இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

186ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِيهِ، شَهِدْتُ عَمْرَو بْنَ أَبِي حَسَنٍ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ عَنْ وُضُوءِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَتَوَضَّأَ لَهُمْ وُضُوءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَكْفَأَ عَلَى يَدِهِ مِنَ التَّوْرِ، فَغَسَلَ يَدَيْهِ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي التَّوْرِ، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ ثَلاَثَ غَرَفَاتٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَمَسَحَ رَأْسَهُ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ مَرَّةً وَاحِدَةً، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ‏.‏
அம்ரு (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்:
என் தந்தை (யஹ்யா அல்-மாஸினீ), அம்ரு பின் அபீ ஹஸன் அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டதைப் பார்த்தார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸைத் (ரழி) அவர்கள் தண்ணீர் உள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி, அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் உளூவைப் போன்றே உளூச் செய்துகாட்டினார்கள்.

அவர்கள் பாத்திரத்திலிருந்து தம் கையின் மீது (தண்ணீரைச்) சாய்த்து, தம் இரு கைகளையும் மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் கையைப் பாத்திரத்தினுள் நுழைத்து, (தண்ணீர் அள்ளி) வாய் கொப்பளித்து, நாசிக்குத் தண்ணீர் செலுத்தி, பிறகு அதை வெளியேற்றி (நாசியைச்) சுத்தம் செய்தார்கள்; (இவை அனைத்தையும்) மூன்று கைப்பிடி தண்ணீரால் செய்தார்கள்.

பிறகு தம் கையை (பாத்திரத்தினுள்) நுழைத்து, (தண்ணீர் அள்ளி) தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் கையை (பாத்திரத்தினுள்) நுழைத்து, தம் இரு கைகளையும் முழங்கைகள் வரை இரண்டு முறை கழுவினார்கள். பிறகு தம் கையை (பாத்திரத்தினுள்) நுழைத்து, தம் தலையை மஸஹ் செய்தார்கள்; அப்போது (தம் இரு கைகளையும்) முன்னும் பின்னுமாக ஒரு முறை கொண்டு சென்றார்கள். பிறகு தம் இரு கால்களையும் கணுக்கால் வரை கழுவினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
199ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ عَمِّي يُكْثِرُ مِنَ الْوُضُوءِ، قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَخْبِرْنِي كَيْفَ رَأَيْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ فَدَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَكَفَأَ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلاَثَ مِرَارٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي التَّوْرِ، فَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلاَثَ مَرَّاتٍ مِنْ غَرْفَةٍ وَاحِدَةٍ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاغْتَرَفَ بِهَا فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ، ثُمَّ أَخَذَ بِيَدِهِ مَاءً، فَمَسَحَ رَأْسَهُ، فَأَدْبَرَ بِيَدَيْهِ وَأَقْبَلَ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ، فَقَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ‏.‏
அம்ர் பின் யஹ்யா அவர்கள் அறிவித்தார்கள்:

(அவருடைய தந்தையின் வாயிலாக) என்னுடைய மாமா அளவு கடந்து உளூ செய்பவராக இருந்தார்கள். ஒருமுறை அவர்கள், `அப்துல்லாஹ் பின் ஜைத் (ரழி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு உளூ செய்வதை தாம் கண்டார்கள் என்பதைத் தெரிவிக்குமாறு கேட்டார்கள். `அப்துல்லாஹ் பின் ஜைத் (ரழி) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள். அதிலிருந்து தம் கைகளில் தண்ணீரை ஊற்றி மூன்று முறை அவற்றைக் கழுவினார்கள். பிறகு தம் கையை அந்தப் பாத்திரத்தினுள் செலுத்தி, ஒரே கையளவு தண்ணீரால் வாய்க் கொப்பளித்து, மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தி (பின்) அதை வெளியே சிந்தினார்கள்; இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். மீண்டும் அவர் தண்ணீருக்குள் தம் கையை விட்டு, ஒரு கையளவு தண்ணீர் எடுத்து, தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் கைகளை முழங்கைகள் வரை இருமுறை கழுவினார்கள். தம் கையால் தண்ணீர் எடுத்து, தம் தலையில் முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாகவும், பின்னர் பின்பக்கத்திலிருந்து முன்பக்கமாகவும் மஸஹ் செய்தார்கள். பிறகு தம் பாதங்களை (கணுக்கால்கள் வரை) கழுவினார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே உளூ செய்வதை நான் கண்டேன்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
235aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ الأَنْصَارِيِّ، - وَكَانَتْ لَهُ صُحْبَةٌ - قَالَ قِيلَ لَهُ تَوَضَّأْ لَنَا وُضُوءَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَدَعَا بِإِنَاءٍ فَأَكْفَأَ مِنْهَا عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلاَثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدَةٍ فَفَعَلَ ذَلِكَ ثَلاَثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَغَسَلَ يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَمَسَحَ بِرَأْسِهِ فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ قَالَ هَكَذَا كَانَ وُضُوءُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏
நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம் அல் அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அவரிடம் (மக்கள்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்தது போல் எங்களுக்காக உளூச் செய்து காட்டுங்கள்" என்று கூறினார்கள். அவர் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி, அதிலிருந்து தம் கைகளில் (தண்ணீரைச்) சாய்த்து, அவற்றை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் கையை (பாத்திரத்தினுள்) நுழைத்து (தண்ணீரை) வெளியே எடுத்து, வாய் கொப்பளித்து, மூக்கிற்குள் நீர் செலுத்தி (சிந்தினார்கள்); (இவைகளை) ஒரே கைப்பிடி(த் தண்ணீரில்) செய்தார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பிறகு தம் கையை நுழைத்து வெளியே எடுத்து தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் கையை நுழைத்து வெளியே எடுத்து தம் இரு கைகளையும் முழங்கை வரை இரண்டு இரண்டு முறை கழுவினார்கள். பிறகு தம் கையை நுழைத்து வெளியே எடுத்து தம் தலையைத் தடவினார்கள் (மஸஹ் செய்தார்கள்); அப்போது தம் கைகளை முன்புறமாகவும் பின்புறமாகவும் கொண்டு சென்றார்கள். பிறகு தம் இரு கால்களையும் கணுக்கால் வரை கழுவினார்கள். பிறகு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உளூ இவ்வாறுதான் இருந்தது" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح