147 رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِىْۤ اَمْرِنَا وَ ثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏ 
رَبَّنَا எங்கள் இறைவா اغْفِرْ لَنَا எங்களுக்கு மன்னி ذُنُوْبَنَا எங்கள் பாவங்களை وَاِسْرَافَنَا இன்னும் எங்கள்வரம்பு மீறலை فِىْۤ اَمْرِنَا எங்கள் காரியத்தில் وَ ثَبِّتْ இன்னும் உறுதிப்படுத்து اَقْدَامَنَا எங்கள் பாதங்களை وَانْصُرْنَا இன்னும் எங்களுக்கு உதவு عَلَى எதிராக الْقَوْمِ மக்களுக்கு الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்கள்
3:147. “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக”.
3:191-194 رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏ ، رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهٗ ‌ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏ ، رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِىْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا  رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ‌ۚ‏ ، رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدتَّنَا عَلٰى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيٰمَةِ ‌ؕ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ‏ 
رَبَّنَا எங்கள் இறைவா مَا خَلَقْتَ நீ படைக்கவில்லை هٰذَا بَاطِلًا ۚ இதை/வீணாக سُبْحٰنَكَ தூய்மைப்படுத்துகிறோம்/உன்னை فَقِنَا ஆகவே காப்பாற்று/எங்களை عَذَابَ வேதனையிலிருந்து النَّارِ‏ (நரக) நெருப்பின் رَبَّنَاۤ எங்கள்இறைவா اِنَّكَ நிச்சயமாக நீ مَنْ எவரை تُدْخِلِ நுழைக்கிறாய் النَّارَ நரக நெருப்பில் فَقَدْ திட்டமாக اَخْزَيْتَهٗ ؕ இழிவு படுத்தினாய்/அவரை وَمَا இன்னும் இல்லை لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு مِنْ اَنْصَارٍ‏ உதவியாளர்களில் رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّنَا நிச்சயமாக நாங்கள் سَمِعْنَا செவிமடுத்தோம் مُنَادِيًا ஓர் அழைப்பாளரை يُّنَادِىْ அழைக்கிறார் لِلْاِيْمَانِ நம்பிக்கையின் பக்கம் اَنْ اٰمِنُوْا நம்பிக்கை கொள்ளுங்கள் என்று بِرَبِّكُمْ உங்கள் இறைவனை فَاٰمَنَّا  ۖ ஆகவே நம்பிக்கை கொண்டோம் رَبَّنَا எங்கள் இறைவா فَاغْفِرْ لَنَا ஆகவே மன்னி/எங்களுக்கு ذُنُوْبَنَا எங்கள் பாவங்களை وَكَفِّرْ இன்னும் அகற்றிடு عَنَّا எங்களை விட்டு سَيِّاٰتِنَا தீமைகளை/எங்கள் وَتَوَفَّنَا இன்னும் மரணத்தைத் தா/எங்களுக்கு مَعَ உடன் الْاَبْرَارِ‌ۚ‏ நல்லோர் رَبَّنَا எங்கள் இறைவா وَاٰتِنَا இன்னும் தா/எங்களுக்கு مَا وَعَدتَّنَا எதை/நீ வாக்களித்தாய்/எங்களுக்கு عَلٰى மூலம் رُسُلِكَ உன் தூதர்கள் وَلَا تُخْزِ இழிவுபடுத்தாதே نَا எங்களை يَوْمَ الْقِيٰمَةِ ؕ மறுமை நாளில் اِنَّكَ நிச்சயமாக நீ لَا تُخْلِفُ மாற்றமாட்டாய் الْمِيْعَادَ‏ வாக்குறுதியை
3:191-194. “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!”. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!”. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!”. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல.
5:83 رَبَّنَاۤ اٰمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏ 
رَبَّنَاۤ எங்கள் இறைவா اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் فَاكْتُبْنَا ஆகவே பதிவு செய்/எங்களை مَعَ உடன் الشّٰهِدِيْنَ‏ சாட்சியாளர்கள்
5:83. “எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!”
7:23 رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏
رَبَّنَا எங்கள் இறைவா ظَلَمْنَاۤ நாங்கள் தீங்கிழைத்தோம் اَنْفُسَنَا ٚ எங்கள் ஆன்மாக்களுக்கு وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا நீ மன்னிக்கவில்லையெனில்/எங்களை وَتَرْحَمْنَا இன்னும் நீ கருணை புரியவில்லையெனில்/எங்களுக்கு لَـنَكُوْنَنَّ நிச்சயமாக ஆகிவிடுவோம் مِنَ الْخٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளில்
7:23. “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”.
