தேடல்


3:33
3:33 اِنَّ اللّٰهَ اصْطَفٰۤى اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِيْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَى الْعٰلَمِيْنَۙ‏
اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اصْطَفٰۤى தேர்ந்தெடுத்தான் اٰدَمَ ஆதமை وَنُوْحًا இன்னும் நூஹை وَّاٰلَ இன்னும் குடும்பத்தை اِبْرٰهِيْمَ இப்றாஹீமின் وَاٰلَ عِمْرٰنَ இன்னும் இம்ரானின் குடும்பத்தை عَلَى الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தாரை விட
3:33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
4:163
4:163 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு كَمَاۤ போன்றே اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى نُوْحٍ நூஹுக்கு وَّالنَّبِيّٖنَ இன்னும் நபிமார்களுக்கு مِنْۢ بَعْدِهٖ‌ ۚ அவருக்குப் பின்னர் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلٰٓى اِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَعِيْسٰى இன்னும் ஈஸா وَاَيُّوْبَ இன்னும் அய்யூப் وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَهٰرُوْنَ இன்னும் ஹாரூன் وَسُلَيْمٰنَ‌ ۚ இன்னும் ஸுலைமான் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا‌ ஸபூரை
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
6:84
6:84 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ كُلًّا هَدَيْنَا ‌ۚ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ‌ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ‌ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ‏
وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَ‌ؕ இன்னும் யஃகூபை كُلًّا எல்லோரையும் هَدَيْنَا ۚ நேர்வழி செலுத்தினோம் وَنُوْحًا இன்னும் நூஹை هَدَيْنَا நேர்வழி செலுத்தினோம் مِنْ قَبْلُ‌ இதற்கு முன்னர் وَمِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِهٖ அவருடைய சந்ததி دَاوٗدَ தாவூதை وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை وَيُوْسُفَ இன்னும் யூஸýஃபை وَمُوْسٰى இன்னும் மூஸாவை وَ هٰرُوْنَ‌ؕ இன்னும் ஹறாரூனை وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலிகொடுக்கிறோம் الْمُحْسِنِيْنَۙ‏ நல்லறம்புரிவோருக்கு
6:84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
7:59
7:59 لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
لَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا அனுப்பினோம் نُوْحًا நூஹை اِلٰى قَوْمِهٖ அவருடைய சமுதாயத்திற்கு فَقَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا இல்லை لَـكُمْ உங்களுக்கு مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுளும் غَيْرُهٗ ؕ அவனையன்றி اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ வேதனையை يَوْمٍ عَظِيْمٍ‏ மகத்தான நாளின்
7:59. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.
7:61
7:61 قَالَ يٰقَوْمِ لَـيْسَ بِىْ ضَلٰلَةٌ وَّلٰـكِنِّىْ رَسُوْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِيْنَ‏
قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَـيْسَ இல்லை بِىْ என்னிடம் ضَلٰلَةٌ வழிகேடு وَّلٰـكِنِّىْ எனினும் நிச்சயமாக நான் رَسُوْلٌ ஒரு தூதர் مِّنْ رَّبِّ இறைவனிடமிருந்து الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
7:61. அதற்கு (நூஹு) “என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை; மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்” என்று கூறினார்.
7:69
7:69 اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰى رَجُلٍ مِّنْكُمْ لِيُنْذِرَكُمْ‌ ؕ وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَـكُمْ ۚ خُلَفَآءَ مِنْۢ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِى الْخَـلْقِ بَصْۜطَةً‌‌ فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
اَوَعَجِبْتُمْ நீங்கள் வியக்கிறீர்களா? اَنْ جَآءَ வந்ததைப் பற்றி كُمْ உங்களுக்கு ذِكْرٌ நல்லுபதேசம் مِّنْ رَّبِّكُمْ உங்கள் இறைவனிடமிருந்து عَلٰى رَجُلٍ ஒரு மனிதர் மீது مِّنْكُمْ உங்களில் لِيُنْذِرَكُمْ‌ ؕ உங்களை எச்சரிப்பதற்காக وَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اِذْ சமயம் جَعَلَـكُمْ ஆக்கினான் ۚ خُلَفَآءَ பிரதிநிதிகளாக مِنْۢ بَعْدِ பின்னர் قَوْمِ சமுதாயத்திற்கு نُوْحٍ நூஹூடைய وَّزَادَ இன்னும் அதிகப்படுத்தினான் كُمْ உங்களுக்கு فِى الْخَـلْقِ படைப்பில் بَصْۜطَةً‌ விரிவை فَاذْكُرُوْۤا நினைவு கூருங்கள் اٰ لَۤاءَ அருட்கொடைகளை اللّٰهِ அல்லாஹ்வின் لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
