حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا، حَتَّى مَاتَتْ جُوعًا، فَدَخَلَتْ فِيهَا النَّارَ ـ قَالَ فَقَالَ وَاللَّهُ أَعْلَمُ ـ لاَ أَنْتِ أَطْعَمْتِهَا وَلاَ سَقَيْتِهَا حِينَ حَبَسْتِيهَا، وَلاَ أَنْتِ أَرْسَلْتِيهَا فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الأَرْضِ .
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு பெண், ஒரு பூனையின் காரணமாக வேதனை செய்யப்பட்டாள். அப்பூனை பசியால் சாகும் வரை அவள் அதை அடைத்து வைத்திருந்தாள்; அதனால் அவள் நரகத்தில் நுழைந்தாள்.”
மேலும் (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்: “(அல்லாஹ்வே மிக அறிந்தவன்!) ‘நீ அதை அடைத்து வைத்திருந்தபோது, அதற்கு நீ உணவளிக்கவுமில்லை; அதற்குத் தண்ணீர் புகட்டவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்பதற்காவது அதை நீ விடுவிக்கவுமில்லை’ (என்று அல்லாஹ் கூறினான்).”
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பெண் ஒரு பூனையை அது சாகும் வரை அடைத்து வைத்திருந்த காரணத்தால் தண்டிக்கப்பட்டாள். அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அவள் அதை அடைத்து வைத்திருந்தபோது அதற்கு உணவோ தண்ணீரோ கொடுக்கவில்லை; பூமியிலுள்ள (சிறு) புழு பூச்சிகளைத் தின்பதற்கேனும் அதை அவள் விட்டுவிடவுமில்லை.”
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண் ஒரு பூனைக்காக வேதனை செய்யப்பட்டாள். (அதாவது,) அவள் அதைச் சாகும் வரை அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அவள் அதை அடைத்து வைத்திருந்தபோது, அதற்கு உணவளிக்கவுமில்லை; தண்ணீர் புகட்டவுமில்லை. பூமியிலுள்ள (சிறு பிராணிகள் மற்றும்) புழு பூச்சிகளைத் தின்பதற்கேனும் அவள் அதை விட்டுவிடவுமில்லை."
قَالَ الزُّهْرِيُّ وَحَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ : دَخَلَتِ امْرَأَةٌ النَّارَ فِي هِرَّةٍ رَبَطَتْهَا فَلاَ هِيَ أَطْعَمَتْهَا وَلاَ هِيَ أَرْسَلَتْهَا تَأْكُلُ مِنْ خَشَاشِ الأَرْضِ حَتَّى مَاتَتْ . قَالَ الزُّهْرِيُّ : لِئَلاَّ يَتَّكِلَ رَجُلٌ وَلاَ يَيْأَسَ رَجُلٌ .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பெண் ஒரு பூனையின் காரணமாக நரகத்தில் நுழைந்தாள். அவள் அதைக் கட்டி வைத்தாள். அவள் அதற்கு உணவளிக்கவுமில்லை; பூமியில் உள்ள (சிறு) பூச்சிகளைத் தின்பதற்காக அதை அவிழ்த்து விடவுமில்லை. அது சாகும் வரை (அப்படியே) இருந்தது.”
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “(இதை நான் அறிவிப்பது) எந்த மனிதனும் (தன் நற்செயல்களை மட்டுமே நம்பி) அலட்சியமாக இருக்காமலும், எந்த மனிதனும் (அல்லாஹ்வின் அருளை விட்டும்) நம்பிக்கை இழக்காமலும் இருப்பதற்காகவே.”