7:89 رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَـقِّ وَاَنْتَ خَيْرُ الْفٰتِحِيْنَ‏ 
رَبَّنَا எங்கள் இறைவா افْتَحْ தீர்ப்பளி(முடிவுசெய்) بَيْنَنَا எங்களுக்கிடையில் وَبَيْنَ இன்னும் இடையில் قَوْمِنَا எங்கள் சமுதாயத்திற்கு بِالْحَـقِّ நியாயமாக وَاَنْتَ நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الْفٰتِحِيْنَ‏ தீர்ப்பளிப்பவர்களில்
7:89. “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்”.
7:126 ؕ رَبَّنَاۤ اَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَّتَوَفَّنَا مُسْلِمِيْنَ 
رَبَّنَاۤ எங்கள் இறைவா اَفْرِغْ இறக்கு عَلَيْنَا எங்கள் மீது صَبْرًا பொறுமையை وَّتَوَفَّنَا கைப்பற்று/எங்களை مُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களாக
7:126. “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!”
7:149 لَٮِٕنْ لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَـنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏ 
لَٮِٕنْ لَّمْ يَرْحَمْنَا கருணைபுரியவில்லையென்றால்/எங்களுக்கு رَبُّنَا எங்கள் இறைவன் وَيَغْفِرْ لَـنَا இன்னும் மன்னிக்க வில்லையென்றால்/எங்களை لَنَكُوْنَنَّ நிச்சயம் நாங்கள் ஆகிவிடுவோம் مِنَ الْخٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளில்
7:149. “எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”.
7:156 وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ
وَاكْتُبْ எழுதுவாயாக, விதிப்பாயாக لَـنَا எங்களுக்கு فِىْ هٰذِهِ الدُّنْيَا இம்மையில் حَسَنَةً அழகியதை, நல்ல வாழ்வை وَّفِى الْاٰخِرَةِ இன்னும் மறுமையில்
7:156. “இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்”
9:129 حَسْبِىَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ‌ ؕ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ 
حَسْبِىَ اللّٰهُ  அல்லாஹ் எனக்குப் போதுமானவன் لَاۤ اِلٰهَ அறவே இல்லை/வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ ؕ தவிர/அவனை عَلَيْهِ அவன் மீதே تَوَكَّلْتُ‌ ؕ நான் நம்பிக்கை வைத்து விட்டேன் وَهُوَ رَبُّ அவன் அதிபதி الْعَرْشِ அர்ஷின் الْعَظِيْمِ‏ மகத்தானது
9:129. “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி”
10:85 عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏ 
عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீதே تَوَكَّلْنَا‌ ۚ நம்பிக்கைவைத்தோம் رَبَّنَا எங்கள் இறைவா لَا تَجْعَلْنَا எங்களை ஆக்கிவிடாதே فِتْنَةً சோதனையாக لِّـلْقَوْمِ சமுதாயத்திற்கு الظّٰلِمِيْنَۙ‏ அநியாயம் புரிகின்றனர்
10:85. “நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே!”
10:86 وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏ 
وَنَجِّنَا பாதுகாத்துக் கொள்/எங்களை بِرَحْمَتِكَ உன் அருளால் مِنَ இருந்து الْقَوْمِ சமுதாயம் الْكٰفِرِيْنَ‏ நிராகரிக்கின்றவர்கள்
10:86. “(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!”
