ஷகீக் அபூ வாயில் அறிவித்தார்:
அப்துல்லாஹ் (இப்னு மஸ்ஊத் ரழி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்களுக்கு (மார்க்க) உபதேசம் செய்வார்கள். (ஒருமுறை) ஒருவர் அவரிடம், "அபூ அப்துர் ரஹ்மானே! நாங்கள் உங்கள் உரையை நேசிக்கிறோம்; அதை ஆவலுடன் விரும்புகிறோம். நீங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு உரை நிகழ்த்த வேண்டும் எனவும் விரும்புகிறோம்" என்று கூறினார்.
அதற்கு அவர், "உங்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிடும் என்ற வெறுப்பேயன்றி, உங்களுக்கு உரை நிகழ்த்துவதிலிருந்து என்னைத் தடுப்பது வேறொன்றுமில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதை வெறுத்து, (உபதேசத்திற்காக) நாட்களை இடைவிட்டுத்தான் எங்களுக்கு உபதேசம் செய்வார்கள்" என்று கூறினார்.
عن أبى وائل شقيق بن سلمة قال: كان ابن مسعود رضي الله عنه يذكرنا في كل خميس، فقال له رجل: يا أبا عبد الرحمن، لوددت أنك ذكرتنا كل يوم، فقال: أما إنه يمنعني من ذلك أني أكره أن أملكم وإني أتخولكم بالموعظة، كما كان رسول الله صلى الله عليه وسلم يتخولنا بها مخافة السآمة علينا. ((متفق عليه)) .
ஷகீக் பின் ஸலமா அவர்கள் கூறியதாவது:
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்களுக்கு உபதேசம் செய்து வந்தார்கள். அப்போது ஒருவர் அவரிடம், "ஓ அபூ அப்திர்-ரஹ்மான் அவர்களே! நீங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார். அதற்கு அவர்கள் கூறினார்கள்: "உங்களுக்குச் சலிப்பு ஏற்படுத்தி விடுவேனோ என்று நான் வெறுப்பதே என்னை (அவ்வாறு செய்வதிலிருந்து) தடுக்கிறது. மேலும், எங்களுக்குச் சலிப்பு ஏற்பட்டுவிடும் என அஞ்சி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு (சலிப்பு ஏற்படாதவாறு) இடைவெளி விட்டு எங்களுக்கு உபதேசம் செய்தார்களோ, அவ்வாறே நானும் உங்களுக்கு (சலிப்பு ஏற்படாதவாறு) இடைவெளி விட்டு உபதேசம் செய்கிறேன்."