உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை(க் கூறுவதில்) வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குக் கனவில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் குளிப்பது கட்டாயமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம், அவள் (அந்த விந்து) நீரைக் கண்டால்" என்று கூறினார்கள். அப்போது உம்மு ஸலமா (ரலி) சிரித்துவிட்டு, "பெண்ணுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் குழந்தை எதன் மூலம் (அவளை) ஒத்திருக்கிறது?" என்று கேட்டார்கள்.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைக் கூறுவதில் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குக் கனவில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் குளிக்க வேண்டுமா?" அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம், அவள் (அந்த) நீரைக் கண்டால்" என்று கூறினார்கள். அதைக் கேட்டு உம்மு ஸலமா (ரலி) அவர்கள் சிரித்துவிட்டு, "பெண்ணுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், குழந்தை எவ்வாறு (பெற்றோரை) ஒத்திருக்கிறது?" என்று கேட்டார்கள்.
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ فَهَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا احْتَلَمَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ " . فَقَالَتْ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ وَتَحْتَلِمُ الْمَرْأَةُ فَقَالَ " تَرِبَتْ يَدَاكِ فَبِمَ يُشْبِهُهَا وَلَدُهَا " .
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ் சத்தியத்தைக் குறித்து வெட்கப்படமாட்டான். ஒரு பெண்ணுக்கு காமக் கனவு ஏற்பட்டால் அவள் குளிக்க வேண்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், அவள் அந்தத் திரவத்தை (யோனிக் கசிவை)க் கண்டால்” என்று கூறினார்கள். (அப்போது) உம்மு ஸலமா (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே, பெண்ணுக்கும் காமக் கனவு ஏற்படுமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உன் கை மண்ணாகட்டும்! (இது ஆச்சரியமான கேள்வி அல்லது நீ அறியாதது இதுவா?) வேறு எவ்விதத்தில் அவளுடைய குழந்தை அவளை ஒத்திருக்கும்?” என்று கூறினார்கள்.
ஒரு பெண், "அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு (கனவில்) ஸ்கலிதம் ஏற்பட்டால் அவள் குஸ்ல் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்; அவள் (வெளியேறிய) நீரைக் கண்டால்" என்று கூறினார்கள்.
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் சிரித்துவிட்டு, "பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அப்படி ஏற்படவில்லையென்றால்) அவளுடைய குழந்தை அவளைப் போன்று எப்படி இருக்கும்?" என்று கேட்டார்கள்.