11:41 بِسْمِ اللّٰهِ مَجْرٖؔٮھَا وَمُرْسٰٮهَا ‌ؕ اِنَّ رَبِّىْ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ
بِسْمِ பெயர் கொண்டு اللّٰهِ அல்லாஹ்வின் مَجْرٖؔٮھَا அது ஓடும் போது وَمُرْسٰٮهَا ؕ நிறுத்தப்படும் போது اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் لَـغَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ ‏ பெரும் கருணையாளன்
11:41. இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
11:47 رَبِّ اِنِّىْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْــٴَــلَكَ مَا لَـيْسَ لِىْ بِهٖ عِلْمٌ‌ؕ وَاِلَّا تَغْفِرْ لِىْ وَتَرْحَمْنِىْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِيْنَ‏
رَبِّ என் இறைவா اِنِّىْۤ நிச்சயமாக நான் اَعُوْذُ பாதுகாப்புக் கோருகிறேன் بِكَ உன்னிடம் اَنْ اَسْــٴَــلَكَ நான்கேட்பதைவிட்டு مَا لَـيْسَ எதை/இல்லை لِىْ بِهٖ எனக்கு/அதில் عِلْمٌ‌ؕ ஞானம் وَاِلَّا تَغْفِرْ நீ மன்னிக்க வில்லையெனில் لِىْ என்னை وَتَرْحَمْنِىْۤ கருணை காட்டவில்லையெனில்/எனக்கு اَكُنْ ஆகிவிடுவேன் مِّنَ الْخٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளில்
11:47. “என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்”.
12:101 فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏ 
فَاطِرَ படைத்தவனே السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضِ இன்னும் பூமியை(யும்) اَنْتَ وَلِىّٖ நீ என் பாதுகாவலன் فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ‌ ۚ இன்னும் மறுமை تَوَفَّنِىْ உயிர் கைப்பற்றிக் கொள்/என்னை مُسْلِمًا முஸ்லிமாக وَّاَلْحِقْنِىْ இன்னும் சேர்த்து விடு/என்னை بِالصّٰلِحِيْنَ‏ நல்லவர்களுடன்
12:101. “வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!”
14:40 رَبِّ اجْعَلْنِىْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِىْ‌‌ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ‏ 
رَبِّ என் இறைவா اجْعَلْنِىْ ஆக்கு/என்னை مُقِيْمَ நிலைநிறுத்துபவனாக الصَّلٰوةِ தொழுகையை وَمِنْ ذُرِّيَّتِىْ‌ இன்னும் என் சந்ததிகளிலிருந்து ۖ  رَبَّنَا எங்கள் இறைவா وَتَقَبَّلْ இன்னும் ஏற்றுக் கொள் دُعَآءِ‏ என் பிரார்த்தனையை
14:40. (“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”
14:41 رَبَّنَا اغْفِرْ لِىْ وَلـِوَالِدَىَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ 
رَبَّنَا எங்கள் இறைவா اغْفِرْ لِىْ மன்னிப்பளி/எனக்கு وَلـِوَالِدَىَّ இன்னும் என் தாய் தந்தைக்கு وَلِلْمُؤْمِنِيْنَ இன்னும் நம்பிக்கையாளர்களுக்கு يَوْمَ يَقُوْمُ நாளில்/நிறைவேறும் الْحِسَابُ‏ விசாரணை
14:41. “எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக”.
17:24 رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ‏ 
رَّبِّ என் இறைவா ارْحَمْهُمَا நீயும் கருணை புரி!/அவ்விருவருக்கு كَمَا رَبَّيٰنِىْ அவர்கள் வளர்த்தவாறே/என்னை صَغِيْرًا ؕ‏ சிறியவனாக
17:24. “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!”
18:10 رَبَّنَاۤ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَـنَا مِنْ اَمْرِنَا رَشَدًا‏ 
رَبَّنَاۤ எங்கள் இறைவா اٰتِنَا எங்களுக்குத் தா مِنْ لَّدُنْكَ உன் புறத்திலிருந்து رَحْمَةً அருளை وَّهَيِّئْ இன்னும் ஏற்படுத்து لَـنَا எங்களுக்கு مِنْ اَمْرِنَا எங்கள் காரியத்தில் رَشَدًا‏ நல்வழியை
18:10. “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!”.
19:4-5 رَبِّ اِنِّىْ وَهَنَ الْعَظْمُ مِنِّىْ وَاشْتَعَلَ الرَّاْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْۢ بِدُعَآٮِٕكَ رَبِّ شَقِيًّا‏ ، وَاِنِّىْ خِفْتُ الْمَوَالِىَ مِنْ وَّرَآءِىْ وَكَانَتِ امْرَاَتِىْ عَاقِرًا فَهَبْ لِىْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ‏ 
رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் وَهَنَ பலவீனமடைந்து விட்டது الْعَظْمُ எலும்பு مِنِّىْ என்னில் وَاشْتَعَلَ வெளுத்து விட்டது الرَّاْسُ தலை شَيْبًا நரையால் وَّلَمْ اَكُنْۢ நான் ஆகமாட்டேன் بِدُعَآٮِٕكَ உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில் رَبِّ என் இறைவா شَقِيًّا‏ துர்பாக்கியவனாக وَاِنِّىْ நிச்சயமாக நான் خِفْتُ பயப்படுகிறேன் الْمَوَالِىَ உறவினர்களை مِنْ وَّرَآءِىْ எனக்குப் பின்னால் وَكَانَتِ இன்னும் இருக்கிறாள் امْرَاَتِىْ என் மனைவி عَاقِرًا மலடியாக فَهَبْ ஆகவே, தா! لِىْ எனக்கு مِنْ لَّدُنْكَ உன் புறத்திலிருந்து وَلِيًّا ۙ‏ ஒரு வாரிசை
19:4-5. “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!
