ஸைத் இப்னு தாபித் (ரலி) அவர்கள் (மர்வானிடம்) கூறினார்கள்:
"மஃக்ரிப் தொழுகையில் நீங்கள் சிறிய அத்தியாயங்களை ஓதுவதை நான் காண்கிறேனே! ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் இரண்டு நீண்ட அத்தியாயங்களில் மிக நீண்டதை ஓதுவதை நான் பார்த்திருக்கிறேன்."
(அறிவிப்பாளர் இப்னு அபீ முலைக்கா (ரஹ்) கூறுகிறார்:)
நான் (உர்வா இப்னு ஸுபைரிடம்), "அபூ அப்துல்லாஹ்வே! அந்த இரண்டு நீண்ட அத்தியாயங்களில் மிக நீண்டது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்-அஃராஃப் (அத்தியாயம்) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
மர்வான் இப்னு ஹகம் கூறினார்கள்:
ஸைத் இப்னு தாபித் (ரழி) அவர்கள் என்னிடம், "நீங்கள் ஏன் மஃரிப் தொழுகையில் (முஃபஸ்ஸில் எனும்) சிறிய சூராக்களை ஓதுகிறீர்கள்? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃரிப் தொழுகையில் (இரண்டு) நீண்ட சூராக்களில் மிக நீண்டதை ஓதுவதைக் கண்டேன்" என்று கேட்டார்கள். நான் அவரிடம், "அந்த நீண்ட சூராக்களில் மிக நீண்டது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்-அஃராஃப் மற்றும் (மற்றொன்று) அல்-அன்ஆம்" என்று பதிலளித்தார்கள். நான் (அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ்), இப்னு அபீ முலைக்கா அவர்களிடம் (இது பற்றிக்) கேட்டேன்: அதற்கு அவர்கள் தாங்களாகவே, "அல்-மாயிதா மற்றும் அல்-அஃராஃப்" என்று கூறினார்கள்.