ஒரு மனிதர் ஒரு பெண்ணை (அனுமதிக்கப்படாத முறையில்) முத்தமிட்டார். எனவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதற்கான பரிகாரம் குறித்துக் கேட்டார். அப்போது (பின்வரும் இறைவசனம்) அருளப்பெற்றது:
"பகலின் இரு ஓரங்களிலும், இரவின் (பகலை அடுத்து வரும்) பகுதிகளிலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக! நிச்சயமாக நற்செயல்கள் தீயசெயல்களைப் போக்கிவிடும்." (அல்குர்ஆன் 11:114)
அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! இது எனக்கு மட்டும்தானா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமக்கும், எனது சமுதாயத்தில் இதன்படி செயல்படும் யாவருக்கும் (இது பொருந்தும்)" என்று கூறினார்கள்.