20:25-28 رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏ ، وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ‏ ، وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ‏ ، يَفْقَهُوْا قَوْلِیْ 
رَبِّ என் இறைவா اشْرَحْ لِىْ எனக்கு விரிவாக்கு صَدْرِىْ ۙ‏ என் நெஞ்சத்தை وَيَسِّرْ இன்னும் இலகுவாக்கு لِىْۤ எனக்கு اَمْرِىْ ۙ‏ என் காரியத்தை وَاحْلُلْ இன்னும் அவிழ்த்துவிடு عُقْدَةً கொன்னலை مِّنْ لِّسَانِیْ ۙ‏ என் நாவிலிருந்து يَفْقَهُوْا அவர்கள் புரிந்து கொள்வார்கள் قَوْلِیْ ‏ என் பேச்சை
20:25-28. “இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!” “என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!” “என் நாவிலுள்ள முடிச்சையும் அவிழ்ப்பாயாக!” “என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!”
20:114 رَّبِّ زِدْنِىْ عِلْمًا‏ 
رَّبِّ என் இறைவா زِدْنِىْ எனக்குஅதிகப்படுத்து عِلْمًا‏ ஞானத்தை
20:114. “இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”
21:83 اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‌‌ۚ‏ 
اَنِّىْ நிச்சயமாக நான் مَسَّنِىَ என்னை தொட்டுவிட்டன الضُّرُّ தீங்குகள் وَاَنْتَ நீயோ اَرْحَمُ மகா கருணையாளன் الرّٰحِمِيْنَ‌ ۖ‌ۚ‏ கருணையாளர்களில்
21:83. “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்”
21:87 لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌ ‌ۚ‏ 
اَنْ لَّاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّاۤ தவிர اَنْتَ உன்னை سُبْحٰنَكَ நீ மகா பரிசுத்தமானவன் ۖ  اِنِّىْ நிச்சயமாக நான் كُنْتُ சேர்ந்து விட்டேன் مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ۚ‏ அநியாயக்காரர்களில்
21:87. “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”.
21:89 رَبِّ لَا تَذَرْنِىْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْنَ‌‌ۚ‏ 
رَبِّ என் இறைவா لَا تَذَرْنِىْ என்னை விட்டுவிடாதே فَرْدًا ஒருத்தனாக وَّاَنْتَ நீதான் خَيْرُ மிகச் சிறந்தவன் الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏ வாரிசுகளில்
21:89. “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்”
23:26 رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏ 
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா انْصُرْنِىْ எனக்கு நீ உதவுவாயாக بِمَا كَذَّبُوْنِ‏ அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்
23:26. “என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!”.
23:28 الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ نَجّٰٮنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏ 
الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْ نَجّٰٮنَا எவன்/எங்களை பாதுகாத்தான் مِنَ الْقَوْمِ மக்களிடமிருந்து الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
23:28. “அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”.
23:29 رَّبِّ أَنزِلْنِي مُنزَلًا مُّبَارَكًا وَأَنتَ خَيْرُ الْمُنزِلِينَ
رَّبِّ என் இறைவா اَنْزِلْنِىْ என்னை தங்க வைப்பாயாக مُنْزَلًا ஓர் இடத்தில் مُّبٰـرَكًا அருள் நிறைந்த وَّاَنْتَ நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الْمُنْزِلِيْنَ‏ தங்க வைப்பவர்களில்
23:29. “இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்”.
23:39 رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏ 
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா انْصُرْنِىْ எனக்கு நீ உதவுவாயாக بِمَا كَذَّبُوْنِ‏ அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்
23:39. “என் இறைவா! என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!”
