உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்: "அல்-ஹகமின் இன்னார் மகள் (என்ற பெண்) அவளது கணவனால் திரும்பப் பெறமுடியாத (முத்தலாக் மூலம்) விவாகரத்து செய்யப்பட்டதையும், அவள் (தன் கணவனின் வீட்டை விட்டு) வெளியேறிவிட்டதையும் நீங்கள் பார்க்கவில்லையா?" அதைக் கேட்டதும் ஆயிஷா (ரலி) அவர்கள், "அவள் செய்தது மிகவும் கெட்ட செயலாகும்" என்று கூறினார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், "ஃபாத்திமா (பின்த் கைஸ்) அவர்களின் சொல்லை நீங்கள் கேட்கவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அதை (அதாவது, தான் வீட்டை விட்டு வெளியேறியதை) அவர் குறிப்பிடுவதில் அவருக்கு எந்த நன்மையும் இல்லை" என்று கூறினார்கள்.