وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم قَالَ عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ لَمْ تُطْعِمْهَا وَلَمْ تَسْقِهَا وَلَمْ تَتْرُكْهَا
تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் ஒரு பூனைக்காக (நரகத்தில்) தண்டிக்கப்பட்டாள். அவள் அதற்கு உணவோ தண்ணீரோ கொடுக்கவுமில்லை; பூமியின் புழு பூச்சிகளைத் தின்பதற்காக அதை சுதந்திரமாக விடவுமில்லை.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பெண் ஒரு பூனையின் காரணமாக (அல்லாஹ்வால்) வேதனை செய்யப்பட்டாள். அவள் அதை (கட்டி) அடைத்து வைத்திருந்தாள். அவள் அதற்கு உணவளிக்கவுமில்லை; தண்ணீர் புகட்டவுமில்லை. பூமியின் புழு பூச்சிகளைத் தின்பதற்காக அதை அவிழ்த்து விடவுமில்லை (சுதந்திரமாக நடமாட விடவுமில்லை).”
قَالَ الزُّهْرِيُّ وَحَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ : دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا فَلاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ هِيَ أَرْسَلَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ حَتَّى مَاتَتْ . قَالَ الزُّهْرِيُّ : لِئَلاَّ يَتَّكِلَ رَجُلٌ وَلاَ يَيْأَسَ رَجُلٌ .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பெண் ஒரு பூனையின் காரணமாக நரகத்தில் நுழைந்தாள். அவள் அதைக் கட்டி வைத்தாள். அவள் அதற்கு உணவளிக்கவுமில்லை; பூமியில் உள்ள (சிறு) பூச்சிகளைத் தின்பதற்காக அதை அவிழ்த்து விடவுமில்லை. அது சாகும் வரை (அப்படியே) இருந்தது.”
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “(இதை நான் அறிவிப்பது) எந்த மனிதனும் (தன் நற்செயல்களை மட்டுமே நம்பி) அலட்சியமாக இருக்காமலும், எந்த மனிதனும் (அல்லாஹ்வின் அருளை விட்டும்) நம்பிக்கை இழக்காமலும் இருப்பதற்காகவே.”