23:94 رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ
رَبِّ என் இறைவா فَلَا تَجْعَلْنِىْ ஆகவே, என்னையும் நீ ஆக்கிவிடாதே فِى الْقَوْمِ மக்களில் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார
23:94. “என் இறைவனே! என்னை அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக”.
23:97-98 رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ‏ ،وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏ 
رَّبِّ என் இறைவா اَعُوْذُ بِكَ உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் مِنْ هَمَزٰتِ நெறிப்பதை விட்டும் الشَّيٰطِيْنِۙ‏ ஷைத்தான்கள் وَاَعُوْذُ بِكَ رَبِّ உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் / என் இறைவா! اَنْ يَّحْضُرُوْنِ‏ அவர்கள் என்னிடம் வருவதை விட்டும்
23:97-98. “என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” . “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்”.
23:109 رَبَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ‌‌ۖ‌ۚ‏ 
رَبَّنَاۤ எங்கள் இறைவா اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் فَاغْفِرْ ஆகவே மன்னித்து விடு لَـنَا எங்களை وَارْحَمْنَا எங்கள் மீது கருணை புரி وَاَنْتَ இன்னும் நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الرّٰحِمِيْنَ‌ۖ‌ۚ‏ கருணை புரிபவர்களில்
23:109. “எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்”.
23:118 رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ 
رَّبِّ என் இறைவா اغْفِرْ மன்னிப்பாயாக وَارْحَمْ இன்னும் கருணைபுரிவாயாக وَاَنْتَ நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الرّٰحِمِيْنَ‏ கருணை புரிபவர்களில்
23:118. “என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்”
25:65 رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَـنَّمَ ‌ۖ اِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا ‌ۖ ‏ 
وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ இன்னும் அவர்கள் கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா! اصْرِفْ திருப்பி விடு عَنَّا எங்களை விட்டு عَذَابَ தண்டனையை جَهَـنَّمَ நரகமுடைய ۖ  اِنَّ நிச்சயமாக عَذَابَهَا அதனுடைய தண்டனை كَانَ இருக்கிறது غَرَامًا ۖ ‏ நீங்காத ஒன்றாக
25:65. “எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்”.
25:74 رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏ 
رَبَّنَا எங்கள் இறைவா! هَبْ தருவாயாக! لَـنَا எங்களுக்கு مِنْ اَزْوَاجِنَا எங்கள் மனைவிகள் மூலமும் وَذُرِّيّٰتِنَا எங்கள் சந்ததிகள் மூலமும் قُرَّةَ குளிர்ச்சியை اَعْيُنٍ கண்களுக்கு وَّاجْعَلْنَا எங்களை ஆக்குவாயாக! لِلْمُتَّقِيْنَ இறையச்சமுள்ளவர்களுக்கு اِمَامًا‏ இமாம்களாக
25:74. “எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!.
26:51 اِنَّا نَطْمَعُ اَنْ يَّغْفِرَ لَـنَا رَبُّنَا خَطٰيٰـنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ الْمُؤْمِنِيْنَؕ‏ 
اِنَّا நிச்சயமாக நாங்கள் نَطْمَعُ ஆசிக்கிறோம் اَنْ يَّغْفِرَ மன்னிப்பதை لَـنَا எங்களுக்கு رَبُّنَا எங்கள் இறைவன் خَطٰيٰـنَاۤ எங்கள் குற்றங்களை اَنْ كُنَّاۤ நாங்கள் இருந்ததால் اَوَّلَ முதலாமவர்களாக الْمُؤْمِنِيْنَؕ‏ நம்பிக்கை கொள்பவர்களில்
26:51. “(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம்.
26:78 الَّذِىْ خَلَقَنِىْ فَهُوَ يَهْدِيْنِۙ‏ 
الَّذِىْ எவன் خَلَقَنِىْ என்னைப்படைத்தான் فَهُوَ ஆகவே, அவன் يَهْدِيْنِۙ‏ எனக்கு நேர்வழி காட்டுவான்
26:78. “அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.
26:83-85, 87 رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ ،وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏ ،وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ‏ ،وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏ 
رَبِّ என் இறைவா! هَبْ வழங்கு! لِىْ எனக்கு حُكْمًا தூதுத்துவத்தை وَّاَلْحِقْنِىْ இன்னும் என்னை சேர்ப்பாயாக! بِالصّٰلِحِيْنَۙ‏ நல்லவர்களுடன் وَاجْعَلْ எற்படுத்து! لِّىْ எனக்கு لِسَانَ صِدْقٍ நற்பெயரை فِى الْاٰخِرِيْنَۙ‏ பின்னோர்களில் وَاجْعَلْنِىْ என்னை ஆக்கிவிடு! مِنْ وَّرَثَةِ வாரிசுகளில் جَنَّةِ சொர்க்கத்தின் النَّعِيْمِۙ‏ இன்பமிகு وَلَا تُخْزِ இழிவுபடுத்திவிடாதே! نِىْ என்னை يَوْمَ நாளில் يُبْعَثُوْنَۙ‏ அவர்கள் எழுப்பப்படும்
26:83-85, 87 . “இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!”. “இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை எற்படுத்துவாயாக!”. “இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக!”. “இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!”.
26:118 فَافْتَحْ بَيْنِىْ وَبَيْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِىْ وَمَنْ مَّعِىَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏ 
فَافْتَحْ ஆகவே, நீ தீர்ப்பளி! بَيْنِىْ எனக்கும் இடையில் وَبَيْنَهُمْ இன்னும் அவர்களுக்கும் இடையில் فَتْحًا தெளிவான وَّنَجِّنِىْ என்னை(யும்) பாதுகாத்துக்கொள் وَمَنْ مَّعِىَ என்னுடன் உள்ளவர்களையும் مِنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களில்
26:118. நீ எனக்கும், அவர்களுக்கு மிடையே தீர்ப்புச் செய்து, என்னையும், என்னுடனிருக்கும் முஃமின்களையும் இரட்சிப்பாயாக!”.
26:169 رَبِّ نَجِّنِىْ وَاَهْلِىْ مِمَّا يَعْمَلُوْنَ‏ 
رَبِّ என் இறைவா! نَجِّنِىْ என்னையும் பாதுகாத்துக்கொள்! وَاَهْلِىْ இன்னும் என் குடும்பத்தாரை(யும்) مِمَّا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்வதிலிருந்து
26:169. “என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!”.
27:19 رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًـا تَرْضٰٮهُ وَاَدْخِلْنِىْ بِرَحْمَتِكَ فِىْ عِبَادِكَ الصّٰلِحِيْنَ‏ 
رَبِّ என் இறைவா! اَوْزِعْنِىْۤ எனக்கு நீ அகத்தூண்டுதலை ஏற்படுத்து! اَنْ اَشْكُرَ நான் நன்றி செலுத்துவதற்கு نِعْمَتَكَ உன் அருளுக்கு الَّتِىْۤ اَنْعَمْتَ எது/நீ அருள்புரிந்தாய் عَلَىَّ என் மீதும் وَعَلٰى وَالِدَىَّ என் பெற்றோர் மீதும் وَاَنْ اَعْمَلَ நான் செய்வதற்கும் صَالِحًـا நல்லதை تَرْضٰٮهُ நீ மகிழ்ச்சியுறுகின்ற وَاَدْخِلْنِىْ இன்னும் என்னைநுழைத்துவிடு بِرَحْمَتِكَ உன் கருணையால் فِىْ عِبَادِكَ உன் அடியார்களில் الصّٰلِحِيْنَ‏ நல்லவர்கள்
27:19. “என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!”.
28:16 رَبِّ اِنِّىْ ظَلَمْتُ نَفْسِىْ فَاغْفِرْ لِىْ فَغَفَرَ لَهٗ‌ؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ
رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் ظَلَمْتُ அநீதி இழைத்தேன் نَفْسِىْ எனக்கு فَاغْفِرْ لِىْ ஆகவே, என்னை மன்னித்துவிடு فَغَفَرَ ஆகவே அவன் மன்னித்தான் لَهٗ‌ؕ அவரை اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ‏ மகா கருணையாளன்
28:16. “என் இறைவா! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!”.
28:21 رَبِّ نَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ 
رَبِّ என் இறைவா! نَجِّنِىْ என்னைப் பாதுகாத்துக்கொள்! مِنَ الْقَوْمِ மக்களிடமிருந்து الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார
28:21. “என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!”.
28:24 رَبِّ اِنِّىْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ‏
فَسَقٰى ஆகவே, அவர் நீர் புகட்டினார் لَهُمَا அவ்விருவருக்காக ثُمَّ பிறகு تَوَلّٰٓى திரும்பிச் சென்றார் اِلَى பக்கம் الظِّلِّ நிழலின் فَقَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் لِمَاۤ اَنْزَلْتَ நீ எதன் பக்கம் இறக்கினாய் اِلَىَّ எனக்கு مِنْ خَيْرٍ நன்மையின் فَقِيْرٌ‏ தேவை உள்ளவன்
28:24. “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்”.
29:30 رَبِّ انْصُرْنِىْ عَلَى الْقَوْمِ الْمُفْسِدِيْنَ 
رَبِّ என் இறைவா! انْصُرْنِىْ எனக்கு நீ உதவுவாயாக عَلَى எதிராக الْقَوْمِ மக்களுக்கு الْمُفْسِدِيْنَ‏ கெடுதி செய்கின்ற(வர்கள்)
29:30. “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” .
37:100 رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ‏ 
رَبِّ என் இறைவா هَبْ لِىْ எனக்கு தா! مِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் (ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையை)
37:100. “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக”.
46:15 رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏ 
رَبِّ என் இறைவா اَوْزِعْنِىْۤ என்னை தூண்டுவாயாக اَنْ اَشْكُرَ நான் நன்றி செலுத்துவதற்கு(ம்) نِعْمَتَكَ உனது அருளுக்கு الَّتِىْۤ எது اَنْعَمْتَ நீ அருள் புரிந்தாய் عَلَىَّ என்மீது(ம்) وَعَلٰى மீதும் وَالِدَىَّ என் பெற்றோர் وَاَنْ اَعْمَلَ நான் செய்வதற்கும் صَالِحًا நல்ல அமலை تَرْضٰٮهُ அதை நீ திருப்திபடுகின்றாய் وَاَصْلِحْ இன்னும் சீர்திருத்தம் செய் لِىْ எனக்கு فِىْ ذُرِّيَّتِىْ ؕۚ என் சந்ததியில் اِنِّىْ நிச்சயமாக நான் تُبْتُ திரும்பி விட்டேன் اِلَيْكَ உன் பக்கம் وَاِنِّىْ இன்னும் நிச்சயமாக நான் مِنَ الْمُسْلِمِيْنَ‏ முஸ்லிம்களில் ஒருவனாவேன்
46:15. “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்”.
59:10 رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ 
رَبَّنَا எங்கள் இறைவா اغْفِرْ لَـنَا எங்களை(யும்) மன்னிப்பாயாக وَلِاِخْوَانِنَا எங்கள் சகோதரர்களையும் الَّذِيْنَ எவர்கள் سَبَقُوْنَا எங்களை முந்தினார்கள் بِالْاِيْمَانِ ஈமானில் وَلَا تَجْعَلْ ஆக்கிவிடாதே فِىْ قُلُوْبِنَا எங்கள் உள்ளங்களில் غِلًّا குரோதத்தை لِّلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் மீது رَبَّنَاۤ எங்கள் இறைவா اِنَّكَ நிச்சயமாக நீதான் رَءُوْفٌ மகா இரக்கமுள்ளவன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
59:10. “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்”.
60:4-5 رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ ،رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَـنَا رَبَّنَا‌ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏ 
رَبَّنَا எங்கள் இறைவா! عَلَيْكَ உம்மீது تَوَكَّلْنَا நாங்கள் நம்பிக்கை வைத்தோம் وَاِلَيْكَ உன் பக்கமே اَنَـبْنَا பணிவுடன் திரும்பிவிட்டோம் وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ உன் பக்கமே மீளுமிடம் رَبَّنَا எங்கள் இறைவா لَا تَجْعَلْنَا எங்களை ஆக்கிவிடாதே فِتْنَةً ஒரு சோதனையாக لِّلَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுக்கு وَاغْفِرْ மன்னிப்பாயாக! لَـنَا எங்களை رَبَّنَا‌ ۚ எங்கள் இறைவா اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
60:4-5. “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது”. “எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்”.
66:8 رَبَّنَاۤ اَ تْمِمْ لَـنَا نُوْرَنَا وَاغْفِرْ لَـنَا‌ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
رَبَّنَاۤ எங்கள் இறைவா! اَ تْمِمْ முழுமையாக்கு! لَـنَا எங்களுக்கு نُوْرَنَا எங்கள் ஒளியை وَاغْفِرْ لَـنَا‌ ۚ இன்னும் எங்களை மன்னிப்பாயாக! اِنَّكَ நிச்சயமாக நீ عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்கள் மீதும் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
66:8. “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்”.
