ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் (தொழுகையில்) ஒரு ஸஜ்தாவை (அதாவது ஒரு ரக்அத்தை) எவர் அடைந்து கொள்கிறாரோ, அல்லது சூரியன் உதிப்பதற்கு முன் ஃபஜ்ர் (தொழுகையில்) ஒரு ஸஜ்தாவை (அதாவது ஒரு ரக்அத்தை) எவர் அடைந்து கொள்கிறாரோ, அவர் அத்தொழுகையை அடைந்து கொள்கிறார். மேலும் (இங்கு) ஸஜ்தா என்பது ஒரு ரக்அத் ஆகும்.”
உங்களில் எவரேனும் சூரியன் மறைவதற்கு முன் அஸர் தொழுகையின் முதல் ஸஜ்தாவை அடைந்தால், அவர் தமது தொழுகையை பூர்த்தி செய்யட்டும். மேலும், சூரியன் உதிப்பதற்கு முன் ஃபஜ்ர் தொழுகையின் முதல் ஸஜ்தாவை அடைந்தால், அவர் தமது தொழுகையை பூர்த்தி செய்யட்டும்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சூரியன் உதயமாவதற்கு முன் சுப்ஹு தொழுகையின் ஒரு ரக்அத்தை யார் அடைந்து கொள்கிறாரோ, அவர் சுப்ஹு(த் தொழுகையை) அடைந்து கொண்டார். மேலும், சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை யார் அடைந்து கொள்கிறாரோ, அவர் அஸ்ர்(த் தொழுகையை) அடைந்து கொண்டார்."
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"சூரியன் உதிப்பதற்கு முன் ஸுப்ஹுடைய ஒரு ஸஜ்தாவை (ஒரு ரக்அத்தை) யார் அடைந்து கொள்கிறாரோ, அவர் அந்தத் தொழுகையை அடைந்து கொண்டார்; மேலும், சூரியன் மறைவதற்கு முன் அஸ்ருடைய ஒரு ஸஜ்தாவை (ஒரு ரக்அத்தை) யார் அடைந்து கொள்கிறாரோ, அவர் அந்தத் தொழுகையை அடைந்து கொண்டார்."