துல்மஜாஸ் மற்றும் உக்காஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் மக்களின் சந்தைகளாக இருந்தன. இஸ்லாம் வந்தபோது, மக்கள் (ஹஜ்ஜின்போது) அங்கு வியாபாரம் செய்வதை வெறுப்பது போன்று (தயக்கம்) காட்டினர். அப்போது, "ஹஜ்ஜுடைய காலங்களில் உங்கள் இறைவனின் அருளைத் தேடிக்கொள்வது உங்கள் மீது குற்றமில்லை" எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
உகாழ், மஜன்னா மற்றும் துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் சந்தைகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அவற்றில் வணிகம் செய்வதை (மக்கள்) பாவமாகக் கருதினார்கள். ஆகவே அல்லாஹ், "ஹஜ்ஜுடைய காலங்களில் (வணிகம் செய்து உங்கள் இறைவனின் அருளைத் தேடுவதில்) உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை" என்று அருளினான். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இந்த வசனத்தை) இவ்வாறுதான் ஓதினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உக்காஸ், மஜன்னா மற்றும் துல்-மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் சந்தைகளாக இருந்தன. (இஸ்லாம் வந்த பின்பு) ஹஜ் காலங்களில் வியாபாரம் செய்வதை மக்கள் பாவமாகக் கருதினார்கள். அப்போது, "உங்கள் இறைவனின் அருளைத் தேடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை" எனும் (2:198 ஆவது) இறைவசனம் ஹஜ் காலங்கள் (தொடர்பாக) அருளப்பட்டது.
وعن ابن عباس رضي الله عنهما قال: كانت عكاظ ومجنة، وذو المجاز أسواقًا في الجاهلية، فتأثموا أن يتجروا في المواسم، فنزلت: {ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم} ((البقرة: 198)) في مواسم الحج.((رواه البخاري)).
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"உக்காஸ், மிஜன்னா மற்றும் துல்-மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யா) கடைத்தெருக்களாக இருந்தன. எனவே, (ஹஜ்) காலங்களில் வியாபாரம் செய்வதை அவர்கள் குற்றம் எனக் கருதினர்.
அப்போது, ஹஜ்ஜுடைய காலங்களில் (வியாபாரம் செய்வது குறித்து), 'லைஸ அலைக்கும் ஜுனாஹுன் அன் தப்தகூ ஃபள்லன் மின் ரப்பிக்கும்' (அதாவது, ஹஜ்ஜின் போது வியாபாரம் செய்து) உங்கள் ரப்பிடமிருந்து அருட்கொடையைத் தேடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை' (அல்குர்ஆன் 2:198) எனும் இறைவசனம் அருளப்பட்டது."