66:11 رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ
رَبِّ என் இறைவா ابْنِ அமைத்துத் தா! لِىْ எனக்கு عِنْدَكَ உன்னிடம் بَيْتًا ஓர் இல்லத்தை فِى الْجَـنَّةِ சொர்க்கத்தில்
66:11. “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!”.
68:32 عَسٰى رَبُّنَاۤ اَنْ يُّبْدِلَـنَا خَيْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰى رَبِّنَا رٰغِبُوْنَ‏
عَسٰى கூடும் رَبُّنَاۤ எங்கள் இறைவன் اَنْ يُّبْدِلَـنَا எங்களுக்கு பகரமாக தர(க்கூடும்) خَيْرًا சிறந்ததை مِّنْهَاۤ அதை விட اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِلٰى பக்கம் رَبِّنَا எங்கள் இறைவன் رٰغِبُوْنَ‏ ஆசை உள்ளவர்கள்
68:32. “எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்”.
71:28 رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ
رَبِّ என் இறைவா! اغْفِرْلِىْ என்னை(யும்) மன்னிப்பாயாக! وَلِـوَالِدَىَّ என் பெற்றோரையும் وَلِمَنْ دَخَلَ நுழைந்து விட்டவரையும் بَيْتِىَ என் வீட்டில் مُؤْمِنًا நம்பிக்கையாளராக وَّلِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்ட ஆண்களையும் وَالْمُؤْمِنٰتِؕ நம்பிக்கை கொண்ட பெண்களையும் وَلَا تَزِدِ அதிகப்படுத்தாதே! الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு اِلَّا تَبَارًا‏ அழிவைத் தவிர
71:28. “என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக!.
113:1-5 قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ‏ ،مِنْ شَرِّ مَا خَلَقَۙ‏ ،وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ‏ ،وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ‏ ،وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ 
قُلْ கூறுவீராக اَعُوْذُ பாதுகாப்புத் தேடுகிறேன் بِرَبِّ இறைவனிடம் الْفَلَقِۙ‏ அதிகாலையின் مِنْ شَرِّ தீங்கைவிட்டும் مَا خَلَقَۙ‏ எவற்றை/படைத்தான் وَمِنْ شَرِّ இன்னும் தீங்கைவிட்டும் غَاسِقٍ இரவின் اِذَا وَقَبَۙ‏ காரிருள் படரும் போது وَمِنْ شَرِّ இன்னும் தீங்கைவிட்டும் النَّفّٰثٰتِ ஊதுகிற சூனியக்காரிகளின் فِى الْعُقَدِۙ‏ முடிச்சுகளில் وَمِنْ شَرِّ இன்னும் தீங்கைவிட்டும் حَاسِدٍ பொறாமைக்காரன் اِذَا حَسَدَ‏ பொறாமைப்படும்போது
113:1-5. அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
114:1-6 قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ‏ ،مَلِكِ النَّاسِۙ‏ ،اِلٰهِ النَّاسِۙ‏ ،مِنْ شَرِّ الْوَسْوَاسِ  ۙ الْخَـنَّاسِ‏ ،الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏ ،مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ 
قُلْ கூறுவீராக اَعُوْذُ பாதுகாப்புத் தேடுகிறேன் بِرَبِّ இறைவனிடம் النَّاسِۙ‏ மக்களின் مَلِكِ அரசன் النَّاسِۙ‏ மக்களின் اِلٰهِ வணக்கத்திற்குரியவன் النَّاسِۙ‏ மக்களின் مِنْ شَرِّ தீங்கைவிட்டும் الْوَسْوَاسِ  ۙ வீண் எண்ணங்களை ஏற்படுத்துபவன் الْخَـنَّاسِ ۙ‏ மறைந்து கொள்பவன் الَّذِىْ يُوَسْوِسُ வீண் எண்ணங்களை ஏற்படுத்துகின்றான் فِىْ صُدُوْرِ உள்ளங்களில் النَّاسِۙ‏ மக்களுடைய مِنَ الْجِنَّةِ ஜின்களிலிருந்தும் وَالنَّاسِ‏ இன்னும் மனிதர்கள்
114:1-6. மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். (அவனே) மனிதர்களின் அரசன்; (அவனே) மனிதர்களின் நாயன். பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.