7:69. “உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்)
9:70
9:70 اَلَمْ يَاْتِهِمْ نَبَاُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ  ۙ وَقَوْمِ اِبْرٰهِيْمَ وَاَصْحٰبِ مَدْيَنَ وَالْمُؤْتَفِكٰتِ‌ ؕ اَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ‌‌ ۚ فَمَا كَانَ اللّٰهُ لِيَظْلِمَهُمْ وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
اَلَمْ வரவில்லையா يَاْتِهِمْ அவர்களுக்கு نَبَاُ செய்தி, சரித்திரம் الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் قَوْمِ சமுதாயம் نُوْحٍ நூஹூடைய وَّعَادٍ இன்னும் ஆது وَّثَمُوْدَ  ۙ இன்னும் ஸமூது وَقَوْمِ இன்னும் சமுதாயம் اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاَصْحٰبِ مَدْيَنَ இன்னும் மத்யன் வாசிகள் وَالْمُؤْتَفِكٰتِ‌ ؕ தலைகீழாக புரட்டப்பட்ட ஊர்கள் اَتَتْهُمْ அவர்கள் வந்தார்கள் رُسُلُهُمْ அவர்களுடைய தூதர்கள் بِالْبَيِّنٰتِ‌ ۚ அத்தாட்சிகளைக் கொண்டு فَمَا كَانَ இருக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் لِيَظْلِمَهُمْ அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக وَلٰـكِنْ எனினும் كَانُوْۤا இருந்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே يَظْلِمُوْنَ‏ அநீதியிழைப்பவர்களாக
9:70. இவர்களுக்கு முன்னிருந்த நூஹ்வுடைய சமுதாயம், ஆது, ஸமூதுடைய சமுதாயம் இப்ராஹீம் உடைய சமுதாயம் மத்யன் வாசிகள் தலைகீழாய்ப் புரண்டுபோன ஊரார் ஆகியவர்களின் வரலாறு அவர்களிடம் வரவில்லையா? அவர்களுக்கு (நாம் அனுப்பிய) அவர்களுக்குரிய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளை கொண்டு வந்தார்கள்; (தூதர்களை நிராகரித்ததினால் அவர்கள் அழிந்தனர்.) அல்லாஹ் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை; எனினும் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
10:71
10:71 وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ نُوْحٍ‌ۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَّقَامِىْ وَتَذْكِيْرِىْ بِاٰيٰتِ اللّٰهِ فَعَلَى اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْۤا اَمْرَكُمْ وَشُرَكَآءَكُمْ ثُمَّ لَا يَكُنْ اَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْۤا اِلَىَّ وَ لَا تُنْظِرُوْنِ‏
وَاتْلُ ஓதுவீராக عَلَيْهِمْ அவர்களுக்கு نَبَاَ சரித்திரத்தை نُوْحٍ‌ۘ நூஹூடைய اِذْ சமயத்தை قَالَ அவர்கள் கூறினார் لِقَوْمِهٖ தன் சமுதாயத்தை நோக்கி يٰقَوْمِ என் சமுதாயமே اِنْ كَانَ இருந்தால் كَبُرَ பாரமாக عَلَيْكُمْ உங்கள் மீது مَّقَامِىْ நான் தங்குவது وَتَذْكِيْرِىْ இன்னும் நான்உபதேசிப்பது بِاٰيٰتِ வசனங்களைக் கொண்டு اللّٰهِ அல்லாஹ்வின் فَعَلَى மீது اللّٰهِ அல்லாஹ் تَوَكَّلْتُ நான் நம்பிக்கை வைத்தேன் فَاَجْمِعُوْۤا ஆகவேமுடிவுசெய்யுங்கள் اَمْرَ காரியத்தை كُمْ உங்கள் وَشُرَكَآءَ இன்னும் இணை தெய்வங்களை كُمْ உங்கள் ثُمَّ பிறகு لَا يَكُنْ ஆகிவிடவேண்டாம் اَمْرُ காரியம் كُمْ உங்கள் عَلَيْكُمْ உங்கள் மீது غُمَّةً குழப்பமானதாக ثُمَّ பிறகு اقْضُوْۤا நிறைவேற்றுங்கள் اِلَىَّ என் பக்கம் وَ لَا تُنْظِرُوْنِ‏ நீங்கள் அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு
10:71. மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.
11:25
11:25 وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا அனுப்பினோம் نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ நூஹை/அவருடைய மக்களிடம் اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு نَذِيْرٌ ஓர் எச்சரிப்பாளன் مُّبِيْنٌۙ‏ பகிரங்கமான
11:25. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.”
11:32
11:32 قَالُوْا يٰـنُوْحُ قَدْ جَادَلْتَـنَا فَاَكْثَرْتَ جِدَالَـنَا فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏ ‏
قَالُوْا கூறினார்கள் يٰـنُوْحُ நூஹே! قَدْ நீர் தர்க்கித்து விட்டீர் جَادَلْتَـنَا எங்களுடன் فَاَكْثَرْتَ அதிகப்படுத்தினீர் جِدَالَـنَا தர்க்கத்தை/ எங்களுடன் فَاْتِنَا ஆகவே வருவீராக/எங்களிடம் بِمَا تَعِدُنَاۤ எதைக் கொண்டு/வாக்களித்தீர்/எங்களுக்கு اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ‏ ‏ உண்மையாளர்களில்
11:32. (அதற்கு) அவர்கள், “நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். எனவே, நீர் உண்மையாளராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.