விரைந்து வருவது
20:83   وَمَاۤ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ يٰمُوْسٰى‏
20:83. “மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது?” (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர்கள் வந்த போது அல்லாஹ் கேட்டான்.)
20:84   قَالَ هُمْ اُولَاۤءِ عَلٰٓى اَثَرِىْ وَ عَجِلْتُ اِلَيْكَ رَبِّ لِتَرْضٰى‏
20:84. (அதற்கவர்) “அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்” என்று கூறினார்.
36:20   وَجَآءَ مِنْ اَقْصَا الْمَدِيْنَةِ رَجُلٌ يَّسْعٰى قَالَ يٰقَوْمِ اتَّبِعُوا الْمُرْسَلِيْنَۙ‏
36:20. (அப்பொழுது) ஒரு மனிதர் அப்பட்டணத்தின் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து (அவர்களிடம்); “என் சமூகத்தவரே! நீங்கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்.
37:94   فَاَقْبَلُوْۤا اِلَيْهِ يَزِفُّوْنَ‏
37:94. (அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
54:8   مُّهْطِعِيْنَ اِلَى الدَّاعِ‌ؕ يَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا يَوْمٌ عَسِرٌ‏
54:8. அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள்; “இது மிகவும் கஷ்டமான நாள்” என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.
80:8   وَاَمَّا مَنْ جَآءَكَ يَسْعٰىۙ‏
80:8. ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,