இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3330ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ يَعْنِي ‏ ‏ لَوْلاَ بَنُو إِسْرَائِيلَ لَمْ يَخْنَزِ اللَّحْمُ، وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا ‏ ‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பனூ இஸ்ராயீல்கள் இல்லாவிட்டால் இறைச்சி கெட்டுப்போயிருக்காது. மேலும் ஹவ்வா இல்லாவிட்டால், எந்தப் பெண்ணும் தன் கணவனுக்குத் துரோகம் செய்திருக்கமாட்டாள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3619ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا يُونُسَ، مَوْلَى أَبِي هُرَيْرَةَ حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا الدَّهْرَ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள்:

ஹவ்வா அவர்கள் மட்டும் (ஷைத்தானின் தூண்டுதலுக்கு இணங்கி) இருந்திராவிட்டால், எந்தப் பெண்ணும் தன் கணவனுக்கு ஒருபோதும் நம்பிக்கை துரோகம் செய்திருக்க மாட்டாள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3620ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ لَوْلاَ بَنُو إِسْرَائِيلَ لَمْ يَخْبُثِ الطَّعَامُ وَلَمْ يَخْنَزِ اللَّحْمُ وَلَوْلاَ حَوَّاءُ لَمْ تَخُنْ أُنْثَى زَوْجَهَا الدَّهْرَ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பனூ இஸ்ராயீலர்கள் மட்டும் இல்லாதிருந்தால், உணவு கெட்டுப் போயிருக்காது; இறைச்சி துர்நாற்றம் வீசியிருக்காது. மேலும், ஹவ்வா (அலை) அவர்கள் மட்டும் இல்லாதிருந்தால், எந்தப் பெண்ணும் தன் கணவனுக்கு ஒருபோதும் துரோகம் இழைத்திருக்க மாட்டாள் (அதாவது, ஷைத்தானின் தூண்டுதலுக்கு ஆளாகி தவறிழைத்திருக்க மாட்டாள்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح