இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4074ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي مَخْلَدُ بْنُ مَالِكٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى مَنْ قَتَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَبِيلِ اللَّهِ، اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ دَمَّوْا وَجْهَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) நபி (ஸல்) அவர்கள் (தம் கையால்) எவரைக் கொன்றார்களோ, அவர் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாகியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் இரத்தக் காயத்தை ஏற்படுத்திய மக்கள் மீதும் அல்லாஹ்வின் கோபம் கடுமையாகியது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح