ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எனக்கு முன்னர் எந்த நபிமார்களுக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன. அவையாவன:
1. ஒரு மாத பயண தூரத்திற்கு (என் எதிரிகளின் உள்ளங்களில்) அச்சத்தை ஏற்படுத்தியதன் மூலம் அல்லாஹ் எனக்கு வெற்றியளித்தான்.
2. பூமி எனக்கும் (என் சமூகத்தாருக்கும்) தொழும் இடமாகவும், தயம்மும் செய்வதற்கான (தூய்மைப்படுத்தும்) பொருளாகவும் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, என் சமூகத்தார் தொழுகையின் நேரம் வந்தடைந்த எந்த இடத்திலும் தொழுதுகொள்ளலாம்.
3. போர்ச்செல்வம் எனக்கு ஹலாலாக (அனுமதிக்கப்பட்டதாக) ஆக்கப்பட்டுள்ளது. (எனக்கு முன்னர் வேறு எவருக்கும் அது அவ்வாறு ஆக்கப்படவில்லை).
4. ஒவ்வொரு நபியும் தமது சமூகத்தாருக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். ஆனால் நானோ முழு மனித இனத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளேன்.
5. (மறுமை நாளில்) பரிந்துரை செய்யும் உரிமை எனக்கு வழங்கப்பட்டுள்ளது."
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வேறு எவருக்கும் வழங்கப்படாத ஐந்து (சிறப்புகள்) எனக்கு வழங்கப்பட்டுள்ளன: (அவையாவன) ஒவ்வொரு தூதரும் தத்தமது சமூகத்தாருக்கு மாத்திரம் குறிப்பாக அனுப்பப்பட்டார்கள்; நானோ மனிதர்களில் சிவப்பு நிறத்தவர் கறுப்பு நிறத்தவர் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன். போர்ச்செல்வங்கள் எனக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன; எனக்கு முன்னர் வேறு எவருக்கும் அவை ஆகுமாக்கப்படவில்லை. பூமி எனக்குத் தூய்மைப்படுத்தும் பொருளாகவும் (தஹூரன்), தொழுமிடமாகவும் (மஸ்ஜிதன்) ஆக்கப்பட்டுள்ளது; ஆகவே, உங்களில் எவருக்கேனும் தொழுகை நேரம் வந்துவிட்டால், அவர் எங்கிருந்தாலும் (அங்கேயே) தொழுதுகொள்ளட்டும். ஒரு மாத காலப் பயண தூரத்திலிருந்தே (எதிரிகளின் உள்ளங்களில் ஏற்படும்) அச்சத்தின் மூலம் நான் உதவி செய்யப்பட்டுள்ளேன். மேலும், எனக்குப் பரிந்துரை (ஷஃபாஅத்) வழங்கப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எனக்கு முன்பு எவருக்கும் வழங்கப்படாத ஐந்து (சிறப்புத்) தன்மைகள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன: ஒரு மாதப் பயணத் தொலைவிலிருந்தே (எதிரிகளின் உள்ளத்தில்) அச்சம் ஏற்படுத்தப்பட்டு நான் உதவி செய்யப்பட்டுள்ளேன்; பூமி எனக்குத் தொழுமிடமாகவும் (மஸ்ஜித்), தூய்மையாக்கும் கருவியாகவும் (தஹூர்) ஆக்கப்பட்டுள்ளது; ஆகவே, என் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்குத் தொழுகை நேரம் எங்கு வந்தடைகிறதோ அவர் (அங்கேயே) தொழுதுகொள்ளட்டும்; எனக்குப் பரிந்துரை (ஷஃபாஅத்) செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது; எனக்கு முன்பு எந்த நபிக்கும் இது வழங்கப்படவில்லை; மேலும் நான் மக்கள் யாவருக்கும் (பொதுவானத் தூதராக) அனுப்பப்பட்டுள்ளேன். (இதற்கு முன்) இறைத்தூதர் தன் சமுதாயத்திற்கு மட்டுமே அனுப்பப்படுபவராக இருந்தார்.”